E-mail us | Help | Disclaimer

இஸ்லாம்கல்வி அரங்கம்

 123
 123

Thu 02

Click here to bookmark this link.Channel Image09:51 அள்ளிக்கொடுப்போம் வாருங்கள்! – Audio/Video சுவனத்தென்றல்
நிகழ்ச்சி : ரமலான் சிறப்பு சொற்பொழிவு நாள் : 19-08-2008 இடம் : ரமலான் 2010 சுவனத்து பூஞ்சோலை கூடாரம், பஹாஹீல், குவைத் நிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய வழிகாட்டி மையம், குவைத் ஆடியோ : (Download) {MP3 format -Size : 12.9 MB}
Click here to bookmark this link.Channel Image09:24 Live இஸ்லாம்கல்வி.காம் - Portal
இன்ஷா அல்லாஹ் நிகழ்ச்சி ஒளிபரப்பு இன்று இரவு (Sep 2, 2010 – சவுதி நேரம் 10.30 pm தொடங்கி ஸஹர் நேரம் வரை)

பதிவை முழுமையாகப் பார்க்க தலைப்பின் சுட்டியை சொடுக்கவும். அல்லது www.islamkalvi.com தளத்திற்கு செல்லவும்.

Wed 01

Click here to bookmark this link.Channel Image17:36 மறுமையை நம்பாத இதயங்களின் அறிவற்ற, கற்பனை எண்ண ஓட்டம் தினம் ஒரு குர்ஆன் வசனம்
'மேலும் (மறுமையை நம்பாத) அவர்கள், நமது இந்த உலக வாழ்க்கையைத்தவிர வேறு (வாழ்க்கை) கிடையாது, நாம் இறக்கிறோம், ஜீவிக்கிறோம், காலத்தைத் தவிர வேறெதுவும் நம்மை அழிப்பதில்லை என்று கூறுகிறார்கள், அவர்களுக்கு அது பற்றிய அறிவு கிடையாது - அவர்கள் (இது பற்றிக் கற்பனையாக) எண்ணுவதைத் தவிர வேறில்லை'. (அல்ஜாஸியா:24).
Click here to bookmark this link.Channel Image15:41 ஜுபைல் இரவு நேர நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு (நாள்: SEP 2, 2010) இஸ்லாம்கல்வி.காம் - Portal
இன்ஷா அல்லாஹ் நிகழ்ச்சி ஒளிபரப்பு இன்று இரவு (Sep 2, 2010 – சவுதி நேரம் 10.30 pm தொடங்கி ஸஹர் நேரம் வரை) Click here for Live video page நேரலையை பார்க்க இங்கு கிளிக் செய்யவும் அழைப்பிதழை பெரிதாகப் பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்

பதிவை முழுமையாகப் பார்க்க தலைப்பின் சுட்டியை சொடுக்கவும். அல்லது www.islamkalvi.com தளத்திற்கு செல்லவும்.
Click here to bookmark this link.Channel Image15:34 அல்குர்ஆன் தோற்றுவித்த சமுதாயம் இஸ்லாம்கல்வி.காம் - Portal
- உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி “அல்லாஹ் உங்கள் மீது புரிந்த அருளை நினைத்துப் பாருங்கள்.நீங்கள் (ஒருவருக்கொருவர்) விரோதிகளாக இருந்த சமயத்தில் அவன் உங்கள் இதயங்களுக்கிடையே அன்புப்பிணைப்பை உண்டாக்கினான். ஆகவே அவனுடைய பேரருளால் நீங்கள் சகோதரர்களாகி விட்டீர்கள்.(அதற்கு முன்பு) நீங்கள் நரக நெருப்பு குழியின் விளிம்பின் மீதிருந்தீர்கள். அதிலிருந்தும அவன் உங்களை காப்பாற்றினான். நீங்கள் நேர்வழி பெறுவதற்காக...

பதிவை முழுமையாகப் பார்க்க தலைப்பின் சுட்டியை சொடுக்கவும். அல்லது www.islamkalvi.com தளத்திற்கு செல்லவும்.
Click here to bookmark this link.Channel Image14:11 அல்லாஹ்வின் அருட்கொடைகள்! – Audio/Video சுவனத்தென்றல்
நிகழ்ச்சி : ரமலான் சிறப்பு சொற்பொழிவு நாள் : 18-08-2008 இடம் : ரமலான் 2010 சுவனத்து பூஞ்சோலை கூடாரம், பஹாஹீல், குவைத் நிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய வழிகாட்டி மையம், குவைத் ஆடியோ : (Download) {MP3 format -Size : 16.8 MB}
Click here to bookmark this link.Channel Image04:38 துன்புறுத்தல் தடுப்புச் சட்ட முன்வரைவு – ஓர் அரைகுறையான முயற்சி மக்கள் சட்டம் (PEOPLE'S LAW)
துன்புறுத்தல் (சித்திரவதைப்படுத்துதல்), கொடுமைப்படுத்துதல், மனிதர்களை இழிவாக நடத்துதல் ஆகியவற்றிற்கு எதிராகப் பன்னாட்டு அவை (UNO) கொண்டுவந்த சட்டத்தில் இந்தியா 1997ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் நாள் கையெழுத்திட்டது. கையெழுத்திட்ட இந்திய அரசு, அச்சட்டத்தை நடைமுறைப்படுத்த உரிய சட்டம் கொண்டு வந்திருக்க வேண்டும்; ஆனால் அதைச் செய்யவில்லை. தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக இப்போது (ஏறத்தாழ பதின்மூன்று ஆண்டுகள் கழித்து) ‘துன்புறுத்தல் தடுப்புச் சட்ட முன்வரைவு 2010’ஐ அறிமுகப்படுத்தியிருக்கிறது. இம்முன்வரைவாவது உருப்படியாக இருக்கும் என நினைத்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. பல்லாண்டுகளாக இந்தியாவில் இருந்துவரும் துன்புறுத்தல் கொடுமையை ஒழிக்க புதுதில்லியில் உள்ள நடுவண் அரசு அக்கறை காட்டவில்லை என்பதையே துன்புறுத்தல் தடுப்புச் சட்ட முன்வரைவின் வரிகள் விளக்குகின்றன. சட்ட முன்வரைவின் இப்போதைய வடிவத்தைப் பார்த்தால், சட்ட அலுவலர்களால் துன்புறுத்தலுக்கும் கொடுமைக்கும் மனிதத்தன்மையற்ற செயல்களுக்கும் ஆளாவோர்க்கு இச்சட்டத்தால் நீதி எல்லாம் ஒன்றும் பெரிதாகக் கிடைத்து விடாது என்றே தோன்றுகிறது.

விசாரணை, குற்றவழக்கு, தண்டனை

police_atrocity_360துன்புறுத்தல் குற்றத்திற்கு ஆளாகும் அரசு ஊழியர் ஒருவரை விசாரிக்க அரசின் ஒப்புதலை முன்கூட்டியே பெற வேண்டும் என்னும் முன்வரைவின் விதி, ‘நேர்மையான, சார்பற்ற, உரிய முறையில் விசாரணை, குற்றவழக்கு, தண்டனை ஆகியன கொணர்தல்’ என்னும் பன்னாட்டு அவையின் சட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறது.

துன்புறுத்தலையும் இழிவாக நடத்துதலையும் ஒழிப்பதைத் தடுக்கும் சட்டக்காரணிகளையும் பிற வகைக்காரணிகளையும் புறந்தள்ள வேண்டும் எனப் பன்னாட்டு அவையின் சட்டம் தெளிவாகக் கூற, இந்திய அரசின் முன்வரைவோ ‘குற்றம் சாட்டப்பட்டுள்ள அரசு ஊழியர் ஒருவர் மீது நடுவண் அரசிடமோ மாநில அரசிடமோ அவர் சார்ந்துள்ள அரசு சார் நிறுவனத்திடமோ முன் ஒப்புதல் பெறாமல் தீர்ப்பு வழங்க எந்த நீதிமன்றத்திற்கும் உரிமை இல்லை’ என்று எதிர்க்குரலில் ஒலிக்கிறது. அரசிடம் முன் ஒப்புதல் பெற்றுத்தான் வழக்குத் தொடர முடியும் என்னும் நிலை, இம்முன்வரைவின் வலிமை, நடுநிலைத்தன்மை, துல்லியத்தன்மை ஆகியவற்றைத் தூள் தூளாக்கிவிடுகிறது. இதனால் அரசு யார் மீது வழக்குத் தொடர ஒப்புதல் தரலாம் என நினைக்கிறதோ அவர் மீது மட்டுமே வழக்குத் தொடரமுடியும்; முன்ஒப்புதலைக் கூட அரசு நினைத்தால் நீண்ட காலம் கழித்துத் தரலாம். இப்படி வழக்குத் தொடர்வதை இழுத்து அடித்து விட முடியும்.

இது மட்டுமின்றித் துன்புறுத்தலுக்கு ஆளாகி ஆறு மாதங்களுக்குள் பாதிக்கப்பட்ட ஆள் குற்றத்தைப் பதிய வேண்டும் என்னும் முன்வரைவின் ஐந்தாவது பிரிவு விசாரணையையும் வழக்கையும் இன்னும் சீர்குலைத்து விடும். ஏனெனில் துன்புறுத்தலுக்கு ஆளாகிப் பாதிக்கப்படுவோரில் பெரும்பாலோனோர் நீண்ட காலம் விசாரணைக்கைதிகளாகச் சிறையில் இருப்பவர்கள் தாம்! ஆக, துன்புறுத்தப்பட்ட ஆறு மாதங்களுக்குள் குற்றப்பதிவு என்பது முயற்கொம்புதான்! பாதிக்கப்பட்டோருக்கு நேர்ந்த உடல் உளைச்சலும் மன உளைச்சலும் மீண்டும் துன்புறுத்தப்படுவோமோ என்னும் அச்சமுமே அவர்களைக் குற்றங்களைப் பதிவு செய்ய இயலாத சூழலில் தள்ளிவிடும். இதைப் பற்றி எல்லாம் அரசின் சட்ட முன்வரைவு துளியும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

இப்படிப்பட்ட சட்டத்தடுப்புகள் எல்லாம் குற்றவாளிகளுக்குத் தான் பாதுகாப்பாக அமையும் என்பதையே குற்ற நடைமுறைச்சட்டம் (CrPC) , ஆயுதப்படைச் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குகள் நடத்துவதை ஆதரிக்காத நடுவண் அரசு, மாநில அரசு ஆகியவற்றின் போக்குகள் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கின்றன.

இழப்பீடு:

பன்னாட்டு அவைச் சட்டத்தின் பதினான்காவது கூறு ‘முழுமையான மீட்சிக்குத் தேவையான இழப்பீட்டைப் பெறப் பாதிக்கப்பட்டவருக்கு முழு உரிமை உண்டு’ எனக் கூற, அரசின் முன்வரைவோ இவ்விடயத்தைப் பற்றிப் பேசவே இல்லை.

ப. அ. சட்டத்தைச் செயல்படுத்தும் நாடுகளைக் கண்காணிக்கும் ‘துன்புறுத்தலுக்கு எதிரான குழு’, ‘நாடுகள் பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவ உதவி, உளவியல் உதவி, சமூக மீள்வாழ்வு ஆகியன வழங்குவதுடன் போதுமான இழப்பீட்டுத் தொகையையும் வழங்க வேண்டும்’ என்கிறது. ப. அவையின் மீட்புரிமைக்கான சிறப்பு அலுவலர்,

அ) உடல் உளைச்சல், மன உளைச்சல்
ஆ) வலி, துன்புறுதல், இன்னல்கள்
இ) கல்வி முதலியவற்றில் இழந்த வாய்ப்புகள்
ஈ) பொருள் ஈட்டலில் ஏற்பட்ட இழப்புகள்
உ) மீட்டுருவாக்கத்திற்குத் தேவையான மருத்துவச் செலவுகள், பிறவகைச்செலவுகள்
ஊ) சொத்து , வணிகம் ஆகியவற்றில் நேர்ந்த இழப்புகள்
எ) புகழுக்கு ஏற்பட்ட களங்கம்
ஏ) தீர்வுக்குத் தேவைப்படும் சட்ட உதவிகள் – அவற்றிற்கான செலவுகள்
ஆகிய அனைத்து வகை இழப்புகளுக்கும் தீர்வுகள், மீட்புதவிகள், இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும் என்று விவரிக்கிறார்.

இந்திய அரசமைப்புச் சட்டம் துன்புறுத்தலுக்கு ஆளானவருக்கான இழப்பீட்டை முடிவெடுக்கும் உரிமையை உச்ச நீதிமன்றத்திற்கும் மாநில உயர்நீதிமன்றங்களுக்கும் கொடுத்திருக்கிறது. ஆனால் அடிப்படை உரிமைகள் தொடர்பான பல வழக்குகளில் இழப்பீடுகள் வழங்குவதில் உச்ச நீதிமன்றம் உயர் அளவுகளைக் கையாண்டு சுணக்கம் காட்டியே வந்திருக்கிறது. இன்னும் பல வழக்குகளில் இழப்பீடுகள் எவ்வகை அளவுகளும் இன்றி உச்சநீதிமன்றத்தின் தன்விருப்பப்படியே அமைந்திருக்கின்றன. இந்நிலையில் இந்திய அரசின் முன்வரைவோ துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவர் எவ்வகைகளில் இழப்பீட்டைப் பெறலாம் என்பது பற்றி வாயே திறக்கவில்லை. இது போதாதென்று, குடிமுறை (சிவில்) உரிமைகள், அரசியல் உரிமைகள் ஆகியவற்றிற்கான பன்னாட்டு ஒப்பந்தத்தைச் செயல்படுத்தும்போது இந்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், ‘சட்டத்திற்கு எதிரான முறையில் சிறையடைப்புக்கு உள்ளாகிப் பாதிக்கப்படுவோர்க்கு இந்தியச் சட்ட அமைப்பின் கீழ் இழப்பீடு பெறும் கட்டாய உரிமை கிடையாது’ எனக் கூறப்பட்டுள்ளது.

வரையறையில் உள்ள குறைபாடு:

ப. அ. சட்டத்தை ஒப்பிடுகையில் அரசின் சட்டமுன்வரைவு ‘துன்புறுத்தல்’ என்பதை வரையறுப்பதில் குறையுடையதாகவே காட்சியளிக்கிறது.

ப. அ. சட்டம் கூறும் வரையறை

1. ஏதேனும் தகவல் பெறும்பொருட்டோ குற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்யும் பொருட்டோ மனத்தாலும் உடலாலும் வலி, துன்பம் ஆகியன ஏற்படுத்துதல்
2. குறிப்பிட்ட ஒரு வேலையைச் செய்ததற்காகவோ செய்ததாக ஐயம் ஏற்படும்போதோ தண்டித்தல்
3. (இனம், மதம், மொழி என எவ்வகையிலும்) பாகுபாடு காட்டிக் குற்றவாளி என ஐயுறப்படும் ஒருவர் மீது அரசு ஊழியரோ அரசுப்பொறுப்பில் இருப்பவரோ மனத்தாலும் உடலாலும் கடுமையான வலி, துன்பம் ஆகியவற்றை ஏற்படுத்தும் வகையில் செய்யும் அச்சுறுத்தல்கள்.

அரசின் சட்ட முன்வரைவு கூறும் வரையறை

ஒருவரிடமிருந்து தகவல் பெறுதல், குற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்தல் ஆகியவற்றிற்காக

  1. கடுங்காயத்தை ஏற்படுத்துதல்

  2. வாழ்க்கை, உடல் உறுப்புகள் மன நலம், உடல் நலம் ஆகியவற்றில் இழப்பை ஏற்படுத்துதல்
ஆகிய இரு செயல்களையும் அரசு ஊழியரும் அவருக்கு உடந்தையாக இருப்போரும் செய்தல்.

தகவல் பெறுதல், தண்டித்தல், அச்சுறுத்தல் என மூன்று முதன்மைக்காரணங்களைப் ப. அ. சட்டம் கூற, அரசின் முன்வரைவோ முதல் காரணத்தை மட்டுமே கொண்டிருக்கிறது. ‘துன்புறுத்தல்’ என்பது வலி, துன்பம் ஆகியன ஏற்படுத்துதல் எனப் பன்னாட்டு அவை கூற, முன்வரைவோ ‘இழப்பை ஏற்படுத்துதல்’ எனக் கூறித் துன்புறுத்தலை வரையறுக்கும் அளவையும் உயர்த்தியே வைத்திருக்கிறது.

சட்டமுன்வரைவு கூறும் ‘கடுங்காயம்’ என்பதை இந்தியத் தண்டனைச் சட்டம்,

  • வலுவிழக்கச் செய்தல்

  • பார்வையிழக்கச் செய்தல்

  • செவித்திறன் இழக்கச் செய்தல்

  • உடல் உறுப்புகளிலும் அவற்றின் இணைப்புகளிலும் பாதிப்பு ஏற்படுத்துதல்

  • உடல் உறுப்புகளை முற்றாக அழித்தல்

  • தலை, முகம் ஆகியவற்றில் உருவ மாற்றத்தை ஏற்படுத்துதல்

  • பல், எலும்பு ஆகியவற்றை உடைத்தல்

  • உயிருக்கு உலை வைத்தல், இருபது நாட்களுக்கும் மேலாக வலி இருக்கும் வகையில் துன்புறுத்துதல், அன்றாடக் கடன்களைச் செய்ய முடியாமல் முடக்குதல் ஆகியன
என வரையறுக்கிறது.

இக்கூறுகள் அனைத்துமே உடல் சார் தீங்குகள் குறித்தவை. சரியான தூக்கமில்லாமல் செய்வது, பாலியல் கொடுமைகள், பட்டினி போடுவது, உணர்வு(தொடு உணர்வு முதலியன) இழப்பு, பகடி பேசுதல் ஆகிய பல குற்றங்கள் நீண்ட காலப் பாதிப்பையோ உடல்நலத்திற்குத் தீங்கையோ ஏற்படுத்தாதவை தாம்! ப. அ. சட்டம் இவையனைத்தையும் துன்புறுத்தலின் கீழ் வைத்திருக்கிறது. இவை எவற்றையுமே கணக்கில் எடுத்துக்கொள்ளாத அரசின் சட்ட முன் வரைவு, சட்டத்தைச் செயல்படுத்தும் அலுவலர்கள் பாதிக்கப்பட்டவர் உடலில் புறக்குறிகள் தோன்றாத வகையில் வலிகளை ஏற்படுத்தித் துன்புறுத்தலாம் என்பதை மறைமுகமாக ஆதரிப்பதாகவே கொள்ள வேண்டியிருக்கிறது.

இதைத் தாண்டிச் சட்ட முன்வரைவின் நான்காவது பிரிவு துன்புறுத்தலின் வரையறையில் மேலும் ஒரு கட்டுப்பாட்டைச் சேர்க்கிறது.

நான்காவது பிரிவு:

அ) தவறான நடத்தைக்கோ குற்றத்திற்கோ அடிகோலும் தகவல்களை ஒருவரிடமிருந்து பெறுவதற்காகத் துன்புறுத்தல்
ஆ) மதம், இனம், பிறந்த இடம், இல்லம், மொழி, சாதி, சமூகம் ஆகிய பாகுபாடுகளில் ஏதேனும் ஒன்றின் அடிப்படையில் துன்புறுத்தல்
ஆகிய இரண்டிலும் அரசு ஊழியரும் அவருக்கு உடந்தையாக இருந்தோரும் குற்றம் சாட்டப்பட்டிருக்க வேண்டும்.

பாகுபாடுகளின் அடிப்படையில் துன்புறுத்துவது துன்புறுத்தலில் ஒரு வகை மட்டுமே எனப் ப. அ. சட்டம் குறிப்பிடுகிறது; அரசின் முன்வரைவோ பாகுபாடு என்பது துன்புறுத்தலை வரையறுக்கத் தேவையான ஒன்று என்கிறது. ஆக, இம்முன்வரைவின்படித் தகவல்களைப் பெறுவதற்காக மட்டும் கடுங்காயத்தை ஏற்படுத்தித் துன்புறுத்துவது என்பது தண்டனைக்குரியதில்லை. அதே போலத் தாழ்த்தப்பட்டவர்கள், இசுலாமியர்கள் ஆகியோரை அச்சுறுத்தித் துன்புறுத்துவது மட்டும் தனியாகத் தண்டனைக்குரியது ஆகாது. இவை இரண்டையும் ஒரு சேரச் செய்வது மட்டுமே தண்டனைக்குரியது . இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

ஒரு குறிப்பிட்ட குழுவைச் சேர்ந்தவர் என்னும் ஒரே காரணத்திற்காகக் கூட ஒருவர் துன்புறுத்தப்படலாம்; சிறை வைக்கப்படலாம். ஒரு செய்தியைப் பெறுவதற்கோ குற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்வதற்கோ மட்டும் சாதி, இனம், மதம் ஆகியன கருதாது வேறொருவர் துன்புறுத்தப்படலாம்.

இவைதவிர, துன்புறுத்தலில் உடந்தையாக இருப்பது, சட்ட எதிர்ச் செயலில் ஈடுபடுவது, மனிதத்தன்மையற்ற வகையில் செயல்படுவது ஆகிய ப. அ. சட்டம் குறிப்பிடும் துன்புறுத்தல் குறித்துச் சட்ட முன்வரைவு எதுவும் கூறவில்லை. உடந்தையாக இருப்பதை முன்வரைவு கூறினாலும் அது ‘அரசு ஊழியருக்கு’ உடந்தையாகச் செயல்பட்டுத் துன்புறுத்துவதைக் குறிப்பிடுகிறதே தவிரப் பொதுநிலையில் இல்லை.

தடுமாற்றம்:
police_torture_340 ‘போர்ச்சூழல், அச்சுறுத்தல், போர், உள்நாட்டு அரசியல் நிலையற்ற தன்மை போன்ற எக்காரணத்தையும் கொண்டு துன்புறுத்தலைச் செல்லத்தக்கதாக்கக் கூடாது. …. உயர் அலுவலரிடம் இருந்தோ மக்கள் அமைப்புகளிடம் இருந்தோ பெறப்பட்ட ஆணையையும் காரணமாகக் காட்டக்கூடாது.’ எனப் பன்னாட்டு அவைச் சட்டத்தின் இரண்டாவது கூறு சொல்ல, அரசின் முன்வரைவின் மூன்றாவது பிரிவு இக்கருத்தில் இருந்து விலகிச் செல்கிறது.

துன்புறுத்தல் என்பது கொடுமைப்படுத்தல், மனிதத்தன்மையற்றுச் செயல்படுதல், இழிவாக நடத்துதல் எனக் கூறிப் ப. அ. சட்டத்தை ஒட்டித் துன்புறுத்தலுக்கு எதிரான குழுவின் கருத்து அமைந்திருக்கிறது. முன்வரைவோ, இதற்கு நேர்மாறாகச் ‘சட்டம் ஒப்புக்கொண்டுள்ள செயல்களால் ஏற்படும் துன்புறுத்தலைத் துன்புறுத்தல் எனக் கூற மறுக்கிறது. இப்படிப்பட்ட குழப்பங்கள், துன்புறுத்தலைச் சட்டப்படிச் செல்லத்தக்கதாகத் தேவையான சட்டங்களைக் கொண்டு வர அரசுக்கு வழிவகுத்துக் கொடுக்கும்; துன்புறுத்தலில் ஈடுபடுவோரும் ‘தீவிரவாத’ வழக்குகளில் விசாரணைக்காகத் துன்புறுத்தியதாகக் கூறித் தப்ப ஏதுவாகும்.

‘சட்டப்படியான நடவடிக்கைகளினால் ஏற்படும் வலி, துன்பம் ஆகியன மட்டுமே துன்புறுத்தல் எனக் கூறப்பட மாட்டாது’ எனப் ப. அவையின் சட்டம் கூற, அரசின் முன்வரைவோ ‘துன்புறுத்தலே சட்ட ஒப்புதல் பெற்ற ஒன்றாகலாம்’ என்கிறது.

விடுபட்ட வகைமுறைகள்:

இதுவரை நாம் பார்த்த குறைகள் போதாதென்று பன்னாட்டு அவையின் சட்டத்தின் பல இன்றியமையாத கூறுகளும் முன்வரைவில் பேசப்படவில்லை.

துன்புறுத்தலுக்குப் பின் பெறப்படும் வாக்குமூலங்கள்:

‘துன்புறுத்தியவருக்கு எதிரான சான்றாகப் பயன்படும் வாக்குமூலத்தைத் தவிர பிற வாக்குமூலங்களை வழக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம்’ எனப் பன்னாட்டு அவையின் சட்டத்தின் பதினைந்தாவது கூறு சொல்கிறது. ‘வழக்கு விசாரணையில் துன்புறுத்தல் கட்டாயத்தால் ஒருவர் தம்மைத் தாமே குற்றச்சாட்டுக்கு ஆளாக்குவதை மட்டுமே அரசியல் சட்டத்தின் 20(3) ஆவது கூறு தடுக்கிறது; ஆனால் குற்றச்சாட்டப்பட்டுள்ள ஒருவர் துன்புறுத்தலின் காரணமாக இன்னொருவரைக் குற்றம் சுமத்துவது அரசியல் சட்டத்தின் கீழ்ச் சான்றாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க, விசாரணையில் பங்கேற்காத அதேவேளை வழக்குகளில் சான்றாகத் திகழக்கூடிய செயலாக்க இயக்குநரகம், புலனாய்வு அமைப்புகள், வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம் ஆகிய அரசு அமைப்புகள் கூடத் துன்புறுத்தலிலும் இழிவாக நடத்துதலிலும் ஈடுபடுகின்றன என்கிறது உச்சநீதிமன்றம். 1999ஆம் ஆண்டின் மராட்டிய மாநில ஒருங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புச் சட்டமோ காவல்துறையிடம் கொடுக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தைச் சான்றாகக் காட்டலாம் என்கிறது. ஆனால் காவலில் வைக்கப்பட்டுள்ள ஒருவர் தாம் தம்மைக் குற்றப்படுத்திக் கூறிய ஒப்புதல் வாக்குமூலங்கள் நெருக்கடியில் கூறியவை என்பதை மெய்ப்பிக்க இயலாது என்பதே இயல்புநிலை. இந்நிலையில் இது போன்ற சட்டங்கள் அரசு அலுவலர் துன்புறுத்தலை மேற்கொள்ள வழங்கப்பட்ட சலுகையாக அமைந்து விடும் வாய்ப்புகள் உள்ளன.

நாடு கடத்துதல், ஏதிலி (அகதி) ஒப்படைப்பு, பிற நாட்டிடம் ஒப்படைத்தல் ஆகியன:
துன்புறுத்தலுக்கு ஏதுவாக நாடுகடத்துதல், ஏதிலியாக ஒப்படைத்தல், பிற நாடுகளிடம் ஒப்படைத்தல் ஆகிய செயல்களை ஒரு நாடு செய்யக்கூடாது எனப் ப. அ. சட்டத்தின் மூன்றாவது கூறு கூறுகிறது. இதைப்பற்றி அரசின் முன்வரைவோ ஏதும் கூறாமல் அமைதி காக்கிறது. 1951ஆம் ஆண்டு ஏதிலிகள் ஒப்பந்தத்தைச் செயல்படுத்தாத இந்தியாவில், ஏதிலிகள் பாதுகாப்புக்கெனத் தேசியச் சட்டங்களும் இல்லை. மேலும் அண்மைக்கால உலகச் சூழலைக் கருதும்போது பிற நாட்டிடம் ஒப்படைப்பதைத் தடுப்பது என்பது இன்றியமையாததாக அமைகிறது.

மீளாய்வு இயங்குமுறைகள்:

விசாரணை மரபுகளையும் சிறைக்காவல் கவனிப்புகளையும் மறு ஆய்வு செய்யும் முறைகள் பற்றி முன்வரைவில் எவ்விதக் குறிப்பும் இல்லை. சிறையில் அடைக்கப்பட்டோருக்குப் பணியாற்றும் சட்ட அலுவலர்கள், மருத்துவர்கள், பொது ஊழியர்கள் ஆகியோருக்கு அளிக்கப்பட வேண்டிய உரிய பயிற்சிகள் பற்றியும் முன்வரைவில் ஏதுமில்லை. இப்படிப்பட்ட குறைபாடுகள் துன்புறுத்தலைத் தடுப்பது என்பதையே நீர்த்துப் போகச் செய்து விடுகின்றன.

சட்ட அறிஞர்களை உடனடியாக அணுகுதல்:

சிறைக் காவலில் இருப்போர்க்கு நடத்தப்படும் துன்புறுத்தல்களைத் தடுப்பதில் வழக்கறிஞர்களுக்குப் பெரும்பங்கு இருக்கிறது. ஆனால் அவர்களை அணுகுவதற்கு வழங்கப்பட வேண்டிய முறைமைகள் பற்றி முன்வரைவில் எக்குறிப்பும் இல்லை. நீண்டகாலமாகத் தடுப்புக்காவலில் வைப்பது, இருபத்து நான்கு நேரத்திற்குள் நீதிபதி முன் நேர்நிறுத்துவது, வழக்கறிஞரை அணுக வழி செய்யாதிருப்பது ஆகியன துன்புறுத்தல் நடக்க ஏதுவாக அமைந்துவிடும். இன்னும் சொல்லப்போனால், காவலில் வைக்கப்பட்டுள்ளோர் துன்புறுத்தல் எனத் தவறாகக் கூற வழிவகுத்துவிடும்.

விருப்ப நெறிமுறை:

அ) பாதுகாப்பு வழங்குவதற்காகப் பல்வேறு இடங்களை நேரில் கண்டு துன்புறுத்தலைத் தடுக்கப் பரிந்துரைகள் அளிக்கும் பன்னாட்டுத் துணைக்குழு அமைத்தல்
ஆ) நாடுகள் தேசிய அளவிலான தற்சார்புத் தடுப்புமுறைகள் உருவாக்குதல்
இ) பன்னாட்டுத் துணைக்குழுவிற்கும் தேசியக் குழுக்களுக்கும் காவலில் இருப்போரைக் கண்காணிக்கும் உரிமையை நாடுகள் வழங்குதல்
ஆகியனவற்றைப் பன்னாட்டு அவையின் விருப்ப நெறிமுறை குறிப்பிடுகிறது. இவ்விருப்ப நெறிமுறை பற்றியும் முன்வரைவு ஏதும் பேசவில்லை. பன்னாட்டு அவையின் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஆர்வமும் துன்புறுத்தலைத் தடுக்கும் எண்ணமும் அரசுக்கு உண்மையிலேயே இருந்தால் இவ்விருப்ப நெறிமுறைகளைச் செயல்படுத்த வேண்டும்.

முடிவுகளும் பரிந்துரைகளும்:

‘மானிடத்தின் மேன்மை மீது நடத்தப்படும் அப்பட்டமான அத்துமீறல், இழிவு’ என்று உச்சநீதிமன்றத்தால் வரையறுக்கப்பட்ட துன்புறுத்தல் இந்தியாவின் முதன்மைச் சிக்கலாகவே நீடித்து வருகிறது. 1993ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் நுழைய அரசால் தடைவிதிக்கப்பட்டிருக்கும் பன்னாட்டு அவையின் துன்புறுத்தலுக்கான விசாரணை அலுவலர், இந்தியாவில் பரவலாக நடக்கும் துன்புறுத்தல்களைத் தொடர்ந்து கண்டித்து வருகிறார். அவர் கண்டிப்பதற்கு ஏற்ப அரசின் முன்வரைவில் பன்னாட்டு அவையின் சட்டத்தின் பல கருத்துகள் விடுபட்டுள்ளன.

இவ்வாறு பலவற்றைக் கருத்தில் கொள்ள, சட்ட முன்வரைவில் கீழ்க்குறிப்பிட்டுள்ள அடிப்படைக் கூறுகளைச் சேர்க்க வேண்டிய தேவை ஏற்படுகிறது.

  • அரசு அலுவலர்களை விசாரிக்கத் தேவைப்படும் அரசு ஒப்புதல் தேவை எனக்கூறும் ஆறாவது பிரிவை நீக்குதல்

  • துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டோருக்கு அரசிடம் இழப்பீடு பெறுவதற்கான முறையான வழிமுறைகளை உருவாக்குதல்

  • குறிப்பிட்ட காலத்திற்குள் துன்புறுத்தலுக்கு ஆளானோர் என்னும் ஐந்தாவது பிரிவை நீக்குதல்

  • கொடுமைப்படுத்துதல், இரக்கமற்று நடத்துதல் ஆகியவற்றையும் பன்னாட்டு அவையின் சட்டம் குறிப்பிட்டுள்ளவாறு துன்புறுத்தலோடு சேர்த்துத் தடுக்கப்பட்ட செயல்கள் என மூன்றாவது பிரிவையும் நான்காவது பிரிவையும் விவரித்தல்

  • தகவல்களைப் பெறுவதற்காகத் துன்புறுத்தல், தண்டித்தல், அச்சுறுத்தல், பாகுபடுத்தல் ஆகியனவும் துன்புறுத்தும் செயல்பாடுகள் என உறுதியளித்தல். இவையனைத்தும் துன்புறுத்தலின் பிரிவுகளே அன்றித் துணைபோகும் செயல்கள் இல்லை என உறுதியளித்தல்.

  • சட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட செய்கைகளால் ஏற்படும் வலி, துன்பம் ஆகியவற்றை விசாரிக்கத் தேவையில்லை என்னும் மூன்றாவது பிரிவை நீக்குதல்

  • துன்புறுத்திப் பெறப்படும் சான்றுகளை நீதிமன்றங்கள், விசாரணை ஆணையங்கள், நீதித்துறை சார் அமைப்புகள் ஆகியன ஏற்றுக்கொள்ளா எனத் தடை கொண்டு வருதல்

  • ஓரிடத்திற்கு நாடு கடத்தப்படும் மனிதர்கள், அங்குச் சென்றால் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சூழல் இருக்குமேயானால் அவ்விடத்திற்கு அனுப்பபடுவதைத் தடுத்தல்

  • விசாரணைமுறைகளைக் கவனித்துத் துன்புறுத்தலைத் தடுக்கும் வகையில் போதிய மாற்றங்களையும் காவலில் வைப்பதற்கான கட்டுப்பாடுகளில் மாற்றங்களையும் கொண்டு வருதல்

  • சிறையில் அடைப்பது, விசாரிப்பது ஆகியவற்றில் ஈடுபடும் உள்நாட்டுச் சட்ட அலுவலர்கள், இராணுவ அலுவலர்கள், மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர்க்கு உரிய கல்வியும் பயிற்சியும் அளித்தல்

  • சிறையில் அடைக்கப்பட்டோருக்கும் காவலில் இருப்போருக்கும் உரிய இலவசச் சட்ட உதவி கிடைக்க உறுதியளித்தல்

  • பன்னாட்டு நாடுகள் சட்டத்தின் விருப்ப நெறிமுறைப் பகுதிகளை இந்தியாவில் செயல்படுத்த ஒப்புதல்

  • துன்புறுத்தலுக்கான பன்னாட்டு அவையின் விசாரணை அலுவலரை இந்தியாவிற்கு வர அழைத்தல்
(கட்டுரை: 19.06.2010 அன்று வெளிவந்த ‘எகானமிக் அண்டு பொலிடிகல் வீக்லி’ இதழில் இரவி நாயர் புதுதில்லியில் உள்ள மனித உரிமைகள் ஆவணமாக்கலுக்கான தென்னாசிய மையத்துடன் இணைந்து எழுதியது)

மொழிபெயர்ப்பு: முத்துக்குட்டி ( muthukutti@zoho.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் )

நன்றி: கீற்று இணையதளம்

Tue 31

Click here to bookmark this link.Channel Image16:06 இவைகளை நம்பாதவர் வழிகேட்டில் வெகுதூரம் சென்று விட்டார்! தினம் ஒரு குர்ஆன் வசனம்
'முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், அவனுடைய தூதர் மீது அவன் இறக்கிய (இவ்)வேதத்தின் மீதும், இதற்கு முன்னர் இறங்கிய வேதங்களின் மீதும் ஈமான் கொள்ளுங்கள். எவர் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும்; இறுதி நாளையும் (நம்பாமல்) நிராகரிக்கிறாரோ, அவர் வழிகேட்டில் வெதுதூரம் சென்றுவிட்டார்'. (அந்நிஸா:136).
Click here to bookmark this link.Channel Image13:42 26/11 மும்பைத் தாக்குதல் – கார்கரே -ஐ கொலை செய்தது யார்? இஸ்லாம்கல்வி.காம் - Portal
S.M.முஷ்ரீஃப் I.P.S. (முன்னால் மகாராட்டிர மாநிலத்தின் காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அவர்கள் எழுதிய ஹேமந்த் கார்கரே -ஐ கொலை செய்தது யார்? என்ற புத்தகத்தின் தமிழ் மொழிப்பெயர்ப்பு வெளியீட்டு விழா மற்றும் கருத்தரங்கம். வழங்குபவர்கள்: M. குலாம் முஹம்மது (எழுத்தாளர், வேர்கள் வெளியீட்டகம்), தீரு அருணன் (எழுத்தாளர்), T. லஜபதிராய் (அட்வகேட், வைகை சட்ட அலுவலகம்), S.M.முஷ்ரீஃப் I.P.S. (மகாராட்டிர...

பதிவை முழுமையாகப் பார்க்க தலைப்பின் சுட்டியை சொடுக்கவும். அல்லது www.islamkalvi.com தளத்திற்கு செல்லவும்.
Click here to bookmark this link.Channel Image12:53 நற்குணங்கள்! – Audio/Video சுவனத்தென்றல்
நிகழ்ச்சி : ரமலான் சிறப்பு சொற்பொழிவு நாள் : 17-08-2008 இடம் : ரமலான் 2010 சுவனத்து பூஞ்சோலை கூடாரம், பஹாஹீல், குவைத் நிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய வழிகாட்டி மையம், குவைத் ஆடியோ : (Download) {MP3 format -Size : 15.8 MB}
Click here to bookmark this link.Channel Image09:06 நபி (ஸல்) அவர்கள் இஸ்லாம்கல்வி.காம் - Portal
அல்-ஜுபைல் வெள்ளி மேடை-63 வழங்குபவர்: மௌலவி ஸப்ராஸ் (அழைப்பாளர், அல்-ஹஸா தஃவா நிலையம்) நாள்: 23-07-2010 இடம்: அல்-ஜுபைல் துறைமுக பள்ளி வளாகம், ஜுபைல், சவூதி அரேபியா Download flash video – Size: 77.5 MB Audio Play: Download mp3 audio – Size: 13.4 MB 3GP format for mobile Download mobile video – Size: 38.1 MB

பதிவை முழுமையாகப் பார்க்க தலைப்பின் சுட்டியை சொடுக்கவும். அல்லது www.islamkalvi.com தளத்திற்கு செல்லவும்.
Click here to bookmark this link.Channel Image08:58 ரமழான் – நோன்பு இஸ்லாம்கல்வி.காம் - Portal
அல்-ஜுபைல் வெள்ளி மேடை-64 வழங்குபவர்: மௌலவி முஹம்மத் ஷமீம் ஸீலானி நாள்: 13-08-2010 இடம்: அல்-ஜுபைல் துறைமுக பள்ளி வளாகம், ஜுபைல், சவூதி அரேபியா Download flash video – Size: 78.6 MB Audio Play: Download mp3 audio – Size: 13.7 MB 3GP format for mobile Download mobile video – Size: 38.9 MB

பதிவை முழுமையாகப் பார்க்க தலைப்பின் சுட்டியை சொடுக்கவும். அல்லது www.islamkalvi.com தளத்திற்கு செல்லவும்.
Click here to bookmark this link.Channel Image01:07 குழந்தையின் ஜிப்பில் மாட்டிய ஆண் உறுப்பை எடுப்பது எப்படி ? குழந்தை நலம்
குழந்தையின் ஜிப்பில்  மாட்டிய ஆண் உறுப்பை  எடுப்பது எப்படி ?

   சிறு  குழந்தைகள்  அவசரமாக  பாண்டை கழட்டும்போது  ஜிப்பில்  மாட்டிகொள்வது என்பது ஒரு அவசர  நிலை ஆகும் , பதட்டபடாமல்  வீட்டிலேயே அதை  விடுவிக்கும் முறைகள் கீழே:

ஆணுறுப்பின்  முன் தோலே  பெரும்பாலும்  மாட்டிகொள்ளும்,  அது ஜிப்பின்
பல்லுக்கு  இடையே மட்டும்  உள்ளதா? அல்லது ஜிப்பிற்கும் அதன் மேல் உள்ள இழுபானுக்கும்     இடையே உள்ளதா என்று பார்க்க வேண்டும் .


பல்லுக்கு  இடையே மட்டும் இருந்தால் :

 

முதலில்  ஜிப்பை  பான்டில் இருந்து  கத்தரித்து எடுக்கவேண்டும் . (பான்ட் போனால் போகட்டும் போடா )  இப்பொது முன் தோளோடு ஜிப் மட்டுமே இருக்கும்
பிறகு  1  என்ற இடத்தில கட்  செய்யவேண்டும் . அதன் வழியே  இழுபனை விடுவிக்க


வேண்டும் . அதன் பின்  பல் பகுதியை விரித்தால் தோல்  விடுபடும்













பல்லுக்கும்  இழுப்பனுக்கும்  இடையே மாட்டிக்கொண்டால் :

The Chomp and Squeeze Method:



இந்த முறையில்  கட்டிங் பிளேயர் கொண்டு  இரு முனைகளையும் கட்
செய்த பிறகு  இழுபானின்  இரு  புறம் அழுத்த வேண்டும் இதன் மூலம் 
தளர்வாகி விடுபடும் .
 
 
 
 
 Screw- driver Method:




     ஒரு பெரிய  ஸ்க்ரு  டிரைவரை  இழுபனின் இரு முனைகளுக்கு இடையே விட்டு  நெம்பவேண்டும்.சாதாரணமாக   முன் தோல் ஒரு புறமே  மாட்டி இருக்கும் , எனவே ஆதற்கு எதிர் புறம் நேம்புவதால்  எளுதில் விடுபடும் .
 
 இனொரு  முறையில்  இழுபனின்  நடு பகுதியை  கட்டிங் பிளேயர்  கொண்டு  நறுகுவதன் மூலம் செய்யலாம் , இது மிக கவனமுடன் செய்ய வேண்டும் .
 
 
உங்களால் ஒரு முறையில் முடியவில்லை எனில் உடன் மருத்துவரை  அணுகவும் .  பான்டில் இருந்து ஜிப்பை மட்டும்  வெட்டில் பிரித்து அழைத்து வந்தால்  அதிக சேதாரத்தை தவிர்க்கலாம்

Mon 30

Click here to bookmark this link.Channel Image20:43 ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-25) இஸ்லாம்குரல்.காம்
25. பொறுமையின் தனிச்சிறப்பு ஹதீஸ் 25: அபூ மாலிக் அல் அஷ்அரி(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: தூய்மை (ஈமான் எனும்) நம்பிக்கையின் பாதியாகும். அல்ஹம்துலில்லாஹ் தராசை நிரப்புகிறது. ஸுப்ஹானல்லாஹி வல் ஹம்துலில்லாஹ் வானங்களுக்கும் பூமிக்கும் மத்தியிலுள்ள இடைவெளியை நிரப்புகிறது. தொழுகை ஒளியாகும். தர்மம் ஆதாரமாகும். பொறுமை வெளிச்சமாகும். திருக்குர்ஆன் உனக்குச் சாதகமான அல்லது பாதகமான ஆதாரமாகத் திகழ்கிறது!. ஒவ்வொரு மனிதரும் காலையில் (தத்தம் பணிக்காகச்) செல்கின்றனர். தமது ஆன்மா தொடர்பான வியாபாரத்தை மேற்கொள்கின்றனர். அதற்கு [...]
Click here to bookmark this link.Channel Image16:13 புண்ணியம் என்பது எது? தினம் ஒரு குர்ஆன் வசனம்
'புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்குப் பக்கமோ, மேற்குப் பக்கமோ திருப்பிக் கொள்வதில் இல்லை. ஆனால் புண்ணியம் என்பது, அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு)நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதலில்தான் இருக்கிறது' (அல்பகரா:177).
Click here to bookmark this link.Channel Image11:17 குழந்தை நலம்

NIMESULIDE ஆபத்து :

Nimesulide என்ற மருந்து சுரத்திற்கு உபயோகபடுத்த படுகிறது .
இதனால் சில பக்க விளைவுகள் வருவதால் பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது . ( குடல் புண் , கல்லீரல் பாதிப்பு
ஆனால்இந்தியாவில் இன்னும் இந்த மருந்து உள்ளது .
எனவே இதை குழந்தைகளுக்கு தரும் போது பெற்றோர் விழிப்புடன் இருந்து மருத்துவரிடம் இது குறித்து விளக்கம் கேட்கவேண்டும்

Click here to bookmark this link.Channel Image11:17 “cheaper” and “painless” solution against the virus -- குழந்தை நலம்
Pune’s Serum Institute of India (SII) launched its much awaited “cheaper” and “painless” solution against the virus -- a ready-to-sniff intra-nasal vaccine, Nasovac, on Wednesday across the country.



A little about Nasovac
NASOVAC meant for the H1N1 pandemic strain, is a nasal spray in powder form, which has to be reconstituted by adding water.

A single dose of 0.5ml of the vaccine is delivered directly to the nasal cavity through a device fitted at the top of the syringe.

A quick spray in each nostril and the body develops antibodies to protect against the deadly virus for a period of over a year or even more.

According to experts, the nasal spray may prove to be effective as it takes the same respiratory route as the H1N1 virus. It has the efficiency to fight H1N1 infection even if small changes occur in the virus.

After vaccination, some negligible or very mild reactions may be experienced for two to three days.

Safety and efficacy assessedThe safety and efficacy of the vaccine was assessed clinical trials on more than 300 human subjects in the country.

The vaccine has been approved by the Drug Controller of India (DCGI) and can be safely administered to any individual above three years.

However, SII is not recommending the vaccine for pregnant women and lactating mothers.

Nasovac should not be administered to pregnant and lactating women, besides children below three years.

"But the medical fraternity says this decision should be left to them. They think that if the women are in a high-risk area, they should be vaccinated. So we have no objection, but it is better that if these vaccines are not given to them.”

Economically pricedIn order to increase its commercial use among the masses, Nasovac is economically priced.

SII has set a sale target of 20-25 million doses in first year.

In addition, SII donated vaccines worth Rs 10 crore to various hospitals NGOs, and the underprivileged.

It is priced at Rs. 158 per dose and available in the 5-vial pack for Rs. 790.
Click here to bookmark this link.Channel Image11:17 வயிற்று போக்கு(DIARRHEA) குழந்தை நலம்
                             )DIARRHEA IN CHILDREN(

* உணவிலும்  , நீரிலும்   உள்ள   நோய்  கிருமிகள்(VIRUS, BACTERIA, PROTOZOA)   வயிற்றில்  சென்று  வயிற்று  போக்கை   ஏற்படுத்தும் .


*பாட்டில் பாலே இதற்கு முழு  முதல்  காரணம் .இதர  காரணங்கள் : மூடி வைக்காத  உணவு , ஊட்டி எனப்படும்  சூபான் (கீழே  விழுந்தபின்  கழுவாமல்   உடனே வாயில்  வைப்பது ),சுகாதர  குறைவு ....


* குழந்தைகளுக்கு   வரும்  வயிற்று  போக்கிற்கு   பெரும்பாலும்  வைரஸ் காரணம் . 
* பாக்ட்ரியா, ப்ரோடோசோவா, உணவு  ஒவ்வாமை   - இதர  காரணங்கள்


* வைரசில் ROTA VIRUS  முதன்மையானது . முதலில் வாந்தியும் பிறகு போக்கும் ஏற்படும் .இதனால் உண்டாகும்  வயிற்றுபோகில்  அதிகபடியான  நீர் இழப்பு  ஏற்படும் . மற்றும்  சுரம்  அதிகமாக  இருக்கும் .


* இரத்தம், சளி போன்ற  MUCUS ,  இருந்தால்  அது  -DYSENTRY -- எனப்படும் .இதில்  வயிறு வலி , சுரம் ,வலியுடன் மலம்  போகுதல் ஆகிய அறிகுறிகள்  காணப்படும். இதில் நீர் இழப்பு  குறைவாக  இருக்கும் .




*வெறும்  நீராக  மற்றும் பாதி நீராக  போனால்  அது  DIARRHEA-- எனப்படும் .இதில் நீர்  இழப்பு  அதிகமாக  இருக்கும் .


* வயிற்று போக்கு  உள்ள போது குழந்தயை   பட்டினி  போடுதல் கூடாது , நீர் இழபிற்கு தகுந்தால் போல்  ஊட்டம்  அளிக்கவேண்டும் .


*வயிற்றுபோகின் போது  நீர் சத்தும் , ஊப்பு  சத்தும்  குறைவதால்  அதை  சரிசெய்ய  வேண்டும் .


* பால் குடிக்கும்  குழந்தைக்கு  விடாமல்  தாய்ப்பால்  தரவேண்டும்


*வீட்டிலேயே  முதல்  உதவி அளிக்க  முடியும்
# ஒரு  தம்ளீர்  காய்ச்சிய  நீர்  எடுத்துகொள்ளவும்
#இரண்டு  விரலில் சிக்கும்  அளவு   உப்பு  சேர்க்கவும்
#மூன்று  விரலில்  சிக்கும்  அளவு  சர்க்கரை  சேர்க்கவும்
# நன்கு  கலக்கி   அடிக்கடி  தரவும்


*பாட்டிலில்  பால் தருவதை  உடனே  நிறுத்தவேண்டும் .


*திட  , திரவ  உணவை  நிறுத்தாமல்   கொடுத்துகொண்டே  இருக்க வேண்டும் .
* வயிற்று போக்கு  குறைய  மூன்று முதல்  ஐந்து நாட்கள்  ஆகலாம். எனவே பொறுமையுடன்  மருத்துவர் ஆலோசனை  பேரில் மருந்து தரவும் . நீர் இழப்பை  தடுப்பதே  மிக முக்கிய  மருத்துவம் ஆகும் .


*போக்கை  உடனே நிறுத்த  சில மருந்துகள்  உள்ளன , அவற்றை  குழந்தைகளுக்கு  தரக்கூடாது . LOPERAMIDE (andial, loperate,loperatil,)  என்ற   மாத்திரையை   தந்தால் போக்கு உடனே  நின்று விடும் , ஆனால் வயிறு  வீங்கும் , சுரம் வரும் , செப்டிக் ஆகிவிடும் . இந்த  மாத்திரையை  பெரியவர்களுக்கு  தரலாம் , ஆனால்  12  வயதிற்கு  குறைந்த  குழந்தைகளுக்கு  தரக்கூடாது .




*எனவே  வயிற்று போக்கை  அதன் போக்கிலேயே  விட்டு  மருத்துவம் செய்ய வேண்டும் .


* இப்பொழுது  ORS எனப்படும்  உயிர் கரைசல்  கிடைக்கிறது. அதை  வாங்கி வீட்டில்  வைத்திருந்தால்  தேவை படும்  போது  முதல் உதவியாக  தரலாம் .
Click here to bookmark this link.Channel Image11:17 மாறுகண் வரமா? சாபமா? ஒரு பார்வை குழந்தை நலம்
                                        மாறு கண் :SQUINT
  இரண்டு கண்களின்  ஒத்திசைவு  குறைபாடே  மாறுகண்  எனபடுகிறது . குழந்தைகள்   மனதளவில்  ஒரு வித  தாழ்வு  மனப்பான்மையை  ஏற்படுத்தும் , எனவே விரைந்து  கண் மருத்துவரை அணுகி  நலம் பெறவேண்டும்


சாதாரணமாக  நாம்  பார்க்கும் போது  இரண்டும் கண்களும்  ஒரே நேரத்தில்  ஒரே திசையில் நகரும் , ஆனால் மாறுகண் உள்ளவருக்கு  ஒரு கண் மட்டும்  ஒரே திசையில்  நகராமல்  இருக்கும் .

இதில்  இரண்டு வகைகள்  உள்ளன :
 CONCOMITTANT SQUINT
NON  CONCOMITTAT SQUINT - (PARALYTIC SQUINT)

நாம்  நேராக  பார்க்கும் போது நமது இரு கண்களும்  நடுவில் இருக்கவேண்டும் , அனால்  PARALYTIC SQUINT  என்ற  வகையில்  ஏதேனும் ஒரு  கண் எந்த  திசையிலும்  நகராமல் அப்படியே இருக்கும் .

PARALYTIC SQUINT.:  இதனை  அறுவை சிகிச்சை  மூலம் சரி செய்ய முடியும்


CONCOMITTANT SQUINT   இரண்டு  வகைப்படும்  :
                     CONVERGENT SQUNT
                      DIVERGENT SQUINT
CONVERGENT SQIUNT : நாம்  நேராக பார்க்கும் போது  ஒரு கண் மட்டும்  உள் நோக்கி , அதாவது  மூக்கு  நோக்கி போகும்.
இதில்  இரண்டு வகை உள்ளது
              ACCOMMODATIVE  TYPE
               NON ACCOMMODATIVE TYPE

ACCOMMODATIVE TYPE CONVERGENT SQIUNT :  இதனை  மூன்று வயதிற்குள்  மருத்தவரிடம் காண்பித்தால் சில  பயிற்சி  மற்றும்  கண் கண்ணாடி  மூலம்  சரி செய்ய  முடியும் . ஏன் எனில்  சில சமயம்  இது  பார்வை குறைபாடினால் வருகிறது .(HIGH HYPERMETROPIC REFRACTORY ERROR)

NON ACCOMMODATIVE TYPE : இதற்கு  அறுவை  சிகிச்சை செய்ய வேண்டும்


DIVERGENT SQIUNT:  நாம்  நேராக பார்க்கும் போது  ஒரு கண் மட்டும்  வெளி  நோக்கி , அதாவது  காது நோக்கி போகும்
DIVERGENT SQUINT  - கட்டாயம்  அறுவை சிகிச்சை  செய்தே  ஆகவேண்டும் .இது  தானாக சரி ஆகாது.

அறுவை சிகிச்சை செய்ய  சரியான நேரம் எது ?
    அனைத்து வகையான  மாறு கண்  வகையும்  5  வயதிற்குள்  செய்திட வேண்டும் , ஏனெனில்  5  வயதிற்கு பிறகு  செய்தால்  கண்ணின்  அசைவு  சரி ஆகிவிடும் ஆனால் பார்வையில் முனேற்றம்  அவ்வளவாக  இருக்காது .

அறுவை சிகிச்சை பாதுகப்பனதா ?
      ஆம் , அறுவை  சிகிச்சை  கண்ணின்  உள்ளே  செய்வது அல்ல , மாறாக  கண்ணை  சுற்றி உள்ள கண் தசையில்  செய்யபடுகிறது , எனவே பயம்  தேவை இல்லை .

PATCHING  FOR SQUINT : அறுவை  சிகிச்சைக்கு முன்  , சில நேரங்களில்  PATCHING  என்ற தற்காலிக  முறையை  கடை பிடித்தல்  நலம் . இதனால்  மறுகண்ணின்  பார்வை  இழக்காமல்  பாதுகாக்க படும் . இந்த முறையில்  நல்ல  கண்ணை  மூடி வைத்து , மாறுகண்ணுக்கு வேலை கொடுப்பது ஆகும் .இதனால் மறுகண்ணின்  செயல்பாடு அதிகரிக்கும்

Click here to bookmark this link.Channel Image11:17 ப‌ன்றிக்காய்ச்சல் குழந்தை நலம்
காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1
ப‌ன்றிக்காய்ச்சல் என்றழைக்கப்படும் காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என்று அழைக்கப்படுகிறது.அதில் 3 வகை உள்ளது. இவை அனைத்தும் வைரஸ்களால் ஏற்படுகிறது. இந்த வைரஸ் தனது ஆர்.என்.ஏ. என்கிற உருவ அமைப்பை அடிக்கடி மாற்றிக்கொள்கிறது. அதனால் இது ஏ.பி.சி. என்று 3 வகைப்படுகிறது.

ஏ டைப் வைரஸ் தொற்றினால் லேசான காய்ச்சல் இருக்கும். சளி, இருமல் , தலைவலி, வயிற்றோட்டம் வாந்தி ஆகியவை இருக்கும். சிலருக்கு வயிற்றோட்டம் வாந்தி இருக்காது. இந்த நோய் வந்தவர்களை தனிமை படுத்தி சாதாரண வைரஸ் காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை அளித்தால் போதும். இவர்களுக்கு டாமிபுளு (ஒசல்டாமிவிர்) மாத்திரை கொடுக்கக்கூடாது. ஏன் என்றால் அவ்வாறு அந்த மாத்திரை கொடுத்தால் அது பின்விளைவை ஏற்படுத்தும்.இவர்களுக்கு ஆய்வக பரிசோதனை தேவை இல்லை. வீட்டில் ஓய்வு எடுத்து கொள்ளும்படியும் மற்ற நபர்களிடம் தொடர்பை குறைத்துக் கொள்ளச் செய்ய வேண்டும்.

பி டைப் நோயாளிகளுக்கு ஏ டைப் நோயாளிகளுக்கு இருந்த அனைத்து அறிகுறிகளுடன் காய்ச்சல் அதிகமாக இருக்கும். தொண்டை வலி அதிகமாக இருக்கும். இவர்களுக்கும் ஆய்வக பரிசோதனை தேவை இல்லை. ஆனால் பிடைப் நோயாளிகளுக்கு உடனடியாக டாமி புளு மாத்திரை கொடுக்கவேண்டும்.

சி டைப் நோயாளிகளுக்கு பி டைப் நோயாளிகளுக்கு இருந்த அறிகுறி தவிர வழக்கத்தை விட அதிக மூச்சுத்திணறல் ஏற்படும். ரத்தத்துடன் கலந்த சளிவரும். நகம் நீல நிறமாக மாறும். சாப்பிட மனம் வராது. பசி எடுக்காது. உடனே ஆய்வக பரிசோதனை செய்து மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்பட வேண்டும். டாமி புளு மாத்திரை சாப்பிடவேண்டும்பன்றிக்காய்ச்சலை பரப்பும் வைரஸ் கைகுட்டையில் 12 மணிநேரமும், கைளில் 5 நிமிடமும், குளிர்ந்த தண்ணீரில் 30 நாட்களும் உயிர்வாழக்கூடியது . மேலும் இந்த வைரஸ் பரவாமல் இருக்க இருமும்போதும், தும்மும் போதும் மற்றவர்களுக்கு குறைந்தது 4 அடி இடைவெளி இருக்க வேண்டும்பன்றி காய்ச்சல் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு 'ஒசல்டமிவிர்', 'ஜானமிவிர்' ஆகிய மருந்துகளை அளிக்க வேண்டும். ஒசல்டமிவிர் கிடைக்காவிட்டால், ஜானமிவிர் மருந்தை கொடுக்கலாம்.இந்த மருந்துகள் மரணத்தை ஏற்படுத்தும் நிமோனியாவை கட்டுப்படுத்துகிறது.பன்றி காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்படாத நபர்களுக்கு இந்த வைரஸ் தடுப்பு மருந்துகளை அளிக்கக்கூடாது.

5 வயதுக்கு மேற்பட்ட ஆரோக்கியமான குழந்தைகளுக்கு கூட, அவர்கள் கடுமையாக பாதிக்கப்படாத நிலையில் இந்த மருந்துகளை கொடுக்க வேண்டிய தேவை இல்லை.

மூச்சுத்திணறல், நெஞ்சு வலி, 3 நாட்களுக்கு மேல் நீடிக்கும் காய்ச்சல் போன்ற பன்றி காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.\

குழந்தைகள் வேகமாகவோ, சிரமப்பட்டோ மூச்சு விடுதல், சுறுசுறுப்பு இல்லாமை, படுக்கையை விட்டு எழுவதில் சிரமம், விளையாடுவதில் ஆர்வம் இன்மை ஆகியவற்றுடன் காணப்பட்டுவதும் பன்றி காய்ச்சலுக்கான அறிகுறிகளாம்.

பன்றிக் காய்ச்சலுக்குப் பயன்படுத்தப்படும் டாமிபுளு மாத்திரைகளை, மரு‌த்துவ‌ர்க‌ளி‌ன் அ‌றிவுறு‌த்த‌ல் இ‌‌ல்லாம‌ல், முறையின்றி உட்கொண்டால் மோசமான ‌பி‌ன் விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

இந்தியா போன்ற நாடுகளில் பன்றிக் காய்ச்சலுக்கான டாமிபுளு மாத்திரைகளை, பொதும‌க்க‌ள், மரு‌த்துவ‌ர்க‌ள் ஆலோசனையின்றி பயன்படுத்துவதாகவும், முறைப்படி ஐந்து நாட்கள் உட்கொள்ளாமல் இடையில் நிறுத்தி விடுவதாகவும் உலக சுகாதார அமைப்புக்கு (டபிள்யூ.எச்.ஓ) புகார்கள் வந்தன.

இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தொற்று நோய் கட்டுப்பாடு மையத்தின் நிபுணர்கள் கூறுகை‌யி‌ல், "டாமி புளு மருந்துகளை முறையின்றி பயன்படுத்தினால் மருந்தின் சக்தியை எச்1என்1 வைரஸ் தடுத்து நிறுத்தி மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.டாமி புளு தனது சக்தியை இழக்க நேரிடும். எனவே மரு‌த்துவ‌ர்க‌ள் பரிந்துரைப்படியே மருந்துகளை உட்கொள்ள வேண்டும் எ‌ன்று எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளா‌ர்.

எனவே, பொதும‌க்க‌ள் யாரு‌ம், சாதாரண கா‌ய்‌ச்சலு‌க்காகவோ, ச‌ளி‌க்காகவோ மரு‌த்துவ ப‌ரிசோதனை இ‌ன்‌றி டா‌‌மி புளு மா‌த்‌திரைகளை‌ப் போட வே‌ண்டா‌ம். உட‌ல் நல‌ப் பா‌தி‌ப்பு ஏ‌ற்ப‌ட்டா‌ல் உ‌ரிய மரு‌‌த்துவரை அணு‌கி, அவரது ப‌ரி‌ந்துரை‌யி‌ன் படி ‌சி‌கி‌ச்சை மே‌ற்கொ‌ள்வது ந‌ல்லது.

மேலு‌ம், ப‌ன்‌றி‌க் கா‌ய்‌ச்ச‌ல் பா‌தி‌ப்பு‌க்கு‌ள்ளானவ‌ர்க‌ள், பய‌ந்தோ, அ‌றியாமையாலோ ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் முட‌ங்‌கி இரு‌க்காம‌ல், தகு‌ந்த மரு‌த்துவமனை‌யி‌ல் உடனடியாக ‌சி‌கி‌ச்சை பெ‌ற்று குணமடையலா‌ம். ப‌ன்‌றி‌க் கா‌ய்‌ச்ச‌ல் நோ‌ய்‌க்கு உடனடியாக உ‌ரிய ‌‌சி‌கி‌ச்சை மே‌ற்கொ‌ண்டா‌ல் ‌நி‌ச்சயமாக பூரண குணமடையலா‌ம்.ஒருவ‌ரிட‌ம் இரு‌ந்து ஒருவரு‌க்கு ப‌ன்‌றி‌க் கா‌ய்‌ச்ச‌ல் பரவுவதை‌த் தடு‌க்க நாமு‌ம் ந‌ம்மை சு‌த்தமாக வை‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம். து‌ம்‌மிய‌ப் ‌பிறகோ, இரு‌‌மிய‌ப் ‌பிறகோ நமது கைகளை சு‌த்தமாக கழுவ வே‌ண்டு‌ம். வெ‌ளி‌யி‌ல் செ‌ன்று‌வி‌ட்டு வ‌ந்தது‌ம் கை, கா‌ல்களை ந‌ன்கு கழு‌வி, ‌பி‌ன்ன‌ர் முக‌த்தையு‌ம் கழுவ வே‌ண்டு‌ம்.

பன்றி காய்ச்சல் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? என்னென்ன செய்யக்கூடாது? என்பது பற்றிய சில யோசனைகளை பொது ம‌க்களு‌க்கு மத்திய அரசு தெரிவித்து உள்ளது. அதனை ‌பி‌ன்ப‌ற்‌றி ப‌ன்‌றி‌க் கா‌ய்‌ச்ச‌ல் பரவுவதை தடு‌ப்போ‌ம்.

சுகாதாரமாக வாழு‌ங்க‌ள்‌தினமு‌ம் குறை‌ந்தப‌ட்ச‌ம் ஒரு வேளை சு‌த்தமான ‌நீ‌ரி‌ல் கு‌ளியு‌ங்க‌ள். நோய்க்கிருமி எதிர்ப்பு சக்தி கொண்ட சோப்பை‌க் கொ‌ண்டு அடிக்கடி கைகளை கழுவுங்கள். குழாய் தண்ணீரில் குறைந்த பட்சம் 15 வினாடிகள் கைகளை அலசுங்கள்.வெ‌ளி‌யி‌ல் செ‌ன்று ‌வி‌ட்டு வ‌ந்தது‌ம் கை‌, கா‌ல், முக‌ம், கழு‌த்து‌ப் பகு‌திகளை சு‌த்தமான த‌ண்‌ணீரா‌ல் ந‌ன்கு கழுவு‌ங்க‌ள்.இரவில் குறைந்த பட்சம் 8 மணி நேரம் நன்றாக தூங்க வேண்டும்.

உட‌ல் ஆரோ‌க்‌கிய‌த்‌தி‌ற்கு உற‌க்க‌ம் அவ‌சிய‌ம்.ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8 முதல் 10 தம்ளர் தண்ணீர் குடியுங்கள்.சத்தான உணவு வகைகளை சாப்பிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள். இதற்கு தானிய வகைகள், பசுமையான காய்கறிகள், வைட்டமின் சத்துக்கள் நிறைந்த பழங்கள் சாப்பிடுங்கள்.

மது அருந்த வே‌ண்டா‌ம்மது அருந்தினால் உடலில் நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி குறையு‌ம். இதனா‌ல் பன்றி காய்ச்சல் போ‌ன்ற நோய்க்கிருமிக‌ள் உடலு‌க்கு‌ள் எ‌ளிதாக ஊடுருவு‌ம் எ‌ன்பதா‌ல் மது அருந்துவதை தவிர்த்து விடுங்கள்.மிதமான உடற்பயிற்சி உடலில் ஆக்சிஜனின் அளவை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் என்பதால், தினசரி 30 முதல் 40 நிமிடம் வேகமான நடை‌ப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருங்கள்.இருமுவதன் மூலமும், தும்முவதன் மூலமும் பன்றி காய்ச்சல் நோய்க்கிருமி ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் என்பதால், நோய் பாதிப்பு உள்ளவர்களிடம் இருந்து விலகி இருங்கள். உடல் ரீதியாகவும் தொடர்பு வைத்துக் கொள்ளாதீர்கள்.

வெ‌ளி‌யி‌ல் செ‌ல்வதை த‌விரு‌ங்க‌ள்தேவை இல்லாமல் வெளியில் செல்வதையும், கூட்டம் உள்ள இடங்களுக்கு செல்வதையும் தவிருங்கள். கண்கள், மூக்கு, வாய் மூலம் நோய்க்கிருமிகள் உடலுக்குள் செல்லும் என்பதால் அவ‌ற்றை தொடுவதையும் தவிருங்கள்

.வேறு எ‌ந்த‌க் காரண‌த்‌தி‌ற்காகவு‌ம் குழ‌ந்தைகளை மரு‌த்துவமனை‌க்கு அழை‌த்து வரா‌தீ‌ர்க‌ள்.குழ‌ந்தைகளை வெ‌ளி‌யி‌ல் கொ‌ண்டு செ‌ல்வதை‌த் த‌விரு‌ங்க‌ள்.

வெ‌ளி‌யி‌ல் செ‌ன்று‌வி‌ட்டு ‌வீ‌ட்டி‌ற்கு வ‌ந்தது‌ம் குழ‌ந்தைகளை‌த் தூ‌க்கா‌தீ‌ர்‌க‌ள். உடனடியாக உடலை சு‌த்த‌ம் செ‌ய்த ‌பி‌ன்னரே அடு‌த்த வேலையை‌த் துவ‌க்கு‌ங்கள‌்.
Click here to bookmark this link.Channel Image11:17 பல் முளைப்பது , பல் துலக்குவது எப்போது ?? குழந்தை நலம்
DENTITION  AND  BRUSHING HABITS IN CHILDREN
குழந்தைக்கு பல் ஆறு  மாதத்தில்  இருந்து  முளைக்க  ஆரம்பிக்கும் . பால் பற்கள்  இருபதும்  இரண்டு  வயதுக்குள்  முளைத்துவிடும் ..

 ஆறு  வயதில் இருந்து    பனிரண்டு வயது  வரை   பால் பற்கள் கீழே விழுந்து  இருபதெட்டு  நிரந்தர  பற்கள்  முளைக்கும் .  மீதி  நான்கு  பற்கள்  பதினெட்டு  வயது  முதல்   இருபத்து ஐந்து  வயதுக்குள் முளைக்கும்.

பல் துலக்க  இரண்டரை  வயதில்  பழக்க வேண்டும் . இரவு  தூங்கபோகும் முன் கட்டாயம்  பல் துலக்க ஆரம்பத்தில்  இருந்தே  பழக்க வேண்டும் .

பல் முளைக்க கால்சியம் , பாஸ்பரஸ் , வைட்டமின்  சி , டி தேவை . 

பால் , பழம் , காய்கள், மீன் , முட்டை  ஆகியவற்றில் மேலே  உள்ள சத்துக்கள் உள்ளன .தாய்  மார்கள்  இதை சாப்பிட்டால்   தாய் பாலில் இந்த  சத்துக்கள் கிடைக்கும் .
Click here to bookmark this link.Channel Image11:17 தேள் கடி :(ஸ்கார்பியன் ஸ்டிங்)(SCORPION STING) குழந்தை நலம்

தேள் கடி :(SCORPION STING)

குழந்தைக்கு தேள் கடித்தால்அது இருதயத்தை பாதிக்கும் . எனவே உடனடியாக சிகிச்சை தரவேண்டும் .

அறிகுறிகள் :
விடாமல் அழுதல்
அதிகபடியான வியர்வை
உடல் சில்லிட்டு போகுதல்
இருதய துடிப்பில் மாறுபாடு
ஆணுறுப்பு விறைத்து நிற்கும் (ஆண் குழந்தைக்கு )

முதல் உதவி:
கடி பட்டஇடத்தை சுத்தம் செய்ய வேண்டும்

வலி குறைய ஐஸ் வைக்கலாம்

விஷமுறிவு மருந்து :PRAZOCIN ஆகும்

இந்த மாத்திரையை சீக்கிரம் தருவதன் மூலம் உயிர் இழப்பை தடுக்க முடியும் . இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை பேரில் உடனே தரவேண்டும்

DOSE OF PRAZOSIN
30 MICROGM/ KG

FOR 10 KG BABY 300micro gm
FOR 30 KG BABY 900 microgm
tablet available in
1000microgm(one milli gm), 1500microgram(1.5 milligm), 2500microgm(2.5milligm)
(remember one mill gm=1000 micro gm )
trade name : PRASOPRESS, MINIPRESS,

எனவே 35 kilo குழந்தைக்கு 1000 microgm or 1 milligm மாத்திரை ஒன்று தரவேண்டும்

15 kilo குழந்தைக்கு 450 microgm or .45 mg அதாவது பாதி
தரவேண்டும்

மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை இதே அளவு மாத்திரை தரவேன்டும்

தேள் கடித்த 24 மணி நேரத்திற்கு மருத்துவரின் கண்காணிப்பில் இருக்க வேண்டும்


Click here to bookmark this link.Channel Image11:17 தாய்ப்பால் - சில உண்மைகள் குழந்தை நலம்

தாய்ப்பால் - சில உண்மைகள் :

குழந்தை பிறந்த அரை மணி நேரத்திற்குள் தாய்ப்பால் தரவேண்டும் , அறுவை சிகிச்சையில் பிறந்த பின் இரண்டு மணி நேரத்திற்குள் தரவேண்டும் , நேரம் கடந்து தந்தால் பால் சுரப்பது குறைய ஆரம்பிக்கும் .



முதல் இரண்டு மூன்று நாட்களில் சுரக்கும் பால் சீம்பால் எனப்படும் . இது குழந்தைக்கு ஒரு அரு மருந்து . ஒரு தாய் தன் குழந்தைக்கு தரும் சீதனமே இந்த சீம்பால் ஆகும் .

 இதில் அதிகமாக புரத சத்தும் , நோய் எதிர்ப்பு சத்துக்களும் உள்ளன . விட்டமின்கள் அதிகமாகவும் , எளிதில் செரிமானம் ஆககூடியதும் ஆகும் .

 எனவே ஒரு துளி கூட வீணாக்காமல் சீம்பால் தரவேண்டும் .

குழந்தை பிறந்த முதல் இரண்டு வாரம் தனது எடையில் பத்து சதவிகிதம் குறையும் . இது இயல்பானதே , மூன்றாம் வாரத்தில் இருந்தே எடை கூட ஆரம்பிக்கும்


குழந்தைக்கு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை தாய்ப்பால் தரவேண்டும் .

 எடை குறைவான குழந்தைக்கு ஒன்றரை மணி நேரத்திற்கு ஒரு முறை தாய்ப்பால் தரலாம் .

சாதாரணமாக தாய்க்கு ஆறு மாதம் வரை தினமும் 750 ml பால் சுரக்கும் , ஆதற்கு பிறகு 500-600 ml பால் சுரக்கும் . இரண்டு வயது வரை பால் தந்தால் நல்லது


Click here to bookmark this link.Channel Image11:17 டான்சில் என்பது ஒரு தேவையற்ற கட்டி அல்ல குழந்தை நலம்
                                               TONSILLITIS

டான்சில் என்பது  ஒரு  தேவையற்ற  கட்டி அல்ல . அது  நமது  உடலில்  நோயை  எதிர்க்கும்  ஒரு  நின நீர்  சுரப்பி  ஆகும் . நமது  உடலில்  கிருமிகள்  நுழையாமல்  தடுக்கிறது .

டான்சில்  என்பது  தொண்டையில்  உள்ள  இரு  உருண்டையான  திசு தொகுப்பு ஆகும் . இது  வீங்கினால்  வருவதே  டானசிலிடிஸ் எனபடுகிறது .

காரணங்கள்   :
     நீர் , உணவு , காற்று மூலம்   வரும்  பாக்டீரியா, வைரஸ்  முதலிய  நுண் உயிரிகளால்  ஏற்படுகிறது .

அறிகுறிகள் :
அடிக்கடி வரும்  ஜுரம்
தொண்டை வலி
காது வலி
வாய் துர் நாற்றம்
விழுங்குவதில்  சிரமம்
குரலில்  ஒரு கரகரப்பு
கழுத்தில் நெறி கட்டி
வயிறு வலி

 மருத்துவம் : 
         அறுவை சிகிச்சையை  முடிந்த  வரை  தவிர்ப்பது   நல்லது . சுத்தமான  நீர் , உணவு  அருந்தவேண்டும் .
மருந்துகளை  தொடர்ந்து  மருத்துவர் ஆலோசனை படி சாப்பிட     வேண்டும்  
திரவ  உணவுகள்  மட்டும் தரவேண்டும்
வெது வெதுப்பான  உணவுகள்  தேரவேண்டும் , சூடான & குளிர்ச்சியான பொருள்கள்  தரகூடாது
வெநிரில் உப்பு போட்டு  வாய் கொப்புளிக்க  வேண்டும்

அறுவை சிகிச்சை  எப்போது ?
இதை கடைசி  வாய்ப்பாக  செய்யவேண்டும் , ஏனெனில்  அப்பெண்ட்க்ஸ்  போல  இது ஒரு தேவை  அற்ற  உறுப்பு அல்ல . மாறாக  குழந்தையின்  எதிர்ப்பு சக்திக்கு  தேவையான  ஒன்று . 

  1 ஒரு வருடத்திற்குள்  ஆறு முறைக்கு  மேல்  டான்சில்  வீங்கி  ஜுரம் வந்தால் 
   2 quinsy  என்ற  சீழ்  கட்டி  வந்தால்
    3அடிக்கடி காதில் சீழ்  வடிந்தால்
   4 retension  cyst  எனப்படும் கட்டி  வந்தால்  

        அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்
 
Click here to bookmark this link.Channel Image11:17 குழந்தைகள் மூக்கில் ரத்தம் வடிதல் : குழந்தை நலம்
EPISTAXIS  IN CHILDREN : 
குழந்தைகள்  மூக்கில்  ரத்தம் வடிதல் :
         மூக்கில் ரத்தம் வடிவது  பொதுவாக  காணப்படும்  ஒரு  நிலை , ஆனால் பெற்றோரை   மிகவும் பயமுறுத்தும்  , ஆனால்  ஆபத்து  அற்ற  நிலை .


காரணங்கள் :

மூக்கை  நோண்டுதல் , கிள்ளி கொண்டே  இருத்தல்

 அடி படுதல்

ரத்தம்  உரையாத  தன்மை (haemophilia )

உலர்வான  சீதோஷ்ண  நிலைமை (winter )

 ADENOID  எனப்படும்  தொண்டை கட்டி

  அலர்ஜி

 SINUSITIS  சைனுசிடிஸ்

 குடும்ப வரலாறு
 
மருத்துவம் :

   பதட்டம்  அடைய  கூடாது


   மூக்கை சிந்தவே  கூடாது , அப்படி செய்தால்      ரத்தபோக்கு  அதிகரிக்குமே  தவிர  குறையாது


குழந்தையை  முன் புறமாக  சாய வைத்துகொள்ளுங்கள்


மூக்கை கட்டை விரல்  மற்றும்  ஆள் காட்டி விரலால்  நன்கு அழுத்தி  பிடிக்கவும் , இப்படி  பத்து நிமிடம் பிடித்தால் ரத்தம் நின்றுவிடும் .


 மூக்கு உலராமல் இருக்க  வாசலின் ஜெல் , சலைன்  சொட்டு  மருந்து இரவில் போட்டுவிடலாம் .




அடிக்கடி  ரத்தம் வந்தால் , மருத்துவரை  அணுகி  பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் .
Click here to bookmark this link.Channel Image11:17 குழந்தைகள் பார்வையை பாதுகாக்க : குழந்தை நலம்
CORRECT VISUAL HABITS FOR CHILDREN
 
படிக்கும் போதும் , டிவி  பார்க்கும் போதும்  நேராக  உட்கார்ந்தே  பார்க்க வேண்டும் , குப்புற படுத்தோ, மல்லாக்க  படுத்தோ பார்க்க கூடாது .

டிவி , கணினி  பார்க்கும் போது நேராக பார்க்க வேண்டும் , சாய்வான  கோணத்தில் பார்க்க கூடாது .

படிக்கும் போதும் ,கணினி பார்க்கும் போது, டிவி பார்க்கும் போதும்  அரை மணி நேரத்திற்கு  ஒரு முறை  அரை நொடி கண்களை மூடி  ஓய்வு  எடுக்கவேண்டும் .

சரியான அளவில்  வெளிச்சம்  இருக்க வேண்டும் , அதிகமான வெளிச்சத்தில் கண்களின் ரெட்டின பாதிப்படையும் , குறைவான வெளிச்சத்தில்  கருவிழி  தசைகள்  சோர்வடையும் . பொதுவாக  படிப்பதற்கு  குழல்  விளக்கை விட குண்டு பல்பு  சிறந்தது  என்று    ஒரு ஆய்வு  கூறுகிறது .

அதி காலையில் படிக்கும்  பழக்கத்தை  ஏற்படுத்த வேண்டும் , ஏன் எனில்  கண்கள்  புத்துணர்ச்சியுடன் இருக்கும் . நள்ளிரவில் படிக்கும் போது  கண் தசைகள் வலுவிழந்து  போகும். ( early to bed, early to rise)

வாகனத்தில்  போகும் போது  படிப்பதை தவிர்க்க வேண்டும் . கண்களுக்கு  அதிகபடியான  அழுத்தத்தை தரும் . ( விமானத்தில் படிக்கலாம் )
Click here to bookmark this link.Channel Image11:17 குழந்தைகளுக்கு டயாபர் உபயோகிக்கும் முறை : குழந்தை நலம்
குழந்தைகளுக்கு டயாபர் உபயோகிக்கும் முறை
மூன்று மணி நேரத்திற்கு  ஒரு முறை  மாற்றவேண்டும்


வீட்டில் உள்ளபோது  உபயோகிக்க வேண்டாம்


 வெளியில்  செல்லும் போதும் , பயணங்களின்  போதும் உபயோகிக்கலாம்


தொடர்ந்து மாற்றாமல்  இருந்தால்  டயாபர்  ரேஷ் எனப்படும்  allergy  ஏற்படும்


ஆண்  குழந்தைகளுக்கு  இறுக்கமாக  போடகூடாது , இதனால் விரைப்பையின் வெப்பநிலை உயர்ந்து  பின்  நாட்களில் விந்து அணு  குறைபாடு  ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது .


துணி  diaper  சிறந்தது  என  ஆய்வு  அறிக்கை  தெரிவிக்கிறது . எனவே   வீட்டிலேயே   சுத்தமான  புது  துணியை  பயன்படுத்தலாம் .


துணியை   துவைத்தபின்   டெட்டோல் போன்ற  கிருமி  நாசினிகளை  உபயோகித்தால் குழந்தைகளுக்கு  அலர்ஜி  ஏற்படக்கூடும் .
Click here to bookmark this link.Channel Image11:17 குழந்தைகளுக்கு வரும் வாய் புண் மற்றும் துர் நாற்றம் குழந்தை நலம்

 குழந்தைகளுக்கு  வரும் வாய் புண்   மற்றும்  துர் நாற்றம் :

       ஒரு வயதுக்குள்  உள்ள குழந்தைகளுக்கு  பாட்டிலில் பால் தருவதாலும் , சுத்தம் இல்லாததாலும்  வாயில்  வெள்ளை நிறத்தில்  ஆடை படிவது போல் காணப்படும்(ORAL  THRUSH ) , இது  பூஞ்சை  காளான் ( CANDIDA ) வளருவதால்  ஏற்படும் .  இதற்கு  தக்க  மருந்தை  உபயோகிக்க  குணம்  தெரியும் . candid mouth paint  என்ற மருந்தை  தடவவேண்டும்


    


 வளர்ந்த  குழந்தைகளுக்கு   மன  அழுத்தம் , வைட்டமின் சத்து  குறைபாடு ( விட் சி, விட் பி ) முதலிய  வற்றால் வாய் புண்  வருகிறது .




வாய் துர் நாற்றம்  வர காரணங்கள் :(halitosis)
     பல் சொத்தை ,
     ஈறு வீக்கம் ,
     வாய் புண்
     குடல் புழுக்கள்
     நுரையீரல் கிருமிகள்  தாக்கம் (LUNG ABSCESS ) 
    ஜீரண கோளறு










தடுக்கும் வழிகள் :
   தினமும்  இரண்டு வேளை  பல் துலக்க வேண்டும்

   ஆறு மதத்திற்கு ஒரு முறை  பூச்சி மருந்து தரவேண்டும்

   வைட்டமின் நிறைந்த உணவுகள்  தரவேண்டும்

   மன அழுத்தம் வராமல்  பார்த்துகொள வேண்டும் .
Click here to bookmark this link.Channel Image11:17 குழந்தைகளுக்கு வரும் வளர்ச்சி வலி குழந்தை நலம்
 GROWING PAIN/ GROWTH PAIN





                                
         குழந்தைகளுக்கு  வரும்  வளர்ச்சி வலி

வளரும்  குழந்தைகள்  பெரும்பாலும்  இரவு நேரத்தில்  கால்  வலிப்பதாக கூற  கேட்டு இருக்கலாம் , இதற்கு  " வளர்ச்சி  வலி " என்று பெயர்

இது பொதுவாக  3 -5  மற்றும் 8 -12  ஆகிய  வயதினரை  அதிகம்  பாதிக்கும்
, ஏன் என்றால்  இந்த குழந்தைகளுக்கு  வளர்ச்சி  மிக வேகமாக  இருக்கும்

இரவில் வரும் இந்த வலி  கால்களை  , குறிப்பாக தொடையின்  முன்புறம் , கெண்டை கால் , முழங்கால்  ஆகியவற்றில்  இருக்கும் .

வலி- எலும்பு  மற்றும்  மூட்டில் இருந்து வருவது அல்ல , மாறாக  தசையில்  இருந்தே  வருகிறது . பகலில்  அதிகமாக  ஓடி , ஆடி  விளையாடுவதாலும்  , காலுக்கு செல்லும்  அதிக  ரத்த ஓட்டத்தினாலும்  வலி வருகிறது

மருத்துவம் :
  பொதுவாக  மருத்துவம்  தேவை இல்லை
  வெந்நீர் ஒத்தடம்  தரலாம்

  மசாஜ்  செய்யலாம்
  உடற்பயிற்சி  - கால்களை  நீட்டி  ஸ்ட்ரெச்  செய்ய வேண்டும்

   பாரசிடமால், ப்ருபென் மாத்திரைகளை  மருத்துவர்  ஆலோசனையின் பேரில்  தரலாம்

சுரம்  மற்றும்  மூட்டு வீங்கினலோ , சிவந்து  போனாலோ  மருத்துவரை  உடன் அணுகவும் .
 (ஆங்கிலத்தில்  படிக்க இங்கே  சொடுக்கவும்)
http://babyclinik.blogspot.com/2010/08/growth-pain-growing-pains.html
Click here to bookmark this link.Channel Image11:17 குழந்தைகளுக்கு வரும் காது வலி : குழந்தை நலம்

குழந்தைகளுக்கு  வரும்  காது வலி :

        காது வலி வர  முக்கியமான  காரணம்  சளி பிடிப்பதும் , பாட்டில்  பால் தருவதும் ஆகும் .  வலி  வந்தால்  குழந்தை விடாமல் அழுது  கொண்டே  இருக்கும் . காது மடலை  தொட்டால்  வலி அதிகமாகும் . 


மூக்கை   சிந்துவதால்  காதின் உள்ளே  அழுத்தம்  அதிகரிப்பதால்  காது வலி  அதிகமாகும் . எனவே  சிந்தாமல்  துடைத்துவிட  வேண்டும் .


காதுக்கு  பட்ஸ்  போடவே  கூடாது . அப்படி செய்தால்  வெளியே உள்ள  அழுக்கு  உள்ளே தள்ள படுமே  தவிர  வெளியே  வராது. பஞ்சை  கொண்டு  விளக்கு திரி போல திரித்து  துடைத்து  எடுக்க வேண்டும் .



தாய்ப்பால் படுத்து கொண்டு   தரக்கூடாது , குழந்தையின்   தொண்டைக்கும்  நடு காதிற்கும் (middle ear ) உள்ள இணைப்பு(Eustachian  tube ) வழியே பால் உள்ளே சென்று  சீழ்  பிடிக்கும் . அதே போல் புட்டி பால் கொடுத்தாலும்  காதில்  சீழ்  பிடிக்கும் .


http://www.doctorrajmohan.blogspot.com/
மூக்கு அடைப்பு  இருந்தாலும் காது வலி வரலாம் , எனவே மூக்கு சொட்டு மருந்து  போட்டு கொள்ள வேண்டும் .
Click here to bookmark this link.Channel Image11:17 குழந்தைகளின் கண் பொங்குவது ஏன்? குழந்தை நலம்
 குழந்தைகளின் கண் பொங்குவது ஏன்?
(EYE  DISCHARGE DUE TO NASOLACRIMAL DUCT OBSTRUCTION)


பிறந்த குழந்தை , ஒரு வயதிற்கு  குறைவான  குழந்தைகளுக்கு  கண் பொங்குதல்  என்பது  அடிக்கடி வரும் ஒரு நிலை . சூட்டினால்  இது வருகிறது  என்று  தேவை இல்லாத  சில வைத்திய  முறைகளை  பெற்றோர்  செய்வார்கள் ( தாய்ப்பால்  கண்ணில்  விடுவது , எண்ணெய் தேய்த்து  குளிபாட்டுவது)


ஆனால்  இதற்க்கான  காரணம் NLD (NASOLACRIMAL  DUCT  OBSTRUCTION )  எனப்படும்  அடைப்பு ஆகும் .


சாதரணமாக நம் எல்லோருக்கும்   கண்ணுக்கும்  மூகிற்க்கும் ஒரு இணைப்பு  உள்ளது . கண்ணீர் இதன் வழியே  மூக்கின்  உள்ளே  வடிந்துவிடும் . பிறந்த  குழந்தைக்கு  இந்த இணைப்பு  சரியாக  வளர்ச்சி அடையாமல் இருந்தாலோ , அடைப்பு ஏற்பட்டு இருந்தாலோ  கண்ணில் நீர்  வடிவத்துடன்   இமைகள் பிரிக்கமுடியாமல்  மூடவும்  வாய்ப்பு உண்டு .


மருத்துவம் :  NLD  MASSAGING :


    மசாஜ்  செய்வதன் மூலம்  இதனை  சரி செய்யலாம் . ஒரு நாளைக்கு  ஆறு முதல் எட்டு  தடவை  C வடிவத்தில்  கண்ணிற்கும்  மூக்குக்கும்  இடையே  மசாஜ்  செய்யவேண்டும் .


மருத்துவர் ஆலோசனை படி கண் சொட்டு மருந்து  போட்டு வரவேண்டும் .
தாய்ப்பால்  போடுதல் , எண்ணெய் தேய்த்து  குளிப்பாட்டுதல் கூடாது .
Click here to bookmark this link.Channel Image11:17 குழந்தைகளின் உயரம் & எடை குழந்தை நலம்

                          குழந்தைகளின்  உயரம்  & எடை  
          AGE (years)       MALE (HT)     FEMALE (HT)    MALE(WT)      FEMALE(WT)                 
   source: doctorrajmohan.blogspot.com

Click here to bookmark this link.Channel Image11:17 காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 குழந்தை நலம்
ப‌ன்றிக்காய்ச்சல் என்றழைக்கப்படும் காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என்று அழைக்கப்படுகிறது.


அதில் 3 வகை உள்ளது. இவை அனைத்தும் வைரஸ்களால் ஏற்படுகிறது. இந்த வைரஸ் தனது ஆர்.என்.ஏ. என்கிற உருவ அமைப்பை அடிக்கடி மாற்றிக்கொள்கிறது. அதனால் இது ஏ.பி.சி. என்று 3 வகைப்படுகிறது.



ஏ டைப் வைரஸ் தொற்றினால் லேசான காய்ச்சல் இருக்கும். சளி, இருமல் , தலைவலி, வயிற்றோட்டம் வாந்தி ஆகியவை இருக்கும். சிலருக்கு வயிற்றோட்டம் வாந்தி இருக்காது. இந்த நோய் வந்தவர்களை தனிமை படுத்தி சாதாரண வைரஸ் காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை அளித்தால் போதும். இவர்களுக்கு டாமிபுளு (ஒசல்டாமிவிர்) மாத்திரை கொடுக்கக்கூடாது. ஏன் என்றால் அவ்வாறு அந்த மாத்திரை கொடுத்தால் அது பின்விளைவை ஏற்படுத்தும்.


இவர்களுக்கு ஆய்வக பரிசோதனை தேவை இல்லை. வீட்டில் ஓய்வு எடுத்து கொள்ளும்படியும் மற்ற நபர்களிடம் தொடர்பை குறைத்துக் கொள்ளச் செய்ய வேண்டும்.


பி டைப் நோயாளிகளுக்கு ஏ டைப் நோயாளிகளுக்கு இருந்த அனைத்து அறிகுறிகளுடன் காய்ச்சல் அதிகமாக இருக்கும். தொண்டை வலி அதிகமாக இருக்கும். இவர்களுக்கும் ஆய்வக பரிசோதனை தேவை இல்லை. ஆனால் பிடைப் நோயாளிகளுக்கு உடனடியாக டாமி புளு மாத்திரை கொடுக்கவேண்டும்.



சி டைப் நோயாளிகளுக்கு பி டைப் நோயாளிகளுக்கு இருந்த அறிகுறி தவிர வழக்கத்தை விட அதிக மூச்சுத்திணறல் ஏற்படும். ரத்தத்துடன் கலந்த சளிவரும். நகம் நீல நிறமாக மாறும். சாப்பிட மனம் வராது. பசி எடுக்காது. உடனே ஆய்வக பரிசோதனை செய்து மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்பட வேண்டும். டாமி புளு மாத்திரை சாப்பிடவேண்டும்


பன்றிக்காய்ச்சலை பரப்பும் வைரஸ் கைகுட்டையில் 12 மணிநேரமும், கைளில் 5 நிமிடமும், குளிர்ந்த தண்ணீரில் 30 நாட்களும் உயிர்வாழக்கூடியது . மேலும் இந்த வைரஸ் பரவாமல் இருக்க இருமும்போதும், தும்மும் போதும் மற்றவர்களுக்கு குறைந்தது 4 அடி இடைவெளி இருக்க வேண்டும்


பன்றி காய்ச்சல் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு 'ஒசல்டமிவிர்', 'ஜானமிவிர்' ஆகிய மருந்துகளை அளிக்க வேண்டும். ஒசல்டமிவிர் கிடைக்காவிட்டால், ஜானமிவிர் மருந்தை கொடுக்கலாம்.

இந்த மருந்துகள் மரணத்தை ஏற்படுத்தும் நிமோனியாவை கட்டுப்படுத்துகிறது.

பன்றி காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்படாத நபர்களுக்கு இந்த வைரஸ் தடுப்பு மருந்துகளை அளிக்கக்கூடாது. 5 வயதுக்கு மேற்பட்ட ஆரோக்கியமான குழந்தைகளுக்கு கூட, அவர்கள் கடுமையாக பாதிக்கப்படாத நிலையில் இந்த மருந்துகளை கொடுக்க வேண்டிய தேவை இல்லை.

மூச்சுத்திணறல், நெஞ்சு வலி, 3 நாட்களுக்கு மேல் நீடிக்கும் காய்ச்சல் போன்ற பன்றி காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

\

குழந்தைகள் வேகமாகவோ, சிரமப்பட்டோ மூச்சு விடுதல், சுறுசுறுப்பு இல்லாமை, படுக்கையை விட்டு எழுவதில் சிரமம், விளையாடுவதில் ஆர்வம் இன்மை ஆகியவற்றுடன் காணப்பட்டுவதும் பன்றி காய்ச்சலுக்கான அறிகுறிகளாம்.

பன்றிக் காய்ச்சலுக்குப் பயன்படுத்தப்படும் டாமிபுளு மாத்திரைகளை, மரு‌த்துவ‌ர்க‌ளி‌ன் அ‌றிவுறு‌த்த‌ல் இ‌‌ல்லாம‌ல், முறையின்றி உட்கொண்டால் மோசமான ‌பி‌ன் விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

இந்தியா போன்ற நாடுகளில் பன்றிக் காய்ச்சலுக்கான டாமிபுளு மாத்திரைகளை, பொதும‌க்க‌ள், மரு‌த்துவ‌ர்க‌ள் ஆலோசனையின்றி பயன்படுத்துவதாகவும், முறைப்படி ஐந்து நாட்கள் உட்கொள்ளாமல் இடையில் நிறுத்தி விடுவதாகவும் உலக சுகாதார அமைப்புக்கு (டபிள்யூ.எச்.ஓ) புகார்கள் வந்தன.

இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தொற்று நோய் கட்டுப்பாடு மையத்தின் நிபுணர்கள் கூறுகை‌யி‌ல், "டாமி புளு மருந்துகளை முறையின்றி பயன்படுத்தினால் மருந்தின் சக்தியை எச்1என்1 வைரஸ் தடுத்து நிறுத்தி மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.
டாமி புளு தனது சக்தியை இழக்க நேரிடும். எனவே மரு‌த்துவ‌ர்க‌ள் பரிந்துரைப்படியே மருந்துகளை உட்கொள்ள வேண்டும் எ‌ன்று எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளா‌ர்.

எனவே, பொதும‌க்க‌ள் யாரு‌ம், சாதாரண கா‌ய்‌ச்சலு‌க்காகவோ, ச‌ளி‌க்காகவோ மரு‌த்துவ ப‌ரிசோதனை இ‌ன்‌றி டா‌‌மி புளு மா‌த்‌திரைகளை‌ப் போட வே‌ண்டா‌ம். உட‌ல் நல‌ப் பா‌தி‌ப்பு ஏ‌ற்ப‌ட்டா‌ல் உ‌ரிய மரு‌‌த்துவரை அணு‌கி, அவரது ப‌ரி‌ந்துரை‌யி‌ன் படி ‌சி‌கி‌ச்சை மே‌ற்கொ‌ள்வது ந‌ல்லது.

மேலு‌ம், ப‌ன்‌றி‌க் கா‌ய்‌ச்ச‌ல் பா‌தி‌ப்பு‌க்கு‌ள்ளானவ‌ர்க‌ள், பய‌ந்தோ, அ‌றியாமையாலோ ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் முட‌ங்‌கி இரு‌க்காம‌ல், தகு‌ந்த மரு‌த்துவமனை‌யி‌ல் உடனடியாக ‌சி‌கி‌ச்சை பெ‌ற்று குணமடையலா‌ம். ப‌ன்‌றி‌க் கா‌ய்‌ச்ச‌ல் நோ‌ய்‌க்கு உடனடியாக உ‌ரிய ‌‌சி‌கி‌ச்சை மே‌ற்கொ‌ண்டா‌ல் ‌நி‌ச்சயமாக பூரண குணமடையலா‌ம்.

ஒருவ‌ரிட‌ம் இரு‌ந்து ஒருவரு‌க்கு ப‌ன்‌றி‌க் கா‌ய்‌ச்ச‌ல் பரவுவதை‌த் தடு‌க்க நாமு‌ம் ந‌ம்மை சு‌த்தமாக வை‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம். து‌ம்‌மிய‌ப் ‌பிறகோ, இரு‌‌மிய‌ப் ‌பிறகோ நமது கைகளை சு‌த்தமாக கழுவ வே‌ண்டு‌ம். வெ‌ளி‌யி‌ல் செ‌ன்று‌வி‌ட்டு வ‌ந்தது‌ம் கை, கா‌ல்களை ந‌ன்கு கழு‌வி, ‌பி‌ன்ன‌ர் முக‌த்தையு‌ம் கழுவ வே‌ண்டு‌ம்.

பன்றி காய்ச்சல் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? என்னென்ன செய்யக்கூடாது? என்பது பற்றிய சில யோசனைகளை பொது ம‌க்களு‌க்கு மத்திய அரசு தெரிவித்து உள்ளது. அதனை ‌பி‌ன்ப‌ற்‌றி ப‌ன்‌றி‌க் கா‌ய்‌ச்ச‌ல் பரவுவதை தடு‌ப்போ‌ம்.

சுகாதாரமாக வாழு‌ங்க‌ள்


தினமு‌ம் குறை‌ந்தப‌ட்ச‌ம் ஒரு வேளை சு‌த்தமான ‌நீ‌ரி‌ல் கு‌ளியு‌ங்க‌ள். நோய்க்கிருமி எதிர்ப்பு சக்தி கொண்ட சோப்பை‌க் கொ‌ண்டு அடிக்கடி கைகளை கழுவுங்கள். குழாய் தண்ணீரில் குறைந்த பட்சம் 15 வினாடிகள் கைகளை அலசுங்கள்.

வெ‌ளி‌யி‌ல் செ‌ன்று ‌வி‌ட்டு வ‌ந்தது‌ம் கை‌, கா‌ல், முக‌ம், கழு‌த்து‌ப் பகு‌திகளை சு‌த்தமான த‌ண்‌ணீரா‌ல் ந‌ன்கு கழுவு‌ங்க‌ள்.

இரவில் குறைந்த பட்சம் 8 மணி நேரம் நன்றாக தூங்க வேண்டும். உட‌ல் ஆரோ‌க்‌கிய‌த்‌தி‌ற்கு உற‌க்க‌ம் அவ‌சிய‌ம்.

ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8 முதல் 10 தம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

சத்தான உணவு வகைகளை சாப்பிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள். இதற்கு தானிய வகைகள், பசுமையான காய்கறிகள், வைட்டமின் சத்துக்கள் நிறைந்த பழங்கள் சாப்பிடுங்கள்.

மது அருந்த வே‌ண்டா‌ம்


மது அருந்தினால் உடலில் நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி குறையு‌ம். இதனா‌ல் பன்றி காய்ச்சல் போ‌ன்ற நோய்க்கிருமிக‌ள் உடலு‌க்கு‌ள் எ‌ளிதாக ஊடுருவு‌ம் எ‌ன்பதா‌ல் மது அருந்துவதை தவிர்த்து விடுங்கள்.

மிதமான உடற்பயிற்சி உடலில் ஆக்சிஜனின் அளவை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் என்பதால், தினசரி 30 முதல் 40 நிமிடம் வேகமான நடை‌ப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருங்கள்.

இருமுவதன் மூலமும், தும்முவதன் மூலமும் பன்றி காய்ச்சல் நோய்க்கிருமி ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் என்பதால், நோய் பாதிப்பு உள்ளவர்களிடம் இருந்து விலகி இருங்கள். உடல் ரீதியாகவும் தொடர்பு வைத்துக் கொள்ளாதீர்கள்.

வெ‌ளி‌யி‌ல் செ‌ல்வதை த‌விரு‌ங்க‌ள்

தேவை இல்லாமல் வெளியில் செல்வதையும், கூட்டம் உள்ள இடங்களுக்கு செல்வதையும் தவிருங்கள். கண்கள், மூக்கு, வாய் மூலம் நோய்க்கிருமிகள் உடலுக்குள் செல்லும் என்பதால் அவ‌ற்றை தொடுவதையும் தவிருங்கள்.


வேறு எ‌ந்த‌க் காரண‌த்‌தி‌ற்காகவு‌ம் குழ‌ந்தைகளை மரு‌த்துவமனை‌க்கு அழை‌த்து வரா‌தீ‌ர்க‌ள்.

குழ‌ந்தைகளை வெ‌ளி‌யி‌ல் கொ‌ண்டு செ‌ல்வதை‌த் த‌விரு‌ங்க‌ள்.

வெ‌ளி‌யி‌ல் செ‌ன்று‌வி‌ட்டு ‌வீ‌ட்டி‌ற்கு வ‌ந்தது‌ம் குழ‌ந்தைகளை‌த் தூ‌க்கா‌தீ‌ர்‌க‌ள். உடனடியாக உடலை சு‌த்த‌ம் செ‌ய்த ‌பி‌ன்னரே அடு‌த்த வேலையை‌த் துவ‌க்கு‌ங்கள‌்.
Click here to bookmark this link.Channel Image11:17 உலக தாய்ப்பால் வாரம் அகஸ்ட் 1 -7 ,தாய் பாலால் தாய்க்கும் பல நன்மைகள் குழந்தை நலம்
உலக  தாய்ப்பால்  வாரம்  அகஸ்ட்  1 -7  வரை  கொண்டாட  படுகிறது . தாய்ப்பாலின் அருமைகளை  விளக்கவே இந்த  விழா கொண்டாட படுகிறது .
உலக தாய்ப்பால் வாரம் அகஸ்ட் 1 -7




#குழந்தை பிறந்த அரை மணி நேரத்திற்குள் தாய்ப்பால் தரவேண்டும் , அறுவை சிகிச்சையில் பிறந்த பின் இரண்டு மணி நேரத்திற்குள் தரவேண்டும் , நேரம் கடந்து தந்தால் பால் சுரப்பது குறைய ஆரம்பிக்கும் .


முதல் இரண்டு மூன்று நாட்களில் சுரக்கும் பால் சீம்பால் எனப்படும் . இது குழந்தைக்கு ஒரு அரு மருந்து . ஒரு தாய் தன் குழந்தைக்கு தரும் சீதனமே இந்த சீம்பால் ஆகும் .குழந்தைக்கு  போடும் முதல் தடுப்பு மருந்து என்றும்  இதை சொல்லலாம் .

இதில் அதிகமாக புரத சத்தும் , நோய் எதிர்ப்பு சத்துக்களும் உள்ளன . விட்டமின்கள் அதிகமாகவும் , எளிதில் செரிமானம் ஆககூடியதும் ஆகும் .



எனவே ஒரு துளி கூட வீணாக்காமல் சீம்பால் தரவேண்டும் .



குழந்தை பிறந்த முதல் இரண்டு வாரம் தனது எடையில் பத்து சதவிகிதம் குறையும் . இது இயல்பானதே , மூன்றாம் வாரத்தில் இருந்தே எடை கூட ஆரம்பிக்கும்


குழந்தைக்கு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை தாய்ப்பால் தரவேண்டும் .

எடை குறைவான குழந்தைக்கு ஒன்றரை மணி நேரத்திற்கு ஒரு முறை தாய்ப்பால் தரலாம் .



சாதாரணமாக தாய்க்கு ஆறு மாதம் வரை தினமும் 750 ml பால் சுரக்கும் , ஆதற்கு பிறகு 500-600 ml பால் சுரக்கும் . இரண்டு வயது வரை பால் தந்தால் நல்லது.

பால் கொடுப்பதால் தாய்க்கு  மார்பு புற்றுநோய்  , ஓவரி  புற்றுநோய்   வராமல்  தடுக்கப்படும் .

பிறந்த  ஒரு மணி நேரத்திற்குள்  பால் கொடுத்தால் தாய்க்கு  உதிரபோக்கு  குறையும் . ஏனெனில்  பால்  குடிக்கும் போது  oxytocin  என்ற  ஹோர்மோன்  சுரப்பதால்  அது கர்பப்பையை  சுருங்க செய்து  ரத்தபோக்கை குறைக்கும் .

தொடர்ந்து  ஆறு மாதம் தாய்ப்பால் மட்டுமே கொடுத்து  வந்தால்  மாதவிடாய் தள்ளிபோடபடும்  , இதன் முலம்  அடுத்த பிரசவத்தை தடுக்கமுடியும் .

தாய் பாலால்  தாய்க்கும் பல நன்மைகள்  உண்டு . எனவே தவறாமல் தாய்ப்பால் தரவேண்டும்.

குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்களுக்கு தாய் பால் மட்டுமே தரவேண்டும்


தண்ணீர் கூட தர தேவை இல்லை ( கோடையில் கூட ) ஏனென்றால் பாலில் 88 % நீர் உள்ளது .

ஆறு மாதங்களுக்கு பிறகு பாலுடன் இணை உணவு தரவேண்டும்

தாய் பால்இரண்டு வயது வரை தர வேண்டும் .

குழந்தைக்கு ஏற்படும் நன்மைகள்

குழந்தை பிறந்தவுடன் தாய்க்கு முதலில் சுரக்கும் பால் சீம்பால் எனப்படும் . இது அளவில் குறைவாக , மஞ்சள் நிறத்தில் இருக்கும் . குழந்தைக்கு தாய் தரும் முதல் தடுப்பு மருந்து சீம்பால் ஆகும் . எனவே முதல் 3-4 நாட்கள் சீம்பால் மட்டும் தர வேண்டும் .

( கழுதைப்பால் , சீனிதண்ணி, சர்க்கரை ஆகிய பொருள்களை பிறந்தவுடன் தரும் பழக்கம் சில இடங்களில் உள்ளது , இது தவறான பழக்கம் .)

பால் பரிசுத்தமானது , எனவே பிறந்தவுடன் சுத்தமான உணவு தாய்ப்பால் மட்டுமே .

பாலில் நோய் எதிர்ப்பு சக்தி தர நிறைய பொருள்கள் உள்ளன .(secretary IgA, Macrophages,Lymphocytes,Lactoferrin, Lysozyme, Bifidus factor,Interferon) எனவே வயிற்றுபோக்கு , சளி முதலிய வியாதிகள் வராமல் தடுக்கும் .

பால் இயற்கையானது எனவே எளிதில் செரிக்கும் .

குழந்தையின் மூளை வளர்ச்சி முதல் இரண்டு வருடங்களில் மிக வேகமாக இருக்கும். அதற்க்கு தேவையான CYSTIENE ,TAURINE ஆகிய சத்துக்கள் தாய்பாலில் சரியான அளவில் உள்ளன . ( கன்றுகுட்டி பிறந்தவுடன் துள்ளி ஓடும் , ஆனால் மனித குழந்தை தத்தி நடக்க ஒரு வருடம் ஆகிறது . ) தாய் பால் மட்டுமே சரியான ஊட்டசத்தை சரியான நேரத்தில் தரும்
Click here to bookmark this link.Channel Image11:17 உங்கள் குழந்தையின் உயரத்தை கணிக்க : குழந்தை நலம்
உங்கள் குழந்தையின்  உயரத்தை கணிக்க :

வளர்ந்த பின் உங்கள் குழந்தை  எவ்வளவு  உயரம் இருக்கும் என்பதை  சில முறைகள் மூலம்  முன் கூட்டியே சொல்லமுடியும் ,



பெண் குழந்தை ஒன்றரை  வயதில் உள்ள உயரத்தை போல்  இரு மடங்காகும்



ஆண் குழந்தை  இரண்டு வயதில்  உள்ள உயரத்தை  போல் இரு மடங்காகும்
                                                   (அல்லது)

மூன்று வயது மூடியும் போது உள்ள உயரத்தை 1 .37  என்ற  எண்ணால்  பெருக்கினால் வரும் .


                                        (அல்லது  )



weech  formula :
    predicting adult height(male)= o.545x(height at 3 years)+ 0.544(mid parental height) +38 cms

     predicting adult height(female)= o.545x(height at 3 years)+ 0.544(mid parental height) +26 cms



midparental height   என்பது பெற்றோரின்  சராசரி  உயரம் ( அப்பா 160 , அம்மா  140  எனில் mph  150  ஆகும் )



உங்கள் குழந்தை மூன்று வயது உள்ளபோதே  அதன் வரும்கால  உயரத்தை  கணக்கிடமுடியும் .
Click here to bookmark this link.Channel Image11:17 இரத்த சோகை குழந்தை நலம்
இரத்த சோகை


இரத்த சோகை  என்பது  ரத்தத்தில் சிவப்பு  அணு  குறைவது  , சிவப்பு அணுவில்  ஹீமோ க்லோபின்  குறைவது  அல்லது  இரண்டும்  குறைவது ஆகும் .

சிவப்பணு  அளவு :
ஆண் : 4.5--6 million/cubic mm
பெண் :4.0-5.5 million/cubic mm

ஹீமோக்ளோபின் :
ஆண் :13-18 gram/dl
பெண் : 11.5-16.5 gram/dl


அறிகுறிகள்

1.  களைப்பு, எடைக்குறைவு பசியின்மை.


2. கண்கள், உதடுகள், நகங்கள், நாக்கு வெளுத்துப்போதல்


3. வாய்ப்புண்,

4. சோர்வு,


5. மேல் மூச்சு வாங்குதல்.


6. கால், முகம் வீக்கம்.


7. மயக்கம், தலைசுற்றல்.


8. மஞ்சள் காமாலை.


9. வயிற்றுவலி.


10. வியர்த்துக் கொட்டுதல்.


11. மயக்கமுடன் வாந்தி.


12. புண்கள் ஆறாமல் இருத்தல்.


13. அடிக்கடி உடல் நலம் குறைதல்.


14. விழுங்குதில் சிரமம்.


15. காரணமற்ற தலைவலி.


16. படபடப்பு


17. கை, கால் குடைச்சல்.


18. குழப்பமான மனநிலை.


இரத்த பரிசோதனைகள் :


1. இரத்ததில் சிகப்பணுக்களின் எண்ணிக்கை ( RBC Count )


2. இரத்த சிகப்பணுக்களின் Hb யின் அளவு.


3. இரத்தத்தில் இரும்புச் சத்தின் அளவு


காரணங்கள் :
1. இரத்த சிகப்பணுக்கள் உற்பத்தி திறனில் குறைபாடு காரணமாக


2. இரத்தின் உள்ள இரும்புச் சத்து குறைவினால் உண்டாவது.


3. உணவில் Vitamin B12 Folic Acid பற்றாக்குறைவால் மற்றும் சத்துக் குறைவினால் உண்டாகும் இரத்த சோகை.


4. இரத்த இழப்பினால் உண்டாகும் இரத்த சோகை ..

மருத்துவம் :

# அயன் , போலிக்  அசிட்  மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனை  படி சாப்பிடவேண்டும்.

# உணவுகள் :

தானியம் - கம்பு , ராகி , எள்ளு , சோயா

கீரை - பசலை , புதின , புளிச்ச கீரை , கொத்தமல்லி

காய்-- முருங்கை , பீற்கை , சுண்டைகாய், பாகற்காய்

பழம் - பேரிச்சம் , சப்போட்ட, நாவல் , திராட்சை


மற்றும்  நாட்டு வெல்லத்தில் அதிக அளவு  இரும்பு  சத்து உள்ளது.
Click here to bookmark this link.Channel Image11:17 appendicitis குழந்தை நலம்

உடலில் பயனற்ற ஒரு உறுப்பாகவும், பல நேரங்களில் தொல்லை கொடுக்கும் ஒரு உறுப்பாகவும் குடல் வால் (Appendix) உள்ளது.


அந்த உறுப்பில் உண்டாகும் அழற்சியும், அதன் விளைவுகளும் பற்றி காண்போம்.

நம் உடலில் குடல் பகுதி, சிறுகுடல், பெருங்குடல் என இரண்டு பகுதிகளாக பிரிந்துள்ளன.
சிறுகுடல் நாம் உண்ணும் உணவில் உள்ள அனைத்துச் சத்துப் பொருள்களையும், உறிஞ்சும் தன்மை உடையது. சத்துக்கள் உறிஞ்சப்பட்ட உணவின் மிச்சங்கள் சக்கையாக்கப்பட்டு மலமாக மாறி பெருங்குடலில் சேர்ந்து வெளியேற்றப்படுகின்றன. இந்த சிறுகுடல், பெருங்குடலோடு இணையும் பகுதியில், வால் போன்று ஒரு உறுப்பு இருக்கும். இதையே, குடல் வால் (Appendix) என்கிறோம்.

அப்பெண்டிக்ஸ் என்ற சொல்லுக்கு இணைப்பு என்று பொருள். குடலோடு இணைந்த இந்த உறுப்புக்கும் அப்பெண்டிக்ஸ் என்றே பெயர். இனி அதில் ஏற்படும் அழற்சி பற்றி காண்போம்.


வகைகள் :

திடீர் குடல்வால் அழற்சி (Acute Appendicitis) என்றும்,
நாள்பட்ட குடல்வால் அழற்சி (Chronic Appendicits) என்றும் இரண்டு வகைப்படும்.


திடீர் குடல் வால் அழற்சிஇந்நோய் இருபாலருக்கும் வரும். பொதுவாக எந்த வயதில் வேண்டுமானாலும் வரக்கூடியதாக இருப்பினும், பெரும்பாலும் இளைஞர்களுக்கும், சிறு வயதுக்காரர்களுக்குமே அதிக அளவு வருகிறது. இந்நோய் எதனால் உண்டாகிறது என உறுதியாகக் கூறமுடியாவிட்டாலும், மலம் கெட்டிப்பட்டு குடல்வால் உள் புகுந்து, அதை அடைத்துக் கொள்வதால், அந்த இடத்தில் நோய்த் தொற்றும் (Infection) அழற்சியும் (Inflammation) உண்டாகலாம். அல்லது சில வகை வைரஸ்களால் இந்நோய் வரலாம்.



நோயின் அறிகுறிகள் :

வயிற்றில் வலி தோன்றும். இந்த வலி மிகவும் கடுதையாக இருக்கும், அடி வயிற்றின் (Iliac Regeion) வலது புறத்தில் கடுமையாக இருந்தாலும், தொப்புளைச் சுற்றியும், வயிற்றின் மற்ற பகுதிகளிலும் வலியை உணர முடியும்.

குமட்டலும், வாந்தியும் உண்டாகும்.
லேசாக காய்ச்சலோ அல்லது கடுமையான காய்ச்சலோ ஏற்படும்.
உடனடியாக நோயைக் கண்டுப்பிடிக்காமல் விடும் நிலையில், நோய் குடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவும். இந்நிலையில் கடுமையான வயிற்று வலி மேலும் கடுமையாகும். அடிவயிறுப் பகுதி மட்டுமல்லாது வலி முழுமையாக வயிறு முழுவதும் தெரியும்.

மருத்துவம் செய்யாமல் இந்த நிலையிலும் இருந்தால் நோய்த் தொற்று பரவி, வயிற்றுப் பை அழற்சி (Peritionitis)யை ஏற்படுத்தும். இந்த நிலையிலும் மருத்துவம் செய்யாமல் விட்டால், நோயின் கடுமை அதிகமாகி, குடல் வால் வெடித்து, உயிருக்கே ஆபத்தை உண்டாக்கும்.


:நோயறிதல்:

இந்நோய் பெரும்பாலும் வலி உண்டாகும் இடம், வலியின் தன்மை வாந்தி போன்ற அறிகுறிகளாலேயே அறிப்படுகிறது. சில நேரங்களில் அறிகுறிகள் முழுமையாகத் தெரியாமல் குழப்பம் ஏற்படும். அதுபோன்ற சமயங்களில், ஒலி அலைப் பதிவு (Ultr Sonogram) மூலம் நோயறியலாம். இரத்த பரிசோதனையில், இரத்த வெள்ளணுக்கள் அதிகமாக இருக்கும் சிலருக்கு நோய் அறிகுறிகள் சரியாக தெரியாத நிலையில், குடல் நிணநீர் முடிச்சுகள் அழற்சி போன்றோ, பெண்களாக நோயாளிகள் இருப்பின் கருக்குழாய் அழற்சியாகவோ கூடத் தெரியலாம். ஆனால், ஒலி அலைப் பதிவின் மூலம் பெரும்பாலும் நோயைக் கண்டறிய முடியும்.நாள்பட்ட குடல் வால் அழற்சிசில நேரங்களில் அறுவை மருத்துவம் உடனே செய்ய இயலாத நோயாளிகளுக்கு மருத்துவம் மருந்துகளை உட்செலுத்துவதன் மூலம் மேற்கொள்ளப்படும். அவ்வகை நோயாளிகளுக்கு நோயின் அறிகுறிகள் முழுமையாக மறைந்துவிடும். உடலின் எதிர்ப்புச் சக்தி குறைந்தாலோ அல்லது நோய் தொற்று ஏற்படும் பொழுதோ, நோயின் அறிகுறிகள் மீண்டும் தோன்றும். இந்த நிலை மீண்டும், மீண்டும் தோன்றும் பொழுது, திடீரென்று ஆபத்தான நிலைக்கு நோயாளி சென்றுவிடுவர். அதனால் வாய்ப்புக் கிடைக்கும் பொழுது, அறுவை மருத்துவம் மூலம் குடல் வாலை அகற்றி விடுவதே மிகவும் நல்லதாகும்.மருத்துவம்இந்நோய்க்கு பெரும்பாலும் அறுவை மருத்துவமே சிறந்தது. அடி வயிற்றின் வலதுபுறம் திறந்து, குடல் வால் முழுமையாக அகற்றப்படும். நவீன மருத்துவ யுகத்தில் லேப்ராஸ்கோப் (Laprascope) மூலம், வயிற்றில் சிறு துளையிட்டு, அதன் மூலம் குடல் வால் அகற்றம் (Appendicectomy) செய்யப்படுகிறது. நோயாளி உடனே வீட்டிற்கு திரும்பி விடலாம். சற்று மருத்துவச் செலவு அதிகமானாலும், பரவலாக இம்மருத்துவம் தற்சமயம் செய்யப்படுகிறது. சில நோயாளிகளுக்கு அறுவைச் மருத்துவம் செய்ய இயலாத நிலை ஏற்படும். அந்நோயாளிகளுக்கு நுண்ணுயிர் கொல்லிகள் (AntiBiotics) மூலம் மருத்துவம் செய்யலாம்.
Click here to bookmark this link.Channel Image11:17 TYPHOID FEVER IN CHILDREN .குடற் காய்ச்சல்; குடற் புண் காய்ச்சல்; நச்சுக் காய்ச்சல் குழந்தை நலம்
             TYPHOID  FEVER 
(குடற் காய்ச்சல்; குடற் புண் காய்ச்சல்; நச்சுக் காய்ச்சல் )



இது   SALMONELLA TYPHI  என்ற  நுண்  உயிரியால்  ஏற்படும்   ஒரு வியாதி ஆகும் . இது  மனிதர்களை மட்டுமே தாக்கும் .

எங்கு எல்லாம்  சுத்தம்  குறைவாக உள்ளதோ அங்கு எல்லாம் இந்த வியாதி வரும் .

குழந்தைகளுக்கு  பொதுவாக   1 -5 வயது வரை  எதிர்ப்பு சக்தி குறைவதால் வர வாய்ப்பு  அதிகம் .

INCUBATION PERIOD OF TYPHOID IS 7-14 DAYS

 அதாவது   அசுத்தமான  நீர் , உணவு ( பால் , ஐஸ்  கிரீம் , அரை வேக்காடு முட்டை , சாலட், மோர் ,)   சாப்பிட்ட    பின் ஒரு வாரத்தில் இருந்து  இரண்டு வாரங்களுக்குள்  இதன் அறிகுறி  தெரிய ஆரம்பிக்கும் .

அறிகுறிகள் :

ஒரு வாரத்திற்கு மேல்பட்ட  ஜுரம் . வைத்தியம்  செய்யவில்லை என்றால்   ஒரு  மாதம்        வரை ஜுரம் இருக்கும் .

முதல் வாரம்:
  ஜுரம் , உடல் வலி , குளிர் நடுக்கம் , 
மலசிக்கல்  அல்லது வயிற்று போக்கு  .
குறைந்த  இருதய துடிப்பு ( சாதாரணமாக  சுரம் வந்தால்  இருதய துடிப்பு அதிகமாகும் , ஆனால்  TYPHOID FEVER  வந்தால்  அந்த அளவு  அதிகரிக்காது.RELATIVE BRADYCARDIA ) 
நாக்கின்  மேலே வெள்ளை  நிறத்தில்  படிந்து இருக்கும் (TONGUE COATING)
ROSE SPOTS:சுரம் வந்த ஆறாவது  நாள்  உடலில் சிறு சிறு  சிகப்பு  புள்ளிகள் தோன்றும்

இரண்டாம் வாரம் :

மிகவும்  சோர்ந்த  நிலை ,
 வயிறு வலி , வயிறு உப்புதல் , மண் ஈரல்  வீக்கம்
WIDAL TEST POSITIVE .

(WIDAL TEST என்பது  டைபோய்ட்   சுரத்தை  கண்டுபிடிக்க உதவும்  ஆய்வக பரிசோதனை . இதனை  சுரம் ஆரம்பித்த  ஏழு  நாட்களுக்கு  பிறகே செய்ய  வேண்டும் . ஏழு நாட்களுக்கு  முன்பே செய்தால் நெகடிவ்  என்றே  வரும் .)

மூன்றாம் வாரம் :
மிகவும் மோசமான நிலை ,
எடை குறைவு , வேகமாக மூச்சு  விடுதல் ,
 வயிற்று வலி  அதிகமாதல், வயிற்றில் இரத்த கசிவு  ,
 குழப்பமான மன நிலை

நாலாவது  வாரம் :
  சிறுது சிறிதாக  உடல் நிலை   தேறும் . உடலில்  போதுமான எதிர்ப்பு சக்தி  இருந்தால்  பழையபடி  குணமாகலாம் .

COMPLICATIONS OF TYPHOID;

சரியான நேரத்தில்  கண்டுபிடித் வைத்தியம் செய்ய வில்லை என்றால் கீழே காணும்  மோச விளைவுகள்  ஏற்படலாம்

குடலில் ஓட்டை
கணைய அழற்சி
நிமோனியா
எலும்புகளில்  அழற்சி
விரை அழற்சி

உணவு முறை :
காரம் இல்லாத  எளிதில் செரிக்க  கூடிய  உணவை மட்டுமே  தரவேண்டும்
பட்டினி  போடவே கூடாது , வயிற்றில் உணவு இருந்தால் மட்டுமே  குடல் புண்  சீக்கிரம் ஆறும் .
நீர் சத்து உடலில் குறையாமல்  பார்த்துகொள வேண்டும் .

சரியாக  கண்டுபிடித்து  மருந்து சாப்பிட ஆரம்பித்தால்  நாலு  முதல் ஆறு நாட்களுக்குள் சுரம் குறைய ஆரம்பிக்கும் . அனாலும் சுரம் விட்ட பிறகு  அய்ந்து நாட்களுக்கு  ANTIBIOTIC  மருந்தை  சாப்பிட்டு  வர வேண்டும் .
வயிறு வலி வந்தால் உடனே  மருத்துவரை  பார்க்க வேண்டும் ( குடல் ஓட்டை )


தடுப்பு முறை :

கை சுத்தம் ,நீர்  சுத்தம் ,உணவு  சுத்தம் 

தடுப்பு ஊசி  :  இரண்டு வயதிற்கு மேல்  தடுப்பு ஊசி உள்ளது . இதை மூன்று வருடங்களுக்கு  ஒரு முறை போடவேண்டும் .
ஆறு வயதிற்கு  மேல் பட்ட குழந்தைகளுக்கு  வாய்  வழியே தரும்   CAPSULE  உள்ளது .
Click here to bookmark this link.Channel Image11:17 RABIES குழந்தை நலம்
ரேபிஸ் -என்பது மூளையைத்  தாக்கும்  ஒருவகை நுண்ணுயிரால் (வைரஸ்) ஏற்படும் நோயாகும்.


அது அதிகமாக நாய்கடியால் ஏற்பட்டாலும் எப்போதாவது அரிதாக பூனைகள், குரங்குகள், ஓநாய், நரி, குள்ள நரி மற்றும் கீரிகளலும் ஏற்படலாம்.
 ஆசியா மற்றும் ஆப்பி¡¢க்காவில் சுமார் 50,000 மக்கள் நாய்க்கடி நோயால் ஒவ்வோர் ஆண்டும் இறக்கிறார்கள். இதில் 20,000 முதல் 25,000 வரை 15 வயதுக்குட்பட்ட சிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.


இந்த நாய்க்கடியில் சுமார் 67% இந்தியாவில் ஏற்படுகிறது.


 இந்தியாவில் மட்டும் சுமார் 30,000 பேர் நாய்க்கடியால் ஒவ்வோர் ஆண்டும் இறக்கிறார்கள். அதே சமயம் 50 லட்சம் பேர் நாய்க்கடித்த பிறகு தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்கள்.


இந்தியாவில் உள்ள நாய்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 2 கோடி

INCUBATION PERIOD OF RABIES:


கடிப்பட்டதில் இருந்து நோய் தொடங்கும் வரையான காலம் 5 நாட்கள் முதல் ஒரு ஆண்டு வரை வேறுபடுகிறது. சராசா¢யாக இரண்டு மாதங்களில், சதரணமாக இந்த நோய் தொடங்குகிறது.

முதலில், முதல் 2-10 நாட்கள் தெளிவற்ற சில அறிகுறிகள் தென்படும். நோயாளி காய்ச்சல், தலைவலி, பசியின்மை, வாந்தி போன்றவற்றால் அவதிப்படுவார்.
 மேலும் கடிபட்ட இடத்தில் வலி, அறிப்பு, மருத்துப்போதல், நமைச்சல் முதலியன இருக்கும்.

கடைசிக் கட்டத்தில் நோயாளி விழுங்குவதற்குச் சிரமப்படுவார். சில நோயாளிகள் கலக்கத்துடனும், தடுமாற்றத்துடனும் செயல்படத் தொடங்குவர்.

நோய் வந்த பிறகு இதற்கு வைத்தியம் இல்லை. ஆனால் இந்த நோய் 100% வராமல் தடுக்க தடுப்பூசி உள்ளது.


நாய்க்கடி நோய்க்கு 3 வகையான தடுப்பூசிகள் உள்ளன.


#மிருகத்தின் மூளை திசு அல்லது திசுவிலிருந்து எடுத்த தடுப்பூசி மருந்து (NTV)


#ஏ.வியன் தடுப்பூசி (AV)


#திசுக்களில் இருந்து பண்ணிய தடுப்பூசி (TCV)






திசுகளிலிருந்து உண்டு பண்ணிய தடுப்பூசியால் பல நன்மைகள் உள்ளன.


கடிபடுவதற்கு முன்பே, எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளும் சிகிச்சை முறைக்கும், கடிபட்ட பின் செய்யும் சிகிச்சைக்கும் இது மிகவும் பயனளிக்கிறது. மிகவும் குறைந்த வலி உடையது. மிகக் குறைந்த அளவு மருந்தே தேவைப்படும். வயிற்றில் ஊசி போட தேவை இல்லை.






நாய்க்கடி நோயின் தாக்குதல் ஏற்படக்கூடிய நிலையில் எவ்வளவு சீக்கிரம் இம்மினோகுளோபிளினும் ஒரு தடுப்பூசியும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அன்றிலிருந்து 3, 7, 14, 28, 90-வது நாட்களில் மேலும் 5 தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள வேண்டும்.






நாய்க்கடி நோயின் தாக்குதல் ஏற்படக்கூடிய நிலையில் எத்தனை விரைவாக முடியுமோ அத்தனை விரைவாக மருத்துவ உதவி நாடவேண்டும்.






உடனடியாக, நாய்க்கடி உள்ள இடங்களையும், நகத்தால் பிராண்டிய இடங்களையும் கவனித்துச் சுத்தப்படுத்த வேண்டியது மிக மிக முக்கியமானதாகும்,
  காயம் பட்ட இடங்களையும், அவற்றைச் சுற்றியுள்ள இடங்களையும் உடனேயே குழாயின் கீழ் ஓடும் நீரில்  நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். நிறைய சோப்பும் நீரும் உபயோகிக்கவும்.


அதன் பின்னும் இருக்கக் கூடிய கிருமிகளை செயலிழக்கச் செய்ய டிஞ்சர், ஆல்கஹால், டெட்டால், சாவலான் போட்டுக் கழுவ வேண்டும்.


எரிச்சல் உண்டக்கக்கூடிய செடிகளின் சாறுகள், காப்பிப்பொடி, மிளகாய்ப் பொடி, உலோகங்கள், அமிலங்கள், சுண்ணாம்பு போன்றவற்றைத் தடவக்கூடாது.

கடிப்பட்ட இடத்தைத் தையல் இட்டு உடனடியாக மூடக்கூடாது.


மருத்துவரை உடனே அனுகவும்.



Click here to bookmark this link.Channel Image10:51 ஒற்றுமையும் சகோதரத்துவமும்! – Audio/Video சுவனத்தென்றல்
அன்பு சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் ஏகத்துவ அகீதா மற்றும் இஸ்லாத்தின் அடிப்படைகளிலல்லாத, ஏனைய விசயங்களில் ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடுகளுக்காகவும், உலக விசயங்களில் ஏற்பட்ட சிறிய பிரச்சனைகளுக்காகவும் ‘நீங்கள் பிரிந்து விடாதீர்கள்’ என்ற இறைக் கட்டளைக்கு மாற்றமாக, சுயநலம், பதவி சுகம், புகழ், மக்கள் மற்றும் அரசியல் செல்வாக்கு இவைகளுக்காகப் பல்வேறு குழுக்களாகப் பிரிந்துச் சென்று, தமக்குள் சச்சரவிட்டுக் கொண்டு சகோதர, முஸ்லிம்களின் மாமிசத்தை சாப்பிடுவதைப் போல தம் சகோதரர்களின் கண்ணியம் காற்றில் பறக்கவிடப்படும் [...]
Click here to bookmark this link.Channel Image04:03 ஸஹருடைய நேரம் வழிகாட்டி
"நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஸஹ்ர் செய்தோம்; பின்னர், தொழுகைக்கு அவர்கள் தயாராகிவிட்டார்கள்!" என்று ஸைத் இப்னு ஸாபித்(ரலி) கூறினார்; நான் 'பாங்குக்கும் ஸஹ்ருக்குமிடையே எவ்வளவு நேரம் இருந்தது?' என்று கேட்டேன். அதற்கவர் 'ஐம்பது வசனங்கள் (ஓதும்) நேரம் இருந்தது!" என்று பதிலளித்தார். 

அறிவிப்பாளர்: அனஸ்(ரலி)
நூல்: புகாரி

Sun 29

Click here to bookmark this link.Channel Image17:02 அல்லாஹ் தனது தூதருக்கு அளித்த சில உரிமைகள், விதி விலக்குகள். தினம் ஒரு குர்ஆன் வசனம்
நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன்மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் - இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்); அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்) இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம். மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம். உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்) மேலும் அல்லாஹ் மிக மன்னப்பவன். மிக்க அன்புடையவன். (அல்குர்ஆன்: 33:50)
Click here to bookmark this link.Channel Image05:32 முதல் சமுதாயம்! – Audio/Video சுவனத்தென்றல்
நிகழ்ச்சி : ரமலான் சிறப்பு சொற்பொழிவு நாள் : 13-08-2008 இடம் : ரமலான் 2010 சுவனத்து பூஞ்சோலை கூடாரம், பஹாஹீல், குவைத் நிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய வழிகாட்டி மையம், குவைத் ஆடியோ : (Download) {MP3 format -Size : 11.5 MB}
Click here to bookmark this link.Channel Image00:21 அப்துல் நாசர் மதானி - அதிகாரத்தின் இரை (மீள்பதிவு) எதிரொலி
இந்திய தேசத்தின் விடுதலைக்காக, தன் தேகத்தையே அர்பணித்த காந்தியடிகள் கொடூரமாக கொல்லப்பட்ட நிகழ்வுதான, விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் பயங்கரவாத நிகழ்வு. மூச்சுக்கு ஒரு முறை ''ஹே ராம்'' என்று உச்சரித்து, கடைசி வரை தீவிர இந்து மதப் பற்றாளராக வாழ்ந்த காந்தியடிகளை கொன்றொழித்த பயங்கரவாதத்தை செய்தது முஸ்லிம்கள் அல்ல.. ஆனாலும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!

பன்மைத் தன்மை உடைய இந்தியத் திருநாட்டில், சமயச்சார்பின்மை என்னும் தத்துவம் தளைக்க தன் இறுதி மூச்சு உள்ள வரைப் போராடிய ஜவஹர்லால் நேருவின், அரசியல் வாரிசான இந்திரா காந்தியை சுட்டுப் பொசுக்கிய பயங்கரவாதத்தில் முஸ்லிம்களுக்குத் தொடர்பில்லை., ஆனாலும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!

இந்திரா காந்தியின் அருமைப் புதல்வரும், இந்தியாவின் இளம் பிரதமருமான ராஜீவ் காந்தியை சிதறடித்த பயங்கரவாதத்திலும் முஸ்லிம்களுக்கு சம்மந்தமில்லை. ஆனாலும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!

இந்துக்களின், கிறிஸ்தவர்களின், சீக்கியர்களின், பௌத்தர்களின் இன்ன பிற சமூகங்களின் வழிபாட்டுத் தலங்களையோ, வரலாற்றுச் சின்னங்களையோ, இடித்துத் தகர்த்த பயங்கரவாதத்தை, இந்தியாவின் எந்த ஒரு மூலையிலும் எந்த ஒரு முஸ்லிமும் செய்ததில்லை., ஆனாலும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!

சுதந்திர இந்தியாவில் நடை பெற்ற மிகப்பெரும் வகுப்புக் கலவரங்கள், இனப்படுகொலைகள் எல்லாவற்றிலும் உயிரை இழந்து, உடைமை இழந்து சொந்த மண்ணிலேயே அகதிகளாய் அல்லல்பட்டபோதும், உணர்வை இழக்காமல் உரிமை கேட்டதனால்., முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!

இரத்தமும் சதையுமாக இந்திய மண்ணை நேசித்த முஸ்லிம்களின், இரத்தம் குடித்து தன் சதை வளர்க்கும் இழி செயலை, இந்தியாவின் அதிகார வர்க்கமும், ஊடகங்களும் வெளிப்படையாக செய்து வருகின்றன. முஸ்லிம்களை குதறுவதையே முழு நேர செயல் திட்டமாகக் கொண்டு இயங்கும் இந்துத்துவ சக்திகளுக்கு, ஜனநாயகத்தின் அத்தனைத் தூண்களும் அரணாய் நிற்கின்றன. நாடு முழுவதும் தொடரும் இந்த அக்கிரமத்திற்கு இரையாகிப் போன இரத்த சாட்சியாக இப்போது பெங்களூர் சிறைக் கொட்டடியில் அடைபட்டுக் கிடக்கிறார் அப்துல் நாசர் மதானி.

நாம் வாழும் காலத்தில், நம் கண் முன்னாலேயே ஒரு மிகப்பெரும் அக்கிரமம் அரங்கேறிக் கொண்டு இருக்கிறது. சட்டம் அதன் கயமையைச் செய்கிறது. நீதிக்கு கல்லறை கட்டப்படுகிறது, எளிய மனிதர்களைச் சூறையாடும் அரச பயங்கரவாதம் தலை விரித்தாடுகிறது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் இருபது சதவீதத்துக்கும் அதிகமாக வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் எழுச்சிக்காகவும், மறு மலர்ச்சிக்காகவும் போராடிய ஒற்றைக் காரணத்திற்காக ஒரு அப்பாவி மனிதரை வேட்டையாடிக் கொண்டிருக்கின்றன இந்தியாவின் அரசுகள்.

சட்டம், நீதி, ஜனநாயகம், இறையாண்மை என்றெல்லாம் வாய்கிழியப் பேசப்படுகின்ற ஒரு மண்ணில், அப்பட்டமாக மீறப் படுகின்றன மனித உரிமைகள். மாந்த நேயத்திற்கான அத்தனை இலக்கணங்களும் குழி தோண்டிப் புதைக்கப் படுகின்றன. ஜனநாயகத்தின் தூண்கள் அனைத்தும் ஈரமற்றப் பாறையாய் மாறி வருகின்றன. இதற்குப் பிறகும் சட்டம் பற்றியும், நீதி பற்றியும், ஜனநாயகத்தின் மாண்பைப் பற்றியும் பிதற்றுபவர்களை காணும்போது கடும் எரிச்சலும், கோபமும் தான் வருகிறது.

1992 டிசம்பர் 6 - இல் பாபர் மஸ்ஜிதை இடித்தார்கள். 450 ஆண்டு கால வரலாற்றுச் சின்னத்தை, முஸ்லிம்களின் புனிதமிக்க வழிபாட்டுத் தலத்தை அநீதியான முறையில் தகர்த்து எறிந்தார்கள். எப்படியாவது தங்களின் பள்ளிவாசல் காப்பாற்றப்பட்டு விடும் என்று கடைசி வரை நம்பியிருந்த முஸ்லிம்கள் கருவறுக்கப்பட்டார்கள். இந்த நாட்டின் மதிப்பு மிகுந்த நீதிமன்றத்தையும், ராணுவத்தையும், போலீசையும், ஓட்டுப் பொறுக்கி அரசியல் வாதிகளையும் நம்பி, நம்பி ஏமாந்து போனது முஸ்லிம் சமூகம்.

அவநம்பிக்கை மிகுந்த நிலையில், தமது இருப்பு குறித்த பாதுகாப்பின்மையும், எதிர்காலம் குறித்த அச்சமும் முஸ்லிம்களை வாட்டத் தொடங்கியது. தமக்கான பாதுகாப்பை தாமே உறுதி செய்து கொள்ளும் வகையில் முஸ்லிம் சமூகத்தின் உள்ளிருந்து உரிமைக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. அப்படி நாடு முழுவதும், ஜனநாயகப் பாதையில் நின்று உரிமை கேட்பதற்காக வெடித்து முளைத்த விதைகளில் ஒருவர்தான் அப்துல் நாசர் மதானி.

அடக்குமுறைகளுக்கு எதிரான கர்ஜனை, எவருக்கும் எதற்கும் அடங்காத கம்பீரம், நெருப்பை உமிழும் உரை வீச்சு, சமுதாய மறுமலர்ச்சியே உயிர் மூச்சு என்று தனிப்பெரும் அடையாளத்துடன் கேரள அரசியல் வானில் வலம் வந்தவர் அவர். அதிகாரத்தை நோக்கிய உண்மையின் குரலாக, ஒடுக்கப்பட்டோரின் உரிமைக் குரலாக ஓங்கி ஒலித்தவர் அவர். கொள்கைச் சமரசமற்ற அவரது அரசியல் நிலைப்பாடுகளும், இந்துத்துவ எதிர்ப்பில் அவர் காட்டிய உறுதிப்பாடும்தான் அவரை இன்று இந்த நிலைக்குத் தள்ளி இருக்கிறது.

கேரளாவின் கொல்லம் மாவட்டம் சாஸ்தான் கோட்டையைச் சார்ந்த அப்துஸ் சமத் மாஸ்டர், அஸ்மா பீவி தம்பதியருக்கு 1965 ஜனவரி 18 - இல், மூத்த மகனாக பிறந்தார் மதானி. பள்ளித் தலைமை ஆசிரியரான மதானியின் தந்தை, அவரை மார்க்க அறிவும் நல்லொழுக்கமும் உடைய பிள்ளையாக வளர்த்து எடுத்தார். பள்ளிக் கல்விக்குப் பின் கொல்லத்தில் உள்ள 'மஅதனுல் உலூம்' அரபிக் கல்லூரியில் இணைந்து இஸ்லாமிய மார்க்க அறிஞராக பரிணாமம் பெற்றார் மதானி. அந்தக் கல்லூரியில் வழங்கப்பட்ட 'மஅதனி' என்ற பட்டமே பின்னாளில் அவரது அடையாளத்துக்குரிய பெயராக மாறிப் போனது.

இளம் மார்க்கப் பிரச்சாரகராக தன் பயணத்தைத் தொடங்கிய மதானி, அனல் பறக்கும் உரை வீச்சுக்களால் அனைவரையும் ஈர்த்தார். அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலை மோதியது. கேரளாவின் சொற்பொழிவு மேடைகளில் தவிர்க்க முடியாத தனிப்பெரும் பேச்சாளர் ஆனார் மதானி. 1990 களில் இந்திய அளவில் நடைபெற்ற பல்வேறு அரசியல் நிகழ்வுகள் மதானியைப் பாதித்தது. மண்டல் கமிசன் அறிக்கைக்கு நேர்ந்த கதியும், அத்வானியின் தலைமையில் அரங்கேறிய இந்துத்துவ எழுச்சியும், முஸ்லிம்களை அச்சுறுத்தும் ஆர். எஸ்.எஸ் கும்பலின் தீவிரவாத நடவடிக்கையும் கண்டு கொதித்து எழுந்தார் மதானி.

ஆர்.எஸ்.எஸ்.க்கு அரசியல் தளத்தில் நின்று பதிலடி கொடுக்க ஐ.எஸ்.எஸ். [இஸ்லாமிக் சேவா சங்] என்ற அமைப்பை, 1990 ஆம் ஆண்டு தொடங்கினார். 1992 டிசம்பர் 6 - இல் பாபர் மஸ்ஜித் இடிக்கப் பட்டபோது மதானியின் ஐ.எஸ்.எஸ் தடை செய்யப்பட்டது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் இந்திய அரசின் இத்தகைய நடவடிக்கையைக் கண்டித்து சூறாவளியாய் சுழன்றார் மதானி. பாபர் மஸ்ஜிதை இடித்த பயங்கரவாதிகளையும், அதற்குத் துணை நின்ற காங்கிரசையும் நெருப்பு உரைகளால் காய்ச்சி எடுத்தார்.

மதானியின் உரை வீச்சில் பொசுங்கிப்போன இந்துத்துவ சக்திகள், அவரை நேர்மையாக எதிர்கொள்ள முடியாமல் தீர்த்துக்கட்டும் சதியில் இறங்கினர். ஆதரவற்ற அனாதைக் குழந்தைகளை அரவணைக்கும் வகையில் அன்வார்சேரியில் மதானி உருவாக்கிய ஜாமியா அன்வார் என்னும் கலாசாலையில் இருந்து இரவு அவர் வெளியே வரும்போது, ஆர். எஸ்.எஸ் கும்பல் அவர் மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியது. 1992 இல் நடைபெற்ற அந்த தாக்குதலில் தனது ஒற்றைக் காலை இழந்து ஊனமுற்ற மதானி, அதன் பின்னர் சக்கர நாற்காலியில் தவழ்ந்து கொண்டே சரித்திரம் படைத்தார்.

இந்தியச் சூழலில் முஸ்லிம்கள் தனித்து நின்று போராடுவதன் மூலம் இலக்கை அடைய முடியாது என்ற உண்மையை உணrந்து தெளிந்த மதானி, 1993 இல் மக்கள் ஜனநாயகக் கட்சி [PDP] என்னும் அரசியல் கட்சியைத் தொடங்கினார். தாழ்த்தப்பட்ட தலித் மக்களும், ஒடுக்கப்பட்ட முஸ்லிம்களும் ஓரணியில் ஒன்றிணைந்து அரசியல் சக்தியாக எழுச்சி பெறும் வியூகத்தை வகுத்தார். தலித் சமூகத்தை சார்ந்த ஒருவரை கேரளாவின் முதலமைச்சராக மாற்றியே தீருவேன் என்று சூளுரைத்தார். குருவாயூர், ஒற்றப்பாலம், திரூரங்காடி இடைத்தேர்தல்களில் போட்டியிட்டு கேரளாவின் mainstream அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்தார்.

முஸ்லிம்களோடு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களையும் அணி திரட்டும் மதானியின் தொலை நோக்குப் பார்வையைக் கண்டு கேரளாவின் அரசியல் கட்சிகளுக்கு நடுக்கம் வந்தது. அரசியல் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திக் கொண்டு முன்னேறிக் கொண்டிருந்த மதானி 1998 மார்ச் 31 - அன்றுகோவை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

மதானி கோவை சிறையில் இருந்தபோது அவர் அனுபவித்த ரணங்கள் வார்த்தைகளில் அடங்காதவை. விசாரணைக் கைதியாக சிறையில் பூட்டப்பட்டு கசக்கி எறியப்பட்டார். 105 கிலோ எடை கொண்ட கனத்த தேகத்துடன், 33 வயதே நிரம்பிய துடிப்பு மிக்க இளைஞராக சிறைக்குச் சென்ற அவர் அதிகாரத்தின் கொடும் பசிக்கு இரையானார். நாளாக நாளாக அவரது உடல் எடை குறைந்து இறுதியில் 45 கிலோ ஆனது. உலகத்தில் உள்ள அத்தனை வியாதிகளும் குடியிருக்கும் நோய்களின் கூடாரமாக மாறி அவரது உடல் நலியுற்றது. ஒரு விசாரணைக் கைதிக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச உரிமைகள் கூட மதானிக்கு மறுக்கப்பட்டன.

1200 க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டு ஒருவர்கூட அவருக்கு எதிராக சாட்சி சொல்லாத நிலையிலும் அவரது ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டன. அவரது பாட்டி இறந்தபோது பரோலில் சென்று பட்டியின் உடலை பார்த்து வருவதற்கு கூட அவருக்கு அனுமதி தரப்படவில்லை. நீண்ட நாள் ஆகிவிட்டதால் பழுதடைந்த தனது செயற்கை காலை புதுப்பிக்கவும், சிகிச்சைக்காகவும் வேண்டி மதானி அனுப்பிய மனுக்கள் குப்பைக் கூடையில் எறியப்பட்டன. அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா மதானி விசயத்தில் மிக மூர்கத்தனமாக நடந்து கொண்டார்.

மதானியை விடுதலை செய்யக் கோரி தமிழகத்திலும், கேரளத்திலும் மிகப்பெரும் மக்கள் இயக்கங்கள் நடைபெற்றன. 2006 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும், அப்பாவி சிறைவாசிகளின் விடுதலையை முன்னிலைப்படுத்தி த.மு.மு.க போன்ற தமிழக முஸ்லிம் அமைப்புகள் தேர்தலை எதிர்கொண்ட விதமும், மதானி உள்ளிட்ட அப்பாவிகளின் விடுதலைக்கு வழிவகுத்தது.

கலைஞர் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற உடன் அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகள் குறித்த கோரிக்கைகள் கனிவோடு பரிசீலிக்கப்பட்டன. மதானிக்கு மருத்துவ சிகிச்சை கிடைத்தது. பின்னர் குற்றம் நிரூபிக்கப்படாமல் ஒன்பதரை ஆண்டுகால சிறை வாழ்கையை முடித்துக் கொண்டு 2007 ஆகஸ்ட் 1 - இல் விடுதலையாகி வெளியே வந்தார் மதானி. பரபரப்பான அவரது அரசியல் பயணத்தை முடக்கி, கம்பீரமான அவரது தோற்றத்தை ஒடுக்கி, இயங்க முடியாத நிலைக்கு அவரைத் தள்ளிய பிறகு குற்றமற்றவர் என்று விடுதலை செய்தது நீதிமன்றம்.

விடுதலைக்குப் பின் மதானியைத் தவிர வேறு யாராக இருந்தாலும், நலிந்த தன் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு பொது வாழ்வுக்கு ஓய்வு கொடுத்திருப்பார்கள். வெகு மக்களிடம் தன் மீது ஏற்பட்டிருக்கும் அனுதாபத்தை அரசியல் லாபத்திற்கான அறுவடையாகக் கருதி காங்கிரசோடு பேரம் நடத்தி இருப்பார்கள். முஸ்லிம்களுக்கான பிரச்சனைகளைப் பேசியதனால் தானே வம்பு ; பேசாமல் 'பதவி அரசியல்' நடத்துவோம் என்று கொள்கை அரசியலை கை கழுவி இருப்பார்கள்.

ஆனால் அப்படி எந்த முடிவுக்கும் வரவில்லை மதானி. முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் அரசியல் எழுச்சிக்கான தனது பயணத்தை முன்பை விடவும் வேகமாகக் கூர் தீட்டினார். பேச்சில் இருந்த வீச்சைக் குறைத்து அதை செயலில் காட்டினார். தன் உடல் நிலையைப் புறம் தள்ளி விட்டு கேரளா முழுவதும் வலம் வந்தார். ஒன்பதரை ஆண்டுகாலம் முடங்கிக் கிடந்த தனது தொண்டர்களை மீண்டும் தட்டி எழுப்பினார்.

மதானியின் கதை முடிந்து விட்டது என்று கணக்குப் போட்டு காய் நகர்த்தியவர்களுக்கு, அவரது இத்தகைய மீள் எழுச்சி எரிச்சலைத் தந்தது. ஏற்கனவே கோவைக் குண்டுவெடிப்பு வழக்கில் அவரைச் சிக்கவைத்து குளிர் காய்ந்தவர்கள் மீண்டும் அதே பாணியில் அவரைக் குதறத் தொடக்கி உள்ளனர்.

****

2008 ஆம் ஆண்டு ஜூலை 25 - ஆம் நாள் பெங்களூரில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் மதானி 31- ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, கர்நாடக மாநில காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் மதானி சேர்க்கப்பட்டுள்ள விதத்தையும், வழக்கின் போக்கையும் பார்க்கின்ற போது , மதானியை ஒரேயடியாக ஒழித்துக்கட்ட மிகப்பெரிய சதி வலைகள் பின்னப்படுவதை அறிய முடிகின்றது.

கேரளாவைச் சார்ந்த 'தடியன்டவிட' நசீர் என்பவர் 2009 ஆம் ஆண்டு, பங்களாதேசத்தில் வைத்து அங்குள்ள ரைபிள் படையினரால் கைது செய்யப் பட்டார். லஷ்கரே தொய்பா தீவிரவாதியாக சித்தரிக்கப்பட்ட நசீர், கொடுத்ததாக சொல்லப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் இப்போது மதானி வேட்டையாடப்படுகிறார்.

2005 ஆம் ஆண்டு கேரள மாநிலம் கலமச்சேரியில், தமிழக அரசுப் பேருந்து எரிக்கப்பட்ட வழக்கில், 'தடியண்டவிட' நசீரிடம் கேரள போலீசார் விசாரித்ததாகவும், விசாரணையில், ''தமிழக அரசுப் பேருந்தை எரிக்கச் சொன்னது மதானியின் மனைவி சூஃபியாதான் '' என்று நசீர் சொன்னதாகவும் கூறி 2009 டிசம்பரில் சூஃபியா கைது செய்யப்பட்டு எர்ணாகுளம் சிறையில் அடைக்கப்பட்டார். அது தனிக் கதை.

பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில், பெங்களூர் மாஜிஸ்த்ரேட் நீதிமன்றத்தில் மதானி மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி, மதானியின் சார்பில் அவரது வழக்கறிஞர் கர்நாடக உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவுக்கு எதிராக கர்நாடக காவல் துறையினர் பதில் மனுத் தாக்கல் செய்தனர்.

57 பக்கங்கள் கொண்ட அந்த பதில் மனுவில் காவல்துறை கையாண்டிருக்கும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் விஷம் தோய்ந்தவையாக இருக்கின்றன. மதானிக்கு எதிரான சதியின் முழுப் பரிணாமமும், முஸ்லிம்கள் மீதான அதிகார வர்க்கத்தின் வெறுப்புணர்வும் அதில் அப்பட்டமாகத் தெரிகிறது.

'' பெங்களூரில் குண்டுவெடிப்பு நடப்பதற்கு முன் மதானியும், கைது செய்யப்பட்ட நசீர் உள்பட 22 குற்றவாளிகளும், கேரள மற்றும் கர்நாடக எல்லையில் உள்ள குடகு நகரில் ஒன்று கூடி, அங்குள்ள தேயிலைத் தோட்டத்தில் வைத்து சதித்திட்டம் வகுத்ததாகவும், இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற வேண்டும் என்பது அவர்களது திட்டம் என்றும், இதற்காக இந்தியாவில் வன்முறையைத் தூண்டி விட்டு, மத்திய மாநில அரசுகளுக்கு இடையூறு செய்வதே அவர்களின் நோக்கம் என்றும் போலீஸ் கூறியுள்ளது.

மேலும், நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து வெடி பொருட்களை ரகசியமாக கேரளத்துக்கு கடத்தி, அங்கு வெடிகுண்டைத் தயாரித்துள்ளனர் என்றும், இவ்வாறு தயாரிக்கப்பட்ட குண்டுகளை மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெடிக்க வைத்து மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளார்'' என்றும் நீளுகிறது போலீஸ் அறிக்கை.

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து மதானி குற்றமற்றவராக விடுவிக்கப் பட்டாலும், மதானியை தீவிரவாதியாக சித்தரிக்கும் ஆளும் வர்க்கத்தின் கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதையே போலீசின் இந்த அறிக்கை எடுத்துக் காட்டுகிறது.

சிறையிலிருந்து வெளி வந்த பின்னர் மதானியின் முழு செயல்பாடுகளும், நடவடிக்கைகளும் மத்திய மாநில புலனாய்வுக் குழுவினரால் கண்காணிக்கப்படுகிறது. அவரது சுற்றுப்பயணம் குறித்த முழு தகவலும் கேரள காவல் துறையிடம் இருக்கிறது.அப்படிப்பட்ட சூழ்நிலையில், 24 மணி நேரமும் கண்காணிப்பு வளையத்துக்குள் இருக்கும் ஒருவர், எப்படி குண்டு வெடிப்புச் சதியில் ஈடுபட முடியும்? குடகு நகரில் ரகசியமாகக் கூடி திட்டம் தீட்ட முடியும்? என்றெல்லாம் கேட்கப்படும் எந்தக் கேள்விக்கும் ஜனநாயக நாட்டில் விடை இல்லை.

நசீர் கைது செய்யப்பட்டு சுமார் ஐந்து மாதங்களுக்குப் பிறகு, '''மதானிக்கும் குண்டுவெடிப்பில் பங்குண்டு'' என்று அவர் வாக்குமூலம் அளித்ததாகக் கூறி மதானி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் காவல் துறையின் இந்த மோசடித்தனத்தை, கொச்சி உயர் நீதி மன்றத்தில் இருந்து வெளியே வரும் போது பத்திரிகையாளர்களை சந்தித்த நசீர் பகிரங்கமாக அம்பலப் படுத்தினார். ''பெங்களூர் குண்டுவெடிப்பில் மதானிக்கு தொடர்பு உண்டு என்று தான் கூறவே இல்லை'' என்று உறுதியாக மறுத்தார். ஆனாலும் காவல் துறையும், நீதி மன்றமும் அதை எல்லாம் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. மதானியை சூறையாட வேண்டும் என்று அதிகார வர்க்கம் முடிவு செய்து விட்ட பிறகு எந்த உண்மையைத் தான் அவர்களால் ஏற்க முடியும்?

இந்தியாவை இஸ்லாமிய நாடாக்க சதி நடக்கிறது என்று கர்நாடக பாஜக அரசின் காவல்துறை சொன்னதைப் போலவே, கேரளாவின் கம்யூனிஸ்ட் முதல்வர் அச்சுதானந்தனும் வாந்தி எடுத்தார். முஸ்லிம்களை ஒடுக்குவதில் இந்துத்துவத்திற்கும், இடதுசாரிகளுக்கும் இடையே இருக்கும் கள்ள உறவு இதன் மூலம் அம்பலத்திற்கு வருகிறது.

குற்றமே செய்யாமல், விசாரணைக் கைதியாக கோவை சிறையில் மதானி இழந்த ஒன்பதரை ஆண்டுகளுக்கு, பதில் சொல்ல வக்கற்றவர்கள், தற்போது மதானி விசயத்தில் 'சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றும், அவர் குற்றவாளியா இல்லையா என்பதை சட்டம் முடிவு செய்யட்டும்' என்றும் கூறி தப்பிக்க முயலுகின்றனர்.

மதானி கைது செய்யப்பட்டுள்ள 'அன்லாஃபுல் ஆக்டிவிட்டீஸ் பிரிவென்சன் நடைமுறைச் சட்டம் - 2008 ' என்ற சட்டம் எந்த வகையிலும் நீதி வழங்காது என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. இதே போன்ற கறுப்புச் சட்டங்களால் ஏற்கனவே முஸ்லிம்கள் பட்ட காயங்களும், அதனால் ஏற்பட்ட ரணங்களும் இன்னும் ஆறாத வடுவாய் இருக்கிறது. இந்தக் கொடுஞ்சட்டத்தின் படி, சப் இன்ஸ்பெக்டர் ரேன்கிலுள்ள எந்த ஒரு அதிகாரியும், நாட்டில் யாரையும் சந்தேகத்தின் பேரில் குற்றவாளியாக்க முடியும். அதன் பின்னர் 150 நாட்கள் வரை ஜாமீனில்லாமல் சிறையில் அடைக்கலாம். குற்றம் சாட்டப்பட்டவர் ஜாமீன் கோரி விண்ணப்பித்தால் நீதி மன்றமும் எதுவும் செய்ய இயலாது. ஏனெனில் நீதிமன்றத்தின் எந்த ஒரு அனுமதியும் இன்றி 150 நாட்கள் வரை சிறையில் அடைக்க காவல்துறைக்கு சட்ட ரீதியான அதிகாரமுண்டு.

வழக்கமான சட்ட நடைமுறைகளின்படி, சாதாரண நிலையில் ஒருவரை கைது செய்தால், அவரை 24 மணி நேரத்துக்குள் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும். நீதி மன்றம் அவரை 14 நாட்கள் ரிமாண்ட் செய்யலாம். தொடர்ந்து பொறுப்பில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்றால் 15 ஆம் நாள் மீண்டும் நீதி மன்றத்தை அணுக வேண்டும்.

குற்றவாளி என்று நிறுவப்படும் வரை, ஒரு குடிமகனுக்கு உரிய அடிப்படை உரிமைகளைக் கருத்தில் கொண்டே சட்டத்தில் இவ்வாறெல்லாம் வழி வகை செய்யப் பட்டுள்ளது. ஆனால், மக்களுக்கு சட்டம் வழங்கியுள்ள இத்தகைய உரிமைகளை காலி செய்து அநீதி இழைக்கவே, அரசு அதிகாரம் புதிய கறுப்புச் சட்டங்களை இயற்றி வைத்துள்ளது. அப்படி என்றால் சட்டம் யாருடைய வழியில் செல்கிறது?

வழக்கு விசாரணை எல்லாம் முடிந்து, குற்றம் சற்றப்பட்டவர் நிரபராதி என்று விடுவிக்கப் பட்டால், சட்டம் போனது எந்த வழியில் என்று மானமுள்ள எவராவது விடையளிப்பார்களா?

அச்சுதானந்தனும், பிரணாய் விஜயனும், ரமேஷ் சென்னிதாலாவும், குஞ்சாலிக் குட்டியும் கூறுகின்ற, சட்டத்தின் யோக்கியதை இவ்வளவுதானே.. இவர்களுக்கெல்லாம் கொஞ்சமேனும் மானமும், சூடு உணர்ச்சியும் இருந்தால் ''சட்டம் சட்டத்தின் பாதையில் செல்லட்டும்'' என்று கூச்சமின்றி கூறுவார்களா?

மதானி விசயத்தில் யாரைக் கேட்டாலும் 'சட்டம் தன் கடமையைச் செய்யட்டும்' என்று கூறி சட்டத்தைக் கை காட்டி விட்டு பதுங்கி விடுகின்றனர். இந்தச் சட்டம் என்றைக்குத்தான் முஸ்லிம்களுக்கு நீதியை வழங்கி இருக்கிறது? முஸ்லிம்கள் என்றாலே சட்டம் ஒரு வழியிலும், நீதி வேறு வழியிலும் அல்லவா செல்கிறது... இங்கே சங்கராச்சாரிக்கும், அப்துல் நாசர் மதானிக்கும் ஒரே சட்டம்தான்... ஆனால் நீதி?

சங்கரமடப் பூசாரி சங்கர ராமனை கூலிப்படையை ஏவி கொலை செய்த வழக்கில் சங்கராச்சாரிக்கு, குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பே, சதிக் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என பிணை கொடுக்கிறது நீதி மன்றம். விடுமுறை நாளில் கூட சங்கராசாரிக்காக திறந்தன நீதிமன்றத்தின் கதவுகள். சுவாமிகளை சிறையில் அடைக்காமல் நீதிபதிகளின் குடியிருப்பிலேயே காவலில் வைக்கலாமே என்று யோசனை சொன்னார் ஒரு நீதிபதி. சிறையில் மலம் கழிக்க வாழை இலை கொடுக்கும் அளவுக்கு சங்கராசாரிக்காக வளைந்து கொடுக்கிறது சட்டம். ஒரு குற்றவாளிக்கு வழங்கப்பட்டது நீதி... ஆனால் குற்றமற்ற மதானிக்கு?

