Index |Subscribe mailing list | Help | E-mail us

இருளட்டும் இஸ்ரேல்

முகவை. ரபீக்

 

மனிதன் நிம்மதியை தேடி பிரபஞ்சம்தோறும் அழைந்து ஓடுகிறான். அதற்கான சாத்தியக்கூறுகளையும் அலைந்து ஆராய்கிறான். அந்த நேரத்தில் தன்னுடைய நலத்தை மட்டுமே முதன்மைப் படுத்துகிறான். அதற்காக நண்பனிடம் வெறுப்பையும் மாற்றானிடம் பகைமையையும் வளர்த்துக் கொள்கிறான். இதனுடைய தாக்கம் தனிமனிதன் மூலம் ஆரம்பம் பெற்று, குடும்பம், கோத்திரம், சமுதாயம் என்று வளர்ந்து இறுதியில் அவனுடைய நாட்டை வந்து சரணடைகிறது.  ஆகவே இம்மையை மட்டுமே தன்னுடைய நோக்கமான நினைத்துக்கொண்டு அவனுடைய பாதுகாப்பை எதிர் நோக்கும்போது சமுதாயத்துக்கிடையில்,  நாடுகளுக்கிடையில் மோதல்கள் உருவாகின்றன.

இதன்படிதான் இஸ்லாமிய அசுர வளர்ச்சியை பார்த்து மாற்றார்கள் பீதியடைந்து பாய்ந்து பிராண்டுகிறார்கள். வெள்ளம் வருமுன் அணை கட்டுகிறார்கள். அதற்கான செயல்வடிவம் தான் இஸ்லாம் தோன்றி ஆரம்பம் தொட்டே முஸ்லிம்கள் கொலையறுக்கப்பட்டு வருவது. தற்காலத்தில் அமெரிக்கர்களும், இஸ்ரவேலர்களும் சேர்ந்துகொண்டு முஸ்லிம்கள் மீது ஏற்படுத்துகின்ற மனித உரிமை மீறல்கள் கொஞ்சமா?
 

"பசித்திருந்தவர்கள் உணவு தட்டை நோக்கி பாய்ந்து மொய்ப்பது போல் ஒரு காலத்தில் உங்களுக்கெதிராக அனைவரும் சேர்வார்கள்" என்ற நபிகளாரின் சொற்படி தற்கால நிகழ்வுகள் இருக்கின்றன.

 

முஸ்லிம் உம்மத்தையே அழிக்கப் பிறந்தவர்களாக அமெரிக்கர்களும், இஸ்ரேலர்களும் சேர்ந்து வரிசையாக ஈராக், ஆப்கானிஸ்தான், பாலஸ்தீன், லெபனான் என முஸ்லிம்களை அழித்து வருகிறார்ள். இதனுடன் நின்றுவிடாது ஜெயிலில் வைத்து சித்ரவதைகளையும்,  பெரும்பாலானோரை கொலைசெய்தும், லட்சக்கணக்கா பெண்களை அடைத்து வைத்து அவர்களுடைய கற்பை சூறையாடியும்,  பின்பு கொலை செய்தும் வந்தார்கள். பாலஸ்தீன மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாஸ் கட்சியை தீவிரவாத கட்சி என்று சித்தரித்து அவர்களுக்கு பொருளாதார தடை விதித்தது மட்டுமல்லாமல் ஏவுகணை தாக்குதல்களும், குண்டு மழை பொழிவுகளையும் ஏற்படுத்தி வருகின்றன.

 

"இதனால் பச்சிலம் பாலகரும் பசியால் தாண்டவமாடுகிறார்கள். அப்பாவி முஸ்லிம்களும், முதியோர்களும் மண்ணுக்கு தினமும் விருந்தாகிறார்கள்"

"குதரப்பட்ட குருதிகள் கூடினால் குளமாகும் அளவிற்கு அனுதினமும் அறுக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள்"

"மாய்க்கப்பட்ட உடல்கள் மத்தியானால் மலைபோல் ஆகுமளவிற்கு மரணமாக்கப்படுகிறார்கள்"

"அழிக்கப்படுகின்ற அல்லாஹ்வின் அடியார்களைப் பார்த்து சிம்மாசனத்திலிருந்து சிரித்து கொண்டுயிருக்கிறார்கள் சிங்காரர்கள் (யூத, கிறிஸ்தவர்கள்)"

"சாகடிக்கப்படுகின்ற சகோதரர்களைப் பார்த்து சாடை கூட காட்டாமல் சாய்ந்துகொண்டு இருக்கிறார்கள் சத்தியத்திலிருப்பவர்கள்"

"வேதம் கொடுத்தவனுடைய வேதனை வேகமாக வரப்போகிறது"


