Index | Subscribe mailing list | Help | E-mail us

 
 

கடனாளிக்கு -கஷ்டப்படுபவர்களுக்கு- தவணை கொடுக்க வேண்டும்

( أَنَّ رَجُلًا مَاتَ فَدَخَلَ الْجَنَّةَ فَقِيلَ لَهُ مَا كُنْتَ تَعْمَلُ قَالَ فَإِمَّا ذَكَرَ وَإِمَّا ذُكِّرَ فَقَالَ إِنِّي كُنْتُ أُبَايِعُ النَّاسَ فَكُنْتُ أُنْظِرُ الْمُعْسِرَ وَأَتَجَوَّزُ فِي السِّكَّةِ أَوْ فِي النَّقْدِ فَغُفِرَ لَهُ )

மரணித்து பிறகு சொர்க்கத்தில் நுழைந்துவிட்ட ஒருவரிடம் நீ என்ன அமல் செய்து கொண்டிருந்தாய்? என கேட்கப்பட்டது. அவராக நினைத்தோ அல்லது நினைவூட்டப்பட்டோ கூறினார் : நான் மக்களுக்கு வியாபாரம் செய்து கொண்டிருந்தேன். கஷ்டப்படுவோருக்கு -கடனாளிகளுக்கு- தவணை கொடுப்பேன். காசு பணங்களில் ஏதேனும் குறையிருந்தாலும் அதனை பெரிது படுத்தாது வாங்கிக் கொள்வேன் என்று கூறினார். இதனால் அவரை அல்லாஹ் மன்னித்துவிட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : ஹதைஃபா -ரலி நூல் : முஸ்லிம் 2919)

 

துன்பம் தரும் பொருட்களை பாதையிலிருந்து அகற்ற வேண்டும்