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆயுள் தண்டனை; அல் உம்மாவுக்குத் தடை.. ஆனால் குண்டுவெடிப்புக்கு காரணமாக அமைந்த, 19 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட கோவை கலவரத்தை, முன்னின்று நிகழ்த்திய இந்துத்துவக் குண்டர்களுக்கும், முஸ்லிம்களை சுட்டுத்தள்ளிய காவல் துறையினருக்கும் தடையுமில்லை, தண்டனையுமில்லை!

பழனி பாபாவின் ஜிகாத் கமிட்டிக்குத் தடை.. பழனி பாபாவைக் கொன்றவர்களுக்கோ விடுதலை!

இஸ்லாமிய மாணவர் அமைப்பான 'சிமி' க்குத் தடை.. ஆனால் சிமியின் பெயரால் இந்தியா முழுவதும் மிகப்பெரிய குண்டு வெடிப்புகளை நிகழ்த்திய ஆர் எஸ் எஸ்ஸுக்கு சகல சுதந்திரம்!

மாலேகான், புனே, அஜ்மீர், ஹைதராபாத், கோவா என நாட்டின் பல்வேறு பகுதிகளில் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட அபினவ் பாரத், சனாதன் சன்ஸ்தான், இந்து ஜாக்ருதி சமிதி ஆகிய இந்துத்துவ தீவிரவாதஅமைப்புகளையும், அவற்றை பல்வேறு பெயர்களில் இயக்கிக் கொண்டிருக்கும் மூல அமைப்பான ஆர் எஸ் எஸ்ஸையும் தடை செய்ய அரசுக்குத் துணிவில்லை.

குண்டுவெடிப்புகளில் ஆர் எஸ் எஸ்ஸுக்கு தொடர்பு இருப்பதற்கான அனைத்து வகையான ஆதாரங்களும், வீடியோ காட்சிகளும் கிடைத்த பிறகும், ஹெட்லைன்ஸ் டுடே , தெஹல்கா போன்ற பெரிய ஊடகங்கள் அதை அம்பலப் படுத்திய பிறகும், ஆர் எஸ் எஸ் தலைமையகத்தை சோதனை செய்யவோ, ஆர் எஸ் எஸ் தலைவர்களை விசாரணைக்கு அழைக்கவோ துப்பில்லாத தொடை நடுங்கி அரசுகள், மதானியைக் குதறுவதில் முனைப்புக் காட்டுகின்றன.

நந்திகத்தில் உள்ள ஆர் எஸ் எஸ் ஊழியர் வீட்டில் குண்டு வெடிப்பு; கான்பூரில் பஜ்ரங்தள் நிர்வாகி வீட்டில் குண்டு வெடிப்பு; தென்காசி ஆர் எஸ் எஸ் அலுவலகத்தில் குண்டு வெடிப்பு, என... ஆர் எஸ் எஸ் காரர்கள், குண்டுகளை தயாரித்துக் கொண்டிருக்கும் போதே வெடித்து சிதறிய குண்டுகள் ஏராளம், தாராளம்... இப்படி, பட்டவர்த்தனமாக ஆர் எஸ் எஸ்ஸின் பயங்கரவாதம் அம்பலப்பட்ட பிறகும், மதானி வெடிகுண்டு தயாரித்து சப்ளை செய்தார் என்று கதை விடுகிறது காவல்துறை.

2006 - லிருந்து நடைபெற்றுவரும் ஏழு மிகப்பெரிய குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஆர் எஸ் எஸ்ஸின் கள்ளக் குழந்தையான அபினவ் பாரத்துடன், உறவு வைத்துள்ள பல ராணுவ அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரைப் பற்றிய விபரங்கள், புலன் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த பிறகும், அவர்களில் எவரும் விசாரணைக்கு அழைக்கப் படுவதில்லை. 'தடியன்டவிட' நசீரை தேடிப்பிடித்து, நோண்டி நொங்கெடுத்தவர்களுக்கு, இந்த இந்துத்துவ அதிகாரிகளெல்லாம் கண்ணில் தெரிவதில்லை.

பெங்களூர் குண்டுவெடிப்பில் ஒருவர் பலியான வழக்கில், மதானியை சிக்க வைத்து சிறை பிடித்துள்ளவர்கள், குஜராத்தில் மூவாயிரம் முஸ்லிம்களைக் கொன்று நர வேட்டையாடிய நரேந்திர மோடியை, அதிகாரத்தில் அமர்த்தி அழகு பார்க்கின்றனர்.

போபாலில் பல்லாயிரம் மக்களைக் கொன்று குவித்த அமெரிக்கப் பயங்கரவாதி ஆண்டர்சனை விமானத்தில் ஏற்றி தப்பி ஓடச் செய்து விட்டு, செத்துப் போன நரசிம்ம ராவ் மீது பழிபோடுகின்றனர். மதானியை விரைவாக ஒப்படைக்காத கேரள அரசின் மீது, கர்நாடக காவல்துறைக்கு வந்த கோபம், ஆண்டர்சனை ஒப்படைக்காத அமெரிக்கா மீது வருவதில்லை.

பாபர் மஸ்ஜித் இடிப்பில் மிக முக்கிய குற்றவாளிகளாக லிபரான் கமிஷனால் அடையாளப்படுத்தப்பட்ட அத்வானி, வாஜ்பாய், முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி போன்ற 68 குற்றவாளிகளில் எவர் மீதும் நடவடிக்கை இல்லை. 8 கோடி ரூபாய் மக்கள் வரிப் பணத்தை வாரி இறைத்து, 17 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரிக்கப்பட்டு , 1000 பக்கங்களில் சமர்பிக்கப் பட்ட லிபரான் அறிக்கை, இப்போது எந்தக் குப்பைத் தொட்டியில் கிடக்கிறதோ தெரியவில்லை.

பாபர் மஸ்ஜித் இடிப்புக்குப் பின், மும்பையில் நடைபெற்ற மிகப்பெரும் வகுப்புக் கலவரங்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை இனப்படுகொலை செய்த குற்றவாளி என, நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா கமிஷனால் அறிவிக்கப்பட்ட, மும்பை பயங்கரவாதி பால்தாக்கரே மீது இதுவரை எந்தச் சட்டமும் பாயவில்லை.

சந்தேகத்தின் அடிப்படையிலும், புனையப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையிலும் முஸ்லிம்களை வேட்டையாடும் காவல் துறைக்கு, அரசால் நியமிக்கப் பட்ட விசாரணை ஆணையத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவர்களை கைது செய்ய துணிவில்லை.

பன்முகத் தன்மை உடைய இந்தியாவின் அரசியல் சாசன சட்டத்திற்கும், மதச் சார்பின்மைக்கும் எதிராக, மும்பையில் வட இந்தியர்களை, குறிப்பாக பீகார் மாநில எளிய மக்களை விரட்டி விரட்டி வேட்டையாடுகிறது நவ நிர்மான் சேனா. 'என்னை கைது செய்தால் மும்பையே பற்றி எரியும்' என்று பகிரங்கமாக கொக்கரிக்கும் ராஜ் தாக்கரேக்களெல்லாம் இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்களாகக் கருதப்படுவதில்லை.

48 கிருமினல் வழக்குகளில் தொடர்புடைய்ய ஆகப் பெரிய குற்றவாளி ஸ்ரீ ராம்சேனா பிரமோத் முத்தலிக் மீது தடாவும் இல்லை, பொடாவும் இல்லை.பெரும் தொகையை பேரம் பேசி கலவரம் செய்யும் புது வகை பயங்கரவாதியான முத்தலிக் மீது இந்தியாவின் பாதுகாப்புச் சட்டங்கள் பாய்வதில்லை.

ஸ்ரீராம் சேனாவைத் தொடங்குவதற்கு முன் முதாலிக் பஜ்ரங்தளத்தில் இருக்கும்போதே பல்வேறு வழக்குகளில் சிக்கிய பின்னணி கொண்டவன்.அப்படி இருந்தும் அவர்களால் எந்தத் தடையும் இன்றி அமைப்பு நிறுவ முடிகிறது; சுதந்திரமாக இயங்க முடிகிறது. பெங்களூர் குண்டுவெடிப்பில் ஸ்ரீராம் சேனாவின் கூலிப் படைக்குத் தொடர்பு உண்டு என்று ஊடகங்கள் உண்மையை உரைத்த பிறகும், அந்தக் கோணத்தில் விசாரணையை முடுக்கி விடாமல், கேரளாவுக்குச் சென்று மதானியைக் கொத்தி வந்துள்ளது கர்நாடக பாஜக அரசு...

***

மதானியின் விசயத்தில் நடப்பவை அனைத்தும் அப்பட்டமான மனித உரிமை மீறல் என்பது நன்கு தெரிந்த பிறகும், அவர் குற்றம் புரியாத அப்பாவி என்பது புரிந்த பிறகும், கேரளாவின் அரசியல் கட்சிகள் அவரை வெறுப்பது ஏன் என்ற கேள்வி எழாமல் இல்லை. மதானியின் கைது விவகாரத்தில் கேரளாவில் பாஜகவும், காங்கிரசும், கம்யுனிஸ்ட்டும், முஸ்லிம் லீக்கும் ஓரணியில் நின்று முழங்குகின்றன. மதானி ஒழிக்கப்பட்டால் தான் தாங்கள் நிம்மதியாக அரசியல் நடத்த முடியும் என்று எல்லா கட்சிகளும் எண்ணுகின்றன.

மதானியை உலவ விட்டால் அவர் முஸ்லிம்களை அணி திரட்டுவார்; கேள்வி கேட்கும் படி உசுப்பி விடுவார்; அடிமை அரசியலுக்கு சாவு மணி அடித்து விடுவார் என்று, மதானியின் வலிமை குறித்த பயம் கேரள அரசியல் கட்சிகளை பிடித்தாட்டுகிறது. அதிகார ருசி கண்ட முஸ்லிம் லீக், பதவியை இழக்கவோ அல்லது வேறு ஒருவர் அந்த இடத்திற்கு வரவோ சிறிதும் அனுமதிக்காது. பதவி இல்லாமல் இருக்கவே முடியாது என்ற வெறி முற்றிய பிறகு எந்த இலக்கணங்களுக்கும் கட்டுப்பட மனம் வராது.

பாபர் மஸ்ஜித் இடிப்பில் இந்துத்துவ சக்திகளுக்கு பக்கத் துணையாக நின்ற, காங்கிரஸ் கட்சியின் நயவஞ்சகத்தனத்தைக் கண்டித்து, காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என்று, முதுபெரும் முஸ்லிம் லீக் தலைவர் இப்ராகிம் சுலைமான் சேட் கர்ஜித்தபோது, முஸ்லிம் லீக்கின் பதவி வெறி பிடித்த கேரள தலைவர்கள்தான் அதற்கு முட்டுக் கட்டையாக நின்றனர். மனம் வெறுத்துப் போன சுலைமான் சேட், கொள்கை காக்கும் போராளியாக முஸ்லிம் லீக்கில் இருந்து வெளியேறி தேசிய லீக்கைத் தொடங்கும் நிலை வந்தது.

மதானி ஒழிந்தால் பாஜக வை விட அதிகமாக மகிழ்ச்சி அடையும் கட்சியாக முஸ்லிம் லீக் திகழ்கிறது. மதானியின் மீதான அடக்குமுறை அரங்கேறிக் கொண்டிருக்கும் போதே, கேரளாவில் பிற முஸ்லிம் அமைப்புகளான பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மீதும், ஜமாத்தே இஸ்லாமிக் ஹிந்த் மீதும் அரச மற்றும் ஊடக பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றது.

நியாயமான வழியில் நின்று, சமரசமற்ற முறையில், உயிரோட்டமான அரசியலை முன்னெடுக்க முனையும் முஸ்லிம் அமைப்புகளை முடக்கிப் போடுவதில் அதிகார வர்க்கம் குறியாய் இருக்கிறது. முஸ்லிம்களுக்கான தனித்த அரசியல் எழுச்சியை ஊடகங்கள் விரும்புவதுமில்லை, கண்டுகொள்வதுமில்லை.

முஸ்லிம்களின் பிரச்சனைகளை முன்வைத்து ஜனநாயக வழியில் அரசியல் நடத்துகிறவர்களை அடிப்படைவாதிகளாகவும், தீவிரவாதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும், மதவெறியர்களாகவும் சித்தரிக்கின்ற போக்கு, நாடு விடுதலை பெற்ற நாள் முதல் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது .

இநதிய முஸ்லிம்களுக்கான தனித்த அரசியல் இயக்கமான முஸ்லிம் லீக், பிரிவினைக்குப் பின் பாகிஸ்தானின் கட்சி என்றாகிவிட்ட நிலையில், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் என்ற பெயரில், இநதிய முஸ்லிம்கள் தமது தனித்த அடையாளத்தோடு மீண்டும் அரசியல் நடத்தப் புறப்பட்டதை, அன்றைய ஆளும் காங்கிரசால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

இநதிய முஸ்லிம்களுக்கு தலைமை ஏற்க காயிதே மில்லத் துணிந்த போது, அவரை முடக்கிப் போடுவதற்கான எல்லா ஆயுதங்களையும் காங்கிரஸ் கட்சி கையில் எடுத்தது.

முதலில், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் என்றொரு அமைப்பு உருவாகி விடாமல் தடுப்பதில் கவனம் செலுத்தியது; முஸ்லிம் லீக்கின் முதுபெரும் தலைவர்களின் வாயாலேயே ''முஸ்லிம் லீக் இனி நமக்கு வேண்டாம்'' என்று சொல்ல வைத்தது; முஸ்லிம் லீக்கை விட்டு வெளியேறி எங்களோடு இணைந்தால், உயர் பதவிகளைத் தருகிறோம் என்று ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியது; காயிதே மில்லத் மசிய மாட்டார் என்று தெரிந்ததும், அபுல் கலாம் ஆசாத்தை முன்னிறுத்தி முஸ்லிம்களை வளைக்கப் பார்த்தது; காங்கிரசின் இத்தகைய எல்லா தந்திரங்களையும் தவிடு பொடியாக்கி விட்டு, இந்திய முஸ்லிம்களுக்குத் துணிச்சலாக தலைமை ஏற்றார் காயிதே மில்லத்.

அதன் பிறகு அவரை கண்காணிக்கத் தொடங்கியது இந்திய அரசு. தேச விரோத செயலில் அவரை சிக்க வைக்க ஏதேனும் வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கித் தவித்தது அரசு. காயிதே மில்லத் வெளிநாடு சென்ற போது, அவரது நடவடிக்கைகளை உளவு பார்க்க காங்கிரஸ் அரசு காமராஜரை அனுப்பி வைத்ததாக வரலாற்றுக் குறிப்புகளில் இருந்து அறிய முடிகிறது.

ஆனால், இன்றைக்கு முஸ்லிம் லீக்கையோ அல்லது முஸ்லிம் லீக் தலைவர்களையோ, ஆளும் வர்க்கம் அப்படிப் பார்ப்பது இல்லை. முஸ்லிம்களின் பிரச்சனைகளைப் பற்றி இன்றைய முஸ்லிம் லீக், காயிதே மில்லத்தைப் போல் பேசுவதில்லை. வகுப்பு வாதத்துக்கு எதிராக வீச்சோடு களமாடுவதில்லை.

அவர் தவறாக நினைத்து விடுவாரோ, இவர் தவறாக நினைத்து விடுவாரோ...அல்லது கூட்டணித் தலைமை கோபித்துக் கொள்ளுமோ என்று பல கணக்குப் போட்டு மென்மையான முறையில் அரசிய நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அது வெறுமனே பதவியை தக்க வைத்துக்கொள்கிற சுயநல அரசியல். ஆகையினால் இன்றைய முஸ்லிம் லீக்கை, ஆளும் வர்க்கமோ அல்லது ஊடகங்களோ கண்காணிப்பதுமில்லை; பிரச்சனைக்கு உரியவர்களாக கருதுவதுமில்லை.

அன்றைக்கு காயிதே மில்லத்தைப் போல், இன்றைக்கு கொள்கை சமரசமற்ற முறையில் யார் யாரெல்லாம் அரசியலை முன்னெடுக்கின்றர்களோ; போர்குணத்தோடு அமைப்பு நடத்துகிறார்களோ அவர்களின் மீதே, ஆளும் வர்க்கத்தின் பார்வையும் , ஊடகங்களின் பார்வையும் ஒரு சேரக் குவிகிறது. காயிதே மில்லத்தை தேச துரோகி என்றார்கள்; கண்காணித்தார்கள்; அவரது சகாக்களை அவரிடமிருந்து பிரித்து, அவரை பலவீனப் படுத்த முயன்றார்கள்; மிதமான அணுகுமுறை உள்ள மாற்றுத் தலைமையை முன்னிறுத்தினார்கள்.... இன்றைக்கும் அதே வழிமுறையை, அதே நடைமுறையை ஆளும் வர்க்கம் பின் பற்றி வருவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.

அன்றைக்கு அரசோடு கூட்டுச் சேர்ந்து, காயிதே மில்லத்தை விமர்சித்த, சுயநலம் கொண்ட முஸ்லிம்களின் இடத்தை, இன்றைக்கு முஸ்லிம் லீக் பிடித்துக் கொண்டிருப்பது தான் காலத்தின் கோலம்.

மதானியையும், பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவையும், ஜமாத்தே இஸ்லாமியையும் கேரளாவில் முடக்கிப் போடுவதற்கு, ஆளும் தரப்பு கையாளுகின்ற அத்தனை வழிமுறைகளையும் முஸ்லிம் லீக் ஆதரிக்கிறது. போர்க் குணமிக்க முஸ்லிம் அமைப்புகள் விசயத்தில் அரசும், காவல் துறையும், ஊடகங்களும் என்ன சொல்கிறார்களோ, அதை ஒரு வரி விடாமல் வார்த்தை விடாமல் அப்படியே ஏற்றுக் கொள்ளுகிற மனநிலைக்கு, பாரம்பரிய முஸ்லிம் தலைமை தன்னை தகவமைத்துக் கொண்டுள்ளது.

***

மதானி கைது செய்யப் பட்ட போது, ஊடகங்கள் அதைக்கையாண்ட விதம் மிகவும் அருவருப்பானது. ஒரு குற்றவாளியை கர்நாடக அரசுக்கு கை மாற்றுவதில், கேரள அரசு தேவையற்ற தாமதத்தை ஏற்படுத்தி விட்டதாக கேரள ஊடகங்கள் விஷத்தைக் கக்கின. தமிழ் நாட்டின் பிரதான ஊடகமான சன் தொலைக்காட்சியின் செய்தி சேனலில், மதானியைக் கொச்சைப் படுத்தும் வகையில் செய்தி வாசிக்கப் பட்டது.

தான் குற்றவாளி அல்ல என்ற போதும் இறைவனுக்கு அடுத்த படியாக நீதி மன்றத்தின் மீது தான் வைத்துள்ள மரியாதையின் காரணமாக, சரணடைய விரும்புவதாக அறிவித்தவர் மதானி. அப்படிப்பட்ட ஒருவரை, ''ஆம்புலன்ஸ் மூலம் தப்பி ஓட முயன்ற போது பிடிபட்டதாக'' சன் டிவி தலைப்புச் செய்தி சொன்னது. செய்தியின் உள்ளீடாக, ''மதானி கோவை குண்டு வெடிப்பு வழக்கில் எட்டு ஆண்டுகள் தண்டனைப் பெற்றவர்'' என்று சொல்லி வரலாற்றுத் திரிபு செய்தது. விசாரணை கைதியாக கோவை சிறையில் ஒன்பதரை ஆண்டுகளை இழந்து, குற்றமற்றவர் என்று விடுதலையான மதானியின் உண்மை முகத்தைக் காட்டுவதற்கு ஊடகங்களுக்கு மனமில்லை. மதானியைக் கொச்சைப்படுத்தும் போர்வையில், முஸ்லிம்களின் உணர்வுகளைக் காயப்படுத்திய சன் டிவிக்கு தமிழக முஸ்லிம்கள் உடனடி பதிலடி கொடுத்தனர். தமிழகம் முழுவதும் இருந்து கிளம்பிய எதிர்ப்பு அலைக்குப் பணிந்து, தனது தவறை உணர்ந்ததாக வருந்தியது சன் டிவி.

இணைய தளங்களில் ஜெயமோகன் போன்ற இந்துத்துவ சிந்தனை உடைய இலக்கிய பயங்கரவாதிகள், மதானியை தீவிரவாதத்தின் ஊற்றாக சித்தரித்துக் கொண்டிருக்கின்றனர். இளம் தலை முறையினரின் களமாகத் திகழும் இணைய தளத்தில், முஸ்லிம் சமூகத்தின் போராளிகளை கொடூரமானவர்களாகவும், மனித குல விரோதிகளாகவும் காட்டுவதன் மூலம், முஸ்லிம்கள் மீதான வெறுப்பு வெகு மக்களிடம் பற்றிப் பரவுவதற்கு திட்டமிட்டு வேலை செய்கின்றனர்.

அறியாமையில் சிக்கி உழலும் முஸ்லிம் சமூகத்திற்கு, ஜெயமோகனையும் தெரியாது; இணைய தளமும் புரியாது என்பதுதான், உச்சக்கட்ட பரிதாபம்.

கருத்துருவாக்கம் செய்யக் கூடிய வலிமை மிகுந்த களமான ஊடகத்தில் முஸ்லிம்கள் இல்லை என்பதுதான், இத்தகைய அவலங்களுக்கு காரணமாக இருக்கிறது.

முஸ்லிம்கள் ஊடகத்தில் மட்டுமா இல்லை? அரசியலில் இல்லை; அதிகாரத்தில் இல்லை; கலை இலக்கியத்தில் இல்லை; பண்பாட்டுத் தளத்திலும் இல்லை...... இல்லை, இல்லை, இல்லவே இல்லை... இருப்பதெல்லாம் உள் முரண்பாடுகளும், குழுச் சண்டையும், கொள்கை மோதலும் தான்...

முஸ்லிம்களே! இனியும் இழப்பதற்கு எதுவுமில்லை; மீட்பதற்கோ ஆயிரம் இருக்கிறது.

[நன்றி: சமநிலைச் சமுதாயம்]

-ஆளூர் ஷாநவாஸ் ( mediasteps@gmail.com)

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்

Sat 28

Click here to bookmark this link.Channel Image21:45 ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3) இஸ்லாம்குரல்.காம்
பொறுமை அல்லாஹ் கூறுகிறான்: ‘இறைநம்பிக்கை கொண்டவர்களே! பொறுமையை மேற்கொள்ளுங்கள். (எதிரிகளை விஞ்சும் வகையில்) பொறுமையில் நிலைத்திருங்கள். (சத்தியத்திற்காகத் தொண்டு செய்திட) எப்பொழுதும் ஒருங்கிணைந்து முனைப்புடன் இருங்கள்” (3:200) மேலும் கூறுகிறான்: ‘சிறிதளவு அச்சத்தாலும் பசியாலும் உடைமைகள், உயிர்கள், விளைபொருள்களில் இழப்பை ஏற்படுத்தியும் திண்ணமாக உங்களை நாம் சோதிப்போம். (இந்தச் சூழ்நிலைகளில்) பொறுமையை மேற்கொள்வோருக்கு (நபியே!) நீர் நற்செய்தி சொல்வீராக! ‘ (2:155) மேலும் கூறுகிறான்: ‘பொறுமையாளர்களுக்கு அவர்களின் கூலி கணக்கின்றி நிறைவாய் வழங்கப்படும்’ (39:10) வேறோர் இடத்தில், [...]
Click here to bookmark this link.Channel Image17:00 பிரகாசமான அல்லாஹ்வின் வேத வசனங்கள். தினம் ஒரு குர்ஆன் வசனம்
(அல்லாஹ்வாகிய) அவன்தான் உங்களை இருள்களிலிருந்து பிரகாசத்தின்பால் வெளிக்கொண்டு வருவதற்காகத் தன் அடியார் மீது தெளிவானவையான வசனங்களை இறக்கி வைக்கின்றான், மேலும், நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிக்க கிருபையுடையவன், நிகரற்ற அன்புடையவன். (அல்குர்ஆன்: 57:9)
Click here to bookmark this link.Channel Image15:02 குர்ஆனும் நாமும் இஸ்லாம்கல்வி.காம் - Portal
அல்-ஜுபைல் வாராந்திர பயான் நிகழ்ச்சி வழங்குபவர்: M.J.M. ரிஸ்வான் மதனீ (அபூ நாதா) – அழைப்பாளர், அல்-ஜுபைல் தஃவா நிலையம் நாள்: 27.05.2010 இடம்: ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப் (ரழி) பள்ளி வளாகம், அல்-ஜுபைல் Download flash video – Size: 129 MB Audio Play: Download mp3 audio – Size: 22.1 MB 3GP format for mobile Download mobile video – Size: 63.4 MB

பதிவை முழுமையாகப் பார்க்க தலைப்பின் சுட்டியை சொடுக்கவும். அல்லது www.islamkalvi.com தளத்திற்கு செல்லவும்.
Click here to bookmark this link.Channel Image14:37 ஈமானின் பெறுமதி! (பாகம்-2) இஸ்லாம்கல்வி.காம் - Portal
அல்-ஜுபைல் வாராந்திர பயான் நிகழ்ச்சி வழங்குபவர்: M.J.M. ரிஸ்வான் மதனீ (அபூ நாதா) – அழைப்பாளர், அல்-ஜுபைல் தஃவா நிலையம் நாள்: 22.04.2010 இடம்: ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப் (ரழி) பள்ளி வளாகம், அல்-ஜுபைல் Download flash video – Size: 138 MB Audio Play: Download mp3 audio – Size: 23.5 MB 3GP format for mobile Download mobile video – Size: 67.4 MB

பதிவை முழுமையாகப் பார்க்க தலைப்பின் சுட்டியை சொடுக்கவும். அல்லது www.islamkalvi.com தளத்திற்கு செல்லவும்.
Click here to bookmark this link.Channel Image01:05 தொழுகையின் தாக்கங்கள்! – Audio/Video சுவனத்தென்றல்
நிகழ்ச்சி : ரமலான் சிறப்பு சொற்பொழிவு நாள் : 15-08-2008 இடம் : ரமலான் 2010 சுவனத்து பூஞ்சோலை கூடாரம், பஹாஹீல், குவைத் நிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய வழிகாட்டி மையம், குவைத் ஆடியோ : (Download) {MP3 format -Size : 14.81 MB}
Click here to bookmark this link.Channel Image00:52 சொர்க்கத்தின் இன்பங்கள்! – Audio/Video சுவனத்தென்றல்
நிகழ்ச்சி : ரமலான் சிறப்பு சொற்பொழிவு நாள் : 14-08-2008 இடம் : ரமலான் 2010 சுவனத்து பூஞ்சோலை கூடாரம், பஹாஹீல், குவைத் நிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய வழிகாட்டி மையம், குவைத் ஆடியோ : (Download) {MP3 format -Size : 15.1 MB}

Fri 27

Click here to bookmark this link.Channel Image16:53 நன்மை - நன்மையின் மேல் நன்மை. தினம் ஒரு குர்ஆன் வசனம்
ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்ல அமல்கள் செய்துவரும் தன் அடியார்களுக்கு அல்லாஹ் நன்மாராயங் கூறுவதும் இதுவே (நபியே!) நீர் கூறும்; "உறவினர்கள் மீது அன்பு கொள்வதைத் தவிர, இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை!" அன்றியும், எவர் ஒரு நன்மை செய்கிறாரோ, அவருக்கு நாம் அதில் பின்னும் (பல) நன்மையை அதிகமாக்குவோம். நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நன்றியை ஏற்றுக் கொள்பவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்: 42:23)
Click here to bookmark this link.Channel Image13:28 சொர்க்கத்தின் வாசல் - ரய்யான் வழிகாட்டி
"சொர்க்கத்தில் 'ரய்யான்' என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது! மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! 'நோன்பாளிகள் எங்கே?' என்று கேட்கப்படும். உடனே, அவர்கள் எழுவார்கள்; அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழையமாட்டார்கள்!" என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: ஸஹ்ல்(ரலி)
நூல்: புகாரி
Click here to bookmark this link.Channel Image12:24 ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-2-23,24) இஸ்லாம்குரல்.காம்
23,24. இருவரும் சுவனம் சென்றனர்! ஹதீஸ் 23: ‘இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: ஆதத்தின் மகனுக்கு ஓர் ஓடை நிறைய தங்கம் கிடைத்தால் இரண்டு ஓடைகள் நிறைய தங்கம் வேண்டும் என்று விரும்புகிறான். அவனது வாயை மண்ணைத் தவிர வேறெதுவும் நிரப்பப் போவதில்லை! எவர் பாவமீட்சி தேடி அல்லாஹ்வின் பக்கம் மீளுகிறாரோ அவருக்கு அல்லாஹ் மன்னிப்பு வழங்குகிறான் ” (நூல்: புகாரி, முஸ்லிம்) ஹதீஸ் 24: அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ரஸூலுல்லாஹ்(ஸல்) [...]
Click here to bookmark this link.Channel Image11:50 மறுமையே நமது நிலையான வாழ்வு இஸ்லாம்கல்வி.காம் - Portal
வழங்குபவர்: றிஸ்கான் முஸ்தீன் ஸலபி நாள்: 10-09-2009 இடம்: அல்-ஜுபைல் தஃவா நிலைய பள்ளி வளாகம் ரமழான் இரவு பயான் நிகழ்ச்சி – ஹிஜ்ரி 1430 Download flash video – Size: 127 MB Audio Play: Download mp3 audio – Size: 21.1 MB 3GP format for mobile Download mobile video – Size: 61.4 MB

பதிவை முழுமையாகப் பார்க்க தலைப்பின் சுட்டியை சொடுக்கவும். அல்லது www.islamkalvi.com தளத்திற்கு செல்லவும்.
Click here to bookmark this link.Channel Image11:21 உள நோய்களும் அதற்கான தீர்வுகளும் இஸ்லாம்கல்வி.காம் - Portal
வழங்குபவர்: முஹம்மத் இம்தியாஸ் மதனீ நாள்: 10-09-2009 இடம்: அல்-ஜுபைல் தஃவா நிலைய பள்ளி வளாகம் ரமழான் இரவு பயான் நிகழ்ச்சி – ஹிஜ்ரி 1430 Download flash video – Size: 142 MB Audio Play: Download mp3 audio – Size: 23.5 MB 3GP format for mobile Download mobile video – Size: 67.5 MB

பதிவை முழுமையாகப் பார்க்க தலைப்பின் சுட்டியை சொடுக்கவும். அல்லது www.islamkalvi.com தளத்திற்கு செல்லவும்.
Click here to bookmark this link.Channel Image08:43 எமது சொல்லும், செயலும் இஸ்லாமே என வாழ்ந்தவர்! ஸஹாபாக்களின் வாழ்வினிலே...
 பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அல்கமா இப்னு கைஸ்(ரஹ்) அறிவித்தார்;

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), 'பச்சை
குத்திவிடும் பெண்கள், பச்சை
குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்து, தம் முன் பற்களைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (ஆக) அல்லாஹ் தந்த உருவத்தை மாற்றிக்கொள்ள முயலும் பெண்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்?' என்று கூறினார்கள். இச்செய்தி பனூ அசத் குலத்தைச் சேர்ந்த, 'உம்மு யஅகூப்' எனப்படும். ஒரு பெண்மணிக்கு எட்டியது. அந்தப் பெண் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் வந்து, 'இப்படிப்பட்ட பெண்களை நீங்கள் சபித்ததாக எனக்குச் செய்தி கிடைத்துள்ளதே என்றார். அதற்கு அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர்களையும், அல்லாஹ்வின் வேதத்தில் சபிக்கப்பட்டு உள்ளவர்களையும் நான் ஏன் சபிக்கக்கூடாது?' என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண், '(குர்ஆன் பிரதியில்) இரண்டு அட்டைகளுக்கிடையிலுள்ள அனைத்தையும் நான் ஓதியுள்ளேன். நீங்கள் குறிப்பிட்டதை நான் அதில் காணவில்லையே!' என்று கேட்டதற்கு அவர்கள், 'நீ குர்ஆனை(ச் சரியாக) ஓதியிருந்தால் அதில் நான் கூறியதைக் கண்டிருப்பாய். 'இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ, அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவர் உங்களைத் தடுப்பதைவிட்டும் நீங்கள் விலகி இருங்கள்' எனும் (திருக்குர்ஆன் 59:7 வது) வசனத்தை நீ ஓதவில்லையா?' என்று கேட்டார்கள். அந்தப் பெண், 'ஆம் (ஒதினேன்)' என்று பதிலளித்தார். அப்துல்லாஹ்(ரலி), 'நபி(ஸல்) அவர்கள் (மேலே குறிப்பிட்ட) இவற்றைச் செய்ய வேண்டாமெனத் தடுத்துள்ளார்கள்' என்று கூறினார்கள். அந்தப் பெண்மணி, 'உங்கள் துணைவியார் இதைச் செய்வதாக கருதுகிறேன்' என்று கூறினார். அப்துல்லாஹ்(ரலி), 'சரி, நீ சென்று, (என் மனைவியைப்) பார்!' என்று கூறினார்கள். எனவே, அந்தப் பெண் சென்று பார்த்தார். தம் எண்ணப்படி எதையும் அவர் காணவில்லை. அப்போது அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), 'என் மனைவி (மட்டும்) அப்படிச் செய்பவளாக இருந்தால், அவளுடன் நான் சேர்ந்து வாழமாட்டேன்' என்று கூறினார்கள். நூல்;புஹாரி எண் 4886
 
அன்பானவர்களே! நபித் தோழர்களில் மிகச்சிறந்தவர்களில் ஒருவரான இப்னு மஸ்வூத்[ரலி] அவர்கள், பச்சை குத்துவது உள்ளிட்ட அல்லாஹ் வடிவமைத்ததை மாற்றுபவர்களை சபிக்கிறார்கள். இச்செய்தி ஒரு பெண்மணிக்கு எட்டுகிறது. சரி! சொன்னவர் சாமான்யர் அல்ல. ஒரு உயர்வான நபித்தோழர். எனவே அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று அப்படியே நம்பிவிடவில்லை. மாறாக, இப்னு மஸ்வூத்[ரலி] அவர்களிடம் வந்து உங்களின் கூற்றுக்கு என்ன ஆதாரம்..? என்கிறார். இப்னு மஸ்வூத்[ரலி] அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தில் சபிக்கப் பட்டுள்ளவர்களை நான் சபிக்கக் கூடாதா என்கிறார்கள். அப்போதும் அப்பெண்மணி விடவில்லை. குர்ஆணை முழுமையாக ஒதியுள்ளேன் எனவே நீங்கள் கூறுவது போல இல்லையே என்கிறார். இந்த அளவுக்கு சஹாபிப் பெண்கள் தெளிவாக இருந்துள்ளார்கள். குர்ஆணோடு முழு தொடர்போடு இருந்துள்ளார்கள். ஒருவர் கூறும் சட்டம் குர்ஆனில் இல்லை என்று அடித்து சொல்லும் அளவுக்கு குர்ஆணை முழுமையாக மனனம் செய்துள்ளார்கள். ஆனால் இன்று நம்முடைய பெண்கள்  மட்டுமல்ல; ஆண்களில் கூட  பெரும்பாலோருக்கு குர்ஆண்  ஓத தெரிவதில்லை. காரணம் போடுபோக்குத்தான். எதுவா இருந்தாலும் ஆலிம்ஷாக்களிடம் கேட்டுக்கொள்வோம். அவர்கள் சொல்வதை அப்படியே அமுல்படுத்துவோம் என்ற மெத்தனப்போக்குத்தானே  இத்தனை குழப்பங்களுக்கு வழிவகுத்தது..? இது ஒருபுறமிருக்க, இப்னு மஸ்வூத்[ரலி] அவர்களிடம் அப்பெண்மணி, 'எல்லாம் சரிதான் ஆனா ஒங்க வீட்டுல ஒங்க துணைவியார் செய்கிறாகளாமே' என இழுக்க, சட்டென இப்னு மஸ்வூத்[ரலி] அவர்கள் என் வீட்டில் போய் பாருங்கள் என்கிறார்கள். அதோடு இறுதியாக, என் மனைவி மட்டும் அப்படி செய்பவளாக இருந்தால் அவளோடு நான் சேர்ந்து வாழமாட்டேன் என்கிறார்கள் இப்னு மஸ்வூத்[ரலி] அவர்கள். இன்றைக்கு வெளியிலே மார்க்க சட்டம் பேசக்கூடிய நம்மில் பலரின் வீட்டில் நாம் பேசக்கூடிய சட்டங்கள் பெரும்பாலும் நமது குடும்பத்தாரால் அமுல்படுத்தப்படுவதில்லை. ஆனாலும் நாம் அதை கண்டுகொள்வதில்லை. அவ்வளவு ஏன்..? பல நேரங்களில் நாமே பல அமல்களை கோட்டை விடக்கூடியவர்களாக இருக்கிறோம். 'ஊருக்குத்தான் உபதேசம்'  என்பதற்கு ஏற்ப நமது செயல்பாடுகள் உள்ளன.ஆனால் அருமை சஹாபா பெருமக்கள் சொல்லிலும் செயலிலும் தூய்மையாளர்களாக திகழ்ந்ததோடு, தந்து குடும்பத்தார் விசயத்திலும் அத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இப்னு மஸ்வூத்[ரலி] அவர்களின் இந்த செய்தி உணர்த்துகிறது.
எல்லாம் வல்ல அல்லாஹ் மார்க்கத்தை சொல்லில் மட்டுமல்ல; செயலிலும் கடைபிடிக்க அருள்புரிவானாக!
Click here to bookmark this link.Channel Image04:14 ரமலான் தந்த மாற்றம்! – Audio/Video சுவனத்தென்றல்
நிகழ்ச்சி : ரமலான் சிறப்பு சொற்பொழிவு நாள் : 12-08-2008 இடம் : ரமலான் 2010 சுவனத்து பூஞ்சோலை கூடாரம், பஹாஹீல், குவைத் நிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய வழிகாட்டி மையம், குவைத் ஆடியோ : (Download) {MP3 format -Size : 16.77 MB}
Click here to bookmark this link.Channel Image03:55 'பட்டு' இவரது கைக்குட்டைக்கு கிட்ட நிற்குமா ...? ஸஹாபாக்களின் வாழ்வினிலே...
பிஸ்மில்லாஹிர்  ரஹ்மானிர் ரஹீம் .
அகழ்ப்போரின்போது ஸஅத் இப்னு முஆத்(ரலி) தாக்கப்பட்டார்கள். அன்னாரின் கை நரம்பில் குறைஷிகளில் ஒருவனான ஹிப்பான் இப்னு அரிஃகா என்றழைக்கப்பட்டவன் அம்பெய்து (அவர்களைக் காயப்படுத்தி)விட்டான். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை அருகிலிருந்து நலம் விசாரிப்பதற்கு வசதியாக (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலிலேயே (அவருக்குக்) கூடாரமொன்றை அமைத்தார்கள். அகழ்ப் போரை முடித்துக் கொண்டு வந்த இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டுக் குளித்தார்கள். அப்போது ஜிப்ரீல்(அலை) அவர்கள் தங்களின் தலையிலிருந்து புழுதியைத் தட்டிய வண்ணம் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, 'நாங்கள் இன்னும்  ஆயுதங்களைக் கீழே வைக்கவில்லை. அவர்களை நோக்கி (படை நடத்தி)ச் செல்லுங்கள்" என்று கூறினார்கள். அதற்கு 'எங்கே? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது 'பனூ குறைழா' குலத்தினர் (வசிப்பிடம்) நோக்கி ஜிப்ரீல் (அலை) அவர்கள் சைகை செய்தார்கள். உடனே,  உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், பனூ குறைழா நோக்கிச் சென்றார்கள்.(பல நாள் முற்றுகைக்குப் பின்னர்) ஸஅத் இப்னு முஆத்(ரலி) அவர்களின் தீர்ப்பை ஏற்பதாக ஒப்புக் கொண்டு (யூதர்களான) 'பனூ குறைழா' குலத்தார் (கைபரிலிருந்த தங்கள் கோட்டையிலிருந்து) இறங்கி வந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள ஸஅத் இப்னு முஆத்[ரலி] அவர்களுக்கு ஆளனுப்பிட, அன்னார் கழுதையின் மீது (சவாரி செய்தபடி) வந்தார்கள். (நபிகளார் தாற்காலிமாக அமைத்திருந்த) தொழுமிடத்திற்கு அருகே அன்னார் வந்து சேர்ந்ததும், நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் தலைவரை... அல்லது உங்களில் சிறந்த வரை... நோக்கி எழுந்திரு(த்துச் சென்று அவரை வாகனத்திலிருந்து இறக்கி விடுங்கள்" என்று அன்சாரிகளிடம் கூறினார்கள். பிறகு, '(சஅதே!) இவர்கள் உங்கள் தீர்ப்பின் மீது (இசைவு தெரிவித்து) இறங்கி வந்திருக்கிறார்கள். (நீங்கள் என்ன தீர்ப்பு அளிக்கப் போகிறீர்கள்?') என்று கேட்டார்கள். ஸஅத்(ரலி), 'இவர்களில் போரிடும் வலிமை கொண்டவர்களை நீங்கள் கொன்று விட வேண்டும்; இவர்களுடைய பெண்களையும் குழந்தைகளையும் நீங்கள் கைது செய்திட வேண்டும் என்று நான் தீர்ப்பளிக்கிறேன்" என்றார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் தீர்ப்புப்படியே நீங்கள் தீர்ப்பளித்தீர்கள்."... அல்லது 'அரசனின் (அல்லாஹ்வின்) தீர்ப்புப்படியே நீங்கள் தீர்ப்பளித்தீர்கள்" என்று கூறினார்கள்.
நூல்; புஹாரி எண் 4121 எண் 4122
 
ஸஅத் இப்னு முஆத்[ரலி] அவர்கள் மதீனாவில் அவ்ஸ் கோத்திரத்தாரின் தலைவராக இருந்தார்கள். இந்த கோத்திரத்தாரோடு பனூகுறைளா கோத்திரத்தார் நட்புறவு பாராட்டி வந்தனர். எனவே அவ்ஸ் கோத்திரத்தின் தலைவரான ஸஅத் இப்னு முஆத்[ரலி] அவர்கள் நமக்கு சாதகமான தீர்ப்பை வழங்குவார்கள் என கருதினார்கள். ஆனால் அல்லாஹ்வின் நேசரான ஸஅத் இப்னு முஆத்[ரலி] அவர்களோ, இறைவனின் பொருத்தத்தை மட்டும் நாடியவர்களாக, அவன் விரும்பும் தீர்ப்பை பனூகுறைலாக்கள் விசயத்தில் வழங்குகிறார்கள். அதற்காக அல்லாஹ்வின் தீர்பபுப் படியே தீர்ப்பளித்தீர்கள் என்று நபியவர்களால் பாராட்டப் படுகிறார்கள். மேலும் ஸஅத் இப்னு முஆத்[ரலி] அவர்கள், நபி[ஸல்] அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தார் மீதும் நேசம் கொண்டவர்களாக திகழ்ந்தார்கள். அறிவுச்சுடர் அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் மீது அவதூறு சொல்லப்பட்டபோது, இறைத்தூதர் அவர்களே! அவதூறு சொன்னவர்களில்  எனது கோத்திரத்தார் இருந்து, நீங்கள் உத்தரவிட்டால் அவனது கழுத்தை நான் துண்டிக்கிறேன் என்று முழங்கியவர். அதுபோலவே ஸஅத் ரலி அவர்கள் மீது நபி[ஸல்] வர்களும் மிகுந்த நேசம் கொண்டவர்களாக இருந்தார்கள். எனவேதான் போரில் ஸஅத் [ரலி] அவர்கள் காயமுற்றவுடன்  அவர்களை அருகிலிருந்து நலம் விசாரிப்பதற்காக மஸ்ஜிதுன் நபவியிலேயே அவருக்காக கூடாரம் அமைத்து கவனித்தார்கள். நபியவர்கள் மட்டுமன்றி, அல்லாஹ்வும் ஸஅத்[ரலி] அவர்களை நேசித்தான் என்பதற்கு, ஸஅத் இப்னு முஆத்[ரலி] அவர்களின் இறப்பிற்காக அர்ஷு இறைசிம்மாசனம் அசைந்தது [புஹாரி] சான்றாக உள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஸஅத் இப்னு முஆத்[ரலி] அவர்களுக்கு மகத்தான சுவன பதவிகள் காத்துக் கொண்டிருக்கின்றன. அது குறித்து அறிந்துகொள்ள ஒரு பொன்மொழி;
 
அனஸ்(ரலி) அறிவித்தார்கள்;

நபி(ஸல்) அவர்களுக்கு மெல்லிய பட்டாலான அங்கி ஒன்று அன்பளிப்பாகத் தரப்பட்டது. அவர்கள் பட்டுத் துணியை (அணிவதைத்) தடை செய்து வந்தார்கள். மக்களோ அந்த அங்கி(யின் தரம் மற்றும் மென்மை)யைக் கண்டு வியந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! சொர்க்கத்தில் ஸஅத் இப்னு முஆ
துக்கு கிடைக்கவிருக்கும் கைக்குட்டைகள் (தரத்திலும் மென்மையிலும்) இதைவிடத் தரமானவையாயிருக்கும்" என்று கூறினார்கள்.[புஹாரி எண் 2615 ]
 
எங்கள் இறைவா! உனது திருப்தியே இலக்காக கொண்டு வாழ்ந்த அந்த நல்லறத்தோழர்களின் வழியில் எங்களையும் வாழ அருள்புரிவாயாக!

Thu 26

Click here to bookmark this link.Channel Image17:28 நயவஞ்சக அமல்கள். தினம் ஒரு குர்ஆன் வசனம்
நயவஞ்சகர்களான ஆடவரும் நயவஞ்சகர்களான பெண்டிரும் அவர்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பாவங்களைத் தூண்டி நன்மைகளை விட்டும் தடுப்பார்கள். அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல்) தம் கைகளை மூடிக் கொள்வார்கள், அவர்கள் அல்லாஹ்வை மறந்து விட்டார்கள், ஆகவே அவன் அவர்களை மறந்துவிட்டான் - நிச்சயமாக நயவஞ்சகர்கள் பாவிகளே ஆவார்கள். (அத்தவ்பா 67)

Wed 25

Click here to bookmark this link.Channel Image19:03 உடலும். பேச்சும் அழகு - உள்ளமோ மிக மோசமான நயவஞ்சகம் தினம் ஒரு குர்ஆன் வசனம்
இவர்களை நீர் பார்த்தால் இவர்களுடைய உடல்( அமைப்பு)கள் உம்மை ஆச்சரியப்படுத்தும், அன்றியும் இவர்கள் பேசினால் இவர்களுடைய பேச்சை நீர் (கவனித்துக்) கேட்பீர், எனினும் இவர்கள் (நேர்மையானவர்கள் அல்லர்: சுவரில்) சாய்த்து வைக்கப்பட்ட மரங்கள் போன்று இருக்கின்றனர், ஒவ்வொரு சப்தமும் தங்களுக்கு எதிரானது என்று எண்ணுகிறார்கள், இவர்கள் தான் (உம்) பகைவர்கள், ஆகவே இவர்களிடம் நீர் எச்சரிக்கையாக இருப்பீராக, அல்லாஹ் இவர்களை அழித்து விடுவான், இவர்கள் (சத்தியத்திலிருந்து) எங்கு செல்கின்றனர்? (அல்முனாபிக்கூன் 04)
Click here to bookmark this link.Channel Image11:56 இறைவனுக்கு எதிரிகள்; எங்களுக்கும் எதிரிகளே! ஸஹாபாக்களின் வாழ்வினிலே...
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
பத்ர் போரில் பிடிபட்ட கைதிகள் குறித்து, நபி (ஸல்) தங்களது தோழர்களுடன் ஆலோசித்தார்கள். அப்போது அபூபக்ர் (ரழி) "அல்லாஹ்வின் தூதரே! இவர்கள் நமது தந்தை வழி உறவினர்கள். நமது சகோதரர்கள் மற்றும் நெருக்கமான குடும்பத்தார்கள். எனவே, (இவர்களை கொலை செய்யாமல்) இவர்களிடம் (ஃபித்யா) ஈட்டுத்தொகை பெற்றுக் கொண்டு இவர்களை விடுதலை செய்வோம். நாம் வாங்கும் ஈட்டுத்தொகை இறைநிராகரிப்பாளர்களை எதிர்ப்பதற்கு நமக்கு உதவியாக இருக்கும். அதிவிரைவில் அல்லாஹ் இவர்களுக்கு நேர்வழி காட்டக் கூடும். அப்போது இவர்களும் நமக்கு உதவியாளர்களாக மாறுவர்" என்று கூறினார்கள்.

பின்பு நபி (ஸல்) உமர் (ரழி) அவர்களிடம் "கத்தாபின் மகனே! நீங்கள் என்ன யோசனை கூறுகிறீர்கள்?" எனக் கேட்டார்கள். "அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூபக்ர் (ரழி) அவர்கள் கூறிய ஆலோசனையை நான் விரும்பவில்லை. மாறாக, இவர்களைக் கொலை செய்வதே எனது யோசனை. எனது இன்ன உறவினரை என்னிடம் கொடுங்கள். அவர் கழுத்தை நான் வெட்டுகிறேன். அக்கீல் இப்னு அபூதாலிபை அலீ (ரழி) அவர்களிடம் கொடுங்கள். அலீ (ரழி) அவர் கழுத்தை வெட்டட்டும். ஹம்ஸா (ரழி) அவர்களிடம் அவரது இன்ன சகோதரரை கொடுங்கள். ஹம்ஸா (ரழி) அவரது கழுத்தை வெட்டட்டும். இதன்மூலம் இணைவைப்பவர்கள் மீது எங்களது உள்ளத்தில் எந்தப் பிரியமும் இல்லை என்று அல்லாஹ் தெரிந்து கொள்வான். அது மட்டுமா! இப்போது கைது செய்யப்பட்டிருப்பவர்கள் குறைஷிகளின் தலைவர்களும் அவர்களை வழி நடத்தும் கொடுங்கோலர்களும் ஆவார்கள்" என்று உமர் (ரழி) கூறினார்கள்.

அபூபக்ர் (ரழி) கூறியதையே நபி (ஸல்) ஏற்று கைதிகளிடம் ஈட்டுத்தொகைப் பெற்று உரிமையிட்டார்கள். உமர் (ரழி) கூறுகிறார்கள்:
 
அபூபக்ர் (ரழி) கூறியதையே நபி (ஸல்) விரும்பினார்கள். நான் கூறியதை விரும்பவில்லை. எனவே கைதிகளிடம் ஈட்டுத்தொகைப் பெற்று உரிமையிட்டார்கள். அதற்கு அடுத்த நாள் நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். நபி (ஸல்) அவர்களும், அபூபக்ர் (ரழி) அவர்களும் அழுதவர்களாக இருந்தார்கள். நான் "அல்லாஹ்வின் தூதரே! நீங்களும் உங்களது தோழரும் ஏன் அழுகிறீர்கள்? அழுகைக்குரிய செய்தி எதுவும் இருப்பின், முடிந்தால் நானும் அழுகிறேன். முடியவில்லையென்றால் நீங்கள் அழுவதற்காக நானும் அழ முயல்கிறேன்" என்றேன். அதற்கு நபி (ஸல்) "ஈட்டுத்தொகை வாங்கியதின் காரணமாக உமது தோழர்களுக்கு ஏற்பட்டதை எண்ணி நான் அழுகிறேன். அருகில் உள்ள ஒரு மரத்தை சுட்டிக் காண்பித்து இம்மரத்தை விட நெருக்கமாக அவர்களுக்குரிய வேதனை எனக்குக் காண்பிக்கப்பட்டது" என்றார்கள்.

இது தொடர்பாகவே அல்லாஹ் இந்த வசனத்தை இறக்கினான்:

(இஸ்லாமையும் முஸ்லிம்களையும் அழித்தொழிக்க வந்த) எதிரிகளைக் கொன்று குவிக்கும் வரை அவர்களை கைதியாக்குவது இறைத்தூதருக்கு ஆகுமானதல்ல. நீங்கள் இவ்வுலகப் பொருளை விரும்புகிறீர்கள். அல்லாஹ்வோ (உங்களுக்கு) மறுமை வாழ்வை விரும்புகிறான். அல்லாஹ் மிகைத்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். அல்லாஹ்விடம் (பத்ர் போரில் கலந்த முஸ்லிம்களுக்கு மன்னிப்பு உண்டு என்ற) விதி ஏற்கனவே உறுதி செய்யப்படாமலிருப்பின் நீங்கள் (பத்ர் போரில் கைதிகளிடமிருந்து ஈட்டுத் தொகையை) வாங்கியதில் மகத்தானதொரு வேதனை உங்களைப் பிடித்திருக்கும். (அல்குர்ஆன் 8:67, 68)
நூல்; முஸ்லிம்.
 
அன்பானவர்களே! அல்லாஹ்வின் பகைவர்களை முதன்முதலில் வெற்றிகொண்டு இம்மண்ணில் ஏகத்துவத்தை நிலை நாட்டிய பத்ர் போரில் உயிரோடு பிடிக்கப்பட்ட கைதிகள்  குறித்து நபி[ஸல்] அவர்கள் ஆலோசித்தபோது, உமர்[ரலி] அவர்கள் கூறிய வார்த்தைகள் அவர்களது ஈமானிய உறுதியையும், இறைவன் மீது கொண்ட அளப்பரிய நேசத்தையும் வெளிப்படுத்துவதோடு, இறைவனது பகைவர்கள்  என்னதான் எங்களின் ரத்தபந்தமாக இருந்தாலும் அவர்கள் எங்களுக்கு எதிரிகளே என்று கர்ஜித்த அந்த வீரமும், அல்லாஹ் பெரியவன்! அல்லாஹ்வின் விருப்பத்திற்கேற்ப உமர்[ரலி] அவர்கள் மொழிந்தவையாகும். அதற்கு உமர்[ரலி] அவர்களின் கருத்தை ஆதரித்து அல்லாஹ் இறக்கிய வசனம் சான்றுபகர்கிறது. மேலும், இந்த வசனம் இறங்கிய மாத்திரமே அல்லாஹ்வின்தூதர்[ஸல்] அவர்களும், தோழர்களும் அழுவதைக் கண்ட உமர்[ரலி] அவர்கள், இறைத்தூதர் அவர்களே! ஏன் அழுகிறீர்கள் என்று சொன்னால் நானும் அழுவேன். அழ முடியவில்லையாயின் அழுக முயற்ச்சிக்கிறேன் என்றார்களே உமர் அவர்கள். இதில் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள்  மீது உமர்[ரலி] கொண்டிருந்த அளப்பரிய நேசம் வெளிப்படுவதை காணலாம். அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் சிரித்தால் சிரித்து; அவர்கள் அழுதால் அழுது, எங்களுக்கென தனி சந்தோசம் எதுவுமில்லை; எங்கள் தலைவரின் மகிழ்ச்சியே எங்களின் மகிழ்ச்சி என்று வாழ்ந்த அந்த உத்தமத் தோழர்களை உலகம் உள்ளளவும் உண்மை முஃமின்களின் உள்ளம் நினைவு கூறும் இன்ஷா அல்லாஹ்.
 
எல்லாம் வல்ல அல்லாஹ் அந்த நல்லறத் தோழர்களுக்கு சுவனத்தில் உயர்வான அந்தஸ்த்தை வழங்கிடுவானாக!
Click here to bookmark this link.Channel Image04:35 ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-2-22) இஸ்லாம்குரல்.காம்
22. இதனை விடவும் சிறந்த பாவமீட்சி உண்டா? ஹதீஸ் 22: இம்றான் ஹுஸைன்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ”ஜுஹைனா என்ற குலத்தைச் சேர்ந்த ஒருபெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்தாள். அவள் விபச்சாரத்தில் ஈடுபட்டதினால் கருவுற்றிருந்தாள். அவள் சொன்னாள்: அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனை பெறும் அளவுக்குத் தவறு செய்து விட்டேன். என் மீது தண்டனை நிறைவேற்றுங்கள். நபி(ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணின் பொறுப்பாளரை அழைத்தார்கள். அவரிடம் சொன்னார்கள்: நீர் இவளிடம் மிகவும் நல்ல முறையில் நடந்து கொள்ளும். குழந்தை [...]
Click here to bookmark this link.Channel Image02:33 மனத்தூய்மை! – Audio/Video சுவனத்தென்றல்
நிகழ்ச்சி : ரமலான் சிறப்பு சொற்பொழிவு நாள் : 11-08-2010 இடம் : ரமலான் 2010 சுவனத்து பூஞ்சோலை கூடாரம், பஹாஹீல், குவைத் நிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய வழிகாட்டி மையம், குவைத் ஆடியோ : (Download) {MP3 format -Size : 11.31 MB}

Tue 24

Click here to bookmark this link.Channel Image17:49 நயவஞ்சகம் எவ்வாறு உதயமாகிறது. தினம் ஒரு குர்ஆன் வசனம்
அவர்களில் சிலர் அல்லாஹ் தன் அருட்கொடையிலிருந்து நமக்கு(ச் செல்வத்தை) அளித்தால் மெய்யாகவே நாம் (தாராளமாக தான) தர்மங்கள் செய்து நல்லடியார்களாகவும் ஆகிவிடுவோம்' என்று அல்லாஹ்விடம் வாக்குறுதி செய்தார்கள். (அவ்வாறே) அவன் அவர்களுக்குத் தன் அருட்கொடையிலிருந்து வழங்கிய போது அதில் அவர்கள் உலோபித்தனம் செய்து அவர்கள் புறக்கணித்தவர்களாக பின் வாங்கி விட்டனர்.

எனவே அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும், அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததனாலும் அல்லாஹ் அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான். (அத்தவ்பா 75,76,77)
Click here to bookmark this link.Channel Image12:52 விருந்துக்கு அழைத்தால்... வழிகாட்டி
"விருந்துக்கு அழைத்தால் அதை ஏற்றுக்கொள்வது முஸ்லிமின் கடமைகளுள் ஒன்று" என்று நபி(ஸல்...) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
நூல்கள்: புகாரி, முஸ்லிம்
Click here to bookmark this link.Channel Image10:36 தங்கத்தை விட தாஹா நபியின் கட்டளைக்கு முன்னுரிமை தந்தவர்! ஸஹாபாக்களின் வாழ்வினிலே...
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். 
அம்ர் இப்னு ஷரீத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

நான், ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களிடம் தங்கியிருந்தேன். அப்போது மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) வந்து, தம் கையை என்னுடைய தோள் புஜங்களில் ஒன்றில் வைத்தார்கள். அப்போது (அடிமையாயிருந்து) நபி(ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அபூ ராஃபிஉ(ரலி) வந்து, 'ஸஅதே! எனக்குச் சொந்தமான இரண்டு அறைகளை என்னிடமிருந்து வாங்கிக் கொள்வீராக!' எனக் கூறினார்கள். அதற்கு ஸஅத்(ரலி) 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவற்றை நான் வாங்க மாட்டேன்!" என்றார்கள். அருகிலிருந்த மிஸ்வர்(ரலி) அவர்கள், ஸஅத்(ரலி) அவர்களிடம் 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீர் வாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்!" என்றார்கள். அப்போது ஸஅத்(ரலி), 'அல்லாஹ்வீன் மீது ஆணையாக! தவணை அடிப்படையில் நாலாயிரம் வெள்ளிக் காசைத் தவிர உமக்கு அதிகமாகத் தரமாட்டேன்!" என்று கூறினார்கள். அதற்கு அபூ ராஃபிவு(ரலி), 'ஐநூறு தங்கக் காசுகளுக்கு அது கேட்கப்பட்டுள்ளது; அண்டை வீட்டில் இருப்பவர் அண்மையில் இருப்பதால் அவரே அதிகம் உரிமை படைத்தவர் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றிராவிட்டால் ஐநூறு தங்கக் காசுக்கு கேட்கப்பட்டதை நாலாயிரம் வெள்ளிக்காசுக்கு உமக்கு விற்க மாட்டேன்' என்று கூறிவிட்டு ஸஅதுக்கே விற்றார்.
ஆதாரம் புஹாரி எண் 2258
 
அன்பானவர்களே! நாம் நம்முடைய வீட்டை விற்பதாக இருந்தால் நமது வீட்டை வாங்கிக்கொள்கிறீர்களா என்று அண்டைவீட்டாரிடம் கேட்கத் தயங்குவோம். காரணம் பெரும்பாலும் அண்டை வீட்டினரோடு நமக்கு நல்லுறவு  இருப்பதில்லை. மேலும் நமது வீடோ அல்லது நிலமோ  மற்றவர்களுக்கு பயனளிப்பதைவிட நமது அண்டை வீட்டினருக்கே அதிக பயன்தரக் கூடியதாக இருக்கும். ஆனாலும் நாம் யார் அதிக விலை தருகிறாரோ அவருக்குத்தான் நமது வீட்டையோ,நிலத்தையோ விற்க முனவருவோம். காரணம் நமக்கு நபிகளாரின் கட்டளைகளை விட உலகத்தின் பொருளாதாரம் பிரதானமாக தெரிகிறது. ஆனால் மேற்கண்ட செய்தியில், அபூ ராஃபிஊ[ரலி] அவர்கள், ஐநூறு தங்க காசுகளுக்கு விலைக்கு கேட்கப்பட்ட தனது வீட்டை தனது அண்டை வீட்டினரான ஸஅத் இப்னு அபி வக்காஸ்[ரலி] அவர்களுக்கு, விலை குறைவாக நான்காயிரம் வெள்ளிக்காசுகளுக்கு அதுவும் தவணை  முறையில் வழங்குவதற்கு காரணம், 'அண்டை வீட்டாரே அதிக உரிமை படைத்தவர்' என்ற நபியவர்களின் கட்டளைதான் என்பதைக் காணும்போது, அந்த நல்லறத் தோழர்களுக்கு முன்னால், உலகின் செல்வாமா..? அல்லது இறைத் தூதரின் கட்டளையா..? என்ற கேள்வி வருமாயின், உலகின் செல்வங்களுக்காக ஒருபோதும் எங்கள் நபியின் கட்டளையை உதாசீனப்படுத்தமாட்டோம் என்ற அவர்களின் கொள்கை உறுதி மெய்சிலிர்க்க செய்வதாக உள்ளது. ஆனால் நாம் இன்றைக்கு உலகின் வசதி வாய்ப்ப்புகளுக்காக இன்னும் பல்வேறு விஷயங்களுக்காக தெளிவான நபியவர்களின் கட்டளையை புறக்கணிப்பவர்களாக இருப்பது உள்ளபடியே வேதனைக்குரியதாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹ், நபியவர்களின் கட்டளைக்கு அணுவளவேனும் மற்றம் செய்யாமல் நடந்த /நடக்க முயன்ற அந்த நல்லறத்தோழர்களை பொருந்திக் கொள்வானாக!
Click here to bookmark this link.Channel Image02:35 KNM-JAQH பிறை கலந்துரையாடல் LUNAR CALENDAR / சந்திர நாட்காட்டி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

ஜாக் மாநில தலைமையின் முயற்சியால், கேரளா நத்வத்துல் முஜாஹிதீன் ஜமாஅத்தினருடன் கோவையில் நடந்த பிறை  கலந்துரையாடல் வீடீயோ தொகுப்பு இடம் பெற்றுள்ளது. பிறை கணக்கு சம்மந்தமாக மாற்றுக் கருத்து கூறுபவர்கள் என்ன கூற வருகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள கீழ் கண்ட இணைப்பை கிளிக் செய்யவும்.

KNM-JAQH பிறை கலந்துரையாடல்

Share and Enjoy:

Mon 23

Click here to bookmark this link.Channel Image17:26 நிச்சயமாக கண்ணியம் எல்லாம் அல்லாஹ்வுக்கே உரியது. தினம் ஒரு குர்ஆன் வசனம்
(நபியே! இத்தகைய) நயவஞ்சகர்களுக்கு 'நிச்சயமாக நோவினை தரும் வேதனை உண்டு' என்று நன்மாரயங் கூறுவீராக! இவர்கள் முஃமின்களை விட்டும் காஃபிர்களை (தங்களுக்குரிய) உற்ற நண்பர்களாக எடுத்துக் கொள்கிறார்கள். என்ன! அவர்களிடையே இவர்கள் கண்ணியத்தை தேடுகிறார்களா? நிச்சயமாக கண்ணியம் எல்லாம் அல்லாஹ்வுக்கே உரியது. (அன்னிஸா 138,139)
Click here to bookmark this link.Channel Image16:16 முகஸ்துதியின் விபரீதம்! சுவனத்தென்றல்
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது. அல்லாஹ் கூறுகின்றான்: ‘வணக்கத்தை அல்லாஹ்வுக்கே உரித்தானவர்களாக அவனையே வணங்க வேண்டும் என்றே அவர்கள் ஏவப்பட்டுள்ளார்கள்’ (அல்-குர்ஆன் 98:5) அன்பு சகோதர, சகோதரிகளே! இந்த வசனத்தை நாம் நன்கு சிந்திக்க கடமைப்பட்டிருக்கின்றோம். தொழுகை, ஜக்காத், ஹஜ் முதற்கொண்டு நாம் செய்யக்கூடிய அனைத்து அமல்ககளும் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு முக்கிய இரண்டு நிபந்தனைகள் இருக்கின்றன. அவைகள்: நாம் செய்யும் அமல்கள் அல்லாஹ்வுக்காகவே என்ற இஃக்லாஸ் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறையில் [...]
Click here to bookmark this link.Channel Image08:03 ஆனந்த சுதந்திரம்... ...அடைந்து விட்டோமா? மக்கள் சட்டம் (PEOPLE'S LAW)
இந்தியாவின் 63வது சுதந்திர தினத்தை கொண்டாடும் சூழலில், இந்த சுதந்திரம் அனைத்து இந்தியர்களுக்கும் பயன் அளித்திருக்கிறதா என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஊழலில் திளைக்கும் அரசியல் சூழலையும், நிராதரவாக நிற்கும் ஏழை – பாமர குடிமக்களையும் பார்க்கும்போது இது குறித்தெல்லாம் இந்திய விடுதலைப் போராளிகள் சிந்தித்து இருப்பார்களா? என்று தோன்றலாம்.

ஆனால் இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழுவின் தலைவர் டாக்டர் பி. ஆர். அம்பேத்கார் மிகுந்த தொலைநோக்குடன் இந்தியாவின் இன்றைய நிலை குறித்து சிந்தித்ததுடன் அதை பதிவும் செய்திருக்கிறார்.

இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழுவின் கூட்டத்தில் 1949ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி உரையாற்றிய அறிஞர் அம்பேத்கார், இன்றைய இந்தியாவின் நிலை குறித்து தமது ஐயங்களை மிகத்தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

“1950 ஜனவரி 26ம் தேதி முதல் இந்தியா மக்களாட்சி நாடாக செயல்பட தொடங்கும். அதாவது மக்களுக்காக, மக்களால், மக்கள் அரசு செயல்படத் தொடங்கும். அந்த நாளில் முரண்பாடுகளோடு கூடிய வாழ்விற்குள் நாம் நுழைய இருக்கிறோம். நம்மிடம் அரசியல் ரீதியான சமத்துவம் இருக்கும். ஆனால் சமூக – பொருளாதார ரீதியான சமத்துவம் இருக்காது. அதற்கு பதிலாக சமூக – பொருளாதார நிலையில் இந்தியர்களிடம் ஏராளமான முரண்பாடுகளும், ஏற்றத்தாழ்வுகளும் இருக்கும்.”

“எவ்வளவு நாட்களுக்கு இவ்வாறு சமூக – பொருளாதார முரண்பாடுகளோடும், ஏற்றத்தாழ்வுகளோடும் நம்மால் வாழ முடியும்? சமூக – பொருளாதார நிலைகளில் சமத்துவத்தை எவ்வளவு நாட்களுக்கு மறுக்க முடியும்? சமூக – பொருளாதார சமத்துவம் தொடர்ந்து மறுக்கப்பட்டால், அதனால் பாதிக்கப்படுபவர்கள் செயலற்று, சும்மா இருந்து விட மாட்டார்கள். இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு அரும்பாடுபட்டு உருவாக்கிய இந்த அரசியல் ஜனநாயக அமைப்பை, இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் சுக்குநூறாக தகர்த்து எறிவார்கள்!” என்று மாமேதை அம்பேத்கார் தீர்க்கதரிசனத்துடன் இன்றைய இந்தியாவின் நிலையை அன்றே முன்னறிவித்தார்.

இந்த நிலை வந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நான்காவது பகுதியாக “அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள்” என்ற தலைப்பில் தொகுத்தார். இந்த நெறிமுறைகளை இந்திய அரசியல் தலைவர்கள் ஏற்றுக்கொண்டு செயல்படுத்துவார்கள் என்று நம்பினார். எனினும் பிறந்து சில காலமே ஆன இந்திய குடியரசின் தோள்களில் கூடுதல் சுமையை ஒரேயடியாக சுமத்தக்கூடாது என்ற அடிப்படையில், “அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறை”களை நடைமுறைப்படுத்துவதற்கான காலக்கெடு எதனையும் அவர் விதிக்க விரும்பவில்லை. மேலும் இதில் கூறப்பட்டுள்ள விடயங்களை அரசு உடனடியாக வலியுறுத்தி குடிமக்கள் வழக்கு தொடுப்பதற்கும் வகையில்லாத நிலையில் இந்த அத்தியாயத்தை படைத்தளித்தார். ஆனாலும் “அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள்” என்ற அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ள மக்கள் நலத்திட்டங்களை அம்ல்படுத்தாமல் புறக்கணிக்கும் அரசியல் கட்சிகளையும், தலைவர்களையும் மக்கள் புறக்கணிப்பார்கள் என்று அம்பேத்கார் எச்சரித்தார்.

இந்திய அரசியல்வாதிகளைப்பற்றி அம்பேத்கார் கொண்டிருந்த ஐயம் நியாயமானதே என்று காலம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

நாட்டின் இயற்கை வளங்களை சூறையாடுதல்; இவற்றை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்தல்; ஏழை, பாமர, உழைக்கும் மக்களை ஏமாற்றி, அவர்களின் உடைமைகளை, உழைப்பை சுரண்டுதல்; தொழிலாளர்கள், பணியாளர்களின் உடல் நலம் குறித்து அக்கறையற்று இருத்தல்; குழந்தைகளுக்கு கல்வி மறுத்து அவர்களையும் உடல் உழைப்பு தொழிலாளிகளாக்குதல்; கல்வி, வேலை வாய்ப்பை மறுத்தல்; தொழிற்சாலை நிர்வாகத்திலிருந்து தொழிலாளர்களை அகற்றுதல்; பட்டியல் இனமக்களையும், பழங்குடியினரையும் ஏமாற்றி வஞ்சித்து சமூக அநீதி புரிதல்; சுயச்சார்பு வேளாண்மையை திட்டமிட்டு அழித்து இந்திய விவசாயத்தை பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக் காடாக்குதல்; சுற்றுச்சூழலை, வனங்களை, வன உயிரிகளை பாதுகாப்பதற்கு பதிலாக அவற்றை திட்டமிட்டு அழித்தல்; சுயேச்சையாக செயல்படவேண்டிய நீதித்துறையை அரசு நிர்வாகத்தின் ஒரு பகுதியாக மாற்றியமைத்தல் ஆகிய மக்கள் விரோத பணிகளையே இந்தியாவை இதுவரை ஆட்சி செய்த அனைத்து அரசுகளும் தொடர்ந்து செய்து வருகின்றன.

அரசின் மேற்கண்ட நடவடிக்கைகளால் நாட்டில் வசிக்கும் அனைத்து தரப்பினரும் ஏதோவொரு விதத்தில் பாதிக்கப்பட்டிருப்போம். ஆனால் மிக மோசமாக பாதிக்கப்படுபவர்கள் பழங்குடி இனத்தவரும், பட்டியல் இனத்தவருமே

சத்தீஷ்கர், ஜார்கண்ட், ஓரிஸா, ஆந்திரம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் மலை மற்றும் வனப்பகுதிகளில் இரும்புத்தாது, செம்பு, தங்கம், வைரம், அலுமினியம், பாக்சைட், நிலக்கரி, சிலிகா, கிரானைட் போன்ற அரிய கனிம வளங்கள் ஏராளமாக உள்ளன. இந்த இயற்கை வளங்களை சூறையாடும் வணிக நிறுவனங்களுக்கு விற்பனை செய்யவும் அரசு அமைப்புகள் முனைந்து நிற்கின்றன.

இப்பகுதி மக்களுக்கு தேவையான எந்த அடிப்படை வசதியையும் செய்து தராத அரசு அமைப்புகள் இம்மக்களின் வாழ்வுரிமையை பறித்தெடுப்பதில் முனைந்து நிற்கின்றன.

இதைப் புரிந்து கொண்டால் இந்தியாவில் தீவிரவாதம் உருவாவதற்கு மத்திய, மாநில அரசுகளின் நடைமுறைகளே காரணம் என்பது விளங்கும்.

---
“இந்தியாவின் பழங்குடி சகோதரர்களும், சகோதரிகளும் மிகநீண்ட காலமாகவே அரசு நிர்வாகம் என்பதை அராஜக நடைமுறைகளும், ஆதிக்க மனோபாவமும் கொண்ட வனத்துறை அதிகாரியாக – கொடூரமான மிருகத்தன்மை கொண்ட காவல்துறை அதிகாரியாக – பேராசை படைத்த நிலவரி வசூலிக்கும் அதிகாரியாக மட்டுமே பார்த்து வந்துள்ளனர். அரசின் நலத்திட்டங்கள் எதுவும் இம்மக்களை சென்றடையவில்லை. மாறாக வளர்ச்சித்திட்டங்கள் என்ற பெயரில் இம்மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டே வந்துள்ளது!” என்று வி.ஐ.பி. ஒருவர் அண்மையில் கருத்து தெரிவித்துள்ளார்.

அந்த வி.ஐ.பி., அருந்ததி ராய் போன்ற எழுத்தாளரோ, மாவோயிஸ்ட் இயக்கத் தலைவர்களோ, மனித உரிமை ஆர்வலர்களோ இல்லை.

இறையாண்மை கொண்ட இந்திய அரசின் பிரதமர் மாண்புமிகு மன்மோகன் சிங் அவர்கள்தான் மேற்சொன்ன கருத்துகளை, ஒப்புதல் வாக்குமூலமாக கூறியுள்ளார். மாவோயிஸ்ட்களால் வளர்ச்சித்திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள் ஆலோசனைக்கூட்டம் கடந்த 2010 ஜூலை 14ம் தேதி டெல்லியில் நடந்தது. அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய திருவாளர் மன்மோகன் சிங் அவர்கள்தான் மேற்கூறிய ஒப்புதல் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார். ஆனால் இதை மாற்றுவதற்கான ஆக்கப் பூர்வமான வழிகள் எதுவும் ஆலோசிக்கப்பட்டதாக தெரியவில்லை. அதற்கு பதிலாக ஆயுதப்படைகளை அதிகரிக்கும் போக்கே நிலவி வருகிறது.

இந்திய சுதந்திர போராளிகளின் கனவுகளை, அம்பேத்காரின் திட்டங்களை தவிடுபொடியாக்கி, தீவிரவாதத்திற்கு வித்திட்டு, நீர் வார்த்து, உரமிட்டு வளர்த்தவர்கள் அதற்கான காரணங்களை அறிந்தும், அது குறித்து முழுமையா ஆய்வு செய்யாமல் கலைந்து சென்றனர்.

---

ஒரிஸா மாநிலம் சுந்தர்கார் மாவட்டத்தில் ஏராளமான நிலக்கரி வளம் உள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலங்களை கடந்த 1987ம் ஆண்டு மத்திய அரசு கையகப்படுத்தியது. இந்தியாவின் நவரத்தினங்கள் என்று கூறப்படும் மிகச்சிறந்த நிறுவனங்களி்ல் ஒன்றான இந்திய நிலக்கரி நிறுவனத்தின் துணை நிறுவனமான மகாநதி கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனத்திடம் இந்த நிலங்கள் ஒப்படைக்கப்பட்டன.

இப்பகுதி மக்களுக்கு உரிய இழப்பீடும், மாற்று குடியிருப்பு வசதிகள், சாலை போன்ற அடிப்படை வசதிகள், கல்வி – மருத்துவம் போன்ற அத்தியாவசிய வசதிகள், வேலைவாய்ப்பு போன்றவை செய்து தருவதாக வாக்குறுதி கொடுக்கப்பட்டது.

அப்பகுதி மக்கள், விவசாயத்தை புறக்கணிக்க நிர்பந்தம் செய்யப்பட்டனர். அவர்களின் வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். அவர்களது நிலங்களில் புழங்கும் உரிமை ஆயுத முனையில் பறித்தெடுக்கப்பட்டது. அத்துமீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர்.

ஆனால் அரசு வாக்குறுதி வழங்கியபடி இழப்பீடோ, மற்ற வசதிகளோ இந்த கட்டுரை எழுதப்படும் இன்றுவரை செய்து தரப்படவில்லை. நாட்டின் வளர்ச்சிக்காக தங்கள் வாழ்வாதாரங்களை தியாகம் செய்துவிட்டு, சொந்த நாட்டிலேயே அகதிகளாக நின்ற அம்மக்கள் ஒரிஸா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மிக நீண்டகாலம் நடைபெற்ற வழக்கில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஒரிஸா உயர்நீதிமன்றம் கடந்த 2006ம் ஆண்டு தீர்ப்பளித்தது. சுமார் 20 ஆண்டுகள் வாழ்விழந்து தவித்த அம்மக்களுக்கு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஏற்க மறுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது மகாநதி கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனம்.

இந்த மேல்முறையீட்டு மனுவை மூன்று ஆண்டுகள் நிலுவையில் வைத்திருந்து விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த கடந்த 2010 ஜூலை 19ம் தேதியன்று தீர்ப்பளித்தது. இந்த கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டுள்ள அம்பேத்காரின் கருத்துகளுடன் தீர்ப்பை ஆரம்பித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அஃடாப் ஆலம் மற்றும் பி. எஸ். சவுகான் ஆகியோர் ஒரிஸா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்துள்ளனர்.

இலட்ச கணக்கான இந்தியர்களின் அடிப்படை வாழ்வுரிமைகளை பறித்து இந்திய அரசு உருவாக்குவதாக கூறும் துர்வளர்ச்சி காரணமாக, குடிமக்களுக்கு வளர்ச்சி என்ற சொல்லே வெறுக்கக்கூடியதாக, அச்சமூட்டக்கூடியதாக மாறிவிட்டதை நீதிபதிகள் இந்த தீர்ப்பில் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும் அரசின் இவ்வாறான ஒவ்வொரு பொறுப்பற்ற செயல்பாடும் தீவிரவாத அரசியலுக்கும், புரட்சிகர செயல்பாடுகளுக்கும் வித்திடுவதையும் நீதிபதிகள் குறிப்பிட்டு காட்டுகின்றனர்.

மாபெரும் தொழில்திட்டங்களுக்காக கட்டாயமாக இடம் பெயர்க்கப்படும் மக்களுக்கு தேவையான சாலை, மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு போன்ற வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்படும் அவலத்தையும் நீதிபதிகள் இந்த தீர்ப்பில் பதிவு செய்துள்ளனர்.

இவ்வாறு சமூக அவலத்தை விமரிக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இதற்கான காரணத்தையோ, தீர்வுகளையோ முழுமையாக விவாத்தித்தார்களா என்பது கேள்வியே

மாமேதை அம்பேத்காரின் தீர்க்கதரிசனம், பிரதமர் மன்மோகன் சிங்கின் ஒப்புதல் வாக்குமூலம், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பு ஆகிய அனைத்தும் நாட்டில் தீவிரவாதம் உருவாவதற்கான காரணங்களை தெளிவாக எடுத்துக்கூறுகின்றன. ஆனால் இவற்றை திரும்பியும் பாராமல் தீவிரவாதிகளை ஒடுக்கவதற்காக பசுமை வேட்டை போன்ற ஆட்கொல்லித் தீர்வுகளை அரசு அமைப்புகள் முன்வைக்கின்றன.

இந்த அவலச் சூழலில் இந்தியாவின் 63வது சுதந்திர தினம் கொண்டாடப் படுகிறது. சுயேச்சையாகவும், நேர்மையாகவும் செயல்பட வேண்டிய பத்திரிகைத்துறையும், நீதித்துறையும் கண்ணுக்குத் தெரியாத கட்டுப்பாடுகளுக்குள் சிக்கியிருக்கின்றன.

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அனைத்து மக்களும் ஏதோவொரு சுரண்டலுக்கு ஆளாகியே வாழ்ந்து வருகின்றனர்.

இதுதான் ஆனந்த சுதந்திரமா? இதற்குத்தான் சுதந்திரப் போராளிகள் ஆசைப்பட்டனரா? சுதந்திரப் போராளிகளின் கனவுகளை நனவாக்குவதில் குடிமக்களுக்கு பங்கு உள்ளதா?


இந்தியாவின் இன்றைய அவல நிலையை மாற்றுவதில் இந்தியாவின் குடிமக்கள் அனைவருக்கும் பங்குள்ளது. இந்திய அரசியல் சட்டத்தை மனித உரிமைப் பார்வையில் கற்றுக் கொள்வதும், மற்றவர்களுக்கு கற்றுக்கொடுப்பதுமே இன்றைய தேவை. இது ஆட்சித்துறை, நீதித்துறை, ஊடகத்துறை உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் மிகமுக்கிய தேவையாகும்.

இவ்வாறு கற்றுக்கொண்ட அரசியல் அமைப்புச் சட்டத்தின் கோட்பாடுகளை நடைமுறைப்படுத்துமாறு அரசு அமைப்புகளை தொடர்ந்து வலியுறுத்துவதும், தேவையான இடங்களில் போராடுவதுமே இந்திய சுதந்திரப் போராளிகளின் கனவுகளை நனவாக்கும். இல்லாவிட்டால் ஆகஸ்ட் 15 என்பது மூவண்ண கொடியேற்றும் ஒரு விடுமுறை நாளாக மட்டுமே இருக்கும். 

-பி. சுந்தரராஜன்
(sundararajan@lawyer.com)

நன்றி: சட்டப் பாதுகாப்பு, ஆகஸ்ட்-2010
Click here to bookmark this link.Channel Image05:27 ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-2-21) இஸ்லாம்குரல்.காம்
21, தபூக் யுத்தமும் தடுமாற்றமும் ஹதீஸ் 21: கஅப் இப்னு மாலிக்(ரலி) அவர்களின் மகனார் அப்துல்லாஹ் அறிவிக்கிறார்கள்: (இவர்தான் கஅப்(ரலி)அவர்கள் கண்பார்வை இழந்த காலத்தில் அவர்களை வழிநடத்தி அழைத்துச் செல்பவராக இருந்தார்.) கஅப்(ரலி) அவர்கள் தபூக் போரில் கலந்துகொள்ளாமல் நபியவர்களை விட்டும் பின்தங்கி விட்டபொழுது நடந்த நிகழ்ச்சி பற்றி இவ்வாறு அறிவித்ததை நான் கேட்டுள்ளேன். கஅப்(ரலி) அவர்கள் சொன்னார்கள்: நபி(ஸல்)அவர்கள் கலந்துகொண்ட எந்தப் போரை விட்டும் நான் எப்போதும் பின்தங்கியதில்லை., தபூக் யுத்தத்தைத்தவிர! ஆனால் பத்று போரில் [...]

Sun 22

Click here to bookmark this link.Channel Image16:51 நயவஞ்சகத்துக்கும், நிராகரிப்புக்கும் அல்லாஹ் வாக்களிக்கும் நரக நெருப்பு. தினம் ஒரு குர்ஆன் வசனம்
நயவஞ்சகர்களான ஆடவருக்கும் நயவஞ்சகர்களான பெண்டிருக்கும் காஃபிர்களுக்கும் அல்லாஹ் நரக நெருப்பையே வாக்களித்துள்ளான், அதில் அவர்கள் நிலையாகத் தங்கி விடுவார்கள், அதுவே அவர்களுக்குப் போதுமானதாகும், இன்னும் அல்லாஹ் அவர்களைச் சபித்துள்ளான் - அவர்களுக்கு நிரந்தரமான வேதனையுமுண்டு. (அத்தவ்பா-68)

Sat 21

Click here to bookmark this link.Channel Image20:44 அல்லாஹ்வின் வேத வசனங்கள் நிராகரிக்கப்படுவதையும் பரிகசிக்கப்படுவதையும் கண்டால்.... தினம் ஒரு குர்ஆன் வசனம்
(முஃமின்களே!) அல்லாஹ்வின் வசனங்கள் (சிலரால்) நிராகரிக்கப்படுவதையும் பரிகசிக்கப்படுவதையும் நீங்கள் கேட்டால் அவர்கள் இதைவிட்டு வேறு விஷயத்தில் ஈடுபடும் வரையில் அவர்களோடு நீங்கள் உட்கார வேண்டாம்' என்று வேதத்தின் மூலம் அவன் உங்கள் மீது (கட்டளை) இறக்கியுள்ளான். அவ்வாறு உட்கார்ந்தால் நீங்களும் அவர்களைப் போன்றவர்களே, நிச்சயமாக அல்லாஹ் நயவஞ்சகர்களையும் காஃபிர்களையும் எல்லாம் நரகத்தில் ஒன்றாகச் சேர்த்து விடுவான். (அன்னிஸா-140)
Click here to bookmark this link.Channel Image05:49 பெண்ணுரிமையும், திருமண வயதும் ..! மக்கள் சட்டம் (PEOPLE'S LAW)
குடும்ப அமைப்புமுறையை சிறந்ததொரு முன்மாதிரியாக, உலக நாடுகளிடம் தொடர்ந்து பறைசாற்றிவரும் இந்தியாவில், திருமணங்களின் பங்கு முக்கிய இடத்தை வகிக்கிறது. திருமணபந்தமானது, நெடுங்காலமாக இந்திய பெண்களின் வாழ்வில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த அடிப்படையில் பெண்ணுரிமைக்கும் திருமணத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.



ஆனால், திருமணம் தொடர்பாக பொதுவான சட்டம் ஏதும் இந்தியாவில் இயற்றப்படவில்லை. மாறாக மொழி, இனம், ஜாதி, சமயம், கலாச்சாரம், பண்பாடு, மாநிலம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் திருமணம் தொடர்பான சடங்குகள் வேறுபடுகின்றன. எனவே மதங்களை அடிப்படையாகக் கொண்டு, தனித்தனியாக திருமணச் சட்டங்கள் இயற்றப்பட்டு, அவைகளே நடைமுறையில் உள்ளன.

திருமணம் என்பது கிறித்தவம், இந்து மற்றும் இசுலாம் போன்ற மதங்களைப் பொறுத்தவரையில் ஒரு சமயச் சடங்காகவே கருதப்படுகிறது. இதன் காரணமாகவே இன்றைய சமூகத்தில் கொடுமையான நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிற குழந்தைத் திருமண முறையானது, வெகுகாலமாகவே நம் சமூகத்தில் தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகிறது.

“சமூக சீர்திருத்தத்தின் தந்தை” என அழைக்கப்பட்ட, இராஜா ராம்மோகன்ராய் 1828ம் ஆண்டில் உருவாக்கிய பிரம்ம சமாஜம் என்ற அமைப்பின் வாயிலாக, குழந்தைத் திருமண முறையை எதிர்த்தல், பெண் கல்வி, விதவை மறுமணம், சாதி மறுப்புத் திருமணம் மற்றும் பெண் விடுதலையை ஆதரித்தல், பலதார மணம் மற்றும் பர்தா முறையை ஒழித்தல் போன்ற சமூக சீர்திருத்தப் பணிகளை மேற்கொண்டார். மேலும் தனது சிறு வயதில், தம்மிடம் மிகுந்த அன்பு செலுத்திய தனது மூத்த சகோதரனின் மனைவி, அவரது கணவனின் மறைவுக்குப்பிறகு உறவினர்களால், வலுக்கட்டாயமாக உடன்கட்டை ஏற்றி கொலை செய்யப்பட்டதைக் கண்டதால் மிகவும் மனமொடிந்து போனார். இக்கொடிய நிகழ்வினை ஒழிக்கவேண்டி அவர் தொடர்ந்து பணியாற்றியதன் விளைவாகவே, 1829ம் ஆண்டில் வில்லியம்பெண்டிங் பிரபுவால், ‘‘சதி எனும் உடன்கட்டை ஏறுதல் முறை ஒழிப்புச்சட்டம்’’ இயற்றப்பட்டது.

இவரைத் தொடர்ந்து பொறுப்புக்கு வந்த, கேசவ சந்திர சென்னின் முயற்சியால் 1872ம் ஆண்டு, “சிறப்புத் திருமண சட்டம்” கொண்டுவரப்பட்டது. இச்சட்டம் சாதி மறுப்புத் திருமணம் மற்றும் விதவை மறுமணம் போன்ற சமூக சீர்திருத்த நிகழ்வுகளை ஆதரித்தது. மேலும் அச்சட்டத்தின்படி, குழந்தைத் திருமணமும், பலதார மணமும் ஒழிக்கப்பட்டது.

சட்டங்கள் பல இயற்றப்பட்டாலும், சமூகத்தில் குழந்தைத் திருமண முறையானது தொடர்ந்து நீடிக்கவே செய்தது. இன்றளவும் சமூகத்தில் அரசியல், சட்டம், சுதந்திரம், சமூகநீதி உள்ளிட்ட பல்வேறு தளங்களில் முன்மாதிரியாக விளங்கும், தேசப்பிதா என அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 1883ல் தனது 13ஆவது வயதில் 13 வயதே கஸ்தூரிபா அவர்களையும், மகாகவி சுப்பிரமணிய பாரதியார் 1897ல் தனது 14ஆவது வயதில் 7 வயதே ஆன செல்லம்மா அவர்களையும், பெரியார் ஈ.வெ. இராமசாமி 1898ல் தனது 19ஆவது வயதில் 13வயதே ஆன நாகம்மை அவர்களையும், இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் தந்தை டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் 1906ல், தனது 15ஆவது வயதில் 9 வயதே ஆன இராமாபாய் அவர்களையும் திருமணம் செய்துகொண்டார்கள். இப்படியாகக 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலம் வரையிலும், குழந்தைத் திருமண முறையானது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இயல்பான ஒன்றாகவே விளங்கியிருக்கிறது என்பது இதன் மூலமாகப் புலனாகிறது.

இதுபோன்ற பல்வேறு காரணங்களால், 1929ம் ஆண்டு, “குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்” கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தின்படி, முதல் முறையாக பெண்ணின் திருமண வயது 14 என்று வரையறை செய்யப்பட்டது. இச்சட்டத்தில் 1940ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தின் வாயிலாக, பெண்ணின் திருமண வயது 15 என்றும், 1978ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தின் வாயிலாக, பெண்ணின் திருமண வயது 18 என்றும் உயர்த்தப்பட்டது. 18க்கும் குறைவான வயதுடைய பெண்ணைத் திருமணம் செய்துகொடுக்கும் பெற்றோர்கள் மற்றும் அதற்குத் துணைபுரியும் உறவினர்கள், இச்சட்டத்தின் கீழ் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள்.

“குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம், 1929”க்குப் பதிலாக, 2006ஆம் ஆண்டில், “குழந்தைத் திருமண தடைச் சட்டம்” கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தின்படி பெண்ணின் திருமண வயது 18 என்று உறுதி செய்யப்பட்டது. ஒருவேளை குழந்தைத் திருமணம் ஏற்கனவே நடந்திருந்தால், திருமணமான பெண் தனது 18 வயதை அடைந்ததிலிருந்து 2 ஆண்டுகளுக்குள், அந்த திருமணம் குறித்து நீதிமன்றத்தில் மனு செய்தால், அந்த திருமணமானது செல்லாது என்று நீதிமன்றம் அறிவிப்பு செய்யும். ஏற்கனவே நடந்த திருமணத்தின் வாயிலாக குழந்தை ஏதேனும் பிறந்திருந்தால், அந்த குழந்தைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்படும். குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம், 2005ல் கூறப்பட்டுள்ளது போல, தேவையின் பொருட்டு அந்த பெண்ணிற்கு அவரது கணவன் அல்லது பெற்றோர் பராமரிப்புத் தொகையும், ஊக்கத்தொகையும் மற்றும் தேவையினைப் பொருத்து குடியிறுப்பு வசதியும் ஏற்பாடு செய்துகொடுக்க வேண்டும்.

“இந்துத் திருமண சட்டம்” 1955ன் படியும், பெண்ணின் திருமண வயது 18 என உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிவு 7அ வின் படி, சுயமரியாதை மற்றும் சீர்திருத்தத் திருமணங்களுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இன்றளவும் “இந்திய தண்டனைச் சட்டம், 1860” ஆனது, பெண்ணானவள் ஆணின் சொத்து என்றே கருதுகிறது. இந்திய அரசியலமைப்பு சாசனம், 1950” பிரிவு 21ன் படி, வாழ்வுரிமையானது நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் உத்தரவாதபடுத்தப் பட்டுள்ளது. உறிய வயதை அடைவதற்கும் முன்பாகவே திருமணம் செய்வதன் மூலமாக, மகப்பேறு காலத்தில் போதிய அளவுக்கு உடல் வளர்ச்சியடையாமல் இருக்கும் காரணத்தால், தாய் மற்றும், கருவின் உயிருக்குப் பாதுகாப்பற்ற நிலையே நிலவுகிறது.

18 வயதுக்கு முன்பாகத் திருமணம் செய்து கொடுப்பதன் மூலமாக இந்திய அரசியலமைப்பு சாசனத்தில் அடிப்படை உரிமையாக உறுதி செய்யப்பட்டுள்ள, தான் விரும்பியவரையே தன் வாழ்க்கைத்துணையாகத் தேர்ந்தெடுக்கும் உரிமையும், குழந்தைப்பருவத்தை அனுபவிக்கும் உரிமையும், பள்ளி மற்றும் கல்லூரியில் இடைநிறுத்தம் ஏற்படுவதன் மூலமாகக கல்விபெறும் உரிமையும் பறிக்கப்படுகிறது.

2005ம் ஆண்டின், மத்திய ‘மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின்’ தேசிய செயல்திட்டத்தின் ஒரு இலக்கானது, 2010ஆம் ஆண்டுக்குள் குழந்தைத் திருமணமுறைக்கு முழுமையாக முடிவுகட்டுதல் என்பதாகும். ஆனால் தற்போது 2010ல் பாதி ஆண்டை கடந்துவிட்டோம். குழந்தைத் திருமணமுறை இன்னமும் தொடர்ந்த வண்ணமே உள்ளது. இலக்கு மட்டும் திட்ட வடிவில் அப்படியே உள்ளது.

‘அய்.நா.வின் சிறுவர் நிதியம்’ என்ற அமைப்பு 2009ம் ஆண்டில் பெண் குழந்தைகளின் நிலை குறித்து மேற்கொண்ட ஆய்வில், உலகில் மகப்பேறு காலத்தில், 20 முதல் 24 வயதையுடைய தாய்மார்களின் இறப்பு விகிதத்தில் இந்திய பெண்கள் 47% பேர். அதில் 18 வயதை அடைவதற்கு முன்பே திருமணம் முடித்தவர்களில் 56% பேர் இந்திய கிராமங்களைச் சேர்ந்தவர்களாவார்கள். வாழ்க்கையின் போக்கை உணர அதற்குரிய வயதை அடையவேண்டியது அத்தியாவசியமானது ஆகும். அறியாப்பருவத்தில் நடக்கும் திருமணத்தால் மனமும், உடலும் பாதிப்புக்குள்ளாகும் என்பது இயற்கையானதாகும்.

150 ஆண்டுகளுக்கு முன்பாக இயற்றப்பட்ட, இந்திய தண்டனைச் சட்டம், 1860ன் ‘பிறன்மனைப் புணர்தல்’ குறித்துக் கூறும் பிரிவு 497 ஆனது, பெண் என்பவள் ஆணின் சொத்து என்ற பொருள்படக் கூறுகிறது. இந்த பிரிவின் படி, பிறன்மனைப் புணர்தல் சந்தர்பத்தில் அந்த மனைவி உடந்தைக் குற்றவாளியாகத் தண்டிப்பதற்கு உரியவராக மாட்டார். தொடர்புடைய மனைவிக்கு வழக்கு தொடுக்கும் உரிமை ஏதும் கிடையாது என்றும் ஆணுக்கு மட்டுமே வழக்கு தொடுக்கும் உரிமையானது உள்ளது என்றும் கூறுகிறது.

பெண்ணின் திருமண வயது 18 என உறுதி செய்யப்பட்டுள்ள சூழலில், பிரிவு 375ன் 5ஆவது உள்விதியானது, 16 வயதுக்குட்பட்ட பெண்ணின் சம்மதத்துடன் அல்லது சம்மதமின்றி உடலுறவு கொண்டால்தான் அது ‘வன்புணர்ச்சி’ என்று கூறுவதோடு மட்டுமின்றி, ஒருவர் தம் மனைவியோடு, அந்த மனைவி 15 வயதுக்குட்பட்டவாராக இல்லாதபோது கொள்ளும் உடலுறவு, வன்புணர்ச்சி அல்ல என்றும் கூறுகிறது.

‘வன்புணர்ச்சிக்கான தண்டனை’ குறித்துக் கூறும் பிரிவு 376 ஆனது, வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணானவர், அதைச்செய்தவரின் சொந்த மனைவியாகவும், 12 வயதிற்கும் கீழ்படாதவராகவும் இருந்தால், அதில் ஈடுபட்ட எவருக்கும் 2 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் அபராதமும் மட்டுமே விதிக்கப்படும் என்று கூறுகிறது. அவ்வாறு இல்லாத பட்சத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என கூறுகிறது. இதன்படி பார்த்தால் குழந்தைத் திருமண முறையும், திருமணம் வாயிலான வன்புணர்ச்சியும் இங்கே சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.

2008ஆம் ஆண்டின், கட்டாய திருமணப் பதிவு தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு, ஒவ்வொரு மாநிலத்திலும் முறையாக அமலாக்கம் செய்யப்பட வேண்டும். பொதுவாகவே திருமணப் பதிவின் போது வயது சான்றிதழ் சமர்பிக்க வேண்டிய தேவை உள்ளது. இதன் மூலமாய் குழந்தைத் திருமண முறையானது சட்ட ரீதியாக கண்காணிப்பிற்கு உள்ளாக்கப்படும். “குழந்தைத் திருமண தடைச் சட்டம்-2006” மதச்சார்பான சட்டங்களின்படி நடக்கும் திருமணங்களைக் குறித்துத் தெளிவாக எதுவும் கூறவில்லை. குழந்தைத் திருமணம் செல்லாது என சட்டத்தில் தீர்க்கமாக அறுதியிட்டுக் கூறுவதற்குப் பதிலாக, பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணே மனு செய்து, அத்திருமணத்தைச் செல்லாது என அறிவிப்பு செய்ய வேண்டும் என போராட வேண்டிய சூழலே நிலவுகிறது.

உரிய வயதை அடைந்த பிறகு, ஏற்கனவே நடந்த திருமணமானது செல்லாது என்று அறிவிக்க சமூகத்தில் பெண்களுக்கு இயல்பாக இருக்கும் தயக்கத்தை தவிர்க்கவும், அவர்களை திடப்படுத்தி ஊக்குவிக்கவும் அரசு வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும். இது போன்ற சட்டத்திருத்தங்கள் கொண்டுவரப்படுவதன் மூலமாகவும், குழந்தைத் திருமணம் தொடர்பான நிகழ்வுகள் உறுதிபடுத்தப்படும் சூழல்களில், அதற்கான தண்டனைகள் கடுமையாக்கப்படுவதன் வாயிலாகவும்தான், சட்ட ரீதியாக பெண்களுக்கான உரிமைகள் முழுமையாக உத்தரவாதபடுத்தப்படும்.

- இ.இ.இராபர்ட் சந்திரகுமார்
( robertckumar@gmail.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் )

Fri 20

Click here to bookmark this link.Channel Image16:48 மனிதனை ஆச்சரியப்படுத்தும் இந்த விஷயங்களில் அல்லாஹ்வின் நாட்டம் தினம் ஒரு குர்ஆன் வசனம்
அவர்களுடைய செல்வங்களும் அவர்களுடைய மக்கள் (பெருக்கமும்) உம்மை ஆச்சரியப்படுத்த வேண்டாம், அல்லாஹ் அவற்றைக் கொண்டு இவ்வுலக வாழ்க்கையிலேயே அவர்களை வேதனை செய்யவும், அவர்கள் காஃபிர்களாக இருக்கிற நிலையில் அவர்களுடைய உயிர்கள் பிரிவதையும் நாடுகிறான். (அத்தவ்பா-55)
Click here to bookmark this link.Channel Image01:58 ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-2-20) இஸ்லாம்குரல்.காம்
20. நூறு கொலை செய்தவனுக்கும் மன்னிப்பு உண்டு. ஆனால்? ஹதீஸ் 20: அபூ ஸயீதில் குத்ரி(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உங்களுக்கு முன்னர் வாழ்ந்து சென்ற சமுதாயத்தில் ஒருமனிதன் இருந்தான். அவன் தொன்னூற்றி ஒன்பது பேரைக் கொலை செய்திருந்தான்! பிறகு அவன், இந்தப் புவிவாழ் மக்களில் அதிகம் அறிந்தவர் யார் என்று விசாரித்தான். ஒரு துறவியின் பக்கம் அவனுக்கு வழி காட்டப்பட்டது. அவரிடம் வந்தான். நான் தொன்னூற்றி ஒன்பது பேரைக் கொலை செய்து விட்டேன். [...]

Thu 19

Click here to bookmark this link.Channel Image18:45 நாங்களும் முஸ்லிம்கள் தான் எனக் கூறிக் கொண்டு நயவஞ்சகத்தில் இருந்தோரின் நரக கூப்பாடு. தினம் ஒரு குர்ஆன் வசனம்
முனாஃபிக்கான ஆண்களும் முனாஃபிக்கான பெண்களும் ஈமான் கொண்டவர்களை நோக்கி: 'எங்களை கவனியுங்கள். உங்கள் ஒளியிலிருந்து நாங்களும் பற்ற வைத்துக் கொள்கிறோம்' என்று கூறும் தினத்தை (நினைவூட்டுவீராக), அவர்களுக்குக் கூறப்படும்: 'உங்களுக்குப் பின்னால் திரும்பிச் சென்று பின்னர் ஒளியைத் தேடிக் கொள்ளுங்கள்'. பிறகு அவர்களுக்கிடையே ஒரு சுவர் எழுப்பப்படும். அதற்கு ஒருவாயில் இருக்கும், அதன் உட்புறம் (இறை) ரஹ்மத் இருக்கும், ஆனால் அதன் வெளிப்புறத்தில் - (எல்லாத்) திசையிலும் வேதனையிருக்கும்.

இவர்கள் (முஃமின்களைப் பார்த்து) 'நாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா?' என்று (அந்த முனாஃபிக்குகள்) சப்தமிட்டுக் கூறுவார்கள். 'மெய்தான், எனினும் நீங்களே உங்களைச் சோதனையிலாழ்த்தி விட்டீர்கள், (எங்கள் அழிவை) நீங்கள் எதிர்பார்த்தீர்கள், (இந் நாளைப் பற்றியும்) சந்தேகமும் கொண்டிருந்தீர்கள், அல்லாஹ்வின் கட்டளை வரும் வரையில் (உங்களுடைய) வீண் ஆசைகள் உங்களை மயக்கி விட்டன, அன்றியும் மயக்குபவ(னான ஷைத்தா)ன் அல்லாஹ்வைப் பற்றி உங்களை மயக்கியும் விட்டான்' என்றும் (முஃமின்கள்) கூறுவார்கள். (அல்ஹதீத் 57:13,14)
Click here to bookmark this link.Channel Image03:00 தீர்வை நோக்கி(இஸ்லாம் கூறும் பிறைக்கணக்கு) – சென்னை LUNAR CALENDAR / சந்திர நாட்காட்டி

தீர்வை நோக்கி(இஸ்லாம் கூறும் பிறைக்கணக்கு) – சென்னை

Towards Solution (Islamic Lunar Calendar) – Chennai

எனது அடியார்களுக்கு நற்செய்தி கூறுவீராக! அவர்கள் சொல்லை செவிமடுத்து அதில் அழகானதை பின்பற்றுவார்கள்.  அவர்களுக்கே அல்லாஹ் நேர்வழி காட்டினான். அவர்களே அறிவுடையவர்கள். (குர்ஆன் 39:17-18)

நாள்: 21-ஷஃபான்-1431 ஞாயிற்றுக்கிழமை (01.08.2010) 21-Shabaan-1431 Sunday (01.08.2010)

நேரம்: மாலை 4:00 மணிமுதல் / From 4.00 P.M

இடம்: அன்னை ஆயிஷா மஹால் முஸ்லீம் லீக் தலைமையகம் அருகில் 39,மரைக்காயர் தெரு, மண்ணடி, சென்னை-1

Venue: Annai Ayesha Mahal, Near Muslim league Head Office, No.39,Maricayar [...]

Wed 18

Click here to bookmark this link.Channel Image18:45 "செயற்கை செல்(?)" (synthetic cell) எதனை பொய்பிக்கின்றது, கடவுளையா நாத்திகத்தையா? எதிர்க்குரல்



அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக....ஆமின்.
    
செயற்கை உயிர்: பழைய கடவுள் காலி! புதிய கடவுளர் யார்?

வினவு இணையதளத்தில் கடந்த மாதம் வெளிவந்த ஒரு கட்டுரையின் தலைப்பு இது.

செயற்கை செல் (Synthetic Cell) ஆராய்ச்சி முடிவுகள் குறித்து மருதையன் என்ற சகோதரரால் எழுதப்பட்ட இந்த கட்டுரைக்கான நேரடி பதிலை யார் சொன்னால் நன்றாக இருக்கும்?

இந்த ஆராய்ச்சியை நடத்திய கிரேக் வென்டர் கழகத்தின் தலைவரும் (J.Craig Venter Institute (JCVI)), செயற்கை செல் உருவாக்கத்தில் பெரும் பங்காற்றியவருமான டாக்டர் கிரேக் வென்டர் அவர்கள் சொன்னால் சரியாக இருக்குமா?   

"Kornberg did not create life in a test tube, nor did we create life from scratch. We transformed existing life into new life. We also did not design and build a new chromosome from nothing. Rather, using only digitized information, we synthesized a modified version of the naturally occurring Mycoplasma mycoides genome. The result is not an "artificial" life form" - J.Craig Venter and Daniel Gibson, How We Created the First Synthetic Cell, The Wall Street Journal, dated 26th May 2010.

நாங்கள் உயிரை ஆரம்பத்திலிருந்து (from scratch) உருவாக்கவில்லை. இருந்த ஒரு உயிரை வேறொரு புது உயிராக உருமாற்றியுள்ளோம். அது போல, நாங்கள் ஒன்றும் ஒரு புது உயிர் அணுககோலை (Chromosme) ஒன்றுமில்லாததிலிருந்து வடிவமைக்கவோ, கட்டமைக்கவோ இல்லை. முடிவோ, செயற்கை உயிர் இல்லை - (Extract from the original quote of) J.Craig Venter and Daniel Gibson, How We Created the First Synthetic Cell, The Wall Street Journal, dated 26th May 2010. 

இந்த ஆராய்ச்சியை முன்னின்று நடத்தியவரே சொல்கின்றார் 'நாங்கள் செயற்கை உயிரை உருவாக்கவில்லையென்று". இந்த விஷயம் சகோதரர் மருதையனுக்கு ஏன் தெரியவில்லை?.
   
இதே போன்றதொரு கருத்தை தான் "தி நியூயார்க் டைம்ஸ்" நாளிதழில் வந்த ஒரு கட்டுரையும் பிரதிபலிக்கின்றது.       

"He has not created life, only mimicked it” - Dr. Baltimore, Researchers Say They Created a ‘Synthetic Cell’, The New York Times, dated 20th May 2010. 
அவர் உயிரை உருவாக்கவில்லை, ஒரு உயிரை மிமிக்ரி மட்டுமே செய்துள்ளார் - (Extract from the original quote of) Dr. Baltimore, Researchers Say They Created a ‘Synthetic Cell’, The New York Times, dated 20th May 2010.

ஒரு செயற்கை உயிரை வென்டர் உருவாக்கிவிட்டார் என்று மருதையன் போன்ற சகோதரர்கள் நினைத்தால் அது நிச்சயமாக உண்மையல்ல. படிப்பவர்களை உண்மையை விட்டு திசைதிருப்பும் முயற்சியே இது மாதிரியான தலைப்புக்கள்.   

மருதையன் அவர்களின் கட்டுரைக்கான தலைப்பு இப்படித்தான் இருந்திருக்க வேண்டும், 

செயற்கை உயிர்: பழைய நாத்திக கொள்கை காலி: புதிய கொள்கைகள் என்னென்ன?

ஆம், ஒரு முக்கிய நாத்திக கொள்கையை  (ஒரு வாழும் செல் தற்செயலாக உருவாகியிருக்கும் என்ற கொள்கையை) சுக்குநூறாக நொறுக்கியிருக்கின்றன செயற்கை செல் ஆராய்ச்சி முடிவுகள்.    
  
அதே கட்டுரையில் மருதையன் அவர்கள் பின்வருமாறு எழுதுகின்றார்,

"சடப்பொருள் வேறு, உயிர்ப்பொருள் வேறு; உடல் வேறு ஆன்மா வேறு என்று கூறி வரும் மதக் கோட்பாடுகள் மற்றும் பல கருத்துமுதல்வாத கோட்பாடுகள் அனைத்தின் முகத்திலும் பூசப்பட்டிருக்கும் கரி – சிந்தடிகா" - வினவு, 8/7/2010. 

இந்த செயற்கை செல் ஆராய்ச்சி உண்மையில் யார் முகத்தில் கரியை பூசியிருக்கின்றது?, இறை நம்பிக்கையாளர்கள் மீதா அல்லது சகோதரர் மருதையன் போன்ற நாத்திகர்கள் மீதா?, செயற்கை செல் (Synthetic Cell) என்றால் என்ன?, இந்த ஆராய்ச்சியால் நாம் பெரும் பலன்கள் என்ன? என்பது போன்ற கேள்விகளுக்கு விடைக்காண முயல்வதே இந்த பதிவின் நோக்கம். இன்ஷா அல்லாஹ். 

செயற்கை செல் என்றால் என்ன?

உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் செல்களால் ஆனவையே. அவை ஒருசெல் உயிரினங்கள், பலசெல் உயிரினங்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான நுண்ணுயிரிகள் (உதாரணத்துக்கு பாக்டீரியாக்கள்) ஒரு செல் உயிரினங்களே. ஆக, ஒரு செல்லை ஆரம்பத்திலிருந்து உருவாக்கினாலே (from Scratch) உயிரியலைப் பொறுத்தவரை அது ஒரு உயிரை உருவாக்கியதாகத் தான் அர்த்தம்.

இப்போது செயற்கை செல் ஆய்வுக்கு வருவோம்.

JCV கழகம் கடந்த பதினைந்து ஆண்டுகளாக ஒரு முக்கியமான உயிரியல் கேள்விக்கான பதிலை கண்டுபிடிப்பதில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றது. "ஒரு வாழும் செல்லுக்கு குறைந்த பட்சம் எத்தனை மரபணுக்கள் (Genes) தேவை? (what is the minimum number of genes required to make a living cell?)" என்ற கேள்விதான் அது. இந்த ஆய்வுக்கு அவர்கள் சூட்டிய பெயர் "குறைந்தபட்ச மரபணு திட்டம் (Minimal Genome Project)".

இந்த கேள்விக்கான பதிலை கண்டுபிடிப்பதற்காக ஒரு மிகச் சாதாரண உயிரினமான Mycoplasma mycoides பாக்டீரியாவை பல ஆண்டுகளாக ஆராய்ந்து வருகின்றார்கள். இந்த பாக்டீரியா சுமார் 475 மரபணுக்களால் ஆனது. ஒப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், மனித மரபுரேகை அல்லது மரபணுத் தொகுப்பு (Genome, which means a full complement of genes found in the cell) சுமார் 20,000-25,000 மரபணுக்களால் ஆனது.

முதலில் இந்த பாக்டீரியாவின் (475 மரபணுகளுக்குண்டான) டி.என்.ஏ வார்த்தைகளை வரிசைப்படுத்தி கொண்டார்கள். கணிப்பொறியில் அந்த தகவல்களை பதிந்து கொண்டனர்.  பின்னர் அவற்றை 1,100 துண்டுகளாக பிரித்து கொண்டார்கள். ஒவ்வொரு துண்டையும் செயற்கையான முறையில் நான்கு வெவ்வேறு விதமான வேதிப்பொருட்களை கொண்டு உருவாக்கினார்கள்.

இப்படி செயற்கையாக உருவாக்கப்பட்ட 1,100 டி.என்.ஏ துண்டுகளையும் ஒன்று சேர்த்து (Assembling) மரபுரேகையை (Genome) உருவாக்கினார்கள்.

இந்த துண்டுகளை எப்படி இணைத்தார்கள் என்றால், ஈஸ்ட் (Yeast) செல்களை கொண்டுதான். அதாவது, செயற்கையாக ஒரு மரபுரேகையை உருவாக்க ஏற்கனவே இயற்கையாக உள்ள ஒரு வாழும் செல் தான் அவர்களுக்கு உதவியிருக்கின்றது. 

"The synthetic Mycoplasma mycoides genome was assembled by adding the overlapping DNA fragments to yeast. Once inside a yeast cell, the yeast machinery recognized that two DNA fragments had the same sequence and assembled them at this overlapping region" - J.Craig Venter and Daniel Gibson, How We Created the First Synthetic Cell, The Wall Street Journal, dated 26th May 2010.


இந்த வாழும் செல் இல்லையென்றால் செயற்கை மரபுரேகையை உருவாக்கியிருக்க முடியாது. இது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயம்.   

இப்படி உருவாக்கப்பட்ட மரபுரேகை சுமார் 1.08 மில்லியன் (1 Million = 10 lakhs) வார்த்தைகளை கொண்டதாக இருந்தது. இதுதான் உலகிலேயே இது வரை உருவாக்கப்பட்ட செயற்கை மரபுரேகைகளில் மிகப் பெரியது.

இப்படியாக செயற்கை மரபுரேகை (Synthetic Genome) உருவாக்கப்பட்டது. இப்போது இதனை வேறொரு பாக்டீரியாவின் செல்லுக்குள் (Recipient Cells) செலுத்தி சோதனை செய்ய வேண்டும். இதற்கு ஆய்வாளர்கள் தேர்ந்தெடுத்த பாக்டீரியா Mycoplasma capricolum என்பதாகும். முதலில் இந்த பாக்டீரியாவின் மரபுரேகையை நீக்கிவிட்டனர்.

பின்னர், Mycoplasma capricolum பாக்டீரியாவின் தடுப்பு நொதி மரபணுவை (Restriction Enzyme gene) செயலிழக்க செய்தார்கள். அப்படி செய்யவில்லை என்றால் அது உள்ளே வரும் செயற்கை மரபுரேகையை அழித்து விடும்.

அந்த மரபணுவை செயலிழக்க செய்த பின்பு செயற்கை மரபுரேகையை Mycoplasma capricolum பாக்டீரிய செல்லின் சய்டோப்லாசத்தின் (Cytoplasm) உள்ளே செலுத்தினர் (Transplantation). செயற்கையாக உருவாக்கப்பட்ட மரபுரேகையை அந்த பாக்டீரியா ஏற்றுக்கொண்டு (Booted up) பிரதி எடுக்க (replicate) ஆரம்பித்து விட்டது.

இது குறித்த விரிவான ஆய்வு முடிவுகள் சயின்ஸ் எக்ஸ்பிரஸ் (Science Express) இணைய இதழில் மே மாதம் 20 ஆம் தேதி வெளிவந்தன. 
  



இப்படி உருவான அந்த பாக்டீரியாவிற்கு அவர்கள் வைத்த பெயர் "Mycoplasma mycoides JCVI-syn1.0" என்பதாகும். இதற்கு சின்தியா (Synthia) என்ற செல்லப் பெயரும் உண்டு. (இதைத்தான் "சிந்தடிகா" என்று எழுதினாரோ மருதையன்)

சற்று எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், ஒரு காரின் ஒரு பாகத்தை பார்த்து அந்த தகவல்களை கணிப்பொறியில் ஏற்றிக்கொண்டு, பின்னர் அதே போன்ற ஒன்றை ஆய்வுக்கூடத்தில் உருவாக்கி அதனை வேறொரு காரில் பொருத்தி அது வேலை செய்கின்றதா என்று பார்ப்பது.

ஆக, இவர்கள் செய்தது, ஒரு பாக்டீரியாவை நன்கு ஆராய்ந்து அதன் மரபுரேகையை கணிப்பொறி துணையோடு ஆய்வுக்கூடத்தில் செயற்கையாக உருவாக்கி பின்னர் அதனை மற்றொரு பாக்டீரியாவில் செலுத்தியது.

மொத்தத்தில், இவர்கள் மரபுரேகையை புதிதாக உருவாக்கவில்லை. ஏற்கனவே இருந்த ஒன்றை பார்த்து அதே போன்ற ஒன்றை சிற்சில மாற்றங்களோடு உருவாக்கியுள்ளனர். இது எப்படி செயற்கை உயிரை உருவாக்கியதாக அமையும்? அதனால் தான் கிரேக் வென்டர், தாங்கள் செயற்கை உயிரை உருவாக்கவில்லை என்றும், ஏற்கனவே இருந்த ஒரு உயிரை உருமாற்றி மட்டுமே உள்ளோம் என்று தெளிவாக விளக்கியுள்ளார்.   

விஞ்ஞானிகள் செயற்கை உயிரை உருவாக்கிவிட்டார்கள் என்று சிலர் நினைத்தால் அது அவர்களது அறியாமையே தவிர வேறொன்றுமில்லை.....

இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் வந்திருக்கலாம். அதாவது, கிரேக் வென்டர் குழு (JCVI) செயற்கையாக உருவாக்கியது பாக்டீரிய செல்லின் மரபுரேகையைத் தானே?, பிறகு ஏன் ஒரு செல்லையே செயற்கையாக உருவாக்கியது போல "செயற்கை செல்" என்று பெயர் வைத்திருக்கின்றார்கள்?

உங்களுடைய சந்தேகம் மிக நியாயமான ஒன்றுதான். இந்த கேள்வியைத்தான் பலரும் கேட்கின்றனர். மரபுரேகையை மட்டும் நகலெடுத்து செயற்கையாக உருவாக்கிவிட்டு அதற்கு "செயற்கை செல்" என்று பெயரிடுவது என்ன மாதிரியான லாஜிக்?, "செயற்கை மரபுரேகை" (Synthetic Genome) என்றுதானே பெயரிட்டிருக்க வேண்டும்?

"First, as many have noted, the technical accomplishment is not quite what the JCVI press release claimed. It’s hard to see this as a synthetic species, or a synthetic organism, or a synthetic cell; it’s a synthetic genome of Mycoplasma mycoides, which is familiar enough" - Gregory Kaebnick, Is the “Synthetic Cell” about Life?, The Scientist, Volume 24, Issue 7, Page 27, dated 1st July 2010.

"முதலில், பலரும் குறிப்பிட்டது போல, JCV கழகம் வெளியிட்ட அறிக்கை கோருவது போல இந்த ஆராய்ச்சி தொழில்நுட்ப சாதனையாக தெரியவில்லை. இதனை ஒரு செயற்கை இனமாகவோ, அல்லது செயற்கை உயிரியாகவோ, அல்லது செயற்கை செல்லாகவோ பார்க்க கடினமாக உள்ளது; Mycoplasma mycoidesனுடைய செயற்கை மரபுரேகையான இது நமக்கெல்லாம் நன்கு அறியப்பட்ட ஒன்றுதான்" - (Extract from the original quote of) Gregory Kaebnick, Is the “Synthetic Cell” about Life?, The Scientist, Volume 24, Issue 7, Page 27, dated 1st July 2010.         

ராய்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனம் செயற்கை செல் குறித்து எழுதும் போது "Artificial life? Synthetic genes 'boot up' cell" என்று தலைப்பு வைத்ததற்கு இந்த குழப்பம் ஒரு காரணமாக இருந்திருக்கலாமோ?    

இது குறித்து வென்டர் என்ன கூறுகின்றார்?...செல்லை கட்டுபடுத்துவது செயற்கையாக உருவான மரபுரேகை என்பதால் இதற்கு "செயற்கை செல்" என்று பெயர் வைத்ததாக கூறுகின்றார். ஆனால் அவருடைய இந்த விளக்கம் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கின்றது...

"The explanation from the Venter camp is that the genome took over the cell, and since the genome is synthetic, therefore the cell is synthetic. But this assumes a strictly top-down control structure that some biologists now question. Why not say instead that the genome and the cell managed to work out their differences and collaborate, or even that the cell adopted the genome (and its identity)? Do we know enough to say which metaphor is most accurate?" - Gregory Kaebnick, Is the “Synthetic Cell” about Life?, The Scientist, Volume 24, Issue 7, Page 27, dated 1st July 2010.

ஆக, இவர்களது ஆய்வுக்கு சரியான பெயர் "செயற்கை மரபுரேகை" என்பது தானே தவிர "செயற்கை செல்" அல்ல.

இந்த ஆய்வின் மூலம் JCV கழகம் தங்கள் திட்டத்தை நோக்கி ஒரு படி மேலே சென்றிருக்கின்றனர். அதாவது, ஒரு வாழும் செல்லுக்கு குறைந்த பட்சம் எத்தனை மரபணுக்கள் தேவை என்பது பற்றி அறியும் திட்டம்.

இங்கு நான் சொல்ல முயற்சித்திருப்பது மிகச் சிறிதுதான். இந்த ஆய்வு பல நுணுக்கமான விஷயங்களை உள்ளடக்கியது. அதனால் நீங்கள் இது பற்றி மேலும் ஆராய்ந்தறிய வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன்.


இந்த ஆய்வு, உயிர் என்பது வெறும் வேதிப்பொருட்களால் ஆனது என்று கூறுகின்றதா? (Does the Venter Institute's achievement show that life is just chemicals?)  

இல்லை. நான் அப்படி நினைக்கவில்லை. 

செயற்கையாக டி.என்.ஏவை உருவாக்கி அவற்றை மற்ற உயிரின செல்களுக்குள் செலுத்துவதென்பது பல காலங்களாக நடந்து வருவதுதான். இந்த முறை நடந்ததுதான் அளவுக்கோளில் மிகப் பெரியது.

ஒரு முக்கிய விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும்.

அதாவது, Mycoplasma capricolum பாக்டீரியாவின் மரபுரேகை வெளியே எடுக்கப்பட்டு விட்டாலும் அது இன்னும் உயிருள்ள ஒரு செல் தான் (மரபுரேகையை வெளியே எடுத்தவுடன் அது செத்துவிடவில்லை). ஆனால், அது தன்னுடைய தன்மையான "தன்னைத்தானே பிரதி எடுத்துக்கொள்வதை" செய்யாது. செயற்கையாக உருவாக்கப்பட்ட மரபுரேகை உள்ளே செலுத்தபட்டவுடன் அந்த பாக்டீரியா தன்னைத்தானே பிரதி எடுத்துக்கொள்ள ஆரம்பித்து விட்டது.      

வாழும் மற்றும் பிரதி எடுக்கும் என்று இவற்றுக்கான வித்தியாசம் இன்னும் சரிவர அறிவியலாளர்களுக்கு புலப்படவில்லை. ஒரு செல்லையே செயற்கையாக உருவாக்குவது எப்படி என்றும் விளங்கவில்லை.

"What separates a bag of DNA from a living, replicating cell is still unclear and un-synthesizable. To me, life is still "special" and incredibly powerful" - Christina Agapakis, What Synthia Means to Me, Oscillator, Scienceblogs, dated 21st May 2010. 
"வாழும் மற்றும் பிரதி எடுக்கும் செல் என்று இவற்றுக்கான வித்தியாசம் இன்னும் சரிவர அறிவியலாளர்களுக்கு புலப்படவில்லை. ஒரு செல் செயற்கையாக உருவாக்கப்படவும் இல்லை. என்னை பொறுத்தவரை உயிர் என்பது தனித்துவம் மிக்கது மற்றும் மிகவும் வலிமையானது" - (Extract from the Original quote of) Christina Agapakis, What Synthia Means to Me, Oscillator, Scienceblogs, dated 21st May 2010.  

ஆக, உயிருள்ள ஒரு செல்லுக்குள் தான் செயற்கை மரபுரேகை புகுத்த பட்டுள்ளது. 

ஒரு வாழும் செல்லை செயற்கையாக வேதிப்பொருட்களை கொண்டு உருவாக்கும் வரை உயிர் என்பது வெறும் வேதிப்பொருட்களால்  ஆனது என்று கூற முடியாது.     


செயற்கை செல் இறைவனை மறுக்கின்றதா? 

இதற்கான பதிலை வென்டர் தெளிவாக கூறிவிட்டார். தாங்கள் செயற்கை உயிரை உருவாக்கவில்லை என்று. ஏற்கனவே இருந்த ஒரு உயிரை ரி-ப்ரோக்ராம் (Re-Program) தான் செய்துள்ளார்கள்.

மரபுரேகையையும் (Genome) இவர்களாக உருவாக்கவில்லை, இயற்கையாக இருந்த ஒரு உயிரின் மரபுரேகையை பார்த்து அதே போன்ற ஒன்றை செய்துள்ளனர்.

உதாரணத்துக்கு, மரபுரேகையை ஒரு மென்பொருளோடு (Software) ஒப்பிட்டால், அந்த மென்பொருளை இவர்களாக எழுதவில்லை, ஏற்கனவே இருந்த ஒரு மென்பொருளை பார்த்து காப்பி அடித்திருக்கின்றனர், அவ்வளவுதான். (They didn't write a new software, they just copied a existing one).  

"The work reported by Venter and his colleagues is an important advance in our ability to re-engineer organisms; it does not represent the making of new life from scratch." - Jim Collins, Artificial life? Synthetic genes 'boot up' cell, Reuters, dated 20th May 2010.
வென்டர் மற்றும் அவருடைய குழுவினருடைய ஆய்வு, உயிரினங்களை மறுசீரமைப்பு செய்யும் தொழில்நுட்பத்தில் ஒரு முக்கிய முன்னேற்றம். (ஆனால்) அது ஒரு புது உயிரை ஆரம்பத்திலிருந்து உருவாக்கவில்லை - (Extracted from the original quote of) Jim Collins, Artificial life? Synthetic genes 'boot up' cell, Reuters, dated 20th May 2010. 

இவர்கள் கடவுளாக முயற்சிக்கவில்லை. கடவுள் உருவாக்கிய ஒரு உயிரின் சிறு பகுதியை பார்த்து அதனை 40 மில்லியன் டாலர்கள் செலவில், அதிநவீன இயந்திரங்களின் துணையோடு, 15 வருட கடின உழைப்பில், 25 விஞ்ஞானிகளின் கண்காணிப்பில் நகலெடுத்துள்ளனர். இது எப்படி கடவுளை மறுப்பதாக அமையும்?

மேலும், மரபுரேகை மட்டும் தான் செயற்கையாக உருவாக்கப்பட்டது, அது செலுத்தப்பட்ட செல்லோ  இயற்கையானது.

ஒரு செல்லையே செயற்கையாக உருவாக்கினால் தான் உயிரியல் வரையரைப்படி அது உயிரினமாக கருதப்படும்.

ஆக, செயற்கையாக உருவாக்கப்பட்ட மரபுரேகையை செயற்கையாக உருவாக்கப்பட்ட செல்லுக்குள் இவர்கள் செலுத்தவில்லை. இயற்கையாக உள்ள மற்றொரு செல்லுக்குள் தான் செலுத்தியிருக்கிறார்கள்.


வேறுவிதமாக சொல்லப்போனால் இந்த மரபுரேகையை உருவாக்க ஒரு சிறு பகுதியை மிமிக்ரி செய்தும் மற்றவற்றை கடன் வாங்கியும் உள்ளனர்.

"It might be still more accurate to say that the researchers mimicked one part and borrowed the rest" - Gregory Kaebnick, Is the “Synthetic Cell” about Life?, The Scientist, Volume 24, Issue 7, Page 27, dated 1st July 2010.
இன்னும் துல்லியமாக சொல்ல வேண்டுமென்றால், ஆய்வாளர்கள் ஒரு பகுதியை மிமிக்ரி செய்தும், மற்றவற்றை கடன் வாங்கியும் உள்ளனர் - (Extract from the original quote of) Gregory Kaebnick, Is the “Synthetic Cell” about Life?, The Scientist, Volume 24, Issue 7, Page 27, dated 1st July 2010. 

ஒரு கணிப்பொறியில் (Mycoplasma mycoides) உள்ள மென்பொருளை (Genome of Mycoplasma mycoides) காப்பி செய்து அதனை மற்றொரு கணிப்பொறியில் (Mycoplasma capricolum) மாற்றி விட்டு விட்டனர். ஆக, செல் என்னும் கணிப்பொறியை கடன் வாங்கியும், மரபுரேகை என்னும் மென்பொருளை மிமிக்ரி செய்தும் ஆய்வு முடிவுகளை அளித்திருக்கின்றனர். இது எப்படி கடவுளை மறுப்பதாக அமையும்?   

அதுமட்டுமல்லாமல் இவர்களுடைய ஆய்வுக்கு உறுதுணையாக இருந்தது ஒரு வாழும் செல் தான் (ஈஸ்ட் செல்). 

ஈஸ்ட் செல்கள் இல்லையென்றால் சின்தியா உருவாகியிருக்காது. ஆக, ஏற்கனவே இருந்த ஒரு உயிரைக்கொண்டு தான் செயற்கை மரபுரேகையை உருவாக்கியுள்ளனர்.

"Without life, Synthia wouldn't be alive" - Christina Agapakis, What Synthia Means to Me, Oscillator, Scienceblogs, dated 21st May 2010. 
உயிரில்லை என்றால் சின்தியா வந்திருக்காது -  (Extract from the original quote of) Christina Agapakis, What Synthia Means to Me, Oscillator, Scienceblogs, dated 21st May 2010.   

செயற்கையான ஒன்றை உருவாக்குவதற்கு இயற்கையான ஒன்றுதான் இவர்களுக்கு தேவைப்பட்டிருக்கின்றது.

மொத்தத்தில், இறைவனால் படைக்கப்பட்ட ஒரு உயிரை மாதிரியாக எடுத்துக்கொண்டு, இறைவனால் படைக்கப்பட்ட ஒரு உயிரை "செயற்கை மரபுரேகையை" உருவாக்க பயன்படுத்தி கொண்டு, இறைவனால் படைக்கப்பட்ட ஒரு உயிருக்குள் தங்களது செயற்கை மரபுரேகையை செலுத்திவிட்டு என்று இப்படி எல்லா நிலையிலும் JCV குழுவினருக்கு இறைவனுடைய படைப்புகள் தான் தேவைப்பட்டிருக்கின்றது. 

இப்படி இறைவன் கொடுத்த அனைத்தையும் உபயோகப்படுத்தி கொண்டு, விஞ்ஞானிகள் ஒரு உயிரை செயற்கையாக உருவாக்கி கடவுளை பொய்பித்து விட்டனர் என்று கூறுவது அபத்தமானது மட்டுமல்ல, அறிவுக்கு ஒத்து வராததும் கூட.

இதனால் தான் வென்டர் "தாங்கள் செயற்கை உயிரை உருவாக்கவில்லை" என்று மிக தெளிவாக, விரைவாக மறுத்து விட்டாரோ? 


செயற்கை செல் நாத்திக கொள்கையை பொய்பிக்கின்றதா?

என்னை பொறுத்தவரை, ஆம். 

உலகில், பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தற்செயலாக ஒரு செல் உருவாகியிருக்க வேண்டும் (Abiogenesis), பின்னர் அவற்றில் இருந்து படிப்படியாக உயிரினங்கள் வந்திருக்க வேண்டுமென்பது பல நாத்திகர்களின் நம்பிக்கை. இந்த நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்துள்ளது செயற்கை செல் ஆராய்ச்சி. 

பல பேருடைய அயராத உழைப்பில், அதி நவீன கருவிகளைக் கொண்டு இந்த செயற்கை மரபுரேகை உருவாகியுள்ளது. (நகலெடுப்பதில் ஏற்பட்ட) ஒரு சிறிய தவறு பல மாதங்களுக்கு இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டு நடக்க விடாமல் தடுத்திருக்கின்றது. ஆக, அதி கவனமாக பதினைந்து வருடங்களாக பாடுபட்டு இந்த ஆய்வை செய்திருக்கின்றனர். 

ஆனால் பல நாத்திகர்களோ ஒரு வாழும் செல் தற்செயலாக உருவாகியிருக்கும் என்ற வாதத்தை எந்தவொரு ஆதாரமும் இல்லாமலேயே நம்பிக்கொண்டிருக்கின்றனர். ஒரு சாதாரண பாக்டீரிய செல்லின் உள்ளே இருக்கும் மரபுரேகையை உருவாக்குவதற்கு அதிநவீன இயந்திரங்களின் உதவியும், பலருடைய தீவிர கண்காணிப்பும் தேவைப்படுகிறதென்றால், மிக சிக்கலான கட்டமைப்பை கொண்ட ஒரு வாழும் செல் யாருடைய கண்காணிப்பும், உதவியும் இல்லாமல் தற்செயலாக உருவாகியிருக்கும் என்பது என்ன விதமான வாதம்? 

ஒரு செல்லே தற்செயலாக உருவாகியிருக்க வாய்ப்பில்லை என்னும் போது அதனை அடிப்படையாக கொண்டு மற்றவை வந்திருக்கும் என்பது பகுத்தறிவுக்கு உட்பட்டதா?

ஒவ்வொரு முறையும் இறைவனை மறுப்பதாக கூறிக்கொண்டு நாத்திகர்கள் கொண்டு வரும் அறிவியல் ஆதாரங்கள் எல்லாம் பூமராங் போல திரும்ப அவர்களையே வந்து தாக்கும். இந்த முறையும் அது தான் நடந்துள்ளது. என்ன, கடந்த காலங்களை போலல்லாமல் வெகு விரைவாகவே அந்த பூமராங் இந்த முறை வந்து விட்டது.

இதுபோன்ற ஆய்வுகள் சில நாத்திகர்களது உள்ளத்தில் நிச்சயம் பல கேள்விகளை எழுப்பியிருக்கும். தங்கள் நிலைப்பாட்டை தள்ளி வைத்துவிட்டு உண்மையை அறிய தூண்டியிருக்கும். 

மனித குலத்திற்கு இந்த ஆய்வால் என்ன பலன்?   

பல பயன்கள் உள்ளதாக வென்டர் கூறியுள்ளார். சுத்தமான தண்ணீர் வழங்குவதிலிருந்து சுகாதாரம் வரை இந்த ஆய்வால் பயனுள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த ஆராய்ச்சி கேன்சர் போன்ற நோய்களை பற்றி நன்கு அறிவதற்கும், புதிய மருந்துகளை உருவாக்குவதற்கும் பயன்படலாம். 

ஆனால் அதே சமயம் இந்த ஆய்வுகளால் விபரீதங்களும் ஏற்படலாம் என்று பலரும் அஞ்சுகின்றனர். Bio-Terrorism போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படலாம் என்று சமூக ஆர்வலர்கள் எண்ணுகின்றனர். அமெரிக்க அதிபர் ஒபாமாவும் இந்த ஆய்வு குறித்து கவலை தெரிவித்திருக்கின்றார். 

"This development raises the prospect of important benefits, such as the ability to accelerate vaccine development. At the same time, it raises genuine concerns, and so we must consider carefully the implications of this research." - President Obama, in a letter to the chair of his new bioethics commission.  

இந்த ஆய்வு சரியான திசையில் சென்றால் இதனை வரவேற்று ஊக்குவிக்க வேண்டியது நம் அனைவரின் மீதும் கடமையாகிறது. 

இறைவன் எந்தவொரு நோயையும் அதற்குண்டான நிவாரணம் இல்லாமல் படைப்பதில்லை என்பது நபி மொழி. இது போன்ற ஆய்வுகள் மனித குலத்திற்கு சவாலாக இருக்கும் நோய்களை பற்றி நன்கு அறிவதற்கு பயன்படுகிறது என்றால் இதனை ஊக்குவிப்பதே ஒவ்வொரு இறை நம்பிக்கையாளரின் எண்ணமாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து. 
       
முடிவாக... 

உயிரியல் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக கருதப்படும் இந்த ஆய்வை மருதையன் போன்ற சகோதரர்கள் தங்கள் நாத்திக கொள்கையை வளர்க்க பயன்படுத்துவது ஆச்சர்யமாக உள்ளது.

ஆனால் பாவம், அவர்களும் என்ன செய்வார்கள்...கடவுளை மறுப்பதற்கு அறிவியல் ரீதியாக எந்தவொரு காரணங்களும் இல்லாத நிலையில் இப்படி ஏதாவது ஒன்று குறுக்கே வரும் போது அதனை வெளிச்சம் போட்டு காட்டிதான் தங்கள் நாத்திக நம்பிக்கையை தக்க வைத்து கொள்ள வேண்டியிருக்கின்றது. ஆனால் அந்த வெளிச்சமும் சிறிது காலமே நிலைத்திருக்கும் என்பது வரலாறு நமக்கு உணர்த்தும் பாடம். இந்த முறையும், "செயற்கை செல்" ஆராய்ச்சி கடவுளை பொய்பிக்கின்றது என்ற கருத்துக்கு அந்த ஆய்வை முன்னின்று நடத்தியவரே தெளிவாக பதில் சொல்லி இவர்களது பொய் பிரசாரத்திற்கு முற்றுபுள்ளி வைத்து விட்டார். 

இந்த ஆய்வு இறைவனை மறுக்காது, மாறாக இறைவனின் ஆற்றலை பறைச்சாற்றி இறை நம்பிக்கையாளர்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கின்றது

நான் நாத்திக சகோதரர்களை கேட்டுக்கொள்வதெல்லாம் இதுதான், நீங்கள் "செயற்கை செல்" ஆய்வை நன்கு ஆராய்ந்து பாருங்கள். அது கடவுளை மறுக்கின்றதா? அல்லது உங்கள் கொள்கையை அசைத்து பார்க்கின்றதா? என்று உங்கள் பகுத்தறிவை கொண்டு பதிலளிக்க முயலுங்கள்.....

முடிவாக, விஞ்ஞானிகளால் ஒரு உயிரை உருவாக்கவே முடியாதா? என்று நீங்கள் கேட்டால் அதற்கான பதிலை மே மாதம் வெளிவந்த பிரபல Nature இதழில் காணலாம். 

"Frankly, scientists do not know enough about biology to create life," - Jim Collins, Life after the synthetic cell, Nature, 27th May 2010. 
வெளிப்படையாக, ஒரு உயிரை உருவாக்கும் அளவு உயிரியலைப் பற்றி விஞ்ஞானிகளுக்கு தெரியாது - Jim Collins, Life after the synthetic cell, Nature, 27th May 2010.         

விஷயம் முடிந்தது....முற்றுப்புள்ளி......    


இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...
    

My Sincere thanks to:
1. Dr.Craig Venter.
2. The Wall Street Journal daily.
3. The Scientist magazine.
4. The New York Times daily.
5. Science magazine.
6. Reuters.
7. JCVI.org
8. Vinavu.
9. Nature Journal.

References: 
1. Creation of a Bacterial Cell Controlled by a Chemically Synthesized Genome - Science, Vol. 329. no. 5987, pp. 52 - 56, dated 2nd July 2010.
2. Is Synthia Life From Scratch? No, But A Cell Controlled By A Synthetic Genome May Save Our Energy Future - Science 2.0, dated 20th May 2010.
3. Cell door opens on fantastic future - The Sydney Morning Herald, dated 27th May 2010.
4. How We Created the First Synthetic Cell - J. CRAIG VENTER AND DANIEL GIBSON, The Wall Street Journal, dated 26th May 2010.
5. Artificial life? Synthetic genes 'boot up' cell - Reuters, dated 20th May 2010.
6. First Self-Replicating Synthetic Bacterial Cell - J.Craig Venter Institute.
7. What Synthia means to me - Christina Agapakis, Oscillator, Scienceblogs.com, dated 21st May 2010.
8. Is the Synthetic Cell about Life? - Gregory Kaebnick, Is the “Synthetic Cell” about Life?, The Scientist, Volume 24, Issue 7, Page 27, dated 1st July 2010.
9. Scientists create first synthetic cell - Hindustan Times, dated 22nd May 2010.
10. Synthetic Cell - Man playing God or plagiarising God? - Abu Musa, Khilafah.com, dated 27th May 2010.
11. Is Craig Venter's Synthetic cell really life? - Uncommon descent.
12. Researchers Say They Created a ‘Synthetic Cell’ - The New york Times, dated 20th May.
13. Mycoplasma capricolum, Mycoplasma mycoides, Microorganism, Genome, Bacterial cell structure - Wikipedia
14. How many genes are there in an average human? - Answers.com
15. Life after the synthetic cell, Nature, 27th May 2010.      
16. Vinavu's Article on Synthetic cell, 8th July 2010.


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ  

Click here to bookmark this link.Channel Image16:07 அனைத்து நபிமார்களுக்கும் அல்லாஹ்வால் அறிவிக்கப்பட்ட முக்கிய செய்தி! தினம் ஒரு குர்ஆன் வசனம்
'(நம் தூதராகிய) உமக்கும், உமக்கு முன் இருந்தவர்களுக்கும், வஹீ மூலம் நிச்சயமாக அறிவிக்கப்பட்டது என்னவென்றால், 'நீர் (இறைவனுக்கு) இணைவைத்தால், உம் நன்மைகள் (யாவும்) அழிந்து, நஷ்டமடைபவர்களாகி விடுவீர்கள். (என்பதுவேயாகும்)'. (அஸ்ஸுமர்:65).
Click here to bookmark this link.Channel Image04:18 வால்பையனுக்கு கடுமை அகற்றப்பட்ட பதில் அழைப்பு
(அன்பின் வால்பையன்,
உண்மையில் எம் முந்தைய நீக்கப்பட்ட இடுகையில் எழுத்துக்களை கடுமையாக்கி உம்மை வருத்தத்தில் ஆக்கியிருந்தால் அதற்காக உளமாற நான் வருந்துகிறேன். ஏன் அவ்வாறு எழுத நேர்ந்தது என்பது நம்மிருவருடன் மற்றவர்களும் அறிந்ததே. தேவையேற்படின் அதற்காக தங்களிடம் மன்னிப்பு கோரவும் தயங்க மாட்டேன்.

எழுத்துக்களில் எமக்கும் தடித்தனமாய் எழுத இயலும். எனினும் அவை எம் கொள்கைக்கு எதிரானது. நாம் அழகான முறையில் எம் கருத்துக்களை எடுத்துச் சொல்லவும் விவாதிக்கவுமே எப்போதும் விரும்புகிறோம். எனவே கடுமையான வார்த்தை பிரயோகங்கள் நீக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.)

ஒரு வாரத்துக்கு முன் பதிவர் நண்பர் சென்ஷி அவர்கள் வால் பையன் மற்றும் ராஜனுக்கு என்ற தலைப்பிலும் நண்பர் ஜிகே (கோவி. கண்ணண்) அவர்கள் வால்பையன் மற்றும் இராஜனுக்கு வேண்டுகோள்! என்ற தலைப்பிலும் வெளியிட்டிருந்த இடுகைகளை படிக்க நேர்ந்தது. அதன்பின் வால்பையன் அவர்களின் 'குர்ரானில் குஜிலி கும்பா" என்றஇடுகையும் படிக்க கிடைத்தது (அமீரகத்தில் அவர் பதிவு தடை செயயப்பட்டுள்ளதாம்). சென்ஷியுடைய, ஜிகேயுடைய பதிவுகளில் வால்பையன் கொடுத்திருந்த பின்னூட்டங்கள் அவரின் வாதங்கள் பதிலளிக்கப்பட இயலாத வாதங்கள் என்ற நிலையிலும் பின்னூட்டங்கள் இட்டிருந்தார். அதற்காகவே இந்த இடுகை.

முதலில்
அன்பின் வால்பையன்.
ஒரே கேள்வியை அழகாகவும் கேட்க முடியும். அருவருப்பான முறையிலும் கேட்க முடியும். கனியிருப்பக் காய் கவராமல் எந்த விவாதத்தையும் அழகான முறையில் கொண்டு செல்வதுதான் நல்ல பண்பாடாக அமைய முடியும். எனவே உங்கள் இடுகையிலுள்ள அருவருப்பை அகற்றுங்கள். அதற்காக வருத்தம் தெரிவிப்பது நல்ல பண்பாடாக இருக்கும்.

சிலருக்கு கலைஞர் கருணாநிதி அவர்களிடம் சில கோபங்கள் இருக்கலாம். விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அவரை விமர்சிக்கும்போது கண்டிப்பாக சில பண்புகளை ஒழுக்கங்களை கடை பிடித்தாக வேண்டியது அவசியம். ஏனெனில், உங்களுக்கு பிடிக்கா விட்டாலும் தமிழகத்தின் கணிசமான மக்களால் தலைவர் என போற்றப்படும் தலைவர்களில் ஒருவர் அவர். அதற்காக அவரது தொண்டர்களாலேயே ஆட்டோ அனுப்பி கவுரவிக்கப்பட்டால், திமுக அனுதாபிகள் எல்லாம் தீவிரவாதிகள் எனப் பொருள் கொள்ளப்பட மாட்டாது. இது ஒரு உதாரணம்தான்.

அவற்றையெல்லாம் விட பல படிகள் மேலாய் முஹம்மது நபி (அன்னாரின் மீது சாந்தி தவழுவதாகுக) அவர்கள், இவ்வுலகத்தின் குறைந்தது ஐந்திலொரு பகுதி மக்களால் தம் உயிரினும் மேலாய் மதித்து போற்றப்படும் பெரும் தலைவர், வழிகாட்டி. அவரது ஒவ்வொரு சொல்லும், செயலும், அங்கீகாரமும் எங்களுக்கு எங்கள் பெற்றோரை விடவும், மற்றெல்லா மனிதர்களை விடவும், பல்லாயிரம் மடங்கு உயர்ந்தது. அவரை விமர்சியுங்கள். ஆனால் அவற்றில் அவரது கண்ணியத்திற்கு களங்கம் தரும், தரம் தாழ்ந்த வார்த்தை பிரயோகங்கள் தவிர்க்கப் பட்டிருக்க வேண்டியது அவசியம். அதுவே நற்பண்பு. அத்தகு விமர்சனங்களுக்கு தகுதியுள்ளோர் தேவையேற்படின் பதிலளிப்பர். யாரும் யாரையும் நிர்ப்பந்திக்க முடியாது. ஏனெனில் 'பதிலில் உள்ள நியாயங்களை ஏற்றுக் கொள்ளும் அறிவு நாணயம், கேள்வி கேட்பவர்களிடத்தில் மிகப் பெரும்பாலும் இல்லை' எனும் வாதத்தை என் அனுபவம் ஏற்றுக் கொள்கிறது.

தரமற்ற வார்த்தைகளை கொண்டிருந்ததால் இவ்விமர்சனங்களுக்கு பதில் சொல்லி நேர விரயம் செய்ய விருப்பமில்லாமல் இருந்தது. என்றாலும் உதாரணத்துக்காக சில பதில்கள் மட்டும்
//... ... ... தனது காம இச்சைக்காக, அவர் பல திருமணங்களை செய்யவில்லை என்று கூறுவர் பார்க்க.
மனைவி துணைவி ஸ்டைல் ... ... ...! அம்பது வயசுக்கு மேல இந்தாள ஐஸவர்யா ராயா கட்டும். பல்லு போன கெழவிக தான் கட்டும்! //
1400 வருடத்துக்கு முந்திய அராபிய கலாச்சாரம் பற்றி ஏதாவது தெரியுமா? அப்போதைய பெண்களின் நிலையைப் பற்றி ஏதாவது படித்திருக்கின்றீர்களா? உங்கள் பாட்டியோட காலத்தில் அவர்களின் நிலைமை எவ்வாறிருந்தது என அவர்களிடம் கேட்டுத் தெளிந்து, பின்னர், 1400 வருடத்துக்கு முந்தைய நாட்களில் பெண்களின் வாழ்வு எவ்வாறிருந்து இருக்கும் என எண்ணிப் பாருங்கள்.

நபி அவர்களது 25வது வயதில் அவரது முதல் திருமணம். 40வது வயதில்தான் அண்ணல் அவர்களுக்கு முதன்முதலாக இறைச்செய்தி வந்தது. அதன் பிறகான அவரது கடுமையான போராட்ட வாழ்வுக்குப்பின் குறைந்தது ஐந்தாறு ஆண்டுகளுக்குப்பின் மக்காவின் மக்கள் அவருடைய செய்திகளுக்கு செவி சாய்த்து கூடுதலாக இணையத் துவங்கினர். அப்போது அவரிடம் பேசப்பட்ட பேரத்தில் ஒன்று. அதை நீங்கள் விட்டு விட்டால் அதற்குப் பிரதியாக அரபுலகத்திலேயே அழகான பெண்களை (பெண்ணையல்ல - பெண்களை) உமக்கு மணமுடித்துத் தருகிறோம் என்பதாகும். யோசியுங்கள். அந்த காலத்து ஐஸ்வர்யா ராய்களை அவர்களே கட்டிக் கொடுக்க தயாராய்த்தான் இருந்தார்கள்.

அவர் மற்ற பெண்களை மணமுடித்த போது, உம்மையும் எம்மையும் போல் பக்கத்து தெருவில் வசிப்பவரே 'பையன் யாரு?' என்று கேட்கக் கூடிய நிலையில் இல்லை. அந்தக் காலத்திய (ரிஸஸனுக்கு முந்தைய) அமெரிக்காவாக இருந்த ரோம சாம்ராஜ்யமே அவரது பேரைக் கேட்டு கதி கலங்கியது. முடி சூட்டிக் கொள்ளா விட்டாலும் மாமன்னர்.

அடுத்து அவரது திருமணங்கள் காம இச்சைக்காக என நிறுவ //ஆயிஷா கூறினார். அல்லாஹ்வின் தூதர் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தபோது நாளை ... ... ... அவர்களின் உமிழ்நீர் என் உமிழ் நீருடன் கலந்திருந்த நிலையில் அல்லாஹ் அவர்களை கைப்பற்றிக் கொண்டான்// என்ற ஹதீஸைக் குறிப்பிட்டு விட்டு
//அடச்ச! சிவ பூஜைல கரடி பூந்தா மாதிரி அருமையான நேரத்துல அல்லா பூந்து குட்டைய கொழப்பிட்டாருப்பா!// அதற்கடுத்து மேலும் பல அசிங்க வாதங்களை வைத்துள்ளீர்கள்.

நபியவர்களின் மரணத்தருவாயில் நடந்த நிகழ்ச்சியைப் பற்றிக் கூறும் போது, அது அவரைத் தமது உயிரினும் மேலாய் மதிப்பவர்களை எளிதில் உணர்ச்சி வசப்பட வைக்கும் என்பதை அறிந்து, அதற்கான விளக்கங்களை மேலும் அறிய முயற்சித்திருக்க வேண்டும். எங்கேயோ எழுதி வைத்தவைகளை படியெடுத்து, அதில் மேலும் பல அசிங்க வார்த்தைகளை சேர்த்து வைப்பது அறிவுடைமை ஆகாது.

நபியவர்கள் நோன்பு காலங்களிலும் மற்ற நாட்களிலும் மிஸ்வாக் எனும் பல் துலக்கும் குச்சியால் தம் பற்களை சுத்தம் செய்பவதை அதிகம் விரும்புபவராய் இருந்தார்கள். அது உங்களுக்கு கஷ்டத்தை தராது என்று இருந்திருந்தால் ஒவ்வொரு தொழுகைக்கு முன்னும் மிஸ்வாக் குச்சியினால் பல் துலக்குவதை கட்டாயமாக்கி இருப்பேன் என்று சொல்லுமளவுக்கு இருந்தார்கள்.

அன்னார் இறப்பெய்தும் அந்த தருணத்தில் மிகவும் நோய்வாய்ப்பட்டு, அடிக்கடி மயக்கம் வருவதும் தெளிவதுமாய் இருந்து, நடக்க முடியாமல் இருவரின் தோள்களில் தொங்கிக் கொண்டு, கால்கள் தரையில் இழுபட வீட்டை ஒட்டிய பள்ளிக்கு சென்றிருக்கிறர்கள். அத்தகு நிலையில் பள்ளியை ஒட்டிய ஆயிஷா அம்மையார் அவர்கள் வீட்டில் தங்கியிருந்த நிலையில், அவர் வீட்டுக்கு வந்திருந்த ஆயிஷா அம்மையாரின் சகோதரர் கையில் வைத்திருந்த மிஸ்வாக் குச்சியை பார்க்கிறார்கள். அது வேண்டுமா என அம்மையார் கேட்க ஆம் என்பது போல பார்க்கின்றார்கள். அப்போது அம்மையார் அவர்கள் தம் சகோதரர் கையில் வைத்திருந்த மிஸ்வாக்கை வாங்கி அதன் உபயோகப்படுத்தாத மறு முனையைக் கடித்து, நன்றாக மென்று மென்மையாக்கி நபி அவர்களின் வாயில் வைக்கின்றார்கள். இதுதான் 'அன்னாரின் உமிழ்நீர் என் உமிழ்நீருடன் கலந்திருந்த நிலை' என்று அம்மையார் சொல்கிறார்கள். உங்கள் வாத்திலுள்ள தவறை அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறென்.

அதற்கடுத்து இதற்கு துணையாக அபூதாவுதிலுள்ள ஒரு ஹதீஸை குறிப்பிட்டிருக்கின்றீர்கள்.
அதில் 'எனது நாவினை சுவைப்பார்' என்ற வார்த்தை கூடுதலாக வந்துள்ளதால் அது தவறான ஹதீஸ் என்பதை விளக்கவும் விளங்கவும் பெரிய முயற்சி எதுவும் தேவையில்லை. அபூதாவுது ஹதீஸ் புத்தகத்திலுள்ள தவறான ஹதீஸ்கள் நீக்கப்பட்டு சுனன் அபூதாவுது எனும் புத்தகம் வந்து பல ஆண்டுகள் ஆகி விட்டது.

கடைசியில்
நேரான கேள்விகளுக்கு தெளிவான பதில்கள் இஸ்லாத்தில் எப்போதும் உண்டு. தங்களின் முன் முடிவுகளைத் துறந்து விட்டு, திறந்த மனதுடன், உண்மைகளை அறியும் நன்நோக்குடன் மட்டும் அணுகுவோரால் அதன் உண்மைகளை அறிந்திட இயலும்.
Click here to bookmark this link.Channel Image04:18 ரமதானில் சரி பார்க்க தினப்படிவம் அழைப்பு
1. ஸஹ்ர் உணவை பிற்படுத்தி கடைசி நேரத்தில் (பஜ்ர் அதானுக்கு பத்து நிமிடம் முன்பு) உண்டீர்களா?
2. பஜர் தொழுகையை அதன் குறிப்பிட்ட நேரத்தில் அதற்குரிய சுன்னத் தொழுகையோடு தொழுதீர்களா?
3. காலைப் பொழுதிற்கான திக்ரை செய்தீர்களா?
4. ஐந்து நேரத் தொழுகையையும் அதனதன் முதல் நேரத்தில் சரியாகத் தொழுதீர்களா?
5. ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் வரையறுக்கப்பட்ட திக்ரை செய்தீர்களா?
6. ஒரு நாளுக்குரிய 13 ரகஅத் சுன்னத்தையும் தொழுதீர்களா?
7. முஸ்லீம் உம்மத்துக்காக குனூத் அல்லது துஆ செய்தீர்களா?
8. உங்களது தாய், தந்தைக்காக துஆ செய்தீர்களா?

9. இன்று ஏதாவது ஒரு நன்மையை ஏவினீர்களா?
10. இன்று ஏதாவது ஒரு தீமையைத் தடுத்தீர்களா?
11. பர்ளான தொழுகையை ஒன்றுக்கு மேற்பட்ட நேரங்களில் பள்ளியில் ஜமாஅத்துடன் தொழுதீர்களா? (ஆண்களுக்கு)
12. குர்ஆனின் ஒரேயொரு வசனத்தையாவது அதன் பொருளோடு படித்து, அறிந்து, உணர்ந்தீர்களா?
13. ஏதாவது ஒரு புதிய ஹதீஸை அதன் பொருள் விளக்கத்தோடு படித்து அறிந்தீர்களா?
14. குறைந்த அளவாக குர்ஆனின் ஒரு பக்கமாவது ஓதினீர்களா?
15. கற்றல் அல்லது கேட்டலின் மூலம் அறிவைப் பெருக்க முயன்றீர்களா?
16. நீங்கள் சரியாக கடைபிடிக்காத ஒரு புதிய சுன்னத்தை கடைபிடித்தீர்களா?
17. ஒரு முஸ்லீமின் மகிழ்ச்சிக்காவது காரணமாய் இருந்தீர்களா?
18. உங்களுடைய பெற்றோரை மகிழ்வித்தீர்களா? அவர்களை ஆரத்தழுவி முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தினீர்களா?

19. யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் இருந்தீர்களா? யாரையும் பற்றி புறம் பேசாமல் இருந்தீர்களா?
20. யாரைப்பற்றியும் வீணாண, தவறான எண்ணங்கள் வராமல் தங்கள் மனதை தூய்மையாக வைத்தீர்களா?
21. அனுமதிக்கப்பட்டதா இல்லையா என சந்தேகமான விஷயத்தை விட்டும் தவிர்ந்து கொண்டீர்களா?
22. உங்கள் உடல் நலத்தில் இயன்ற அளவு கவனம் செலுத்தினீர்களா?
23. தர்மம் செய்தீர்களா? (பொருளால்)
24. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அல்லது அதன் பாதிப்புக்கு எதிராக எதாவது செய்தீர்களா?
25. ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹி வஸல்லம் அவர்களுக்காக பிரார்த்தித்தீர்களா?
26. பாவமன்னிப்புக்காக தவ்பா மற்றும் இஸ்திஃபார் செய்தீர்களா?
27. இந்த தீனுக்காக குறைந்தது 10 நிமிடங்கள் உழைத்தீர்களா?
28. உங்களுக்கும் அல்லாஹ்வுக்கும் மட்டுமே தெரிந்த வகையில் ஏதாவது ஒரு நன்மையான காரியத்தை மறைவாகச் செய்தீர்களா?
29. உங்களுடைய உணவிலிருந்து உங்களை அடுத்துள்ளோருக்கும் நோன்பு திறக்க உதவினீர்களா?

29a. உண்ணும் போதும் பருகும்போதும் வீண் விரயங்களை தவிர்த்தீர்களா?
30. நோன்பை அதன் முதல் நேரத்தில் துரிதப்படுத்தி திறந்தீர்களா?
31. அஸர் நேரத்து திக்ரை செய்தீர்களா?
32. இரவுத் தொழுகையை (அல்லது தராவீஹ்) தொழுதீர்களா?
33. உங்கள் மரண சாசனத்தை எழுதினீர்களா? அல்லது அதில் செய்ய வேண்டிய மாற்றங்களை செய்தீர்களா?
34. இறப்பு மற்றும் மறுமை வாழ்க்கையைப் பற்றி சிந்தித்தீர்களா?
35. தஹஜ்ஜத் நேரத்தில் குறைந்தது இரண்டு ரகஅத்களாவது தொழுதீர்களா?
36. வித்ரு தொழுகையை தொழுதீர்களா?
37. உங்களுடைய சுவர்க்க வாழ்வுக்காகவும், நரக மீட்சிக்காகவும் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தீர்களா?
38. உளு உடைய நிலையிலேயே உறங்கச் சென்றீர்களா?
39. எந்த மனிதர் மீதும் கெட்ட எண்ணம் ஏதும் இல்லாத நிலையில் உறங்கச் சென்றீர்களா?

வெள்ளிக்கிழமைக்கு (கூடுதலாக)
40. சூரா கஹ்ப் (குகை) அத்தியாயத்தை ஓதினீர்களா?
41. உங்களை அழகு படுத்திக் கொள்ளவும் அதை சரிவர தொடர்வதற்காகவும் கூடுதல் கவனம் செலுத்தினீர்களா?

42. ஜூம்ஆ தொழுகையை அதன் முதல் நேரத்தில் தொழும் சிறந்த கூட்டத்தில் உங்களை இணைத்துக் கொண்டீர்களா?
43. இன்றைய குத்பாவில் கூறப்பெற்ற விஷயத்தைப் பற்றி குறைந்தது பத்து நிமிடங்களாவது சிநதித்தீர்களா?

ஒரு வாரத்துக்கு - சிறப்பாக
1. குர்ஆனிலிருந்து ஒரு கால் பக்கமாவது மனனம் செய்தீர்களா?