இது மனித தன்மையான செயலா? ஜார்ஜ் புஸ்ஸும், எகூத் ஓல்மர்ட்டும், டோனி பிளேயரும் தங்களை மனித இன தலைவர்களாக சித்தரித்துக்கொண்டு உலக நாடுகளில் வலம் வருகிறார்கள். இது அவர்களுக்கு தெரியவில்லை மனித உரிமை மீறலன்று. தங்கள் நாட்டுக்கு மட்டும் ஏதாவது சிறு துன்பம் ஏற்பட்டால் குத்துதே, குடையுதே என்று ஒப்பாரி வைப்பார்கள். ஆனால் மற்ற நாடுகளில் ஏற்பட்டால் அது மனித இன பாதுகாப்பு என்பார்கள். இவர்களின் கர்வ ஆட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு காலம் அதிகம் இல்லை. மிக அருகாமையில் தான் இருக்கின்றது இறைவன் நாடினால்.

ஆக இப்படிப்பட்ட தீய சக்திகளான அமெரிக்கர்களையும், இஸ்ரேலர்களையும் இனம் காண்பது, தெரிந்து வைப்பது முஸ்லிம்களாகிய நமக்கு மிகவும் இன்றிமையாததாகும். யூதர்கள் தற்காலம் மட்டும் இப்படிப்பட்ட தீயசெயல்கள் புரிவதில்லை. அச்சமுதாயம் படைக்கப்பட்ட காலம் தொட்டே கொடுமைகள் புரிவதில் மேலானதாக இருந்திருக்கிறார்கள். அதை பின்வரும் குர்ஆன் வசனங்களும் தெளிவுபடுத்துகின்றன. அதை இக்காலம் வரைக்கும் வாழையடி வாழையாக அமெரிக்கர்களின் அடிவருடிகளாக இருந்துகொண்டு பூமியில் பல குழப்பங்களையும், கொலைகளையும் அறங்கேற்றி கொண்டுயிருக்கிறார்கள்.

பூமியில் குழப்பங்களை ஏற்படுத்தியவர்கள்:


நாம் இஸ்ராயீலின் சந்ததியினருக்கு (முன்னறிவிப்பாக தவ்ராத்) வேதத்தில் "நிச்சயமாக நீங்கள் பூமியில் இருமுறை குழப்பம் உண்டாக்குவீர்கள் (அல்லாஹ்வுக்கு வழிபடாது) ஆணவத்துடன், பெரும் அழிச்சாட்டியங்கள் செய்பவர்களாக நடந்து கொள்வீர்கள்" என்று அறிவித்தோம். (17:4)

இஸ்ராயீலின் சந்ததிகளிலிருந்து,  காஃபிராகி விட்டவர்கள்,  தாவூது,  மர்யமின் குமாரர் ஈஸா ஆகிய இவர்களின் நாவால் சபிக்கப்பட்டுள்ளனர்.  ஏனென்றால் அவர்கள் (இறைவனின் கட்டளைக்கு) மாறு செய்து கொண்டும்,  வரம்பு மீறி நடந்து கொண்டும் இருந்தார்கள். (5:78)

மேற்கண்ட வசனங்கள் யூதர்களின் அட்டுழியங்களை தோலுரித்து காட்டுகின்ற.
 

இறைத்தூதர்களை பொய்பித்தவர்கள்:


இது மட்டுமல்லாமல் இறைத்தூதரை பொய்பித்தும் வந்தார்கள் என்பதை பின்வரும் வசனம் நமக்கு காட்டுகிறது. இது மட்டுமல்லாமல் யூதர்களிடத்தில் ஈஸா (அலை) முன்னறிவிப்பு செய்த நபி(ஸல்) அவர்களை இறுதி நபியாக ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் மற்றும் ஈஸா(அலை) அவர்களை விபச்சாரிக்கு பிறந்த குழந்தை என்றும், மர்யம்(அலை) அவர்களை விபச்சாரி என்றும் அழைத்தார்கள்.

நாம் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் உறுதிமொழி வாங்கினோம்,  அவர்களிடம் தூதர்களையும் அனுப்பி வைத்தோம்.  எனினும் அவர்கள் மனம் விரும்பாதவற்றை (கட்டளைகளை நம்) தூதர் அவர்களிடம் கொண்டு வந்த போதெல்லாம்,  (தூதர்களில்) ஒரு பிரிவாரைப் பொய்ப்பித்தும் இன்னும் ஒரு பிரிவாரைக் கொலை செய்தும் வந்தார்கள். (5:70)

மேலும்,  மர்யமின் குமாரர் ஈஸா,  "இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும் எனக்குப் பின்னர் வரவிருக்கும் 'அஹமது' என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்" என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) எனினும்,  அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்த போது,  அவர்கள் "இது தெளிவான சூனியமாகும்" என்று கூறினார்கள். (61:6)

உலகத்திலேயே யூதர்களை மேன்மையாக்கினான் இறைவன்:


ஆரம்பத்தில் யூதர்களை அல்லாஹ் உலகத்திலேயே மேன்மையுடையவர்களாகவும், அனைத்துவிதமான வசதி வாய்ப்புகளையும், சிறந்த உணவு வகைகளையும் கொடுத்து படைத்தான். 

