Index |Subscribe mailing list | Help | E-mail us

 

 

அமெரிக்காவின் அரசியலும், முஸ்லீம்களும்

அக்பர் பாட்சா

 

பகுதி-1
அமெரிக்காவிற்கு குளிர் காய்ச்சல் வராத நாட்களே கிடையாது என்று சொல்லுமளவிற்கு எப்போது பார்த்தாலும் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி அமெரிக்கா மூக்கை சிந்திக் கொண்டிருப்பதும் மற்ற நாடுகளை நினைத்து கவலையில் நடுங்கிக் கொண்டிருப்பதும் வாடிக்கையாகிப் போய்விட்டது.

இரண்டாம் உலகப்போர் முடிந்த காலங்களிலிருந்து அறுபதுகள் வரை தனது அண்டை நாடுகளில் யார் ஆளவேண்டும், எப்படி ஆளவேண்டும் என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தது. திடீரென்று வியாட்னாமிற்கு ஜனநாயகத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டிய கவலையில் தானும் நடுங்கி உலகத்தில் உள்ள மற்ற வளரும் நாடுகளையும் கவலை கொள்ள வைத்தது. அதன் பிறகு, ஐரோப்பியர்களை எப்படி தன் கைக்குள் வைத்திருப்பதென்ற கவலைக்கு மருந்தாக சோவியத் அரசோடு குளிர் காய்ச்சலில் நடுங்கிக் கொண்டிருந்தது. சோவியத்தை ஒழித்துக் கட்டிய பிறகு ஐரோப்பியர்களை எப்படி பிரித்து வைப்பதென்ற கவலையில் அவ்வப்போது கவனம் செலுத்தி வந்தது. ஐரோப்பியாவை எவர் ஆண்டாலும் சரி தனது கொள்கைகளுக்கோ அல்லது வியாபாரங்களுக்கோ எதுவும் குறை வந்துவிடக் கூடாது என்று ஒப்பாரி வைக்காத குறையாக பிதற்றல்கள்.

இவைகளை எல்லாம் விட்டு கொஞ்சம் தள்ளி வந்தால் சீனாவை நினைத்து வேறு சொல்ல முடியாத கவலை. ஜப்பானின் பொருளாதார முன்னேற்றமும், அதைத் தொடர்ந்து ஜப்பானிய பொருட்களுடன் உலக நாடுகளில் போராட வேண்டிய நிர்பந்தத்திற்க்கு உள்ளான போதும், அவ்வப்போது கொரியாவை நினைத்தும் பல்வேறு சூழல்களில் ஒரே ராஜ தந்திர பினாத்தல்கள். இருக்கிற உபாதைகள் போதாதென்று ஈரானியர்களின் அணுகுண்டை நோக்கிய முன்னேற்றம் அமெரிக்காவிற்கு சொல்லென்னா துயரத்தை அனுதினமும் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஒருவழியாக பாகிஸ்தானின் அணுகுண்டு ஜனநாயகவாதிகளின் கையில் இருப்பதைவிட காக்கிச்சட்டைக்காரர்களிடம் இருப்பதே மேல் என்ற கொள்கையை செயல்படுத்தி வரும்போது இந்த ஈரானிய தலைவலி தற்போது அமெரிக்காவை தூங்கவிடாமல் அடித்துக் கொண்டிருக்கிறது. இது போதாதென்று ரஷ்யாவின் nuclear fuel deal வேறு. ஈரானின் முல்லாக்களை ஆட்சியை விட்டு விரட்ட வேண்டும் என்று போராடும் அதே நேரம் ஈராக்கில் முல்லாக்களை ஆட்சியில் அமர்த்த வேண்டிய சிக்கலில் சிக்கி நிற்கிறது அமெரிக்கா.

இதெல்லாம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க அமெரிக்காவின் கொஞ்சம் நஞ்சம் சுய சிந்தனைகளையும் மொத்தமாக குத்தகை எடுத்துக் கொண்டு தனது எல்லா சுமைகளையும் அமெரிக்காவின் தலை மேல் போட்டுவிட்டு கும்மாளம் அடித்துக் கொண்டிருக்கிற இஸ்ரேல். தொலையட்டும் துக்டா நாடு, பல காலமாக உலக நாடுகளில் அலைக்கழிக்கப்பட்ட மக்கள் என்று அமெரிக்கா இஸ்ரேலின் அட்டுழியங்களை 'செல்லப் பிள்ளையின்' விளையாட்டு போல் சகித்துக் கொள்ளவேண்டிய கவலை வேறு.

மொத்தத்தில் உலகப் பிரச்சனைகள் எல்லாவற்றையும் தன் தலைமேல் அள்ளிப் போட்டுக் கொண்டு தத்துப் பித்தென்று உலக உருண்டையின் மேல் களியாட்டம் நடத்திக் கொண்டிருக்கிற அமெரிக்கா தற்போது ஒரு புதிய அவதாரம் எடுத்திருக்கிறது. அதாவது 'ஜனநாயக வாத்தியார்', உலகத்திற்க்கு ஜனநாயகத்தை கற்றுத் தருவதென்று முடிவெடுத்து முதலாவதாக அரேபிய ஆட்சியாளர்களை எல்லாம் கையில் தடியுடன் மிரட்டி வகுப்பறைக்கு அழைத்துக் கொண்டிருக்கிறது.

ஏன் இப்படி அமெரிக்கா உலக நாடுகளை நினைத்து இத்தனை அதிகமாக கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறது? சிந்தித்துப் பார்த்தால் அமெரிக்காவின் இந்த உலகளாவிய செயல்கள், அது அரைகுறையாக இருந்தாலும் அல்லது முழுதாக இருந்தாலும், ஒரு தொலைநோக்கு நிறைந்த, மிகவும் புத்திசாலித்தனமான மாபெரும் திட்டத்தின் விளைவுகள் என்பது தெரியவரும்.

கம்யூனிசத்தின் வீழ்ச்சியின் போது உருவான 'the new world order' என்ற புதிய உலகை நிர்மானிக்க கூடிய கட்டுமானப் பணிகளை தானாக உருவாக்கி அதற்கான தலைமைப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டது. (போட்டி தலைமை எங்கே என்று கேட்கிறீர்களா?) தீவிரவாதத்திற்க்கு எதிரான போராட்டம், ஜனநாயகத்தை திணிக்க வேண்டிய கட்டாயம் என்று பல்வேறு பரிணாமங்களை உள்ளடக்கிய ஒரு மாபெரும் திட்டத்தின் பயணம்தான் இந்த அமெரிக்காவின் உலக அரசியல். தீவிரவாதத்திற்க்கும் ஜனநாயகத்திற்க்கும் எப்படியெல்லாம் அர்த்தங்கள் செய்யமுடியும் என்பதை அமெரிக்காவின் உலக அரசியலைப் பார்க்கும் போதுதான் நமக்கே புரிய வருகிறது.

உலக நாடுகளில் குறிப்பாக தெற்காசியாவும், மத்திய ஆசிய நாடுகளும் பல்லாண்டு காலமாக தீவிரவாத கூட்டங்களால் தினம் தினம் பொதுமக்கள் கொன்று குவிக்கப் பட்டபோது உல்லாசமாக உறங்கிக் கொண்டிருந்த அமெரிக்கா தனது பொருளாதார நலன்களுக்கு பிரச்சினை என்று வந்தவுடன் தீவிரவாதத்தைக் கையில் எடுத்துக் கொண்டு உலக நாடுகளை எல்லாம் தன் பின்னால் வரவேண்டுமென்று மிரட்டிக் கொண்டிருக்கிறது. தனது இரும்புக்கர ஆக்கிரமிப்பால் ஈராக்கை வைத்துக் கொண்டு அதில் நடத்திய கண்ணாமூச்சி தேர்தலை மார்தட்டி பெரும் சாதனையாக முழங்கும் அமெரிக்கா, உலகில் பல நாடுகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட எத்தனையோ அரசுகளை அந்நாட்டு இராணுவ உதவியுடன் வீழ்த்திய வரலாறுகளையும் மறந்துவிடமுடியாது.

லெபனாலில் மக்கள் சுதந்திரமாக ஒட்டு போடவேண்டும், அது சிரியா வெளியேறினால்தான் சாத்தியம், மத்திய ஆசியாவில் ஜனநாயகத்தை மலர வைக்காமல் ஓய்வதில்லை என்று வாய் கிழிய கத்தும் வெள்ளை மாளிகை 'உலக விரும்பிகள்' பொலிவியாலில் நடக்கும் ஜனநாயகத்திற்க்கு ஆதரவான மக்கள் எழுச்சியைப் பற்றி வாய்மூடி மௌனமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

சோவியத் வீழ்ச்சியுடன் அணிசேரா நாடுகள் இயக்கம் சொல்லாமல் கொல்லாமல் தூக்கி எறியப்பட்டது போல் தற்போது ஐக்கிய நாடுகள் சபையும் அழிந்தொழிய இருக்கிறது. இரண்டாம் உலகப் போருக்கு முன்னிருந்த அரசியல் சூழ்நிலை தற்போது உருவாகிக் கொண்டிருக்கிறது. எல்லா நாடுகளும் ஏறக்குறைய மற்ற நாடுகளை சந்தேகத்துடன் பார்க்க வேண்டிய அரசியல் பொருளாதார சூழலில் இருப்பதை மறுக்க முடியாது.

யாருக்கும் யாரும் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என்ற தற்போதைய உலகச் சூழல் இந்த உலகின் எதிர்கால பயணத்தை இரண்டுவிதமான பாதைகளில் தொடருவதற்கான ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக நான் உணர்கிறேன். ஒன்று ஆக்கப் பூர்வமானது, இன்னொன்று அழிவை நோக்கியது. இரண்டிற்கும் தலைமை தாங்கிச் செல்ல தகுதி படைத்ததாக தற்போது அமெரிக்கா இருந்தாலும், அழிவை நோக்கி அழைத்துச் செல்லும் பாதையைத்தான் அமெரிக்கா விரும்புகிறது, காரணம், அமெரிக்காவின் உலகப் பார்வையும், உலகின் பெரும்பாலான நாடுகளின் உலகப் பார்வைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. Unilateral and multilateral என்ற இரண்டு விதமான சிந்தனை போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதைத்தான் அவ்வப்போது அமெரிக்காவின் வலதுசாரி சிந்தனையாளர்கள் வேறொரு பெயரில் 'clash of civilization' என்று உலகை ஏய்க்கும் வேலையை செய்து வருகிறார்கள். அப்படி செய்வதிலும் சொல்வதிலும் மூலமாக அமெரிக்காவிற்கு அதனுடைய 'new world order' கட்டமைப்புக்கு வலு சேர்க்க முடியும் என்று எண்ணுகிறார்கள். ஆனால், பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் இந்த அமெரிக்க சிந்தனையை ஏற்க மறுப்பதும் கீழை நாடுகளை, குறிப்பாக முஸ்லீம் நாடுகளை பிரித்துப் பார்க்கும் சிந்தனையை ஏற்க மறுக்கின்றன. காரணம் கீழை நாடுகளின் கலாச்சாரமும் சிந்தனை பரிமாற்றங்களும் ஐரோப்பாவின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தவை மேலும் அவைகள் இன்னும் பலன் தரக்கூடியவை என்பதில் அவர்கள் அசைக்க முடியாத நம்பிக்கைகள் வைத்துள்ளதுதான். ஆனால் அமெரிக்காவின் சிந்தனையை, குறிப்பாக தற்போது ஆளும் வர்க்கத்தின் சிந்தனைகளை முற்றிலுமாக கவர்ந்திருக்கக் கூடிய ஜையனோசியக் கொள்கைகளைத் தழுவிய 'new world order' தற்போது 'clash of civilization' என்ற பெயரில் தனது திட்டங்களை ஒன்றன் பின் ஒன்றாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

