<?xml version="1.0" encoding="utf-8"?>
<?xml-stylesheet type="text/xsl" href="rss2html.xsl" media="screen"?>
<rss version="2.0" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" >
    <channel>
        <title>IslamKalvi.com :: இஸ்லாம்கல்வி.காம்</title>
        <description>Gateway of Knowledge :: அறிவின் நுழைவாயில்</description>
        <link>http://www.islamkalvi.com</link>
        <item>
            <title>தீர்க்கதரிசிகளே தீமை புரிந்தனரா? திருக்குர்ஆன் மற்றும் பைபிளில் காணப்படும் வரலாற்றுத் தகவல்கள் - ஓர் ஒப்பீடு - பாகம் 2</title>
            <description>இறைத்தூதர்களின் வரலாற்றைக் கூறுமிடத்து புரோகித வர்க்கத்தின் கற்பனையில் உருவான பல அபத்தமான கருத்துக்கள் பைபிளில் நிறைந்து காணப்படுகின்றன.... </description>
            <link>http://www.islamkalvi.com/religions/quran_bible_compare2.htm</link>
            <pubDate>11 Feb 2008 10:00:00 GMT</pubDate>
        </item>
        <item>
            <title>ஜைனுல் ஆபிதீனின் தினமணி பேட்டி : குழப்பமும் தீர்வும்</title>
            <description>"தீவிரவாதத்துக்கு இஸ்லாமில் அனுமதி கிடையாது" தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் சிறப்புப் பேட்டி என்ற தலைப்பிட்டு தினமணி பத்திரிகையில் வெளியான செய்தி நம் பார்வைக்குப் பட்டது. அதில் த.த.ஜ தலைவருடைய பேட்டி இஸ்லாத்தைக் கொச்சைப் படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. இஸ்லாத்தினைப்பற்றிய இவரின் விளக்கங்கள் இறைமறுப்பாளர்களின் திருப்திக்கே அன்றி இறைவனின் திருப்திக்காக அல்ல என்ற உலமாக்களின் கருத்தை மேலும் உறுதிப்படுத்தும் விதத்தில் இவரது பேட்டி அமைந்துள்ளது. இவரது பேட்டியின் மூலம் ஏற்பட்ட தேவையற்ற கருத்துக் குழப்பத்தை அகற்றும் நோக்குடன் இக்கட்டுரை வெளியிடப்படுகிறது... </description>
            <link>http://www.islamkalvi.com/general/dinamani.htm</link>
            <pubDate>03 Nov 2007 10:00:00 GMT</pubDate>
        </item>
        <item>
            <title>பிறை விஷயத்தில் விஞ்ஞானக் கணிப்பை ஏற்பது குர்ஆன், ஹதீஸுக்கு எதிரானதா?</title>
            <description>எனினும், விஞ்ஞானம் வளர்ச்சியடைந்த காலத்தில் வாழும் நாம், நபி (ஸல்) அவர்கள் பின்பற்றிய பழைய வழிமுறையை பின்பற்றாமல் நவீன யுகத்தின் விஞ்ஞான கணிப்பின் மூலம் வகுத்துத் தரப்பட்டுள்ள புதிய வழிமுறையைத்தான் பயன்படுத்துகிறோம். லுஹர் தொழுகைக்காக தயாராகும் ஒருவர் சூரியன் உச்சி சாய்ந்து விட்டதா என்று பார்த்து அறிந்து தொழுவதில்லை. ஏற்கனவே கணித்து வைக்கப்பட்டுள்ள நேரத்தை பார்த்தே தொழுகைக்குத் தயாராகிறார்... </description>
            <link>http://www.islamkalvi.com/hijracalendar/lunar.htm</link>
            <pubDate>21 Oct 2007 10:00:00 GMT</pubDate>
        </item>
        <item>
            <title>ஹிஜ்ரா நாட்காட்டி 1428 - உங்கள் ஆய்வுக்காக சில விஷயங்கள்</title>