2. தேவையுள்ள யாருக்காவது உணவு மற்றும் துணிகள் கொடுத்தீர்களா? யாருக்காவது ஏதும் அன்பளிப்புகள் வழங்கினீர்களா?
3. இறைத்தூதுவரின் ஹதீஸ்களிலிருந்து ஏதாவதொன்றை மனனம் செய்தீர்களா?
4. இறைத்தூதுவரின் சுன்னத்திலுள்ள ஏதாவது ஒரு துஆவை மனனம் செய்தீர்களா?
5. வேறுபட்டு பிரிந்துள்ள இரு மனிதர்களின் இதயங்கள் அன்பினால் இணைய உதவினீர்களா?
Click here to bookmark this link.Channel Image04:18 பகுத்தறிவு தீர்ப்பளிக்கட்டும் அழைப்பு
நாம் வாழும் இவ்வுலகில் கோடிக்கணக்கான மக்கள் நம்மோடு வாழ்கின்றனர். எண்ணிலடங்காதோர் வாழ்ந்து மடிந்தனர். மனிதர்களிடையே நிறத்தால், குணத்தால், அறிவால், மொழியால், உடல் அமைப்பால் இன்னும் பலவற்றால் வேறுபாடுகள் இருந்தாலும் அவர்களனைவரது மூலப்பொருளும் விந்துத் துளிதான். அனைவருக்கும் குருதி செந்நிறந்தான். அனைவரும் மனிதர்கள்தாம்.

மனித வரலாற்றை தலைமுறை தலைமுறையாக ஆய்ந்தால் கடைசியில் ஒரு மனிதனில்தான் முடியும் என்பதில் ஐயமில்லை. இவ்வடிப்படையில் எல்லா மக்களும் ஒரே தாய் தந்தையரின் வழித் தோன்றல்கள்தான்.

மனிதனுக்கு மேலாக சர்வ வல்லமை பொருந்திய ஒரு சக்தி உண்டென்று பகுத்தறிவு சொல்கிறது. ஆன்மீக நம்பிக்கையுள்ளோர் அதை இறைவன் என்கின்றனர். சிந்தனையை சற்று கூர்மைப் படுத்தினால், இந்த இறைவனைப் பற்றி மனம் பல கேள்விகளை எழுப்புகிறது.

யார் அந்த இறைவன்? அவன் ஒருவனா? இருவரா? மூவரா? அல்லது பலரா? அதன் பண்புகள் என்ன? அதனைப் பார்க்க முடியுமா? அதன் சக்தி எவ்வளவு? அவன் குறிப்பிட்ட பூமிக்கு, நாட்டிற்கு, மக்களுக்கு மட்டும் இறைவனா? அல்லது எல்லோருக்கும், எந்நாட்டவருக்கும், எல்லா மொழியினருக்கும், எல்லா உயிரினங்களுக்கும், எல்லா கிரகங்களுக்கும் அவன்தான் இறைவனா? என்று பலப்பல கேள்விகள் எழுகின்றன.

மனிதனின் சிறப்பம்சமான பகுத்தறிவைக் கொண்டு மேற்கண்ட கேள்விகளை ஒவ்வென்றாய் ஆய்வோம்.

இப்போது ஒன்றிற்கு மேற்பட்ட கடவுளர் இருப்பதாக கொள்வோம். ஒவ்வொரு கடவுளும் ஒவ்வொன்றை நினைத்து, அதை செயல்படுத்தினால்.....
ஒரு கடவுள் ஒரு மனிதனை தண்டிக்கவும் மற்றொரு கடவுள் அம்மனிதரை மேம்படுத்தி நன்மை செய்யவும் முனைந்தால்..... முடிவு....??
ஆக ஒரே அதிகாரம், ஒரே சக்தி, ஒரே இறைவன் தான் இருக்க முடியுமென்று பகுத்தறிவு சொல்கிறது.

மனிதனைப் போன்றே கடவுளும் இருந்தால்.....
நமக்குரிய பலவீனங்கள் அவரிடமும் இருக்கும்.
நம்மைப் போன்றே பலவீனமுள்ள இறை எதற்கு? அவசியமில்லையே!
நம்மில் மாறுபட்டு, பலவீனங்கள் அற்றவனாக, அவன் உயர்ந்திருக்க வேண்டுமென நம் பகுத்தறிவு சொல்கிறது.

நம்மைப் போன்று பசிப்பிணி உள்ளவனாக இல்லாமல், இறைவன் உண்ணாதவனாகவும் நமக்கு உணவளிப்பவனாகவும் வேண்டும். ஏனெனில் அவன் உண்ணும்போது உதவி வேண்டுவோருக்கு உதவ முடியாதே!.

நாம் தேவையுடையவர்களாய் இருக்கிறோம். இறைவன் எந்தத் தேவையுமற்றவனாக வேண்டும். ஏனெனில் தேவைகளுக்காக அவனே எதிர்பார்த்திருக்கும் நேரத்தில் நம் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாதே!.

நாம் தாய், தந்தை, குழந்தை, குடும்பமென்று, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, சார்ந்து வாழ்கிறோம். இறைவன் யாரையும் பெறாதவனாகவும், யாராலும் பெறப்படாதவனாகவும் இருக்க வேண்டும். ஏனெனில் அவன் குடும்பத்தாருக்கு கட்டுப்பட்டு நமது தேவைகளை நிறைவேற்றாமல் போய் விடக்கூடாதல்லவா?.

நமக்கு நிச்சயம் மரணமுண்டு. இறைவன் மரணமடையாதவனாக, நித்திய ஜீவனாக இருக்க வேண்டும். ஏனெனில் மரண பயத்தில் அவன் நம்மை மறந்து விடக்கூடாதே.

நாம் உழைப்புக்குப் பின் களைக்கிறோம், ஓய்வெடுக்கிறோம், உறங்குகிறோம். இறைவன் களைப்பற்றவனாக, ஓய்வு தேவையற்றவனாக, உறங்காதவனாக வேண்டும். ஏனெனில் அவன் களைப்புற்று, ஓய்வெடுக்கும் போது அல்லது உறங்கும்போது, நமது தேவைக்கான கூப்பாடு அவனுக்கு கேட்காது அல்லது அவனை எரிச்சலடையச் செய்யுமே.

நாமும் ஏனைய பொருட்களும் படைக்கப்பட்டவர்கள் அதனால் படைத்தவனிடம் கடப்பாடுண்டு. இறைவன் படைக்கப்படாதவனாயும் அதே நேரம் எல்லாவற்றையும் படைத்தவனாயும் இருக்க வேண்டும்.

நமக்கு நாளையைப் பற்றிய சரியான ஞானமில்லை. நமது கண்களுக்கு அப்பால் நடப்பதை அறிய மாட்டோம். இறைவனோ நடந்தது, நடப்பது, நடக்க விருப்பது என முக்காலத்தைப் பற்றியுமான தெளிவான ஞானமுடையவனாக இருப்பதோடு, அவன் பார்வைக்கு எதுவும் மறைந்ததாகவும் இருக்கக் கூடாது. ஏனெனில் நாளைக்கு நமக்கே கெடுதலாக வருமென்பதை அறியாமல், நாம் எதையாவது கேட்டு வைக்க, இறைவனும் அதையே தெரியாமல் கொடுத்து விட்டால்…..

நாம் நினைப்பதை எல்லாம் செயல்படுத்த முடியாது ஏனெனில் நாம் சிலரது அல்லது பலரது கேள்விகளுக்கு பதில் சொல்லக் கடைமையுடையவர்கள். இறைவன் தான் நினைத்ததை முடிப்பவனாக இருக்க வேண்டும். அவனே கேள்வி கேட்பவனாகவும், யாராலும் கேள்வி கேட்கப்படாதவனாகவும் இருந்தாக வேண்டும்.

நாம் பயந்தவர்களாகவும் பாதுகாப்பு வேண்டியவர்களாகவும் இருக்கிறோம். இறைவன் பயமற்றவனாக, பாதுகாப்பு தேவையற்றவனாக, அதே சமயம் நம்மைப் பாதுகாப்பவனாகவும இருக்க வேண்டும்.

இத்தகு தகுதிகளுள்ள இறைவன் நம்மிடம் எவ்வாறு நடப்பவனாக இருக்க வேண்டும் என பகுத்தறிவு எதிர்பார்க்கிறது?

இறைவன் கருணையும், அன்பும் நிறைந்தவனாக இருக்க வேண்டும். தாய் தன் குழந்தையிடம் காட்டும் இரக்கத்தை விட மிகக் கூடுதலான இரக்கமுள்ளவனாக இருக்க வேண்டும்.

நாம் நன்மை செய்தால் நமக்கு பரிசளிப்பவனாகவும், நாம் தீமை செய்தால் நம்மை தண்டிப்பவனாகவும் இருக்க வேண்டும். செய்த தீமைகளுக்காக நாம் மனம் வருந்தினால் நம்மை மன்னிக்கும் மாண்பாளனாகவும் இருக்க வேண்டும்.

அவன் ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கோ, மொழியினருக்கோ, ஜாதியினருக்கோ, நாட்டினருக்கோ மட்டும் இறைவனாக இல்லாமல் மனித குலம் அனைத்துக்கும் (ஏன்? இப்பிரபஞ்சம் முழுமைக்கும்) அவனே இறைவனாக இருக்க வேண்டும். நம் தோற்றத்தையோ, மொழியையோ, குலத்தையோ பார்க்காமல், நம் எண்ணங்களையும், செயல்களையும் பார்த்து எடை போடுபவனாக இருக்க வேண்டும்.

பலப்பல தீமைகள் செய்து, அட்டூழியங்களே வாழ்க்கையாக வாழ்ந்து, பொதுச்சொத்துகளை அபகரித்து, கொலைப் பல செய்து, மனித உரிமைகளை மிதித்து வாழ்ந்தவர்கள், சில பல காரணங்களுக்காக இவ்வுலகில் தப்பி விட்டாலும், அவர்களை சரியாக விசாரணை செய்து தகுந்த தண்டனையளிப்பதோடு பாதிக்கப்பட்பவர்களுக்கும் மனம் நிறையும் நீதி வழங்குவதில், அவன் நீதி வழுவாதவனாக இருக்க வேண்டும்.

அவன் படைத்த மனிதர்களாகிய நமக்குள்ளேயே பிறப்பாலோ, செல்வத்தாலோ அல்லது தொழிலாலோ உயர்வும் தாழ்வும் கற்பிக்காதவனாக இறைவன் வேண்டும்.

இறைவன் நம்மைப் படைத்தவனாகவும், பாதுகாப்பவனாகவும், நேர்வழி காட்டுபவனாகவும், தெளிவான வாழ்க்கைத் திட்டத்தை தருபவனாகவும் வேண்டும்

என்றெல்லாம் சிந்தனை விரிகிறது.

இப்படி பகுத்தறிவு கேட்கும் கேள்விகளுக்கு, மாற்றமில்லாத இறையைத்தான் எனக்கு இஸ்லாம் அறிமுகப்படுத்தித் தந்தது.

இஸ்லாம்

1. இது ஒரு மதமல்ல. மனிதன் எவ்வாறு வாழ வேண்டுமெனச் சொல்லும் வாழ்க்கை நெறிமுறைகளின் தொகுப்பு அல்லது வழிகாட்டி

2. இது மனித அறிவினால் தோற்றுவிக்கப்பட்டதல்ல. இறைவனே கொடுத்தருளியது. மனிதன் இன்று ஒன்றைச் சொல்வான், நாளை அந்நியதிகள் மாறலாம். முக்காலமும் அறிந்த இறைவனின் நியதிகளில் தவறு ஏற்படாது.

3. அதற்காக சிந்தனைக்கும் பகுத்தறிவுக்கும் அபபாற் பட்டதல்ல. சிந்திக்கவும் பகுத்தறிவைப் பயன்படுத்தத் தூண்டும் அல்லது வற்புறுத்தும் வாழ்க்கை நெறி.

4. வன்முறைக்கும் துவேசத்துக்கும் இங்கே இடமேயில்லை. இஸ்லாத்தில் எவ்வித நிர்பந்தமுமில்லை என்பதும் இதன் அடிப்படைகளில் ஒன்று.

5. மனிதரிடையே ஜாதி, இன, மொழி வேறுபாடுகளால் உயர்வு தாழ்வில்லை. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற முறையில் அமைக்கப் பட்டுள்ளது. பிறப்பால் மேல் ஜாதி அல்லது கீழ் ஜாதி என்றோ, அரசன், ஆண்டி, படித்தவன், பாமரன் என்றோ உள்ள வேறுபாடுகளையெல்லாம் களைந்து மனிதர்களிலே நல்லவன், தீயவன் என்ற அடிப்படையில் மட்டும் அணுகும் ஒரு வழிமுறை.

6. இது வெறும் சடங்கு சம்பிரதாயங்கள் மட்டுமேயுள்ள மதமல்ல. இது ஒரு அழகான, முழுமையான வாழ்க்கைத் திட்டம். பெண்ணுரிமை பேணி, சரியான அந்தஸ்தை வழங்குகிறது.(பெண்களுக்கும் சொத்தில் உரிமை, விதவை மறுவாழ்வு, ஆண்தான் பெண்ணுக்கு வரதட்சணை வழங்கவேண்டும்.)

7. இது மனித குலம் எதிர் நோக்கியுள்ள அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு வழங்கும் நீதித்திட்டம். (பொருளாதாரக் கோட்பாடுகள், சட்ட இயந்திரத்தின் இயக்கம், வட்டியில்லா வாழ்வு, இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுப்பது அவர்களது கடமை என்றும், இருப்பவர்களிடமிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை அரசின் முலம் எடுப்பது இல்லாதவர்களுக்கான உரிமை என்றும் கூறுகிறது.)

8. பொய், களவு, லாட்டரி, மது, சூது, விபச்சாரம், லஞ்ச லாவண்யம், அடக்குமுறை, அடிமைத்தனம், மூட நம்பிக்கைகள் போன்றவற்றை வேரோடு ஒழிக்கும் ஒரு பகுத்தறிவுப்பாதை.

9. இது மனித உரிமைகளை நிலை நிறுத்தும் ஒரு மிகப்பெரிய வழி முறை. அறிவியல், தொழில் நுட்பம் இதற்கு எதிரானதல்ல. மாறாக, இயைந்தது. இஸ்லாம் ஒரு அறிவியல் பூர்வமான அணுகுமுறைக்கான வழிமுறைதான்.

10. சமத்துவத்தையும் சகோதரத் துவத்தையும் நிலை நிறுத்தி, மனிதன் மனிதனாக வாழ்ந்து, சாந்தியையும் சமாதானத்தையும் அடைவதற்கு வழி காட்டும் முழுமையான வாழ்க்கை நெறி முறைகளின் தொகுப்புதான் இஸ்லாம்.

நான் விரும்புவதை மற்றவர்களும் விரும்ப வேண்டும் என்று நான் எதிர்பார்ப்பதில்லை. நான் நினைப்பதைப் போலவே மற்றவர்களும் நினைக்க வேண்டியதுமில்லை. என்னுடைய விருப்பு பலருக்கு வெறுப்பாகலாம். நான் வெறுப்பதை பலர் விரும்பலாம். இவை மனித இயற்கை.

என் எண்ணங்களை இங்கே வைத்திருக்கிறேன். என்னைப் போன்றே எண்ணமுள்ளவர்களைக் காணும் போது மனது மகிழ்வதும் இயல்புதானே. நேரெதிரான எண்ணமுள்ளவர்களை சந்திக்கும்போது - தவறான கொள்கையில் (என் பார்வையில்) இவ்வளவு பிடிவாதமாக இருப்பதற்காக வருத்தப் படுவேன் - ஆனால் அவர்களை வெறுப்பதில்லை. இயன்றால் அவர்களுக்காக பிரார்த்திப்பேன். அது அவரவர் தனிப்பட்ட விருப்பம். என் கருத்து எனக்கு, உங்களது உங்களுக்கு. என் கருத்தை விடவும் சிறப்பான கருத்துகள் யாரிடமிருந்தாவது வந்தால், அதன் உண்மைகளை யோசிக்க நான் தயங்க மாட்டேன். அது போல் நான் சொல்பவற்றின் உண்மைகளை எந்த இதயமாவது யோசித்தால்.... அதுதான் இவ்வெழுத்தின் நோக்கம்.

உலகில் ஒரு பொருளை வாங்கும் முன் அதன் தரமென்ன? அது பயனுள்ளதா? ஏதேனும் கேடு தருமா? என்றெல்லாம் சிந்தித்து வாங்குகிறொம். ஆனால், மிகப் பரிதாபம்!. நமது இவ்வுலக மற்றும் மறு உலக வாழ்க்கை வழிகாட்டி, வாழ்க்கையின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காணும் உன்னதமான அந்த குர்ஆனையும் இஸ்லாத்தையும் சிந்திக்கிறோமா? பகுத்தறிவை பயன்படுத்துங்கள்.

அறிவுப் பூர்வமாக சிந்தியுங்கள். உங்கள் இறைவனைப் பற்றி நீங்களே சிந்தித்து ஒரு முடிவுக்கு வாருங்கள். பகுத்தறிவு நெறியான இஸ்லாத்தைப் பற்றி நீங்கள் ஏன் அறிய முற்படக் கூடாது. இஸ்லாம் தந்துள்ள அறிவுப் பெட்டகமான குர்ஆனை நீங்களே சுயமாக ஏன் ஆய்வு செய்யக் கூடாது.

இறைவன் நாடினால்…. இன்னும் வரும்.
எழுதியவர்: சுல்தான் at 7:29 PM

29 மறுமொழிகள்:
Sivabalan said...
இன்னும் முழுமையாக இப்பதிவை படிக்கவில்லை..

படித்துவிட்டு வருகிறேன்..

நன்றி!

8:26 PM
--------------------------------------------------------------------------------

We The People said...
//ஒரு கடவுள் ஒரு மனிதனை தண்டிக்கவும் மற்றொரு கடவுள் அம்மனிதரை மேம்படுத்தி நன்மை செய்யவும் முனைந்தால்..... முடிவு....??
ஆக ஒரே அதிகாரம், ஒரே சக்தி, ஒரே இறைவன்//

என் பகுத்தறிவு ஒரு கேள்வி கேட்க்கிறது! ஒரு இறைவன், ஒரு நேரத்தில் எப்படி கோடானகோடி மக்களை கவனித்துக்கொண்டே இருப்பான்!!!??

//மனிதனுக்கு மேலாக சர்வ வல்லமை பொருந்திய ஒரு சக்தி உண்டென்று பகுத்தறிவு சொல்கிறது. //

எந்த பகுத்தறிவு சொல்லுது. எங்களுக்கு பகுத்தறிவு சொல்லித்தந்தவர் கடவுள் இல்லை/அது கட்டுக்கதைன்னு சொல்லித்தந்தார். அப்ப அவர் தப்பா??

//இறைவன் உண்ணாதவனாகவும் நமக்கு உணவளிப்பவனாகவும் வேண்டும்//
//இறைவன் எந்தத் தேவையுமற்றவனாக வேண்டும்.//
//இறைவன் யாரையும் பெறாதவனாகவும், யாராலும் பெறப்படாதவனாகவும் இருக்க வேண்டும். //
//இறைவன் மரணமடையாதவனாக, நித்திய ஜீவனாக இருக்க வேண்டும். ஏனெனில் மரண பயத்தில் அவன் நம்மை மறந்து விடக்கூடாதே.//
//இறைவன் களைப்பற்றவனாக, ஓய்வு தேவையற்றவனாக, உறங்காதவனாக வேண்டும்.//

மொத்தத்தில் உங்கள் சுயநலமே இறையாக இருக்கவேண்டும்??!!! அவனுக்கு ஒன்றும் இருக்கக்கூடாது, அவன் உங்களுக்கு மட்டும் ஏதாவது செய்து கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். டூ மச் சா தெரியலை??

சரி இப்ப இஸ்லாம் உங்க விளக்கம் பார்த்தேன் எனக்கு சில கேள்விகள்??

முதல் மூன்று பாயிண்டுக்கு ப்ரூப் இல்லை விடுங்க பரவாயில்லை. அவை பெரிய விசயம் இல்லை.

//4. வன்முறைக்கும் துவேசத்துக்கும் இங்கே இடமேயில்லை. இஸ்லாத்தில் எவ்வித நிர்பந்தமுமில்லை என்பதும் இதன் அடிப்படைகளில் ஒன்று.//

அப்ப வண்முறையை கையாள்பவர்கள் இஸ்லாமிலிருந்து விலக்கிவைப்பீர்களா?? அப்ப பின் லேடன், தாலிபான்கள், என திவிரவாத்தை கையில் எடுத்தவர்களை என்ன செய்கிறீர்கள்??

//. மனிதரிடையே ஜாதி, இன, மொழி வேறுபாடுகளால் உயர்வு தாழ்வில்லை. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற முறையில் அமைக்கப் பட்டுள்ளது. பிறப்பால் மேல் ஜாதி அல்லது கீழ் ஜாதி என்றோ, அரசன், ஆண்டி, படித்தவன், பாமரன் என்றோ உள்ள வேறுபாடுகளையெல்லாம் களைந்து மனிதர்களிலே நல்லவன், தீயவன் என்ற அடிப்படையில் மட்டும் அணுகும் ஒரு வழிமுறை.//

அப்ப ஷியா, சன்னி முஸ்லீமகள் என்று எப்படி வந்தது இரு பிரிவு, ஈராகில் அவர்கள் ஏன் சண்டையிட்டுக்கொள்கிறார்கள்?? அவர்களுக்குள் என்ன பிரச்சனை?? அதுவும் ஒரு ஏற்ற தாள்வாகவே நான் எடுத்துக்கொள்கிறேன். நீங்க?? அப்ப இஸ்லாமில்லும் உள்ளது ஏற்றத்தாள்வு, இங்கு ஜாதி, அங்கு பிரிவு?? சரியா??

//6. இது வெறும் சடங்கு சம்பிரதாயங்கள் மட்டுமேயுள்ள மதமல்ல. இது ஒரு அழகான, முழுமையான வாழ்க்கைத் திட்டம். பெண்ணுரிமை பேணி, சரியான அந்தஸ்தை வழங்குகிறது.(பெண்களுக்கும் சொத்தில் உரிமை, விதவை மறுவாழ்வு, ஆண்தான் பெண்ணுக்கு வரதட்சணை வழங்கவேண்டும்.)//

At a given point of time, ஒருவன் ஐந்து பெண்களை கல்யாணம் செய்வது சரியா?? மூன்று முறை தலாக் சொல்லிவிட்டால் திருமணமுறிவு சரியா? அப்போது பெண்ணுக்கு என்ன உரிமை இருக்கிறது!!! பெண்சொல்லவேண்டியதெ இல்லையா?? அவளுடைய கருந்து தேவையற்றது என்று என்று சொல்லுவது பெண்ணுரிமையை பேணி காப்பதா?? ஆண்கள் பெண்வீட்டருக்கு வரதட்சணை கொடுத்தால் ஓ.கே வா? பெண் வீட்டார் கொடுத்தால் தான் தப்பா?? தலாக் சொன்ன ஒரு இஸ்லாமிய பெண்ணும் தன் கணவனும் மனம் திருந்தி ஒன்று சேர வாய்ப்பு இல்லை? அப்படி சேர வேண்டுமானால் இன்னொருவரை திருமணம் செய்து, அவர் தலாக் சொன்னால் தான் இந்த இருவரும் சேர முடியும் இது தான் சுதந்திரமா??

//7. இது மனித குலம் எதிர் நோக்கியுள்ள அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு வழங்கும் நீதித்திட்டம். (பொருளாதாரக் கோட்பாடுகள், சட்ட இயந்திரத்தின் இயக்கம், வட்டியில்லா வாழ்வு, இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுப்பது அவர்களது கடமை என்றும், இருப்பவர்களிடமிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை அரசின் முலம் எடுப்பது இல்லாதவர்களுக்கான உரிமை என்றும் கூறுகிறது.)

8. பொய், களவு, லாட்டரி, மது, சூது, விபச்சாரம், லஞ்ச லாவண்யம், அடக்குமுறை, அடிமைத்தனம், மூட நம்பிக்கைகள் போன்றவற்றை வேரோடு ஒழிக்கும் ஒரு பகுத்தறிவுப்பாதை.

9. இது மனித உரிமைகளை நிலை நிறுத்தும் ஒரு மிகப்பெரிய வழி முறை. அறிவியல், தொழில் நுட்பம் இதற்கு எதிரானதல்ல. மாறாக, இயைந்தது. இஸ்லாம் ஒரு அறிவியல் பூர்வமான அணுகுமுறைக்கான வழிமுறைதான்.//

இது அனைத்து மததிலும் உள்ளதே!!! யாரும் உபயோக்காத சரக்கு. அதை விடுங்க. நம்மில் யார் இங்க பொய் சொல்லாதவங்க?

//10. சமத்துவத்தையும் சகோதரத் துவத்தையும் நிலை நிறுத்தி, மனிதன் மனிதனாக வாழ்ந்து, சாந்தியையும் சமாதானத்தையும் அடைவதற்கு வழி காட்டும் முழுமையான வாழ்க்கை நெறி முறைகளின் தொகுப்புதான் இஸ்லாம்.//

இதில் ஏதாவது ஒன்றையாவது எந்த மதமாவது பின்பற்றுகிறதா? தன் மதத்தவனையே சகோதரனாக நினைக்காத மக்கள் தான் நாம் இன்று அதிகம் பார்க்கிறோம்(எந்த தனி மதத்தைப்பற்றி அல்ல எல்ல மதத்தவரும் இதற்கு விதிவிலக்கல்ல)

கடைசியாக ஒரு கேள்விகள்:

இப்ப ஒருவன் இஸ்லாமில் சேர்கிறான் என்றால் அவரை எந்த பிரிவில் சேர்ப்பீர்கள்? ஷியாவிலா? சன்னியிலா??

இஸ்லாமிலிருந்து ஒருவன் வேறு மதம் தழுவினால் மரண தண்டனை விதிக்கிறார்கள் ஏன்? இது தான் அடக்குமுறை இல்லாத மதமா?

நான் ஒரு மாராடித்தான் நோம்பி என்ற ஒரு இஸ்லாமிய நோம்பு ஊர்வலத்தை பார்க்க நேர்ந்தது, அந்த ஊர்வலத்தில் எல்லாவரும் ஏதோ ஒரு ஆயுதத்தால் தன் உடம்பை காயப்படுத்திக்கொண்டு நட்டந்து சென்றார்கள் இவை என்ன மூட நம்பிக்கைகள் இல்லையா?? தர்காவில் ஏதோ ஊதி ஒரு கூடு தருகிறார்கள் அது என்ன மூட நம்பிக்கைகள் இல்லையா?? அதில் ஏதாவது அறிவியல் பூர்வ காரணம் இருக்கா??

9:35 PM
--------------------------------------------------------------------------------

மரைக்காயர் said...
நல்ல கட்டுரை. நன்றி சுல்தான்.

7:28 AM
--------------------------------------------------------------------------------

சுல்தான் said...
வருகைக்கு நன்றி சிவபாலன். படித்து விட்டும் வாருங்கள்.

மரைக்காயர் நன்றி.

நன்றி வி த பீப்பிள். உங்களுக்கு பதிலோடே வருகிறேன். வீட்டில் நெட் கோளாறு. கொஞ்சம் பொறுங்கள்.

2:38 PM
--------------------------------------------------------------------------------

அரை பிளேடு said...
சுல்தான்ஜி.
ரொம்ப நல்ல கட்டுர..
பாராட்டுக்கள்..
நீங்க சொன்னா மாறி கடவுள்னு ஒருத்தர் கட்டாயம் கீறாரு..
பாக்கறவங்களுக்கு பாக்கற விதத்துல தெரியரவரு அவரு...
அவருக்கு உருவம் கிடயாதுன்னு நீங்க நினைச்சீங்கன்னா உருவம் இல்லாம வந்து அருள் தருவாரு..
நம்பள மாதிரி மனுசபய வடிவத்தில இருப்பாருன்னு நினைச்சீங்கன்னா மனுசப்பய வடிவத்துள வந்து அருள் தருவாரு..
அதுதாம்பா கடவுளு... இப்படிதான் இருப்பாரு.. அப்பிடிதான் இருப்பாருன்னு நாம சொல்றமே... அந்த மாறி இல்லாம... எல்லா மாறியும் யாரால இருக்க முடியுமோ.. அவராலதான் கடவுளா இருக்க முடியும்...
இன்னா ஒண்ணு அவரு நம்பள மாறியே இருப்பாரு.. நாம சாப்பிடற பலகாரத்தையேதான் சாப்புவாருன்னு நினைச்சு கும்புட சொல்ல நம்பளுக்கு அவரு மேல எக்ஸ்ட்ராவா அன்பு வருது...

நீங்க சொல்ற மாதிரி கடவுள பகுத்து அறிஞ்சி எல்லாம் பாக்க கூடாது.. கடவுள்ன்றது ஒரு பீலிங்க்.. ரொம்ப பகுத்து அறிஞ்சிட்டோம்னு வச்சிக்குங்க மனுசன் மாதிரி இல்லாத ஒண்ண அவன், இவன்னோ.. அவர், இவர்னோ ஏன் சொல்லணும்.. அதுன்னுதானே சொல்லணும்னு தோணிடும்...

உருவமாவும் அருவமாவும் உலகமெல்லாம் விரிஞ்சி பரந்து இருக்கிற அன்பு வடிவம்தான் கடவுள்... அன்பே சிவம், அன்பே அல்லா..

அந்த கடவுள் கீறாரே அவரு எனக்குள்ளாற, உங்களுக்குள்ளாற... எல்லாருக்குள்ளாறயும் கீறாரு... இன்னா ஒண்ணு நாமதான் புரிஞ்சிக்க மாட்டங்கறோம்...
நான் எல்லா சாமியயையும் கும்புடற மாறி அல்லாவாவும் அவர கும்டுக்கறன்...
எஞ்சாமி எதாவது ஒரு ரூபத்துலய அரூபத்துலயோ வந்து என்ன காப்பாத்துனா சரி..
எங்கியாவது தப்பா சொல்லி இருந்தன்னா மன்னிச்சிடுங்க.....

நல்ல கட்டுரைய கொடுத்ததுக்காக தாங்ஸ் வச்சிக்கிறேன்...

3:58 PM
--------------------------------------------------------------------------------

சுல்தான் said...
நன்றி அரைபிளேடு. உங்கள் எண்ணத்தை மற்றவர்களை காயப்படுத்தாமல் சொல்லும்போது எதற்கு மன்னிப்பு.

//மனுசன் மாதிரி இல்லாத ஒண்ண அவன், இவன்னோ.. அவர், இவர்னோ ஏன் சொல்லணும்.. அதுன்னுதானே சொல்லணும்னு தோணிடும்...//

தப்பில்லை. அவர், அவள், அவன், அது என்பதையெல்லாம் விஞ்சி இருப்பதுதான் இறைவன். நமக்குத் தெரிந்ததிலே, இருப்பதிலேயே உயர்தினையை எடுத்து ஒருவன் எனக் குறிக்கும் விதத்தில் நாம் பாவிக்கிறோம். என் பார்வையில் அவர், அவள், அவன், அது என்பதையெல்லாம் கடந்தவன்தான் இறைவன்.

5:22 PM
--------------------------------------------------------------------------------

கோவி.கண்ணன் [GK] said...
சுல்தான் ஐயா,

நன்றாக எழுதியிருக்கிறீர்கள். ஆனாலும் சில கேள்விகளுக்கு விடை கிடைப்பதே இல்லையே !

1. சர்வ வல்லமை படைத்த இறைவன் தன்னை ஏன் உலக மாந்தர் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் ஒரே கொள்கையை படைக்கவில்லை ?
2. ஏழைகளாகவே பிறந்து ஏழைகளாகவே இறப்பவர்களை இறைவன் ஏன் படைத்தான் ?
நான் முயற்சி அற்று முடங்கிக் கிடப்பவர்களைப் பற்றிச் சொல்ல்வில்லை. நமது பூமியில் உள்ள ஆப்ரிக்கா கண்டத்தில் அத்தகைய மனிதர்கள் பிறந்து மடிகிறார்கள். அவர்களுக்கு ஏன் இரக்கம் காட்டுவதே இல்லை ?
3. உலக தொடர்பே இல்லாமல் காடுகளில் (அமேசான்) காட்டுவாசிகளாக திரியும் மனிதர்களுக்கென்று இறைவன் என்ன சொல்கிறான்? அவர்கள் எந்த துன்பமும் இன்றி வாழ்வதாக நான் கருதுகிறேன்.

பொதுவாக ஆன்மிகம் பற்றி பேசுபவர்களிடம் கேட்கும் கேள்விகள் இவை. உங்களிடம் மட்டும் தான் கேட்கிறேன் என்று தவறாக எண்ணாதீர்கள்.

5:27 PM
--------------------------------------------------------------------------------

Bun Butter Jam said...
இஸ்லாமப் பத்தி இப்பிடி புட்டுபுட்டு வெச்சிட்டீங்க.மித்தவங்களும் அவிங்கவிங்க மதத்தைப்பத்தி இங்கே புட்டுபுட்டு வெச்சாங்கன்னா சோக்காருக்கும்.

தெகிரியமிண்டா கணவான்களே!

5:54 PM
--------------------------------------------------------------------------------

சுல்தான் said...
Dear GK,
உங்கள் கேள்விகளுக்கு நான் அறிந்த வகையில் கொண்ட விளக்கங்கள் இவை.

//1.சர்வ வல்லமை படைத்த இறைவன் தன்னை ஏன் உலக மாந்தர் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் ஒரே கொள்கையை படைக்கவில்லை?//

இறைவன் படைத்தது ஒரே கொள்கையைத்தான். வணங்கத் தகுதியானவனாகிய அந்த ஒரே இறையையே வணங்க வேண்டும் என்பதே அது. காலச் சுழற்சியில் அதைப் பின்பற்றுபவர்களாலேயே இப்போதிருக்கும் வண்ணம் வளைத்தொடிக்கப்பட்டது என்பது இஸ்லாமிய நம்பிக்கை.

//2. ஏழைகளாகவே பிறந்து ஏழைகளாகவே இறப்பவர்களை இறைவன் ஏன் படைத்தான்?//

சிலரை ஏழைகளாகவும் சிலரை வசதி படைத்தவர்களாயும் படைத்திருப்பது இரு பேரராரையும் சோதித்தறியத்தான்.

இல்லாதவன் பொறுமையைக்கொண்டும் இறைவணக்கத்தை கொண்டும் திருப்தி யடைந்தால் மறுமையில் கேள்விக் கணக்கின்றி சுவனம் புகுவான்..

வசதி படைத்தவனுக்கு கொடுக்கப்பட்டது, இல்லாதவனுக்கும் கொடுத்து நன்மைகளை அதிகரித்துக் கொள்ளத்தான். செல்வந்தர்கள் மறுமையில் தனக்கு கொடுக்கப்பட்டவற்றுக்கு கணக்கு கொடுக்காமல் அவர்கள் கால்களை நகர்த்த முடியாது.

இந்த உலகில் இவ்வாறெல்லாம் துன்பப்பட்டு மறுமையில் எப்படி வாழ்ந்தால் என்ன? என்று நினைக்கத் தோன்றும்.

இஸ்லாமிய நம்பிக்கையின் அடிப்படையில் இவ்வுலகமே மறுமைக்கான தயாரிப்புக் களம்தான். இவ்வுலகம் குறுகிய நூறாண்டுகள். மறுமையோ நிரந்தரமானது.

இதை உங்கள் மனது ஏற்றுக் கொள்ளாவிட்டால் பரவாயில்லை. குர்ஆனை முழுதும் சுயமாகப் படித்துப் பாருங்கள். இறைவன் நாடினால் புரியலாம்.

//3. உலக தொடர்பே இல்லாமல் காடுகளில் (அமேசான்) காட்டுவாசிகளாக திரியும் மனிதர்களுக்கென்று இறைவன் என்ன சொல்கிறான்? அவர்கள் எந்த துன்பமும் இன்றி வாழ்வதாக நான் கருதுகிறேன்//

எல்லாக் குழந்தைகளும் இயற்கை மதத்திலேயே பிறக்கின்றன. அக்குழந்தைகளுக்கு மதம் கொடுத்தவர்கள் அவர்களின் பெற்றோர்களே என்பது இஸ்லாமிய கோட்பாடு.

அமேசான் காட்டுவாசிகளுக்கும் 'இறைவன் ஒருவன். அவனே வணங்கத் தகுதியானவன்' என்ற உள்ளுணர்வு பிறக்கும்போதே பிறக்கும். இந்த இயற்கை மதத்திலேயே அவர்கள் இருந்து, இறந்தால், அவர்களும் சொர்க்கத்தின் சொந்தங்களே.

//உங்களிடம் மட்டும் தான் கேட்கிறேன் என்று தவறாக எண்ணாதீர்கள்//
இதிலே தவறாக எண்ண என்ன இருக்கிறது? எனக்குத் தெரிந்த மறுமொழிகள் கொடுத்திருக்கிறேன். ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் அவரவர் விருப்பத்திலுள்ளதுதானே..

வி த பீப்பிள். நெட் சரியாகி விட்டது. இதோ பதிலோடு வருகிறேன். கொஞ்சம் பொறுங்கள்.

6:25 PM
--------------------------------------------------------------------------------

சுல்தான் said...
வருகைக்கு நன்றி Bun Butter Jam,

மற்றவர்களுக்கு காயம் ஏற்படுத்தாத வகையில் நம் கருத்தை சொல்வத தவறில்லையென்று நம்புகிறேன்.
நீங்கள் ஏதோ உள்குத்து வச்சு வம்பத் தூண்டலேண்ணு நினைக்கிறேன். Am I right?

6:36 PM
--------------------------------------------------------------------------------

Anonymous said...
எல்லாம் சரி, அதென்ன மனிதனை மனிதன் பிரித்து இனம் கான வசதியாக தாடி, சிலுவை, திருநீறு போன்ற விளங்குகள். ஒருவரோடு ஒருவர் இனைய தடையாக இருப்பத்ற்கு இந்த தோற்றமும் ஒரு காரணமாக இருக்கலாம். இதுதான் நீங்கள் கூறும் பகுத்தறிவோ?

-குமார்.

6:44 PM
--------------------------------------------------------------------------------

SK said...
அன்பு நண்பரே!

//மனித வரலாற்றை தலைமுறை தலைமுறையாக ஆய்ந்தால் கடைசியில் ஒரு மனிதனில்தான் முடியும் என்பதில் ஐயமில்லை//

இதுவே கேள்விக்குரியது.
ஏன் ஒரே சமயத்தில் பல இடங்களில் மனிதர்கள் உருவாகியிருக்க முடியாது?

இன்னும் இது போல பல வரிகளைக் குறிப்பிட்டு வாதாடலாம்.

ஆனால், அதுவல்ல என் கருத்து.

நீங்கள் , மற்றும் இங்கே கருத்திட்ட அனைவருமே இறைவன் என்ற ஒன்றைப் பற்றியே சொல்லியிருக்கின்றனர்.

ஆனால், ஆன்மீகம் என்பது இதுவல்ல.

கண்ணுக்குத் தெரியாத, நம்பலாமோ, கூடாதோ என்ற ஒன்றைத் தேடுவது அல்ல ஆன்மீகம்.

ஒரு சில வரையறைகளைத் தன்னுள்ளே கொண்டு, அவற்றை மேலும் வளர்த்துக்கொள்ளும் முயற்சியே இது.

இதனைக் கொண்டால்தான், இறைவனைப் பற்றிய சந்தேகங்கள், கேள்விகளுக்கு விடை தேட முயலாமல், தன்னையே இறையென உணர முடியும்.

ஏழை, பணக்காரன், அமேஜான் காட்டு மனிதர்கள் பற்றிய கேள்வி ஒன்றைப் பார்த்தேன்!:))

அவ்வளவு ஏன்?

ஒரே குடும்பத்தில், ஒரே அப்பன், ஆயிக்குப் பிறந்த குழந்தைகள் அனைவரும் ஒரே மாதிரி வளரவோ, படிக்கவோ, உயரவோ செய்கின்றனரா?

இது ஏன் என சிந்திக்க ஆரம்பித்தால், பல கேள்விகளுக்கு விடை கிடைக்கலாம்.

உங்கள் பதிவு, ஒரு இஸ்லாமியர் என்ற முறையில் சஹ இஸ்லாமியர்களைப் பார்த்து எழுப்பிய கேள்விகளாகவே நான் பார்ப்பதால், அவர்கள் தாங்கள் எப்படியோ இம்மதத்தில் பிறந்ததன் காரணத்தை உணர ஆரம்பிக்கச் செய்யும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்து சொல்லி பாராட்டுகிறேன்.

:))

7:18 PM
--------------------------------------------------------------------------------

சுல்தான் said...
நன்றி வி த பீப்பிள்.
//என் பகுத்தறிவு ஒரு கேள்வி கேட்க்கிறது! ஒரு இறைவன், ஒரு நேரத்தில் எப்படி கோடானகோடி மக்களை கவனித்துக்கொண்டே இருப்பான்!!!??//

இறைவனையும் மனிதனாக பார்ப்பதால் இப்படித் தோன்றுகிறது.
'இறைவனுடைய வல்லமையை, ஆற்றலை, மனித சக்திக்குள் முடிக்கக்கூடாது. இஸ்லாமிய அடிப்படையில் அவன் எதையாவது செய்ய நாடினால் 'ஆகு' என்ற ஒரே வார்த்தைக்குள் ஆக்கி விடுபவன்.' பூமியும் வானமும் அவனது ஒரே வார்த்தைக்குள் ஆகும் என்று நம்புபவர்களுக்கு அந்த நம்பிக்கையில் சிரமமிருக்காது.

இதை மூட நம்பிக்கை என்று உங்கள் மனது சொன்னால்.....
இறைவனது வல்லமையை அறிய குர்ஆனை சுயமாக படித்தறிய முயலுங்கள். அவன் நாடினால் உங்களுக்கும் புரியலாம்

//எந்த பகுத்தறிவு சொல்லுது.//
பகுத்தறிவு என்றாலே அய்யா பெரியார் ஞபாகம் வருவது தமிழ் மண் தரும் வாசனை. அடங்கி முதுகு வளைந்து கூனாகிப் போன தமிழனின் கூன் நிமிர்த்தி நேராக நிற்க வழி தந்த வெண்தாடி வேந்தரவர். நான் சொன்னது ஒவ்வொருவருக்கும் உள்ளேயுள்ள பகுத்தறியும் திறனை.

//எங்களுக்கு பகுத்தறிவு சொல்லித்தந்தவர் கடவுள் இல்லைஃஅது கட்டுக்கதைன்னு சொல்லித்தந்தார். அப்ப அவர் தப்பா??//
கடவுள் பெயரால் நடக்கும் மோசடிகளைப் பார்த்து மனம் வெறுத்ததால் வந்து விழுந்த வார்த்தைகள் அவை. என்னைப் பொறுத்தவரை அய்யா பெரியார் கடவுளுக்கு எதிரியல்ல. கடவுளின் பெயரால் நடைபெறும் பித்தலாட்டங்களுக்குத்தான் அவர் எதிரி. இல்லையென்றால் 'இன இழிவு ஒழிய இஸ்லாமே நன் மருந்து' எனச் சொல்வானேன்!

//மொத்தத்தில் உங்கள் சுயநலமே இறையாக இருக்கவேண்டும்??!!! அவனுக்கு ஒன்றும் இருக்கக்கூடாது, அவன் உங்களுக்கு மட்டும் ஏதாவது செய்து கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். டூ மச் சா தெரியலை??//

மீண்டும் சொல்கிறேன். கடவுள் மனிதன் போலவேயிருந்தால் கடவுளெதற்கு?
அவன் அவ்வாறு கொடுத்துக் கொண்டேயிருப்பதால் அவனுக்கு துன்பமோ, சலிப்போ ஏற்படக்கூடாது.

டூ மச்சா தெரியவில்லை. ஏனென்றால் 'புவியிலுள்ளோர், முன் சென்றோர், மனித இனம், ஜின் இனம் ஆகிய அனைவரும் ஒரு சேர ஒன்று கூடி, ஒவ்வொருவரும் எதையாவது கேட்டு, அவையனைத்தையுமே அவன் கொடுத்து விட்டாலும், அவன் கஜானாவிலிருந்து எதுவம் குறைவதில்லை' என்பது இஸ்லாமிய நபி கற்றுத் தந்த அடிப்படைகளில் ஒன்று.

படிக்க சலிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக இத்துடன் நிறுத்திக் கொண்டு மற்றவற்றுக்கும் பிறகு எழுதுகிறேன்.

இவையெல்லாம் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக அல்ல. உங்களைப் போன்ற கேள்வி இருப்பவர்களும் அறிந்து கொள்ளவும், என் சிந்தனை இவற்றை ஏன் ஏற்றது என்பதற்கான விளக்கமும்தான்.

7:30 PM
--------------------------------------------------------------------------------

சுல்தான் said...
வருகைக்கு நன்றி குமார். என் பதிவிலிருந்து எதையாவது கேளுங்கள். தெரிந்தால் பதில் சொல்கிறேன். நீங்கள் கேட்டவற்றுக்கு தனியாக ஒரு பதிவு இறைவன் நாடினால் வரும். அப்போது விவாதிக்கலாம். மன்னியுங்கள் குமார்

எஸ்கே ஐயா வருக வருக.
வரிகளுக்கிடையில் பேசினால் எனக்கு குழப்புமோ என்னவோ? இருந்தாலும் பதிலளிக்க முயற்சிக்கிறேன்.

//ஏன் ஒரே சமயத்தில் பல இடங்களில் மனிதர்கள் உருவாகியிருக்க முடியாது?//
பகுத்தறிவுப்படி அப்படியும் இருக்கலாம். 'ஒரு மனிதர் - அவர் வழித்தோன்றல்கள்' என்பதில் மனிதர்களுக்கிடையே 'நாமெல்லாம் சகோதரர்கள்' என்ற நினைப்பில் வரும் ஒற்றுமை எனக்கு நன்றாக இருக்கிறதே. அதனால் அது எனக்கு சரியாகப் படுகிறது. அளவிலாக் கருணையுடைய இறைவன் மனிதர்களை அவ்வாறு பலர் வழித்தோன்றல்களாக ஆக்கி உயர்வு தாழ்வு கற்பிக்க ஏதுவாக்கி இருக்க மாட்டான் என்ற நம்பிக்கை ஐயா.

//ஒரு சில வரையறைகளைத் தன்னுள்ளே கொண்டு, அவற்றை மேலும் வளர்த்துக்கொள்ளும் முயற்சி//

சில வரையறைக்குள் இவ்வார்த்தைகள் ஏற்றுக் கொள்ளத் தக்கதே ஐயா.

//கேள்விகளுக்கு விடை தேட முயலாமல்இ தன்னையே இறையென உணர முடியும்.//

மனிதன் என்ன முயன்றாலும் இறையாக முடியாதென்று நான் நம்புகிறேன். மனிதன் முயன்றால் நல்ல மனிதனாக, மனிதரில் புனிதராக - உயரலாம் (என்பதே என் நம்பிக்கை). அவ்வாறு உயர வேண்டுமென்பதுதான் இஸ்லாம் விரும்பும் மனிதம்.

//உங்கள் பதிவு, ஒரு இஸ்லாமியர் என்ற முறையில் சஹ இஸ்லாமியர்களைப் பார்த்து எழுப்பிய கேள்விகளாகவே நான் பார்ப்பதால்//
என் பதிவு சஹ மனிதர்களுக்காக எழுதப்பட்டது ஐயா.

"குர்ஆனை நீங்களும் கருத்தூன்றிப் படித்தால் உங்கள் பார்வையில்... அது சரியாக இருந்தால் எல்லோருக்கும் சொல்லலாம். கைக்குக் கிடைத்த நல்வழியை தவற விட்டவர்கள் ஆக மாட்டோம். தவறென்றால் பத்தோடு பதினொன்றாக இன்னொரு புத்தகம் படித்து முடித்தீர்கள் அவ்வளவுதான்" என்று சொல்லத்தான் எழுதினேன்.

//உங்கள் முயற்சிக்கு வாழ்த்து சொல்லி பாராட்டுகிறேன்.//
உங்கள் வாழ்த்துகளும் பாராட்டுகளும் என்னை மென்மேலும் படிக்கவும் எழுதவும் தூண்டும். மிகவும் நன்றி ஐயா.

8:06 PM
--------------------------------------------------------------------------------

SK said...
இஸ்லாம் என எழுதியபின், அது சஹ மனிதர்களைக் குறித்து எழுதியதாக என்னல் உணர முடியவில்லை.
ஒரு மத ப்ரசாரகமாகவே என்னால் பார்க்க முடிந்தது.

உங்களுக்குத் தெரிந்த இஸ்லாத்தைச் சொல்லி இது மற்ற மதங்களிலும் காண்கிறேன் எனச் சொல்லியிருந்தால் ஒருவேளை நான் இப்படிச் சொல்லியிருக்க மாட்டேனோ என்னவோ?

மதங்களை விட மானுடமே உயர்ந்தது என்பது என் கருத்து.

இதில் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சொன்னதால் நான் அவ்வாறு கூறலாயிற்று.

மன்னிக்கவும்!

8:56 PM
--------------------------------------------------------------------------------

சுல்தான் said...
Dear We the People,
உங்கள் பாக்கி கேள்விகளில் சிலவற்றுக்கு பதில்கள்.

//அப்ப வண்முறையை கையாள்பவர்கள் இஸ்லாமிலிருந்து விலக்கிவைப்பீர்களா?? அப்ப பின் லேடன், தாலிபான்கள், என திவிரவாத்தை கையில் எடுத்தவர்களை என்ன செய்கிறீர்கள்??//

இஸ்லாத்திலிருந்து விலக்கி வைக்க என்றெல்லாம் யாருக்கும் அதிகாரமில்லை நண்பரே. அவரவர் நன்மைகளுக்கேற்ப வெகுமதிகளைத் தரும் இறைவன், அவரவர் பாவங்களுக்கேற்ப தண்டணையும் தருவான் என்பதே உறுதியான இஸ்லாமிய நம்பிக்கை.

//அப்ப ஷியா, சன்னி முஸ்லீமகள் என்று எப்படி வந்தது இரு பிரிவு, ஈராகில் அவர்கள் ஏன் சண்டையிட்டுக்கொள்கிறார்கள்?? அவர்களுக்குள் என்ன பிரச்சனை?? அதுவும் ஒரு ஏற்ற தாள்வாகவே நான் எடுத்துக்கொள்கிறேன். நீங்க?? அப்ப இஸ்லாமில்லும் உள்ளது ஏற்றத்தாள்வு, இங்கு ஜாதி, அங்கு பிரிவு?? சரியா//

இல்லை சகோதரரே! இஸ்லாத்தை புரிந்து கொள்வதில் ஏற்பட்ட குளறுபடிதான் ஷியாக்கள் எனும் பிரிவு.
எந்த ஒரு கருத்தையும் புரிந்து கொள்வதில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும்.
ஒரு மனிதன் ஒரு முஸ்லீம் பெற்றோருக்கு பிறப்பதால் அவன் முஸ்லீமில்லை. முயற்சி செய்து, தெரிந்து, உண்மையென உணர்ந்து, ஏற்றுக் கொள்பவன்தான் முஸ்லீம். அதனால் குர்ஆனும் ஹதீஸூம் உங்கள் கைகளில் இருக்கிறது. நீங்களே படித்தறிந்து அல்லது இரு சாராரும் சொல்வதை கேட்டறிந்து கொள்ளலாம். தெளிந்த முடிவுக்கு வரலாம்.

எனக்கு நேரமில்லை என்றெல்லாம் சொல்ல முடியாது. நிலையான மறுவாழ்வின் சுகம் வேண்டுமெனில் இஸ்லாத்தில் முயற்சி அவசியம். Islam is not by birth, but by choice.

அவர்களுக்கும் அதுதான். உங்களது உனக்கு என்னுடையது எனக்கு. மறுமையில் இறைவன் தீர்ப்பளிப்பான்.

//At a given point of time..............//
பெண்கள் சுதந்திரம் பற்றி நீங்கள் கேட்டுள்ள கேள்விகள் தனிப் பதிவு போடுமளவுக்கு பெரியது. தனியான பதில் தருகிறேன்.

//இது அனைத்து மததிலும் உள்ளதே!!! யாரும் உபயோக்காத சரக்கு. அதை விடுங்க. நம்மில் யார் இங்க பொய் சொல்லாதவங்க?//

இருக்கட்டுமே!. இஸ்லாம் இவற்றை வலியுறுத்துகிறது.
அவ்வாறு வாழ்ந்த ஒரு மாமனிதரை அடையாளங்காட்டி இவர் போல் நீயும் வாழ வேண்டும் என்கிறது.

உபயோகிக்காத சரக்கு. ஆனால் உபயோகப்படுத்தவே முடியாத சரக்கல்ல. அதனால் உபயோகப்படுத்த வேண்டிய சரக்கென இஸ்லாம் அடையாளப் படுத்துகிறது.

//இதில் ஏதாவது ஒன்றையாவது எந்த மதமாவது பின்பற்றுகிறதா? மதத்தவனையே சகோதரனாக நினைக்காத மக்கள் தான் நாம் இன்று அதிகம் பார்க்கிறோம்//
குறைந்த பட்சம் பள்ளி வாயில்களில் அன்றாடம் ஐந்து முறை பார்க்கக் கூடியது. இஸ்லாமியத் திருமண உறவுகளில் காணக்கிடைப்பது.

இப்ப ஒருவன் இஸ்லாமில் சேர்கிறான் என்றால் அவரை எந்த பிரிவில் சேர்ப்பீர்கள்? ஷியாவிலா? சன்னியிலா??

(யாராரோ யாராரிடமோ கேட்ட கேள்வியின் பிரதிபலிப்பாக இக்கேள்வி எனக்குத் தோன்றுகிறது. தவறாகவும் இருக்கலாம்.)

இஸ்லாத்தில் எந்தப் பிரிவிலும் யாரும் சேர்க்க வேண்டியதில்லை. ஒருவன் 'வணங்கத்தகுதியான இறைவன் ஒருவனே. முஹம்மது (சாந்தியும் சமாதானமும் அன்னார் மீது பொழிவதாகுக!) அந்த (வணங்கத்தகுதியான) இறைவனின் தூதர்' என்பதை மனதார நம்பி ஏற்று, வாயார மொழிந்தால் அவர் முஸ்லீம். அவர் படித்தறிந்து எந்த பிரிவிலும் ஆகலாம். ஏற்க மாட்டேன் என்று சொல்லும் உரிமையை யாருக்கும் இறைவன் கொடுக்கவில்லை.
அது அவர் மனதும் இறையும் அறிந்த விஷயம்.

//இஸ்லாமிலிருந்து ஒருவன் வேறு மதம் தழுவினால் மரண தண்டனை விதிக்கிறார்கள்//

எங்கெங்கே யார் யாருக்கெல்லாம் இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேறியுள்ளது என்ற பட்டியலைத் தந்தால், அவர்களிடமே கேட்டுச் சொல்கிறேன். (இறைவன் நாடினால்)

//நான் ஒரு மாராடித்தான் நோம்பி என்ற ஒரு இஸ்லாமிய நோம்பு ஊர்வலத்தை பார்க்க நேர்ந்ததுஇ அந்த ஊர்வலத்தில் எல்லாவரும் ஏதோ ஒரு ஆயுதத்தால் தன் உடம்பை காயப்படுத்திக்கொண்டு நட்டந்து சென்றார்கள் இவை என்ன மூட நம்பிக்கைகள் இல்லையா?? தர்காவில் ஏதோ ஊதி ஒரு கூடு தருகிறார்கள் அது என்ன மூட நம்பிக்கைகள் இல்லையா?? அதில் ஏதாவது அறிவியல் பூர்வ காரணம் இருக்கா??//

நீங்கள் சொல்லியுள்ள இரண்டுமே மூட நம்பிக்கைகள்தான். இஸ்லாத்துக்கும் இவற்றுக்கும் கடுகளவேனும் தொடர்பில்லை. முஸ்லீம் பெயர்தாங்கிகள் அறியாமையில் செய்யும் பகுத்தறிவற்ற தவறுகள் இவை தோழரே. உங்களோடு சேர்ந்து, இம்மூட நம்பிக்கைகளை எதிர்த்து, நானும் என் வன்மையான கண்டனத்தை பதிவு செய்கிறேன்.

9:14 PM
--------------------------------------------------------------------------------

சுல்தான் said...
//மதங்களை விட மானுடமே உயர்ந்தது என்பது என் கருத்து.//

தங்கள் கருத்து உயர்வானது ஐயா.

தங்கள் மேல் நான் கொண்டிருக்கும் மரியாதைக்கும் அன்புக்கும் தங்களிடமிருந்த மன்னிப்பு என்ற வார்த்தை மிகப் பெரியது. மானுடத்தை உய்விப்பதில் எது சிறந்தது என சொல்ல வந்து ஏதும் அதிகப் பிரசங்கியாக நான் எழுதியிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன் ஐயா.

9:36 PM
--------------------------------------------------------------------------------

ஆரோக்கியம் kettavan said...
வீ த பீப்பிள் என்பவர் இந்து மதத்தில் சேர்பவர்களை அய்ய்ராக சேர்த்துக் கொள்வாராமே. (முதலில் இவர் அய்யர் இல்லை என்றால் அய்யராகவோ அய்யங்காராகவோ முயற்சி செய்யட்டும்)

அதேபோல இந்து மதத்தில் சேர்ப்பதும் விலக்குவதும் அவர் நம்பும் சில பீடையாதிபதிகளிடம் உள்ளது போல் தான் நம்புகிறார் போல.


ஏதோ பெண்ணுரிமை வாதி போல பில்டப் கொடுக்கும் இவர் வரதட்சணைக்கு வக்காலத்து வாங்குவதில் முகமூடியைக் கிழித்துக் கொண்டார்.

திரு. சுல்தான் அய்யா,

திசை திருப்பும் நோக்கில் எழுதப்பட்டவை அல்ல. நன்றி.

9:50 PM
--------------------------------------------------------------------------------

SK said...
//மானுடத்தை உய்விப்பதில் எது சிறந்தது என சொல்ல வந்து //

சரியன இலக்கைத் தொட்டிருக்கிறீர்கள் நண்பரே!

எது சிறந்தது எனச் சொல்லும் போதே மற்றதெல்லாம் தாழ்ந்தது எனும் பொருள் தானாககவே வருவதாலேயே நான் இதை ஏற்றுக்கொள்வதில் சிறிது தயக்கம் காட்டினேன்.

"அதிகப்பிரசங்கியாக அல்ல", 'எனக்குத் தெரிந்த என்றொரு வழியை' எனச் சொல்லியிருந்தால் உங்கள் கருத்து இன்னும் உயர்வு பெற்றிருக்கும் என்பது என் எண்ணம்.

அப்போது இது போல மற்ற மதங்களும் சொல்லியிருப்பதை ஒப்புவமை காட்டி, மதங்களில் தவறல்ல, மானுடம் உணர்வதிலும், புரிவதிலும் தான் தவறு என்பதை அனைவருக்கும் விளக்கியிருக்க முடியும்.

நல்ல ஒரு கருத்தினைப் பகிர வைத்தமைக்கு நன்றி.

10:02 PM
--------------------------------------------------------------------------------

வஹ்ஹாபி said...
விவாக ரத்து (தலாக்) மற்றும் பலதார மணம் குறித்த பதிவுகளைக் கீழ்க்காணும் பதிவர்கள் பதிந்துள்ளனர்:

http://abumuhai.blogspot.com/2005/05/1.html

http://suttuviral.blogspot.com/2005/11/blog-post.html

http://irainesan.blogspot.com/2006/03/1.html

10:26 PM
--------------------------------------------------------------------------------

சுல்தான் said...
மீண்டும் வருகைக்கு நன்றி எஸ்கே ஐயா.
'மானுடத்தை உய்விப்பதில் எது சிறந்தது என சொல்ல வந்து'
என்பதை
'மானுடத்தை உய்விக்க வந்த மதத்தின் வேதத்தை படிக்கச் சொல்ல வந்து, எனக்குத் தெரிந்ததொரு வழியை'
என்று திருத்தி வாசியுங்கள். அதுவே என் கருத்தும். தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி ஐயா.

வருகைக்கு நன்றி ஆரோக்கியம் கெட்டவன்.
தனிப்பட்ட எவரையும் தாக்குதல் என் நோக்கமல்ல.
என்னைத் தாக்கினால் திருப்பித் தாக்குவேனா மாட்டேனா என்பது வேறு விஷயம்.

வருகைக்கும் சுட்டிகளுக்கும் நன்றி வஹ்ஹாபி.

1:31 PM
--------------------------------------------------------------------------------

செந்தில் குமரன் said...
எனக்கு இதில் சில பிரச்சனைகள் தான் உங்க பகுத்தறிவில எல்லா ஆண்களும் ஒரே ஆண் பெண்ணிடம் இருந்து தான் வந்திருக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள்.

ஆனால் ஆராய்ச்சி அறிவின் மூலமாக Evolution சொல்வதை ஒப்புக் கொள்ள மாட்டேன் என்கிறீர்கள். அது கூட சரி

வாழ்க்கை நெறி என்பது சரி. அது காலத்துக்கு தகுந்த மாதிரி மாறுவது என்பதை உணர மாட்டேன் என்கிறீர்கள். அது கூட சரி

ஆனால் இறைவன் அருளியது என்பதை கண்மூடித்தனமாக நம்புகிறீர்கள் பகுத்தறிவின் பெயரை சொல்லி அதுதான் உதைக்கிறது.

2:14 PM
--------------------------------------------------------------------------------

சுல்தான் said...
வருகைக்கு நன்றி செந்தில் குமரன்.
'Survival of Fittest' என்பது 'Jungle theory' என நான் ஏற்கிறேன் நண்பரே. ஏனெனில் மனிதன் ஆறறிவு படைத்தவன், உயர்திணையாக வாழப்பிறந்தவன் என நம்புபவன்.

//வாழ்க்கை நெறி என்பது சரி. அது காலத்துக்கு தகுந்த மாதிரி மாறுவது//
எப்போது கடவுளை, முக்காலமும் உணர்ந்தவனாக நம்ப முடிகிறதோ அப்போதோ, அவன் உலகம் உள்ளவரை எக்காலத்துக்கும் பொருந்தும் புத்தகம் தர முடியும் என்றும் நம்ப முடிகிறது.

யாருக்கு நம்ப முடியவில்லையோ அவர்களது கடவுள் கொள்கையில் ஏதோ கோளாறு அல்லது அவர்கள் உண்மையில் நம்பாமல் வாயளவில் சொல்பவர்களாக நான் நினைக்கிறேன்.

//இறைவன் அருளியது என்பதை கண்மூடித்தனமாக நம்புகிறீர்கள் பகுத்தறிவின் பெயரை சொல்லி//
அதற்குத்தான் உங்களையும் அந்த புத்தகத்தை சொந்தமாக கருத்தூன்றிப் படிக்கக் கேட்டுக் கொள்கிறேன் செந்தில் குமரன். அவ்வாறு படித்த பின் அது கண்மூடித்தனமானது என உங்களுக்கு தோன்றினால் உங்கள் கருத்தை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இறைவன் வேறு விதமாக நாடியிருந்தாலும் இருக்கலாம்.

2:57 PM
--------------------------------------------------------------------------------

Anonymous said...
//எல்லாம் சரி, அதென்ன மனிதனை மனிதன் பிரித்து இனம் கான வசதியாக தாடி, சிலுவை, திருநீறு போன்ற விளங்குகள். ஒருவரோடு ஒருவர் இனைய தடையாக இருப்பத்ற்கு இந்த தோற்றமும் ஒரு காரணமாக இருக்கலாம். இதுதான் நீங்கள் கூறும் பகுத்தறிவோ?//

//வருகைக்கு நன்றி குமார். என் பதிவிலிருந்து எதையாவது கேளுங்கள். தெரிந்தால் பதில் சொல்கிறேன். நீங்கள் கேட்டவற்றுக்கு தனியாக ஒரு பதிவு இறைவன் நாடினால் வரும். அப்போது விவாதிக்கலாம். மன்னியுங்கள் குமார்.//

நீங்கள் வைத்துள்ள தாடி, நீங்கள் முஸ்லீம் என்று மற்றவர்களிடம் அடையாளம் காட்டுவதற்காகவா? இல்லை மற்றவர்களிடம் இருந்து பிரித்துக்காட்டுவதற்காகவா?
-குமார்

3:20 PM
--------------------------------------------------------------------------------

சுல்தான் said...
நன்றி குமார். பதிவைப் பத்தி கேட்க ஏதுமில்லையா நண்பரே.
இஸ்லாத்தில் தாடி வைக்க வேண்டுமென்று இறை கட்டளை உள்ளதால், இறைவனிடம் நன்மைகளை நாடி தாடி வைத்துள்ளேன். மற்றவர்களிடம் அடையாளம் காட்டுவதற்கோ பிரித்துக்காட்டுவதற்கோ இல்லை.

3:36 PM
--------------------------------------------------------------------------------

We The People said...
//வீ த பீப்பிள் என்பவர் இந்து மதத்தில் சேர்பவர்களை அய்ய்ராக சேர்த்துக் கொள்வாராமே. (முதலில் இவர் அய்யர் இல்லை என்றால் அய்யராகவோ அய்யங்காராகவோ முயற்சி செய்யட்டும்)

அதேபோல இந்து மதத்தில் சேர்ப்பதும் விலக்குவதும் அவர் நம்பும் சில பீடையாதிபதிகளிடம் உள்ளது போல் தான் நம்புகிறார் போல.


ஏதோ பெண்ணுரிமை வாதி போல பில்டப் கொடுக்கும் இவர் வரதட்சணைக்கு வக்காலத்து வாங்குவதில் முகமூடியைக் கிழித்துக் கொண்டார்.//

இது போன்ற பின்னூட்டங்களை போட்டு என்னை எந்த முத்திரை வேண்டுமானாலும் குத்தலாம்!! I dont care about it!

எங்க மத்தில சாதி பிரிவு இருக்கு, ஏற்றத்தாழ்வு இருக்கு, எல்லா குப்பையும் இருக்கு, எங்க மதத்தில் இல்லாதது உங்க மதத்தில் இருக்குன்னு சொன்ன நீங்க, உங்க மதத்திலும் அது தான் நடக்குதுன்னு நான் அறிந்தவைகளை சொன்னா!!! உடனே என்னை முத்திரை குத்த துவங்கிவிட்டீர்கள், விடுங்க, இனி நான் எதையும் கேட்கவில்லை. உங்க இஷ்டத்துக்கு எதை வேண்டுமானாலும் எழுதுங்க. நான் எப்ப வரதட்டசனை குடுக்கறது சரி என்று?? நான் சொன்னது ரெண்டுமே தப்புன்னு தான்!

//முதலில் இவர் அய்யர் இல்லை என்றால் அய்யராகவோ அய்யங்காராகவோ முயற்சி செய்யட்டும்//

நான் ஐயர் ஆயிரு என்ன செய்யப்போறேன்!! என்ன யூஸ்!! நான் மனுஷனா தான் இருக்க ஆசைப்படறேன். எனக்கு ஜாதி தேவையில்லை. நான் அதை பார்ப்பதும் இல்லை...

உங்களுக்கு இஷ்டம் இல்லை என்றால் என் கேள்விகளையும் எடுத்துவிடுங்க. I dont mind too. நான் இனி இந்த பதிவில் பின்னூட்டமிட மாட்டேன்.

நன்றி :(((((

4:47 PM
--------------------------------------------------------------------------------

சுல்தான் said...
அன்பின் வி த பீப்பிள்
உங்களின் ஒரு கேள்வி பதிலளிக்கப்படாமல் இருக்கிறது.
//ஒருவன் ஐந்து பெண்களை கல்யாணம் செய்வது சரியா?? மூன்று முறை தலாக் சொல்லிவிட்டால் திருமணமுறிவு சரியா? அப்போது பெண்ணுக்கு என்ன உரிமை இருக்கிறது!!! பெண்சொல்லவேண்டியதெ இல்லையா?? அவளுடைய கருந்து தேவையற்றது என்று என்று சொல்லுவது பெண்ணுரிமையை பேணி காப்பதா??//

இஸ்லாத்தில் திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நடக்கும் ஒப்பந்தம். கற்பை பாதுகாத்துக் கொள்ளவும், சமூக அந்தஸ்து, ஆன்ம சுத்தி, கொள்கை உறுதி, பண்பு, அருள், கருணை. அமைதி பெற வேண்டி செய்யப்படுவதாகும். இறைவனது சட்டங்களுக்கு கட்டுப்பட்டு, இறையச்சத்தோடு இவ்வொப்பந்தம் செய்யப்பட வேண்டும்.

ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை மனைவியராக வைத்துக் கொள்ளும் வழக்கத்தை இஸ்லாம்தான் அறிமுகப்படுத்தியது என்பது தவறான வாதமாகும். ஒரு பெண்ணை மனைவி அந்தஸ்தில் வைத்துக் கொண்டு பல பெண்களோடு உறவு வைத்துக் கொள்ளும் பழக்கம் இன்றும் நடைமுறையில் இருந்து வருகிறது. பற் பல கட்டுப்பாடுகளை விதித்து அதற்கு நான்கு என்ற வரம்பை இஸ்லாம் நிர்ணயித்தது.

ஒரு பெண்ணைப் போலவே மற்றவர்களையும் போற்ற வேண்டும் என்பது அடிப்படை. உடல் வளமும் அதை எல்லா மனைவியருக்கும் சரியாகப் பகிர்ந்தளிப்பதும் முக்கியம். இதெல்லாம் எல்லோருக்கும் சாத்தியப்படுவதில்லை. சின்ன வீட்டை விட இதில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு உண்டு.
இதனால்தான் முஸ்லீம்களில் அதிகமானோர் அனுமதியிருந்தும் ஒன்றுக்கு மேல் மனைவியோ (அல்லது சின்ன வீடோ) வைத்துக் கொள்வதில்லை.

குறைந்தது,
விதி வசத்தால் சறுக்கிய பெண்கள், மானத்தோடு வாழ விரும்பியும், வாழ்விழந்து வீணாவதை விட, அவர்களை இரண்டாந்தாரமாக மணமுடித்துக் கொடுப்பது சிறந்துதானே!
கைம்பெண்கள் வாழ்விழந்து விடுவதை விட, இரண்டாவது திருமணத்திலாவது ஒருவர் ஏற்றுக் கொள்வதால், அந்தப் பெண்ணுக்கும் அவர் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு உண்டல்லவா! (கைம்பெண்களை முதல் அவர் குழந்தைகளுடன் முதல் திருமணம்தான் செய்ய வேண்டும் என்பதெல்லாம் தற்போதைய சூழலில் இயலும் என்று நம்ப முடியாது.)
இதற்காவது தேவையென்றாலும் ஒன்றுக்கு மேல் அனுமதி அவசியந்தானே!

ஐந்து பெண்கள் என்பது எல்லாம் ஓவர். இப்படியெல்லாம் இந்தியாவில் யாரும் இருப்பதாக தெரியவில்லை.
மன்னர்களைப் போல், மனைவி ஒன்றுடன் அந்தப்புரத்தில் ஆயிரம் பெண்களிடம் உறவு வைத்துக் கொள்வதை விட, நான்கு பெண்களை கண்ணியமாக மணமுடித்து உரிய அந்தஸ்தை வழங்குவது சிறந்ததாக எனக்குத் தெரிகிறது.


இஸ்லாத்தில் தலாக் விடும் உரிமை ஆண்களுக்கு இருப்பது போல் பெண்களுக்கும் இருக்கிறது. இஸ்லாமிய சட்ட திட்டங்கள் தெளிவாக தமிழிலுள்ளதால் இப்போதெல்லாம் குறைந்தது தமிழக முஸ்லீம்கள் பெண்களுக்குள்ள இவ்வுரிமையை பரவலாக அறிந்துள்ளனர்.

தலாக் விடும் வழிமுறையை கூறுகிறேன். இதை விட சிறந்த வழியை (இருந்தால்) நீங்கள் தெரிவியுங்கள்.

1. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் மன முறிவு ஏற்பட்டு அது விவாகரத்து என்ற ஆழம் போகும் அபாயத்தில், முதலில் இருவரும் மனம் விட்டு பேசுங்கள். இதில் சரியாகி விடும்.
2. அதிலும் குறையவில்லையா? அடுத்தது படுக்கையை பிரியுங்கள். இந்தத் தேவை பூர்த்தியாகாத போது, மனம், விட்டுக் கொடுக்கச் சொல்லும்.
3. அப்போதும் சரியாகவில்லையா? ஆண் வீட்டாரிலிருந்து இருவருக்கும் நன்மையை நாடுகிற ஒருவரையும், அதே போல் பெண் வீட்டாரிலிருந்து ஒருவரையும் தேர்ந்தெடுத்து அவர்களிடம் நடுவராக இருந்து பேசி அவர்கள் மனக்குறையைத் தீர்த்து வாழ வையுங்கள்.
இப்போதும் சரியாக வில்லையெனில் அது ஒட்டுவது கடினம். இருவரும் அன்போடு இயைந்து வாழத்தான் இல்லறம். மனக்கசப்பும், வெறுப்பும் உள்ள இல்லறத்தில் நல்லறம் தழைக்காது. அது விபரீதங்களைத்தான் ஏற்படுத்தும்.
4. இப்போதுதான் முதல் தலாக் விடுதல். இதன் அளவு மூன்று மாதங்கள்.

5. மூன்று மாத பிரிவு மனங்களிலே மாற்றம் விளைவித்து, மீண்டும் இருவரும் இணைந்து வாழ நினைத்தால், மணமுறிவு ஏற்படாது. அவர்கள் வாழ்க்கையைத் தொடரலாம்.

6. இம்மூன்று மாதங்களுக்குள் இவர்கள் மீண்டும் இணைந்து வாழ விருப்பமில்லையெனில் மணமுறிவு தானாக ஏற்பட்டு விடும்.

மூன்று மாதங்களுக்குள் மனமொத்து மீண்டும் இணைந்து வாழும் இவர்கள் வாழ்வில் இரண்டாம் முறையும் பிணக்கு ஏற்பட்டால் மீண்டும் மேலே சொல்லிய 1, 2, 3, இணக்க முறைகளைக் கையாள வேண்டும்.

அப்போதும் சரியாக வில்லையெனில் இரண்டாவது தலாக்.
அப்புறம் மேற்சொன்ன ஐந்து ஆறாவது பாயிண்ட்.

மூன்று மாதங்களுக்குள் இரண்டாம் தடவையாக மனமொத்து மீண்டும் இணைந்து வாழும் இவர்கள் வாழ்வில் மூன்றாம் முறையும் பிணக்கு ஏற்பட்டால் மீண்டும் மேலே சொல்லிய 1, 2, 3, இணக்க முறைகளைக் கையாள வேண்டும்.

அப்போதும் இயலவில்லையெனில் இது விளையாட்டல்ல. இது ஒவ்வா திருமணம். மூன்றாவது தலாக் சொல்லி நிரந்தரமாக பிரிய வேண்டியதுதான். இனி இவர்கள் சேர்ந்து வாழ முடியாது.

இனியும் சேர்நது வாழ வாழ்க்கை ஒன்றும் விளையாட்டல்ல. இனி அவர்கள் வேறு திருமணம் செய்து அதிலும் அவர்களுக்கு பிணக்கு ஏற்பட்டு மேற்சொன்ன இதே முறைப்படி தலாக் விடப்பட்டு பின்னர் முதல் தம்பதிகள் சேர்ந்து வாழ முடியுமா. சாத்தியமற்றது. அசாதாரண சூழலென்றால் அனுமதியுள்ளது. அவ்வளவுதான்.


பெண்கள் திருமண பந்தத்தை மிக விரைவில் பிரிக்க விரும்ப மாட்டார்கள். ஒரு முறைக்கு பலமுறை யோசித்துதான் முடிவெடுப்பர். (அவளுடைய கணவன் ஆண்மையற்றவனாக, நிரந்தர நோயுள்ளவனாக இருந்தால் வேறு வழியில்லாமல் போகும்.)

அப்போது அவர்களுக்கு திருமண பந்தம் ஏற்படுத்திய சங்கத்தில் மஹல்லாவில் (இடத்தில்) சென்று முறையிட்டால், ஏன் எதற்கு என்ற கேள்வியேதுமில்லாமல் மணவிலக்கு கொடுத்து விட்டார் என்று முடிவாகி விடும்.

இது அறிவுக்குப் பொருந்துகிறதா? பெண்களுக்கு கண்ணியம் தருகிறதா? இல்லையா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

மேலதிக விபரங்களுக்கு வஹ்ஹாபி கொடுத்துள்ள சுட்டிகளையும் பார்வையிடுங்கள.

மிகுதிக்கு மீண்டும் வருகிறேன்

6:00 PM
--------------------------------------------------------------------------------

சுல்தான் said...
லொடுக்கு said....
சுல்தான் பாய் கலக்குறீங்க!

லொடுக்கு!
உங்கள் கமெண்ட் எப்படியோ தவறி விட்டது.

என் மனதிலுள்ளதை தெளிவாகச் சொல்வதாக நினைத்தேன்.
ரொம்ப கலங்கலாகத் தெரியுதா நண்பரே!
Click here to bookmark this link.Channel Image04:18 நண்பர் ஆரூரன் பதில்களுக்கு என் விளக்கங்கள் அழைப்பு
//என்னுடைய பதிவின் கருத்தையும் நோக்கத்தையும் நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டு விட்டீர்கள் என்பது தான்.//
உங்களின் ஆதங்கம் புரிகிறது. உங்கள் நாட்டு முஸ்லீம்களாகிய அவர்களை குறை கூறுவதை விடுத்து, அதற்காக ஒரு பழைய செய்தியை எடுத்துப் போட்டு, இஸ்லாத்தை குறை கூறுவது உங்கள் நோக்கத்துக்கு எந்த வகையிலாவது உதவும் என நினைப்பது வீணில்தான் முடியும் நண்பரே.

//தமிழ் முஸ்லிம்களிடம் காணப்படும் அளவு கடந்த அரேபிய மோகமும், விசுவாசமும், தமது தமிழடையாளத்தை விட்டு, மதத்தால் வந்த அரேபிய அடையாளத்தைச் சிறந்ததாக நினைப்பதும்//

இவ்வாறு உங்களைச் செய்யத் தூண்டுவது எது என்பது பற்றி, உங்கள் நாட்டு முஸ்லீம் நண்பர் ஒருவரிடம் கேட்டேன். அவர் சொல்லியது கீழே.
'நாங்கள் வணிகர்களாக இருந்து, இனத்தோடு இனமாக இருந்து, மற்றவர்களைப்போல, அவர்கள் கேட்டபோதெல்லாம் கொடுத்துக் கொண்டுதானிருந்தோம். அடாவடியாக மிகக்கூடுதலாக கேட்டபோது தர இயலவில்லை. வணிகத்திலிருந்து எப்போதும் பெருந்தொகைகளை எடுத்துக் கொண்டேயிருக்க இயலாது. அதனால் நாங்கள் தனிமை படுத்தப்பட்டு முத்திரை குத்தப்பட்டோம்.
மசூதியில் தொழுது கொண்டிருந்த முஸ்லீம்களை கண்மூடித்தனமாகச் சுட்டு எங்களையும், எங்களின் சிறார்களையும, முதியவர்களையும் கொன்று குவித்து அதை மமதையோடு பெருமையடித்துக் கொண்டது எங்கள் பொது எதிரிகளல்ல - இதுநாள்வரை எங்கள் இனமாக நாங்கள் விரும்பிய அதே குழுவினர்தான்.
எங்களை, எங்கள் பெண்டு பிள்ளைகளுடன், எங்கள் சொந்த வாழுமிடங்களிலிருந்து, சொந்த நாட்டின் அகதிகளாக வெளியேற்றியது எங்கிருந்தோ முளைத்து வந்த எதிரிகளல்ல - இதுவரை என் சகோதரனாயிருந்த எங்கள் இனத்தவர்தாம்.
அவர்கள் முஸ்லீம்களாகிய எங்களை தங்கள் இனமாக நினைத்திருந்தால், சொந்த இனத்திலேயே ஒரு குற்றமுமறியாதவர்களை கொலை செய்யத் துணிவரா?

எங்களை அந்த இனமென்று சொல்லப்படுவதையே இப்போது நாங்கள் வெறுக்கிறோம். எங்களை நீங்கள்; சொல்வதுபோல் எங்களின் வேர்களைத் தேடி அலைய வைத்த குற்றவாளிகள் யார்? ........ ....... ....... (இன்னும் பல, கடுமையான வார்த்தைப் பிரயோகங்களுடன்)'

//நீங்கள் என்னுடைய கருத்தை மறுக்கலாம், ஆனால் நான் இதை என்னுடைய சொந்த அனுபவத்தின் அடிப்படையில் சொல்கிறேன்.//
உங்களுடைய அதே போன்ற வார்த்தையையே நானும் போடுகிறேன். நீங்கள் அவருடைய இக்கருத்தை மறுக்கலாம். ஆனால் நான் அவரிடமிருந்து கேட்டதை மட்டுமே சொல்கிறேன்.

//எந்த விதத்திலும் இஸ்லாமையோ அல்லது எந்தமதத்தையும் ஏளனம் செய்வதல்ல.//
எந்த விதத்திலும் இழிவு புடுத்தவில்லை என்று சொல்லி, இந்தப் பதிவிலேயே ஏளனம் செய்துள்ளீர். அதைப் பின்னால் விளக்குகிறேன்.

//இலங்கையின் தமிழ் முஸ்லீம்கள், மத அடிப்படையில் ஈழத்தமிழர்களின் முதுகில் குத்தியதன் ஆதங்கம், ஆற்றாமை//
அதுவேதான், அதாவது: தமிழ் முஸ்லீம்களின் முதுகில் குத்தியதன் ஆதங்கம், ஆற்றாமை தான் அவர் பேச்சிலும் தொனிக்கிறது.
இதன் உண்மையும் பொய்யும் பற்றி பாதிக்கப்பட்ட நீங்கள் அல்லது அவர்கள் கூடுதலாக அறிவீர்கள். அது பற்றி நான் வாதிட விரும்பவில்லை.
அதற்காக இஸ்லாத்தை இழித்ததால், நான் ஊடே புக நேர்ந்தது.

நீங்கள் இலங்கைத் தமிழராயிருக்கக்கூடும் என்று உங்களது ஓரிரு வார்த்தைகளை வைத்து நான் யூகித்தேன். அதில் உறுதியில்லாததால்தான் இந்தியத் தமிழருக்கு சொல்வது போல் எழுதினேன். இலங்கைத் தமிழராயிருக்கும் பட்சத்தில் மாற்றிப்படிக்கும்படியும், மேற்பகுதியில், கடைசியில் இணைத்தேன்.

உங்களுக்குள் நீங்கள் கலந்து பேசி நல்ல முடிவெடுங்கள். பிரச்னை பற்றியெறியும் இந்நேரத்தில், 'உங்கள் நாட்டுக்குள் ஒரு இனத்துக்குள் உள்ள பிரச்னையில் நல்ல முடிவெடுங்கள். நிம்மதியாக வாழுங்கள்' என்றுதான் நான் கேட்டுக்கொள்கிறேன். என் தமிழினம், தங்களுக்குள் சண்டையிட்டு பிரிந்து விடாமல், சேர்ந்து நல்லிணக்கத்துடன் வாழ வேண்டுமாய் ஏக இறையைப் பிரார்த்திக்கிறேன்.

அடுத்து உங்கள் பதிலுக்கான விளக்கத்தைத் தருகிறேன்.
//சவூதி அரேபியாவையும், அதன் அரசகுடும்பத்திலும், அரேபியர்களிலும், தமது இனமக்களிலுள்ள பாசத்தை விடக் கூடிய பாசமும், விசுவாசமுமுள்ள பல முஸ்லீம்களை எனக்குத் தெரியும், நீங்கள் கூட அதற்கு விதிவிலக்கல்ல.//
அரேபிய மக்களையும் அதன் அரச குடும்பத்தினரையும் பீற்றிக் கொள்ளுமளவுக்கு ஏதுமில்லை என்பதை என் பதிவிலேயே தெளிவு படுத்தியிருக்கிறேன். மீண்டும் ஒரு முறை பார்வையிடவும்.

//சவூதி அரேபியாவின் பெரும்பான்மையான மக்களும், பெரும்பான்மையான அரபுக்களும் வெறுக்கும் சவூதி அரச குடும்பத்துக்கு வக்காலத்து வாங்கும் உங்களின் எழுத்திலிருந்தே அது தெளிவாகிறது.//
இது குறித்து மாய் யமானி கூறியதாக, நீங்கள் கூறியதை 'சரியாகக் கூறுகிறார்' என்றே எழுதியிருக்கிறேன். மீண்டும் ஒரு முறை பார்வையிடவும்.

//உலகமே வெறுக்கும் ஒசாமா பின்லாடனுக்கு ஆதரவளித்து வீதிக்குப் படையெடுத்து ஆர்ப்பாட்டம் நடத்திய முஸ்லீம்கள் இலங்கையிலும், இந்தியாவிலும், பாகிஸ்தானிலும், பங்களாதேசிலும் ஏன், உலகம் முழுவதிலும் உள்ளார்கள். ஒசாமாவைக் கூடத்தான் ஜகத்குரு ( புனிதர்) என நினைக்கின்றனர் பல முஸ்லீம்கள்.//
ஒசாமாவை எந்த முஸ்லீமும் ஜகத்குரு என்றேல்லாம் நினைப்பதில்லை. உலகமே வெறுக்கும் அமெரிக்க ரவுடியிசத்தை, இஸ்லாத்தை வெறுக்கும் அமெரிக்காவாலேயே ஊட்டி வளர்க்கப்பட்ட அவர் தனியாக நின்று எதிர்க்கிறாரே என்று ஒரு ஹீரோவாகத்தான் மதிக்கப்படுகிறார். (ஓசாமாவின் அணுகுமறைகள் சரியானவையா என்பது தனி விடயம்.)
இந்தியாவில் இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்ட இந்துக்களை நான் காட்டினால் இந்து மதமே தவறானது என வாதிக்க நீங்கள் முன் வருவீர்களா?

//சர்வாதிகாரி சதாமுக்காக எத்தனை தமிழ் முஸ்லீம்கள் அழுது வடித்தார்கள் இங்கே. சதாமைக் கூட மாவீரன் என மார்தட்டிய தமிழ் முஸ்லீம்கள் எம்மிடையேயுள்ளார்கள்//
நான் மேலே கூறிய அதே மாதிரி, சதாமையும் அமெரிக்க வில்லத்தனத்துக்கு எதிரான ஒரு ஹீரோவாகத்தான் பார்க்கிறார்கள். திரும்பவும் அதையேதான் கேட்கிறேன்.
அவ்வாறு வாதிட்ட முஸ்லீமல்லாத தமிழர்களை காட்டினால் அதை இந்து மதத்தின் அரேபிய விசுவாசம். இந்து மதத்தின சாபக்கேடு, ஆபத்தானது என்று சொல்வீர்களா? நண்பரே. இப்போதாவது உங்கள் எண்ணத்தில் உள்ள பிழையை உணர முடிகிறதா?

//முஸ்லிம்களுக்கு தமது புனித நகர் மக்கா எந்தளவுக்குப் புனிதமானதோ அதே போல் தான் இந்துக்களுக்கும் அவர்களது புனித நகரங்கள் புனிதமானவை என்பதைச் சில நேரங்களில் முஸ்லீம்கள் மறந்து விடுகிறார்கள் என்பது போல் தோன்றுவது தான் கவலைக்குரிய விடயம்//
உங்களுக்கு தவறாகத் தோன்றுகிறது நண்பரே.
என்னுடைய நிலத்தை அபகரிக்காமல், என்னுடைய வீட்டை இடிக்காமல், எனக்கு எந்தப் பாதகமும் செய்யாமல், உங்களது புனித நகரை நீங்கள் புனிதப்புடுத்தினால் எங்களுக்கு ஆட்சேபணை தெரிவிக்க என்ன இருக்கிறது?. அவ்வாறெல்லாம் முஸ்லீம்கள் உங்கள் புனித நகரங்களுக்கு புனிதம் தருவதை மறுக்கவோ மறக்கவோயில்லை

//அதனால் தான் இந்தியாவுக்கு வெளியிலிருந்து வந்த பல்வேறு மதங்களும் இந்தியாவில் செழித்து வளர்ந்தன. ஆனால் அவை எவ்வளவோ முயன்றும் கூட அவற்றால் இந்துமதத்தை விழுங்கி, ஏப்பமிட முடியவில்லை//
சிறிது குழம்பி விட்டீர்கள். இந்து மதம், ஏத்தனையோ மதங்களை விழுங்கி, அவற்றை செரித்து, வளர்ந்ததாக, ஆதாரங்களை அடுக்கியுள்ள பல பதிவுகளை இங்கு என்னால் காட்ட முடியும் நண்பரே. ஆனால் இஸ்லாம் எங்கு சென்றாலும் அதன் தனித்துவத்தை இழக்காது, செம்மாந்து, உயர்ந்து நிற்கும். எத்தனை காலமாகியும் இஸ்லாத்தை விழுங்க முடியா குறைதான், தன்னை உயர்சாதியாக பீற்றிக் கொள்ளும் சில ஈனர்களிடம் இருப்பதை என்னால் அவதானிக்க முடிகிறது.

ஒரு குறிப்பு நண்பரே!. மற்றவற்றிலிருந்து எதையாவது ஒன்றை எடுத்து இஸ்லாத்தில் கூடுதல், குறைவு செய்ய முடியாதென்பதுதான் இஸ்லாத்தின் தனிச்சிறப்பே!

//அரேபியாவில் அன்பிருப்பதில் தவறில்லை, ஆனால் அந்த அன்பு அளவுகடந்து, சொந்த சகோதரர்களையும், இனத்தையும் விட்டு, இல்லாத வேர்களைத் தேடி ஒடுவது தான் தவறு என்பது என்னுடைய கருத்து//
'அவ்வாறு அவர்களை ஓடச்செய்தது யாருடைய குற்றம்' என்று அவர் கேட்பதற்கு என்னிடம் பதிலில்லை. அதை நீங்களும் அவர்களும் உங்களுக்குள் கலந்து பேசி நல்ல முடிவாயெடுங்கள்.

//கிறிஸ்தவத் தமிழர்களுக்கு யேசுநாதர் பிறந்த பெத்லகேமிலும், பலஸ்தீனத்திலும் தமிழ் முஸ்லீம்கள் மக்காவில் கொண்ட 'அன்பு' போன்றளவுக்கில்லை. இலங்கைச் சைவர்களுக்கு கைலாசத்திலும், நேபாளத்திலும் அப்படியான அளவு கடந்த அன்பு கிடையாது//.
அது உங்கள் கண்ணோட்டம் மற்றும் அவரவர்களுடைய விருப்பம். அதில் குறை நிறை சொல்வது எனக்கு அவசியமாகப்படவில்லை.

//ஈழத்தில் தமிழன் கொல்லப்படும் போது அவர்களின் இதயம் துடிக்காது ஆனால் ஈராக்கில் குண்டு விழுந்தால் ஆவி துடிக்கும்//
ஈழ மக்களுக்காக போராட்டத்தில் கலந்து கொண்ட எத்தனை எத்தனையோ முஸ்லீம்களும், அமெரிக்காவின் ஈராக்கிய போருக்கெதிராக போராட்டத்தில் கலந்த கொண்ட எத்தனையோ முஸ்லீமல்லாதவர்களும் இருக்கிறார்கள். உங்களின் அழுக்குக் கண்ணாடியை கழற்றிப் பார்த்தால் தெரியம். இது பார்வைக் கோளாறு.
தமிழகத்தில், பெரம்பலூரில், (இஸ்லாத்தில் தற்கொலை பெருந்தவறென்றிருந்தும்) ஈழத்தமிழர்களுக்காக தமது இன்னுயிரை தீக்குத் தின்னக் கொடுத்தவன் ஒரு முஸ்லீம். அவன் எனதூரைச் சார்ந்த எனது சொந்தங்களில் ஒருவன்.

//பெங்களுரில் தமிழர்களுக்கு எதிராக நடப்பவற்றை வெளிப்படையாகக் கண்டிக்க முன்வருவதில்லையே ஏன்?//
என் நாங்களும் கண்டிக்கிறோம். உங்களுக்குத் தெளிவாகத் தெரிவதற்காக –
தஞ்சைத் தரணியில் தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை, தமிழகத்தின் நியாயமான உரிமையை, உரிய முறைப்படி தராமல் இருப்பதையும், பெங்களுருவில் என் தமிழினத்துக்கு எதிராக நடக்கும் கொடுமைகளையும் வன்மையாக கண்டிக்கிறோம் என்பதை இதன் மூலம் பதிவு செய்கிறேன்

//நான் கேட்டதெல்லாம், இஸ்லாம் சமத்துவமான மதம், சவூதி அரேபியா வேறுபாடற்ற சமத்துவமான நாடென்றால்//
இந்து மதத்திலே இல்லாத, நான் கூறிய அந்த சமத்துவம் இஸ்லாத்தில் இருக்கிறது. அது அரேபியாவில் நடைமுறைப் படுத்தப்படுகிறது.
சவூதி இளவரசர் தவறு செய்து, அதற்கு ஆள்பவர்கள் ஆதரவு தந்தால் அது தவறு. இறைவன் முன்னிலையில் தண்டனை பெறுவார் என்று நான் எழுதியுள்ளதை திரும்புவும் பாருங்கள்.

//நான் எத்தனையோ கோயில்களுக்குப் போயிருக்கிறேன், எங்குமே தீண்டாமையை நான் பார்த்ததில்லை//
அவ்வாறிருந்தால் நல்லதுதான். சில குழுவினர்தான் இறைவன் முன் ஓத முடியும். சில குழுவினர் கருவறைக்குள் நுழையக்கூட முடியாதென்ற நடைமுறை இருப்பதாக நான் கேட்டிருக்கிறேன். தமிழிணையத்தில் பற்பல முறை படித்துமிருக்கிறேன். நீங்கள் சொல்வதுதான் உண்மை. அவ்வாறு எழுதியவர்களெல்லாம் தவறென்றால்... நல்லதுதான். அவ்வாறே எல்லோரும் இறைவன் முன் சரிநிகர் சமானம் என்றிருப்பதையே நானும் விரும்புகிறேன் திரு.ஆரூரன்.

//கடவுள் படைத்தது ஆணையும் பெண்ணையும் தான், அந்தப் பெண்ணைக் கடவுளை வழிபடுமிடத்திலிருந்து பிரித்தவர்களுக்குக் கடவுள் முன்னிலையில் யாவரும் சமம் என்ற தத்துவத்தை உச்சரிக்கத் தகுதியுண்டா?//
கடவுள்தான் ஆணையும் பெண்ணையும் படைத்தார். இரு சாராரையும் ஒரே மாதிரி அவர்களின் உருவத்திலும், அங்க அவயங்களிலும், இயல்புகளிலும் படைக்காமல், சில வேற்றுமைகளையும் அவரே ஏற்படுத்தினார். அதனால் ஆணும் பெண்ணும் தங்கள் குடும்பத்திலுள்ள நெருங்கிய சொந்தங்களுடன் வீட்டில் ஒன்றாக தொழ அனுமதித்து, வெளியில் அல்லது பொது இடங்களில், பெண்களும் ஆண்களும் தனித்தனியாக தொழச் செய்ததும் இஸ்லாத்தின் சிறப்புகளில் உள்ள ஒன்றுதான். ஆணும் பெண்ணும் ஒன்றாய் வழிபடுமிடத்திலேற்பட்ட துன்பங்களை அனுபவித்தவர்களுக்கும், அவர்கள் பள்ளிவாசலில் தொழுமிடத்து தனித்தனியாய் தொழுவதிலுள்ள நன்மைகளை அனுபவிப்பவர்களுக்கும் அது புரியும். ஆணையும் பெண்ணையும் ஓரே மாதிரியாக இறைவன் ஏன் படைக்காது விட்டார் என்று உங்களுக்கும் எனக்கும் தெரியுமாதலால் வீண் கேள்விகள் வேண்டாமே!. தவறு ஏற்படக்கூடிய வாய்ப்பைக்கூட இஸ்லாம் தடுக்கிறது என்பதில் எமக்குப் பெருமிதம்தான் நண்பரே.

//ஏதோ நான் அத்வானியின் அபிமானி போலவும், அத்வானி தான் ஈழத்தமிழர்களின் இணையற்ற தலைவர் போலவுமல்லவா பேசுகிறீர்கள், அத்வானியைப் பற்றி எனக்கு அவ்வளவு தெரியாது, அறிவதற்கு அப்படி ஒரு ஆர்வமும் கிடையாது.//
மன்னியுங்கள் ஐயா. அதை எழுதியது ஆருரன் என்ற ஒரு ஈழத்தமிழர் என்று அப்போது உறுதியாகத் எனக்குத் தெரியாது.

//ஒரு குற்றவாளி எத்தனை முறையும் தண்டனையை அனுபவிக்கலாம், ஆனால் ஒரு நிரபராதி ஒரு போதும் தண்டனையனுபவிக்கக் கூடாது, அந்த அடிப்படையில் ஷாரியா நவீன நீதித்துறையின் அடிப்படைக் கொள்கைக்கே முரணானது, நீதிபதிகளும் மனிதர்களே//
கையை வெட்டுவதும், கழுத்தை வெட்டுவதும் ஏதோ தினசரி நிகழ்வு போல பேசுகிறீர்கள். சவூதியில் கடைத்தெருவில் நடக்கின்ற மனிதர்களில் மூன்றில் ஒரு மனிதருக்கு கை, கால்கள் வெட்டப்பட்டு இருப்பதைப் போல் நினைக்கிறீர்கள். எல்லா சந்தேகங்களும் நிவர்த்தி செய்யப்பட்டு, குற்றம் சந்தேகமற உறுதி செய்யப்பட்டாலே தண்டணையளிக்கப்படும்.

உங்கள் வாதப்படி பார்த்தால் யாருக்கும் தண்டணையே கூடாது. ஏனெனில் நீதிபதிகளும் தவறிழைப்பவர்களே. சிறு தண்டனைதான் என்றாலும் குற்றமற்றவன் அதை அனுபவிக்கக்கூடாது என்பதுதானே கருத்து.

//சகோதரர் சுவனப்பிரியன் பீற்றிக் கொள்ளும் சமத்துவம் சவூதி அரேபியாவில் கிடையாது//
சிலர் பல காலம் ஒரு வீட்டில் உண்டு விட்டு, வேறு வீட்டில் அதை விட கூடுதலாக கிடைக்கிறதென்பதற்காக, உண்ட வீட்டுப் பாத்திரத்திலேயே மலம் கழித்துச் செல்வார்கள். நீங்களும் அவர்களைப் போலவே வாதம் செய்கிறீர் நண்பரே.

பொதுவாக, அந்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் எப்படி இருக்கிறதென்று பாருங்கள். எங்கேயும் இருக்கின்ற சில விதி விலக்குகளையே விதியென்று கூறாதீர்கள்.
அமெரிக்கா போன்ற நாடுகளில் இன்னும் சிலர் பிச்சையெடுத்தே வாழ்கின்றனர். கனடாவில் எப்படி?

அதற்காக அங்கு சவூதியை ஆள்பவர்கள் கூடுதலாக அனுபவிப்பதை இல்லையென்று நான் சொல்வதாக பொருளாகாது. இஸ்லாம் அதை ஆதரிப்பதாகவும் பொருளாகாது.

//நான்கில் ஒரு பங்கு என்பது நான் என்னுடைய தொப்பிக்குள் இருந்து எடுத்த எண்ணல்ல, அமெரிக்கப் பத்திரிகையில் வந்த செய்தியிலிருந்து எடுக்கப்பட்டது//
//முதன் முதலில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திலே முதுமாணிப் பட்டம் பெற்ற சவூதிப் பெண். அவர் தான். சவூதி அரசு செய்வதெல்லாம் இஸ்லாமுக்கு எதிரானதென விமர்சிக்கிறாரே தவிர நானல்ல//
அது உங்கள் தொப்பியிலிருந்து அல்ல, நீங்கள் கூறிய மாய் யமானி தொப்பியிலிருந்துதான் எடுத்திருப்பீர்கள். அமெரிக்காவில் அரபியர்களைப் பற்றி பொதுவான கண்ணோட்டம் இருக்கிறது. அதை மறுப்பதற்காக, அந்நாட்டை பிடிக்காத ஒருவர் சொன்னது முழுதும் உண்மையே என்று யூகிக்கும் உங்களை நினைத்து அழுவதா சிரிப்பதா என்று எனக்கும் தெரியவில்லை.
முதன் முதலில் பட்டம் பெற்றதால் அவர் தவறாக சொல்லவே மாட்டாரா? பட்டம் பெறுவதுதான் உண்மையாளனுக்கு உள்ள இலக்கணமா?

//ஒரு சவூதியரே சொல்லும் போது சகோதரர் சுவனப்பிரியன் சொல்வது சரியாக இருக்க முடியாதல்லவா?//
இது மாதிரி பல விடயங்களைச் சொல்லலாம் நண்பரே.
'இது நாள் வரை அத்தலைவரின் கூட இருந்தவரே, அதுவும் அத்தலைவராலேயே தளபதியென போற்றப்பட்டவரே சொல்லும்போது ஆருரன் சொல்வது சரியாக இருக்க முடியாதல்லவா' என்று உங்களின் சில வாதங்களை நான் மறுத்தால், அது சரியானதென்று உங்களால் ஏற்க இயலுமா?!.

//ஒப்பந்தங்களைக் கையெழுத்திட மறுப்பதாகப் பயமுறுத்தியும், போதைப்பொருள் கடத்திய இளவரசரைக் காப்பாற்றியுள்ளது.//
அவ்வாறு நடந்திருந்தால் அது குற்றமே. அதற்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தமில்லை. இஸ்லாம் அதற்கு எதிராக இருக்கிறது.

//அதன்படி 'என்னுடைய மகள் பாத்திமா திருடியிருந்தாலும், அவர் கையையும் வெட்டுவேன்' என்று சொன்ன நபி பெருமகனார்' காட்டிய நீதி நெறி சவூதி இளவரசரைக் காப்பாற்ற மீறப்பட்டுள்ளது. 'இஸ்லாமிய சட்டத்தின் முன் ஆண்டியும் அரசனும் சமமல்ல' என்பது வெளிப்படையாக நிரூபிக்கப்பட்டுள்ளது//
நீங்கள் சொல்வது போல் நடந்திருந்தால், நபி பெருமகனார் காட்டிய நீதி நெறி சவூதி இளவரசரைக் காப்பாற்ற மீறப்பட்டுள்ளது என நானும் ஏற்றுக் கொள்கிறேன்.

ஆனால் அடுத்த வரியில் குழம்புகிறீர்கள்.
அதற்காக 'இஸ்லாமிய சட்டத்தின் முன் ஆண்டியும் அரசனும் சமமல்ல' எனச் சொல்வது அறிவீனம்.
நீங்கள் சொல்வது போல் நடந்திருந்தால், அங்கு ஆள்பவர்களால், இஸ்லாமிய நெறிமுறைகள் மீறப்பட்டு, அங்கு ஆண்டியும் அரசனும் சமமல்ல' என்பது வெளிப்படையாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று சொல்லலாம்.

//எண்ணெய் வளம் கொழிக்கும் அரேபியாவும் உதவவில்லை. அது தான் உண்மை, சில முஸ்லீம்கள் இப்பொழுது மறுத்தாலும் அது அல்லாவுக்குத் தெரியும்.//
நாடுகள் தங்கள் வருவாயில் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஆபத்து கால உதவிக்காக வைத்திருக்கும். அது அவர்களால் செலவழிக்கப்பட்டிருக்கலாம். ஆதனால் தாமதமேற்பட்டிருக்கலாம். இது வெறும் யூகம்தான். ஏனெனில் அவர்களின் பொருளாதாரத்தின் ஒரு பெருந்தொகையை நன்மையான காரியங்களில் செலவிடுவதாய் நான் கேட்டுள்ளேன்.
ஆனாலும் அவ்வாறில்லாமல், ஆழிப்பேரலை விவகாரத்தில் நீங்கள் சொல்வது உண்மையானால், அங்கு ஆள்பவர்களால், இஸ்லாமிய நெறிமுறைகள் மீறப்பட்டுள்ளது எனக் கொள்ளலாம். அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

முடிவாக: இலங்கைத் தமிழர்களின் துயரமான வாழ்வும் நிலையும் கண்டு, துயருறுபவர்களில் நானும் ஒருவன். அவர்களில் சொந்த மண்ணை விடுத்து, வேறு வழியில்லாமல், புலம் பெயர்நது வாழ்பவர்களை, துயருரும் என் சகோதரர்களாகவே நான் காண்கிறேன்.
எனவே உங்களுக்கிடையிலுள்ள (தமிழ் முஸ்லீம்களுக்கும் மற்ற தமிழர்களுக்கும்) குடும்பத் தகராறில் இஸ்லாத்தை அவமரியாதை செய்யாதீர்கள் என்பதே என் வேண்டுகோள்.

மாற்றுமதத்தை குறை சொல்வதை தவிர்க்க விரும்புபவன் நான். உங்களுடைய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது அதற்கான கட்டாயத்தால் வருத்தத்துடனேயே சில விமரிசனங்களை இதில் முன் வைக்க நேர்நதது. எனவே இது குறித்து மேற்கொண்டு எந்த விவாதமும் செய்ய நான் தயாரில்லை.

தங்களின் மனதை காயப்படுத்துவது எனது நோக்கமல்ல. தனிப்பட்ட தாக்குதலாக ஏதும் இதில் இருந்தால் அதற்காக வருந்துகிறேன்.

[அது மட்டுமில்லாமல் இரவு 11க்கு எழுதத் துவங்கி விடியல் 4 மணிக்குத்தான் எழுதி முடித்தேன். இது என் பணியை பெரிதும் பாதிக்கும். ஏதோ தமிழ் திரட்டிகளின் பக்கம் வந்தோமா தமிழில் நாலெழுத்து நல்லவற்றைப் படித்தோமா, சிறிய மறுமொழி இட்டோமா என்று போவதே எனக்கு வசதி.:)))))))))))]

Posted by சுல்தான் at 12:55 PM



23 comments:
லக்கிலுக் said...
நண்பர் ஆருரனை சில ஆண்டுகளாக அறிவேன். வாதிடுவதில் வல்லவர். அவர் வாதிட்டால் எதிர்வாதம் செய்பவரின் நிலை எப்போதுமே பரிதாபம் தான் :-)

அவர் மனம் நோகாவகையில் சரியான எதிர்வாதத்தை முதன்முறையாக உங்கள் மூலமாக காண்கிறேன்.

உங்கள் இருவருக்குமாக சொற்போர் இனியும் தொடர்ந்தால் நல்லது. எனக்கும் தெளிவுபெற பல விஷயங்கள் உங்கள் இருவரின் வாதங்களிலும் இருக்கிறது.

4:29 PM
Anonymous> said...
//ஈழத்தில் தமிழன் கொல்லப்படும் போது அவர்களின் இதயம் துடிக்காது ஆனால் ஈராக்கில் குண்டு விழுந்தால் ஆவி துடிக்கும்//

1995 இல் யாழ்ப்பாணத்திலிருந்து 5 லட்சம் மக்கள் அகதிகளாக சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பால் இடம் பெயர்ந்து நின்ற போது தமிழகத்தில் நெருப்பில் எரிந்து தன்னை மாய்த்தவன் ஒரு இஸ்லாமிய தமிழன் தான். அவனது உயிரே துடித்தது. இதயம் துடித்ததா என என்ன இத கேள்வி.. ?

யாழ்ப்பாண சைவ உயர் வேளாளர்களின் சிந்தனை இவ்வாறு தான் இருக்கும்.

4:34 PM
Anonymous> said...
அப்துல் ரவூப் என்னும் மனிதன் ஈழத்து சோதருக்காக தன்னை மாய்த்ததை வசதியாக மறந்து விடுகிறாரே ஆரூரன்..?

4:35 PM
சுல்தான் said...
வருகைக்கும் நன்றி திரு.லக்கிலுக்.

அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது எனக்கும், நான் என்ன சொல்ல விழைகிறேன் என்பதை அவரும், அதனூடாக மற்றவர்களும் அறிகின்றனர். இத்தனை போதுமே.

வீண் விவாதங்களில் பலனேதுமில்லை நண்பரே.

4:37 PM
sreesharan said...
////எண்ணெய் வளம் கொழிக்கும் அரேபியாவும் உதவவில்லை. அது தான் உண்மை, சில முஸ்லீம்கள் இப்பொழுது மறுத்தாலும் அது அல்லாவுக்குத் தெரியும்.//
நாடுகள் தங்கள் வருவாயில் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஆபத்து கால உதவிக்காக வைத்திருக்கும். அது அவர்களால் செலவழிக்கப்பட்டிருக்கலாம். ஆதனால் தாமதமேற்பட்டிருக்கலாம். இது வெறும் யூகம்தான். ஏனெனில் அவர்களின் பொருளாதாரத்தின் ஒரு பெருந்தொகையை நன்மையான காரியங்களில் செலவிடுவதாய் நான் கேட்டுள்ளேன்.
ஆனாலும் அவ்வாறில்லாமல், ஆழிப்பேரலை விவகாரத்தில் நீங்கள் சொல்வது உண்மையானால், அங்கு ஆள்பவர்களால், இஸ்லாமிய நெறிமுறைகள் மீறப்பட்டுள்ளது எனக் கொள்ளலாம். அல்லாஹ்வே மிக அறிந்தவன்.//

இதனால் நீங்கள் கூறுவது என்னவெனில் இஸ்லாம் மதத்தை பின்பற்றாத யார் அழிந்தாலும் உங்களுக்கு கவலை இல்லை. உதவ முன்வர மாட்டீர்கள்.

4:48 PM
சுல்தான் said...
வருகைக்கு நன்றி ஸ்ரீஷரன்.
நீங்கள் சொல்வது போன்ற கருத்தை, என் எழுத்தின் எந்தப் பகுதியில் எடுத்தீர்கள் நண்பரே!.

5:55 PM
அழகு said...
ஆரூரான் என்பவர் முழுப்பூசணியைப் பானுக்குள் மறைக்கப் பார்க்கிறார்.

தமிழன் என்று சொல்லிக் கொண்டு, காத்தான்குடி பள்ளியிலும் வாழைச்சேனை, அட்டாளச்சேனையின் அப்பாவித் தமிழ் முஸ்லிம்களைத் தோக்குகளால் ஆசீர்வதித்த அந்தக்காலம் ஒரு பக்கமிருக்கட்டும்.

அண்மையில் நடந்த உண்மைச் சம்பவம்.

புலிகள் கஷ்டப்பட்ட காலத்தில் உணவுப் பொருளும் டீஸல் போன்ற அத்யாவசியப் பொருட்களும் கொடுத்து உதவிய மூதூர் மக்களின் நன்றியை மறந்தது மட்டுமின்றி, "24 மணித்தியாளங்களுக்குள் வெளியேறவும்" என்ற உத்தரவை சொந்த(?) சகோதரனுக்கு விடுத்து, பிறந்த மண்ணிலேயே மூதூர் முஸ்லிம்களை அகதிகளாக அலைய விட்டது யார்?

தமிழன்(!)தானே?

பல‌ உயிர்களையும் இலட்சக் கணக்கில் சொத்துக்களையும் மூதூர் முஸ்லிம்கள் இழந்ததற்குக் காரணம் யார்?


தமிழன்(!)தானே?


ஆரூரானால் மறுக்க முடியுமா?


எங்களுடைய தமிழ்ப் பற்றை நிரூபிக்க எவனிடமும் சான்றிதழ் பெறவேண்டிய அவசியம் எமக்கில்லை.

6:13 PM
சுல்தான் said...
வருகைக்கு நன்றி அழகு.
உங்களின் கோபத்தைக் குறித்து நான் கருத்து கூறுவது பொருத்தமாயிருக்காது நண்பரே. மன்னிக்கவும்.

6:37 PM
சுல்தான் said...
//தமிழகத்தில் நெருப்பில் எரிந்து தன்னை மாய்த்தவன் ஒரு இஸ்லாமிய தமிழன் தான். அவனது உயிரே துடித்தது. இதயம் துடித்ததா என என்ன இத கேள்வி.. ?//
//அப்துல் ரவூப் என்னும் மனிதன் ஈழத்து சோதருக்காக தன்னை மாய்த்ததை வசதியாக மறந்து விடுகிறாரே ஆரூரன்..?//

வருகைக்கு நன்றி அனானி-1 மற்றும் அனானி-2
அதைத்தான் நான்
//உங்களின் அழுக்குக் கண்ணாடியை கழற்றிப் பார்த்தால் தெரியம். இது பார்வைக் கோளாறு.
தமிழகத்தில், பெரம்பலூரில், (இஸ்லாத்தில் தற்கொலை பெருந்தவறென்றிருந்தும்) ஈழத்தமிழர்களுக்காக தமது இன்னுயிரை தீக்குத் தின்னக் கொடுத்தவன் ஒரு முஸ்லீம். அவன் எனதூரைச் சார்ந்த எனது சொந்தங்களில் ஒருவன்.// என்று குறித்திருக்கிறேன்.

7:01 PM
அட்றா சக்கை said...
சகோதரர் சுல்தான்

அருமையான அழகான நிதானமான பதில்கள்.

unarvukal என்ற பெயரில் எழுதும் சகோதரர் தம் வீட்டுச்சண்டைக்குத் தீர்வுகாணும் முயற்சியில் இஸ்லாத்தின் மீது பழி சுமத்தி இருக்கிறார். அது போன்ற ஒரு வாய்ப்புக்காகவே காத்திருந்த முதல் த.அ. ஒன்று அவர் பதிவில் விவாதத்தைத் திசை திருப்ப மலம் கழித்துச் சென்றிருக்கிறது. அதை அவர் அறிந்தே பிரசுரித்தாரா என்பது அவருக்குத் தான் தெரியும்.

இருப்பினும் அந்த த.அ. மூலம் விவாதம் திசைதிருப்பாமல் அழகான பதில்களைத் தந்து சுமுகமான விவாதத்தைத் தொடர்ந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

குறிப்பு: த.அ = தமிழ்மண அனாதை

10:56 PM
Anonymous> said...
//சிலர் பல காலம் ஒரு வீட்டில் உண்டு விட்டு, வேறு வீட்டில் அதை விட கூடுதலாக கிடைக்கிறதென்பதற்காக, உண்ட வீட்டுப் பாத்திரத்திலேயே மலம் கழித்துச் செல்வார்கள்.//

இவர் யாரென்று சொல்லுங்களேன்!

10:56 PM
சுவனப்பிரியன் said...
நண்பர் சுல்தான்!

பல வேளைகளுக்கு மத்தியில் இரவு 4 மணிவரை பதிவை எழுதி முடித்திருக்கிறீர்கள். உங்களின் ஆர்வம் என்னை ஆச்சரியப்படுத்துகிறது. தொடரட்டும் உங்கள் பணி.

நண்பர் ஆரூரானுக்கு இலங்கை தமிழ் இந்துக்களும், தமிழ் முஸ்லிம்களும் ஏன் ஒன்றுபடவில்லை என்பதை ஒரு இலங்கையரை வைத்தே பதிலளித்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

5:31 AM
சுல்தான் said...
வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி அட்றா சக்கை.
இஸ்லாத்தை யார் இழித்துச் சொல்வார்கள்! அங்கே போய் எவ்வாறு விஷமம் செய்யலாம்! என்று ஒருவரல்ல. தமிழிணையத்தில் ஒரு குழுவே காத்திருக்கிறது சகோதரரே.

2:58 PM
சுல்தான் said...
அனானி 3 வருகைக்கு நன்றி.
அவர் யாரென்று நான் வேறு சொல்ல வேண்டுமா?
அவரை விருந்துக்கு அழைத்தால், அவர் உண்பதிலே கவனம் செலுத்தாமல், உண்டு முடித்த இடம் எவ்வாறு இருக்கும்(!??!) என்று பார்த்து அதை ஏளனம் செய்வதிலே பெருமை கொள்ளும் பின்புத்திக்காரர்
எல்லோரும் அறிந்தே இருக்கிறார்கள்.

3:04 PM
சுல்தான் said...
தொடர் வருகைகளுக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி சுவனப்ரியன்

3:06 PM
அப்துல் குத்தூஸ் said...
சகோதரர் சுல்தான் அவர்களுக்கு என் நன்றிகள்.

சரியாகத்தான் பதில் கொடுத்துள்ளீர்கள். ஆனால், இது இஸ்லாத்தின் உயர்வுக்கு அணி சேர்ப்பதாகவல்லவா உள்ளது. நிச்சியம் அதை இவர்களால் ஜீரணிக்க இயலாது. அதனால் இப்பொழுது உள்வாங்குவார்கள். சிறிது காலம் கழித்து மீண்டும் அதே பல்லவியை வேறோரு அவதாரத்தில் ஆரம்பிப்பார்கள்.

3:37 PM
சுல்தான் said...
வருகைக்கு நன்றி அப்துல் குத்தூஸ்.

3:55 PM
லொடுக்கு said...
உள்குத்து/வெளிகுத்து இல்லாமல், விவாதத்தை திசை திருப்பாமல், சுற்றி வளைக்காமல் சிலர் மட்டுமே தமிழ்மணத்தில் எழுத காண்கிறேன். அதில் நீங்களும் ஒருவர். உங்களின் வாதம் அருமை. உங்களிடமிருந்து அறிந்து கொள்ள நிறைய இருக்கிறது.

தொடருங்கள்!

4:16 PM
சுல்தான் said...
வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி லொடுக்கு.

4:30 PM
Anonymous> said...
சகோதரர் சுல்தான் அவர்களுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் மற்றும் மறுமை வாழ்வு சிறப்பதற்கான பிரார்த்தனைகளும்.

திரு.ஸ்ரீசரன் அவர்களின் பார்வைக்கு..

//இதனால் நீங்கள் கூறுவது என்னவெனில் இஸ்லாம் மதத்தை பின்பற்றாத யார் அழிந்தாலும் உங்களுக்கு கவலை இல்லை. உதவ முன்வர மாட்டீர்கள்.//

தமிழகத்தில் ஆழிப்பேரலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் பொருளாதாரம் வசூலித்து கொடுத்து உதவியது. நோய் தொற்றும் என்ற பயத்தில் பலரும் தொட அஞ்சிய அழுகிய உடல்களை எ(உ)ங்களது முஸ்லிம் சகோதரர்கள் தொட்டு தூக்கி சேவையாற்றியுள்ளனர்.

அரசியல்வாதிகளோ, சினிமா நடிகர்களோ 5 ரூபாய் தர்மம் வழங்கினாலும் அதை 5000 ரூபாய் செலவு செய்து மக்களுக்கு எடுத்துச்செல்லும் செய்தி நிறுவனங்கள் தமிழகத்தில் தாராளமாக உண்டு. எங்களுடைய இந்த சேவைகளை பொதுவான மக்களுக்கு எடுத்துச்சொல்ல (எங்களைத்தவிர) எங்களுக்கு நாதியில்லை.

ஒரு மனிதனின் சோகத்தில், இழப்பில் மதத்தைப்பார்த்து உதவுவது என்பது மனிதத்தன்மைக்கு முற்றிலும் எதிரானது. மனிதத்தன்மைக்கு உறியவர்களாக முஸ்லிம்கள் நாங்கள் நடந்து காட்டி இருக்கிறோம். அப்படி இருக்கச்சொல்லி இஸ்லாம் எங்களுக்கு கட்டளையிட்டிருப்பதால்.

இஸ்லாத்தை பின்பற்றாதவர்களாக இருந்தாலும் அவர்களுடைய சோகத்தில் பங்கு கொள்வது, அதற்காக உதவுவது எங்களுடைய கடமையாக இருக்கிறது.

அபிவிருத்தி
ரியாத் - சவுதி அரேபியா

6:52 PM
சுல்தான் said...
முதன் முதலாக என் பதிவுக்கு வருகை தந்துள்ளமைக்கும் கருத்துகளுக்கும் நன்றி அபிவிருத்தி(பரக்கத்).

7:06 PM
முஸ்லிம் said...
சுல்தான் நல்ல விளக்கமளித்துள்ளீர்கள் தொடர்ந்து எழுதுங்கள்.

7:53 PM
சுல்தான் said...
வருகைக்கு நன்றி முஸ்லீம் அவர்களே.

8:11 PM
Click here to bookmark this link.Channel Image04:18 தருமி ஐயாவின் வினாக்களுக்கு என் விளக்கங்கள் கடைசி பகுதி அழைப்பு
4)//"அவன் படைத்த மனிதர்களாகிய நமக்குள்ளேயே பிறப்பாலோ, செல்வத்தாலோ அல்லது தொழிலாலோ உயர்வும் தாழ்வும் கற்பிக்காதவனாக இறைவன் வேண்டும்."
இக்கூற்றும் சரியாக எனக்குத் தோன்றவில்லை. பார்க்குமிடமெல்லாம் வேற்றுமைகள் நிறைந்த உலகமாகத்தானே இருக்கிறது. படைப்பினில் எல்லோரும் ஒரே மாதிரியாகவா இருக்கிறோம்? இல்லையே!//

ஆம். வேற்றுமைகள் நிறைந்ததுதான் உலகம். படைப்பில் அனைவரும் ஓரே மாதிரியாக இருப்பதில்லை என்பதும் உண்மைதான்.

ஆனால் அவன் படைத்த இந்த வேற்றுமைகளின் அடிப்படையில், அவனது முன்னிலையில், மனிதர்களில் உயர்ந்தவர்கள் தாழந்தவர்கள் என்ற பேதமிருக்கக் கூடாது.

இஸ்லாத்தில், இறைவனது முன்னிலையில், மேற்கூறிய வேற்றுமைகளின் அடிப்படையிலான உயர்வு தாழ்வு இல்லை.

5)//"பூமியும் வானமும் அவனது ஒரே வார்த்தைக்குள் ஆகும்"
பின் எதற்கு 6 நாட்கள் படைப்பிற்கு - அதுவும் ஒவ்வொன்றாய்? பின் கடவுள் ரெஸ்ட் எடுத்ததாகவும் உள்ளதே!//

கடவுள் ரெஸ்ட் எடுத்ததா:
இறைவனுக்கு ஓய்வு தேவைப்படாது என்று இஸ்லாம் சொல்கிறது.
ஏனெனில் அவன் ஓய்வெடுக்கும் நேரத்தில் மனிதர்களுக்கு ஏற்படும் தேவைகளை யாரிடம் கேட்பது என்ற கேள்வி எழுகிறதல்லவா?.

பின் எதற்கு ஆறு நாட்கள்?
குர்ஆன் அத்தியாயம் 7 வசனம் 54 மற்றும் அத்தியாயம் 10 வசனம் 3லும் அல்லாஹ் வானங்களையும் புமியையும் ஆறு நாட்களில் படைத்ததாக கூறுகிறான்.

இறைவன் முடிவெடுத்து செய்கின்ற ஒன்றில் கேள்வி கேட்கிற உரிமை யாருக்கும் இல்லை. ஏன் அவ்வாறு செய்தான் என்பது அவனுக்கே வெளிச்சம்.

அவ்வாறு அவன் படைத்ததால், நடைமுறை வாழ்க்கையில் அதனால் மனிதர்களுக்கு எந்த கெடுதலும் வரப்போவதில்லை.

அவன் சக்தியை அவன் கூறும் போது,; 'மறுமையில் அவனுடைய ஒரு கைப்பிடிக்குள் பூமி அடங்கும்' என்றும் சொல்கிறான். பார்க்க குர்ஆன் அத்தியாயம் 39 வசனம் 67

6)(அ)//"தாடி வைக்க வேண்டுமென்று இறை கட்டளை உள்ளதால்..."
இதைக் கூட கட்டளையாகக் கடவுள் கொடுப்பாரா?//

வாழ்வின் அனைத்து நிலைகளுக்கும் இஸ்லாம் சில வழிமுறைகளை விதித்துள்ளது. சில கட்டளைகளை வலியுறுத்தி சொல்கிறது. சிலவற்றை தேவையானால் ஏற்று நடக்கச் சொல்கிறது.
சிறுநீர் கழிப்பதில் கூட (மற்ற மனிதர்களுக்கும், அவருக்கும் துன்பமேற்படக் கூடாதென்பதற்காக) சில வழிமுறைகளை சொல்கிறது.
இஸ்லாம் வெறும் சடங்கும் சம்பிரதாயமும் கொண்ட மதமல்ல வாழ்வியல்.

6.(ஆ)தாடி இல்லாதவர்கள் முழு முஸ்லீம்கள் இல்லையா?
தாடி இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்ட சுன்னத்.
நிர்ப்பந்தங்களினால் ஒரு முஸ்லீம் தாடி வைக்கவில்லையென்றால் அவர் குற்றம் பிடிக்கப்பட மாட்டார். தகுந்த காரணமேதுமின்றி ஒருவர் தாடி வைக்காது விட்டால், அவர் ஒரு சுன்னத்தை விட்ட குற்றமிழைத்தவராவார். அது அவருக்கும் இறைவனுக்கும் மத்தியிலுள்ளதாகும்.

7அ). //"இஸ்லாத்தை ஏற்று அம்மார்க்கத்தை சரியாகப் பின்பற்றியவர்களுக்கு பரிசாக சொர்க்கமும், இஸ்லாத்தை நிராகரித்தவர்களுக்கு தண்டனையாக நரகமும் வழங்கப்படும் என்று எவ்வித ஒளிவு, மறைவு இல்லாமல், வெளிப்படையாக இஸ்லாம் கூறுகிறது."

"You are either with us or with them". 9/11 -க்குப் பிறகு ஜார்ஜ் புஷ் சொன்ன இந்த வாக்கியத்தின் பொருளை நான் விளக்க வேண்டியதில்லை. மதத்தின் பெயரால் ஒசாமா செய்ததால் அந்த மதத்தையும், மதத்தைச் சார்ந்தவர்களையும், விரோதிகளாக அவர் பார்த்தார்; அதே போல்தான் எல்லோரும் பார்க்க வேண்டும் என்றும் எதிர்பார்த்தார். அவரின் இந்தக் கூற்றுக்கு உலகத்தின் பல நாட்டவரும், பல நாட்டுத் தலைவர்களும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். அவரைப் பொருத்தவரை அவருக்குச் சரியானதாகத் தோன்றும் ஒன்று, உலகத்தில் எல்லோருக்கும் அதே போல்தான் தோன்ற வேண்டுமென அவர் எதிர்பார்த்ததை உலகம் ஒப்புக் கொள்ளவில்லை. இல்லையா?அதாவது, நீ அந்தப் பக்கமா, இந்தப் பக்கமா என்பதை வைத்துதான் உன் மறு வாழ்க்கையும், அதற்குரிய பரிசு / தண்டனையும் தீர்மானிக்கப் படும்.

இந்த புஷ்ஷின் கருத்திற்கும், மேலே சொல்லியுள்ள இஸ்லாமியக் கருத்திற்கும் - ஒன்று மனிதன் கூறியது; இன்னொன்று கடவுளால் கூறப்பட்டதாக நம்பிக்கையாளர்களால் கருதப்படுவது என்பதைத் தவிர. இரண்டுமே கருத்துக்கள் என்ற வரையில் ஒன்றுதானே? ஆனால் ஒன்றை தவறென்று கூறி, இன்னொன்றை எப்படி புனித வார்த்தையாகக் கொள்ளுவது?//

ஒரு சில உதாரணங்களின் மூலம் இதற்கு பதிலளிக்கலாம் என எண்ணுகிறேன்.

i. கம்பெனியில்: நன்றாகவும் சரியாகவும் வேலை செய்தால் நல்ல சம்பளமும் பணியில் உயர்வும் தரப்படும். தவறாகவும் குறைவாகவும் வேலை செய்தால் சம்பளக்குறைப்போடு பணி உயர்வும் தரப்படாது என்கிறார்கள்.
ii. கல்லூரியில்: சரியான முறையில் வந்து, ஒழுங்காக நடப்பவர்களுக்கு internal assessmentல் நல்ல மதிப்பெண்கள் தரப்படும். சரியாக வராமலும், வந்தால் தகராறு செய்பவர்களுக்கும் குறைந்த மதிப்பெண்களே கிடைக்கும் என்கிறார்கள்.
iii. பள்ளியில்: ஒழுங்காக படித்து நல்ல முறையில் தேர்வெழுதினால் தேர்ச்சி அடைவதோடு வாழ்க்கையிலும் முன்னேறலாம். சரியாக படிக்காமல் தேர்வில் சரியாக எழுதாமல் இருந்தால் தேர்வடைவதிலும் வாழ்வில் முன்னேறுவதிலும் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்கிறார்கள்.
iv. கொள்ளையன் ஒருவன்: என்னோடு சேர்ந்து அந்த வங்கியை கொள்ளையடித்தால் வெகு விரைவில் நிறைய பணம் கிட்டும், மகிழலாம். யாராவது வர மறுத்தால் அவர்களை நான் உதைப்பேன், வலிதான் கிடைக்கும் என்கிறான்.

மேற்கூறப்பட்ட நான்குமே "You are either with us or with them" என்ற ஜார்ஜ் புஷ் வாதத்தைப் போன்றதுதானா தருமி ஐயா.

ஒன்று போல தோற்றமளித்தாலும், அந்தந்ந விடயங்களுக்கு தகுந்தாற் போல் பொருள் மாறுபடும். திருடன் சொல் ஆணவமாகவும் தவறானதாகவும் மற்றவை நேர்மையானதாகவும் இருக்கிறது. எனவே சிந்தனையைப் பயன்படுத்தி நாம்தான் முடிவெடுக்க வேண்டும்.

7ஆ). //However, my Q is based on the VIOLENCE in the words. whether it is aimed at fidels or infidels it is a very violent statement - a divine violence towards human beings.
a god need and should not bother whether a man reaches him through path A or B ... man should reach him, that is all what it should be.//

இதற்கும் சில உதாரணம் மூலமே விளக்க நினைக்கிறேன் ஐயா.

ஆயிரக்கணக்கானோர் பணிபுரியம் ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவர் இருக்கிறார். அவருடைய நிறுவனத்தின் சில ஊழியர்கள் அவரை விட்டு விட்டு வேறொருவரை உரிமையாளர் என்கின்றனர். அல்லது, ஒரு கடைநிலை ஊழியர், உரிமையாளர் அமர வேண்டிய இடத்தில் அமர்ந்து கொண்டு, உரிமையாளர் போன்ற ஆணையிடுகிறார் எனக் கொள்வோம்.
உண்மையான உரிமையாளரால் அதை ஏற்றுக்கொள்ள முடியுமா?

இன்னும் சரியாக விளங்குவதற்காக ஒரு கடுமையான உதாரணம் தருகிறேன். (முகம் சுளிக்க வேண்டாம். கடுமை என நினைப்பவர்களும், பெண்களும் மன்னிக்கவும்.)
தம் மனைவி, மகிழ்வோடு இருப்பதைத்தான் நல்ல கணவன் விரும்புகிறான். அதற்காக ஒருவனது மனைவி வேறொரு ஆணிடம் படுக்கை சுகம் காண்கிறாள். கணவனுக்கும் அவ்விடயத்தில் குறை வைப்பதில்லை எனக் கொள்வோம். எந்த நல்ல ஆண்மகனும்/கணவனும் இதை ஏற்றுக் கொள்வானா? மனிதனுக்கே இவ்வளவு ரோஷம் இருக்கிறதே!

இறைவன் அன்பானவன்தான் ஆனால் ரோஷமில்லாதவனில்லை. மனிதனை விடவும் பலகோடி மடங்கு ரோஷமானவன். "அல்லாஹ் எதை வேண்டுமானாலும் தான் நாடினால் மன்னிப்பான் ஆனால் படைத்தவனாகிய தன்னை விடுத்து, வேறெதையும் இறைவனாக எடுத்துக் கொள்வதை மட்டும் மன்னிப்பதேயில்லை" என்று இஸ்லாம் கூறுகிறது.

என் அறிவுக்கு எட்டிய வகையில் பதிலளித்திருக்கிறேன். இறைவனே மிக அறிந்தவன்.
Click here to bookmark this link.Channel Image04:18 தருமி ஐயாவின் வினாக்களுக்கு என் விளக்கங்கள் (பகுதி-2) அழைப்பு
[ பகுத்தறிவு தீர்ப்பளிக்கட்டும் என்ற தலைப்பில் நான் எழுதிய பதிவில் தருமி ஐயா சில கேள்விகள் கேட்டிருந்தார். விரிவாக விளக்கமளிக்க வேண்டிய கேள்விகளாக இருப்பதால், பதிவின் நீளம் கருதி, தனிப்பதிவுகளாக இட்டு வருகிறேன். விளக்கங்களின் பகுதி ஒன்று அங்கிருக்கிறது. இது இரண்டாம் பகுதி]

3. //"மனிதனுக்கு மேலாக சர்வ வல்லமை பொருந்திய ஒரு சக்தி உண்டென்று பகுத்தறிவு சொல்கிறது"
இந்தக் கூற்று எனக்குத் தவறாகத்தெரிகிறதே. பொதுவாக பகுத்தறிவு சொல்கின்றது என்று எதை ஒன்றையும் குறிப்பிடுவது தவறாக ஆகிவிடும் என்று நினைக்கிறேன். ஆளாளுக்கு மாறுபடக்கூடிய விஷயமாக பார்க்கிறேன்.//

பொதுவாக 'பகுத்தறிவு சொல்கிறது' என்று சொல்வது தவறாக ஆகி விடும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். இந்த விடயத்தில் என் பகுத்தறிவு எதைச் சொன்னதோ அதையே வேறொரு அறிஞரும் சொன்னார். அதனால் அதை என் பகுத்தறிவு ஏற்றுக் கொள்ளத் தயங்கவில்லை. அது என்னவென்று நான் சொல்கிறேன். மற்றவர்களின் பகுத்தறிவு இதற்கு மாற்றமாக இருக்கிறதா என்று அவரவர்கள் முடிவு செய்யட்டும்.

நாம் உருவாக்கப்பட்டுள்ள விதம், இயங்குவதற்கேற்ற மனித உடலமைப்பு, மனிதர்களின் மாறுபட்ட மன நிலை, புவி மற்றும் வான வெளி, விடாது மாறி மாறி வரும் இரவும் பகலும்,
சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கோள்கள் போன்றவற்றின் ஒழுங்கமைப்பு மற்றும்
கட்டுக்கோப்பான அதன் இயக்கங்களும் தானாகவே வந்ததா?
மனித மூளையின் கட்டுப்பாட்டில் இல்லாத அவற்றின் நிர்மாணத்தையும், அவற்றின் ஒழுங்குகளையும், இயக்கங்களையும், கற்பனையில் கொண்டு வந்து கணிக்கக்கூட இயலவில்லை. மனிதனால் கணிக்கவியலாத இவையனைத்தும் தானாகவே வந்திருக்க முடியுமா? தற்செயலாக நிகழ்ந்தவையா?

பத்து நிறங்களில் பல கோலி குண்டுகளை எடுத்து, ஒவ்வொரு நிறத்துக்கும் ஒரு எண்ணாக 1 முதல் 10 வரை இலக்கமிட்டு, ஒரு பையினுள் போட்டு, கண்ணை மூடிக்கொண்டு, ஒழுங்கான வரிசையில் ஒன்றன் பின் ஒன்றாக 1 முதல் 10 வரை எடுப்பதற்கு உண்டான வாய்ப்பு, நிகழ்தகவு (Probability) படி, சுமார் இரண்டரை கோடி தடவைகளில் ஒன்று என்று சொல்கிறார்கள். எனில், சூரியனிலிருந்து தானாக தூக்கி எறியப்பட்ட ஒரு பொருள் (Big Bang theory) இத்தனை வகையான ஒழுங்குகளோடு அமைக்கப்பட, நிகழ்தகவின்படி வாய்ப்புகள் எத்தனை? Big Bang என அது தானாக வந்ததா? அல்லது ஒரு வல்லமை பொருந்திய சக்தி தூக்கியெறிந்து பின்னர் அதை ஒழுங்குற வடிவமைத்ததா?

சிறந்த வடிவமைப்புள்ள ஒரு உயர்ந்த கட்டிடம், ஒரு பெரிய விமானம், ஒரு ராக்கெட், ஒரு சேட்டிலைட், பெரிய கப்பல், ஒரு வாகனம் அல்லது பாலமொன்றை நீங்கள் பார்ப்பதாகக் கொள்வோம். உடனடியாக அதை வடிவமைத்துக் கட்டிய கம்பெனி அல்லது பொறியாளரைப் பற்றி மனது சிந்திக்கும்.

இந்திய அணுகுண்டு தொழில் நுட்பம் பற்றி சிந்தித்தால் குடியரசுத்தலைவர் அபுல்கலாம் நினைவுக்கு வரும் அல்லது ஸ்ரீஹரிகோட்டா சென்று ராக்கெட் வடிவமைக்கும் இடத்தை பார்வையிட்டால் உடனடியாக அவற்றை வடிவமைத்த அறிவியல் அறிஞர்களையம் பொறியியலாளர்களையம் நாம் சிந்திப்போம்.

இப்போது,
மனித மூளையைப் பற்றி சிந்தியுங்கள். எப்படி அது சிந்திக்கிறது? இயங்குகிறது? தகவல்களை திரட்டுகிறது? சேகரிக்கிறது? தேவைப்படும்போது சரியானதை பிரித்து எடுத்துத் தருகிறது? ஒன்றோடொன்றை தொடர்பு படுத்துகிறது? இவையனைத்தையும் ஒரு வினாடியின் ஆயிரத்திலொரு பங்கு நேரத்தில் எப்படிச் செய்கிறது? அதையும் எப்படி தொடர்ந்து செய்து கொண்டேயிருக்கிறது? இந்த மூளைதான் வான் முட்டும் கட்டிடங்களையும், விமானத்தையும், ராக்கெட்டையும், சேட்டிலைட்டையும், கப்பலையும், பாலத்தையும் இன்ன பிற காண்பவற்றையும் வடிவமைத்தது - தொழில் நுட்பத்தை உருவாக்கியது! மனித மூளையைப் பற்றி மேலும் சிந்தியுங்கள். அதை யார் இத்தகைய ஒழுங்குடன் உருவாக்கியது?

இதயத்தை பற்றி சிந்தியுங்கள். சுமார் அறுபது அல்லது எழுபது ஆண்டுகள் இடைவிடாமல் தொடர்ந்து எவ்வாறு மனித உடலுக்குள் குருதியைப் பெற்று, அதை உடலின் எல்லா பாகங்களுக்கும் தொடர்ந்து எவ்வாறு இறைத்துக் கொண்டேயிருக்கிறது?. அது அம்மனித வாழ்நாள் முழுதும் தொடர்ந்து எவ்வாறு இயஙகிக் கொண்டேயிருக்கிறது?

சிறுநீரகத்தின் பணிகளை சிந்தித்துப் பாருங்கள். அது மனித உடலின் சுத்தப்படுத்தும் இயந்திரம். அது ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து, நூற்றுக்கணக்கான வேதி வினைகளைப் புரிந்து, இரத்தத்தை பகுத்தாய்ந்து, மனித உடலின் நச்சுப் பொருட்களின் அளவை கூடாமல் கண்காணிதது வருகிறது. இவையனைத்தையும் அது தொடர்ந்து தானாகவே நடத்திக் கொண்டே இருக்கிறது.

உங்கள் கண்களைப் பற்றி சிந்தியுங்கள். அது மனித கேமரா. தீர்மானித்தல், focus செய்தல், என்னவென்று மதிப்பீடு செய்தல், மூளையை அறியச்செய்தல், தேவையான அளவு நிறங்களை வழங்குதல், வெளிச்சத்தின் அளவுக்கேற்றவாறு தன் உள் வெளிச்சத்தை கூட்டுதல் அல்லது குறைத்தல், தூரத்துக்கேற்றவாறு சரி செய்து கொள்ளுதல் ஆகிய இவையனைத்தையும் தானாகவே செய்து கொள்கிறது.

இவற்றையெல்லாம் யார் உருவாக்கியது என சிந்தியுங்கள். அவற்றின் எஜமானன் யார்? இவ்வாறு இருக்க வேண்டுமென முடிவு செய்தது யார்? யார் அவற்றின் பணிகளை ஒழுங்குற நிர்வகிக்கிறார்கள்? மனிதர்கள் தமக்குத் தாமே செய்து கொண்டார்களா? நிச்சயமாக இல்லை.

இனி இந்த அண்டம், பேரண்டம் இவைகளைப் பற்றி சிந்தியுங்கள். இப்புவியானது நமது சூரியக்குடும்பத்திலுள்ள(solar system) ஒரு கோள்(planet). பால் வீதியிலுள்ள(milky way) பல குடும்பங்களில் நமது சூரியக்குடும்பமும் ஒன்று. நமது பால்வீதி என்பது பால்வீதி மண்டலத்தி(galaxy)ல் உள்ள ஒரு நட்சத்திரக் கூட்டம்(constellation). இது போன்று பல இலட்சக்கணக்கான பால் வீதி மண்டலங்கள் அறியப்படாமலேயே இருக்கின்றன. (நமது சூரியக்குடும்ப ஆராய்ச்சியே இன்னும் முடிவுறாத தூரத்தில்....!) இவையனைத்தும் ஒரு குறிப்பிட்ட ஒழுங்கமைப்பில், இம்மியும் பிறழாமல், தங்களுக்கென வரையறுக்கப்பட்ட பாதையில் தொடர்ந்து நீந்திக் கொண்டேயிருக்கின்றன. அவை தங்கள் பாதையில் முரண்படுவதுமில்லை. மோதிக்கொள்வதுமில்லை. இவற்றை மனிதர்களா அவற்றின் பாதையில் மிதக்க விட்டார்கள்? இம்மியும் பிறழாமல் செல்ல வடிவமைத்தார்கள்?. நிச்சயமாக இல்லை.

இனி கடல்கள், மீன்கள், பூச்சிகள், பறவைகள், தாவரங்கள், பாக்டீரியா, இன்னும் அறியப்படாத, நாம் கண்டுபிடித்து வைத்துள்ள மிக உயர்ந்த கருவிகளாலும் காண முடியாத பல கோடி வேதிப்பொருட்கள் என்பனவற்றை சிந்தித்துப் பாருங்கள். எனினும் இவையனைத்தும் தங்களுக்கென விதிக்கப்பட்டுள்ள விதிப்படி இயங்கிக் கொண்டுதானிருக்கிறது என அறிவியல் சொல்கிறது.

ஒரே நேரத்தில் நிகழ்கிற, ஒன்றுக்கொன்று தொடர்புடைய, ஒன்றோடொன்று பொருந்துகிற, சமன்செய்யப்பட்ட, இத்தகைய திட்டங்கள், அவற்றைப் பராமரித்தல், அவைகளில் ஏற்படும் மாற்றங்கள், செயல் ஒழுங்குகள் இன்னும் முடிவுறாத எண்ணிறந்தவைகள் ஆகிய இவையனைத்தும் தானாகவே, தற்செயலாக உண்டாயிருக்குமா?

அவை நிரந்தரமாக, தவறின்றி, ஒழுங்கு குலையாமல் நடைபெறுவதும் தானாக, தற்செயலாக நடப்பதுதானா?

அவை தொடர்ந்து மறு உற்பத்தி செய்து கொள்வதும், பராமரித்துக் கொள்வதும், தானாகவே, தற்செயலாகவே நடைபெறுவதுதானா?

நிச்சயமாக இருக்க முடியாது.

தானாகவே தற்செயலாகவே வந்தது என்று நினைப்பது பொருத்தமற்றதாகவும் முட்டாள்தனமாகவும் என் பகுத்தறிவுக்குத் தோன்றுகிறது.

அது எவ்வாறு வந்ததென்று இருந்தாலும், குறைந்த பட்சம் மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டது என்றும், இவையனைத்தையும் திட்டமிடவும், படைக்கவும், சீராக்கவும், பாதுகாக்கவும் அறிவு படைத்த, சர்வ வல்லமை பொருந்திய ஒரு சக்தியாலேயே இவையனைத்தும் ஏற்படுத்தப்பட்டதாகவும் என் பகுத்தறிவு சொல்கிறது.

அவரவர்கள் தத்தமது பகுத்தறிவை தட்டி முடிவு கேட்டுக் கொள்ளுங்கள்.

இதைத்தான்,
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது இன்னும் அல்லாஹ். ஓவ்வொன்றின் மீதும் மிகுந்த சக்தியுடையவன். நிச்சயமாக வானங்கள் மற்றும் பூமியை படைத்திருப்பதிலும், இரவும் பகலும் மாறி மாறி வருவதிலும் சிந்தித்து உணருவோருக்குப் பல சான்றுகள் இருக்கின்றன. சிந்தித்துணரும் அத்தகையோர் நின்று கொண்டும், படுத்துக் கொண்டும,; ஒருக்களித்துப் படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைத்து, வானங்கள் மற்றும் பூமியின் படைப்பை ஆழ்ந்து சிந்தித்து, 'எங்கள் இரட்சகனே! நீ இவற்றை வீணுக்காக படைத்து விடவில்லை. உனக்கு இணையாக்கப்படுபவை அனைத்தையும் விட நீ மிகவும் தூயவன், நரக நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை காத்தருள்வாயாக!' என்று பிரார்த்திப்பார்கள். (அத்தியாயம் 3ல் 189 முதல் 191 வரை உள்ள வசனங்களின் கருத்துகள்)
என்று குர்ஆன் கூறுகிறது. இன்னும் பல நூற்றுக்கணக்கான வசனங்களில் மனிதனை சிந்திக்க அழைக்கிறது.

(பதிவு நீண்டதாக இருப்பதால், படிக்க சோர்வேற்படாதிருக்க பகுதி பகுதியாக எழுதுகிறேன். மீதமுள்ள கேள்விகளுக்கு அடுத்த பதிவில் எழுதி, முடிக்கிறேன்)
Click here to bookmark this link.Channel Image04:18 தருமி ஐயாவின் வினாக்களுக்கு என் விளக்கங்கள் (பகுதி-1) அழைப்பு
நான் புதிய வீடு பார்த்து, மாறுவதற்கான முயற்சிகளில், தங்களுக்கு உடனுக்குடன் விளக்கமளிக்க இயலாதிருந்தது. தாமதத்துக்கு வருந்துகிறேன்.
இறைவன் நாடினால், இன்னும் ஓரிரு வாரங்களில் புது இடத்தில் முழுதும் செட்டிலாகி (settle) விடுவேன். அதன் பின், நிலைமை சீராகி விடும் என நம்புகிறேன்.

இனி ஒவ்வொன்றாக உங்கள் கேள்விக்கு வருவோம்.

1. //வன்முறைக்கும் துவேசத்துக்கும் இங்கே இடமேயில்லை. இது உங்கள் கருத்து.
எனது கேள்வி:
ஹ்ல்ரத் அலீ (ரலி): "உலகினில் ஏற்படுகின்ற குழப்பங்களுக்குத் தீர்வு காண அல்லாஹ்வின் வேதந்தான் சிறந்த வழி. ...(தன் அறிவைக்கொண்டு) பெருமையடிக்கிறவன் இதனை (அமல் படுத்தாமல்) விட்டு விட்டால், அல்லாஹ் அவனைத் துண்டு துண்டாக ஆக்கிவிடுவான்.
உங்களது வார்த்தைகளுக்கும், இந்த மேற்கோளுக்கும் உள்ள வித்தியாசம் ஏன்?//

நீங்கள், அலி (ரளி) அவர்களுடைய கூற்றை எடுத்துக்காட்டி, எனது வார்த்தைக்கும், இந்த மேற்கோளுக்கும் வித்தியாசம் என்று கூறியுள்ளீர்கள்.

இதற்கு பதில் சொல்லும் முன், இஸ்லாத்தைப் பற்றிய சிறு அறிமுகம் அவசியமாகும். அப்போதுதான் பதிலின் யதார்த்தம் இயல்பாய் விளங்கும்.

இஸ்லாத்தில் இணைய விரும்புபவர் நன்றாக அறிந்து, யோசித்து முடிவெடுக்க வேண்டும். இந்த உலக வாழ்க்கையே பெரிதென்றும், போதுமென்றும் நம்புபவர்களுக்கு இஸ்லாம் சிறந்த முடிவாக இருக்காது. ஏனெனில், இஸ்லாம் இறப்பிற்கு பின்னுள்ள மறுமை வாழ்க்கையை அடிப்படையாக நோக்குவது. இவ்வுலக வாழ்க்கைதான் நம் மறுமை வாழ்வுக்கு நாமிடுகிற அடித்தளம் என்று இஸ்லாம் கூறுகிறது.

'இவ்வலகத்தின் சுக போக வாழ்வே எல்லாம்' என்று நினைப்பவர்களின் பார்வையில், உண்மையான இறை நம்பிக்கையாளனுடைய இவ்வுலக வாழ்க்கை, சிறை வாழ்க்கையாகவே காட்சி தரும். ஏனெனில் கட்டுப்பாடுகளில்லாத சுகபோக வாழ்க்கையையே மனிதன் ஆசிக்கிறான். இஸ்லாம், வெறும் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் உள்ளடக்கிய மதமன்று. அது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் கடைபிடித்தொழுக வேண்டிய நெறிமுறைகளை சொல்லித் தந்து, அதன்படி வாழ வழிகாட்டும் ஒரு உயரிய வாழ்வியல்.

அதனால்தான் இஸ்லாத்தில் முழுதுமாக நுழைந்து விட வேண்டுமென்று இஸ்லாம் பணிக்கிறது. 'ஆற்றில் ஒரு காலும், சேற்றில் ஒரு காலும்' வைத்துக் கொண்டு வாழ்பவர்களால் இஸ்லாம் எதிர்பார்க்கும் உயர்வைப் பெற முடியாது.

நீங்கள் எடுத்துக்காட்டிய மேற்கோள், இஸ்லாத்தை தன் வாழ்வியலாகத் தேர்ந்தெடுத்தவர்களைப் பார்த்துச் சொன்ன நபிகளாரின் வாசகமாகும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு அடிப்படையில் முடிவெடுத்தால் இஸ்லாத்தில் பல பிரிவினைகள் எற்பட்டு மார்க்கம் துண்டு துண்டாகி விடும். உதாரணத்துக்கு: (எந்தவொரு பிரிவினரையும் புண்படுத்துவதோ குற்றம் சொல்வதோ என் நோக்கமன்று)

அ.) கிறிஸ்துவத்தில் ஏகப்பட்ட பிரிவுகள் இருப்பதற்கு முக்கியமான ஒரு காரணம்: அவர்களின் மூல நூலாகக் கொள்ள வேண்டிய பைபிளே பல மாதிரியாக இருப்பதும், அவரவர் கையிலுள்ளதைக் கொண்டு, ஒவ்வொரு குழுவும் தனித்தனி சட்டங்களை உருவாக்கி கொண்டதும்தான்.

ஆ.) இஸ்லாத்தை விளக்கிச் சொல்ல வந்த சில முந்தைய அறிஞர்கள் (போற்றுதலுக்குரிய இமாம்கள்), குர்ஆனையும், அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களுக்கு கிடைத்த, நபியவர்களின் (வாழ்வும், வாக்கும், ஒப்புதலும்) ஹதீஸ்களையும் அடிப்படையாக கொண்டு சட்டங்களை அமைத்துச் சென்றனர். 'எமக்குக் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் சட்டமியற்றினோம். ஆதாரங்களை நோக்காமல் வெறுமனே எம் சட்டங்களை நோக்கலாகாது. இதைவிட சிறந்த ஆதாரங்கள் கிடைக்குமிடத்து எம் சட்டங்களை தூக்கியெறிந்து விட வேண்டும்' என்றும் சொல்லிச் சென்றனர்.
ஆனால் அவர்களது சட்டங்களை எடுத்துக் கொண்ட முஸ்லீம்களில் சிலர், (குர்ஆனும் எல்லா ஹதீஸ்களும் தரம் பிரிக்கப்பட்டு புத்தக வடிவில் கிடைக்கும் இந்நாளிலும்) அவர்கள் கூறிய அடிப்படையை விட்டதால், இஸ்லாத்தின் ஒரு சில உள் சட்டங்களினுள் சில வித்தியாசங்களை ஏற்படுத்தி விட்டனர். இந்த மாயை, தற்போது விளக்கப்பட்டு, விலகிக் கொண்டிருக்கிறது.

எனவே அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய வந்த நபிகளார், முஸ்லீம்கள் தங்களிடையே ஏற்படும் எல்லா பிணக்குகளுக்கும் பூசல்களுக்கும் தீர்வை, அடிப்படையான குர்ஆனைக் கொண்டே பெறச் சொல்கின்றனர். அவ்வாறு தீர்ப்பளிக்காவிட்டால் மக்கள் சிதறுண்டு விடுவார்கள். அதனால் அவ்வாறு தீர்ப்பளிக்காதவர்கள் இறப்பிற்கு பின்னுள்ள மறுமை வாழ்வில் இறைவனால் தண்டிக்கப்படுவார்கள் (நொறுக்கப்படுவார்கள்) என்று எச்சரிக்கிறார்கள்.

இஸ்லாமிய பார்வையில் குழப்பம் விளைவித்தல் கொலையைப் போன்ற கொடுமையானது. இஸ்லாம் தவறு செய்தவர்களுக்கு தவறுகளுக்கேற்ப மறுமையின் தண்டணையை கடுமையாக்கியுள்ளது.

இதிலே இவ்வுலகின் வன்முறையையும் துவேசத்தையும் குறிப்பிடவில்லை. மாறாக, இறப்பிற்கு பின்னுள்ள மறுமை வாழ்வின் தண்டணையைப் பற்றி குறிப்பிடுகிறது.

(நீங்கள் மேற்கோள் காட்டீய ஹதீஸ் திர்மிதீ என்ற நூலில், நபியவர்கள் அவ்வாறு சொன்னதாக அலி (ரளி) அவர்கள் கூறியதை ஹாரிஸ் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள். தாங்கள் நூல் குறிப்பிடாததால், இதைத் தேடுவதில் புகாரீ, முஸ்லீம் ஹதீஸ் கிரந்தங்களில் ஓரிரு நாட்கள் வலம் வந்தேன்.)

2. //"அது அல்லாத (வேறு கிரந்தத்)தில் நேர்வழியைத் தேடுபவரை வழிதவறச் செய்து விடுவான்." இஸ்லாத்தில் எவ்வித நிர்பந்தமுமில்லை என்பதும் இதன் அடிப்படைகளில் ஒன்று.//

'இஸ்லாத்தில் எவ்வித நிர்ப்பந்தமுமில்லை' என்பதை தாங்கள் தவறாகப் புரிந்து கொண்டு விட்டீர்களோ என ஐயுறுகிறேன் ஐயா!

உண்மை (எனும் நேர்வழி) எது! பொய் (எனும் தவறான வழி) எது! என பிரித்தறிவிக்கப்பட்டு, தெளிவுபடுத்தப் பட்டுள்ளது. அதை முயற்சி செய்து அறிந்து, தெளிந்து, அதன் மூலம், நேர்வழி அல்லது தவறான வழி இரண்டில் எதை வேண்டுமானாலும் ஒருவர் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அவரவர் தேர்ந்தெடுத்து வாழ்ந்த வாழ்க்கைக்குரிய நன்மை, தீமைகளை அவர்கள், மறுமை எனும் நிரந்தர வாழ்வில் அனுபவிப்பார்கள் என்பதே இஸ்லாம் கூறுவதாகும்.

எனவே 'இஸ்லாத்தில் நுழைந்தாக வேண்டுமென யார் மீதும் எவ்வித நிர்ப்பந்தமுமில்லை' என்பதே அதன் விளக்கமாகும்.

ஏனெனில், ஒருவர் இஸ்லாத்தில் நுழைந்த பின், தான் தோன்றித்தனமான வாழ்க்கை வாழ்ந்தால் அவர் சிறந்த முஸ்லீமாக முடியாது. வாழ்வின் எல்லா நிலைகளிலும் இஸ்லாமிய வாழ்வியலுக்கு இயைந்த வாழ்க்கை வாழ்ந்தாலே, இவ்வுலகில் அவர் மனிதத்தை நிலை நிறுத்தி புனிதராக வாழ முடியும். (இந்த உண்மையை வாழ்வின் ஒவ்வொரு கோணத்திலும் எங்களால் உணர முடிகிறது. அந்த நல்வழிகளில் வாழ முயற்சிப்பதையே ஒவ்வொரு முஸ்லீமும் தன் வாழ்வின் இலட்சியமாகக் கொள்கிறான்). மறுமையிலும் சிறந்த பயன்களைப் பெற முடியும் என இஸ்லாம் சொல்கிறது.

இஸ்லாத்தினுள் நுழைந்த பின்னர், பல கிரந்தங்களில் நேர்வழியைத் தேடும் ஒருவனால் வழி தவறத்தான் முடியுமே ஒழிய, இஸ்லாம் கூறும் உன்னத வழியை அடைய முடியாது.

இஸ்லாத்தை தேர்ந்தெடுக்கு முன், இஸ்லாம் உள்பட எல்லா வழிகளையும் சோதிக்கலாம். இஸ்லாம்தான் சரியான வழி என்று தேர்வு செய்து, நுழைந்த பின் அதில் உறுதியுடன் வாழ வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்.

(விடயம் நீண்டதாக இருப்பதால், படிக்க சோர்வேற்படாதிருக்க பகுதி பகுதியாக எழுதுகிறேன்.)
Click here to bookmark this link.Channel Image04:18 ஜிஹாதி அழைப்பு
இந்தியர்கள் பல்வேறு வகைகளில் தனித்துவம் வாயந்தவர்கள். நம் நாட்டில் முக்கியமான நான்கு நம்பிக்கையாளர் மத்தியிலும் சிலர் தீவிரவாதிகளாக உள்ளனர். கஷ்மீரில் முஸ்லீம்கள், நாகலாந்தில் கிறித்துவர்கள், பஞ்சாபில் சீக்கியர்கள், அஸ்ஸாமில் உல்பா இந்துக்கள். மாவோயிஸ்டுகளுக்கும் நக்ஸல்களுக்கும் தீவிரவாதமே துணை. இதல்லாது முக்கியமாக காவி ஹிந்துத்வ தீவிரவாதிகள்.

நேர்மையான போரை ஜிஹாத் என்றும், அநீதியாக வன்முறை மூலம் ஒன்றுமறியாத அப்பாவிகளின் மேல் இழைக்கப்படும் கொடுமையை பஸாத்(Fasaad) என்றும் குர்ஆன் தெளிவாக வரையறுத்துள்ளது. நாட்டிலே குழப்பம் விளைவிப்பவன் பஸாதி. எவனொருவன் ஒரு மனிதரை நியாயமின்றி (பஸாத் மூலம்) கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான் மேலும், எவரொருவர் ஓர் உயிரை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்' எனச் சொல்கிறது குர்ஆன்(வசனம்32 சூரா5).

இஸ்லாமிய பார்வையில் குழப்பம் விளைவித்தல் கொலையைப் போன்றது. அதற்கு அதன் கடுமைக்கேற்ப கொல்லப்படுதல், அல்லது தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல் போன்ற நான்கு விதமான விதமான தண்டணைகளை குர்ஆன் பரிந்துரைக்கிறது.

குழப்பம் விளைவிக்கும் ஒரு பஸாதி தன்னை ஜிஹாதி எனச் சொல்லிக் கொள்வதன் மூலம் முஸ்லீம்கள் மத்தியில் தன்னை நியாயப்படுத்திக் கொள்ளப் பார்க்கிறான். இவர்கள் மக்களுக்கு மத்தியில், குறிப்பாக முஸ்லீம்களுக்கும் ஹிந்துக்களுக்கும் மத்தியில் வெறுப்பை விதைப்பதற்காக குர்ஆன் வசனங்களுக்கு தவறான பொருள் தருகின்றனர். ஹிந்துத்வாக்களும் அதையேதான் செய்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் இரு பிரிவாருக்கிடையில் எந்த வேற்றுமையும் இல்லை.

இறை நம்பிக்கை சார்ந்த விடயங்களில் இரு பிரிவாருக்குள் வேறுபாடுகள் தோன்றி விட்டல் அதில் தீர்ப்பு சொல்லும் அதிகாரம் மனிதனுக்கில்லை அது இறைவனுக்குரியது. "லா இக்ரா பித்தீன் - மார்க்கத்தில் எந்த நிர்ப்பந்தமுமில்லை" என்பதும் "லகும் தீனுக்கும் வலிய்யத்தீன் உங்கள் மார்க்கம் உங்களுக்கு என் மார்க்கம் எனக்கு" என்பதும்தான் இஸ்லாத்தின் வழி. கத்தோலிக்க புலனாய்வுக்குப்பின் வெளியேற்றப்பட்ட ஸ்பெயின் நாட்டு யூதர்களுக்கு உதுமானிய சுல்தான்கள் தங்க இடம் கொடுத்தது தற்செயலாக நடந்ததல்ல. மேற்சொன்ன குர்ஆனின் நெறி.

முஸ்லீம் பெயர் தாங்கிகள் நடத்தும் சண்டைகள் எல்லாம் ஜிஹாத் ஆகி விடாது. எவ்வித உலக இலாபங்களையும் நாடாமல் இறைவனிடம் நன்மையை பெறுவதை மட்டுமே குறியாகக் கொண்டு செய்யப்படும் எல்லா நல்லறங்களும் ஜிஹாத் தான். உண்மை அறிஞனுடைய நீதிக்கான பேச்சும், எழுத்தும், பொருள் உள்ளவர்கள் வறியவர்களுக்காகவும் நன்மையான வழிகளில் தர்மமாக செலவு செய்வதும் தன்னைத்தான் தூய்மையாக்கிக் கொள்ளுதல் எனும் பெரும் ஜிஹாத் ஆகும். சிறிய ஜிஹாதுகளில் உள்ளவைதான் போர்கள்.

தம் உளத்தூய்மைக்காக செய்யப்படும் ஜிஹாதைப் போல யார் வேண்டுமானாலும் ஜிஹாத் எனும் போர் அழைப்பை செய்ய முடியாது. இஸ்லாம் கடுமையான நிபந்தனைகளுடன் போரை அனுமதித்துள்ளது. அங்கே நம்பிக்கைத் துரோகம், தவறான வழிகளில் கொள்ளையடித்தல், உடல்களை சிதைத்தல், முதியோர், பெண்கள், குழந்தைகள், அப்பாவிகள் ஆகியோரைக் கொல்லுதல், மரங்களை வெட்டுதல், உணவுக்காக அன்றி ஆடு மாடுகளைக் கொல்லுதல் போன்ற யாவும் கடுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. ஜிஹாதும் பயங்கரவாதமும் ஒன்றாகி விடாது.

