Index | Subscribe mailing list | Help | E-mail us

அல்குர்ஆனில் இடம் பெற்றுள்ள பிரார்த்தனைகள்

 
 

رَبَّنَـا ظَلَمْنـَا أَنْفُـسَنَا وَإنْ لَّمْ تَغْفِـرْلَنَا وَتَرْحَمْنَـا لَنَكُـوْنَنَّ مِنَ الْخَاسِرِيْنَ

01. எங்கள் இறைவா! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து, கிருபை செய்யா விட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்ட மடைந்தவர்களாகி விடுவோம்.
 

குறிப்பு: குர்ஆனின் வசன எண்களை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்


رَبِّ إنِّيْ أَعـُوْذُ بِكَ أَنْ أَسْـأَلَكَ مَا لَيْسَ لِيْ بِهِ عِلْمٌ وَإِلاَّ تَغْفِرْ لِيْ وَتَرْحَمْنِيْ أَكُنْ مِنَ الْخَاسِرِيْنَ

02. இறைவா! எனக்கு எதைப்பற்றி ஞானம் இல்லையோ அதை உன்னிடத்தில் கேட்பதை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். நீ என்னை மன்னித்து, எனக்கு அருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோரில் ஆகிவிடுவேன்


رَبِّ اغْفِرْ لِيْ وَلِوَالِدَيَّ وِلِمَنْ دَخَلَ بَيْتِيَ مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنَاتِ

03. இறைவா! எனக்கும் என் பெற்றோருக்கும் என் வீட்டில் நம்பிக்கையாளர்களாகப் பிரவேசித்தவர்களுக்கும் முஃமினான ஆண்களுக்கும் முஃமினான பெண்களுக்கும் நீ மன்னிப் பளிப்பாயாக!.


رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ، وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيْمُ

04. எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (நல்லறங்களை) ஏற்றுக்கொள்வாயாக! நிச்சயமாக நீயே யாவற்றையும் கேட்பவனும் அறிபவனுமாவாய். மேலும் நீ எங்களை மன்னித்தருள்வாயாக! நிச்சயமாக நீயே மன்னிப்பை ஏற்றுக் கொள்பவனும் கிருபை செய்பவனுமாவாய்.


رَبِّ اجْعَلْنِيْ مُقِيْمَ الصَّلاَةِ وَمِنْ ذُرِّ يَّـتِيْ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ

05. இறைவா! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும் என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவா! (எங்கள்) பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக.


رَبَّنَا اغْفِرْ لِيْ وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِيْنَ يَوْمَ يَقُوْمُ الْحِسَابُ

06. எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக!


رَبِّ هَبْ لِيْ حُكْمًاوَأَلْحِقْنِيْ بِالصَّالِحِيْنَ وَاجْعَلْ لِيْ لِسَانَ صِدْقٍ فِي اْلآخِرِيْنَ وَاجْعَلْنِيْ مِنْ وَرَثَةِ جَنَّةِ النَّعِيْمِ

07. இறைவா! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக! மேலும் நல்லவர்களுடன் என்னைச் சேர்த்துவைப்பாயாக! மேலும் பின் வருபவர்களில் எனக்கு நீ நற்பெயரை ஏற்படுத்து வாயாக! மேலும் பாக்கியம் நிறைந்த சுவனபதியின் வாரிசுக் காரர்களில் ஒருவனாக என்னை ஆக்கிவைப்பாயாக!


رَبِّ هَبْ لِيْ مِنَ الصَّالِحِيْنَ

08. இறைவா! எனக்கு ஸாலிஹான (நற்குணமுடைய) மகனைத் தருவாயாக!


رَبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيْرُ

09. எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம். நாங்கள் உன்னையே நோக்குகிறோம். மேலும் உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது.


رَبَّنَا لاَ تَجْعَلْنَا فِتْنَةً لِّلَّذِيْنَ كَفَرُوْا وَاغْفِرْ لَنَا رَبَّنَاإِنَّكَ أَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُ

10. எங்கள் இறைவா! நிராகரிப்பாளர்களுக்கு எங்களை சோதனைப் பொருளாக ஆக்கிவிடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு மன்னிப்பு அருள்வாயாக! நிச்சயமாக நீயே மிகைத்தவன் ஞானம் மிக்கவன்.