எல்லா உலக பேரரசுகளும் உயர்ந்ததும் வீழ்ந்ததும் இப்படிப்பட்ட மாறுபட்ட சிந்தனைகளின் வளர்ச்சியை பொருத்தே வந்திருக்கின்றன. அதே வேளை, இந்த சிந்தனைகள் பொருளாதார ரீதியாக வளர்ச்சியை கொடுக்கும் வரை அந்த சிந்தனைகளின் எதிர்மறை விளைவுகள் அதன் பின் விளைவுகள் ஒரு பெரும் பிரச்சனையாகத் தெரியாது. ஆனால், பொருளாதார பின்னடைவுகள் உருவாக ஆரம்பித்ததும், அதன் எதிர்மறை விளைவுகள் வெளிப்படையாக தெரியவரும். எதிர்மறை விளைவுகள் முதலில் பொருளாதார வீழ்ச்சி¨யையும் அதைத் தொடர்ந்து ஆதரவு அளித்த கூட்டணிகள் உடைவதின் மூலம் உணரமுடியும். ஆனால், இந்த காலம் கடந்த விழிப்பால் உடனடியாக அந்த சிதைவுகளிலிருந்து மீள்வது என்பது கடினமான ஒன்று மட்டுமல்ல பல சமயங்களில் அது அழிவில் சென்று முடிகிறது. இந்த சூழலில் உலகப் பேரரசுகள் எதைக் கொள்கையாகக் கொண்டு தனது சிந்தனை முறையை அமைத்துக் கொண்டதொ அந்த கொள்கையை உதறி எறிய வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகின்றன. சிந்தனைகளை உதறி எறிவதென்பது சாதாரண விஷயமல்ல, அப்படி அந்த கொள்கைகளை விட்டு வெளியேறும் போது, அதற்கொரு விலையையும் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் சோவியத் பேரரசின் வீழ்ச்சியும் அதன் கீழ் இருந்த நாடுகள் சிதறுண்டு போனதையும் எடுத்துக் கொள்ளலாம். அமெரிக்காவும் இப்படி ஒரு சூழலை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறதா?
 


பகுதி-2

உலக அரசியலை புரிந்துக் கொள்ள வேண்டுமென்றால் அமெரிக்காவின் அரசியலை புரிந்துக் கொண்டால் போதும், அதே போன்று அமெரிக்கா டாலரை நாம் புரிந்துக் கொண்டால் உலக பொருளாதாரத்தை புரிந்துக் கொண்டது போல் ஆகும். அந்த அளவிற்கு டாலரின் தாக்கம் உலக பொருளாதார வளர்ச்சியிலும் வீழ்ச்சியிலும் அதிக பங்கு கொண்டதாக இருக்கிறது. இதற்கும் முஸ்லீம்களுக்கு எதிரான அரசியல் அணுகுமுறைகளுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கலாம். அமெரிக்கா அரசியல் முஸ்லீம்களை பொருத்தவரை இரண்டு விதமான அரசியல் பரிமானங்களை கொண்டு செயல் படுத்தப்படுகிறது. ஒன்று உலக பொருளாதாரத்தின் அடிப்படை அம்சமான பெட்ரோல், இன்னொன்று உலகத்தின் பல பாகங்களில் பெரும்பான்மையான மக்களின் மனதை ஊடுருவிக் கொண்டிருக்கும் குர்ஆனின் கொள்கைகள். இரண்டிற்குமே அதாவது, 'மனம் மற்றும் பணம்' என்ற வாழ்வின் இரண்டு அதி முக்கிய தேவைகளுக்கு அடிப்படை காரணியாக இருப்பது இந்த மத்திய ஆசிய என்ற பாலைவன சமவெளிதான்.

இந்த இரண்டையும் வெல்ல வேண்டும் என்ற பன்னெடுங்கால போராட்டத்தின் பின்னனியில் (பல்வேறு அரசியல் கூட்டணிகள் செயல்பட்டாலும், தற்போது) அமெரிக்காவின் 'neocon' அரசியல் கூட்டணியினர் செயல்படுத்தும் அரசியல் திட்டங்களையும், அதன் சாதக பாதகங்களும்தான் இன்றைக்கு முக்கியத்துவம் நிறைந்த முஸ்லீம்களுக்கு எதிரான அரசியல் போராட்டமாக இருக்கிறது. முதலில் பொருளாதார பொலிட்டிக்ஸை அதாவது பெட்ரோல் பொலிட்டிக்ஸைப் பார்த்துவிட்டு பிறகு புத்தகப் பொலிட்டிக்ஸிற்கு (politics of ideology and mythology) போகலாம்.

அமெரிக்காவின் மிகப் பெரும் பிரச்சினை குறைந்து வரும் டாலரின் மதிப்பும், அதைப் பாதுகாக்க வேண்டிய அவசியமும்தான். வருடத்திற்க்கு 5 சதவிகிதமாக அதன் மதிப்பு மற்ற நாடுகளின் கரன்சிக்கு, குறிப்பாக யூரோவிற்கு எதிராக குறைந்துக் கொண்டிருப்பது கவனிக்க வேண்டிய மிக முக்கியமான ஒன்று. காரணம், மற்ற கரன்சிகளைப் போல் அமெரிக்கா டாலர், தங்கத்திற்க்கு எதிராக நிர்ணயிக்கப்பட்ட கரன்சி அல்ல. 1971ம் வருடத்திலிருந்து அமெரிக்கா டாலர் ஒரு 'floating currency' ஆக மாற்றப்பட்டது 'backing out on Bretton Wood Commitment'. அப்போது சுமார் 70 பில்லியன் டாலர் கடனாளியாக இருந்த அமெரிக்கா கையில் வைத்திருந்தது வெறும் 11 பில்லியன் பெருமானமுள்ள தங்கமே.

இன்றைக்கு அமெரிக்காவின் சூப்பர் பவர் அந்தஸ்திற்க்கு மற்றுமொரு காரணம் உலகச் சந்தையில் செய்யப்படும் வர்த்தக பரிமாற்றங்கள், மற்றும் ஒரு நாடு இன்னொரு நாட்டிற்கிடையில நடைபெறும் வர்த்தக மாற்றங்கள் யாவும் டாலரை அடிப்படையாகக் கொண்டு நடைபெறுவதே. பெரும்பாலும் உலகளாவிய இந்த வர்த்தக அமைப்பு டாலருக்கு பெரும் மதிப்பு அளிப்பதோடு அதன் பலவீனத்தை மறைப்பதற்கும் உதவுகிறது.

எந்த நாட்டினுடைய பொருளாதாரமும் அந்தந்த நாட்டின் பலம் மற்றும் பலவீனத்தை அடிப்படையாகக் கொண்டுதான் கணிக்கப்படும். அதே நேரம் அந்த நாட்டினுடைய கரன்சியின் மதிப்பு அந்நாட்டின் அடிப்படை பொருளாதார அமைப்பின் திறனை வெளிப்படுத்தக் கூடியதாகவும் இருக்கும். இதுதான் பொதுவான கரன்சி மற்றும் பொருளாதார அடிப்படை விதிமுறைகள்.

அமெரிக்காவின் டாலரை கவனித்தால் அது அதனுடைய சரியான மதிப்பைவிட அதிகமான மதிப்பு கொண்டிருப்பது தெரியவரும். இந்த 'over valued' அமெரிக்கா டாலரின் மதிப்புதான் தற்போது அமெரிக்காவின் மிகப் பெரும் பலமும் மற்றும் பலவீனமும். இது மற்ற நாடுகளில் இருக்கக் கூடிய பொருளாதார சிரமங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பிரச்சினை.

அமெரிக்கா தான் ஏற்றுமதி செய்யக் கூடிய அளவைவிட சுமார் 50% அதிகமாக இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு வரை வருடத்திற்க்கு சுமார் 500 பில்லியன் டாலர் பற்றாக்குறையில் இருந்துக் கொண்டிருக்கக் கூடிய அமெரிக்காவின் பட்ஜெட் மொத்தமாக கடந்து 25 வருட கால பட்ஜெட்டை கணக்கிட்டுப் பார்த்தால் கிட்டத்தட்ட ஆறிலிருந்து ஏழு டிரில்லியன் டாலர்கள் கடனாளியாக இருந்துக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஒரு நாளைக்கு 1.25 பில்லியன் டாலர் கணக்கில் இது அதிகமாகிக் கொண்டிருப்பது அமெரிக்காவின் மிகப் பெரும் கவலைகளில் ஒன்று.

இத்தனை பிரச்சனைகளுக்கு மத்தியிலும் அமெரிக்கா டாலர்கள் இன்னும் ஒரு சக்திவாய்ந்த கரன்சியாக காட்சி அளிப்பதற்க்கு காரணம் மேலே சொன்னதுபோல் உலக வர்த்தக பரிமாற்றங்கள் அமெரிக்க டாலரின் மூலமாக நடைபெறுவதே.

உலகில் நடைபெறும் அந்நிய செலவானி மாற்றங்களில் சுமார் 80 சதவிகிதம் டாலரின் மூலமாகத்தான் நடைபெறுகிறது. உலகில் நடைபெறும் ஏற்றுமதிகளில் குறைந்த பட்சம் பாதி ஏற்றுமதி இறக்குமதிகள் டாலர் வழியாகத்தான் நடை பெறுகிறது. சர்வதேச வர்த்தகங்கள் செய்வதர்க்கு வசதியாக ஒவ்வொரு நாடும் அமெரிக்கா டாலரைத்தான் கையிருப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம். இதன் காரணமாக உலக நாடுகளின் மொத்த டாலர் கையிருப்பு சுமார் 68 சதவிகிதமாக அந்தந்த நாடுகளின் மத்திய வங்கிகளில் குவிக்கப் பட்டுள்ளது. அது மட்டுமா? IMFன் கடன் வசதிகள், கொடுக்கல் வாங்கல்கள் எல்லாம் டாலரின் மூலமாகத்தான் நடைபெறவேண்டும். IMFல் அமெரிக்காவின் பங்கு 51% சதவிகிதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதைவிட இன்னுமொரு முக்கியமான வர்த்தக பரிமாற்றம், அதாவது ஒபெக் நாடுகளின் மற்றும் அதை சாரத எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் அனைத்தும் டாலரில்தான் வியாபரம் செய்கின்றன.

இப்படி உலக நாடுகளின் வர்த்தகங்கள் அனைத்தும் டாலர் மூலமாக நடைபெறுவதால் அந்தந்த நாடுகளின் மத்திய வங்கிகள் தனது டாலர் கையிருப்பைப் பற்றி கவலைப்படுவது அன்றாட வழக்கமாகிவிட்டது. இதன் காரணமாக அவ்வப்போது பொது சந்தையிலிருந்து டாலரை வாங்குவதும் விற்பதும் இந்த மத்திய வங்கிகளின் வழக்கமான தொழிலாகும். ஏனென்றால் உலக நாடுகள் அனைத்தும் தனது கரன்சியின் மதிப்பைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டிய நிர்பந்தமும் இன்னும் தனது கரன்சி over value கிவிடக்கூடாது என்ற அவசியமும்தான். இப்படி உலக நாடுகள் எல்லாம் தனது கரன்சியைக் காப்பற்றிக் கொள்ள போராடும்போது அமெரிக்கா மட்டும் டாலர்களை பிரிண்ட் செய்து உலக நாடுகளின் மத்திய வங்கிகளில் சலவைக் காயாமல் உறங்க வைத்துவிட்டு கொண்டாட்டமடித்துக் கொண்டிருக்கிறது. இந்த சிறப்புத் தகுதி அமெரிக்காவிற்கு மட்டுமே இருப்பதால் அமெரிக்கா டாலர்கள் over valued கவும், இன்னும் அடிப்படை பலவீனங்கள் பலவும் இருந்தாலும் இன்னும் பலம் நிறைந்த கரன்சியாகவும், பொருளாதார சூப்பர் பவராகவும் வலம் வந்துக் கொண்டிருக்கிறது.