            <description>அதற்கு இடையே அல்லாஹ்வின் அத்தாட்சியாக பௌர்னமி தினத்தில் சந்திரகிரகணம் ஏற்பட்டது. சந்திரகிரகணம் என்பது முழு நிலவு (பௌர்னமி) என்று ஏற்படுகிறதோ அன்று தான் நிகழும். இதை விஞ்ஞானிகள் அனைவரும் அறிவர். மேலும் பௌர்னமி 1428 வருடத்தின் ஷஃபான் மாதத்தில் 16வது மன்ஸிலாக ஏற்பட்டது. அந்த நிகழ்வு எதை குறிப்படுகிறது என்றால் 1428 வது வருட ஷஃபான் மாதம் கட்டாயமாக 30 நாட்களை கொண்டே முடியும் என்பதை உறுதி செய்தது. அல்லாஹ் திருக்குர்ஆனில் 36:39 வசனததில் உலர்ந்து வளைந்த பேரீத்தம் பாளையை போல் ஆகும் வரை சந்தினுக்கு பல படித்தரங்களை ஏற்படுத்தியுள்ளோம் என கூறுகின்றான். அந்த கடைசி நிலை செவ்வாய்கிழமை (11.09.2007) அன்று ஏற்பட்டது. அல்லாஹ் தன் அத்தாட்சியாக அன்றைய தினத்திலும் சூரிய கிரகணத்தை ஏற்பட செய்து சந்தேகத்திற்கு இடமில்லாமல் அன்று தான் மாதத்தின் கடைசி நாள் என்பதற்கு படிப்பினையும் ஏற்படுத்தி தந்தான். சூரிய கிரகணம் என்றாலே சூர்pயன் சந்திரன் பூமி மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும் போது தான் ஏற்படும். இது சந்திரனின் கடைசி மன்ஸிலாகும். மாதம் 29 நாட்களில் முடிந்தால் இது 29 நாளில் ஏற்படும். மாதம் 30 நாட்களில் முடிந்தால் இது 30 வது நாள் ஏற்படும். சூரிய கிரகணம் அன்று சூரியனை நாம் பூமியில் இருந்து பார்க்கும் போது சூரியனை மறைப்பது சந்திரன் தான். அந்த நேரத்தில் தான் சூரியனை சந்திரன் தாண்டி அடுத்த மாதத்திற்கான புதிய சுற்றை துவக்கும்.... </description>
            <link>http://www.islamkalvi.com/hijracalendar/about_hilal_1428.htm</link>
            <pubDate>22 Sep 2007 10:00:00 GMT</pubDate>
        </item>
        <item>
            <title>அல்குர்ஆனின் மாதம்</title>
            <description>நோன்பிருக்கும் பலர் தொழுகை விஷயத்தில், தொழுகையை கூட்டாக நிறைவேற்றும் விஷயத்தில் அலட்சியமாக இருக்கின்றனர். ஒரு முஸ்லிம் எவ்வாறு நோன்பு என் மீது கடமை என்பதை உணர்ந்து அதை நோற்கின்றானோ அதே போன்று தொழுகையும் என் மீது கடமை என்பதை தெளிவாக விளங்கி அதை உரிய நேரத்தில் நிறைவேற்ற வேண்டும். அனைத்து வணக்கங்களை விட தொழுகைக்கு இஸ்லாத்தில் ஒரு மகத்தான இடமிருக்கின்றது. 'தொழுகையை ஒருவர் வேண்டுமென்று விடும் போது அவர் காஃபிர், நமக்கும் அவர்களுக்கும் மத்தியில் உள்ள உடன்படிக்கை தொழுகை, எவர் தொழுகையை விட்டு விடுகிறாரோ அவர் காஃபிராகி விட்டார்.' என்று நபியவர்கள் கூறிய ஆதாரப்பூர்வமான செய்திகள் பதிவாகி இருக்கும் போது எவ்வாறு இதில் ஒரு முஸ்லிம் அலட்சியமாக இருக்க முடியும்? இந்த ஹதீஸ்களை ஆய்வு செய்யும் போது தொழுகையை விடும் ஒரு முஸ்லிமுடைய நோன்பே கேள்விக்குறியாகி விடுகின்றது... </description>
            <link>http://www.islamkalvi.com/fiqh/ramadan/month_of_alquran.htm</link>
            <pubDate>08 Sep 2007 10:00:00 GMT</pubDate>
        </item>
        <item>
            <title>ரமளானை வரவேற்போம் -முஹம்மத் அஸ்ஹர் (நினைவூட்டல்)</title>
            <description>நம்மை நோக்கி வந்திருக்கும் இம்மாதம் பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்ட ஒரு மாதமாகும். இம்மாதத்தில் ஒரு முஸ்லிம் கடைபிடிக்கவேண்டிய அனைத்து ஒழுங்கு முறைகளையும் அல் குர்ஆனும், அஸ்ஸுன்னாவும் தெளிவு படுத்தியுள்ளது.... </description>