ஒரு நாடு தாருல் இஸ்லாம் ஆக இல்லாமல் தாருல் ஹர்ப் ஆக இருந்தால் அங்கே போர் செய்ய இஸ்லாத்தில் அனுமதியுள்ளது. முஸ்லீம்கள் தங்கள் மார்க்கத்தை பின்பற்ற முடியாதவாறு பிற மத ஆட்சியாளர்களால் துன்புறுத்தப் பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு நாடு இருந்தால் அந்த நாடுதான் தாருல்ஹர்ப். மொஹலாயர் வீழ்ச்சிக்குப்பின் மராட்டியர்களும் இராஜபுதனத்தாரும் ஆட்சி செய்த காலம் கூட தாருல்ஹர்ப் எனச் சொல்லப்படவில்லை. முஸ்லீம்களும் அவர்களும் ஒருவருக்கொருவர் உதவியாளர்களாகத்தான் இருந்தனர்.

நமது இந்தியா சோசலிச நாடு ஹிந்து நாடில்லை. நமக்கு முஸ்லீம் தனியார் சட்டத்தை நடைமுறைபடுத்திக் கொள்ளும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. முஸ்லீம்கள் தங்கள் இஸ்லாமிய நம்பிக்கை படி வாழ நமது அரசியல் நிர்ணயச்சட்டம் உரிமை வழங்கியுள்ளது. மறுக்கப்படும் நமது உரிமைகளுக்காக நாம் நடத்தும் சிறு சிறு போராட்டங்களால் எல்லாம் நாடு தாருல் ஹர்ப் நிலையை அடைந்து விட்டதாக யாரும் நினைத்து விடக்கூடாது.

நீதியும் நியாயமும் மக்களை சமமாகப் பாவித்தலுமே குர்ஆன்படியான வாழ்வு முறையாகும்.
ஜிஹாத் எனச் சொல்லிக் கொண்டு பயங்கரவாதம் செய்வோர் எல்லாம் ஜிஹாதிகளில்லை பஸாதிகள்(வெறும் குழப்பக்காரர்கள்)தான்.
Click here to bookmark this link.Channel Image04:18 சவூதிதான் இஸ்லாமா? அழைப்பு
(உணர்வுகள் வலைப்பூவில் “போதைப் பொருள் கடத்திய சவூதி இளவரசரை இஸ்லாமிய ‘ஸாரியா’ ஏன் தண்டிக்கவில்லை?” (http://unarvukal-unarvukal.blogspot.com/2007/02/blog-post_6745.html) என்ற தலைப்பில் இஸ்லாத்துக்கு எதிராகவும் எழுதப்பட்டுள்ளது. அதற்கு மறுப்பாக மறுமொழி இட எழுதியது நீண்டு விட்டதால் தனிப்பதிவாக.
எழுதியவர் இலங்கையைச் சார்நதவராகத் தெரிகிறது. அவ்வாறெனில் இந்தியாவைப் பற்றிச் சொல்லியுள்ள இடங்களில், இலங்கையைத் தொடர்பு படுத்திக் கொள்ளுங்கள்.)

//மூன்றாவதுலக நாடுகளின் முஸ்லீம்கள் சவூதி அரசகுடும்பத்தைப் பற்றிப் பீற்றிக் கொள்வதையும் அரேபியாவின் மீது அவர்களுக்குள்ள அளவுகடந்த விசுவாசத்தையும், ஏன் முழு அரேபியாவையுமே ஏதோ கடவுளின் சொர்க்கபூமி போல் நினைப்பதையும் எங்களில் பலர் அனுபவத்தில் அறிந்துள்ளோம்//

சவூதி அரச குடும்பத்தைப் பற்றி பீற்றிக் கொள்ள என்ன இருக்கிறது. அவர்களும் மனிதர்கள்தான். மனிதர்களுக்குரிய எல்லா பலவீனங்களும் அவர்களுக்கும் இருக்கும். 'ஜகத்குரு'க்களாக மனிதர்களால் நம்பப்படுபவர்களே பெருந்தவறு செய்ததாக சந்தி சிரிக்கிறதே.
இஸ்லாம் என்ற வாழ்க்கைப் பாதையில்
'எல்லா மனிதர்களும் தவறு செய்பவர்களே. அவர்களில் சிறந்தவர்கள் தன் தவறுக்காக வருந்தி இறைவனிடம் பாவ மன்னிப்புக் கோரி திருந்துபவர்களே.'

உடல் நலமும் பொருள் வளமும் உள்ளவர்கள் தம் வாழ்க்கையில் ஒரு முறையாவது மக்காவில் உள்ள அந்த புனிதத்தலத்தை தரிசிப்பது ஒவ்வொரு முஸ்லீமின் மீதும் கடமையாக இருப்பதால், எல்லா முஸ்லீம்களும் அந்த புனிதத்தலத்தை நினைவிலிருத்துகின்றனர்.

கல்லையும் மண்ணையும் கடவுளாக வணங்கி வந்த எங்களுக்கு, இஸ்லாம் என்ற மார்க்கத்தை எடுத்துச் சொன்னவர், அராபியாவிலிருந்து வந்ததால், அந்த பூமியின் மீது சிலருக்கு அன்பு இருக்கலாம். அஃதொன்றும் தவறல்லவே.

//சவூதி அரேபியா வேறுபாடுகள் இல்லாத சமத்துவமுள்ள நாடு போலவும், கையையும், காலையும் வெட்டியெறியும் இஸ்லாமிய ஸாரியாவை 21ம் நூற்றாண்டிலும் நடைமுறை ப்படுத்துவது சரியானதெனவும் வாதாடுவதைக் காணலாம்.//

சவூதியாவில் எந்த மனிதராயிருந்தாலும், அவர் கறுப்பராயிருந்தாலும் வெள்ளையராயிருந்தாலும், அவர் முன்னே வந்தால் முன்னே நின்று தொழுகிறார். அங்கு எவரும் 'கடவுள் முன்னிலையில் தாம் தான் உயர்ந்தவர்' என்று சொல்வதில்லை.
எமக்கு இஸ்லாம் கற்றுத் தந்துள்ளபடி, 'கடவுள் முன்னிலையில் இரண்டு சாரார்தான். ஒரு சாரார் இறையச்சம் நிறைந்த சிறந்த மனிதர்கள் - உயர்ந்தவர்கள். மற்றொரு சாரார் இறையச்சம் குறைந்தவர்கள் (அல்லது இறையச்சம் இல்லாதவர்கள்) -தாழ்ந்தவர்கள்.'
யாரோ ஒரு குழுமத்தில் பிறந்ததால் அவர் உயர்ந்தவர், வேறொரு குழுமத்தில் பிறந்ததால் அவர் தாழ்ந்தவர் என்று, அவர் செய்யாத தவறுக்கு, பிறப்பால் உயர்வு தாழ்வு பாராட்டாத, இந்த சமத்துவம்தான் சொல்லப்படுகிறது.

கையை காலை வெட்டும் ஷரியா தவறென்றால், அத்வானி போன்றவர்களே கற்பழிப்புக்கு மரண தண்டனை தர வேண்டும் என்று கேட்டதை யோசியுங்கள்.
தவறு செய்பவர்கள்தான், 'கையையும் காலையும் இழப்போமே' என்று வருந்த வேண்டும். 'இந்த தண்டணைகளால் தவறு செய்ய நினைப்பவர்களும் திருந்துவார்களே' என்று நல்லவர்களும், நீதி நியாயத்தின்படி வாழ நினைப்பவர்களும் எண்ணாமல் கலக்கமடைவது ஏன் என்பது புதிர்.

//பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் பெருமளவு சமப்படுத்தப் பட்டுள்ளதைக் காண்கிறோம்' என்கிறார் சுவனப்பிரியன்//

இந்தியாவையும் சவூதியையும் ஒப்பு நோக்குங்கள். ஏற்றத்தாழ்வுகளே இல்லை என்று சொல்லப்படவில்லை. பெருமளவு சமப்படுத்தப் பட்டுள்ளதாகத்தான் சொல்கிறார். தவறென்கிறீர்களா?
அங்கு போய் வந்தவர்களைக் கேளுங்கள். அங்கு அந்நாட்டு அரபிகளில், எத்தனை பேர் வீடு வாசலின்றி, தெருவோரம் தூங்கி, பிச்சையெடுத்து அலைகின்றனர் என்று. பின்னர் ஒப்பு நோக்குங்கள். பெருமளவு என்பதன் பொருள் புரியும்.

//நான்கில் ஒரு பங்கு சவூதி மக்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். பல சவூதி இளைஞர்களுக்குப் படித்து முடித்தாலும் சரியான தொடர்பில்லாது விட்டால் வேலை கிடைப்பதில்லை.//

நான்கில் ஒரு பங்கு என்று மிக மிகக் கூடுதலாக சொல்லப்பட்டுள்ளது.
வேலையில்லாதவர்களும், அவர்களின் தேவைகளுக்கான வசதியோடு இருப்பதைப் பார்க்கத் தவறுவது ஏன்?
அங்குள்ள களில் பலவற்றையும் வெளி நாட்டினர் செய்து அதற்கான ஊதியம் பெறுகின்றனர்.
'மற்ற மாநிலத்தவர் இங்கு வருவதால் இந்த மாநிலத்தார்க்கு வேலை கிடைப்பதில்லை' என்று ஒரே இந்தியாவில், ஒரு மாநிலத்தார் மற்றவர்களை அடித்துத் துரத்துகிறோம். உதாரணம்: நேற்று மும்பையிலும் பெங்களுருவிலும், இன்று அஸ்ஸாம்.
அங்கு, இப்போது, வெளிநாட்டவரை......

அங்கு சரியான தொடர்பில்லாத யாரும் வேலையில் இல்லையா? அல்லது அங்கு வேலையிலிருப்பவர்கள் எல்லாம் சரியான தொடர்பு வைத்திருப்பவர்கள்தானா?

வேலையில்லாத் திண்டாட்டம் இல்லாத நாடு எது? சவூதியில் உள்ளதை மட்டும் ஊதிப் பெரிதாகக் காட்டும் அவரின் நோக்கத்தை நீங்கள் புரிந்து கொள்ளாதது ஏன்?

//முன்னாள் சவூதி பிரஜையும் இன்று லண்டனில் வசிப்பவராகிய மாய் யமானி//

அவர் சொல்வதெல்லாம் எல்லா நாட்டிலும் உள்ளதுதான்.
ஒரு நாட்டை விட்டு வெறியேற்றப்பட்டவர் அல்லது அந்நாட்டு ஆள்பவர்களைப் பிடிக்காதவர்கள், வேறு நாட்டில் தங்கிக்கொண்டு இம்மாதிரி சொல்வதெல்லாம் வாடிக்கைதான். அதைத் தூக்கிப்பிடித்து இஸ்லாத்தை விமர்சிக்க அவசியமேதுமில்லை.

குடியாட்சியுள்ள இந்தியாவிலேயே, ஆள்பவர்களின் பிள்ளைகள் அமெரிக்காவிலும், இலண்டனிலும், பாரிசிலும் உல்லாசப் பொழுது போக்குக்கு போகவில்லையா? ஆளக்கொடுத்த எல்லோராலும் முடிகிற ஒன்றா? முடியாட்சியில் இது கொஞ்சம் கூடுதலாயிருக்கும். ஆனாலும் அது தவறுதான் என்பதை
//சவூதி அரச குடும்பத்தின் தனிப்பட்ட 'ஜெற்' விமான சுற்றுலாக்களையும், ஆடம்பரங்களையும், கேளிக்கைகளையும் பெரும்பான்மையான சவூதி அரேபியாவின் மக்கள் வெறுக்கிறார்கள் அது மட்டுமல்ல அவை இஸ்லாமிய விதி முறைகளுக்கும் எதிரானவை// என்று அவரே சரியாகச் சொல்கிறாரே.

//மூன்றாவதுலக நாடுகளின் முஸ்லீம்கள் மட்டும் சவூதி அரேபியாவைப் பற்றி அழகான ஆயிரத்திலொரு இரவுகள் மாதிரியான கற்பனையைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள்.//

முஸ்லீம்கள் மட்டுமா? மற்றவர்கள் இல்லையா?
அவ்வாறு சொல்லப்படுவதைக் கேட்டு அங்கே போகிறவர்களில் (முஸ்லீம்களல்லாத மற்றவர்களும்) திரும்பத் திரும்பப் போகிறார்களே. மும்பையில் சென்று பார்த்தால் போய் வந்தவர்கள் சவூதி வேலைக்கு அனுபவமுள்ளதால் முதலில் நிற்கிறார்களே.
ஆயிரத்திலொரு இரவுகள் கற்பனையோடு சவூதிக்கு ஒருவருமே போவதில்லை என்பதுதான் உண்மை. 'வெட்டிடுவானுங்கோ' என்பதை முன்னரே அறிந்தே போகிறார்கள்.

//போதைப்பொருள் கடத்தலில் குற்றம் சாட்டப்பட்டு, நிரூபிக்கப்பட்ட இளவரசருக்கு, இஸ்லாத்தில் எல்லோருக்கும் சமத்துவம் உள்ளதென்றால் கையைக், காலை வெட்டியிருக்க வேண்டும் அப்படித்தானே//

குற்றம் நிகழ்ந்ததாகச் சொல்லப்படுவது சவூதிக்கு வெளியே. குற்றம் நிருபிக்கப்பட்ட ஒருவரை தப்பிக்க விட்டது யாருடைய குற்றம்.

இஸ்லாமிய சட்டப்படி குற்றம் யார் செய்திருந்தாலும் தண்டிக்கப் பட வேண்டும். 'என்னுடைய மகள் பாத்திமா திருடியிருந்தாலும், அவர் கையையும் வெட்டுவேன்' என்று சொன்ன நபி பெருமகனார்தான் எங்களுக்கு முன் மாதிரி. இஸ்லாமிய சட்டத்தின் முன் ஆண்டியும் அரசனும் சமமே.

அந்நாட்டு இளவரசர் குற்றம் செய்து, அவர் தண்டிக்கப்படாமல் தப்புவிக்கப் பட்டிருக்கிறார் என்பது உண்மையானால், அவ்வாறு செய்தவர்கள், நாளை இறைவன் முன் குற்றவாளியாக நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்படுவார்கள் என்பதை எந்த முஸ்லீமிடமும் கேளுங்கள். உண்மையென்றே கூறுவான்.

//எல்லா நாட்டிலும் ஊழல்கள் உண்டு, எல்லா மதங்களிலும் குறைபாடுகள் உண்டு என்பது தான்.
அதை விட இஸ்லாமிய சகோதரத்துவம், சமத்துவம் பற்றிக் கூட மற்ற மதங்களுடன் ஒப்பிட்டுச் சிலர் பேசுவார்கள் அதையும் நம்பி சிலர் மதமாற்றம் கூடச் செய்து கொள்வார்கள்.//

நீங்கள் எதனோடு எதை முடிச்சு போடுகிறீர்கள்.
எல்லா நாட்டிலும் ஊழல்கள் உண்டு என்பது சரிதான்.
ஒரு நாட்டிலுள்ள ஊழல்களை இஸ்லாத்தோடு சம்பந்தப் படுத்தாதீர்கள். ஆள்பவர்கள் தவறு செய்தால், இஸ்லாமிய பார்வையில் சரியென்று யாரும் உங்களுக்கு சொன்னார்களா? எந்த முஸ்லீமும் அவ்வாறு சொல்லத் துணிய மாட்டான்.

ஆனால் இஸ்லாம் கூறும் சகோதரத்துவமும், சமத்துவமும் உன்னதமானது. வேறெங்கும் காணமுடியாத அழகான அற்புதமான வாழ்க்கைத் திட்டமாகும்.

ஆழிப்பேரலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவில்லை என்று சொல்கிறீர்கள்.
அதைப்பற்றி இஸ்லாம் தெளிவாகச் சொல்லி விட்டது.
இறப்புக்கு பின்னுள்ள மறுமை நாளில், ஒரு செல்வந்தனிடம் 'நான் உன்னிடம் உதவி கேட்ட போது நீ மறுத்தாய் என்று இறைவன் சொல்வான். அதற்கு அந்த செல்வந்தன் 'நீயே எல்லாப் பொருளுக்கும் அதிபதி. என்னிடம் எப்போது வந்தாய்? வரவில்லையே!' என்பான். இந்த ஆள் உன்னிடம் உதவி தேடியபோது, நீ கொடுத்திருந்தால், அங்கே என்னைக் கண்டிருப்பாய்' எனக்கூறி அவனை நரகம் புகச் செய்வான். (ஒரு ஹதீஸிலிருந்து, நம் பிரச்னைக்கு தேவையான பகுதியின் கருத்தாக்கம் மட்டும் தரப்பட்டுள்ளது)

சவூதியில் எல்லா இஸ்லாமிய சட்டங்களும் கடைபிடிக்கப்பட்டு, சரிவர நிறைவேற்றப்படுகிறது என்று யாரும் சொல்லவில்லை. மற்ற நாடுகளை விடவும் கூடுதலாக கடைபிடிக்கப்பட்டு, நிறைவேற்றப்படுகிறது என்றே சொல்கிறோம்.

சவூதி அரசாங்கமோ ஆள்பவர்களோ தவறு செய்தால் அதற்கு இஸ்லாம் பொறுப்பேற்காது.

'உண்மையும் பொய்யும் தெளிவாயுள்ளது. ஏற்பதும் ஏற்காததும் உன் விருப்பம். இறப்புக்கு பின்னுள்ள வாழ்க்கையில், சரியானதை ஏற்று அதன்படி வாழ்ந்திருந்தால் ஆனந்தமும், தவறானதை ஏற்று அதன்படி வாழ்ந்திருந்தால் தண்டணையும் உறுதி' என்று இஸ்லாத்தில் தெளிவு படுத்தப்பட்டுள்ளது.

Posted by சுல்தான் at 8:19 PM

Labels: இஸ்லாம், உணர்வுகள், சவூதி


14 comments:
சுவனப்பிரியன் said...
Best answers Mr Sultan! Keep it up.

9:04 PM
Udhayakumar said...
//இஸ்லாமிய சட்டப்படி குற்றம் யார் செய்திருந்தாலும் தண்டிக்கப் பட வேண்டும். 'என்னுடைய மகள் பாத்திமா திருடியிருந்தாலும், அவர் கையையும் வெட்டுவேன்' என்று சொன்ன நபி பெருமகனார்தான் எங்களுக்கு முன் மாதிரி. இஸ்லாமிய சட்டத்தின் முன் ஆண்டியும் அரசனும் சமமே. //

நபி பெருமகனார் மட்டும்தான் அப்படி சொல்லியிருக்கிறார். சவுதி அரச பரம்பரை சொல்லவில்லையோ?

//சவூதி அரசாங்கமோ ஆள்பவர்களோ தவறு செய்தால் அதற்கு இஸ்லாம் பொறுப்பேற்காது.//

ஸரியாவை நிறைவேற்றும் பொறுப்பு ஆள்பவர்களிடம் இருக்கும் பொழுது எப்படி பொறுப்பேற்க முடியாமல் போகும்?

மற்றபடி, இந்த மாதிரி அத்து மீறல்கள் அனைத்து அராசங்களிலும் இருக்கும் என்பதால் மதத்துடன் அரசியலை இணைத்துப் பார்த்தால் பைத்தியகாரத்தனமாகத்தான் இருக்கும்.

9:48 PM
Anonymous> said...
Justifiable answer.

but, why you folks become angry whenever somebody ridicules arab countries?

11:25 PM
ஆரூரன்> said...
நண்பர் சுல்தான், உங்களுக்கான பின்னூட்டம் நீட்சியாக உள்ளதால், அதை என் வலைப்பூவில் பதிந்துள்ளேன். இங்கு சென்று பார்க்கவும்.

http://unarvukal-unarvukal.blogspot.com/2007/02/blog-post_11.html

நன்றி

1:29 AM
சுல்தான் said...
Thank You Mr. Suvanapriyan.
Encouragement from peoples like you really helps me to improve.

2:03 PM
சுல்தான் said...
வருகைக்கு நன்றி திரு. உதயகுமார்
//ஸரியாவை நிறைவேற்றும் பொறுப்பு ஆள்பவர்களிடம் இருக்கும் பொழுது எப்படி பொறுப்பேற்க முடியாமல் போகும்?//

ஷரீயாவை நிறைவேற்றும் பொறுப்புள்ள ஆள்பவர்கள்தான் (தவறுகளுக்காக) கண்டிக்கப்பட வேண்டும். இஸ்லாமல்ல.
உதாரணத்துக்க: இந்திய சட்டத்துக்கு எதிராக ஆள்பவர் செயல்பட்டால், ஆள்பவர் கண்டிக்கப்பட வேண்டும். இந்தியச் சட்டமல்ல.

//மற்றபடி, இந்த மாதிரி அத்து மீறல்கள் அனைத்து அராசங்களிலும் இருக்கும் என்பதால் மதத்துடன் அரசியலை இணைத்துப் பார்த்தால் பைத்தியகாரத்தனமாகத்தான் இருக்கும்.//

மதம் ஆள்வதற்கென்று அழகான வரையறையை வகுத்துத் தந்துள்ளது. அதை மீறி, ஆள்பவர் தவறு செய்தால் கண்டிக்கப்படவும், தண்டிக்கப்படவும் வேண்டும்.
அரசியல் சட்டத்தையும், ஆள்பவர்களையும் இணைத்துப் பார்த்தால் பைத்தியகாரத்தனமாகத்தான் இருக்கும் என்று நீங்கள் நினைத்தால்...... நான் சொல்ல ஏதுமில்லை.

2:17 PM
சுல்தான் said...
Thank you for your visit Anony.

We are not getting angry to ridicule Arabs but ridiculing Islam for that reason is wrong is my point.

2:22 PM
சுல்தான் said...
வருகைக்கு நன்றி திரு. ஆரூரான்.
உங்கள் பதில் பதிவைப் படித்தேன். விரைவில் இங்கேயே பதில் தருகிறேன்.

2:34 PM
மரைக்காயர் said...
நல்ல பதில்கள் சுல்தான் அவர்களே. 'சவூதிதான் இஸ்லாமா?' என்ற தலைப்பே கூட சில பதில்களை சொல்கிறது. சில முஸ்லிம்களின் நடவடிக்கைகளை வைத்துக் கொண்டு இஸ்லாத்தை பற்றி பலர் விமரிசனம் செய்கிறார்கள். நண்பர் ஆரூரன் அவர்கள் இந்த இரண்டிற்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொண்டால், இந்த விவாதம் இன்னும் சிறப்பாக அமையும்.

8:25 AM
சுல்தான் said...
வருகைக்கு நன்றி மரைக்காயர்.
ஆரூரன் அவர்கள் இதற்கு பதிலளித்துள்ளார்.
அவர் பதிலுக்கான விளக்கத்தையும் என் பதிவிலேயே இட எண்ணியுள்ளேன். வருகை தந்து தங்கள் கருத்துக்களைத் தரவும்.

1:01 PM
asalamone said...
Brother Sulthan,

Very nice to read.
Keep it up Brother.

Asalam
Bahrain

2:59 PM
சுல்தான் said...
Thank you Brother Asalamone

3:27 PM
லக்கிலுக் said...
மிக மிக பொறுமையாக, தன்மையாக பதிலளிக்கும் உங்களது பாணி என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது.

அட்டகாசமான பதிவு திரு. சுல்தான்.

4:08 PM
சுல்தான் said...
வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி திரு.லக்கிலுக்
Click here to bookmark this link.Channel Image04:18 உண்மையை விரும்பாத அறிவிலிகளா!? அழைப்பு
நான் சுல்தான் என்ற பெயரில் பதிவை ஏற்படுத்தி சில இடுகைகளை இட்டிருக்கிறேன். அந்தப் பதிவிலிருந்த சில இஸ்லாமிய இடுகைகளை தனியே எடுத்து இந்த பதிவைத் தொடங்கினேன். இஸ்லாத்தைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தை நீக்குவதற்காக என்னால் இயன்ற முயற்சிதான் இப்பதிவு. தேவையுள்ளவர்கள் அவ்வப்போது வந்து படிக்கிறார்கள். யாரோ ஒரு நண்பர் இன்று லிங்க் கொடுத்ததால், இதைப் பார்வையிட்ட ஒருவருக்கு அல்லது ஒரு குழுமத்திற்கு, இந்த பதிவு பிடிக்கவில்லையென்றால் மூடிக் கொண்டு போக வேண்டியதுதானே. என் இந்த பதிவை ஸ்பேம் என்று ரிப்போர்ட் செய்திருக்கின்றார்கள்.

அந்த நல்ல உள்ளங்களுக்கு ஏற்பட்ட வயிற்றெறிச்சலில்தான் நான் உறங்கிப் போனது தெரிந்தது. அவர்கள் வயிற்றெறிச்சலை வளர்க்க இனி அடிக்கடி இங்கேயும் எழுத முயற்சிப்பேன். டைஜின் போன்ற மாத்திரைகளை கொஞ்சம் தாராளமாக கைவசப்படுத்திக் கொள்ளுங்கள்.

என் நண்பர் ஒருவர் அவர் நண்பரோடு பத்தாண்டுகளுக்கும் மேலாக ஒரே அறையில் வசித்து வந்தார். பின்னர் நம் நண்பரின் நண்பர் வாழ்வின் முன்னேற்றம் வேண்டி கனடா போய்ச் சேர்ந்தார். அங்கே போன ஓரிரு ஆண்டுகளில் அவர் இஸ்லாத்தை தம் வாழ்வியலாக ஏற்றார். சில மாதங்கள் கழித்து அவர் நம் நண்பருடன் போனில் பேசும் போது தாம் முஸ்லீமான விடயத்தையும் தெரியப் படுத்தினார்.

அப்போது நம் நண்பர், "ஏனப்பா இவ்வளவு ஆண்டுகள் என் கூட இருந்தாய். இவ்வாறு ஒரு நாட்டமுள்ளது எனக்கு தெரியவுமில்லை. நீர் சொல்லவுமில்லையே" எனக் கேட்டபோது, அவரோ, "நான் இவ்வளவு ஆண்டுகள் உன்னுடன் இருந்தும் நீ என்றாவது இஸ்லாத்தைப் பற்றி எனக்குச் சொல்லி இருக்கிறாயா? நீ சொல்லி இருந்தால் எனக்குள் இந்த மாற்றம் முன்னமே நடந்திருக்கலாம். சொல்ல வேண்டியது உனக்கு கடமையில்லையா? ஆனாலும் இறைவன் எனக்கு இப்போதுதான் நாடியிருக்கிறான் போலிருக்கிறது" என்று சொன்னாராம். அதைக் கேட்டதிலிருந்து என் நண்பர் பல நாட்கள் தவித்தது போலவே, நானும் சில நாட்கள் தவித்திருக்கிறேன்.

என்னுடைய கடமை எடுத்துச் சொல்வது மட்டும்தான். ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பத்தில் உள்ளது. நேர்வழி கொடுக்கக் கூடியவன் இறைவன் ஒருவன்தான்.

இறைவனின் நாட்டப்படி இனி தொய்வின்றி தொடத் தொடர முயற்சிப்பேன்.

அன்புடன்
சுல்தான்
Click here to bookmark this link.Channel Image04:18 இஸ்லாம் பற்றி வினவுக்கும் சாகித்துக்கும்-3 அழைப்பு
தலாக் விவாகரத்து இத்தா முதலியவை பற்றி நிறைய தமிழிலும் ஆங்கிலத்திலும் உள்ளன. இந்த பதிவிலேயே என் http://islamicfold.blogspot.com/2007/01/blog-post.html என்றுள்ள இடுகையின் கருத்துரை பகுதியிலும் தலாக் விவாகரத்து பற்றி உள்ளது. இயன்றால் பார்வையிடுங்கள்.

//ஆணின் ஆளுமை அதிகாரத்தினால் தலாக் தலாக் தலாக் என்று மும்முறை ஒருவன் கூறிவிட்டால் அவனது மனைவி விவாகரத்து செய்யப்பட்டவளாக கருதப்படும் நிலையே அன்றும் இன்றும் உள்ளது//
இதை இப்படியே இன்னும் எத்தனை நாளைக்குத்தான் கூவி விற்பீர்களோ!. மேலே மின்னணு பொறியியல் பட்டதாரி பாத்திமாவின் கணவர் விடயத்திலும் இதை தெளிவு செய்திருக்கிறோம். தமிழகத்தில் இஸ்லாமிய எழுச்சியில் முத்தலாக் என்கிற விடயமே தவறு என்று ஆண்களும் பெண்களும் அறியத் துவங்கி விட்டனர்.

//இந்த மூன்று முறை தலாக் என்று சொல்லும் உரிமை, சிந்தித்து தெளிவாக நிதானமாக முடிவெடுத்தாலும் ஒரு பெண்ணிற்கு கிடையாது. தனக்கு பொறுப்பானவர்கள் மூலம் தன் கணவனை இந்த உறவிலிருந்து விடுவிக்கச் செய்துகொள்ளத்தான் ஒரு பெண்ணுக்கு இருக்கின்ற உரிமையாகும்.

தலாக் என்பது போல்தான் குளலா என்பதும் என்று சில இசுலாமிய பெண் அமைப்புகள், தாங்களும் நேரிடையாக தலாக் செய்துகொள்ள உரிமையுண்டு என்று வாதாடினாலும் ஆண்களால் மட்டுமே நிர்வாகிக்கப்படும் உலமாக்கள் சபை அதை நிராகரித்துவிட்டது. குலா என்பதன் பொருள் “விவாகரத்து செய்துவிடச் சொல்லுங்கள்” என்று கோரிக்கை வைப்பதே ஆகும்.//
இஸ்லாத்தில் ஆணும் பெண்ணும் அவர்களது உறவினர்கள் முன்னிலையில் தமது வீட்டிலேயே சிறிய நிகழ்ச்சியாக நடத்தி திருமணம் செய்து கொண்டாலும் அதை முறையாகப் பதிவு செய்து ஊர் மக்களுக்கு பொதுவில் அறிவிக்க வேண்டியது கடமையாகும். அதைப் போலவே குலாவும். அநதப் பெண் ஒரு பந்தந்திலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டாள் என ஜமாஅத்தின் முன்னிலையில் அறிவிக்கப் பட வேண்டும். இதிலே அப்பெண்ணுக்கு பல நன்மைகள் இருக்கிறது.

ஒரு பெண் குலாவுக்காக அனுமதி கேட்டால், விசாரித்து, விளக்கம் சொல்லி, முடிவை மறு பரிசீலனை செய்ய அவளிடம் கோரலாம். ஆனால் அப்பெண் தன் நிலையில் உறுதியாக இருந்து குலாவை கேட்டால் அதை நிராகரிக்கும் உரிமை ஜமாஅத்துக்கோ அதன் தலைவருக்கோ சிறிதளவேனும் கிடையாது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

உங்கள் வார்த்தையிலிருந்து நீங்களே மாறுபடுவதைக் கவனியுங்கள் //ஆண் தலாக் செய்ய மறுத்தாலும் வலுக்கட்டாயமாக விவாகரத்தை பெற்றுக்கொள்ளும் பாதுகாப்பும் இன்று பெண்களுக்கு ஏற்பட்டுள்ள மாற்றத்தின் முன்னேற்றம். சமூகத்தின் இன்றையநிலை பெற்றோர்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றமும், பெண்ணுழைப்பும் அடிப்படைக் காரணங்களாக அமைகின்றன. 'கல்லானாலும் கணவன்...' மலை ஏறிக் கொண்டிருக்கிறது.//
பெண்களுக்கும் இஸ்லாம் சரிவரத் தெரிய தொடங்கியதால் எற்பட்ட நல்ல விளைவுதான் இது.

பெண்ணுழைப்பு - இஸ்லாமிய கல்வியை அறிவதற்கான அவர்களின் உழைப்பு, அதன் மூலம் அவர்களில் சிலர் பெற்ற கல்வியும் வேலை வாய்ப்பும் என எடுத்துக் கொள்ளலாம்.

இஸ்லாத்தில் ஆணும் பெண்ணும் மகிழ்ச்சியாக வாழ்வதற்கும், குலம் தழைக்கவும் உள்ள ஒரு புனிதமான ஒப்பந்தம்தான் திருமணம். இந்த மகிழ்ச்சிகள் அவர்கள் குடும்ப வாழ்வில் இல்லாதிருந்தால் ஒப்பந்தந்தை முறித்துக் கொள்ளவும் இஸ்லாம் அனுமதி அளிக்கிறது. இந்த உண்மைகள் உணரப்பட்டதால்தான் 'கல்லானாலும் கணவன் புல்லானும் புருஷன்' என்ற நிலை இஸ்லாத்தில் அவசியமற்றதாகி பெண்களுக்கு நல்வாழ்வு அமைய ஏதுவாகிறது.

//விவாகரத்து வழக்குகளில் இன்றைய நடைமுறை மதக்கோட்பாட்டிற்கு வெளியே ஜமாத்துகளால் தீர்மானிக்கப்படுகின்றன.//
மஹ்ர் தொகை என்பது பெண்கள் தங்கள் கணவனால் கைவிடப்படும் நிலைமை ஏற்படும் போதும் அல்லது கணவனை இழக்கும் போதும் உறுதுணையாக இருக்கும் விதத்தில், அந்த அளவுக்கு அமைய வேண்டும். அதை மணப்பெண்ணே தீர்மானிக்க வேண்டும். மஹ்ரை கூட்டிக் குறைத்து பேரம் பேச மணமகனுக்கு அனுமதியுண்டே தவிர இவ்வளவுதான் தருவேன் எனக் கூற அதிகாரம் இல்லை.

மஹ்ர் தொகையைப் பற்றி ஓரளவு இஸ்லாமியப் பெண்கள் விளங்கி இருந்தாலும் அதை அவர்கள் சரிவர நடைமுறைப்படுத்தும் அளவுக்கு இதுவரை இங்கே நிலைமைகள் இல்லை என்பதை ஏற்றுக் கொண்டேயாக வேண்டும்.

இத்தகைய காரணங்களினால்தான் விவாகரத்து வழக்குகளில் இன்றைய நடைமுறையில் மதக்கோட்பாடுகளை விட்டும் வெளியேறாதபடி ஜமாத்துகளால் (பெரும்பாலும்) தீர்த்து வைக்கப்படுகின்றன.

//நடைமுறையில் அப்பெண்ணிற்கு இருக்கும் குழந்தைகளின் பால், வயது ஆகியனக் கணக்கிடப்பட்டு அதற்குப் பாதுகாப்பு தரும்வகையில் தண்டத்தொகையாக தீர்மானிக்கப்பட்டு ஆணிடமிருந்து பெற்று பெண்ணிற்கு வழங்கப்படுகிறது. கொடுக்கப்பட்ட வரதட்சனைகள், நகைகள், சீதனங்கள் திருப்பியளிக்கப் படுகின்றன.//
இந்த தீர்ப்பு இஸ்லாத்துக்கு எதிரான தீர்ப்பல்ல.

//ஜீனாம்சம் என்றச் சொல் மட்டும உச்சரிக்கப்படுவதில்லை.//
ஏனெனில் அது மற்ற மதத்தாரில் நடைமுறையிலுள்ள ஜீவனாம்சம் போன்றதில்லை. மாதம் ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் என்று சொல்லி விட்டு அதை தர மறுப்பவனுக்காக மீண்டும் வழக்காட வழியில்லாத எத்தனையோ பேர் தத்தளிக்கின்ற நிலைமையில் அதை ஒரே முறையில் அல்லது ஜமாஅத்தார் முன்னிலையில் ஒரேயடியாக பெற்றுத் தருவதின் மூலம் எதிர்காலச் சிக்கலில்லாமல் போகிறது.

//குழந்தைகள் ஆண்களுக்கே உரியன. அவர்கள் அவர்களை தமது பொறுப்பில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே கோட்பாடு.//
குழந்தைகளை வளர்ப்பதில் உள்ள செலவுகளுக்கு முழுப்பொறுப்பும் ஆணுக்குள்ளதே. (பெண் எவ்வளவு பணக்காரியாக இருந்தாலும்) நீயும் சேர்ந்துதானே பெற்றாய், நீ பாதிசெலவை ஏற்றுக் கொள் எனக் கூற முடியாது. இதில் பெண்களுக்கு பாதுகாப்பா பிரச்னையா என்பதை உங்கள் அறிவுக்கே விட்டு விடுவோம்.

//கணவன்களால் மட்டுமே தான் கர்ப்பமுற்று குழந்தை பெற்றெடுப்பதாகவும், அதில் தனக்கு பங்கேதுமில்லை என்று இன்னும் இப்பெண்கள் அறிவியலுக்கு அப்பாற்பட்டு சிந்திப்பதால் இப்பிரச்சனையில் தமக்கு ஏதும் உரிமை இல்லை என்பதை எவ்வித மனவருத்தமுமின்றி ஏற்றுக்கொள்கின்றனர்//
இவையெல்லாம் கம்யூனிஸக் கற்பனைகளேயன்றி வேறில்லை. ஆண் பெண் இருவரது அணுக்கலப்பினால்தான் குழந்தை பிறக்கிறது என்பதை குர்ஆன் சொல்லித் தந்தே இருக்கிறது. எந்த தமிழ்த் தாயும் தன் குழந்தையை தான் வளர்ப்பதை ஏமாற்றப்பட்டு விட்டதாக கருதுவதில்லை. சில விதி விலக்குகள் இருக்கலாம். அதைப் பொதுவாகக் கருத முடியாது.

//குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு இவள்மீது சுமத்தப்படும்போது இயல்பாகவே உள்ள தாய்ப்பாசம் அதனை தன் தலையில் கட்டும் ஏமாற்றம் என்று கருதுவதற்கு இடமளிப்பதல்லை.//
எவ்வளவு சிறந்த ஆணாயினும், ஒரு பெண்ணைப் போல், அதிலும் குறிப்பாக பெற்ற தாயைப் போல் குழந்தைகளை வளர்ப்பதென்பது இயலாத காரியம். அதனால் பெரும்பாலும் தாயிடமே குழந்தைகள் விடப்படுகின்றனர். அந்தப் பெண்ணுக்கு வேறு வரன்கள் அமையும் பட்சத்தில் அக்குழந்தைகளுடனேயே திருமணம் செய்விக்கப் படுகின்றனர். இயலாத பட்சத்தில் தாய்வழி உறவினர்களே அக்குழந்தைகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்கின்றனர்.

ஓரளவு வயது வந்த குழந்தைகள் குறிப்பாக ஆண் குழந்தைகள் தந்தையுடன் செல்லும் நிலை ஏற்படும்போது, அது வளர்ந்து, விபரம் அறிந்து, வருவாய் ஈட்டக்கூடிய நேரத்தில்,
'இஸ்லாத்தில் ஒருவர் தம் தாய்க்கு தர வேண்டிய உயர்ந்த அந்தஸ்தும், அப்பெண் எப்படிப் பட்டவளாக இருப்பினும் அவளுக்குள்ள உரிமைகள் அவனது கடமைகள்' ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் அவனுக்கு நினைவுறுத்தப்பட்டு தாய்க்கு சேவையாற்ற ஆர்வமுட்டப்படுகிறான். 'தாயின் காலடியே சொர்க்கம்' என்ற நிலை அவனுக்கு சொல்லித் தரப்படுகிறது. அதனால் இறைவனிடம் கிடைக்கவிருக்கும் உயரிய நிலைமை அவனுக்குச் சொல்லித் தரப்பட்டு தாய்க்குப் பணிவிடையாற்ற ஆர்வமூட்டப்படுகிறான்.

இஸ்லாத்தில் ஒரு மகனிடம் தாய்க்கு உள்ள உரிமை மூன்று பங்கென்றால் தந்தைக்கு ஒரு பங்குதான்- அவனை யார் வளர்த்திருந்தாலும்.
//பெண்ணின் விருப்பத்திற்கிணங்க விவாகரத்து நடந்தால் பெண், தான் பெற்ற மகர் தொகையுடன் சிறுதொகை ஒன்றையும் (திட்டவட்டமான அளவு இல்லை) கொடுக்க வேண்டும். அல்லது மகர் தொகையை மட்டுமாவது கொடுக்கவேண்டும், என்று கோட்பாடு கூறுகிறது. நடைமுறை அவ்வாறு இல்லை. பெண் தலாக் செய்யச் சொல்லும் சூழ்நிலை பரிசீலிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக குடிகாரக் கணவன், விபச்சாரிகளுடன் சுற்றும் கணவன், சமூக குற்றங்களைச் செய்வதால் தொடர்ந்து சிறைசென்று வரும் பொறுக்கி போன்ற அடிப்படை நிகழ்வுகள் பரிசீலிக்கப்பட்டு தீர்த்து வைக்கின்றனர். குற்றம் கணவன் மீது என்றால் கணவனுக்கு தண்டத்தொகையும். மனைவி மீது என்றால் மனைவிக்கு தண்டத்தொகையும் தீர்மானிக்கப்படுகிறது//
மஹ்ர் தொகையை விடக் கூடுதலாக எதையும் கொடுக்க வேண்டியதில்லை. அவன் கொடுத்திருந்த விலையுயர்ந்த பரிசுப் பொருட்கள் திரும்பக் கேட்கப் பட்டால் (சரியான முறையில் மஹ்ர் கேட்டுப் பெறப்படாததால்) குழந்தை வளர்ப்பு முதலிய காரணங்களுக்கான செலவினங்களில் அவை கணக்கிடப்படுகின்றன. இவையாவும் இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கு முரணில்லாத வகைதான். (மேலே கல்லானாலும் கணவன் விளக்கத்தையும் பார்வையிடவும்)

இத்தா – காத்திருத்தல்
இஸ்லாத்தைப்பற்றி சரிவர அறிய, ஆராய முயற்சிக்காமல் எவரோ சொன்னவற்றை பிடித்துக் கொண்டு, மார்க்ஸ் கடவுள் கெடுத்த அபின் போதையில்தான் இவரும் தள்ளாடுகிறார் என்பதை இவரது இந்த விளக்கங்களிலே தெளிவாகத் தெரியப்படுத்தி விடுகிறார்.

//'கணவன் இறந்த பெண்கள் மழித்துக் கொள்ளுங்கள் (மொட்டையடித்துக் கொள்ளுவது)' என்று கூறுகிறார். அந்த அறிவிப்பைத் தவிர//
இதற்கான ஆதாரத்தை தர இயலுமா? இஸ்லாத்தை சிறுமைப் படுத்தவல்லாது வேறெதற்காக இத்தகைய புனைச்சுருட்டுகள்?

//தனது கணவனை சொர்க்கத்திற்கு இட்டுச் செல்வதில் பங்காற்றும் நன்மைகளின் எண்ணிக்கையை கூட்டும் என்றும் அவள் மனதார நம்புவதால்அப்பெண்களின் மனதில் எவ்வித எதிர்ப்பையும் ஏற்படுத்தவில்லை//
இவையாவும் இவரது சொந்த கற்பனைகள் அல்லது மார்க்ஸிய கற்பிதங்களாக இருக்கலாம்.

//விவாகரத்து விரும்பியோ விரும்பாமலோ நடந்தாலும் கணவன்மீது ஏற்பட்டுள்ள “கசப்புணர்வு” அங்கே ஏற்பட்டுள்ளது என்பது தெளிவான ஒன்றே. அப்படியிருந்தும் அவர்கள் இந்த இத்தாவை கடைபிப்பது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. அப்படிப்பட்டவர்களின் மனநிலையை அறிந்துகொள்ளும் வாய்ப்பும் எனக்கு ஏற்படவில்லை//
இவராக சில கற்பனைகளை எழுதி விட்டு அதில் மேற்கொண்டு கேள்விகளை யாரிடம் கேட்கிறார்? கற்பனைக்கு சொந்தக்காரரான அவர்தான் அதற்கு பதில் தர வேண்டும். கற்பனை இல்லையென்றால் அதற்கான ஆதாரத்தை அவர்தான் தர வேண்டும்.

இத்தா என்பது காத்திருப்பு என்று இவரே விளக்கமளிக்கிறார். இதில் கர்ப்பபைகளில் உள்ளதை அறிவதும் இருக்கிறது. அதல்லாத வெறும் காத்திருத்தலும் உண்டு என்பதை 'கர்பப்பை இல்லாவிட்டாலுமா!' என்ற அவரது இடுகையில் அவர் எடுத்து வைத்த (65:4) குர்ஆன் வசனமே விளக்குகிறது.

"உங்கள் பெண்களில், எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால், அப்பெண்களுக்கும், மாதவிடாயே ஏற்படாப் பெண்களுக்கும், 'இத்தா'(வின் தவணை) மூன்று மாதங்களாகவும், தவிர கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய ('இத்தா'வின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையுமாகும். மேலும், எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கிறாரோ அவருடைய காரியத்தை அவன் எளிதாக்குகிறான்"

மாதவிடாய் நினறு போன வயதானவர்களுக்கும், மாத விடாயே வராதவர்கள் மற்றும் சிறுமிகளுக்கும் (சிறுமிகள் திருமணச் சட்டம் மாற்றப்பட்டு விட்டது) மூன்று மாத தவணை கொடுக்கப்பட்டுள்ளது. இதிலே கர்ப்பபைகளில் உள்ளதை அறிவது இல்லை. வெறும் காத்திருத்தல் சட்டம்தான் என்பது மேலோட்டமாக பார்ப்பவர்களுக்கே புரியும்.

இஸ்லாத்தில் கூறப்பட்ட ஒவ்வொன்றும் நபித்தோழர்களால் அவ்வப்போது கேள்விகளாக கேட்கப்பட்டு தெளிவு பெறப்பட்டே வந்திருக்கின்றன. அதனால்தான் தெளிவாக சொல்லப்பட்டுள்ள இவற்றில் கேள்விகள் அவசியமற்றதாகி விட்டிருக்கிறது.

இதை மேலும் விளக்க:
ரமதான் மாதம் முழுதும் நோன்பிருப்பது கடமை. அதனால் பல பயன்கள் உண்டாவதாக சொல்லப்பட்டுள்ளது. அது விளைவுகள்தான். அந்தப் பயன்கள் எமது நோக்கமல்ல. நோன்பிருக்க வேண்டுமென்கிற இறை கட்டளையை நிறைவேற்றுவதல் எனும் அடிபணிதல்தான் எமது முழு முதல் முக்கிய நோக்கம்.

அதுபோல காத்திருத்தலில் பல நல்ல பயன்கள் இருக்கிறது. என்றாலும் அவை எமது நோக்கமல்ல. இறை கட்டளைக்கு அடிபணிதல் என்பதுதான் நோக்கம்.

டிஸ்கி:
1. திரு. வினவு அவர்கள் தமது தளத்தில் 2010-ல் 'இசுலாமியப் பெண்கள்: மதமும் வாழ்க்கையும்' என்ற தலைப்பில் திரு. சாகித் அவர்கள் எழுதி இருந்த இடுகையை எடுத்தது இட்டிருந்தார். அதற்கான கருத்துரை எழுதப்போய் அது மூன்று இடுகைளாக நீண்டு விட்டது.
2. இந்த பதில்கள் உங்களில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்பதையும் இயன்றவரை எல்லா பகுதிகளுக்குமே பதிலளிக்கப் பட்டுள்ளதால் உங்களுக்கு மென்மேலும் வீரியமாய் எதிர்க்கத் தோன்றும் என்பதையும் நான் அனுபவப் பூர்வமாக அறிந்திருக்கிறேன். இந்த பதில்களால் உங்களை வருத்தமுறச் செய்வது எனது நோக்கமல்ல. உண்மையை அறிய முயற்சிக்கும் இது போன்ற கேள்விகளுள்ளவர்கள் மட்டுமே இதனால் பயனடைய முடியும். இவ்வாறு தெளிவு படுத்தவதன் மூலம் என்னளவுக்கு என் கடமையைச் செய்தேன் என்ற மகிழ்ச்சியும் இறை திருப்தியுமே என் நோக்கம். என்னால் இயன்றவரை நான் அறிந்தவரை பதிலளித்துள்ளேன். அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
Click here to bookmark this link.Channel Image04:18 இஸ்லாம் பற்றி வினவுக்கும் சாகித்துக்கும்-1 அழைப்பு
//கதவைத் திறக்காமலேயே உள்ளிருந்தபடியே பதில் சொன்னார் என் நண்பனின் மனைவி. அரைக்கால் ட்ரவுசரை போட்டுக் கொண்டு தெருவில் விளையாடிய போதிலிருந்தே அவன் எனக்கு நணபன்//
அவருக்கு நீங்கள் நண்பன். அவர் மனைவிக்கு நீங்கள் தோழி இல்லையே. அவரது நீண்ட கால நண்பர் என்றதால் அன்பாகச் சொன்னார்கள். அதே தெரியாத ஒருவராக இருந்தால் "அவர் வீட்டில் இல்லை. எப்ப வருவாரோ தெரியாது" என்று முகத்திலறைந்தாற்போல் சொல்லி இருப்பார்கள்.

'அவர் எனக்கு சகோதரி மாதிரி' என்பதெல்லாம் இஸ்லாம் ஏற்றுக் கொள்ளாது.
'உடன் பிறந்த சகோதரியா? இல்லையே! இடத்த காலி பண்ணு' - இதுவே இஸ்லாமிய முறை.
இவ்விரண்டில் எது சரி என்று எங்காவது உங்களுக்குத் தெரிந்த இடத்தில் நண்பர்களால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பார்கள், கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

எல்லோரையும் சந்தேகக் கண்ணோடு பார்ப்பதுதான் இஸ்லாமா?
இல்லை. தவறு நடக்க ஏதுவான பாதைகளும் அடைக்கப்பட வேண்டும் - இதுதான் இஸ்லாம்.
இது பெண்களுக்கு மட்டுமான சிறையா? இல்லை. இருபாலாருக்கும் பொது. மற்றவர்கள் வீட்டுக்கு போனால் வெளியிலிருந்து ஸலாம் சொல். மூன்று முறை சொல்லியும் பதிலில்லையா? அவ்விடத்தில் நிற்காதே. போய் விடு.
உனக்கு மஹ்ரமில்லாத பெண்ணிடத்தில் தனித்திருக்காதே. ஒரு பெண்ணும் அவளுக்கு மஹ்ரமில்லாத ஆணும் தனித்திருந்தால் மூன்றாவதாக அங்கே (மனதை வழிகேட்டில் இழுக்கின்ற) ஷைத்தான் இருக்கின்றான் - இது இஸ்லாம். (மஹ்ரம்- திருமணம் செய்வதற்கு தடை செய்யப்பட்ட உறவினர்கள். உதாரணமாக: பெண்களுக்கு - தந்தை, தமையன், மாமன் முதலியோர். ஆண்களுக்கு - தாய், தமக்கை, மாமன் மனைவி முதலியோர்)


//“மாமா” நல்லா இருக்கீங்களா? எப்பவந்தீங்க? என்று நலம் விசாரிக்கும் பண்புக்கு மாறிவிட்டாள்.//
'சரியாகத்தான் சொல்லி இருக்கின்றீர்கள். 'நல்ல பண்பு'

இஸ்லாமிய பெண்கள் அன்னிய ஆடவர் முன்னிலையில் ஒரு குறிப்பிட்ட அளவு உடை அணிந்திருக்க வேண்டியது அவசியம். அந்தளவு உடை எல்லா நேரத்திலும், குறிப்பாக தன் கணவர், குழந்தைகள் முன் அவசியமில்லை. குறைந்த உடையில் துணி விலக வாய்ப்புகள் அதிகம். எழுந்து மறைவான இடம் செல்வதற்கு இது முதல் முக்கிய காரணம்.

நீங்கள் சந்திக்க வந்தது அவரை. அவரைச் சந்திப்பதில் தடை இல்லை.
வீட்டுக்கு வந்தவரை உபசரிப்பது நல்ல குடும்பப் பண்பாடு. அவர்களால் இயன்றவரை உங்களை நல்ல முறையில் உபசரிக்கின்றார்கள்.
அவர்கள் குடும்பப் பெண்களை பார்க்க வேண்டிய தேவை உங்களுக்கு ஏன்?! அல்லது தேவையின்றி அவர்கள் ஏன் உங்களைப் பார்க்க வேண்டும்?!.

இத்தனை நாள் மாமா என்றழைத்து விளையாடியிருந்த பெண் (வயதுக்கு வந்து விட்டது என்பதற்காக) ஒரேயடியாய் விலகி விட்டால் வித்தியாசமாகத் தெரியும். அதனால் அம்மாவோட ஒட்டிக் கொண்டு உங்களை விசாரிக்கிறது. படிப்படியாக அதுவும் குறைந்து விடும்.

இதிலே என்ன குறையை கண்டு பிடித்தீர்கள். நல்ல பண்புகளைப் பழகட்டும் பேணட்டும். இருட்டிலிருந்து கொண்டு வெளிச்சத்தை பழிக்காதீர்கள்.
-----------------------------------------------------------------------------------

//உழைக்கும் பெண்களிடமும் கடைநிலையில் இருந்த அன்றாடங்காச்சி களிடமும் இந்தப் பண்பாடு வேறாகத்தானிருந்தன//
வண்ணாரப்பேட்டை, திருச்சி குத்பிஷா நகர், பாலக்கரை ஆற்றோரத்தின் அருகில், பாளையங்கோட்டை விவசாயக் குடும்பங்கள் போன்றவர்களிடம் வீடுகளில் மறைவாக இருந்து கொள்ள வசதிகளில்லை என நீங்களே சொல்கிறீர்கள். அவர்களிடம் எண்ணமிருந்தாலும் வீடுகளில் வசதிகளில்லாததால் அப்படி இருக்கின்றார்கள்.

இஸ்லாம் எப்போதுமே ஒருவரது இயலாமைக்காக அவரைக் குற்றம் பிடிப்பதில்லை. வசதியுள்ளவர்கள் அவர்களது இயலாமையைப் போக்க வேண்டும் என்று பணிக்கிறது.

அவர்களும் வசதி வந்து விட்டால் அதாவது நடுத்தர நிலைமைக்கு வந்து விட்டால், அதன் பின்னர் நீங்கள் சொன்னதுதான்
"தான் மதிப்புமிக்க கௌரவமான குடும்ப பாரம்பரியம் கொண்டவர்கள் என தன்னைக் கருதிக் கொள்ளும் நடுத்தரவர்க்கத்தின் மத்தியில் மட்டுமே இந்தப் பண்பாடு காணப்பட்டது. இவர்களே இசுலாமிய சமுதாயத்தின் பிரதான தூண்களாகவும் இருந்தனர்."

//எனது நண்பர் கஹாரின் தாயார் விவசாயி. அவர் திருமணம் செய்ததிலிருந்து அவரை கதவுகளும் பாதுகாப்பு செயினும் தடுக்கவில்லை. தலையில் சாணம் சுமந்து விவசாயம் செய்தவர். ஆனால் கஹாரி எலக்ட்ரிசியன் பட்டப்படிப்பு படித்துவிட்டு ஓரளவு சுமாராக சம்பாதிக்கத் தொடங்கியதால் நடுத்தரவர்க்கத்தின் பண்பாட்டினையே கௌரவம் என வரித்துக் கொண்டுவிட்டார்.//
கஹாரின் தாயாரின் சாணம் சுமந்து விற்ற ஏழ்மை. அதனால் இந்தப் பண்பாடுகளைப் பேண முடியாத இயலாமை. வசதி வாய்ப்புகள் வந்ததும் தம்மை சரி செய்து கொண்டுள்ளார். இதிலென்ன தவறு.
-----------------------------------------------------------------------------------
//உலமாக்கள், இந்திய இசுலாமிய அமைப்புகள் போன்றவர்கள் கிராமங்களிலுள்ள ஏழை விவசாயிகளை தன்னுடைய சமூக அங்கமாக ஏற்றுக்கொண்டாலும் சேரிகளில் வாழ்பவர்களையும், அன்றாடம் கூலி வேலைக்குச் செல்லும் பெண்களின் குடும்பங்களையும் கண்டுகொள்வதே இல்லை. இவர்களின் உழைக்கும் வர்க்க பண்பாடு இசுலாமியக் கோட்பாடுவாதிகளுக்கு நெருடலாக இருப்பதே காரணம்.//

இதுதான் பிரதானமாக நீங்கள் தவறிழைக்கும் இடம். ஒரு சில காலத்துக்கு முன் இஸ்லாம் சரிவர தெரியாதிருந்த போதுதான் பள்ளிவாசல்களில் சில்லறையை கொடுப்பதும், மக்களை நெருக்கியடிக்க வைத்து சில்லறைகளை விநியோகிப்பதும்தான் ஜகாத் (எனும் ஏழைகளுக்கான வரி) என நினைக்கப்பட்டிருந்தது. இப்போது அது (ஸதக்கா எனும்) சிறிய தர்மம்தான் அதனால் ஜகாத் வழங்கப்பட்டு விட்டதாக எண்ணி விடக்கூடாது என தெளிவாக அறியப்பட்டு விட்டது.

இஸ்லாமிய அமைப்புகளின் மூலம் உரியவர்களிடம் பெறப்பட்ட ஜகாத், அதைப் பெறத் தகுதியான (நீங்கள் கூறியுள்ளது போலுள்ள) ஏழைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உதவி செய்யப் படுகின்றனர். இன்ஷாஅல்லாஹ் இது தொடர்ந்தால் முஸ்லீம்களில் ஒரு பெரிய மாற்றம் நிகழும்.

எம் ஊருக்கு அடுத்த முஸ்லீம்கள் நிறைந்து வாழும் ஒரு ஊரில் யார் வீட்டில் திருமணம் போன்ற எந்த விருந்து வைபவங்கள் நடந்தாலும் வசதியற்ற அந்த அனைத்து குடும்பங்களுக்கும் உணவளிப்பதாக உறுதியளித்தால் மட்டுமே உலமாக்களும் ஜமாஅத்தினரும் அவ்விருந்துகளில் கலந்து கொள்வர்.

முஸ்லீம்களுக்கும் முஸ்லீமல்லாதவர்களுக்கும் இஸ்லாம் சரிவர புரிய வைக்கப்பட வேண்டும் என (இப்படி தலைகீழாக இல்லாமல் நேர்மையான முறையில்) நீங்களும் எங்களுடன் இயைந்து யோசிக்கின்ற காலம் விரைவில் வர இறைவனை இறைஞ்சுகிறேன்.
------------------------------------------------------------------------------------
இன்னும் வரும்
Click here to bookmark this link.Channel Image04:18 இஸ்லாம் பற்றி வினவுக்கும் சாகித்துக்கும் - 2 அழைப்பு
//இசுலாமியப் பெண்களின் பிரச்சினைகள் பற்றி விவாதிக்கும்போது நடைமுறை வாழ்க்கையின் வெளிப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் இசுலாமியர்கள் புர்கா என்றதும் சூடாகி விடுவது ஏன்?//
எத்தனை விரிவாக எடுத்துரைத்தாலும் அறிய முயற்சிக்காமல் முதல் கேள்விக்கே திரும்ப வரும் திமிர் கொண்டவர்களாக நிறைய பேர் இருப்பதுதான். தனக்கு உரிமையற்ற மற்ற பெண்களை துகிலுரித்து கீழ்த்தரமாக பார்க்கத் துடிக்கும் காமாந்தக கண்களுக்கு புர்கா கேடாகத்தான் தெரியும். இது பெண்களை தங்களின் காமாந்தக கண்களுக்கு விருந்தாக்கத் துடிக்கும் திமிர் பிடித்த ஆண் மேலாண்மையின் வக்கிர உணர்வு. ஆடு நனைகின்றதே என ஊளையிட்டு வெறி கொண்டு அழும் ஓநாய்கள்.

//சமூக ஆர்வாலர்கள் அப்பெண்களுக்கு புர்காவினால் ஏற்படும் சிரமங்களை முன்வைக்கும் போது அது அப்படி இல்லை என்று மறுப்பதும் அதனையே பெண்களை விட்டு பேசவைப்பதும் விவாதத்தில் எட்டப்படாத முடிவாக உள்ளது.//
புர்கா என்பது ஏதோ கருப்புத்துணி என்று நினைப்பதால்தான் பல கோளாறுகள் ஏற்படுகின்றன. உடம்பை மறைக்கின்ற, அழகை, அலங்காரங்களை வெளிப்படுத்தாத முறையில் அணியும் துணி எதுவானாலும் அது புர்காதான். கருப்பு அங்கியே ஆனாலும் அது அவரது உடலின் கன, பரிமாணங்களைக் காட்டி பிறர் கண்களுக்கு விருந்து படைப்பதாக இருந்தால் அது இஸ்லாமிய நெறிமுறைக்குள் வராது.

இந்திரா காந்தி அம்மையாருக்கு தன் பிரதமர் கடைமைகளை ஆற்றுவதற்கோ, ஜெயலலிதா அம்மையாருக்கு தம் முதலமைச்சர் பணிகளை நிறைவேற்றுவதற்கோ, கவர்னர் பாத்திமா பீவிக்கு அவர் கடமைகளை செவ்வனே செய்வதற்கோ, அன்னை தெரசா அம்மையாருக்கு தம் சமூகப்பணிகளை ஆற்றுவதற்கோ, பிணிகளைத் துடைப்பதற்கோ, தற்போதைய குடியரசுத்தலைவர் பிரதிபா தேவி பாட்டிலுக்கு அவர் தம் கடைமையைச் செய்வதற்கோ இத்தகைய துணிகள் எந்தத் தடையையும் ஏற்படுத்தவில்லை. சமூக ஆர்வலர்களாக தம்மை முன்னிறுத்தும் சில காமாந்தகர்கள் கண்களுக்குத்தான் இது தடையாகிறது. அதனால் விவாதப் பொருளாகிறது

கடினமான உடல் உழைப்பை கொடுக்கின்ற வகையில் உள்ள வேலைகளை பெண்களிடம் கொடுத்து அவர்களின் இயல்புக்கு மாறாய் அவர்களைப் பிழிந்தெடுக்காதீர்கள். அவர்களின் உடலமைப்புக்கு ஏற்ற இயல்பான நாசூக்கான வேலைகளை மட்டும் அவர்களுக்கு கொடுங்கள். வேறு வழியின்றி அவ்வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்திலிருக்கின்ற பெண்களுக்கு நிர்ப்பந்தம் என்ற முறையில் இஸ்லாம் அவரது உடைக்காக அவர்களை கட்டாயப் படுத்துவதில்லை. ஜமாஅத்துக்கும் வசதி படைத்தவர்களுக்கும் அவர்களை அந்த நிர்க்கதியான நிலையிலிருநது விரைவில் வெளியேற்றி நல்ல நிலைக்கு கொண்டு வருதல் கடமையாகிறது.

//இன்று அனைவரும் படிக்கவைக்கும் நிலையில் அந்த பெண்கள் புர்கா அணிந்தாலும் படிக்கச்செல்ல முடிகிறதே என்ற சந்தோஷத்தில் புர்காவை ஒரு அடக்குமுறையாகக் கருதுவதில்லை. ஒரு சில தீவிர மதப்பற்று இல்லாத குடும்பங்கள் அல்லது பெண்கள் மட்டுமே புர்கா அணியாத நிலையில் பள்ளி கல்லூரிகளுக்குச் சென்றாலும் பெரும்பாலனவர்கள் புர்கா அணிவதை ஒரு பொருட்டாக கருதுவதில்லை//
கல்லூரி செல்லும் இஸ்லாமிய பெண்கள் அறிவு பெற்று கல்லூரிக்கு செல்லும் அதே வேளை அறிவு குறைந்து புர்காவும் இடுகின்றனரா? எத்தகைய வளைந்தொடிந்த சிந்தனை!.

இஸ்லாம் சரிவர புரியாதிருந்த நேரத்தில் பெண்களென்ன ஆண்களே கல்லூரிக்குச் செல்லாமலிருந்தார்கள். இஸ்லாம் புரிந்து விட்டதால் பெண் கல்விக்கு இஸ்லாம் தரும் மகத்துவம் தெரிகிறது. அதனால் இஸ்லாமிய ஒழுக்கத்தைப் பேணிக் கொண்டே கல்லூரிக்குச் செல்கின்றனர். இஸ்லாமிய நெறிமுறைகளைப் பேணியவாறு இஸ்லாம் வலியுறுத்தும் கல்வியும் பெற முடிகின்ற போது அதில் தடை அவசியமற்றது எனப் பெற்றோரும் தெளிந்துள்ளனர்.

// திருமண விழாக்களில் புர்காவுடன் வலம் வரும் பெண்கள், ஆண்களின் கூட்டத்திடையே இயல்பாக வலம் வருகின்றனர். எதிர் எதிர் வரிசையில் அமர்ந்து விருந்துண்ணுகின்றனர். யாரும் எதற்கும் சங்கடப்படுவதில்லை எல்லாம் இயல்பாக குற்றமற்ற செய்லபாடுகளாக நாம் காணுகிறோம்.//
தங்களை கம்யுனிஸ்டுகளாகச் சொல்லிக் கொள்ளும் சிலரை வேறு சிலர் கம்யூனிஸ்டுகளாக முகமூடி அணிந்தவர்களென சித்தரிக்கின்றனர். இது போல உள்ளவைதான் பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஆயிஷா, ஸகனாஸ், மதுரைச் சேர்ந்த பாத்திமா, திருச்சியைச் சேர்ந்த பானு முதலானோர். எல்லா இடங்களிலும் அது போன்றவர்கள் உண்டு. இவையொன்றும் முஸ்லீம்களில் மட்டும் உள்ளதல்ல.

புர்கா அணிந்து தம்மை அழகாக மறைத்துக் கொண்டு தம் தேவைகளுக்காக வெளிவர இஸ்லாத்தில் தடை ஏதும் இல்லையே.

//காதுகளையும், நகை அலங்காரங்களையும் மறைத்துக்கொள்ளும் புர்காவெல்லாம் இன்று கிடையாது.//
எதற்காக புர்கா அணிய வேண்டும் எனத் தெரியாமல் கை, கால்கள், உடம்பின் பாகங்கள் வெளித்தெரிய சிலர் அணியும் துணிகளை அவர்கள் என்ன பெயரில் அழைத்துக் கொண்டாலும் அது இஸ்லாமிய உடையாகி விடாது.

//தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் போன்ற இசுலாமிய அமைப்புகள் தமிழக இசுலாமியப் பெண்களை புர்கா அணியச் செய்வதில் வெற்றி பெற்றுள்ளனர்//
ஆம். முஸ்லீம்களுக்கு முதலில் இஸ்லாத்தை போதிப்பதில் ஓரளவு வெற்றி பெற வைத்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.
--------------------------------------------------------------------------------

//பெண் உழைப்பு//
கணவர்தான் இஸ்லாமிய குடும்பத் தலைவர். தலைவர் பொருள் திரட்டும்போது பெண்ணை குடும்பத்துக்காக பொருள் திரட்ட இஸ்லாம் கட்டாயப் படுத்தவில்லை. சொத்துகளை தனியாக அடையவும் அதை முறையாக நிர்வகிக்கவும் பெண்களுக்குள்ள உரிமையை இஸ்லாம் தடுக்கவுமில்லை.

இதில் இஸ்லாம் செய்துள்ள குறைகள் என்ன என்று விளக்கினால் தெளிவு படுத்தலாம்.

//உழைக்கும் பெண்களைப் பொருத்தவரை அன்றும் இன்றும் ஏற்ப்பட்டுள்ள வேறுபாடு முதலாளித்துவத்தின் பண்பாடுதானேயொழிய குனர்ஆனுக்கும் இவர்களுக்கும் வெகுதூரம்//
உங்கள் பிழைப்புக்கு முதலாளித்துவம் பிரபுத்துவம் எதுவானாலும் பெயர் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் இஸ்லாமிய அறிவு பெற்ற நம் தமிழ் சமுதாய பெண்கள் 'இத்தனை பேசுகின்றீர்களே எங்கள் நிலைமையிலிருந்து நாங்கள் வெளிவர என்னென்ன ஏற்பாடுகளைச் செய்துள்ளீர்கள்?' என்று தங்கள் இஸ்லாமிய மற்றும் தார்மீக உரிமையை பொதுவில் வைக்கக் கூடிய திறன் பெற்று விட்டனர். அதனால் உழைக்கும் மக்களோடு எல்லோருக்கும் இஸ்லாமிய அறிவு இன்னும் சிறப்பாக சென்றடையத்தான் நாம் இப்போது அதிகம் முயற்சிக்க வேண்டும்.

//பெண்ணின் உழைப்பில் உட்கார்ந்து தின்பதா? அல்லது அவள் வெளிநாடு சென்று சம்பாதிக்க நாம் இங்கே 'பொட்டையைப்' போல் பிரிந்து வாழ்வதா?' சுய கௌரவம் இடம்தரவில்லை. சமூகம் தனக்கு வழங்கியுள்ள விவாகரத்து என்ற அங்குசத்தை நீட்டத் தொடங்கினார்//
இஸ்லாம் புரியத் தொடங்கி விட்ட இந்த கால கட்டத்தில் தலாக் தலாக் தலாக் எனச் சொல்லி விட்டாலும் பிரிந்து விட முடியாது. ஒரு முறையாகவே கணக்கெடுக்கப்படும். அதனால்தான் இந்த அங்குசத்தை அவர் நீட்டத் தொடங்கினார். சரியான இஸ்லாமியத் தெளிவு நாட்டில் ஏற்படத் தொடங்காமல் இருந்திருந்தால் அவர் அப்போதே முடித்திருப்பார்.

//பாத்திமாவோ 'எதுவானாலும் பரவாயில்லை, நான், எனது முன்னேற்றத்தை கெடுத்துக்கொள்ள முடியாது' என்று உறுதியாக வீசிய கவண்கல் வேலை செய்தது//
இஸ்லாத்தில் அவருக்குள்ள உரிமையும் கடமையும் புரியத் தொடங்கி விட்டதாலோ என்னவோ அவரால் கவண்கல் வீச முடிந்தது. பொருள் முதல்வாதம் பேசிக் கொண்டிருந்தால், பொருளையும் இழந்து, யாராரிடமோ சிக்கி சின்னா பின்னமாகி இருப்பார்.

//நிறைய எடுத்துக்காட்டுகள் உள்ளன. தான் சம்பாதிக்கும் தொகையை தனது பெற்றோர்களுக்கு கொடுப்பதில் கட்டுப்பாடு இருக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக உறுதிமொழிகளைப் பெற்றுக்கொண்டு திருமணம் செய்து கொள்ளும் பெண்களும் இவர்கள் மத்தியில் வளர்ந்து கொண்டுதான் வருகின்றனர்.//
இஸ்லாமிய குடும்பவியலில் குடும்பத்தை நடத்த கணவர்தான் பொருள் கொண்டு வர வேண்டும். குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்புதான் மனைவிக்கு. தான் வேலை செய்து கொண்டே குடும்பத்தையும் சரி வர நிர்வகிக்க முடியும் என்ற நிலையிலிருக்கும் பெண்கள், தாம் பெறும் ஊதியத்தை அவர்கள் விரும்பிய நேர்மையான வழிகளில் செலவிடுவதில் தலையிட, கணவனுக்கு எவ்வித உரிமையுமில்லை. அவளாக விரும்பி அதிலிருந்து ஏதும் கொடுத்தால்தான் பெற்றுக் கொள்ளலாம். இவையனைத்தும் இஸ்லாமிய நெறிமுறைகளை பெண்கள் அறியத் தொடங்கியதால் விளைகின்ற நன்மைகள்தான்

//இசுலாமிய பெண் உழைப்பை முதலாளித்தவம்தான் தீர்மானிக்கிறதேயொழிய மதக் கோட்பாடுகள் இல்லை//
இதிலே முதலாளித்துவம் எங்கு வந்தது? அவ்வப்போது முதலாளித்துவம், பிரபுத்துவம், உழைக்கும் வர்க்கம். காலணியாதிக்கம், அடிமைத்தனம் இதில் எதையாவது போட்டால்தான் கட்டுரையை யார் எழுதினார் என்று தெரியும் என்பதற்காக போட்டிருந்தால்... சரிதான் பரவாயில்லை.

இன்னும் வரும்
Click here to bookmark this link.Channel Image04:18 அரபிக்குதிரையால் ஏமாந்த ஏமாறாதவன் அழைப்பு
ஏமாறாதவன் என்ற பெயரில் எழுதும் வலைப்பதிவரின் இந்த பதிவுக்கு என்னுடைய பதில் இது.)

வலைப்பதிவர் ஏமாறாதவன், நான் இஸ்லாத்தை வாழ்வியலாக ஏற்றுள்ளதால், எனக்காக மிகவும் வருந்தியுள்ளார். பாவம்.

//பதிவர் திரு.சுல்தான் அவர்கள் சமீபத்தில் இரு பதிவுகளை தந்திருக்கிறார். சவுதிதான் இஸ்லாமா என்று எழுதினார். பின்னர், திருப்தி இல்லாமல் அதன் இரண்டாம் பாகத்தையும் போட்டார். (இதை போட இரவு முழுக்க ஆனதாம். ஏனென்றால், அவர் தரப்பு வாதங்கள் எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை போலும்...)//
தேவையில்லாமல் இஸ்லாத்தை வம்புக்கிழுத்த ஒரு நண்பரின் பதிவுக்கு பதிலாக, என் முதல் பதிவை எழுதினேன். என் பதிவுக்கு அந்த நண்பர் தன் மறுப்பை பதிலாகப் பதிந்த பின், அதற்கு விளக்கமாக, அடுத்தொரு பதிவையும் அது சம்பந்தமாக வெளியிட நேர்நதது. ஏமாறாதவன் என்றால் இதற்கெல்லாம் வம்பு பேசத் தோன்றுமோ!

நான் ஏமாறாதவன் போல் நன்றாக எழுதத் தெரிந்த அறிவாளி இல்லைதான். தமிழில் வேகமாக தட்டச்சு செய்யவும் தெரியாது. இஸ்லாத்தை முழுதும் அறிந்தவனாக மார்தட்டிக் கொள்ளவுமில்லை. ஆதாரமில்லாத விடயங்களை எழுதினால், என் இஸ்லாமிய சகோதரனே என் தலையில் கொட்டுவான். அதனால் சில சமயம் தெரிந்தவர்களிடம் கேட்க நேரிடும் அல்லது தேட நேரிடும். பெரிய பதிவாகி விட்டதனால் தாமதம் ஆனது.

நான் குறிப்பிட்ட நேரம், என் உறங்கும் நேரத்தின் பெரும் பகுதி. இரவின் முழுமை என்பது நான் குறிப்பிட்ட நேரம்தான் என்பது ஏமாறாதவன் போன்ற அறிவாளிகளுக்கே வெளிச்சம்.

//திரு.சுல்தான் அவர்கள் மிகவும் முயன்று இஸ்லாமுக்கு அலங்காரம் செய்து அதன் ஈனங்களை மறைக்கப்பார்த்திருக்கிறார்.
இஸ்லாமின் கோட்பாடுகளின் கோரம் முஸ்லிம் அல்லாத எல்லோருக்கும் தெரியும்.//
இஸ்லாமிய கோட்பாடுகளின் அழகையும், மேன்மையையும், தமது கைகளாலேயே தம் கண்களை மறைத்துக் கொண்டவர்களாலும், தம் இதயங்களை பூட்டிக் கொண்டவர்களாலும் உணர முடியாதுதான். அவரது கைகளில் மறைத்து வைத்திருக்கும் ஈனங்கள்தான், இஸ்லாத்திலும் இருக்குமென நினைந்து, பரிதாபமாக ஏமாந்து நிற்கிறார் ஏமாறாதவன். பாவம். அவர் கண்களும் இதயங்களும் திறக்க இறைவன் அருளட்டும்.

அது போகட்டும்.

//இஸ்லாமிய பல்லாயிரக்கணக்கான அழுக்கின் ஒரு பாகத்தை திரு.சுல்தான் அவர்களின் சப்பைக்கட்டில் படித்தபோது சிரிப்பு வந்தது.//
உங்களுக்கு சிரிப்பு மூட்டிய பகுதிகளைப் பார்த்து, விளக்கம் சொல்லாமல் நீங்கள் மட்டும் சிரித்து, அதை மற்றவர்கள் மரைகழன்ற சிரிப்பாக யூகிக்க விடாதீர்கள். ஏமாறுவீர்கள் ஏமாறாதவன்!.

//அல்லாஹ் அரபிக்களை ஏன் இறைதூதராக தேர்ந்தெடுத்தார் என்று அல்லாஹ் சொல்வதை இந்த நல்ல மனிதர் பார்க்கவில்லை//
அல்லாஹ் என்ன சொன்னார் என்று தெரியாததால் ஏமாந்து விட்டீர்கள் ஏமாறாதவன்.
உலகத்தின் எல்லா பகுதிகளுக்கும் தன் தூதரை அனுப்பியதாகவும், அவனுடைய தூதுவர் வராத சமுதாயமே இல்லையென்றுமல்லவா சொல்கிறான். ஒவ்வொரு சமுதாயத்துக்கும் அவர்கள் பேசும் மொழி பேசக்கூடியவரையே தூதராக அனுப்பியதாக வேறு சொல்கிறான்.
பாவம் ஏமாறாதவன். இன்னும் கொஞ்சம் புரட்டுங்கள். நேர்வழி இன்னதென்று தெரியவும் கூடும்.

//ஒரு சவுதி பெண்ணை ஒரு பங்களாதேஷி கட்ட முடியுமா? இது குறித்து ஷரிய்யா என்ன சொல்கிறது என்று திரு.சுல்தான் அறிவாரா?//
அரபிகளுக்கு, அஜமியை (அரபியல்லாதவர்களை) விடவும், அதுபோல் அரபியல்லாதவர்களுக்கு, அரபியர்களை விடவும் எந்த மேன்மையுமில்லை. அவரவருடைய இறையச்சம்தான் மேன்மையை அறிவிக்கும் என ஷரீயா சொல்கிறது.
இறையச்சமில்லாத அழகான ஆண்மகனை விடவும், இறையச்சமுள்ள ஒரு அடிமை மேலானவன் என்றும் ஷரீயா சொல்கிறது.

அரபிகள் நமக்கு பெண் தராததற்கு காரணம் அப்பெண்களுக்குத் தேவையான வசதிகளைத் தர நம்மால் இயலாது என்பதால்தான். இந்திய மற்றும் பாகி, பங்காளி மக்கள் இஸ்லாம் என்ற பெயரில் செய்யும் அனாச்சாரங்களையும் அவர்கள் வெறுக்கிறார்கள். ஒவ்வொருவரும் தனக்கு அறிமுகமான, நாட்டில் சாதாரணமாக பழக்கத்திலுள்ள, தேவையானால் உடனே சென்று தட்டிக்கேட்கிற அல்லது ஆறுதல் தருகிற இடத்தில்தான் தன் பெண்ளைக் கொடுக்க விரும்புவர். வேறெந்தக் கட்டுப்பாடும் இல்லை.

இதெல்லாம் அரேபியாவில் மட்டுமில்லை, அமைந்தகரையில் உள்ள பெற்றோருக்கும் உள்ள நிலைதான். எல்லா நல்ல பெற்றோர்களும், தன் மகளுக்கு தான் கொடுத்த வசதிகளை விடவும் சிறந்த வசதிகளை தரக்கூடிய நல்ல மணமகனையே தேர்நதெடுக்க முயற்சிப்பர். திருமண வயதுடைய பெண் குழந்தைகள் உங்களுக்கு இருந்தால் அவர்களை ஏமாற்றமல் இருங்கள் ஏமாறாதவன்.

அரபிகளைக் கட்டுமளவுக்கு வசதிகளைப் பெற்றுள்ள நமது நாட்டவர்களும் தன் சுற்றத்திலேயே, தான் மிகவும் அறிந்தவர்களிலேயே, நாட்டில் சாதாரணமாக பழக்கத்திலுள்ளது மாதிரியே, தேவையானால் உடனே சென்று தட்டிக்கேட்கிற அல்லது ஆறுதல் பெருகிற இடமாகப் பார்த்துதான் மணமுடிக்கின்றனர்.

கண்ணைத் திறந்து கொண்டு பேசாமல் உங்கள் சுற்றத்திலேயே தேடுங்கள். நான் சொல்வது கொஞ்சம் புரியக்கூடும். புலம் பெயர்ந்தவர்களில், வேறு வழியில்லாமல், சில விதிவிலக்குகள் இருக்கும். அரபிகளிலும் அது அப்படித்தான்.

என் ஊர் லெப்பைக்குடிக்காடு. எனது ஊரில், எங்கள் தெருவில் வசித்த ஒரு முஸ்லீமுக்கு தன் மகளைத் திருமணம் செய்து கொடுத்தவர் துபையில் உள்ள அரபி. அந்த என் ஊர் சகோதரருக்கு பெண் பிறந்து, அதற்கும் திருமணமாகி, அது சமீபத்தில் குழந்தையும் பெற்று விட்டதாக கேள்வி. அவ்வளவு பழங்கதை இது. இன்னும் அரைத்த மாவையே அரைத்து..... ஏமாந்து..... அலுக்க வில்லையா? ஏமாறாதவன்!.

//இஸ்லாம் அரேபியர்களின் உலக ஆதிக்கத்திற்கான ஒரு இயக்கம் என்பது வெளிப்படை. இஸ்லாமிய மதத்தை விருப்பு வெறுப்பின்றி ஆராயும் எல்லோருக்கும் இது புரியும். அரேபியர்கள் உலக நாட்டாமைக்காக ஏற்படுத்திய ஒரு சூழ்ச்சியே இது என்று தெரிந்ததே//
இனிமேலாவது காய்தல் உவத்தலின்றி இஸ்லாத்தை ஆராய முற்படுங்கள். அதனால் நேர்வழி இன்னதென்று ஏமாறாமல் அறிய வாய்ப்பும் கைவரக்கூடும் ஏமாறாதவன்.

//இஸ்லாமிய மத ஆராய்ச்சியாளர்களில் அண்வர் ஷேக் அவர்களை அறியாதவர்கள் இருக்க முடியாது. அவர் நூல்களை படிக்காமல் இஸ்லாமியர்கள் இருக்க கூடாது என்று கருதுபவன் நான். திரு. சுல்தான் அவர்களைப்போல கண்களை மூடிக்கொண்டிருந்த வேளையில் என் கண்களை திறந்தவர் அவர்//
அன்வர் ஷேக்கை நான் படிக்கவுமில்லை. தற்போதைக்கு ஆர்வமுமில்லை. தேவையேற்படும் போது சொல்லி, வாங்கிக் கொள்கிறேன்.

உங்களுக்கு அம்பேத்கர், அம்பேத்கர் என்று ஒருவர் இருந்தார் தெரியுமா?. தற்போதைய ஆர்.எஸ்.எஸ் தலைவர்களோடு தலைவர்களாக மேடையில் படம் காட்டப்படுகிறதாம்!!. அவர் எழுதிய 'Riddles of Rama & Krishna' படித்துக் காட்டட்டுமா? அல்லது பதிவில் எழுதிக் காட்டட்டுமா?

இதை விடவும் சிறப்பாக 'Oh You Hindu Awake'என்ற தலைப்பில் 'Dr. Chatterjee. M.A., Ph.D. (USA)' அவர்கள் எழுதிய புத்தகம் இருக்கிறது. அது, 'ஓ! இந்துக்களே! விழித்தெழுங்கள்' என்று தமிழிலும் உள்ளது. வாசித்துக் காட்டட்டுமா? அல்லது பதிவுகளில் தொகுதி வாரியாக எழுதிக் காட்டட்டுமா?

இந்தப் புத்தகங்கள், உங்களைப் போன்ற பல பேரின் மூடியிருந்த அறிவுக் கண்ணைத் திறந்ததாம். நீங்களும் அறிவைப் பலப்படுத்திக் கொள்ளவும், கண் திறக்கவும் ஆர்வமாயிருந்தால் சொல்லுங்கள். தமிழிணைய அனுமதியும் பெற்றுத் தாருங்கள். படிக்க, என் கண்களே கூசுகிறது.

உங்களுக்கு இறைவன் கொடுத்த அறிவைப் பயன்படுத்துங்கள். நீங்களே ஆராய முற்படுங்கள். திருக்குர்ஆனும், ஹதீஸ் நூல்களும் தமிழிலேயே கிடைக்கின்றது. இராமாயணம், மகாபாரதம், பகவத்கீதை, மனுஸ்மிருதி முதலிய புத்தகங்கள் கூட தமிழிலும் உள்ளதாம். உதவிக்கு நல்லெண்ணத்தில் எழுதப்பட்ட அறிஞர்களின் ஆக்கங்களைப் பார்வையிடுங்கள். இது போன்ற திமிர் புத்தகங்களை (just for curiosity) படித்தவுடன் குப்பைக்குத் தள்ளுங்கள். கண்டதையும் பார்த்து ஏமாந்ததால்தான் இப்படி ஏமாறாதவன்(!) ஆகி விட்டீர்கள்.
இனியாவது சரியானதைப் படித்து, சரியான முறையில் விவாதியுங்கள். நேர்வழி பெறலாம்.

//பதிவில் எங்கேயோ போய்விட்டேன்//
ஆமாம். உங்களுடன் நானும்.

//திரு.சுல்தான் அவர்கள் இதைப்பார்த்து அதிர்ந்து போனால், மேலே இந்த ஹதீஸையும் பார்க்க வேண்டுகிறேன்//
ஏமாறாதவன் ஆனால் ஏமாந்து விட்டீர்கள்.
இதைப்பார்த்து அதிர்ந்து போக என்ன இருக்கிறது.?!!

முதலில் அறிந்து கொள்ளுங்கள். இஸ்லாம் என்பது இறைவனிடமிருந்து வந்த திருக்குர்ஆன் போதனைப்படியும், திருநபி அவர்களின் சொல், செயல், ஆங்கீகாரம் ஆகியவற்றிலிருந்தும் பெறப்படுவதுதான்.

நீங்கள் ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளது, நபி குழந்தையாக இருக்கும்போது, யாரோ ஒரு பெண் கண்ட கனவும், அதன் படி நடந்தவுடன் கிடைத்த மழையையும் பற்றி இருக்கிறது. அந்தப் பெண் குறிப்பிடும் நபியுடைய பாட்டனார் வெள்ளை நிறத்தவராயிருப்பார் என்று அடையாளமாகச் சொல்கிறார்.

இப்போது இன்னொரு முறை நீங்கள் எழுதியதை நீங்களே படித்துப் பாருங்கள். ஏன் எழுதினோம் என்று உங்களுக்கே கூச்சமாயிருக்கும். பாவம் ஏமாறாதவன்! உங்கள் மீது கழிவிரக்கம்தான் ஏற்படுகிறது.

//வேலூரில் ஒரு இஸ்லாமிய மாநாட்டுக்கு (ஒரு 200 பேர் இருக்கும்..) போயிருந்தேன்//
உங்களைப் போன்ற எண்ணமுள்ளோரை 'ஏதோ சொல்லப் போகிறார்கள். நாமும் போய்ப் பார்ப்போமே, கேட்போமே என' ஈர்த்ததே அந்த மாநாட்டின் வெற்றி என்றும் சொல்லலாம்.
அவர்கள் எந்த மாதிரியெல்லாம் விளம்பரம் செய்தார்கள் என்று சொன்னால், அடுத்த எங்கள் கூட்டத்துக்கு அந்த முயற்சியும் செய்கிறோம். உங்களை போன்ற பத்து பேரை திருத்த முடியுமா என்று பார்க்கலாம்.

//சுல்தான் அவர்களே, இந்த இன வெறியை பாருங்கள். பாப்பான் தோத்தான் இங்கு!!//
நானும் முதலில் விபரம் தெரியாமல் 'பார்ப்பனர்' என்றுதான் எழுதினேன். பாப்பான் என்றால் அவமரியாதை பார்ப்பனர் என்றால் அவ்வாறில்லை என நினைத்தேன். அதன் பின் ஒரு நண்பர் திருத்தினார். அவர்களை பிராமணர்கள் என்றழைப்பதையே அவர்கள் சரி காண்கின்றனர் என்று.
அதன் பின்னர் அவ்வாறே எழுதுகிறேன். தேவையில்லாமல் சிலருடைய மனதை வருந்தச் செய்வதெதற்கு?
அது சரி. நீங்களே பாப்பான் என்று எழுதுகிறீர்களே. பரவாயில்லையா?.

//இஸ்லாமிய கலீபாவுக்கு ஏற்ற தகுதிகளை இஸ்லாமிய சட்டத்தின்படி பார்ப்போமா...//
இதில் நீங்கள் முக்கியமென்று தடித்த எழுத்துக்களில் போட்டுள்ளதும் அதற்கு முன்னுள்ள வரியினதும் பொருள்
நபியவர்கள். தன்னுடைய உரையில்
உலக முடிவு நாள் வரும் வரை
1. இஸ்லாம் இருந்து கொண்டேயிருக்கும் அல்லது
2. 12 கலீபாக்கள்தான் வருவார்கள் அவர்கள் குறைஷி வம்சத்தவராயிருப்பர்.
என்று கூறினார்கள்.
இந்த 2வது விஷயத்தை கீழுள்ள மாதிரியும் எடுக்கலாம். அரபி தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெளியுங்கள். அதாவது உலக முடிவு நாள் வரை 12 குறைஷிக் கலீபாக்கள்தான் தோன்றுவர்.

இந்த மூன்றில் எதை எடுப்பது?. எதை எடுத்தாலும் அதற்கு கூடுதல் ஆதாரங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
உலக முடிவு நாளுக்கு சில காலம் முன்பு வரை இஸ்லாம் இருக்கும் என்று பல ஹதீஸ் உள்ளது. அதனால் அதை எடுத்தக் கொள்வோமே.

எனவே, நீங்கள் எழுதிய
//பெண்களை இழிவுபடுத்தும் இந்த சட்டம் ஒருபக்கம் இருக்கட்டும். அடிமைத்தனத்தை இன்றும் தூக்கி வால் பிடிக்கும் இந்த சட்டம் இருக்கட்டும். ஆனால், இஸ்லாத்தை ஆள ஒரு அரபி (அதுவும் முகம்மதுவின் சாதிதான் வேண்டுமாம்...) வேண்டும் என்பது எதற்காக//
என்பதெல்லாம் அபத்தங்களின் கூட்டுக்கலவை என்றாகி விட்டது. பாவம் சார் நீங்க. அடுத்த தடவை நிறைய home work செய்யுங்க. உங்கள் மூலம், அதாவது உங்களுக்கு நான் பதிலெழுதுவதன் மூலம், பல பேர் பயனடைய வாய்ப்பாயிருக்கும்.

//சவுதியின் தெருக்களில் குப்பை வாரும் ஆயிரக்கணக்கான அரபியல்லாத முஸ்லிம்கள் எப்போதுமே அரேபியர்களின் மலங்களை அள்ளுவதே அல்லாஹ்வுக்கு பிரியமானது.//
பெட்ரோல் வருவதற்கு முன், அவன் மலத்தை அவன்தான் அள்ளினான். இப்போது அவனிடம் இருக்கும் வசதிக்கு அது அவசியமில்லாமல் போய் விட்டது.
ஆனால் பாருங்கள். சொகுசுக் கழிவறைகளில் மலம் சுத்தப்படுத்திய அவனும், அவனுடைய முதலாளியும் உயர்வு தாழ்வில்லாமல் ஓரே தட்டில் உணவருந்துவதையும் (நோன்பு காலங்களில் சவூதிப் பள்ளிவாயில்களில் சாதாரணமாகக் காணக்கிடைப்பது), தொழும்போது உயர்வு தாழ்வின்றி அவன் தோளோடு அவன் தோளைச் சேர்த்து, அவன் காலோடு அவன் காலை உரசி நின்று தொழும் அதிசயத்தை. இதைத்தான் இஸ்லாம் உலகுக்குச் சொல்லி, செயல்படுத்துகிறது.

வசதி குறைந்தால், நாளை அவனும் சுத்தம் செய்ய நேரிடும். யாருக்காகவும் (அல்லது ஒரு குழவினருக்கு) இவ்வேலையை இஸ்லாம் ஒதுக்கி வைத்துள்ளது எனக் கூறுவது அயோக்கியத்தனமானது.
உங்களின் இந்த வாதம், தன் தலை முழுவதிலும் அப்பி இருக்கும் மலத்தை மறந்து (அல்லது மறைக்க), உன் காலின் பின்புறம் மண் ஒட்டியிருக்கிறதென்று ஏளனம் செய்வதைப் போன்றுள்ளது.
ஏமாறாதவனாய் இருந்தால் போதாது. மற்றவர்களை ஏமாற்றதவானாகவும் இருக்க வேண்டும் நண்பரே.

//அல்லாஹ் அரேபியர்களை மற்ற இனத்திரை விட மேலாக தேர்ந்தெடுத்தான்' என்று சொன்னதாக ஹதீஸ்களில்//
எந்த ஹதீஸ் புத்தகம். ஆங்கிலத்திலுள்ள சட்டம் நான்கில் பாதியைப் போட்டு மீதியை விழுங்கியது போல் தோன்றுகிறது.
அரபியல்லாதவரைவிட அரபிக்கு எந்த உயர்வுமில்லை, இறையச்சம் கூடுதலாய் இருந்தாலே தவிர. அதே போல, அரபியை விட அரபியல்லாதவருக்கும் எந்த உயர்வுமில்லை இறையச்சம் கூடுதலாய் இருந்தாலே தவிர என்ற கருத்தில் வரும் நபிமொழி, தெளிவாக மேற்கண்ட கூற்றை மறுத்துக் கொண்டிருக்கிறது.

//இதனால், இந்த அரேபிய இனவெறியை கொண்ட இஸ்லாம் ஹிட்லரின் நாஸியியக்கத்தை ஒத்தது//
எது? ஒவ்வொரு சமுதாயத்துக்கும் நபிமார்களைத் தேர்தெடுக்கும்போது அந்த சமுதாயத்தின் நல்ல குலத்திலிருந்து (தலையிலும், மூக்குச்சளியிலும் பிறந்ததனால் வந்த உயர் குலம் இல்லை. தான தர்மங்கள், மற்றவர்களுக்கு உதவுதல் போன்ற பண்பாட்டில் உயர் குலம்), நல்ல மனிதரை இறைவன் தேர்நதெடுப்பதாக நபி அறிவிக்கிறார்கள். இதில் என்ன தவறிருக்கிறதென்பதை ஏமாறாதவன்தான் தெளிவுபடுத்த வேண்டும்.

இதுதான் ஹிட்லரின் நாஜியிசத்தையும், யூதர்களின் இனவெறியையும் ஒத்ததா? படிப்பவர்கள்தான்
ஏமாறாதவனுக்கு சொல்லித் தர வேண்டும்.

//குரேஷி அரேபியர்களை விரோதிக்கும் எல்லோரையும் அல்லாஹ் தீர்த்துவிடுவாராம். அல்லாஹ்வை அரேபியருக்கு சண்டியர் வேலை செய்ய விட்டு விட்டார்கள்.//
இஸ்லாமிய சரிதத்தை கொஞ்சமும் புரட்டிப் பார்க்காமல், யாரோ எடுத்த வாந்தியை, விழுங்கி, இங்கே துப்பியிருக்கிறீர்கள்.

நீங்கள் ஆங்கிலத்தில் எழுதியதைப் பாருங்கள். கஹ்தான் என்பவரும் அரபிதான் ஆனால் குறைஷிக் குலத்தவரில்லை. இது அரபியருக்கும், அரபியரல்லாதவருக்கும் சொல்லப்பட்டதல்ல. குறைஷிக் குலத்தவர்க்கும் மற்ற அரபிகளுக்கும் சொல்லப்பட்டது.
இஸ்லாத்தின் ஆரம்ப காலங்களில் உயிர், உடைமை, மானம் எல்லாவற்றையும் கூடுதலாக அர்ப்பணித்தவர்கள் குறைஷிகள். அதோடு நிர்வாகத் திறமையும் கைவரப் பெற்றிருந்தார்கள்.
அன்சாரிகளின் தியாகத்தை நான் குறைத்து மதிப்பிடுவதாக பொருளில்லை. ஆனால் குறைஷிகளின் தியாகம் பல மடங்கு உயர்ந்தது. அத்துடன் இஸ்லாமிய விளக்கங்களை கூடுதலாக அறிந்தவர்களாகவும், அர்ப்பணிப்பு மனப்பான்மை கொண்டவர்களாகவும், இறைவனால் சொர்க்கத்துக்கு உறுதியளிக்கப்பட்டவர்களில் கூடுதலாகவும் இருந்தார்கள்.

தென் ஆப்ரிக்காவில் கறுப்பின மக்களுக்காக அதிக தியாகங்கள் செய்த நெல்சன் மண்டேலாவுக்குதான் அதிபர் பதவி தரப்பட்டது. அதுவே எல்லா மக்களின் எதிர்பார்ப்புமாயிருந்தது. இதுதான் உலக இயல்பு. இதுதான் இயற்கை.

(நீங்களும் இலங்கையைச் சேர்ந்தவரா? பொதுவாக சண்டியர் என்ற பதத்தை இந்தக்கருத்தில் இந்திய தமிழர்களாகிய நாங்கள் உபயோகிப்பதில்லை. சேலத்தைப் பற்றியெல்லாம் நீங்கள் எழுதியுள்ளதால், இங்கு நான் சாதாரணமாக இந்தியத் தமிழருக்கு பதிலளிப்பதாகவே எழுதியுள்ளேன்.)

//ஹஜ் என்ற ஒரு அபத்தத்தை ஏற்படுத்தியதும் அரேபியர்களின் பொருளாதாரத்தை மேன்படுத்தவே. (அப்போது பெட்ரோல் இருப்பது தெரியாது...).//
ஹஜ் என்பதை அபத்தமெனச் சொல்வது ஈனத்தனமான, கொச்சை வார்த்தை. வன்மையாக கண்டிக்கிறேன். ஒவ்வொரு வருடத்திலும் குறைந்தது இரண்டரை மில்லியன் முஸ்லீம்கள், அதை தங்களின் வாழ்க்கையில் கிடைத்த, கிடைத்தற்கரிய பாக்கியமாக, உயர்வாக எண்ணி அங்கே செல்கின்றனர். மற்றவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பு தாருங்கள்.

சரி. உங்கள் கேள்விக்கு வருவோம்!.
அப்போதுதான் பெட்ரோல் இருப்பது தெரியாது!. இப்போதுதான் தெரிந்து, வருமானம் தழைக்கிறதே.! வருடா வருடம் ஹஜ்ஜூக்காக ஆட்கள் வந்து, அவர்கள் வழிகாட்டு முறைகளை மீறி, மரணங்களைச் சந்தித்து, அதனால் அந்நாட்டுக்கு அவப்பெயர் வந்து.....,
இதெல்லாம் இல்லாமல், ஒவ்வொரு வருடமும் புதுப்புது ஏற்பாடுகளைச் செய்யாமல், ஒரு தொந்தரவுமில்லாமல் மூடி விடலாமே.

அந்த வருமானத்துக்கு பதில் பெட்ரோலை கொஞ்சம் கூடுதலாய் இறைத்தால் போகிறது. அல்லது துபை போல் தங்கள் நாட்டையும் வணிக மையமாக்குவதன் மூலம், வருமானத்தை பெருக்கிக் கொண்டு இருக்கலாமே.

ஏன் அவ்வாறு செய்வதில்லை என்பதை நல்ல கண்களுடன் பார்க்கப் பழகுங்கள். திருந்த வாய்ப்பிருக்கிறது.

//இதை திரு.சுல்தான் அவர்கள் சிந்தித்து இந்த அடிமை கோட்பாட்டை தகர்த்து எறியுமாறு கேட்டுக்கொள்கிறேன்.//
இஸ்லாம் என்பது நியாயமான, நீதியான, அனைவரையும் சமமாகப் பாவிப்பதாக உள்ள வாழ்க்கைத் திட்டம். ஆதலால், நீங்கள்தான், பிறந்து விட்டதால் போற்றுகின்ற, இதுவரை மாற்று வழியைப்பற்றி சிந்திக்கவே மறுத்த, உங்கள் எண்ணக் கோட்பாட்டை தூக்கி எறிய முயற்சிக்க வேண்டும் நண்பரே. எது எல்லா மனிதர்களுக்கும் நன்மை பயக்குமோ அதையே நாமிருவரும் தேர்ந்தெடுப்போம்.

உங்களுக்கும் எனக்கும் 'நேர்வழி இன்னதென்று அறியவும் - அதன்படி நடக்கவும், தீயது எது என்று அறியவும் - அதை விட்டு விலகவும்' அந்த ஒப்புவமையற்ற இறை அருளட்டும். நன்றி.

Posted by சுல்தான் at 12:48 PM

Labels: அரபிக்குதிரை, ஏமாந்த ஏமாறாதவன்


13 comments:
தப்பிப் பிறந்தவன்> said...
//..உங்களின் இந்த வாதம், தன் தலை முழுவதிலும் அப்பி இருக்கும் மலத்தை மறந்து (அல்லது மறைக்க), உன் காலின் பின்புறம் மண் ஒட்டியிருக்கிறதென்று ஏளனம் செய்வதைப் போன்றுள்ளது.
..//

சரியான பதிலடி கொடுத்திருக்கிறீர்கள் சகோ. சுல்தான் அவர்களே.

யார் யாருடைய மலத்தையெல்லாம் ஏமாந்து போய் தலையில் திணிச்சு வச்சுக்கிட்டு பேர மட்டும் ஏமாறாதவன் -ன்னு வச்சுக்கிட்டு பேஸ்த் அடிச்ச மாதிரி நிற்கிறார் இந்த நபர்.

இஸ்லாத்தை பார்த்து 'ஏமாறாத அதி புத்திசாலி' நண்பரே, நீங்கள் எந்த கொள்கையை ஏற்றுக் கொண்டிருக்கிறீர் என்று சொல்லத் தயாரா? இஸ்லாத்தை விட நீர் ஏற்றுக் கொண்ட கொள்கை எப்படி உசத்தி என்பதையும் சொல்ல முடியுமா? வெளியில கவுரமா சொல்லிக்கிற மாதிரி கொள்கைதானே அது?

இந்த தகவல்களையெல்லாம் கொஞ்சம் சொன்னேள்னா உங்க தலையில அப்பி இருக்குறது என்னன்றதை நாங்களும் கன்பர்ம் பண்ணிக்கலாமோல்லியோ?

-தப்பிப் பிறந்தவன்
(எங்க நாட்டில 85%த்தினருக்கு கிடைக்காத ஒரு அரிய வாய்ப்பு எனக்கு பிறப்பிலேயே கிடைத்ததால்..)

3:18 PM
சுல்தான் said...
வருகைக்கு நன்றி தப்பிப்பிறந்தவன்

3:22 PM
சுல்தான் said...
லக்கிலுக் கூறியது. (கை தவறி ரிஜெக்ட் ஆயிடுச்சு)
ஏமாறாதவன் போன்றவர்கள் காலத்துக்கும் இப்படித்தான் பேசுவார்கள். உங்கள் பண்பான பதில் அவர்களது மழுங்கிப்போன மூளைக்கு ஏறப்போவதில்லை. தயவுசெய்து அவர்களை கண்டுகொள்ளாமல் விட்டு விடுங்கள்

வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி லக்கிலுக்.
அவர் மாறினாலும், மாறாவிட்டாலும், அவர் போன்ற எண்ணமுள்ளவர்களுக்கு கருத்துக்கள் போய்ச்சேருமே. நன்றி

3:29 PM
அழகு said...
பாவம் தமிழ்மண அனாதை!

3:55 PM
சுல்தான் said...
வருகைக்கு நன்றி அழகு

3:57 PM
Anonymous> said...
Mr. emarathavan, you are wasting your time chaning typical muslim mentality. I had been in Saudi for many years I understood this long ago. Arabs are very very egoistic people. Read my blog for more info

10:34 PM
முஸ்லிம் said...
இஸ்லாத்தை ஆராய்ந்து எதுவும் கிடைக்காமல் ஏமாந்தவன் இப்போ அன்வர் ஷேக்கை அறியாதவர் யாரும் இருக்க முடியாதுன்னு முஸ்லிம்களை ஏமாத்த கிளம்பி இருக்கிறார்.

என்னத்தை சொல்ல..... எமாந்தவனின் மிக மட்டமான பிதற்றல்களையும் மிக நேர்த்தியாக எதிர் கொண்டு பதிலடி தரும் சுல்தான் தொடர்ந்து எழுதுங்கள்.

10:15 AM
சுல்தான் said...
வருகைக்கு நனறி அனானி. உங்கள் பிளாக் முகவரி தரவில்லையே!

வருகைக்கு நன்றி முஸ்லீம் அவர்களே. தங்களின் தொடர்ந்த ஊக்கப்படுத்துதல், எம்மை தொடர்ந்து எழுதத் தூண்டுகிறது. நன்றி

2:21 PM
சுவனப்பிரியன் said...
//உங்களுக்கும் எனக்கும் 'நேர்வழி இன்னதென்று அறியவும் - அதன்படி நடக்கவும், தீயது எது என்று அறியவும் - அதை விட்டு விலகவும்' அந்த ஒப்புவமையற்ற இறை அருளட்டும். நன்றி.//

Best comments
Suvanappiriyan

5:36 PM
சுல்தான் said...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுவனப்ரியன்.

12:40 PM
ஆப்படிப்பவன்> said...
//சுல்தான் said...
வருகைக்கு நனறி அனானி. உங்கள் பிளாக் முகவரி தரவில்லையே!
//
அது தெரியாத உங்களுக்கு. காய்கறி.ப்லோக்ஸ்பாட்.காம்.

2:12 PM
asalamone said...
சுல்தான் அவர்களுக்கு,

உங்களுடைய ஒரு பதிவில், இரவு முழுவதும் இருந்து,கண் முழித்து,அடுத்த நாள் வேலைக்கு செல்லும் நிலைமையில் இருப்பதாகவும் இருக்கும் நிலைமயில் நீங்கள் எழுதியதைபார்த்து, இந்த சுல்தானை இத்துடன் பதிவு எழுதுவதேயே ஓரம் கட்டி விடலாம் என்று தான் நண்பர் ஏமாறாதவன் காட்டமான சொல்களை சொல்லி ஓரம் கட்டி விடலாம் என்று நினைத்து கடைசியில் ஏமாறாதவன் இப்பம் ஏமாந்து நிற்கிறார்.

வல்ல இறைவன் நாட்டம் இருந்தால் ஏமாறாதவன், இனியும் ஏமாறும் கூட்டதில் இருந்து தன் கொள்கைகளை மாற்றிக்கொள்வார் என நினைக்கிறோம்.

2:41 PM
சுல்தான் said...
வருகைக்கு நன்றி அஸலம்ஒன்.

2:58 PM
நண்பன் said...
சுல்தான்,

இந்த அன்வர் ஷேக் என்பவர், தன் அரைகுறை புரிதல்களுடன், எதையாவது எக்குத் தப்பா சொல்லி வைத்தால், பிரபலமாகி விடலாம் என்ற எண்ணத்துடன் ஒரு பத்து வருடங்களுக்கு முன்பாக ஒரு புத்தகம் எழுதினார் - "Islam - An Arab National Movement" என்ற பெயரில்.

இந்த அன்வர் ஷேக்கின் தாத்தா ஒரு காஷ்மீரி பண்டிட். அவர் காலத்தில் முஸ்லிமாக மாறினார். பின்னர் தந்தையர் காலத்தில் அவர்கள் புலம் பெயர்ந்து இங்கிலாந்து சென்று விட்டனர். அவர் முழு மூச்சாக வியாபாரத்தில் ஈடுபட்டு, நன்றாக சம்பாதித்த பின்னர், வியாபாரத்தை விட்டு விட்டு, புத்தகம் எழுதத் தொடங்கினார். கொழுத்த பணம் இருந்தால், ஏதாவது ஏடாகூடம் செய்து புகழ் பெற வேண்டும் என்ற நினைப்புடைய மேலை வர்க்க சிந்தனை புகுந்த அவர் மனதில், நியாயமான உணர்வுகள் இருப்பதற்கு வாய்ப்பில்லை.

இஸ்லாத்தை ஒரு அரபிய இயக்கம் என்று தலைப்பிட்டு அவர் வைக்கும் வாதங்கள் எல்லாம் பித்துக்குளித்தனம் தவிர வேறில்லை.

அரபியர்களை முதன்மைப் படுத்த வேண்டும் என்பதற்காகத் தோற்றுவிக்கப்பட்ட மதம் இஸ்லாம் என்று கூறும் அவர், உலகப் பிரசித்தி பெற்ற, நபி பெருமானாரின் இறுதி உரையைப் பற்றி அறிந்திருக்கவில்லை. அத்தனை ஞானம் மிக்கவர்!!!

இதே அரபிகளிடம் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்காக, எத்தனை துயரங்களை முஸ்லிம்கள் அனுபவித்தனர் என்ற தகவல்கள் அற்றவர்.

இஸ்லாமியர்கள் நாடுகளின் எல்லைகள் கடந்து சிந்திக்கின்றனர் - மக்காவை நோக்கித் தொழுகின்றனர் -- காரணம் அரபியர்கள் வாழும் நாட்டை முன்னிலைப் படுத்தவே என்கின்றனர்.

நாடுகளின் எல்லைகளைக் கடந்து சிந்திப்பது இஸ்லாத்தில் மட்டுமல்ல - எல்லா உயர்ந்த நாகரீகங்களிலும் நடந்திருக்கிறது. யாதும் ஊரே, யாவரும் கேளீர் என்ற பாடலை எழுதியவர்கள் அரபிகள் அல்ல, சாட்சாத் நம் தமிழினத்தவர்களே.

உலகம் முழுமையும் ஒரு குடையின் கீழ், என்ற கொள்கையுடன் முயன்ற போர் வீரர்கல் எத்தனை பேர் - மாவீரன் அலெக்ஸாண்டர் என்று கொண்டாடும் வீரன், எல்லைகள் தாண்டிய சிந்தனை, கோடுகளற்ற வரைபடம் இவற்றிற்காகத் தானே முயன்றான்? கடல் சுற்றி, இன்னல் பட்டு, துயரம் மேற்கொண்டு, யூரோப்பியர்கள், கண்டம் கண்டமாக தேடியலைந்தது எதற்காக?

அதை விடுங்கள் - இன்று Global Village என்று உலகை சுருக்கிக் கொண்டவர்கள் யார்? இன்று மாய்ந்து மாய்ந்து எழுதும் இவர்கள் இந்த க்ளோபல் வில்லேஜ் என்ற தத்துவத்தை மாய்ந்து, மாய்ந்து தூக்கிப் பிடிக்கிறார்கள். அவர்கள் டாலர்களை மாற்றி, ரூபாய்களாக விசிறியடிக்கும் பொழுது, இவர்களுக்கு இந்த உலகளாவிய சிந்தனைகள் பிடிக்கின்றன.

இப்படி, எந்த தர்க்க விவாதங்களும் இன்றி, வெறும் பரபரப்பிற்காக, தற்புகழ்ச்சிக்காக எழுதப்பட்ட புத்தகம் - சீந்துவாரின்றி போன புத்தகம். அழுகலைத் தேடி அலையும் பறவை போல், இவற்றையெல்லாம் தேடியெடுத்து வெளியிட என்றே இந்துத்வம் இருக்கையில் இது ஏதோ ஒரு அற்புதமான புத்தகம் என்ற பிரம்மையை எழுப்புகின்றனர் இவர்கள்.

1985லிருந்து இன்று வரை, சென்னை, பெங்களூர், மும்பை, ஹைதரபாத், புதுடில்லி, இப்பொழுது துபாய், ஷார்ஜா, என நான் ஏறி இறங்காத புத்தகக் கடைகளே கிடையாது. இயல்பாகவே விமர்சன புத்தகங்களைத் தேடி வாங்குவது எனது பழக்கம் -
தடை செய்யப்பட்ட Salman Rushdieன் The Satanic Verses மற்றும் தஸ்லிமா நஸ்ரின் - Lajja இவற்றையெல்லாம் கூட வாங்கிப் படித்து விட்டேன். (ஸாடானிக் வெர்ஸஸ் புத்தகத்தை என் மனைவியின் தோழி ஒருவர் அமெரிக்காவிலிருந்து திரும்ப வரும்பொழுது வாங்கி வரச் செய்து,) பாதி படித்ததும் குப்பை என்று திருப்பிக் கொடுத்து விட்டேன்.

ஆனால் இந்த அன்வர் ஷேக் எழுதிய புத்தகம் எங்கும் எனது கண்ணில் பட்டதில்லை. இன்னும் சொல்லப் போனால், புத்தக வியாபாரிகளுக்கு அவர் ஒரு பொருட்டே அல்ல. இந்துத்வ வாதிகளின் கண்களுக்கு மட்டுமே இனியவராக தெரிகிறார்.

மேலும்,

எதற்கெடுத்தாலும், அரபிப் பெண்களை கல்யாணம் பண்ணித் தருவார்களா என்று பெண்களை விலை பேசத் துடிக்கும் இவர்கள் இதன் மூலம் பெண்ணியத்தை எத்தனை கேவலப்படுத்துகின்றனர் என்று அறியவில்லை.

சமத்துவம் என்பதற்காக பெண்களைப் பண்ட பரிமாற்றம் செய்து காட்ட வேண்டும் என்பது எத்தனை இழிந்த புத்தி என்பதை இவர்கள் உணர வேண்டும். எத்தனையோ வழிகளில் சமத்துவத்தைப் பற்றி வாதாட வழி இருக்கையிலே, பெணகளைத் தருவார்களா, என்று கேட்டு, பெண்டாளத் துடிக்கும் இவர்கள் தங்கள் ஆண்மையை இழிவுபடுத்திக் கொள்கிறார்களே அன்றி, அங்கு சமத்துவம் இல்லை.

இதே கேள்வியை அவர்களை நோக்கித் திருப்பிக் கேட்க முடியும், உடன் பிறந்த உள்ளூர்க்காரனிடத்திலே உங்கள் வீட்டுப் பெண்ணை கொடுக்க முடியாத சூழல் இருக்கையிலே, வேற்று ஒரு தேசத்திலே, வேறு வேறு கலாச்சாரப் பின்னணி, உணவு, உடை பழக்கவழக்கங்களைக் கொண்ட மக்கள் பெணகளைப் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கிறார்கள்? (பெண்கள் வாசிக்க நேர்ந்தால், மன்னிக்கவும். இவர்களிடத்தில் இப்படித் தான் பேச முடிகிறது.)

என்றாலும், எத்தனை நிதானம் உங்களிடம்!!!

பாராட்டுகள்

அன்புடன்
நண்பன்

1:03 AM
சுல்தான் said...
அன்பின் நண்பன், தங்களின் வருகைக்கு நன்றி.
தங்களின் மறுமொழியிலிருந்து பல தகவல்களை அறிய முடிந்தது.
என்னுடையதில் இன்னின்ன சிறப்புகள் என்று சொல்வது ஒரு ரகம்.
தான் வைத்திருப்பதில் சொல்ல நன்மையான காரியங்கள் ஏதும் இல்லாமல் (அல்லது தெரியாமல்), உன்னுடையதில் இது தவறு என்று ஒரு புரிதலும் இல்லாமல், தப்பும் தவறுமாகச் சொல்லும் விஷமிகள் இன்னொரு ரகம்.
எல்லாம் அறிந்ததுதானே நண்பனே!.
தங்களின் பாராட்டுக்கும் கருத்துகளுக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி.

Tue 17

Click here to bookmark this link.Channel Image16:42 அல்லாஹ்வின் அழகிய வாக்குறுதி! தினம் ஒரு குர்ஆன் வசனம்
'ஆணாயினும் பெண்ணாயினும் முஃமினாக இருந்து யார் (மார்க்கத்துக்கு இணக்கமான) நற் செயல்களைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க, தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம். இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம்'. (அந்நஹ்ல்:97).
Click here to bookmark this link.Channel Image01:49 நோன்பாளிக்கு உயரிய இடம் அல்பாக்கவி.காம்
நோன்பாளியின் மாண்பு நோன்பாளிக்கு சிறந்த பரிசாக சொர்க்கத்தில் ஓர் உயரிய இடம் உள்ளது.அது தான் ரய்யான் எனும் சிறப்பு வாசல் வழியாகச் செல்லும் மிகப்பெரும் பேறு வழங்கப்படுகிறது. அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள் :-                           “சொர்க்கத்தில் ரய்யான் என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது மறுமைநாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத்தவிர வேறு எவரும் அதன் [...]
Click here to bookmark this link.Channel Image01:37 குர்ஆன் கூறும் தேனீக்கள் அல்பாக்கவி.காம்
தேனீக்கள் பற்றிய அதிசயங்கள்! தேனீக்கள் பற்றி அருள் மறை குர்ஆன் கூறும் வியத்தகு செய்தி அறிவியலுக்கு ஒரு சவாலாக உள்ளது. இது குறித்து அறிவியல் அறிஞர்கள் ஆராய்ந்து பல உண்மைகளை வெளியிட்டு வருகின்றனர். தேனீக்களின் வாழ்க்கை முறையில் நடைபெறும் பல அதிசயங்கள் குறித்து வெளியிடும் பல உண்மைகளைக் காண்போம். இன்று நிலத்தடி நீர் மிக மிக அரிதாகி விட்டது. காரணம் மணல் கொள்ளை! ஆற்றுப் படுகையில் இருக்கும் அடுக்கடுக்கான மணல் தட்டுக்கள் தான் நிலத்தடி நீரின் பிடிமானங்களாக [...]
Click here to bookmark this link.Channel Image00:48 அரிய துஆக்கள்! அல்பாக்கவி.காம்
அரிய துஆக்கள் உணவு அபிவிருத்தி ஏற்பட வேண்டுமா? நீண்ட ஆயுளைப்பெற  வேண்டுமா? தனது உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமென்று யார் ஆசைப்படுகின்றாரோ இன்னும் தன் வாழ் நாள் நீள வேண்டுமென்று ஆசைப்படுகின்றாரோ அவர் தன் இரத்த பந்தத்தை சேர்த்து நடக்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி) அல்லாஹ் உங்களை பாதுகாக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா? யார் ஸுப்ஹுத் தொழுகையை தொழுகின்றாரோ அவர் (அன்றைய தினம்) அல்லாஹ்வின் பொறுப்பிலிருக்கின்றார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) உங்களின் பாவங்கள் அதிகமாக [...]

Mon 16

Click here to bookmark this link.Channel Image16:55 பரிசுத்த உள்ளமே அல்லாஹ்விடம் கண்ணியம் மிக்கது! தினம் ஒரு குர்ஆன் வசனம்
'(தீர்ப்பு நாளாகிய) அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டாது, எவரொருவர் பரிசுத்த உள்ளத்துடன் அல்லாஹ்விடம் வருகிறாரோ அவரைத் தவிர (அவர் கண்ணியம் அடைவார்)'. (அஷ்ஷுஃறா:88-89).
Click here to bookmark this link.Channel Image15:25 குர்ஆன் இறங்கிய மாதம் வழிகாட்டி
"ரமலான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும் தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை தீமைகளை) பிரித்தறிவிப்பதுமான அல்குர் ஆன் இறக்கியருளப்பட்டது.ஆகவே உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறார்களோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்கவேண்டும்."

-திருக்குர்ஆன் 2:185

Sun 15

Click here to bookmark this link.Channel Image17:30 அல்லாஹ்வையன்றி உலகில் வணங்கப்படும் அனைத்தும் ஷைத்தானிய பிம்பங்களே!! தினம் ஒரு குர்ஆன் வசனம்
'ஒவ்வொரு சமூகத்துக்கும், நிச்சயமாக நாம் ஒரு தூதரை அனுப்பியிருக்கிறோம், (அத்தூதர்கள் அச் சமூகத்திடம்), அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள், (அவனல்லாது வணங்கப்படும் ஷைத்தான்களாகிய அனைத்து) தாகூத்துகளிலிருந்தும் நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்'. (அந்நஹ்ல்:36).
Click here to bookmark this link.Channel Image11:17 புகார் சொல்லும்போதும் 'புனைந்து' சொல்லாத மாதரசி! ஸஹாபாக்களின் வாழ்வினிலே...
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இஸ்லாமிய வரலாற்றில் கொள்கையை காக்கும் பொருட்டு முதன் முதலாக செய்யப்பட்ட ஹிஜ்ரத் அபிசீனியா ஹிஜ்ரத்தாகும். இந்த தியாகப் பயணத்தில் ஜாஃபர் இப்னு அபீதாலிப் [ரலி] அவர்களும் அவர்களது அருமை மனைவி அஸ்மா பின்த் உமைஸ் [ரலி] அவர்களும் அடங்குவர். பின்னாளில் நபி[ஸல்] அவர்கள் மதீனா ஹிஜ்ரத் செய்து அங்கு இஸ்லாமிய சாம்ராஜ்யம் நிறுவி, யூதர்களை கைபர் போரில் வெற்றி கொண்ட சமயத்தில் அபிசீனியாவில் இருந்த முஹாஜிர்கள் மதீனாவை வந்தடைந்தனர். அப்படி மதீனாவை வந்தடைந்த அஸ்மா பின்த் உமைஸ்[ரலி] அவர்களுக்கும், தியாக வேங்கை உமர்[ரலி] அவர்களுக்கும் ஒரு வாக்குவாதம். அதாவது அபிசீனியா ஹிஜ்ரத் செய்தவர்கள் இறைத்தூதருக்கு நெருக்கமானவர்களா..? அல்லது மதீனா ஹிஜ்ரத் செய்தவர்கள் இறைத்தூதருக்கு நெருக்கமானவர்களா..? என்று. இனி ஹதீஸில் இருந்து பார்ப்போம்;

[அபிசீனியாவில் இருந்து]மதீனாவிற்கு வந்தவர்களில் ஒருவரான அஸ்மா பின்த் ஹுமைஸ்[ரலி] அவர்கள், நபி[ஸல்] அவர்களின் மனைவியார் அன்னை ஹஃப்ஸா[ரலி] அவர்களை சந்திப்பதற்காக சென்றார்கள். பிறகு உமர்[ரலி] அவர்கள் தமது புதல்வி ஹஃப்ஸா[ரலி] அவர்களை காண அவர்களின் இல்லத்திற்கு சென்றார்கள். அப்போது ஹஃப்ஸா[ரலி] அவர்களுக்கு அருகில் அஸ்மா பின்த் உமைஸ்[ரலி] அவர்கள் இருந்தார்கள். உமர்[ரலி] அவர்கள் அஸ்மா பின்த் உமைஸ்[ரலி] அவர்களை கண்டபோது இவர் யார்.? என்று [தம் மகளிடம்] கேட்டார்கள். இவர் அஸ்மா பின்த் உமைஸ்[ரலி] என்று மறுமொழி பகர்ந்தார்கள் ஹஃப்ஸா[ரலி]. இவர் அபிசீனியரா..? கடல் மார்க்கமாக [மதீனா] வந்தவரா என்று உமர்[ரலி] கேட்டார்கள். அதற்கு ஆம் என்று அஸ்மா பின்த் உமைஸ்[ரலி] அவர்கள் கூறினார்கள். அப்போது உமர்[ரலி] அவர்கள்,

உங்களுக்கு முன்பே நாங்கள் [மதீனாவிற்கு] ஹிஜ்ரத் செய்து வந்துவிட்டோம். எனவே உங்களை விட நாங்களே இறைத்தூதர்[ஸல்] அவர்களுக்கு உரியவர்கள் என்று கூறினார்கள். இதைக்கேட்டு அஸ்மா[ரலி] அவர்கள் கோபப்பட்டு, அல்லாஹ்வின் மீது ஆணையாக! அப்படியில்லை. நீங்கள் இறைத்தூதர்[ஸல்] அவர்களுடன் இருந்தீர்கள். உங்களில் பசித்தவர்களுக்கு அவர்கள் உணவளித்தார்க்கள். உங்களில் அறியாதவர்களுக்கு அவர்கள் அறிவூட்டினார்கள். நாங்களோ வெகு தொலைவில் இருக்கும் பகைவர்கள் உள்ள அபிசீனிய நாட்டில் அல்லது பூமியில் இருந்தோம். அல்லாஹ்வுக்காவும், அவனது தூதருக்காகவுமே இதைச்செய்தோம். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் சொன்னதை இறைத்தூதர்[ஸல்] அவர்களிடம் தெரிவிக்கும்வரை நான் எதையும் உண்ணவோ, குடிக்கவோ மாட்டேன். நாங்கள் துன்புறுத்தப்பட்டோம் , அச்சுறுத்தப்பட்டோம். இதை நான் இறைத்தூதரிடம் கூறுவேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் பொய் சொல்லவும் மாட்டேன். திரித்துக் கூறவும் மாட்டேன். நீங்கள் கூறியதை விட எதையும் கூட்டிச்சொல்லவும் மாட்டேன் என்றார்கள்.

பின்பு நபி[ஸல்] அவர்கள் வந்தபோது, அஸ்மா பின்த் உமைஸ்[ரலி] அவர்கள் 'உமர் [ரலி] இன்னின்னவாறு கூறினார்கள்' என்றார்கள். அதற்கு நபி[ஸல்] அவர்கள், அவருக்கு நீங்கள் என்ன பதிலளித்தீர்கள்..? என்று கேட்டபோது, அவருக்கு இன்னின்னவாறு பதிலளித்தேன் என்று அஸ்மா[ரலி] கூறினார்கள். அப்போது நபி[ஸல்] அவர்கள், உங்களைவிட அவர் எனக்கு உரியவர் அல்லர்; அவருக்கும் அவரது சகாக்களுக்கும் ஒரே ஒரு ஹிஜ்ரத் [செய்தசிறப்பு] தான் உண்டு. [அபிசீனியாவிலிருந்து] கப்பலில் வந்தவர்களே! உங்களுக்கு இரண்டு [அபிசீனியா-மதீனா] ஹிஜ்ரத் [செய்த சிறப்பு] உண்டு என்று கூறினார்கள்.
நூல்;புஹாரி எண் 4230

அன்பானவர்களே! நாம் ஒருவரைப்பற்றி ஒருவரிடம் புகார் அளிக்க செல்வோமாயானால், நாம் யார் மீது புகாரளிப்போமோ அவர்மீது அவர் சொன்னவை மட்டுமன்றி, சொல்லாதவைகளையும் இட்டுக்கட்டி நமது கருத்தை நிலைநாட்டிட, நமக்கு சாதகமான கருத்தை தீர்ப்பாக பெற்றிடவே முனைவது நம்மில் பலரது இயல்பாகவே உள்ளது. இயக்கங்கள் பிரிவுக்குப்பின் பின் ஒருவரை ஒருவர் சேற்றை வாரி வீசிக்கொள்வதும் இந்த அடிப்படையில்தான். ஆனால் இந்த பொன்மொழியிலோ, இறைத்தூதர் மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் வந்தபின்னால் மதீனாவுக்கு புலம்பெயர்ந்து வந்தவர்களில் தாமே முதலானவர் என்பதை வைத்து, நாங்கள்தான் இறைத்தூதருக்கு உவப்பானவர்கள் என்று எதேச்சையாக உமர்[ரலி] அவர்கள் கூறியதைக் கண்டு சீரும்வேங்கையாக பொங்கி எழுந்த அஸ்மா பின்த் உமைஸ்[ரலி]அவர்கள், உமர்[ரலி] அவர்கள் குறித்து இறைத்தூதரிடம் புகாரளிக்க செல்லும் போது சொன்ன வார்த்தை, பொய்யுரைக்கமாட்டேன்; திரித்துக் கூறமாட்டேன்; நீங்கள் சொன்னதை விட கூடுதலாக ஒரு வார்த்தை கூட கூறமாட்டேன் என்றார்களே! இது சஹாபாக்கள் தியாகிகளாக மட்டுமல்ல; வாய்மையாளர்களாகவும் திகழ்ந்துள்ளார்கள் என்பதற்கு வரலாறு கூறும் சான்றாகும். தனக்கு ஒருவனை பிடிக்கவில்லைஎன்றால் அவனை எங்ஙனமேனும் மண்ணை கவ்வவைக்க சபதமேற்று அவனைப்பற்றி 'கையில் மடியில்' போட்டு சொல்லும் கெட்ட குணத்தை கொண்டவர்களுக்கு இந்த அஸ்மா பின்த் உமைஸ்[ரலி] அவர்களின் வாழ்க்கை மிகப்பெரும் படிப்பினையாக உள்ளது.
Click here to bookmark this link.Channel Image05:44 ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-2-19) இஸ்லாம்குரல்.காம்
19, காலுறை மீது மஸஹ் செய்வதன் சட்டம் ஹதீஸ் 19: ஸிர்ரு பின் ஹுபைஸ்(ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: காலுறைகளின் மீது மஸஹ் செய்வது பற்றி கேட்பதற்காக நான் ஸஃப்வான் பின் அஸ்ஸால்(ரலி) அவர்களிடம் வந்தேன். ‘அப்பொழுது அவர்கள் ஸிர்ரே! என்ன விஷயமாக வந்துள்ளீர்? என வினவினார்கள்” ‘கல்வியைத் தேடித்தான் ” என்றேன். ‘கல்வியைத் தேடுபவருக்காக – அவரது தேடல் குறித்து திருப்தி அடைந்தவாறு மலக்குகள் தங்கள் இறக்கைகளைத் தாழ்த்துகிறார்கள்” என்றார்கள். நான் சொன்னேன்: மலம், சிறுநீர் கழித்த [...]

Sat 14

Click here to bookmark this link.Channel Image17:11 உலகையும், உயிர்களையும் படைத்தவனின் உயரிய நோக்கம்! தினம் ஒரு குர்ஆன் வசனம்
'மேலும்; ஜின்களையும், மனிதர்களையும் என்னை வணங்குவதற்காகவே அன்றி நான் படைக்கவில்லை. அவர்களிடத்தில் (என் படைப்புகளுக்காக) நான் யாதொரு உணவையும் நாடவில்லை, அன்றியும் எனக்கு அவர்கள் உணவளிப்பதையும் நான் நாடவில்லை'. (அத்தாரியாத்: 56).
Click here to bookmark this link.Channel Image09:42 பாவத்தைக் கண்டு பதறி பரிகாரம் கண்டவர்! ஸஹாபாக்களின் வாழ்வினிலே...
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அபூஹுரைரா[ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்;
நாங்கள் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களிடம் அமர்ந்திருந்த போது, ஒருவர் நபி[ஸல்] அவர்களிடம் வந்து, இறைத்தூதர்[ஸல்] அவர்களே நான் அழிந்துவிட்டேன் என்றார். அப்போது நபி[ஸல்] அவர்கள், உமக்கு என்ன நேர்ந்தது..? என்று கேட்டார்கள். நான் நோன்பு வைத்துக்கொண்டு என்மனைவியிடம் கூடிவிட்டேன் என்று கூறினார். அப்போது நபி[ஸல்] அவர்கள், விடுதலை செய்வதற்கு ஒரு அடிமை உம்மிடம் இருக்கிறாரா..? என்று கேட்டார்கள் . அதற்கு அவர், இல்லை என்று சொன்னார். தொடர்ந்து இரு மாதம் நோன்பு வைக்க உமக்கு சக்தி இருக்கிறதா..? என்று நபி[ஸல்] அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் இல்லை என்றார். அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்கு சக்தியிருக்கிறதா..? என்று நபியவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர் இல்லை என்று சொன்னார். நபி[ஸல்] அவர்களிடம் பேரிச்சம் பழம் நிறைந்த 'அரக்' எனும் அளவை கொண்டுவரப்பட்டது. அப்போது நபி[ஸல்] அவர்கள், கேள்வி கேட்டவர் எங்கே என்று கேட்டார்கள். நானே என்று அவர் கூறினார். இதைப்பெற்று தர்மம் செய்வீராக! என்று இறைத்தூதர்ஸல்] அவர்கள் கூறினார்கள். அப்போது அம்மனிதர், இறைத்தூதர்[ஸல்] அவர்களே! என்னைவிட ஏழையாக இருப்போருக்கா[நான் தர்மம் செய்யவேண்டும்]..? மதீனாவின் [கருங்கற்கள் நிறைந்த] இரு மலைகளுக்கும் மத்தியில் என் குடும்பத்தை விட பரம ஏழைகள் யாருமில்லை என்று கூறினார். அப்போது நபி[ஸல்] அவர்கள் தங்களின் கடவாய் பற்கள் தெரியும் அளவுக்கு சிரித்தார்கள்; பிறகு இதை உம்முடைய குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுத்து விடுவீராக! என்றார்கள்.
நூல்;புஹாரி எண்; 1936

அன்பானவர்களே! பாவங்கள் செய்வது மனித இயல்பு. ஆனால் செய்த பாவத்தை எண்ணி வருந்துவது ஒரு இறை நம்பிக்கையாளனின் பண்பு. ஒரு இறை நிராகரிப்பாளன் தான் செய்யும் பாவத்தை தன் மீது அமரும் கொசுக்கு நிகராக கருதுவான்; ஆனால் ஒரு இறை நம்பிக்கையாளன் தான் செய்யும் பாவத்தை தன் மீது ஒரு மலை சாய்வதைப் போல கடுமையாக கருதுவான். அதனால்தான், ஆதமின் மகன் பாவம் செய்யக்கூடியவனே; அவர்களில் சிறந்தவன் தவ்பா எனும் பாவமன்னிப்பு கோருபவன் என்ற நபிமொழிக்கேற்ப, இந்த ஸஹாபி உணர்ச்சி மேலிட ஒரு பாவம் செய்கிறார். அதுவும் அந்நியப் பெண்ணிடம் அந்த தவறை செய்யவில்லை. அவருக்கு ஹலாலான மனைவியிடமே செய்கிறார். ஆனாலும் ரமளானில் பகலில் நோன்பு நோற்ற நிலையில் செய்ததால்தான் பாவமாகியது. அந்த பாவம் அவரும்- அவருடைய மனைவியும் தவிர வேறு எவரும் அறியாத நிலையிலும் கூட தான் செய்த பாவத்தால் கைசேதப்பட்டு தான் 'நாசமாகி' விட்டதாக புலம்பிக்கொண்டு நபியவர்களிடம் ஓடோடி வருகிறார். நபியவர்களிடம் பரிகாரம் காண்கிறார். இதுதான் ஒரு இறை நம்பிக்கையாளின் பண்பாகும். சஹாபாக்கள் பாவம் செய்திருக்கிறார்கள் பார்த்தீர்களா?
என்று அவர்களை குற்றவாளிகளாக காட்ட இந்த ஹதீஸை சிலர் சொல்வார்கள். ஆனால் இந்த ஹதீஸில் அவர்கள் பாவத்தை செய்து விட்டு துடித்த அந்த துடிப்பை; செய்த பரிகாரத்தை மறைத்து அல்லது மறந்து விடுவார்கள். எனவே சஹாபாக்கள் இயன்றவரை பாவம் தவிர்த்திருக்கிறார்கள். அதையும் தாண்டி மனிதன் என்ற முறையில் தப்பித்தவறி செய்த பாவத்திற்காகவும் வருந்தி தவ்பா செய்துள்ளார்கள். பரிகாரம் கண்டுள்ளார்கள். எனவே பாவம் செய்யும் ஒவ்வொருவரும் பாவத்தை நஞ்சென வெறுக்கவேண்டும். செய்த பாவத்திற்கான மன்னிப்பை அல்லாஹ்விடம் கேட்கவேண்டும். அதன் மூலமே நாம் நஷ்டத்திலிருந்து விடுபடமுடியும் என்பதற்கு இந்த நபித் தோழரின் வாழ்வு மிகச்சிறந்த படிப்பினையாக நமக்கு உள்ளது.

அல்லாஹ், அந்த நபித் தோழரை பொருந்திக்கொள்வானாக! நம்மை பாவத்திலிருந்தும் காப்பானாக!!
Click here to bookmark this link.Channel Image05:50 தீர்வை நோக்கி(இஸ்லாம் கூறும் பிறைக்கணக்கு)-மேலப்பாளையம் LUNAR CALENDAR / சந்திர நாட்காட்டி

தீர்வை நோக்கி(இஸ்லாம் கூறும் பிறைக்கணக்கு) Towards Solution (Islamic Lunar Calendar) எனது அடியார்களுக்கு நற்செய்தி கூறுவீராக! அவர்கள் சொல்லை செவிமடுத்து அதில் அழகானதை பின்பற்றுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் நேர்வழி காட்டினான். அவர்களே அறிவுடையவர்கள். (குர்ஆன் 39:17-18)   

நாள்: 27-ஷஃபான்-1431, சனிக்கிழமை (07.08.2010) 27-Shabaan-1431, Saturday (07.08.2010)

நேரம்: மாலை 8:30 மணிமுதல் / From 8.30 P.M

இடம்: பஜார் திடல், மேலப்பாளையம்

PART 1 / பாகம்-1

பதிவிறக்கம்/DOWNLOAD

PART 2 / பாகம்-2

பதிவிறக்கம்/DOWNLOAD

PART 3 / பாகம்-3

பதிவிறக்கம்/DOWNLOAD

PART 4 / பாகம்-4

பதிவிறக்கம்/DOWNLOAD

நிகழ்ச்சி [...]

Click here to bookmark this link.Channel Image05:00 முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும் வழிகாட்டி
“இறை நம்பிக்கையுடன் நன்மையைக் கருதி ரமலானில் நோன்பு நோற்பவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகிறது.” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்கள்: புகாரி, முஸ்லிம்

Fri 13

Click here to bookmark this link.Channel Image16:45 அல்லாஹ்வின் பாதையில் செலவிடுதலுக்கான உவமையும், அல்லாஹ்வின் அறிவுரையும். தினம் ஒரு குர்ஆன் வசனம்
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். அல்லாஹ்வின் பாதையில் எவர் தங்கள் செல்வத்தைச் செலவிட்ட பின்னர், அதைத் தொடர்ந்து அதைச் சொல்லிக் காண்பிக்காமலும், அல்லது (வேறு விதமாக) நோவினை செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு அதற்குரிய நற்கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் உண்டு. இன்னும் - அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை அவர்கள் துக்கமும் அடையமாட்டார்கள். (அல்குர்ஆன்: 2:261,262)

Thu 12

Click here to bookmark this link.Channel Image17:36 அல்லாஹ்வே நம்பிக்கைக் கொண்டவர்களின் பாதுகாவலன். தினம் ஒரு குர்ஆன் வசனம்
அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன் (ஆவான்) அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகின்றான். ஆனால் நிராகரிப்பவர்களுக்கோ - (வழி கெடுக்கும்) ஷைத்தான்கள் தாம் அவர்களின் பாதுகாவலர்கள். அவை அவர்களை வெளிச்சத்திலிருந்து இருள்களின் பக்கம் கொண்டு வருகின்றன. அவர்களே நரகவாசிகள்; அவர்கள் அதில் என்றென்றும் இருப்பர். (அல்குர்ஆன்: 2:257)
Click here to bookmark this link.Channel Image02:59 ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-2-16,17,18) இஸ்லாம்குரல்.காம்
16,17,18 சூரியன் மேற்கிலிருந்து உதித்தால்! ஹதீஸ் 16: அபூ மூஸா அல் – அஷ்அரி(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நிச்சயமாக அல்லாஹ், பகலில் பாவம் செய்த மனிதன் பாவமீட்சி தேடட்டும் என்பதற்காக இரவில் தனது கையை விரித்து வைக்கிறான். இரவில் பாவம் செய்தவன் பாவமீட்சி தேடட்டும் என்று பகலில் கையை விரித்து வைக்கிறான். (இது) சூரியன் மேற்கில் இருந்து உதயமாகும் வரையில் (நடந்து கொண்டிருக்கும்) (நூல்: முஸ்லிம்) ஹதீஸ் 17: அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் [...]

Wed 11

Click here to bookmark this link.Channel Image18:55 காஃபிர்கள் வெறுத்த போதிலும் உண்மையின் பக்கம் செல்ல முஃமினுக்கு நேர்வழி காட்டும் அல்லாஹ். தினம் ஒரு குர்ஆன் வசனம்
(ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர். அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான். அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான். எனினும் அவ்வேதம் கொடுக்கப் பெற்றவர்கள், தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள். ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப் புறக்கணித்துவிட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர்வழி காட்டினான். அவ்வாறே, அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகிறான். (அல்குர்ஆன்: 2:213)
Click here to bookmark this link.Channel Image13:42 நோன்பு வழிகாட்டி
"ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது. (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோராய் ஆகலாம். 

-திருக்குர்ஆன் 2:183
Click here to bookmark this link.Channel Image02:42 சவூதியில் பிறை ஆய்வு கூட்டம் LUNAR CALENDAR / சந்திர நாட்காட்டி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

சவூதியில்  வாழ்கின்ற மக்கள் மத்தியில்  இஸ்லாமிய அடிப்படையிலான  நாட்காட்டியை அறிமுகப்படுத்தும் ஒரு நிகழ்ச்சியாக அல்கோபர் பகுதியில்  இந்நிகழ்ச்சி சவூதியில் செயல்படும் இந்திய ஹிஜ்ரா கமிட்டியால் நடத்தப்பட்டது.  இதில் இஸ்லாம் கூறும் சட்ட  திட்டங்களின் அடிப்படையில் முன் கூட்டியே நாட்காட்டியை (Calendar) நாம் கணக்கிட்டுக்கொள்ளலாம் என்ற தலைப்பிற்கு சம்மந்தப்பட்ட சர்வதேச தேதிக்கோடு என்ற தலைப்பில் பல சிந்தனையாளர்கள் இதில் உரையாற்றினார்கள்.

நாள்:18 துல்காயிதா 1430 வியாழக்கிழமை (5.11.2009)

தலைப்பு: சர்வதேச தேதிக்கோடு (INTERNATIONAL DATELINE)

இடம்: அல்கோபர் – சவூதி [...]

Tue 10

Click here to bookmark this link.Channel Image16:55 அல்லாஹ்வை முழுமையாக நம்பி அவனிடம் மட்டுமே பிரார்த்தித்தால்... தினம் ஒரு குர்ஆன் வசனம்
(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; "நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன், அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும், என்னை நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்" என்று கூறுவீராக. (அல்குர்ஆன்: 2:186)

Mon 09

Click here to bookmark this link.Channel Image16:38 நோன்பு கால இரவில் மனைவியுடன் கூடுவது அனுமதிக்கப்பட்டதா? தினம் ஒரு குர்ஆன் வசனம்
நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான். அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான். எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள். இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள். பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்; இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள் - இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்;. அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள். இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான். (அல்குர்ஆன்: 2:187)
Click here to bookmark this link.Channel Image13:46 துன்பம் ஏற்படும் போது.. வழிகாட்டி
(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்" என்று கூறுவார்கள். 
-திருக்குர்ஆன் 2:156
Click here to bookmark this link.Channel Image09:28 1431 ஷஃபான் மாதத்தின் 29 நாளுடைய பிறை LUNAR CALENDAR / சந்திர நாட்காட்டி

அஸ்ஸலாமு அலைக்கும்

அல்லாஹ் தன் திருமறை 36:39 ல் சந்திரனின் நிலைகளை பற்றி கூறும் போது கீழ்கண்ட வாறு கூறுகின்றான்.

وَالْقَمَرَ قَدَّرْنَاهُ مَنَازِلَ حَتَّى عَادَ كَالْعُرْجُونِ الْقَدِيمِ

இன்னும்  உலர்ந்து வளைந்த  பேரீத்த பாளையை  போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம் என கூறியுள்ளான்.

சந்திர மாதத்தில் நாம் பிறையை பார்க்க முடிகின்ற கடைசி நிலைக்கு பெயர்தான் உர்ஜுனல்  கதீம் என நம்மால் [...]

Click here to bookmark this link.Channel Image02:18 மக்களை மடையர்களாக்கும் பொய்யர்களான வேதாந்திகள்! அத்தாட்சிகள்

Sun 08

Click here to bookmark this link.Channel Image18:02 நோன்பின் பலனை அறீவீர்களானால்... தினம் ஒரு குர்ஆன் வசனம்
(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்; எனினும் (கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும். எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறீவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்). (அல்குர்ஆன்: 2:184)
Click here to bookmark this link.Channel Image15:09 இது குற்றாலம் கொட்டும் காலம் எழுத்தோவியங்கள்
(இரண்டரை ஆண்டுகளுக்கு முன் அன்புடன் மடலாற்குழுமத்தில் "இது குற்றாலம் கொட்டும் காலம்" என்ற தலைப்பில் நிகழ்வுற்ற கவியரங்கில் பாடியதிக் கவிதை. (மரபுப்பாக்கள் முயன்று கற்ற நேரம் அது)இறைவாழ்த்து*உற்சாகம் பொங்கிவர உள்ளத்தில் நீரருவி சொற்களும் தித்திக்கும் செந்தமிழ் - நற்கருணை வல்லோனே நீயளிக்கும் வாய்ப்பிதுவே என்கவிதைச் சொல்லால் அருவிகள் செய். *தமிழ்வாழ்த்து*பேச்சாய் எழுத்துமாய் பேருலகில் வாசம்நீ

Sat 07

Click here to bookmark this link.Channel Image13:54 தர்மங்கள் வழிகாட்டி
"இரு மனிதர்களுக்கிடையில் நியாயமாக நடந்து கொள்வது ஒரு தர்மமாகும். வாகனத்தின் மீது ஏறுகின்ற ஒருவரை அதன் மீது ஏற்றி விடுவது ஒரு தர்மமாகும். அதுபோலவே அதன் மீது அவருடைய சுமைகளை ஏற்றி விடுவதும் ஒரு தர்மமாகும். ஒரு நல்ல வார்த்தை பேசுவதும் ஒரு தர்மமாகும். தொழுகைக்காக நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு தர்மமாகும். ஊறு விளைவிக்கக் கூடிய பொருளொன்றை நடைபாதையிலிருந்து அப்புறப்படுத்துவதும் ஒரு தர்மமாகும்."
- நபி (ஸல்) 

நூல்கள்: புகாரி, முஸ்லிம்

Fri 06

Click here to bookmark this link.Channel Image13:45 தற்செயலாய் வீடு உருவாகுமா? எதிர்க்குரல்


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின். 

Update:
This article has been updated on 7th August 2010 at 20.20 hrs...


ஏ, பி என்று இருவர் ஒரு காட்டிற்குள் சென்றனர். அங்கே ஒரு வீட்டை கண்டனர். ஏ உடனே ஒரு நோட்டை எடுத்து குறிப்பெடுக்க ஆரம்பித்தார்.

பி: (ஆச்சர்யத்துடன்)  என்ன செய்கின்றீர்கள்?

ஏ: இவ்வளவு அழகான வீடு நிச்சயமாக இயற்கையால் பல லட்ச ஆண்டுகளாக உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்......அது சம்பந்தமாகத்தான் குறிப்பெடுத்து கொண்டிருக்கின்றேன்.....

பி: இது அறிவுக்கு ஒத்து வரவில்லை. இதை யாராவது கட்டியிருக்க வேண்டும்...

ஏ: எப்படி அவ்வளவு உறுதியாக கூறுகின்றீர்கள்? இயற்கையால் இந்த வீடு உருவாகியிருக்க வாய்ப்பில்லையா?

பி: ஆம். உள்ளே வாருங்கள்....(உள்ளே செல்கின்றனர்). இங்கே பாருங்கள், அறைகள் எல்லாம் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருகின்றன. இயற்கை தற்செயலாக ஏதாவது ஒரு உருவத்தை உருவாக்கலாம், ஆனால் நேர்த்தியான ஒரு அமைப்பை பலவித கணக்குகளோடு உருவாக்க முடியுமா?   

ஏ: ஏன் முடியாது? 

பி: அந்த அறைக்குள் செல்வோம் வாருங்கள்...(ஒரு அறைக்குள் செல்கின்றனர், அங்கே உள்ள ஒரு split A/C யை சுட்டி காண்பித்து)...இதோ பாருங்கள், இந்த குளிர் சாதன இயந்திரத்தை....இது உங்கள் கணக்குப்படி தானாகவே உருவாகி, பின்னர் சுவரில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தன்னை அமர்த்தி கொண்டு, அதற்கு பக்கத்தில் இருக்கும் power supply யுடன் தானாகவே இணைந்து ஒரு முழுமையான வேலை செய்யும் இயந்திரமாக வந்திருக்க வேண்டும். இது லாஜிக் என்கின்றீர்களா? இது அறிவியலா? 

இயற்கை இந்த அளவு ஒரு நேர்த்தியான working சிஸ்டத்தை உருவாக்கும் என்பது உங்களுக்கு சரியென படுகின்றதா?            

இது போலவே இந்த வீட்டிற்கு அடிப்படை போடுவதிலிருந்து, plumping, wiring என்று அனைத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்...      

ஏ: இல்லை, நீங்கள் சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. யாராவது ஒன்றை உருவாக்கினார் என்று சொன்னால் அது அறிவியலில்லை....தற்செயலாக என்று கூறுவது தான் எனக்கு சரியென படுகின்றது....நீங்கள் அறிவியலுக்கு முரண்படுகின்றீர்கள்....நீங்கள் அறிவியலுக்கு எதிரி...  

பி: நான் சொல்வதில் லாஜிக் இல்லையா?...சரி உங்கள் வாதத்திற்கே வருவோம். உங்கள் கூற்றுக்கு என்ன ஆதாரம் வைத்துள்ளீர்கள்?....இந்த கட்டிடம் உங்கள் வாதப்படி உருவாகும் போது நீங்கள் பார்த்தீர்களா? இல்லை வேறு ஏதாவது இப்படி உருவாகும் கட்டிடத்தை காட்ட முடியுமா?...

ஏ: இப்படி மற்றொரு கட்டிடம் உருவாக லட்சக்கணக்கான ஆண்டுகள் ஆகும். நம்மால் பார்க்க முடியாது...

பி: ஒரு ஆதாரமும் இல்லை என்று இப்படி சுற்றி வளைத்து சொல்கின்றீர்கள்....அப்படித்தானே.... ஆதாரமே இல்லாமல் நம்புவதற்கு பெயர் அறிவியலா?  

ஏ: நீங்கள் என்ன சொன்னாலும் சரி. யாராவது இதை உருவாக்கினார் என்று நீங்கள் சொன்னால் அதை என்னால் நம்ப முடியாது. இது தற்செயலாக தான் உருவாகியிருக்க வேண்டும்....அவ்வளவுதான்...

உங்களுடன் பேசுவதெல்லாம் டைம் வேஸ்ட். நீங்கள் இப்படியே பேசி அறிவியலுக்கு எதிராக இருங்கள். என்னைப் போன்றவர்கள் உங்களை பற்றி கவலைப்பட போவதில்லை...

பி: நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளீர்கள்....ம்ம்ம்... மிக்க மகிழ்ச்சி...   

.....பிரிந்து சென்று விடுகிறார்கள்...

பிறகு ஏ, எப்படி அந்த வீடு தற்செயலாய் உருவாகியிருக்கும் என்பதைப் பற்றிய தன் ஆராய்ச்சியை (???) தொடங்குகிறார்...

ஒரு மின்னல் வெட்டியதால் மண், சிமென்ட், தண்ணீர் எல்லாம் ஒன்றாக கலந்து சிமென்ட் கலவை உண்டாகி, பின்னர் காற்று இந்த பக்கமாக பலமாக அடித்ததால் சிமென்ட் கலவை செங்கல்லோடு சேர்ந்து ஒருபக்க சுவர் உண்டாகி, பின்னர் காற்று அந்த பக்கமாக பலமாக அடித்ததால் அந்த பக்க சுவர் உண்டாகி என்று மிக அற்புதமாக தன்னுடைய ஆராய்ச்சியை வழிநடத்தி செல்கின்றார்.  

என்ன? வீட்டின் அடிப்படை பற்றி எப்படி எழுதினார் என்று கேட்கின்றீர்களா?....

அதாவது, ஒரு சூறாவளி எங்கோ இருந்த TMT BAR கம்பிகளை (கம்பிகளும் தற்செயலாய் உருவானவைதான், அந்த அளவுடன், அந்த எடையுடன், அந்த நீளத்துடன்...)  அப்படியே தன்னோடு கொண்டு வந்து, அவற்றை அந்த கட்டிட இடத்தில் சொருகி விட்டு சென்றதாம்.    

இப்படியாக தன்னுடைய ஆராய்ச்சி கட்டுரையை முடித்து, அதனை, தன்னைப் போலவே கருத்துள்ளவர்கள் இருக்கக்கூடிய சங்கத்தில் சமர்ப்பித்தார் ஏ.

சிலபல நாட்கள் சென்ற பிறகு 'பி'க்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு. அழைத்தது ஏ தான். தன்னுடைய ஆய்வுக் கட்டுரை நல்ல வரவேற்பை பெற்றதாகவும், அந்த கட்டுரைக்காக தனக்கு விருது அளிக்கப்படுவதாகவும், அந்த விழாவில் நிச்சயம் பி பங்குக்கொள்ள வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தார். 

'பி'யும் சென்றார். தடபுடலாக நடந்து முடிந்தது விருது வழங்கும் விழா. நிகழ்ச்சி முடிந்ததும் 'ஏ'விடம் கேட்டார் பி... 

"வாழ்த்துக்கள்.... அடுத்து என்ன?"

"அடுத்ததா......ஒரு நகரமே எப்படி தற்செயலாய் உருவாகியிருக்கும் என்பது பற்றி தான் அடுத்த ஆய்வு...."

அவ்வளவுதான். அதிர்ச்சியில் உறைந்தார் பி..........................

"என்ன?...மிக சிக்கலான கட்டமைப்பையும், செயல்பாட்டையும் கொண்ட ஒரு நகரம் தற்செயலாய் உருவாகுமா?.......நம் உடலில் உள்ள மில்லியன் கணக்கான செல்கள் ஒவ்வொன்றும் ஒரு நகரத்திற்கு நிகரான கட்டமைப்பையும், செயல்பாட்டையும் கொண்டுள்ளதாக கேள்விப்பட்டிருக்கின்றேனே?....ஒரு வீடே தற்செயலாக உருவாக வாய்ப்பில்லை எனும்போது ஒரு நகரம் எப்படி........................." என்று தனக்குள் கேட்டவராய், "கற்பனை வளம் இருந்தால் போதும் போல" என்று நினைத்துக்கொண்டே நடையை கட்டினார். 

அந்த சங்கத்தை விட்டு வெளியேறும் சமயம், வரவேற்பறையில் தன் நண்பனை பார்க்கின்றார் பி.

"நீ என்னப்பா செய்கின்றாய் இங்கே?...அது என்ன கையில்? நோட்டா? என்ன எழுதிக் கொண்டிருக்கின்றாய்?' 

"ஒ அதுவா, எப்படி ஒரு பஸ் தானாகவே உருவாகியிருக்கும் என்பது பற்றி ஆய்வுக்கட்டுரை எழுதிக்கொண்டிருக்கின்றேன்...."

"டேய் நீயுமா......................."

"அட நீ ஒண்ணுப்பா...இப்படியெல்லாம் எழுதினாத்தான் இந்த சங்கத்துல உறுப்பினரா இருக்க முடியும்...ஒரு complete system தானாக உருவாக வாய்ப்பில்லைன்னு எனக்கு நல்லாவே தெரியும்....இதெல்லாம் சும்மா ஜாலிக்குதான்.... கண்டுக்காதே"

"உனக்கே தெரியும்னு சொல்ற...அப்புறம் ஏன் இன்னும் இந்த சங்கத்துல உறுப்பினரா இருக்கணும்னு ஆசப்படுற" 

"என்னப்பா தெரியாத மாதிரி கேட்குற. இவங்களுக்கு தான் ஆராய்ச்சிக்காக பணம் அதிகம் வருது. இங்க இருந்தாதான் நல்லா காசு பார்க்க முடியும்"  

"பொழைக்க தெரிந்தவன்டா நீ" என்று சொல்லி புன்னகைத்துக்கொண்டே அந்த இடத்தை விட்டு வெளியேறுகிறார்  பி...........


இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.......


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ. 
                      
Click here to bookmark this link.Channel Image07:56 உம்மஹாத்துல் முஃமினீன்களின் தியாகம்! ஸஹாபாக்களின் வாழ்வினிலே...
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

[ஒருமுறை] அபூபக்கர் அஸ்ஸித்தீக்[ரலி] அவர்கள் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் வீட்டிற்கு வந்து உள்ளே வர அனுமதி கேட்டார்கள். அப்போது மக்களில் பலர் தங்களில் எவருக்கும் உள்ளே செல்ல அனுமதி கிடைக்காமல் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் வீட்டின் வாசலிலேயே அமர்ந்திருப்பதை கண்டார்கள். அனுமதி கிடைத்ததும் அபூபக்கர்[ரலி] உள்ளே சென்றார்கள். பிறகு உமர்[ரலி] அவர்கள் வந்து உள்ளே செல்ல அனுமதி கேட்டார்கள். அவர்களுக்கும் அனுமதி கிடைத்தது.[அவர்களும் உள்ளே நுழைந்தார்கள்] அப்போது அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் தமது மனைவியர் சூழ, பேசமுடியாத அளவிற்கு துக்கம் மேலிட அமர்ந்திருப்பதைக் கண்டார்கள்.

அப்போது அபூபக்கர்[ரலி] அவர்கள், நபி[ஸல்] அவர்களை சிரிக்கவைக்க எதையேனும் சொல்லப் போகிறேன் என்று[மனதிற்குள்] சொல்லிக்கொண்டு, அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களே! எனது மனைவி [ஹபீபா]பின்த் காரிஜா என்னிடத்தில் குடும்பச்செலவுத் தொகையை [உயர்த்தித்தருமாறு] கேட்க, நான் அவரது கழுத்தில் அடித்துவிட்டேன் என்றால் நீங்கள் என்ன சொல்வீர்கள்..? என்று கேட்டார்கள். இதைக்கேட்டு அல்லாஹ்வின்தூதர்[ஸல்] அவர்கள் சிரித்தார்கள். பிறகு, இதோ நீங்கள் கானுகிண்றீர்களே! இவர்களும் என்னிடம் செலவுத்தொகையை [உயர்த்தித்தரக்]கோரியே என்னைச்சுற்றி குழுமியுள்ளனர் என்று கூறினார்கள். உடனே அபூபக்கர்[ரலி] அவர்கள் [தம் புதல்வி] ஆயிஷா[ரலி] அவர்களை நோக்கி, அவர்களை கழுத்தில் அடிப்பதற்காக எழுந்தார்கள். உமர்[ரலி] அவர்கள், [தம் புதல்வி] ஹப்ஸா[ரலி] அவர்களை நோக்கி, கழுத்தில் அடிப்பதற்காக எழுந்தார்கள். அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களிடம் இல்லாததை நீங்கள் கேட்கிறீர்களா என்று அவ்விருவருமே கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் மனைவியர், அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களிடம் இல்லாததை ஒருபோதும் நாங்கள் கேட்கமாட்டோம் என்று கூறினார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் ஒரு மாதம் அல்லது இருபத்தி ஒன்பது நாட்கள் தம் மனைவியரை விட்டு விலகியிருந்தார்கள். அப்போது,

நபியே! உம்முடைய மனைவிகளிடம், ''நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும், இதன் அலங்காரத்தையும் நாடுவீர்களானால், வாருங்கள்! நான் உங்களுக்கு வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து அழகியமுறையில் விடுதலை செய்கிறேன். ஆனால் நீங்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும், மறுமைவீட்டையும் விரும்புவீர்களானால், அப்போது உங்களில் நன்மையாளர்களுக்காக அல்லாஹ் நிச்சயமாக மகத்தான நற்கூலியை சித்தம் செய்து வைத்துள்ளான் என்று கூறுவீராக. [33; 28,29 ]
என்ற வசனங்கள் அவர்களுக்கு அருளப்பட்டன.

இதையடுத்து ஆரம்பமாக ஆயிஷா[ரலி] அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் சென்று, ஆயிஷாவே! உன்னிடம் ஒரு செய்தியை சொல்லப்போகிறேன். அது தொடர்பாக உன் பெற்றோரிடம் ஆலோசனை கேட்காதவரை அவசரப்பட்டு[எந்த முடிவுக்கும் வந்துவிடக்]கூடாது என விரும்புகிறேன் என்று கூறினார்கள்.

