Index | Subscribe mailing list | Help | E-mail us

 
 

கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்

(قال رجل لرسول الله صلى الله عليه وسلم دلني على عمل يدخلني الجنة قال رسول الله صلى الله عليه وسلم لا تغضب ولك الجنة)

என்னை சொர்க்கத்தில் நுழையச் செய்யும் ஒரு அமலை எனக்குக் கூறுங்கள் என்று நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் கேட்டார். அதற்கவர்கள், நீ கோபம் கொள்ளாதே! உனக்கு சொர்க்கம் உள்ளது! என்றார்கள்.
(அறிவிப்பவர் : அபூ தர்தா -ரலி, நூல் : தபரானீ)

 

(عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِي اللَّهم عَنْهم أَنَّ رَجُلًا قَالَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ أَوْصِنِي قَالَ لَا تَغْضَبْ فَرَدَّدَ مِرَارًا قَالَ لَا تَغْضَبْ )

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, எனக்கு உபதேசம் செய்யுங்கள்! என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீ கோபம் கொள்ளாதே! என்று கூறினார்கள். உபதேசம் செய்ய அவர் பல முறை வேண்டிய போதும் நபி (ஸல்) அவர்கள் நீ கோபம் கொள்ளாதே! என்றே கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹரைரா -ரலி, நூல் : புகாரீ 5651)

 

 

( مَنْ كَظَمَ غَيْظًا وَهُوَ قَادِرٌ عَلَى أَنْ يُنْفِذَهُ دَعَاهُ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَى رُءُوسِ الْخَلَائِقِ يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يُخَيِّرَهُ اللَّهُ مِنَ الْحُورِ الْعِينِ مَا شَاءَ )

தன் கோபத்தை வெளிப்படுத்த சக்தி பெற்றிருந்தும் அதனை அடக்கிக் கொண்டவரை மறுமை நாளில் படைப்பினங்களுக்கு முன்னிலையில் அழைத்து, அவர் விரும்பிய ஹ{ருல்ஈனை (சொர்க்கத்து கன்னியரை) தேர்ந்தெடுத்துக் கொள்ள அல்லாஹ் அனுமதி வழங்குவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : முஆத் இப்னு அனஸ் அல்ஜுஹ்னீ -ரலி, நூற்கள்: அபூதாவூத் 4147, திர்மிதீ, இப்னுமாஜா)

 

 

பொறாமை, கர்வம் ஆகியவைகளை விட்டும்
உள்ளத்தைத் தூய்மைப் படுத்த வேண்டும்