رَبِّ أَوْزِعْنِيْ أَنْ أَشْكُرَ نِعْمَتَـكَ الَّتِيْ أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَدْخِلْنِيْ بِرَحْمَتِكَ فِيْ عِبَادِكَ الصَّالِحِيْنَ

11. இறைவா! என்மீதும் என்பெற்றோர் மீதும் நீ புரிந்துள்ள அருட்கொடைகளுக்காக நான் நன்றி செலுத்தவும் நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும் எனக்கு அருள்செய்வாயாக! மேலும் உன் கிருபையால் என்னை உன் நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!


رَبِّ هَبْ لِيْ مِنْ لَّدُنْكَ ذُرِّ يَّـةً طَـيِّـبَةً إِنَّكَ سَمِيْعُ الدُّعَاءِ

12. இறைவா! உன்னிடமிருந்து எனக்கு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுப்பவனாக உள்ளாய்.


رَبِّ لاَ تَذَرْنِيْ فَرْدًا وَأَنْتَ خَيْرُ الْوَارِثِيْنَ

13. இறைவா! நீ என்னை (சந்ததியில்லாமல்) ஒற்றையாக விட்டு விடாதிருப்பாயாக! நீயோ அனந்தரங் கொள்வோரில் மிக மேலானவன்.


لاَإِلَهَ إِلاَّ أَنْتَ سُبْحَانَكَ إِنِّيْ كُنْتُ مِنَ الظَّالِمِيْنَ

14. உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை. நீ மிகவும் தூய்மையானவன். நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்.


رَبِّ اشْرَحْ لِيْ صَدْرِيْ وَيَسِّرْ لِيْ أَمْرِيْ وَأحْلُلْ عُقْدَةً مِّنْ لِّسَانِيْ يَفْقَهُوْا قَوْلِيْ

15. இறைவா! எனக்காக என் நெஞ்சத்தை நீ (உறுதிப் படுத்தி) விரிவாக்கித் தருவாயாக! என் காரியத்தை எனக்கு நீ எளிதாக்கியும் வைப்பாயாக! என் சொல்லை அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக என் நாவிலுள்ள (திக்குவாய்) முடிச்சையும் அவிழ்ப்பாயாக!


رَبِّ إِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ فَاغْفِرْلِيْ

16. இறைவா! நிச்சயமாக நான் என் ஆத்மாவுக்கே அநியாயம் செய்து விட்டேன். ஆகவே நீ என்னை மன்னிப்பாயாக!


رَبَّنَا آمَنَّا بِمَا أَنْزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُوْلَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِيْنَ

17. எங்கள் இறைவா! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்பினோம். (உன்னுடைய) தூதரை நாங்கள் பின்பற்றினோம். எனவே (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் எங்களை பதிவு செய்து கொள்வாயாக!


رَبَّنَا لاَ تَجْعَلْنَا فِتْنَةً لِّلْقَوْمِ الظَّالِمِيْنَ وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكَافِرِيْنَ

18. எங்கள் இறைவா! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே! நிராகரிக்கும் மக்களிடமிருந்து உன் அருளால் எங்களை நீ காப்பாற்றுவாயாக!


رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَإِسْرَافَنَا فِيْ أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَي الْقَوْمِ الْكَافِرِيْنَ

19. எங்கள் இறைவா! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச்செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! நிராகரிக்கும் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக!



رَبَّنَا آتِنَا مِن لَّدُنْكَ رَحْمَةً وَهَيِّءْ لَنَا مِنْ أَمْرِنَارَشَدًا

20. எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு அருள் செய்வாயாக! மேலும் நீ எங்களுக்காக எங்கள் காரியத்தை (பயனுள்ளதாக) சீர்திருத்தித் தருவாயாக!


رَبِّ زِدْنِيْ عِلْمًا

21. இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!