அதற்கு ஆயிஷா[ரலி] அவர்கள், அது என்ன அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என்றார்கள். அப்போது நபியவர்கள் மேற்கண்ட வசனத்தை ஓதிக்காட்டினார்கள். அப்போது ஆயிஷா[ரலி] அவர்கள், உங்கள் [உறவை துண்டிக்கும்] விஷயத்திலா என் பெற்றோரின் ஆலோசனையை நான் கேட்கவேண்டும்..? இல்லை! நான் அல்லாஹ்வையும், அவனது திருத்தூதரையும், மறுமையும் நான் தேர்ந்தெடுக்கிறேன் என்றார்கள்.
[நூல்;முஸ்லிம் 2946 ]

அன்னை ஆயிஷா[ரலி] அவர்களின் முடிவைப் போன்றே நபி[ஸல்] அவர்களின் ஏனைய மனைவியரும் அல்லாஹ்வையும், அவனது திருத்தூதரையும், மறுமை வாழ்வையும் தேர்ந்தெடுத்தார்கள் என்று முஸ்லிமின் 2939 மற்றும் சில அறிவிப்புகளில் உள்ளது]

அன்பானவர்களே! இந்த பொன்மொழி நம்முடைய உள்ளத்தையும் கண்களையும் ஒருசேர நெகிழச்செய்வதாக உள்ளது. வெறும் பேரீச்சம் பழத்தையும், தண்ணீரையும் பெரும்பாலான நேரங்களில் உண்டு வாழ்ந்த அன்னையர்கள், சில நேரங்களில் வெறும் தண்ணீர் மட்டுமே தங்களின் வீடுகளில் இருந்ததாக கூறும் அன்னையர்களின் செய்திகளை படிக்கும்போதெல்லாம் எவ்வாறு இவர்களால் இப்படி ஒரு தியாக வாழ்க்கை வாழமுடிந்தது.?என்று எமக்குள் ஒரு கேள்வி அலை வந்துபோகும். இந்த பொன்மொழியை படித்தபின்புதான் ஆம்! அவர்கள் வறுமை வாழ்வையும் பொருந்திக்கொண்டு கருணை நபியோடு வாழ்ந்ததற்கு காரணம் மறுமைவாழ்வு மீது கொண்ட தேட்டமே என்பதை உணரமுடிந்தது. அன்று அன்னையர்கள் இம்மை சுக போகத்தை பெரிதாக கருதாமல், அல்லாஹ்வையும், அவனது தூதரையும், மகத்தானமறுமை வீட்டையும் தேர்ந்தெடுத்ததால்தான் உலகம் அழியும் காலம் வரை தோன்றக்கூடிய நம்பிக்கையாளர்களுக்கு தாய்மார்கள் எனும் மகத்தான சிறப்பை அல்லாஹ்விடம் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். ஆனால் இன்றைய நவீன யுவதிகளில் பெருபாலோர் , தனது கணவன் பெரும்பான்மையான தேவைகளை நிறைவேற்றிஇருந்தாலும் , சில வேளைகளில் ஏதேனும் ஒரு விருப்பத்தை நிறைவேற்றமுடியாமல் போகும் பட்சத்தில், 'உனக்கு வாழ்க்கைப்பட்டு என்னத்தை கண்டேன்..? என்று கணவனை எடுத்தெறிந்து பேசுவதை நாம் நடைமுறையில் காண்கிறோம். இப்படிப்பட்டவர்களுக்கு அன்னையர்களின் தியாக வாழ்க்கை மிகப்பெரும் பாடமாகும்.
அதோடு, தமது மகளுக்கும்- மருமகனுக்கும் பிரச்சினை என்றால், பிரச்சினை குறித்து தீர ஆராயாமல் மகளுக்கே 'சப்போர்ட்' செய்யும் பெற்றோர்களைத்தான் நாம் பார்த்து வருகிறோம். ஆனால் இந்த பொன்மொழியில், அபூபக்கர்[ரலி] உமர்[ரலி] என்ற இரு மாமனார்கள், தம் மகள்களின் கோரிக்கை நியாயமானதாக இருந்தும்கூட, அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் மனம் துன்பத்தில் ஆழ்த்தப்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் தம்முடைய மகள்களை அடிக்க முற்படுகிறார்கள் என்றால், இங்கே அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் மகிழ்ச்சியே தமது மகிழ்ச்சியாக எண்ணி இந்த இரு நல்லறத்தோழர்களும் வாழ்ந்துள்ளனர் என்பதை விளங்கிக்கொள்ள முடிகிறது.

எல்லாம் வல்ல அல்லாஹ், அபூபக்கர்[ரலி], உமர்[ரலி] ஆகியோரையும், உம்மஹாத்துல் முஃமீன்களான நம்பிக்கையாளர்களின் தாய்மார்களையும் பொருந்திக்கொள்வானாக!

Thu 05

Click here to bookmark this link.Channel Image16:21 நோன்பு திறந்தவுடன் ஒருவர் ஓத வேண்டிய பிரார்த்தனை பிரார்த்தனை பேழை
ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ

‘தஹபல் லமஉ வப்தல்லதில் உரூகு வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்’

பொருள்: நரம்புகள் நனைந்து விட்டன, தாகம் தீர்ந்து விட்டது, கூலி அல்லாஹ்வின் நாட்டத்தின் படி உறுதியாகி விட்டது’ (அபூதாவுத்)
Click here to bookmark this link.Channel Image12:01 ஹிஜ்ரி 1431 ரமளான் துவக்கம் எப்போது? LUNAR CALENDAR / சந்திர நாட்காட்டி

ஹிஜ்ரி 1431 ரமளானுடைய முதல் பிறை என்றைய தினம் ?  எதனடிப்படையில்?

அல்லாஹ் தன் திருமறையில் 2:189  வசனத்தில்  பிறைகளை பற்றி கூறும் போது இது மனித சமுதாயத்திற்கு காலம் காட்டி என கூறியுள்ளான்.   அத்துடன் 10:5 வசனத்தில் சந்திரனுக்கு மாறி மாறி வரும் படித்தரங்களை விதித்திருப்பதே  பல வருடங்களின் கணக்கை அறிந்து கொள்வதற்காகத்தான் என கூறுகின்றான்.  இந்த அடிப்படையில் ஹிஜ்ரி 1431 வருடத்துடைய ரமளான் மாதம்  புதன்கிழமை (11.08.2010) [...]

Click here to bookmark this link.Channel Image05:25 ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-2-15) இஸ்லாம்குரல்.காம்
15,  பாவம் செய்த மனிதனும் காணாமல் போன ஒட்டகமும் ஹதீஸ் 15: நபி(ஸல்) அவர்களின் பணியாளரான அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். தன்னுடைய அடியான் பாவமீட்சி தேடி தன் பக்கம் மீளும்பொழுது அதுகுறித்து அல்லாஹ் அதிக மகிழ்ச்சி உடையவனாக இருக்கிறான். ஒரு பொட்டல் பூமியில் தனது ஒட்டகத்தைத் தவறவிட்டிருந்த உங்களில் ஒருவர், திடீரென அது கிடைக்கப் பெற்றதும் அடையும் மகிழ்சியை விட அதிகமாக! ஸஹீஹ் முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில் வந்துள்ளது. நபி(ஸல்) அவர்களின் பணியாளரான [...]

Mon 02

Click here to bookmark this link.Channel Image13:02 இறைவனுடன் நெருக்கமான நேரம் வழிகாட்டி
"உங்களில் ஒருவர் தன் இறைவனோடு மிகவும் நெருக்கமாக உள்ள நேரம் சுஜூது (சிரம் பணிந்து தொழச்) செய்யும் நேரம், ஆகவே அதில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள்" 
-நபி(ஸல்) 

நூல்: முஸ்லிம்
Click here to bookmark this link.Channel Image10:52 [பாகம்-19] முஸ்லிமின் வழிமுறை. இஸ்லாம்குரல்.காம்
காஃபிர்களுடன் நடந்து கொள்ளும் முறை இஸ்லாமிய மார்க்கத்தைத் தவிர ஏனைய மதங்களும் இஸங்களும் அசத்தியமானவை. அவற்றைப் பின்பற்றக்கூடியவர்கள் காஃபிர்களாவர். இஸ்லாம்தான் உண்மையான மார்க்கம். அதை பின்பற்றக்கூடியவர்கள் முஃமின்கள், முஸ்லிம்களாவர். அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக இஸ்லாம்தான் அல்லாஹ்விடம் (ஒப்புக் கொள்ளப்பட்ட) மார்க்கமாகும். (அல்குர்ஆன்: 3:19) ‘இஸ்லாம் அல்லாத வேறு மார்க்கத்தை யாரேனும் மேற்கொள்ள விரும்பினால் அவனிடமிருந்து அது ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் மறுமையில் அவன் நஷ்டமடைந்தவர்களில் ஒருவனாக இருப்பான். (அல்குர்ஆன்: 3:85) இதனால் இஸ்லாத்தை  ஏற்றுக்கொள்ளாத [...]
Click here to bookmark this link.Channel Image03:01 3000 வருட ஹிஜ்ரி நாட்காட்டி மென்பொருள் LUNAR CALENDAR / சந்திர நாட்காட்டி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அன்பான சகோதர சகோதரிகளுக்கு,

நாம் ஹிஜ்ரி 1431 வருட ரமளான் நோன்பை எதிர் நோக்கி காத்திருக்கும் வேளையில் உலக மக்கள் அனைவருக்கும்  பயனுள்ள வகையில்  ஒரு மென்பொருளை  இதன் மூலம் உங்களுக்கு அன்பளிப்பாக வழங்குகிறோம்.  இதை உருவாக்கிய சகோதரர்களுக்கு அல்லாஹ் மென்மேலும் அவனுடைய அருளை வழங்க நாம் பிரார்த்தனை  செய்வோம்.

இன்ஷாஅல்லாஹ் இம்மென்பொருள் உங்கள் வாழ்வில் மிகவும்  பயனுள்ளதாய் இருக்கும் என நம்புகிறோம்.   அல்லாஹ்  உலகை படைக்கும் போதே சந்திரனுக்கு  மன்ஸில்களை விதியாக்கி விட்டதாக  அல்குர்ஆன் [...]

Sun 01

Click here to bookmark this link.Channel Image23:47 முஸ்லிம் அமெரிக்கர்கள் - ஓர் ஆய்வு எதிர்க்குரல்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)....

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

உங்கள் அன்றாட வாழ்வில் மார்க்கம் முக்கிய பங்கு வகிக்கின்றதா? 
இது, பிரபல காலப் (Gallup poll) நிறுவனத்தால் சென்ற வருடம் முஸ்லிம் அமெரிக்கர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் கேட்கப்பட்ட கேள்விகளுள் ஒன்று. 

இதற்கான பதில் - 
ஆம் - 80%

முஸ்லிம் அமெரிக்கர்களில் பத்தில் எட்டு பேர் இஸ்லாம் தங்கள் வாழ்வில் முக்கிய பங்கு வகிப்பதாக கூறியுள்ளனர்.   

காலப் நிறுவனத்தின் முஸ்லிம் அமெரிக்கர்கள் குறித்த இந்த ஆய்வறிக்கை கவனிக்கத்தக்க பல தகவல்களை நமக்கு தருகின்றது. அவற்றில் சில உங்கள் பார்வைக்காக....


1. இனப் பின்னணி: 

முஸ்லிம் அமெரிக்கர்கள் பல்வேறு இனப் பின்னணியை கொண்டவர்களாக இருக்கின்றனர். அமெரிக்காவில்,  ஒரு மார்க்கம் பலவித இன மக்களால் அதிகம் பின்பற்றபடுகிறதென்றால் (Most Racially Diverse Religious Group) அது இஸ்லாம் தான்.

முஸ்லிம் அமெரிக்கர்களில் 35% பேர் கறுப்பின மக்கள் (African Americans). இவர்களில் பெரும்பாலானவர்கள் இஸ்லாத்தை தழுவியவர்கள் அல்லது தழுவியவர்களின் வாரிசுகள்.

28% முஸ்லிம் அமெரிக்கர்கள் தங்களை வெள்ளையர்கள் என்று அடையாளப்படுத்தி கொண்டுள்ளனர்.

முஸ்லிம் அமெரிக்கர்களில் ஐந்தில் ஒருவர் ஆசியர். சுமார் 18% முஸ்லிம் அமெரிக்கர்கள் தங்களை எந்தவொரு இனத்தோடும் அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை.

கடைசியாக, சுமார் 1% முஸ்லிம் அமெரிக்கர்கள் தங்களை ஹிஸ்பானிக் (Hispanic - Spanish speaking people/ஸ்பானிஷ் மொழி பேசும் மக்கள்) என்று அடையாளப்படுத்தி கொண்டுள்ளனர்..


2. தினசரி வாழ்வில் இஸ்லாம்:

முஸ்லிம்களின் அன்றாட வாழ்வில் இஸ்லாம் பெரும் பங்காற்றுகிறது. இதற்கு முஸ்லிம் அமெரிக்கர்களும் விதிவிலக்கல்ல.

சுமார் 80% முஸ்லிம் அமெரிக்கர்கள் தங்கள் தினசரி வாழ்வில் இஸ்லாம் முக்கிய பங்கு வகிப்பதாக கூறியுள்ளனர். இது அமெரிக்க சராசரியை விட 15% அதிகம்.


இன்னும் சற்று விரிவாக கூற வேண்டுமென்றால், முஸ்லிம் அமெரிக்கர்களில் பெண்கள் 82% பேரும், ஆண்கள் 78% பேரும் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளனர்.

இங்கு கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் முஸ்லிம் அமெரிக்கரில் ஆண் பெண் என்று வித்தியாசம் இல்லாமல் இருபாலருடைய கருத்துக்களும் கிட்டத்தட்ட ஒன்றாகவே உள்ளன. ஆனால் அமெரிக்காவின் மற்ற மார்க்க மக்களை எடுத்துக்கொண்டால் வித்தியாசத்தை காணலாம்.

அதாவது, மற்ற மார்க்கங்களில், பெண்களுக்கும் ஆண்களுக்கும் இந்த கருத்தில் குறிப்பிடத்தக்க வித்தியாசம் உண்டு. உதாரணத்துக்கு, கத்தோலிக்கர்களை எடுத்துக்கொண்டால் 75% பெண்களும், 62% ஆண்களும் தங்கள் மதம் தங்களுடைய அன்றாட வாழ்வில் முக்கிய பங்காற்றுவதாக கூறியுள்ளனர்.

அமெரிக்க சராசரியை எடுத்துக்கொண்டால், 72% பெண்களும் 58% ஆண்களும் இதே கருத்தை கூறியுள்ளனர்.


ஆக, அமெரிக்காவை பொறுத்தவரை மார்க்கப்பற்று என்பது ஆண்களை விட பெண்களுக்கே அதிகமுள்ளது. ஆனால் முஸ்லிம் அமெரிக்கர்களை பொறுத்தவரை இந்த வித்தியாசம் இல்லாமல் இருபாலரும் கிட்டத்தட்ட சமமான நிலையிலேயே உள்ளனர்.

முஸ்லிம் அமெரிக்க இளைஞர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வும் (77%) இதே முடிவுகளைத்தான் தருகிறது.

80% முஸ்லிம் அமெரிக்கர்கள் தங்கள் தினசரி வாழ்வில் இஸ்லாமிற்கு முக்கிய பங்குள்ளதாக  கூறியிருந்தாலும் இந்த சதவிதம் மற்ற நாடுகளோடு ஒப்பிடும் போது குறைவுதான். உதாரணத்துக்கு, இதே நிறுவனத்தால் வேறு சில நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், இதே கேள்விக்கு, எகிப்தில் 100% முஸ்லிம்களும், இந்தோனேசியா மற்றும் பங்களாதேஷில் 99% முஸ்லிம்களும், ஜெர்மன் முஸ்லிம்கள் 82% பேரும் "தங்கள் தினசரி வாழ்வில் இஸ்லாம் முக்கிய பங்காற்றுவதாக" தெரிவித்துள்ளனர்.


3. பெண்கள் 

யூதர்களுக்கு அடுத்து அமெரிக்காவில் அதிகம் படித்தவர்களாக இருப்பவர்கள் முஸ்லிம்கள் தான்.

அதிலும், மேற்படிப்பு முடித்த மற்றும் பட்டம் பெற்ற முஸ்லிம்களில் ஆண்களை (39%) விட பெண்களே (42%) அதிகம்.


முஸ்லிம் பெண்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, மற்றொரு குறிப்பிடத்தக்க தகவலையும் தருகின்றது. என்னவென்றால், பெண்கள் (40%), ஆண்களுக்கு (42%) நிகரான அளவில் பள்ளிவாசலுக்கு வருகின்றனர். இது, காலப் நிறுவனத்தால் சில முஸ்லிம் நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளோடு ஒப்பிடும் போது வேறுபடுகின்றது. இந்த நாடுகளில் பெண்கள் பள்ளிக்கு வருவது (அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது) குறைவே. ஆனால் அமெரிக்காவில் அந்த நிலை இல்லை. அங்கு ஆண்களும் பெண்களும் சமமான அளவிலேயே பள்ளிக்கு வருகின்றனர்.


4. மற்றவைகள்: 

  • 70% முஸ்லிம் அமெரிக்கர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இது அமெரிக்க சராசரியை விட 6% அதிகம்.
  • அமெரிக்காவின் பள்ளிவாசல்கள் பல்நோக்கு கூடங்களாக உள்ளன.  
  • மது அருந்துவோரின் சதவிதம் மற்ற மார்க்க மக்களுடன் ஒப்பிடும் போது மிகக்குறைவாகவே உள்ளது. அதே சமயம், நான்கில் ஒரு முஸ்லிம் அமெரிக்கர் புகை பிடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளார்.     
  • முஸ்லிம் அமெரிக்க பெண்களில் மூன்றில் ஒருவர் "professional Job"பில் உள்ளார்.
  • கறுப்பின முஸ்லிம் அமெரிக்கர்கள் மார்க்கத்தின் மேல் அதிக பற்று கொண்டுள்ளனர் (87%). இவர்களைத் தொடர்ந்து ஆசியர்களும் (86%)வெள்ளையர்களும் (72%) வருகின்றனர். 

காலப் நிறுவனத்தின் இந்த ஆய்வறிக்கையை (140 பக்கங்கள்) முழுவதுமாக படிக்க விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியில் இருந்து அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் (File Size : ~5.2 MB). 

இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.


My Sincere Thanks to: 
1. Sister Dalia Mogahed.
2. Gallup's Center for Muslim Studies.

Reference: 
1. Muslim Americans: A National Portrait - The center for Muslim Studies, Gallup, 2009.  

One can download the complete document from: 
http://www.muslimwestfacts.com/mwf/116074/Muslim-Americans-National-Portrait.aspx


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ.

Click here to bookmark this link.Channel Image13:34 நன்மாராயம் கூறுபவர் வழிகாட்டி
"(நபியே!) நாம் உம்மை உண்மையுடன், (நல்லடியாருக்கு) நன்மாராயம் கூறுபவராகவும், (தீயோருக்கு) அச்சமுட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே அனுப்பியுள்ளோம். நரகவாதிகளைப் பற்றி நீர் வினவப்பட மாட்டீர்."
 

திருக்குர்ஆன் 2:119

Fri 30

Click here to bookmark this link.Channel Image15:27 இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 27 வஹ்ஹாபி
இனி, "போவோம் குணங்குடிக் கெல்லோரும்".

அதற்கு முன்பாகத் தெரிந்து கொள்ள வேண்டியவை சில உள்ளன. இஸ்லாமிய இலக்கியப் புலவர்கள் என்று சொன்னதுமே, "உமருப் புலவர் காப்பியம் பாடியவர்; குணங்குடி மஸ்தான் மெய்ஞானக் கவிஞர் எனப் பலராலும் பாராட்டப் படுபவர்" என்பதுதான் நம்மில் பெரும்பாலோரின் கருத்தில் வரும்.

உமருப் புலவராயினும் குணங்குடி மஸ்தானாயினும் இன்னபிற தமிழ் முஸ்லிம் புலவர்களாயினும் அவர்கள் அனைவரும் இயற்றிய அனைத்துமே இஸ்லாத்துக்கு முரணான குப்பைகள் என்றெல்லாம் ஒரேயடியாகக் கண்ணை மூடிக் கொண்டு ஒதுக்கித் தள்ளிவிடுவது நமது நோக்கமன்று.

அவர்களின் பாடல் தொகுப்புகளில் பல நல்ல கவிதைகளும் இடம் பெற்றுள்ளன. அதேநேரத்தில் இஸ்லாமிய அடிப்படை கொள்கைகளுக்கு வேட்டு வைக்கின்ற பல சமூக விரோதச் சங்கதிகளும் அவற்றுள் அடங்கிக் கிடக்கின்றன.

இவர்களுடைய பாடல்களின் 'சிறப்பம்சங்கள்' பற்றி நாம் பல மேடைகளில் பேசியும் பல வால்யூம்களில் எழுதியும் வந்திருக்கிறோம். நாளடைவில் இக்கவிஞர்களை "நாதாக்கள்; வலீயுல்லாக்கள்" எனப் போற்றிப் புகழ்ந்தது போதாதென்று இவர்களுக்கு உரூஸ்களும் நம்மில் சிலர் கொண்டாடி வருகின்றனர்.

இந்தப் புலவர்கள், "வலீயுல்லாக்கள்-இறைநேசர்கள்" என்ற அடைமொழிகளோடு இன்றைய தமிழ் உலகத்துக்கு இனங் காட்டப் பட்டுள்ளனர். இதன் விளைவாக, இந்த வலீயுல்லாப் புலவர்களின் ஒட்டுமொத்த எல்லாப் பாடல்களுக்கும் ஒரு 'விலாயத்' எனும் இறைநேச முத்திரை குத்தப்பட்டு அவையெல்லாம் பக்திப் பரவசத்தோடு இன்று பலரால் அணுகப் படுகின்ற அளவுக்கு உயர்த்தப்பட்டு விட்டன.

இங்கு நாம் இந்தப் புலவர்களின் இறைநேசம் பற்றிப் பேசவரவில்லை. அது நமக்குத் தேவையுமில்லை. இவர்களுடைய பாடல்களாக நமக்குக் கிடைப்பவற்றை இஸ்லாமிய உரைகல்லில் உரசிப் பார்க்கிறோம். அப்படிப் பார்க்கும்போது, குர்ஆன்-ஹதீஸ்களின் கோட்பாடுகளோடு நேரடியாக முரண்படுகின்ற எத்தனையோ கருத்துகள் இப்புலவர்களால் பாடப்பட்டிருப்பதை நம்மால் அடையாளம் காண முடிகிறது. "இப்புலவர்களின் எல்லாப் படைப்புகளும் கொள்ளத் தக்கவை அல்ல; அவற்றுள் தள்ளத் தக்கவையும் இடம்பெற்றுள்ளன" என்பதை எடுத்துச் சொல்வதே நம் நோக்கமாகும்.

"நம்முடைய இஸ்லாமிய இலக்கியச் செல்வங்களிலேயே இஸ்லாத்துக்கு முரணான போக்குகளா? அது எப்படி இருக்க முடியும்? இவற்றைப் பாடிய நாதாக்கள் - ஸூஃபிகள் - வலியுல்லாக்கள் சாமானியமானவர்களா என்ன? கால் குழியிலேயே கஅபத்துல்லாவை தரிசித்தவர்களல்லவா அவர்கள்?" போன்ற தனிமனித வழிபாட்டுத் திரைகளால் தங்கள் அறிவுப் பார்வையை மறைத்துக் கொண்டவர்கள், நமது விளக்கங்களைத் தீண்டத் தகாதவையாகக் கருதுகின்றனர்.

இன்னும் சிலர், "அப்படியே நம்முடைய இஸ்லாமிய இலக்கியப் படைப்புகளில் இஸ்லாத்துக்கு முரணான கருத்துகள் இடம்பெற்றிருந்தாலுங்கூட அவற்றை நாமே ஏன் பெரிதுபடுத்த வேண்டும்?" எனக் கேட்கின்றனர். "நம்முடைய புலவர்களின் பாடல்களில் உள்ள முரண்பாடுகளைத் தோண்டித் துருவி எடுத்தெழுதும் கோடாறிக் காம்புகளாக நாமே மாறிவிடுவதா?" எனவும் சிலர் வாதிடுகின்றனர்.

சல்மான் ருஷ்டியோ, தஸ்லீமா நஸ்ரினோ, அருண்ஷோரியோ, ராம் ஸ்வரூப்போ இஸ்லாத்துக்கு முரணான எதையேனும் இஸ்லாம் என்பதாக எழுதினால் ஒட்டுமொத்தமாகக் கொதித்தெழுகின்றனர் நம்மவர். ஆனால், நம்மூர்ப் புலவர்கள் இஸ்லாத்தின்மீது வீசியுள்ள புழுதிகளைக் கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர்; அல்லது கண்டுகொள்ள மறுக்கின்றனர். இஸ்லாமியக் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் நோகடிக்கின்ற - சாகடிக்கின்ற இத்தகையக் கவிதைகள் பல 'இஸ்லாமிய இலக்கியம்' எனும் போர்வையில் உலா வரும்போது, அவற்றை இனங்கண்டு அவற்றிலிருந்து விலகிக் கொள்வதில் நாம் விழிப்பாயிருத்தல் வேண்டும்.

இந்த வகையில் குணங்குடி மஸ்தானின் நிலை என்ன? என்பதை இனிக் காண்போம். அவருடைய பாடல்களில் அடியெடுத்து வைப்பதற்கு முன்னால் அவரைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

- தொடரும் இன்ஷா அல்லாஹ்.
Click here to bookmark this link.Channel Image06:19 அல்லாஹ்வின் தூதரையே பெரும் சொத்தாக கருதிய அன்சாரிகள்! ஸஹாபாக்களின் வாழ்வினிலே...
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அல்லாஹ் தன் தூதர்[ஸல்] அவர்களுக்கு 'ஹவாஸின் குலத்தாரின் செல்வத்தை [போரின் வெற்றிப் பரிசாக] அளித்தபோது, அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் [புதிதாக இஸ்லாத்தை தழுவியிருந்த] சில குறைஷிகளுக்கு நூறு ஒட்ட்டகங்களை கொடுக்கலானார்கள். அப்போது அன்சாரிகளில் சிலர், அல்லாஹ் 'அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களை மன்னிப்பானாக! [எதிரிகளான] குறைஷிகளின் ரத்தம் நம் வாட்களில் சொட்டிக்கொண்டிருக்க [நமக்கு கொடுக்காமல்] இவர்களுக்கு கொடுக்கிறார்களேஎன்று கவலையுடன் சொன்னார்கள்.

அன்சாரிகளின் இந்த பேச்சு அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களுக்கு எட்டியது. இதையொட்டி அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள், அன்சாரிகளை ஒரு இடத்தில் ஒன்று கூட்டினார்கள். அப்போது அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள், உங்களை குறித்து எனக்கு எட்டியுள்ள செய்தி என்ன? என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகளிலுள்ள விவரமானவர்கள், அல்லாஹ்வின் தூதரே! எங்களில் கருத்துடையவர்கள் எதுவும் சொல்லவில்லை. எங்களில் இளவயதுடையவர்கள் சிலர்தாம் அவ்வாறு பேசிக்கொண்டார்கள் என்று அன்சாரிகள் கூறினார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள், ''இறைமறுப்பை விட்டு இப்போதுதான் புதிதாக இஸ்லாத்தில் இணைந்த சிலருக்கு நான் கொடுக்கிறேன். [இதன் வாயிலாக இஸ்லாத்திற்கும்] அவர்களின் உள்ளங்களுடன் நான் இணக்கம் ஏற்படுத்துகிறேன். மக்கள் உலக செல்வங்களை எடுத்துச்செல்ல, நீங்கள் உங்கள் இல்லங்களுக்கு இறைத்தூதரையே கொண்டு செல்வதை விரும்பமாட்டீர்களா..? அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் பெற்று திரும்பும் செல்வத்தை விட நீங்கள் பெற்றுத் திரும்புவதே சிறந்ததாகும்என்று சொன்னார்கள். உடனே அன்சாரிகள், ஆம், அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நாங்கள் [எங்களுடன் உங்களை கொண்டு செல்வதையே] விரும்புகிறோம் என்று சொன்னார்கள்.
ஹதீஸ் சுருக்கம் நூல்;முஸ்லிம்.

அன்பானவர்களே! மக்காவை விட்டு மதீனா நோக்கி கொள்கைக்காக நாட்டு துறந்து வந்த முஹாஜிர்களை தாயன்போடு அரவணைத்து தங்களின் சொந்த சகோதரர்களாகவே கருதி சொத்தில் கூட பங்கு கொடுக்கும் அளவுக்கு தயாள உள்ளம் கொண்டவர்கள் அன்சாரிகள் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம். அத்தகைய அன்சாரிகளில் சிலர், பொருள் பங்கீடு விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் மீது அதிருப்தி கொண்டது போன்ற தோற்றம் மேற்கண்ட ஹதீஸின் ஆரம்பத்தில் தோன்றலாம். ஆனால் அன்சாரிகள் குறுகிய மனம் கொண்டவர்கள் அல்ல. உயிரை பணயம் வைத்து போரிட்டு அதன் மூலம் கிடைத்த பொருட்களை பங்கிடுவதில் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்களுக்கு வழங்கிவிட்டு நம்மை புறக்கணிக்கிறார்களே என்ற ஆதங்கம்தான் அன்சாரிகளின் அந்த வார்த்தை பிரயோகங்கள். பின்பு அல்லாஹ்வின் தூதர் அவர்கள் விளக்கிச்சொன்ன மாத்திரமே அதை அப்படியே ஏற்றுக்கொண்டதோடு, இறைத்தூதர்[ஸல்] அவர்களை நாங்கள் எங்கள் இல்லங்களுக்கு கொண்டு செல்லவே விரும்புகிறோம் என்று சொல்லி, உலகத்தின் பொருட்கள் எங்களுக்கு ஒரு பொருட்டல்ல. எங்களின் மிகப்பெரிய சொத்தாக இறைத்தூதர்[ஸல்] அவர்களையே கருதுகிறோம் என்று சொல்லி தங்களின் தயாள குணத்தை மீண்டும் நிருப்பித்த அன்சாரிகள்ஒரு சரித்திர புருஷர்கள் என்றால் மிகையில்லை.

அல்லாஹ் அன்சாரிகளின் தியாகத்தை பொருந்திக்கொள்வானாக!

Thu 29

Click here to bookmark this link.Channel Image10:53 தொழுகையைக் கடைப் பிடியுங்கள் வழிகாட்டி
"தொழுகையைக் கடைப் பிடியுங்கள். ஜகாத்தை(ஏழை வரியை)யும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள். ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்."

திருக்குர்ஆன் 2:43

Wed 28

Click here to bookmark this link.Channel Image13:26 பொய் சாட்சியும், வீணான காரியமும் வழிகாட்டி
"அன்றியும், அவர்கள் பொய் சாட்சி சொல்ல மாட்டார்கள்; மேலும், அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்றுவிடுவார்கள்." 

திருக்குர்ஆன் 25:72

Tue 27

Click here to bookmark this link.Channel Image04:00 ஹிஜாப் தரும் சுதந்திரம்! பெண் விடுதலை!
என்ன பார்க்கிறாய்? என்னைப் பார்க்கும்போது என்னில் என்ன பார்க்கிறாய்?   நான் சுதந்திரப் பறவையா? கட்டுக்கோப்புக்குள் அடங்கியவளா? இயந்திர உலகில் மாட்டியவளா? கண்ணால் ஊடுருவி முகம் சுளிக்கிறாய் கண்ணாடியாக என் மேனி தெரியாததாலோ? கட்டுக்கோப்புடன் நானிருப்பதாலோ? நாகரீகம் அறியாதவளாக பிணைக்கப்பட்ட கைதியாக நான் தெரிகிறேனோ உனக்கு? எனக்கென்று சொந்தக் குரல் எனக்கென்று சுயசிந்தனை இல்லை என்கிறாய்
Click here to bookmark this link.Channel Image04:00 Montreal: Sports hijab helps girls make the team பெண் விடுதலை!
Controversy has erupted at recent amateur sporting events in Canadian cities over the wearing of the hijab by young female athletes. Newspaper reports tell stories of soccer teams forfeiting the right to play because of the coach’s refusal to withdraw hijab-wearing team members. In another instance, young champions of tae kwan do were ejected from a martial arts tournament for the same
Click here to bookmark this link.Channel Image04:00 Allahabad women go to the gym, in a burqa பெண் விடுதலை!
அலஹாபாத் ஹிஜாபுடனான உடற்பயிற்சி மையம்! Allahabad:  It is all about being fit and this universally appealing statement has now inspired some of the Burqa clad women in Allahabad to get intoshape. Their trainers are men but that doesn't deter them. Amazingly, the Imam intheir area is all for it. "We follow our religion, we keep our 'purdah' when we do our workout. Our familydoesn't have a

Fri 23

Click here to bookmark this link.Channel Image06:03 கண் மூடும் வேளையிலே கண்ணீர்; அம்ரு இப்னு அல்ஆஸ்[ரலி]! ஸஹாபாக்களின் வாழ்வினிலே...
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அப்துர் ரஹ்மான் இப்னு ஷுமாசா அல் மஹ்ரி[ரஹ்] கூறியதாவது;

இறக்கும் தருவாயில் இருந்த அம்ரு இப்னு அல் ஆஸ்[ரலி] அவர்களிடம் நாங்கள் சென்றோம். அவர்கள் நீண்ட நேரம் அழுதார்கள். பின்பு சுவற்றின் பக்கம் தமது முகத்தை திருப்பிக் கொண்டார்கள். அப்போது அவர்களின் மகன், என் தந்தையே! உங்களுக்கு அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் இன்னின்ன நற்செய்திகள கூறவில்லையா என [அறுதல் சொல்லும் வகையில்] கேட்டார். உடனே அம்ரு இப்னு அல்ஆஸ்[ரலி] அவர்கள் தமது முகத்தை [தம் புதல்வரை நோக்கி] திருப்பி [பின்வருமாறு] கூறினார்கள்;
அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத்[ஸல்] அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் கூறியதே நமது சேமிப்புகளில் சிறந்ததாகும். நான்[என் வாழ்நாளில்] மூன்று கட்டங்களை கடந்து வந்துள்ளேன்.

[முதலாவதுகட்டத்தில்] அல்லாஹ்வின் தூதர் அவர்கள் மீது கடுமையான வெறுப்பு கொண்டவர் என்னைத் தவிர வேறு யாரும் இருக்கமுடியாது என்று நான் கருதினேன். என்னால் இயன்றால் அவர்களை கொன்றுவிடவேண்டும் என்பதே எனக்கு விருப்பமானதாக இருந்தது. அந்த கால கட்டத்தில் மட்டும் நான் மரணித்திருந்தால் நரகவாதிகளில் ஒருவனாக நான் ஆகியிருப்பேன்.

[இராண்டாவது கால கட்டத்தில்] அல்லாஹ் என் உள்ளத்தில் இஸ்லாத்தை புகுத்தினான். அப்போது நான் நபியவர்களிடம் சென்று உங்கள் வல்லக்கரத்தை நீட்டுங்கள் நான் உங்களிடம் உறுதிப் பிரமாணம் [பைஅத்] அளிக்கிறேன் என்றேன். நபி[ஸல்] அவர்கள் தமது வலது கரத்தை நீட்டினார்கள். உடனே நான் எனது கரத்தை இழுத்துக் கொண்டேன். நபி[ஸல்] அவர்கள், அம்ரே! உமக்கு என்ன ஆயிற்று என்றார்கள். நான் சில நிபந்தனைகளை விதிக்க விரும்புகிறேன் என்று கூறினேன். நபி[ஸல்] அவர்கள் என்ன நிபந்தனை விதிக்கப் போகிறீர் என்று கேட்டார்கள். என் [முந்தைய] பாவங்கள் மன்னிக்கப்படவேண்டும் என்று கூறினேன். அப்போது நபி[ஸல்] அவர்கள் உங்கள் முந்தைய பாவங்களை இஸ்லாம் அழித்துவிடும். ஹஜ்ஜும் முந்தையா பாவங்களை அழித்துவிடும் என்பது உமக்கு தெரியாதா என்றார்கள். [பின்பு நான் இஸ்லாத்தை தழுவினேன்] அப்போது அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களை விட மிகவும் பிரியமானவர் எவரும் எனக்கில்லை. எனது பார்வைக்கு அவர்களைவிட கண்ணியமானவர்கள் எவரும் இருக்கவில்லை. அப்போது அவர்கள் மீது நான் கொண்ட மரியாதையினால் என் கண்கள் நிரம்ப, அவர்களை பார்க்கக் கூட என்னால் முடியவில்லை. அவர்களை வர்ணித்துக் கூறுமாறு என்னிடம் கேட்கப்பட்டால் அதற்கும் என்னால் இயலாது. ஏனெனில் அவர்கள் மீது நான் கொண்ட மரியாதையினால், என் கண்கள் நிரம்ப அவர்களை நான் பார்த்திருக்கவில்லை. அந்த நிலையில் நான் மரணித்திருந்தால் நான் சொர்க்கவாசிகளில் ஒருவானாக ஆகியிருப்பேன் என்றே கருதுகிறேன்.

பிறகு [மூன்றவாது கட்டத்தில்] பல்வேறு பொறுப்புகளை நாம் வகித்தோம். அவற்றில் எனது நிலை என்ன என்று எனக்குத்தெரியாது.
[ஹதீஸ் சுருக்கம் நூல்;முஸ்லிம்]

அன்பானவர்களே! அம்ரு இப்னுஆஸ்[ரலி] அவர்களை நாமெல்லாம் அறிந்து வைத்துள்ளோம். இந்த பொன்மொழியில் தமது வாழ்வின் மூன்று கட்டங்களை குறிப்பிடுகிறார்கள் அந்த மேதை. முதல் கட்டம் இஸ்லாத்திற்கு எதிரான நிலை அதாவது நரகத்தின் விளிம்பில்.
இரண்டாவது இஸ்லாத்திற்குள் அதுவும் இறைத்தூதரை உயிருக்கு உயிராக நேசிக்கும் காலகட்டம் அதாவது சொர்க்கத்தின் வாயிலில்.
மூன்றாவது பல்வேறு பொறுப்புகள சுமந்த காலகட்டம். இந்த மூன்று காலகட்டங்கலில் எதைக் குறித்து அம்ரு இப்னு ஆஸ் [ரலி] அவர்கள் கைசேதப் படுகிறார்கள் என்றால்,
மூன்றாவது காலகட்டம் அதாவது பொறுப்புகளை வகித்த காலகட்டம் குறித்துதான். ஏனென்றால் இஸ்லாத்திற்கு முந்தைய காலகட்டம் குறித்து அவர்கள் கவலைப் படவேண்டியதில்லை. ஏனெனில், அதில் செய்த பாவங்களை இஸ்லாம் அழித்துவிடும் என்று இறைத்தூதர்[ஸல்] அவர்கள் உத்திரவாதம் அளித்து விட்டார்கள். ஆனால் பொறுப்புகள் வகித்த காலத்தில் நாம் தவறு இழைத்திருந்து அதனால் அல்லாஹ்வால் குற்றம் பிடிக்கப் படுவோமோ என்று கண்ணீர் சிந்தி கவலை கொள்கிறார்கள் எனில்,
பதவி வரும்போது பணிவும்-துணிவும் வந்தால் போதாது; அங்கே பயமும் அதாவது இறைவனின் பயமும் வரவேண்டும். ஏனெனில் பொறுப்பில் உள்ளவர்கள் தாம் செய்வதை குறித்து திருப்தி அடையலாம். ஆனால் அந்த செயல்கள் அல்லாஹ்வால் பொருந்திக் கொள்ளப்படுமா என்ற அச்சம் ஒவ்வொரு பொறுப்பாளருக்கும் இருக்கவேண்டும். அத்தகைய சிறந்த படிப்பினைக்கு அம்ரு இப்னு ஆஸ்[ரலி] அவர்கள் முன்னுதாரமாக திகழ்கிறார்கள்.
அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொள்வானாக!

Thu 22

Click here to bookmark this link.Channel Image04:28 அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்களா? வழிகாட்டி
நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான். பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான். மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான். இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக் கொண்டு வரப்படுவீர்கள். 

திருக்குர்ஆன் 2:28  

Wed 21

Click here to bookmark this link.Channel Image14:31 தீர்வை நோக்கி….!(இஸ்லாம் கூறும் பிறைக்கணக்கு) Towards Solution (Islamic Lunar Calendar) LUNAR CALENDAR / சந்திர நாட்காட்டி

தீர்வை நோக்கி(இஸ்லாம் கூறும் பிறைக்கணக்கு) Towards Solution (Islamic Lunar Calendar)

எனது அடியார்களுக்கு நற்செய்தி கூறுவீராக! அவர்கள் சொல்லை செவிமடுத்து அதில் அழகானதை பின்பற்றுவார்கள்.  அவர்களுக்கே அல்லாஹ் நேர்வழி காட்டினான். அவர்களே அறிவுடையவர்கள். (குர்ஆன் 39:17-18)

நாள்: 21-ஷஃபான்-1431 ஞாயிற்றுக்கிழமை (01.08.2010) 21-Shabaan-1431 Sunday (01.08.2010)

நேரம்: மாலை 4:00 மணிமுதல் / From 4.00 P.M

இடம்: அன்னை ஆயிஷா மஹால் முஸ்லீம் லீக் தலைமையகம் அருகில் 39,மரைக்காயர் தெரு, மண்ணடி, சென்னை-1

Venue: Annai Ayesha Mahal, Near Muslim league Head Office, No.39,Maricayar Street, Mannady, Chennai-1

1.பிறை குழப்பத்திற்குத் [...]

Mon 19

Click here to bookmark this link.Channel Image12:16 இறந்தவர்களைத் திட்டாதீர்கள் வழிகாட்டி
"இறந்தவர்களைத் திட்டாதீர்கள், ஏனெனில், அவர்கள் தம் செயல்களின் (விளைவுகளின்) பால் சென்றடைந்துவிட்டார்கள்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
  
அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி)  
நூல்: புகாரி
Click here to bookmark this link.Channel Image00:03 Evolution St(he)ory > Harry Potter Stories - IV எதிர்க்குரல்



அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின். 



Punctuated Equilibria


இந்த பதிவிற்கு செல்லும் முன் ஒருவர் புரிந்து கொள்ள வேண்டிய சொல்:
1.தொல்லுயிரியலாளர் - உயிரினப்படிம (fossils) ஆய்வுகளில் தனித்துவம் பெற்றவர்.
   
          பழமையான உயிரினப்படிமங்களில் காணப்படும் சிக்கலான உடலமைப்பை கொண்ட உயிரினங்கள், எப்படி எந்தவொரு பரிணாம வளர்ச்சியும் இல்லாமல் திடீரென தோன்றியிருக்கின்றன என்று சென்ற பதிவில் பார்த்தோம். 

பரிணாமத்தை உறுதிப்படுத்துவதில் பெரும் பங்காற்றும் உயிரினப்படிமங்கள், பரிணாமவியல் முன்வைக்கப்பட்ட காலத்திலிருந்தே பரிணாமவியலாளர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்து வருகின்றன. 

சிறுகச் சிறுக உயிரினங்கள் (Gradualism) வேறொன்றாக மாறின என்பதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் அவை தரவில்லை. இந்த ஏமாற்றம் தான் பரிணாமவியலாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திவிடுகிறது. 

அப்படி ஏற்பட்ட குழப்பம் தான் "Punctuated Equilibria" என்ற கோட்பாட்டை, ஸ்டீபன் ஜே குட் (Stephen Jay Gould) அவர்கள் முன்வைக்க காரணமாய் அமைந்தது.          


ஸ்டீபன் ஜே குட் (1942-2002), சிறந்த தொல்லுயிரியலாளராக (Paleontologist) அறியப்பட்டவர். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும், அமெரிக்க இயற்கை வரலாறு அருங்காட்சியகத்தில் (American Museum of Natural History) உறுப்பினராகவும் பணியாற்றியவர். சிறப்புமிக்க விருதுகளை பெற்றவர். இவரது பெயரில் பரிணாமவியல் கழகம் (The Society for Study of Evolution) ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி வருகிறது.     




பரிணாமவியல் உலகில் நீங்கா புகழை பெற்றுள்ள இவர் சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர். இதற்கு காரணம் இவர் முன்வைத்த "punctuated Equilibria" என்ற டார்வினின் கூற்றுக்கு எதிரான கோட்பாடு.

டார்வினின் கூற்று என்ன?

உயிரினங்கள் சிறுகச் சிறுக மாறி வேறொன்றாக மாறியிருக்க வேண்டும் என்பதுதான் அது.

ஆனால் ஆதாரங்கள் டார்வினின் இந்த கூற்றுக்கு எதிராக உள்ளதாக சொல்லி தன் கோட்பாட்டை முன் வைத்தார் ஜே குட்.
  
Puntuated Equilibria என்றால் என்ன?, அந்த கோட்பாடு எந்த அளவிற்கு உண்மை? என்பது போன்ற கேள்விகளுக்கு (ஆழமாக சென்று) விடைக்காண முயலும் பதிவல்ல இது. மாறாக அந்த கோட்பாடு கொண்டு வரப்பட்டதற்கு என்ன காரணம் என்று அலசும் முயற்சியே இது. 

டார்வின் தன்னுடைய கோட்பாட்டை முன்வைக்கும் போதே உயிரினப்படிமங்கள் தன் கோட்பாட்டிற்கு எதிராக உள்ளதை அறிந்திருந்தார். இதைப்பற்றி தெளிவாக குறிப்பிட்டும் உள்ளார். ஆனால், தோண்டி எடுக்கப்பட்ட உயிரினப்படிமங்கள் மிகக்குறைவே என்றும், எதிர்காலத்தில் அதிக அளவிலான உயிரினப்படிமங்கள் கிடைக்கும் போது, உயிரினங்கள் சிறுகச் சிறுக மாறியதற்கான ஆதாரங்கள் கிடைத்துவிடும் என்றும் நம்பினார்.


டார்வினுடைய நம்பிக்கை இன்றளவும் நம்பிக்கையாகவே உள்ளது.

அன்று டார்வினுக்கு பரிணாமவியலை உறுதிப்படுத்தும் உயிரினப்படிமங்கள் கிடைக்கவில்லை, இன்று வரை அவரது ஆதரவாளர்களுக்கும் அது கிடைக்கவில்லை.

உயிரினங்கள் திடீரென படிமங்களில் தோன்றியிருப்பது (Abrupt Appearance), அவை சிறுகச் சிறுக மாற்றமடைந்ததற்கான ஆதாரங்கள் உயிரினப்படிவங்களில் தென்படாதது மற்றும் பல உயிரினங்கள் நீண்ட காலமாக மாற்றமடையாமல் இருப்பது (stasis) போன்றவற்றை சுட்டிக்காட்டிய ஸ்டீபன், தன்னுடைய "Puntuated Equilibria" கோட்பாட்டை,  நைல்ஸ் எல்ரெச் (Niles Eldredge, American Museum of Natural History) என்பவரோடு சேர்ந்து 1972 ஆம் ஆண்டு சமர்ப்பித்தார்.     


இந்த கோட்பாட்டின் படி, உயிரினங்களில், பெரிய அளவிலான (மரபணு) மாற்றங்கள் குறைந்த கால இடைவெளியில் ஏற்பட்டு அவை உருவாகியிருக்கவேண்டும். பிறகு எந்தவொரு மாற்றமும் அடையாமல் அவை தொடர்ந்திருக்க வேண்டும். இப்படி உருவான உயிரினங்களில் (தனிமைப்படுத்தப்பட்ட) சிறு பகுதியினருக்கு மறுபடியும் பெரிய அளவிலான (மரபணு) மாற்றங்கள் குறுகிய காலத்தில் ஏற்பட்டு மேலும் பல உயிரினங்கள் உருவாகி எந்தவொரு மாற்றமும் அடையாமல் தொடர்ந்திருக்க வேண்டும். இப்படியாக இந்த முறை தொடர்ந்து பல்வேறு உயிரினங்களும் வந்திருக்கவேண்டும். 


Punctuated equilibrium predicts that a lot of evolutionary change takes place in short periods of time tied to speciation events --- evolution.berkeley.edu 

சுருக்கமாக சொல்லப்போனால், படிக்கட்டில், எப்படி படிகள் உயர்ந்து, பிறகு சமமாக அமைந்து, பிறகு மறுபடியும் எழும்புகின்றனவோ அப்படி. தான் உயிரினங்கள் வந்திருக்க வேண்டும் என்று விளக்கியது இந்த கோட்பாடு.




சிறிய அளவிலான (தொகையிலான) உயிரினங்கள் விரைவாக மாற்றமடைந்ததால் அவை உயிரினப்படிமங்களில் தென்படவில்லை என்பது இந்த கோட்பாட்டின் நிலை. 

உலகின் மிகச் சிறந்த தொல்லுயிரியலாளர்களில் ஒருவராக மதிக்கப்படும் ஜே குட் அவர்கள், உயிரினப்படிமங்கள் எந்த அளவு டார்வினின் கூற்றை பொய்யாக்குகின்றன என்பதை நன்கு அறிந்திருந்தார். அதனாலேயே தன்னுடைய கோட்பாடு, டார்வினின் "சிறுகச் சிறுக உயிரினங்கள் மாற்றமடைந்து வந்திருக்க வேண்டுமென்ற" கூற்றிற்கு மாற்றாக அமையும் என்று குறிப்பிட்டார்.

"Paleontologists have paid an enormous price for Darwin's argument.....The history of most fossil species includes two features particularly inconsistent with gradualism:  
1. Stasis.  Most species exhibit no directional change during their tenure on earth. They appear in the fossil record looking much the same as when they disappear; morphological change I usually limited and directionless.  
2. Sudden appearance. In any local area, a species does not arise gradually by the steady transformation of its ancestors; it appears all at once and 'fully formed"  Gould, Stephen J. The Panda's Thumb, 1980, p. 181-182.
தொல்லுயிரியலாளர்கள் டார்வினின் வாதத்திற்கு மிக அதிக விலை கொடுத்து விட்டனர்.... பெரும்பாலான உயிரினப்படிமங்களில் காணப்படும் இரண்டு விஷயங்கள், "சிறுகச் சிறுக" உயிரினங்கள் வந்திருக்க வேண்டுமென்ற கருத்துக்கு முரணாக உள்ளன.
1. Stasis (மாற்றமடையாதது) . பெரும்பாலான உயிரினங்கள், பூமியில் இருந்த காலம்வரை மாற்றமடையவில்லை. அவைகள் உயிரினப்படிமங்களில் எப்படி தோன்றினவோ அப்படித்தான் மறையும் போதும் இருந்திருக்கின்றன.
2. Sudden Appearance (திடீர் தோற்றம்). ஒரு உயிரினம், தான் வாழ்ந்த இடத்தில் தன் மூதாதையரில் இருந்து சிறுகச் சிறுக மாற்றமடைந்து வரவில்லை. அது திடீரென முழுமையாக தோன்றியிருக்கின்றது. --- (Extract from the original quote of) Gould, Stephen J. The Panda's Thumb, 1980, p. 181-182. 
           
ஜே குட் அவர்களும் பரிணாமவியலாளர் தான். அவரும் உயிரினங்கள் அனைத்திற்கும் ஒரு பொதுவான மூதாதையர் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்தான். ஆனால் டார்வின் மற்றும் அவரை பின்பற்றுபவர்களின் (முக்கிய) கருத்தான "உயிரினங்கள் சிறுகச் சிறுக மாற்றமடைந்து வேறொன்றாக வந்திருக்க வேண்டும்" என்பதை நிராகரித்தவர்.  

It is gradualism we should reject, not Darwinism - Gould, Stephen Jay 1980. "The Episodic Nature of Evolutionary Change" The Panda's Thumb. New York: W. W. Norton & Co., p. 181-182.

தொல்லுயிரியலாளர்களில் குறிப்பிடத்தக்க தொகையினருக்கு ஜே குட் அவர்களின் கோட்பாடு உற்சாகத்தை தந்தது. பலமாக இந்த கோட்பாட்டை ஆதரித்தார்கள்.

ஏன்? 

காரணம் எளிமையான ஒன்று தான். ஜே குட் அவர்களின் கோட்பாடு படி தான் உயிரினப்படிம ஆதாரங்கள் இருந்தன, டார்வினின் கூற்று படியல்ல.    

"The Eldredge-Gould concept of punctuated equilibria has gained wide acceptance among paleontologists.....
The punctuated equilibrium model has been widely accepted, not because it has a compelling theoretical basis but because it appears to resolve a dilemma" --- Ricklefs, Robert E., "Paleontologists Confronting Macroevolution," Science, vol. 199, 1978, p. 59.
எல்ரெச் மற்றும் குட் ஆகிய இருவரின் கோட்பாடான "punctuated Equilibria" தொல்லுயிரியலாளர்களிடையே அதிக வரவேற்பை பெற்றது.....
இந்த கோட்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு அது தீர்க்கமான வாதங்களை முன்வைத்தது என்பது காரணமல்ல, (பரிணாமத்தில்) இருந்த குழப்பத்தை தீர்ப்பதாக தெரிந்ததால் தான் --- (Extract from the original quote of) Ricklefs, Robert E., "Paleontologists Confronting Macroevolution," Science, vol. 199, 1978, p. 59.      

அது என்ன குழப்பம்?, 

வேறென்ன....டார்வினின் கூற்றுப்படி (உயிரினங்கள் சிறுகச் சிறுக மாறியதாக) இதுவரை ஆதாரங்கள் கிடைக்கவில்லையே என்ற குழப்பம் தான்.  

"Paleontologists ever since Darwin have been searching (largely in vain) for the sequences of insensibly graded series of fossils that would stand as examples of the sort of wholesale transformation of species that Darwin envisioned as the natural product of the evolutionary process. Few saw any reason to demur - though it is a startling fact that, of the half dozen reviews of the On the Origins of Species written by paleontologists that I have seen, all take Darwin to task for failing to recognize that most species remain recognizably themselves, virtually unchanged throughout their occurrence in geological sediments of various ages." --- Niles Eldredge, "Progress in Evolution?" New Scientist, 5th June 1986 (volume 110, number 1511), pages 54-57. 
நீண்ட காலங்களாகவே தொல்லுயிரியலாளர்கள், டார்வினின் கற்பனையான "உயிரினங்கள் சிறுகச் சிறுக மாறி வேறொன்றாக வந்திருக்க வேண்டும்" என்ற கூற்றிற்கான தொடர் நிகழ்வுகளை தேடி வருகின்றனர் (ஆனால் அவர்களது முயற்சி பெரும்பாலும் தோல்வியிலேயே முடிந்தது)...
ஆனால் வியப்பளிக்கும் உண்மை என்னவென்றால், Origin of Species குறித்து நான் பார்த்த அரை டஜன் விமர்சனங்களில், அவற்றை எழுதிய தொல்லுயிரியலாளர்கள், பெரும்பாலான உயிரினங்கள் தாங்கள் இருந்த காலங்களில் மாற்றமடையாமல், தாங்களாகவே இருந்துள்ளன என்பதை டார்வின் உணரத் தவறியதாக விமர்சித்துள்ளனர் --- (Extract from the original Quote of) Niles Eldredge, "Progress in Evolution?" New Scientist, 5th June 1986 (volume 110, number 1511), pages 54-57.         
      
இந்நேரம் நீங்கள் ஒன்றை புரிந்து கொண்டிருக்க வேண்டும். அதாவது, ஒரு கோட்பாடை முன்வைத்து விட்டு அதற்கான ஆதாரத்தை தேடுகிறார்கள் டார்வின் ஆதரவாளர்கள். ஜே குட் அவர்களோ, இருக்கும் ஆதாரத்தை வைத்து அதற்கேற்றார்போல் ஒரு கோட்பாடை உருவாக்கி கொண்டார்.    

படிக்கும் உங்களுக்கு இது நிறைய கேள்விகளை எழுப்பியிருக்கும். 


டார்வின் தன் கோட்பாட்டை விளக்க ஒரு கருத்தை முன்வைக்கிறார். அதாவது, உயிரினங்கள் பல காலங்களாக சிறுகச் சிறுக மாறி வேறொன்றாக மாறியிருக்க வேண்டுமென்பது அது. இதற்கு ஆதாரங்கள் இல்லையென்று மற்றொரு பிரபல பரிணாமவியலாளர் வேறொரு கோட்பாட்டை முன் வைக்கிறார். உயிரினங்கள், குறுகிய காலத்தில் விரைவாக மாற்றமடைந்து பின்னர் நீண்ட காலங்களுக்கு மாற்றமைடையாமல் இருந்திருக்கவேண்டும் என்று விளக்குகிறது இந்த கோட்பாடு.


நேரெதிர் திசையில் பயணிக்கும் இந்த இருவரது கருத்தில் எது சரி? எது தவறு?  

ஜே குட் அவர்களது கோட்பாடு சரியென்றால் டார்வினின் கூற்று தொலைந்து போய் விடும். அதே சமயம், டார்வினின் கூற்று உண்மையென்றால், அதற்கு எதிரான ஆதாரங்களைத் தான் உயிரினப்படிமங்கள் கொடுக்கின்றன என்ற ஜே குட் அவர்களின் வாதங்கள் பொய்யாகிவிடும்.    

பரிணாமவியலாளர்களிடையே மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது இந்த கோட்பாடு.

தெளிவான ஆதாரங்கள் இல்லாமல் உயிரினங்கள் சிறுகச் சிறுக வந்திருக்க வேண்டுமென்ற வாதத்தை தொடர்ந்து முன்வைத்தால், பரிணாமவியல், காலப்போக்கில் அதிக எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று ஜே குட் எண்ணியிருக்க வேண்டும். தன்னுடைய கோட்பாடு, இருக்கும் ஆதாரங்களோடு ஒத்துப்போவதால் பரிணாமத்தில் இருக்கும் குழப்பங்கள் தீரலாம் என்று நம்பினார்.

ஆக, தன்னுடைய கோட்பாட்டின் மூலம்,
  • உயிரினங்கள் திடீரென உயிரினப்படிமங்களில் தோன்றியது, 
  • அவைகள் சிறுகச் சிறுக மாறியதற்கு உயிரினப்படிவங்களில் ஆதாரங்கள் இல்லாதது, 
  • உயிரினங்கள் பல காலங்களாக மாற்றமடையாமல் இருப்பது,
போன்ற பரிணாமம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுள்ளதாக நம்பினார் ஜே குட்.

ஆனால், அவருடைய முயற்சி குழப்பங்களை தீர்க்காமல் அவற்றை அதிகமாக்கி பரிணாமவியலாளர்களிடையே பலத்த சர்ச்சைகளை உருவாக்கியது. அவர்களிடம் உள்ள குழப்பங்களை வெளியூலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியது. 

ஜே குட் அவர்களது கோட்பாட்டை விமர்சிக்க தொடங்கிய பரிணாமவியலாளர்கள், அந்த கோட்பாடு எந்த அளவு அறிவியலின் மற்ற துறைகளுக்கு முரணாக உள்ளது என்று விளக்கத் தொடங்கினார்கள்.

ஆனால் பரிதாபம், தாங்கள் ஆதரிக்கும் டார்வினின் கோட்பாட்டிற்கும் (ஜே குட் சொல்லுவது போல) ஆதாரங்களில்லை, அதுவும் அறிவியலில்லை என்பதை ஏனோ வசதியாக மறந்து விட்டனர்.

நான் முன்னமே சொன்னது போன்று, இந்த பதிவு punctuated Equilibria என்றால் என்னவென்று தெளிவாக விளக்கும் பதிவல்ல. மாறாக, அந்த கோட்பாடு ஏன் முன்வைக்கப்பட்டது என்று ஆராயும் முயற்சி தான் இது.

நீங்கள் இந்நேரம் அறிந்துக்கொண்டிருக்கலாம். டார்வினின் கூற்று தவறு என்பதை உயிரினப்படிம ஆதாரங்கள் மூலம் உணர்ந்த ஒரு பரிணாமவியலாளரின் செயல் தான் "puctuated Equilibria" என்ற கோட்பாடு. 

இப்போது நான் பரிணாமவியலாளர்களிடம் கேட்க நினைக்கும் சில கேள்விகள்,            

  • இதுவரை கண்டெடுக்கப்பட்ட உயிரினப்படிமங்கள், உயிரினங்கள் திடீரென தோன்றியதாகவும் அவைகளில் பெரும்பாலானவை மாற்றமடையாமல் இருப்பதாகவும் தெரிவிக்கின்றன என்ற அறிவியல் உண்மையை நீங்கள் ஏற்கின்றீர்களா? மறுக்கின்றீர்களா? 
  • ஜே குட் மற்றும் நைல்ஸ் எல்ரெச் ஆகிய இருவரின் கோட்பாடான "puntuated Equilibria" கொண்டுவரப்பட்டதற்கு டார்வினின் கூற்று தவறு என்பதுதான் காரணம் என்பதை ஒப்புக்கொள்கின்றீர்களா? இல்லையா? 
  • டார்வின் மற்றும் ஜே குட், இந்த இருவரது கோட்பாட்டில் எது சரி? எது தவறு?.  இதே கேள்வியை வேறு விதமாக கேட்பதென்றால், உயிரினங்கள் பல காலங்களாக சிறுகச் சிறுக மாற்றடைந்து வேறொன்றாக மாறினவா? அல்லது குறுகிய கால இடைவெளியில் விரைவாக மாற்றமடைந்து வேறொன்றாக மாறி பிறகு மாற்றமடையாமல் தொடர்ந்தனவா?     
  • ஜே குட் அவர்களின் கூற்று உண்மையாக இருக்கும் பட்சத்தில் டார்வினின் "உயிரினங்கள் சிறுகச் சிறுக மாறி வேறொன்றாக வந்திருக்க வேண்டும்" என்ற கருத்து தவறு என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?
  • "இல்லை, இல்லை, டார்வின் சொன்னது தான் சரி" என்றால், இதுவரை கண்டெடுக்கப்பட்ட வரலாற்று ஆதாரங்கள் அவரது கருத்துக்கு எதிராக உள்ளனவே? அதற்கு உங்களது பதிலென்ன?
  • மேற்கண்ட கேள்விக்கு, "உயிரினப்படிமங்கள் இன்னும் முழுமையான அளவில் கிடைக்கவில்லை , அதனால் தான் பரிணாமம் தென்படவில்லை" என்று நீங்கள் கூறினால், பிறகு எந்த வரலாற்று ஆதாரங்களை வைத்து நாங்கள் பரிணாமத்தை நம்ப வேண்டும் என்று நீங்கள் எதிர்ப்பார்க்கின்றீர்கள்?
  • பரிணாமம் நடந்ததற்கான ஆதாரங்கள் இன்னும் கிடைக்காத போது, சென்ற காலத்தில் இப்படி நடந்திருக்க வேண்டும் என்பதை நாங்கள் எப்படி நம்பமுடியும்?            
  • இன்றைய நிலவரப்படி, வரலாற்று ஆதாரங்கள் "உயிரினங்கள் திடீரென தோன்றியதாகவும், அவை சிறுகச் சிறுக வேறொன்றாக மாறவில்லை" எனவும் சொல்கின்றன. இன்றைய ஆதாரங்கள் இப்படி சொல்கின்ற நிலையில் இவற்றை நம்புவது சரியா? அல்லது ஆதாரங்களே இல்லாத, நீங்கள் சொல்கின்ற கொள்கையை நம்புவது சரியா?     
  • எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் பின்னப்பட்ட ஒரு கருத்தை கதை என்று கூறுவது ஏற்புடையதா? அல்லது அறிவியல் என்று கூறுவது ஏற்புடையதா?

பரிணாமவியலில் உள்ள ஓட்டைகள் காலப்போக்கில் தங்களுடைய அளவிலும் சரி, எண்ணிக்கையிலும் சரி, அதிகரித்து கொண்டுதான் வருகின்றன.

ஓட்டைகள் பல நிறைந்த இப்படியான ஒரு கோட்பாட்டை நம்ப மறுப்பவர்களை "அறிவியலை எதிர்க்கின்றார்கள்" என்று முத்திரை குத்துவது எந்த விதத்தில் நியாயம் என்பதை பரிணாமவியலாளர்கள் சிந்தித்து பார்க்கவேண்டும்.   

ஆதாரங்களை தெளிவாக கொடுத்த பிறகு அதை நம்பவில்லை என்றால் பரிணாமவியலாளர்கள் சொல்லுவதில் நியாயம் இருக்கிறது. வரலாற்றில் பரிணாமம் நடந்ததற்கான எந்த ஆதாரத்தை கொடுத்து விட்டீர்கள் நாங்கள் நம்பாமல் இருப்பதற்கு?

பரிணாமத்தை நம்பும் சகோதரர்கள், இனி மேலும் அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று பரிணாமவியலை நம்பாமல் (உதாரணத்துக்கு, குதிரை பரிணாமம் அடைந்த கதை, ஊர்வன பறவையான கதை (Archaeopteryx)...etc) தாங்களாக இந்த கோட்பாட்டின் உண்மை நிலையை ஆராய்ந்தறிய முன்வர வேண்டும். பரிணாமவியலுக்கும், அறிவியலுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.

அந்த நிலை வராதவரை பரிணாமவியலை "அறிவியல்" என்று கருதும் நிலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். 

இன்ஷா அல்லாஹ், தொடரும்....

இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக....ஆமின்

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்....


பரிணாமம் தொடர்பான மற்ற பதிவுகள்:



My sincere thanks to:
1. Stephen Jay Gould.
2. Niles Eldredge.
3. evolution.berkeley.edu

References: 
1. Punctuated Equilibria: An alternative to Phyletic Gradualism - Stephen Jay Gould and Niles Eldredge.
2. The Panda's Thumb - Stephen J. Gould. 1980, p. 181-182.
3. Paleontologists Confronting Macroevolution - Ricklefs, Robert E., Science, vol. 199, 1978, p. 59.
4. "Progress in Evolution? - Niles Eldredge, New Scientist, vol. 110, 1986, p. 55.
5. Stephen Jay Gould - Wikipedia.
6. Phyletic Gradualism - Wikipedia.
7. Punctuated Equilibrium Theory - Appalachian State university, last updated on 13th April 2006.
8. Punctuated Equilibrium - Principia Cybernetica Web, F.Heylinghen, dated 22nd July 1999.
9. The Structure of Evolutionary Theory  - Stephen Jay Gould
10. The Theory of Punctuated Equilibrium - Academy of Achievement, revised on 17th November, 2009.
11. Punctuated Equilibria - Talkorigins.org, Wesley Elsberry, last updated 4th February 1996.
12. The Quote Mine Project Or, Lies, Damned Lies and Quote Mines, "Sudden Appearance and Stasis" - Talkorigins.org (Quote # 14).
13. The Stephen Jay Gould Prize - The society for the Study of Evolution.
14. Stephen Gould and the Neo-Darwinians - Science and You, Henry Mulder.
15. Evolution as Fact and Theory - Stephen Jay Gould, (originally appeared in Discover 2 (May 1981): 34-37) and re-published as Hen's Teeth and Horse's Toes, New York: W. W. Norton & Company, 1994, pp. 253-262.
16. Stasis - Wikipedia.
17. More on Punctuated Equilibrium - evolution.berkeley.edu


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

Sat 17

Click here to bookmark this link.Channel Image03:11 சொர்கத்தில் நுழையவைக்கும் செயல் வழிகாட்டி
"மரணித்த பிறகு சொர்க்கத்தில் நுழைந்துவிட்ட ஒருவரிடம் 'நீ என்ன அமல் செய்து கொண்டிருந்தாய்?' என கேட்கப்பட்டது. அவராக நினைத்தோ அல்லது நினைவூட்டப்பட்டோ கூறினார், "நான் மக்களுக்கு வியாபாரம் செய்து கொண்டிருந்தேன். கஷ்டப்படுவோருக்கு -கடனாளிகளுக்கு- தவணை கொடுப்பேன். காசு பணங்களில் ஏதேனும் குறையிருந்தாலும் அதனை பெரிது படுத்தாது வாங்கிக் கொள்வேன்' என்று கூறினார். இதனால் அவரை அல்லாஹ் மன்னித்துவிட்டான்" என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர் : ஹுதைஃபா ரளியல்லாஹு அன்ஹு
 நூல் : முஸ்லிம் 2919

Fri 16

Click here to bookmark this link.Channel Image07:52 இறையச்சத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு; ஸாபித் இப்னு ஹைஸ்[ரலி]! ஸஹாபாக்களின் வாழ்வினிலே...

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

நம்பிக்கையாளர்களே! நபியின் குரலுக்கு மேலாக உங்கள் குரல்களை உயர்த்தாதீர்கள்; உங்களுக்குள் மற்றொருவர் இரைந்து பேசுவதுபோல் நபியிடம் இரைந்து பேசாதீர்கள்; [இவற்றால்] நீங்கள் அறிந்து கொள்ளமுடியாத நிலையில் உங்கள் அமல்கள் அழிந்துபோகும்.[49 ;2 ]

என்ற வசனம் அருளப்பட்டவுடன் ஸாபித் இப்னு ஹைஸ்[ரலி] அவர்கள் தமது இல்லத்திலேயே அமர்ந்துவிட்டார்கள். 'நான் நரகவாதிகளில் ஒருவன்' என்று கூறிக்கொண்டு நபி[ஸல்] அவர்களிடம் வராமல் வீட்டிலேயே அடைந்து கிடந்தார்கள். எனவே நபி[ஸல்]அவர்கள் [ஸாபித்] குறித்து ஸஅத்இப்னு முஆத் [ரலி] அவர்களிடம் , அபூ அம்ர்! ஸாபித்க்கு என்ன ஆயிற்று..? அவருக்கு உடல் நலமில்லையா.? என்று கேட்டார்கள். அதற்கு ஸஅத் [ரலி] அவர்கள், அவர்[ஸாபித்] எனது அண்டை வீட்டுக்காரர்தான். அவருக்கு எந்த நோயுமிருப்பதாக தெரியவில்லை என்றார்கள். பிறகு ஸஅத்[ரலி] அவர்கள் ஸாபித் இப்னு ஹைஸ்[ரலி] அவர்களிடம் நபி[ஸல்] அவர்கள் கேட்டதை பற்றி தெரிவித்தார்கள்.

அப்போது ஸாபித் இப்னு ஹைஸ்[ரலி] அவர்கள், [49 ;2 ] வசனம் அல்லாஹ்வால் அருளப்பட்டுள்ளது. உங்களில் இறைத்தூதர்[ஸல்] அவர்கள் முன் நான் குரலை உயர்த்தி பேசுபவன் என்பதை நீங்கள் அறிந்தே வைத்துள்ளீர்கள். ஆகவே நான் நரகவாசிகளில் ஒருவன்தான் என்று கூறினார்கள் . இதை ஸஅத்[ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்களிடம் கூறினார்கள். அப்போது நபி[ஸல்] அவர்கள், இல்லை.அவர்[ஸாபித்] சொர்க்கவாசிகளில் ஒருவர் ஆவார் என்று கூறினார்கள்.

[நூல்; முஸ்லிம்]

அன்பானவர்களே! இந்த பொன்மொழியில், நபியவர்களின் நெருங்கிய தோழர்களில் ஒருவரான ஸாபித்இப்னு ஹைஸ்[ரலி] அவர்கள், அல்லாஹ் மேற்கண்ட வசனத்தை இறக்கிய மாத்திரமே நபி[ஸல்] அவர்களுக்கு முன்னால் குரலை உயர்த்தி பேசியதால், நம்முடைய அமல்கள் அழிந்துவிட்டது; நாம் நரகவாதிதான் என்று கவலைகொண்டவர்களாக நபியவர்களை சந்திக்க வெட்கப்பட்டு ஒதுங்கியதை பார்க்கிறோம். அந்த அளவுக்கு தன்னுடைய தவறு குறித்து, அதுவும் அல்லாஹ் மேற்கண்ட வசனத்தை இறக்கி கட்டளை பிறப்பிப்பதற்கு முன்னால் செய்த தவறு குறித்து கைசேதப்படுகிறார்கள் கவலை கொள்கிறார்கள் என்றால் அதுதான் இறையச்சம்! ஆனால் இன்று நாமோ அல்லாஹ்வின் கட்டளைகள் முழுமையாக அல்-குர்ஆன் வடிவில் இருக்கிறது. அதை பார்த்த பின்னும், படித்த பின்னும் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமாக தவறுகளை செய்துவிட்டு, அந்த தவறு குறித்து எந்தவித சலனமுமின்றி, 'அல்லாஹ் மன்னிக்கக் கூடியவன்' என்று சாதாரணமாக சென்று கொண்டிருக்கிறோம். அல்லாஹ் மன்னிக்க கூடியவன் என்று ஸாபித் இப்னு ஹைஸ் அவர்களுக்கும் தெரியும். அதையும் தாண்டி உள்ளத்தில் இறைவனின் இறையச்சம் . அதனால்தான், 'எங்களிடையே நடமாடும் சொர்க்கவாசியாகவே நாங்கள் ஸாபித் இப்னு ஹைஸ்[ரலி] அவர்களை கருதி வந்தோம்' என்று அனஸ்[ரலி] அவர்கள் கூறும் அளவுக்கு சிறப்பு பெற்றார்கள். ஆனால் நாமோ பாவங்களை அற்பமாக கருதுகிறோம், அதற்கு கிடைக்கும் தண்டனைகள் குறித்து பாராமுகமாக இருக்கிறோம். இந்நிலை தொடர்ந்தால் மறுமையில் கைசேதம் அடையவேண்டிய நிலை வரும்.

எனவே இயன்றவரை பாவம் தவிர்ப்போம்; பாவமன்னிப்பு தேடுவோம்; படைத்தவனின் அருள் பெறுவோம்.

Thu 15

Click here to bookmark this link.Channel Image13:32 திருமணம் வழிகாட்டி
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
திருமணம் எனது வழிமுறை (சுன்னத்) ஆகும். இதனை எவரொருவர் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்ல.  

அறிவிப்பாளர்: அனஸ் பின் மாலிக் (ரலி)  
நூல் : புகாரி

Wed 14

Click here to bookmark this link.Channel Image11:13 அநீதிக்கு முன் ஆர்ப்பரித்த வீராங்கனை! ஸஹாபாக்களின் வாழ்வினிலே...
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்[ரலி] அவர்கள், நபி[ஸல்] அவர்களின் அருமை மனைவியரும், முஃமீன்களின் தாயுமான ஆயிஷா[ரலி] அவர்களின் சகோதரி அஸ்மா பின்த் அபூபக்கர்[ரலி] அவர்களின் மகனாவார். நபி[ஸல்] அவர்களின் உற்ற தோழர் அபூபக்கர்[ரலி] அவர்களின் பேரனாவார். நபி[ஸல்] அவர்களின் தோழரும் முஹாஜிரும் சுவனத்தை கொண்டு நன்மாராயம் சொல்லப்பட்டவருமான ஸுபைர்[ரலி] அவர்களின் மகனாவார். மதீனா ஹிஜ்ரத்திற்கு பின் பிறந்த முதல் குழந்தையாவார். இத்தகைய சிறப்புமிகு அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்[ரலி] அவர்கள்,
நபி[ஸல்] அவர்களின் மரணத்திற்கு பின்னால் ஏற்பட்ட அரசியல் பிரச்சினைகளில் ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் என்பவரது படையால் ஷஹீதாக்கப்பட்டு, பேரீச்சம் மரத்தில் சிலுவையில் ஏற்றி தலைகீழாக தொங்கவிடப்பட்ட நிலையில்,

இப்னு உமர்[ரலி] அவர்கள், அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்[ரலி] அவர்களின் ஜனாஸா அருகே நின்று, அபூ குபைபே! உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும் என்று கூறியதோடு, அப்துல்லாஹ் இப்னு ஸுபைரின் சில நற்பண்புகளை அங்கே சொல்கிறார்கள். இந்த செய்தி ஹஜ்ஜாஜுக்கு எட்டியபோது, அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்[ரலி] அவர்களின் ஜனசாவை யூதர்க்களின் அடக்கஸ்தலம் மீது போட்டுவிடுமாறு உத்தரவிட்டார். அதோடு, அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்[ரலி] அவர்களின் தாயார் அஸ்மா பின்த் அபூபக்கர்[ரலி] அவர்களை அழைத்துவர ஆளனுப்பினார். அஸ்மா[ரலி]அவர்கள் வர மறுத்துவிட்டார்கள். ஹஜ்ஜாஜ் மீண்டும் ஆளனுப்பி, அஸ்மாவே! நீயாக வருகிறாயா..? அல்லது உமது சடையை பிடித்து இழுத்துவர ஆள் அனுப்பட்டுமா என கேட்க, அப்போதும் அஸ்மா[ரலி]அவர்கள் வர மறுத்ததோடு மட்டுமன்றி, அல்லாஹ்வின் மீது ஆணையாக! எனது சடைப் பிடித்து இழுத்துக்கொண்டு வருபவரை நீர் அனுப்பாதவரையில் நான் உம்மிடம் வரப்போவதில்லை என்று கூறிவிட்டார்கள்.

உடனே ஹஜ்ஜாஜ் தமது செருப்பை அணிந்துகொண்டு அஸ்மா[ரலி] அவர்களை நோக்கி விரைந்து வந்து அஸ்மா[ரலி] அவர்களிடம், அல்லாஹ்வின் விரோதியை [உமது மகனை] என்ன செய்தேன் பார்த்தீரா என்று கேட்டார். அப்போது அஸ்மா[ரலி]அவர்கள்,

நீ என் மகனின் இம்மையை சீரழித்துவிட்டாய்; என் மகனோ உனது மறுமையை சீரழித்துவிட்டார் என்றே நான் கருதுகிறேன். நீ என் மகனை 'இரு கச்சுடையாளின் புதல்வரே! என்று ஏளனமாக அழைப்பாய் என்று நான் கேள்விப்பட்டேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! இரு கச்சுடையாள் நான்தான். [மதீனா ஹிஜ்ரத் சென்ற] அல்லாஹ்வின் தூதருக்கும் , எனது தந்தை அபூபக்கருக்கும் உரிய உணவை எனது ஒரு கச்சின் மூலம் கட்டினேன். மற்றொன்று ஒரு பெண்ணிடம் அவசியம் இருக்கவேண்டிய கச்சாகும்.

அறிந்துகொள்! அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் எங்களிடம், 'சகீஃப் குலத்தாரில் ஒரு மகாப் பொய்யனும், ஒரு நாசக்காரனும் இருப்பார்கள்' என்று கூறினார்கள். மகாப் பொய்யனை [முக்தார் இப்னு அபீஉபைத்] நாங்கள் பாத்துவிட்டோம். அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறிய 'நாசக்காரன்' நீதான் என்றே நான் கருதுகிறேன் என்று கூறியவுடன், அஸ்மா[ரலி] அவர்களுக்கு பதிலளிக்கமுடியாமல் ஹஜ்ஜாஜ் அங்கிருந்து வெளியேறி சென்றுவிட்டார்.

[ஹதீஸ் சுருக்கம்நூல்; முஸ்லிம்.]
அன்பானவர்களே! இந்த செய்தியை நாம் பொறுமையுடன் படித்துப் பார்ப்போமானால், அஸ்மா[ரலி] அவர்களின் அளவுகடந்த வீரமும், பொறுமையும் வெளிப்படுவதை நாம் அறியமுடியும்.
  • தனது அருமை மகன் அநியாயமாக கொல்லப்பட்டு, சிலுவையில் தலைகீழாக தொங்க விடப்பட்டு , பின்பு அநியாயக்கார யூதர்களின் அடக்கஸ்தலத்தில் போடப்பட்ட செய்தியறிந்த பின்பும், கத்தாமல் கதறாமல் தன் மகனை காண ஓடாமல், தன் மகன் அல்லாஹ்வின் பாதையில் ஷஹீதாகியுள்ளான் என பொறுமை காத்த அந்த அஸ்மா[ரலி] அவர்களின் பாங்கு.
  • ஹஜ்ஜாஜ், அஸ்மா[ரலி] அவர்களை அழைத்துவர ஆள் அனுப்பியபோது, வீரமிக்க நம் மகனையே கொன்ற இந்த அநியாயக்காரன் நம்மை விட்டு வைப்பானா.? என்று பதறி ஹஜ்ஜாஜை சந்திக்க ஓடாமல், வரமறுத்த துணிவு! 'என் சடையை பிடித்து இழுத்துவரும் உன் ஆளை அனுப்பிப் பார்' என்று ஆர்ப்பரித்த வீரம்!! சுப்ஹானல்லாஹ்!!. தொடைநடுங்கி முஸ்லிம்களுக்கோர் பாடம்!!!
  • எங்கள் தலைவர் நபி[ஸல்] அவர்கள் முன்னறிவிப்பு செய்த 'அநியாயக்காரன்' நீதானோ என்று ஆர்ப்பரித்த ஆளுமை அஸ்மா[ரலி] ஒரு சகாப்தம்.

எங்கள் இறைவா! அஸ்மா[ரலி] அவர்களின் வீரத்தை, உள்ள உறுதியை, ஈமானிய வலுவை எங்களுக்கும் தந்து நீ பொருந்திக் கொண்ட முஸ்லிம்களாக மரணிக்க செய்வாயாக!

Tue 13

Click here to bookmark this link.Channel Image12:01 பி.ஜே விற்கு பகிரங்க விவாத அழைப்பு LUNAR CALENDAR / சந்திர நாட்காட்டி

ஆன் லைன் பி.ஜே இணைய தளத்தில் ஜாக் மாநில தலைவர் அல்ஜன்னத் ஜுலை 2010 இதழில் வெளியிட்ட செய்தியை அடிப்படையாகக் கொண்டு பி.ஜே பாராட்டுப்பத்திரம் வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட செய்தி இதோ

மேற்கண்ட  செய்தியில்  மார்க்க அறிவு இல்லாதவர்கள் பேச்சாளர்களாக தலையெடுத்ததால்தான் ஜாக்கில் குழப்பம் என கூறியுள்ளார்.  சிந்தனைவாதிகள் இங்கு சற்று சிந்திக்க கடமைப்படுள்ளனர்.

ஆடு நனைகிறதே என ஓநாய் அழுவது போல் இங்கு பி.ஜே அழுவது எதற்காக ?

ஆன் லைன் பி.ஜே இணைய தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் மார்க்கத்தை ஆய்வு [...]

Sun 11

Click here to bookmark this link.Channel Image09:06 அமல் செய்வதில்தான் எத்துனை ஆர்வம் இவருக்கு..? ஸஹாபாக்களின் வாழ்வினிலே...
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
நபி [ஸல்] அவர்களின் இந்த உம்மத்தில் தலைசிறந்தவர் அபூபக்கர் சித்தீக்[ரலி] அவர்கள் என்பதை நாமெல்லாம் அறிந்துவைத்துள்ளோம். இத்தகைய சிறப்பு அவர்களுக்கு இருந்தும், சொர்க்கத்திற்கு உரியவர் என்று இறைத்தூதரால் பிரகடனப் படுத்தப்பட்ட பின்பும் அபூபக்கர்[ரலி] அவர்களின் அமல்கள் குறைந்ததா என்றால் இல்லை. நல்லமல்கள் என்று எவையெல்லாம் உள்ளதோ அவைகளை அன்றாடம் செய்யக்கூடிய அற்புத மனிதராக அபூபக்கர்[ரலி] அவர்கள் திகழ்ந்துள்ளதற்கு சான்றாகவும், நமக்கும் அத்தகைய ஆர்வம் வரவேண்டும் என்பதற்காகவும் இந்த பொன்மொழி இங்கு பதியப்படுகிறது;

அபூஹுரைரா[ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்;

[ஒருநாள்] இறைத்தூதர்[ஸல்] அவர்கள் [எங்களிடம்] இன்று உங்களில் நோன்பு நோற்றிருப்பவர் யார் என்று கேட்டார்கள்.

அப்போது அபூபக்கர்[ரலி] அவர்கள், 'நான்' என்றார்கள்.

இன்றைய தினம் உங்களில், ஜனாஸாவை பின் தொடர்ந்து சென்றவர் யார் என்று கேட்டார்கள்.

அபூபக்கர்[ரலி]அவர்கள், 'நான்' என்றார்கள்.

இன்றையதினம் உங்களில் ஒரு ஏழைக்கு உணவளித்தவர் யார் என்று கேட்டார்கள்.

அபூபக்கர்[ரலி]அவர்கள், 'நான்' என்றார்கள்.

இன்றையதினம் ஒரு உங்களில் ஒரு ஒரு நோயாளியின்நலம் விசாரித்தவர் யார் என்று கேட்டார்கள்.

அபூபக்கர்[ரலி]அவர்கள், 'நான்' என்றார்கள்.

அப்போது இறைத்தூதர் அவர்கள், இவை அனைத்தும் ஒரு மனிதரிடத்தில் ஒன்று சேர்ந்தால் அவர் சொர்க்கத்தில் நுழையாமல் இருப்பதில்லை என்று கூறினார்கள். [நூல்;முஸ்லிம்].

Sat 10

Click here to bookmark this link.Channel Image12:15 குர்ஆன் வழிகாட்டி
இது, (அல்லாஹ்வின்) திரு வேதமாகும். இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.

திருக்குர்ஆன் 2:2
Click here to bookmark this link.Channel Image09:42 இறைத்தூதரின் ரகசியத்தை இறுதிவரை காத்தவர்! ஸஹாபாக்களின் வாழ்வினிலே...
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அனஸ் [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்;

நான்[ரசூல்[ஸல்]அவர்களிடம் சேவகனாக இருந்தபோது] என்னிடம் வந்தார்கள். நான் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தேன். நபி[ஸல்] அவர்கள் எங்களுக்கு ஸலாம் சொன்னார்கள். பிறகு ஒரு அலுவல் நிமித்தமாக என்னை ஒரு இடத்திற்கு அனுப்பினார்கள். நான் என் தாயாரிடம் தாமதமாகவே வந்தேன். அப்போது என்தாயார், உன் தாமதத்திற்கு காரணம் என்ன..? என்று கேட்டார்கள். நான் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் ஒரு அலுவலுக்காக என்னை அனுப்பி வைத்திருந்தார்கள் என்று சொன்னேன். அப்போது என் தாயார் என்ன அலுவல்? என்று கேட்டார்கள். நான் அது 'ரகசியம்' என்று சொன்னேன். அப்போது என்தாயார், அல்லாஹ்வின் தூதரின் ரகசியத்தை நீ யாரிடம் சொல்லாதே என்றார்கள்.[ நூல்;முஸ்லிம் 4891 ].

மற்றொரு அறிவிப்பில்;
நபி[ஸல்] அவர்கள் என்னிடம் ஒரு ரகசியம் சொன்னார்கள். அவர்களின் இறப்பிற்கு பிறகு கூட அதை நான் ஒருவரிடமும் தெரிக்கவில்லை. என் தாயார் உம்மு சுலைம்[ரலி] அவர்கள் அது குறித்து கேட்டபோது நான் அவர்களுக்கும் தெரிவிக்கவில்லை. [நூல்;முஸ்லிம் 4892 ]

இந்த பொன்மொழியில் நபி[ஸல்]அவர்களிடம் சேவகராக இருந்த அனஸ்[ரலி] அவர்களின் பண்பு நமக்கு மிகப்பெரிய படிப்பினையாக உள்ளது. சிறுவர்களுடன் விளையாடும் அளவுக்கு சிறிய வயதுடைய அனஸ்[ரலி]அவர்கள், இறைத்தூதரின் ரகசியம் விசயத்தில் எந்த அளவுக்கு கவனமாக இருந்துள்ளார்கள் எனில், அவர்களது தாயார் கேட்டபோதும் கூட சொல்லவில்லை. அதுமட்டுமன்றி, அந்த ரகசியத்தை இறைத்தூதர்[ஸல்] அவர்களின் மரணத்திற்கு பின்னால் கூட எவரிடமும் சொன்னதில்லை என்றால், ரகசியமும் அமானிதமே என்பதை அனஸ்[ரலி] அவர்கள்வாழ்வு எமக்கு உணர்த்துகிறது. ஆனால் இன்று பெரும்பாலான பிரச்சினைக்கு ரகசியங்கள் வெளிப்படுவதே காரணமாக அமைகிறது. இயக்கம், அமைப்பு, தொழில், பாதுகாப்பு போன்றவை மட்டுமன்றி, கணவன் மனைவிக்குள் நடக்கும் இல்லறம் வரை பேணப்படவேண்டிய ரகசியங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டு அதனால் பல்வேறுவகையான பின்னடைவை சந்திக்கிறோம். எனவே அனஸ்[ரலி] அவர்களின் இந்த உயரிய பண்பை நம்முடைய வாழ்விலும் கடைபிடிக்க முன்வருவோமாக!
Click here to bookmark this link.Channel Image09:42 அபூஹுரைரா[ரலி] என்றாலே நமக்கு பாசம் பொங்குவது எதனால்..? ஸஹாபாக்களின் வாழ்வினிலே...
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
நபித்தோழர்களில் அபூஹுரைரா[ரலி] அவர்களை அறியாத முஸ்லிம்கள் இருப்பது அரிது. அதுமட்டுமன்றி, அபூஹுரைரா[ரலி] அவர்கள் பெயரை கேட்டாலோ, அல்லது அவர்கள் சம்மந்தப்பட்ட செய்தி படித்தாலோ அவர்கள் மீது நமக்கு இனம் புரியாத பாசம் வெளிப்படுவதை நாம் உணரமுடியும். அதற்கு காரணம் அவர்களின் தியாக வாழ்க்கை என்பது ஒருபுறமிருந்தாலும், மற்றொரு புறம் இவ்வாறு அவர்கள் மீது நமக்கு பாசம் ஏற்படுவதற்கு காரணம் இறைத்தூதர்[ஸல்] அவர்களின் பிரார்த்தனை என்பதுதான் பிரதானமான உண்மையாகும். அதுபற்றிய பொன்மொழி இதோ;

அபூஹுரைரா[ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்;
எனது தாயார் இணைவைப்பு கொள்கையில் இருந்தபோது இஸ்லாத்திற்கு வருமாறு நான் அழைப்பு விடுத்து வந்தேன். அவர் மறுத்து வந்தார். இன்றும் அதுபோல் அழைப்பு விடுத்தபோது அவர் இறைத்தூதர்[ஸல்]அவர்கள் குறித்து நான் விரும்பாத வார்த்தைகளை என் காது பட கூறினார். நான் அழுதுகொண்டே அல்லாஹ்வின் தூதரிடம் சென்று நடந்தவற்றை கூறி, இந்த அபூஹுரைரவின் அன்னைக்கு நேர்வழி கிடைத்திட பிரார்த்தியுங்கள் என்றேன்.
அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள், இறைவா! அபூஹுரைராவின் அன்னைக்கு நல்வழி காட்டுவாயாக என்று பிரார்த்தித்தார்கள். இதைக்கேட்டு நான் மகிழ்ந்தவனாக புறப்பட்டு எனது வீட்டை அடைந்தபோது, வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது . எனது காலடி சத்தத்தை அறிந்துகொண்ட என் தாயார், அபூஹுரைரா! அங்கே இரு என்றார்கள்.
அப்போது தண்ணீர் சிந்தும் சத்தம் கேட்கவே என் தாயார் குளித்துவிட்டு வந்து கதவை திறந்தார். பின்பு அபூஹுரைராவே! அல்லாஹ்வைத்தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாரும் இல்லை. முஹம்மது[ஸல்] அல்லாஹ்வின் தூதர் என்று உறுதிகூறுகிறேன் என்றார்கள்.
உடனே மகிழ்ச்சியில் அழுதவனாக இறைத்தூதரை சந்தித்து, யாரசூலுல்லாஹ்! அல்லாஹ் உங்களின் பிரார்த்தனையை அங்கீகரித்துவிட்டான், அபூஹுரைராவின் அன்னைக்கு நேர்வழி காட்டிவிட்டான் என்றேன். அதைக்கேட்ட நபி[ஸல்]அவர்கள் இறைவனை போற்றி புகழ்ந்தார்கள். அப்போது நான், இறைத்தூதர் அவர்களே! இறை நம்பிக்கையுள்ள அடியார்களுக்கு என்மீதும், என்தாயார்மீதும் நேசம் ஏற்படவும், அவ்வாறே அவர்கள் மீது எனக்கும் என் தாயாருக்கும் நேசம் ஏற்படவும் பிரார்த்தியுங்கள் என்றேன். நபியவர்கள், இறைவா! உன்னுடைய அடியார் அபூஹுரைரா மீதும், அவருடைய தாயார் மீதும் இறை நம்பிக்கையாளர்களுக்கு நேசத்தை ஏற்படுத்துவாயாக! இறை நம்பிக்கையாளர்கள் மீது இவர்களுக்கு நேசத்தை ஏற்படுத்துவாயாக என்று பிரார்த்தித்தார்கள்.
எனவேதான், என்னை பார்க்காவிட்டாலும் என்னைப்பற்றி கேள்விப்படும் எந்த ஒரு இறைநம்பிக்கையாளரும் என்னை நேசிக்காமல் இருப்பதில்லை.
நூல்;முஸ்லிம்]

அன்பானவர்களே! அபூஹுரைரா[ரலி] அவர்கள் மீது நமக்கு ஏற்படும் இனம் புரியா நேசம் இறைத்தூதர்[ஸல்] அவர்களின் பிரார்த்தனையால் இறைவன் உருவாக்கியதாகும் என்பதை பொன்மொழி வாயிலாக அறியமுடிகிறது. அதோடு இந்த பொன்மொழியில் மற்றொரு படிப்பினை என்னவெனில், இணைவைப்பு கொள்கையில் இருக்கும் தன்னுடைய தாய் நேர்வழி பெறவேண்டும் என்ற அபூஹுரைரா[ரலி] அவர்களின் ஆவல், நம் ஒவ்வொருவருக்கும் வரவேண்டும். ஏனெனில், நம்முடைய பெற்றோர்களோ, உறவினர்களோ, நண்பர்களோ தர்காக்களில் விழுந்து கிடப்பவர்களாக இருக்கலாம். அப்படிப் பட்டவர்களுக்கு தினமும் நாம் சத்தியத்தின் பால் அழைப்பு விடுப்பதோடு, அவர்கள் நேர்வழி பெறவேண்டும் என்ற உண்மையான நோக்கோடு இறைவனிடமும் இறைஞ்சினால், இறைவன் நாடினால் அவர்கள் நேர்வழி பெறக்கூடும். அதைவிடுத்து அறியாமையில் தர்காக்களுக்கு செல்பவர்களுக்கு 'முஷ்ரிக்கீன்கள்' என ஃபத்வா வழங்குவதால் எந்த பயனும் இல்லை என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அபூஹுரைரா[ரலி] அவர்களைப்போல் உண்மையான நோக்கோடு அழைப்புப் பணியாற்றுபவர்களாக நம்மை ஆக்கி அருள்வானாக!

Fri 09

Click here to bookmark this link.Channel Image20:20 “ECFR will have 31 days for Rajab 1431″ LUNAR CALENDAR / சந்திர நாட்காட்டி

Dear Br. Dr. Khalid Shaukat.

Assalamu Alaikkum W R W B You have written that according to the Chairman of European Council for Fatwa & Research (ECFR), the Shabaan starts only on  Tuesday, 13th July. But their site, www.e-cfr.org/en shows that Thursday, 8th July was 27th Rajab for them.  So, they will be completing 30 days of Rajab [...]

Thu 08

Click here to bookmark this link.Channel Image17:24 குர்ஆன் - ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ள துஆ மற்றும் திக்ர்கள் (3) பிரார்த்தனை பேழை
உச்சரிப்பு: அஊது பில்லாஹி மின் ஜஹ்தில் பலாஇ வதர்கிஷ் ஷகாஇ வ ஸூஇல் களாயி வஷமாததில் அஃதா

பொருள்: கடுமையான துன்பத்தை விட்டும் துர்ப்பாக்கியம் அடைவதை விட்டும் விதியின் தீமையை விட்டும் எதிரிகளின் எக்காளத்தை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

உச்சரிப்பு: அல்லாஹும்ம இன்னீ அவூது பி(க்)க மினல் ஹம்மி வல் ஹுஸ்னி வமினல் அஜ்ஸி வல் கஸ்லி வ மினல் ஜுப்னி வல் புخக்லி வமினல் மஃஸமி வல் மஃக்ரமி வமின் கஃலபதித் தைனி வ கஹ்ரிர் ரிஜால்

பொருள்: யா அல்லாஹ்! கவலை, இயலாமை, சோம்பல், கோழைத்தனம், கஞ்சத்தனம், பாவம், கடன் மற்றும் கடன்களின் பாரம், பிற மனிதர்களின் கொடுமைகள் ஆகியவற்றை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.

உச்சரிப்பு: அஊதுபிகல்லாஹும்ம மினல் பரஸி வல் ஜுனூனி வல் ஜுஸாமி வமின் ஸய்யியில் அஸ்காம்

பொருள்: வெங்குஷ்டம்,பைத்தியம், தொழு நோய், மற்றும் பிற கொடிய நோய்கள் அனைத்தை விட்டும்-யா அல்லாஹ் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.

உச்சரிப்பு: அல்லாஹும்மஸ்துர் அவ்ராத்தீ வ ஆமின் ரவ்ஆத்தி வஹ்குபள்னீ மின் பைனி யதய்ய வ மின் خகல்Fபீ வஅன் யமீனி வஅன் ஷிமாலி வமின் Fபௌக்கீ வ அஊது பி அழ்மதி(க்)க மின் அன் உஃக்தால மின் தஹ்த்தீ

பொருள்: இறைவா என்னுடைய பலவீனங்களை மறைப்பாயாக. என் அச்சங்களை அகற்றி எனக்கு அமைதி தருவாயாக. எனக்கு முன்பிருந்தும் பின்னாலிருந்தும் எனது வலது புறமிருந்தும் இடது புறமிருந்தும் எனக்கு மேலிருந்தும் எனக்குப் பாதுகாப்பு அளிப்பாயாக. இன்னும் கீழே இருந்து எதிர்பாராத விதமாக கொல்லப்படுவதில் இருந்து -உனது கண்ணியத்தைக் கொண்டு பாதுகாப்புத் தேடுகிறேன்.

உச்சரிப்பு: அல்லாஹும் மஃக்Fபிர் கதீஅதீ வஜஹ்லீ வ இஸ்ராFபீ Fபீ அம்ரீ வமா அன்த அஃலமு பிஹி மின்னி அல்லாஹும் மஃக்கFபிர் லீ ஜத்தி வஹஸ்லீ வக(த்)தயீ வஅம்தீ வகுல்லு தாலிக இன்தீ

பொருள்: யா அல்லாஹ்! எனது பாவத்தையும் எனது அறியாமையையும் எனது விஷயத்தில் நான் மேற்கொள்ளும் வரம்பு மீறல்களையும் மற்றும் எந்தப் பிழைகளை என்னைவிட நீ அதிகம் அறிந்துள்ளாயோ அந்தப் பிழைகளையும் மன்னிப்பாயாக. இறைவா! நான் விரும்பி நாடி செய்த பிழைகளையும் விளையாட்டாகச் செய்த தவறுகளையும் மன்னிப்பாயாக! நான் தவறுதலாக செய்தவற்றையும், வேண்டுமென செய்தவற்றையும் மன்னிப்பாயாக!

உச்சரிப்பு: அல்லாஹும் மஃக்Fபிர் லீ மா கத்தம்(த்)து வமா அخக்கர்து வமா அஸ்ரர் (த்)து வமா அஃலன்து வமா அன்(த்)த அஃலமு பிஹி மின்னீ அன்தல் முகத்திம். வ அன்தல் முஅخக்கிர் வஅன்த அலா குல்லி ஷைஇன் கஸீர்

பொருள்: நான் முன்னர் செய்த பாவங் களையும் பின்னர் செய்த இரகசியமாய் செய்த- பகிரங்கமாய்ச் செய்த பாவங்களையும் மேலும் எந்தப் பிழைகளை என்னை விட நீ அதிகம் அறிந்துள்ளாயோ அந்தப் பிழைகளையும் மன்னிப்பாயாக! முன்னதாக அல்லது தாமதமாக ஏற்பட்ட அனைத்துப் பொருள்களையும் உருவாக்கியவன் நீயே! மேலும் நீ அனைத்தின் மீதும் பேராற்றல் கொண்டவனாய்த் திகழ்கின்றாய்!
Click here to bookmark this link.Channel Image12:46 காலத்தை திட்டாதீர்கள்! வழிகாட்டி
அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
ஆதமுடைய மக்கள் காலத்தை திட்டுகிறார்கள். (ஆனால்) நானே காலமாக (காலத்தின் போக்கை நிர்ணயிப்பவனாக) உள்ளேன. என்னுடைய கரத்திலேயே இரவும், பகலும் உள்ளன.

அறிவிப்பாளர்: அபுஹுரைரா (ரலி) 

நூல்: புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவுத், தாரமி, முஅத்தா.

Tue 06

Click here to bookmark this link.Channel Image13:17 பிற வீடுகளில் நுழைந்தால்.. வழிகாட்டி
"விசுவாசிகளே! (உங்கள் வீடுகள் அல்லாத) பிற வீடுகளுக்குச் சென்றால், அவர்களின் அனுமதி பெறாமலோ, ஸலாம் சொல்லாமலோ உள்ளே நுழையாதீர்கள்."

திருக்குர்ஆன் 24:27

Fri 02

Click here to bookmark this link.Channel Image00:48 Evolution St(he)ory > Harry Potter Stories - III எதிர்க்குரல்


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் )...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.
  

இன்ஷா அல்லாஹ், இந்த பதிவில் நாம் "பரிணாம மரம் (Evolutionary Tree or Phylogenetic tree or Tree of life)" குறித்து பார்க்கவிருக்கின்றோம்.   

பதிவிற்கு செல்லும் முன் பரிணாமவியல் குறித்த சில வார்த்தைகளை தெரிந்து கொள்வது அவசியமென்று கருதுகிறேன்.  

1. இயல்பு/இயற்கை தேர்வு (Natural Selection (NS))
2. தற்செயலான மாற்றங்கள் (Random Mutations (RM))

பரிணாமம் நடக்க நாம் மேலே பார்த்த இரண்டு உக்திகளும் அதி முக்கியமானது. அதாவது, இயற்கைக்கு ஏற்றவாறு, (பரம்பரை பரம்பரையாக) உயிரினங்களின் உடல்களில் (சிறுக சிறுக) தற்செயலாக ஏற்படும் (மரபணு) மாற்றங்களே புதிய உயிரினங்கள் உருவாக காரணம் (Origin of Species by means of natural selection and random mutations).

உதாரணத்துக்கு, ஒரு வகையான நிலவாழ் உயிரினம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அவைகளுக்கு பறக்கும் தேவை ஏற்படுகிறது. (அவைகளில் பகுதியோ அல்லது முழு இனமோ) பறக்க முயற்சிக்கிறது. இப்படியாக பரம்பரை பரம்பரையாக முயற்சிக்கையில், சிறகுகள் (மற்றும் இதர மாற்றங்கள்) சிறிது சிறிதாக ஒவ்வொரு தலைமுறையாக வளர்ந்து, 100 பரம்பரைகளுக்கு பிறகோ, அல்லது 1000 பரம்பரைகளுக்கு பிறகோ, அல்லது 10000 பரம்பரைகளுக்கு பிறகோ etc etc, அந்த உயிரினம் பறக்கும் சக்தியை பெற்று பறவையாகி விடும். 

3. உயிரினப்படிமங்கள் (Fossils) - விலங்குகள் மற்றும் தாவரங்களின் இயற்கையாக பாதுகாக்கப்பட்ட மிச்சங்கள்/ஆதாரங்கள்.    
Fossils are the remains or evidence of animals and plants which have been preserved naturally - Eyewitness guides in Association with The Natural History Museum, London. 1993 edition, p-6.   


4. தொல்லுயிரியல் (Palaeontology) - உயிரினப்படிமங்கள் குறித்து பேசும் துறை (Study of Fossils).

5. செல் (Cell) -  உலகிலுள்ள அனைத்து உயிரினங்களும் செல்களால் ஆனவையே. ஒரே ஒரு செல் கொண்ட உயிரினங்கள் மற்றும் பலசெல் கொண்ட உயிரினங்கள் என்று அவை பிரிக்கப்பட்டுள்ளன. பலசெல் உயிரினங்களான நம் உடம்பில் மட்டும் சுமார் 60-90 ட்ரில்லியன் செல்கள் (1 trillion = 100,000 crores or 1000 Billion) இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
Cells are the building blocks of life - "Ask a Biologist" Website

பதிவிற்கு செல்வோம்... 

பரிணாமம் என்றால் என்ன? (Definition of Evolution): 

துரதிஷ்டவசமாக, பரிணாமவியலாளர்களிடையே இது குறித்து ஒருமித்த மற்றும் தெளிவான கருத்து இல்லாதபடியால் என்னால் இங்கு விளக்க முடியாத சூழ்நிலை. 

அதனால் நேரடியாக பரிணாமவியல் என்ன சொல்ல வருகிறது என்று கருத்துக்கு சென்று விடுவோம். 

பரிணாமவியலாளர்களின் எண்ணப்படி உலகம் தோன்றி பல மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு (உலகம் தோன்றி 4.6 பில்லியன் ஆண்டுகள் ஆனதாக கணக்கிடப்பட்டுள்ளது)  ஒரு வாழும் செல் (Living Cell) உருவாகி இருக்க வேண்டும் (Abiogenesis).

பிறகு அவற்றிலிருந்து பலசெல் உயிரினங்கள் தோன்றியிருக்க வேண்டும். பிறகு இவை முதுகெலும்பு இல்லாத உயிரினங்களாக, அவற்றிலிருந்து முதுகெலும்பு உள்ள உயிரினங்களாக என்று படிப்படியாக சிறுக சிறுக மாறி இப்போது நாம் பார்க்கக்கூடிய பல்வேறு உயிரினங்களாக வந்திருக்க வேண்டும்.


"No one knows how this happened. But Scientists think that energy from sunlight and lighting strikes triggered the formation of chemicals that could copy themselves. This may have taken place in the chemical "soup" that existed in the oceans, in shallow polls, or around volcanoes. The next crucial step was when the self-copying chemicals became trapped in "bubbles" of oil, which hold them together. These tiny blobs of chemicals were the beginnings of the first living cell. ....Over hundreds of millons of years, some simple animals without backbones, which looked like jelly fish or worms, developed into animals with backbones, including the first fish" - Plants and Animals, The young Oxford library of science, Volume 2, Oxford university press, 2002 edition, p-6.      


உதாரணத்துக்கு, பூமியின் வரலாற்றை 12 மணி நேர கணக்காக (0-12 ) எடுத்துக்கொண்டால், உலகின் முதல் எளிமையான பாக்டீரியாக்கள் 3 மணிக்கும், ஜெல்லி மீன்கள் போன்றவை 10 மணிக்கும், முதல் டைனாசர்கள் 11.45 க்கும், மனிதன் 11.59 மணிக்கும் தோன்றியதாக விளக்கம் கொள்ளலாம். (The Oxford Science Library, 2002 edition, Vol-2, p-5).



    
சுருக்கமாக சொல்லப்போனால், இன்று நாம் பார்க்கக்கூடிய எல்லா உயிரினங்களுக்கும் ஒரே ஒரு பொதுவான மூதாதையர் தான்.               

இங்கு நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும். பெரும்பாலான பரிணாமவியலாளர்களின் கருத்துப்படி, பரிணாமவியல் என்பது, முதல் வாழும் செல் எப்படி உருவானது என்பது பற்றிய கோட்பாடு அல்ல. வேறு விதமாக சொல்லுவதென்றால், பரிணாமவியல், முதல் செல் எப்படி உருவானது என்றெல்லாம் விளக்காது. 

மாறாக, முதல் செல் உருவானப் பிறகு, அதிலிருந்து உயிரினங்கள் எப்படித் தோன்றின என்று மட்டும் தான் கூறும்.

டெக்னிகலாக கூறுவதென்றால் Ribosomes+DNA (these are major components of a cell) உருவானப் பிறகு, NS+RM (Natural selection and Random Mutation) போன்றவற்றால் ஏற்படும் மாற்றங்களைத்தான் அது பேசும். 

"பரிணாமக் கொள்கை உயிரின் மூலத்தை விளக்கும் ஒரு கொள்கையல்ல, உயிரினங்களின் மூலத்தை விளக்க முற்படும் ஒரு கொள்கை" "It does not explain origin of life, it (tries to) explain(s) origin of species" - சகோதரர் இரஞ்சித், கையேடு வலைப்பூ.   

NS மற்றும் RM போன்றவை, Ribosomes+DNA உருவானப் பிறகுதான் செயல் பட ஆரம்பிக்கும் என்ற கூற்றை "NON-SENSE" என்று வர்ணிக்கிறது Uncommon Descent இணையதளம். இது பற்றி மேலும் படிக்க இங்கே...
   
ஒரு செல் எப்படி உருவாகி இருக்கும்? (Abiogenesis) என்பதில் பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன. இன்றைய தேதிவரை, விஞ்ஞானம் இவ்வளவு வளர்ந்த பிறகும் கூட, பரிணாமவியலாளர்களால் ஒரு வாழும் செல்லை உருவாக்க முடியவில்லை. 

ஒரு செல் எப்படி உருவாகி இருக்கும் என்று தெரியாததால் தான் அதை பரிணாமவியலில் ஒரு பகுதியாக சேர்க்கவில்லையோ? 

நாளையே ஒரு செல்லை இவர்கள் உருவாக்கிவிட்டால், அதை பரிணாமவியலின் ஒரு பகுதியாக சேர்த்து, "பரிணாமவியல் பூரணமடைந்து விட்டது" என்று கூறினாலும் கூறுவார்கள்.

இது குறித்து பிரபல அறிவியலாளரான Sir Fred Hoyle அவர்கள் கூறியது,

The random emergence of even the simplest cell is equal to "a tornado sweeping through a junk-yard might assemble a Boeing 747 from the materials therein." - "Hoyle on Evolution", Nature, Vol 294, November 12, 1981, p. 105. (Emphasis added)
ஒரு மிகச் சாதாரண செல் (Simplest Cell) கூட தற்செயலாக உருவாகியிருக்கும் என்று கூறுவது, ஒரு சூறாவளி, வேண்டாத பொருட்கள் சேகரித்து வைக்கப்படும் ஒரு இடத்தை கடந்து சென்றதால் (அந்த பொருட்களை கொண்டு) Boeing 747 விமானம் உருவாகிவிட்டது என்று கூறுவதற்கு நிகரானது - "Hoyle on Evolution", Nature, Vol 294, November 12, 1981, p. 105.   

அவர் இத்தோடு நிறுத்தவில்லை, ஒரு புரதம் (ஒரு செல் என்பது பல்வேறு புரதங்களால் ஆனது) கூட தற்செயலாக உருவாக வாய்ப்பில்லை என்று சொன்னவர்.
   
எது எப்படியோ, பெரும்பாலான பரிணாமவியலாளர்கள் Abiogenesisசை பரிணாமவியலின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்ளாதபடியால், அதை தற்போதைக்கு தள்ளி வைப்போம். பரிணாமவியலாளர்கள் எதை ஒப்புக்கொள்கிறார்களோ அதையே நாம் விமர்சிக்க முயல்வோம். இன்ஷா அல்லாஹ்...  

பெரும்பாலான பரிணாமவியலாளர்கள் ஒப்புக்கொண்ட ஒரு விஷயமென்றால் அது பரிணாம மரம். 

பரிணாமத்தின் முக்கிய தூணான இதுவும் பரிணாமவியலாளர்களின் கற்பனைத் திறனால் வடிவமைக்கப்பட்ட ஒன்றே.  இதற்கும் எந்தவொரு ஆதாரமும் வரலாற்றில் இல்லை. 

பரிணாம மரம் என்றால் என்ன?

ஒரு பொதுவான மூதாதையரில் இருந்து எப்படி உயிரினங்கள் வெவ்வேறு கிளைகளாக மாறின என்று விளக்குவதே பரிணாம மரம்.

"ஒரு உயிர் முதலில் தோன்றி அதன் பின்னர் வெவ்வேறு காலத்தில் சூழல் மாற்றங்களுக்கேற்றவாறு வெவ்வேறு வகையான உயிர்த்தொகுப்புகளாக மாறியதைப் பற்றிய ஒரு விளக்கத்தையே இப்பரிணாம மரம் விளக்குகிறது" - சகோதரர் ரஞ்சித், கையேடு வலைப்பூ.  

உதாரணத்துக்கு கீழே உள்ள படங்களை பாருங்கள்.  





ஒரே மூதாதையரில் இருந்து அனைத்து உயிரினங்களும் வந்திருக்க வேண்டும் என்று விளக்கும் பரிணாம மரத்தில் மிகப் பெரிய பிரச்சனை என்னவென்றால் இது ஒரு யூகத்தில் அமைந்த ஒன்று என்பது தான். இதற்கு ஆதாரம் என்று ஒன்றுமில்லை.

உலகம் தோன்றியதிலிருந்து இன்று வரையிலான காலக்கட்டத்தை பல்வேறு பிரிவுகளாக பிரிக்கின்றனர். உதாரணத்துக்கு...



Cambrian  - சுமார் 500-550 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலக்கட்டம்.
Ordovician - சுமார் 450 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலக்கட்டம்.
Pre-cambrian - உலகம் தோன்றியதிலிருந்து cambrian வரையிலான காலக்கட்டம். உலகம் தோன்றியது சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னராம். ஆக precambrian காலக்கட்டம் என்பது சுமார் 4 பில்லியன் ஆண்டுகள் கொண்டது.

ஏன் பரிணாம மரம் தவறென்றால் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும் இதற்கு எதிராகத்தான் உள்ளன. அதாவது, ஒரு மரத்தை தலைகீழாக திருப்பிபோட்டால் எப்படி இருக்குமோ அப்படித்தான் விவகாரங்கள் இருப்பதாக ஆதாரங்கள் கூறுகின்றன.

இன்னும் தெளிவாக கூறப்போனால், மிகப் பழமையான உயிரினப்படிமங்களில் (Fossils) முதன் முதலாக தென்படும் (complex) உயிரினங்கள், முழுமையான உருவங்களில், திடீரென தோன்றியிருக்கின்றன.

உலகின் மிகப் பழமையான உயிரினப்படிமங்கள் என்றால் அவை cambrian காலக்கட்டத்தை சேர்ந்தவை (சுமார் 500-550 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையவை). அந்த படிமங்களின் படி, அந்த கால கட்டத்தில் காணப்படும் உயிரினங்கள் அனைத்தும் திடீரென தோன்றியிருக்கின்றன.

"A half-billion years ago, ...the remarkably complex forms of animals we see today suddenly appeared" - Richard Monastersky, "Mysteries of the Orient," Discover, April 1993, p. 40.
"அரை பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால், நாம் இன்று பார்க்கக்கூடிய சிக்கலான வடிவமைப்பை கொண்ட விலங்குகள் திடீரென தோன்றியிருக்கின்றன" - Richard Monastersky, "Mysteries of the Orient," Discover, April 1993, p. 40.    

ரிச்சர்ட் டாகின்ஸ் அவர்கள் சொல்வதும் இதையேத்தான் பிரதிபலிக்கின்றது,

"we find many of them already in an advanced state of evolution, the very first time they appear. It is as though they were just planted there, without any evolutionary history" - Richard Dawkins, The Blind Watchmaker, W. W. Norton,London, 1986, p. 229. 
"அவைகளில் பெரும்பாலானவை முதன் முதலாக காணப்படும் போதே பரிணாமத்தின் முன்னேறிய நிலையில் உள்ளன. எந்தவொரு பரிணாம வரலாறும் இல்லாமல் அவைகள் அங்கே நட்டுவைக்கப்பட்டது போன்று உள்ளன" - Richard Dawkins, The Blind Watchmaker, W. W. Norton,London, 1986, p. 229.  

டாகின்ஸ் சொல்லுவது போல, இப்படி திடீரென்று தோன்றியிருக்கும் உயிரினங்கள் பரிணாமத்தை கடந்து வந்ததாக வரலாறு இல்லை.

  

இது குறித்து எழுதிய "Science" ஆய்விதழ், பின் வரும் தகவலை கூறுகிறது,

"The beginning of the Cambrian period, some 545 million years ago, saw the sudden appearance in the fossil record of almost all the main types of animals (phyla) that still dominate the biota today." - Richard Fortey, "The Cambrian Explosion Exploded?," Science, vol. 293, no. 5529, 20 July 2001, pp. 438-439. 
சுமார் 545 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், Cambrian காலக்கட்டதின் துவக்கத்தில், இன்று நாம் பார்க்கக்கூடிய அனைத்து விதமான முக்கிய விலங்குகளும் உயிரின படிமங்களில் திடீரென தோன்றியிருக்கின்றன - Richard Fortey, "The Cambrian Explosion Exploded?," Science, vol. 293, no. 5529, 20 July 2001, pp. 438-439. 

அதே இதழ் மற்றொரு முக்கியமான செய்தியையும் சொல்கிறது. அதாவது இந்த காலக்கட்டத்திற்கு முன் உயிரினங்கள் சிறுகச் சிறுக வந்ததற்கான (Gradual Increase) படிம  ஆதாரங்கள் இல்லை என்பது தான் அது.

"This differential evolution and dispersal, too, must have required a previous history of the group for which there is no fossil record" - Richard Fortey, "The Cambrian Explosion Exploded?," Science, vol. 293, no. 5529, 20 July 2001, pp. 438-439. 

பரிணாமம் உண்மையாக இருந்திருந்தால், cambrian காலக்கட்டத்தில் காணப்படும் உயிரினங்கள் சிறுகச் சிறுக வந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் இதுவரை இல்லை.

இது பற்றி குறிப்பிடும் "Science Daily",

"If Darwin’s theory of natural selection was right, life evolved gradually over millions of years. However, the Cambrian period, which began around 542 million years ago, seemed to herald a sudden rapid increase in species diversity, an event which has come to be known as the ‘Cambrian explosion’"- Science Daily, Solution To Darwin's Dilemma Of 1859, Dated January 9, 2009.
"டார்வினின் கோட்பாடான இயற்கைத் தேர்வு உண்மையென்றால், உயிரினங்கள், லட்சக்கணக்கான ஆண்டுகளாக சிறுகச் சிறுக மாறி பரிணாமம் அடைந்து வந்திருக்க வேண்டும். ஆனால், 542 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய cambrian காலக்கட்டத்தில் பலவித உயிரினங்கள் திடீரென்று அதிகமாகி இருக்கின்றன" - Science Daily, Solution To Darwin's Dilemma Of 1859, Dated January 9, 2009.    

பரிணாமவியலாளர்கள் சொல்வது போன்று, ஒரு பொதுவான மூதாதையரில் இருந்து உயிரினங்கள் சிறுகச் சிறுக பெருகின என்பது போன்ற வாதங்கள் கற்பனை அளவில் மட்டுமே உண்மை. நம்மிடமிருக்கும் ஆதாரங்கள் அவர்களுடைய வாதங்களுக்கு நேர் எதிராகத்தான் இருக்கின்றன.      

ஆக, முதன் முதலாக காணப்படும் விலங்கினங்கள், பரிணாமம் என்ற ஒன்றை கடந்து வரவில்லை. பொதுவான மூதாதையர் என்ற கோட்பாடுக்கும் அவைகளுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை.  







ஆக மொத்தத்தில் பரிணாம மரத்தின் அடிப்படையே தவறு. 

இன்ஷா அல்லாஹ், எதிர்க்காலத்தில், இந்த மரத்தின் கிளைகளையும் விமர்சிப்போம். அதாவது, மீன்கள் நிலநீர்வாழ் உயிரினங்களாக மாறின; அந்த நிலநீர்வாழ் உயிரினங்கள், ஊரும் பிராணிகளாக மாறின; அந்த ஊரும் பிராணிகள், பறவைகளாகவும் பாலூட்டிகளாகவும் மாறின என்று கூறுவார்களே அதைத்தான் குறிப்பிடுகிறேன்.    (மீன்கள் நிலநீர்வாழ் உயிரினங்களாக மாறின, டைனாசரிலிருந்து பறவைகள் வந்தன என்று கூறப்படும் கதைகளெல்லாம் படு சுவாரசியமானவை).

அதெல்லாம் சரி, பரிணாமத்தின் அடிப்படையிலேயே இத்தனை கோளாறுகள் இருப்பது குறித்து பரிணாமவியலாளர்கள் என்ன கூறுகிறார்கள்? 

cambrian காலக்கட்டத்திற்கு முந்தைய காலக்கட்டத்தில் வாழ்ந்த உயிரினங்கள் மிக மிருதுவான தோல் அமைப்பை பெற்றுள்ள காரணத்தால் உயிரினப்படிவங்களில் பரிணாமம் தென்படாமல் இருந்திருக்கலாம் என்பது அவர்களது முக்கிய வாதம்.

ஆனால் இதுவும் அவர்களது கற்பனையே தவிர உண்மையில்லை. சுமார் மூவாயிரம் பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய உயிரினப்படிவங்களில் ஒருசெல் பாக்டிரியாக்கள் காணக்கிடைக்கின்றன (Micro Fossils). இன்றைய தேதிவரை, cambrian காலத்திற்கு முற்பட்ட பல microfossils கிடைத்துள்ளன.

ஆக, இவைகள் மிருதுவாக இருப்பதால் பரிணாமம் நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்ற இவர்களின் வாதங்கள் அறிவியலுக்கு ஒத்துவராது.

இவர்கள் கூறும் மற்றொரு காரணமான "Molecular Phylogeny" யும், பரிணாமத்தை நிரூபிப்பதற்கு பதிலாக அதற்கு எதிரான தகவல்களையே தருகின்றது.

So, இவ்வளவு ஆதாரங்கள் பரிணாம மரம் என்ற கோட்பாட்டிற்கு எதிராக இருந்தும், இன்னும் ஏன் இதை பரிணாமவியலாளர்கள் தாங்கி பிடித்து கொண்டிருக்கின்றனர்? 

இது, நாம் பரிணாமவியலாளர்களை நோக்கி கேட்க வேண்டிய கேள்வி....

"1999 ஆம் ஆண்டு, சீனாவைச் சேர்ந்த, cambrian கால உயிரினப்படிவங்களில் தனித்துவம் பெற்ற தொல்லுயிரியலாளர் (Paleontologist) ஒருவர், அமெரிக்காவின் பல்வேறு பல்கலைகழகங்களில் உரை நிகழ்த்துவதற்காக வந்திருந்தார். அவருடைய ஒரு உரையை கேட்கக்கூடிய சந்தர்ப்பம் எனக்கு அமைந்தது.
     அந்த உரையில், cambrian கால உயிரினப்படிவங்கள், டார்வினின் கோட்பாட்டிற்கு எப்படி நேர் எதிராக உள்ளன என்று சுட்டி காட்டினார் அவர். 
      உரை முடிந்ததும், அந்த அரங்கத்தில் இருந்த பல்வேறு விஞ்ஞானிகள் அவரிடம் உயிரினப்படிவங்கள் குறித்து பல கேள்விகளை கேட்டனர். ஆனால் டார்வினின் கோட்பாடு குறித்து அவர் சொன்ன தகவல்கள் தொடர்பாக எந்தவொரு கேள்வியையும் கேட்காமல் தவிர்த்து விட்டனர். 
   நிகழ்ச்சி முடிந்ததும் அவர் என்னிடம் இது பற்றி கேட்டார். நான் கூறினேன்,"டார்வினின் கோட்பாடை விமர்சிப்பது அமெரிக்காவில் விரும்பத்தக்கதல்ல" என்று.
   இதை கேட்டவுடன் சிரித்து விட்டார் அவர். பிறகு அவர் கூறினார், " சீனாவில் டார்வினை விமர்சிக்கலாம், ஆனால் அரசாங்கத்தை தான் விமர்சிக்க கூடாது. ஆனால் இங்கே அமெரிக்காவில் அரசாங்கத்தை விமர்சிக்கலாம், ஆனால் டார்வினை விமர்சிக்க கூடாது" - Jonathan Wells, Icons of Evolution, 2000, pp-58. 

என்ன?, பரிணாமம் இல்லையென்றால் உயிரியல் இல்லையென்று சிலர் சொல்லுகிறார்களா?.....................ஏனென்று அவர்களிடம் தான் கேட்க வேண்டும்....

நிச்சயமாக, பரிணாமவியல் என்ற கதை, ஹாரி பாட்டர் கதைகளையெல்லாம் விட மேம்பட்டது..........  

இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...


குறிப்பு: 
           தயவுக்கூர்ந்து, நான் இங்கு குறிப்பிட்டிருக்கும் எந்தவொரு தகவலையும் அப்படியே ஏற்காமல், நீங்களும் இவை சரிதானா என்று ஆராய்ந்து பாருங்கள். இஸ்லாமும் நமக்கு அதைத்தான் கற்று கொடுக்கிறது.


My Sincere Thanks to:
1. Br.Ranjith.
2. Talk Origins Website.
3. Dr.Jonathan Wells.

Pictures Taken from: 
1. The young oxford library of science.
2. Academic American Encyclopedia.
3. Berkeley University (tailored).
4. Icons of Evolution.
5. Atlas of Creation.
6. Encyclopedia Brittannica.

References: 
1. Definition of fossils - Eyewitness guides in Association with The Natural History Museum, London. 1993 edition, p-6.
2. Cells, Building blocks of life - "Ask a Biologist" Website
3. Origin of Life - Plants and Animals, The young Oxford library of science, Volume 2, Oxford university press, 2002 edition, p-6.
4. "Hoyle on Evolution", Nature, Vol 294, November 12, 1981, p. 105.
5. Richard Monastersky, "Mysteries of the Orient," Discover, April 1993, p. 40.
6. Richard Dawkins, The Blind Watchmaker, W. W. Norton,London, 1986, p. 229.
7. Richard Fortey, "The Cambrian Explosion Exploded?," Science, vol. 293, no. 5529, 20 July 2001, pp. 438-439.
8. Solution To Darwin's Dilemma Of 1859 - Science Daily Dated January 9, 2009.
9. Tree of life - Jonathan Wells, Icons of Evolution, pp-29-58.
10. Evolution - Encyclopedia Brittannica.
11. Evolution - Academic American Encyclopedia
12. Cells - Wikipedia.
13. The Fossil Record Refutes Evolution - alberteinstein.ro


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ.

Thu 01

Click here to bookmark this link.Channel Image02:34 மயங்கிவிட வேண்டாம் வழிகாட்டி
மனிதர்களே! நிச்சயமாக அல்லாஹ்-வுடைய வாக்குறுதி உண்மையானதாகும். ஆகவே, இவ்வுலக வாழ்க்கை மெய்யாகவே உங்களை மயக்கிவிட வேண்டாம். (சைத்தானாகிய) மாயக்காரனும் அல்லாஹ்வை பற்றி உங்களை மயக்கிவிட வேண்டாம்.
 

திருக்குர்ஆன் 35:5

Wed 30

Click here to bookmark this link.Channel Image08:11 ஒவ்வொன்றும் விசாரிக்கப்படும் வழிகாட்டி
"செவி, பார்வை, இதயம் இவை ஒவ்வொன்றும் மறுமை நாளில் அதன் செயல் பற்றி நிச்சயமாக விசாரிக்கப்படும்."
 

திருக்குர்ஆன் 17:36

Tue 29

Click here to bookmark this link.Channel Image12:35 சிறந்த தர்மம் வழிகாட்டி
"இறந்த என் தாய்-க்காக நான் செய்ய எது சிறந்த தர்மம்?" என நபி (ஸல்) அவர்களிடம் வினவினேன்.

"தண்ணீர் வழங்குதல்" என்றார்கள்.
 

அறிவிப்பவர்: சாது பின் உபதா (ரலி)
நூல்: நஸயி 3604

Mon 28

Click here to bookmark this link.Channel Image09:23 ஹலால், ஹராம் வழிகாட்டி
"ஹலால் என்னும் அனுமதிக்கப்பட்டது தெளிவானது; ஹராம் என்னும் விலக்கப்பட்டதும் தெளிவானது; அவ்விரண்டிற்குமிடையே சந்தேகத்திற்கிடமான காரியங்கள் உள்ளன. பாவம் எனச் சந்தேகப்படுபவற்றை விட்டுவிடுகிறவர் பாவம் என்று தெளிவாகத் தெரிவதை நிச்சயம் விட்டுவிடுவார்; பாவம் எனச் சந்தேகப்படுபவற்றைச் செய்யத் துணிகிறவர் தெளிவான பாவங்களிலும் வீழ்ந்து விடக் கூடும். பாவங்கள் அல்லாஹ் போட்ட வேலிகளாகும். வேலியைச் சுற்றி மேய்கிறவர் அதற்குள்ளும் சென்று விடக்கூடும்" என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: நுஃமான் இப்னு பஷீர்(ரலி)
நூல்: புகாரி (எண் 2051)

Sun 27

Click here to bookmark this link.Channel Image23:54 எத்தனை சோதனைகளுக்கு மத்தியிலும்... எதிர்க்குரல்


அஸ்ஸலாமு அலைக்கும்,

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

      எத்தனை சோதனைகளுக்கு மத்தியிலும் ஈமான் என்னும் கயிற்றை பற்றி பிடித்திருக்கும் நம்பிக்கையாளர்களை கண்டு வியந்திருப்போம். நம்மையும் இறைவன் அப்படி ஆக்கியருள வேண்டுமென்று துவா செய்திருப்போம். அவர்களுக்கு மத்தியிலே வாழ விருப்பப்பட்டிருப்போம்.     

அப்படிப்பட்ட ஒருவரைத்தான் நாம் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம். இவர் கண் மருத்துவத்தில் தனித்துவம் பெற்றவர். பரிணாமவியல் குறித்த என் பதிவுகளுக்காக சில தகவல்களை இவருடைய பேச்சுக்களில் இருந்து நான் சேகரித்ததுண்டு. 

இவரும் நாத்திகராக இருந்து இஸ்லாத்திற்கு வந்தவர் தான்.

டாக்டர் லாரன்ஸ் ப்ரௌன் (Dr. Lawrence Brown), கனடியன் தாவாஹ் அசோசியேசனின் (Canadian Dawah Association) interfaith துறையின் தலைவர். அமெரிக்க விமானப்படையில் மதிப்புமிக்க கண் மருத்துவராக பணியாற்றியவர்.            



1990 ஆம் ஆண்டு இவருடைய வாழ்க்கை திசை திரும்பியது. அது தான் இவர் இறை நம்பிக்கையின்பால் வந்த நேரம்.


"அது 1990 ஆம் ஆண்டு. நான் ஜார்ஜ் வாஷிங்க்டன் பல்கலைகழக மருத்துவமனையில் பணியாற்றிய நேரம். அந்த ஆண்டு அக்டோபர் மாதம் பத்தாம் தேதி என்னுடைய இரண்டாவது மகள் பிறந்தாள்.


மார்பிலிருந்து பாதங்கள் வரை அடர்த்தியான நீல நிறத்தில் இருந்த அவளை கண்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். அவளுடைய இதய குழாய்களில் இருந்த பிரச்சனையால் அவளுடைய உடம்பால் தேவையான இரத்தத்தை பெற முடியவில்லை. ஒரு மருத்துவராக அவள் அதிக நாட்கள் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்திருந்தேன். மிகவும் உடைந்து போனேன். இப்போது அவளுக்கு தேவை அவசர அறுவை சிகிச்சை.


குழந்தைகள் இதய சிகிச்சையில் தனித்துவம் பெற்ற மருத்துவர் அழைக்கப்பட்டார். என் குழந்தையை அவசர சிகிச்சை பிரிவில் அவருடைய கண்காணிப்பில் ஒப்படைத்து விட்டு வெளியேறினேன்.


இப்போது எனக்கு துணை யாருமில்லை, என்னுடைய பயத்தை தவிர. அது என்னை அந்த மருத்துவமனையின் வழிபாட்டு அறைக்கு செல்ல வித்திட்டது.


பாரம்பரியமிக்க கிருத்துவ குடும்ப பின்னணியை கொண்ட நான், இறைவனை குறைந்த அளவாவது அங்கீகரித்தது என்றால் அது இப்போது தான். அதுகூட சந்தேகத்தில் தான் பிரார்த்தித்தேன்....


"இறைவா நீ இருந்தால்..."


அவன் இருந்தால், அவன் என் குழந்தையை காப்பாற்றினால், என்னை அவனுடைய மார்க்கத்திற்கு வழி காட்டினால் நிச்சயம் அவனை நான் பின்பற்றுவேன். இதுதான் அப்போது இறைவனுக்கு நான் அளித்த வாக்குறுதி. பிறகு அவசர சிகிச்சை பிரிவிற்கு திரும்பினேன்.


என் மகள் நலமாகி விடுவாள் என்று மருத்துவர் கூறினார். அவர் சொன்னது போன்றே இரண்டு நாட்களில் அவள் சரியாகி விட்டாள், மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை இல்லாமலேயே.... இன்று அவளுக்கு பதினெட்டு வயது. நலமாக இருக்கிறாள்.


நான் முன்னமே கூறியது போன்று நான் ஒரு மருத்துவர். அவள் குணமானதற்கு மருத்துவ ரீதியாக patent ductus arteriosis, low oxygenation and spontaneous resolution என்று காரணங்கள் சொல்லப்பட்டாலும் அதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நிச்சயமாக இதில் இறைவனின் பங்குள்ளது என்றே என் மனம் சொல்லியது.


பயத்தில் இறைவனிடம் வாக்குறுதி கொடுக்கும் பலரும், அவர்களுடைய தேவை நிறைவேறிய பின்னர் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருக்க புது புது காரணங்களை கண்டுபிடிப்பர்.


என் மகள் குணமடைந்ததற்கு மருத்துவ காரணங்களை காட்டி என்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருந்திருக்கலாம். ஆனால் என்னால் அப்படி இருக்க முடியவில்லை. காரணம், நம்பிக்கை என்னுள் ஆழமாக நுழைந்து விட்டது. நாங்கள் எடுத்த cardiac ultrasounds, ஒருநாள் பிரச்சனை இருப்பதாக காட்டியதையும் மறுநாள் அந்த பிரச்சனை இல்லை என்று காட்டியதையும் என்னால் ஒரு சாதாரண நிகழ்வாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.


நான் நினைத்ததெல்லாம் இதுதான், இறைவன் நான் கேட்டதை நிறைவேற்றி விட்டான், இப்போது நான் அவனுக்கு கொடுத்திருந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.


அடுத்த சில வருடங்கள் என்னுடைய வாக்குறுதியை நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொண்டேன். ஆனால், அவை யாவும் தோல்வியை தழுவின. கிருத்துவம் மற்றும் யூத மார்க்கத்தை பற்றி நிறைய படித்தேன். ஆனால் அவை எனக்கு முழு திருப்தியை தரவில்லை. அதுமட்டுமல்லாமல் அவற்றுடன் என்னால் ஒன்றவும் முடியவில்லை.


பிறகு ஒருநாள் குரானும், மார்டின் லின்க்ஸ் (Martin Lings) அவர்களின் புத்தகமான "Muhammed: His life based on the Earliest Sources" னும் அறிமுகமாயின.


நான் மார்க்கங்கள் குறித்து ஆராய்ந்த போது, யூத நூல்கள், வரப்போகும் மூன்று நபிமார்களை பற்றி குறிப்பிடுவதை படித்திருக்கிறேன். யஹ்யா(அலை) மற்றும் ஈசா(அலை) போன்றவர்கள் அவர்களில் இருவர், யார் அந்த மூன்றாவது நபர்?      


பைபிளில் ஏசு(அலை) அவர்கள், தனக்கு பின் வரும் நபியைப் பற்றி குறிபிட்டிருக்கிறார்கள்.


ஆக, குரானைப் படிக்கும் போது அனைத்தும் ஒத்துவர ஆரம்பித்தன (Everything started to make sense). நபிமார்கள், ஒரே இறைவன், இறைவேதம் என்று அனைத்தும் அறிவுக்கு ஒத்துவர ஆரம்பித்தது.


இஸ்லாத்தை ஏற்று கொண்டேன்.


நான் கற்றுக்கொண்ட பாடமென்றால், என்னை விட அறிவில் சிறந்த பலர் இஸ்லாம் என்னும் உண்மையை அறியாமல் இருக்கின்றனர்.


நீங்கள் புத்திசாலியா என்பது மட்டும் இங்கு முக்கியமல்ல, அந்த அறிவு உங்களுக்கு சரியான முறையில் புகட்டப்படுகிறதா என்பது தான் முக்கியம்.

"தான் நாடியோரை அல்லாஹ் தன்பால் தேர்ந்தெடுத்து கொள்கிறான் - முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான்" --- குரான் 42:13  
"...தான் நாடியோரை அல்லாஹ் நேர்வழிப்படுத்துகிறான்" --- குரான் 24:46     

அல்லாஹ் என்னை தேர்ந்தெடுத்து நேர்வழி காட்டியிருக்கிறான். அதற்காக அவனுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.


இப்போது என்னிடத்தில் ஒரு எளிமையான பார்முலா உள்ளது. அது, முதலில் படைத்தவனை அங்கீகரிப்பது, அவனை மட்டுமே வழிபடுவது மற்றும் அவனிடத்தில் மட்டுமே வழிகாட்ட கோருவது.


அவன் யாருக்கு நல்வழி காட்டுகிறானோ அவரை யாராலும் வழிகெட செய்ய முடியாது..."    


அல்ஹம்துலில்லாஹ்.

இவர் கண் மருத்துவர் என்பதால், டார்வின் கண்ணைப் பற்றி ஆராயும் போது ஏற்பட்ட தடுமாற்றத்தை அழகாக விளக்குவார்.

இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பின்பு தான் இவருக்கு இறைவனின் சோதனை அதிகமிருந்தது. இஸ்லாத்தை ஏற்கும் பலரும் இது போன்ற நிலையை தாண்டி தான் வருகிறார்கள் என்றாலும், ஒரு சிலருக்கு இது போன்ற சோதனைகள் அதிகமாகவே இருக்கின்றன.


"நான் முஸ்லிமானதை என் மனைவியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  என்னிடமிருந்து விவாகரத்து வேண்டுமென்று கேட்டார்.


நீதிபதி "உங்களுக்குள் என்ன பிரச்சனை" என்று கேட்ட போதும், "விவாகரத்து வேண்டுமென்று" மட்டும் தான் சொன்னார். அவர் சென்றது மட்டுமல்லாமல் என் குழந்தைகளையும் என்னிடமிருந்து அழைத்து சென்று விட்டார். என் குழந்தைகளை நான் பார்க்க வேண்டுமென்றால் பாதுகாப்பு அதிகாரியின் துணையுடன் தான் பார்க்க வேண்டும்.


என் குழந்தைகளுடன் என் வீடு, செல்வம் என்று அனைத்தையும் தன்னிடத்தே கொண்டு சென்று விட்டார் என் மனைவி. வாரமொருமுறை வாடகை செலுத்தும் அறைகளில் பிறகு என் வாழ்க்கையை அமைத்துக்கொண்டேன்.


என் பெற்றோர்களோ என்னை முற்றிலுமாக நிராகரித்து விட்டனர். ஒருமுறை அவர்களிடமிருந்து வந்த கடிதம் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அதில், அவர்கள், என்னை பார்க்கவோ, என்னிடம் பேசவோ விரும்பவில்லை என்றும், நானும், இனிமேல் அவர்களை பார்க்க வரக்கூடாதென்றும், கடிதம் கூட அனுப்ப கூடாதென்றும் எழுதப்பட்டிருந்தது.


என் மனைவி மீதோ அல்லது என் பெற்றோர்கள் மீதோ இந்த நிகழ்வுகளுக்காக வருத்தம் இருந்ததில்லை. அவர்கள் நிலையிலிருந்து எண்ணி பார்க்கவேண்டும். அவர்கள் நான் தவறான வழியில் சென்று விட்டதாகவே நினைத்தனர். அன்றைய காலகட்டத்தில் ஊடகங்களும் அப்படி ஒரு நிலையைத் தான் ஏற்படுத்தி இருந்தன.


என் நண்பர்களும் என்னை விட்டு பிரிந்து செல்ல ஆரம்பித்தனர். இனி அவர்கள் எதிர்பார்க்கும் பழைய நபரில்லை நான்.



தற்போது நிலைமை பெரிதும் மாறி விட்டது. அல்ஹம்துலில்லாஹ்.


என் மனைவியை விட்டு பிரிந்த எனக்கு மற்றொரு அன்பான துணையை இறைவன் ஏற்படுத்தினான். மற்றொரு குழந்தையை கொடுத்தான்.


அமெரிக்காவில் வசிக்க சிரமப்பட்ட எனக்கு இப்போதைய இருப்பிடம் புனித மதீனா நகரம். குடும்பத்தினரை விட்டு பிரிந்த நான் இப்போது உலகளாவிய இஸ்லாமிய குடும்பத்தில் ஒருவன். எங்கள் சகோதரத்துவம் போல எதுவும் வராது. நான் சொல்வது உண்டு, சகோதரத்துவம் என்றால் என்னவென்று ஒருவர் இஸ்லாத்தில் தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று.


தற்போது என் பெற்றோர் என்னிடம் நெருங்கி வர ஆரம்பித்துள்ளனர். என் சகோதரர் இஸ்லாத்தை தழுவி விட்டார். என் குழந்தைகளை சுலபமாக பார்க்க முடிகிறது.


இறைவன் குர்ஆனில் சொல்லுவது போன்று, கஷ்ட காலங்களுக்கு பின்னர் சூழ்நிலைகளை எளிதாக்கி வைத்துள்ளான். நான் இழந்ததை விட பெற்றவை அதிகம்.


என்னுடைய அனுபவங்கள் மூலம், இஸ்லாத்தை தழுவும் நிலையில் உள்ளவர்களிடம் நான் கூறிக்கொள்ள விரும்புவதெல்லாம், நீங்கள் ஒரு நொடி கூட, இஸ்லாத்திற்கு வந்தால் இதை இழக்க நேரிடுமோ என்று எதை எண்ணியும் அஞ்சாதீர்கள். உங்களுக்கு அமைதியையும், பலத்தையும் கொடுக்கச் சொல்லி இறைவனிடம் துவா செய்யுங்கள். அப்படியே அவன் உங்களுக்கு சோதனைகளை தந்தாலும் அது உங்களால் தாங்கக்கூடிய அளவாக இருக்க வேண்டுமென்று அவனிடம் கேளுங்கள்.


என் அனுபவத்தின் மூலமும், நான் பார்த்த புதிய முஸ்லிம்களின் அனுபவத்திலிருந்தும் கூறுகிறேன், நீங்கள் இஸ்லாத்தை தழுவ நேர்ந்தால் அதனால் நீங்கள் பெரும் மன அமைதி என்பது, நீங்கள் இதுவரை பெற்ற எந்த ஒரு விசயத்தையும் விட மேலானதாக இருக்கும்....."


சுபானல்லாஹ்....ஈமானை இறுக பற்றி பிடித்திருக்கும் இவர்களைப் போன்றவர்களை காணும் போதெல்லாம்  நம்முடைய ஈமானும் அதிகரிக்கிறது.
  
டாக்டர் லாரன்ஸ் அவர்கள் ஒரு மிகச்சிறந்த மருத்துவர் மட்டுமல்ல, சிறந்த எழுத்தாளரும் கூட. இவருடைய கட்டுரையான "The Big Questions", ஒருவர் தன் வாழ்நாளில் கேட்க நினைக்க கூடிய கேள்விகளை அடிப்படையாக கொண்டது.

பல நூல்களை எழுதியிருக்கும் இவர், கனடா, அமெரிக்கா, அரேபிய நாடுகள் என்று தன் தாவாஹ் பணியை செய்து வருகிறார். 

இறைவன் இவர் போன்றவர்களின் மன பலத்தை நமக்கும் தந்தருள்வானாக...ஆமின்...

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...


Dr. Laurence Brown's official website: 
1. http://www.leveltruth.org

Canadian Dawah Association's official website: 
1. cdadawah.com

My Sincere thanks to: 
1. Br.eddie

References: 
1. Dr.Brown's Conversion story - leveltruth.org
2. Purpose of Life - Dr.Brown's interview with Br.eddie, thedeenshow.com
3. Dr.Brown's jihad - Dr.Brown's interview with Br.eddie, thedeenshow.com
4. Dr.Laurence Brown - Wikipedia.

  
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

Fri 25

Click here to bookmark this link.Channel Image04:30 மருந்தில்லாமல் நோயில்லை! வழிகாட்டி
"அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணத்தை அருளாமல் இறக்குவதில்லை" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)
நூல்: புகாரி 5678

Thu 24

Click here to bookmark this link.Channel Image11:41 உறவை முறித்து வாழ்பவன்.. வழிகாட்டி
"உறவை முறித்து வாழ்பவன் சொர்கத்தில் நுழைய மாட்டான்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி)
நூல்: புகாரி 5984

Wed 23

Click here to bookmark this link.Channel Image22:45 உயர்நீதிமன்றத்தில் தமிழ்! என்ன சிக்கல்? யாருக்கு சிக்கல்? மக்கள் சட்டம் (PEOPLE'S LAW)
தமிழ்நாட்டில் உயர்நீதிமன்றத்தைத் தவிர மற்ற நீதிமன்றங்களில் தமிழ் அலுவல் மொழியாக பயன்படுத்தப்படுகிறது. அதாவது வழக்கு தொடுப்பது, வழக்கு மறுப்பது, விசாரணை நடைமுறைகள், தீர்ப்பு வழங்கல் உள்ளிட்ட அனைத்தும் தமிழில் நடைபெறலாம் – நடைபெறுகிறது. இதனால் யாரும் பாதிக்கப்பட்டதாக இதுவரை செய்திகள் இல்லை
.

ஆனால் உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக பயன்படுத்துவதில் பல சர்ச்சைகள் உள்ளன. இது குறித்து பெரும்பாலான நீதிபதிகளும், உயர் குலத்தோர் என்று குறிப்பிடப் படுபவர்களும், மூத்த வழக்கறிஞர்களும் பொருள் பொதிந்த மவுனம் சாதிக்கின்றனர். மத்திய, மாநில அரசுகளின் முன்னுரிமை பட்டியலில் தமிழை நீதிமன்ற மொழியாக அங்கீகரிப்பது இல்லை என்பது நிரூபணம் ஆகிவிட்டது.

அரசியல் பார்வையற்ற சராசரி குடிமகனுக்கு மேற்கூறப்பட்ட வாக்கியம் அதிர்ச்சி அளிக்கலாம். தமிழாய்ந்த முதல் அமைச்சருக்கு, தமிழை நீதிமன்ற மொழியாக்குவதில் தடை என்ன இருக்கக்கூடும் என்ற கேள்வி எழலாம். உச்ச நீதிமன்றமும், மத்திய அரசும் ஏற்காத ஒரு பிரச்சினைக்கு தமிழக அரசை குற்றம் சாட்டுவது பொருத்தமற்றது என்ற எண்ணமும் வரலாம். ஆனால் அது முழுமையான சிந்தனையாகாது.

எந்த ஒரு அரசிலும், அதை மக்கள் நேயமுள்ள ஒரு தலைவர் வழி நடத்தினாலும் அந்த ஆட்சியில் சிலர் பாதிக்கப்படுவது இயல்பானதே! அவ்வாறு பாதிக்கப்படுபவர்கள் தங்கள் குறைபாடுகளை ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஏதோ ஒரு வழியில் எடுத்துச் சொல்லி தீர்வு காண்பது மக்களாட்சியின் வரம்புக்குள் அடங்கும் அம்சமே ஆகும்.

காமராஜர், அண்ணாதுரை போன்ற தலைவர்கள் ஆட்சியில் இருந்தபோது பாதிக்கப்பட்ட மக்களின் நிலை குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானாலோ, மக்கள் பிரதிநிதிகள் எடுத்துக்கூறினாலோ அந்த பிரசினைகளை தீர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு தீராத பிரசினைகளுக்காக பாதிக்கப்பட்டவர்கள் போராடினால் அதையும் இயல்பாக ஏற்றுக்கொண்டு அந்தப் பிரசினையை தீர்க்க முயலும் பக்குவம் அந்த தலைவர்களுக்கு இருந்தது.

அண்மைக்கால ஆட்சிகளிலோ மக்களின் எந்த நியாயமான கோரிக்கைகளும் போராட்ட வடிவம் எடுக்கும் வரை கேட்காமலே புறக்கணிக்கும் போக்கு நிலவுகிறது. எனவே தவிர்கக இயலாமல் நடக்கும் போராட்டங்களையும் அரசின் கவனத்தை ஈர்க்கும் நிகழ்வாக கருதாமல், தமது ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் நிகழ்வாக ஆட்சியாளர்கள் கருதுவதும், அதனால் கதிகலங்கி போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க முனைவதும் வாடிக்கையாகி வருகிறது. மக்களுடைய போராட்டங்கள் குறித்த செய்திகளை ஊடகங்கள் வெளியிடாமலிருக்கும் வகையில் ஊடக நிறுவனங்கள் சரிக்கட்டப் படுகின்றன. எதிர்க் கட்சிகள் வெளியிடும் கோரிக்கைகள் திட்டமிட்டு திசை திருப்பப்படுகின்றன. அரசின், ஆட்சியாளர்களின் புகழ்பாடும் கருத்துகளே ஊடகங்கள் மூலமாக மக்களிடம் கொண்டு சேர்க்கப் படுகின்றன.

இந்த நிலையில் பாதிக்கப்படும் மக்களின் நியாயமான உரிமைகளை எடுத்துப் பேசும் களமாக நீதிமன்றம் அமைகிறது. மக்கள் பிரசினைக்காக வழக்கு தொடுக்கும்போது அந்த பிரசினை ஊடகங்கள் மூலமாக மக்களிடம் சென்றடைவதோடு, அந்த பிரசினை குறித்து பதில் அளிக்கும் நிர்பந்தமும் அரசுக்கு ஏற்படுகிறது. நீதிமன்றங்களில் தொடுக்கப்படும் அனைத்து வழக்குகளும் முறையாக விசாரிக்கப்படுகின்றவா? பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதி கிடைக்கிறதா? என்பது ஒருபுறமிருக்க, மக்களின் பாதிப்பு குறித்து விவாதிப்பதற்கு ஒரு களம் உருவாகிறது என்பதே இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. இங்கு எழுப்பப்படும் கேள்விகளுக்கு அரசுத்தரப்பில் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுவதும் கூடுதல் நற்பலனே.

மக்களின் நலனை முன்னிறுத்தும் பொதுநல வழக்குகளை உயர் நீதிமன்றத்திலோ, உச்ச நீதிமன்றத்திலோ மட்டுமே தொடுக்க முடியும். உச்ச நீதிமன்றம் என்பது வெகு தொலைவில் இருக்கும்போது அன்றாட பிரசினைகளுக்கு தீர்வு காண உயர்நீதிமன்றமே அருகில் உள்ளது. இவ்வாறு மக்களின் நியாயமான பிரசினைகள் குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும்போது மக்கள் சார்ந்த வழக்கறிஞர்களுக்கு மொழியும் ஒரு தடையாகிறது. ஆங்கிலம் நன்று கற்ற வழக்கறிஞர்கள் பொருளீட்டும் வழக்குகளில் முழுமையாக ஈடுபடும் வாய்ப்பு கிடைத்துவிடுவதால் அவர்களில் பலருக்கும் சமூகம் குறித்த உணர்வுகள் விரைவில் அற்றுப்போய்விடுகிறது. அரசுத்தரப்பு வழக்கறிஞராக பணியாற்றுவோருக்கு அரசு அமைப்புகள் செய்யும் அனைத்து முறைகேடுகளையும் – அநீதிகளையும் நியாயப்படுத்த வேண்டிய “தொழில் தர்மம்” வந்து விடுகிறது.

இந்நிலையில் மக்களின் பிரசினைகளை முழுமையாகவும், அனுபவ பூர்வமாகவும் புரிந்து கொண்டு அந்தப் பிரசினைக்கு சட்டரீதியாக தீர்வு காண முனைபவர்கள் முழுமையான ஆங்கிலப் புலமை இல்லாமல் (ஆங்கிலப் புலமை வேறு: சட்ட அறிவு, சமூக உணர்வு வேறு!) சாமானியனின் வாழ்வை வாழும் சாதாரண வழக்கறிஞர்களே. இந்த வழக்கறிஞர்கள் வழக்கமாக மேற்கொள்ளும் அதிகாரிகளிடம் மனு அளித்தல், தகவல் உரிமைச் சட்டப்படி தகவல் கோருதல் போன்றவையே அரசை பல்வேறு அம்சங்களிலும் முட்டுச்சந்தில் நிறுத்தி விடுகின்றன.

தகவல் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தியே அரசையும், அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் கலங்கடிக்கும் இந்த வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை நேரடியாக அணுகுவதில் அவர்களுக்கு தடையாக இருப்பது மொழி மட்டுமே. இந்தத் தடையை தவிர்ப்பதற்காகவே, உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல்லாண்டு காலமாக மக்கள் சார்பு வழக்கறிஞர்களாலும், சமூக பொறுப்புள்ளவர்களாலும் எழுப்பப்பட்டு வருகிறது.

ஆனால் உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அங்கீகரிப்பது என்பது, தமிழில் திரைப்படத்திற்கு பெயர் வைத்தால் வரிவிலக்கு என்பதைப் போன்ற சாதாரணமான அம்சம் அல்ல என்பது ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும். தமிழை நீதிமன்ற மொழியாக அங்கீகரித்தால் கிடைக்கும் வாழ்த்துகளுக்கு எந்த பொருள் மதிப்பும் இல்லை என்பதும், தமிழை நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்கச் செய்வதால் ஏற்படும் விளைவுகளால் பொருள் ரீதியான பெரும் இழப்பு ஏற்படும் என்பதும் பொருள்முதவாதிகளான தமிழ்நாட்டு ஆட்சியாளர்களுக்கு மிக நன்றாகவேத் தெரியும். எனவேதான் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வதற்கு இணையான இந்த செயலை செய்வதற்கு அவர்களுக்கு துணிவில்லை.

தமிழை நீதிமன்ற மொழியாக்குவதற்கு தேவையான சட்ட நூல்கள் தமிழில் இருக்கின்றனவா? என்ற கேள்விகள் நீதிபதிகளாலும், பெரும்பான்மை வழக்கறிஞர்களாலும் எழுப்பப்படுகிறது. அண்டை நாடான இலங்கையில் மருத்துவம் தமிழ் வழி கற்பிக்கப்படுகிறது. தமிழ்நாட்டிலேயே பொறியியலை தமிழ்வழி கற்பிப்பதற்கான பாடநூல்கள் வெளியாகிவிட்டன. தமிழில் வாதாடும் வழக்கறிஞர்கள் பெருகும் நிலையில் சட்டநூல்களும் தேவையான அளவுக்கு வெளியாகும். தமிழை வளர்ப்பதற்காக இல்லை என்றாலும், வணிக நோக்கத்திலாவது தமிழில் தரம் வாய்ந்த சட்ட நூல்கள் வெளியாகும்.

தமிழில் வாதாடும் வாய்ப்பு கிடைத்தால் பொதுமக்களே நேரடியாக வழக்கை நடத்த முன் வந்து விடுவார்கள்: வழக்கறிஞர்களின் தொழில் வாய்ப்பு பாதிக்கப்படும் என்ற கருத்தும் சில வழக்கறிஞர்களிடம் உள்ளது. ஒரு வழக்கை நடத்த வெறும் சட்ட நூல்கள் (Bare Act Books) மட்டுமே போதாது என்பது வழக்கு நடத்தி அனுபவம் பெற்ற அனைத்து மக்களுக்கும் தெரியும். ஒரு வழக்கை வெற்றிகரமாக நடத்த அந்த விவகாரம் குறித்து நீதிமன்ற முன்மாதிரி தீர்ப்புகளும், வேறு பல அம்சங்களும் தேவை என்ற உண்மை சாதாரண மக்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் தமிழில் வழக்கு நடத்தினால், வழக்கு நடத்தப்படும் விதம் குறித்து பொதுமக்கள் தெளிவு பெற வழி பிறக்கும். இது வழக்காடும் மக்களுக்கு நல்லதே. இதனால் நேர்மையான வழக்கறிஞர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படபோவதில்லை.

எனவே நீதிமன்ற மொழியாக தமிழை அங்கீகரிப்பதில் சாதாரண மக்களுக்கு நன்மையே ஏற்படும். இதனால் அதிக அளவில் பாதிக்கப்படுவது ஆளும் வர்க்கமாகவே இருக்கும். ஆட்சியில் இருப்போர், அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோரே தமிழ் நீதிமன்ற மொழியாவதில் முதன்மையாக பாதிக்கப்படுபவர்களாக இருப்பார்கள்.

மக்களின் உழைப்பை சுரண்டி திரட்டப்பட்ட பொது நிதியை அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தாமல் கவர்ச்சித் திட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்தி வாக்குகளை அள்ள நினைக்கும் ஆட்சியாளர்களுக்கு, தமிழ் உயர்நீதிமன்ற அலுவல் மொழியாவதால் சிக்கல்கள் ஏற்படலாம். அரசின் பொறுப்பற்ற போக்கை, தொலைநோக்கற்ற குறுகிய அரசியல் பார்வைகளை, மக்களின் சிந்தனைகளை மழுங்கடிக்கும் சீர்கேட்டை பொதுநல வழக்கு என்ற பெயரில் பொதுமக்கள் கேள்வி கேட்டால், அக்கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஆட்சியாளர்களுக்கு வரும். தங்களை விமரிசனத்திற்கு அப்பாற்பட்டவர்களாக, போற்றுதலுக்கு மட்டுமே உரியவர்களாக கருதிக் கொள்ளும் ஆட்சியாளர்கள் மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் நிலை ஏற்படுவதை எப்படி அனுமதிப்பார்கள்? எனவே இந்த அரசியல்வாதிகள், தமிழை நீதிமன்ற மொழியாக அங்கீகரிப்பார்கள் என்று எதிர்பார்ப்பது பகல் கனவே!

இதையடுத்து உயர்குலம் சார்ந்தவர்களாக குறிப்பிடப்படும் வழக்கறிஞர்களும், ஆங்கிலம் அறிந்த காரணத்தாலேயே தம்மையும் உயர் குலத்தவராக கருதிக் கொள்ளும் வழக்கறிஞர்களும் தமிழை நீதிமன்ற மொழியாக அங்கீகரிப்பதால் பாதிக்கப்படுபவர்கள். ஆனால் இவர்கள் பாதிக்கப்பட்டால் அது மக்களுக்கு நன்மையாகவே இருக்கும். ஏனென்றால் இந்த வகை வழக்கறிஞர்களின் ஆதிக்கத்தில் நீதித்துறை இருப்பதாலேயே ஏராளமான வழக்குகள் தேங்கும் நிலை ஏற்படுகிறது.

சட்டம், சமூகம் ஆகியவை குறித்த ஆழ்ந்த அறிவிருந்தும் சரளமான ஆங்கிலப்புலமை இல்லாததால் பெரும்பாலான வழக்கறிஞர்கள் ஆங்கிலம் நன்கறிந்த வழக்கறிஞர்களை நாடும் நிலை உள்ளது. இதனால் ஆங்கிலம் நன்கறிந்த வழக்கறிஞர்களின் பணிச்சுமை அதிகரித்து பாதிக்கப்படும் மக்களுக்கான உரிமைகளை உடனே பெற்றுத்தராமல், அம்மக்களை அந்த அநீதிக்குள் பல காலம் வாழுமாறு நிர்ப்பந்தப் படுத்துகிறது.

இந்த அவல நிலையை மாற்றவதில், தமிழை நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்கும் செயல் முக்கிய பங்கு வகிக்கும். தமிழ் நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்கப்பட்டால் அனைத்து வழக்கறிஞர்களும் நேரடியாக நீதிமன்றத்தில் வழக்காடுவார்கள். எனவே மக்கள் நலன் நாடும் வழக்குகளில் தேவையின்றி காலநீட்டிப்பு (வாய்தா) பெற வேண்டிய அவசியம் இருக்காது. தாமதித்து வழங்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்று வசனம் பேசிக்கொண்டே அந்த அநீதியை தொடர்ந்து இழைத்து வரும் நீதித்துறை திருந்தும் காலம் வரும்.

சுருக்கமாக கூறினால் தமிழை நீதிமன்ற மொழியாக அங்கீகரிப்பது மொழி வளர்ச்சிக்கான செயல்பாடு மட்டுமே அல்ல. இது கடைக்கோடி மனிதனுக்கும் சமூக நீதி உள்ளிட்ட மனித உரிமைகளை கொண்டு சேர்க்கும் அருமையான வாய்ப்பாகும். அரசின் கடப்பாடுகளை வலியுறுத்தி உரிமைகளை பெறவும், ஊழலற்ற நிர்வாகத்தை கட்டமைக்கவும் தமிழை நீதிமன்ற மொழியாக அங்கீகரிப்பது மிகவும் முக்கியமான செயல்பாடாகும்.

இந்தியாவின் குடியரசு உண்மையிலேயே மக்களுக்காக, மக்களால் கட்டமைக்கப்பட்ட குடியரசு என்பது உண்மையானால் தமிழ் மட்டுமல்ல – அனைத்து மாநில மக்களும் அந்தந்த மாநில மொழிகளை அம்மாநில உயர்நீதிமன்றத்தில் பயன்படுத்தும் நிலை ஏற்பட வேண்டும்.

-பி. சுந்தரராஜன்
(sundararajan@lawyer.com)

Tue 15

Click here to bookmark this link.Channel Image00:42 "ஒசாமா பின் லேடன் வாஷிங்டனில் இருக்கின்றார்" - அஹ்மதிநிஜாத் எதிர்க்குரல்


அஸ்ஸலாமு அலைக்கும்,

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மதிநிஜாத் அவர்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால், அவருடைய பேச்சையோ அல்லது உரையாடல்களையோ கேட்டதோ, பார்த்ததோ இல்லை. 

அவருடைய சமீபத்திய நேர்காணல் ஒன்றை தமிழில் எழுதும் சந்தர்ப்பம் அமைந்தது.  சென்ற மாதம் நான்காம் தேதி, ABC தொலைக்காட்சியின் "குட் மார்னிங் அமெரிக்கா" நிகழ்ச்சியில் பங்கேற்றார் அஹ்மதிநிஜாத். அவரை பேட்டி கண்டது பிரபல தொலைக்காட்சி செய்தியாளரான ஜார்ஜ் ஸ்டீபனோபவ்லோஸ் அவர்கள்.

அதிரடியான நேர்க்காணல் அது. 

அணு ஆயுத பரவல் உடன்பாட்டைப் பற்றிய கலந்தாய்வில் ஐக்கிய நாடுகள் சபையில் அஹ்மதிநிஜாத், "ஈரானின் அணு செறிவு நடவடிக்கை உலகத்திற்கு அச்சுறுத்தல் இல்லை. மாறாக அமெரிக்காவே உலகத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது" என்று உரையாற்றியதற்கு மறுநாள் இந்த நேர்காணல் நடைப்பெற்றது.

"அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால்" என்று தன்னுடைய பேச்சை தொடங்கிய ஈரான் அதிபர், தன்னுடைய பதில்களால் பார்வையாளர்களை அசர வைத்தார் 

அப்போது கேட்க பட்ட கேள்விதான்,  

ஒசாமா பின் லேடன் ஈரானில் இருக்கின்றாராமே? 

அதற்கு அஹ்மதிநிஜாத் அவர்கள் அளித்த பதில்,

"அவர் வாஷிங்டனில் இருக்கின்றார். அவர் அங்கிருப்பதற்கான வாய்ப்புகள் தான் அதிகம்....."  