நிச்சயமாக நாம்,  இஸ்ராயீலின் சந்ததியினருக்கு வேதத்தையும்,  அதிகாரத்தையும்,  நுபுவ்வத்தையும் கொடுத்தோம் அவர்களுக்கு மணமான உணவு (வசதி) களையும் கொடுத்தோம் - அன்றியும் அகிலத்தாரில் அவர்களை மேன்மையாக்கினோம். (45:16)

ஆனால், நன்றி மறந்து அல்லாஹ்வின் கோபப்பார்வைக்கு ஆளாகி விட்டார்கள்:


ஆனால் அல்லாஹ்வின் அருட்கொடைகளை மறந்துவிட்டு பூமியில் குழப்பத்தை ஏற்படுத்தி, அல்லாஹ்வுக்கு நன்றி கெட்டவர்களாகவே நடந்து கொண்டார்கள்.  இதன் மூலம் அல்லாஹ்வின் கோபப்பார்வைக்கு ஆளாகிக் கொண்டார்கள். ஆகவே தான் நாம் அனுதினமும் ஒவ்வொரு ரக்கஅத்திலும் இதை அல்லாஹ் ஓத சொல்லியிருக்கிறான். 

(அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல,  நெறி தவறியோர் வழியுமல்ல. (1:7)

திருந்துவதற்கு அவகாசம்:

அல்லாஹ் மனிதனை படைக்கும் போதே நன்மை, தீமைகளை பிரித்துப்பார்க்க கூடிய பகுத்தறிவை கொடுத்து படைத்துள்ளான். அதனுடன் சில பலவீனங்களையும் கொடுத்து படைத்துள்ளான். ஆகவே தான் மனிதன் அல்லாஹ்வுடைய வரம்புகளை மீறும்போது தன்னிடம் பாவமன்னிப்பைக் கேட்டு அதிலிருந்து மீள்வதற்கு தகுந்த அவகாசங்களையும் கொடுக்கிறான்.  கீழ்கண்ட குர்ஆன் வசனம் யூத, கிறிஸ்தவர்களுக்கு பெரும் படிப்பினை இருக்கிறது. ஆனால் இதை பொருட்படுத்தாது அக்காலம் தொட்டு இக்காலம் வரைக்கும் முஸ்லிம்களை கொன்று குவித்து வருகிறார்கள். இதிலிருந்து அவர்கள் எப்பொழுது திருந்த போகிறார்களோ? மனிதனாக வாழப்போகிறார்களோ? ஆனால், தற்பொழுது மாக்களாக மட்டுமே வாழ்ந்து கொண்டியிருக்கிறார்கள்.

எவரேனும்,  தம் தீச்செயலுக்காக மனம் வருந்தித் தம்மைச் சீர் திருத்திக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் (அவர் தவ்பாவை ஏற்று) மன்னிக்கிறான்.  நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும்,  கருணையுடையோனாகவும் இருக்கின்றான். (5:39)

அநியாய சமுதாயத்திற்கு நேர்வழி இல்லை:

அல்லாஹ்வின் கடும் எச்சரிக்கைக்குப் பிறகும் மனிதன் மீண்டும் மீண்டும் தீய செயல்களிலேயே ஈடுபடுவனாயின் இப்படிப்பட்ட சமுதாயத்தை அல்லாஹ் நேர்வழி செலுத்துவதில்லை. அவர்கள் அவர்கள் போகும் இடமும் நரகம் தான்.

அவர்களுக்காக நீர் பாவமன்னிப்புக் கோரினாலும் அல்லது பாவமன்னிப்புக் கோராவிட்டாலும் அவர்களுக்குச் சமமேயாகும்,  அல்லாஹ் அவர்களுக்குப் பாவமன்னிப்பளிக்க மாட்டான் - பாவம் செய்யும் சமூகத்தாரை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான். (63:6)

முஸ்லிம்களுக்கு எச்சரிக்கை:

தற்பொழுது நடைபெறுகின்ற முஸ்லிம்களுக்கெதிரான கொலைவெறி தாக்குதல்களும்,  எல்லை ஆக்கிரமிப்புகளும் மனித உரிமை மீறலின் உச்சகட்டமாகும். இதை பார்த்து மற்ற முஸ்லிம்கள் அவர்களுக்கு உதவி புரியாமல் இருப்பது,  தீயவர்களை எச்சரிக்காமல் இருப்பது அல்லாஹ்வின் கோபப்பார்வைக்கு ஆளாகிறோம் என்பதும் அவனுடைய தண்டனை வெகுதூரத்தில் இல்லை என்பதும் தற்காலத்தில் நடைபெறுகின்ற சம்பவங்கள் ஓர் அற்புதமான எடுத்துக்காட்டு ஆகும். இதிலிருந்து முஸ்லிம்கள் எப்பொழுது படிப்பினை பெறப்போகிறார்களோ?