            <link>http://www.islamkalvi.com/fiqh/ramadan/ramadan.htm</link>
            <pubDate>31 Aug 2007 16:00:00 GMT</pubDate>
        </item>
        <item>
            <title>ரமளான் மலர் -கே.எல்.எம். இப்ராஹீம் மதனீ (நினைவூட்டல்)</title>
            <description>அல்லாஹ் நம்மீது கடமையாக்கிய கடமைகளில் ஒன்று ரமளான் மாதத்தின் நோன்பாகும். இம்மாதத்தில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் விளக்கமாக கூறியிருக்கின்றார்கள். அதன்படி நாமும் நடந்தால் இம்மாதத்தின் நலன்களைப் பெற்று நன்மக்களாகலாம்... </description>
            <link>http://www.islamkalvi.com/fiqh/ramadan/index.htm</link>
            <pubDate>31 Aug 2007 16:00:00 GMT</pubDate>
        </item>
        <item>
            <title>அல்-ஜுபைல் மாநகரில் நடந்த பட்டிமன்ற நிகழ்ச்சியின் நேரடி ரிப்போர்ட்</title>
            <description>இதனைத் தொடர்ந்து சரியாக 5:45 மணியளவில் பட்டிமன்றம் தொடங்கியது. அல்-ஹஸா நகரிலிருந்து வருகை தந்திருந்த சகோ. அலாவுத்தீன் பாக்கவி அவர்களை நடுவராக பங்கு வைத்தார். "பிள்ளைகளை சீர்படுத்துவதற்கு பெரிதும் பங்களிப்பவர்கள் பெற்றோர்களே" என்ற தலைப்பில் அறக்கட்டளை அழைப்பாளார் சகோ. ஜமால் முஹம்மத் மதனி தலைமையில் மூன்று பேரும், "பிள்ளைகளை சீர்படுத்துவதற்கு பெரிதும் பங்களிப்பவர்கள் ஆசிரியர்களே" என்ற தலைப்பில் அறக்கட்டளையின் அழைப்பாளர் சகோ. முஹம்மத் ஜலீல் மதனி அவர்கள் தலைமையில் மூன்று பேரும் பங்குப் பெற்றனர்... </description>
            <link>http://www.islamkalvi.com/general/jubail_meets.htm</link>
            <pubDate>18 Aug 2007 10:00:00 GMT</pubDate>
        </item>
        <item>
            <title>ஷஃபான் மாதத்தில் செய்ய வேண்டியவைகளும், செய்யக்கூடாதவைகளும்</title>
            <description>ஷஃபானின் 15 வது இரவை 'பராஅத்' என்று கூறி அந்த இரவை புனிதப்படுத்துவதும், அதன் பகல் காலத்தில் நோன்பு நோற்பதும், மூன்று யாசீன்கள் ஓதி ரொட்டி போன்ற உணவு வகைகளை தயாரித்து பகிர்ந்தளிப்பதும் இந்த நாளில் செய்யப்படும் தெளிவான பித்அத்துகளாகும். மார்க்கத்தில் இவைகளுக்கு எந்த அடிப்படையுமில்லை.... </description>
            <link>http://www.islamkalvi.com/fiqh/sha_ban.htm</link>
            <pubDate>18 Aug 2007 10:00:00 GMT</pubDate>
        </item>
        <item>
            <title>ரஜப் மாதம்</title>
            <description>மிஃராஜ் தினத்தை நோன்பு மற்றும் விஷேச அமல்கள் மூலம் சிறப்பிப்பது பித்அத்தாகும். ஒவ்வொரு வருடமும் ரஜப் மாதத்தின் 27 ம் நாள் மிஃராஜுடைய தினம் என குறிப்பிட்டு அதில் நோன்பு வைப்பதும், பள்ளிகளில் கந்தூரிகள் வைத்து மௌலிதுகள் ஓதுவதும் பரவலாகக் காணக்கூடிய ஒன்றாக இருக்கின்றது. இவைகள் அனைத்தும் வழிகெட்ட பித்அத்துகளாகும். இவைகளுக்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமோ, அடிப்படையோ இல்லை. மேலும்... </description>