இந்த பதில் உங்களுக்கு வியப்பை அளித்திருந்தால் இது தொடர்பான முழுமையான உரையாடலை தொடர்ந்து வாசியுங்கள்...



......ஒரு ஆவணப்படம் சமீபத்தில் வெளிவந்திருக்கின்றது, அது ஒசாமா பின் லேடன் ஈரானில் இருப்பதாக தெரிவிக்கின்றது. அதில் ஈரானில் வசிக்கும் அலன் பாரோட் என்ற நபர், 2003 ஆம் ஆண்டு முதல் பலமுறை ஒசாமா பின் லேடனுடன் தான் பேசியதாக குறிப்பிடுகின்றார். ஒசாமா பின் லேடன் தெஹ்ரானில் (Tehran-Capital of Iran) இருக்கின்றாரா?

(சிரிக்கின்றார்)...உங்கள் கேள்வி என்னை சிரிக்க வைக்கிறது.

ஏன்?

அமெரிக்க அரசாங்கம் ஆப்கானிஸ்தானில் நுழைந்ததே ஒசாமா பின் லேடனை பிடிக்கத்தான். அவர்களுக்கு பின் லேடன் எங்கிருக்கின்றார் என்று தெரிந்திருக்க வேண்டும். அவர்களுக்கு அப்படி தெரிந்திருக்கவில்லையென்றால் ஏன் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைய வேண்டும்? 

அவர்களுக்கு தெரிந்திருந்தால் அவரை கண்டுபிடித்திருப்பார்கள். அவரைப் பிடித்திருப்பார்கள்.

முதலில் அவர் எங்கிருக்கின்றார் என்று அறிந்து கொள்ள முயற்சித்திருக்க வேண்டும், பிறகு தான் நுழைந்திருக்க வேண்டும். அவர் எங்கிருக்கின்றார் என்றே தெரியாமல் ஒரு நாட்டிற்குள் நுழைந்து விட்டு பிறகு தேடுவதென்பது தர்க்க ரீதியாக ஒத்துவருகின்றதா? இது தர்க்க ரீதியாக சரியென்று உணர்கின்றீர்களா?

என் கேள்விக்கு நீங்கள் பதிலளிக்கவில்லை என்றே நான் கருதுகின்றேன். அவர் தெஹ்ரானில் இருக்கின்றாரா இல்லையா?

எங்கள் நிலை தெளிவாகவே இருக்கின்றது. சில பத்திரிக்கையாளர்கள், பின் லேடன் ஈரானில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் மற்றும் தீவிரவாதம் மீதான எங்கள் நிலைப்பாடு தெளிவாகவே இருக்கின்றது. 

அது உண்மையா இல்லையா?

உங்களுக்கு தெரிந்திருக்கலாம், எனக்குத் தெரியவில்லை. 

நான் உங்களை கேட்கின்றேன். நீங்கள் தான் ஈரானின் அதிபர். 

எனக்கு அப்படி எதுவும் தெரியாது. நீங்கள் தான் மிக விசித்திரமான செய்தியை சொல்லுகின்றீர்கள். 

சரி, நான் வேறு விதமாக கேட்கின்றேன். ஒசாமா பின் லேடன் ஈரானில் இருப்பதாக உங்களுக்கு தெரிய வந்தால், நீங்கள் அவரை உபசரிப்பீர்களா அல்லது வெளியேற்றுவீர்களா அல்லது கைது செய்வீர்களா? 

ஒசாமா பின் லேடன் வாஷிங்டனில் இருப்பதாக நான் கேள்விப்பட்டேன். 

இல்லை. நீங்கள் கேள்விப்பட்டிருக்க முடியாது.

ஆம், நான் கேள்விப்பட்டேன். அவர் அங்கு தான் இருக்கின்றார். ஏனென்றால் அவர் புஷ்ஷினுடைய பழைய பங்குதாரராக இருந்திருக்கின்றார். அவர்கள் தோழர்களாக இருந்திருக்கின்றார்கள். அது உங்களுக்கு தெரியும். அவர்கள் எண்ணெய் வியாபாரத்தில் ஒன்றாக ஈடுபட்டிருக்கின்றார்கள். ஒன்றாக சேர்ந்து பணி புரிந்திருக்கின்றார்கள். பின் லேடன் ஈரானுடன் ஒத்துழைத்ததே இல்லை, ஆனால் அவர் புஷ்ஷுடன் ஒத்துழைத்திருக்கின்றார் --

உங்களிடம் இன்னும் ஒரேயொரு முறை கேட்கின்றேன். ஒசாமா பின் லேடன் ஈரானில் இருப்பதாக உங்களுக்கு தெரிய வந்தால், நீங்கள் அவரை உபசரிப்பீர்களா அல்லது வெளியேற்றுவீர்களா அல்லது கைது செய்வீர்களா?     

எங்களுடைய எல்லைகள் சட்டவிரோதமாக நுழைபவர்களுக்கு மூடப்பட்டுள்ளன. அது யாராக இருபினும் சரி. .......ஒசாமா பின் லேடனாகட்டும், இல்லை வேறு யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். எங்கள் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. எங்கள் நிலை தெளிவாக உள்ளது. 

நீங்கள் உங்கள் வாழ்க்கையை, தினமும் வெளியாகும் செய்திக்கேற்ப அனுசரித்து செல்வது எனக்கு ஆச்சர்யத்தை தருகின்றது. இது போன்ற செய்திகளுக்கேற்ப தான் அமெரிக்க அரசாங்கம் தன் நிலைப்பாட்டை எடுக்கின்றதோ என்று வருத்தப்படுகின்றேன். அப்படியிருந்தால் அது மிகவும் வேதனையானது.


செய்திகள் துல்லியமாக இருக்க வேண்டும், அப்படி இல்லையென்றால் அது இரு நாடுகளுக்கு மத்தியிலான உறவை பாதிக்கும், இதோ இது போன்று. 


அமெரிக்க அரசாங்கத்திற்கு பின் லேடனின் இருப்பிடம் தெரிந்திருந்ததா? அதற்கு நீங்கள் என்ன கூறுகின்றீர்கள், "இல்லை, அவரை அங்கு கண்டுபிடிக்க சென்றார்கள் என்று".  முதலில் நீங்கள் அவர் இருப்பிடத்தை---

அவர்கள் பின்னடைந்து விட்டார்கள்.  

அவர் ஆப்கானிஸ்தானில் இருக்கிறாரா என்று பார்க்க போனதாக கூறுகின்றீர்கள். முதலில் அவர் எங்கிருக்கின்றார் என்று தெரிந்துகொண்டு பிறகு அந்த நாட்டிற்குள் நுழைந்திருக்க வேண்டும். இது எப்படி இருக்கிறதென்றால், ஒரு நீதிபதி முதலில் ஒருவனை கைது செய்ய சொல்லி விட்டு பிறகு ஆதாரங்களை கேட்பது போலிருக்கின்றது. 

ஒசாமா பின் லேடன், தெஹ்ரானில் இல்லை என்று சொல்லுகின்றீர்கள்? 

அவர் வாஷிங்டனில் இருக்கின்றார். அவர் அங்கிருப்பதற்கான வாய்ப்புகள் தான் அதிகம். 

என்னால் உடன்பட முடியவில்லை..... 


அஹ்மதிநிஜாத் அவர்களின் இது போன்ற பதில்கள் என்னை வியக்க வைத்தன.


ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் (Uranium enrichment) குறித்து நடந்த உரையாடல் இன்னும் சுவாரசியமானது.


அமெரிக்கா மட்டுமல்ல, பிரான்ஸ் மற்றும் பிரிட்டனும் கூட. நான் (ரஷ்ய) அதிபர் மெத்தடெவுடன் செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் பேசினேன் அவரும் ஈரானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று கூறினார். ஈரான் அதிவிரைவாக தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றது. 

எங்கள் மீது திணிக்கப்படும் எந்த ஒன்றையும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டத்திற்கு புறம்பான எந்தவொரு அறிக்கையையும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. 


மூன்று அல்லது நான்கு நாடுகள் அணுகுண்டுகள் வைத்துக்கொண்டு, ஆனால் மற்ற நாடுகள் அமைதியான முறையில் அணுசக்தி உற்பத்தி செய்வதை தடுப்பதென்பது சட்டத்தை மீறுவதாகும். இது அநியாயமானது. எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது. 


காலம் கடந்து விட்டது, எங்களை அச்சுறுத்துவதன் மூலமோ அல்லது அழுத்தம் கொடுப்பதன் மூலமோ பணிய வைக்க முடியாது. அவர்களைப் பொறுத்தவரை சட்டத்திற்குட்பட்டு எங்களுடன் அனுசரித்து செல்வதே சிறந்தது. 

...நீங்கள் சர்வதேச சட்டங்களைப் பற்றி பேசுகின்றீர்கள், நட்பு மற்றும் நியாயங்களை பற்றி பேசுகின்றீர்கள். ஆனால், உலகில் பலரும் அணு ஆயுதங்கள் தொடர்பான உங்களது நிலையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது உங்களுக்குத் தெரியவில்லையா ?   

118 அணி சேரா உறுப்பினர்கள் எங்களது நிலைப்பாட்டிற்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றார்கள். 57 இஸ்லாமிய நாடுகள் எங்களது நிலைப்பாட்டிற்கு ஆதரவளித்திருக்கின்றார்கள், இவை அவர்களது கணக்கில் வரவில்லையா? 

ஆனால், விதிகளுக்குட்பட்டு ஏனைய நாடுகளும் அணு சக்தியை உபயோகப்படுத்தலாமென ஐக்கிய நாடுகள் சபை கூறுகின்றது. 

இல்லை, அவர்கள் அப்படி செய்யவில்லை. அணு ஆயுதப் பரவல் உடன்பாட்டை (NPT) பொறுத்தவரை ஆயுதக் குறைப்பு நடந்திருக்க வேண்டும். எத்தகைய ஆயுதக் குறைப்பு இதுவரை நடந்து விட்டது? 


NPT-ன் நான்காம் பிரிவை பொறுத்தவரை (Article IV), எல்லா உறுப்பு நாடுகளும், எந்த ஒரு முன் நிபந்தனைகளுமின்றி, தொழில்நுட்பம் மற்றும் அணு எரிபொருள் உற்பத்தி போன்றவற்றிற்கு பரஸ்பரம் உதவிக்கொள்ள வேண்டும்.  


அதேபோல,  உறுப்பு நாடுகள் செறிவூட்டல் செய்வதை தடுப்பதற்கு எந்த ஒரு காரணமும் சொல்லக் கூடாது. இதுதான் NPT. அணு ஆயுதப் பரவல் உடன்பாட்டை வாசியுங்கள்.

உறுப்பு நாடுகள் தங்கள் வசதிகளை ஆய்வுக்கு அனுமதிக்க வேண்டுமே?

என்னைப் பேச விடுங்கள். இதுதான் NPT சொல்லுவது. இப்போது, சிலர் எங்களுக்கு அரசியல் ரீதியான அழுத்தம் கொடுக்கவும், எங்களது நிலைப்பாட்டை கட்டாயப்படுத்தி மாற்றவும் முயற்சித்தனர். ஆனால் இவையெல்லாம் எங்களை கட்டுப்படுத்தாது. நேற்று எங்களது நிலைப்பாடு குறித்து பதிலளித்தேன், ஐக்கிய நாடுகள் சபையில் நேற்றைய தினம் நான் ஆற்றிய உரையை நீங்கள் வாசித்தீர்களேயானால் என்னுடைய பதில்களை அங்கேயே காணலாம். 

உங்களுடைய உரையை நான் வாசிதேன். அதுமட்டுமின்றி, ஒப்பந்தத்தில் நீங்கள் கையெழுத்திட்டதாக சொல்லியிருந்ததையும் வாசிதேன். ஆனால், IAEA (International Atomic Energy Agency, சர்வதேச அணுசக்தி கழகம்) ஒப்புக்கொள்ளவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் செயலரும் ஏற்றுக் கொள்ளவில்லை. நிச்சயமாக அமெரிக்க அரசாங்கமும் ஏற்றுக் கொள்ளவில்லை. 

எதற்காக உடன்பட மறுக்கின்றார்கள்? 

நீங்கள் உடன்பாட்டை எட்டவில்லை. அவர்கள் சொல்லுகின்றார்கள், நீங்கள் உங்கள் செயல்களை மாற்றிக்கொள்ள---
  
அவர்களுக்கு இதில் என்ன பிரச்சனை? நாங்கள் செறிவூட்டல் பண்ணுகின்றோமோ இல்லையோ, இதில் அவர்கள் ஏன் தலையிட வேண்டும்? நான்காம் விதி சொல்லுகிறது அவர்களுக்கு அந்த உரிமை இல்லையென்று. 


கவனியுங்கள், தலைமை செயலாளரோ, IAEA -வின் மற்ற எந்தவொரு உறுப்பு நாடுகளோ, அல்லது எந்தவொரு அரசாங்கமோ நாங்கள் செறிவூட்டல் செய்வதை தடுக்க முடியாது. இது தெளிவாகவே இருக்கின்றது. அவர்கள் தான் சட்டத்தை மீறுகின்றார்கள். நாங்களல்ல. அவர்கள் NPT -ன் விதிகளை மீறுகின்றார்கள். அவர்கள் அப்படி செய்வது நியாயமுமல்ல. 


விதிமுறைகளை மீற உங்களுக்கு எந்தவொரு  அதிகாரமும் கிடையாதென்று நேற்று ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலரிடம் கூறினேன். 


உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விருப்பம். ஐக்கிய நாடுகள் சபை, ஈரானை மையமாக வைத்து இயங்கினால், அதன் தலைமைச் செயலர் இதையே கூறுவாரா

இது----என்னால் இதற்கு பதில் சொல்ல முடியாது---  

என்னை பேச அனுமதியுங்கள்.


ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு ஆலோசனைக்குழுவில் எங்களுக்கு வீட்டோ அதிகாரம் இருந்தால், நாங்கள் பாதுகாப்பு ஆலோசனைக்குழுவின் நிரந்தர உறுப்பினராக இருந்தால், தலைமைச் செயலர் இதையே கூறுவாரா? அல்லது மாற்றிக் கூறுவாரா? 


இத்தகைய நியாயமற்ற விதிமுறைகளே பாதுகாப்பின்மை, போர்கள் போன்றவை தோன்றுவதற்கு அடிப்படை காரணமென்று நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.  


சீர்திருத்தங்களுக்கு தெளிவான ஆலோசனைகளை நாங்கள் வைத்திருக்கிறோம். இன்றைய நிலையில், உலகின் பெரும்பான்மையான நாடுகள் நாங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்வார்கள். ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனைக்குழு நிறுவப்பட்ட விதம் நியாயமில்லாதது என்றும் நினைக்கின்றார்கள். 


வீட்டோ அதிகாரம் உள்ள நிரந்தர உறுப்பினர்கள், கழகத்திடம் தங்கள் கருத்துகளை திணிப்பது தெளிவாக தெரிகின்றது. IAEA வின் நிர்வாகிகள் சபையில் நிரந்தர உறுப்பினராக உள்ளவர்கள் தங்கள் கருத்துகளை திணிப்பது தெளிவாக தெரிகின்றது. 


ஏன் அறுபது ஆண்டுகளுக்கு பின்னரும் ஆயுதக் குறைப்பு நிகழவில்லை?      


நான் உங்களை கேட்கிறேன். அணு குண்டுகள் வைத்திருப்பது அல்லது அணு குண்டு வைத்திருக்க முனைவது, இதில் எது மிகவும் ஆபத்தானது? 


நேற்று அமெரிக்கா "எங்களிடம் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட அணுகுண்டுகள் இருக்கின்றன" என்று அறிவித்தது. ஐந்தாயிரம் அணுகுண்டுகள் ஆபத்தானதா? அல்லது ஒரு நாடு அணுகுண்டு உருவாக்கலாமென்று எண்ணுவது ஆபத்தானதா? இதில் எந்தவொன்று உலக பாதுகாப்புக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கின்றது? 


ஈரான் அதிபரின் வார்த்தைகள் தெளிவாக, கூர்மையாக வந்து விழுந்தன. 


இஸ்ரேல் பற்றி உரையாடல் திரும்பிய போது,     


உங்களிடம் உரையாடியதிலிருந்து எனக்கு என்ன புரிகிறதென்றால், நீங்கள் உங்கள் மீதான மற்றுமொரு நடவடிக்கைப் பற்றி கவலைப்படவில்லை. ஆனால், இதை கவனிக்கும் பெரும்பாலானவர்களுக்கு தெளிவாக தெரிவது என்னவென்றால், ஈரான் தன்னுடைய தற்போதைய பாதையை தொடர்ந்தால், இஸ்ரேல், பிரச்னையை தானே எதிர்க்கொள்ள முன்வரும். ஈரானின் அணு திட்டங்களை இராணுவத்தின் மூலம் எதிர்க்கொள்ளும். 

ஈரான் தற்போது எந்த பாதையில் செல்கின்றதோ, அதே பாதையில் தொடர்ந்து செல்லும். அதில் உங்களுக்கு எந்தவொரு சந்தேகமும் வேண்டாம். 

ஆனால், நீங்கள் நெருப்போடு விளையாடுவதாகத் தெரியவில்லையா?, இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளைப் பற்றி கவலை இல்லையா?

இல்லை.

ஏன்?

குண்டுகளை குவித்துக் கொண்டும், தங்கள் விருப்பங்களை மற்றவர்கள் மேல் திணித்துக்கொண்டும் சட்டத்திற்கு புறம்பாக நடக்கும் அவர்கள் தான் நெருப்புடன் விளையாடுகின்றார்கள். 


நாங்கள் குண்டுகளை குவித்து வைத்திருக்கின்றோமா? எங்களிடம் அணு குண்டுகள் இருக்கின்றதா?, அணு குண்டை இதுவரை உபயோகப்படுத்தியது யார்?, யார் தங்களிடமுள்ள குண்டுகளை வைத்து மற்றவர்களை அச்சுறுத்துவது?, நாங்களா அல்லது அமெரிக்க அரசாங்கமா? 

இராணுவ நடவடிக்கைப் பற்றி?

பேச விடுங்கள். யார் ஆபத்தானவர்கள்? யார் எங்கள் மீது போர்த்தொடுக்க நினைப்பது?

என்னையா ?

ஆம், உங்களைத் தான் கேட்கின்றேன். யார் எங்கள் மீது போர்த்தொடுக்க நினைப்பது?

இல்லை. ஈரான் மீது இராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாமென்று தான் சொல்லுகின்றேன். 

இவ்வாறு நீங்கள் சொல்லும்போது உங்களிடம் நான் கேட்க விரும்புவது, எங்கள் மீது இராணுவ நடவடிக்கை எடுப்பார்களென்று யாரை தாங்கள் குறிப்பிடுகின்றீர்கள்? அமெரிக்காவையா? அமெரிக்கா எங்களைத் தாக்க போகின்றதா? 

இல்லை. நான் கேட்டது, நீங்கள் இது பற்றி கவலைக் கொள்ளவில்லையா என்று? 

நீங்கள் இது வரை இதைப்பற்றி கேள்விப்பட்டிருக்கின்றீர்களா?

ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்...

நாங்கள் இஸ்ரேலை ஒரு பொருட்டாகவே நினைத்ததில்லை. 

அப்படி ஒருவேளை அது நடந்தால் உங்களிடம் எந்த திட்டமும் இல்லையா?

அவர்கள் முடிந்து விட்டார்கள். சியோனிஸ ஆட்சி முடிந்து விட்டது. அவர்களால் காசாவைக் கூட சமாளிக்க முடியவில்லை. எங்களிடம் வரப்போகின்றார்களா? எல்லோருக்கும் இது தெரியும். பத்திரிகைத் துறையில் வல்லுனரான உங்களுக்கு இது தெரியாமல் இருப்பது எனக்கு ஆச்சர்யத்தை கொடுக்கின்றது. உலக அரசியல் வல்லுனர்கள் அனைவருக்கும் இது தெரியும். 


சியோனிஸ ஆட்சியால் காசாவை சமாளிக்க முடியவில்லை. எங்களுடன் பிரச்னைக்கு  வருவார்கள் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா?

ஆக, நீங்கள் ஐக்கிய நாடுகள் சபை பற்றி கவலைப்படவில்லை. இஸ்ரேல் பற்றியும் கவலைப்படவில்லை. 


நீங்கள் உங்கள் நாட்டில், உங்களுக்கு எதிராகவுள்ள மக்களைப் பற்றியாவது கவலைப்படுகின்றீர்களா?, இதற்கு ஆதாரம் உள்ளது. ஏனென்றால், வெளிப்புற பார்வையாளருக்கு, ஈரானிய அரசின் நடவடிக்கைகள், அவர்கள் போராடுபவர்களை சிறையிலிடுவது, போராடுபவர்களை தூக்கிலிடுவது போன்றவை உங்கள் அரசுக்கு எதிராக மக்கள் இருப்பதைக் காட்டுகின்றது. நீங்கள் இது பற்றி கவலைக் கொள்வதாக தெரிகின்றது. 

எந்த நாடு எங்களைத் தாக்கும் என்பதைப் பற்றி நாங்கள் கவலைப்பட்டு கொண்டிருக்க வேண்டுமென நீங்கள் நினைக்கின்றீர்களா? இது போன்றதொரு பாதுகாப்பைத் தான் அமெரிக்கா உலகில் ஏற்படுத்தியிருக்கின்றதா? இத்தகைய நாகரிகத்தை தான் அமெரிக்கா உலகிற்கு பரிசாக கொடுத்துள்ளதா? இது தான் அமெரிக்க சுதந்திரம் மற்றும் ஜனநாயகமா?


நாங்கள் சுதந்திரமானவர்கள், எங்கள் நாடுகளில் எங்கள் விஷயங்களை கவனித்துக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். மற்றவர்களின் தாக்குதலைப் பற்றி நாங்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டுமா என்ன? சியோனிஸ ஆட்சியிடமிருந்து? அமெரிக்காவிடமிருந்து? 


நீங்கள் உங்கள் நாட்டைப் பற்றி எந்த மாதிரியான பிம்பத்தை ஏற்படுத்தி வைத்திருக்கின்றீர்கள் என்று புரிந்திருக்கவில்லையா? உங்கள் அதிகாரிகளுக்கும் தெரியவில்லை, திருமதி கிளிண்டனுக்கும் புரியவில்லை. இல்லை, இங்கே என்னுடன் பேசிக்கொண்டிருக்கும் உங்களுக்கும் உங்கள் நாட்டைப் பற்றி எந்த மாதிரியான பிம்பத்தை உருவாக்கியிருக்கின்றீர்கள் என்று தெரியவில்லை.


ஏழாயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த நாடான ஈரான், என்றென்றும் அமைதி மற்றும் நட்பையே விரும்பி இருக்கின்றது, நாகரிகத்தின் மத்தியில் இருந்த நாடு. எந்த ஒரு நாட்டின் மீதும் படையெடுத்ததில்லை, எப்போதும் நியாயத்திற்கு ஆதரவாகவே இருக்கின்றது. ஆனால் நீங்கள் சொல்கின்றீர்கள் நாங்கள் அச்சத்திற்கு நடுவே வாழ வேண்டுமென்று.   


நீங்கள் பிரதிபலிக்கக்கூடிய அமெரிக்காவைப் பற்றிய பிம்பம் சரியானதன்று. அமெரிக்காவை எதிர்ப்பது ஈரான் மட்டுமன்று. அமெரிக்காவின் நடவடிக்கையால் எல்லா நாடுகளும் அதை எதிர்க்கின்றன. ஐரோப்பாவில் மட்டும் சுதந்திரமான தேர்தல் நடத்தப்பட்டால், மக்கள் அமெரிக்காவின் கொள்கைகளுக்கு எதிராகத்தான் இருப்பார்கள் என்று நான் உறுதி கூறுகிறேன். 


அவர்கள், ஈரான் அச்சத்துடன் தான் வாழ வேண்டுமென்று சொல்லுகின்றார்கள். எதற்காக? எதற்காக அவர்கள் எங்களை தாக்க நினைக்க வேண்டும்? 


தீவிரவாதம் மற்றும் அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பு குறித்து அவர் கூறியது,


நீங்கள் அமைதியை விரும்புவதாக சொல்லுகின்றீர்கள். ஒரு முஸ்லிமாக நீங்கள் தீவிரவாதத்தை எதிர்ப்பதாக சொல்லுகின்றீர்கள். இங்கே அமெரிக்காவில், டைம்ஸ் சதுக்கத்தை குண்டு வைத்து தகர்க்க முயற்சி செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். பாகிஸ்தான் தாலிபான் இயக்கம் அமெரிக்க நகரங்களை தாக்கப் போவதாக சொல்லியிருக்கின்றது. ஒரு முஸ்லிமாக இவற்றை நீங்கள் எதிர்க்கின்றீர்களா? 

நாங்கள் தீவிரவாதத்தை எதிர்க்கின்றோம். மிக கடுமையாகவே எதிர்க்கின்றோம். நாங்கள் ஏராளமானவர்களை தீவிரவாதத்திற்கு பலி கொடுத்து விட்டோம். ஈரானில் அதிபர், பிரதமர், சட்டத்தலைவர், 26 பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆயிரக்கணக்கான மக்கள் என்று பலரும் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். நாங்கள் தீவிரவாதத்தை எதிர்க்கின்றோம், அதே சமயம் அது சட்டத்திற்குட்பட்டு நடக்க வேண்டும். 


உங்களிடம் நான் கேட்கின்றேன். அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் நுழைந்து இது பத்தாவது வருடம். தீவிரவாதம் குறைந்திருக்கின்றதா, அதிகமாகி இருக்கின்றதா?. அமெரிக்காவின் அணுகுமுறை தவறென்று தெளிவாக தெரிகின்றது. அமெரிக்கா உள்ளே நுழைந்ததிலிருந்து இதுவரை ஒரு லட்சம் மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். தீவிரவாதமும் பெருகி இருக்கின்றது. 


சமீபத்தில் 400 ஈரானியர்களை கொன்ற ரெகி என்பவனை நாங்கள் கைது செய்தோம். அவன் எங்கே ஒளிந்திருந்தான்?, பாகிஸ்தானிலா?, இல்லை ஆப்கானிஸ்தானிலா? யார் அவனுக்கு ஆதரவளித்தது? அமெரிக்க இராணுவம் தான். 


இது மிகவும் மோசமானது. ஏன் இப்படியிருக்க வேண்டும்? நாங்கள் தீவிரவாதத்தை எதிர்க்கின்றோம், அப்பாவி மக்களின் வாழ்விற்கு அச்சுறுத்தலாய் இருப்பதை எதிர்க்கின்றோம். 


பேட்டி முழுவதும் மிகுந்த நிதானத்துடன் பதிலளித்தார் மஹ்மூத் அஹ்மதிநிஜாத். ஈரான் அதிபரின் உரையாடலிருந்து நான் புரிந்து கொண்டது,

  • ஈரானிய அரசாங்கம், தங்களுடைய நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கின்றது.
  • யாரையும் பார்த்து அச்சப்படும் நிலையிலும் அவர்கள் இல்லை. 
  • தாங்கள் செய்வது சட்டத்திற்கு உட்பட்டது என்பதில் தெளிவாக இருக்கின்றனர்.   

இந்த நேர்க்காணல் குறித்து ABC ஊடகத்தின் இணையத்தளத்தில் கருத்து தெரிவித்த பலரும் ஈரான் அதிபரின் வாதங்களில் அர்த்தம் இருப்பதாக குறிப்பிட்டனர்.

ஒரு அமெரிக்கர் அந்த தளத்தில் கூறியது,
இந்நாட்களில் அமெரிக்கா தான் உண்மையான எதிரியாக கருதப்படுகிறது.
நாம் மற்ற நாடுகள் மீது போர்த்தொடுத்து அவர்கள் எப்படி வாழ வேண்டுமென்று சொல்லவேண்டுமா?, நாம் மற்றவர்களுக்கு செய்வது போல, யாராவது நமக்கு செய்தால் நாம் என்ன நினைப்போம்?
அமெரிக்க வீரர்களை திரும்ப பெறுங்கள். அந்த நாடுகளை நிம்மதியாக வாழ விடுவோம். பிறகு நாமும் நம்முடைய வாழ்வை அமைதியான முறையில் அமைத்துக் கொள்வோம். 

புரிய வேண்டியவர்களுக்கு என்று புரியுமோ?....

இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்....


This article is the extract of Iran President's Interview with George Stephanopoulos which was translated by Aashiq Ahamed for Unnatham Magazine.


My sincere thanks to:
1.Unnatham Magazine.

References:
1. Mahmoud Ahmadinejad on Nuclear Programme - ABC News dated 5th May, 2010.


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ 
       

Mon 14

Click here to bookmark this link.Channel Image09:30 கொள்ளை போகும் இயற்கை வளங்கள் - துணை நிற்கும் சட்டங்கள் மக்கள் சட்டம் (PEOPLE'S LAW)
உலகில் வேறு எங்கும் காண முடியாத அரிய குணங்கள் படைத்த பல கோடி தாவரங்கள், மூலிகைகள், உயிரினங்கள் இந்தியாவில் உள்ளன. நம்முடைய மூதாதையர்கள் இத்தகைய உயிரினங்களின் இக்குணங்களை கண்டறிந்து காலகாலமாக பலவிதங்களில் பயன்படுத்தி வந்து உள்ளனர். ‘பாட்டி வைத்தியம்’ என்று அழைக்கப்படு்ம் இவை பெரும்பாலும் எழுத்து வடிவில் இருப்பதில்லை, சொல் வடிவம் மூலமாக ஆண்டாண்டு காலம் நாம் இவற்றை பயன்படுத்தி வருகிறோம். உலகெங்கும் மக்கள் இப்படி மூலிகைகள், மற்றும் உயிரினங்களின் மருத்துவ மற்றும் பிற பயன்பாடுகளை அறிந்து வைத்துள்ளனர்.
இத்தகைய அறிவை பாரம்பரிய அறிவாண்மை (Traditional Knowledge) என்று வகைப்படுத்துகின்றனர். இதுபோன்ற அறிவை நம்மக்கள் ‘நவீன அறிவியலுக்கு’ ஏற்ப ஆவணப்படுத்தி வைப்பதில்லை, இவை பெரும்பாலும் மக்களின் பொது சொத்தாக இருக்கின்றது. ஆனால் நவீன தொழில்நுட்பங்களை கொண்டு பொது பயன்பாட்டில் உள்ள இத்தகைய இயற்கை வளங்களை காப்புரிமை போன்ற சட்டங்கள் மூலம் தனியார் / நிறுவனங்கள் உடைமைகளாக மாற்றப்படும் கொடூரம் அதிகரித்து வருகிறது. மஞ்சள் வேம்பு, வேப்பிலை போன்றவற்றுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் காப்புரிமை கொடுக்கப்பட்டதை நாம் இங்கு நினைவில் கொள்ளலாம். ஆண்டு தோறும் நம் நாட்டைச் சேர்ந்த சுமார் 2000 பாரம்பரிய இயற்கை வளங்களுக்கு மேற்கு நாடுகளில் காப்புரிமை கொடுக்கப்படுவதாக மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

மூன்றாம் உலக நாடுகளின் இயற்கை வளங்கள் காப்புரிமை போன்ற சட்டங்கள் மூலம் கொள்ளை போவதை தடுப்பதற்கும், இயற்கை வளங்கள் மீதான ஆராய்ச்சிகளை முறைப்படுத்தவும் 1992 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவை சார்பில் மாநாடு ஒன்று நடைபெற்றது. ஒரு நாட்டின் இயற்கைவளங்களை மற்றொரு நாடு ஆராய்ச்சிகாக பயண்படுத்துகின்ற போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் உள்ளடங்கிய பல்லுயிர்பரவலுக்கான ஒப்பந்தம் (Convention For Biodiversity) ஒன்று அந்த மாநாட்டில் வரையறுக்கப்பட்டது.

பல்உயிரின ஒப்பந்தத்தின் அடிப்படையில் இயற்கை வளங்களையும் மூதாதையர்களின் பாரம்பரிய அறிவாண்மையும் பாதுகாத்திட, பல்லுயிர்ப்பரவல் சட்ட த்தை (Biological Diversity Act,2002) இந்தியா இயற்றியது.

பல்லுயிர்ப்பரவல் சட்டத்தின் கீழ் இயங்கும் அமைப்புகள்

இந்த சட்டம் தேசிய பல்லுயிர்ப்பரவல் ஆணையம் மற்றும் மாநில பல்லுயிர்ப்பரவல் வாரியம் ஆகிய கமிட்டிகளை நியமித்துள்ளது. இந்த கமிட்டிகளுக்கு நம் நாட்டின் இயற்கை வளங்களை பாதுகாக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ஒவ்வொரு பஞ்சாயத்து மற்றும் நகராட்சியும் பல்லுயிர்ப்பரவல் நிர்வாகக் குழுக்களை அமைக்க இச்சட்டம் வலியுறுத்துகிறது. தத்தமது எல்லையி்ல் பல்லுயிர் பாதுகாப்பு நிலையான பயன்பாடு மற்றும் வாழ்விடங்களை பராமரித்தல், நில இனங்கள், நாட்டுப்புற வகைகள் பயிரிடு இனங்கள், வளர்ப்புக்காக பயன்படுத்தப்படு்ம் விலங்குகளும், கால்நடை இனங்களும், மற்றும் நுண்ணுயிர்களை பாதுகாத்தல் மற்றும் பல்லுயிர்ப்பரவல் தொடர்பான அறிவாண்மையை பதிவு செய்தல் போன்றவை இத்தகைய குழுக்களின் நோக்கமாகவும் செயல்பாடுகளாகவும் இருக்க வேண்டு்ம் என்றும் இச்சட்டம் வலியுறுத்துகிறது.

மேலும் இக்குழுவின் முக்கிய பணியாக இச்சட்டம் கூறுவது, உள்ளுர் மக்களிடம் கலந்துபேசி மக்களுடைய பல்லுயிர்ப்பரவல் பதிவேடு தயாரிப்பதே ஆகும். இந்த பதிவேடு உள்ளுர் உயிரியியல் ஆதாரம், மருத்துவ பயன் அல்லது இதர பயன்கள் அல்லது பாரம்பரிய அறிவாண்மை ஆகிய விவரங்களை உள்ளடங்கியதாக இருக்க வேண்டும் என்றும் இச்சட்டம் கூறுகிறது.

இச்சட்டப்படி தேசிய மற்றும் மாநில பல்லுயிர்ப்பரவல் ஆணையம், பல்லுயிர்ப்பரவல் நிர்வாகக் குழுக்களின் எல்லைக்குள் அமைந்துள்ள இயற்கை வளம் மற்றும் அது தொடர்பான பயன்பாடு குறித்து யாதொரு முடிவு எடுக்கும்போது அவற்றை கலந்தாலோசிக்க வேண்டும் .

இயற்கை வளங்களும் காப்புரிமையும்

இந்த சட்டம் நம்நாட்டு இயற்கை வளங்களுக்கு அறிவுசார் சொத்துரிமை (Intellectual Property Rights) வழங்குவதை முழுவதுமாக, குறிப்பாக காப்புரிமையை தடைசெய்கிறது. காரணம் காப்புரிமை என்பது தனியாருக்கு வழங்கப்படும் ஏகபோக உரிமையாகும். காப்புரிமை பெற்ற ஒருவர்/நிறுவனம் தாம் காப்புரிமை சட்டப்படி பதிவு செய்த பொருளை மற்றொரு நபர் உற்பத்தி/விற்பனை செய்வதை 20 ஆண்டுகளுக்கு தடுக்கும் உரிமையை பெறுகிறார்.

காப்புரிமையை தடை செய்யும் அதே நேரத்தில் (உள்நாட்டு/வெளிநாட்டு) ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆராய்ச்சிக்காக பல்லுயிர்ப்பரவல் சட்டத்தின்ப்படி அமைந்துள்ள கமிட்டியின் கீழ் பாதுகாக்கப்படும் இடங்களுக்குச் சென்று அவர்களுடைய அனுமதியோடு ஆராய்ச்சி செய்யும் உரிமையையும் இச்சட்டம் வழங்குகிறது. இந்த சலுகை, ஆராய்ச்சி என்ற பெயரில் நம்முடைய இயற்கை வளங்கள் கொள்ளை போவதற்கு உதவக்கூடும். இந்த சட்டம் நம்முடைய இயற்கை வளங்களின் மரபணுக்களை (Gene) ஆராய்ச்சிக்காக வெளிநாடுகளுக்கு எடுத்துச்செல்வதை தடை செய்யவில்லை. இவ்வாறு ஆராய்ந்து அதன் மூலம் பெறப்படும் கண்டுபிடிப்புகளுக்கு(!?) காப்புரிமை வழங்குவதையும் இச்சட்டம் தடை செய்யவில்லை.

ஆக அனுமதி பெற்று ஆராய்ந்து கண்டுபிடிக்கப்படும் பொருட்களுக்கு இந்தியாவிலும் காப்புரிமை பெற மூடியும். இதன் மூலம் பெறப்படும் லாபத்தில் குறிப்பட்ட பகுதியை இந்த செல்வங்களை இதுநாள் வரை பாதுகாத்து வந்த மக்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் (Benefit Sharing) என்று பல்லுயிர்ப்பரவல் சட்டம் கூறுகிறது. அதாவது பல்லுயிர்ப்பரவல் நிர்வாகக் குழுக்கள் தமது எல்லைக்குள் அமைந்துள்ள பகுதிகளிலிருந்து வணிக நோக்கங்களுக்காக இயற்கை வளங்களை சேகரிக்கும் அல்லது அணுகும் யாதொரு நபரிடத்திலிருந்து/நிறுவனத்திடம் கட்டணமாக ஒரு தொகையை வசூல் செய்யலாம் என்பது இதன் பொருள்.

மறைமுகமாக நம்முடைய இயற்கை வளங்கள் கொள்ளை போவதற்கு இச்சட்டம் உதவுவதோடு மட்டும் அல்லாமல், இதுபோன்ற ஆராய்ச்சியின் பயனாக இத்தகைய இயற்கை வளங்களை பாதுகாத்து வந்த மக்களுக்கு ஏற்படும் நஷ்டங்ளை மிகச்சிறிய இழப்பீட்டுத்தொகை மூலம் நிவர்த்தி செய்துவிடலாம் எனவும் இச்சட்டம் கூறுகிறது. இச்சட்டம் இயற்கை கொள்ளையை (Bio Piracy) சட்டப்பூர்வமாக முறைப்படுத்துகின்றது என்று இயற்கை ஆர்வலர் டாக்டர் வந்தனா சிவா கூறியதை இங்கு நினைவில் கொள்ளலாம்.

. கூடுதலாக இந்த சட்டத்தின் கீழ் The Protection, Conservation and Effective Management Of Traditional Knowledge Relating To Biological Diversity Rules, 2009 என்கிற சட்ட வரைவு நிலுவையி்ல் உள்ளது. இந்த சட்ட விதி மேற்கூறிய வகையில் ஆராய்ச்சிகளை முறைப்படுத்தி கட்டணத் தொகை வசூல் செய்வதிற்கு தேசிய பல்லுயிர்ப்பரவல் ஆணையம் மற்றும் இதர கமிட்டிகளுக்கு கூடுதல் அதிகாரம் தருகிறது.

சட்டத்தின் செயலற்ற நிலை

மாநில அரசுக்கு கிராம பஞ்சாயத்து போன்ற உள்ளாட்சி அமைப்புகளோடு கலந்தாலோசித்து, பல்லுயிர்ப்பரவல் முக்கியத்துவம் உடைய இடங்களை பல்லுயிர்ப்பரவல் பாரம்பரிய இடங்களாக (Biodiversity Heritage Sites) அறிவிக்க இச்சட்டம் வழிவகுத்துள்ளது. இவ்வாறு அறிவிக்கப்படும் இடங்கள் சிறப்பு சட்டங்கள் மூலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று மேற்கூறிய சட்டம் கூறுகிறது. 2008 ஆண்டு நிலவரப்படி கேரளாவை தவிர வேறு தமிழ்நாடு உட்பட எந்த ஒரு மாநிலமும் இந்த பிரிவின்படி பல்லுயிர்ப்பரவல் பாரம்பரிய இடமாக தங்கள் மாநிலங்களில் எந்த இடத்தையும் இன்னும் கண்டறியவில்லை.

குறிப்பாக தமிழகத்தில் எந்த உள்ளாட்சி அமைப்பும் பல்லுயிர்ப்பரவல் நிர்வாகக் குழவை ஏற்படுத்தியதாக தெரியவில்லை. கிராம பஞ்சாயத்து அளவில் இந்த சட்டம் செயல்படுத்தப்படும் போது மட்டுமே நம் பாரம்பரிய இயற்கை வளங்கள் பாதுக்காப்படும். கேரளாவில் உள்ள பிளாச்சிமடா என்கிற ஒரு சிறிய கிராம பஞ்சாயத்துதான் “கோக்” என்கிற மிக பெரிய பன்னாட்டு நிறுவனம் தங்களுடைய நீர் வளத்தை சுரண்டவிடாமல் துரத்தியது என்பதை நாம் மறக்க கூடாது.

-மு.வெற்றிச் செல்வன்
(Vetri @Lawyer.Com)

Sun 13

Click here to bookmark this link.Channel Image03:32 ஹதீஸ் கலை அல்பாக்கவி.காம்
ஹதீஸ் கலை الفرق بين الحديث والسنة والأثر இஸ்லாத்தின் இரண்டாவது மூலாதாரம் இஸ்லாத்தின் இரண்டாவது மூலாதாரமாக ‘ஹதீஸ்’ காணப்படுகிறது. ஹதீஸ்கள் திரட்டப்பட்ட நூல்கள் மிக அண்மைக் காலம் வரை, அவற்றின் மூல மொழியான அரபு மொழியிலேயே இருந்து வந்தன. தற்போது சில நிறுவனங்களாலும், அறிஞர்களின் பெரும் முயற்சியா லும் அவை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்து கொண்டி ருக்கின்றன.. அதிலும் குறிப்பாக புகாரி, முஸ்லிம் போன்ற நூல்கள் முழுமையாக வெளிவந்துவிட்டன. இது தமிழ் உல கிற்கும், குறிப்பாக [...]

Sat 12

Click here to bookmark this link.Channel Image20:38 நபிமொழி திரட்டிய நல்லோர் அல்பாக்கவி.காம்
நபிமொழி திரட்டிய நாயகத்தோழர்கள் ஸஹாபாக்களில் ஒரு ஹதீஸிலிருந்து 1000 க்கு மேற்பட்ட ஹதீஸ்கள் வரை அறிவித்தவர்கள் 1300 பேர்கள். ஒரேயோரு ஹதீஸை வெளிபடுத்தியவர்கள் 500 பேர்கள். இவர்களில் முதலிடம் பெற்று அதிகமான ஹதீஸ்களை அறிவித்த பெருமை  அபூ ஹூரைரா (ரலி) அவர்களையே சாரும். 1.1000 ஹதீஸ்களுக்கு மேல் அறிவித்தவர்கள் ஏழு பேர். வ.எ நபித் தோழர்களில் அறிவிப்பாளர்கள் (ராவிகள்) அறிவித்த ஹதீஸ்களின் எண்ணிக்கை இறந்த ஆண்டு ஹி 01 அபூ ஹூரைரா (ரலி) 5374 57 02 அப்துல்லாஹ் [...]
Click here to bookmark this link.Channel Image19:01 அல்ஹதீஸ் ஒரு பார்வை அல்பாக்கவி.காம்
‘அல்-ஹதீஸ்” என்பது அண்ணல் (நபி) அவர்கள் சொன்னவை (கவ்லீ) செய்தவை (பிஃலீ) அங்கீகரித்தவை (தக்ரீரி) இவை அனைத்தும் ஹதீஸ் எனப்படும். இது திருக்குர் ஆனுக்கும் ஒரு விளக்கமாக அமைந்துள்ளது. இறை வேதத்துக்கு அடுத்தபடியாக கொள்ளத்தக்கது இதுவேயாகும். ஹதீஸ் இரு வகைப்படும் அவை: 1. ஹதீஸ் குத்ஸீ: இறைவனின் கருத்தை ஜிப்ரீல் (அலை) தம் சொல்லால் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் கூறியதாகும். 2. ஹதீஸ் நபவீ: அண்ணல் நபி அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் அனைத்தும் ஹதீஸ் [...]

Fri 11

Click here to bookmark this link.Channel Image21:35 ஐ நாவில் அரபு மொழி அல்பாக்கவி.காம்
அரபு மொழி உலகப் பெருமொழி இன்று உலகில் வளம் பெற்ற மொழிகளும் வளம் பெறாத மொழிகளும் எழுத்து வடிவம் பெற்ற மொழிகளும்,எழுத்து வடிவம் பெறாது பேச்சு வழக்கில் மட்டும் இருந்து வரும் மொழிகளுமாக இன்று சுமார் 6600 மொழிகள் வரை காணமுடிகிறது.அவற்றுள் தொன்மை யானதும், இலக்கிய இலக்கண வனப்பும் பெற்ற சிலமொழிகளில் அரபு மொழி முதன்மை யானது என்பதை உலகமே ஒப:புக் கொண்டுள்ளது. அதற்கு இறையருள் வேதமாம் அல் குர்ஆனே மிகப்பெரும் சான்றாகும். ஐக்கிய நாடுகள் சபையின் [...]
Click here to bookmark this link.Channel Image05:42 அணுஉலை விபத்து இழப்பீட்டு சட்டம் – சொந்த செலவில் சூனியம் மக்கள் சட்டம் (PEOPLE'S LAW)
உலகின் முன்னேறிய நாடுகள் பலவற்றிலும் சுற்றுச்சூழலியலும், அது சார்ந்த சட்டவியலும் பெரு வளர்ச்சி அடைந்து வருகின்றன. குறிப்பாக சுற்றுச்சூழல் சட்டவியலின் அடிப்படை அம்சங்களாக முன்னெச்சரிக்கை கோட்பாடு” (Precautionary Principle) மற்றும் சீரழிப்பவரே இழப்பீடு செலுத்த வேண்டும்” (Polluter Pays) ஆகிய கோட்பாடுகள் தீவிரமாக கடைபிடிக்கப்படுகின்றன.

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் பேரழிவுகளை ஏற்படுத்தக்கூடியதும், சூழலை மாசுபடுத்தக்கூடியதுமான பல தொழில்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அமெரிக்காவில் கடந்த 1973ம் ஆண்டுக்கு பிறகு ஒரு புதிய அணுஉலைகூட அமைக்கப்படவில்லை. அதற்கு பதிலாக அழியா ஆற்றல் மூலங்களான சூரிய சக்தி, காற்றாலை போன்றவற்றை பயன்படுத்தி மின்சக்தி தயாரிக்கும் வழிமுறைகள் அதிகரித்து வருகின்றன.

ஆனால் இந்தியாவில் இதுபோன்ற சூழல் பாதுகாப்புக் கொள்கைகள் நடைமுறையில் பின்பற்றப் படுவதில்லை. இதற்கு உதாரணமாக போபால் விஷவாயு விபத்தைக் கூறலாம். 1984ஆம் ஆண்டில் நடந்த இந்த விபத்தின் காரணமாக சுமார் 15 ஆயிரம் உயிரிழந்துள்ளனர். பல்வேறு விதங்களிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டுகிறது.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் தனியாக நீதிமன்றத்தை அணுகக்கூடாது என்று கூறிய மத்திய அரசு, பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக அரசே வழக்கு தொடுக்கும் என்று அறிவித்தது. ஆயினும் இம்மக்களுக்கான தீர்வு விபத்து நடந்து 25 ஆண்டுகள் கழிந்த பின்னரும் முழுமையாக கிடைக்கவில்லை. இறையாண்மை மிக்க இந்தியாவின் நாடாளுமன்றமுமம், நீதி மன்றை அமைப்புகளும், பிற அதிகார அமைப்புகளும் போபால் விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரோகமே இழைத்து வருகின்றன. போபால் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களும், அவர்களின் வாரிசுகளும் இழப்பீடு கேட்டு போராட்டம் நடத்தினால் தடியடிகளும், சிறைத்தண்டனைகளுமே பரிசாக வழங்கப்படுகின்றன.

இந்த விபத்திலிருந்து இதுவரை இந்தியா எந்தப் பாடமும் கற்றுக்கொள்ளவில்லை. நாட்டிலுள்ள அணுமின் நிலையங்களும் போபாலுக்கு எந்த விதத்திலும் குறைந்தவை அல்ல. ஆபத்து மிகுந்த இந்த அணுமின் நிலையங்கள் பாதுகாப்பானவையோ, சிக்கனமானவையோ, ஆற்றல்மிகுந்தவையோ அல்ல என்பதை சூழலியல் நிபுணர்கள் பலமுறை நிரூபணம் செய்துள்ளனர். எனினும் இந்த அணுஉலைகளை தொடர்ந்து இயக்குவதில் அரசு ஆர்வம் காட்டி வருகிறது.

இன்றைய நிலையில் அணுமின் நிலையங்களில் விபத்தே ஏற்படாது என அரசு உட்பட யாரும் உறுதி கூற முடியாது. அணுமின் நிலையங்கள் இயங்குவது நிகழ்கால ஆபத்து. அணுமின் நிலையத்தில் வெளியாகும் கழிவுகள் எதிர்காலத்தில் பல்லாயிரம் வருடங்களுக்கான ஆபத்தாக விளங்கும். இதை அணுசக்தி ஆதரவாளர்கள் யாரும் மறுப்பதும் இல்லை. இவ்வளவு ஆபத்தான அணுசக்தி தேவைதானா? என்ற கேள்விக்கு நேரடியான பதில் அளிப்பதும் இல்லை.

இந்நிலையில் அணுமின் உலைகளில் விபத்து ஏற்பட்டால் இழப்பீடு அளிப்பது குறித்த சட்டம் ஒன்றை நிறைவேற்ற மத்திய அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது. மனிதர்களுக்கு பாதிப்பே இல்லாத வகையில் மின்சக்தி தயாரிக்கும் வழியை கண்டுபிடிப்பதைவிட்டு இழப்பீடு தருவதற்காக ஒரு சட்டமா என்று சினம் கொள்ளாதீர்கள். இது நீங்கள் நினைப்பதைப்போல பாதிக்கப்படும் இந்தியர்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவதற்கான சட்டம் அல்ல.

அதற்கு பதிலாக பாதிப்பை ஏற்படுத்தும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, குறிப்பாக அமெரிக்க அணுசக்தி நிறுவனங்களுக்கு சலுகை அளிக்கும் நயவஞ்சக திட்டத்தை, ஒரு சட்டமாக மத்திய அரசு அறிமுகப்படுத்துகிறது. இந்த சட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ளும் முன்பு இதற்கான தேவை குறித்து பார்ப்போம்.

இந்தியாவில் இயங்கும் அனைத்து அணு உலைகளையும் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான இந்திய அணுசக்திக் கழகம் என்ற அமைப்பே இயக்கி வருகிறது. இந்த நிறுவனத்துடன் அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் அரசுகளோ, நிறுவனங்களோ இணைந்து செயல்படுகின்றன. இவற்றில் அமெரிக்காவே இந்தியாவில் அதிகம் முதலீடு செய்வதற்கு முனைந்து செயல்படுகிறது. இந்த முதலீட்டுத் தொகையும், அதற்குரிய லாபமும் சிறிதும் குறையாமல் கிடைக்கவேண்டும் என்று அமெரிக்க நிறுவனங்கள் விரும்புகின்றன. விபத்துகள் ஏற்பட்டால் இழப்பீடு வழங்குவதன் மூலம் தங்கள் வருவாய்க்கு இழப்பு ஏற்படக்கூடாது என்று இந்த நிறுவனங்கள் கருதுகின்றன. எனவே விபத்துகளுக்கான இழப்பீடு வழங்குவதிலிருந்து தங்களுக்கு விடுதலை வேண்டும் என்று இந்த நிறுவனங்கள் மத்திய அரசுக்கு நிபந்தனை விதித்தன.

இதையடுத்து, “The Civil Liability for Nuclear Damage Bill, 2010” என்ற பெயரிலான அணுஉலை விபத்து இழப்பீட்டு வரம்பு நிர்ணயிக்கும் சட்டத்தை கொண்டுவருவதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

இந்த சட்டத்தின் 6வது அம்சம் அணு உலை விபத்துக்கான இழப்பீட்டிற்கான உச்சவரம்பு அதிகபட்சமாக சுமார் ரூபாய் இரண்டாயிரத்து நூறு கோடி (2100 கோடி ரூபாய்) என்று நிர்ணயம் செய்கிறது. ஆனால் அமெரிக்காவில் இதுபோன்ற விபத்து ஏற்பட்டால் இதைப்போல சுமார் 23 மடங்கு இழப்பீடு வழங்கப்படும். இந்த 2100 கோடி ரூபாயிலும் வெறும் 500 கோடி ரூபாயை மட்டும் அந்த அணுஉலைக்கான தொழில்நுட்பத்தை வழங்கும் நிறுவனங்கள் செலுத்தினால் போதுமானது. (அதையும் அந்த நிறுவனங்கள் இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் வசூலித்துவிடும் என்பது வேறு கதை!) மீதித் தொகையான சுமார் 1587 கோடி ரூபாயை இந்திய அணுசக்தி கழகம் என்ற பொதுத்துறையின் பெயரால் இந்திய அரசு வழங்கி விடும். இதற்கான தொகை எங்கிருந்து வரும் என்று கேட்கிறீர்களா இந்திய குடிமக்கள் கட்டும் பல்வேறு வரிகளிலிருந்து திரட்டப்படும் அரசு நிதிதான், இந்தியர்களுக்கு பேரழிவு ஏற்படும்போது வெளிநாட்டு நிறுவனங்களை காப்பாற்றும் நோக்கத்தில் செலவழிக்கப்படும்.

இது போன்ற பேரழிவுகளுக்கு வெளிநாட்டு தனியார் நிறுவனங்களே காரணம் என்று நிரூபிக்கப்பட்டால்கூட அந்த நிறுவனத்துக்கு எதிராக அந்நிறுவனம் அமைந்துள்ள நாட்டின் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும் உரிமையும் இந்திய குடிமக்களுக்கு இந்த சட்டத்தின் வாயிலாக மறுக்கப்படுகிறது. (பிரிவு 17)

உண்மையைச் சொல்லப்போனால் இந்த சட்டம், அணு உலை விபத்து ஏற்படும் பட்சத்தில் அது குறித்து விசாரிக்கும் அதிகாரத்தை இந்திய நீதிமன்றங்களிடம் இருந்தே பறித்து விடுகிறது. (பிரிவு 35)

விபத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் அளிப்பதற்காக அணு உலை பாதிப்பு இழப்பீடு ஆணையம் அமைக்கப்படும். இதன் ஆணையர்கள் மேற்கொள்ளும் முடிவுகளே இறுதியானவை. இதற்கு எதிராக நாட்டின் எந்த நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்ய முடியாது.

ஒரு அணுஉலையில் விபத்து ஏற்பட்டால் அதன் தீய விளைவுகள் பல பத்தாண்டுகளுக்கு நீடிக்கும். இம்மாதிரியான விளைவுகள் குறித்து இதுவரை எந்த முழுமையான ஆய்வும் இதுவரை நிறைவு பெறவில்லை. இந்நிலையில் இந்திய அணுஉலைகளில் விபத்து ஏற்பட்டால், இழப்பீடு கோருவதற்கு வெறும் பத்தாண்டு காலத்தை மட்டுமே காலக்கெடுவாக விதிக்க இந்த புதிய சட்டம் வழி வகுக்கிறது. அதாவது அணுஉலை விபத்து ஏற்பட்ட தினத்திலிருந்து 10 ஆண்டுகளுக்குள் மட்டுமே இழப்பீடு கோர முடியும் என்று இந்த சட்டம் வரம்பு விதிக்கிறது. (பிரிவு 18) விபத்து ஏற்பட்டு அதன் விளைவான தீய விளைவுகள் 10 ஆண்டுகள் கழித்து தெரியவந்தால் அதற்காக இழப்பீடு கோர முடியாது என்பதுதான் இந்தப் பிரிவின் கருப்பொருள்.

இது போன்று இந்திய மக்களுக்கு எதிரான சட்டத்தை நிறைவேற்றுவதற்கான சர்வதேச கடமைகள் ஏதும் இந்தியாவிற்கு இல்லை என்ற போதிலும் அமெரிக்க எஜமானர்களுக்கு அடிபணிந்து நடக்கும் இந்திய ஆட்சியாளர்களின் பணிவு வேட்கையே இத்தகைய சட்டத்தை இங்கு கொண்டு வரமுயற்சிக்கிறது.

இந்த சட்டத்திற்கான முன்வடிவை பரிசீலனை செய்த பிரபல அரசியல் அமைப்புச் சட்டநிபுணர் சோலி சொராப்ஜி, “இந்திய அரசியல் சட்டத்திற்கும், உச்சநீதிமன்றத்தின் பல முன்மாதிரி தீர்ப்புகளுக்கும் எதிரான இந்த சட்டத்திற்கான தேவை எதுவும் இன்று இல்லை: இந்த சட்டம் யாருடைய நிர்பந்தத்தில் கொண்டு வரப்படுகிறது என்பதும் புரியவில்லை!” என்று வேதனை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடன் பல்வேறு ஐரோப்பிய யூனியன் நாடுகள் அணுசக்தி தொடர்பான பல்வேறு வர்த்தகங்களை செய்து வருகின்றன. ஆனால் இந்தியாவில் கொண்டுவர முயற்சிக்கப்படும் இந்த சர்ச்சைக்குரிய சட்டத்தைப்போல ஐரோப்பிய நாடுகளிலோ, வேறு வளரும் நாடுகளிலோகூட எந்த சட்டமும் இல்லை.

சாமானியர்களுக்கும் சட்டத்துக்கும் தொடர்பில்லை என்ற தவறான கருத்து சமூகத்தில் உள்ளது. வழக்கறிஞர்கள் சட்டத்தை பயன்படுத்துகின்றனரே தவிர, சட்டத்தை உருவாக்கும் பணி சாமானிய மக்களின் பெயரால், மக்களின் பிரதிநிதிகளால்தான் நடைபெறுகிறது. எனவே சமூக ஆர்வம் கொண்ட எவரும் சட்டத்தை திறனாயும் நோக்கத்தில் படித்தே ஆக வேண்டியது காலத்தின் கட்டாயம்! மேலும் மக்களுக்கு எதிரான இது போன்ற சட்டங்களை அனைத்து தளங்களிலும் எதிர்ப்பது, நமது சந்ததிகளுக்கு நாம் செய்யவேண்டிய வரலாற்றுக் கடமையாகும்!


-பி. சுந்தரராஜன்
(sundararajan@lawyer.com)
நன்றி: சட்டப் பாதுகாப்பு, ஜூன் 2010

Thu 10

Click here to bookmark this link.Channel Image21:11 மாஷா அல்லாஹ்! அல்பாக்கவி.காம்
மாஷா அல்லாஹ்! அல்லாஹ் நாடியதே நடக்கும் என்பதைக் குறிக்கவே “மாஷா அல்லாஹ்” எனக் கூறப்படும். (பார்க்க: 6 :128,7:188, 10:49,18:39,87:7) மகிழ்ச்சியான செய்தி ஒன்றை கேள்வியுறும்போதோ,வியப்புக்குரிய ஒன்றை செவியுறும்போதோ,ஒருவரின் திறமையை அல்லது சாதனையைப் பாராட்டும் போதோ   “மாஷா அல்லாஹ் “என்றோ,            ” மாஷா அல்லர்லாஹ் லா குவ்வத்த இல்லா பில்லாஹ் “  என்றோ கூறப்படும். அல்லாஹ் வழங்கிய அருத்கொடைகளை நினவுகூரும் போதும், வியப்புக்குரிய ஒன்றை சொல்லும்போதும் ஒருவரைப் பாராட்டும் போதும் இச்சொலிலை அரபுகள் அதிகமாகப் பயன்படுத்துவதைப் பார்க்கலாம். [...]

Wed 09

Click here to bookmark this link.Channel Image01:49 ஏன் இஸ்லாம்? - III எதிர்க்குரல்


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

தங்கள் மீதும், தங்களின் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமின். 

     சென்ற ஆண்டு அக்டோபர் மாதம், பிரிட்டனின் பிரபல தினசரியான "தி கார்டியன் (The Guardian)", இஸ்லாம் குறித்த ஒரு சுவாரசியமான கட்டுரையை வெளியிட்டிருந்தது.


"கறுப்பின மக்கள் ஏன் இஸ்லாத்தை தழுவுகின்றார்கள் (Why are black people turning to Islam?)" என்று தலைப்பிடப்பட்டிருந்த அந்த பதிவை எழுதியவர் ரிச்சர்ட் ரெட்டி (Richard Reddie) அவர்கள். 

இஸ்லாத்தை தழுவிய பலரிடம் நேர்க்காணல் செய்து அந்த கட்டுரையை எழுதியிருந்தார் அவர். அவருடைய ஆய்வு அடங்கிய அந்த பதிவு இங்கே உங்கள் பார்வைக்கு...  


"கறுப்பின மக்கள் இஸ்லாத்தை தழுவுவதென்பது புதிய நிகழ்வு அல்ல. காலங்காலமாகவே அது நடந்து கொண்டுதான் இருக்கின்றது. 

ஆனாலும், ஏன் அதிக கறுப்பின பிரிட்டன் மக்கள், குறிப்பாக இளைய தலைமுறையினர், இஸ்லாத்தை தழுவுகின்றார்கள் என்று ஆழமாக சென்று ஆய்வு செய்தேன். நான் முஸ்லிமில்லை என்றாலும் எனக்கு இஸ்லாம் மீது எப்போதுமே ஆர்வம் இருந்ததுண்டு. 

என்னுடைய வாழ்வில், நான் ஹீரோக்களாக காணும் மால்கம் எக்ஸ், முஹம்மது அலி, பிரின்ஸ் பஸ்டர் என்று மூவருமே இஸ்லாத்தை தழுவியவர்கள். இவர்களை எந்த வகையில் இஸ்லாம் கவர்ந்தது?, அது அவர்களது வாழ்வில் எத்தகைய மாற்றத்தை உண்டாக்கியது? என்பதை அறிய விருப்பம்.

என்னுடைய ஆய்வின் ஆரம்பத்திலேயே நான் புரிந்து கொண்ட ஒரு விஷயம், இஸ்லாத்தை தழுவிய இந்த மக்களில் பலர், தாங்கள் "கறுப்பின முஸ்லிம்கள் (Black Muslims)" என்று அழைக்கப்படுவதை விரும்பவில்லை. உலகளாவிய முஸ்லிம்களில் தாங்களும் ஒரு பகுதி, தங்கள் இனத்தை பார்த்து தங்களை அடையாளப்படுத்த வேண்டாம் என்றே கூறுகின்றனர்.

அது போல, இந்த மக்களில் சிறு பகுதி, தங்களை கறுப்பின முஸ்லிம்கள் என்று அழைத்தாலும் பரவாயில்லை என்று கருதுகின்றனர். இஸ்லாம், கறுப்பின மக்களின் இயற்கை மார்க்கமென்றும்; ஆன்மீக ரீதியாகவும், உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட மக்களை விடுவிக்க வந்த மார்க்கம் என்றும் கூறுகின்றனர்.

நான் நேர்க்காணல் செய்த மக்கள் அனைவருமே ஒப்புக்கொண்ட ஒரு கருத்தென்றால், அது, இஸ்லாம், தங்களுடைய வாழ்வை அர்த்தமுள்ளதாக உருவாக்கியது என்பதும், ஆன்மீக ரீதியாக ஒரு புத்துணர்ச்சியை கொடுத்தது என்பதும் தான். 

அதுமட்டுமல்லாமல், Materialism மற்றும் Moral relativism போன்றவற்றால் சீரழிந்த இந்த சமூகத்தை எதிர்த்து நிற்கக்கூடிய ஊக்கத்தையும் வலிமையையும் இஸ்லாம் தங்களுக்கு தந்துள்ளதாக கூறுகின்றனர்.



நான் நேர்க்காணல் செய்த பெண்களோ, இஸ்லாம், தங்களுக்கு மிகுந்த கண்ணியத்தை அளித்துள்ளதாகவும், பெண்களை அழகு பொருட்களாக காணும் சமூகத்திலிருந்து தங்களை விடுவித்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

இந்த ஆய்வின் மூலம் நான் கண்டறிந்த மற்றொரு முக்கிய தகவல், இவர்களில் பலர், இஸ்லாத்தை தழுவதற்கு முன்பு கிறித்துவத்துடன் தொடர்பு கொண்டிருந்தவர்கள். சர்ச்சுக்கு செல்பவர்களாகவோ அல்லது சர்ச்சுடன் தொடர்புடையவர்களை உறவினர்களாகவோ கொண்டவர்கள்.  இது இஸ்லாத்தை ஏற்கும் வெள்ளையின மக்களுடன் ஒப்பிடும் போது சற்று வித்தியாசமானது. ஏனென்றால், இஸ்லாத்தை தழுவும் பல வெள்ளையர்கள் அதற்கு முன் எந்த ஒரு மார்க்கத்தின் மீதும் பற்று இல்லாதவர்களாகத் தான் இருப்பர்.     

அதுபோல நான் அறிந்துக்கொண்ட ஒரு சுவாரசியமான விஷயம், இஸ்லாம் என்றால் என்னவென்று இவர்களை, குறிப்பாக ஆண்களை, பார்க்க வைத்ததில் மால்கம் எக்ஸ் முக்கிய பங்கு வகிக்கின்றார். நான் பேசிய பலருடைய மனதிலும் மால்கம் எக்ஸ் என்ற அந்த சகோதரர் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றார்.

அமெரிக்காவைப் போன்று பிரிட்டனிலும், கறுப்பின முஸ்லிம்கள், குற்றவாளிகளை திருத்தி அவர்களை நல்வழிப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இப்படி திருத்தப்பட்ட பலர், தங்களை நல்வழிப்படுத்திய கொள்கையை மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்வதில் மும்முரமாக இருக்கின்றனர். இதில் அவர்கள் எவ்வித தயக்கமும் காட்டுவதில்லை.     

இறுதியாக நான் சொல்ல விரும்புவது, வாழ்வின் முக்கிய கேள்விகளுக்கு கிறித்துவத்தில் பதிலில்லாத போது, அதனை முன்வைத்தவர்களுக்கு சரியான மாற்றாக இருப்பது இஸ்லாம்.

சிலர், தங்கள் ஹீரோக்ககளை பார்த்து இஸ்லாம் என்றால் என்னவென்று அறிந்து கொண்டு இஸ்லாத்தை தழுவுகின்றனர். மற்றவர்களோ, தங்கள் வாழ்க்கைக்கான அர்த்தங்களை தேடி முடிவில் இஸ்லாத்தை வந்தடைகின்றனர்.

எது எப்படியோ, இஸ்லாத்தை ஏற்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருக்கின்றது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை"


சுபானல்லாஹ்....

இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

   
My Sincere Thanks To:
1. The Guardian Newspaper.

Original Article written by:
1. Br.Richard Reddie.

Extract of the article translated by:
1. Aashiq Ahamed A

Reference: 
1. Why are black people turning to Islam? - The Guardian, dated 5th October 2009.


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

Sun 06

Click here to bookmark this link.Channel Image03:48 ஹிஜாப் அணிந்ததால் பள்ளியிலிருந்து மாணவி நீக்கம்! எதிர்த்து தொடுத்த வழக்கில் வெற்றி! பெண் விடுதலை!
முஸ்லிம் பள்ளி மாணவி ஒருவர் தனது வகுப்பிற்கு ஹிஜாப் அணிந்து வந்த ஒரே காரணத்திற்காக டி.ஸி (Transfer Certificate) கொடுத்து பள்ளியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் நடந்தது பிரான்ஸிலோ அல்லது டென்மார்க்கிலோ அல்ல. கேரளாவின் ஆலப்புழாவில் தான். இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவியின் தந்தை தொடர்ந்த வழக்கிற்கு எதிரொலியாக, பள்ளியின் பிரின்சிபலை சஸ்பெண்ட் செய்யுமாறு கடந்த சனிக்கிழமை, 05-06-2010 அன்று

Sat 05

Click here to bookmark this link.Channel Image05:59 Nation of Islam - எழுச்சியும் வீழ்ச்சியும்... எதிர்க்குரல்


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி. அமெரிக்காவில், ஆப்ரிக்கா அமெரிக்க இனத்தவர் கடுமையான அடக்குமுறைகளுக்கு ஆளான நேரம். அவர்களுக்கு உதவ  வாலஸ் பர்த் முஹம்மது (Wallace D.Fard Muhammed) என்பவரால் 1930ல் தோற்றுவிக்கப்பட்டது தான் "Nation of Islam (இஸ்லாமிய தேசிய அமைப்பு அல்லது இஸ்லாமிய தேசியம்)".

பிறகு, 1933 ஆம் ஆண்டு, பர்த் முஹம்மது அவர்களின் மாணவரான எலிஜா முஹம்மது(Elijah Muhammed) அவர்களின் கட்டுபாட்டுக்குள் அமைப்பு வந்தது. எலிஜா அவர்கள் பொறுப்பில் இருந்த காலத்தில் தான் (1933-1975) அமைப்பு மாபெரும் எழுச்சி கண்டது. அமெரிக்காவை திணறடித்தது.


அமைப்பின் பெயரில் இஸ்லாம் என்ற வார்த்தையை பார்த்தவுடன் இது ஒரு இஸ்லாமிய அமைப்பாக இருக்குமோ என்று நீங்கள் கருதினால், அது தவறு.

ஆம், பெயரில் தான் இஸ்லாம் இருந்ததே ஒழிய, இஸ்லாத்திற்கும் இவர்களுக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லுமளவு வேறுபாடுகள்.

இவர்களது சில கொள்கைகளை பார்த்தால் உங்களுக்கே புரியும்,

  • இவர்களை பொறுத்தவரை, இந்த அமைப்பை தோற்றுவித்தவரான பர்த் முஹம்மது அவர்கள் இறைவனின் அவதாரம் (God Incarnate).
  • அதற்கு பிறகு வந்த எலிஜா முஹம்மது அவர்கள் இறைவனின் தூதர். 
  • நோன்பு, தொழுகை, ஜகாத் அவசியமில்லை. 
  • கிருத்துவர்களை போல நாற்காலியில் அமர்ந்து கொண்டே பிரார்த்தனை செய்வார்கள். சஜிதாவெல்லாம் கிடையாது. 
  • ஆப்ரிக்க அமெரிக்க இனத்தவர் தான் உயர்ந்தவர். மற்ற இனத்தவர் இவர்களுக்கு கீழே தான். அதுவும், வெள்ளையர்களை "Devils" என்று அழைத்தவர்கள். 
  • மற்ற இனத்தவருடன் திருமண உறவு வைத்துக்கொள்ள கூடாது என்ற கொள்கையை கொண்டிருந்தவர்கள்.   

ஆக, நாம் மேலே பார்த்த அனைத்தும் இஸ்லாத்திற்கு முற்றிலும் எதிரான கொள்கைகள். சுருக்கமாக சொல்லப்போனால் தங்களுக்கு தகுந்தாற்போல வளைத்துக்கொண்டார்கள்.

அதே சமயம், இவர்களிடம் நல்ல விசயங்களும் பல இருந்தன. உதாரணத்துக்கு, இவர்களின் அமைப்பில் உறுப்பினராக சேர விரும்புபவர்கள்,

  • மது பழக்கம் இருந்தால் விட்டு விட வேண்டும். 
  • போதை மருந்துகளின் பக்கம் கூட போகக்கூடாது. 
  • சூதாட்டம் கூடாது. 
  • கொள்ளை கும்பல்களின் (Gang, Gangster) உறவு இருக்கக்கூடாது. 
  • மிக கண்ணியமான முறையில் உடையணிய வேண்டும். 

இவை மட்டுமல்லாமல், இவர்கள் பன்றி இறைச்சியை உண்ண மாட்டார்கள். குரான் தான் இவர்களுக்கு இறைவேதம்.

இந்த அமைப்பால் தங்களின் தவறான பழக்க வழக்கங்களை விட்டொழித்தவர்கள் பலர்.

அரசியல் ரீதியாக மாபெரும் எழுச்சியை 1950 களில் கண்டது இஸ்லாமிய தேசிய அமைப்பு. அது தான், உலகின் சிறந்த மனிதர்களில் ஒருவராய் கருதப்படும் மால்கம் எக்ஸ் (Malcolm X) அவர்கள் அந்த அமைப்பில் உறுப்பினராய் சேர்ந்த நேரம் (1952). மால்கம் எக்ஸ் ஒரு புத்துணர்ச்சியை அமைப்பிற்கு கொடுத்தார். இயக்கம் வேகமாக வளர ஆரம்பித்தது.

முஸ்லிம்களுக்கோ பெரும் வேதனையை கொடுத்தது இவர்களுடைய வளர்ச்சி. அமைப்பின் கொள்கைகள் இஸ்லாமிற்கு முரணானது என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இஸ்லாமிய தேசிய அமைப்பை சேர்ந்தவர்கள் முஸ்லிம்களே அல்ல என்று அறிவித்தனர். ஆனால் இதையெல்லாம் கேட்க கூடிய நிலையில் எலிஜா அவர்கள் இல்லை. 

எவ்வளவு நாள் தான் பொய்யான முகம் நிலைத்திருக்கும்?

எந்த மால்கம் எக்ஸ் அந்த அமைப்பு எழுச்சி பெற உதவியாய் இருந்தாரோ, அதே எக்ஸ், 1963 ஆம் ஆண்டு அந்த அமைப்பிலிருந்து வெளியேறி தூய இஸ்லாமின்பால் வந்து மாபெரும் அதிர்ச்சியை அவர்களுக்கு தந்தார். 

மால்கம் எக்ஸ் அவர்களின் வாழ்க்கையை புரட்டி போட்டது அவர் சென்ற ஹஜ் யாத்திரை தான்.

அங்கு பலதரப்பட்ட மக்களும் ஒன்றாக, நிற பேதம் பார்க்காமல் சகோதரர்களாய் பழகியது அவருக்குள் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட வித்திட்டது. ஹஜ் பயணத்திற்கு பிறகு, வெள்ளையர்கள் மீதான அவருடைய எண்ணம் மாறியது. எல்லோரும் ஒன்றே என்ற எண்ணம் பிறந்தது. இது போன்ற எண்ணங்கள் இஸ்லாமிய தேசிய அமைப்பின் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறானது. வெள்ளையர்களை தாழ்ந்தவர்களாகவே பார்த்து பழக்கப்பட்டவர்கள் அவர்கள்.

மால்கம் எக்ஸ், இஸ்லாமிய தேசிய அமைப்பின் நடவடிக்கைகள் இஸ்லாமிற்கு புறம்பானவை என்று கூறினார். ஆனால் கறுப்பினத்தவர் மீதான அடக்குமுறைகளுக்கு தொடர்ந்து பாடுபடுவேன் என்று அறிவித்தார்.

அவருடைய விலகல் அந்த அமைப்புக்கு பலத்த அடியாக அமைந்தது. 

அதே போல, அமெரிக்காவின் பிரபல குத்துச்சண்டை வீரரான முஹம்மது அலி, நம் தலைமுறையின் மிகச் சிறந்த இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரான இமாம் சிராஜ் வஹாஜ் என்று எண்ணற்றவர்கள் தொடர்ந்து வெளியேறி சத்தியமார்க்கத்தின்பால் தங்களை இணைத்துக்கொண்டனர்.

இப்படி பல பேர் அமைப்பை விட்டு வெளியேறுவதற்கு பின்னணியில் இருந்தவர், இன்று முஸ்லிம் அமெரிக்கர்களால் பெரிதும் மதிக்கப்படும் நபர்களில் முக்கியமானவர். அவர் செய்த காரியம் நிச்சயம் புரட்சிகரமானது. 

இஸ்லாமிய தேசிய அமைப்பின் 45 ஆண்டு கால வாழ்வை, 1975 ஆம் ஆண்டு முடித்து வைத்தவர் அவர். இஸ்லாமிய தேசிய அமைப்பை கலைத்து அதை இஸ்லாமுடன் ஐக்கியப்படுத்தியவர் அவர்.

அந்த நபர் வேறு யாருமல்ல...நபி என்று சொல்லப்பட்ட எலிஜா முஹம்மது அவர்களின் மகனான வாரித் தீன் முஹம்மது (Warith Deen Mohammed) தான் அவர். 

தன் தந்தையினுடைய செயல்பாடுகள், இஸ்லாமிற்கு எதிராக இருப்பதாக தொடர்ந்து போராடி வந்து, எலிஜா அவர்களின் மறைவுக்கு பிறகு அந்த அமைப்பை கலைத்தே விட்டார்.

சிறு வயதிலிருந்தே பர்த் முஹம்மது அவர்களின் தெய்வத்தன்மையை ஏற்றுக்கொள்ள மறுத்தவர் வாரித். அதன் காரணமாக சிலமுறை அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டார். அமெரிக்க இராணுவத்தில் பணியாற்ற மறுத்து தன் இருபத்தி எட்டாம் வயதில் சிறைக்குச் சென்றார்.

அந்த சிறைச்சாலை தான் அவருடைய வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

குரானை நன்கு ஆராய்ந்து தூய இஸ்லாமை அவர் அறிந்து கொண்டது அந்த பதினான்கு மாத சிறை வாழ்க்கையில் தான். சிறையை விட்டு வெளியே வந்த போது, இஸ்லாமிய தேசிய அமைப்பு தன் கொள்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும், இஸ்லாமின்பால் வர வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார். வெள்ளையர்களையும் சமமாக பார்க்க வேண்டுமென்று கூறினார்.

இவருடைய தாவாஹ் தான் மால்கம் எக்ஸ் அவர்களையும், இன்னும் பலரையும் அமைப்பிலிருந்து வெளியேற வைத்தது.

அவருடைய தந்தையின் மரணத்திற்கு பிறகு, அதாவது, 1975 ஆம் ஆண்டு அமைப்பின் தலைவராக பொறுப்பேற்றார். அழகிய முறையில் இஸ்லாத்தை பற்றி எடுத்துக் கூறி அமைப்பின் உறுப்பினர்களை இஸ்லாத்தின்பால் கொண்டு வந்தார். இஸ்லாமிய தேசிய அமைப்பு (Nation of Islam), முஸ்லிம் அமெரிக்கர்கள் சங்கம் (American Society of Muslims) என்று பெயர் மாறி சத்தியமார்க்கத்தின்பால் வந்தது.

ஆக, முஸ்லிம் அமெரிக்கர்களை பொறுத்தவரை வாரித் தீன் முஹம்மது அவர்கள், ஒரு மிகச் சிறந்த தலைவராக பார்க்கப்படுகிறார். இஸ்லாமிய நாடுகள் பலவற்றால் கவுரவிக்கபட்டவர். 2008ல், இவரது மறைவுக்கு பிறகு, அமெரிக்காவின் முக்கிய இஸ்லாமிய அமைப்பான CAIR (Council on American-Islamic relations) இவரை, "அமெரிக்காவின் இமாம்" என்று அழைத்து இவருக்கு பெருமை சேர்த்தது.

வாரித் தீன் அவர்கள், சுமார் 25 லட்சம் மக்களை தூய இஸ்லாமின்பால் கொண்டு வந்ததாக ஒரு ஆய்வு சொல்லுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமிய தேசிய அமைப்பை சார்ந்தவர்கள் ஆவர்.  

1970 களின் பிற்பகுதியில் Nation of Islam கலைக்கப்பட்டாலும் பிரச்சனை முழுவதுமாக முடிந்து விடவில்லை. வாரித் தீன் அவர்களின் முடிவை ஏற்றுக்கொள்ளாத சிலர், 1981 ஆம் ஆண்டு மறுபடியும் இஸ்லாமிய தேசிய அமைப்பை நிறுவினர். லூயிஸ் பராகான் (Louis Farrakhan) அதனுடைய தலைவராக பொறுப்பேற்றார்.

அன்றிலிருந்து இன்றுவரை அந்த அமைப்பு வீரியம் குறைந்த அமைப்பாகவே செயல்பட்டு வருகிறது. முன்பு போல அதற்கு முக்கியத்துவம் இருப்பதில்லை. அதுமட்டுமல்லாமல், இந்த அமைப்பினரை குறி வைத்து நடத்தப்படும் தாவாஹ் பணிகள் இந்த அமைப்பில் சேருபவர்களை எளிதில் இஸ்லாத்தின்பால் கொண்டு வந்துவிடுகின்றன.       

இதையெல்லாம் விட மேலாக, இஸ்லாமிய தேசிய அமைப்பும் சிறுக சிறுக இஸ்லாத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

தங்களுடைய பல தவறான கொள்கைகளை ஒவ்வொன்றாக களைந்து விட்டு இஸ்லாத்தின்பால் வந்து கொண்டிருக்கின்றனர்.    

2000 ஆம் ஆண்டு, அமைப்பின் தலைவரான பராகான் அவர்கள் "வணக்கத்துக்குரியவன் அல்லாஹ் ஒருவனே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவனின் இறுதி தூதர்" என்று அறிவித்து வியப்பை ஏற்படுத்தினார்.   

இப்பொழுதெல்லாம் இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் தொழ, நோன்பு நோற்க ஆரம்பித்திருக்கிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்.     

"...சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்தே போகும்..."  - குர்ஆன் 17:81  

அமெரிக்காவின் இஸ்லாமிய அறிஞர்கள் தொடர்ச்சியாக லூயிஸ் பராகான் அவர்களை சந்தித்து தான் வருகின்றனர். தாவாஹ் பணியை செய்து கொண்டுதான் இருக்கின்றனர். 

இன்ஷா அல்லாஹ், கூடிய விரைவில் இறைவன் இந்த அமைப்பினரை முழுவதுமாக இஸ்லாத்தின்பால் கொண்டுவர வேண்டுமென்று துவாச்செய்வோம்.

அதுபோல, யாரெல்லாம் தூய இஸ்லாத்தை விட்டு வெளியே இருக்கிறார்களோ, அவர்களையெல்லாம் இஸ்லாத்தின்பால் கூடிய விரைவில் இறைவன் கொண்டு வருவானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...


References:
1. Brief history on the origin of Nation of Islam - noi.org
2. Nation of Islam in the Balance of islam - Islam online.
3. Nation of Islam FAQs - beleivenet.com
4. Differences between Islam and Nation of Islam - differencebetween.com
5. Malcolm X - malcolmx.com
6. Muhammed Ali - ali.com
7. Warith Deen Muhammed, Elijah Muhammed, Malcolm X, Siraj Wahhaj, Muhammed Ali - wikipedia. 


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ.  
     

Fri 04

Click here to bookmark this link.Channel Image13:29 இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 26 வஹ்ஹாபி
அதற்குப் பின்னரும் ஸூஃபிஸம் உயிரோடுதான் இருந்தது. அதற்குப் புத்துயிர் ஊட்டியவர்களுள் குறிப்பிடத் தக்கவர் ஹிஜ்ரீ 450முதல் 505வரை ஈரானில் வாழ்ந்திருந்த கஸ்ஸாலீ ஆவார். அவருக்கும் பின்னர் ஹிஜ்ரீ 560இல் வருகிறார் இப்னு அரபி எனும் ஸூஃபி. இந்த இப்னு அரபிதான், தன் காலத்துக்கு முன் இருந்த ஸூஃபிக் கோட்பாடுகளை எல்லாம் நெறிப்படுத்தி, அதை ஒரு பேரியக்கமாகக் கட்டியெழுப்பினார். 'வஹ்தத்துல் உஜூது' (இயல்வன யாவும் இறையுருவே) எனும் நாமகரணமும் இவரால்தான் சூட்டப்பட்டது.

இப்னு அரபியை ரஹ்மத்துல்லாஹி அலைஹி என்றெல்லாம் ஸூஃபிக் கட்சியினரால் ஆஹா, ஓகோ எனப் பாராட்டப்படும். இவர் எந்த அளவுக்கு வழிகேட்டில் ஊறித் திளைத்தார் என்பதை அவருடைய கவிதைகளைப் படித்த மாத்திரத்தில் நாம் புரிந்து கொள்ளலாம்.

இபுனு அரபி பாடுகிறார்:
வெவ்வேறு படிமங்களுக்கு என் இதயம் திறந்தே கிடக்கிறது.
இது கிறித்துவ சந்நியாசிகளின் துறவுமடம்;
சிலைகள் கொலுவிருக்கும் கோயில்;
அரபு நாட்டு மான்களின் மேய்ச்சல் வெளி;
ஹஜ் பயணிகளுக்கு இது கஃபாப் பள்ளி;
தவ்ராத்தின் வரைபலகையும் இதுவே;
குர் ஆன் வேதமும் இதுவே;
நான் அன்பு எனும் மதத்தையே அனுஷ்டிக்கிறேன்.
அதன் பயணம் எத்திசையை நோக்கி அடியெடுத்தாலும் சரியே.
அன்பு எனும் மதமே என்னுடையது;
அதுவே என் நம்பிக்கை.
சமயங்களின் பெயரால் பிரிவினை பேசுவதை ஸூஃபிகள் வெறுத்தனர். எல்லாச் சமயங்களும் மூலநிலையில் ஒரே உண்மையைச் சொல்கின்றன என்பது ஸூஃபிகளின் நம்பிக்கையாகும். அந்த நம்பிக்கையின் வெளிப்பாடுதான் இப்னு அரபியிடம் இப்படிக் கவிதையாக உருவெடுக்கிறது.

இறைவன் மனிதனாக அவதரிக்கிறான் என்பதும் மனிதனில் இறைவனைக் காணலாம் என்பதும் இப்னு அரபியின் கோட்பாடாகும். இறைவன், தன்னை அறிந்து கொள்வதே மனிதன் வாயிலாகத்தான் என்கிறார் இப்னு அரபி:
அவன் என்னுடைய பரிபூரணத்தை வெளிப்படுத்தி
அவனுடைய சாயலில் என்னைப் படைத்து
என்னைப் புகழ்கிறான்.

நான் அவனுடைய பரிபூரணத்தை எடுத்தியம்பி
அவனுக்குக் கீழ்ப்படிந்து
அவனைப் புகழ்கிறேன்.

அவன் எப்படி என்னிலிருந்து விடுபட்டு
சுதந்திரமாக இருக்க முடியும்?

இதற்காகவேதான் நான் படைக்கப் பட்டிருக்கிறேன்.
நான் அவனை அறிகிறேன்;
அவனுடைய உள்ளமையைக் கொணர்கிறேன்.
இஸ்லாத்தில் மட்டுமில்லாமல் ஏனைய மதங்களிலும் தெய்வீக உண்மைகள் பொதிந்திருக்கின்றன; அவற்றை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது இப்னு அரபியின் கருத்தாகும்.

எல்லாப் பொருட்களும் இறைவனின் குடும்பத்தைச் சார்ந்தவையே
மனிதர்கள் உருவ வழிபாடு-தெய்வீக நிந்தனையால்
ஒருவரையொருவர் பழித்துக் கொள்கின்றனர்
காரணம், அவர்கள் வெளித்தோற்றத்தோடு நின்று விடுகின்றனர்
அவர்கள் தங்களிடம் குறைபாடுடைய
கோட்பாடுகளைக் கொண்டிருக்கின்றனர்
ஆனால், இறைவனுக்கு எல்லா வடிவமும் உண்டு;
மேலும் அவனுக்கு எந்த வடிவமும் இல்லை
அவன் வடிவத்துக்கு அப்பாற்பட்ட யதார்த்தம்
மனிதர்கள் மாறுபட்ட கடவுள் கொள்கைகளைப் பின்பற்றிக் கொண்டனர்
ஆனால், நானோ ஒரே நேரத்தில்
எல்லாவகையான கடவுள் கொள்கைகளையும் கொண்டிருக்கிறேன்.
வெவ்வேறு மதத்தினரையும் அன்பினால் தழுவிக் கொள்வதற்கேற்ற வகையில் சயமப் பொறுமையையும் அனுசரித்துப் போதலையும் கைக்கொள்ள வேண்டும் என்கிறார் இப்னு அரபி.

"ஒரே உண்மைப் பொருளின் ஒப்பற்ற ஜோதிதான் பள்ளிவாசலிலும் கிறித்துவ திருச்சபைகளிலும் கோவிலிலும் எரிகிறது" என்பது இப்னு அரபி போன்ற ஸூஃபிக் கவிஞர்களின் கருத்தாகும்.

இன்று வாழும் ஸூஃபிகள், இபுனு அரபியின் கோட்பாடுகளுக்குக் கட்டுப்பட்டவர்களேயாவர்.

எனவே, ஸூஃபிஸமாயிருந்தாலும் அத்துவைதமாக இருந்தாலும் அல்லது வேறெந்தத் தத்துவமாக இருந்தாலும் அவற்றை குர்ஆன்-ஹதீஸில் ஒப்பிட்டுப் பார்த்து, குர்ஆன்-ஹதீஸுக்கு முரண்படுபவற்றைத் தூக்கித் தூர எறிவோமாக!

குர்ஆன்-ஹதீஸை மட்டுமே பின்பற்றி, உண்மையான முஸ்லிம்களாக வாழ்ந்து முஸ்லிம்களாகவே மரணிப்போமாக!

இந்தக் கொள்கை உறுதியை மனத்தில் இருத்திக் கொண்டு, தமிழ்நாட்டு ஸூஃபிப் புலவர்களின் இலக்கியங்களைத் தொடர்ந்து ஆராய்வோம்.

- தொடரும், இன்ஷா அல்லாஹ்.

Thu 03

Click here to bookmark this link.Channel Image09:49 எல்லைக் கோட்டையும் தாண்டி விட்ட முன்னோர் பற்றும், விமர்சனமும் மனாருல் இஸ்லாம் - Manarul Islam
முன்னோர்கள் என்போர் யார்?

நமக்கு முன்னர் வாழ்ந்து மரணித்தவர்களை முன்னோர், மூதாதையர் என அழைக்கின்றோம். இஸ்லாமிய வழக்கில் நபிமார்கள், ஸஹாபாக்கள், தாபியீன்கள், நல்லடியார்கள், இமாம்கள், இஸ்லாமியத் தியாகிகள் போன்றோரை முன்னோர்களாக அடையாளப்படுத்த முடியும்.

இருவகை முன்னோர்கள்

இறை நம்பிக்கையாளர்களான முன்னோர்கள், இறை மறுப்பாளர்களான முன்னோர் என இரு பெரும் பிரவினராக நமக்கு முன்சென்றோரைப் பிரித்து நோக்க முடியும். இறை நம்பிக்கையாளர்களான முன்னோர் பற்றி அறிவது அவர்கள் விஷயத்தில் இஸ்லாம் கடைப்பிக்குமாறு . . . → தொடர்ச்சி.. எல்லைக் கோட்டையும் தாண்டி விட்ட முன்னோர் பற்றும், விமர்சனமும்

Mon 31

Click here to bookmark this link.Channel Image14:31 இஸ்லாமிய இல்லத்திற்கான வழிகாட்டல்கள் மனாருல் இஸ்லாம் - Manarul Islam
இஸ்லாமிய இல்லம்

அனைத்து புகழும் அல்லாஹ்வுக்கே உரித்தானது. அவனது அருளும், சாந்தியும் நமது தலைவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் வழி நடந்த, நடக்கின்ற அனைத்து முஸ்லிம்கள் மீதும் நிலையாக உண்டாகட்டுமாக! அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புனடையோனுமாகிய அல்லாஹ் மனிதனுக்கு வழங்கி அருட்பாக்கிங்களில் சிறந்த இருப்பிடமும் ஒன்றாகும். வீதியோரங்கள், பேரூந்து நிலையங்கள், கடைவீதிகள் என்றெல்லாம் மனிதர்கள் உறைவிடங்களையும், வதிவிடங்களையும் அமைத்து வாழ்ந்து வருகின்ற நேரத்தில் அழகிய வீட்டில் வாகனங்களின் தொந்தரவுகள், மனித . . . → தொடர்ச்சி.. இஸ்லாமிய இல்லத்திற்கான வழிகாட்டல்கள்

Sun 30

Click here to bookmark this link.Channel Image01:47 அரபிமொழியை அறிவதற்கான அடிப்படைகள் – 1 மனாருல் இஸ்லாம் - Manarul Islam

நுழைவாயில்:

புகழ் அனைத்தும் அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ் ஒருவனுக்கே சொந்;தானது. அவனது அருளும், சாந்தியும் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தவர், தோழர்கள், ஸஹாபா பெண்கள், இமாம்கள், மற்றும் முஸ்லிமான சகோதர, சகோதரிகள் அனைவர் மீதும் நிலையாக உண்டாகட்டுமாக!

மதிப்புக்குரிய சகோதரர்களே! அல்குர்ஆன் அரபிமொழியில் தேர்ச்சி பெற்றிருந்த இறுதி நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது அதேமொழியில் இறக்கப்பட்ட புனித வேதமாகும். அந்த . . . → தொடர்ச்சி.. அரபிமொழியை அறிவதற்கான அடிப்படைகள் – 1

Sat 29

Click here to bookmark this link.Channel Image08:33 ஷரீஆவின் சான்றுகளைக் கையாளும் முறை – 3 மனாருல் இஸ்லாம் - Manarul Islam

விதி: தனியான, அல்லது விசேசமான சட்டங்களைக் கொண்டுள்ள வசனங்கள், அல்லது நிகழ்வுகள் நீங்கலாக ஏனெயவைகளை அதன் பொதுவான கருத்தோட்டத்தைக் கொண்டு நோக்குதல்.

ஷரீஆத்துறை விதியாளர்கள் இதை العبرة بعموم اللفظ لا بخصوص السبب

‘படிப்பினை என்பது குறித்த வார்த்தையின் பொதுவான கருத்துக்களின் அடிப்படையில் பெறுவதாகும். குறித்த காரணத்தை அடிப்படையாக வைத்து அல்ல’ என்றும்,

மற்றும் சிலர் إبقاء اللفظ على عمومه ‘வார்த்தையை அதன் பொதுப்படையான கருத்தோட்டத்தில் நிலை நிறுத்துதல் ‘ என்றும் கூறுவார்கள்.

. . . → தொடர்ச்சி.. ஷரீஆவின் சான்றுகளைக் கையாளும் முறை – 3

Fri 28

Click here to bookmark this link.Channel Image14:12 Evolution St(he)ory > Harry Potter Stories - II எதிர்க்குரல்


This article has been updated at 18.30 hrs, 30th may 2010.
Few more information added at the end of this article.
இந்த பதிவின் இறுதியில் சில தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின். 

நீங்கள் அறிந்து கொண்டே உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள் --- குர்ஆன் 2:42

பரிணாமவியல் என்ற ஆதரமற்ற, அறிவியலுக்கு ஒத்துவராத, Hypothesis (Educated Guess) ஆக கூட இருக்க தகுதியில்லாத ஒரு கொள்கை எப்படி லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்க காரணமாய் இருந்தது என்று சென்ற பதிவுகளில் பார்த்தோம். 

இன்ஷா அல்லாஹ், இந்த பதிவிலிருந்து, பரிணாமம் என்ற கோட்டை எத்தகைய கற்பனைகளால் கட்டப்பட்டது என்று பார்ப்போம். 

பதிவிற்கு செல்லும் முன் ஒரு சிறு விளக்கம். பரிணாமம் என்பது ஒரு பொதுவான சொல் (Evolution in a broader sense means a merely change).  அது பலவற்றையும் குறிக்கும், eg. galaxies, languages, and political systems etc. ஆனால் பரிணாமம் என்றாலே நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது உயிரியல் பரிணாமம் (Biological Evolution) தான். அதாவது, இவ்வுலகில் உயிரினங்கள் எப்படி வந்திருக்கும் என்று விளக்க முயற்சிக்கும் உயிரியல் பரிணாமம் தான். 

இப்போது பதிவிற்கு செல்வோம்....


உயிரியல் பரிணாமம் என்றால் என்ன? 

ஒரு நிமிஷம்.....பதில் சொல்லுவதற்காக இந்த கேள்வியை கேட்கவில்லை. உண்மையிலேயே பரிணாமம் என்றால் என்னவென்று உங்களிடம் தான் கேட்கிறேன். 

What is the definition of Evolution? or Define Evolution?  

பரிணாமவியலின் உள்ளே சென்று பார்த்தால் தான் குளறுபடிகள் என்றால், பரிணாமம் என்ற தலைப்பை விளக்குவதிலேயே பல குளறுபடிகள்.   

"படிப்படியாக" உயிரினங்கள் மாறியிருக்கும் என்று சொல்லுவார்களே, அவையெல்லாம் பரிணாமத்தின் விளக்கம் இல்லையாம். என்ன குழப்பமாக இருக்கிறதா?. பரிணாமவியல் என்றாலே குழப்பங்களின் கூடாரம் தானே!  இந்த பதிவில் மற்றொரு குழப்பத்திற்கும் உங்களை தயார் படுத்திக்கொள்ளுங்கள்.  

விஷயத்திற்கு வருவோம். ஏன் அந்த விளக்கம் தவறு?   

1. பரிணாமத்தின் மிகப் பெரிய ஆதரவாளரான Talk Origins தளத்தின் படி, "பரிணாமம் என்றால் என்ன"வென்று ஆக்ஸ்போர்ட் அறிவியல் அகராதி (Oxford Concise Science Dictionary) சொல்லுகிறதென்றால்,   

"evolution: The gradual process by which the present diversity of plant and animal life arose from the earliest and most primitive organisms, which is believed to have been continuing for the past 3000 million years" - Oxford Concise Science Dictionary.   
"பரிணாமம்: தற்காலத்திய, பல்வேறு வகைப்பட்ட தாவர வகைகளும், மிருகங்களும் எப்படி மிகப் பழங்கால உயிரினங்களிருந்து படிப்படியாக வந்திருக்கும் என்று கூறுவது பரிணாமம். இது கடந்த முப்பதாயிரம் லட்சம் ஆண்டுகளாக தொடர்வதாக நம்பப்படுகிறது" - Oxford Concise Science Dictionary

இந்த விளக்கம் சரியா? தவறா? 

உங்களில் பலர், ஆக்ஸ்போர்ட் அறிவியல் அகராதி சரியாகத் தானே கூறுகிறது என்று நினைக்கலாம். அங்குதான் பிரச்சனையே...

Talk Origins தளம் என்ன தெரியுமா கூறுகிறது? ஒரு அறிவியல் அகராதி இப்படி விளக்கியிருப்பது  மன்னிக்க முடியாததாம்.  

"This is inexcusable for a dictionary of science" - Talk Origins

அதாவது, பரிணாமவியலை பலமாக ஆதரிக்கும் இந்த தளத்தை பொறுத்தவரை, அந்த விளக்கம் தவறானது. அவர்களைப் பொறுத்தவரை இந்த விளக்கம் பரிணாமத்தின் வரலாற்றை தான் பேசுகிறதாம், பரிணாமம் என்றால் என்னவென்று விளக்கவில்லையாம். அதுமட்டுமல்லாமல் "படிப்படியாக" என்ற வார்த்தை பரிணாமத்தை விளக்க வரக்கூடாதாம். 

"...it specifically includes a term "gradual process" which should not be part of the definition. More importantly the definition seems to refer more to the history of evolution than to evolution itself" - Talk Origins

இப்போது நம்மிடத்தில் எழும் சில கேள்விகள், 
  • ஒரு அறிவியல் அகராதியே இப்படி தவறாக எழுதியிருப்பது எதனால்? 
  • இதை எழுதுவதற்கு முன் அவர்கள் பரிணாமவியலாளர்களிடம் கருத்து கேட்கவில்லையா? 
  • அவர்களுக்கு பரிணாமம் என்றால் என்னவென்று புரியவில்லையா? அல்லது விளக்கத் தெரியவில்லையா?  
  • இப்படி தவறான ஒரு தகவலை தந்து மக்களை ஏமாற்றுகிறதா ஆக்ஸ்போர்ட் அகராதி? 
  • இல்லை, Talk Origins தளம் தவறா?   


தயவு கூர்ந்து துறைச்சார்ந்த சகோதரர்கள் பதிலளியுங்கள். 

Talk Origins தளம் இத்தோடு நின்று விடவில்லை. மற்ற பிரபல அகராதிகளான Webster's மற்றும் Chambersசும் தவறாம். இவைகளின் விளக்கம் ஆக்ஸ்போர்ட் அறிவியல் அகராதியை விட மோசமாம். 

"evolution: ...the doctrine according to which higher forms of life have gradually arisen out of lower.." - Chambers
"evolution: ...the development of a species, organism, or organ from its original or primitive state to its present or specialized state; phylogeny or ontogeny" - Webster's    

நான், எங்கள் நகர பொது நூலகத்தில் உள்ள Academic American Encyclopedia வில் இது குறித்து  பார்த்தது பின்வருகிறது. இதனுடைய விளக்கமும் ஆக்ஸ்போர்ட் அகராதியை போலத்தான் இருக்கிறது.   

"Evolution is the process by which all living things have developed from primitive organisms through changes occurring over billions of years, a progression that includes the most advanced animals and plants" - Academic American Encyclopedia, Vol-7, p-318. 

இப்போது நம்முள் எழும் சில கேள்விகள், 
  • எப்படி இத்தனை பிரபல அகராதிகள் மற்றும் கலைக்களஞ்சியங்கள் (Encyclopedia) தவறான விளக்கத்தை தந்திருக்கின்றன? 
  • ஒருவேளை, Talk Origins தளத்தினுடைய வாதம் தான் தவறா? 


அதெல்லாம் சரி, இவையெல்லாம் தவறான விளக்கமென்றால் சரியான விளக்கம் தான் என்ன? 

இதற்கு talk origins தளம் என்ன பதில் சொல்லுகிறது?



2. பிரபல பரிணாமவியலாரான Douglas J.Futuyma அவர்கள் கூறிய ஒரு விளக்கத்தை கூறுகிறது இந்த தளம். அது என்ன விளக்கம்? 

"Biological evolution ... is change in the properties of populations of organisms that transcend the lifetime of a single individual. The ontogeny of an individual is not considered evolution; individual organisms do not evolve. The changes in populations that are considered evolutionary are those that are inheritable via the genetic material from one generation to the next. Biological evolution may be slight or substantial; it embraces everything from slight changes in the proportion of different alleles within a population (such as those determining blood types) to the successive alterations that led from the earliest protoorganism to snails, bees, giraffes, and dandelions." - Douglas J. Futuyma in Evolutionary Biology, Sinauer Associates 1986. 

மேலே உள்ளதை சுருக்கமாக விவரிக்க வேண்டுமென்றால், 

"Evolution is a process that results in heritable changes in a population spread over many generations" - Talk Origins website.
"பல தலைமுறைகளுக்கு மக்கள் தொகையில் ஏற்படும் பரம்பரை மாற்றங்களின் விளைவுகளே பரிணாமம்" - Talk Origins website   
(மொழிபெயர்த்துள்ள இந்த வாக்கியம் சரியா?, தவறென்றால் சரியான மொழிபெயர்ப்பை தரவும். திருத்திக் கொள்ளப்படும்)

நாம் மேலே பார்த்த யாவையும் talk origins தளத்தில் எழுதியது Lawrence A. Moran அவர்கள். அவருடைய இந்த பதிவு நீட்டிக்க பட்ட போது (V2.15, 2006) அதில், Douglas J. Futuyma அவர்களின் குழு, 1997 ல் பரிணாமம் குறித்து கூறிய விளக்கம் தவறென்கிறார் அவர். 

அதாவது 1986ல் Douglas J. Futuyma அவர்கள் கூறிய விளக்கம் சரி, ஆனால் 1997 ல் அவர் தலைமையில் இருந்த குழு கூறிய விளக்கம் தவறு. 

சற்று விளக்கமாக சொல்லுவதென்றால், 1997ல் பரிணாமம் குறித்த ஒரு அறிக்கை அளிப்பதற்காக Douglas J. Futuyma அவர்களின் தலைமையில் இருபது அறிவியலாளர்கள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு இறுதியாக சமர்ப்பித்த அறிக்கையில், "பரிணாமம் என்றால் என்ன" என்ற கேள்விக்கு விளக்கமாக பின்வரும் பதில் வருகிறது, 

"Biological evolution consists of change in the hereditary characteristics of groups of organisms over the course of generations. From long-term perspective, evolution is the descent with modification of different lineages from common ancestors. From a short-term perspective, evolution is the ongoing adaptation of organisms to environmental challenges and changes." - Final Draft, a group of twenty scientists chaired by Douglas J. Futuyma issued a working draft of a "white paper" on Evolution, Science, and Society, 1997. 

இந்த விளக்கத்தை பற்றி கருத்து தெரிவிக்கும் Lawrence A. Moran அவர்கள், இந்த விளக்கத்தின் ஒரு பகுதி துருதிஷ்டவசமானது என்று கூறுகிறார். அதுமட்டுமல்லாமல்,  Douglas J. Futuyma அவர்களின் குழு பரிணாமம் குறித்து அளித்த விளக்கம் தவறு என்கிறார் அவர். 

"This last sentence is really unfortunate. These twenty scientists have now agreed to a definition that specifically mentions the mechanism of adaptation. This is not how one should define evolution. One wonders whether they mean to exclude random genetic drift or whether they simply lost sight of their goal in trying to work out a compromise definition" -  Lawrence A. Moran

ஆக, 1986ல் Douglas J. Futuyma அவர்கள் பரிணாமம் குறித்து கூறிய விளக்கம் சரி, ஆனால் 1997ல் அவர் சார்ந்த குழு கூறிய விளக்கம் தவறு. 

இது என்ன குழப்பம்? 

இப்போது நாம் கேட்க நினைக்கும் கேள்விகள்,

  •  Douglas J. Futuyma போன்ற பெரிதும் மதிக்கத்தக்க ஒரு பரிணாமவியலாளர் ஏன் இருவேறு விளக்கங்களை தர வேண்டும்?  
  • இந்த இரு விளக்கங்களில் எது சரி? எது தவறு? 

ஆக மொத்தத்தில் "பரிணாமம் என்றால் என்ன" என்ற கேள்வி அப்படியே இருக்கிறது. தலைப்பிலேயே இவ்வளவு குழப்பங்களா? 

இத்தனை வருடங்களாக "(உயிரியல்) பரிணாமம்" என்ற சொல்லுக்கு சரியான விளக்கம் இல்லாமல் இருப்பது நன்றாகவா இருக்கிறது? 

அதனால், துறைச்சார்ந்த சகோதரர்கள் இதை படிக்க நேர்ந்தால் பரிணாமத்திற்கு தெளிவான "Definition" யை ஆதாரங்களுடன் தாருங்கள். 


ஆனால் இதிலும் ஒரு பிரச்சனையுள்ளது. என்னவென்றால், அறிவியலாளர்களுக்குள்ளாகவே இது குறித்து குழப்பங்களாம்.
"confusion among scientists themselves about how to define such an important term" - Talk Origins
"முக்கியமான இந்த சொல்லை விளக்குவதில் அறிவியலாளர்களுக்குள்ளாகவே குழப்பங்கள் இருக்கின்றன" - Talk Origins   

அடடா, என்னவொரு தெளிவாக, ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார்கள். அவர்களுக்குள்ளாகவே குழப்பங்களாம்....
  •  பரிணாமம் என்ற conecpt க்கு உண்டான definition னிலேயே இவ்வளவு பிரச்சனைகளா? 
  • ஏன் சரியாக விளக்க முடியவில்லை? 
  • அவர்களுக்கே புரியவில்லையா? 

புரியாத புதிர்தான்...


ஒரு நிமிஷம், நீங்கள் விடைபெறுவதற்கு முன் ஒரு சிறு கேள்வி. தற்போதைய ஆக்ஸ்போர்ட் விலங்கியல் அகராதி (Oxford Dictionary of Zoology, Indian Edition, 2008 sixth impression, p-198) இது குறித்து என்ன தெரியுமா கூறுகிறது?..................


இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக...ஆமின்.   

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன். 


My Sincere thanks to: 
1. Talk Origins website
2. Br. Lawrence A.Moran. 

Source of Information: 
1. http://www.talkorigins.org/faqs/evolution-definition.html
2. http://bioinfo.med.utoronto.ca/Evolution_by_Accident/What_Is_Evolution.html

References: 
1. What is Evolution - Talk Origins
2. Evolution - Academic American Encyclopedia, Vol-7, p-318.
3. Evolution - Oxford Dictionary of Zoology, Indian Edition, 2008 sixth impression, p-198


உங்கள் சகோதரன், 
ஆஷிக் அஹ்மத் அ    

Thu 27

Click here to bookmark this link.Channel Image23:24 சுபஹ் குனூத் – 1 மனாருல் இஸ்லாம் - Manarul Islam

புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானது. அவனது அருளும், கருணையும் சாந்தியும் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தவர், தோழர், இமாம்கள், மற்றும் இறை விசுவாசத்தோடு உலகைப்பிரிந்து மண்ணறைகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற முஸ்லிமான சகோதர, சகோதரிகள் அனைவர் மீதும் நிலையாக உண்டாகட்டுமாக!

மதிப்புக்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே! முஸ்லிம்கள் மத்தியில் மார்க்க அம்சங்கள் பலதில் பல முரண்பாடுகள் தோன்றியும், அதற்கான சரியான தீர்வை அத்துறை சார்ந்த . . . → தொடர்ச்சி.. சுபஹ் குனூத் – 1

Click here to bookmark this link.Channel Image02:58 அஸ்ஹாபுஸ் ஸுஃப்ஃபா அல்பாக்கவி.காம்
அஸ்ஹாபுஸ்ஸுஃப்ஃபா மஸ்ஜிதுந்நபவீயின் வடக்குப்பகுதியில் ஒரு திணணை இருந்தது.அதன் மீது ஈச்சந்தட்டியால் ஒரு பந்தல் போடப்பட்டி ருந்தது.அதில் ஏழை அகதிகள் தங்கி வாழ்ந்து வந்தார்கள். அவர்களின் எண்ணிக்கை 10,30,70,92,93,400 என்று பலவிதமாகக் கூறப்படுகிறது. அஸ்ஹாபுஸ்ஸுஃப்ஃபாவில் 70 பேர்களை ப் பார்த்ததாக ஆபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி) இவர்களல்லாத 70 பேர்கள் பீர் மவூனாவுக்குப் பிரச்சாரத்திற்காக அனுப்பப்பட்டார்கள். இவர்கள் பின்னர் அங்கே படு கொலை செய்யப்பட்டார்கள். இவர்கள் “திண்ணைத் தோழர்கள்” என்ற பொருளில் “அஸ்ஹாபுஸ் ஸுஃப்ஃபாஹ்” என அழைக்கப்படுகின்றனர்.இவர்கள் [...]

Tue 25

Click here to bookmark this link.Channel Image15:16 Agnosticism To இஸ்லாம்... எதிர்க்குரல்



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.  


"ATHEISM (நாத்திகம்)" கேள்விப்பட்டிருக்கிறோம், அது என்ன "Agnosticism"?

உங்களில் சிலருக்கு இந்த கேள்வி எழுந்திருக்கலாம். அதனால், முதலில் "Agnosticism" என்றால் என்னவென்று பார்த்துவிட்டு பிறகு பதிவுக்கு செல்வோம். இன்ஷா அல்லாஹ். 

நாத்திகத்தை பின்பற்றுபவர் நாத்திகர் என்றால், "Agnosticism"தை பின்பற்றுபவர் "Agnostic (அக்னாஸ்டிக்)". 

(குறிப்பு: அக்னாஸ்டிக் என்பதற்கு சரியான தமிழ் பதம் தெரியாததால் அப்படியே பயன்படுத்தபடுகின்றது. அறிந்தவர்கள் தெரிவிக்கவும்) 

இவர்களும் நாத்திகர்களைப் போல கடவுளைப் பற்றி பேசும் மதங்களை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஆனால், நாத்திகர்களைப் போல கடவுள் இல்லையென்று ஆணித்தரமாக மறுக்க மாட்டார்கள். கடவுள் இருந்தாலும் இருக்கலாம் என்பது இவர்களது கொள்கை. 

சுருக்கமாக சொல்லப்போனால், இவர்கள் கடவுள் மறுப்பாளர்கள் கிடையாது, கடவுளைப் பற்றிய சந்தேகத்தில் இருப்பவர்கள். 

Agnostic - One who is skeptical about the existence of God but does not profess true atheism      

ஏன் அக்னாஸ்டிக் பற்றி பேசுகிறோம்? 

ஏனென்றால், இந்த பதிவில் நாம் பார்க்கப் போவது அப்படியிருந்த ஒரு நபரைப் பற்றி தான். அவர் அக்னாஸ்டிக்காக இருந்து இஸ்லாத்திற்கு வந்தவர். 

சகோதரர் ஹம்சா அன்ட்ரியஸ் ஜார்ஜிஸ் (Hamza Andreas Tzortzis) இங்கிலாந்தை சேர்ந்தவர். 2002 ஆம் ஆண்டு இஸ்லாமை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட இவர், பிரிட்டனின் புகழ் பெற்ற தாவாஹ் அமைப்பான இஸ்லாமிய கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் (Islamic Education and Research Academy, IERA) முக்கிய உறுப்பினர். 



பிரபல நாத்திகர்களுடன் தொடர்ந்து நேரடி விவாதத்தில் பங்கேற்றுவரும் இவரைப் பற்றி நாம் ஏற்கனவே முந்தைய பதிவுகளில் சிறிது பார்த்திருக்கின்றோம் (பார்க்க எழுத்து விவாதங்களில் பங்கேற்கும் முஸ்லிம்கள் கவனத்திற்கு). 

இன்ஷா அல்லாஹ் இந்த பதிவில் அவர் இஸ்லாத்திற்கு வந்த விதம் குறித்து One Legacy வானொலிக்கு அளித்த பேட்டி உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது.                  


"என்னுடைய தந்தை கிரீஸ் நாட்டைச் சேர்ந்தவர், என் தாய் சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்தவர். என் பெற்றோர்கள் எந்தவொரு மதத்தின் மீதும் ஆர்வம் காட்டியதில்லை. நான் சிறுவனாக இருந்தபோது என் தந்தை கூறியது இன்னும் நினைவிருக்கின்றது, 

"கடவுள் உனக்குள்ளேயே இருக்கின்றார்"

என் தந்தையின் அறிவுரைகள் பெரிதும் உதவின. சிறு வயதிலிருந்தே எதையும் கேள்வி கேட்டு, ஆராய்ந்து பார்த்து தான் ஏற்றுக்கொள்ள முயற்சிப்பேன். புது விஷயங்களை படிப்பதிலும் ஆர்வம் அதிகம். பல மொழிகளை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டியிருக்கிறேன். இஸ்லாம், பௌத்தம் என்று பல மதங்களை மேலோட்டமாக அறிந்து வைத்திருந்தேன். 

இவ்வுலகம், நாம் இங்கிருப்பதற்க்கான காரணங்கள் என்று இவற்றை தேடுவதில் தனி விருப்பம்.  
      
எனக்கு புத்த மதத்தின் மீது ஒருவித ஈர்ப்பிருந்தது. அதற்கு காரணம், அது அக்னாஸ்டிக் வகையான மதம் என்பதால் தான். உதாரணத்துக்கு, புத்தரிடம் ஒருவர் கேட்டாராம், 

"கடவுள் இருக்கிறாரா?" 

அதற்கு புத்தர் சொன்னாராம், 

"இருந்தாலும் பிரச்சனையில்லை (It does not matter if he exists)" என்று, “இப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள் என்பதுதான் முக்கியம்" 

இது போன்றவற்றால் புத்த மதம் என்னை பெரிதும் வசீகரித்தது.

எனக்கு இஸ்லாம் நன்கு அறிமுகமானது பள்ளி காலங்களில் தான். என்னுடன் படிக்கும் முஸ்லிம் நண்பர்களிடம் பல கேள்விகளை கேட்பேன். 

"ஏன் இப்படி உடையணிகின்றீர்கள், ஏன் ஐவேளை தொழுகின்றீர்கள், ஏன் மற்றவர்களை சகோதரரென்று அழைக்கின்றீர்கள்" என்று பல கேள்விகள்.  

அவர்கள் எளிமையாக பதிலளித்துவிடுவார்கள், "இஸ்லாம் சொல்கிறது, செய்கிறோம்", அவ்வளவுதான் அவர்களது பதில். 

சில சமயங்களில் அவர்கள் இஸ்லாம் சொல்லாத செயல்களை செய்தால், "இது இஸ்லாமிய வழியில்லையே" என்று எடுத்துக் கூறுவேன். என்னுடைய இந்த அறிவுரைகள் அவர்களுக்கு வியப்பைத் தரும். 

எனக்கு இஸ்லாத்தின் மேல் எந்தவொரு ஈடுபாடும் கிடையாது, “உங்கள் மதம் பற்றி எனக்கும் தெரியும்” என்று காட்டிக்கொள்ளவே இதெல்லாம். 


பல்கலைகழகத்தில் உளவியல் பாடத்தில் சேர்ந்தேன். தனிப்பட்ட காரணங்களுக்காக ஒரு வருடம் விடுப்பு எடுத்துக்கொண்டு, காவல்துறையின் தொழில்நுட்ப பிரிவில் (Police IT Department) வேலைக்கு சேர்ந்தேன். இது பிரிட்டன் வெளியுறவுத் துறையின் கீழ் வருகின்றது. ஐரோப்பிய அலுவலக கலாச்சாரங்கள் அறிமுகமாயின. 

அது ஒரு கிறிஸ்துமஸ் சமயம். பார்ட்டிகள் களைகட்ட ஆரம்பித்திருந்தன. என் அலுவலகத்திலும் அது போன்ற ஒரு கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். வெளியிலிருந்தும் பலரை அழைத்திருந்தார்கள். 

எனக்கு நடனமெல்லாம் வராது. ஒரு இடத்தில் அமர்ந்து நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தேன். மது, ஆட்டம், பாட்டம்.           

அப்போது ஒரு பெண் என் அருகில் வந்தார். அவரது பெயரைக் கேட்டேன். சொன்னார். எனக்கோ ஆச்சர்யம். அது இஸ்லாமிய பெயராக தெரிந்தது. நான் மறுபடியும் அவரிடம் கேட்டேன். 

"நீங்கள் முஸ்லிமா?" 

"ஆம், முஸ்லிம்தான்" 

அதை கேட்டவுடன் எனக்கு மிகுந்த அதிர்ச்சி. 

என்ன? பார்ட்டிகளில் ஒரு முஸ்லிமா? 

"நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள் இங்கே? ஒரு முஸ்லிம் இங்கெல்லாம் வரக்கூடாதே?

நான் அப்படி கேட்டதும் அவரது முகம் சோர்ந்து விட்டது. அவரது கையில் இருந்த மதுவை வாங்கி அதற்கு பதிலாக ஆரஞ்சு பழச்சாறை ஊற்றி கொடுத்தேன். முஸ்லிம்கள் தான் மது அருந்தக் கூடாதே. என்னுடைய செயல் அவரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. 

"என்ன செய்கின்றீர்கள் நீங்கள்? என்னுடைய மார்க்கத்தை எனக்கே சொல்லிக் கொடுத்து கொண்டிருக்கின்றீர்கள், அதுவும் இந்த சூழ்நிலையில்..." 

என்னுடைய செயல் அவரை மிகவும் கவர்ந்து விட்டது. 

இருவரும் உரையாடத் துவங்கினோம். கலாச்சாரங்கள், இஸ்லாம் என்று பலவற்றையும் பேசினோம். நிச்சயமாக இது போன்ற பேச்சுக்களுக்கு அது சரியான இடமல்ல. எங்களை சுற்றி மது, ஆட்டம், பாட்டம் தான். நீங்களே யூகித்து கொள்ளுங்கள் அந்த சூழ்நிலையை.   

அதற்கு பிறகு பல மாதங்கள் கடந்தன, அவரைப் பற்றி ஒரு தகவலும் இல்லை. ஒருநாள் என் அலுவலகத்தின் மனிதவளத்துறையிலிருந்து அழைப்பு. 

"மிஸ்டர் ஜார்ஜியஸ், ஒரு பெண்மணியிடமிருந்து உங்களுக்கு அழைப்பு" 

யாரது? அலுவலக தொலைப்பேசியில் அழைப்பது?

தொலைப்பேசியை வாங்கினேன். அந்த பெண் தான். எங்களின் பழைய சந்திப்பின் போதே கைப்பேசி எண்களை பரிமாறிக்கொண்டோம். ஆனால் அவர் அதை தொலைத்திருக்கின்றார். இப்போது என் அலுவலக எண்ணை எப்படியோ கண்டுபிடித்து அழைத்து விட்டார்.

மறுபடியும் எண்களை பகிர்ந்துக் கொண்டோம். இந்த முறை எங்கள் நட்பு மேலும் வளர்ந்தது. அருங்காட்சியகம், சினிமா, பார்ட்டிகள் என்று ஒன்றாக செல்ல ஆரம்பித்தோம். ஐரோப்பிய கலாச்சாரத்தை நினைத்துக் கொள்ளுங்கள். 

ஆனால் நான் அவருடன் இருந்த நாட்களில் இஸ்லாமைப்பற்றி அதிகம் பேசியிருக்கின்றேன். ஆனால் அவருக்கோ அவையெல்லாம் விநோதமாக இருந்தது. நிச்சயமாக அவருக்கு அது பிடிக்கவில்லை. ஒரு ஆண் தோழர் இப்படி பேசுவதை அவர் விரும்பவில்லை. 

பிறகு நாங்கள் அவரவர் வழியே சென்று விட்டோம். அவர் ஆசிரியராக பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார், அது நிமித்தமாக வட இங்கிலாந்திற்கு சென்று விட்டார். 

சுமார் ஒரு வருடம் கடந்திருக்கும். ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை. நன்றாக தூங்கிக் கொண்டிருந்தேன். கீழேயிருந்து என் தந்தை சத்தமாக அழைத்தார்,

"அன்ட்ரியஸ், உனக்கு ஒரு அழைப்பு" 

தூக்க கலக்கத்திலேயே கீழே இறங்கி வந்தேன்.    

"நான் தான் (It's me)" 

சுதாரித்து கொண்டேன். அதே பெண்தான். 

"ஒ................." 

எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஒரு வருடத்திற்கு பிறகு ஏன் அவர் அழைக்க வேண்டும்?

"உங்களிடம் நான் ஒன்றை சொல்ல வேண்டும். தற்போது இஸ்லாமை முழுமையாக பின்பற்ற தொடங்கியிருக்கின்றேன். ஐவேளை தொழுகின்றேன். ஒரு இஸ்லாமிய பெண் எப்படி உடையணிய வேண்டுமோ அப்படி அணிகின்றேன்"

அவ்வளவுதான் பேசினார். என் பதிலுக்கு அவர் காத்திருக்கவில்லை, இணைப்பை துண்டித்து விட்டார். 

என்னால் நம்பவே முடியவில்லை. This is amazing.............  

எனக்கு இஸ்லாத்தின் மேல் எந்த காலத்திலும் நம்பிக்கை இருந்ததில்லை. ஆனால் ஒரு பெண் தன் மார்க்கத்துக்குள் திரும்பி வர நான் காரணமாய் இருந்திருக்கின்றேன், எப்படி? 

என்னால் மறக்க முடியாத, என் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிகழ்வு அது.  

பிறகு, வாழ்வின் அர்த்தங்களைப் (Purpose of Life) பற்றிய என்னுடைய தேடல் தீவிரமடைந்தது. சாதாரண நாற்காலியே ஒரு காரணத்திற்காக உருவாக்கப்பட்டிருக்கும் போது, நாம் இவ்வுலகில் இருப்பதற்கு காரணமே இல்லையா? இது போன்ற கேள்விகள் என்னுள் அதிகம் எழ ஆரம்பித்தன. என் தேடல் விரிவடைந்தது. 

காட்டின் ஒரு மூலையில் வாழும் ஒரு வித அந்துப்பூச்சிகள் (Moth), மரத்திலிருந்து வழியும் பாலை (Sap) அருந்தி வாழுகின்றன. அதே மரத்தில் அவற்றிற்கு கீழே உள்ளே மற்றொரு வித அந்துப்பூச்சிகள், முதல் வித அந்துப்பூசிகள் வெளியேற்றிய கழிவுகளை பருகி வாழ்கின்றன. இவையெல்லாம் தானாகவே தற்செயலாக உருவாகியிருக்கும் என்பது போன்ற வாதங்களை தர்க்கரீதியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

நாமனைவரும் மிருகங்கள் என்றால் ஒழுக்கம் (Morale), எது சரி எது தவறு போன்றவை எப்படி தெரியும்? 

இவ்வாறாக, வாழ்வின் அர்த்தம் (Purpose of Life), தத்துவம் (Philosophy), அறிவியல் (Science), தர்க்கவியல் (Logic) என பல துறைகளை துணையாகக் கொண்டு எனது தேடல்கள் விரிவடைந்தது. 


கடவுள் என்ற ஒரு கோட்பாடு (concept) இல்லாமல் எதுவும் அறிவுக்கு ஒத்துவரவில்லை (This is the only thing that makes sense). மிக நீண்ட தேடல்களுக்கு பிறகு கடவுள் நிச்சயமாக இருக்கின்றார் என்ற முடிவுக்கு வந்தேன். 


இப்போது யார் என்னிடத்தில் வந்து கடவுள் இல்லையென்றாலும் அவர்களுடன் தர்க்கரீதியாக விவாதித்து கடவுள் உண்டு என்று நிரூபிக்கும் அளவு நம்பிக்கை பெற்றிருந்தேன். 

சரி, கடவுள் உண்டென்ற முடிவுக்கு வந்தாகி விட்டது. கடவுள் நம்மை படைத்து அப்படியே விட்டு விட்டாரா?, நமக்கு எதுவும் சொல்ல அவர் விரும்பவில்லையா? 

கடவுள் இருக்கிறாரென்றால் அவர் நமக்கு நிச்சயம் ஏதாவது சொல்லியிருக்க வேண்டும் (He must have expressed something). அது தான் அறிவுக்கு ஒத்து வருகிறது.

இப்போது குரானை முழுமையாக படிக்கத் தொடங்கினேன். 

குரான், மற்ற எந்த ஒரு ஆவணங்களையும் விட முற்றிலும் வேறுபட்டது (It is a very fascinating document. It is unlike any other document). எந்தவொரு மத புத்தகங்களையும் விட குரான் எனக்கு சிறந்ததாக தெரிந்தது. 

ஏன்?, அது என்னுள் ஆழமாக ஊடுருவியது. அது ஒரு அற்புத உணர்வு. ஊடுருவியது மட்டுமல்லாமல் என்னிடத்தில் ஒரு நிறைவான தாக்கத்தை அது ஏற்படுத்தியது. என்னை அதனுடன் மிகவும் ஒன்ற வைத்தது.           

என்னை மிகவும் பாதித்த குரானுடைய வசனங்களென்றால், "நீங்கள் உண்மையாளராக இருந்தால் இது போன்ற ஒன்றை கொண்டு வாருங்கள்" என்று மனித குலத்திற்கு அது விடும் சவால்கள் தான். இவை எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை தந்தன. ஏனென்றால் இது போன்ற சவால்களை வேறு எந்தவொரு புத்தகத்திலும் நான் கண்டதில்லை. 

சரி, குரான் ஏன் இப்படியொரு சவாலை விட வேண்டும்?, குரானைப் பற்றிய என்னுடைய ஆராய்ச்சிகளை மேலும் அதிகப்படுத்தின அந்த வசனங்கள். என் கேள்விகள் தெளிவுபெற ஆரம்பித்தன. முடிவாக குரானைப் போன்ற ஒன்றை உருவாக்க முடியாது என்றுணர்ந்தேன். இந்த புத்தகம் ஒரு அதிசயம், இது இறைவனிடமிருந்து தான் வந்திருக்க வேண்டும். 

இப்போது, குரான் ஒரு அதிசயம் (Miracle) என்று வாதிக்குமளவு நம்பிக்கை பெற்றிருந்தேன். 

ஆக, இறைவனைப் பற்றியும் சரி, குரானைப் பற்றியும் சரி, விவாதிக்க நான் தயார்.

எல்லாம் தான் தெளிவாகி விட்டதே. நான் அப்போது முஸ்லிமாகி விட்டேனா என்று நீங்கள் கேட்டால்..... இல்லை.

அங்குதான் பிரச்சனையே ஆரம்பித்தது. இஸ்லாம் என்ற கொள்கை அந்நியமாக தெரிந்தது. என்னால் அதனுடன் ஒன்ற முடியவில்லை. இஸ்லாம் என்ற ஒரு வரையறைக்குள் என்னால் வர முடியவில்லை. எனக்குள் அறிவார்ந்த விளையாட்டுகளை ஆடிக் கொண்டிருந்தேன் (I started to play intellectual Gymnastics). இதுவென்ன புது குழப்பம்? புரியவில்லை.

குரானை எடுத்துக்கொண்டு கிரீசுக்கு என் தாத்தா பாட்டியுடன் சிறிது காலம் தங்கி வரலாம் என்று சென்றேன். அங்கு தான் தொழுகையை செயற்படுத்தி பார்த்தேன். 

இங்கிலாந்திற்கு திரும்பினேன். என்னுடைய குழப்பங்கள் அதிகமாகியிருந்தது. அப்போது ஒரு கல்லூரி மாணவர் சொன்னார்,

"நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள், ஒருவர் சஜ்தாவில்  இருக்கும்போது இறைவனுடன் நெருக்கமாக இருக்கின்றார்"    

அப்படியா?, அடுத்த முறை நான் சஜ்தா செய்த போது, உரக்க கூறினேன்,

"இறைவா, தயவு கூர்ந்து எனக்கு உதவி செய் (come on, solve my problem). எனக்குள்ளே என்ன நடக்கின்றது? நீ இருக்கின்றாய் என்று என்னால் நிரூபிக்க முடியும். குரான் ஒரு Miracle என்று என்னால் நிரூபிக்க முடியும். ஆனால் என்னால் முஸ்லிமாக முடியவில்லை. இது மிகப் பெரிய குழப்பம். உதவி செய், தயவு கூர்ந்து உதவி செய்" 

ஒன்றும் நடக்கவில்லை...............Nothing was ticking......................finished. 

அக்னாஸ்டிக்காக தொடர்ந்து விட வேண்டியது தான்.

அது 2002 ஆம் ஆண்டு அக்டோபர் நான்காம் தேதி. அதிகாலை இரண்டு மணி. கதவு தட்டும் சத்தம். என் நண்பர். இந்த நண்பருடைய வீடு என் வீட்டிலிருந்து பத்து நிமிட நடை பயணத்தில் தான் இருக்கின்றது. ஆனால் அவர் என் வீட்டிற்கு அவ்வளவாக வந்ததே கிடையாது. ஆனால் இப்போதோ அதிகாலை இரண்டு மணி. எதற்கு வந்திருக்கின்றார்? 

வெளியே அழைத்தார். பேசிக்கொண்டே நடந்தோம். அவர் அன்று பேசியது மரணத்தைப் பற்றி. "ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரவேண்டும்" என்ற குரான் வசனம் தான் அன்றைய உரையாடலின் தலைப்பு. 

அந்த தலைப்பை அவர் விளக்கிய விதம் இருக்கின்றதே................

என்னால் அது எப்படியிருந்தது என்று இப்போது திரும்ப கூட சொல்ல முடியாது. மிக அற்புதமான விளக்கம் அது.

அவ்வளவுதான், வீட்டிற்கு விரைந்தேன். என் அறைக்குள் நுழைந்து தாளிட்டேன். 

"இறைவா, நீ என்னை அச்சுறுத்தி விட்டாய் அஹ் (You scared the beep out of me, ah)"            

அந்த கணம், என்னுள் இருந்த குழப்பம் ஒன்றுமில்லாமல் ஆனது. நான் எனக்குள் விளையாடிக்கொண்டிருந்த ஆட்டமெல்லாம் உளுத்து போயின. 

அடுத்த நாள். டாக்சியை பிடித்தேன். அருகிலிருந்த பள்ளிக்கு சென்றேன். அங்கிருந்த சுமார் ஐம்பது சகோதரர்கள் முன்னிலையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். அல்ஹம்துலில்லாஹ்"
               

சுபானல்லாஹ்... 

சொல்ல வரும் கருத்துக்களை தெளிவாக, தர்க்க ரீதியாக சொல்ல விரும்புபவர் சகோதரர் ஹம்சா அவர்கள். நாத்திகர்களுடனான அவரது பல வாதங்கள் யுடியூபில் (You tube) கிடைக்கின்றன. அவரது தளத்திலும் (முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது) அவற்றை பார்க்கலாம். 

நாத்திகர்களுடனான உங்கள் உரையாடல்களுக்கு நிச்சயமாக சகோதரர் ஹம்சாவின் பதிவுகள் மற்றும் வீடியோக்களை பரிசீலிக்கலாம். 


வரும் ஜூன் பத்தொன்பதாம் தேதி (19th June, 2010)  லண்டனில், அமெரிக்க நாத்திகர்கள் சங்கத்தின் தலைவரான டாக்டர் எட் பக்னோருடன் (Dr. Ed Buckner, President of American Atheists), "இஸ்லாமா, நாத்திகமா" என்ற தலைப்பிலான நேரடி விவாதத்தில் பங்கேற்கவிருக்கிறார் ஹம்சா அவர்கள்.


நீங்கள் லண்டனில் வசிப்பவராக இருந்தால், "Friends House, Main Hall, 173-177 Euston Road, London, NW1 2BJ" என்ற முகவரியில் நடக்கும் இந்த விவாதத்தை நேரில் சென்று பார்க்கலாம். இன்ஷா அல்லாஹ்.

சகோதரர் ஹம்சா அவர்களுக்கு இந்த விவாதத்தில் வெற்றிகரமாக செயல் படக்கூடிய  மனபலத்தையும், உடல் நலத்தையும், கல்வி ஞானத்தையும் இறைவன் அருள வேண்டுமென்று துவாச் செய்வோம். 

இறைவன் இஸ்லாமிய சமூகத்திற்கு ஹம்சா போன்ற சகோதர/சகோதரிகளை தொடர்ந்து அருள்வானாக...ஆமின்.

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக...ஆமின் 

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன். 


This article inspired by:
1. Br.Hamza's Interview to "One Legacy Radio" 

Source of Information and Br.Hamza's blog:
1. http://www.hamzatzortzis.blogspot.com/

Br.Hamza's Official website: 
1.http://hamzatzortzis.com

IERA official website: 
1. http://www.iera.org.uk

References: 
1. Meaning of the term "Agnostic" taken from thefreedictionary.com. 
             

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ  

Click here to bookmark this link.Channel Image06:27 இன்ஷா அல்லாஹ்… அல்பாக்கவி.காம்
இன்ஷா அல்லாஹ்! இதன் பொருள் ” அல்லாஹ் நாடினால்” என்பதாகும். இதைச்சொல்வது குறித்து குர்ஆனில் 18:23,24. 2:70,12:99,18:69,28:27,37:102,48:27 ஆகிய ஏழு இடங்களில் வருகின்றன. மக்கா குரைஷிகள் நபி (ஸல்) அவர்களிடம் கடினமான கேள்விகளைக் கேட்டு திணற வைத்தனர். அவர்களுடைய மார்க்கத்தை போலி மார்க்க மாக சதி சூழ்ந்து யத்ரிபிலுள்ள யூத ரப்பிகளிடம் ஆலோசனை கலந்து நபி(ஸல்)அவர்களை அணுகி குகைவாசிகள்பற்றி வினவினர். நபி (ஸல்) அவர்களோ ” இன்ஷா அல்லாஹ்” என்று கூறாது “நாளை இதற்கு பதில் கூறுகிறேன்” [...]

Mon 24

Click here to bookmark this link.Channel Image23:32 பர்தாவை தடை செய்யலாமா? பெண் விடுதலை!
உயிர்மை.காம் இணைய இதழில் ஆர். அபிலாஷ் எழுதிய கட்டுரை இது. கட்டுரையின் இறுதியில் புதியகாற்று இதழின் ஆசிரியரும், தாமரை இதழின் இணையாசிரியருமான ஹமீம் முஸ்தஃபாவின் பேட்டி இடம் பெற்றுள்ளதில் சில வரலாற்றுப் பிழைகள் இருந்தாலும் பதிவு மாற்றம் செய்யப்படாமல் இங்கே மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. - அபூ ஸாலிஹா முகத்திரை கொண்ட பர்தாவை தடை செய்யும் சட்டத்தை கொண்டு வர பிரஞ்சு அரசாங்கம் முயற்சி எடுத்து வருகிறது
Click here to bookmark this link.Channel Image02:38 படிப்பிற்கும், முன்னேற்றத்திற்கு ஹிஜாப் தடையே அல்ல - ஆயிஷா! பெண் விடுதலை!
கடந்த 2009 ஆம் ஆண்டுக்கான கட்டிடக்கலைப் பிரிவில் ஐந்தாண்டு பட்டப்படிப்பில் மாநிலத்திலேயே முதல் மாணவியாகத் தேறியுள்ளார் சகோதரி ஆயிஷா! (நன்றி: சமரசம் 1-15 மார்ச் 2010)
Click here to bookmark this link.Channel Image02:38 குளிர்கால ஒலிம்பிக்: பனிச்சறுக்கு விளையாட்டில் ஹிஜாபுடன் கலந்து கொள்ளும் முஸ்லிம் பெண்மணி பெண் விடுதலை!
#feature-wrapper,#carousel_control,#featured_posts {display:none;padding:0;margin:0;} .post { margin:0 0 15px; padding: 15px 15px; background:#fff url(http://2.bp.blogspot.com/_lxBSX0YJV58/SwQkg_x07sI/AAAAAAAAAi0/CGdD6bqHwXM/s1600/box-bg.gif) repeat-x top left !important; border:2px solid #eaeaea; } .post-body { padding-bottom:10px; margin:0; line-height:1.6em; background: url(

Sun 23

Click here to bookmark this link.Channel Image03:01 We are the honorable women of Islam! பெண் விடுதலை!
We are the honorable women of Islam! We don't sell our bodies for people to sell their products; You won't find us advertising for stuff like new trucks. We don't dress up on the streets as if were some sort of merchandise, Keep your dirty hands to yourself, or, with Allah, you will pay the price. We are the honorable women of Islam! Oh you men, keep your eyes to your self; we're not

Thu 20

Click here to bookmark this link.Channel Image14:17 Evolution St(he)ory > Harry Potter Stories - I எதிர்க்குரல்

 

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.


நிச்சயமாக இந்த தலைப்பு மிகைப்படுத்தப் பட்டதல்ல...

ஆம். பரிணாமவியல் என்ற கதை, ஹாரி பாட்டர் கதைகளையெல்லாம் விட மிகச் சிறந்தது. இந்த தொடரின் ஒவ்வொரு பதிவிலும் அதை உணர்ந்து கொள்வீர்கள். இன்ஷா அல்லாஹ்

பரிணாமம் குறித்த இந்த தொடர் பதிவுகளின் நோக்கம், தலைப்பை நியாயப்படுத்துவது தான்.

"This is one of the worst cases of scientific fraud. It’s shocking to find that somebody one thought was a great scientist was deliberately misleading. It makes me angry"
"மோசமான அறிவியல் பித்தலாட்டங்களில் இதுவும் ஒன்று. மிகச் சிறந்த விஞ்ஞானி என்று கருதப்பட்ட ஒருவர் வேண்டுமென்றே இப்படி செய்தது அதிர்ச்சியை தருகிறது. என்னை இது கோபப்பட வைக்கிறது"      

இது, "The Times" நாளிதழில் 11th August, 1997ல் ஒரு பிரபல பரிணாமவியலாளர் குறித்து வெளிவந்த செய்தி. பரிணாமத்திற்கு ஆதரவாக அவர் எடுத்து வைத்த ஆதாரம் மிகப் பெரிய பித்தலாட்டம் என்று தெரிய வந்த போது வெளியானச் செய்தி.

நீங்கள் பரிணாமத்தின் வரலாற்றை உற்று நோக்கினால் இது போன்ற பித்தலாட்டங்களை, மோசடிகளை, பொய் புரட்டுக்களை பார்க்கலாம். 

இவ்வளவு ஏன்? ஒரு பரிணாமவியலாளர் அவர் செய்த மோசடி அம்பலப்படுத்த பட்ட போது என்ன தெரியுமா கூறினார்?, நான் மட்டுமா இப்படி செய்தேன். இதற்கு முன் இது போன்றவற்றை விஞ்ஞானிகள் செய்ததில்லையா? என்று கேட்டு அதிர்ச்சியை உண்டாக்கினார்.             

யார் இவர்கள்? இவர்கள் செய்த பித்தலாட்டங்கள் என்னென்ன?, இது போன்ற கேள்விகளுக்கு விடையளிப்பதும் இந்த பதிவுகளின் மற்றொரு நோக்கம். இன்ஷா அல்லாஹ்...  



இந்த பதிவுகள் யாருக்கு உபயோகமாக இருக்கப் போகின்றன (இன்ஷா அல்லாஹ்)? 

யாருக்கென்றால், அவர்கள் பரிணாமவியலை நம்புபவர்கள். அதே சமயம், தெளிவான, நியாயமான, அறிவியல் பூர்வமான வாதங்கள் பரிணாமவியலுக்கு எதிராக வைக்கப்பட்டால், அதனை நிராகரிக்காமல் பரிசீலிப்பார்கள். அவர்கள் தான் இந்த பதிவுகளின் இலக்கு.   

பரிணாமத்தை நம்பாதவர்களுக்கு பரிணாமம் குறித்த அவர்களது கருத்துக்களை இந்த பதிவுகள் மேலும் வலுப்படுத்தலாம். இன்ஷா அல்லாஹ். 

இந்த பதிவுகளை அப்படியே நம்பாமல், இது சரியா என்று நீங்கள் ஆராயுங்கள். அப்படி சரியாக இருக்கும் பட்சத்தில், உங்களுக்கு தெரிந்த இந்த செய்தியை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். இன்ஷா அல்லாஹ்.

"இன்னும் நன்மையிலும், பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்துக் கொள்ளுங்கள். பாவத்திலும், பகைமையிலும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ள வேண்டாம்" --- குர்ஆன் 5:2        

இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

Wed 19

Click here to bookmark this link.Channel Image04:22 Sarkozy’s Move to Ban Niqab in France! பெண் விடுதலை!
Expression of Emerging Islamophobia in the West By Latheef Farook Islamophobia, unleashed with all its ferocity and viciousness under the pretext of fighting a so called war on terrorism by Israel and obediently implemented in the aftermath of the 9/11 by warmongers in Washington, London and Paris is pushing the west especially Europe back into Dark Ages. Barely two months after peaceful

Sun 16

Click here to bookmark this link.Channel Image13:10 Khalid Yasin 'Strangers' (Video) அத்தாட்சிகள்




இந்த வீடியோவின் மேலதிக விளக்கங்களுக்கு இங்கே செல்லவும்

Thu 13

Click here to bookmark this link.Channel Image23:15 குர்ஆன் - ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ள துஆ மற்றும் திக்ர்கள் (2) பிரார்த்தனை பேழை
உச்சரிப்பு: ரப்பனா லா துணுஸிஃக் குலூபனா பஃத இத் ஹதை(த்)தனா வ ஹப்லனா மி(ன்ல்)லதுன்(க்)க ரஹ்மதன், இன்னக அன்தல் வஹ்ஹாப்

பொருள்: எங்கள் இரட்சகனே! எங்களை நீ நேர்வழியில் செலுத்திய பிறகு எங்களை வழிபிறழச் செய்து விடாதே! மேலும் உன்னருளில் இருந்து எங்களுக்கு கொடை வழங்குவாயாக! நிச்சயமாக நீயே உண்மையில் தாராளமாக வழங்குபவனாக இருக்கிறாய்!

உச்சரிப்பு: ரப்பி ஹப்லீ மின்(ல்)லதுன்(க்)க துர்ரிய்யதன் தய்யிபதன் இன்னக ஸமீஉத் துஆ

பொருள்: என் இரட்சகனே! உன்னிடம் இருந்து எனக்கு தூய்மையான சந்ததிகளை வழங்குவாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவியேற்பவனாக இருக்கிறாய்!

உச்சரிப்பு: ரப்பனா ழலம்னா அன்Fபுஸனா வ இன் (ல்) லம் தஃக்Fபிர் லனா வ தர்ஹம்னா ல நகூனன்ன மினல் காஸிரீன்

பொருள்: எங்கள் இரட்சகனே! எங்களுக்கு நாங்களே அக்கிரமம் இழைத்துக் கொண்டோம். எங்களை நீ மன்னித்து எங்களுக்குக் கிருபை செய்யாவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டத்திற்குரியவர்களாகி விடுவோம்!

உச்சரிப்பு: ரப்பனஸ்ரிFப் அன்னா அதாப ஜஹன்னம இன்ன அதாபஹா கான ஃகராமா

பொருள்: எங்கள் இரட்சகனே! எங்களை விட்டும் நரக வேதனையை அகற்றிடு. நிச்சயமாக அதன் வேதனை ஓயாது தொல்லை தரக் கூடியது!

உச்சரிப்பு: ரப்பனா ஹப்லனா மின் அஸ்வாஜினா வ துர்ரிய்யாத்தினா குர்ரத்த அஃயுனி(வ்) வஜ் அல்னா லில் முத்தகீன இமாமா

பொருள்: எங்கள் இரட்சகனே! எங்கள் மனைவியரையும் எங்கள் பிள்ளைகளையும் எங்கள் கண்களுக்குக் குளிர்ச்சி அளிக்கக்கூடியவர்களாய் விளங்கச் செய்வாயாக! மேலும் எங்களை பயபக்தியாளர்களுக்கு முன்னோடிகளாக ஆக்குவாயாக!

உச்சரிப்பு: அல்லாஹும்ம அஸ்லிஹ்லீ தீனியல்லதி ஹுவ இஸ்மது அம்ரி வ அஸ்லிஹ்லீ துன்யாயல்லத்தீ Fபீஹா மஆதீ வ அஸ்லிஹ் ஆகிரதியல்லத்தீ Fபீஹா மஆதீ வஜ்அலில் ஹயாத்த ஸியாதத(ன்ல்) லீ Fபீ குல்லி கைரின் வல் மௌத்த ராஹத(ன்ல்) லீ மின் குல்லி ஷர்

பொருள்: எனக்கு பாதுகாப்பாய் இருக்கும் என்னுடைய தீனை எனக்கு சீர்படுத்துவாயாக! எனது வாழ்வு எதில் இருக்கிறதோ அத்தகைய எனது உலகத்தை எனக்குச் சீர்படுத்துவாயாக! எங்கு நான் திரும்பிச் செல்ல வேண்டியுள்ளதோ அந்த எனது மறுமையை எனக்கு சீர்படுத்துவாயாக! ஒவ் வொரு நன்மையையும் செய்வதற்கு (எனக்கு சாத்தியமாகும் வகையில்) என் வாழ்நாளை அதிகமாக்குவாயாக! மேலும் ஒவ்வொரு தீங்கிலிருந்தும் அமைதி அளிக்கக் கூடியதாக மரணத்தை ஆக்குவாயாக!

Wed 12

Click here to bookmark this link.Channel Image23:32 வலைப்பதிவர்களிடம் பத்து கேள்விகள். :-) எழுத்தோவியங்கள்
வலைப்பதிவர்களிடம் பத்துகேள்விகள் 1). தமிழ்மணத்தைத் திறந்தவுடன் சூடான இடுகைகளை; மறுமொழியிடப்பட்டவற்றை நோக்கிப் பாய்கிறீர்களே..ஏன்? 2). சிலநிமிடங்களுக்கொரு முறை தன்னிச்சையாக தமிழ்மணத்தை மீள்திறப்பு (ரெஃப்ரெஷ்) செய்கிறீர்களே...ஏன்? 3). தெரியாதவர்கள் போடுவது பக்காப்பதிவாக இருந்தாலும் கண்டுகொள்ளாமல், தெரிந்தவர்கள் போடும் மொக்கைப்பதிவுக்கே பின்னூட்டுகிறீர்களே... ஏன்?4). கவர்ச்சியான; அதிர்ச்சியான
Click here to bookmark this link.Channel Image23:32 வண்ணத்துப்பூச்சியின் சிறகுகள். எழுத்தோவியங்கள்
தனக்குத் தானே தவமிருக்கக் கட்டிக் கொண்ட கூட்டில் முட்டி மோதிக் கொண்டிருந்தது அந்த உயிர். மெல்ல மெல்ல, உறுதியாக தன் போராட்டத்தில் வழியும் கண்டது. அந்தக் கூட்டில் இப்போது சிறு திறப்பு (துளை) ஒன்று உருவானது. அந்தத் துளையின் வழியே அதன் இளஞ்சிறகுகள் வெளிப்படத் தொடங்கின. ஆம், இனியும் அது புழுவல்ல. எல்லோராலும் விரும்பப்படுகிற வண்ணத்துப் பூச்சி. வண்ணத்துப்பூச்சி விரும்பப்படுவதற்கு அதன் சிறகுகளல்லவா
Click here to bookmark this link.Channel Image23:32 வ'செ'ந்தத்தின் சிறப்பு விழா! எழுத்தோவியங்கள்
வலைமடல் வழியாகவும் அலைபேசியிலும் அழைக்கப்பட்டிருந்தோம் நாம். வளைகுடா செந்தமிழ்ச் சங்கம் (வசெந்தம்) கொண்டாடிய பைந்தமிழ்ப் பாவாணர் விழாவுக்கு (26/03/2010) பிற்பகல் தொழுகைக்குப் பின்னரே புறப்பட்டுச் சென்றோம். வாசலிலேயே உள்ளம் குளிர்ந்த வரவேற்பு கிடைக்க, உள்ளே நுழைந்தவுடன் பருகக் கிடைத்த தாளித்த மோரில் உடலும் குளிர்ந்தது. வந்துபோகும் நுழைமதி(Visit Visa)யில் சவூதி வந்திருக்கும் புலவர் அ. அரங்கராசன்
Click here to bookmark this link.Channel Image23:32 மெளனங்கள். எழுத்தோவியங்கள்
முட்டைகளை ஒத்திருக்கின்றன மெளனங்கள்.வெண்மையாலான ஓடு வெளித்தெரியும்சமாதானமாகவோ... சம்மதமாகவோ...!உள்ளிருப்பு தெரிவதில்லை உடையும் வரை!பொறுமை காத்து பிரசவிக்கச் செய்யலாம் புதிய பிறப்பை!எனினும்..உடைக்கப்பட்டே உட்கொள்ளப்படுகின்றனபெரும்பாலும்!இன்னமும்உடைக்கப்பட முடியாமலிருக்கும் ஒற்றை முட்டையில்உறைந்திருக்கலாம் ஓர் மகா நிசப்தம். (உயிரோசை மின்னிதழில்
Click here to bookmark this link.Channel Image23:32 மனிதமே புனிதம்! எழுத்தோவியங்கள்
( ஐந்தாறு வருடங்களாக வலைப்பதிவிட்டு வந்தாலும், ஏனோ அத்தனை ஆர்வங்காட்டுவதில்லை நான்.குழுமங்களில் எழுதுவதையாவது வலையில் பதிவிட்டுவைக்கலாமே என்று இன்று ஒரு நண்பர் அன்புக்கோரிக்கை வைக்க அதனடிப்படையில் ஜனவரி 26ல் குழுமங்களில் எழுதிய மனிதமே புனிதம்!' என்கிற கட்டுரையை பதிகிறேன். படித்துவிட்டு கருத்துச் சொல்லுங்கள்- நன்றி)மனிதமே புனிதம் இறைமையை; அதன் நற்பண்புகளை பிரதிநிதித்துவம் செய்கின்ற மனிதமே புனிதம்
Click here to bookmark this link.Channel Image23:32 பொதுவாய் இருக்கும் பரந்த வானம் எழுத்தோவியங்கள்
கவியரங்கக் கவிதைநாள்: சித்திரை முதல்நாள் விரோதி ஆண்டு.அவை: எழுத்துக்கூட கவியரங்கம்தலைப்பு: 'மனிதம்'கடவுள் வாழ்த்து (நிலை மண்டில ஆசிரியப்பா)தேவ குணமும் மிருக குணமும் சேர்த்து செய்த மனித இனத்தைபாவ புண்ணிய கரைகள் நடுவேபாரில் வாழ வைத்தனை இறைவா!ஆவல் தூண்டும் பாவம் நீக்கிஅறிவே மிகைக்கும் ஞானம் நோக்கிவாழும் காலம் யாவும் எங்கள்வெற்றியின் உறுதி வழங்கிடு வாயே!அவை
Click here to bookmark this link.Channel Image23:32 சொல் வெடித்த பொழுது... எழுத்தோவியங்கள்
வார்த்தைகளால் நெய்யப்பட்டஎதிர்பார்ப்பின் சிறகுகள்ஒரு மலை மீதுதவமிருந்த பொழுது"மறந்துவிடு" என்னும் ஓர் சொல்வெடித்துப் பரவியது.காரணத்தின் கத்தியைஅறியாமலேயே ஏந்தியவனாய்உயரப் பறப்பதற்காகவேஊதப்பட்ட பலூனில்காற்றும் அறியாததொருகீறலைச் செய்து விட்டுவிகல்பமற்றகுழந்தையாகிவிடுகிறாய்.தகிக்கும் தாகத்தில்தள்ளிவிட்ட பின்னர்நிராசையின் கங்குகளால்நிரப்பவும் செய்கிறாய்.நீயறியாமலே.மன்னிக்கவும் மறக்கவுமாய்கற்று வைத்த
Click here to bookmark this link.Channel Image23:32 கவிதை: "இனிவரும் நாள்கள்" எழுத்தோவியங்கள்
பண்புடன் கவியரங்கில்.... இறைவாழ்த்து: உயிருடன் உண்மை உயர்வை அளித்தே இயல்பினில் நன்மை இருக்கவும் செய்துமனிதரென நம்மையும் மாண்புற வைத்த புனித இறைக்கே புகழ். தமிழ்வாழ்த்து சொல்லில் அதன்பொருளில் சொந்தமாய் இவ்வுலகின் எல்லா மொழிக்கும் இலங்கிடும் ஆதிநீ வல்லமையில் பேரழகில் வாழ்பரப்பில் நற்றமிழே இல்லை உனக்குமோர் ஈடு!தலைவர் வாழ்த்து நற்குணத்தில் நல்லன்பில் நாளெல்லாம் ....நாம்பேசும் நாயகரே ஆசாத்தாம்
Click here to bookmark this link.Channel Image23:32 கனவின் திசைகளுக்கப்பால்........... எழுத்தோவியங்கள்
கனவின் திசைகளுக்கப்பால்.....காதலின் திரை மறைத்தபொய்களுக்குப் பின்னேநாம் நாயகர்களானோம்நமக்குள்ளே. கனவில் நெய்த அங்கிவாழ்வின் முட்களில்கிழிபடுகிறது எப்போதும் காலத்தின் நிர்வாணத்தில்கண்டுகொண்டோம்நாம் நம்மை. அதன்பின்ஆடைகள் குறித்தஅலட்டல்கள் தவிர்த்தோம் ஒப்பனைகள் மாற்றாத'உள்'நிறத்தில்அந்த அந்தகார ஆழத்தில்இன்னும் வசீகரித்தபடிஒரு மலர்.(உயிரோசையில் வெளியாகியிருக்கிறது)
Click here to bookmark this link.Channel Image23:32 எது கவிதை? எழுத்தோவியங்கள்
கைதட்ட(ல்) வேண்டுவதா கவிதை? - எண்ணம் கருத்தணையத் தூண்டுவதே கவிதை.-மின்னும் பொய்யூற்றிப் புலம்புவதா கவிதை? - நன்கு புனைந்தாலும் பேருண்மை கவிதை. - கண்ணில் மைதீட்டும் செயற்பாடா கவிதை? - மண்ணில் மெய் தேடும் சமன்பாடே கவிதை. - இன்னும் வையத்தில் வானவில்லா கவிதை? - உண்மை உள்ளத்தில் மலர்த்துவதே கவிதை ஐயா! சந்தமதன் வசந்தத்தை செவிகள் கேட்க சாரமது போதுமென்று சிலபேர் சொல்ல முந்தையதே கவிதையாகும் மற்ற யாவும்
Click here to bookmark this link.Channel Image23:32 எண்ணங்களின் பயணத்தில்...... எழுத்தோவியங்கள்
எண்ணங்களின் பயணத்தில்.......... போவதும் வருவதும்பொதுவாய் மரபுஆவதும் அழிவதும்அன்றாட இயல்பு.எண்ணங்களின் பயணத்தில்இயங்குகின்ற மனது.வண்ண வண்ண கனவுகளேவாழ்க்கைக்கு விருந்து.ஆசையில் வருவதெல்லாம்அடுத்தவர் 'இடம்' தான்ஓசையறும் சிந்தனையில்உலகமும் மடம் தான்.பிறப்பதும், பின்னொரு நாள்இறப்பதும்; இடையிலேசிறப்புகள் தேடித்தேடிசெல்வதுவும் பயணந்தான்.எல்லாப் பக்கத்திலும்இருக்கலாம்
Click here to bookmark this link.Channel Image23:32 இன்று வேறு நாள்.... எழுத்தோவியங்கள்
இன்று வேறுநாள்நேற்றைப்போலில்லை....கணப்பொழுதில் நீண்டுவிட்டதுவெயிலின் கொடு நாவுவெளியெங்கும்பரவியிருக்கும் வெறுமைமுகத்திலறையும் பூதம்.இரத்தம் வெளிறிஉறைந்து கிடக்கின்றனஇரவு பகல்கள்பொருள் பிரிக்க..சக்தி இழக்கிறது வாழ்க்கை.காலடித்தடங்களில்ஞாபகத்துணுக்குகள்சிந்தியபடி மனம்.நீ ஊருக்குப் போயிருக்கிறாய்! நன்றி: கீற்று

Thu 06

Click here to bookmark this link.Channel Image14:38 Names of Allah (arabic & english) அத்தாட்சிகள்

Fri 30

Click here to bookmark this link.Channel Image05:11 மனதை இயக்கு, வாழ்வை உயர்த்து (பேராசிரியர் டாக்டர் அப்துல்லாஹ்) அத்தாட்சிகள்






Sun 18

Click here to bookmark this link.Channel Image15:09 மரபணுத் தொழில் நுட்ப ஒழுங்கு முறை ஆணையம் – தொடரும் சட்ட பயங்கரவாதம் ! மக்கள் சட்டம் (PEOPLE'S LAW)

மரபணு மாற்று கத்தரிக்காய் விவகாரத்தில் நடந்த விவகாரங்கள் அனைவருக்கும் தெரியும். பன்னாட்டு நிறுவனங்களும், அவற்றின் உதவி பெறும் அறிவியலாளர்களும் மரபணுத் தொழில்நுட்பம் இல்லாவிட்டால் இந்தியாவே பட்டினியால் மூழ்கிவிடும் என்ற தவறான கருத்தைப் பரப்பினர். சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், இயற்கை விவசாயிகளும் மரபணு மாற்றுத்தொழில்நுட்பம் காரணமாக, சுற்றுச்சூழல் பொதுச் சுகாதாரம் - அரசியல் சட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நாட்டுக்கும் மக்களுக்கும் பலத்த பாதிப்பு ஏற்படும் என்று எச்சரித்தனர். தமிழ்நாடு உள்பட பல மாநில அரசுகள், மரபணு தொழில்நுட்பம் குறித்து உரிய பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்படாத நிலையில் தமது மாநிலத்திற்குள் மரபணுமாற்று உணவுப்பொருட்களை அனுமதிக்க முடியாது என்று கருத்து தெரிவித்தன. இதைத் தொடர்ந்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் இந்த விவகாரம் குறித்து நாட்டின் சில நகரங்களில் பொதுமக்களிடம் கருத்துக்கேட்டறிந்து மரபணு மாற்று கத்தரிக்கு தற்காலிக தடை விதித்தார்.

இந்தியாவில் மரபணுத் தொழில்நுட்பத்தை ஒழுங்கு படுத்துவதற்காக மரபணுத் தொழில்நுட்ப அங்கீகாரக்குழு (Genetic Engineering Approval Committee) என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அதிகார வரம்புக்குள் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் உறுப்பினர்கள் பலர் மீதும் பல்வேறு சர்ச்சைகள் எழுப்பப்பட்டன. மான்சாண்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் நிதியுதவியுடன் பல்வேறு ஆய்வுகளை செய்த அறிவியலாளர்கள் இந்த அமைப்பின் உறுப்பினர்களாக செயல்பட்டு, மரபணு மாற்றுக் கத்தரிக்காய்க்கு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. எனவே இந்தக்குழுவை மரபணு மாற்றுத் தொழில்நுட்ப நெறிப்படுத்துதல் மற்றும் உயிரிப்பாதுகாப்பு அமைப்பு என்று சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.

இந்நிலையில் மரபணுத் தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணையம் என்ற புதிய அமைப்பை நிறுவுவதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

(இந்திய நாடாளுமன்றம் - ஏரியல் வியூ)

இதற்காக The Bio-Technology Regulatory Authority of India Bill, 2009 என்ற சட்ட முன்வடிவை அறிமுகப்படுத்துகிறது. வேளாண்மை, சுற்றுச்சூழல், நலவாழ்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய மரபணு மாற்றுத்தொழில்நுட்பத்தை நெறிப்படுத்துவதற்கான இந்த அமைப்பு, அறிவியல் தொழில்நுட்ப அமைச்சரவையின் ஆளுகையின் கீழ் செயல்படும் விதத்தில் உருவாக்கப்படுகிறது.

ஏன் இந்த சட்டம்?

இந்த சட்ட முன்வடிவானது இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்டபோது இந்தியர்களை ஒடுக்குவதற்காக கொண்டுவரப்பட்ட அலுவல் ரகசியங்கள் சட்ட (Official Secrets Act) த்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய இந்த சட்ட முன்வடிவு குறித்து விவாதங்கள் எதுவும் நடக்கக்கூடாது என்பதற்காகவே தகவல் உரிமைச் சட்டம் நடைமுறையில் இருக்கும் இந்தக் காலத்திலும் கருப்புச்சட்டமான அலுவல் ரகசிய
சட்ட வரம்புக்குள் இந்த மரபணுத் தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணைய சட்ட முன்வடிவு உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் பல வட இந்திய ஊடகங்கள் இந்த சர்ச்சைக்குரிய சட்ட முன்வடிவு குறித்து ஏராளமான சர்ச்சைகளை எழுப்பியுள்ளன.