அமெரிக்காவின் தேவைகளுக்கு ஏற்ப அச்சகங்களுக்கு ஆர்டர் கொடுத்து வேண்டிய டாலர்களை பிரிண்ட் செய்தால் போதும் என்று தினம் தினம் அதிகமாகும் கடன் பிரச்சனைகளை சர்வ சாதாரணமாக சமாளித்துக் கொண்டிருக்கிறது. 'சருகிக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துகின்ற வேலையை எந்தவித செலவுகளும் இல்லாமல் அமெரிக்காவின் டாலர் அச்சகங்கள் கவனித்துக் கொள்ளும்' என்று சொன்ன பென் எஸ். பெர்னான்கியின் வாசகங்களை இங்கே நினைவு கூர விரும்புகின்றேன்.
(Ben S. Bernanke, a Federal Reserve Board Governor, in his speech on November 21, 2002)

இப்படி தொடர்ந்து டாலர்களை அச்சடித்துக் கொண்டிருந்தால் டாலரின் மதிப்பு மிக விரைவில் சிதைந்துவிடும் என்று பெரும்பாலான பொருளாதார மேதைகளின் அறிவுருத்தலால் அமெரிக்க அரசாங்கம் பிரிண்டிங் பிரசுகளுக்கு ஆர்டர் கொடுப்பதை கடந்த ஒரு சில வருடங்களாக நிறுத்தி வைத்துவிட்டு டாலர்களை முடக்கி வைக்காமல் புழக்கங்களை அதிகப் படுத்த வேண்டுமென்று முடிவெடுத்துள்ளது. எவ்வளவுக்கு எவ்வளவு டாலர் புழக்கங்கள் அதிகமாகிறதோ அவ்வளவிற்கு அமெரிக்காவின் பொருளாதாரம் பாதுகாப்பு பெற்றதாக இருக்கும் என்பதை சமயோசிதமாக சிந்தித்து முடிவெடுத்து, குறைந்த பட்சம் உலகில் சராசரி மூன்று டிரில்லியன் டாலர்களாவது பொது சந்தைகளில் வர்த்தக பரிமாற்றம் செய்துகொள்ளப்பட வேண்டும் என்று தற்போது டாலர் புழக்கங்களை அதிகப் படுத்தி வருகிறது.

உலகப் பொருளாதாரத்தை நிர்வகிக்கவும் மற்றும் நடத்திச் செல்லவும் கூடிய ஒரு முக்கியமான தலைமையிடத்தை அமெரிக்கா தக்க வைத்துக் கொள்ள அது எடுத்துக் கொண்ட அரசியல் மற்றும் பொருளாதாரத் கொள்கைகளும் மற்றும் ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலமாக நடந்த கடினமான முயற்சிகளின் வெளிப்பாடுதான் இன்றைய அதன் உயர்விற்க்கு காரணமாக அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இராணுவ மற்றும் அரசியல் உலகிலும் தன்னை இப்படி உயர்வித்துக் கொண்டதன் காரணமாக தற்போது அறிந்தோ அறியாமலோ ஒரு முக்கியமான breaking point நிலையைத் தொட்டுக் கொண்டிருக்கிறது. இதைத்தான் இதன் முதல் பகுதியில் அமெரிக்கா உலக நாடுகளை வழி நடத்திச் செல்லக் கூடிய தகுதி கொண்ட நாடாக நான் எழுதியது.

அதுமட்டுமல்லாமல் அமெரிக்கா தற்போது மற்ற நாடுகளிடம் தன்னை நீங்கள் எல்லோரும் பெரியண்ணனாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற நிர்பந்ததை வைக்க விரும்பாமலே தன்னிச்சையாக முடிவெடுத்து உலக நாடுகள் எல்லாவற்றுக்கும் எது சிறந்தது, எது சரியானது, நீ எப்படி நடக்க வேண்டும், இன்னும் பத்து வருடத்திற்க்கு பிறகு உனக்கு எது சிறந்தது என்று எனக்குத் தெரியும், நீ நான் சொல்வதைக் கேள், இல்லையென்றால் உன்னை ஒழித்துவிடுவேன் என்றெல்லாம் 'தாதா' வேலையை செய்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு தன்னிகரற்று விளங்கிக் கொண்டிருக்கும் இந்த அமெரிக்காவின் பொருளாதார தலைமைக்கும், அதைத் தொடர்ந்து கிடைக்கும் அரசியல் மேம்பாட்டிற்க்கும், கொச்சையாக சொல்வதென்றால் அரசியல் தாதாகிரிக்கும் போட்டியே கிடையாதா?
 


பகுதி-3

ஆங்கிலத்தில் சொல்வார்கள்,
'When the chips are down, you have to show the grit' இதைத்தான் தற்போது அமெரிக்கா செய்து கொண்டிருக்கிறது. தனது பொருளாதாரம் ஒரு கண்ணி வெடியின் மீது நிற்பது போல் அமெரிக்கா உணர்கிறது. அமெரிக்காவின் வீழ்ச்சி அதனுடைய பொருளாதார வீழ்ச்சியை பொறுத்தே இருக்கிறது என்பதை அமெரிக்காவின் ஆளும் வர்க்கம் நன்றாகவே உணர்ந்திருக்கிறது. இன்னும் நான்கைந்து வருடங்களில் அமெரிக்காவின் பொருளாதாரம் சரிவை சந்திக்கும் அபாயம் வெகுவாகவே இருப்பதால், 21ம் நூற்றாண்டு அமெரிக்காவின் கையை விட்டு போகும் வாய்ப்பு நிறையவே உள்ளது.

அமெரிக்காவின் பொருளாதாரத்தை தொடர்ந்து நம்பலாமா? அமெரிக்காவின் பொருளாதார பலம் தொடர்ந்து குறைவதால் டாலரின் கையிருப்பை மாற்றலாமா? என்றெல்லாம் உலக நாடுகள் தொடர்ந்து சிந்தித்து வருவதும் டாலரின் கையிருப்பை குறைப்பதும் இப்போது தொடங்கிவிட்டன.

இச்சூழலில்தான் 1999ல் ஈரோ அறிமுகப் படுத்தப்பட்டு டாலரைப் போல் அல்லாமல் தங்கத்திற்க்கு எதிராக 15% மதிப்புடன் புழக்கத்திற்க்கு கொண்டு வரப்பட்டது. முதலில் ஈரோ ஒரு பலவீனமான கரன்சியாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் கடந்த நான்கு வருடமாக ஈரோ டாலருக்கு எதிராக 25% தனது மதிப்பை உயர்த்தி, தன்னை ஒரு மாற்று கரன்சியாக, குறிப்பாக டாலருக்கு எதிராக தன்னை நிலைப்படுத்திக் கொண்டுள்ளது.

எப்போதுமே மார்க்கெட்டில் ஒரு பொருளை எதிர்த்து இன்னொரு பொருளை புழங்கவிட வேண்டுமென்றால் அல்லது புரோமோட் செய்ய வேண்டுமென்றால் அறிமுகப்படுத்தப்படும் அல்லது போட்டியிடும் பொருளை குறைந்தது இரண்டு மூன்று வருடத்திற்கு எப்படி செயல்படுத்தப் போகிறோம் என்று முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டு செயல் படுத்தப்படும். அவ்வப்போது தேவைப்படும் பட்சத்தில் அதனுடைய செயல் திட்டத்தில் ஒருசில மாற்றங்கள் உண்டாக்கப்டுமே தவிர்த்து அதனுடைய
'marketing strategy' மாற்றப்பட மாட்டாது. அந்த வகையில்தான் ஈரோ அமெரிக்க டாலருக்கு எதிராக நிறுத்தப்பட்டு உலக நாடுகளின் வர்த்தகத்தில் தனக்கென்று ஒரு பங்கை உருவாக்கிக் கொண்டுவிட்டது.

2002 வருடத்தில் உலக நாடுகளின் டாலர் மொத்தக் கையிருப்பு தோராயமாக 68% ஆக இருந்தது. அதே வருடம் உலகிலேயே ஜப்பானுக்கு அடுத்தப்படியாக கிட்டதட்ட 200 பில்லியன் டாலர்கள் கையிருப்பு வைத்துள்ள சீனா தனது கையிருப்பில் கனிசமான பங்கை ஈரோவிற்கு மாற்றுவதாக அறிவித்தது. (சீனாவின்
forex reserve ஒரு அரசாங்க ரகசியமாக கையாளப்படுகிறது). ஈரோவின் மத்திய வங்கியான BNP Paribas அறிக்கையின்படி சீனா 80% வைத்திருந்த டாலரின் கையிருப்பை 50% குறைத்ததாக தெரிகிறது.

2001-லிருந்து 2003 வரை கனடா தனது டாலரின் கையிருப்பை 75% லிருந்து 55% குறைத்து ஈரோவின் கையிருப்பை 23% லிருந்து 42% உயர்த்தியுள்ளது.

ஜனவரி 2003-ல் ரஷ்யாவின் மத்திய வங்கி ஈரோ கையிருப்பை 5% லிருந்து 10% உயர்த்தி டாலரின் கையிருப்பை 75% குறைத்தது. ரஷ்யாவின் இறக்குமதியில் 42% ஐரோப்பிய நாடுகளிலிருந்துதான் செய்யப்படுகிறது என்பதும் கவனிக்க வேண்டியதே.

2002ல் தைவான், ஹாங்காங், கிழக்கு ஐரோப்பிய நாடுகளும், 2003ல் இந்தோனேஷியா
'axis of evil' என்று அமெரிக்காவால் அடையாளப்படுத்தப்பட்ட நாடுகளில் ஒன்றான வட கொரியா போன்ற நாடுகள் டாலரை குறைத்து ஈரோவை அதிகப் படுத்த தொடங்கின. இப்படி உலக நாடுகளின் செயல்பாடுகளுக்கு காரணம் ஏதோ அமெரிக்காவை பிடிக்காமல் அல்ல. இந்த நாடுகளின் இறக்குமதிகளின் பெருமடங்கு ஐரோப்பியா நாடுகளிலிருந்து செய்ய வேண்டிய அவசியமும் மற்றும் டாலரைப் போல் அல்லாமல் ஈரோ தங்கத்திற்க்கு எதிராக அதிலும் 15% மதிப்புடன் பொறுத்தப்பட்டதே. அதே நேரம் ஈரோவின் நம்பகத்தன்மை டாலரைவிட அதிகமாக இருப்பதற்க்கு காரணம் ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகள் எதுவும் அமெரிக்காப் போன்று பற்றக்குறைகள் அதிகமில்லாமல் இருப்பது இன்னுமொரு முக்கிய காரணம்.

தற்போது உலக பொருளாதாரத்தில் என்னவெல்லாம் வாங்க வேண்டுமோ அவை அத்தனையும் ஈரோவின் மூலம் வாங்கிக் கொள்ளலாம், பெட்ரோலைத் தவிர்த்து.

இவ்வாறு ஈரோவின் புழக்கம் அதிகமாவதும் ஐரோப்பிய நாடுகள் ஈரோவில் வர்த்தக பரிமாற்றங்கள் செய்வதும் அமெரிக்காவின் டாலர் புழக்கத்தை வெகுவாக பாதிக்கத் தொடங்கியது.

இந்த உலக வர்த்தக பரிமாற்றங்களில் அதிகமான வர்த்தகம் பெட்ரோல் வர்த்தகம்தான் என்பதை புதிதாக ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை. உலகிலேயே அமெரிக்காதான் தற்போது எண்ணெய் இறக்குமதியில் முதலிடம் வகிக்கிறது. ஒரு நாளைக்கு 20 மில்லியன் பேரல்கள் இறக்குமதி செய்யக்கூடிய அமெரிக்க தனது இந்த வர்த்தகத்திற்க்கு டாலர் அல்லாமல் ஈரோவில்தான் கட்டணம் செலுத்த வேண்டுமென்றால், கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அதிலும் தற்போது இருக்கக் கூடிய வருடத்திற்க்கு 500 பில்லியன் டாலர் பற்றாக்குறை பட்ஜெட் வைத்துக் கொண்டு, நினைத்துப் பார்க்கவே இயலாத அளவிற்கு ஒரு பொருளாதார படுகுழியின் விளிம்பில் நின்றுக் கொண்டிருக்கிறது அமெரிக்கா!