            <link>http://www.islamkalvi.com/fiqh/rajab.htm</link>
            <pubDate>06 Aug 2007 10:00:00 GMT</pubDate>
        </item>
        <item>
            <title>வாரிசுரிமை பெறுவோர் (பாகம் 4) இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டங்கள் -M.முஹம்மத் யூசுஃப் மிஸ்பாஹி</title>
            <description>ஆண்களில் வாரிசுரிமை பெறக்கூடியவர்கள் பத்துப் பேர் ஆவர். விரிவாகச் சொன்னால் அவர்கள் பதினைந்து பேராக இருப்பார்கள். அவர்கள்... </description>
            <link>http://www.islamkalvi.com/fiqh/varisu/004.htm</link>
            <pubDate>10 Jul 2007 10:00:00 GMT</pubDate>
        </item>
        <item>
            <title>அநீதியை விட்டும் விலகிக்கொள்ளுங்கள்! (நபிமொழிகள்)</title>
            <description>உம்மு ஸலமா(ரலி) அறிவிக்கிறார்கள், இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தம் அறையின் வாசலுக்கருகே (சிலர்) சச்சரவிட்டுக் கொண்டிருந்ததைச் செவியுற்றார்கள். அவர்களிடம் சென்று, "நான் ஒரு மனிதனே. என்னிடம் வழக்காடுபவர்கள் வருகிறார்கள். உங்களில் ஒருவர் மற்றவரை விட வாக்கு சாதுர்யம் மிக்கவராக இருக்கலாம். அவர்தான் உண்மையைப் பேசியுள்ளார் என்று கருதி, நான் அவருக்கு சாதகமாகத் தீர்ப்பளித்து விடுவேனாயின், எவருக்கு ஒரு முஸ்லிமின் உரிமையை எடுத்துக் கொள்ளும்படி (யதார்த்த நிலை அறியாமல்) நான் தீர்ப்பளிக்கிறேனோ (அவருக்கு) அது நரக நெருப்பின் ஒரு துண்டேயாகும். அவன் (விரும்பினால்) அதை எடுத்துக் கொள்ளட்டும் அல்லது அதை (எடுத்துக் கொள்ளாமல்)விட்டு விடட்டும்" என்று கூறினார்கள்... </description>
            <link>http://www.islamkalvi.com/hadith/general/001_aneethi.htm</link>
            <pubDate>28 Jun 2007 10:00:00 GMT</pubDate>
        </item>
        <item>
            <title>வியாபாரம் (நபிமொழிகள்)</title>
            <description>அபுல் மின்ஹால்(ரஹ்) அறிவிக்கிறார்கள், "நான் நாணய மாற்று வியாபாரம் செய்து வந்தேன்; அது பற்றி(ய மார்க்கச் சட்டத்தை) ஸைத் இப்னு அர்கம்(ரலி), பராஉ இப்னு ஆஸிப்(ரலி) ஆகியோரிடம் கேட்டேன். அதற்கவர்கள், "நாங்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் வியாபாரிகளாக இருந்தோம்; அவர்களிடம் நாணயமாற்று வியாபாரம் பற்றிக் கேட்டோம். அதற்கு "உடனுக்குடன் மாற்றினால் அதில் தவறில்லை; தவணையுடன் இருந்தால் அது கூடாது" என அவர்கள் பதிலளித்தார்கள்... </description>
            <link>http://www.islamkalvi.com/hadith/general/002_business.htm</link>
            <pubDate>28 Jun 2007 10:00:00 GMT</pubDate>
        </item>
        <item>
            <title>கடனும் வஸிய்யத்தும் (பாகம் 3) இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டங்கள் -M.முஹம்மத் யூசுஃப் மிஸ்பாஹி</title>
            <description>மார்க்கப் போரில் உயிர் நீத்த ஷஹீத் என்று கூறப்படும் உயிர்த்தியாகி கேள்வி கணக்கு ஏதுமின்றி சுவர்க்கம் செல்வார் என்றிருக்க அவருக்குக் கடன் இருக்குமானால் அது மட்டும் மன்னிக்கப்படாது. ஏனெனில் கடன் என்பது பிறரது உரிமை ஆகும். பிறரது உரிமை அவர் மன்னிக்காதவரை இறைவனால் மன்னிக்கப்பட மாட்டாது. எனவேதான் இறந்தவருக்குக் கடன் இருந்தால் அதை முதலில் கொடுத்துவிட வேண்டும். அல்லது இறந்தவருக்குக் கடன் கொடுத்தவர் விரும்பினால் அந்தக் கடனைத் திரும்பிப் பெறாமல் மன்னித்து விடலாம். அதுவரை உயிர்த்தியாகியான ஷஹீத் கூட மன்னிக்கப்பட மாட்டார்... </description>
            <link>http://www.islamkalvi.com/fiqh/varisu/003.htm</link>
            <pubDate>25 Jun 2007 10:00:00 GMT</pubDate>
        </item>
        <item>
            <title>இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தின் சிறப்பு (பாகம் 2) இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டங்கள் -M.முஹம்மத் யூசுஃப் மிஸ்பாஹி</title>
            <description>இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தின் சிறப்புப் பற்றிப் பேராசிரியர் G.C. வெங்கட சுப்பாராவ் தம்முடைய FAMILY LAW IN INDIA (இந்திய குடும்ப இயல் சட்டம்) என்ற நூலில் கூறியுள்ள கருத்துக்கள் நாம் கவனிக்கத் தக்கவை. "இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம் மிகுந்த நுண்ணறிவோடு திட்டமிடப்பட்ட ஒன்றாகும். வாரிசுரிமையின் மிகச் சிக்கலான பிரச்சினைகளைப் பயனுள்ள வகையில் கையாளுவதால் அது நமது போற்றுதலுக்குரியதாகும்" என்று அவர் கூறுகிறார். மேலும், "இஸ்லாமியச் சட்டத்தில் கடமையாக்கப்பட்டுள்ள விரிவான வாரிசுரிமை முறை எந்த அளவிற்கு இயலுமோ அந்த அளவிற்குத் துல்லியமாக உள்ளது" என்றும் புகழ்ந்துரைக்கிறார்... </description>
            <link>http://www.islamkalvi.com/fiqh/varisu/002.htm</link>
            <pubDate>18 Jun 2007 10:00:00 GMT</pubDate>
        </item>
        <item>
            <title>வாரிசுரிமையின் அவசியம் (பாகம் 1) இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டங்கள் -M.முஹம்மத் யூசுஃப் மிஸ்பாஹி</title>
            <description>மனிதன் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதிப்பது தனக்கு மட்டுமின்றி, தனது பிற்கால வாழ்வு, தனது மரணத்திற்குப் பின்னர் தனது சந்ததிகள், உற்றார், உறவினர் போன்றவர்களுக்காகவும்தான். எனவே, அவன் அப்படி கடின உழைப்பின் மூலம் ஈட்டிய சொத்து, சுகங்கள் அவனது மரணத்திற்குப் பின்னர் உரியவர்களுக்குக் கிடைக்காமல் போய், ஒரு சிலரோ அல்லது உரிமையற்றவர்களோ அபகரித்து விடக்கூடாது என்ற விஷயத்தில் தனி கவனம் செலுத்தி, அதற்காக அச்சொத்தில் அவர்களுக்கு உரியது எந்த அளவு என்பதையும் இஸ்லாம் நிர்ணயித்துள்ளது. அளவு நிர்ணயிக்கப்படாதிருந்தால் பேராசையால் தனக்கே சொத்து முழுவதும் சேர வேண்டுமென்று வலியவர்கள் அதை அபகரித்து விடக்கூடும். எனவே, தகுதியானவர்களுக்கு தகுதியான விகிதத்திலேயே சொத்துரிமை அளித்துள்ளது இஸ்லாம்... </description>
            <link>http://www.islamkalvi.com/fiqh/varisu/001.htm</link>
            <pubDate>04 Jun 2007 10:00:00 GMT</pubDate>
        </item>
    </channel>
</rss>