رَبِّ أَعُوْذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِـيْنِ وَأَعُوْذُبِكَ رَبِّ أَنْ يَحْـضُـرُوْنِ

22. இறைவா! ஷைத்தான்களின் தூண்டுதல்களிலிருந்து உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன். மேலும் அவை என்னிடம் நெருங்காமலிருக்கவும் இறைவா! உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.


رَبِّ إغْفِرْ وَارْحَمْ وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِيْنَ

23. இறைவா! என்னை மன்னித்துக் கிருபை செய்வாயாக! நீதான் கிருபையாளர்களில் மிகமேலானவன்.


رَبَّنَا آتِنَا فِيْ الدُّنْيَا حَسَنَةً وَفِي اْلآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

24. எங்கள் இறைவா! எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தருவாயாக! மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தருவாயாக! எங்களை நரக வேதனையிலிந்து காத்தருள் வாயாக!


سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيْرُ

25. எங்கள் இறைவா! உன் அழைப்பை நாங்கள் செவிமடுத்தோம். உன் கட்டளைகளுக்கு வழிப்பட்டோம். உன்னிடமே மன்னிப்புக் கேட்கிறோம். நாங்கள் மீளுவதும் உன்னிடமே தான்.


رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِنْ نَّسِيْنَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَالاَ طَاقَةَ لَناَ بِهِ وَاعْفُ عَنَّا وأغْفِرْلَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلاَنَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِيْنَ

26. எங்கள் இறைவா! மறந்து போயிருப்பினும் அல்லது தவறு செய்திருப்பினும் எங்களை குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன்சென்றோர் மீது சுமத்திய சுமையைப் போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கு அப்பாற்பட்ட சுமையை எங்கள்மீது சுமத் தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்துக் கொள்வாயாக! எங்களை மன்னித்தருள்வாயாக! எங்கள்மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன். நிராகரிக்கும் கூட்டத்தினரை (நாங்கள்வென்றிட) எங்களுக்கு உதவி செய்வாயாக!


رَبَّنَا لاَ تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ إِذْ هَدَيْـتَـنَا وَهَبْ لَنَا مِنْ لَّـدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ

27. எங்கள் இறைவா! நீ எங்களுக்கு நேர்வழியை காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதிருப்பாயாக! மேலும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங்கொடையாளன்.


رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلاً سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ رَبَّنَا إِنَّكَ مَنْ تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْـتَهُ وَمَا لِلظَّالِمِيْنَ مِنْ أَنْصَارٍ رَبَّـنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِيْ لِلإْيـمَانِ أَنْ آمِنُوْا بِرَبِّكُمْ فَآمَنَّا رَبَّـنَا فَاغْفِرْلَنَا ذُنُوْبَنَا وَكَفِّرْ عَنَّا سَـيِّـئَاتِنَا وَتَوَفَّـنَا مَعَ اْلأَبْرَارِ رَبَّـنَا وَآتِنَا مَا وَعَدْتَّـنَا عَلَى رُسُلِكَ وَلاَتُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ إِنَّكَ لاَتُخْلِفُ الْمِـيْعَادَ

28. எங்கள் இறைவா! (வானம், பூமி ஆகிய) இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை. நீ மிகத்தூயவன். நரக வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக! எங்கள் இறைவா! நீ எவரை நரகநெருப்பில் புகுத்துகிறாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய். மேலும் அக்கிரமக்காரார்களுக்கு உதவி செய்வோர் எவருமில்லை. எங்கள் இறைவா! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்! என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம். எங்கள் இறைவா! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக! எங்களுடைய ஆத்மாக்களைச் நல்லோரின் ஆன்மாக்களுடன் கைப்பற்றுவாயாக! எங்கள் இறைவா! உன் தூதர்கள் மூலம் எங்களுக்கு வாக்களித்ததை எங்களுக்குத் தந்தருள்வாயாக! கியாமநாளில் எங்களை இழிவு படுத்தாதிருப்பாயாக! நிச்சயமாக நீ வாக்குறுதிகளில் மாறுபவன் அல்ல.


