Index | Subscribe mailing list | Help | E-mail us

 
 

பெண் தன் கணவனுக்கு கட்டுப்பட வேண்டும்

 

(إذا صلت المرأة خمسها وحصنت فرجها وأطاعت بعلها دخلت من أي أبواب الجنة شاءت)

ஓரு பெண் ஐவேளைத் தொழுது, ரமலான் மாதம் நோன்பு நோற்று, கற்பைக் காத்து, கணவனுக்குக் கட்டுப்பட்டும் நடந்தால் சொர்க்க வாயில்களில் அவள் விரும்பிய வாயிலில் நுழையலாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : இப்னு ஹிப்பான்)


(عَنِ الْحُصَيْنِ بْنِ مِحْصَنٍ أَنَّ عَمَّةً لَهُ أَتَتِ النَّبِيَّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فِي حَاجَةٍ فَفَرَغَتْ مِنْ حَاجَتِهَا فَقَالَ لَهَا النَّبِيُّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ أَذَاتُ زَوْجٍ أَنْتِ قَالَتْ نَعَمْ قَالَ كَيْفَ أَنْتِ لَهُ قَالَتْ مَا آلُوهُ إِلَّا مَا عَجَزْتُ عَنْهُ قَالَ فَانْظُرِي أَيْنَ أَنْتِ مِنْهُ فَإِنَّمَا هُوَ جَنَّتُكِ وَنَارُكِ )


ஹுஸைன் இப்னு மிஹ்ஸன் (ரலி) அவர்களின் மாமி ஒரு தேவைக்காக நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களின் தேவை முடிந்து புறப்பட்ட போது நபி (ஸல்) அவர்கள், நீ கணவனுடன் வாழும் பெண்தானே? என்று கேட்டார்கள். அதற்கவர், ஆம்! என்றார். நீ அவருடன் எப்படி நடந்து கொள்கின்றாய்? என்று கேட்டார்கள். அதற்கவர், என்னால் முடியாததைத் தவிர வேறு எதிலும் நான் அவருக்கு குறை வைக்கவில்லை என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், அவருடைய விஷயத்தில் நீ மிகக் கவனமாக நடந்து கொள்! ஏனெனில் நிச்சயமாக அவர்தான் உன்னுடைய சொர்க்கமும் நரகமும் ஆவர் என்றார்கள்.

(அறிவிப்பவர் : ஹுஸைன் இப்னு மிஹ்ஸன் -ரலி, நூல் : அஹ்மத் 18233)


( ألا أخبركم بنساءكم من أهل الجنة؟ قالوا : بلى يا رسول الله قال : كل ولود ودود إذا غضبت أو أسيء إليها أو غضب (أي زوجها) قالت : يدي في يدك لا أكتحل بغمض حتى ترضى)

பெண்களில் சொர்க்கவாதிகளை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள்! என்று -நபித்தோழர்கள்- கூறினார்கள். அதிகமாக நேசிக்கக் கூடியவள்! அதிகமாக குழந்தையைப் பெறக் கூடியவள்! அவள் கோபப்பட்டாலோ, பிறர் அவளுக்கு தீங்கிழைத்து விட்டாலோ, கணவன் அவள் மீது கோபப்பட்டாலோ என்னுடைய கையை உன் கைமீது வைத்துவிட்டேன்! நீ என்னை பொருந்திக் கொள்ளும் வரை இமைகளுக்கு சுர்மா கூட இடமாட்டேன் என்று கூறுபவள்! என்றார்கள். (அறிவிப்பவர் : அனஸ் -ரலி, நூல் : தபரானீ)


(الودود الولود التي ظلمت أو ظلمت قالت : هذه ناصيتي بيدك لا أذوق غمضا حتى ترضى)

மற்றொரு அறிவிப்பில் :
அதிகமாக நேசிப்பவள், அதிகமாகக் குழந்தை பெறுபவள், அவள் அநீதமிழைத்து விட்டாலோ அல்லது அவளுக்கு நீ அநீதமிழைத்தாலோ இதோ என்னுடைய நெற்றிப் பிடியை உன் கையில் கொடுத்துவிட்டேன். நீ என்னைப் பொருந்திக் கொள்ளும்வரை ---- கூட சுவைக்கமாட்டேன் என்று கூறுவாள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 

யாசகம் கேட்கக் கூடாது