சுற்றுச்சூழல் சட்டவியலில் முக்கியமான இரு அம்சங்களாக இருப்பவை: 1. வருமுன் காக்கும் கோட்பாடு, 2. சீரழிப்பவரே இழப்பீடு வழங்க வேண்டும்.

ஆனால் இந்த மரபணுத் தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணைய சட்ட முன்வடிவு-இல் இந்த முக்கிய அம்சங்கள் இல்லை என்பதோடு, இதற்கு எதிரான அம்சங்களும் ஏராளமாக உள்ளன. இந்தியாவின் குடிமக்களை பாதுகாப்பதைவிட, மரபணு மாற்று உணவுப்பொருட்களை தயாரிக்கும் மான்சான்டோ, சின்ஜென்டா, டோவ் கெமிக்கல்ஸ், பேயர், டூ பான்ட் போன்ற நிறுவனங்களின் நலன்களை பாதுகாப்பதே முக்கியமானது என்று மத்திய ஆட்சியாளர்கள் முடிவெடுத்து செயல்படுவதாக தோன்றுகிறது.

குறிப்பாக மரபணு மாற்றுப்பயிரை அறிமுகப்படுத்தும், சந்தைப்படுத்தும், ஆய்வு செய்யும் நிறுவனங்களுக்கான கடப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை. இந்த மரபணு மாற்றுப்பயிர்கள் விவசாயிகளுக்கும், நுகர்வோர்களுக்கும், கால்நடை உள்ளிட்ட ஏனைய உயிர்களுக்கும் எந்தவிதமான ஆபத்துகளையும் ஏற்படுத்தாது என்ற உத்தரவாதத்தை வழங்க வழிவகை செய்யவில்லை. மேலும், இந்த பயிர்கள் சூழலியல் ரீதியாகவோ, மருத்துவ ரீதியாகவோ ஏதேனும் ஆபத்துகளை கொண்டுவந்தால் அந்த விவகாரங்களை எதிர்கொள்வது குறித்து ஏதுமில்லை.

மரபணு மாற்றுப்பயிர்களை அறிமுகப்படுத்தும் நிறுவனங்கள், அந்தப் பயிர்களால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கோ, நுகர்வோர்களுக்கோ இழப்பீடு வழங்குவதை உறுதி செய்யும் எந்த அம்சங்களும் இல்லை. இதுபோன்ற விவகாரங்களில் அரசுத்துறையினரின் கடமை என்ன? தனியார் நிறுவனங்களின் பொறுப்பு என்ன? என்பது போன்ற எந்த சிந்தனைகளும் இல்லை.

இவற்றிற்கு பதிலாக பன்னாட்டு நிறுவனங்களை பாதுகாக்கும் நோக்கிலும், பன்னாட்டு நிறுவனங்களை கேள்விகேட்கும் சூழல் ஆர்வலர்களை தண்டிக்கும் அம்சங்களை மட்டுமே இந்த மரபணுத் தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணைய சட்ட முன்வடிவு கொண்டுள்ளது.

நவீன வாய்ப்பூட்டு சட்டம்!

மரபணுத் தொழில்நுட்பத்தின் பாதுகாப்பு குறித்து உறுதி செய்யவேண்டும் என்று வணிக நிறுவனங்களை நிர்பந்தப்படுத்த முடியாத அரசு, மரபணுத் தொழில்நுட்பத்தின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்புவோரை சிறையில் அடைக்கவும், அபராதம் விதிக்கவும் துடிக்கிறது.

இந்த மரபணுத் தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணைய சட்ட முன்வடிவு-இன் பிரிவு 63ன்படி மரபணுத் தொழில்நுட்பம் குறித்து உரிய ஆதாரங்களோ, சான்றுகளோ, அறிவியல்ரீதியான ஆய்வறிக்கைகளோ இல்லாமல், மரபணு மாற்று உணவின் ஆபத்து குறித்து எச்சரித்தால் குறைந்தபட்சம் ஆறு மாதம் முதல் ஒரு வருட சிறைத்தண்டனை, அல்லது இரண்டு லட்ச ரூபாய் வரையிலான அபராதம், அல்லது ஒரு வருட சிறைத்தண்டனையோடு கூடிய இரண்டு லட்ச ரூபாய் அபராதம் விதிக்க இந்த சட்ட முன்வடிவு வழிவகுக்கிறது.

வெள்ளையர்கள் இந்தியாவை ஆண்டபோது சுதந்தர வேட்கையை தணிக்க வாய்ப்பூட்டு சட்டங்கள் அமலில் இருந்ததாக நம்மில் பலரும் வரலாற்றுப் பாடங்களில் படித்திருப்போம். ஆனால் அந்த நிலையை நாம் கற்பனையில் கூட சிந்திருக்க மாட்டோம். அந்த கருப்புச் சட்டம் மீண்டும் அமலுக்கு வருகிறது. இந்த புதிய மரபணுத் தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணைய சட்ட முன்வடிவு அமலுக்கு வந்தால், மரபணுத் தொழில்நுட்பத்தை கேள்விகேட்கும் சூழல் ஆர்வலர்கள், அறிவியலாளர்கள், ஊடகத்துறையினர் ஆகிய அனைவரையும் ஒருசேர முடக்கிவிட முடியும்.

சரி! ஆதாரம் இல்லாமல் கேள்வி எழுப்பினால்தானே சிறையில் அடைப்பார்கள்! ஆதாரங்களை சேகரிக்கலாம் என்று யாரும் முயற்சிக்க முடியாது. ஏனெனில் இந்த மரபணுமாற்று தொழில்நுட்ப ஆய்வுகளின் அனைத்து தகவல்களும் அறிவுச் சொத்துரிமை சட்டங்களின் அடிப்படையில் பன்னாட்டு வணிக நிறுவனங்களின் ரகசிய வணிக தகவல்களாக வரையறை செய்யப்படும். இந்த தகவல்களை தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் யாரும் கோர முடியாது. எனவே மரபணு மாற்று உணவுப் பொருட்கள் குறித்து, அவற்றை தயாரிக்கும் நிறுவனங்கள் கூறும் தகவல்களே இறுதியானவை. இவற்றை யாரும் சரிபார்க்க முடியாது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கே எதிரானது!

இதுவரை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 246வது பிரிவின் ஏழாவது அட்டவணையின் இரண்டாவது பட்டியல் மாநில அரசின் அதிகார வரம்பின்கீழ் வரும் துறைகளை கூறுகிறது. இந்த பட்டியலின் 14வது அம்சம், வேளாண்மை, வேளாண்மை கல்வி, ஆய்வு, பூச்சிகள் மற்றும் பயிர்களை தாக்கும் நோய்களுக்கு எதிரான பாதுகாப்பு ஆகியவற்றை குறிக்கிறது. அதாவது வேளாண்மை, வேளாண் கல்வி ஆய்வு, பூச்சிகள் மற்றும் பயிர்நோய்கள் குறித்த அனைத்து பிரசினைகளுக்கும் முடிவு எடுக்கும் அதிகாரம் மாநில அரசிடம் இருந்தது. இந்த அதிகாரத்தை பயன்படுத்தியே மரபணு மாற்றப்பட்ட உணவுப்பயிரை எங்கள் மாநிலத்தில் அனுமதிக்க முடியாது என்று தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநில அரசுகள் முடிவுகளை மேற்கொண்டன. ஆனால் இந்த புதிய மரபணுத் தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணைய சட்ட முன்வடிவு மாநிலங்களுக்கான இந்த அதிகாரத்தை சத்தமின்றி ரத்து செய்கிறது.

பன்னாட்டு நிறுவனங்களுக்கும், அதன் இந்திய தொழில்-வணிக-அரசியல் பங்காளிகளுக்கும் லாபத்தையும் - இந்திய விவசாயிகளுக்கும், இந்தியாவின் இறையாண்மைக்கும்கூட கேடு விளைவிக்கக்கூடிய இந்த மரபணுத்தொழில் நுட்பம் இந்தியாவிற்கு ஏன் தேவை என்ற சாதாரண கேள்விக்கு பதில் கூறுவதற்கு யாருமில்லை.

சுதந்திரமான நாட்டின் சட்டம் என்பது மக்களுக்கு தரமான வாழ்க்கையையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதாக இருக்க வேண்டும். ஆனால் நவீனகால இந்தியாவின் சட்டங்கள் இந்தியர்களின் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் ஒப்படைப்பதாகவே உள்ளது.

சில மாதங்களுக்கு முன் சென்னையில் நடந்த சட்டக் கருத்தரங்கு ஒன்றில் பேசிய சென்ன உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியம் அவர்கள், கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற நாம் தற்போது வேறு கம்பெனிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடக்கூடாது! என்று எச்சரித்தார். ஆனால் நடக்கும் சம்பவங்களும், உருவாகும் புதிய சட்டங்களும் நீதிபதி ராமசுப்ரமணியம் அவர்களின் எச்சரிக்கையை உதாசீனம் செய்வதாகவே உள்ளன.

சட்டம் என்பது சட்டத்தை உருவாக்கும் அரசியல்வாதிகளுக்கும், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளுக்கும், சட்டத்தை விவாதிக்கும் சட்டத் துறையினருக்கும் மட்டுமே உரியது என்ற தவறான கருத்தை உடைத்தெறிய வேண்டியது தற்போது காலத்தின் கட்டாயமாகிறது. ஏனெனில் இந்த சட்டங்கள் இந்தியாவில் உள்ள அனைவரது வாழ்க்கையையும் பாதிக்கிறது.

மேலும், மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர்களை பயன்படுத்தியே இந்த சட்டங்கள் அமலுக்கு வருகின்றன. எனவே தேர்தலில் பங்கெடுத்து வாக்களிக்கும் அனைத்து குடிமக்களும் இந்த சட்டங்களை உருவாக்குவதில் பங்கெடுப்பதாகவே பொருள் கொள்ளப்படுகிறது. எனவே இது போன்ற மக்கள் விரோத சட்டங்கள் அறிமுகம் செய்யப்படும்போது, உரிய முறையில் எதிர்ப்புகளை பதிவு செய்யவேண்டியது குடிமக்கள் ஒவ்வொருவரின் கடமையாகும்.

-சுந்தரராஜன்

நன்றி: பூவுலகு, மார்ச் 2010

Fri 16

Click here to bookmark this link.Channel Image08:18 சகோதரர் அப்துல்லாஹ்வின் உண்மை பிரகடனம்! அத்தாட்சிகள்


Thu 15

Click here to bookmark this link.Channel Image18:02 குர்ஆன் - ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ள துஆ மற்றும் திக்ர்கள் (1) பிரார்த்தனை பேழை
உச்சரிப்பு: ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வ லாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்

பொருள்: அல்லாஹ் தூய்மையானவன். மேலும் அனைத்துப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இறைவன் இல்லை. மேலும் அல்லாஹ் மாபெரியவன்.

உச்சரிப்பு: ஸுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி ஸுப்ஹானல்லாஹில் அழீம்

பொருள்: அல்லாஹ்வைப் புகழ்வதோடு அவனைத் துதிக்கவும் செய்கிறேன். மகத்துவம் மிக்க அல்லாஹ் தூய்மையானவன்.

உச்சரிப்பு: லா இலாஹ இல்லல்லாஹு வலா நஅஃபுது இல்லா இய்யாஹ். லஹுன் நிஅஃமது வலஹுல் Fபழ்லு வலஹுஸ் ஸனாவுல் ஹஸன், லா இலாஹ இல்லல்லாஹு முக்லிஸீன லஹுத்தீன வலவ் கரிஹல் காஃபிரூன்

பொருள்: அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை. அவன் ஒருவனையே நாங்கள் வணங்குகிறோம். அருட்கொடைகள் தந்தவன் அவனே. கிருபையும் அவனுக்குரியதே. மேலும் அழகிய தொடர் புகழும் அவனுக்கே! அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இறைவன் இல்லை. அவன் ஒருவனுக்கு மட்டுமே கீழ்ப்படிந்தவர்களாய் அவனை நாங்கள் வணங்குகிறோம்.

உச்சரிப்பு: லா ஹவ்ல வலா குவ்வ(த்)த இல்லா பில்லாஹ்

பொருள்: அல்லாஹ்வைக் கொண்டே தவிர எந்த ஆற்றலும் அதிகாரமும் இல்லை.

உச்சரிப்பு: ரப்பனா தகப்பல் மின்னா இன்ன(க்)க அன்(த்)தஸ் ஸமீஉல் அலீம் வ து(த்)ப் அலைனா இன்னக அன்தத் தவ்வாபுர் ரஹீம்

பொருள்: எங்கள் இரட்சகனே! எங்களிடம் இருந்து (இந்தப் பிரார்த்தனைகளை) ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீதான் எல்லாவற்றையும் செவியுறுபவனாகவும் நன்கு அறிபவனாகவும் இருக்கிறாய். மேலும் எங்கள் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ தான் பெரிதும் மன்னிப்பவனும் கருணை மிக்கவனும் ஆவாய்!

Sun 11

Click here to bookmark this link.Channel Image00:56 அடப்பாவிகளா! இந்த அநியாயத்தைக் கேட்க யாருமில்லையா? எதிரொலி
சில வருடங்களுக்குமுன் சானியா மிர்ஸா டென்னிஸ் விளையாடும்போது அணியும் குட்டைப் பாவடை குறித்து முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது "எந்த ஆடையணிந்து விளையாடுவது என்று முடிவெடுக்க வேண்டியது சானியாவே தவிர மற்றவர்களல்லர்" என்று வியாக்கியானம் பேசப்பட்டது. தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட்வீரர் சோயப் மாலிக்கை திருமணம்செய்ய முடிவெடுத்திருப்பதற்கு அப்போது பெண்ணுரிமைபேசிய கழிசடைகள்தான் தற்போது எதிர்ப்பு தெரிவிக்கின்றன(ர்).

சானியாவுக்கு வழங்கப்பட்ட விருதுகளை திரும்பப்பெற வேண்டுமாம்.சானியா இந்தியாவுக்காக இனி விளையாடக் கூடாதாம்! சானியாவை நாடுகடத்த வேண்டுமாம்!அதெல்லாம் சரி! போனமாதம்வரை வாய்கிழியக்கூக்குரலிட்ட பெண்ணுரிமை என்னானது? யாருடைய விந்தை தன் கருப்பையில் சுமக்க வேண்டுமென்று முடிவுசெய்ய வேண்டிய உரிமைகோரிய தஸ்லிமாவுக்கு இந்தியாவில் இருக்கும் உரிமையை விடவா சானியா மோசமான உரிமை கோரிவிட்டார்?

இருவர் மனம்விரும்பி முறையற்ற உறவு கொள்வதே தவறல்ல என்று நமது உச்சநீதிமன்றம் சொல்லியுள்ளபோது முறையாகத் திருமணம் செய்வதைத் தடுப்பது சட்டப்படியும் சானியாபடியும் உரிமைமீறலே!!

*************

நடிகை குஷ்பு பேசிய கற்பு விவகாரத்தில் கருத்துச்சொன்ன உச்சநீதிமன்ற நீதிபதிகள், இருவர் விரும்பி தவறான உறவு வைத்துக் கொண்டால் சட்டப்படி குற்றமில்லை.அதைத் தடுப்பதற்கு இந்திய குற்றவியல் சட்டத்தின் எந்தப் பிரிவிலும் வழியில்லை" என்றதோடு குஷ்புவுக்கு எதிராக வழக்காடிய வக்கீலைப் பார்த்து,"குஷ்புவின் கருத்தால் நீங்கள் எப்படி நேரடியாகப் பாதிக்கப்பட்டீர்கள்? உங்களுக்கு மகள் இருக்கிறாரா?" என்றெல்லாம் கேட்டுள்ளனர்.

நமது விபச்சாரத் தடுப்புச் சட்டத்திலுள்ள ஓட்டைகளைச் சொல்லி,அவற்றை அடைக்கும்படி அரசுக்கு பரிந்துரை செய்திருந்தால் நீதிபதியின் சமூக அக்கரை பாராட்டப் பட்டிருக்கும். பொது நலனுக்காக வழக்கிட்டவரை நேரடியாக எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதன் மூலம்,நேரடி பாதிப்பு ஏற்படாதவரை எந்தக் குற்றமும் சட்டப்படி தவறல்ல என்று சொல்கிறார்களோ?

இனிமேல் விபச்சார வழக்குகளில் பிடிபடுபவர்களெல்லாம் இதே காரணத்தை போலீஸாரிடம் திருப்பிக்கேட்டால் சமூக ஒழுங்கு,கலாச்சாரம் என்னாவது? இருவர் மனம்விரும்பி விபச்சாரம் செய்வதைப்போல்,விரும்பி போதை மருந்து சாப்பிட்டாலும் இதே லாஜிக் பொருந்தும்தானே!மேலும் அதனால் நீதிபதி நேரடியாகப் பாதிக்கப்படவில்லையே! நித்தியானந்தாவுக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் 'நியாயம்' கிடைக்காவிட்டால் உச்சநீதிமன்றம் செல்லலாம்!

***************

ரஞ்சிதாவுடன் படுக்கையறையில் ஆனந்தக்கூத்தாடிய நித்தியானந்தாவை போலீஸார் எப்போது பிடித்து சட்டத்தின் முன் கொண்டுவருவார்கள் என்று தெரியவில்லை. கும்பமேளாவிலிருந்து வீடியோ விளக்கங்கள் கொடுத்து வரும் இவனைப்பிடிப்பதில் போலீசுக்கு என்ன சிரமமோ தெரியவில்லை. சங்கராச்சாரியாருக்குக் கிடைத்ததுபோல் பல்டியடிக்கும் சாட்சிகளுக்காகக் காத்திருக்கிறார்களோ என்னவோ?

****************

காஞ்சி சங்கராச்சாரியார் ஆண்டவனின் அணுக்கிரகத்தால் இன்னும் சில நாட்களில் விடுதலை அடைந்து புதுப்பொழிவுடன் காஞ்சிமடத்திலிருந்து அருளாசி வழங்குவார் என்றே தெரிகிறது. அவருக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்த சாட்சிகள்பலர் அடுத்தடுத்து அந்தர்பல்டி அடித்துள்ள நிலையில் இனிமேலும் மகா அப்பாவி சங்கராச்சாரியாரை கோர்ட்டு வழக்கு என்று நீதிமன்றப் படியேறச் செய்வது தர்மமல்ல! துறவிகள் பாவம் பொல்லாதது!

Mon 29

Click here to bookmark this link.Channel Image08:55 மக்காவில் அமைய இருக்கும் உலகின் மிகப்பெரிய மணிக்கூண்டு! அத்தாட்சிகள்


Tue 16

Click here to bookmark this link.Channel Image09:53 உள்ளங்களைப் புரட்டக் கூடியவனே! யா அல்லாஹ்வே!! அத்தாட்சிகள்


Fri 05

Click here to bookmark this link.Channel Image00:59 தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்! பிரார்த்தனை பேழை
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 'அல்லாஹும்ம! அன்த்த ரப்பீ. லா இலாஹ இல்லா அன்த்த. கல்க்த்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க, வ வஅதிக்க மஸ்ததஅத்து. அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸனஅத்து. அபூ உ லக்க பி நிஃமத்திக்க அலய்ய, வ அபூ உ லக்க பி தன்பீ. ஃபஃக்பிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக்பிருத் துனூப இல்லா அன்த்த' என்று ஒருவர் கூறுவதே தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரலாகும்.

பொருள்: அல்லாஹ்! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமை. நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதி மொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்றவரை நிறைவேற்றியுள்ளேன். நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். நீ எனக்கு அருட்கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். மேலும், நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் (மறைக்காமல்) ஒப்புக் கொள்கிறேன். எனவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறெவரும் இல்லை.)

اَللّهُمَّ أَنْتَ رَبِّي ، لاَ إِلهَ إِلاَّ أَنْتَ ، خَلَقْتَنِي ، وَأَنَا عَبْدُكَ ، وَأَنَا عَلىَ عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ ، أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ ، أَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ ، وَأَبُوْءُ بِذَنْبِيْ ، فَاغْفِرْ لِيْ ، فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ .

இந்தப் பிரார்த்தனையை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் பகலில் கூறிவிட்டு அதே நாளில் மாலை நேரத்திற்கு முன்பாக இறப்பவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார். இதை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் இரவில் கூறிவிட்டுக் காலை நேரத்திற்கு முன்பே இறந்து விடுகிறவரும் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார் என ஷத்தாத் இப்னு அவ்ஸ்(ரலி) அறிவித்தார்.

புகாரி: ஹதீஸ் எண்: 6306

Sun 14

Click here to bookmark this link.Channel Image05:11 மறைபொருள் குறும்பட விமர்சனம்! பெண் விடுதலை!
"மறைபொருள்" என்ற பெயரில் பொன்.சுதா தயாரித்திருந்த குறும்படத்தை நண்பர் ஒருவர் மின் அஞ்சலில் அனுப்பியிருந்தார். சுட்டி: http://www.youtube.com/watch?v=O9Ukt5-rXls&NR=1 அதனைப் பற்றிய பார்வையை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். அழகான கவிதை போன்று இப் படத்தைக் கொடுத்துள்ள பொன்.சுதா - விற்கு முதலில் வாழ்த்துக்கள்! டெக்னிலாக ஓரிரு குறைகள் கண்ணில் பட்டாலும் கருப் பொருளுக்குத் தொடர்புடைய, மனதில் தோன்றிய

Sun 07

Click here to bookmark this link.Channel Image05:15 தமிழ்ச்செல்வனுக்கு ... வஹ்ஹாபி
கடந்த 08.01.2010 திண்ணை இதழில் வெளியான எனது "புதுவகை நோய்: இமி-4" எதிர்வினைக் கட்டுரை[சுட்டி-01]இல் "தம் உறவினர்களின் நலனுக்காக, சொந்த நாட்டின் இராணுவ இரகசியங்களை எதிரி நாட்டுக்குக் கசியவிடுதல் ஒரு முஸ்லிமுக்குத் தகாது என்பது இங்கு இஸ்லாத்தின் மார்க்கக் கட்டளையாகக் கூறப் படுகிறது. இந்தியாவின் பிரிவினை சதிக்குப் பிறகு முளைத்த பாகிஸ்தானில் இந்திய முஸ்லிம்களின் உறவினர்கள் இன்றும் வாழ்கிறார்கள் என்பதும் இந்திய இராணுவ இரகசியங்களைப் பாகிஸ்தானுக்குப் 'போட்டுக் கொடுத்தவர்'களின் பட்டியலில் இந்திய முஸ்லிம் எவரும் இடம்பெறவில்லை என்பதும் இங்குக் குறிப்பிடத் தக்கது" எனும் வரிகளை மறுத்து, "வஹ்ஹாபியின் மோசடி" எனும் தலைப்பில் தமிழ்ச்செல்வன் என்பார் பாகிஸ்தானுக்குப் போட்டுக் கொடுத்த இந்திய முஸ்லிம்கள் என்பதாக ஐந்து சுட்டிகளைக் கொடுத்திருந்தார் [ சுட்டி-02].

அவற்றுள் முதலாவதில் [சுட்டி-03] அஃப்ரோஸ் என்பவன் நமது இராணுவ முகாம்களைப் பற்றிய தகவல்களைப் பாகிஸ்தானுக்குப் 'போட்டுக் கொடுக்க' முயன்று கடந்த 11.08.2006ஆம் தேதி ராம்பூரில் கைது செய்யப் பட்டு, 19.02.2009 அன்று லக்னவ் நீதிமன்றத் தீர்ப்புப்படி பத்தாண்டு காலம் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டவன்.

அஃப்ரோஸ் வழக்கில் நாம் கருத்தில் கொள்ள வேண்டுவது யாதெனில், தன் உறவினர்களின் பொது நலன் கருதி அவன் போட்டுக் கொடுத்தவன் அல்லன். யாரோ போட்டுக் கொடுத்ததைக் காசுக்காக "வாங்கிக் கொடுக்க" முயன்று தோற்றுப் போனவன்.

"அஃப்ரோஸிடமிருந்து கைப்பற்றப் பட்ட ஆவணங்கள் இரகசியக் குறியீடுகளைக் கொண்டவை என்றும் ஆனால் இரகசியத் தகவல்களை அவன் எவ்வாறு பெற்றான் என்பதைக் கண்டு பிடிக்க முடியவில்லை என்றும் நமது இராணுவ அதிகாரி ஒருவர் உறுதிப் படுத்தியிருக்கிறார்" என்பதாக மாவட்டக் குற்றப் பிரிவின் துணை ஆலோசகர் இர்ஃபான் அஹ்மது கான் குறிப்பிட்டதை இந்தியன் எக்ஸ்ப்ரஸ் 21.02.2009 இதழ் Pakistani spy gets 10-year jail term என்று பொருள் மயக்கம் தரும் தலைப்போடு வெளியிட்டுள்ளது [சுட்டி-04].

ஏறத்தாழ மூன்றாண்டு காலம் நடைபெற்ற விசாரணையில் நமது இராணுவ இரகசியங்களை அவனுக்குப் 'போட்டுக் கொடுத்த' புள்ளி யார் எனும் தகவலை அவனிடமிருந்து கறக்க முடியவில்லையா? அல்லது புள்ளி பெரியது என்பதால் வெளியிடவில்லையா? என்பதெல்லாம் நமக்குப் புரியாத புதிர்கள்.

தண்டனை கொடுக்கப் பட்ட இன்னொரு வழக்கில், ஜஹான் ஆரா எனும் பெண் வருகிறாள். தொலைக்காட்சி வழியாக உலகம் முழுக்கக் காண்பிக்கப் படும் நமது குடியரசு நாள் அணிவகுப்பில் இடம்பெறும் ஆயுதங்களை நிழற்படம் எடுத்துப் பாகிஸ்தானைச் சேர்ந்த மாலிக் என்பவனுக்குக் கொடுத்ததாகவும் அவனிடமிருந்து 10 கையெறி குண்டுகளைப் பெற்று அவற்றுள் எட்டை முஸாஃபர் நகரைச் சேர்ந்த இஃப்திகார் என்பவனுக்குக் கொடுத்ததாகவும் வழக்கு. அவள் 20.09.1994இல் கைது செய்யப் பட்ட இடம் பாகிஸ்தான் ஹை கமிஷன் அலுவலகம். Terrorist And Disruptive Activities (Prevention) Act (TADA) மற்றும் Official Secrets Act (OSA) விதிகளின்படி அவளுக்கு ஆறாண்டு கடுங்காவல் தண்டனையும் ரூபாய் ஐயாயிரம் அபராதமும் விதித்து (ஏழாண்டுகள் கழித்து) 07.03.2001இல் உ.பி. நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கையெறி குண்டுகள் பெற்றுக் கொண்டதற்கான சான்றுகளை இஃப்திகாரிடமிருந்து கைப்பற்ற முடியாமல் அரசுத் தரப்புக் கையைப் பிசைந்து நின்றதால் அவன் வழக்கிலிருந்தே விடுவிக்கப் பட்டான் [சுட்டி-05].

மற்ற மூன்று சுட்டிகளில் உள்ள தகவல்கள் கைதுப் படலம்வரை நின்று விடுபவை. வழக்கு நடந்ததா? தீர்ப்பு வந்ததா? போன்ற கூடுதல் விபரங்களைப் பெற முடியவில்லை. அவற்றுள் 1995இல் இராணுவத்தில் இணைந்த முஹம்மது நஸீம் என்பவனது வழக்கு முக்கியமானது. அவன், கார்கில் தியாகி அஹ்மது அலீ [சுட்டி-06] வகித்த Lance Naik பதவி வகித்தவன். அவன் 2006 மார்ச் மாதம் அலீ ஜாட்டூன் எனும் ஐ.எஸ்.ஐ ஏஜண்டோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு நமது இராணுவ நிலைகள், வீரர்கள் பயன்படுத்தும் ஆயுதங்கள் போன்ற தகவல்களை ஏஜண்டுக்குத் தெரிவித்ததாக 29.06.2007இல் டெல்லியில் வைத்துக் கைது செய்யப் பட்டான்.

நமது இராணுவம் ஒளிந்து கொண்டோ துப்பாக்கிகளை ஒளித்து வைத்துக் கொண்டோ போர் செய்யவில்லை. வேண்டிய தகவல்களை வெளிப்படையாகவே வைத்திருக்கிறோம் [சுட்டி-07]. அமெரிக்காவினால் இரண்டாவது செல்லப் பிள்ளையாகத் தத்து எடுக்கப் பட்ட பாகிஸ்தான்காரன் இதுபோன்ற சப்பைத் தகவல்களுக்கு 50,000 ரூபாய் கொடுத்திருக்கிறான் [சுட்டி-08] என்றால் நிச்சயம் அவன் கேனையன்தான். அவன் கேனையனாகவே இருக்கட்டும்; அதுதான் நமக்கு நல்லது.

அதேபோல், பாகிஸ்தானில் உள்ள உறவினர்களைக் காணச் சென்ற மோரீகான் மற்றும் அப்பாஸ்கான் ஆகிய இருவரையும் பாகிஸ்தானின் உளவுத்துறையினர் என்று 'சொல்லப் படுகின்ற' சிலர் அணுகி இந்திய இராணுவத்தைக் குறித்துத் தகவல் கேட்டதாகவும் கைப்பேசி வழியாக இருவரும் காசுக்காகத் தகவல்கள் கொடுத்ததாகவும் 'சொல்லப் படுகின்ற' வழக்கும் ஒன்று. இதில் reportedly working as spies, Morey apparently told cops போன்ற சொற்கள் மூலம், வழக்குக் கெட்டிப் படுத்தப் படாமல் இருப்பதாக அறிய முடிகிறது [சுட்டி-09].

இறுதியாக, கைப்பேசிகளும் பாகிஸ்தானியப் பணமும் வைத்திருந்ததாக அனீஸ்கான், அனீக்கான், கோராகான் ஆகிய மூவரை 04.05.2007இல் கைது செய்த வழக்கு [சுட்டி-10]. மூவரையும் Official Secrets Act (OSA) விதியின்கீழ் நமது இராணுவம் கைது செய்து ஃபாஸில்கா காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளது. கூடுதல் விபரங்கள் கிடைக்கவில்லை.

தமிழ்ச்செல்வன் வெறும் சுட்டிகளாகக் கொடுத்தவற்றைத் தேடிப் பிடித்து இங்கு நான் விளக்கமாக எடுத்து வைப்பதற்குக் காரணம், என்னைப் போன்றே வாசகர்கள் பலருக்கு/சிலருக்கு மேற்காண்பவை புதிய தகவல்களாக இருக்கக் கூடும். இணையத்தில் "உளவு" எனும் சொல் குறித்துத் தேடியபோது மாலிக் என்பவனைப் பற்றி மரைக்காயர் எனும் பதிவர் தனது வலையில் விபரம் கொடுத்திருந்தார் [சுட்டி-11]. அப்பதிவின் அடியில் கண்ட தொடர்புடைய அவரது பழைய பதிவுகளான
1. உளவுத் துறையில் ஒரு கருப்பு ஆடு [சுட்டி-12],
2. இராணுவ இரகசியங்களை விற்க முயன்ற இராணுவ வீரர் [சுட்டி-13],
3. இராணுவத்தில் உளவாளிகள் ஊடுருவல் [சுட்டி-14],
4. முக்கிய ஆவணங்களைத் திருடிய முன்னாள் இராணுவ அதிகாரி கைது [சுட்டி-15],
5. அரசு உயர்மட்டத்தில் தொடரும் நாட்டிற்கெதிரான துரோகங்கள் [சுட்டி-16]

ஆகியவற்றைப் படித்துப் பார்த்து அதிர்ந்து போனேன்! திண்ணை வாசகர்கள் சிலருக்காவது அவை புதிய தகவலாக இருக்கக் கூடும். தகவல் தெரியாத திண்ணை வாசகர்களை, "மோசடி"க்காரர்கள் என்று தமிழ்ச்செல்வன் சொல்ல மாட்டார் என்று நம்புவோமாக!

எவ்வாறாயினும், எனது "புதுவகை நோய்: இமி-4" எதிர்வினைக் கட்டுரை[சுட்டி-01]இல் "தம் உறவினர்களின் நலனுக்காக, சொந்த நாட்டின் இராணுவ இரகசியங்களை எதிரி நாட்டுக்குக் கசியவிடுதல் ஒரு முஸ்லிமுக்குத் தகாது என்பது இங்கு இஸ்லாத்தின் மார்க்கக் கட்டளையாகக் கூறப் படுகிறது" எனும் பேசுபொருளிலும் அவ்வாறு தகாத செயல்களைச் செய்வோர் இஸ்லாத்தின் கட்டளைகளை மீறியோர் என்பதிலும் தண்டனைக்கு உரியோர் என்பதிலும் எவ்வித மாற்றமும் இல்லை.

நன்றி!
ஃஃஃ

திண்ணையில் ...

சுட்டிகள்:
01 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=81001081&format=html
02 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=81001153&format=html
03 - http://newshopper.sulekha.com/man-gets-10-year-jail-for-spying-for-pakistan_news_1038667.htm
04 - http://www.indianexpress.com/news/pakistani-spy-gets-10year-jail-term/426409/
05 - http://www.hinduonnet.com/2001/03/08/stories/0208000q.htm
06 - http://www.kashmir-information.com/Heroes/ali.html
07 - http://indianarmy.nic.in/Index.aspx?flag=LfcULYFlbeQ=
08 - http://news.webindia123.com/news/ar_showdetails.asp?id=706300614&cat=&n_date=20070630
09 - http://www.tribuneindia.com/2009/20090620/nation.htm#11
10 - http://www.dailyexcelsior.com/web1/06may07/news.htm#10
11 - http://maricair.blogspot.com/2007/06/raw.html
12 - http://maricair.blogspot.com/2006/08/blog-post.html
13 - http://maricair.blogspot.com/2006/10/blog-post.html
14 - http://maricair.blogspot.com/2006/10/blog-post_24.html
15 - http://maricair.blogspot.com/2006/11/blog-post_05.html
16 - http://maricair.blogspot.com/2006/11/blog-post_12.html

Thu 04

Click here to bookmark this link.Channel Image15:35 'குல் ஹுவல்லாஹு அஹத்' எனும் (112 வது) அத்தியாயத்தின் சிறப்பு. பிரார்த்தனை பேழை
அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார். ஒருவர் 'குல்ஹுவல்லாஹு அஹத்' எனும் (112 வது) அத்தியாயத்தைத் திரும்பத் திரும்ப ஓதிக்கொண்டிருந்ததை மற்றொரு மனிதர் செவிமடுத்தார். (இதைக்கேட்ட) அந்த மனிதர் விடிந்ததும் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து அதைப் பற்றிக் கூறினார். அந்தச் சிறிய அத்தியாயத்தை(த் திரும்பத் திரும்ப அவர் ஓதியதை) இவர் சாதாரணமாக மதிப்பிட்டதைப் போல் தெரிந்தது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! அந்த அத்தியாயமும் குர்ஆனின் மூன்றில் ஒரு பங்கிற்கு ஈடானதாகும்'' என்று கூறினார்கள்.

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி, 'ஓர் இரவில் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை உங்களில் ஒருவரால் ஓத முடியாதா?' என்று கேட்டார்கள். அதனைச் சிரமமாகக் கருதிய நபித்தோழர்கள், 'எங்களில் யாருக்கு இந்தச் சக்தி உண்டு, இறைத்தூதர் அவர்களே!'' என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் ஒருவனே. அல்லாஹ் தேவையற்றவன்' (என்று தொடங்கும் 112 வது அத்தியாயம்) குர்ஆனின் மூன்றிலொரு பகுதியாகும்' என்று கூறினார்கள்.

ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் படுக்கைக்கு (உறங்கச்) சென்றால் ஒவ்வோர் இரவிலும் தம் உள்ளங்கைகளை இணைத்து, அதில் 'குல் ஹுவல்லாஹு அஹத்', 'குல் அஊது பிரப்பில் ஃபலக்', ' குல் அஊது பிரப்பின்னாஸ்' ஆகிய (112, 113, 114) அத்தியாயங்களை ஓதி ஊதிக்கொள்வார்கள். பிறகு தம் இரண்டு கைகளால் (அவை எட்டும் அளவிற்கு) தம் உடலில் இயன்ற வரையில் தடவிக் கொள்வார்கள். முதலில் தலையில் ஆரம்பித்து, பிறகு முகம், பிறகு தம் உடலின் முற்பகுதியில் கைகளால் தடவிக் கொள்வார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள்.

Sun 31

Click here to bookmark this link.Channel Image08:45 குங்க்ஃபூ கற்கும் ஹைதராபாத் பள்ளி முஸ்லிம் மாணவிகள்! பெண் விடுதலை!
சீன மொழியில் உஷு (武术 - wushu martial arts) எனப்படும் வீரமிக்க போர் தந்திரக் கலையை ஹைதராபாத்தில் உள்ள St. Maaz high school முஸ்லிம் பெண்களுக்கு பயிற்றுவிக்கிறது. பள்ளி வளாகத்திற்கு உள்ளாகவே வாரம் ஒருமுறை பயிற்றுவிக்கப்படும் இக்கலையினை இப்பள்ளியின் பெண்கள் ஆர்வமுடன் கற்றுத் தேர்ந்து வருகின்றனர். தவறான பார்வைகளிலிருந்து ஒரு பெண் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஹிஜாப் பெரிதும் உதவுகிறது என்பதும், ஹிஜாப்
Click here to bookmark this link.Channel Image04:22 பின்லேடனும் இத்துப்போன ஆடியோ கேஸட்டுகளும் எதிரொலி


ஒசாமா பின்லேடனின் சமீபத்திய வீடியோ டேப், இதுவரை அவரிடமிருந்து வந்த அனைத்து வீடியோ டேப்களையும் விடவும் காமெடியாக உள்ளது. பெரும்பாலும் அமெரிக்க மற்றும் நேட்டோ கூட்டுப் படைகளுக்கு எதிராக வீடியோ டேப் எச்சரிக்கை விடுத்து வந்த திருவாளர் பின்லேடன், தற்போது புவி வெப்பநிலை உயர்வுக்கும் அமெரிக்காவே காரணம் என்று வீடியோ டேப்பில் பேசி அனுப்பியுள்ளார்.

அல்ஜஸீரா தொலைக்காட்சி ஒளிபரப்பிய வீடியோ செய்தியில் பின்லேடன் கூறுகையில்,அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் நெருக்கடிக்கும் புவி வெப்ப மயத்துக்கும் அமெரிக்காவும்,மேற்கத்திய நாடுகளுமே காரணமென குற்றம் சாட்டியுள்ளதோடு மூன்றாம் உலக நாடுகளின் வெள்ளம்,பட்டினி,பஞ்சம், காடுகள் அழிப்புக்கும் அமெரிக்காவே காரணம் என்று சாடியுள்ளது காமெடி. மனிதர்களை மட்டும் துல்லியமாகக் குறிவைத்து அழிக்கும் அசைவ தேசம் அமெரிக்காவை,காடுகள் அழிப்புகளைச் சொல்லி சைவமாக்கும் சதித்திட்டம் இருக்குமோ என்னவோ!

நியூயார்க் வர்த்தக மையங்களைத் தகர்த்த பெருமை கொண்ட பின்லேடன், வெடிக்காத வெடிகுண்டுகளை வைத்து மிரட்டுமளவுக்கு தரம்தாழ்ந்து வந்து இருப்பதிலிருந்து அல்காயிதா நெட்வொர்க்கை செயலிழந்து முடக்கப்பட்டு விட்டதும் வெட்டவெளிச்சமாகி உள்ளது. கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று டெட்ராய்ட் விமானத்தில் இத்துப்போன குண்டைக் கடத்தியதை, வழக்கம் போல் அல்காயிதா நேர்மையாகப் பொறுப்பேற்றுக் கொண்டதோடு, அதிபர் ஒபாமாவுக்கு கிறிஸ்துமஸ் போனஸாக எச்சரிக்கைகளையும் வழங்கியது.

பின்லேடன் பேசியதாகச் சொல்லப்படும் இத்தகைய அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஆடியோ-வீடியோ டேப்கள் எல்லாமே வழக்கொழிந்து போய்விட்ட பழையவகை ஆடியோ கேசட்டில் பேசிப் பதிவு செய்தே அனுப்பப்படுகிறது. இதுகுறித்து எந்தப் புலணாய்வு அமைப்புக்கும் எவ்வித சந்தேகமும் எழாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது.

சந்தையில் கிடைக்காத புத்தம் புதிய கேஸட்டுகள் பின்லாடனுக்கு மட்டும் யார் சப்ளை செய்கிறார்களோ தெரியாது! பின்னணியில் சீனா அல்லது ரஷ்யா இருக்கக்கூடும்?

அமெரிக்காவை கலங்கடிக்கும் ஓர் உலக மகா தீவிரவாதி இன்னும் பழைய ஆடியோ டேப் ரெக்கார்டரை வைத்துக் கொண்டு மிரட்டுவது மனசுக்குக் கஷ்டமாக உள்ளது. ;-))) FLASH DRIVE அல்லது MP3 வாய்ஸ் ரெக்கார்டரை, அல்ஜஸீராவுக்கு அனுப்ப வேண்டிய கேசட்டுகளைப்போடும் அதே குப்பைத் தொட்டியில் போட்டுவைத்தால்,இனி MP3, MPEG 4 ஃபார்மட்டில் நிறைய காமெடிகளை பேசி அனுப்பி வைப்பார்.

இதுகுறித்த மேலதிக காமெடியை இந்தச் சுட்டியில் வாசிக்கவும்.

Sat 30

Click here to bookmark this link.Channel Image11:06 புதுவகை நோய்: இமி-முற்றியது வஹ்ஹாபி
அகழிப் போரைப் பற்றிய அனைத்து விபரங்களும் வரலாற்றுப் பதிவுகளாகும். அவை அகழாய்வு செய்து கண்டுபிடிக்க வேண்டிய தேவையிற்றி பல மொழிகளிலும் இணையத்தில் விரவிக் கிடக்கின்றன.

அகழிப் போரை ஏற்பாடு செய்தவர்கள் யூதர்கள் ஆவர்! அவர்களது துரோகத்தாலும் சூழ்ச்சியாலும் உருவானதே அகழிப் போர்.

இணைகற்பிப்பவர்களான மக்காவாசிகளுக்கும் இஸ்லாமியப் படை வீரர்களான மதீனத்து முஸ்லிம்களுக்கும் மதீனாவை அடுத்துள்ள மலைப் பகுதியான உஹதில் ஒரு போர் நடைபெற்றது. காலம் ஹிஜ்ரீ மூன்றாம் ஆண்டு ஷவ்வால் (பத்தாவது) மாதம். அப்போரின் இறுதியில், "அடுத்த ஆண்டு பத்ருக் களத்தில் ஷஅபான் (எட்டாவது) மாதம் நாம் உங்களைச் சந்திப்போம்'' என்று முஸ்லிம்களுக்கு மக்காவின் தலைவர் அபூஸுஃப்யான் சவால் விட்டிருந்தார்; முஸ்லிம்களும் ஏற்றுக் கொண்டிருந்தனர் [சுட்டி-42].

ஆனால் ஒப்புக் கொண்டபடி மக்காவிலிருந்து அடுத்த ஆண்டில் எவரும் படை திரட்டி வரவில்லை.

யூதத் தலைவர்களுள் 20 பேர் மக்கத்துக் குறைஷிகளிடம் வந்து, அவர்களை நபியவர்களுக்கு எதிராகப் போர் புரியத் தூண்டினர். குறைஷிகள் மதீனாவின் மீது படையெடுத்தால் அதற்கு உதவியும் செய்வதாக வாக்களித்தனர். "பத்ருக் களத்தில் அடுத்த ஆண்டு சந்திப்போம்" என்று உஹதுப் போர்க்களத்தில் சவால் விடுத்து, அதை நிறைவேற்றாமல் வாக்கை மீறிவிட்ட குறைஷிகள், தற்போது தங்களது பெருமையைத் தக்கவைத்துக் கொள்ள விரும்பி யூதர்களின் தூண்டுகோலுக்கு இரையானார்கள்.

இத்துணைக்கும் யூதர்களும் முஸ்லிம்களும் ஒப்புக் கொண்ட, கீழ்க்காணும் 12 அம்ச உடன்படிக்கை ஒன்று ஏற்கனவே உருவாக்கப் பட்டிருந்தது:

(01) அவ்ஃப் கிளையினரைச் சேர்ந்த யூதர்கள், முஸ்லிம்களுடன் இணைந்த ஒரே சமுதாயத்தினராகக் கருதப்படுவர். இந்த யூதர்களுக்கு அவர்களது மார்க்கத்தில் முழு உரிமை உண்டு. முஸ்லிம்களுக்கும் அவர்களுடன் நட்பு கொண்டவர்களுக்கும் அவர்களின் மார்க்கத்தில் முழுச் சுதந்திரம் உண்டு. இவ்வாறே அவ்ஃப் கிளையினரைச் சாராத மற்ற யூதர்களுக்கும் அவர்களது மார்க்கத்தில் முழுச் சுதந்திரம் உண்டு.
(02) யூதர்கள் தங்களின் செலவுகளுக்குத் தாங்களே பொறுப்பாளிகளாவர். அவ்வாறே முஸ்லிம்களும் தங்களின் செலவுகளுக்குத் தாங்களே பொறுப்பாளிகளாவர்.
(03) இந்த உடன்படிக்கை உடையவர்களிடம் யார் போர் தொடுத்தாலும் அவருக்கு எதிராக முஸ்லிம்களும் யூதர்களும் தங்களுக்குள் ஒருவர் மற்றவருக்கு உதவி செய்துகொள்ள வேண்டும்.
(04) யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலுள்ள தொடர்பு - நலம் நாடுதல், ஒருவருக்கொருவர் நல்லுபதேசம் செய்தல், உபகாரம் புரிதல் - என்ற அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும்; குற்றம் புரிவதில் துணை போவது கூடாது.
(05) ஒருவரின் நண்பன் செய்த குற்றத்திற்காக அவர் குற்றவாளியாக மாட்டார்.
(06) அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
(07) பிறருக்கு எதிரானப் போரில் முஸ்லிம்களுடன் யூதர்கள் கலந்துகொள்ளும்போது யூதர்களும் போர்ச் செலவுகளில் பங்கெடுக்க வேண்டும்.
(08) இவ்வுடன்படிக்கையில் கலந்து கொள்பவர்கள் மதீனாவில் குழப்பம் விளைவிப்பதோ, விஷமத்தனம் செய்வதோ, இரத்தம் சிந்தச் செய்வதோ முற்றிலும் தடுக்கப்பட்டதாகும்.
(09) இந்த உடன்படிக்கையில் கலந்து கொண்டவர்களுக்கு மத்தியில் ஆபத்தான சண்டை, சச்சரவுகள் அல்லது ஏதும் பிரச்னைகள் நிகழ்ந்தால் அதற்குரிய தீர்வு, அல்லாஹ்வும் அவனது தூதர் முஹம்மது (ஸல்) மூலம் பெறப் படும்.
(10) குறைஷிகளுக்கும், குறைஷிகளுக்கு உதவி செய்பவர்களுக்கும் பாதுகாப்புக் கொடுக்கக் கூடாது.
(11) யாராவது மதீனாவின் மீது முற்றுகையிட்டால் அவர்களுக்கெதிராக அனைவரும் போர் புரிய வேண்டும். தங்களுக்குள் உதவி செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தாங்கள் இருக்கும் பகுதியைப் பாதுகாக்க வேண்டும்.
(12) இந்த உடன்படிக்கை, அநியாயக்காரனையும், குற்றவாளியையும் தண்டனையிலிருந்து பாதுகாக்காது [சுட்டி-43].

மேற்காணும் உடன்படிக்கையை யூதர்கள் முறித்தனர்.

மக்காவின் குறைஷியர், திஹாமாவின் கினானாவினர், ளஹ்ரானின் ஸுலைமியர், கீழ்த்திசையின் கத்ஃபானியர், ஃபஜாராவினர், முர்ராவினர், அஷ்ஜவினர், அஸதியர், ஆகிய பல குலத்தவரை முஸ்லிம்களுக்கு எதிராக ஒருங்கிணைப்பதில் அயராது ஈடுபட்ட 20 யூதக் தலைவர்கள் அடங்கிய குழு, ஏறத்தாழப் பத்தாயிரம் பேர் கொண்ட படையைத் திரட்டி மதீனாவை முற்றுகையிட அனுப்பி வைப்பதில் வெற்றி பெற்றனர்.

மதீனத்து முஸ்லிம்களுள் போரில் ஈடுபடத் தகுதியுடையோர் அப்போது ஏறத்தாழ மூவாயிரம் பேர் மட்டுமே. மதீனாவை எதிரிகளிடமிருந்து எவ்வாறு காப்பது?

அது புலப்பெயர்வின் (ஹிஜ்ரீ) ஐந்தாம் ஆண்டின் இறுதிக் கட்டம். அக்கால கட்டத்தில் புதுமையான போர்த் தந்திரம் ஒன்று (இதைப் புனித மோசடியார் 'சூழ்ச்சி' என்று சொல்வார்) நபித்தோழர் ஸல்மான் அல் ஃபார்ஸீ (ரலி) அவர்களால் முன்மொழியப் பட்டது. மக்காவிலிருந்து மதீனாவுக்கு வரும் வழியைச் சுற்றிலும் அகழ் தோண்டி, எதிரிகளைத் தடுப்பது என்பது திட்டம்.

இன்றைக்கு நபியின் பள்ளிவாயில் இருக்குமிடத்திலிருந்து ஏறத்தாழ மூன்று மைல் தூரத்தில், மதீனாவின் அன்றைய நகர் எல்லையின் இறுதியில் நெடிய அகழி ஒன்று தோண்டப் பட்டது. எதிரிகள் மதீனாவில் எல்லையில் வந்து சேர்ந்து அகழைப் பார்த்துத் திகைத்து நின்றனர்.

இஸ்லாமிய எதிரிகள் மிகக் கோபத்துடன் அகழைச் சுற்றி வந்தார்கள். எங்காவது ஒரு சிறு வழி கிடைத்தால் அதன் மூலம் சென்று விடலாம் என்று முயன்றனர். ஆனால், முஸ்லிம்கள் அகழின் பக்கம் எதிரிகளை நெருங்கவிடாமல் அம்பால் தாக்கினர். அகழை நெருங்குவதோ அகழில் இறங்குவதோ அகழை மண்ணால் மூடி பாதை அமைப்பதோ எதிரிகளால் முடியாமலாகி விட்டது. முற்றுகையின்போது எதிரிகள் பலமுறை அகழியில் இறங்குவதற்கும் அதன் மீது பாதை அமைப்பதற்கும் மிகத் தீவிரமாக முயன்றனர். ஆனால், முஸ்லிம்களின் அம்பு மழைக்கு முன்னர் எதிரிகளின் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன.

இவ்வாறாக எதிரிகளின் 'அகழ் முற்றுகை' ஏறத்தாழ ஒருமாத காலம் நீடித்தது.

இதற்கிடையில், சாகசம் செய்வதாக எண்ணிக் கொண்டு அகழைக் கடக்க முனைந்த அம்ரு இப்னு அப்து உத், இக்ரிமா இப்னு அபூஜஹ்ல், ழரார் இப்னு கத்தாப் போன்றோர் அகழின் ஒரு குறுகிய இடத்தைத் தேடிப் பிடித்துத் தம் குதிரைகளுடன் இறங்கினர். அகழிக்கும் 'ஸல்உ' மலைக்கும் இடையிலுள்ள சதுப்பான இடத்தில் அவர்களது குதிரைகள் சிக்கித் தடுமாறின. இதைப் பார்த்த அலீ இப்னு அபூதாலிப் (ரலி), முஸ்லிம்கள் சிலரை அழைத்துச் சென்று எதிரிகள் திரும்ப ஓட முடியாதவாறு அவர்கள் வந்த வழியை அடைத்து விட்டார். இப்போது எதிரிகளும் முஸ்லிம்களும் நேருக்கு நேர் சந்தித்தனர். அம்ரு, "என்னிடம் நேருக்கு நேர் யார் மோதுவது?" என்று கேட்க, அலீ (ரலி) "நான்" என்றார்கள். அம்ருக்கு முன் நின்ற அலீ (ரலி), அவன் கோபமடையும்படி சில சொற்களைக் கூறவே அவன் கொதித்தெழுந்தான். தனது குதிரையின் காலை வெட்டி அதன் முகத்தில் வாளால் அறைந்து விட்டு அலீயை நோக்கிச் சீறினான். இருவரும் தங்களின் வாளைச் சுழற்ற, சில நொடிகளில் அலீ (ரலி) அவர்களின் வாள் அம்ரின் தலையைச் சீவியது. ஆயிரம் வீரர்களுக்குச் சமமானவன் என்று பெயர் பெற்ற அம்ரைப் பிண்டமாகப் பார்த்த மற்றவர்கள் பயந்து அகழைத் தாண்டி ஓட்டம் பிடித்தனர். குறைஷியருள் மாபெரும் வீரராக விளங்கிய இக்ரிமாகூட பயத்தால் தனது ஈட்டியையும் போட்டுவிட்டு ஓடினார்.

அந்நிகழ்வுதான் அகழிப் போர் வெற்றியின் திறவுகோல்.

இரண்டாவது தந்திரம் செய்தவர் இஸ்லாத்தில் அண்மையில் இணைந்திருந்த நுஐம் என்பார். இவரைத்தான் புனித மோசடியார் தனது மோசடிப் பதிவில் குறிப்பிட்டிருந்தார். எனவே, நுஐம் இப்னு மஸ்ஊத் இப்னு ஆமிர் என்பவரைப் பற்றி விளக்கமாகவே பார்த்து விடுவோம்.

உண்மையில் நுஐம், முஸ்லிம்களின் எதிரிப் படைகளுக்குத்தான் நன்மை செய்தார்; எவ்வாறு என்பதை இறுதியில் பார்ப்போம்.

பல்குலக் கலவையான எதிரிப் படைகளில் கத்ஃபான் எனும் ஒரு குலம் இடம் பெற்றிருந்ததை முன்னர் கண்டோம். அந்தக் குலத்தைச் சேர்ந்த நுஐம் இப்னு மஸ்ஊத் இப்னு ஆமிர் என்பவர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் முஸ்லிமாகி விட்டேன். ஆனால், நான் முஸ்லிமானது எனது கூட்டத்தினருக்குத் தெரியாது. எனவே, நீங்கள் முஸ்லிம்களுக்குச் சாதகமாக ஏதாவது செய்யச் சொன்னால், நான் அதன்படி செய்வேன்" என்றார். அதற்கு நபியவர்கள், "நீ தனியாக என்ன செய்துவிட முடியும்? உன்னால் முடிந்தால் எதிரிகளைத் திசை திருப்பும் தந்திரம் எதையாவது செய். ஏனெனில், போர் என்பதே ஒரு சூழ்ச்சிதான்" என்று கூறினார்கள்.

முதன் முதலாக நுஐம் சென்று சந்தித்தவர்கள், மதீனாவின் எல்லையோரத்தில் வசித்துக் கொண்டு இஸ்லாமிய எதிரிப் படையினருக்கு உணவுக்கான ஏற்பாடுகள் செய்து கொடுத்துக் கொண்டிருந்த மதீனத்து எட்டப்பர்களான குரைளா எனும் யூதக் குலத்தினர். நுஐம் குரைளா குலத்தாரிடம், "நான் உங்களை எந்தளவு விரும்புகிறேன் என்பதையும் எனக்கும் உங்களுக்கும் இடையிலுள்ள வலுவான தொடர்பையும் நீங்கள் நன்கு அறிவீர்கள்தானே?" எனக் கேட்டார். அதற்கவர்கள், "ஆம்!" என்றனர். "இந்த மதீனா உங்களுடைய ஊராகும். இதில்தான் உங்களுடைய சொத்துகளும் பிள்ளைகளும் பெண்களும் இருக்கின்றனர். நீங்கள் இந்த ஊரைவிட்டு வேறு எங்கும் தப்பித்துச் செல்ல முடியாது. ஆனால், குறைஷிகளின் நிலை வேறு. அவர்களும் கத்ஃபான்களும் முஹம்மதிடம் போர் செய்வதற்காக இங்கு வந்திருக்கின்றனர். நீங்களும் முஹம்மதுக்கு எதிராக அவர்களுக்கு உதவி செய்கிறீர்கள். ஆனால், அவர்களது ஊர் இதுவல்ல. அவர்களது செல்வங்களும் பிள்ளைகளும் இங்கு இல்லை. அவர்களுக்கு நல்ல வாய்ப்புக் கிடைத்தால் அதைப் பயன்படுத்திக் கொள்வார்கள். அப்படி வாய்ப்புக் கிட்டவில்லை என்றாலோ போரில் தோல்வியுற்றாலோ அவர்கள் தங்களது ஊர்களுக்குத் திரும்பச் சென்று உயிர் பிழைத்துக் கொள்வார்கள். நீங்கள் முஹம்மதிடம் வசமாக மாட்டிக் கொள்வீர்கள். முஹம்மது உங்களிடம் பழிதீர்த்துக் கொள்வார். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?" என்று கேட்டார். அதற்கு யூதர்கள், "நுஐமே! நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீ கூறுகிறாய்?" எனக் கேட்டனர். அதற்கவர், "நீங்கள் குறைஷியரிடம் அவர்களுள் சிலரை உங்களிடம் அடைமானமாக வைத்துக் கொள்ளக் கேளுங்கள். அவர்கள் சிலரை ஒப்படைக்காதவரை நீங்கள் அவர்களுக்கு ஆதரவாகப் போர் புரியாதீர்கள்" என்று அறிவுறுத்தினார். அதற்கு யூதர்கள், "நீ எங்களுக்குச் சரியான ஆலோசனை கூறிவிட்டாய்" என்று கூறினர்.

இதற்குப் பின் நேரடியாக நுஐம் குறைஷிகளைச் சந்தித்தார். அவர்களிடம், "உங்களை நான் நேசிப்பதையும் உங்களுக்கு நான் நல்லதையே செய்வேன் என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள் தானே?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "ஆம்! அப்படித்தான்" என்றனர். அப்போது குறைஷிகளிடம் நுஐம், "யூதர்கள் முஸ்லிம்களோடு செய்திருந்த உடன்படிக்கையை முறித்தது பற்றி இப்போது மிகவும் வருந்துகின்றனர். அதனால் உங்களிடமிருந்து உங்களின் சிலரை அடைமானமாக உங்களிடமிருந்து வாங்கி, அவர்களை முஹம்மதிடம் கொடுத்துத் தாங்கள் செய்த குற்றத்திற்குப் பரிகாரம் தேடிக்கொள்ள எண்ணுகின்றனர். ஆகையால், அவர்கள் உங்களிடம் உங்களின் ஆட்களை அடைமானமாகக் கேட்டால் நீங்கள் ஏற்றுக் கொள்ளாதீர்கள்" என்று கூறினார். அவ்வாறே கத்ஃபானியரைச் சந்தித்து குறைஷிகளிடம் கூறியது போன்று கூறினார்.

ஹிஜ்ரீ 5, ஷவ்வால் (பத்தாம்) மாதம் குறைஷிகள் யூதர்களுக்கு ஒரு செய்தி அனுப்பினர். அதாவது, "நாங்கள் இப்போது அந்நிய ஊருக்கு வந்திருக்கிறோம். எங்களின் குதிரைகளும் ஒட்டகங்களும் அழிந்துவிட்டன. நீங்கள் எங்களுடன் புறப்படுங்கள். நாம் அனைவரும் சேர்ந்து முஹம்மதிடம் போர் புரிவோம்" என்பதுதான் அந்தச் செய்தியின் சுருக்கம்.

அந்தச் செய்தி அனுப்பப் பட்ட நாள் சனிக்கிழமை!

குறைஷிகளின் அக்கோரிக்கையை யூதர்கள் நிராகரித்ததுடன், "இன்று சனிக்கிழமை. இந்நாளில் நாங்கள் செய்த குற்றத்திற்காக எங்களுக்கு இறைவனிடமிருந்து கிடைத்த தண்டனை [007:163] என்னவென்று உங்களுக்குத் தெரியும். எனவே, நீங்கள் உங்களின் ஆட்களை அடைமானமாக எங்களிடம் தரும்வரை நாங்கள் உங்களுக்கு ஆதரவாகச் சண்டையிட மாட்டோம்" என்று பதில் கூறினர். இச்செய்தியைத் தூதுக்குழு குறைஷிகளிடம் சேர்த்தபோது, "நுஐம் நமக்கு உண்மைதான் கூறியிருக்கிறார்" என்று குறைஷிகளும் கத்ஃபான்களும் கூறினர்.

அதற்குப்பின் இவர்கள் மீண்டும் யூதர்களிடம் தங்களின் குழுவை அனுப்பி, "நாங்கள் உங்களிடம் எங்கள் ஆட்களில் எவரையும் அனுப்ப மாட்டோம். நீங்கள் எங்களோடு இணைந்து கொள்ளுங்கள். நாம் சேர்ந்து முஹம்மதிடம் போர் புரிவோம்" என்றனர். இதைக் கேட்ட யூதர்கள், "அல்லாஹ்வின் மீது ஆணையாக! நுஐம் நம்மிடம் உண்மையைத்தான் கூறினார்" என்று தங்களுக்குள் கூறிவிட்டு, வந்த குறைஷித் தூதர்களைத் திருப்பி அனுப்பி விட்டனர். இதன்மூலம் இரு தரப்பினருக்குமிடையில் பிரிவினை ஏற்பட்டது. மதீனத்து யூதர்கள் குறைஷிகளுக்கு உதவுவதைக் கைவிட்டனர். இதனால் குறைஷிகளின் உறுதி குலைந்தது [சுட்டி-44].

ஏறக்குறைய முற்றுகை முடிவுக்கு வந்தது. முற்றுகையின் மொத்த நாட்களிலும் - அதாவது அகழிப் போரின்போது - பத்தாயிரம் எதிரிகளுள் பத்துப் பேர் மட்டுமே கொல்லப் பட்டனர். இறுதியில், எல்லாரும் 'வெற்றிகரமாகப் பின்வாங்கி' உயிர் பிழைத்து, அவரவர் ஊருக்குப் போய்ச் சேர்ந்தனர்.

முற்றுகையின்போது மேட்டுப் பகுதியில் முஸ்லிம் வில்லாளிகள். தாழ்வான பகுதியில் எதிரிகள். இடையில் அகழி. போர் நடந்திருந்தால் எதிரிகள் முக்கால்வாசிப் பேர் உயிரிழந்திருப்பர்.

நுஐம் செய்த சூழ்ச்சியினால் அதிக இலாபம் அடைந்தவர்கள் இஸ்லாத்தின் எதிரிப் படையினர்தாம்.

ஒருமை-பன்மை வேறுபாடுகூட விளங்காத புனித மோசடியாருக்கு இந்த வேறுபாடு விளங்கும் என்று எதிர் பார்க்க முடியாதுதான்.

- புதுவகை நோய்: இமி முற்றியது -

நன்றி!

ஃஃஃ
திண்ணையில் ...

சுட்டிகள்:
42 - http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/madinah_first_phase.htm#110
43 - http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/madinah_first_phase.htm#7
44 - http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/madinah_first_phase.htm#116

Sun 17

Click here to bookmark this link.Channel Image02:04 புதுவகை நோய்: இமி-5 வஹ்ஹாபி
சலுகையா? கட்டாயமா?

"என்னை இறைவனாக ஏற்றுக் கொண்ட ஒருவர், வலுக்கட்டாயத்திற்கு உள்ளாகி, உயிர் போகும் சூழலில், என்னை மறுதலிப்பதாகச் சொல்லி உயிர் பிழைத்துக் கொள்ளலாம்" என்னும் அல்லாஹ்வின் விதிவிலக்குச் சலுகையை - உறுதியான நம்பிக்கையாளர்கள் பயன்படுத்தாத சலுகையை - அனுதினமும் கட்டாயமாகச் செயல் படுத்தப் படுகின்ற நிகழ்வைப்போல் அடுத்த அரைகுறையில் புனித மோசடி செய்யப் பட்டது.

அரைகுறை-6 சுரா (16:106) - எவர் ஈமான் கொண்டபின் அல்லாஹ்வை நிராகரிக்கிறாரோ அவர் (மீது அல்லாஹ்வின் கோபம் இருக்கிறது). - அவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதி கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்ப்பந்திக்கப் படுகிறாரோ அவரைத் தவிர - (எனவே அவர் மீது குற்றமில்லை) ஆனால் (நிர்ப்பந்தம் யாதும் இல்லாமல்) எவருடைய நெஞ்சம் காஃபிரைக்கொண்டு விரிவாகி இருக்கிறதோ - இத்தகையோர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும்; இன்னும் அவர்களுக்குக் கொடிய வேதனையும் உண்டு.

அபிசீனியா (எதியோப்பியா/ஹபஷா)வைச் சேர்ந்த ரபாஹ்-ஹமாமா அடிமைப் பெற்றோருக்குப் பிறந்த பிலால் (ரலி) என்பவர், இணைவைப்பாளர்களைச் சேர்ந்த மக்கத்துத் தலைவர்களுள் ஒருவனான உமைய்யா பின் கலஃப் என்பவனிடம் அடிமையாக இருந்தார். மீளெழுச்சியின்போது இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட தொடக்க கால மக்கத்து முஸ்லிம்களுள் ஒருவராவார் பிலால் (ரலி).

மக்காவின் முக்கியத் தலைவர்களுள் ஒருவனான தன்னிடம் அடிமையாக இருக்கும் பிலால் (ரலி), இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை அறிந்து உமைய்யா வெகுண்டான். ஓரிறைக் கொள்கையைக் கைவிடச் சொல்லி, தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொடுமைகளையும் பிலால் (ரலி) மீது கட்டவிழ்த்து விட்டான். கணக்கின்றிக் கசையடிகளைப் பரிசாக்கினான். அடிப்பதில் தன் கை சோர்ந்து போனால் தன்னச் சார்ந்த இன்னொருவரிடம் கொடுத்து அடிக்கச் சொன்னான். அத்தனைக்கும் பிலால் (ரலி) அசைந்து கொடுக்கவில்லை.

இறுதியில், கொளுத்தும் பாலை மணலில் ஆடையின்றி அவரைப் படுக்க வைத்து அவரது நெஞ்சின் மீது ஒரு பாராங்கல்லை ஏற்றி வைத்து விட்டு, "இஸ்லாத்தைக் கைவிடு; அல்லது கைவிடுவதாகச் சொல், இப்போதே உனக்கு விடுதலை" என்று ஆசை காட்டினான். அப்போதும் அவர், "ஏகன், (அவன்);ஏகன்" என்றே உறுதியுடன் உரைத்தார். அவர் சொன்ன ஒவ்வொரு "ஏகன்" எனும் சொல்லுக்கும் அடியும் உதையும் அதிகரித்தன. அவை அதிகரிக்க அதிகரிக்க "ஏகன்" எனும் கொள்கைச் சொல் பிலாலிடமிருந்து முன்னைவிட யானைப் பிளிறலாய் வெளியானது. ஓரிறைக் கொள்கை என்பது உயிரைக் காட்டிலும் பெரிது எனும் உறுதி கொண்ட நெஞ்சினராய்த் திகழ்ந்ததால்தான் திண்ணையிலும் அவர் "சாகாத கருப்பு யானை"யாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் [சுட்டி-36].

தம் தோழர் பிலாலைக் குரைஷியர் பாலை மணலில் கிடத்தி சித்திரவதை செய்து கொண்டிருக்கும் செய்தி நபி (ஸல்) அவர்களுக்குக் கிடைத்து, அவரை விடுவிப்பதற்கு அபூபக்ரு (ரலி) அவர்களை அனுப்பி வைத்தார்கள். அபூபக்ரு (ரலி) உமையாவிடம் ஒன்பது பவுன் (9 தீனார்) செலுத்தி பிலால் (ரலி) அவர்களின் அடிமைத் தளையை அறுத்து விடுவித்தார். அப்போது அவ்விருவருக்கும் நடந்த உரையாடல், தியாக வரலாற்றுப் பக்கங்களில் இன்றும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.

"அபூபக்ரே! என்னால் சித்திரவதைக்குள்ளாகி, ஏறக்குறைய செத்துவிட்ட, இனிமேல் எதற்கும் பயன்படாத இந்த முக்கால் பிணத்தை ஒரு பவுனுக்கு நீங்கள் கேட்டிருந்தாலும் நான் தந்திருப்பேன். ஒன்பது பவுனைக் கொடுத்து நீங்கள் ஏமாறிப் போனீர்கள்" என்றான் உமைய்யா.

"உமய்யா, அவசரப் பட்டு விட்டாய்!. நீ இந்தச் சொக்கத் தங்கத்துக்கு விலையாக நூறு பவுன் கேட்டிருந்தாலும் நான் தந்திருப்பேன். ஒன்பது பவுனுக்கு இவரை விற்ற நீதான் ஏமாளிகளின் தலைவன்!" என்றார் அபூபக்ரு (ரலி).

உயிர் போகும் சூழலில் தம் கொள்கையை மாற்றிச் சொல்லச் சலுகையிருந்தும் நாவளவில்கூட அதைச் சொல்ல மறுத்து, கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்ததால் பிலால் (ரலி) அவர்கள் இன்றும் உலக முஸ்லிம்களிடத்துத் தனி மரியாதையுடன் மதிக்கப் படுகிறார். Bilal Habashi the first muezzin of Islam was so named as he was from the Habash area, now known as Ethiopia. His life story resonates courage and consistency in a revolutionary time for the Arabs.
He had been amongst the slaves owned by Umaya ibn Khalaf, a member of the leading tribe of Arabia - the Quraish. This man became infamous in history due to his cruelty towards the new Muslims especially his slave Bilal.
Islam had been practiced undercover when Bilal chanced upon knowledge about this new religion which preached equality and worship of One Creator- Allah. He had heard about the prophet of Islam, Muhammad. Muhammad was also from the Quraish tribe and was known amongst his community as"Al-Amin"(the truthful one). This newfound belief led Bilal to being severely punished by his master who hated this new upstart religion.
The torture of Bilal is famous in the history of Islam as it depicted the religious ostracism the new Muslims faced. Umaya ibn Khalaf used to leave Bilal in the middle of the desert, in soaring temperatures, with huge stones placed upon his chest. Bilal Habashi refused under all this duress to give up his beliefs. Even as he was whipped and beaten he would not stop believing in one god. This defiance against his slave master, who may have owned his body, proved ultimately that nobody could own ones mind or ones thought.
Hearing of his plight another companion of the prophet Muhammad, Abu Bakr Siddiqui, came to his aid and bought his freedom for the price of nine dinars. Umaya felt he had won- and he reportedly told Abu Bakr that he would have gladly sold Bilal for one dinar. Abu Bakr replied that he would have paid one hundred dinars. This describes the high place and value of Bilal Habashi, the Ethiopian slave, amongst the early Arab Muslims. His status nor his colour bore any importance amongst them but the strength of his character and his unyielding adherence to his belief. [சுட்டி-37].

தூதுத்துவத்தில் பங்கு கேட்ட பொய்யன் முஸைலமாவை மறுத்த காரணத்தால் ஒவ்வோர் உறுப்பும் வெட்டப் பட்டு மரணித்த தியாகி ஹபீப் பின் ஸைத் அல் அன்ஸாரீ (ரலி) என்பவர், தியாக வரலாற்றுப் பக்கங்களில் இடம்பெற்ற இன்னொருவராவார். உயிர்போகும் அதுபோன்ற சூழலில்கூட, தாம் இறைத்தூதராக உள்ளத்தால் ஏற்றுக் கொண்டவருக்கு இணையாக இன்னொருவனையும் "இறைத்தூதனே" என வெறும் நாவளவில் விளிக்க மறுத்தவராவார்.

"கிருத்துவத்தை ஏற்றுக் கொண்டால் அரசில் பங்கும் அழகிய மங்கையரும் வழங்கப் படுவீர்; மறுத்தால் சிலுவையில் அறையப் படுவீர்" எனும் ஆசைகாட்டலையும் அச்சுறுத்தலையும் அலட்சியப் படுத்திய கைதி அப்துல்லாஹ் பின் ஹுதைஃபா அல் ஸஹ்மீ (ரலி) அவர்களின் உறுதிமிக்க தியாகத்தையும் வரலாறு தன்னில் பதித்துக் கொண்டுள்ளது. நபித்தோழர் அப்துல்லாஹ் அல் ஸஹ்மீ (ரலி) - இறுதிக் கட்டமாக ரோமாபுரி மன்னனின் தலையை மட்டும் முத்தமிட்டார், அதுவும் தம் சக கைதிகளின் விடுதலைக்காக.

மேற்காண்பவை அனைத்தும் சிலிர்ப்பூட்டும் சில்லரைக் கதைகளல்ல. மாறாக, அரைகுறை-6இல் எடுத்து வைக்கப் பட்ட இறைவசனம் 016:106இல் பின்னிக் கிடக்கும் வரலாற்றுப் பின்னணிகள் (except one who was forced while his heart is at peace with the faith) This is an exception in the case of one who utters statements of disbelief and verbally agrees with the Mushrikin because he is forced to do so by the beatings and abuse to which he is subjected, but his heart refuses to accept what he is saying, and he is, in reality, at peace with his faith in Allah and His Messenger . The scholars agreed that if a person is forced into disbelief, it is permissible for him to either go along with them in the interests of self-preservation, or to refuse, as Bilal did when they were inflicting all sorts of torture on him, even placing a huge rock on his chest in the intense heat and telling him to admit others as partners with Allah. He refused, saying, "Alone, Alone.'' And he said, "By Allah, if I knew any word more annoying to you than this, I would say it.'' May Allah be pleased with him. Similarly, when the Liar Musaylimah asked Habib bin Zayd Al-Ansari, "Do you bear witness that Muhammad is the Messenger of Allah'' He said, "Yes.'' Then Musaylimah asked, "Do you bear witness that I am the messenger of Allah'' Habib said, "I do not hear you.'' Musaylimah kept cutting him, piece by piece, but he remained steadfast insisting on his words. It is better and preferable for the Muslim to remain steadfast in his religion, even if that leads to him being killed, as was mentioned by Al-Hafiz Ibn 'Asakir in his biography of 'Abdullah bin Hudhafah Al-Sahmi, one of the Companions. He said that he was taken prisoner by the Romans, who brought him to their king. The king said, "Become a Christian, and I will give you a share of my kingdom and my daughter in marriage.'' 'Abdullah said: "If you were to give me all that you possess and all that Arabs possess to make me give up the religion of Muhammad even for an instant, I would not do it.'' The king said, "Then I will kill you.'' 'Abdullah said, "It is up to you.'' The king gave orders that he should be crucified, and commanded his archers to shoot near his hands and feet while ordering him to become a Christian, but he still refused. Then the king gave orders that he should be brought down, and that a big vessel made of copper be brought and heated up. Then, while 'Abdullah was watching, one of the Muslim prisoners was brought out and thrown into it, until all that was left of him was scorched bones. The king ordered him to become a Christian, but he still refused. Then he ordered that 'Abdullah be thrown into the vessel, and he was brought back to the pulley to be thrown in. 'Abdullah wept, and the king hoped that he would respond to him, so he called him, but 'Abdullah said, "I only weep because I have only one soul with which to be thrown into this vessel at this moment for the sake of Allah; I wish that I had as many souls as there are hairs on my body with which I could undergo this torture for the sake of Allah.'' According to some reports, the king imprisoned him and deprived him of food and drink for several days, then he sent him wine and pork, and he did not come near them. Then the king called him and asked him, "What stopped you from eating'' 'Abdullah said, "It is permissible for me [under these circumstances], but I did not want to give you the opportunity to gloat.'' The king said to him, "Kiss my head and I will let you go.'' 'Abdullah said, "And will you release all the Muslim prisoners with me'' The king said, "Yes.'' So 'Abdullah kissed his head and he released him and all the other Muslim prisoners he was holding. When he came back, 'Umar bin Al-Khattab said, "Every Muslim should kiss the head of 'Abdullah bin Hudhafah, and I will be the first to do so.'' And he stood up and kissed his head. May Allah be pleased with them both. [சுட்டி-38].
***
தனக்கு அரபு மொழியெல்லாம் அத்துப்படி என்பதாகக் காட்டிக் கொள்ள புனித மோசடிக்காரர் பெரிதும் பிரயாசைப் பட்டார். 'ஸூரா' (அத்தியாயம்) எனும் சொல்லை "சுரா" என்றார்; 'ஸீரா' (நபி வாழ்ந்த வரலாறு) என்பதை "சிரா" என்றார். 'பனூ குரைளா' (குரைளாவின் சந்ததியினர்)ஐ, //முஸ்லிமில்லாத அரேபியர்கள், பானு குஃரைஸா என்ற யூதனின் உதவியை நாடினர்// என்று ஒருமைப் படுத்தினர்; போலவே, //நேராக குஃரைஸ்ஸிடம் சென்று, "நான் உங்களிடம் வைத்திருக்கும் அன்பை நன்கறிவீர்கள். உங்களிடம் என் காதில் விழுந்த பரம ரகசியத்தைக் கூற விரும்புகிறேன். ரகசியத்தைக் காத்து என்னையும் காப்பீர்களா?" என அப்பட்டமாக நடித்தான். இதற்கு அவனும் சம்மதித்தான்// 'குரைஷி' எனும் மக்கத்துப் பெருங்குலத்தவரைப் பன்மை என விளங்க வேண்டிய அறிவின்றி "குஃரைஸ்" என்று ஓர் ஆளாகக் காட்டினார். போதாதென்று, //ஒரு அரேபிய பழமொழி பழக்கத்தில் உண்டு (Darabani, wa baka; Sabaqani, wa'shtaka)...// என்பதாக அரபுப் பழமொழிக்குள்ளும் புகுந்து விளையாடினார்.

ஆனால், பாவம்! வெட்டி-ஒட்டும்போது ஏற்பட்ட இமி நோய் நடுக்கத்தில் அத்தனை முயற்சிகளையும் தானே பாழாக்கிக் கொண்டு, தான் அரைகுறையே என்பதை வெளிச்சம் போட்டு அவரே காட்டி விட்டார்.

அரைகுறை-7 சுரா (40:28) - காபிஃர் அவனின் குடும்பத்தாரில் தம் ஈமானை மறைத்து வைத்திருந்த ஒரு நம்பிக்கை கொண்டவர் கூறினார்: "என் இறைவன் அல்லாஹ்வே தான்!" என்று ஒரு மனிதர் கூறுவதற்காக அவரை நீங்கள் கொன்று விடுவீர்களா? மேலும் அவர் மெய்யாகவே உங்கள் இறைவனிடமிருந்து அத்தாட்சிகளை உங்களிடம் கொண்டு வந்துள்ளார். எனவே அவர் பொய்யராக இருந்தால், அப்பொய் அவருக்கே (கேடு) ஆகும்; ஆனால் அவர் உண்மையாளராக இருந்தால், அவர் உங்களுக்கு வாக்களிக்கும் சில (வேதனைகள்) உங்களை வந்தடையுமே! நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறிய பொய்யரை நேர்வழியில் செலுத்த மாட்டான்."
Sura (40:28) - YUSUFALI: It is He Who has sent His Messenger with Guidance and the Religion of Truth, to proclaim it over all religion: and enough is Allah for a Witness.


"Pharaoh" என ஆங்கிலத்தில் குறிக்கப் படும் 'ஃபிர்அவ்ன்' எனும் பெயருடைய எகிப்திய கொடுங்கோல் மன்னனைப் பற்றியோ அவனது காலகட்டத்தைப் பற்றியோ ஏதும் அறிந்திராத புனித மோசடியார், இறைவசனத் தமிழாக்கத்தில் குழம்பியதோடு மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் தான் அரைகுறையே என்பதை அசைக்க முடியாமல் உறுதிப் படுத்தி விட்டார்.

அரைகுறை-7இன் தமிழ்-ஆங்கில முழுவசனங்கள்:
'ஃபிர்அவ்னின் குடும்பத்தாரில் தம் இறைநம்பிக்கையை மறைத்து வைத்திருந்த ஒருவர், "என் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறுவதற்காக (மூஸா-மோஸஸ் எனும்) ஒருவரை நீங்கள் கொன்று விடுவீர்களா? மேலும் அவர் மெய்யாகவே உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்றுகளை உங்களிடம் கொண்டு வந்துள்ளார். எனவே அவர் பொய்யராக இருந்தால், அப்பொய் அவருக்கே (கேடு) ஆகும்; ஆனால் அவர் உண்மையாளராக இருந்து விட்டால், அவர் உங்களுக்கு வாக்களிக்கும் சில (வேதனைகள்) உங்களை வந்தடையுமே! நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறிய பொய்யரை நேர்வழியில் செலுத்த மாட்டான்" என்று (மூஸாவுக்காக) வாதாடினார். [அல் குர்ஆன் 040:028]. A believer, a man from among the people of Pharaoh, who had concealed his faith, said: "Will ye slay a man because he says, 'My Lord is Allah'?- when he has indeed come to you with Clear (Signs) from your Lord? and if he be a liar, on him is (the sin of) his lie: but, if he is telling the Truth, then will fall on you something of the (calamity) of which he warns you: Truly Allah guides not one who transgresses and lies! [சுட்டி-39].
அரைகுறை-7க்கான கூடுதல் விளக்கங்கள் ஆங்கிலத்தில் "Musa was supported by a believing Man from Fir-awn's Family" எனும் தலைப்பில் கிடைக்கின்றன [சுட்டி-40].

தாம் ஏற்றிருந்த கொள்கையை, வெளிப்படுத்த வேண்டிய வேளையில், வெளிப்படுத்தத் தக்க விதத்தில், தம் கொடுங்கோல் மன்னனின் எதிரில் எடுத்துரைத்த அதே இறைநம்பிக்கையாளரைப் பற்றி அடுத்தடுத்த வசனங்கள் தெளிவாகப் பேசுகின்றன:
"...என்னுடைய சமூகத்தாரே! (அழிந்து போன மற்ற) கூட்டத்தினர்களின் நாட்களைப் போன்றவை உங்கள் மீது வந்து விடுமே என்று நான் அஞ்சுகிறேன். 'நூஹு(நோவா)' உடைய சமூகத்திற்கும் 'ஆது' உடைய சமூகத்திற்கும் 'ஸமூது' உடைய சமூகத்திற்கும், அவர்களுக்குப் பின்னுள்ளவர்களுக்கும் உண்டான (அழிவு)நிலையைப் போன்று (உங்களுக்கும் நிகழ்ந்து விடுமோ என அஞ்சுகிறேன்); ஆனால், அல்லாஹ் (தன்) அடியார்களுக்கு அநியாயம் செய்ய நாடமாட்டான் ..." [அல் குர்ஆன் 040:030-031] Then said the man who believed: "O my people! Truly I do fear for you something like the Day (of disaster) of the Confederates (in sin)! Something like the fate of the People of Noah, the 'Ad, and the Thamud, and those who came after them: but Allah never wishes injustice to his Servants. [சுட்டி-41].
தனக்கே விளங்காதவற்றைத் திண்ணை வாசகர்களுக்கு விளக்க வந்தவர் செய்ததும் வைத்த தலைப்பும் மிகப் பொருத்தம் - அதுதான் "புனித மோசடி".

அடுத்து, அகழிப் போரைப் பற்றித் தெரிந்து கொள்வோம், இன்ஷா அல்லாஹ்.
ஃஃஃ
திண்ணை

சுட்டிகள் :
36 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=308092510&format=html
37 - http://www.helium.com/items/1506441-bilal-habashi
38 - http://www.tafsir.com/default.asp?sid=16&tid=28249
39 - http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/quran/040.qmt.html#040.028
40 - http://www.tafsir.com/default.asp?sid=40&tid=46007
41 - http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/quran/040.qmt.html#040.030

Thu 14

Click here to bookmark this link.Channel Image18:09 அல்லாஹ்வின் பிரியம்! எளிதான சொல்! நன்மை தீமை நிறுக்கப்படும் தராசில் கனமானது! பிரார்த்தனை பேழை
'(இறைவனைத் துதிக்கும்) இரண்டு வாக்கியங்கள் அளவற்ற அருளாளனின் பிரியத்திற்குரியவை. நாவுக்கு எளிதானவை. நன்மை தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவை ஆகும். (அவை:) 1. சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்). 2. சுப்ஹானல்லாஹில் அழீம் (கண்ணிய மிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன்)' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஆதாரம்: முக்தஸர் ஸஹீஹுல் புஹாரி

Wed 13

Click here to bookmark this link.Channel Image23:57 பர்தா, பெண்ணுரிமை & பொதுக்கழிப்பிடம் எதிரொலி
கோவில் சிலைகளில் பெண்கடவுள் சிலைகளுக்கு உயர்ரகப் பட்டுத் துணி போர்த்தியிருப்பார்கள். அம்மண கோலத்தில் செதுக்கப்பட்ட சிலைகளுக்கு பட்டுத்துணி போர்த்தி, அம்மன் என்று மரியாதை செய்கிறார்கள். கடவுளை வழிபடும்போது மனம் அலைபாய்வதைத் தடுக்கவே சிலைகளுக்கும் ஆடை அணிவிக்கிறார்கள். சிலையே ஆனாலும் அங்கிருக்கும் சிற்பத்தில் கடவுள் தெரிவதைவிட அதன் பாலினமும் அங்கத்திரட்சியுமே கண்ணில்படுகிறது. தீவிர தெய்வ பக்தனுக்கும் சபலமுண்டு!

களைத்துத் திரும்பும் கணவனுக்காக தலைசீவி காத்திருக்கும் மனைவியால் கணவன் புத்துணர்வு பெறுகிறான். ஆபாசப் படங்களில் அங்கம் தெரியக் காட்சிப்படுத்தப்படுபவர்கள் பெண்களே! துரிதமாக பாலியல் வசப்படுத்தும் ரசாயன மாற்றம் பெண்ணைவிட ஆணுக்கே அதிகம் என்று மருத்துவம் சொல்கிறது. கன்னிப் பெண்களின் அங்கக் கவர்ச்சியில் தன்னிலை மறந்து தாடிவைத்தலையும் காதலர்களே இதற்குச் சான்று!

ஆணுக்குப் பெண் கவர்ச்சி - பெண்ணுக்கு ஆண் கவர்ச்சி என்றாலும் இறுதி வீழ்ச்சி ஆண்களுக்கே! இடுப்புச்சேலை மடிப்புல நான் கிறங்கிப்போனேனே! என்பதிலிருந்து பெண்ணின் சிறு அங்கமும் ஆணுக்கு பாலியல் உணர்வை தூண்டுகிறது என்பது மறைக்கமுடியாத உண்மை!

முஸ்லிம் பெண்கள் பர்தா எனும் மேலங்கி அணிவதை பெண்ணடிமைத் தனத்தின் வெளிப்பாடாகக் குற்றம்சொல்கிறார்கள். பள்ளிகளில் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணியக்கூடாதென்ற தடை பிரான்ஸ்,ஜெர்மனி போன்ற நாடுகளில் சட்டமாக்கப்பட்டுள்ளது. பிரிட்டனிலும் பர்தா தடைசெய்யப்பட வேண்டுமா என்ற கருத்துக்கணிப்பை பிரபல பிபிசி நிறுவனம் நடத்துகிறது. தமிழ் வலைப்பதிவுகளிலும்கூட பர்தா குறித்த விமர்சனங்கள் அவ்வப்போது வைக்கப்படுகிறது.

முஸ்லிம் பெண்கள் தங்கள் புறஅழகை கணவன், மாமனார், தந்தை,மகன் சகோதரன் உறவுமுறை தவிர்த்த யாரிடமும் வெளிப்படுத்தக்கூடாதென்ற கட்டுப்பாடு உள்ளது. மேற்சொன்ன உறவுமுறையற்ற ஆண்களின் பார்வை முஸ்லிமல்லாத பெண்களுக்கும் சங்கடத்தை ஏற்படுத்தும். இஸ்லாம் தவிர யூத, கிறிஸ்தவ,சீக்கியப் பெண்களும்கூட தமது உடலழகை மற்றவர்களிடம் மறைக்கவே விரும்பிகின்றனர்.

நம் இந்தியாவிலும் வடமாநிலப் பெண்கள் பர்தாவையொத்த மேலங்கியை அணிகிறார்கள். பெண்களின் அங்கங்களை மறைப்பது மத மற்றும் கலாச்சார ரீதியில் சரியென்று ஒப்புக்கொள்பவர்கள்,முஸ்லிம்கள் விசயத்தில் மட்டும் குறைகாண்பதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?

ஜனாதிபதியாக பதவியேற்கும் சில நாட்களுக்கு முன்பு பர்தாவைப் பற்றி விமர்சித்த திருமதி.பிரதீபா பாட்டீல் இன்றுவரை முக்காடிட்டு, கைகளை மறைக்கும் பர்தாவுக்கிணையான உடையணிகிறார். முஸ்லிம் பெண்களை பர்தா அணியச்செய்து அவர்களின் உரிமையை இஸ்லாம் பறிக்கிறதெனில் இந்திராகாந்தி முதல் ப்ரதீபா பாட்டீல்வரை முக்காடுடிட்டுக்கொள்வதற்கும் இஸ்லாம்தான் காரணமா?

விஜய் டிவியில் நீயா- நானா? என்ற நிகழ்ச்சியில் பர்தா குறித்த கருத்தாடல் நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.பர்தா அவசியமே என்று ஒரு பிரிவினரும் தேவையில்லை என்று இன்னொரு பிரிவினரும் வாதிடுவார்களாம்! நிகழ்ச்சி நடத்துபவர் இறுதியில் தீர்ப்பளிப்பாராம்! தீர்ப்பு என்னவாக இருக்குமென்று சொல்ல வேண்டியதில்லை. கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து கல்லெறிந்தால் யாருக்கு நஷ்டம்?

இஸ்லாம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டமார்க்கமல்ல என்கிறீர்கள்?ஆனால் அத்தகைய விமர்சனங்களை எதிர்கொள்ளாமல் முற்றுகைப் போராட்டம், ஆர்ப்பாடம் நடத்தி இதுபோன்ற சுதந்திரமான கருத்தாடலை தடுக்கிறீர்களே என்று சிலர் கேட்கலாம். எது சார் சுதந்திரம்? ஒருபக்கம் ஆபாச போஸ்டரை கிழிக்கும் போராட்டங்களை நடத்திக்கொண்டு இன்னொரு பக்கம் பர்தாவை விமர்சிப்பது நேர்மையான கருத்தாடலா? பர்தா தேவையில்லை என்போர் பிகினி அல்லது டூ பீஸில் வாதிடுவதுதானே நேர்மையான விவாதமாகும்?

ஆணும் பெண்ணும் சமம் என்பவர்கள் போராட்டம் நடத்த வேண்டிய இடம் பொதுக் கழிப்பிடங்கள்தான். ஏனென்றால் அங்குதான் ஆண்கள்-பெண்கள் என தனித்தனி படம்போட்டு பாகுபாட்டை வலியுறுத்துகிறார்கள். என்ன கொடுமைசார் இது!

*******
பர்தாவும் பைபிளும்
பர்தாவைப் பிடித்திழுக்கும் பிரதிபா படீல்

பழமைவாத,ஆணாதிக்கத் திருவள்ளுவர் !?!

துப்பட்டாவுக்கு வெளியேதான் பெண்ணியமா?
Click here to bookmark this link.Channel Image21:48 மரபணு மாற்ற விதைகள் உணவு சுதந்திரத்தை பறிக்கின்றன: நம்மாழ்வார் மக்கள் சட்டம் (PEOPLE'S LAW)
பி.டி. பருத்தி, பி.டி.கத்திரிக்காய் என்று மரபணு மாற்ற விதைகளை மத்திய, மாநில அரசுகள் மக்கள் மீது திணிப்பதனால் நமது நாட்டின் உணவுச் சுதந்திரமும், பாதுகாப்பும் பறிக்கப்படுகிறது என்று இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கூறினார்.



webdunia photo
WD

சென்னையில் மனித உரிமை, சுற்றுச் சூழல் நீதிக்கான வழக்கறிஞர்கள் மையம் ஏற்பாடு செய்த ‘மரபணு மாற்ற விதைகளும் இந்திய விவசாயிகள் எதிர்கொள்ளவிருக்கும் சட்டச் சிக்கல்களும்’ என்ற கலந்தாய்வில் பங்கேற்றுப் பேசிய நம்மாழ்வார், மரபணு மாற்றப்பட்ட (பி.டி.) கத்திரிக்காய்க்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது நமது நாட்டின் மீதான இரண்டாவது காலனி ஆதிக்கம் என்றும், அதனை எதிர்த்து நாம் போராட வேண்டும் என்றும் கூறினார்.



எந்த ஒரு பயிரானாலும் அதன் தன்மையை நிர்ணயிப்பது அது விளைவிக்கப்படும் மண்தான் என்றும், அதனால்தான் நமது நாட்டில் விளைவிக்கப்படும் சிறப்பான பயிர்கள் பலவும் அது விளையும் இடத்தின் பெயரோடு சேர்த்து அழைக்கப்படுவதை சுட்டிக்காட்டிய நம்மாழ்வார், அப்படிப்பட்ட பயிரின் இயற்கையான பன்முகத் தன்மையை பி.டி. கத்திரிக்காய் போன்ற மரபணு மாற்றப்பட்ட விதைகள் அழித்துவிடும் என்று எச்சரித்தார்.



“ஒரு இடத்தில் விளையும் பயிர் அந்தச் சமூகத்தின் சொத்து, அதனை இப்படிப்பட்ட மரபணு மாற்ற விதைகளைத் திணிப்பதன் மூலம் அழிப்பது, இயற்கையின் அடிப்படையான உயிரியல் பரவலை திட்டமிட்டு அழிக்கும் செயலே” என்று கூறிய நம்மாழ்வார், நாகை மாவட்டத்தில் பரவலாக மக்கள் வாங்கும் பொய்யூர் கத்திரிக்காய், அந்த ஊரில் பயிரிட்டால் மட்டுமே அந்த சுவையை அளிக்கும் என்றும், அதனை வேறிடத்தில் பயிரிட்டால் அந்தத் தனிச் சுவை இல்லாமல் போகும் என்றும், வேலூர் எண்ணெய்க் கத்திரிக்காய் (முள்ளு கத்திரிக்காய் என்றும் கூறுவார்கள்) அவ்விடச் சிறப்பின் விளைவே என்றும், இதுவே உயிர்ப் பரவலின் உன்னதமான சிறப்பு என்றும் கூறினார்.



நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் இப்படி சிறப்பாகப் பயிரிடப் பொருட்களை அனைத்தையும் அழிக்கும் திட்டத்துடனேயே மரபணு மாற்ற விதைகள் வேகமான திணிக்கப்படுகின்றன என்றும், அதற்கு அரசுகள் மாத்திரமின்றி, வேளாண் பல்கலைக் கழகங்களும் அறமின்றித் துணை போகின்றன என்றார் நம்மாழ்வார்.



இலாப நோக்கை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, விவசாயத்தை வணிகமயமாக்கும் பன்னாட்டு ஆய்வு நிறுவனங்களுக்கு விவசாயத்தை ஏக போக உரிமையாக்கும் வழிமுறையே காப்புரிமை சட்டம் என்று சாடிய நம்மாழ்வார், இப்படிப்பட்ட நிறுவனங்களுக்கு நமது நாட்டின் அரசுகள் கதவு திறந்துவிட்டால் நமது உணவுப் பாதுகாப்பிற்கு என்ன உத்தரவாதம் என்று கேள்வி எழுப்பினார்.



WD

பி.டி. கத்திரிக்காய் பயன்பாட்டை ஆதரித்து தமிழக வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சட்டப் பேரவையில் பேசும்போது, அந்த விதைகளை பயிரிட்டு அதிலேதும் குளறுபடி ஏற்பட்டால் நீதிமன்றத்திற்குப் போகலாம் என்று கூறுவது அவரின் தெளிவின்மையையே காட்டுகிறது என்று கூறிய நம்மாழ்வார், மரபணு மாற்றப்பட்ட விதைகளை அனுமதித்துவிட்டால் பிறகு நமது விவசாய உரிமையை மீட்க முடியாது என்றும், அதனை நுழைய விடாமல் தடுப்பதே முக்கியம் என்று வலியுறுத்தினார்.



பி.டி. விதைகளை நாட்டிற்குள் அனுமதிப்பது நமது உணவை நாம் தேர்வு செய்யும் சுதந்திரத்தை அடியோடு அழித்துவிடும் என்றும் நம்மாழ்வார் எச்சரித்தார்.



1960களில் மேற்கொள்ளப்பட்ட பசுமைப் புரட்சியின் காரணமாகத்தான் இந்தியாவின் உணவுப் பற்றாக்குறை தீர்க்கப்பட்டது என்று பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் கூறியது குறித்து கேள்வி கேட்டதற்கு, அது தவறான தகவல் என்றும், பசுமைப் புரட்சியால் உணவுப் பற்றாக்குறை தீர்ந்தது என்றால், பி.எல். 420 திட்டத்தின் கீழ் கோதுமை இறக்குமதி செய்யப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பினார். நமது நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வழி உரத்தையும், பூச்சி மருந்துகளையும் கொட்டி உற்பத்தியை எடுக்கும் பசுமைப் புரட்சி வழியல்லவென்றும், இயற்கை விவசாயத்தை நடைமுறைப்படுத்தி உற்பத்தியைப் பெருக்குவதே சரியான வழியென்றும் நம்மாழ்வார் கூறினார்.



“உணவுப் பாதுகாப்பு என்பது வெறும் உற்பத்தி மட்டுமல்ல, அது ஊட்டமுடைய உணவு உற்பத்தியாகவும் (Nutrition Security) இருக்க வேண்டும்” என்று கூறிய நம்மாழ்வார், நமது அரசுகளின் உணவுக் கொள்கை என்பது மக்களை மையப்படுத்தியதாக இருக்க வேண்டுமே தவிர, சந்தையை மையப்படுத்தியதாக இருக்கக் கூடாது என்றும், மரபணு மாற்ற விதைகளைத் திணிப்பது இலாப நோக்கு கொண்ட நிறுவன விவசாயத்திற்கு (Corporate Agriculture) உதவுவதே என்றார்.

நன்றி: WEBDUNIAதமிழ்

Mon 11

Click here to bookmark this link.Channel Image04:23 புதுவகை நோய்: இமி-4 வஹ்ஹாபி
உற்ற நண்பர்கள் யாவர்?

அரைகுறை-5
சுரா (3:28) முஃமீன்கள் (தங்களைப் போன்ற) முஃமின்களையின்றி காஃபிர்களைத் தம் உற்ற துணைவர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; அவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அன்றி, (உங்களில்) எவரேனும் அப்படிச் செய்தால், (அவருக்கு) அல்லாஹ் விடத்தில் எவ்விஷயத்திலும் சம்பந்தம் இல்லை; இன்னும் அல்லாஹ் தன்னைப்பற்றி உங்களை எச்சரிக்கின்றான்; மேலும் அல்லாஹ்விடமே (நீங்கள்) மீள வேண்டியதிருக்கிறது.

மேற்காணும் இறைவசனத்தை எடுத்துப் போட்டு, "பிறமதத்தவரோடு முஸ்லிம்கள் உள்ளார்ந்த நட்பு கொள்ள மாட்டார்கள்" என்பதாகத் திண்ணையில் புனித மோசடி செய்யப் பட்டது.

முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காகத் திண்ணையில் எழுதும் சில முஸ்லிம்கள், திண்ணையில் எழுதப்பட்ட என் பள்ளித் தோழன் ஜீனா கணேசனை [சுட்டி-31] விட எனக்கு நெருக்கமானவர்கள் அல்லர். அவன் இன்றும் என் தோழன்தான். எனக்கோ நான் சார்ந்த சமயத்துக்கோ அணுவளவும் கேடு நினைக்காத ஜீனா கணேசனை எதிரியாகக் கொள்ள வேண்டும் என்று எனது மார்க்கம் எனக்குப் போதிக்கவில்லை.

ஏனெனில், வெறும் நண்பர்கள் என்பதற்கும் உற்ற தோழர்கள்/துணைவர்கள் என்பதற்கும் உறவின் கால அளவு, இணைந்து வாழும் சூழல், தூய்மையான அன்பு/நட்பு ஆகியன அளவுகோள்களாக அமைகின்றன. தன்னையும் தனது வாழ்க்கை நெறியையும் மதிக்கக் கூடிய, தன்னைச் சார்ந்த இன்னொருவரை விடுத்து,  தன்னையும் தன் வாழ்க்கை நெறியையும் அழித்தொழிக்க அயராது முயல்பவரை உற்ற தோழராக, உதவியாளராகக் கொள்ள எந்த மதத்தினரும் முன்வர மாட்டார். அதைத்தான் மேற்காணும் இறைவசனங்களும் அதன் பின்னணியும் சுட்டுகின்றன:
"இறைநம்பிக்கையாளர்கள் (தம்மைச் சார்ந்த) இறைநம்பிக்கையாளர்களை விடுத்து, இறைமறுப்பாளர்களைத் தம் உற்ற தோழர்களாக/துணைவர்களாகக் கொள்ள வேண்டாம் - தங்களை அவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காகவன்றி - அவ்வாறு கொள்பவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து எந்தவித உதவியும் இருக்காது. அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறான்! அல்லாஹ்விடமே நீங்கள் அனைவரும் மீள வேண்டியிருக்கிறது. (நபியே!) சொல்லுங்கள்: நீங்கள் மறைத்தாலும் வெளிப்பட உரைத்தாலும் உங்கள் அகத்தில் உள்ளதை அல்லாஹ் நன்கறிவான் ..." [அல் குர்ஆன் 003:028-029] Let not the believers Take for friends or helpers Unbelievers rather than believers: if any do that, in nothing will there be help from Allah: except by way of precaution, that ye may Guard yourselves from them. But Allah cautions you (To remember) Himself; for the final goal is to Allah.Say: "Whether ye hide what is in your hearts or reveal it, Allah knows it all ..." [சுட்டி-32].

"இறைநம்பிக்கையாளர்களே! எனது வழியில் அறப்போர் புரியவும் எனது பொருத்தத்தை வேண்டியும் நீங்கள் (உங்கள் பிறந்த மண்ணைத் துறந்து) புலம் பெயர்ந்திருப்பது உண்மையாயின், எனக்கும் உங்களுக்கும் விரோதியாகத் திகழ்பவர்களை, அவர்கள் மீது நீங்கள் கொண்ட (பழைய) பரிவின் காரணத்தால் (நாட்டின்) இரகசியத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் உற்ற நண்பர்களாக/ பாதுகாவலர்களாகக் கொள்ளாதீர்கள். அவர்கள் உங்களிடம் வந்துள்ள சத்திய(வேத)த்தை மறுத்தவர்கள்; அல்லாஹ்வை உங்கள் (ஒரே) இறைவனாக நீங்கள் ஏற்றுக் கொண்டதற்காக உங்களையும் (என்) தூதரையும் (பிறந்த மண்ணை விட்டு) வெளியேற்றியவர்கள். என்றாலும்கூட நீங்கள் அவர்கள் மீது கொண்ட (பழைய) பரிவினால் (நாட்டின்) இரகசியத்தை அவர்களிடத்தில் வெளிப்படுத்தி விடுகின்றீர்கள். நீங்கள் மறைப்பதையும் வெளிப்பட உரைப்பதையும் நான் நன்கு அறிவேன் ..." [அல் குர்ஆன் 060:001] O ye who believe! Take not my enemies and yours as friends (or protectors),- offering them (your) love, even though they have rejected the Truth that has come to you, and have (on the contrary) driven out the Prophet and yourselves (from your homes), (simply) because ye believe in Allah your Lord! If ye have come out to strive in My Way and to seek My Good Pleasure, (take them not as friends), holding secret converse of love (and friendship) with them: for I know full well all that ye conceal and all that ye reveal ..." [சுட்டி-33].
மேற்காணும் வசனங்களின் பின்னணி:
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் குதிரை வீரர்களான என்னையும் ஸுபைர் இப்னு அவ்வாம் (ரலி),  அபூ மர்ஸத் கினாஸ் இப்னு ஹுஸைன் அல்ஃகனவீ (ரலி) ஆகியோரையும் அழைத்து, "நீங்கள் புறப்பட்டு, 'ரவ்ளத்து காக்' எனும் இடம் வரை செல்லுங்கள்; அங்கு (ஒட்டகப் பல்லக்கில்) இணைவைப்பாளர்களில் ஒருத்தி இருப்பாள். இணைவைப்பாளர்க(ளின் மக்கத்துத் தலைவர்க)ளுக்கு (மதீனாவாசியான) ஹாத்திப் இப்னு அபீ பல்த்தஆ அனுப்பியுள்ள (நம்முடைய படைகளைப் பற்றிய தகவல்களைத் தெரிவிக்கும்) கடிதம் ஒன்று அவளிடம் இருக்கும். (அவளிடமிருந்து அக்கடிதத்தைக் கைப்பற்றி வாருங்கள்)" என்று கூறி அனுப்பினார்கள்.

(நாங்கள் புறப்பட்டுச் சென்றோம்) இறைத்தூதர் (ஸல்) எங்களிடம் குறிப்பிட்ட இடத்தில் அந்தப் பெண் தன்னுடைய ஒட்டகத்தில் சென்று கொண்டிருந்தபோது அவளை நாங்கள் அடைந்தோம். "உன்னிடம் உள்ள கடிதம் எங்கே? (அதை எடு)" என்று கேட்டோம். அவள், "என்னிடம் கடிதம் ஏதுமில்லை" என்று பதிலளித்தாள். அவள் பயணித்த ஒட்டகத்தை நாங்கள் படுக்க வைத்து, அதன் பல்லக்கினுள் (அந்தக் கடிதத்தைத்) தேடினோம்; (கடிதம்) ஏதும் கிடைக்கவில்லை. என் தோழர்கள் இருவரும், "கடிதம் ஏதும் நமக்குக் கிடைக்கவில்லையே!" என்றார்கள்.

நான் (அவளிடம்), "இறைத்தூதர் (ஸல்) பொய் சொல்லமாட்டார் என்று நான் உறுதியாக அறிந்துள்ளேன். எவன் மீது சத்தியம் செய்யப்படுமோ அ(ந்த இறை)வன் மீதாணையாக! நீயாகக் கடிதத்தை எடு(த்துக் கொடு); அல்லது (சோதனையிடுவதற்காக) உன்னுடைய ஆடையை நான் கழற்ற வேண்டியிருக்கும்" என்று சொன்னேன். நான் விடாப்பிடியாக இருப்பதைக் கண்ட அவள், (கூந்தல் நீண்டு தொங்கும்) தன்னுடைய இடுப்புப் பகுதிக்குத் தன்னுடைய கையைக் கொண்டு சென்றாள். அவள் ஒரு துணியை இடுப்பில் கட்டியிருந்தாள். (அங்கிருந்து) அந்தக் கடிதத்தை வெளியே எடுத்துத் தந்தாள்.

அந்தக் கடிதத்துடன் இறைத்தூதர் (ஸல்) அவர்களை அடைந்தோம். கடிதம் கண்ட நபி (ஸல்) அவர்கள், தம் தோழரும் பத்ருப் போராளிகளுள் ஒருவருமான ஹாத்திப் இப்னு அபீ பல்த்தஆ (ரலி) அவர்களை நோக்கி, "ஏன் இப்படிச் செய்தீர்கள்?" என்று கேட்டார்கள். அவர், "அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விசுவாசமுள்ளவனாக நடந்து கொள்வதைத் தவிர வேறெதுவும் எனக்கு நோக்கமில்லை. நான் (என்னுடைய மார்க்கத்தை) மாற்றிக் கொள்ளவுமில்லை; வேறு மதத்தைத் தேடவுமில்லை. இணைவைப்பாளர்(களுக்கு நான் செய்யும் இந்த உதவியால் அவர்)களிடம் எனக்கு ஒரு செல்வாக்கு ஏற்பட்டு, அதன் மூலம் அல்லாஹ் (மக்காவிலிருக்கும்) என் மனைவி மக்களையும் என்னுடைய செல்வத்தையும் பாதுகாக்கவேண்டும் என்றே நான் நினைத்தேன். (என்னைத் தவிர மக்காவிலிருந்து புலம்பெயர்ந்து வந்த) தங்கள் தோழர்கள் அனைவருக்குமே (மக்காவிலுள்ள) அவர்களின் மனைவி மக்களையும் அவர்களது செல்வத்தையும் பாதுகாக்க அவர்களின் செல்வாக்குள்ள மக்கத்து உறவினர்கள் சிலர் மூலமாக அல்லாஹ் வழிவகை செய்(து பாதுகாத்)து இருக்கிறான்" என்று கூறினார்.

இதைக் கேட்ட நபி (ஸல்), "இவர் உண்மை சொன்னார். இவரைப் பற்றி(ப் பிறரிடம்) நல்லதையே கூறுங்கள்" என்று (தம் தோழர்களிடம்) கூறினார்கள்.

அப்போது உமர் இப்னு கத்தாப் (ரலி), "இவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் இறைநம்பிக்கையாளர்களுக்கும் துரோகமிழைத்து விட்டார். என்னை விடுங்கள்; இவரது கழுத்தைக் கொய்து விடுகிறேன்" என்றார்கள். அப்போது நபி (ஸல்), "உமரே! உமக்குத் தெரியுமா? 'நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள்; உங்களுக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது'  என்ற அல்லாஹ்வின் கூற்று, பத்ருப் போரில் பங்கெடுத்தவர்களைப் பற்றியல்லவா?" என்றார்கள்.

இதைக்கேட்ட உமர் (ரலி) அவர்களின் கண்கள் கண்ணீர் உகுத்தன. மேலும், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்"  என்று கூறினார். - அறிவிப்பாளர் : அலீ (ரலி) [புகாரீ6259; சுட்டி-34 ].

இஸ்லாத்துக்காக 'ஹிஜ்ரத்' என்னும் பிறந்த நாட்டைத் துறந்த புலப்பெயர்வு தியாகியாக இருந்தாலும் 'பத்ருப் போராளி' எனும் சிறப்புத் தகுதி மட்டும் இல்லாதிருந்தால் அன்றைய தினம் உமர் (ரலி) வாளுக்கும் ஹாத்திப் (ரலி) கழுத்துக்கும் உறவு ஏற்பட்டிருக்கும்.

மேற்காணும் நிகழ்வு, இஸ்லாத்தைத் தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டதால், தன் மனைவி மக்களையும் சொத்துகளையும் மக்காவில் விட்டு, புலம் பெயர்ந்து அகதியாக மதீனாவுக்கு வந்து, பத்ருப் போரில் இஸ்லாத்தின் விரோதிகளுக்கு எதிராகப் போர் புரிந்த போராளியான ஹாத்திப் இபுனு அபீ பல்த்தஆ (ரலி) எனும் நபித் தோழர் ஒருவரைத் தொடர்பு படுத்தியது என்றாலும் எல்லாருக்கும் எக்காலத்திற்கும் பொதுவானதே.

தம் உறவினர்களின் நலனுக்காக, சொந்த நாட்டின் இராணுவ இரகசியங்களை எதிரி நாட்டுக்குக் கசியவிடுதல் ஒரு முஸ்லிமுக்குத் தகாது என்பது இங்கு இஸ்லாத்தின் மார்க்கக் கட்டளையாகக் கூறப் படுகிறது. இந்தியாவின் பிரிவினை [சுட்டி-35]  சதிக்குப் பிறகு முளைத்த பாகிஸ்தானில் இந்திய முஸ்லிம்களின் உறவினர்கள் இன்றும் வாழ்கிறார்கள் என்பதும் இந்திய இராணுவ இரகசியங்களைப் பாகிஸ்தானுக்குப் 'போட்டுக் கொடுத்தவர்'களின் பட்டியலில் இந்திய முஸ்லிம் எவரும் இடம்பெறவில்லை என்பதும் இங்குக் குறிப்பிடத் தக்கது.

இதுதான் தகிய்யா எனில், இந்திய முஸ்லிம்கள் இந்தவகைத் தக்கியாவில் மிக உறுதியாக இருக்கின்றனர் என்று சொல்லிக் கொள்வதில் எனக்குப் பெருமையே!

-தொடரும், இன்ஷா அல்லாஹ்

ஃஃஃ

 சுட்டிகள்
31 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=80803203&format=html

32 - http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/quran/003.qmt#003.028

33 - http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/quran/060.qmt#060.001

34 - http://chittarkottai.com/bukhari/tamil/numbersearch.php?bnumber=6259

35 - http://www.satyamargam.com/1343

Sun 10

Click here to bookmark this link.Channel Image06:35 அல்பகரா அத்தியாயத்தின் இறுதி இரு வசனங்களின் மகிமை! பிரார்த்தனை பேழை
'அல்பகரா' அத்தியாயத்தின் இறுதி இரண்டு (திருக்குர்ஆன் 02:285 - 286) வசனங்களை இரவு நேரத்தில் ஓதுகிறவருக்கு (மனிதன் மற்றும் ஜின் இனத்தாரின் தீங்குகளிலிருந்து பாதுகாக்கப்) போதுமானதாக அவை ஆகிவிடும் என்று இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை பத்ருப்போரில் பங்கெடுத்தவரான அபூ மஸ்வூத்(ரலி) அறிவித்தார். ஆதாரம்: முக்தஸர் ஸஹீஹுல் புஹாரி.

آمَنَ الرَّسُولُ بِمَا أُنزِلَ إِلَيْهِ مِن رَّبِّهِ وَالْمُؤْمِنُونَ كُلٌّ آمَنَ بِاللّهِ وَمَلآئِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لاَ نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّن رُّسُلِهِ وَقَالُواْ سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ

(இறை) தூதர். தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள். "நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்" என்று கூறுகிறார்கள். (Sura Al-Baqarah: 2:285)

لاَ يُكَلِّفُ اللّهُ نَفْسًا إِلاَّ وُسْعَهَا لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَآ أَنتَ مَوْلاَنَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை. அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே, அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்;) "எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" (Sura Al-Baqarah: 2:286)

Fri 01

Click here to bookmark this link.Channel Image09:16 புதுவகை நோய்: இமி-3 வஹ்ஹாபி
சத்தியம் செய்தல் (ஆணையிட்டுக் கூறுதல்)

இஸ்லாத்தின் பார்வையில் பொதுவாக ஒரு களங்கத்தை/பழியை/குற்றச்சாட்டை - குறிப்பாக - தன் மீது சுமத்தப் படும் குற்றச்சாட்டை நீக்கிக் கொள்வதற்குத் தக்க சாட்சியங்கள் இல்லாதபோது, அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு, தனக்கு எதிரானவற்றை மறுப்பதற்கும் தன் கூற்று முற்றிலும் உண்மை என்று நிறுவுவதற்கும் சத்தியம் செய்வதற்கு அனுமதி உள்ளது.

இஸ்லாத்தின் மீளெழுச்சிக்கு முன்னர் மூன்றுவகை சத்தியமிடுதல்கள் வழக்கில் இருந்தன:

1. தாங்கள் வழிபடும் சிலைகளின் பெயரால் செய்யப் படும் தீர்க்கமான சத்தியம், [புகாரீ6650; சுட்டி-20].

2. தங்கள் மனைவியரைத் தள்ளி வைப்பதற்காக, "சத்தியமாக நான் உன்னுடன் உறவு கொள்ள மாட்டேன்" எனக் கூறும் வதைச் சத்தியம் [சுட்டி-21],

3. எவ்வித உள்நோக்கமும் தேவையும் இன்றி விளையாட்டாகக் கூறும் வெற்றுச் சத்தியம் [சுட்டி-22]. இதை, "அல் யமீனுல் லக்வு (வீண் சத்தியம்)" என்று அல் குர்ஆன் குறிப்பிடுகிறது.

இஸ்லாத்தின் மீளெழுச்சிக்கு முன்னர், அரபு மக்களிடையே எடுத்ததற்கெல்லாம் சத்தியம் செய்யும் வழக்கம் இருந்ததை அவர்களது வரலாறு கூறுகிறது. "என் தந்தை மீதாணை!", "உன் தந்தை மீதாணை!" எனக் கூறுவது அவர்களது இயல்பாக இருந்திருக்கிறது. இது, நமது நாட்டார் வழக்கான "ஒங்கொப்புராண (உன் அப்பன் மீதாணை)" என்பதை ஒத்ததாகும். "தன்னைப் படைத்த இறைவனைத் தவிர வேறு யார்/எதன் மீதும் ஆணையிடக் கூடாது" எனும் திருத்தம் [புகாரீ6108; சுட்டி-23] வரும் வரைக்கும் நபித் தோழர்கள் உட்பட அனைவரும் பழைய பழக்கத்திலேயே இருந்திருக்கின்றனர்.

இஸ்லாத்தைத் தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட பின்னரும், "இன்றிரா எனக்கு உணவு வேண்டாம்" எனக் குடும்பத் தலைவர் கூறுவதற்கு ஒரு சத்தியம்; பதிலுக்கு, "உன் தந்தை உண்ணாவிடில் நானும் உண்ண மாட்டேன்" எனக் கூறும் தாயின் சத்தியம்; "வீட்டுக்காரர் உண்ணாமல் நாங்கள் உண்ணப் போவதில்லை" என்பதாக விருந்தாளிகள் செய்யும் சத்தியம் போன்ற தேவையற்ற சத்தியங்கள் நபித்தோழர்களின் நாவினில் வெகு சரளமாக விளையாடும் சொற்களாக இருந்துள்ளன [புகாரீ6141; சுட்டி-24].

தன் மனைவி தன்னோடு இணங்கி இருப்பதையும் பிணங்கி இருப்பதையும் பிரித்து அறிந்து கொள்வதற்கு, சரளமாக அவர் இடும் சத்தியம் சார்ந்த சொற்கள் அடிப்படையாக இருந்ததை அண்ணலாரின் குடும்ப வாழ்க்கையில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது [புகாரீ5228; சுட்டி-25].

மூன்றாவது அரைகுறையை இனங் கண்டு கொள்வதற்கு மேற்காணும் வரலாற்றுத் தகவல்கள் வாசகர்களுக்கு உதவக் கூடியவையாக அமையும்.

அரைகுறை-3 சுரா (2: 225) (யோசனையின்றி) நீங்கள் செய்யும் வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான். ஆனால், உங்களுடைய இதயங்கள் (வேண்டுமென்றே) சம்பாதித்துக் கொண்டதைப்பற்றி, உங்களைக் குற்றம் பிடிப்பான்; இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க பொறுமையுடையோனுமாக இருக்கின்றான்.

மேற்காணும் இறைவசனத்தை எடுத்துப் போட்டு, அதற்குத் தொடர்பில்லாத "பிறமதத்தவரை ஏமாற்றுவதற்கு முஸ்லிம்கள் சத்தியம் செய்வார்கள்" என்பதாகத் திண்ணையில் புனித மோசடி செய்யப் பட்டது.
"நீங்கள் செய்யும் வெற்றுச் சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களை(க் குற்றம்) பிடிக்க மாட்டான். மாறாக, உங்கள் உள்ளங்கள் திட்டமிட்டு(ச் சத்தியங்கள் செய்து) பெற்றுக் கொள்பவற்றுக்காக உங்களை(க் குற்றம்) பிடிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; சகித்துக் கொள்பவன் [அல் குர்ஆன் 002:225]. Allah will not call you to account for thoughtlessness in your oaths, but for the intention in your hearts; and He is Oft-forgiving, Most Forbearing [சுட்டி-26].

"நீங்கள் செய்யும் வெற்றுச் சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களை(க் குற்றம்) பிடிக்க மாட்டான். மாறாக, நீங்கள் செய்யும் தீர்க்கமான சத்தியங்களுக்காக (அவற்றில் தவறினால்) உங்களை(க் குற்றம்) பிடிப்பான் ... [அல் குர்ஆன் 005:089] Allah will not call you to account for what is futile in your oaths, but He will call you to account for your deliberate oaths ... [சுட்டி-27].
ஒருவரது கூற்றை "ஆம்" என்று ஏற்றுக் கொள்வதற்கும் வேறோரு கூற்றை "இல்லை" என்று மறுப்பதற்குங்கூட, "அல்லாஹ்வின் மீதாணை!" என்று சேர்த்துச் சொல்லுவது வழக்கமாக இருந்தது. "அவையெல்லாம் வெற்றுச் சத்தியங்கள்தாம்" என்று இறைவேதம் தெளிவு படுத்தியது [புகாரீ 4613; சுட்டி-28].

மேற்காணும் இறைவசனங்களில் தன் இனத்தவர் என்றோ பிற மதத்தவர் என்றோ குறிப்பேதுமில்லை என்பது இங்குக் கூடுதல் கவனத்திற்குரியது. புனித மோசடியில் குறிப்பிட்டுள்ளவாறே "யோசனையின்றி"ச் செய்யும் சத்தியங்களோடு பிற மதத்தவரை எப்படி ஏமாற்ற முடியும்? என்பது 'யோசனை'க்குரியதாகும். இதில் தக்கியா எனும் பேசுபொருள் எங்கே இருக்கிறது என்று தேடிப் பிடிக்க வேண்டியது வாசகர்களின் பொறுப்பாகும்.

***

"பிற மதத்தவரை ஏமாற்றுவதற்காகப் பொய் சத்தியம் செய்து விட்டு, அதற்குப் பரிகாரம் செய்தால் சரியாகிவிடும்" எனும் மாயையை ஏற்படுத்துவதற்காகப் புனித மோசடி செய்யப் பட்ட இன்னொரு இறைவசனத்தையும் பார்க்கலாம்:

அரைகுறை-4 சுரா (66:02) – அல்லாஹ் உங்களுடைய சத்தியங்களை (சில போது தக்க பரிகாரங்களுடன்) முறித்து விடுவதை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறான்; மேலும் அல்லாஹ் உங்கள் எஜமானன். மேலும் அவன் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.

மேற்காணும் 066ஆவது அத்தியாயத்தின் தொடக்க இறைவசனங்கள், அந்த வசனங்களை மக்களுக்கு எடுத்தோதும் பொறுப்பில் இருந்த இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைக் கண்டித்து அருளப் பெற்றவை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மனைவியர் மூவர் தொடர்புடைய நிகழ்வைக் குறித்தும் இறைவனால் ஆகுமாக்கப் பட்ட பானங்களின் ஒன்றான, "தேனை நான் இனி அருந்த மாட்டேன்" என்று சத்தியம் செய்ததற்காக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறைவனால் கண்டனம் செய்யப் பட்டதைக் குறித்தும் பேசும் வசனங்களை, பிற மதத்தவரோடு பொருத்தி புனித மோசடி செய்யப் பட்டது. அதைத் திண்ணையும் பெருமையோடு பதித்தது.

அந்த நிகழ்வைக் கூறும் முழுவசனங்கள்:
"நபியே!, அல்லாஹ் உமக்கு அனுமதித்ததை உம் (இரு) மனைவியரின் உளநிறைவுக்காக நீங்கள் ஏன் விலக்கிக் கொள்கின்றீர்கள்? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரில்லா அன்புடையோன். உங்களுடைய சத்தியங்களை முறித்துக் கொள்வதற்கு உரிய பரிகாரத்தை அல்லாஹ் கடமையாக்கித் தந்திருக்கிறான். அவன்தான் உங்கள் அதிபதி. அவன் நன்கறிபவன்; ஞானம் மிக்கவன் [அல் குர்ஆன் 066:001-002] O Prophet! Why holdest thou to be forbidden that which Allah has made lawful to thee? Thou seekest to please thy consorts. But Allah is Oft-Forgiving, Most Merciful. Allah has already ordained for you, (O men), the dissolution of your oaths (in some cases): and Allah is your Protector, and He is Full of Knowledge and Wisdom. [சுட்டி-29].
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களின் இல்லத்துக்குச் சென்றால் அங்குத் தேன் அருந்துவதையும் அவரிடம் (அதிகநேரம்) தங்கிவிடுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். (இதை விரும்பாமல் அவர்களின் துணைவியரான) நானும் ஹஃப்ஸாவும் கூடிப்பேசினோம். (தேனருந்தி விட்டு) நபி (ஸல்) அவர்கள் நம்மிருவரில் யாரிடம் முதலில் வந்தாலும் அவர், "கருவேலம் பிசின் சாப்பிட்டீர்களா? உங்களிடமிருந்து, பிசினின் துர்வாடை வருகிறதே" என்று கேட்க வேண்டும் என முடிவு செய்துகொண்டோம்.

வழக்கம்போல் ஸைனபின் வீட்டிலிருந்து தேனருந்தி விட்டு, நபி (ஸல்) அவர்கள் வந்தபோது நாங்கள் பேசி வைத்திருந்தபடி கேட்டோம். நபியவர்கள், "இல்லை (நான் பிசின் சாப்பிடவில்லை); ஸைனபின் இல்லத்தில் தேனருந்தினேன். சத்தியம் செய்கிறேன்: (இனிமேல்,) நான் ஒருபோதும் அதை அருந்த மாட்டேன்" என்று கூறிவிட்டு, "இது குறித்து எவரிடமும் தெரிவித்து விடாதே!" என்றும் கேட்டுக் கொண்டார்கள் [அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா (ரலி) - புகாரீ4912; சுட்டி-30].

இதில் தக்கியா எங்கே? பிறமதத்தவர் எங்கே?

யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.

- தொடரும், இன்ஷா அல்லாஹ்.

ஃஃஃ

சுட்டிகள்:
20 - http://chittarkottai.com/bukhari/tamil/numbersearch.php?bnumber=6650
21 - http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/quran/002.qmt#002.226
22 - http://chittarkottai.com/bukhari/tamil/numbersearch.php?bnumber=4613
23 - http://chittarkottai.com/bukhari/tamil/numbersearch.php?bnumber=6108
24 - http://chittarkottai.com/bukhari/tamil/numbersearch.php?bnumber=6141
25 - http://chittarkottai.com/bukhari/tamil/numbersearch.php?bnumber=5228
26 - http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/quran/002.qmt#002.225
27 - http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/quran/005.qmt#005.089
28 - http://chittarkottai.com/bukhari/tamil/numbersearch.php?bnumber=4613
29 - http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/quran/066.qmt#066.001
30 - http://chittarkottai.com/bukhari/tamil/numbersearch.php?bnumber=4912

Sat 26

Click here to bookmark this link.Channel Image05:36 புதுவகை நோய்: இமி-2 வஹ்ஹாபி
உடன்படிக்கை என்றால் என்ன?

இருவர் அல்லது இரு சாரார் தத்தமது விருப்பங்களை/கோரிக்கைகளை முன்வைத்துக் கலந்துபேசி, பொதுவான முடிவுக்கு வந்து, அதை இருவரும்/இருசாராரும் ஏற்றுச் செயல்படுவதற்கு உடன்படுவதாக உறுதி கூறுவது/எழுதிக் கொள்வதற்குப் பெயர் உடன்படிக்கையாகும்.

அவ்வாறு ஏற்றுக் கொண்டவற்றைப் புறக்கணித்து உடன்படிக்கையை முதலாவதாக முறிப்பவர்கள் அநியாயக்காரர்களே. பிறரோடு செய்து கொண்ட உடன்படிக்கைகளை முஸ்லிம்கள் முறித்ததாக இஸ்லாமிய வரலாற்றில் எங்கும் பார்க்க முடியாது.

முஸ்லிம்களின் தலைவர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிறருடன் செய்து கொண்ட உடன்படிக்கைகள் பல. அவற்றுள் 'யூத உடன்படிக்கை' [சுட்டி-09], புகழ் பெற்றது. அந்த உடன்படிக்கையை முறித்தவர்கள் [சுட்டி-10] யூதர்கள் ஆவர். அதேபோல் இஸ்லாமிய வரலாற்றில் பெருமை பொங்கப் பேசப்படும் ஹுதைபிய்யா உடன்படிக்கையை முறித்தவர்கள் மக்கத்துக் குரைஷியர்கள் ஆவர்.

ஆனால், வரலாற்றைத் திரிக்கும் முயற்சியாக, 'புனித மோசடி'யில் உடன்படிக்கையை முஸ்லிம்கள் உடைத்ததாகத் தலைகீழ்ப் பாடம் நடத்தப் பட்டது; அதைத் திண்ணையும் பதித்துப் பெருமை(!) சேர்த்துக் கொண்டது.

அரைகுறை-2 Sura (9:3) - "...Allah and His Messenger are free from liability to the idolaters...” (உடன்படிக்கையை உடைத்தல் என்பதும் ‘தக்கியா’வின் மற்றொரு விளைவு-பாணி).

அல்குர்ஆனின் ஒன்பதாவதான 'மீட்சி/விலகல்' அத்தியாயத்தின் மூன்றாவது வசனத்தின் சில (அரைகுறைச்) சொற்கள், 'உடைப்பதற்கே உடன்படிக்கை' என்று முஸ்லிம்களுக்கு உத்தரவு போடுவதுபோல் பம்மாத்துக் காட்டப் பட்டுள்ளது.

மேற்காணும் இறைவசனத்தில் பேசப்படும் உடன்படிக்கை யாது? அதன் பொருளடக்கங்கள் யாவை? அவற்றை மீறியவர் யாவர்? போன்ற முழுமையான தகவல்களை இங்கு நாம் அறிந்து கொள்வோம். அதற்கு முன்னர், இஸ்லாமிய மீளெழுச்சியின் 19ஆவது ஆண்டின் இறுதியில் இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் மக்கத்து இணைவைப்பாளர்களின் தலைவர் அபூஃஸுப்யானின் பிரதிநிதி ஸுஹைல் பின் அம்ரூ என்பவருக்கும் ஏற்பட்ட 'ஹுதைபிய்யா உடன்படிக்கை'யைப் பற்றி மேற்காணும் இறைவசனம் [009:003] பேசுவதால் 19 ஆண்டுகால இஸ்லாமிய மீளெழுச்சியைப் பற்றி மிகச் சுருக்கமாகப் பார்த்துக் கொள்வது நலம்.

இஸ்லாத்தின் மீளெழுச்சிக்குப் பின்னர் 13 ஆண்டுகள்வரை, தம் குடும்பச் சொந்தமான குரைஷியர்களால் நிகழ்த்தப் பட்ட ஊர்விலக்கல் முதல், கொலை முயற்சிவரை அனைத்தையும் எதிர்கொண்டு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்காவில்தான் வசித்தார்கள். 13ஆவது ஆண்டின் இறுதியில், தாம் பிறந்த மண்ணான மக்காவைத் துறந்து, அடைக்கலம் கொடுப்பதற்கு அழைத்த மதீனாவுக்குப் புலம் பெயர்ந்தார்கள். இந்தப் புலப் பெயர்வுக்கு, 'ஹிஜ்ரா/ஹிஜ்ரத்' என்பது அரபுப் பெயராகும். அந்த ஆண்டிலிருந்தே முஸ்லிம்களின் வரலாற்றுப் பதிவுகளை 'ஹிஜ்ரீ' எனும் பெயரால் வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

மதீனாவின் மக்களுக்கிடையே பன்னெடுங்காலம் நிலவி வந்த இனப்பகையை ஒழித்துக் கட்டி, மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தியதாலும் பல சீர்திருத்தங்களைச் செய்ததாலும் மதீனாவின் மக்கள் அண்ணல் நபியைத் தம் ஆட்சித் தலைவராக்கிக் கொண்டனர் [சுட்டி-11].

அண்ணல் நபியின் செல்வாக்குக் கூடிக் கொண்டே போவதையும் அவர்கள் மக்காவில் வாழ்ந்த காலத்தில் பரவியதைவிடப் பன்மடங்கு அவரது புலப் பெயர்வுக்குப் பின்னர் அதிவேகமாக தம் சொந்த மண்ணில், தங்களின் கண் முன்பே வெகு வேகமாக இஸ்லாம் பரவுவதைக் கண்ட குரைஷிகள், மதீனாவைச் சூறையாடுவதற்கும் மதீனாவின் ஆட்சித் தலைவராகத் திகழ்ந்த அண்ணலாரை ஒழித்துக் கட்டுவதற்கும் மக்காவிலிருந்து (ஏறத்தாழ 400கி.மீ) பயணித்து வந்து பலமுறை (முதல் பத்ரு ஹிஜ்ரீ2இல்; உஹது ஹிஜ்ரீ3இல்; இரண்டாவது பத்ரு ஹிஜ்ரீ4இல்; அகழி ஹிஜ்ரீ-5இல்) போர் புரிந்தனர்; அனைத்திலும் தோல்வியைத் தழுவித் திரும்பிச் சென்றனர்.

***

அகழிப் போருக்கு அடுத்த ஆண்டு ஹிஜ்ரீ 6இல் மக்காவிலுள்ள கஅபா எனும் இறைப் பேரில்லத்தில் உம்ரா எனும் புனித வணக்கம் புரிவதற்காக நபிகள் நாயகமும் அவர்களின் 1400 தோழர்களும் மதீனாவிலிருந்து புறப்பட்டு மக்காவை நேக்கிச் சென்றார்கள். மக்காவைப் புனிதப் பயணக்குழு சென்றடைவதற்கு ஏறத்தாழ 15 கி.மீ தொலைவு இருக்கும்போது மக்காவின் இணைவைப்பவர்கள், பயணக்குழுவை மக்காவுக்குள் அனுமதிக்க முடியாது எனத் தடுத்தனர். அந்த இடத்துக்குப் பெயர் ஹுதைபிய்யா.

தாங்கள் போர் செய்ய வரவில்லை என்றும் அக்கால அரபியர் அனைவருக்கும் பொதுவான 'உம்ரா' வணக்கம் புரிவதற்கே மக்காவுக்கு வருவதாக முஸ்லிம்கள் தரப்பில் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் எதிரணியினர் செவி சாய்க்கவில்லை. முஸ்லிம்களும் முறுக்க ஆரம்பித்தனர். இதற்கிடையில் மக்காவின் தலைவர்களுக்கிடையே முஸ்லிம்களை இறையில்லத்திற்கு வரவிடாமல் தடுப்பது குறித்து இரு வேறு கருத்துகள் [சுட்டி-12] ஏற்பட்டன.
நிலைமை மோசமாவதை அறிந்து கொண்ட மக்கத்துக் குறைஷிகள், அமைதி உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்வதற்காக சுஹைல் இப்னு அம்ரூ என்பவரை நபி (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தனர்.

நபி (ஸல்) அவர்களிடம் சுஹைல் நீண்ட நேரம் பேசினார். பின்பு இருவரும் உடன்படிக்கைக்கான கூறுகளை முடிவு செய்தனர். அவையாவன:
[1] முஸ்லிம்கள் இந்த ஆண்டு மக்காவுக்குள் நுழையாமல் திரும்பிச் சென்றுவிட வேண்டும். அடுத்த ஆண்டு முஸ்லிம்கள் உம்ராவிற்கு வந்து மக்காவில் மூன்று நாட்கள் தங்கிக் கொள்ளலாம். சாதாரணமாக ஒரு பயணி தன்னுடன் வைத்திருக்கும் ஆயுதங்களை எடுத்து வரலாம். ஆனால் அவற்றை உறைக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்த ஆண்டில் முஸ்லிம்களுக்கு எவ்வகையிலும் எந்தவித இடையூறும் இருக்காது.

[2] பத்து ஆண்டுகளுக்கு இரு தரப்பிலும் போர் நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது. அக்காலங்களில் அனைவரும் அச்சமற்று இருப்பார்கள். யாரும் எவருக்கும் எவ்விதத் தீங்கும் செய்யக் கூடாது.

[3] யாரொருவர் முஹம்மதுடைய உடன்படிக்கையாளராகச் சேர்ந்து கொள்ள விரும்புகிறாரோ அவர் அதில் சேர்ந்து கொள்ளலாம். போலவே, மக்காக் குறைஷிகளின் உடன்படிக்கையாளராகச் சேர்ந்து கொள்ள விரும்புகிறவர் அதில் சேர்ந்து கொள்ளலாம். இந்த இரு பிரிவினரில் ஒன்றுடன் சேர்ந்து கொள்ளும் எந்த ஒரு கிளையினரும் அந்தப் பிரிவைச் சேர்ந்தவராவார். அதற்குப்பின் அந்தக் கிளையினருக்கு எதிராக யாராவது அத்துமீறி நடந்து கொண்டால் அஃது அவர் சார்ந்த முழுப்பிரிவின் மீதான அத்துமீறலாகக் கொள்ளப் படும்.

[4] மக்கத்துக் குறைஷி ஆண்களுள் யாராவது தன் பாதுகாவலரான நெருங்கிய உறவினரின் அனுமதியின்றி, தப்பித்து முஹம்மதிடம் வந்து சேர்ந்தால் முஹம்மது அவரை மக்கத்துக் குறைஷிகளிடம் திருப்பி அனுப்பி விடவேண்டும். ஆனால், முஹம்மதிடம் உள்ளவர்களில் யாராவது தப்பித்து மக்கத்துக் குறைஷிகளிடம் வந்துவிட்டால் அவர் முஹம்மதிடம் திருப்பி அனுப்பப்பட மாட்டார்.

மேற்காணும் உடன்படிக்கை [சுட்டி-13] முழுமை பெறுமுன்னர், மக்காவைச் சேர்ந்த, அண்மையில் இஸ்லாத்தைத் தழுவிய அபூஜந்தல் என்பார் முஸ்லிம்களுடன் சேர்ந்து கொள்ளப் புகலிடம் தேடி வந்தார். அவர், மக்கத்துக் குரைஷிகளின் பிரதிநியான சுஹைலின் மகனாவார். மக்காவைச் சேர்ந்த ஆண் தங்களிடம் வந்தால் திருப்பி அனுப்பி விடுவோம் என்ற பேச்சு வார்த்தை முடிந்து விட்டதால், அபூஜந்தலை அவரின் தந்தையிடமே ஒப்படைத்த நேமையாளர் எங்கள் தலைவர் [சுட்டி-14] முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.

பிற்றை நாட்களில் அதேபோல், மக்கத்துக் குரைஷியரின் உடன்படிக்கைப் பிரிவான ஸகீப் இனத்தவருள் ஒருவரான அபூபஸீர் என்பார் புகலிடம் தேடி மதீனாவுக்கு வந்தபோது, அவரைத் திருப்பி அனுப்புமாறு கேட்டு வந்த மக்கத்தவர்களுடன் அவரை அனுப்பி வைத்த நேர்மையாளர் எங்கள் தலைவர் [சுட்டி-15].

***

பின்னர், தங்களுக்குப் பாதகம் விளைந்தபோது, ஹுதைபிய்யா உடன்படிக்கையின் நான்காவது கூறுதனைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்தவர்கள் மக்கத்துக் குறைஷிகளாவர்.

உடன்படிக்கையின் மூன்றாவது கூறான, "ஒருபிரிவினருடன் சேர்ந்து கொள்ளும் எந்தக் கிளையினருக்கும் எதிராக மறுபிரிவினர் அத்து மீறக் கூடாது" என்பதை உடைத்தவர்களும் மக்கத்துக் குரைஷியரே.

ஹுதைபிய்யா உடன்படிக்கைக்கு முன்னர்வரை குஜாஆ, பனூபக்ரு ஆகிய இரு குலத்தவரும் பன்னெடுங் காலமாகப் பகைமை மாறாமல் தங்களுக்குள் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். உடன்படிக்கைக்குப் பின்னர், குஜாஆவினர் நபியவர்களுடன் சேர்ந்து கொண்டனர். பனூபக்ரு குலத்தார் குரைஷிகள் பக்கம் சேர்ந்து கொண்டனர். இரு குலத்தவரிடையே சண்டைகள் தொடராமல் ஹுதைபிய்யா உடன்படிக்கைக் கட்டுப் படுத்தி வைத்திருந்தது.

ஹிஜ்ரீ 8, ஷஅபான் (எட்டாவது) மாதம் பனூபக்ரு குலத்தினரின் ஒரு கூட்டத்தினரை அழைத்துக் கொண்டு நவ்ஃபல் இப்னு முஆவியா அத்தியலி என்பவன் புறப்பட்டான். அன்று குஜாஆக் குலத்தவருள் சிலர் 'அல்வத்தீர்' என்ற கிணற்றுக்கருகில் ஒன்றுகூடியிருந்தனர். நவ்ஃபல், தான் அழைத்து வந்தவர்களைச் சேர்த்துக் கொண்டு குஜாஆவினரைத் தாக்கினான். குஜாஆவினரில் சிலர் கொல்லப்பட்டனர். எஞ்சியுள்ளவர்களுடன் கடுமையான சண்டை நடந்தது. பனூபக்ருக் கிளையினருக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவியதோடு, அவர்களோடு இணைந்து கொண்டு குரைஷிகளுள் சிலரும் இரவின் இருளை பயன்படுத்திக் கொண்டு குஜாஆவினரைத் தாக்கினர்.

சண்டைசெய்து கொண்டே குஜாஆவினர் புனித (ஹரம்) எல்லைக்குள் நுழைந்து விட்டனர். அப்போது பனூபக்ருக் கிளையினர், "நவ்ஃபலே! நாம் நிறுத்திக் கொள்வோம். நாம் ஹரம் எல்லைக்குள் நுழைந்து விட்டோம். உமது இறைவனைப் பயந்துகொள்! உமது இறைவனை பயந்துகொள்!'' என்று கூறினர். ஆனால், சதிகாரன் நவ்ஃபல் அதைச் செவிமடுக்காமல், மிகக் கடுமையான வார்த்தையைக் கூறினான். "பக்ரு இனத்தாரே! இன்றைய தினம் எந்த இறைவனும் இல்லை. உங்களது பழியைத் தீர்த்துக் கொள்ளுங்கள். என்மீது சத்தியமாக! ஹரம் எல்லையில் திருடும் நீங்கள் அதில் ஏன் கொலை செய்யக் கூடாது?'' என்றான். கொல்லப் பட்டவர்களைத் தவிர்த்து, எஞ்சிய குஜாஆவினர் புதைல் இப்னு வரகா மற்றும் ராபிஃ ஆகிய தங்களின் நண்பர்கள் வீட்டில் சென்று அடைக்கலம் புகுந்து கொண்டனர்.

ஹுதைபிய்யா உடன்படிக்கையை மக்கத்துக் குரைஷிகள் மீறி, தங்களைக் கொன்றொழிக்க வந்ததை, குஜாஆக் குலத்தைச் சேர்ந்த அம்ரு இபுனு ஸாலிம் மதீனாவுக்குச் சென்று நபியவர்களிடம் கவிதையாகப் பாடினார்:
இறைவா! நான் முஹம்மதிடம் எங்கள் உடன்படிக்கையையும்
அவர் தந்தையின் பழமையான உடன்படிக்கையையும்
கேட்டு வந்திருக்கின்றேன். நீங்கள் பிள்ளைகள்;
நாங்கள் பெற்றோர்கள்; பின்னரே முஸ்லிமானோம்.
பின்வாங்கவில்லை. முழுமையாக உதவுங்கள்!
அல்லாஹ் உமக்கு வழிகாட்டுவான்.
அல்லாஹ்வின் அடியார்களை அழை;
உதவிக்கு அவர்களும் வருவார்கள்
அவர்களில் ஆயுதம் ஏந்திய அல்லாஹ்வின்
தூதரும் இருக்கின்றார். அவர் வானில் நீந்தும்
முழு நிலா போல் அழகுள்ளவர்.
அவருக்கு அநீதமிழைத்தால் முகம் மாறிவிடுவார்.
நுரை தள்ளும் கடல்போன்ற படையுடன் வருவார்
குறைஷிகள் உன் வாக்கு மாறினர்.
உன் வலுவான உடன்படிக்கையை முறித்து விட்டனர்.
'கதா'வில் எனக்குப் பதுங்குக் குழி வைத்துள்ளனர்.
ஒருவரையும் உதவிக்கு அழையேன்
என நினைத்துக் கொண்டனர். அவர்கள் அற்பர்கள்
சிறுபான்மையினர் வதீல் இரவு எங்களைத் தாக்கினர்.
நாங்கள் இறைவனைப் பணிந்து குனிந்து வணங்கிய போது
எங்களை அவர்கள் வெட்டினர்.


மக்கத்துக் குரைஷியரால் ஹுதைபிய்யா உடன்படிக்கை மீறப்பட்ட பின்னரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்கத்துக் குரைஷியருக்கு மூன்று கூறுகளைத் தேர்வுக்காக முன் வைத்தார்கள்:
1. வலியச் சென்று சண்டையைத் துவக்கிய பனூ பக்ரு குலத்தாரை உடன்படிக்கையிலிருந்து நீக்குவது
2. மக்கத்துக் குரைஷியரும் பனூ பக்ருவினரும் சேர்ந்து கொண்டு கொலை செய்த குஜாஆவினருக்காக நஷ்ட ஈடு வழங்குவது.
3. ஹுதைபிய்யா உடன்படிக்கையை முற்றாக முறித்துக் கொள்வது.

குரைஷியர் மூன்றாவதைத் தேர்ந்தனர் [சுட்டி-16].

அடுத்த மாதமே, அதாவது ஹிஜ்ரீ எட்டாம் ஆண்டு, ரமளான் (9வது) மாதம் பத்தாம் நாளில் பத்தாயிரம் தோழர்களுடன் மதீனாவிலிருந்து நபியவர்கள் புறப்பட்டு மக்காவை அடைந்தபோது நபியவர்கள் பிறந்த மண், தன்னை முழுமையாக அவர்களிடம் ஒப்படைத்தது. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர், தன்னை ஊரைவிட்டு விரட்டியடித்தவர்கள் அன்று வெருண்டோடி ஒளிந்து கொள்வதை நபியவர்கள் கண்டனர் [சுட்டி-17]. அதற்குப் பின்னரும் - மக்கா வெற்றி கொள்ளப் பட்டு, உடன்படிக்கை என்பது செல்லாமல்/இல்லாமல் ஆகிவிட்ட பிறகும் - அவ்வாறு நபியவர்கள் அறிவிக்கவில்லை என்பது வரலாற்று ஆசிரியர்களின் உச்ச கட்ட வியப்பாகும்.

மக்கா வெற்றி கொள்ளப் பட்டபோது, "குரைஷிக் கூட்டத்தினரே! நான் உங்களிடம் எவ்வாறு நடந்து கொள்வேன் என்று எதிர்பார்க்கின்றீர்கள்?" என்று நபியவர்கள் கேட்க, " நல்ல முறையில் நடந்து கொள்வீர்கள். நீங்கள் எங்களின் சிறந்த சகோதரரும் எங்களுள் சிறந்த சகோதரரின் மகனுமாவீர்கள்" என்று குரைஷியர் கூறினர். "இன்றைய தினம் உங்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு" என்று அறிவித்து, தனது பெருந்தன்மையை வெளிப்படுத்தி, மனிதாபிமானத்தை நிலைநிறுத்தினார் எம் தலைவர் [சுட்டி-18].
***
அரைகுறை-2இல் குறிப்பிடப் பட்டுள்ள கீழ்க்காணும் வசனங்கள் ஹிஜ்ரீ ஒன்பதாவது ஆண்டில் அருளப் பெற்றன:
அல்லாஹ்வும் அவனின் தூதரும் இணைவைப்பவர்கள்(உடன் செய்திருந்த உடன்படிக்கை)ஐ விட்டும் முற்றிலும் விலகி விட்டனர் என்பதை இந்த மாபெரும் ஹஜ் நாளில் மக்களுக்கு அல்லாஹ்வும் அவனின் தூதரும் அறிவிக்கின்றனர். (இணைவைப்பாளர்களே!) நீங்கள் திருந்திக் கொள்வீர்களாயின் அஃது உங்களுக்குச் சிறப்பைத் தரும். மறுதலிப்பீர்களாயின், அறிந்து கொள்வீர்! அல்லாஹ்வை நீங்கள் வெல்ல முடியாது. (நபியே!) வலிமிகு வேதனையைப் பற்றி இறைமறுப்பாளர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக!
நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்ட இணைவைப்போருள் உடன்படிக்கைக்கு ஊறு செய்யாமலும் உங்களுக்கு எதிரானவர்களுக்கு உதவி செய்யாமலும் இருப்பவர்களுடன் அவ்வுடன்படிக்கையை அதன் காலக் கெடுவரை முழுமைப் படுத்துங்கள். அல்லாஹ், தன்னை அஞ்சி வாழ்வோரிடம் அன்பு செலுத்துகிறான் [அல் குர்ஆன் 009:003-004].
And an announcement from Allah and His Messenger, to the people (assembled) on the day of the Great Pilgrimage,- that Allah and His Messenger dissolve (treaty) obligations with the Pagans. If then, ye repent, it were best for you; but if ye turn away, know ye that ye cannot frustrate Allah. And proclaim a grievous penalty to those who reject Faith. (But the treaties are) not dissolved with those Pagans with whom ye have entered into alliance and who have not subsequently failed you in aught, nor aided any one against you. So fulfil your engagements with them to the end of their term: for Allah loveth the righteous [சுட்டி-19].
மேற்காணும் முழுமையான இறைவசனத்தில் இருப்பது என்ன வகை தக்கியா புக்கியா என்று சொல்லத் தெரியாமல் இந்த இடத்தில் கட்டுரையாளர் ஊமை வேஷம் போடுகிறார்.

- பிற அரைகுறைகள் முழுமையாக்கப் படும்வரை தொடரும், இன்ஷா அல்லாஹ்
ஃஃஃ

சுட்டிகள்:
சுட்டி - 09  http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/madinah_first_phase.htm#7
சுட்டி - 10  http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/madinah_first_phase.htm#59
சுட்டி - 11  http://en.wikipedia.org/wiki/Muhammad_as_a_diplomat#Reformation_of_Medina_.28622.E2.80.94.29
சுட்டி - 12 http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/madinah_first_phase.htm#135
சுட்டி - 13 http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/madinah_first_phase.htm#140
சுட்டி - 14 http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/madinah_first_phase.htm#141
சுட்டி - 15 http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/madinah_first_phase.htm#146
சுட்டி - 16 http://en.wikipedia.org/wiki/Treaty_of_Hudaybiyyah#Aftermath
சுட்டி - 17 http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/madinah_second_phase.htm#70
சுட்டி - 18 http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/madinah_second_phase.htm#73
சுட்டி - 19 http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/quran/009.qmt#009.003

Thu 24

Click here to bookmark this link.Channel Image17:26 [பாடம்-88] ஏகத்துவம் (ஓரிறைக் கோட்பாடு) இறுதிப் பாடம். முக்தஸர் ஸஹீஹுல் புகாரி
அல்லாஹ் நேசிக்கும் அடியான்.

2220. ஆயிஷா(ரலி) அறிவித்தார்: நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதரை படைப்பிரிவு ஒன்றுக்குத் தளபதியாக்கி அனுப்பினார்கள். அவர், தம் தொழுகையில் தம் தோழர்களில் (குர்ஆன் வசனங்களை) ஓதி (தொழுகை நடத்தி) வந்தார்; (ஒவ்வொரு முறையும்) ஓதி முடிக்கும்போது 'குல் ஹுவல்லாஹு அஹத்' எனும் (112 வது) அத்தியாயத்துடன் முடிப்பார். அப்படையினர் திரும்பி வந்தபோது நபி(ஸல்) அவர்களிடம் இதைப் பற்றி தெரிவித்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'எதற்காக இப்படிச் செய்கிறார் என்று அவரிடமே கேளுங்கள்'' என்று கூற, அவர்களும் அவரிடம் கேட்டனர். அவர், 'ஏனெனில், அந்த அத்தியாயம் பேரருளாளனின் (ஏகத்துவப்) பண்புகளை எடுத்துரைக்கின்றது. நான் அதை (அதிகமாக) ஓதுவதை விரும்புகிறேன்'' என்றார். (இதைக் கேள்விப்பட்ட) நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் அவரை நேசிக்கிறான் என்று அவருக்குத் தெரிவியுங்கள்'' என்று கூறினார்கள்.

''அல்லாஹ்தான் உணவளிப்பவன்; வலிமையுள்ளவன்; உறுதியானவன்'' எனும் (திருக்குர்ஆன் 51:58 வது) இறைவசனம்.

2221. மனவேதனைக்குள்ளாக்கும் செய்தி கேட்டும் (உடனே தண்டித்துவிடாமல்) மிகவும் பொறுமை காப்பவர் அல்லாஹ்வை விட வேறு யாருமில்லை. மனிதர்கள் (சிலர்) அவனுக்குக் குழந்தை இருப்பதாகக் கூறுகிறார்கள். அதன் பிறகும் அவர்களுக்கு உடல் நலத்தையும் உணவு வளத்தையும் அவன் வழங்கிக் கொண்டிருக்கிறான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.

நித்திய ஜீவன் அல்லாஹ் மட்டுமே.

2222. அப்பாஸ்(ரலி) அறிவித்தார்: நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) பிரார்த்தனை செய்து வந்தார்கள்: (இறைவா!) உன் கண்ணியத்தின் பெயரால் பாதுகாப்புக் கோருகிறேன். உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. ஜின் இனத்தாரும் மனித குலத்தாரும் இறந்து விடுவார்கள்; (ஆனால்,) நீ இறக்கமாட்டாய்.

அல்லாஹ்வின் கருணை அவன் கோபத்தை மிகைத்தது.

2223. அல்லாஹ் படைப்புகளை படைத்தபோது (தன்னுடைய) அரியாசனத்தின் மீது வைக்கப்பட்டிருந்த தன்னுடைய பதிவேட்டில், 'என் கருணை என் கோபத்தை வென்றுவிட்டது'' என்று (கருணையைத்) தனக்குத்தானே விதியாக்கிக் கொள்ளும் வகையில் எழுதினான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் இதைஅபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

2224. உயர்ந்தோன் அல்லாஹ் கூறினான்: என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்துகொள்வேன். அவன் என்னை நினைவு கூரும்போது நான் அவனுடன் இருப்பேன். அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவுகூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவுகூருவேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூருவேன். அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழுமளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் (வலதும் இடதுமாக விரித்த) இரண்டு கைகளின் நீள அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச் செல்வேன் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

அல்லாஹ் அடியானின் நன்மை தீமைகளைப் பதிவு செய்தல்.

2225. அல்லாஹ் (வானவர்களிடம்) கூறுகிறான்: என் அடியான் ஒரு தீமையைச் செய்ய நாடினால் அதை அவன் செய்யாதவரை அவனுக்கெதிராக அதைப் பதிவு செய்யாதீர்கள். அதை அவன் செய்தால் செய்த குற்றத்தை மட்டுமே பதிவு செய்யுங்கள். அதை அவன் எனக்காக விட்டுவிட்டால் அதை அவனுக்கு ஒரு நன்மையாகப் பதிவு செய்யுங்கள். அவன் ஒரு நன்மை புரிய எண்ணிவிட்டாலே அதைச் செய்யாவிட்டாலும் கூட அவனுக்கு ஒரு நன்மையை எழுதுங்கள். அதை அவன் செய்துவிட்டாலோ அதை அவனுக்கு பத்து நன்மைகளிலிருந்து எழுநூறு நன்மைகளாக எழுதுங்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

2226. ஓர் அடியார் ஒருபாவம் செய்துவிட்டார். பிறகு 'இறைவா! நான் ஒரு பாவம் செய்து விட்டேன். எனவே, என்னை மன்னித்து விடுவாயாக' என்று பிரார்த்தித்தார். உடனே அவரின் இறைவன். 'என் அடியான் எனக்கோர் இறைவன் இருக்கிறான் என்றும், அவன் பாவங்களை மன்னிப்பான்; (அல்லது) அதற்காகத் தண்டிப்பான் என்றும் அறிந்துள்ளானா? (நன்று) நான் என் அடியானை மன்னித்துவிட்டேன்'' என்று சொன்னான். பிறகு அந்த அடியார் (சிறிது காலம்) அல்லாஹ் நாடியவரை அப்படியே இருந்தார். பிறகு மீண்டும் ஒரு பாவத்தைச் செய்தார். அப்போது அந்த மனிதர் (மீண்டும்) 'என் இறைவா! நான் மற்றொரு பாவம் செய்து விட்டேன். எனவே, என்னை மன்னித்து விடுவாயாக' என்று பிரார்த்தித்தார். உடனே இறைவன் (இம் முறையும்) 'என் அடியான் தனக்கோர் இறைவன் இருக்கிறான் என்றும், அவன் பாவங்களை மன்னிப்பான்; (அல்லது) அதற்காகத் தண்டிப்பான் என்றும் அறிந்துள்ளானா? (நல்லது.) நான் என் அடியானை மன்னித்துவிட்டேன்'' என்று சொன்னான். பிறகு அல்லாஹ் நாடியவரை அந்த மனிதர் அப்படியே (சிறிது காலம்) இருந்தார். பிறகும் (மற்றொரு) பாவம் செய்தார். (இப்போதும் முன்பு போன்றே) 'என் இறைவா! நான் இன்னொரு பாவம் செய்து விட்டேன். எனக்காக அதை மன்னித்து விடுவாயாக' என்று பிரார்த்தித்தார். அதற்கு அல்லாஹ் 'என் அடியான் தனக்கோர் இறைவன் இருக்கிறான் என்றும், அவன் பாவங்களை மன்னிப்பான்; (அல்லது) அதற்காகத் தண்டிப்பான் என்றும் அறிந்துள்ளானா? (அப்படியானால்) நான் என் அடியானை மூன்று முறையும் மன்னித்து விட்டேன். இனி அவன் நாடியதைச் செய்து கொள்ளட்டும்'' என்று சொன்னான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹூரைரா (ரலி) அறிவித்தார்.

மறுமைநாளில் இறைத்தூதர்களுடனும் மற்றவர்களுடனும் வலிமையும் மகத்துவமும் மிகுந்த இறைவன் உரையாடுவது.

2227. மறுமைநாள் வரும்போது என் சமுதாயத்தாருக்காகப் பரிந்துரை செய்ய எனக்கு அனுமதியளிக்கப்படும். நான் 'என் இறைவா! எவருடைய உள்ளத்தில் கடுகளவு (இறைநம்பிக்கை) உள்ளதோ அவர்களை சொர்க்கத்தில் அனுமதிப்பாயாக!'' என்று கூறுவேன். அவர்கள் அவ்வாறே சொர்க்கம் செல்வார்கள். பிறகு நான் 'எவருடைய உள்ளத்தில் சிறிதளவேனும் (இறைநம்பிக்கை) உள்ளதோ அவர்களை சொர்க்கத்தில் அனுமதிப்பாயாக'' என்று மீண்டும் பிரார்த்திப்பேன் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை அறிவித்த அனஸ்(ரலி) அவர்கள் 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ('சிறிதளவேனும்' என்று கூறியபோது) விரல் நுனியைக் காட்டியதை நான் இப்போதும் பார்ப்பது போன்றுள்ளது'' என்று கூறினார்கள்.

மறுமையில் இறைத்தூதருடன் அல்லாஹ்.