رَبنَّاَ آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِيْنَ

29. எங்கள் இறைவா! நாங்கள் உன் மீது ஈமான் கொள்கிறோம். நீ எங்கள் குற்றங்களை மன்னித்து, எங்கள் மீது கிருபை செய்வாயாக! கிருபையாளர்களில் நீ மிகமேலானவன்.


رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَـنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا إِنَّهَا سَاءَتْ مُسْـتَـقَرًّا وَمُقَامًا

30. எங்கள் இறைவா! எங்களை விட்டும் நரக வேதனையை திருப்புவாயாக! நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானதாகும். நிச்சயமாக அது வாழ்வதற்கும் வசிப்பதற்கும் மிகக் கெட்ட இடமாகும்.


رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّ يَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ إِمَامًا

31. எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும் எங்கள் சந்ததிகளிடமிருந்தும் எங்களுக்கு கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! மேலும் பயபக்தியுடைய வர்களுக்கு எங்களை வழி காட்டியாக ஆக்குவாயாக!


رَبِّ أَوْزِعْنِيْ أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِيْ أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَصْلِحْ لِيْ فِيْ ذُرِّيَّتِيْ إِنِّيْ تُبْتُ إِلَيْكَ وَإِنِّيْ مِنَ الْمُسْلِمِيْنَ

32. இறைவா! என் மீதும் என் பெற்றோர் மீதும் நீ புரிந்த அருட்கொடைகளுக்காக நன்றி செலுத்தவும் உன் திருப்பொருத்தத்தை அடையக்கூடிய நல்லறங்களைச் செய்யவும் எனக்கு அருள்புரிவாயாக! எனது சந்ததியரையும் (நல்லவர்களாக) சீர் படுத்துவாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன். மேலும் நிச்சயமாக நான் உனக்கு முற்றிலும் கட்டுப்படுபவனாக உள்ளேன்.


رَبَّنَا اغْفِرْ لَنَا وَِلإِخْوَانِنَا الَّذِيْنَ سَبَقُوْنَا بِاْلإِيْمَانِ وَلاَتَجْعَلْ فِيْ قُلُوْبِنَا غِلاًّ لِّـلَّذِيْنَ آمَنُوْا رَبَّنَا إِنَّكَ رَءُوْفٌ رَّحِيْمٌ

33. எங்கள் இறைவா! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அளிப்பாயாக! மேலும் ஈமான் கொண்டவர்களைப்பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! நிச்சயமாக நீ மிக இரக்கமுடையவன், கிருபைமிக்கவன்.


رَبَّنَا أَتْمِمْ لَنَا نُوْرَنَا وَاغْفِرْلَنَا إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ

34. எங்கள் இறைவா! எங்களுக்கு எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன்.


رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ

35. எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் (உன்?? மீது) நம்பிக்கை கொண்டோம். எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! நரக வேதனையிலிருந்து எங்களை காப்பாற்றுவாயாக!


رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِيْنَ

36. எங்கள் இறைவா! நாங்கள் (இவ்வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம். எனவே (இவ்வேதம் சத்தியமானது என்று) சாட்சி கூறுவோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக!


பிரார்த்தனைகள் இடம் பெற்றுள்ள வசன எண்கள்:

JM

vz;

trd

vz;

JM

vz;

trd

vz;

JM

vz;

trd

vz;

1.

07:23

13.

21:89

25.

02:285

2.

11:47

14.

21:87

26.

02:286

3.

71:28

15.

20:25-28

27.

03:8

4.

02:127-128

16.

28:16

28.

03:191-194

5.

14:40

17.

03:53

29.

23:109

6.

14:41

18.

10:85-86

30.

25:65-66

7.

26:83-85

19.

03:147

31.

25:74

8.

37:100

20.

18:10

32.

46:15

9.

60:4

21.

20:114

33.

59:10

10.

60:5

22.

23:97-98

34.

66:8

11.

27:19

23.

23:118

35.

03:16

12.

03:38

24.

2:201

36.

05:83

 

 

நபி (ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள்