Index | Subscribe mailing list | Help | E-mail us

 
 

அல்லாஹ்வின் மீதே தவக்கல் வைத்திருப்பதினால் பிறரிடம் ஓதிப் பார்க்கச் செல்லாதவர்கள், சகுனம் பார்க்காதவர்கள், நெருப்பினால் சூடிட்டு மருத்தும் பார்க்கச் செல்லாதவர்களின் சிறப்பு

 

( يَدْخُلُ الْجَنَّةَ مِنْ أُمَّتِي سَبْعُونَ أَلْفًا بِغَيْرِ حِسَابٍ قَالُوا مَنْ هُمْ يَا رَسُولَ اللَّهِ قَالَ هُمِ الَّذِينَ لَا يَسْتَرْقُونَ وَلَا يَتَطَيَّرُونَ وَلَا يَكْتَوُونَ وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ )

 

என்னுடைய சமுதாயத்தில் 70.000 பேர் கேள்விக் கணக்கின்றி சொர்க்கத்தில் நுழைவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் யார்? என -நபித்தோழர்கள்- கேட்டனர். அதற்கவர்கள், அவர்கள் பிறரிடம் ஓதிப் பார்க்கச் செல்லாதவர்கள், சகுனம் பார்க்காதவர்கள், நெருப்பினால் கூ10டிட்டு மருத்தும் பார்க்கச் செல்லாதவர்கள், தங்களின் இரட்சகனின் மீதே தவக்குல் வைத்திருப்பவர்கள் என்றார்கள்.
(அறிவிப்பவர் : இப்ரான் இப்னு ஹுஸைன் -ரலி, நூற்கள் : புகாரீ, முஸ்லிம் 321)

 

 

( الشِّفَاءُ فِي ثَلَاثَةٍ شَرْبَةِ عَسَلٍ وَشَرْطَةِ مِحْجَمٍ وَكَيَّةِ نَارٍ وَأَنْهَى أُمَّتِي عَنْ الْكَيِّ )

 

தேன் அருந்துவது, இரத்தம் குத்தி எடுப்பது, நெருப்பினால் சூடிட்டு மருத்துவம் செய்வது ஆகிய மூன்றிலும் நோய் நிவாரணம் உள்ளன. எனினும் நெருப்பினால் சூடிட்டு மருத்தும் செய்வதை விட்டும் என்னுடைய உம்மத்தினரை நான் தடுக்கின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் -ரலி, நூல் புகாரீ 5680)

 

 

அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெறும் வார்த்தையைக் கூற வேண்டும்