ஓர் அநியாயம் நடக்கும்போது எவர்களுக்கு தடுக்கக்கூடிய சக்தியிருந்தும் அதை தடுக்காமல் இருக்கிறார்களோ அவர்களின் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகும்.

முஸ்லிம்களுக்கு இடையிலும் சில குள்ளநறி கூட்டங்கள் முஸ்லிம் என்னும் போர்வையை போர்த்திக்கொண்டு உலாவித் திரிகிறார்கள்.  எதிகளிடம் சில சன்மானங்களை பெற்று அவர்களுக்கு முதுகு தேய்த்துக்கொண்டு தனக்கே நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டும், உம்மத்துக்கு நம்பிக்கை துரோகம் செய்துகொண்டும் இருக்கிறார்கள்.  அல்லாஹ் மிகவும் அறிந்தவனாக இருக்கிறான்.

ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ் எவர்கள் மீது கோபம் கொண்டிருக்கிறானோ,  அந்தச் சமூகத்தாருடன் நேசம் சொள்ளாதீர்கள்,  ஏனெனில் மண்ணறை வாசிகளைப் பற்றி (எழுப்பப்பட மாட்டார்கள் என்று) நிராகரிப்போர் நம்பிக்கை இழந்தது போல்,  மறுமையைப் பற்றி,  நிச்சயமாக இவர்களும் நம்பிக்கை இழந்து விட்டனர். (60:13)

முஸ்லிம்களுக்கே வெற்றி:

முஸ்லிம்களுக்கு கொடுமைகள் ஏற்படுத்துவதில் உலகத்திலேயே உச்சக்கட்டத்தில் இஸ்ரேலியர்கள் இருக்கிறார்கள். தற்போது நடைபெறும் பாலஸ்தீன், லெபனான் முஸ்லிம்களுக்கெதிரான யூதர்களின் கொலைவெறி பங்களிப்பு வர்ணிக்க முடியாததாகும். என்னதான் கொடுமைகள் புரிந்தாலும் இறுதியில் அல்லாஹ் இஸ்லாத்தையை மேலோங்கச் செய்வான்.

அல்லாஹ்வையும் அவனது தூதரையும் முஃமின்களையும் யார் நேசர்களாக ஆக்குகிறார்களோ, அவர்கள்தாம் ஹிஸ்புல்லாஹ் (அல்லாஹ்வின் கூட்டத்தினர்) ஆவார்கள்.  நிச்சயமாக இவர்களே மிகைத்து வெற்றியுடையோராவார்கள். (5:56)

பிரச்னை என்று வரும்போது முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து சமுதாயங்களும் சேர்ந்து வந்து தாக்கக் கூடிய ஓர் துர்பாக்கிய காலகட்டத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் முஸ்லிம்கள் சின்ன சின்ன பிரச்சனைகளுக்காக தங்களுக்குள் பிரிவை ஏற்படுத்திக்கொண்டு சிதறிகிடக்கிறார்கள். சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த பசித்த புலி உணவை கண்டால் பாய்ந்து பிராண்டுவது போல் நிராகரிப்பாளர்களால் முஸ்லிம்கள் கொத்து கொத்தாக கொலை செய்யப்படுகிறார்கள். இந்தளவுக்கு இடம் கொடுத்தது யார்? என்பதை முஸ்லிம்களாகிய நாம் சற்று சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.  "மனிதர்களுக்காக படைக்கப்பட்ட சமுதாயத்தில் சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்", என்று அல்லாஹ்வினால் சான்றிதழ் கொடுக்கப்பட்ட நாம் இந்தளவிற்க்கு கீழ்நிலையில் ஆகிவிட்டோமே என்று ஒவ்வொருவரும் கவலைப்பட வேண்டியுள்ளது.  எவ்வளவுதான் காபிர்கள் முஸ்லிம்களுக்கு தொல்லைகளை அள்ளிக்கொடுத்தாலும் எங்களுடைய உடல்கள் தான் சிதறுமே தவிர உண்மையாஈமான் சிதறவே சிதறாது. இதற்குப் பகரமாக அல்லாஹ் இம்மையில் இஸ்லாத்திற்கு வெற்றியும், மறுமையில் மகத்தான கூலியையும் கொடுக்க இருக்கிறான்.  இதுமட்டுமின்றி நிராகரிப்பாளர்களுக்கு தகுந்த தண்டனையையும் காத்திருக்கின்றது.

அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர்,  ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும்,  அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8)