அதுமட்டுமா? அமெரிக்காவின் அதிகமான எண்ணெய் இறக்குமதி சவுதி அரேபியாவிலிருந்துதான் செய்யப்படுகிறது. இந்த இரு நாட்டிற்கும் உள்ள ஒரு விசித்திரமான ஒப்பந்தத்தின்படி சவுதி ரியாலின் மதிப்பு அமெரிக்கா டாலருக்கு எதிராக எந்தவித மாற்றங்களும் செய்யாமல், அதாவது இரு நாட்டு கரன்சிகளும் எப்படிப்பட்ட பணவீக்கம் நிகழ்ந்தாலும் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பு குறையாமல் கடந்த பல வருடங்களாக செயல்பட்டு வருகிறது. உலகில் எல்லா பாகங்களிலும் அமெரிக்கா டாலர்கள் மதிப்பிழந்து வரும்போது சவுதியுடன் மட்டும் நிர்ணயிக்கப்பட்ட அளவு குறையாமல் வர்த்தக பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் பில்லியன் கணக்கில் சவுதி அரேபியா வருமானத்தை இழந்து வருகிறது. இப்படி ஏற்படும் இழப்புகளின் மூலம் ஏற்படும் பிரச்சினைகளை எப்படி அமெரிக்கா பிரிண்டிங் பிரஸ் மூலமாக தீர்த்துக் கொள்கிறதோ அதே போல் சவுதி அரேபியா பெட்ரோல் பம்புகள் மூலம் சரி செய்து கொள்கிறது. பெருகிவரும் அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சனைகளில் இப்படி அச்சடிப்பதும், நிலத்திலிருந்து பம்ப் செய்வதுமாக இன்னும் எத்தனை நாளைக்குத்தான் செயல்படுவது?

ஈரோவின் இந்த உறுதியான மற்றும் குறிவைத்த முன்னேற்ற நடை பெட்ரோல் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்தை எப்படி டாலரிலிருந்து ஈரோவிற்கு மாற்றுகிறது என்பதை பார்ப்போம்.

ஆகஸ்ட் 2002ல் ஈரான் தனது அந்நிய செலாவனி கையிருப்பில் பாதியை ஈரோவாக மாற்றிவிட்டது. எண்ணெய் வளத்தில் உலகின் ஐந்தாவது இடத்தில் இருக்கக் கூடிய ஈரான் தனது பெட்ரோல் வர்த்தகங்களை ஈரோவில் மாற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை.

அதே வருடம் உலகில் பெட்ரோல் ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தில் இருக்கக் கூடிய ரஷ்யா ஐரோப்பிய நாடுகளுடன் குறிப்பாக ஜெர்மனியுடனான வர்த்தகம் ஈரோவில்தான் செய்யப்படும் என்று பேச்சுவார்த்தையில் இறங்கி ஒப்பந்தமும் ஆகிவிட்டது.

எண்ணெய் உற்பத்தியில் நான்காவது இடத்தில் இருக்கக் கூடிய வெனிசூலா பதிமூன்று வளரும் நாடுகளுடன் பார்ட்டர் (Barter deal) ஒப்பந்தம் செய்து கொண்டு தனது எண்ணெய் வர்த்தகத்திற்க்கு ஈடாக அந்தந்த நாடுகளுடைய பொருட்களை இறக்குமதி செய்வதாக ஒப்பந்தம் செய்து கொண்டது.

இதற்கெல்லாம் முன்னோடியாக தனது பெட்ரோல் வர்த்தகத்தை ஈரோவிற்கு மாற்றிய முதல் நாடு ஈராக். எண்ணெய் வளத்தில் இரண்டாவது இடத்தில் இருக்கக் கூடிய ஈராக் நவம்பர் 2000 -ல் தனது வர்த்தகத்தை அதாவது oil for food என்று ஐ.நா. வினால் அங்கீகரிக்கப்பட்ட வர்த்தகத்தை முற்றிலுமாக ஈரோவிற்கு மாற்றியது. அதுமட்டுமல்லாமல், ஐ.நா. மூலமாக தான் வைத்திருந்த 10 பில்லியன் டாலரையும் ஈரோவாக மாற்றிக் கொண்டது. இதனால் மூன்றில் இரண்டு பங்கு பெட்ரோலை ஈராக்கிடமிருந்து வாங்கிக் கொண்டிருந்த அமெரிக்க கம்பெனிகள் ஈராக்கிற்கு ஈரோவின் மூலம் பணம் செலுத்த வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளானது. இச்சூழலில் ஜோர்டான் நாடும் ஈராக்கும் செய்து கொண்ட ஒப்பந்தப்படி ஜோர்டான் ஈராக்கிற்கு ஈரோவின் மூலம் பெட்ரோல் வர்த்தகம் செய்ய ஆரம்பித்தது.

இப்படி அங்கும் இங்குமாக டாலருக்கு போட்டியாக இருந்துக் கொண்டிருந்த ஈரோ கடைசியில் டாலரின் ராஜ்யமான பெட்ரோலில் கைவைக்க ஆரம்பித்தது அமெரிக்காவிற்கு நேர்ந்த மிகப் பெரும் பிரச்சினை.

இந்நிலையில்தான் வெந்த புண்ணில் வேலைச் செறுகியது போல் ஒபெக் நாடுகளும் தனது பெட்ரோல் வர்த்தகத்தை ஈரோவிற்கு மாற்றலாமா என்ற ஆய்வில் இறங்கியது. 'நீண்டகால எண்ணெய் வர்த்தகத்தை கணக்கில் கொண்டு பார்த்தால் டாலரிலிருந்து ஈரோவிற்கு மாற்றுவதால் எந்த கெடுதலும் வருவதாக தெரியவில்லை' என்று ஒபெக் அமைப்பின் ஜாவித் யெர்ஜானி என்பவர் தெரிவித்த கருத்து ஒபெக் நாடுகளின் வர்த்தக சிந்தனையில் வந்த மாற்றத்தை தெளிவுபடுத்துகிறது.
(Javed Yerjani, head of OPEC market analysis dept., in his speech in April 2002).

அவர் அப்படி சொன்னதற்கான காரணம் உலகில் மொத்த எண்ணெய் இறக்குமதியில் (25%) முதல் இடத்தில் இருக்கக் கூடிய அமெரிக்காவைவிட ஐரோப்பிய யூனியனில் இருக்கக் கூடிய அனைத்து நாடுகளின் மொத்த இறக்குமதி 27% இருப்பதுதான். இன்னும் சில நாடுகள் இந்த யூனியனில் சேரவிருப்பதை கணக்கில் சேர்த்தால் இது இன்னும் 30 லிருந்து 35% உயர இருக்கிறது. அமெரிக்காவைவிட 30% அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்த ஐரோப்பிய யூனியன் அமெரிக்கவின் பொருளாதார வர்த்தகத்தைவிட அதிகமாகக் கொண்டதால் டாலரின் இடத்தை ஈரோ பிடிக்க இருப்பதில் எந்தவித ஆச்சர்யமும் இல்லை.

சீனாவின் இறக்குமதியும், இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியும் இன்றுவரை டாலரில்தான் நடந்து வருகிறது. இதுவும் ஈரோவிற்கு மாறும் பட்சத்தில் ஒபெக் நாடுகளின் ஏற்றுமதியில் 70% அமெரிக்காவைத் தவிர்த்து மற்ற நாடுகளுக்குத்தான் இருக்கும். இந்த சூழ்நிலையில் ஒபெக் நாடுகளின் வர்த்தகம் ஈரோவிற்கு மாறினால் அமெரிக்காவின் பொருளாதாரம் சரிந்துவிடும் என்று சொல்வதைவிட அழிந்துவிடும் என்று சொல்வதே மிகப் பொருத்தம்.

இதற்கிடையில் நீண்ட காலமாக எதிர்பார்த்த காஸ்பியன் எண்ணெய் சுரங்கம் வெறும் 4% ரிசர்வ்தான் என்பது 2002ல் தெளிவாகிப்போக அமெரிக்கா முதலீடு செய்த ஆப்கான் அபகரிப்பு பிரயோசனமற்றதாகிப் போனது. அதுமட்டுமா? இருக்கும் 4% எண்ணெயும் தரமற்றது என்பதும் சோதனையில் தெளிவாகிப் போனது. சவுதியை விட காஸ்பியன் மற்றும் மத்திய ஆசியப் பகுதிகளில் அதிகமான எண்ணெய் இருப்பதாக ஆய்வுகளில் (சாட்டிலைட்) தெரியவந்தபின் தான் அமெரிக்கா ஆப்கானிய அரசாங்கத்துடன் அதுவும் தாலிபான் அரசுடன் பேச்சு வார்த்தை கூட நடத்தியது. கடைசியில் அமெரிக்காவின் கணக்கு தவறாக இருக்க அமெரிக்கா வேறு வழியில்லாமல் மத்திய கிழக்கு நாடுகளில் தனது கவனத்தை மீண்டும் வேறொரு கோணத்தில் திசை திருப்பியது.

அமெரிக்காவின் பொருளாதாரத்தை பாதுகாக்க இராணுவ உலகில் தன்னிகரற்று, திமிருடன் இருக்கும் அமெரிக்க இராணுவத்தை களத்தில் இறக்குவதே ஒரே சிறந்த வழி என்று முடிவெடுத்தது அமெரிக்கா.
 


பகுதி-4

போர் என்றால் முதலில் பாதிக்கக் கூடியது பொருளாதாரம். ஆனால், போரை ஒரு சிறந்த முதலீடாக வைத்து பொருளாதார வெற்றி கான நினைப்பதில் அமெரிக்காவிற்கு நிகர் அமெரிக்காதான். எத்தனையோ நாடுகள் போரில் தனது பொருளாதாரத்தை இழந்ததோடு மட்டுமல்லாமல் இன்னும் ஏழையாகவே இருந்து கொண்டிருக்கின்றன. அமெரிக்காவின் இந்த 'gambling' மத்தியக் கிழக்கு நாடுகளை பொருத்தவரை கொஞ்சம் சுலபமான விஷயம்தான். காரணம் போர் செய்யப்போவது ஒன்றும் சீனாவோ அல்லது ரஷ்யாவிற்க்கு எதிராகவோ அல்ல, இன்னும் சொல்லப் போனால் வட கொரியாவிற்கு எதிராகக் கூட அமெரிக்கா தற்போது ஆயுதத்தை கையில் எடுக்காது.

போர் என்றால் அதிலிருந்து வெற்றி பெரும் நாட்டிற்கு ஏதேனும் பிரயோசனம் இருக்க வேண்டும், இல்லையென்றால் அது முட்டாள்தனமான முடிவு மட்டுமல்லாமல் உள்ளதையும் இழக்க வெண்டிய சூழ்நிலை ஏற்படும். அமெரிக்கா ஒன்றும் முட்டாள்தனமாக முடிவு எடுக்கும் நாடு அல்ல, எனவே போருக்கு முன்னால் அதன் மூலம் கிடைக்கும் பொருளாதார அரசியல் லாபங்களை நன்றாக கணக்கிட்டுத்தான் போருக்கான முடிவை எடுத்தது.


அதிலும் போர் செய்யப்போவது தன்னால் ஒரு காலத்தில் உருவாக்கப்பட்ட உருப்படாத ஆட்சியாளர்களும், ஆமாம் சாமி போட்ட கிரிமினல் ராணுவத் தலைவர்கள் ஆட்சி செய்யும் நாடுகளுக்கு எதிராகத்தான். ஆப்கானிஸ்தான் போர் ஒரு போரே அல்ல. இரட்டை கோபுரத்தின் வீழ்ச்சியால் எழுந்த கவுரவப் பிரச்சனயை தீர்த்துக் கொள்ள வலுவிழந்த நாட்டை இழுத்துப் போட்டு உதைத்த கதைதான். அதுமட்டுமல்லாமல் தன்னிடத்தில் உள்ள அனைத்துவித ஆயுதங்களையும் சோதித்துப் பார்க்கவும் அது ஒரு சந்தர்ப்பமாக அமைந்தது.

ஈராக் யுத்தம் அமெரிக்காவிற்க்கு அனைத்து வகையிலும் வலு சேர்க்கக் கூடிய போர் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஈராக் யுத்தம் அமெரிக்கவை பொருந்த்தவரை ஒரு நல்ல முதலீடும் கூட.

ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிக்க அமெரிக்க தயாரானது. உலகிற்கு வேண்டுமானால் ஈராக் யுத்தம் ஒரு தெளிவில்லாத WMD கதையாக இருக்கலாம், ஆனால் அமெரிக்கா தான் எழுதிய 'script' படித்தான் இந்த யுத்தத்தை நடத்தியிருக்கிறது. அதனால்தான் ஜார்ஜ் புஷ்ஷ¤ம் டோனி பிளேயரும் தலையில் அடிக்காத குறையாக தன்னாட்டு மக்களிடம் நேரடியாக விளக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களது இந்த முடிவால் இரு நாடுகளுக்கும் விளையக் கூடிய நன்மைகளுக்கு காலம் பதில் சொல்லும் என்றெல்லாம் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். (அந்த வகையில் அமெரிக்கர்கள் பொதுவாக போரை எதிர்த்தாலும் பிறரை அடக்கியாள வேண்டுமென்ற குணாதிசயம் அவர்களை ஜார்ஜ் புஷ்ஷின் இரண்டாவது வெற்றிக்கு ஓட்டு போட வைத்தது).

இப்போரின் முடிவில் அமெரிக்கா எதிர்பார்க்கும் மூன்று முக்கிய விளைவுகள்:

அ) ஐ. நா. சபையையும், ஐரோப்பிய நாடுகளையும் அரசியல் ரீதியாக வலுவிழக்க செய்வது.
ஆ) சரிந்துவரும் தனது டாலரை பெட்ரோ டாலரின் மூலம் தூக்கி நிறுத்துவது
இ) இஸ்ரேலை மத்தியக் கிழக்கு நாடுகளின் போலிசாக உயர்த்தி அரபு நாடுகளை இஸ்ரேலின் பிடிக்குள் (ஆதிக்கத்தின்) கீழ் கொண்டு வருவது.

இந்த மூன்றுக்கும் சரியான காரணத்தைக் காட்டி உலக ஊடகங்களில் அதை பெரிதுபடுத்தி சாமானிய மக்களின் சிந்தனைகளை முடிந்தவரை குழப்பி அதன் மூலம் அவர்களது கருத்துக்களை தனக்கு ஆதரவாக திரட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது. அமெரிக்கா எப்போதுமே தான் விரும்பக் கூடிய முடிவை முதலில் ஊடகங்களில் விவாதிக்க வைத்து அதன் வாயிலாக மக்களின் ஆதரவை திரட்டுவது வழக்கம். ஆள்பவர்களின் கருத்துக்களை பொதுமக்களிடத்தில் விற்பதற்க்குத்தானே இந்த ஊடகங்கள் எல்லாம் அடித்துப் பிடித்து ஒன்றை ஒன்று போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. ஊடகங்களில் ஒரு விஷயத்தைச் சொன்னால் அதை உண்மை என்று நம்புவது பெரும்பாலருக்கு பழகிப் போன ஒன்று. (ஊடகங்களில் உண்மையை மட்டும் எழுதுபவர்களின் நிலையை நினைக்க பரிதாபமாக இருக்கிறது.)

மக்களின் மனதில் சென்று பதியக்கூடிய வாசகங்கள் உருவாக்கப் பட்டன. அவற்றில் முதன்மையானதும் ஏற்கனவே ஆப்கான் போரில் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டதுமான 'தீவிரவாதம்' அதைத் தொடர்ந்து 'WMD (Weapons of Mass Destruction)' என்று இரு USP (Unique Selling Points) உருவாக்கப் பட்டது.


செப்டம்பர் 11 க்கு பின் உலகில் உருவாகிப் போன சந்தேக நோய் தொற்று நோயாக மாறி இருப்பவன் இல்லாதவன், தெரிந்தவன் தெரியாதவன் என்று எந்தவித மொழி, மத மற்றும் நாடுகள் வித்தியாசமில்லாமல் எல்லோரையும் பற்றிக் கொண்டது அமெரிக்காவிற்க்கும் பிரிட்டனுக்கும் சாதகமாக அமைந்தது.

எதிர்க்க ஆளில்லை என்றால் அடிக்க வருபவனின் தன்னம்பிக்கையும் தைரியமும் அபாரமாக இருக்கும். அதுமட்டுமா? எப்போது எதிரியை உதைக்கலாம் என்ற ஆர்வமும் அதிகமாக இருக்கும். அப்படித்தான் அமெரிக்காவும் பிரிட்டனும் திட்டத்தை கையில் வைத்துக் கொண்டு உடனடியாக போரில் குதிப்பதென்று தவியாய் தவிக்க ஈராக் அமெரிக்காவின் 52வது மாநிலமாக மறுவதற்கு நாட்கள் எண்ணப்பட்டன.

தீவிரவாதம் மற்றும் WMD என்ற இரண்டு வார்த்தைகளும் உலக அரங்கில் எல்லா மனிதர்கள் வாயிலும் வராத நாட்களே இல்லை எனும் அளவிற்கு தினம் தினம் பேசப்பட்டது. ஆனால் ஈராக்கில் அப்பாவி மக்களும், ஆண், பெண் குழந்தைகளும் மரணத்திற்க்கு தயாரானார்கள்.

ஏதோ ஒரு கூட்டம் லாபமடைவதற்க்கு லட்சக் கணக்கில் மக்கள் தங்கள் உயிர்களை அநியாயமாக இழக்கத் தயாரானார்கள். அவர்களை அறியாமலே மரணத்தின் கொட்டகைக்கு வந்து குவிக்கப் பட்டார்கள். கணவன் மனைவியையும், மனைவி கணவனையும், பிள்ளைகள் பெற்றோர்களையும், பெற்றோர்கள் பிள்ளைகளையும் தங்களது கண்களுக்கு முன்னாலேயே வெடி குண்டுகளிலும், பீரங்கி தாக்குதலிலும், விமான ஏவுகனைகளினாலும் சிதறடிக்கப்படுவதைப் பார்த்தார்கள். பிஞ்சுக் குழந்தைகளும் சின்னஞசிறார்களும் இரத்த வெள்ளத்தில் கையிழந்து காலிழந்து முகம் சிதைந்து மரணத்தில் மிதந்தார்கள். பெற்றெடுத்தப் பிள்ளைகளின் விழிகளில் தூசு விழுந்தாலே துடித்துப் போகும் தாய்மார்கள் மார்புகளில் பிள்ளைகளை அணைத்தவாறு மரணித்தார்கள்.

இரட்டைக் கோபுரம் தாக்கப்படும் காட்சியை மணிக்கொருமுறை டீவிக்களில் காட்டி மேலை நாட்டு மக்களின் மனதில் அதை மறக்கவிடாமல் செய்த மீடியாக்கள் ஈராக்கில் சிதறிவிழும் மனித உடல்களை மொத்தமாக மூடி மறைத்தன. எதை சொல்ல வேண்டும், எதை சொல்லக் கூடாது, எப்படிப்பட்ட படங்களை வெளியிட வேண்டும் என்று அந்தந்த படைத்தலைவர்களின் தணிக்கைக்கு பிறகே போர்ச் செய்திகள் வெளியிடப்பட்டன. அதையும் மீறி அல் ஜசீரா மற்றும் அல் அரபியா டிவியினர் ஈராக்கில் அப்பாவி மனிதர்களும் பிள்ளைகளும் கொல்லபபடுவதை செய்தியாக வெளியிட்டார்கள். ஆனால் அமெரிக்கா கருத்துச் சுதந்திர விரும்பிகள், ஜனநாயகக் காவலர்கள் அந்த டீவிக்களின் செய்தி சேகரிக்கும் பாக்தாத் அலுவலகங்களை தாக்கி அங்கிருந்த செய்தியாளர்களையும் உண்மையை சொன்ன காரணத்திற்க்காக மேல் நோக்கி அனுப்பி வைத்தார்கள்.


சோவியத்தை நம்பி முதலாம் வளைகுடா போரில் மோசம் போன சதாம் ஐரோப்பியாவை நம்பி இரண்டாம் வளைகுடா போரில் ஆட்சியை இழந்தது மட்டுமல்லாமல் எலிக்குகைக்குள் தஞ்சமடைய நேர்ந்தது.

அரபுலகம் அவமானத்தில் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் வேதனையில் வாய்மூடி அமைதியாகக் கிடந்தது. ஐ.நா. சபையின் முடிவிற்க்கான காலம் தொடங்க ஆரம்பித்தது. வெறும் நிவாரணப் பணிகளை மட்டும் செய்தால் போதும் என்று அறிவுறுத்தபபட்டது.

ஐரோப்பிய நாடுகள் மெதுவாக ஒதுங்க ஆரம்பித்தார்கள். ஈராக் அமெரிக்காவின் வசம் போய்விட்டது, பெட்ரோல் டாலர்கள் பெட்ரோல் ஈரோவாக மாறும் நாட்கள் தற்போது இல்லை என்ற எதார்த்தத்திற்க்கு வந்தவர்கள் புனரமைப்பு பணிகளில் ஏதாவது ஒப்பந்தம் கிட¨க்குமா என்று அமேர்க்காவிடம் பேச்சு வார்த்தை நடத்த ஆரம்பித்தார்கள்.

அமெரிக்காவின் script ல் ஐரோப்பியாவிற்கு எந்தவித பாத்திரமும் இல்லை என்பதை புரிந்து கொண்டு பிரிதொரு சந்தர்பத்திற்க்காக காத்திருப்பதை தவிர்த்து வேறு வழியில்லை என்பதை உணர்ந்து அமைதியாகிப் போனது ஐரோப்பிய உலகம்.

அமெரிக்கா ஏன் தன்னிச்சையாக புனரமைப்பு பணிகளில் யாரையும் கூட்டு சேர்க்காமல் செயல் படுகிறது என்பதை புரிந்துக் கொள்ள ஒன்றும் ராக்கெட் அறிவு தேவையில்லை. ஈராக் என்பது அமெரிக்கவை பொருத்தவரை ஒரு புதயலைப் போன்று. தோண்ட தோண்ட வற்றாமல் கிடைக்கக் கூடிய உலகின் இரண்டாவது அதிக கையிருப்பு இருக்கக் கூடிய பெட்ரோல் உள்ள நிலம் என்பதால் எத்தனை பில்லியன் டாலர்கள் செலவு செய்தாலும் வட்டியும் முதலுமாக எடுத்துக் கொள்ளலாம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லாததால் அமெரிக்க வேறு யாரையும் கூட்டு சேர்த்துக் கொள்ள விரும்பவில்லை.

ஈராக்கின் எல்லா ஒப்பந்தங்களும் அமெரிக்க கம்பேனிகளுக்கு மட்டுமே கொடுக்கப் பட்டது. அது மட்டுமல்லாமல் அந்த ஒப்பந்தங்கள் எதையும் பிற்காலத்தில் ஈராக் செல்லுபடியாகாத ஒப்பந்தமாக மாற்றிவிடக் கூடாது என்பதில் தனிக் கவனம் எடுத்து அதற்கு தகுந்தார்போல் ஈராக்கின் புதிய சட்டங்கள் பால் பிரெமரால் (First Governor General of Iraq) ஏற்கனவே எழுதி அமலாக்கப் பட்டுவிட்டது. ஒரு நாட்டை அநியாயமாக எடுத்துக் கொண்டதுமல்லாமல் அந்த நாட்டின் அரசியல் சட்டத்தை திருத்தி இருக்கக் கூடிய பெட்ரோல் தொடர்பான எல்லா வியாபரங்களையும் அமெரிக்க கமபெனிகளுக்கு தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு சுதந்திரத்தைப் பற்றி வாய்கிழிய பேசிக் கொண்டிருக்கிறது அமெரிக்க அரசாங்கம்.

