Index | Subscribe mailing list | Help | E-mail us

 
 

வியாபாரக் கொடுக்கல், வாங்கலிலும் உரிமை கோருவதிலும் உரிமை வழங்குவதிலும் நலினத்தைக் கடைபிடிக்க வேண்டும்

 

( . . . أَدْخَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ الْجَنَّةَ رَجُلًا كَانَ سَهْلًا مُشْتَرِيًا وَبَائِعًا وَقَاضِيًا وَمُقْتَضِيًا )

 

விற்கும் போதும், வாங்கும் போதும், உரிமையைக் கேட்கும் போதும், உரிமையை வழங்கும் போதும் நலினத்தைக் கடைபிடித்தவரை அல்லாஹ் சொர்க்கத்தில் நுழையச் செய்துவிட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : உஸ்மான் -ரலி, நூற்கள் : அஹ்மத் 387, நஸாயீ, இப்னுமாஜா)

 

( دَخَلَ رَجُلٌ الْجَنَّةَ بِسَمَاحَتِهِ قَاضِيًا وَمُتَقَاضِيًا )

 

உரிமையை கேட்கும் போதும், உரிமையை வழங்கும் போதும் நலினத்தைக் கடைபிடித்தவன் சொர்க்கத்தில் நுழைந்து விட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் -ரலி, நூல் : அஹ்மத் 6669)

 

 

( رَحِمَ اللَّهُ رَجُلًا سَمْحًا إِذَا بَاعَ وَإِذَا اشْتَرَى وَإِذَا اقْتَضَى )

 

விற்கும் போதும், வாங்கும் போதும், உரிமையைக் கேட்கும் போதும் நலினத்தைக் கடைபிடிப்பவனுக்கு அல்லாஹ் கிருபை செய்கின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் -ரலி, நூல் : புகாரீ 1934)

 

 

 

 

முஸ்லிம் சமுதாயக் கூட்டமைப்பைச் சார்ந்திருக்க வேண்டும்