அமெரிக்கா விரும்பியது போல் ஐ. நா சபை ஆட்டம் காண ஆரம்பித்துவிட்டது. கோபி அண்ணானின் ஐ.நா. சீரமைப்புத் திட்டத்திற்கு அமெரிக்கா veto சொல்லிவிட்டது. ஆங்காங்கே ஏழை நாடுகளுக்குச் சென்று போலியோ ஊசி போடும் வேலையும் கோதுமை மூட்டைகளை வினியோகம் செய்தால் போதும் என்று ஐ.நா. வின் வேலையை அமெரிக்கா குறைத்துவிட்டு உலக நாடுகளின் அரசியல் பொருளாதார ஒழுங்குகளை தான் பார்க்கப் போவதாக ஆணித்தரமாக அழகுற ராஜ தந்திர வார்த்தைகளில் சொல்லிவிட்டது.

ஐ.நா.வின் தலை எழுத்தை மாற்றி எழுதும் பணியை இத்தோடு விடப்போவதில்லை அமெரிக்கா. ஐ.நா. சபையைப் பற்றி
1994ல் 'There is no such thing as the United Nations. There is only the international community, which can only be led by the remaining superpower, which is the United States... The secretariat building in New York has 38 stories. If it lost ten stories, it wouldn't make a bit of difference' என்று Federalist Society Forum' என்ற அமைப்பில் பேசிய ஜான் போல்டன் (1) என்ற புதிய பழமைவாதியைத்தான் (இப்படி மொழி பெயர்க்கலாமா? neo-conservative) அமெரிக்காவின் ஐ. நா. தூதராக நியமித்திருக்கிறது.

ஈராக் போரின் மூலம் தனது முதலாவது எதிர்பார்ப்பான ஐ.நா. ஒழிப்பு வேலையை தொடங்கிவிட்ட அமெரிக்கா தனது இரண்டாவது வெற்றியான டாலரின் பாதுகாப்பில் குறைந்தது ஒரு பத்தாண்டு காலத்திற்காவது அதிகம் கவலைப்பட தேவையில்லை எனும் அளவிற்கு தன்னை கொஞ்சம் நிம்மதியாக்கிக் கொண்டது. ஒபெக் நாடுகளின் முதுகெலும்பை உடைக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை. ஈராக்கை கையில வைத்துக் கொண்டு தான் விரும்பிய நாடுகளுடன் இருநாட்டு ஒப்பந்தம் செய்து கொண்டு வேண்டுகின்ற அளவிற்கு பெட்ரோல் ஏற்றுமதி செய்ய முடியும். ஒபெக் நாடுகளின் கட்டுப்பாட்டை குலைத்து அவர்களையும் அமெரிக்கா விரும்பியபடி பெட்ரோல் விலையை நிர்ணயிக்க செய்யும் காலம் அதிக தூரத்தில் இல்லை.

தான் எதிர்பார்த்த முதல் இரண்டு விளைவுகள் செயல்படத் தொடங்கியது அமெரிக்காவிற்கு தற்போது மன சாந்தியை அளித்தாலும் தனது மூன்றாவது எதிர்பார்ப்பையும் நிவர்த்தி செய்து கொள்ள அமெரிக் போரின் அடுத்தக் கட்ட நடவடிக்கையாக ஜனநாயகம் என்ற புதிய USP யை இப்போது செயல் படுத்த தொடங்கியுள்ளது.


Notes:
1. Warriors of Democracy - Aamer Syed, Arab News page 7, dated April 7, 2005

 


பகுதி-5
 

 

'ஹிப்போகிரஸி' என்ற வர்த்தை ஒரு காலத்தில் தீண்டத்தகாத வார்தையாக, அவமானக் குறியாக அறியப்பட்டது. அந்த வார்த்தையைக் கொண்டு யாரையாவது குற்றப்படுத்திப் பேசினால் பேசப்பட்ட மனிதர் அவமானப்பட்டதைப் போல் உணர்வார். ஆனால் இன்றைய அரசியல் உலகில் அந்த வார்த்தையைச் சொல்லி யாரையாவது பேசினால் அது அவரின் அரசியல் உயர்வைக் குறிப்பதைப் போல் பெருமைப் பட்டுக் கொள்ளும் அவல நிலைமையைத்தான் நாம் பார்க்கிறோம்.

அமெரிக்காவின் ஜார்ஜ் புஷ்ஷிலிருந்து இஸ்ரேலின் ஷரோன் வரை, ஒரு சூரியனுக்கு கீழ் இருக்கக் கூடிய எல்லா நாட்டின் பெரும்பான்மையான அரசியல் தலைவர்களும், ஆள்பவர்களும் ஹிப்போகிரஸிகளாகத்தான் மாறிப் போய்விட்டார்கள். வெட்கமில்லாத, கண்ணியமில்லாத அரசியல் தலைவர்களால் ஆட்சி செய்யப்பட்டு வாழக்கூடிய நம்மிடத்திலும் இந்த 'ஹிப்போகிரஸி' இப்போது ஒரு பெருமைக்குரிய விஷயமாகிவிட்டதில் எந்தவித விந்தையும் இல்லை. எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டுமென்ற எண்ணம்தான் இபோதெல்லாம் மேலோங்கிவிட்டதே தவிர்த்து செல்லுகின்ற பாதை சரியாக இருக்க வேண்டும் என்ற அறச் சிந்தனையே அற்று போய்விட்டது.

அப்படிப்பட்ட ஒரு ஹிப்போகிரஸி (நயவஞ்சகன்) எழுதிய
'The Case for Democracy; The Power of Freedom to Overcome Tyranny and Terror' என்ற நூலைப் படித்துவிட்டு அமெரிக்காவின் ஜார்ஜ் புஷ் கண்ணீர் விடாத குறையாக ஜனநாயகத்தின் மேல் அளவு கடந்த பிரியம் ஏற்பட்டுவிட்டது. அது மட்டுமா? நாடன் ஷரன்ஸ்கி என்ற அந்த ஹிப்போகிரஸி எழுதிய நூலை அக்கு வேறு ஆணி வேறாக படித்து புரிந்துவிட்டு தற்போது கர்த்தருக்கு அடுத்த படியாக ஜனநாயகத்தைத்தான் தனது கடவுளாக ஏற்றுக் கொண்டு விட்டாரோ என்று நினைக்குமளவிற்கு ஜனநாயகப் பைத்தியம் பிடித்து விட்டது. அத்தோடு விடவில்லை, இந்த புத்தகத்தை 'is part of my DNA' என்றும் சொல்லிக் கொண்டு திரிகிறார் ஜார்ஜ் புஷ் (Rupert Cornwell - The Guardian).

அப்படி என்னதான் அந்த புத்தகத்தில் இருக்கிறது என்று கேட்கலாம். அதில் என்ன இருக்கிறது என்பதற்கு முன்னால் அதை எழுதியவரை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வது நல்லது. இந்த நாடன் ஷரன்ஸ்கி 19 வருடங்களுக்கு முன்பாக சோவியத் நாட்டைச் சேர்ந்த ஒரு யூத அரசியல் கைதி. 1986ம் வருடம் சோவியத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி இந்த அரசியல் கைதி சோவியத் வெகு காலமாக கேட்டுக் கொண்டிருந்த ஒரு ரஷ்ய ஒற்றனுக்கு மாற்றாக (Prisoner Exchange) விடுதலை செய்யப்பட்ட ஒரு 'மனித உரிமைவாதி'. நாடன் ஷரன்ஸ்கி தற்போது இஸ்ரேலில் ஷரோனின் அமைச்சராக இருக்கிறார். அவருடைய புத்தகத்தில் அவர் சொல்லிய மிக முக்கியமான கருத்துக்களில் இரண்டை மட்டும் இங்கே கொடுக்க விரும்புகிறேன். காரணம் அந்த இரண்டு கருத்துக்கள்தான் அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையின் மிக முக்கியமான தூண்களாக தற்போது காட்டப்படுகிறது? (அவரை நான் ஏன் ஹிப்போகிரஸி என்று சொல்கிறேன் என்று இந்தப் பதிவிலே இன்னொரு இடத்திலே சொல்கிறேன்) அவர் சொல்லிய கருத்தில் தலையாயது இதுதான்.

 

(1) இந்த உலகம் இரண்டு பிரிவாக பிரிக்கப் படுகிறது. ஒன்று நல்லவர்கள் கூட்டம் இன்னொன்று தீயவர்கள் கூட்டம். (இதற்கு மத்தியில் யாரும் கிடையாது, அமெரிக்காவின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் இருக்கக் கூடாது. இதைத்தான் அதிபர் புஷ் அவர்கள் 'either with us or against us' என்ற புகழ் பெற்ற வார்த்தைகளை ஆப்கான் யுத்தத்தின் போது முழங்கியது. (எவன் நல்லவன் எவன் கெட்டவன் என்ற குழப்பமிருந்தாலும் ஏதேனும் ஒரு கூட்டத்தில் சேர்ந்துக் கொள்ள வேண்டும்).

(2) ஜனநாயகவாதிகள் ஒருவருடன் ஒருவர் மோதிக் கொள்ள மாட்டார்கள், காரணம் சுதந்திரச் சிந்தனையும் விடுதலை உணர்வும் கொண்ட மக்கள் தனது எண்ணங்களை வெளிப்படையாக தெரிவிப்பதால் கோடுங்கோல் ஆட்சியாளர்களை (சதாம் ஹ¤சைன் போன்றவர்களை) தன்னிஷ்டத்திற்கு செயல்பட அனுமதிக்க மாட்டார்கள். அதாவது மக்கள் சுதந்திரமாக செயல்படும்போது அவர்களுடைய உண்மையான விருப்பங்கள் வெளிப்படும், அந்த வெளிப்பாடுகள் கொடுங்கோல் ஆட்சி ஏற்படாமல் இருக்க வழி அமைக்கும்.

இப்படியெல்லாம் மக்கள் உரிமைக்கும் ஜனநாயகத்திற்கும் குரல் கொடுக்கும் மிகப்பெரும் மனித உரிமையாளனாக தன்னை அடையாளம் காட்டிக் கொண்டு ரஷ்யாவின் சிறையில் இருக்கும் போது எழுதிய தனது சிந்தனைகளை புத்தகமாக வெளியிட்டு இஸ்ரேலில் தஞ்சம் புகுந்து அரசியலில் ஈடுபட ஆரம்பித்தவுடன் எங்கே போயிற்று இந்த மனித உரிமை முழக்கங்கள்?

இஸ்ரேலின் பாலஸ்தீனர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை ஆரம்ப காலங்களில் எதிர்த்தவர்தான் இந்த நாடன் ஷரன்ஸ்கி. பிற்காலத்தில் அரசியலில் தனது சொந்த நலன்களை கருதி பாலஸ்தீனர்களுக்கு எதிராக நடக்கும் மனித உரிமை மீறல்களைப் பற்றி பேசுவதை நிறுத்திக் கொண்டார். அது மட்டுமல்ல இஸ்ரேலின் அரசு சார்ந்த நிறுவனங்கள் இவரை பிடித்து வாங்கு வாங்கு என்று அடி முதல் நுனி வரை துவட்டி எடுக்க பாலஸ்தீனர்கள் பற்றி பேசுவதையே நிறுத்திக் கொண்டார். இவர்களேல்லாம் எந்தவிதாமான ஜனநாயகவாதிகள்?

இவரின் இஸ்ரேல் வாழ்க்கையையும் அதில் அவர் வழங்கிய நேர்முக கருத்துக்கள், பேச்சுகள், பொதுவாழ்க்கையில் அவர் செய்யும் நடவடிக்கைகள் எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் சேகரித்து வரும் டாக்டர் இஸ்ரேல் ஷகாங் என்பவர் (இவர் சிறுவராக இருந்தபோது ஒரு காலத்தில் நாஜிக்களின் முகாம்களில் வதைக்கப் பட்டவர். இவர்
founder of Israeli League for Civil and Human Rights) சொன்னதை நினைவு கூற விரும்புகிறேன். 'மனித உரிமைகளை இனத்திற்கும் நாட்டிற்கும் தகுந்தார்போல் நிர்ணயிக்கக் கூடிய இவரின் (நாடன் ஷரன்ஸ்கி) இந்த பாங்கு இவரின் முந்தைய மனித உரிமை முழக்கங்களை சந்தேகிக்க வைக்கிறது'. (Dr. James Zogby, Arab News, April 4, 05)

அமெரிக்காவின் NBC தொலைக்காட்சி நிறுவனத்தில் டாக்டர் ஜேம்ஸ் ஜொகபியும், நாடன் ஷரன்ஸ்கியும் ஒருமுறை சந்தித்துக் கொண்ட போது ஜேம்ஸ் இவரின் தற்போதைய நிலைபாட்டைப் பற்றி கேட்டபோது வார்த்தைகளை மென்று முழுங்கி கடைசியாக ஜெம்ஸிற்கு 'Palestine threat' பற்றி சரியாக புரியவில்லை என்று மழுப்பிவிட்டார் (Arab News April 4, 05). தொடர்ந்து ஜேம்ஸ் இது விஷயமாக பேசியபோது தலையை வேறு எங்கோ திருப்பிக் கொண்டு பதிலளிக்கவும் மறுத்து விட்டார்.

ஒரு யூதன் எங்கேனும் பாதிக்கப்பட்டால் அது மனித உரிமை மீறல்கள், அதே நேரம் ஒரு முஸ்லீம் பாதிக்கப்பட்டால் அதைக் கண்டு கொள்ளக் கூடாது - இதுதான் இந்த ஹிப்போகிரஸி நாடன் ஷரன்ஸ்கியின் மனித உரிமை சம்பந்தப்பட்ட கொள்கைகள். ஏன் இப்படி? அதிகாரம் வேண்டும், அரசியலில் முன்னேற வேண்டும். தான் ஒரு காலத்தில் சொன்ன தத்துவங்களையும், கொள்கைகளையும் தானே தின்று முழுங்கலாம், தவறில்லை, ஆனால் அரசியல் படிக்கட்டுகளில் முன்னேறியாக வேண்டும். இதற்குப் பெயர்தான் நயவஞ்சகம். இந்த நயவஞ்சகன் எழுதிய நூலை உயர்வாக சொல்லிக் கொண்டிருக்கும் இன்னொரு நயவஞ்சகன் ஜார்ஜ் புஷ். தான் சிறையில் வாடிய போது எழுந்த இந்த சுதந்திர சிந்தனைகள் விடுதலையானவுடன் வெறும் புத்தகத்தில் எழுதி விற்பதற்குத்தான் பயன்படும் என்பதை சொல்லாமல் நமக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறார் இந்த நாடன் ஷரன்ஸ்கி. 'Tyranny and Terror' என்பதை தனது சிறைக்காலங்களில் அனுபவித்த இந்த மேதை தினம் தினம் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பால் அவதிப்படும் பாலஸ்தீனர்களைப்பற்றி கவலைப்படாத இந்த மனிதரை நயவஞ்சகன் (ஹிப்போகிரஸி) என்று சொல்வதில் எந்த தவறும் கிடையாது.

ஒரு சாதாரண மனிதன் எழுதிய இந்த புத்தகம் அதிபர் புஷ்ஷின் சிந்தனையை இவ்வளவு அதிகமாக கவர்ந்திருக்கிறதென்றால் என்ன காரணம்? ஏன் இப்படி ஜனநாயகத்தைப் பற்றி அதிபர் புஷ்ஷைவிட ஷரன்ஸ்கியின் ஜனநாயக விளக்கம் சுமார் 200 வருடகால அமெரிக்கா சுதந்திர விரும்பிகளுக்கு புதுமையாக இருக்க வேண்டும்?

ஒரே வாக்கியத்தில் சொல்லி விடாலாம். 'உலகை ஆள்வது அமெரிக்கா.. அமெரிக்காவை ஆள்வது இஸ்ரேல்..' அமெரிக்கவின் ஆளும் வர்க்கத்தின் சிந்தனைகளும், செயல்களும் எப்படி ஜயனோசியக் கொள்கைகளால் வடிவமைக்கப் பட்டுள்ளது என்பதை விளங்கிக் கொண்டால் அமெரிக்காவின் மூன்றாவது லட்சியமான அரபு நாடுகளை இஸ்ரேலுடைய ஆதிக்கத்தின் கொண்டுவரும் திட்டத்தைப் புரிந்து கொள்ளலாம்.

இஸ்ரேலிய முதலாளிகளின், அரசியல் மாஸ்டர்களின் பிடிக்குள் இருக்கும் அமெரிக்கா இஸ்ரேலுக்காக, குறிப்பாக ஜயனோசியக் கூட்டங்களுக்குக்காக பணி செய்ய வேண்டிய நிர்பந்தமும் அவர்களின் கொள்கைகளை நிறைவேற்ற வேண்டிய அவசியமும் தற்போது தலையாய கடமையாக இருக்கிறது.
 


பகுதி-6
 

இஸ்ரேலின் இந்த proxy war இன்று நேற்று தொடங்கியதல்ல. ஆனால் அதற்காக அவர்கள் பயன்படுத்தக்கூடிய கருவிகளும், காரணங்களும் தான் அவ்வப்போது மாறுபடுகின்றது. அப்படி ஒரு கருவியாக, இஸ்ரேலின் கொள்கைகளை செயல்படுத்தக்கூடிய ஒரு அமைப்பாக தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய ஒரு நாடுதான் இந்த அமெரிக்கா என்ற ஒரு வல்லரசு.

இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் உள்ள நெருங்கிய தொடர்பை, உறவை புரிந்துக் கொண்டால் அமெரிக்கா எப்படி ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகிறது என்ற உண்மையை புரிந்துக் கொள்ளமுடியும். 1800-களில் இஸ்ரேலியர்கள் தனக்கென்று ஒருநாட்டை நிர்மானிக்க வேண்டி ஒரு மாபெரும் திட்டத்தை உருவாக்கினார்கள் அந்த திட்டம் ஒரு நாட்டை மட்டும் உருவாக்கக் கூடிய திட்டமாக இல்லாமல் 'ஜையோனிசயம்' என்ற ஒரு கொள்கையைத் தூசித்தட்டி எடுத்து அதற்கென்று புதிய கோட்பாடுகளை உருவாக்கி அதற்கு ஆதரவு தேடினார்கள். அவர்களின் இன்றைய இஸ்ரேல் நாளை இல்லாமல் போனாலும் இந்த 'ஜையோனிசயம்' என்ற இந்த தாத்பாரிய கோட்பாடுகள் நிலை நிற்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இப்படி ஒர் கொள்கையை உருவாக்கினார்கள். அதற்கெதிராக யார் செயல்பட்டாலும், அப்படி செயல்படுவர்களை 'Anti Semitic' என்று அழைத்து, குற்றம் சுமத்தி தன்னை ஒரு பரிதாபமான கூட்டமாக, பாதிக்கப்பட்ட கூட்டமாக காட்டிக் கொண்டு வருகிறது. (இஸ்ரேலின் வரலாற்றை பிறகு பார்க்கலாம்).

இன்றைக்கு அமெரிக்காவின் முஸ்லீம் நாடுகளுக்கு குறிப்பாக அரபு நாடுகளுக்கு எதிரான இந்த நிலைக்கு காரணங்கள் என்ன என்பதை பகுதி - 4 -ல் குறிப்பிட்டுள்ளேன். அதற்கான அடிப்படை எங்கே உருவானது என்பதை இந்த பதிவிலே சொன்னால்தான் பொருத்தமாக இருக்கும்.

முதலாவது அடிப்படைத் திட்டம் பால் வோல்பிட்ச் (தற்போதைய உலக வங்கியின் தலைவர், மிகுந்த சர்ச்சைக்குள்ளானவர்) என்ற 'புதிய பழமைவாதிகள்' என்று அழைத்துக் கொள்வதில் பெருமைப்படும் இந்த மனிதர் 1992ம் வருடத்தில் Defense Policy Guidance என்று ஒரு திட்டத்தை வரையறுத்து அதன் முதன்மை லட்சியமாக 'access to vital raw material, primarily Persian Gulf oil' என்று அதற்கு ஒரு உத்வேகத்தைக் கொடுத்தார். அதாவது பெர்சியன் கல்ப் எண்ணெய் வளத்தை கைப்பற்ற வேண்டியதன் அவசியத்தையும் அதற்கு ராணுவ நடவடிக்கைகள்தான் சிறந்த வழி என்றும் அறிவித்தார். அதற்கான வாசலாக ஈராக்கினுள் அமெரிக்காப் படைகளின் பிரவேசமும் மற்றும் அதனை அமெரிக்காவின் ஒரு முக்கியமாக, நிரந்தர ராணுவ தளமாக மாற்ற வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார். (Reference: Mrs. Maggie Mitchell Salem, Special Assistant to Madeleine Albright and US Foreign Service Officer 1994 - 2000).

இரண்டாவது அடிப்படைத் திட்டம் ரிச்சர்ட் பெர்ல் மற்றும் டக்லஸ் பெய்த் (Richard Perle and Douglas Feith) என்ற இரு பெரும் 'புதிய பழமைவாதிகளால்' 1996ல் 'A Clean Break: A New Strategy for Securing the Realm' என்று உருவாக்கப்பட்ட கொள்கைத் திட்டம். இந்த திட்டம் இஸ்ரேலுக்காக, 1996ல் பிரதமராக இருந்த பெஞ்சமின் நேதன்யாஹு என்ற ஜையோனிசத் தலைவனுக்காக அமெரிக்க எடுபிடிகளால் உருவாக்கப்பட்டது. (Richard Perle - former US Defense Policy Board Chair and Douglas Feith - former Under Secretary for Defense for Policy 2000 - 2005).

அமெரிக்காவின் வரிப்பணத்தில் வாழ்க்கை நடத்தும் இந்த இரு பெரும் அமெரிக்க தேசியவாதிகள் இஸ்ரேலுக்காக உழைக்கும், எடுபிடியாக இருக்கும் இப்படிப்பட இந்த செயலை வேறு எந்த நாட்டிலும் பார்க்க முடியாது. அல்லது அப்படியே நடந்தாலும் இப்படிப்பட்ட மனிதர்களை, எடுபிடிகளை அந்த நாட்டின் முக்கிய பதவிகளில் அமர்த்தவும் மாட்டார்கள். ஆனால் இது போன்ற நிலையையும் செயலையும் அமெரிக்கா போன்ற நாடுகளில்தான் பார்க்க முடியும், காரணம் அந்த அளவிற்கு அமெரிக்காவின் நிர்வாக அமைப்பினுள் இஸ்ரேலின் ஜையோனிசக் கொள்கைகளும் அவர்களது பணபலமும் ஊடுருவி இருப்பதனால்தான்.

Securing the source of vital raw material - அதாவது எரிபொருளான எண்ணெய் வளம் அடுத்து Securing the Realm - அதாவது கொச்சையாக சொல்ல வேண்டுமென்றால் புதிய நிலப்பரப்பு, இந்த இரண்டையும் முன்வைத்து நடத்தப்படுகின்ற இந்த அரசியல் மற்றும் ராணுவப் போராட்டத்தின் தற்போதைய பரிமானம்தான் இந்த தீவிரவாதம் மற்றும் ஜனநாயக நிர்மானிப்பு. இதை சாதிப்பதற்கு தடையாக இருப்பதுதான் இஸ்லாம் என்ற சமத்துவக் கொள்கைகள். அதிலும் இந்த இஸ்லாத்தை எங்கே நறுக்கினாலும் மீண்டும் துளிர்விட்டு வளர்வதும் அதற்கு காரணமாக இருக்கக்கூடிய நபிகள் நாயகம் என்ற மாபெரும் மனிதரின் வழிகாட்டுதல்களும் திருக் குர்ஆனும்.

அமெரிக்கா அடிக்கடி சொல்வதுபோல் pre-emptive action என்பது தீவிரவாதத்திற்கெதிராகவோ அல்லது அமெரிக்க பொருளாதார அமைப்புகளை நாசமாக்க முயற்சிக்கும் கூட்டங்களுக்கு எதிராக நடத்தக் கூடிய தாக்குதல்கள் மட்டுமல்ல, மாறாக வளர்ந்துவரும் இஸ்லாமிய கோட்பாடுகளும் அதனால் ஏற்படக்கூடிய எதிர்கால இழப்புகளையும் சரியாக கணித்தே இப்படி ஒர் கொள்கையை அமெரிக்காவும் இஸ்ரேலும் செயல்படுத்தி வருகிறது.

இஸ்ரேலும் அமெரிக்காவும் தன்னுடைய திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தவும் சாதிக்கவும் எந்தவித பாதையையும் தேர்ந்தெடுக்கத் தயங்கமாட்டார்கள். தாயின் தலை மீது காலை வைத்தாவது தான் நினைத்ததை சாதிக்கும் குணமுடைய இந்த கூட்டணி, இஸ்லாத்தின் மீது தொடரும் தாக்குதல்கள் ஒன்றும் புதிதல்ல. அதற்கேற்றார்போல் அரேபிய ஆட்சியாளர்களின் பலவீனமும் அவர்களின் ஆட்சி முறையும் இந்தக் கூட்டணியின் வெற்றிக்கு காரணியாக அமைந்திருப்பதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.

இஸ்ரேலுக்கு நெருக்கடியாக இருந்த ஈராக்கை சின்னாபின்னமாக்கி அதன் முதுகெலும்பை முறித்து அந்த நாட்டை அமெரிக்காவின் கைக்குள் கொண்டுவந்ததின் மூலம் அமெரிக்காவின் பொருளாதார வளங்களுக்கும், அதன் அடிப்படையான பெட்ரோலுக்கும் ஒரு தீர்வு எடுத்ததோடு மட்டுமல்லாமல், ஈராக்கின் எண்ணெய் கிணறுகளை நேரடியாக இஸ்ரேலுக்கு வழங்குவதற்கான வாய்ப்புகளும் ஏற்படுத்தியாகிவிட்டது. அதற்கான கட்டுமான பணிகளும் துவங்கிவிட்டன. ஈராக் இனி தன்னிச்சையாக செயல்பட குறைந்தது இன்னும் பத்து வருடங்களுக்கு மேல் ஆகலாம். அதுவல்லாமல் அமெரிக்காவுடன் முரண்டு பிடிக்கத் தொடங்கினால் அதனுடைய தற்போதைய கடன் சுமையான 110 பில்லியன் டாலரை (தற்போது அதை காலவாதி செய்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது) அதன் தலைமேல் சுமத்தி உடனே கொடுக்க வேண்டும் என்று நிர்பந்தங்கள் ஆரம்பித்துவிடும். அதற்கேற்றார்போல் தற்போதைய ஈராக்கின் ஆட்சியாளர்கள் எல்லோருமே அமெரிக்காவின் கைக்கூலிகளாக தேர்ந்தெடுக்கப் பட்டாகிவிட்டது.

அடுத்த பிரச்சினை என்னவென்றால் இஸ்ரேலுக்கு கொண்டு செல்லும் எண்ணெய் குழாய்கள் சிரியாவைத் தாண்டித்தான் செல்ல வேண்டியிருப்பதால் சிரியாவின் முதுகெலும்பையும் முறித்தாக வேண்டும். அதானால்தான் தற்போது லெபானின் முன்னால் பிரதமர் ஹரீரி கொலையை முன்னிலைப்படுத்தி சிரியாவின் துருப்புகளை லெபானைவிட்டு வெளியேற்றும் வேலையும் நடந்து வருகிறது. இஸ்ரேலை ராணுவ பலம் கொண்டு சிரியாவினால் சமாளிக்க முடியாவிட்டாலும், லெபானனை கைக்குள் வைத்திருப்பதன் மூலம் சிரியா தனது அரசியல் எல்லையை அதிகப்படுத்தி வைத்திருந்தது. ஹிஸ்புல்லாவிற்கு எல்லாவிதாமான ஆதரவு தருவதன் மூலம் இஸ்ரேலின் பாலஸ்தீன பிரச்சனைக்கும் சிரியா ஒரு சவாலாக இருந்து வந்தது.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள கோலான் ஹைட்ஸ் என்ற மலைப்பகுதியிலிருந்துதான் இஸ்ரேல் நாட்டிற்கு தேவையான குடி தண்ணீரில் மூன்றில் ஒரு பங்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது. சிரியாவிற்கு இந்தப் பகுதி மிகவும் அவசியமான ஒன்று, ஏனென்றால் இந்த மலைப்பகுதி சிரியாவின் ராணுவ பாதுகாப்பிற்கு, குறிப்பாக இஸ்ரேலுக்கு எதிராக முக்கியத்துவம் வாய்ந்தது. எனவேதான் சிரியாவின் ஆளுமையை குறைப்பதன் மூலம் இஸ்ரேல் - சிரியா பேச்சு வார்த்தைகளில் சிரியாவின் உயர்நிலையை குறைக்கமுடியும் என்று இஸ்ரேல் எதிர்பார்க்கிறது. அவ்வாறு செய்வதால் இஸ்ரேல் விரும்புகின்றவாறு சிரியாவுடனான பேச்சு வார்த்தையை அமைத்துக் கொள்ளமுடியும். விரைவில் அப்படி ஒர் நிலையும் ஏற்பட இருக்கிறது, அதில் இஸ்ரேல் கோலான் ஹைட்சை கொடுக்க சம்மதித்து சிரியாவின் வழியாக ஈராக்கின் எண்ணெயை கொண்டு செல்ல அனுமதி பெற காத்திருக்கிறது. தனது தண்ணீரின் தேவையை லெபனான் மூலமாக இஸ்ரேல் சமாளித்துக் கொள்வதற்கு வசதியாக லெபானனை சிரியாவின் பிடிக்குள்ளிருந்து விடுவித்தாகிவிட்டது. இவை அனைத்தும் அமெரிக்காவின் உதவியின்றி இஸ்ரேலுக்கு சாத்தியமில்லை.

கடைசியாக இஸ்ரேலுக்கு பிரச்சனையாக இருக்கக் கூடிய ஒரே வலிமையான நாடு ஈரான் மட்டுமே. ஈரானில் ஏற்கனவே அமெரிக்கா மூக்கை நுழைத்து சரியாக காயம் பட்டு நிற்பதால் ஈரானை மண்டியிட வைக்க அமெரிக்காவிற்கு கொஞ்சம் அவகாசம் தேவைப்படுகிறது. சமயம் ஏற்படும்போது அந்த திட்டமும் செயல்படுத்தப்படும்.

இப்படி ஒன்றன் பின் ஒன்றாக இஸ்ரேல் - அமெரிக்காவின் திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப் பட்டாலும் ஒரு முக்கியமான இறுதிக் கட்ட போராட்டத்தை நோக்கியே 'the might of mythology' இந்த உலகப் பயணம் நகர்ந்துக் கொண்டு வருகிறது.

Battles are won by the supremacy of arms and guns, but the war is won by ideas and the empire is protected by the power of knowledge.

அமெரிக்காவின் ராணுவ பலமும் ஜையோனிசத்தின் மூளை பலமும் இணைந்து நடத்தும் இந்த உலக நாடகங்கள், பொய்களாலும், ஏமாற்றத்தாலும் புனையப்பட்ட காவியங்களே தவிர்த்து சத்தியத்திற்காக நடத்தப்படும் போராட்டமல்ல. இஸ்ரேலின் வரலாற்றை புரட்டிப் பார்த்தால் இது போன்ற அசத்தியத்திற்காக, சத்தியத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்களே அதிமாக இருக்கும். கிறிஸ்துவத்தின் மீதும் அதைக் கொண்டு வந்த இயேசுவின் மீது நடத்தப்பட்ட வன்முறைகளும், பொய் பிரச்சாரங்களும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு தற்போது இஸ்லாத்தின் மீது அதனுடைய தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தனது கூட்டணிகளை மாற்றி அமைத்துக் கொண்டு தனக்கு யார் யாரெல்லாம் பிடிக்கவில்லையோ அவர்கள் மீதெல்லாம் தாக்குதல் நடத்த இந்த ஜையோனிசக் கூட்டம் தயங்கியதல்ல. வரலாற்று நிகழ்வுகள் நமக்கு இதை தெளிவாக அறிவிக்கின்றன.

ஜையோனிசத்தின் உண்மையான முகத்தை மறைத்துக் கொண்டு உலகத்திற்கும் சாமானிய மனிதர்களுக்கும் வேறுவகையான தோற்றத்தைக் காட்டி நேரத்திற்கு தகுந்தார்போல் வேடமணிந்து நடத்திக் கொண்டிருக்கும் இந்த நாடகம் சிறு சிறு வெற்றிகளை அங்கங்கே கொடுத்தாலும் உண்மையான முகம் வெளிச்சத்திற்கு வரும்போது சேர்த்து வைத்த அத்தனையும் ஒரே நேரத்தில் இழக்க நேரிடும். இது எத்தனையோ முறை நடந்துள்ளது என்றாலும் அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள விரும்பவில்லை என்பதையும் வரலாறு நன்றாகவே அறிவிக்கின்றது. (இஸ்ரேலின் வரலாற்றை அதன் தொடக்கத்திலிருந்து எழுத இருக்கிறேன். அதில் மேலும் இது தொடர்பான விளக்கங்களை பார்க்கலாம்.)

Dissemination of Knowledge and close interaction with people at all level is the only way to protect any empire. ஆனால் இந்த இஸ்ரேல் அமெரிக்க கூட்டணிகளின் ஆட்சிமுறையே முடிந்தவரை பொதுமக்களிடமிருந்து உண்மைகளை மறைத்து வைப்பதும், அவர்களை ஏமாற்றுவதும், அதன் மூலம் ஆளும் வர்க்கத்தின் நலன்களை பாதுகாப்பதும்தான். (தற்போதைய உதாரணம்: இதுவரை வெளிவராத இரட்டை கோபுர தகர்ப்பு விவகாரங்களும், ஈராக்கின் WMD).

மக்களை ஏமாற்றிய எத்தனையோ சாம்ராஜ்யங்கள் மண்ணோடு மண்ணாகிவிட்டன, உதாரணம் ஒட்டமான் சாம்ராஜ்யத்தின் அழிவு. அமெரிக்கா சாம்ரஜ்யம் இன்னும் விழித்துக் கொள்ள அவகாசம் உள்ளது. அது எப்போது என்பதே என் போன்றவர்களின் கேள்விகள். அழிவின் விளிம்பில் நின்றுகொண்டு மாற நினைத்தாலும் மாற வாய்ப்பு உண்டு.

இறைவன் திருக் குர்ஆனிலே கீழ்வருமாறு கூறுகின்றான். "அவர்களும் திட்டமிட்டார்கள். அல்லாஹ்வும் திட்டமிட்டான். இன்னும் திட்டமிடுவதில் அல்லாஹ்வே மிக்க மேலானவன்". (அல்குர்ஆன் 8:30)


இப்படிப்பட்ட சாவால்கள் யாவும் முஸ்லீம்களுக்கு புதிதல்ல, ஆனால் அதை எதிர்கொள்ளும் சூழல்தான் புதிது. கல்வியிலும், அறிவியல் வளர்ச்சியிலும், இஸ்லாமியக் கொள்கைகளை, வாழ்க்கை நடைமுறைகளைப் பின்பற்றபடுவதிலும் பின் தங்கியுள்ள முஸ்லீம்களுக்கு இந்த சூழல் பெரும் சவாலாகத்தான் இருக்கிறது. இதானால்தான் முஸ்லீம்கள் தனது நிலையை அடிமுதல் நுனிவரை மறு ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது. முஸ்லீம்கள் முதலில் தங்களிடத்திலே வளர்ந்துள்ள களைகளை வேறோடு எடுத்தெரிய வேண்டும். முஸ்லீம்கள் தாங்களாக மாறாத வரை இறைவனும் அவர்களுக்கு உதவி செய்யமாட்டான்.
 

நன்றி: http://suvatukal.blogspot.com