2228. மஅபத் இப்னு ஹிலால் அல்அனஸீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார் : பஸ்ராவாசிகளில் சிலர் (ஓரிடத்தில்) ஒன்று கூடினோம். பிறகு நாங்கள் அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் சென்றோம். அனஸ்(ரலி) அவர்களிடம் பரிந்துரை (ஷஃபாஅத்) பற்றிய நபிமொழியைக் கேட்பதற்காக எங்களுடன் ஸாபித் அல் புனானீ(ரஹ்) அவர்களையும் அழைத்துச் சென்றறோம். அனஸ்(ரலி) அவர்கள் தங்களின் கோட்டையில் 'ளுஹா' தொழுது கொண்டிருக்கையில் நாங்கள் அவர்களிடம் போய்ச்சேர்ந்தோம். பிறகு நாங்கள் உள்ளே செல்ல அனுமதி கேட்க, எங்களை அவர்கள் (உள்ளே நுழைய) அனுமதித்தார்கள். அப்போது அவர்கள் தங்களின் விரிப்பில் அமர்ந்து கொண்டிருந்தார்கள். நாங்கள் ஸாபித்(ரஹ்) அவர்களிடம் 'பரிந்துரை பற்றிய நபிமொழிக்கு முன்னால் வேறு எதைப் பற்றியும் கேட்காதீர்கள்'' என்று சொன்னோம். உடனே ஸாபித்(ரஹ்) அவர்கள், 'அபூ ஹம்ஸா! (அனஸ்!) இதோ இவர்கள் பஸ்ராவாசிகளான உங்கள் சகோதரர்கள் ஆவர். பரிந்துரை (ஷஃபாஅத்) பற்றிய நபிமொழியை உங்களிடம் கேட்பதற்காக இங்கு வந்திருக்கிறார்கள்'' என்றார்கள். அப்போது அனஸ்(ரலி) கூறினார்: முஹம்மத்(ஸல்) அவர்கள் எங்களிடம் தெரிவித்தார்கள். (பீதி மிகுந்த) மறுமை நாள் நிகழும்போது மக்கள் சிலர் சிலரோடு அலைமோதுவார்கள். அவர்கள் (ஆதி மனிதர்) ஆதம்(அலை) அவர்களிடம் சென்று '(இந்தச் சோதனையான கட்டத்திலிருந்து எங்களைக் காக்க) எங்களுக்காக உங்களுடைய இறைவனிடம் பரிந்துரை செய்யுங்கள்'' என்று சொல்வார்கள். அதற்கு ஆதம்(அலை) அவர்கள், 'அந்தத் தகுதி எனக்கு இல்லை. நீங்கள் இப்ராஹீம்(அலை) அவர்களைப் போய் பாருங்கள். ஏனென்றால், அவர் அளவிலா அருளாள(னான இறைவ)னின் உற்ற நண்பராவார்'' என்று கூறுவார்கள். உடனே மக்கள் இப்ராஹீம்(அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது இப்ராஹீம்(அலை) அவர்களும், 'அந்தத் தகுதி எனக்கு இல்லை. நீங்கள் மூஸாவிடம் செல்லுங்கள். ஏனென்றால், அவர் அல்லாஹ்வுடன் உரையாடியவராவார்'' என்று சொல்வார்கள். உடனே, மக்கள் மூஸா(அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது மூஸா (அலை) அவர்களும் அதற்கு(த் தகுதியானவன்) நான் அல்லன்; நீங்கள் ஈசாவைப் போய் பாருங்கள். ஏனென்றால், அவர் அல்லாஹ்வின் ஆவியும் அவனுடைய வார்த்தையும் ஆவார்'' என்று சொல்வார்கள். உடனே, மக்கள் ஈசா(அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது ஈசா(அலை) அவர்கள் அதற்கு(த் தகுதியானவன்) நான் அல்லன்; நீங்கள் முஹம்மத் (ஸல்) அவர்களைப் போய் பாருங்கள்'' என்று சொல்வார்கள். உடனே, மக்கள் என்னிடம் வருவார்கள். அப்போது நான், 'நான் அதற்குரியவன் தான்'' என்று சொல்லிவிட்டு, (மக்களுக்காகப் பரிந்துரைக்க) என் இறைவனிடம் அனுமதி கேட்பேன். அப்போது எனக்கு அனுமதியளிக்கப்படும். தற்போது எனக்குத் தோன்றாத புகழ்மாலைகளையெல்லாம் அப்போது நான் இறைவனைப் போற்றிப் புகழும் வகையில் எனக்கு அவன் என்னுடைய எண்ணத்தில் உதயமாக்குவான். அந்தப் புகழ்மாலைகளால் நான் அவனைப் (போற்றிப்) புகழ்வேன். அவனுக்காக (அவன் முன்) நான் சஜ்தாவில் (சிரவணக்கத்தில்) விழுவேன். அப்போது (இறைவனின் தரப்பிலிருந்து), 'முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள்; உங்களுக்காகச் செவியேற்கப்படும். கேளுங்கள்; தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்'' என்று சொல்லப்படும். அப்போது நான், 'என் இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்' என்பேன். அப்போது, 'செல்லுங்கள்; எவருடைய உள்ளத்தில் வாற்கோதுமையின் எடையளவு இறைநம்பிக்கை இருந்தோ அவரை நரகத்திலிருந்து அப்புறப்படுத்துங்கள்'' என்று சொல்லப்படும். எனவே, நான் சென்று அவ்வாறே செய்வேன். பிறகு திரும்பி வந்து, அதே புகழ்மாலைகளைக் கூறி (மீண்டும்) அவனை நான் போற்றிப் புகழ்வேன். பிறகு அவனுக்காக சஜ்தாவில் நான் விழுவேன். அப்போதும். 'முஹம்மதே! தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள்; உங்கள் சொல் செவியேற்கப்படும். கேளுங்கள்; தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்'' என்று கூறப்படும். அப்போது நான், 'என் இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்; என்று சொல்வேன். அப்போது 'சொல்லுங்கள்; யாருடைய உள்ளத்தில் 'அணுவளவு' அல்லது 'கடுகளவு' இறை நம்பிக்கை இருந்தோ அவர்களை நரகத்திலிருந்து வெளியேற்றுங்கள்'' என்று சொல்லப்படும். நான் சென்று, அவ்வாறே செய்துவிட்டு, மீண்டும் திரும்பி வந்து அதே புகழ்மாலைகளைக் கூறி அவனைப் போற்றிப் புகழ்வேன். பிறகு அவனுக்காக சஜ்தாவில் விழுவேன். அப்போதும், 'முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்; சொல்லுங்கள்; உங்கள் சொல் செவியேற்கப்படும். கேளுங்கள்; தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்'' என்று (இறைவனின் தரப்பிலிருந்து) சொல்லப்படும். அப்போது நான், 'என் இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்'' என்பேன். அதற்கு அவன், 'செல்லுங்கள்: எவருடைய உள்ளத்தில் கடுகு மணியை விட மிக மிகச் சிறிய அளவில் இறைநம்பிக்கை இருக்கிறதோ அவரை நரகத்திலிருந்து வெளியேற்றுங்கள்'' என்று சொல்வான். அவ்வாறே நான் சென்று அ(த்தகைய)வரை நரகத்திலிருந்து வெளியேற்றுவேன் (என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரலி) அவர்கள் சொன்னார்கள்.)

2229. நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: பிறகு, நான்காம் முறையாக நான் இறைவனிடம் சென்று அதே (புகழ்மாலைகளைக்) கூறி இறைவனைப் போற்றிப் புகழ்வேன். பிறகு அவனுக்காக சஜ்தாவில் விழுவேன். அப்போது, 'முஹமமதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள்; செவியேற்கப்படும். கேளுங்கள்; அது உங்களுக்குத் தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்'' என்று (இறைவனின் தரப்பிலிருந்து) சொல்லப்படும். அப்போது நான், 'என் இறைவா! (உலகில்) லா இலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை) என்று சொன்னவர்களின் விஷயத்தில் (பரிந்துரை செய்ய) எனக்கு அனுமதி வழங்குவாயாக'' என்று நான் கேட்பேன். அதற்கு இறைவன், என் கண்ணியத்தின் மீதும், மகத்துவத்தின் மீதும், பெருமையின் மீதும் ஆணையாக! 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்று சொன்னவர்களை நான் நரகத்திலிருந்து நிச்சயமாக வெளியேற்றுவேன்'' என்று சொல்வான் என மஅபத் இப்னு ஹிலால் அல்அனஸீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

நாவுக்கு எளிதான மீஸானில் கனக்கும் திக்ர்.

2230. '(இறைவனைத் துதிக்கும்) இரண்டு வாக்கியங்கள் அளவற்ற அருளாளனின் பிரியத்திற்குரியவை. நாவுக்கு எளிதானவை. நன்மை தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவை ஆகும். (அவை:) 1. சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்). 2. சுப்ஹானல்லாஹில் அழீம் (கண்ணிய மிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன்)' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

முக்தஸர் ஸஹீஹூல் புஹாரி நிறைவுற்றது.

Tue 22

Click here to bookmark this link.Channel Image16:03 [பாடம்-87] இறைவேதத்தையும் நபிவழியையும் கடைபிடித்தல். முக்தஸர் ஸஹீஹுல் புகாரி
2212. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் : (ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'என் சமுதாயத்தார் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள்; ஏற்க மறுத்தவரைத் தவிர'' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! ஏற்க மறுத்தவர் யார்?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'எனக்குக் கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்; எனக்கு மாறு செய்தவர் (சத்தியத்தை) ஏற்க மறுத்தவராவார்'' என்று பதிலளித்தார்கள்.

2213. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார் : (ஒருநாள்) நபி(ஸல்) அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது அவர்களிடம் சில வானவர்கள் வந்தார்கள். அவர்களில் ஒருவர் 'இவர் உறங்கிக் கொண்டிருக்கிறார்'' என்றார். அதற்கு மற்றொருவர் 'கண்தான் உறங்குகிறது. உள்ளம் விழித்திருக்கிறது'' என்று கூறினார். பின்னர் அவர்கள் 'உங்களுடைய இந்த நண்பருக்கு ஓர் உவமை உண்டு; இவருக்கு அந்த உவமையை எடுத்துரையுங்கள்'' என்று பேசிக்கொண்டார்கள். அப்போது அவர்களில் ஒருவர் 'இவர் உறங்குகிறாரே!'' என்றார். மற்றொருவர் 'கண் உறங்கினாலும் உள்ளம் விழித்திருக்கிறது'' என்றார். பின்னர் அவர்கள் 'இவரின் நிலை ஒரு மனிதரின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அவர் ஒரு வீட்டைக் கட்டினார். அவ்வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். (மக்களை) அழைப்பதற்காக ஓர் ஆளை அனுப்பினார். அழைப்பாளியின் அழைப்பை ஏற்று வந்தவர் வீட்டினுள் சென்றார்; விருந்துண்டார். அழைப்பை ஏற்காதவர் வீட்டிற்குள் நுழையவுமில்லை. விருந்துண்ணவுமில்லை'' என்று கூறினார்கள். பின்னர் அவர்கள், 'இந்த உவமையை அவருக்கு விளக்கிக் கூறுங்கள்; அவர் புரிந்து கொள்ளட்டும்'' என்றார்கள். அப்போது அவர்களில் ஒருவர் 'இவர் உறங்குகிறாரே!'' என்று சொல்ல, மற்றொருவர் 'கண் தான் தூங்குகிறது. உள்ளம் விழித்திருக்கிறது'' என்றார். அதைத் தொடர்ந்து 'அந்த வீடுதான் சொர்க்கம்; அழைப்பாளி முஹம்மத்(ஸல்) அவர்கள்; முஹம்மத்(ஸல்) அவர்களுக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து விட்டார்; முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு மாறு செய்தவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்துவிட்டார். முஹம்மத்(ஸல்) அவர்கள் மக்களை (நல்லவர் - கெட்டவர் என)ப் பகுத்துக் காட்டி விட்டார்கள்'' என்று விளக்கமளித்தார்கள். மற்றோர் அறிவிப்பாளர் தொடரில் ஜாபிர்(ரலி) அவர்கள் '(ஒரு நாள்) நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் வெளியேறி வந்து (இந்த நிகழ்ச்சியைத் தெரிவித்தார்கள்)'' என்று கூறினார்கள்.

அளவுக்கதிகமான கேள்விகள் கேட்டல்.

2214. மக்கள் (பல புதிரான விஷயங்கள் குறித்து) ஒருவரையொருவர் கேள்வி கேட்டுக் கொண்டேயிருப்பார்கள். இறுதியில், 'அனைத்துப் பொருட்களையும் படைத்தவன் அல்லாஹ்; இது (சரிதான்). அல்லாஹ்வைப் படைத்தவன் யார்?' என்று கூடக் கேட்பார்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

கல்விமான்கள் குறைந்து அறிவீனர்கள் எஞ்சியிருத்தல்.

2215. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்கள் அறிவித்தார் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி அல்ஆஸ்(ரலி) அவர்கள் (நாங்கள் இருந்த இடம் வழியாக) எங்களைக் கடந்து ஹஜ் செய்யச் சென்றார்கள். அப்போது அவர்கள் சொல்லக் கேட்டேன்: நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் உங்களுக்குக் கல்வியை வழங்கிய பின் அதை ஒரேயடியாகப் பறித்துக் கொள்ளமாட்டான். மாறாக, கல்விமான்களை அவர்களின் கல்வியுடன் கைப்பற்றிக் கொள்வதன் மூலம் அவர்களிடமிருந்து அதை (சன்னஞ் சன்னமாக)ப் பறித்துக்கொள்வான். பின்னர், அறிவீனர்களே எஞ்சியிருப்பார்கள். அவர்களிடம் மார்க்கத் தீர்ப்புக் கோரப்படும். அவர்களும் தம் சொந்தக் கருத்துப்படி தீர்ப்பளித்து (மக்களை) வழிகெடுப்பார்கள்; தாமும் வழிகெட்டுப் போவார்கள்'' என்று கூறக் கேட்டேன். பிறகு நான் இந்த ஹதீஸை நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) அவர்களிடம் அறிவித்தேன். அதன் பிறகு (ஓர் ஆண்டிலும்) அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்கள் ஹஜ் செய்தார்கள். (அப்போது) ஆயிஷா(ரலி) அவர்கள் என்னிடம், 'என் சகோதரியின் புதல்வரே! அப்துல்லாஹ் இப்னு அம்ர் அவர்களிடம் சென்று, (முன்பு) அவரிடமிருந்து (கேட்டு) நீ அறிவித்த ஹதீஸை எனக்காக அவரிடம் மீண்டும் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்'' என்றார்கள். அவ்வாறே நான் அவர்களிடம் சென்று கேட்டேன். அவர்கள் முன்பு எனக்கு அறிவித்ததைப் போன்றே இப்போதும் எனக்கு அறிவித்தார்கள். நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று அதைத் தெரிவித்தேன். அவர்கள் வியப்படைந்து 'அல்லாஹ்வின் மீதாணையாக! அப்துல்லாஹ் இப்னு அம்ர் அவர்கள் நன்றாகவே நினைவில் வைத்திருக்கிறார்'' என்றார்கள்.

''உங்களுக்கு முன்னிருந்தவர்களின் (தவறான) வழிமுறைகளை (இறுதிக் காலத்தில்) நீங்கள் நிச்சயம் பின்பற்றுவீர்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியது.

2216. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்: நபி(ஸல்) அவர்கள், 'என் சமுதாயத்தார் தமக்கு முந்தைய சமுதாயங்களின் நடைமுறைகளை சாண் சாணாக, முழம் முழமாக பின்பற்றி நடக்காதவரை மறுமைநாள் வராது'' என்று கூறினார்கள். உடனே, 'இறைத்தூதர் அவர்களே! பாரசீகர்கள் மற்றும் ரோமர்கள் போன்றவர்களையா (இந்தச் சமுதாயத்தார் பின்பற்றுவர்)?' என வினவப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அவர்களைத் தவிர (இன்று) மக்களில் வேறு யார் உள்ளனர்?' என்று (திருப்பிக்) கேட்டார்கள்.

அறிஞர்களின் கருத்தொற்றுமை அவசியம்.

2217. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் : நான் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களுக்குக் குர்ஆனை ஓதிக் கொடுத்து வந்தேன். உமர்(ரலி) அவர்கள் செய்த இறுதி ஹஜ்ஜின்போது மினாவில் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்கள் (என்னிடம்), 'நீங்கள் இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் (உமர்(ரலி) அவர்களுடன் இருந்திருக்க வேண்டும். (இன்று) அவர்களிடம் ஒருவர் வந்து, 'இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! இன்னான், 'இறைநம்பிக்கையாளர்களின் (இன்றைய) தலைவர் இறந்துவிட்டிருந்தால் இன்னாருக்கு நான் விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்திருப்பேன்' என்று கூறினான். இதைக் கேட்ட உமர்(ரலி) அவர்கள், 'இன்று மாலையே நான் (மக்கள் முன்) நின்று, தங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிட நினைக்கும் இவர்களை எச்சரிக்கை செய்யவுள்ளேன்'' என்றார்கள். நான், 'அவ்வாறு செய்யாதீர்கள். ஏனெனில், ஹஜ் பருவத்தில் (நல்லவர்களுடன்) விவரமற்ற மக்களும் குழுமுகின்றனர். அவர்கள் தாம் உங்கள் அவையில் மிகுந்திருப்பர். (நீங்கள் எழுந்து நின்று ஏதோ ஒன்றைச் சொல்ல) அதற்கு உரிய பொருள் தராமல், ஒவ்வொருவரும் (தம் மனம்போன போக்கில்) அதைத் தவறாகப் புரிந்து கொள்வார்களோ என நான் அஞ்சுகிறேன். எனவே, நீங்கள் ஹிஜ்ரத் மற்றும் நபிவழி பூமியான மதீனா சென்று சேரும்வரைக் காத்திருங்கள். அங்கு இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர்களான முஹாஜிர்களையும் அன்சாரிகளையும் தனியாகச் சந்தி(த்து அவர்களிடம் நீங்கள் தெரிவிக்க வேண்டியதை அழுத்தமாகத் தெரிவி)யுங்கள். அவர்கள் உங்கள் சொல்லை நினைவில் நிறுத்திக் கொண்டு, அதற்குரிய முறையில் அதைப் புரிந்து கொள்வார்கள்'' என்று சொன்னேன். அதற்கு உமர்(ரலி) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் மதீனா சென்ற பின் முதலாவது கூட்டத்திலேயே இதைப் பற்றிப் பேசப் போகிறேன்'' என்றார்கள். இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அவ்வாறே நாங்கள் மதீனா சென்றடைந்தோம். 'நிச்சயமாக அல்லாஹ் முஹம்மத்(ஸல்) அவர்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பினான். மேலும், அவர்களுக்கு (குர்ஆன் எனும்) வேதத்தையும் அருளினான். அல்லாஹ் அருளிய (வேதத்)தில் கல்லெறி தண்டனை (ரஜ்ம்) சம்பந்தமான வசனம் இருந்தது'' என உமர்(ரலி) அவர்கள் பேசத் தொடங்கினார்கள்.

நீதிபதி ஆய்வு செய்து சட்ட முடிவெடுக்கும்போது அது சரியாக அமைந்தாலும் தவறாகிப் போனாலும் (அவர் செய்த ஆய்வுக்காக) அவருக்குப் பிரதிபலன் கிடைக்கும்.

2218. நீதிபதி தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து சரியான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு இரண்டு நன்மைகள் உண்டு. அவர் தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து தவறான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு ஒரு நன்மை உண்டு என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அம்ர் இப்னு அல்ஆஸ்(ரலி) அறிவித்தார். இதே ஹதீஸ் அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் வாயிலாகவும், அபூ ஸலமா இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) அவர்கள் வாயிலாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நபி(ஸல்) அவர்கள் (ஒன்றை) எதிர்க்காமல் இருந்தது (அது அங்கீகரிக்கப்பட்டது தான் என்பதற்கு) ஆதாரமாகும்; நபியவர்கள் அல்லாத மற்றவர்களுக்கு இது பொருந்தாது.

2219. முஹம்மத் இப்னு அல்முன்கதிர்(ரஹ்) அவர்கள் அறிவித்தார் : ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்கள் 'இப்னுஸ் ஸய்யாத்தான் தஜ்ஜால்' என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்வதை பார்த்தேன். அப்போது நான், (ஜாபிர்(ரலி) அவர்களிடம்), 'அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறீர்களா?' என்று கேட்டேன். அவர்கள், 'நபி(ஸல்) அவர்களிடம் உமர்(ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து இதைக் கூறியதை கேட்டேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் அதை மறுக்கவில்லை'' என்று பதிலளித்தார்கள்.

Sun 20

Click here to bookmark this link.Channel Image16:25 [பாடம்-86] எதிர்பார்ப்பு. முக்தஸர் ஸஹீஹுல் புகாரி
விரும்பத்தகாத எதிர்பார்ப்பு.

2210. அனஸ்(ரலி) அறிவித்தார் : ''இறப்பை (எதிர்பார்த்து) ஆசைப்படாதீர்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றிருக்காவிட்டால் (இறப்பின் மீது) ஆசை கொண்டிருப்பேன்.

2211. உங்களில் எவரும் மரணத்தை விரும்ப வேண்டாம். ஒன்று அவர் நல்லவராக இருப்பார்; (அவர் உயிர் வாழ்வதன் மூலம் நன்மையை) அவர் அதிகமாக்கிக் கொள்ளலாம். அல்லது அவர் தீயவராக இருப்பார்; அவர் (உயிர் வாழ்வதால்) மனம் திருந்தக்கூடும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Click here to bookmark this link.Channel Image03:27 புதுவகை நோய் : இமி - 1 வஹ்ஹாபி
கடந்த 29.11.2009 & 04.12.2009 திண்ணை இதழ்களில், "இஸ்லாமிய மரபில் எல்லாமே உலக மரபுகளுக்கும் உலக நல்லொழுக்கத்திற்கே நேர் எதிர்மறையாக உள்ளது" எனும் தவறான கருவோடு, 'புனித மோசடி' [சுட்டி-01 மற்றும் சுட்டி-02] வெளியாகி இருந்ததைப் படிக்க நேர்ந்தது.

அக்கட்டுரைக்கான எதிர்வினை விளக்கங்களை வாசகர்களுக்குத் தருவதற்கு முன்னர், திசைதிருப்பும் அரைகுறைச் சான்றுகளோடு காழ்ப்பைக் கக்கும் தரமற்ற எழுத்துகளைப் பதிக்கும் திண்ணையின் அண்மைப் போக்கைப் பற்றிய எனது வருத்தங்களையும் இங்குப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

அக்கட்டுரையில் காணப்படும் கருவுக்குத் தொடர்பில்லாத
01. உலகநாதர்,
02. வள்ளுவர்,
03. ஜெர்மனியின் கோயபல்ஸ்,
04. நாஸி ஹிட்லர்,
05. கம்யூனிஸ்ட்கள், இடதுசாரிகள், பொதுவுடைக்காரர்கள்
06. காந்திஜி,
07. முன்னேற்றம் அடைந்த/அடையாத கழகங்கள்,
08. வெங்காயம்,
09. நேரு, இந்திரா,
10. திராவிட நாடு,
11. முரட்டு தாதா,
12. தேபால், உபகணஸ்தான், கூபா, உதபந்தபுரா, லவகுசபுரா

ஆகியோர்/ஆகியன பற்றியெல்லாம் கட்டுரையாளருக்குத் தெரியும் எனக் காட்டிக் கொள்ள மட்டுமே எழுதப் பட்டிருக்கிறது; இங்குப் பேசுபொருளுக்கு மீக்குறியவை அப்பாற் பட்டவை என நான் கருதுவதால், இஸ்லாம் குறித்து அவர் எடுத்து வைத்த,
"குரான் Qur'an, ஹடித்-சுன்னா ( Hadith & Sunna -- Traditions) அல்லது சிரா (Sira) (biographies) அடிப்படையில் பொய் பேசலாம்; சத்தியம் செய்யலாம்; பிற மதத்தவரிடம் எந்தக் காலத்திலும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசலாம்; புனித(!) மோசடி (தகிய்யா) செய்யலாம்"
எனும் தலையாய குற்றச் சாட்டுகளுக்கு முன்வைக்கப் பட்ட அரைகுறைச் சான்றுகளை முழுதுமாக வாசகர்கள்முன் வைக்க விரும்புகிறேன். 

அரைகுறை-1: (குரான் சுரா: 8:39: எதிர்ப்பு நீங்கி, உலகில் எல்லாமே அல்லாவுக்கென்று ஆகும் வரை போர் புரியுங்கள்).

இஸ்லாத்தின் உயிர்நாடியான "கடவுள் இல்லை - அல்லாஹ்வைத் தவிர" என்பதில் பாதியை மட்டும் சான்று என யாராவது முன்வைத்தால், இஸ்லாம் என்பது நாத்திகத்தைக் கொள்கையாகக் கொண்ட ஒரு மதம் என்றுதான் எவரும் விளங்குவர். அதுபோலவே குர்ஆன் கூறுவதைப் பாதியாக்கி இருக்கிறார் கட்டுரையாளர். "பிற மதத்தவரைக் கொன்று குவிக்கும்படி இஸ்லாம் சொல்கிறது" என்ற புனைவை நிறுவச் செய்யும் திருகுதாளமாகும் அவரது முயற்சி.  

பிற மதத்தவர் குறித்துக் குர்ஆன் கூறுவதென்ன?  

"(நபியே) கூறுவீராக! : இறை மறுப்பாளர்களே!
நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்க மாட்டேன்;
நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவரல்லர்.
மேலும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபனல்லன்;
அன்றியும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவரல்லர்.
உங்களுக்கு உங்கள் மதம்; எனக்கு என் மார்க்கம்" [குர்ஆன் 109:001-006].
"Say : O ye that reject Faith!  
I worship not that which ye worship,  
Nor will ye worship that which I worship.  
And I will not worship that which ye have been wont to worship,  
Nor will ye worship that which I worship.  
To you be your Way, and to me mine. [சுட்டி-03]. 
"மேலும் உம் இறைவன் நாடியிருப்பின் இப்பூவுலகின் மாந்தர் அனைவரும் இறைநம்பிக்கை கொண்டிருப்பர். எனவே, எல்லாரும் இறைநம்பிக்கையாளராக ஆகிவிடவேண்டும் என அவர்களை நீர் வலுக்கட்டாயப் படுத்த முடியுமா என்ன?" [குர்ஆன் 010:099]. "If it had been thy Lord's will, they would all have believed,- all who are on earth! wilt thou then compel mankind, against their will, to believe!" [சுட்டி-04] .
 

"(நபியே!) இணைவைப்பாளர்களுள் எவர் உம்மிடம் புகலிடம் தேடி வந்தாலும் அவருக்குப் புகலிடம் அளிக்கவும். அதனால், அல்லாஹ்வுடைய சான்றுமிகு வசனங்களை அவர் செவியேற்கலாம்.  பின்னர், அவருக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் இடத்துக்கு அவரை அனுப்பி விடுவீராக! ஏனெனில் அம்மக்கள் அறியாச் சமூகத்தவராவர்" [குர்ஆன் 009:006]. "If one amongst the Pagans ask thee for asylum, grant it to him, so that he may hear the word of Allah; and then escort him to where he can be secure. That is because they are men without knowledge. [சுட்டி-05].
 

"(இஸ்லாம்) மார்க்கத்தில் (இணைவதில்) வலுக்கட்டாயம் என்பது இல்லை ..." [குர்ஆன் 002:256] "Let there be no compulsion in religion ..." [சுட்டி-06]. 
இத்துணைத் தெளிவான நல்லிணக்க இறைவசனங்களைக் கூறும் குர்ஆன், "பிற மதத்தவர் எவராயினும் கொல்லுங்கள்" எனக் கூறுவதாகப் பித்தலாட்டம் செய்யலாமா

அரைகுறை-1இல் காணப் பட்ட முழு வசனம்:

"(இறைநம்பிக்கையாளர்களே!) தொடர் தாக்குதல்களும் அடக்குமுறையும் ஒழிக்கப் பட்டு, நீதி நிலைநாட்டப் படும்வரை, இறைநம்பிக்கை முற்றிலும் அல்லாஹ்வுக்கென்று ஆகும்வரை அவர்களுடன் போர் புரியுங்கள். அவர்கள் விலகிக் கொண்டால் (விட்டு விடுங்கள். ஏனெனில்,) அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் உற்று நோக்குபவன் ஆவான். அவர்கள் (தாக்குதலை நிறுத்த) மறுதலித்தால், (எதிர்த் தாக்குதல் புரியுங்கள்). அல்லாஹ் உங்களின் திண்ணமான பாதுகாவலன் என்பதை அறிந்து கொள்ளுங்கள் ..." [குர்ஆன் 008:039-040].
"And fight them on until there is no more tumult or oppression, and there prevail justice and faith in Allah altogether and everywhere; but if they cease, verily Allah doth see all that they do. If they refuse, be sure that Allah is your Protector ..." [சுட்டி-07]. 
மேற்காணும் வசனங்களில் அப்பாவிகள் எவரையும் கொல்லும்படி கட்டளை ஏதுமில்லை. முஸ்லிம்களை அழித்தொழிக்கப் போர் தொடுக்கும் பகைவரை எதிர்த்துப் போர் செய்வது பற்றிப் பேசப் படுகிறது. இந்த வசனங்கள் பேசும் எட்டாவது அத்தியாயத்தின் பெயரே "போர் வெற்றிப் பொருட்கள்"தான். அதை, அடுத்து வரும் வசனம் உறுதி செய்கிறது: 

 "(நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு(ப் போரில்) கிடைத்த வெற்றிப் பொருட்களில் ஐந்தில் ஒன்று (20%) அல்லாஹ்(வின் அறவழியில் செலவழிப்பதற்)கும் அவனின் தூதருக்கும் உறவினர்க்கும் அநாதைகளுக்கும் ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் உரியதாகும் ..." [குர்ஆன் 008:041]. "And know that out of all the booty that ye may acquire (in war), a fifth share is assigned to Allah,- and to the Messenger, and to near relatives, orphans, the needy, and the wayfarer ..." [சுட்டி-08]. 
*** 
ஹிஸ்டீரியா நோயாளிகள், பேயாடுவதாகச் சொல்லிக் கொண்டு, தங்களுக்கு உலக அரசியல் முதல் உள்ளூர் விவகாரம்வரை எல்லாமே அத்துப்படி என்று பிறரை நம்ப வைப்பதற்காக ஏதேதோ உளறிக் கொட்டுவார்கள். முக்காலமும் உணர்ந்தவர்களாகத் தங்களை எண்ணிக் கொண்டு "இவனுக்கு அது நடக்கும்; அவனுக்கு இது நடக்கும்" என்று குறி சொல்வார்கள். பாமரப் பேயாடிகள்கூட பல பாஷைகள் பேசுவர். எனக்குத் தெரிந்த ஒரு ஹிஸ்டீரியா நோயாளிப் பெண் அதுபோல் ஒருமுறை பேய்(!) வந்து உளற, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்தில், மூன்று மாத விஸிட்டிங் விசாவில் மலேஷியாவுக்குப் போய்விட்டுத் திரும்பி வந்திருந்த ஒருவர் சொன்னார் : "பேய் மலாய் பாஷை சூப்பராப் பேசுது!

திண்ணையில் 'புனிதமோசடி'யைப் படித்தபோது எனக்கு அந்தப் பெண் பேயாடிதான் நினைவுக்கு வந்தார்.

பார்ப்பதற்குக் கலர் நன்றாக இருப்பதாக நினத்துக் கொண்டு, காவி கலந்த உணவைக் கண்ட இடத்தில் தின்று விட்டு, அதனால் ஏறிய பித்தம், வாந்தி, மயக்கம், அத்தோடு ஹிஸ்டீரியாப் பேயாட்டம் போன்ற கலவைகள் அனைத்துக்கும் சேர்த்து ஆங்கிலத்தில் ஒரு பெயர் கூறுகின்றனர்: "இஸ்லாமோஃபோபியா". தமிழில் "இஸ்லாமிய மிரட்சி".  தற்போது தமிழகத்தில் பரவுகின்ற புதுவகை நோய்.

சுருக்கமாக இமி்.

அதைத்தான் தலைப்பில் படித்தீர்கள். 

- தொடரும், இன்ஷா அல்லாஹ்.

ஃஃஃ
சுட்டிகள்:
சுட்டி - 01 http://www.thinnai.com/?module=displaystory&story_id=20911296&format=html


சுட்டி - 02 http://www.thinnai.com/?module=displaystory&story_id=20912045&format=html


சுட்டி - 03 http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/quran/109.qmt.html


சுட்டி - 04 http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/quran/010.qmt.html#010.099


சுட்டி - 05 http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/quran/009.qmt.html#009.006


சுட்டி - 06 http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/quran/002.qmt.html#002.256


சுட்டி - 07 http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/quran/008.qmt.html#008.039


சுட்டி - 08 http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/quran/008.qmt.html#008.041

Thu 17

Click here to bookmark this link.Channel Image16:37 [பாடம்-85] தீர்ப்புகள். முக்தஸர் ஸஹீஹுல் புகாரி
இறைவனுக்கு மாறு செய்வதாக அமையாதவரை ஆட்சித் தலைவரின் சொல்லைக் கேட்டுக் கீழ்ப்படிவது (அவசியமாகும்).

2199. உலர்ந்த திராட்சை போன்ற (சுருங்கிய) தலையுடைய அபிசீனிய (கறுப்பு நிற) அடிமையொருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் (அவரின் சொல்லைக்) கேளுங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.

ஆட்சியதிகாரத்தை அடைய ஆசைப்படுவது வெறுக்கப்பட்டதாகும்.

2200. நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய பேராசைப்படுகின்றீர்கள். ஆனால், மறுமை நாளில் அதற்காக வருத்தப்படுவீர்கள். பாலூட்டுபவை (தாம் சுகங்)களிலேயே பதவி(ப் பால்) தான் இன்பமானது. பாலை மறக்க வைப்ப(தன் துன்பத்)திலேயே பதவி(ப் பாலை நிறுத்துவது)தான் மோசமானது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

குடிமக்களின் பொறுப்பு அளிக்கப்பெற்ற ஒருவர், அவர்களுக்கு நலம் நாடவில்லை என்றால்...?

2201. ஹஸன் அல்பஸ்ரீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார் : (நபித் தோழர்) மஅகில் இப்னு யஸார்(ரலி) அவர்கள் இறப்பதற்கு முன் நோய்வாய்ப்பட்டிருந்தபோது அன்னாரை(ச் சந்தித்து) நலம் விசாரிப்பதற்காக (அன்றைய பஸ்ரா நகர ஆட்சியர்) உபைதுல்லாஹ் இப்னு ஸியாத் சென்றார். அவரிடம் மஅகில்(ரலி) அவர்கள் 'நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட செய்தி ஒன்றை உமக்கு அறிவிக்கிறேன். நபி(ஸல்) அவர்கள், 'ஓர் அடியானுக்குக் குடிமக்களின் பொறுப்பை அல்லாஹ் வழங்கியிருக்க, அவன் அவர்களின் நலனைக் காக்கத் தவறினால், சொர்க்கத்தின் வாடையைக் கூட அவன் பெறமாட்டான்' என்று சொல்ல கேட்டேன்'' எனக் கூறினார்கள்.

2202. ஹஸன் அல்பஸ்ரீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார் : நாங்கள் மஅகில் இப்னு யஸார்(ரலி) அவர்களை நலம் விசாரிக்கச் சென்றோம். அப்போது (பஸ்ராவின் ஆட்சியர்) உபைதுல்லாஹ் இப்னு ஸியாத் உள்ளே வந்தார். அவரிடம் மஅகில்(ரலி) அவர்கள், இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற செய்தி ஒன்றை உமக்கு அறிவிக்கிறேன் என்று சொல்லிவிட்டு(ப் பின்வருமாறு) கூறினார்கள்: 'முஸ்லிம் குடிமக்களின் நிர்வாகப் பொறுப்பை ஏற்கும் ஒருவர் அவர்களுக்கு மோசடி செய்த நிலையில் இறந்துவிடுவாரனால், சொர்க்கத்தை அவருக்கு அல்லாஹ் தடை செய்துவிடுகிறான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(மக்களை) சிரமப்படுத்துகிறவரை அல்லாஹ் சிரமத்திற்குள்ளாக்குவான்.

2203. தரீஃப் அபீ தமீமா இப்னு முஜாலித் அல்ஹுஜைமீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்: ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ் அல்பஜலீ(ரலி) அவர்கள், ஸஃப்வான் இப்னு முஹ்ரிஸ்(ரஹ்) அவர்களுக்கும் அவர்களின் தோழர்களுக்கும் உபதேசம் செய்துகொண்டிருந்த இடத்தில் நான் இருந்தேன். அப்போது ஸஃப்வானும் அவர்களின் தோழர்களும், 'நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து (ஹதீஸ்) எவையேனும் செவியுற்றீர்களா?' என்று கேட்க ஜுன்தப்(ரலி) அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூற கேட்டேன் என்றார்கள்: விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறவரை (அவரின் நோக்கத்தை) அல்லாஹ் மறுமைநாளில் விளம்பரப்படுத்துவான். (மக்களைச்) சிரமப்படுத்துகிறவரை அல்லாஹ் மறுமைநாளில் சிரமத்திற்குள்ளாக்குவான். அப்போது நண்பர்கள் 'எங்களுக்கு உபதேசம் செய்யுங்கள்'' என்று கேட்க, ஜுன்தப்(ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: (இறந்த பிறகு) மனிதனின் உறுப்புகளிலேயே முதல்முதலாக (அழுகி) துர்நாற்றமெடுப்பது அவனுடைய வயிறுதான். எனவே, (அனுமதிக்கப்பட்ட) நல்ல உணவை மட்டுமே உண்ண சக்தி படைத்தவர் அவ்வாறே செய்யட்டும். (அநியாயமாகத்) தம்மால் சிந்தப்பட்ட கையளவு இரத்தம், தாம் சொர்க்கம் செல்வதிலிருந்து தடுக்காமல் இருக்கும்படி செய்ய முடிந்தவர் அவ்வாறே செய்யட்டும்.

நீதிபதி கோபமாக இருக்கும்போது தீர்ப்போ மார்க்க விளக்கமோ அளிக்கலாமா?

2204. அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ரா(ரஹ்) அவர்கள் அறிவித்தார் : (என் தந்தை) அபூ பக்ரா(ரலி) அவர்கள் தம் புதல்(வரும் என் சகோதரருமான உபைதுல்லாஹ் என்ப)வருக்குக் கடிதம் எழுதினார்கள். -அவர் (ஈரான் - ஆப்கன் எல்லையிலிருந்த) சிஜிஸ்தான் பகுதியில் (நீதிபதியாக) இருந்தார். 'நீ கோபமாக இருக்கும்போது இருவரிடையே தீர்ப்பளிக்க வேண்டாம். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள், நீதிபதி எவரும் கோபமாக இருக்கும்போது இருவருக்கிடையே தீர்ப்பளிக்க வேண்டாம் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்'' (என்று அக்கடிதத்தில் எழுதினார்கள்).

ஆட்சித் தலைவர் ஆளுநர்களுக்கும், நீதிபதி சட்ட ஒழுங்கு அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதுவது.

2205. ஸஹ்ல் இப்னு அபீ ஹஸ்மா(ரலி) அவர்களும் அவர்களின் சமூகத்தைச் சேர்ந்த சில பிரமுகர்களும் அறிவித்தார்கள் : அப்துல்லாஹ் இப்னு ஸஹ்ல்(ரலி) அவர்களும் முஹய்யிஸா இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களும் தங்களுக்கு ஏற்பட்டிருந்த கடுமையான வறுமையின் காரணத்தால் (பேரீச்சங் கனிகள் பறிப்பதற்காக) கைபரை நோக்கிப் புறப்பட்டனர். (வழியில் இருவரும் பிரிந்து விட்டனர்.) அப்போது 'அப்துல்லாஹ் இப்னு ஸஹ்ல்(ரலி) அவர்கள் கொல்லப்பட்டு ஒரு 'குழியில் அல்லது 'நீர்நிலையில்' போடப்பட்டு விட்டார்'' என்ற செய்தி முஹய்யிஸா(ரலி) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. எனவே, முஹய்யிஸா(ரலி) அவர்கள் (அப்பகுதி மக்களான) யூதர்களிடம் சென்று, 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள்தாம் அவரைக் கொன்று விட்டீர்கள்'' என்று கூறினார்கள். அதற்கு யூதர்கள், 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவரை நாங்கள் கொல்லவில்லை'' என்றார்கள். பிறகு முஹய்யிஸா(ரலி) அவர்கள் தம் சமூகத்தாரிடம் சென்று (அதைப்பற்றி) அவர்களிடம் சொன்னார்கள். பின்னர் அவரும் அவரின் சகோதரர் ஹுவய்யிஸா(ரலி) அவர்களும் - இவர் வயதில் மூத்தவர் (கொல்லப்பட்டவரின் சகோதரரான) அப்துர் ரஹ்மான் இப்னு ஸஹ்ல்(ரலி) அவர்களும் (இறைத்தூதர்(ஸல்) அவர்களை) நோக்கி வந்தனர். உடனே கைபரில் (இறந்தவருடன்) இருந்த முஹய்யிஸா(ரலி) அவர்கள் (முந்திக்கொண்டு அல்லாஹ்வின் தூதரிடம்) பேசப்போனார். அப்போது நபி(ஸல்) அவர்கள், முஹய்யிஸா(ரலி) அவர்களிடம், 'வயதில் மூத்தவரை (முதலில்) பேசவிடு; என்றார்கள். எனவே, ஹுவய்யிஸா(ரலி) அவர்கள் பேசினார்கள். பிறகு (இளையவரான) முஹய்யிஸா(ரலி) அவர்கள் பேசினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'ஒன்று உங்களுடைய நண்பருக்கான இழப்பீட்டுத் தொகையை அவர்கள் (யூதர்கள்) வழங்கட்டும்; அல்லது (எம்முடன் போரிட) அவர்கள் போர் பிரகடனம் செய்யட்டும்'' என்று கூறினார்கள். பிறகு இ(ந்தக் கருத்)தைக் குறிப்பிட்டு யூதர்களுக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கடிதம் எழுதினார்கள். 'நாங்கள் அவரைக் கொல்லவில்லை'' என்று (யூதர்கள் தரப்பிலிருந்து பதில் கடிதம்) எழுதப்பட்டது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஹுவய்யிஸா(ரலி), முஹய்யிஸா(ரலி) மற்றும் அப்துர் ரஹ்மான் இப்னு சஹ்ல்(ரலி) ஆகியோரிடம், '(யூதர்கள் தாம் கொலை செய்தார்கள் என்று) நீங்கள் சத்தியம் செய்துவிட்டு, உங்கள் நண்பருக்கான உயிரீட்டுத் தொகையைப் பெறுகிறீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் 'இல்லை (நாங்கள் சத்தியம் செய்யமாட்டோம்)'' என்று கூறினர். நபி(ஸல்) அவர்கள், 'அவ்வாறாயின் (தாங்கள் அவரைக் கொல்லவில்லை என்று) யூதர்கள் உங்களிடம் சத்தியம் செய்யட்டுமா?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் (மூவரும்), 'யூதர்கள் முஸ்லிம்கள் இல்லையே! (பொய்ச் சத்தியம் செய்யவும் அவர்கள் தயங்க மாட்டார்களே)'' என்று கூறினர். எனவே, கொல்லப்பட்டவருக்கான இழப்பீடாக நூறு ஒட்டகங்களை நபி(ஸல்) அவர்களே தம் தரப்பிலிருந்து வழங்கினார்கள். இறுதியில் (அவர்கள் கூடியிருந்த) அந்த வீட்டுக்குள் அந்த ஒட்டகங்கள் கொண்டுவரப்பட்டன. அப்போது அதில் ஓர் ஒட்டகம் என்னை மிதித்துவிட்டது.

ஆட்சித் தலைவர் மக்களிடம் பெறும் விசுவாசப் பிரமாண (வாசக)ம் எவ்வாறு அமையவேண்டும்?

2206. உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரலி) அவர்கள் (தொடர்ந்து) அறிவித்தார் : நாங்கள் ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களுடன் சண்டையிட மாட்டோம் என்றும், நாங்கள் எங்கிருந்தாலும் அல்லாஹ்வின் விஷயத்தில் பழிப்பவர்களின் பழிப்புரைக்கு அஞ்சாமல் 'உண்மையே கடைப்பிடிப்போம்' அல்லது 'உண்மையே பேசுவோம்' என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தோம்.

2207. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார் : நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (அவர்களின் கட்டளைகளைச்) செவியேற்றுக் கீழ்ப்படிந்து நடப்போம் என உறுதிமொழி (பைஅத்) அளிக்கும்போது அவர்கள், 'உங்களால் முடிந்த விஷயங்களில்'' என்று சொல்வது வழக்கம்.

ஆட்சித் தலைவர் (தமக்குப் பிறகு ஓர் ஆட்சித் தலைவரையோ, அவரைத் தேர்ந்தெடுக்கும் ஒரு குழுவையோ) நியமிப்பது.

2208. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார் : உமர்(ரலி) அவர்களிடம் (அன்னார் தாக்கப்பட்டபோது) 'நீங்கள் உங்களுக்குப் பின் யாரையாவது உங்கள் பிரதிநிதியாக (ஆட்சித் தலைவராக) நியமிக்கக் கூடாதா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'நான் எவரையேனும் எனக்குப் பின் ஆட்சித் தலைவராக நியமித்தால் (அது தவறாகாது); ஏனென்றால், (எனக்கு முன்பு) என்னைவிடச் சிறந்தவரான அபூ பக்ர்(ரலி) அவர்கள் அவ்வாறு ஆட்சித் தலைவரை (என்னை) நியமித்துச் சென்றிருக்கிறார்கள். (எவரையும் ஆட்சித் தலைவராக நியமிக்காமல்) அப்படியே நான் விட்டுவிட்டாலும் (அதுவும் தவறாகாது); ஏனெனில், என்னைவிடச் சிறந்தவர்களான இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவ்விதம் தான் (யாரையும் நியமிக்காமல்) விட்டுச் சென்றிருக்கிறார்கள்'' என்றார்கள். உடனே நபித்தோழர்கள் உமர்(ரலி) அவர்களைப் பாராட்டினார்கள். அப்போது உமர்(ரலி) அவர்கள், '(என் கருத்து) பிடித்தோ பிடிக்காமலோ (என்னை நீங்கள் பாராட்டுகிறீர்கள். நான் வகித்த இந்தப் பதவி இறைவனிடம்) எனக்குச் சாதகமாகவும் வேண்டாம்; பாதகமாகவும் வேண்டாம்; சரிக்குச் சமமாக அமைந்த நிலையில் இதிலிருந்து நான் தப்பித்தாலே போதும் என்றே விரும்புகிறேன். நான் உயிரோடு இருக்கும்போது (தான் பதவியைச் சுமந்தேன் என்றால், எனக்குப் பின் ஒருவரை நியமிப்பதன் மூல)ம் இறந்த பிறகும் இதைச் சுமக்க நான் தயாராயில்லை'' என்று கூறினார்கள்.

2209. ஜாபிர் இப்னு சமுரா(ரலி) அறிவித்தார் : (ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள், 'பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள் வருவார்கள்'' என்று சொல்ல கேட்டேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், நான் (சரிவரக்) கேட்காத ஒரு சொல்லையும் சொன்னார்கள். (அது என்னவென்று விசாரித்த போது) என் தந்தை (சமுரா (ரலி) அவர்கள், 'அவர்கள் அனைவரும் குறைஷியராக இருப்பார்கள்'' என்று (நபி(ஸல்) அவர்கள்) சொன்னார்கள் எனக் கூறினார்கள்.

Wed 16

Click here to bookmark this link.Channel Image16:37 [பாடம்-84] குழப்பங்கள். முக்தஸர் ஸஹீஹுல் புகாரி
''எனக்குப் பிறகு நீங்கள் வெறுக்கிற பல விஷயங்களைக் காண்பீர்கள்'' என்று (அன்சாரிகளிடம்) நபி(ஸல்) அவர்கள் கூறியது.

2187. 'தம் (ஆட்சித்) தலைவரிடமிருந்து (மார்க்க விஷயத்தில் குறை) எதையேனும் (கண்டு அதை) வெறுப்பவர் பொறுமையாக இருக்கட்டும். ஏனெனில், ஆட்சியாள(ருக்குக் கட்டுப்படாமல் அவ)ரிடமிருந்து ஒரு சாண் அளவு வெளியேறுகிறவர் அஞ்ஞான கால மரணத்தை எய்துவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 'தம் (ஆட்சித்) தலைவரிடமிருந்து மார்க்க விஷயத்தில்) தமக்குப் பிடிக்காத (குறை) ஒன்றைக் காண்கிறவர் அதைப் பொறுத்துக் கொள்ளட்டும்! ஏனெனில், ஒருவர் (இஸ்லாமியக்) கட்டமைப்பிலிருந்து பிரிந்து, (அதே நிலையில்) இறந்துவிட்டால் அஞ்ஞான கால மரணத்தையே அவர் சந்திப்பார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

2188. ஜுனாதா இப்னு அபீ உமய்யா(ரஹ்) அவர்கள் அறிவித்தார் : உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரலி) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது நாங்கள் அன்னாரிடம் (நலம் விசாரிக்கச்) சென்றோம். நாங்கள், 'அல்லாஹ் உங்களுக்குக் குணமளிக்கட்டும். நபி(ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் கேட்ட ஒரு ஹதீஸை (செய்தியை எங்களுக்கு) அறிவியுங்கள்; அதனால் அல்லாஹ் உங்களுக்கு நற்பலன் அளிப்பான்'' என்று சொன்னோம். அதற்கு உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரலி) அவர்கள், 'நபி(ஸல்) அவர்கள் எங்களை அழைத்தார்கள். நாங்கள் அவர்களிடம் (சென்று இஸ்லாத்தில் நிலைத்திருப்பதாக) உறுதிமொழி அளித்தோம்'' என்றார்கள். 'நாங்கள் உற்சாகமாயிருக்கும் போதும் சோர்ந்திருக்கும்போதும் வசதியாயிருக்கும் போதும் சிரமத்திலிருக்கும் போதும் எங்களை விடப் பிறருக்கு முன்னுரிமை வழங்கப்படும் போதும்கூட (ஆட்சித் தலைவரின் கட்டளையை)ச் செவியேற்று (அவருக்குக்) கீழ்ப்படிந்து நடப்போம்; ஆட்சியதிகாரத்திலிருப்பவர்களுடன் நாங்கள் சண்டையிடமாட்டோம்; எந்த விஷயம் பகிரங்கமான இறை மறுப்பு என்பதற்கு அல்லாஹ்விடமிருந்து எங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதோ அத்தகைய விஷயத்தை ஆட்சியாளரிடம் நாங்கள் கண்டாலே தவிர'' என்று எங்களிடம் நபி(ஸல்) அவர்கள் உறுதிமொழி வாங்கியதும் அவர்கள் எங்களிடம் பெற்ற பிரமாணங்களில் அடங்கும்.

குழப்பங்கள் தோன்றுதல்.

2189. அபூ மூஸா(ரலி) அறிவித்தார் : நான் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம், 'கொலைகள் மலிந்த காலம் வரும் என்று மேற்கண்டவாறு நபி(ஸல்) அவர்கள் கூறிய காலத்தை நீங்கள் அறிவீர்கள்'' என்றேன். அப்போது அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் (கூடுதலாகப் பின்வருமாறு) சொன்னார்கள்: யார் உயிரோடு இருக்கும்போது அவர்களை மறுமைநாள் வந்தடைகிறதோ அவர்கள் தாம் மக்களிலேயே தீயோர் ஆவர் என்று நபி(ஸல்) அவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன்.

பின்னால் வரும் காலம் முன்னால் சென்ற காலத்தைவிட மோசமாகவே இருக்கும்.

2190. ஸுபைர் இப்னு அதீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார் : நாங்கள் அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் சென்று (ஆளுநர்) ஹஜ்ஜாஜ் மூலம் நாங்கள் அனுபவித்துவரும் கொடுமைகள் குறித்து முறையிட்டோம். அதற்கு அவர்கள், 'நீங்கள் உங்களுடைய இறைவனைச் சந்திக்கும்வரை பொறுமையோடு இருங்கள். ஏனெனில், உங்களிடம் ஒரு காலம் வந்தால், அதற்குப் பின்வரும் காலம் அதைவிட மோசமானதாகவே இருக்கும்'' என்று கூறிவிட்டு, 'இதை நான் உங்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன்'' என்றார்கள்.

நம்மை எதிர்த்து ஆயதம் ஏந்துபவர்.

2191. நீங்கள் உங்கள் சகோதரரை நோக்கி ஆயுதத்தைக் காட்டி சைகை செய்யவேண்டாம். ஏனெனில், உங்களுக்குத் தெரியாமலேயே ஷைத்தான் உங்கள் கையிலிருந்து அதைப் பிடுங்கி (சகோதரர் மீது தாக்குதல் நடத்தி) விடக்கூடும். அதனால் நீங்கள் நரகத்தில் வீழ்ந்துவிடக் கூடும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(விரைவில்) சில குழப்பங்கள் தோன்றும், அப்போது அமர்ந்திருப்பவன் நிற்பவனை விடச் சிறந்தவன் ஆவான்.

2192. 'விரைவில் குழப்பங்கள் சில தோன்றும். அப்போது அவற்றுக்கிடையே (மௌனமாகி) அமர்ந்திருப்பவன் (அவற்றுக்காக) எழுந்து நிற்பவனை விடவும், அவற்றுக்கிடையே எழுந்து நிற்பவன் நடப்பவனை விடவும், அவற்றுக்கிடையே நடப்பவன் (அவற்றை நோக்கி) ஓடுபவனை விடவும் சிறந்தவன் ஆவான். அதில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கிறவரை அவை அழிக்க முற்படும். அப்போது ஒரு புகலிடத்தையோ, காப்பிடத்தையோ பெறுகிறவர் அதன் வாயிலாகத் தம்மைத் தற்காத்துக் கொள்ளட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

குழப்பம் ஏற்பட்டுள்ளபோது கிராமத்திற்குக் குடிபெயர்தல்.

2193. ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார் : நான் (ஒருமுறை ஹிஜாஸ் மாகாண ஆளுநர்) ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃபிடம் சென்றேன். அவர் 'இப்னுல் அக்வஃ! நீங்கள் (மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்த பின் அங்கிருந்து) உங்கள் குதிகால்களின் வழியே (கிராமத்திற்குத்) திரும்பிச் சென்றதன் மூலம் கிராமவாசியாக மாறிவிட்டீர்களா?' என்று கேட்டார். நான், 'இல்லை. ஆயினும், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கிராமத்தில் வசிக்க எனக்கு அனுமதியளித்துள்ளார்கள்'' என்று சொன்னேன். (அறிவிப்பாளர்களில் ஒருவரான) யஸீத் இப்னு அபீ உபைத்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்: உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்கள் கொல்லப்பட்டபோது ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அவர்கள் (மதீனாவிலிருந்து) வெளியேறி 'ரபதா' என்னுமிடத்திற்குச் சென்று அங்கு ஒரு பெண்ணை மணந்தார்கள். அப்பெண் மூலம் அவர்களுக்குப் பல குழந்தைகள் பிறந்தன. அங்கேயே வசித்துவந்த ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அவர்கள், தாம் இறப்பதற்குச் சில நாள்கள் முன்புதான் (அங்கிருந்து திரும்பி வந்து) மதீனாவில் தங்கினார்கள்.

அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்கு வேதனை வழங்கும்போது...

2194. ஒரு சமுதாயத்தின் மீது அல்லாஹ் வேதனையை இறக்கும்போது அதிலுள்ளவர்கள் அனைவரையும் அந்த வேதனை தாக்கும் பிறகு அவர்கள் தம் செயல்களுக்கு ஏற்ப (மறுமையில்) எழுப்பப்படுவார்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

ஒருவர் ஒரு கூட்டத்தாரிடம் ஒன்றைச் சொல்லிவிட்டுப் பிறகு வெளியே சென்று அதற்கு மாறாகப் பேசினால்...?

2195. ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அறிவித்தார்: நயவஞ்சகம் என்பதெல்லாம் (மக்கள் சிலரிடம்) நபி(ஸல்) அவர்களின் காலத்தில் தான் இருந்தது. இன்றோ, இறைநம்பிக்கைக்குப் பின் இறைமறுப்பு மட்டுமே உள்ளது.

நெருப்பு கிளம்புவது.

2196. ஹிஜாஸ் பகுதியிலிருந்து ஒரு நெருப்பு கிளம்பி, (ஷாம் நாட்டின்) புஸ்ரா (ஹவ்ரான்) எனும் ஊரிலுள்ள ஒட்டகங்களின் பிடரிகளைப் பிரகாசிக்கச் செய்யாதவரை மறுமை நாள் வராது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

2197. (மேற்காசியாவில் பாயும்) யூப்ரட்டீஸ் நதியானது தங்கப் புதையல் ஒன்றை வெளிப்படுத்த உள்ளது. அப்போது அங்கிருப்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுத்து விட வேண்டாம் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவரான உக்பா இப்னு காலித்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நபி(ஸல்) அவர்களிடமிருந்து அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்துள்ள இந்த ஹதீஸ் மற்றொரு வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிகமாக 'தங்க மலை ஒன்றை வெளிப்படுத்தவுள்ளது'' என்று இடம் பெற்றுள்ளது.

2198. இருபெரும் குழுக்களிடையே பெரும் போர் ஏற்பட்டு அவை ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கொள்ளாதவரை மறுமை நாள் வராது. அவ்விரு குழுக்கள் முன்வைக்கும் வாதமும் ஒன்றாகவே இருக்கும். மேலும், ஏறத்தாழ முப்பது பெரும் பொய்யர்களான தஜ்ஜால்கள் (உலகில்) தோன்றாதவரை மறுமை நாள் வராது. அவர்களில் ஒவ்வொருவனும் தன்னை இறைத்தூதர் என்று வாதிடுவான். மேலும், (கல்வியாளர்களின் மறைவால்) கல்வி கைப்பற்றப்பட்டு, நில நடுக்கங்கள் அதிகமாகி, காலம் சுருங்கி, குழப்பங்கள் தோன்றி, கொலை பெருகாதவரை மறுமைநாள் வராது. மேலும், உங்களிடையே செல்வம் பெருகிக் கொழிக்காதவரை மறுமைநாள் வராது. அப்போது செல்வன் தன்னுடைய தர்மத்தை ஏற்பவர் யாரேனும் கிடைக்கமாட்டாரா? என்று கவலைப்படுவான். அவன் அதை எடுத்து ஒருவருக்குக் கொடுக்க முனையும்போது, இது தமக்குத் தேவையில்லை என்று அவர் சொல்லி விடுவார். மேலும், மக்கள் கட்டடங்களை (போட்டி போட்டுக்கொண்டு) உயரமாகக் கட்டாதவரை மறுமை நாள் வராது. மேலும், ஒரு மனிதன் மற்றொரு மனிதனின் மண்ணறையைக் கடந்துசெல்லும்போது, 'அந்தோ! நான் இவனுடைய இடத்தில் (மண்ணறைக்குள்) இருக்கக் கூடாதா?' என்று (ஏக்கத்துடன்) கூறாதவரை மறுமை நாள் வராது. சூரியன் மேற்குத் திசையிலிருந்து உதயமாகாதவரை மறுமைநாள் வராது. அவ்வாறு உதயமாகும்போது அதைக்காணும் மக்கள் அனைவரும் இறைநம்பிக்கை கொள்வார்கள். ஆனால், அதற்கு முன்பே இறைநம்பிக்கை கொள்ளாத, அல்லது இறை நம்பிக்கை கொண்டும் (அதை மெய்ப்பிக்கும் வகையில்) நற்செயல் எதுவும் புரியாத எந்த மனிதனும் அப்போது நம்பிக்கை கொள்வது அவனுக்குப் பயனளிக்காத நேரமாக அது இருக்கும்.

இரண்டு பேர் தங்களுக்கு முன்னே தங்கள் துணிகளை (வியாபாரத்திற்காக) விரித்து வைப்பார்கள். அந்தத் துணியை வியாபாரம் செய்திருக்கவும் மாட்டார்கள்; அதைச் சுருட்டி வைத்திருக்கவும் மாட்டார்கள்; அதற்குள் மறுமை நாள் வந்து விடும். ஒருவர் தம் ஒட்டகத்தின் பாலைக் (கறந்து எடுத்துக்) கொண்டு அப்போதுதான் திரும்பியிருப்பார்; அதை அவர் அருந்தியிருக்கவும் மாட்டார். அதற்குள் மறுமை நாள் வந்துவிடும். ஒருவர் தம் தடாகத்தை அப்போதுதான் செப்பனிட்டிருப்பார்; அதிலிருந்து அவர் (தம் கால்நடைகளுக்கு) நீர் புகட்டியிருக்கவும் மாட்டார். அதற்குள் மறுமை நாள் வந்துவிடும். ஒருவர் தமது உணவைத் தம் வாயருகே கொண்டு சென்றிருப்பார்; ஆனால், இன்னும் அதைச் சாப்பிட்டிருக்கவும் மாட்டார்; அதற்குள் மறுமைநாள் வந்துவிடும். (அந்த அளவுக்குத் திடீரென உலக அழிவுநாள் ஏற்படும்.) என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Tue 15

Click here to bookmark this link.Channel Image12:13 இஸ்ரவேலர்களும் காளைக் கன்றின் பொற்சிலையும்! கிறிஸ்தவம் பார்வை
இப்பதிவு சாமிரி பற்றிய குர்ஆனின் கூற்றில் சரித்திர தவறா? என்ற தலைப்பின் துணைப் பதிவு ஆகும். Published in : islamkalviஇறை தூதர் மூஸா (அலைஹிஸ்ஸலாம்) (மோசே தீர்க்கதரிசி) தவ்றாத் என்னும் இறைநூலைப் பெற்றுக் கொள்வதற்காக சினாய் மலைக்கு சென்றிருந்த நேரத்தில் இஸ்ரவேலர்கள் காளைக்கன்றின் சிலையை வணங்கினர். காளைக் கன்றின் பொற்சிலையை உருவாக்கி சிலை வணக்கத்தின்பால் அவர்களைத் தூண்டியது 'சாமிரி' என்ற பொற்கொல்லன்

Mon 14

Click here to bookmark this link.Channel Image17:53 [பாடம்-83.] கனவுக்கு விளக்கமளித்தல். முக்தஸர் ஸஹீஹுல் புகாரி
நல்லோரின் கனவு.

2176. நல்ல மனிதர் காணும் நல்ல (உண்மையான) கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நல்ல கனவு அல்லாஹ்வாலேயே தோன்றுகிறது.

2177. உங்களில் ஒருவர் தமக்கு விருப்பமான கனவொன்றைக் கண்டால், அது அல்லாஹ்விடமிருந்தே வந்தது (என்று தெரிந்து), அதற்காக அவர் அல்லாஹ்வைப் போற்றட்டும். அதை (தமக்கு விருப்பமானவர்களிடம் மட்டும்) தெரிவிக்கட்டும். அதற்கு மாறாகத் தமக்கு விருப்பமில்லாத கனவு கண்டால், அது ஷைத்தானிடமிருந்தே வந்தது (என அறிந்து), அதன் தீங்கிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரட்டும். அதைப் பற்றி யாரிடமும் கூற வேண்டாம். ஏனெனில், அப்போது அக்கனவு அவருக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திட முடியாது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

நற்செய்தி (கூறும் கனவு)கள்.

2178. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நற்செய்தி கூறுகின்றவை ('முபஷ்ஷிராத்') தவிர, நபித்துவத்தில் வேறெதுவும் எஞ்சியிருக்கவில்லை'' என்று கூற கேட்டேன். அப்போது மக்கள் 'நற்செய்தி கூறுகின்றவை (முபஷ்ஷிராத்) என்றால் என்ன?' என்று வினவினர். நபி(ஸல்) அவர்கள் 'நல்ல (உண்மையான) கனவு'' என்று விடையளித்தார்கள்.

கனவில் நபி(ஸல்) அவர்களைக் காண்பது.

2179. 'கனவில் என்னை காண்கிறவர் விழிப்பிலும் என்னைக் காண்பார். (ஏனெனில்) ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்கமாட்டான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்: ''நபி(ஸல்) அவர்களுக்குரிய தோற்றத்தில் (அவர்களின் அங்க லட்சணங்களுடன்) அவர்களைக் கண்டால்தான் (நபி(ஸல்) அவர்களைக் கனவு கண்டதாகக் கருதப்படும்)'' என்று இப்னு சீரின்(ரஹ்) அவர்கள் கூறினார்கள். மேலும் கனவில் யார் என்னைக் கண்டாரோ நிச்சயமாக அவர் என்னையே கண்டார். ஏனெனில், ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்க மாட்டான். மேலும், இறைநம்பிக்கையாளர் காணும் (உண்மையான) நல்ல கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.

2180. (கனவில்) யார் என்னைக் கண்டாரோ நிச்சயமாக அவர் நிஜத்தையே கண்டார். ஏனெனில், ஷைத்தான் என் உருவத்தில் (காட்சியளிப்பவனாக) இருக்கமாட்டான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

பகலில் காணும் கனவு.

2181. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு அருகிலுள்ள 'குபா'வுக்குச் சென்றால் தம் பால்குடி சிற்றன்னையான) உம்மு ஹராம் பின்த் மில்ஹான்(ரலி) அவர்களின் வீட்டிற்குச் செல்வது வழக்கம். அவர் உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரலி) அவர்களின் துணைவியாராவார். அவ்வாறே ஒரு நாள் (பகலில்) நபி(ஸல்) அவர்கள் உம்மு ஹராம்(ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்றபோது அவர் நபி(ஸல்) அவர்களுக்கு உணவளித்த பின் அவர்களுக்கு பேன் பார்த்து விடலானார். அப்போது நபி(ஸல்) அவர்கள் உறங்கி விட்டார்கள். பிறகு சிரித்தபடி விழித்தார்கள்.

கனவில் விலங்கிடப்படுவதைப் போன்று காண்பது.

2182. (மறுமையின் அடையாளங்களில் ஒன்றாகக்) காலம் சுருங்கும்போது இறை நம்பிக்கையாளர் காணும் கனவு பொய்யாகப் போவதில்லை. இறைநம்பிக்கையாளர் காணும் கனவு நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும். நபித்துவத்தில் அடங்கிய எந்த அம்சமும் பொய்யாகாது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) முஹம்மத் இப்னு சீரீன்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்தச் சமுதாயத்தார் காணும் கனவுகள் (எல்லாம்) உண்மை என்றே கூறுகிறேன். கனவுகள் மூன்று வகைப்படும் என்று கூறப்படுவதுண்டு. 1. மன பிரமை (விழிப்பு நிலைக் கனவுகள்) 2. ஷைத்தானின் அச்சுறுத்தல். 3. அல்லாஹ்விடமிருந்து வரும் நற்செய்தி. எனவே, தாம் விரும்பாத கனவொன்றை எவரேனும் கண்டால் அதைப் பற்றி எவரிடமும் விவரிக்க வேண்டாம். மாறாக, எழுந்து அவர் (இறைவனைத்) தொழட்டும். தொடர்ந்து முஹம்மத் இப்னு சீரின்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: கழுத்தில் மாட்டப்படும் விலங்கைக் கனவில் காண்பது வெறுக்கப்பட்டு வந்தது. (ஏனெனில், அது நரகவாசிகளின் அடையாளமாகும்.) ஆனால், (கால்) விலங்கைக் காண்பது அவர்களுக்கு விருப்பமானதாக இருந்தது. அது மார்க்கத்தில் நிலைத்திருப்பதைக் குறிக்கும் என்று (விளக்கம்) கூறப்பட்டது.

கனவில் ஒரு பொருளை ஒரு மூலையிலிருந்து மாற்றி மற்றவர்களிடம் வைப்பதைப் போன்று கண்டால்...?

2183. தலைவிரி கோலத்துடன் கறுப்பு நிறப்பெண்ணொருத்தி மதீனாவிலிருந்து வெளியேறி அங்கிருந்து 'மஹ்யஆ' சென்று தங்குவதைப் போன்று நான் (கனவு) கண்டேன். மதீனாவின் பெருநோய்கள் மஹ்யஆவுக்கு இடம் பெயரச் செய்யப்பட்டுவிட்டது என்று நான் (அதற்கு) விளக்கம் கண்டேன். 'மஹ்யஆ' என்பது 'அல்ஜுஹ்ஃபா' எனும் இடமாகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

கனவு குறித்து பொய்யுரைப்பது.

2184. 'ஒருவர் தாம் காணாத கனவைக் கண்டதாக திட்டமிட்டு சொன்னால், அவர் (மறுமையில்) இரண்டு வாற்கோதுமைகளை (ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்து) முடிச்சுப் போடும்படி நிர்ப்பந்திக்கப்படுவார். ஆனால், அவரால் ஒருபோதும் (அப்படிச்) செய்ய முடியாது. (அவருக்கு அளிக்கப்படும் வேதனையும் நிற்காது.) 'தாம் கேட்பதை மக்கள் விரும்பாத நிலையில்' அல்லது 'தம்மைக் கண்டு மக்கள் வெருண்டோடும் நிலையில் 'அவர்களின் உரையாடைலைக் காது தாழ்த்தி (ஒட்டு)க் கேட்கிறவரின் காதில் மறுமை நாளில் ஈயம் உருக்கி ஊற்றப்படும். (உயிரினத்தின்) உருவப் படத்தை வரைகிறவர் அதற்கு உயிர் கொடுக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டு வேதனை செய்யப்படுவார். ஆனால், அவரால் உயிர் கொடுக்க முடியாது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

2185. தம் கண் காணாத ஒன்றை அது கண்டதாகக் கூறுவது மாபெரும் பொய்களில் ஒன்றாகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

கனவுக்கு விளக்கம் அளித்த முதல் நபர் தவறாக விளக்கம் சொன்னாலும் அதுதான் விளக்கம் என்பதை ஏற்க முடியாது.

2186. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் : ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, '(இறைத்தூதர் அவர்களே!) நான் நேற்றிரவு கனவில் மேகம் ஒன்றைக் கண்டேன். அந்த மேகத்திலிருந்து நெய்யும் தேனும் சொட்டிக்கொண்டிருந்தன. உடனே மக்கள் தங்கள் கைகளை நீட்டி அவற்றைப் பிடித்துக்கொண்டிருக்கக் கண்டேன். (அவர்களில்) அதிகம் பிடித்தவர்களும் உண்டு; குறைவாகப் பிடித்தவர்களும் உண்டு. அப்போது ஒரு கயிறு பூமியிலிருந்து வானம் வரைப் போய்ச் சேர்ந்தது. அப்போது (இறைத்தூதர் அவர்களே!) நீங்கள் அந்தக் கயிற்றைப் பற்றிக் கொண்டு மேலே சென்றீர்கள். பிறகு (நான்காவதாக) இன்னொரு மனிதர் (வந்து) அதைப் பற்றிக்கொள்ள அந்தக் கயிறு அறுந்து (விழுந்து)விட்டது. பிறகு (மீண்டும்) அக்கயிறு (வானத்துடன்) இணைக்கப்பட்டது'' என்றார். அப்போது (அங்கிருந்த) அபூ பக்ர்(ரலி) அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக! இந்தக் கனவிற்கு விளக்கம் அளிக்க என்னை அனுமதிக்க வேண்டும்'' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் '(சரி) இதற்கு விளக்கம் சொல்லுங்கள்'' என்றார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்கள், 'அந்த மேகம் தான் இஸ்லாமாகும். (மேகத்திலிருந்து) சொட்டிக் கொண்டிருந்த தேனும் நெய்யும் குர்ஆனாகும். அதன் இனிமை சொட்டிக் கொண்டிருக்கிறது. குர்ஆனிலிருந்து அதிகம் பெற்றவர்களும் உள்ளனர்; குறைவாகப் பெற்றவர்களும் உள்ளனர். வானிலிருந்து பூமிவரை நீண்டு செல்லும் அந்தக் கயிறானது, நீங்கள் இருந்து வருகிற சத்திய(மார்க்க)மாகும். அதை நீங்கள் பற்றுகிறீர்கள். அல்லாஹ் உங்களை (வானளவிற்கு) உயர்த்திவிடுகிறான். பிறகு உங்களுக்குப் பின்னால் இன்னொரு மனிதர் அதைப் பற்றுகிறார். அதன் மூலம் அவரும் உயர்ந்துவிடுகிறார். அதன் பின்னர் இன்னொரு மனிதர் அதைப் பற்றிக் கொண்டு அதன் மூலம் உயர்ந்துவிடுகிறார். அதன் பின்னர் இன்னொரு மனிதர் அதைப் பற்றிக் கொண்டு அதன் மூலம் உயர்ந்துவிடுகிறார். அதை (நான்காவதாக) மற்றொருவர் பற்றுகிறார். (ஆனால்) அது அவரோடு அறுந்துவிடுகிறது. பின்னர் அவருக்காக அக்கயிறு இணைக்கப்படுகிறது. அதன் மூலம் அவரும் உயர்ந்து விடுகிறார்'' என்று கூறிவிட்டு, 'இறைத்தூதர் அவர்களே! என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். (நான் சொன்ன விளக்கம்) சரியா? அல்லது தவறா?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'சிலவற்றைச் சரியாகச் சொன்னீர்கள்; சிலவற்றைத் தவறாகச் சொல்லிவிட்டீர்கள்'' என்றார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் தவறாகக் கூறியதைத் தாங்கள் எனக்குத் தெரிவிக்கவேண்டும்'' என்றார்கள். நபி(ஸல்) அவர்கள் '(இனி) சத்தியம் செய்து கேட்காதீர்கள் (நான் சொல்லப்போவதில்லை)'' என்றார்கள்.

Sun 13

Click here to bookmark this link.Channel Image05:58 வீரியம் இழந்த வாதங்கள்....! எதிரொலி
திருக்குர்ஆனை முஹம்மது நபி (ஸல்...) அவர்கள் மக்கள் முன் எடுத்துச் சொன்ன கால கட்டத்திலேயே அதனை எப்படியாவது பொய்ப்படுத்திட வேண்டும் அல்லது குறைந்தபட்சம் குறையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று அபூஜஹ்ல் காலந்தொட்டு தொடரும் அத்தகைய முயற்சிகள் இன்றுவரை நின்ற பாடில்லை.


"மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்று சிந்திக்க வேண்டாமா? முதுகுத் தண்டுக்கும் விலா எலும்புக்கும் இடையிலிருந்து குதித்து வெளிப்படும் திரவத்திலிருந்து படைக்கப் பட்டான்" என்ற குர்ஆனின் கூற்றில் அறிவியல் முரண்பாடுகள் இருப்பதாக தருமி குற்றச்சாட்டுக்களை அடுக்கி இருந்தார்.

"ஆணின் விரையிலிருந்து வெளிப்படும் விந்திலிருந்துதான் கரு உருவாகிறது. குர்ஆன் சொல்வதுபோல் (?!) முதுகுத் தண்டுக்கும் விலா எலும்புக்கும் இடையிலில்லை" என்ற நவீன கண்டுபிடிப்பை(!) தருமி முன்வைத்திருந்தார். அதற்குப் பின்னூட்டம் இட்டிருந்த கல்வெட்டு என்பார்,ஆதிமனிதனிலிருந்து இதுவரைக்கும் யாருக்கும் தெரியாத(!) ஆண்குறியிலிருந்து விந்து வெளிப்படுவதை, குடும்பக்கட்டுப்பாடு (வாஸக்டமி) அறுவைச் சிகிச்சையைப் படம் காட்டி நிரூபித்திருந்தார்.

முன்னதாக, குர்ஆனின் மூலமொழியான அரபியில் நேரடியாகச் சொல்லப்பட்டவற்றுக்கு கூடுதல் விளக்கத்துக்காக மொழியாக்கத்தில் பிறைக்குறிக்குள் (BRACKET) மொழிபெயர்ப்பாளர்களால் குறிப்பிடப் படுவனவற்றைச் சுட்டி, "குர் ஆனுக்குத் தன்னிச்சையாக விளக்கம் கொடுத்துள்ளார்கள்" என்று கல்வெட்டு தனது ஆட்சேபனையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மொழியியலில் பிறைக்குறிக்குள் சொல்லப்படுபவை மொழிபெயர்ப்பாளரின் கருத்துகள்;இது எல்லா மொழியாக்கத்திற்கும் பொருந்தும் என்ற அடிப்படை கூடத் தெரியாமல் குர்ஆனில் குறைகாணப் புறப்பட்ட இவர்களின் நிலை பரிதாபமாக உள்ளது. பிறைக்குறிக்குள் விளக்கம் இல்லாமலும் மூலப்பொருள் மாறாது என்று சொன்னதைத் தொடர்ந்து EMIT / வெளிப்படுதல் என்ற சொல்லைப் பிடித்துக்கொண்டு, "விந்து EMIT ஆகுமிடம் ஆண்குறி" என்ற இன்னொரு அரிய கண்டுபிடிப்பைச் சொன்னார் திருவாளர் கல்வெட்டு.



கருவறைக்குள் செலுத்தப்படும் விந்து விரையிலிருந்து மட்டும் உருவானதல்ல; மொத்த விந்தில் சுமார் 5%க்கும் குறைவான அளவே விரையில் உருவாகிறது. இவ்வாறு வெளியாகும் விந்தில் சுமார் 200-300 மில்லியன் உயிரணுக்கள் விரையிலிருந்து வெளியாகி PROSTATE GLAND தாதுச்சுரப்பிகளுடன் கலந்து, பிறகு அங்கிருந்து வெளியாகி SEMINAL VASICLE தாதுக் கலவையுடன் கலந்து இறுதியாக ஆண்குறியிலிருந்து வெளியாகி கருவறையைச் சென்றடைகிறது. இடையில் மூன்று வெளியேற்றங்கள் (EMIT/EMISSION) நடந்த பிறகே ஆண்குறியிலிருந்து விந்து வெளியேற்றப்பட்டுக் கருவறை சென்றடைகிறது.

ஆணின் விந்தானது 1-21 நாட்களில் படிப்படியாகச் சுரந்து இனவிருத்திக்குத் தயாராக வைக்கப்படுகிறது. இடைப்பட்ட நாளில் உடலுறவு மூலம் வெளியேற்றப் படாவிட்டால் தானாக வெளியேற்றப்படுகிறது. விரைகளில் சுரந்த விந்து நேரடியாக வெளியாகாமல், உடலில் நெடும்பயணம் செய்து தாதுச் சுரப்பிகளுடன் கலந்து வெளியாகிறது. விரையிலிருந்து நிதானப் பயணமாகத் தொடங்கி PROSTATE GLAND தாதுச் சுரப்பிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு துள்ளிக் குதித்து வெளியேறி SEMINAL VASICLE சுரப்பிகளுடன் மீண்டும் கலந்து வீரியமடைந்து இறுதியில் ஆண்குறி வழியாக இடம் பெயருகிறது.

கல்வெட்டு குறிப்பிட்டுள்ள சுட்டியிலும் இது சொல்லப்பட்டுள்ளது:
*Sperm do not mature in the testes. They must first pass into the epididymis, a C-shaped storage chamber adjoining the testes composed of a 20-foot coiled tube. The sperms' journey through the epididymis takes about 2 - 3 weeks. They are held here until sexual activity forces them to move on. http://www.clarian.org/ADAM/doc/In-DepthReports/10/000037.htm

உணர்வுக்கும் உடலுக்கும் நடக்கும் இன்பப் போராட்டத்தில் (TESTICLE-SEMINAL VASICLE-PROSTATE GLAND என) மூன்று வெளியேற்றங்கள் நடந்து ஆண்குறியிலிருந்து இறுதி வெளியேற்றம் நிகழ்கிறது. இந்த இறுதி வெளியேற்றத்தை மட்டும் பிடித்துத் தொங்கி,:-)

"மனிதன் drop emitted ல் இருந்து வந்தவன் என்றால் அந்த drop emitted ஆகும் இடம் ஆண்குறியின் முனைதான். அதற்கு முன் அது எமிட் ஆகவில்லை. உற்பத்தி வேறு வெளியேற்றம் (எமிட்) வேறு. எனவே backbone and the ribs ல் இருந்து எமிட் ஆகிறது என்று நீங்கள் சொல்லியிருந்தால் அது முற்றிலும் தவறு" என்று அரைகுறையாகப் பொருள் கொண்டுள்ளார்.

உடலிருந்து விந்து இறுதியாக வெளியேற்றப்படுவதைக் குறிக்கும் மிகச்சரியான ஆங்கிலச்சொல் EJACULATION (விந்து வெளியேற்றல்). அப்படி இருக்கும்போது குர்ஆன் சொல்லாத EJACULATION ஐ EMIT என்று சொல்லப்பட்ட இடத்தில் தவறாகப் பொருள் கொண்டுள்ளார்.


# The expulsion of seminal fluid from the urethra of the penis during orgasm.

to eject from a living body; specifically : to eject (semen) in orgasm

086.006 خُلِقَ مِنْ مَاءٍ دَافِقٍ

086.006 He is created from a drop emitted-



086.007 يَخْرُجُ مِنْ بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ

086.007 Proceeding from between the backbone and the ribs:




இவ்விரு வசனங்களையும் வெளியேற்றப்பட்ட (EMITTED) துளியிலிருந்து (86:006) முதுகுத்தண்டுக்கும் விலா எலும்புக்கும் இடையிலிருந்து (PROCEEDING FROM) (086:007) என்று தொடர் வெளியேற்றத்தைச் சொல்கிறது.

நவீன அறிவியலும் இதையே சொல்கிறது. விரையிலிருந்து உடல் ஸ்பரிசங்களால் அனுப்பப்படும் (EMIT) விந்து, எபிடிடைமிஸ் (epididymis) என்ற பல்வேறு விரை நரம்புகளைக் கடந்து வாஸா டிபெரெண்டியா (vasa deferentia) என்ற ஒருமித்த குழாய் மூலம் Seminal Vasicle தாதுச் சுரப்பிகளுடன் கலந்து வெளியாகி, பின்னர் Prostate Gland இல் சுரந்த சுரப்பிகளையும் சேர்த்துக் கொண்டு, இறுதியாக ஆண்குறி முனையிலிருந்து வெளியாகிறது. இந்த இறுதி வெளியேற்றத்தைக் குறிக்கும் துல்லியமான ஆங்கிலச் சொல் (EJACUATION).


++++++++++++++++++++++++++++++++++++++++++++++

குர்ஆனின் நோக்கம் அறிவியல் பாடம் நடத்துவதல்ல.மனித வாழ்க்கைக்குத் தேவையான வாழ்வியல் நெறிகளைச் சொல்லும்போது மேலதிகமாக மனிதப்படைப்பின் ரகசியங்களையும் சொல்லி தானொரு இறைவேதம் என்பதைக் குர்ஆன் மெய்ப்பிக்கிறது. அவற்றைத் தனிநபராக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எடுத்துச் சொன்னபோது மறுத்தவர்களிடமும் இகழ்ந்தவர்களிடமும் இதைவிடச் சரியான ஒன்றைக் கொண்டு வருமாறு சவால் விட்டது. குர்ஆன் அருளப்பட்ட 23 ஆண்டுகளில் இந்தச் சவால்களை எவரும் எதிர்கொள்ளவில்லை.

குர்ஆனுக்கு முன்பே கிரேக்கர்களும் ரோமானியர்களும் அறியியலிலும் தலைசிறந்து விளங்கினார்கள்.அவர்களின் பல்வேறு அறிவியல் முடிவுகள் இன்றும் ஆய்வுக்குட்படுத்தப் பட்டு தவறென நிரூபிக்கப்பட்டுள்ளன. அத்தகைய ஆய்வுகளும் பன்னெடுங்காலங்களாக பல்வேறு அறிஞர்களால் ஆய்வு செய்யப்பட்டு மறுக்கப்பட்டுள்ளன. குர்ஆன் கூறியதற்கு எதிராக இதுவரை எந்த அறிஞனும் நிரூபிக்கப்பட்ட அறிவியல் முடிவுகளை முன்வைக்க வில்லை.

எத்தனை உதவியாளர்களை துணைக்கழைத்துக் கொண்டாலும், இதுபோன்று உங்களால் ஒன்றைக் கொண்டுவர முடியாது என்று 1400 ஆண்டுகளுக்கு முன்வைக்கப்பட்ட சவால் இன்றுவரை எதிர்கொள்வாரின்றி நிலுவையில் உள்ளது. இனியும் எதிர்கொள்ளப் படப்போவதில்லை, இன்ஷா அல்லாஹ்!

Sat 12

Click here to bookmark this link.Channel Image16:44 [பாடம்-82] இஸ்லாத்திலிருந்து வெளியேறியோருடன் போர் புரிதல். முக்தஸர் ஸஹீஹுல் புகாரி
2175. 'இறைத்தூதர் அவர்களே! 'நாங்கள் அறியாமைக் காலத்தில் செய்த(த)வற்றிற்காக (மறுமையில்) தண்டிக்கப்படுவோமா?' என ஒருவர் கேட்டதற்கு, 'இஸ்லாத்தில் இணைந்து நன்மை புரிகிறவர் அறியாமைக் காலத்தில் செய்த தவறுகளுக்காகத் தண்டிக்கப்பட மாட்டார். இஸ்லாத்தில் இணைந்த பிறகு (மீண்டும் இறைமறுப்பு எனும்) தீமையைப் புரிகிறவர் (அறியாமைக் காலத்தில் செய்த) முந்திய தவறுகளுக்காகவும், (இஸ்லாத்தை ஏற்றபின் செய்த இந்தப்) பிந்திய தவறுகளுக்காகவும் தண்டிக்கப்படுவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
Click here to bookmark this link.Channel Image02:26 பாங்கோசையை முன்மொழிந்தவர்! ஸஹாபாக்களின் வாழ்வினிலே...
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

உமர்[ரலி] அவர்கள், 'உமரின் நாவின் அல்லாஹ் பேசுகிறான்' என்று நபி[ஸல்] அவர்களால் சிறப்பித்து சொல்லப்பட்ட ஸஹாபி என்பதை நாம் அறிவோம். உமர்[ரலி] அவர்கள் கூற்றிற்கேற்ப, அல்லாஹ் சில வசனங்களை இறக்கியதையும் நாமெல்லாம் அறிந்துள்ளோம். அத்தகைய சிறப்பிற்குரிய உமர்[ரலி] அவர்கள் இன்னொரு நல் அமலுக்கு ஒரு ஆலோசனை கூற அது அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களால் அங்கீகரிக்கப்பட்டு, அன்றும்-இன்றும்- நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் இவ்வுலகம் உள்ளளவும் அது நடைமுறையில் இருக்கும். ஆம்! அதுதான் அல்லாஹ்வை வணங்க ஐவேளை தொழுகையின் போது அழைக்கப்படும் 'பாங்கு' எனும் அழைப்போசையாகும்.
இதுபற்றிய பொன்மொழி இதோ;

இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள்;
முஸ்லிம்கள் (மக்காவிலிருந்து) மதீனாவிற்கு வந்தபோது தொழுகைக்கு அழைப்புக் கொடுக்கப்படுவதில்லை. அவர்கள் ஒன்று கூடி நேரத்தை முடிவு செய்து கொள்வார்கள். ஒரு நாள் இது பற்றி எல்லோரும் கலந்தாலோசித்தனர். அப்போது சிலர், கிறித்தவர்களைப் போன்று மணி அடியுங்கள் என்றனர். வேறு சிலர் யூதர்கள் வைத்திருக்கிற கொம்பைப் போன்று நாமும் கொம்பூதலாமே என்றனர். அப்போது உமர்(ரலி) 'தொழுகைக்காக அழைக்கிற ஒருவரை ஏற்படுத்தக் கூடாதா?' என்றனர். உடனே பிலால்(ரலி) அவர்களிடம் 'பிலாலே! எழுந்து தொழுகைக்காக அழையும்" என்று நபி(ஸல்) கூறினார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 604

இந்த பொன்மொழி உமர்[ரலி] அவர்களின் பெரும்பாலான சிந்தனைகள், செயல்கள் அல்லாஹ்வாலும், அவன் தூதராலும் பொருந்திக்கொள்ளும் வகையிலேயே அமைந்துள்ளதற்கு மற்றொரு சான்றாகும்.
அல்லாஹ் உமர்[ரலி] அவர்களுக்கு கிருபை செய்வானாக!

Thu 10

Click here to bookmark this link.Channel Image17:39 [பாடம்-81] இழப்பீடுகள். முக்தஸர் ஸஹீஹுல் புகாரி
''யார் ஓர் இறைநம்பிக்கையாளரை வேண்டுமென்றே கொலை செய்கிறானோ அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும்'' எனும் (திருக்குர்ஆன் 04:93 வது) இறைவசனம்.

2168. புனிதம் வாய்ந்ததாகக் கருதப்படும் (மனித) உயிர் எதனையும் கொலை செய்யாமல் இருக்கும்வரை ஓர் இறைநம்பிக்கையாளர் தம் மார்க்கத்தின் தாராள குணத்தைக் கண்டவண்ணமிருப்பார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

2169. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள் மிக்தாத்(ரலி) அவர்களிடம், 'இறைமறுப்பாளர்களான சமூகத்தாரிடையே தம் இறைநம்பிக்கையை (மனதிற்குள்) மறைத்து வைத்துக் கொண்டிருந்த ஒருவர் தம் இறைநம்பிக்கையை வெளிப்படுத்தும் தருவாயில் அவரை நீர் கொன்றுவிட்டீரே! அவ்வாறாயின், இதற்கு முன்னர் நீரும் இவ்வாறுதானே மக்காவில் உம்முடைய இறைநம்பிக்கையை (மனத்தில்) மறைத்து வைத்துக்கொண்டிருந்தீர்?' என்று கேட்டார்கள்.

2170. நமக்கெதிராக எவன் ஆயுதம் ஏந்துகிறானோ அவன் நம்மைச் சார்ந்தவனல்லன் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடமிருந்து அபூ மூஸா(ரலி) அவர்களும் இதை அறிவித்தார்கள்.

''அவர்களுக்கு நாம் அ(ந்த வேதத்)தில், உயிருக்கு உயிர் கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல் ஆகவும்; காயங்களுக்கு(ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாகப் பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம். எனினும், ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவரின் பாவங்களுக்குப் பரிகாரமாகும். யார் அல்லாஹ் அருளிய (வேதக் கட்டளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்களே!'' எனும் (திருக்குர்ஆன் 05:45 வது) இறைவசனம்.

2171. 'அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவருமில்லை. நான் அல்லாஹ்வின் தூதராவேன்' என உறுதி மொழி கூறிய முஸ்லிமான எந்த மனிதரையும் மூன்று காரணங்களில் ஒன்றை முன்னிட்டே தவிர வேறெதற்காகவும் கொலை செய்ய அனுமதி இல்லை. (அவை:) 1. ஒரு மனிதரைக் கொலை செய்ததற்கு பதிலாகக் கொலை செய்வது. 2. திருமணமானவன் விபசாரம் செய்வது. 3. 'ஜமாஅத்' எனும் சமூகக் கூட்டமைப்பைக் கைவிட்டு, மார்க்கத்திலிருந்தே வெளியேறி விடுவது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹூரைரா (ரலி) அறிவித்தார்.

நியாயமின்றி ஒரு மனிதனைக் கொலை செய்யத் தூண்டுவது.

2172. மனிதர்களிலேயே அல்லாஹ்வின் (கடுமையான) கோபத்திற்கு ஆளானோர் மூவர் ஆவர். 1. (மக்கா) புனித எல்லைக்குள் பெரும் பாவம் புரிகிறவன். 2. இஸ்லாத்தில் இருந்துகொண்டு அறியாமைக் காலக் கலாசாரத்தை விரும்புகிறவன். 3. ஒரு மனிதனின் இரத்தத்தைச் சிந்தச் செய்வதற்காக நியாயமின்றி அவனைக் கொலை செய்யத் தூண்டுகிறவன் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

ஒருவர் ஆட்சியாளரிடம் (வழக்கைக் கொண்டு) செல்லாமல் தம் உரிமையைத் தாமே மீட்டெடுப்பதும் (தம் உறவினருக்காகத்) தாமே பழிவாங்குவதும்.

2173. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் அனுமதியின்றி ஒருவர் உங்கள் வீட்டுக்குள் எட்டிப் பார்த்தபோது அவரின் மீது நீங்கள் சிறு கல்லைச் சுண்டி எறிய, அது அவரின் கண்ணைப் பறித்துவிட்டால் உங்களின் மீது எந்தக் குற்றமும் இல்லை. இதை அபூஹூரைரா(ரலி) அறிவித்தார்.

விரல்களுக்கான இழப்பீடுகள் (சமமானவையா? மாறுபட்டவையா?)

2174. இதோ இந்த மோதிர விரலும் கட்டை விரலும் (இழப்பீட்டில்) சமமானவையே என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
Click here to bookmark this link.Channel Image04:25 அபூஹுரைரா[ரலி] அவர்களின் வியக்கத்தக்க நினைவாற்றல்! ஸஹாபாக்களின் வாழ்வினிலே...
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அல்லாஹ்வின் அருள்மறை குர்ஆன் நபி[ஸல்] அவர்கள் மீது அருளப்படும் காலகட்டத்தில், சில நபித்தோழர்களை எழுத்தர்களாக நியமித்து நபியவர்கள் எழுதிவைத்திட பனித்த செய்தியை நாம் அறிவோம். ஆனால் நபி[ஸல்] அவர்களின் திருவாயால் மொழிந்த பொன்மொழிகள் அவ்வாறு எழுதப்படவேண்டும் என்று நபியவர்கள் கட்டளையிடவில்லை. இருப்பினும் அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்களைப் போன்ற சிலர் ஹதீஸ்களை எழுதிவைத்திருந்தனர். ஆனாலும் இவர்கள் அறிவித்த ஹதீஸ்களை விட, ஹதீஸ்களை எழுதிவைக்காத அபூஹுரைரா[ரலி] அவர்கள் தான் அதிக அளவில் ஹதீஸ்களை அறிவித்துள்ளனர். இன்னும் சொல்லப்போனால் ஹதீஸ்களை அறிவித்த சஹாபிகள் பட்டியலில் அபூஹுரைரா[ரலி] அவர்கள் முதலாவதாக திகழ்கிறார்கள். நம்மை எடுத்துக்கொண்டால் இன்று சாப்பிட்டதை ஒருவாரம் கழித்துக் கேட்டால் நினைவிருக்காது. பரீட்சைக்கு விழுந்து விழுந்து மனப்பாடம் செய்யும் மாணவன் கூட காலையில் மனனம் செய்ததை பரீட்சை ஹால் உள்ளே சென்றதும் பாதியை மறந்து விடுகிறான். திருக்குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ்கள் கூட தொழுகை நடத்தும் போது ஒரு சில வசனங்கள் மறந்து மற்றவர்களால் நினைவூட்டப்படுகிறது. ஆனால் அபூஹுரைரா[ரலி] அவர்கள் ஆயிரக்கணக்கான ஹதீஸ்களை அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் எந்த வார்த்தையை பயன்படுத்தி சொன்னார்களோ அதே வார்த்தையை அட்சரம் பிசகாமல், மறக்காமல் எப்படி மனனம் செய்யமுடிந்தது..? பல ஆண்டுகளுக்கும் பின்னால் யார் கேட்டாலும் எப்படி இறைத்தூதர் வார்த்தையை அப்படியே சொல்ல முடிந்தது என்ற நமது வியப்பிற்கு விடையாக அபூஹுரைரா[ரலி] அவர்கள் அதிக ஹதீஸ்களை அறிவித்ததற்கும், மறக்காமல் இருந்ததற்கும் அவர்கள் கூறும் விளக்கம் பாரீர்;

'மக்காவிலிருந்து ஹிஜ்ரத்துச் செய்து மதீனாவிற்கு வந்த எங்கள் சகோதரர்களோ வியாபாரம் பேரங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். மதீனாவிலிருந்த அன்ஸாரித் தோழர்களோ தங்கள் (விவசாய) செல்வங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் இந்த அபூ ஹுரைராவோ முழுக்க முழுக்க (வேறு வேலைகளில் ஈடுபடாமல்) பட்டினியாக நபி(ஸல்) அவர்களுடனேயே இருந்தேன். மற்றவர்கள் வருகை தராத இடங்களுக்கெல்லாம் நான் செல்வேன். அவர்கள் மனப்பாடம் செய்யாதவற்றையெல்லாம் நான் மனப்பாடம் செய்து கொண்டிருந்தேன்.என்று கூறினார்கள்" அஃரஜ் என்பவர் அறிவித்தார்.
ஹதீஸ் சுருக்கம் புஹாரி;எண் 118

இந்த பொன்மொழி ஹதீஸ்களை திரட்டுவதற்காக அபூஹுரைரா[ரலி] அவர்கள் செய்த தியாகத்தை விளக்குகிறது. அடுத்து திரட்டிய செய்தி மறக்காமல் இருக்க அவர்கள் செய்தது என்ன..?

'இறைத்தூதர் அவர்களே! நான் தங்களிடமிருந்து ஏராளமான பொன் மொழிகளைக் கேட்கிறேன். (ஆயினும்) அவற்றை மறந்து விடுகிறேன் என நான் நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அதற்கு 'உம்முடைய மேலங்கியை விரியும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நானும் அதனை விரித்தேன். தம் இரண்டு கைகளாலும் இரண்டு கை நிறையளவு அள்ளி (எடுப்பது போன்று பாவனை செய்து)விட்டுப் பின்னர், 'அதனை (நெஞ்சோடு) நீர் அணைத்துக் கொள்வீராக!" என்றார்கள். நானும் உடனே அதனை என் நெஞ்சுடன் அணைத்துக் கொண்டேன். அதன் பின்னர் நான் எதனையும் மறந்ததே இல்லை" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஆதாரம் புஹாரி எண் 119

அபூஹுரைரா[ரலி] அவர்கள் ஹதீஸ்களை மறக்காமல் இருக்க நபியவர்கள் மூலம் பாதுகாப்பு பெற்றிருக்கிறார்கள். இந்த அளவுக்கு தியாகம் செய்து, சிரத்தைஎடுத்து அபூஹுரைரா[ரலி] அவர்கள் போன்ற பல நல்லறத் தோழர்கள் மூலமாக கிடைக்கப்பெற்ற ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை கூட 'நொண்டிச்சாக்கு' சொல்லி குப்பையில் தள்ளும் சில அதிமேதாவிகள் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதை என்னும் போது உள்ளம் வேதனையால் விம்முகிறது.

எல்லாம் வல்ல அல்லாஹ் அபூஹுரைரா[ரலி] அவர்களின் தியாகத்தை பொருந்திக் கொள்வதோடு, இறைத்தூதரின் பொன்மொழிகளை நாமும் மனனம் செய்து மற்றவர்களுக்கு எடுத்தியம்பும் நன்மக்களாக ஆக்கியருள்வானாக!

Wed 09

Click here to bookmark this link.Channel Image12:47 மரபணு மாற்று பயிர்களும் சட்ட நடைமுறைகளும் மக்கள் சட்டம் (PEOPLE'S LAW)

மரபணு மாற்றுப் பயிர்களை நிலத்தில் பயிரிட்டு கள ஆய்வு செய்யும்போது மற்ற பயிர்களிடம் இருந்து சுமார் 200 மீட்டர் இடைவெளிவிட்டு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் Aruna Rodrigues & others V/s Union of India என்ற வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மரபணு மாற்றத்தில் பயன்படுத்தப்படும் பாசில்லஸ் துரெஞ்சரிஸ் என்ற நச்சுத்தன்மை கொண்ட புரதத்தை தாவரத்தின் மரபணுவுக்குள் புகுத்தி இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றன. அருகாமைப் பகுதியில் பயிரிடப்பட்டிருக்கும் மற்றப் பயிர்களில் அயல் மகரந்த சேர்க்கை மூலமாக மரபணு மாசு பரவ வாய்ப்பிருப்பதால் இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது.
இப்படி மரபணுமாற்று பயிர்கள் மற்ற பயிர்களோடு கலப்பதால் நம் பாரம்பரிய பயிர் வகைகள் அதன் தன்மையை இழந்து அழிந்துவிடும் அபாயம் உள்ளது. மேலும் இயற்கை வேளாண்மையும் மாசுபடுவதற்கான வாய்ப்பும் உள்ளது. இதனை தடுப்பதற்காகவே மரபணுமாற்று பயிர்களை பிற பயிர்களிடம் இருந்து உரிய அளவில் பாதுகாப்பான தொலைவில் பயிரிடவேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்துகிறது. ஆனால் மரபணுமாற்று தொழில்நுட்பம் தொடர்பான சட்டங்களும் கண்காணிப்பு அமைப்புகளும் அதற்கு விதிக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்ற தயாராக இருக்கிறதா என்பது விடையில்லாத கேள்வியாகவே இருக்கிறது.
மரபணுமாற்று தொழில் நுட்பத்தை கண்காணிக்கும் அமைப்புகள்
மரபணுமாற்று தொழில் நுட்பத்தை முறைப்படுத்தவும் கண்காணிக்கவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆபத்து ஏற்படுத்தக்கூடிய நுண்ணுயிர்கள் மற்றும் மரபணு மாற்று உயிர்கள் உற்பத்தி - பயன்படுத்தல் - இறக்குமதி - ஏற்றுமதி - சேமித்தல் தொடர்பான விதிமுறைகள் (Rules for the Manufacture Use Import Export And Storage of Hazardous Micro-Organism and Genetic Engineered Organisms or Cell 19890), என்கிற சட்ட விதியை மத்திய அரசு இயற்றியுள்ளது. இந்த சட்டத்தின் கீழ் சில குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
உயிரியல் தொழில்நுட்பத்தை முறைப்படுத்தவும் பாதுகாப்பு சட்டவிதிகளை வரையறுக்கும் அதிகாரம் படைத்த மத்திய அரசின் கீழாக இயங்கும் மரபணு மாற்று தொழில்நுட்ப ஆலோசனைக்குழு (Recombinant DNA Advisory Committee - RDAC).மரபணுமாற்று ஆராய்ச்சிகளை கண்காணிக்க மற்றும் பாதுகாப்பு சட்டவிதிகளை வரையறுக்கும் மரபணு மாற்றுத் தொழில்நுட்ப சீராய்வுக் குழு (Review Committee on Genetic Manipulation - RCGM). ஆராய்ச்சி நிறுவனங்களில் மரபணுமாற்று தொழில்நுட்பத்தை கண்காணிக்கும் ஆய்வுமைய உயிரிப்பாதுகாப்புக் குழு (Institutional Bio-Safety Committee - IBSC). மரபணுமாற்று ஆராய்ச்சிகளுக்கு அனுமதி அளிப்பது மற்றும் கண்காணிக்கும் மரபணு தொழில்நுட்ப அங்கீகாரக்குழு (Genetic Engineering Approval Committee - GEAC). மாநில அளவில் இயங்கக் கூடிய மாநில உயிர்த்தொழில்நுட்ப ஒருங்கிணைப்புக் குழு (State Biotechnology Co-Ordination Committee -SBCC) மற்றும் மாவட்ட அளவில் இயங்கூடிய மாவட்ட உயிர்த்தொழில்நுட்ப ஒருங்கிணைப்புக்குழு. இந்த இரண்டு குழு க்களும் மாநில அரசின் கீழ் இயங்குபவை.
மரபணுமாற்று ஆராய்ச்சிக்கான விதிமுறைகள்
மரபணுமாற்று பயிர்கள் ஆராய்ச்சி கூடத்தில் சோதனை செய்யப்படுவது முதல், திறந்த வெளியில் பயிர் செய்யப்படும் வரை பின்பற்ற வேண்டிய விதிகளும் மேற்கூறிய அமைப்புகளால் வகுக்கப்பட்டுள்ளன.
ஆராய்ச்சி கூடங்களில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் அடங்கிய மரபணு மாற்றுத் தொழில்நுட்ப பாதுகாப்பு விதிகள் (Recombinant DNA Safety Guidelines, 1990)மரபணுமாற்று பயிர்களின் நச்சுத் தன்மையை கண்டறியும் சோதனையில் பின்பற்ற வேண்டிய மரபணுத் தாவரங்களில் உள்ள நச்சுத்தன்மை மற்றும் ஒவ்வாமை மதிப்பிடுதல் விதிமுறைகள் (Revised Guidelines for Research in Transgenic Plants & Guidelines for Toxicity and Allergenicity Evaluation of Transgenic Seeds, Plants and Plant Parts, 1998) மரபணுமாற்று பயிர்களை திறந்தவெளியில் அல்லாமல் மூடிய பாதுகாப்பான ஆய்வு கூடத்தில் சோதனை முறையாக பயிர் செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய மரபணு களப்பரிசோதனையை நெறிப்படுத்தும் விதிமுறைகள் (Standard Operating Procedures (SOPs) for Confined Field Trials of Regulated, GE Plants), மரபணுமாற்று பயிர்களின் இருந்து பெறப்படும் உணவுகளை ஆராயும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் (Guidelines for the Safety Assessment of Foods Derived from Genetically Engineered Plants), மரபணுமாற்று உணவுக்கான பொதுவான ஆய்வு முறைகள்(Protocols for Food and Feed Safety Assessment of GE crops) போன்றவை மேற்குறிப்பிட்ட குழுக்களால் இயற்றப்பட்டுள்ளன.
மரபணு மாற்றத் தொழில்நுட்பத்தை கண்காணிக்க மேற்கூறப்பட்ட அதிகார அமைப்புகளும், விதிமுறைகளும் இருந்தாலும் அவை எந்த அளவிற்கு செயல்படுகின்றன என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. மரபணு மாற்றத் தொழில்நுட்பத்தை இந்தியாவிற்குள் அனுமதித்தே தீருவது என்று அரசு முடிவு மேற்கொண்டுள்ளதால் இந்த அமைப்புகள் அனைத்தும் அரசின் விருப்பத்திற்கேற்பவே செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தியாவின் உயிரித்தொழில்நுட்ப துறையின் முன்னோடியும், உச்ச நீதிமன்றத்தால் மரபணு தொழில்நுட்ப அங்கீகாரக் குழுவில் கௌரவ உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் புஷ்பா பார்கவா, மரபணுமாற்று பயிர்கள் தொடர்பாக தனியார் நிறுவனங்கள் கொடுக்கும் ஆய்வறிக்கைகளை GEAC கண்மூடித்தனமாக ஏற்றுக்கொண்டு அனுமதி வழங்குவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
உணவு குறித்த கொள்கை முடிவு எடுக்கும் அதிகாரம் தற்போதைய நிலையில் மாநில அரசுகளின் கைகளில் உள்ளது. இதனைப் பயன்படுத்தி கேரளம் உள்ளிட்ட சில மாநில அரசுகள், தங்களுக்கு மரபணு மாற்றுத்தொழில்நுட்பம் தேவையில்லை என்று கூறியுள்ளன.
மரபணு மாற்றத்தொழில் நுட்பத்திற்கு அனுமதி வழங்குவதில், பலமுனை முடிவுகள் மேற்கொள்ளப்படுவதால் தேவையற்ற காலதாமதம் ஆவதாக கருதும் பன்னாட்டு பகாசுர நிறுவனங்கள் மரபணு மாற்றுத் தொழில் நுட்பத்தை அங்கீகரிக்க ஒற்றை அதிகார அமைப்பு தேவை என்று வலியுறுத்தி வந்தன.
இதை ஏற்று மத்திய அரசு சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இதன் தலைவராகவும் வழக்கம்போல் திருவாளர் எம். எஸ். சுவாமிநாதன் அவர்களே நியமிக்கப்பட்டார். இக்குழுவின் பரிந்துரையின்படி, மரபணு மாற்று அங்கீகாரக்குழுவிற்கு பதிலாக தேசிய உயிர்த்தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணையம் (National Bio-technology Regulatory Authority) என்று புதிய அதிகார மையம் தொடங்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதன் தலைவராக மரபணு மாற்றுத்தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் கொண்ட ஒரு அறிவியல் நிபுணர் இருப்பார். சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட இந்த அமைப்பே மரபணு மாற்றுத்தொழில்நுட்பம் உள்ளிட்ட உயிர்த்தொழில்நுட்ப விவகாரங்களில் இறுதி முடிவெடுக்கும். இந்த முடிவு நாடு முழுவதற்கும் விதிவிலக்கில்லாமல் பொருந்தும். அனைத்து மாநிலங்களும் இந்த முடிவை ஏற்றே ஆகவேண்டும். இந்த அமைப்பின் முடிவை ஏற்க முடியாது எந்த மாநிலமும் புறக்கணிக்க முடியாது. இந்த முடிவுகளில் மத்திய சுகாதார அமைச்சகமோ, சுற்றுச்சூழல் அமைச்சகமோகூட தலையிட முடியாது. மரபணு மாற்றத்தால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்தோ, மரபணு மாற்றம் தொடர்பான சூழல் சீர்கேட்டிற்கு காரணமான வர்த்தக நிறுவனங்களை விசாரிக்கும் அதிகாரமோ இந்த அமைப்பிற்கு இல்லை.
- வழக்குரைஞர் மு.வெற்றிச்செல்வன்
Click here to bookmark this link.Channel Image12:47 தனியாருக்காக தாராளமயமாகும் இந்திய அணுசக்தி சட்டம்! மக்கள் சட்டம் (PEOPLE'S LAW)

ஒரு நாட்டின் கொள்கைகள் அந்த நாட்டின் நலன்களை முன்னிறுத்தியே மேற்கொள்ளப்படுவதாக பொதுவாக கருதப்படுகிறது. ஆனால் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் பல கொள்கைகளும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் நலன்களை முன்னிறுத்தியே மேற்கொள்ளப்படுவதாக தோன்றுகிறது.

இந்தியாவின் அணுசக்தி வரலாறு, நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே தொடங்குகிறது. சர். சி. வி. ராமன், ஜகதீஸ சந்திரபோஸ், மெஹ்நாத் ஸாகா ஆகிய மூன்று அறிவியல் அறிஞர்களும் இந்திய அணுசக்தித்துறையின் முன்னோடிகள். பெங்களூருவில் இருக்கும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ்-ன் முதல் இந்திய இயக்குநராக சர். சி. வி. ராமன் பதவி வகித்தார். மெஹ்நாத் ஸாகா, கொல்கத்தாவில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூக்ளியர் பிஃசிக்ஸ் என்ற அமைப்பை நிறுவினார். இவரது மாணவரான நாக் சவுத்ரி 1942ம் ஆண்டில், அணுக்கருவை பிளக்க உதவும் கருவியான சைக்ளோட்ரானை இந்தியாவிற்கு முதன்முதலாக கொண்டு வந்தார்.

இந்த முயற்சிகள் அனைத்திற்கு பின்புலமாக இருந்தவர் டாக்டர் ஹோமி ஜே. பாபா. இவர் இந்தியாவின் பெருமுதலாளிகளுள் ஒருவரான ஜே.ஆர்.டி. டாடாவின் சகோதரர் மகன்.

இவருடைய தலைமையில் 1948ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி முதல் இந்திய அணுசக்தி ஆணையம் தோற்றுவிக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் முடிவுகள் அன்றைய பிரதமரான ஜவஹர்லால் நேருவின் அங்கீகாரத்துடன் செயல்படுத்தப்பட்டன. இந்த ஆணையம் கேட்டுக்கொண்டபடி 1954ம் ஆண்டில் இந்திய அணுசக்தித்துறை நிர்மாணிக்கப்பட்டது.

முதல் அணுசக்தி ஆணையம் அமைக்கப்பட்டு 10வது ஆண்டில் அதே ஆணையம் மேலும் கூடுதல் அதிகாரங்களுடன் இரண்டாவது அணுசக்தி ஆணையமாக அறிவிக்கப்பட்டது. இதன் தலைவராகவும், அணுசக்தித் துறையின் செயலாளராகவும் மீண்டும் டாக்டர் ஹோமி ஜே. பாபா-வே பதவி ஏற்றார்.

இவர் பிரதமர் நேருவுக்கு மட்டுமே கட்டுப்பட்டவர். வேறு யாரும் இவரிடம் கேள்வி கேட்க முடியாது. ஆணையத்தின் மற்ற உறுப்பினர்களின் கருத்துகளையும், ஆலோசனைகளையும் மறுக்க தலைவருக்கு முழு உரிமை உண்டு. இந்த ஆணையம், தனக்கு தேவைப்படும்போது, தேவைப்படும் புதிய சட்டங்களை இயற்றிக் கொள்ளலாம்.

இத்தகைய ஜனநாயகத்தன்மை வாய்ந்த இந்திய அணுசக்தி ஆணையத்தில் தலைவரான டாக்டர் ஹோமி ஜே.பாபாவின் உறவினரும், இந்தியாவின் பெருமுதலாளிகளில் முதன்மையானவருமான ஜே.ஆர்.டி. டாடா இந்திய அணுசக்தி ஆணையத்தில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

இந்திய அணுசக்தி சட்டம்

இந்தியாவின் முதல் அணுசக்தி சட்டம் 1948ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. பின்னர் 1962ம் ஆண்டில் அந்த சட்டம் முழுமையாக நீக்கப்பட்டு புதிய அணுசக்தி சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்கீழ் இந்திய அணுசக்தி ஆணையத்திற்கு வரம்பற்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டன.

சில உதாரணங்களை பார்ப்போம்...

அணுசக்தி சட்டத்தின் பிரிவு 3 (சி) தடை செய்யப்பட்ட தகவல்களைப் பற்றிக்கூறுகிறது. அணுசக்தி ஆணையத்தால் முன்னரே வெளியிடப்பட்ட அல்லது பதிப்பிக்கப்பட்ட தகவல்களைத்தவிர

(1) கொள்முதல் அல்லது விற்பனை செய்யப்பட்ட பொருட்கள் குறித்த இடம், தரம் மற்றும் அளவு

(2) அந்தப் பொருட்களை தயாரிக்கும் அல்லது பயன்படுத்தும் முறை

(3) ஐசோடோப்புகளையோ அல்லது வேறெந்த பொரு ளையோ தயாரிப்பதற்கு - பயன்படுத்துவதற்கான கோட்பாட்டு முறை, வடிவம், கட்டமைப்பு மற்றும் இயக்கம் குறித்த தகவல்கள்

(4) அணு உலைகள் குறித்த கோட்பாடுகள், வடிவம், கட்டமைப்பு, இயக்கம் குறித்த தகவல்கள்

(5) மேற்கூறப்பட்ட அம்சங்களிலிருந்து பெறப்படும், ஆய்வு செய்யபடும் தகவல்கள்

.........ஆகிய அனைத்தும் தடை செய்யப்பட்ட தகவல்களாகும்.

அணுசக்தி சட்டத்தின் பிரிவு 18 தகவல் வெளிப்படுவதை தடுப்பது குறித்து கூறுகிறது.

18. தகவல் வெளிப்படுவதை தடுத்தல்

(1) மத்திய அரசு கீழ்க்கண்ட அம்சங்கள் குறித்த ஆவணங்கள், வரைபடங்கள், புகைப்படங்கள், திட்ட வரைபடங்கள், மாதிரிகள் ஆகியவை வெளியாவதை தடுக்கும் வகையில் உத்தரவுகளை பிறப்பிக்கலாம்

(a) அணுசக்தியை உற்பத்தி செய்தல், மேம்படுத்தல், பயன்படுத்தல் ஆகியவற்றில் ஈடுபடும், ஈடுபட திட்டமிட்டுள்ள அமைப்புகள், அல்லது

(b) செயலில் உள்ள அல்லது செயல்படுத்த திட்டமிட்டுள்ள அணுசக்தி அமைப்புகள் தேவைகள் மற்றும் செயல்முறைகள், அல்லது

(c) செயலில் உள்ள அல்லது செயல்படுத்த திட்டமிட்டுள்ள அணுசக்தி அமைப்புகளின் இயங்குமுறைகள்

(2) எந்த ஒரு நபரும் கீழ்க்கண்டவற்றை செய்யக்கூடாது.

(a)மேற்கூறப்பட்ட 18ம் பிரிவின் முதல் துணைப்பிரிவில் கூறப்பட்டுள்ள தகவல்களை பெறுவதற்கோ, பெற முயற்சிக்கவோ, அதனை வெளிப்படுத்தவோ கூடாது.

(b) இந்த சட்டத்தின்படி பணியாற்றுபவரோ, வேறு எந்த செயல்களை செய்பவரோ மத்திய அரசின் உத்தரவின்றி மேற்கூறப்பட்டவை தொடர்பான எந்த தகவலையும் வெளியிடக்கூடாது.

இந்திய அணுசக்தி சட்டத்தின் பிரிவு 24 மேற்கூறிய குற்றங்களை செய்பவர்களுக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனையும், அபராதமும், அல்லது இரண்டும் விதிக்கலாம் என்று கூறுகிறது.

மேலும் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் மற்றவர்கள் நுழைவதை தடுக்கவும், அணுசக்தி தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளவும், கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமைகளை பதிவு செய்யவும் தடைகள் இருந்தன. இவ்வாறு மத்திய அரசுக்கும், அதன் அதிகார மையங்களுக்கும் வரம்பற்ற அதிகாரங்களை கொடுத்த இந்திய அணுசக்தி சட்டம், இந்திய மக்களுக்கும், மக்களின் பிரதிநிதிகளுக்கும் இந்திய அணுசக்தி திட்டங்கள் குறித்த எந்த தகவலையும் பெற முடியாத நிலையிலேயே வைத்திருந்தது. வேறு வகையில் இந்த தகவலை பெறுவதையும் கடும் குற்றமாக நிர்ணயித்து 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்க வழிவகுத்த இந்திய அணு சக்தி சட்டம், 1962-ஐ மாற்ற வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன.

குறிப்பாக இந்திய தொழில் மற்றும் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு (Federation of Indian Chambers of Commerce and Industry), நாட்டின் மிக முக்கியமான அணுசக்தி திட்டத்தில் தனியார் துறை பங்கேற்பதற்கு தற்போதைய அணுசக்தி சட்டம் பெருந்தடையாக இருப்பதாகவும், எனவே அந்த சட்டத்தில் தேவையான திருத்தங்களை வலியுறுத்தி வருகிறது. இந்த அமைப்பில் இந்திய நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்கவில்லை என்பதும், இந்தியக்கூட்டாளிகளின் மூலம் பன்னாட்டு பகாசுர நிறுவனங்களும் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து பிரபல அணுவியல் நிபுணர் ராஜா ராமண்ணா தலைமையில், அணு சக்தி சட்டத்தை திருத்துவது குறித்து ஆராய்வதற்காக ஒரு குழு 1997ல் அமைக்கப்பட்டது. இந்த குழு 1998ம் ஆண்டில் அறிக்கையை சமர்ப்பித்தது.

இந்த அறிக்கையின் அடிப்படையில் இந்திய அணுசக்தி சட்டத்தை திருத்துவதற்கு மத்திய அரசு முடிவெடுத்து பணியாற்றி வருகிறது. டாடா, ரிலையன்ஸ், எல் அன்ட் ட்டி போன்ற இந்திய நிறுவனங்களும், பிரான்ஸ் நாட்டின் அரெவா போன்ற பன்னாட்டு பகாசுர நிறுவனங்களும் இந்திய அணுசக்தி துறையில் படிப்படியாக பங்கேற்க வழியேற்படுத்துவற்கே இந்த சட்டதிருத்தம் கொண்டு வரப்படுகிறது.

அதாவது தமது உழைப்பின் மூலம் அரசுக்கு வரி செலுத்திய குடிமகனுக்கு மறைக்கப்பட்ட விவரங்கள், இந்தியாவில் முதலீடு செய்து கொள்ளை லாபம் ஈட்டத் துடிக்கும் பன்னாட்டு பகாசுர நிறுவனங்களுக்கும், அதன் இந்திய ஏஜென்ட்களுக்கும் வழங்கப்படவிருக்கின்றன. மேலும் இந்தியாவின் அணுசக்தி கொள்கைகளை வடிவமைப்பதிலும், செயல்படுத்துவதிலும் இந்த தனியார் நிறுவனங்கள் பங்கேற்கப் போகின்றன.

நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் இந்திய குடிமகனுக்கு மறைக்கப்பட்ட - மறுக்கப்பட்ட ரகசியங்கள், பன்னாட்டு பகாசுர நிறுவனங்களுக்கு தவணைமுறையில், மலிவு விலையில் தாரை வார்க்கப்படவிருக்கிறது.

மின் ஆற்றலுக்கான ஒரே வழி அணு சக்திதான் என்று நாடு முழுவதும் அரசு நிறுவனங்கள் பிரச்சாரம் செய்து வந்தன. ஆனால் அரசின் செயல்பாடுகளும், சட்ட நடைமுறைகளும் அந்த கருத்தில் எண்ணற்ற கேள்விகளை எழுப்பின. இந்நிலையில் தனியார் நிறுவனங்களை அணுசக்தித் துறையில் பங்கேற்ப அனுமதிப்பது மென்மேலும் கேள்விகளை எழுப்பினாலும் பதில் சொல்லத்தான் ஆளில்லை.

- சுந்தரராஜன்

(sundararajan@lawyer.com)

Click here to bookmark this link.Channel Image02:39 'அல்லாஹ் தன் தூதரின் நாவினால் ஷைத்தானிடமிருந்து காப்பாற்றப் பட்டவர்! ஸஹாபாக்களின் வாழ்வினிலே...
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
உமர்[ரலி] அவர்கள் ஒரு பாதையில் சென்றால் ஷைத்தான் வேறு பாதையில் செல்வான் என்ற செய்தி நாமெல்லாம் அறிந்த ஒன்றுதான். மனிதனின் ரத்த நாளங்களில் எல்லாம் வியாபித்து ஆட்டிப்படைக்கும் ஷைத்தானின் அட்டூழியத்திலிருந்து பாதுகாப்பு பெற்ற மற்றொரு ஸஹாபி அம்மார் இப்னு யாசிர்[ரலி] அவர்களாவார்.

அல்கமா இப்னு கைஸ் அந் நகஈ(ரஹ்) அறிவித்தார்கள்;
நான் ஷாம் நாட்டிற்குச் சென்றேன். பள்ளிவாசலில் நுழைந்(து இரண்டு ரக்அத்கள் தொழு)ததும் 'இறைவா! எனக்கு ஒரு நல்ல நண்பரை ஏற்படுத்துவாயாக" என்று பிராத்தித்தேன். பிறகு அபுதர்தா(ரலி) அவர்களிடம் (சென்று) அமர்ந்தேன். அபுத்தர்தா(ரலி) 'நீங்கள் எந்த ஊர்க்காரர் ?' என்று கேட்டார்கள். அதற்கு நான் 'கூஃபா வாசி' என்றேன். அபுத்தர்தா(ரலி) '(நபி - ஸல் - அவர்கள் அறிவித்த) வேறெவருக்கும் தெரியாத (நயவஞ்சகர்கள் தொடர்பான) இரகசியங்களை அறிந்தவர் உங்களிடையே இல்லையா?' என்று ஹுதைஃபா(ரலி) அவர்களைத் கருத்தில் கொண்டு கேட்டார்கள். நான், 'ஆம் (இருக்கிறார்)" என்று பதிலளித்தேன். அவர்கள், 'தன் நபியின் வாயால் எவரை ஷைத்தானிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றினானோ அவர் உங்களிடையே இல்லையா?' என்று கேட்டார்... அம்மார்(ரலி) அவர்களைக் கருத்தில் கொண்டே இப்படிக் கூறினார்கள். நான் 'ஆம் (இருக்கிறார்)" என்று பதிலளித்தேன். அவர்கள், 'நபி(ஸல்) அவர்களின் (பல்துலக்கும்) மிஸ்வாக் குச்சியையும், தலையணையையும் சுமந்து சென்றவர்... அல்லது அவர்களின் அந்தரங்க உதவியாளர்.. (இப்னு மஸ்வூத்) உங்களிடம் இல்லையா?' என்று கேட்டார்கள். அதற்கு நான், 'ஆம் (இருக்கிறார்)" என்று பதிலளித்தேன்.
[ஹதீஸ் சுருக்கம் புஹாரி எண் 3743 ]

அல்கமா இப்னு கைஸ்(ரலி) அறிவித்தார். நான் ஷாம் நாட்டிற்குச் சென்றேன். அங்கிருந்த மக்கள், 'அபுத் தர்தா(ரலி), (இங்கு) வந்து, அல்லாஹ் தன் தூதரின் நாவினால் ஷைத்தானிடமிருந்து எவரைக் காப்பாற்றினானோ அவர் உங்களிடையே இருக்கிறாரா?' என்று கேட்டார்" எனச் சொன்னார்கள். முகீரா இப்னு மிக்ஸம்(ரலி), 'அல்லாஹ் தன் தூதரின் நாவினால் ஷைத்தானிடமிருந்து எவரைக் காப்பாற்றினானோ அவர்" என்று அபுத் தர்தா(ரலி) குறிப்பிட்டது அம்மார் இப்னு யாஸிர்(ரலி) அவர்களைத் தான்" என்று கூறினார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 3287

இத்தகைய சிறப்பு வாய்ந்த அம்மார்[ரலி] அவர்கள், இஸ்லாத்திற்காக முதன்முதலாக உயிர்த்தியாகம் செய்த சுமைய்யா[ரலி], யாசிர்[ரலி] ஆகியோரின் அருமை மகன் என்பது நாமறிந்த செய்திதான். இறைத்தூதர்[ஸல்] அவர்கள் சத்திய மார்க்கத்தை போதிக்கத்தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் இஸ்லாத்தை ஏற்று பல்வேறு இன்னல்களை சந்தித்தவர்கள் அம்மார்[ரலி] அவர்கள். ஒரு கட்டத்தில் இணைவைப்பாளர்களின் உச்சகட்ட துன்புறுத்தலின் போது, உள்ளத்தில் ஈமானை நிறைத்துகொண்டு உதட்டளவில் ஈமானுக்கு மாற்றமான கருத்தை சொன்ன அம்மார்[ரலி] அவர்கள் கைசேதம் அடைந்தவர்களாக அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களிடம் கூறியபோது கண்ணியம் பொருந்திய அல்லாஹ்,

مَن كَفَرَ بِاللّهِ مِن بَعْدِ إيمَانِهِ إِلاَّ مَنْ أُكْرِهَ وَقَلْبُهُ مُطْمَئِنٌّ بِالإِيمَانِ وَلَـكِن مَّن شَرَحَ بِالْكُفْرِ صَدْرًا فَعَلَيْهِمْ غَضَبٌ مِّنَ اللّهِ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ
எவர் ஈமான் கொண்டபின் அல்லாஹ்வை நிராகரிக்கிறாரோ அவர் (மீது அல்லாஹ்வின் கோபம் இருக்கிறது) அவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதி கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ அவரைத் தவிர - (எனவே அவர் மீது குற்றமில்லை) ஆனால் (நிர்ப்பந்தம் யாதும் இல்லாமல்) எவருடைய நெஞ்சம் குஃப்ரைக்கொண்டு விரிவாகி இருக்கிறதோ இத்தகையோர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும்; இன்னும் அவர்களுக்குக் கொடிய வேதனையும் உண்டு.[16:106 ]

என்ற வசனத்தை இறக்கி அம்மார்[ரலி] அவர்களின் தியாகத்தை பொருந்திக் கொள்கிறான், மேலும் நபியவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனா செல்வதற்கு முன்பாகவே மதீனாவிற்கு ஹிஜ்ரத் எனும் தியாகப் பயணம் மேற்கொண்ட அம்மார்[ரலி] அவர்கள் புனிதமிக்க மஸ்ஜிதுன் நபவியின் கட்டுமனான பணியில் அதிகம் உடலுழைப்பு செய்த அந்த வேளையில் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் கூறினார்கள்;

இக்ரிமா அறிவித்தார். இப்னு அப்பாஸ்(ரலி) என்னிடமும் அவர் மகன் அலியிடமும் 'நீங்களிருவரும் அபூ ஸயீத்(ரலி) அவர்களிடம் சென்று அவர் அறிவிக்கும் செய்தியைச் செவிமடுத்து வாருங்கள்!' எனக் கூறினார்கள். நாங்கள் சென்றோம். அபூ ஸயீத்(ரலி) தங்களின் தோட்டத்தைச் சரி செய்து கொண்டிருந்தார்கள். (எங்களைக் கண்டதும் தங்களின் மேலாடையைப் போர்த்திக் கொண்டு (பல செய்திகளை) எங்களுக்குக் கூறலானார்கள். பள்ளிவாசல் கட்டப்பட்ட செய்தியைக் கூறும்போது 'நாங்கள் ஒவ்வொரு செங்கல்லாகச் சுமப்பவர்களாக இருந்தோம். (ஆனால்) அம்மார்(ரலி) இரண்டிரண்டு செங்கற்களாகச் சுமக்கலானார். அதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் அவரின் மேனியில் படிந்த மண்ணைத் தட்டிவிட்டு 'பாவம் அம்மார்! இவரை அக்கிரமக்காரக் கூட்டம் கொலை செய்யும்! இவர் அவர்களைச் சுவர்க்கத்திற்கு அழைப்பார். அவர்களோ இவரை நரகத்திற்கு அழைப்பார்கள்." என்று கூறினார்கள். அதற்கு அம்மார்(ரலி) 'அந்தக் குழப்பங்களைவிட்டும் அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்' என்று கூறினார்கள்' என அபூ ஸயீத்(ரலி) குறிப்பிட்டார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 447

தான் கொல்லப்படுவோம் என்பதை இறைத்தூதர்[ஸல்] அவர்களின் வாயால் செவிமடுத்த அம்மார்[ரலி] அவர்கள், நம்மை போன்ற பலவீனமானமானவராக இருந்தால், உயிர்மீது ஆசையுடையவராக இருந்தால் அவர் இஸ்லாத்தை விட்டே விரண்டோடியிருப்பார். அம்மார்[ரலி] அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. தான் கொல்லப்படப்போகும் நாளை எண்ணி கண்ணீர் விட்டு கொண்டிருக்கவில்லை. மாறாக, அத்தகைய குழப்பத்திலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன் என்று கூறுகிறார்கள் என்றால், அவர்கள் உள்ளத்தில் எந்த அளவு இறையச்சம் நிரம்பியுள்ளது என்பதை விளங்கிக்கொள்ளலாம். அந்த இறையச்சம்தான் அவர்களுக்கு ஷஹீத் எனும் அந்தஸ்த்தையும், சுவனத்தில் உயர்ந்த படித்தரத்தையும் பெற்றுத்தந்துள்ளது.

எல்லாம் வல்ல அல்லாஹ் அம்மார்[ரலி] அவர்களைப் போன்று நம்முடைய வாழ்வும்-மரணமும் இஸ்லாத்திற்காகவே அமைந்திட அருள்புரிவானாக!

Tue 08

Click here to bookmark this link.Channel Image17:15 [பாடம்-80] குற்றங்களும் தண்டனையும். முக்தஸர் ஸஹீஹுல் புகாரி
கண்டிப்பதற்காகவும் புத்தி புகட்டுவதற்காகவும் எத்தனை முறை அடிக்கலாம்?

2166. அபூ புர்தா(ரலி) அறிவித்தார் : ''அல்லாஹ் விதியாக்கியுள்ள (குற்றவியல்) தண்டனைகளில் ஒன்றில் தவிர வேறு எதற்காகவும் பத்து சாட்டையடிகளுக்கு மேல் வழங்கப்படலாகாது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறுவார்கள்.

அடிமைகளின் மீது அவதூறு கூறுதல்.

2167. 'நிராபராதியான தம் அடிமையின் மீது (விபசார) அவதூறு கூறியவருக்கு மறுமை நாளில் சாட்டையடி வழங்கப்படும். அவர் சொன்னதைப் போன்று அந்த அடிமை இருந்தால் தவிர!' என்று அபுல் காசிம் (இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Mon 07

Click here to bookmark this link.Channel Image08:45 சாமிரி பற்றிய குர்ஆனின் கூற்றில் சரித்திர தவறா? கிறிஸ்தவம் பார்வை
திருக்குர்ஆனில் சரித்திர தவறா? (பகுதி – 2)" அதன் முன்னாலும், அதன் பின்னாலும் அசத்தியம் அதனிடம் வந்து சேராது – ஞானமுள்ள புகழுக்குரியவனிடமிருந்து (அது) இறக்கி வைக்கப்பட்டதாகும்” (திருக்குர்ஆன் 41:42)சாமிரி பற்றிய குர்ஆனின் கூற்றில் சரித்திர தவறா?கிறிஸ்தவர்களின் விமர்சனம்://மோசேயினுடைய காலத்தில் சமாரியர்கள் இருந்ததாக “எந்தவொரு” சரித்திரமும் கூறவில்லை. மாறாக கி. மு 722 ஆண்டுகளில் தான்

Sun 06

Click here to bookmark this link.Channel Image17:00 [பாடம்-79] குற்றவியல் தண்டனைகள். முக்தஸர் ஸஹீஹுல் புகாரி
பேரீச்ச மட்டையாலும் காலணியாலும் (குடிகாரரை) அடித்தல்.

2159. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் : மது அருந்திய ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டபோது அவர்கள் 'இவரை அடியுங்கள்'' என்றார்கள். எங்களில் சிலர் கையால் அடித்தனர். சிலர் காலணியால் அடித்தனர். இன்னும் சிலர் (முறுக்கப்பட்ட) தம் துணியால் அடித்தனர். (தண்டனை முடிந்து அவர்) திரும்பியபோது மக்களில் சிலர், அல்லாஹ் உம்மைக் கேவலப்படுத்துவானாக!'' என்று கூறி (சாபமிட்ட)னர். நபி(ஸல்) அவர்கள், 'இவ்வாறு கூறி, இவருக்கெதிராக ஷைத்தானுக்கு ஒத்தாசை செய்யாதீர்கள்'' என்றார்கள்.

2160. அலீபின் அபீ தாலிப்(ரலி) அறிவித்தார் : நான் தண்டனை நிறைவேற்றியதால் எவரேனும் இறந்தால் (அதற்காக) நான் கவலை அடையப் போவதில்லை. குடிகாரரைத் தவிர! ஏனெனில், (தண்டனை வழங்கப்பட்டதால்) குடிகாரர் இறந்தால் அவருக்காக நான் உயிரீட்டுத் தொகை வழங்கிடுவேன். இதற்குக் காரணம், (மது அருந்தியவனுக்குத் தண்டனையாக) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (குறிப்பிட்ட எதையும்) வழிமுறையாக்கவில்லை.

குடிகாரணை சபிப்பது வெறுக்கப்பட்டதாகும். மேலும், அவன் மார்க்கத்திலிருந்து வெளியேறியவன் அல்லன்.

2161. உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அறிவித்தார் : இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் 'அப்துல்லாஹ்' என்றொருவர் இருந்தார். அவர் 'ஹிமார்' (கழுதை) என்ற புனைப்பெயரில் அழைக்கப்பட்டு வந்தார். அவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களை சிரிக்க வைப்பார். மது அருந்தியதற்காக அவரை நபி(ஸல்) அவர்கள் அடித்துள்ளார்கள். (போதையிலிருந்த) அவர் ஒருநாள் (நபி(ஸல்) அவர்களிடம்) கொண்டு வரப்பட்டார். அவரை அடிக்கும்படி நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவர் அடிக்கப்பட்டார். அப்போது (அங்கிருந்த) மக்களில் ஒருவர், 'இறைவா! இவர் மீது உன் சாபம் ஏற்படட்டும்! இவர் (குடித்ததற்காக) எத்தனை முறை கொண்டு வரப்பட்டுள்ளார்!'' என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இவரை சபிக்காதீர்கள். ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக! இவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறார் என்றே நான் அறிந்துள்ளேன்'' என்று கூறினார்கள்.

திருடனைப் பெயர் குறிப்பிடாமல் (பொதுவாக) சபித்தல்.

2162. அல்லாஹ்வின் சாபம் திருடன் மீது ஏற்படட்டும்! அவன் (விலை மதிப்புள்ள) தலைக்கவசத்தைத் திருடுகிறான்; அதனால் அவனுடைய கை வெட்டப்படுகிறது. (விலை மலிவான) கயிற்றையும் அவன் திருடுகிறான்; அதனாலும் அவனுடைய கை துண்டிக்கப்படுகிறது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அஃமஷ்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 'தலைக்கவசம்' என்பது இரும்பாலான தலைக்கவசத்தையும் 'கயிறு' என்பது ஒரு சில திர்ஹம்கள் (வெள்ளிக்காசுகள்) பெறுமானமுள்ள கயிற்றையும் குறிக்கும் என்று (இதன் அறிவிப்பாளர்கள்) கருதுகிறார்கள்.

''திருடிய ஆண், திருடிய பெண் ஆகியோரின் கரங்களைத் துண்டித்து விடுங்கள்'' எனும் (திருக்குர்ஆன் 05:38 வது) வசனத் தொடரும், எந்த அளவு திருடினால் (கை) வெட்ட வேண்டும்? என்பது பற்றியும்.

2163. கால் தீனார்(பொற் காசு), அல்லது அதற்கு மேல் திருடியதற்காகக் கை வெட்டப்படும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார். இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

2164. ஆயிஷா(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்களின் காலத்தில் 'தோல் கேடயம்' அல்லது 'தோல் கவசத்தின்' விலை (மதிப்புள்ள பொருளு)க்காகவே தவிர, திருடனின் கை துண்டிக்கப்பட்டதில்லை. இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

2165. இப்னு உமர்(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள் மூன்று திர்ஹங்கள் (வெள்ளிக்காசுகள்) விலைமதிப்புள்ள தோல் கேடயத்திற்காக (அதைத் திருடியவரின் கரத்தை)த் துண்டித்தார்கள்.
Click here to bookmark this link.Channel Image06:14 அறிவியலும் அரையவியலும் - 4 வஹ்ஹாபி
மேற்காணும் தலைப்புக்குப் பொருத்தமாக இருந்ததால், வலைப்பதிவர் நல்லடியாரிடம் அனுமதி பெற்று அவரது 'விரை'ப்பான கேள்விகளும் விடாத பதில்களும்... பதிவு இங்கு மீள்பதிவு செய்யப் படுகிறது; அவருக்கு நன்றி!
ஃஃஃ

குர்ஆன் - அறிவுக்கும் அறிவியலுக்கும் ஏற்ற எக்காலத்திற்கும் பொருந்தும் ஓர் வாழ்வியல் நெறிநூல்! இது அறிவியல் நூலல்ல; ஆனாலும் அறிவியலையும் உள்ளடக்கியது. குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள அனேகக் குறிப்புகள் தற்கால ஆய்வுகளுடன் / நிரூபனங்களுடன் 100% ஒத்துப்போகிறது. எனவேதான் "இதில் முரண்பாடுகள் இருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம்" என்று ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் சவால் விடுகிறது. உலகில் வேறு எந்தநூலும், கொள்கையும் இவ்வாறு சவால் விட்டதாக அல்லது அத்தகைய சவால்களை எதிர்கொண்டு நிலைத்திருப்பதாகவோ அறியமுடியவில்லை.

நிற்க,

திருவாளர் தருமி "மதங்கள்" என்ற தலைப்பில் "இஸ்லாம்-2" குறித்து எழுதி இருந்தார். மனிதவிந்து உற்பத்தியாகுமிடம் குறித்து விந்தையான பதிவு அது! குர்ஆன் வசனம் 86:05-07ஐ மேற்கோள் காட்டி எழுதி இருந்தார்.
5. எனவே, மனிதன் எதிலிருந்து தான் படைக்கப்பட்டுள்ளான் என்பதை (நோட்டமிட்டு)ப் பார்ப்பானாக!
6. குதித்து வெளியாகும் நீரினால் அவன் படைக்கப்பட்டுள்ளான்
7. (ஆணுடைய) முதுகுத் தண்டிற்கும், (பெண்ணுடைய) நெஞ்செலும்புகளுக்குமிடையில் இருந்து அது வெளியாகிறது.

அவரின் கேள்வி எனனவென்றால், "மனிதன் விந்திலிருந்து படைக்கப் பட்டான் என்று நேரடியாகச் சொல்லாமல் முதுகுத் தண்டிற்கும், விலா எழும்புக்கும் இடையில் இருந்து குதித்து வெளியாகும் நீரினால் படைக்கப்பட்டுள்ளான் என்று ஏன் சொல்ல வேண்டும்?" என்றதோடு "விந்துக்கும் முதுகுத் தண்டிற்கும் என்ன தொடர்போ?" என்று அறிவியல்(!) பூர்வமாகக் கேள்வி ஒன்றையும் கேட்டிருந்தார்!

அவரின் பதிவிலிருந்தும் பின்னூட்டங்களிலிருந்தும் திரும்பத் திரும்ப தெரிவது, இஸ்லாம் குறித்த அரைகுறை தகவல்களுடன் அறிவியலைப் பற்றிய அறியாமையும்தான்!

இது தருமியின் புதிய ஆய்வொன்றுமில்லை. ஏற்கனவே அவர் வேறொரு வசனத்தை எடுத்தெழுதி, அதற்கு விளக்கம் சொல்லப் பட்ட கருதான்:
படைப்புக்கொள்கை: இஸ்லாமில் மனிதன் உறைந்த ரத்தத்திலிருந்து உண்டாக்கப் பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. அது யாருடைய ரத்தம் ? மனிதன் படைக்கப் படுவதற்கு முன் எங்கிருந்து ரத்தம் வந்தது? ஒருவேளை கடவுளின் ரத்தமாக இருக்குமோ? - தருமி
பதில் : முதல் மனிதனின் படைப்பையும் அவன் சந்ததியினரின் பிறப்பையும் குழப்பிக் கொண்டுள்ளீர்கள் . முதல் மனிதன் இறைவனின் அற்புதங்களால் களி மண்ணின் மூலச்சத்திலிருந்து படைக்கப்பட்டார் (6:2, 7:12, 15:33, 32:7, 35:11, 55:14) என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடு. மனித வளர்ச்சி நிலைகளைப் பற்றி எந்த வேத நூலும் விவரிக்காத வகையில் குர் ஆன் விவரிக்கிறது, பார்க்க: 23:12,13 &14). இஸ்லாம் சொல்லும் படைப்புக் கொள்கை தவறு என்பது உங்கள் வாதமானால், நீங்களே சொல்லுங்கள் மனிதன் எதிலிருந்து தோன்றினான்? பகுத்தறிவு பெற்ற குரங்குகள்தான் தற்கால மனிதனின் மூதாதையர் என்றால், இன்னும் சில குரங்குகள் ஏன் பகுத்தறிவடைந்து மனிதனாகவில்லை?

குர்ஆன் வசனம் 86:07இல் ஒரு குழந்தையின் உருவாக்கத்தில் உள்ள ஒரு பகுதி மட்டும் சொல்லப் படுகிறது. يَخْرُجُ مِن بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ என்பதற்கு விலா எலும்புகளுக்கும் முதுகுத் தண்டுக்கும் இடையிலிருந்து வெளியேறும் திரவம், கருவுக்கான பகுதி மூலம் என்று சொல்கிறது. இங்குக் கேள்வி என்னவென்றால் விந்து (مَنِيٍّ/SPERM) நேரடியாகச் சொல்லாமல் ஏன் திரவம் (مَاءٍ/FLUID) என்று மறைமுகமாகச் சொல்ல வேண்டும்? என்பதே!

குர்ஆனின் இன்னொரு வசனத்தில் (075:037) "கருவறைக்குள் (செலுத்தப்பட்ட) விந்தின் ஒரு துளியாக மனிதன் (مَنِيٍّ) இருக்கவில்லையா?" என்று கேட்கும் குர்ஆன், வசனம் 86:06 இல் திரவம் என்று பொதுமையில் குறிப்பிடுகிறது!

இரண்டும் வெவ்வேறு வடிவிலானவை / நிலைகளைக் கொண்டவை என்ற வேறுபாடு நன்கு தெரிந்திருப்பதால் வெவ்வேறான சொல்லாடல் கையாளப் பட்டுள்ளது. ஆணிடமிருந்து வெளியாகும் தாது (SEMEN) பல்வேறு சுரப்பிகளைக் கடந்து இறுதியில் விந்தாக (SPERM) மாற்றமடைகிறது.

கருவாக்கத்திற்கு ஆணின் விந்து (SPERM) பகுதி மூலமாகும். அந்த விந்து ஆணின் விரையிலிருந்து உருவாகிறது என்பதும் பொதுவானது.

பொதுவான ஒன்றை குர்ஆன் வெவ்வேறு பதங்களில் குறிப்பிடுவதற்கு வேறுபட்ட காரணம் இருக்க வேண்டும். கர்ப்பத்தில் விந்துத்துளியாக இருக்கவில்லையா? என்று கேட்கும் குர்ஆன், விலா எலும்புகளுக்கும் முதுகுத் தண்டுக்கும் இடையிலிருந்து வெளியேற்றப்பட்ட திரவம் என்று வேறுபடுத்துவது எப்படிச் சாத்தியமாயிற்று?


தாது (SEMEN) என்ற விந்தின் (SPERM) மூலப்பொருள் பற்றி நவீன மருத்துவம் விளக்குகிறது. குர்ஆன் வசனம் 86:06ம் இதைத்தான் சொல்கிறது. நுண்ணாடி (MICROSCOPE) மருத்துவ உபகரணங்களும் சாத்தியமில்லாத காலகட்டத்தில் எழுதப்படிக்கத் தெரிந்திராத ஒருவரால் ஒரே விசயத்தை துல்லியமான வெவ்வேறு சொற்களால் விளக்க முடிந்தது?

விந்து (SPERM) ஆணின் விரையிலிருந்து உருவாகிறது என்று பொதுவாக நம்பப்பட்ட காலத்தில் (சமீபகாலம் வரையிலும்கூட) எல்லோரையும்போல் இருகால்களுக்கு இடைப்பட்ட உறுப்பிலிருந்து விந்து வெளியாகிறது என்று சொல்லாமல் "விலா எலும்புக்கும் முதுகுத் தண்டுக்கும் இடையிருந்து உருவாகும் 'திரவம்' என்று துல்லியமாக வேறுபடுத்திச் சொல்வதன் மூலம் படைப்பின் ரகசியங்களை அறிவித்தவன் படைத்தோன் அல்லாஹ் என்பது இன்னொரு முறை உறுதியாகிறது.

***************************************

தருமியின் பதிவிலும் பின்னூட்டத்திலும் விந்து உற்பத்தியாகுமிடம் விரை (TESTICLE) என திரும்பத் திரும்ப சொல்கிறார்.அவரது பதிவில் பின்னூட்டம் இட்டுள்ள அறிவுசீவிகளும் "ஆமா, ஆமா" என்கின்றனர். நவீன மருத்துவமும் குர்ஆனும் வெவ்வேறு நிலைகளைச் சொல்கின்றன.

தாதுவுடன் (SEMEN) பல்வேறு திரவங்களும், தனிமங்களும் கலந்துள்ளது. SEMINAL VESICLES, PROSTATE GLANDS மற்றும் விரைகளில் சுரக்கும் பிற சுரப்பிகளும் கலந்துதான் விந்தாக ( SPERM ) வெளியேற்றப்படுகிறது. தாதுவுடன் Citric acid, prostaglandin, flavin, ascorbic acid, ergothioneine, cholesterol, phospholipids, fibrinolysin, zinc, phosphatase acid, phosphase, hyaluronidase ஆகிய தனிமங்களுடன் கலந்து விந்தணு fallopian tube நோக்கி நீந்திச் செல்கிறது. இக்கலவைகள் இல்லாமல் பயணிக்கும் கோடிக்கணக்கான விந்தணுக்களால் மட்டும் ஆரோக்கியமான கருவாக்கம் சாத்தியமில்லை என்று நவீன மருத்துவம் சொல்கிறது.

இருதொடைகளுக்கு இடைப்பட்ட உறுப்பிலிருந்து வெளியாகும் விந்தணுவைச் சொல்லாமல், முதுகுத் தண்டுக்கும் விலா எலும்புக்கும் இடைப்பட்ட பல்வேறு சுரப்பிகளிலிருந்து உருவாகும் தாது (SEMEN) குறித்து இவ்வசனத்தில் சொல்லப்பட்டு உள்ளது.
"எல்லாம் தெரிந்த கடவுள் அறிவியல் உண்மைகளைச் சொல்ல வேண்டுமென்றால், 2 + 2 = 4 என்றல்லவா சொல்ல வேண்டும். விந்திலிருந்து மனிதன் பிறக்கிறான் என்று சொல்வதை விட இடுப்பிலிருந்து வரும் திரவத்தால் மனிதன் பிறக்கிறான் என்பது என்ன அறிவியல்?"
என்று தருமி கேட்கிறார். தான் விரும்பும் சொல்லை - அது பிழையாக இருந்தாலும் - தான் நம்பாத கடவுள் சொல்ல வேண்டும் என்று கட்டாயப் படுத்துவது அவருக்கே ஓவரா தெரியவில்லை? ;-)

மேலும் முதுகுத் தண்டுக்கும் விந்துக்கும் என்ன தொடர்பென்றும் தருமி கேட்டுள்ளார். முதுகுத்தண்டில் ஏற்படும் பாதிப்புகளால் ஆணின் தாது விருத்தி/விந்து செலுத்தும் வீரியம் குறையும் என்று முதுகுத் தண்டுக்கும் விந்துக்கும் உள்ளத் தொடர்பை தற்கால மருத்துவக் குறிப்புகள் சொல்கின்றன. (Spinal Cord Injury (SCI) என்று கூகிலிட்டால் தொடர்புடைய சுட்டிகள் கிடைக்கும்.)

கருவின் பல்வேறு நிலைகள் குறித்து விளக்கும்போது வெவ்வேறு சொற்களைக் குர்ஆன் ஆளுகின்றது. காட்டாக,
"ஒவ்வொருவனுக்கும் அவன் மனிதனாக (பிறப்பெடுக்கு) முன்னர் ஒரு கால இடைவெளி சென்றுவிடவில்லையா? அக்காலகட்டத்தில் அவன் இன்ன ஒன்றாய் இருந்தான் என்று குறிப்பிட்டுக் கூறவியலா நிலையில் இருக்கவில்லையா?
(பின்னர், ஆண்-பெண்ணின்) கலப்பான விந்திலிருந்து மனிதனைத் திண்ணமாக நாமே படைத்தோம் ..." அல் குர்ஆன் 76:1-2.

ஆணின் விந்தும் பெண்ணின் சினைமுட்டையும் கலந்துதான் கரு உருவாகிறது என்பது அண்மைக்காலக் கண்டுபிடிப்புத்தான்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இஸ்லாம்-1இல் இவர் எடுத்து வைத்த கேள்விகள் கேலிக்கூத்தானவை.
(சில ஐயங்கள்:)
ஒரே கடவுளால் தரப்பட்ட சட்டங்கள் எப்படி வித்தியாசமாகின?
பழைய ஏற்பாட்டில் கண்ணுக்கு கண்; பல்லுக்குப் பல் என்ற பழி வாங்குதல் எப்படி கிறித்துவர்களின் - ஈசாவின் - சட்டத்தில் இடது கன்னத்தில் அடித்தால் வலது கன்னத்தைக் காட்டு என்றாயிற்று? பின் எப்படி குரானில் மறுபடியும் பழைய நிலை வந்தது?
600 வருஷத்துக்கு முன்னால் கடவுள் ஈசா நபியிடம் 'வாளை உன் உறையில் போடு; ஏனெனில் வாளை எடுத்தவன் வாளால் சாவான்' என்று அவரைச் சொல்லும்படி அறிவுறுத்தி விட்டு, அதன் பின் 600 வருஷம் கழித்து பல போர்க்களங்களை தன் நபியைக் காணச் செய்கிறார். ஏனிப்படி 600 வருஷத்தில் ஜெகோவாவிடம் / அல்லாவிடம் ஒரு மாற்றம்?
"ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தைத் திருப்பிக் காட்டு என்று நாம் ஈஸாவுக்குக் கட்டளை இட்டிருந்தோம்" என்றும் "வாளை எடுத்தவன் வாளால் சாவான்" என்றும் குர்ஆனில் இருந்தால்தான் இஸ்லாமியக் கடவுள் மாற்றி மாற்றிப் பேசுகிறார் எனப் பொருள் கொள்ள முடியும். நினைத்த நேரத்தில் நினத்தவர்கள் நிறையப் பேரால் திருத்தப் பட்டு, நடைமுறையில் உள்ள புதிய ஏற்பாடு என்பது அல்லாஹ்வின் வார்த்தைகள் என்று யார் தருமிக்குச் சொல்லிக் கொடுத்தது? என்று புரியவில்லை.

எல்லாவற்றையும் படிப்பது நல்லதுதான். ஆனால், ஒன்றோடு ஒன்று குழப்பிக் கொள்ளக் கூடாது; குழம்பக் கூடாது; குழப்பம் விளைவிக்கக் கூடாது.

இஸ்லாத்தைப் புறந்தள்ளப் புதிதாக ஒரு காரணம் கண்டு பிடித்திருக்கிறார் தருமி:
இசையின் ஆரம்பமே கடவுளோடு இணைந்தது என்பார்கள். கோவிலில் பாடப் பட்டு, பின்பு அரசர்களின் அரண்மனைக்குள் நுழைந்து, பின் மக்களிடம் இசை வந்ததென்பார்கள். Divine music -> Chamber music -> Popular music. ஆனால், இங்கு கடவுளே இசையை மறுக்கிறது; வெறுக்கிறது! பக்தியை இசையால் நிரப்பிய நம் சமூகத்தில் இந்தக் கருத்து ஒரு ஆச்சரியத்தைத்தான் அளிக்கிறது. பாடலும், இசையும், ஒவியமும் இச்சை தூண்டும் கருவிகளா? இது வெறும் ஆச்சரியம் மட்டுமல்ல; நம்ப முடியாத ஒன்று. நிச்சயமாக இது ஒரு தனிமனிதனின் (முகமது) விருப்பு வெறுப்பாக இருக்க முடியுமே ஒழிய சர்வ நிச்சயமாக 'ஒரு கடவுளின்' விருப்பு வெறுப்பாக இருக்கவே முடியாது. இஸ்லாமைப் புறந்தள்ள இந்த ஒரு காரணம்கூட போதும்.
"என்பார்கள்" என்பவர்கள் யார்? என்பதைக் கடைசிவரை தருமி சொல்லவில்லை. இசை என்பது மனிதனைத் தன்னிலை மறக்கச் செய்வது. தன்னிலை மறக்கும் மயக்கும் எதுவும் இஸ்லாத்தில் இடம்பெறவியலாது. மற்றபடி இச்சை தூண்டுவது என்று இஸ்லாம் கூறுவதாக தருமி ஏதோதோ எழுதுகிறார்.

தருமிக்கு இஸ்லாம் வெறுத்துப் போனதுக்கு அவர் கூறிய முதல் காரணம் விசித்திரமானது. "இஸ்லாத்தில் முதல் பெண்ணுக்குப் பெயரே இல்லை" என்று தருமி தொடக்கத்தில் வெறுத்துப் போயிருந்தார்.அது தொடர்பாகப் பகுத்தறிவாளன் எனும் பதிவர் 9 கேள்விகளை தருமிக்குப் பின்னூட்டத்தில் வைத்ததாகவும் அந்தப் பின்னூட்டத்தைத் தருமி முடக்கி விட்டதாகவும் பதிவொன்றில் அவர் சலித்துக் கொண்டது இப்போது நினைவுக்கு வருகிறது.
Click here to bookmark this link.Channel Image02:01 அப்சல் குருவுக்கு ஒரு நீதி - அத்வானிக்கு ஒரு நீதியா? எதிரொலி
பாகிஸ்தான் தீவிரவாதிகள் நமது நாடாளுமன்ற வளாகத்தில் தாக்குதல் நடத்தியபோது நமது பாதுகாப்பு வீரர்கள் உட்பட தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டனர். ஆளும் கட்சியாக பாஜகவும் காங்கிரஸ் எதிர்க்கட்சி வரிசையிலும் இருந்தபோது 'நாட்டையே உலுக்கிய' இச்செயல் பரபரப்பாகப் பேசப்பட்டது.

தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டதால் அநீதியிழைக்கப்பட்ட பாதுகாப்புப் படையினர் குடும்பத்திற்கு நீதிவழங்கவும் வழக்கை மேற்கொண்டு நடத்தக் குற்றவாளி தேவை என்பதால் முன்னாள் காஷ்மீர் போராளிகளின் கூட்டாளியும் பிற்கால ராணுவ உளவாளியுமான 'அப்சல் குரு' வழக்கின் பிரதானக் குற்றவாளியாக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு நாட்டுமக்களின் கூட்டுமனசாட்சியைக் கருத்தில் கொண்டு மரணதண்டனை விதிக்கப்பட்டார்.

உயிர்பிழைப்பதற்கான அத்தனை வாசல்களும் அடைக்கப்பட்ட பிறகு இனி யாரிடமும் மேமுறையீடு செய்யப்போவதில்லை என்று இருந்தாலும், மனித உரிமை ஆர்வலர்களால் அவரின் மரணதண்டனை இந்திய ஜனாதிபதியின் கருணை மணுவுக்காகக் காத்திருக்கிறது.

நாடாளுமன்றத் தாக்குதலை நடத்தியவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதிலும், பாதிக்கப்பட்ட பாதுகாப்புப்படையினர் குடும்பத்திற்கு நீதியும் நிவாரணமும் வழங்கப்பட வேண்டும் என்பதிலும் யாருக்கும் ஆட்சேபனை இல்லை.

நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் நாட்டு மக்களின் கூட்டு மனசாட்சியைத் திருப்தி செய்வதற்காக அப்சல் குருவுக்கு மரண தண்டனை வழங்குவதாகத் தீர்ப்பளித்தார். ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட போதும், கிரகாம் ஸ்டெயின் உயிருடன் கொளுத்தப்பட்டபோதும், ஒரிசா கந்தன்மால் கிறிஸ்தவர்களின் உடமைகள், உயிர்கள் நாசமாக்கப்பட்ட போதும் விழிக்காத 'கூட்டு மனசாட்சி' அப்சல்குரு விசயத்தில் மட்டும் விழித்துக்கொண்டதற்குக் காரணம் என்னவாக இருக்கும்?

நாடாளுமன்றம் என்பது அரசியல்வாதிகளின் புனிதத் தளமல்ல. ஜனநாயகப் போர்வையில் சர்வாதிகாரிகள் சட்டம் இயற்றும் சபையாகவோ அல்லது ஆளுங்கட்சியின் அடாவடிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் அவையாகவுமே இருந்து வருகிறது. மக்களுக்குச் சேவையாற்றப்போகிறோம் என்று சொல்லி கேள்விநேரத்தைப் புறக்கணித்த புன்னியவான்கள் புழங்குமிடம்தான் நமது நாடாளுமன்றம்! அம்பானிகளைப் பகைத்துக் கொள்ளாத வரையில் மட்டுமே ஆளுங்கட்சி அல்லது எதிர்கட்சி வரிசையில் அமரமுடியும்.


1992 டிசம்பர்-6 அன்று காவிக் கயவர்களால் திட்டமிட்டு தகர்க்கப்பட்ட பாப்ரி மஸ்ஜித் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தளம் என்பதோடு இந்திய வரலாற்றின் பாரம்பர்யச் சின்னமும் ஆகும். பாப்ரி மஸ்ஜிதையும் இடித்து விட்டு நாடு முழுவதும் முஸ்லிம்களைக் கருவருத்தக் கூட்டத்திற்கு முறையே பிரதமர், துணைப் பிரதமர் மற்றும் கேபினட் அமைச்சரகங்களைத் தாரை வார்த்தோம்.

தாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்குச் சமம் - நூறு குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு அப்பாவி தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதெல்லாம் வெறும் வாய்ஜாலம் தானா? 17 ஆண்டுகளாக கிட்டத்தட்ட 10 கோடி செலவிட்டு, இதைச் சாக்காக வைத்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நாடாளுமன்ற நேரங்களை வீணடித்து, அவையை முடக்கி, ஒத்திவைத்து என பொன்னான நாடாளுமன்ற நேரங்களை வீணடித்து, சென்றவாரம் தாக்கல்செய்யப்பட்ட லிபரான் கமிசன் அறிக்கையையும் ஏனைய கமிசன் அறிக்கைகளைப்போல் கிடப்பில் போடப்படுமென்றே தெரிகிறது.

லிபரான் கமிசன் அறிக்கையின்படி யாருக்கும் தண்டனைகள் பரிந்துரை செய்யப்படாத காரணத்தால் 68 குற்றவாளிகளில் எவனையும் தண்டிக்கப் போவதில்லையென சொல்லப்படுகிறது.எனில்,என்ன மயிருக்காக இத்தனை களேபரங்கள் நடத்தினர்? என்று சட்டத்தையும் இறையான்மையையும் மதிக்கும் சாமான்யரின் மனதில் கேள்வி எழுகின்றது.

அப்சல் குருவுக்கு மரண தண்டனை வழங்கிய கூட்டு/குருட்டு மனசாட்சி அத்வானி உள்ளிட்ட 68 குற்றவாளிகளுக்காவும் விழித்துக்கொண்டு என்ன தண்டனையை வழங்கப்போகிறது? நாடாளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளிடமிருந்து வந்த செல்போன்அழைப்பிற்காக அப்சல் குருவுக்கு மரண தண்டனை வழங்கியது சரியென்றால், பாப்ரி மஸ்ஜிதை இடிக்கும் நோக்கத்துடன் மேடைபோட்டு ஒலிபெருக்கியில் அழைத்த சங்பரிவாரக் கும்பலைச் சர்ந்த 68 பேர் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்படும்? யார் வழங்குவார்? என்பதே தொக்கி நிற்கும் கேள்வி!

Fri 04

Click here to bookmark this link.Channel Image17:29 [பாடம்-78] பாகப்பிரிவினைச் சட்டங்கள். முக்தஸர் ஸஹீஹுல் புகாரி
(இறந்தவருக்கு) மகன் (உயிருடன்) இல்லாதபோது மகனின் மகனுக்கு (பேரனுக்கு)க் கிடைக்கும் சொத்துரிமை.

2153. (பாகப்பிரிவினை தொடர்பாகக் குர்ஆனில் நிர்ணயிக்கப்பெற்றுள்ள) பாகங்களை (முதலில்) அவற்றுக்கு உரியவர்களிடம் சேர்த்துவிடுங்கள். பிறகு எஞ்சியிருப்பது இறந்தவரின்) மிக நெருக்கமான (உறவினரான) ஆணுக்கு உரியதாகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

(இறந்தவருக்கு) மகள் இருக்கும்போது மகனுடைய மகளுக்கு (பேத்திக்கு)க் கிடைக்கும் சொத்துரிமை.

2154. ஹுஸைல் இப்னு ஷுரஹ்பீல்(ரஹ்) அவர்கள் அறிவித்தார் : அபூ மூஸா(ரலி) அவர்களிடம், (இறந்த ஒருவருக்கு) மகள், மகனுடைய மகள், சகோதரி ஆகியோர் (இருந்தால், அவர்களுக்குக் கிடைக்கும் சொத்துரிமை) குறித்து வினவப்பட்டது. அதற்கு அவர்கள் 'மகளுக்கு (மொத்தச் சொத்தில்) பாதியும் சகோதரிக்கு (மீதி)ப் பாதியும் கிடையாது)'' என்று கூறிவிட்டு, '(வேண்டுமானால்,) இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் சென்று (கேட்டுப்) பாருங்கள். அன்னாரும் என் (கருத்தி)னையே பிரதிபலிப்பார்கள்'' என்றார்கள். எனவே, இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் (சென்று) அபூ மூஸா(ரலி) அவர்களின் கூற்றைத் தெரிவித்து (இது குறித்து விளக்கம்) கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'இவ்வாறு (மகனின் மகளுக்கு சொத்தில் பங்கு இல்லை என்று) நானும் சொன்னால் நிச்சயம் நான் வழி தவறியவனாகி விடுவேன்; நான் நேர்வழியடைந்தவர்களில் ஒருவனாக இருக்கமாட்டேன். இந்த விஷயத்தில் நபி(ஸல்) அவர்கள் அளித்த தீர்ப்பையே நானும் அளிக்கிறேன்: மகளுக்குப் பாதியும் மகனின் மகளுக்கு ஆறில் ஒரு பாகமும் வழங்கப்படவேண்டும். அப்போதுதான் மூன்றில் இரண்டு பாகங்கள் நிறைவாகும். எஞ்சியிருப்பது சகோதரிக்கு உரியதாகும்'' என்றார்கள். பின்னர் அபூ மூஸா(ரலி) அவர்களிடம் சென்று இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் சொன்னதைத் தெரிவித்தோம். அப்போது, 'இந்தப் பேரறிஞர் (இப்னு மஸ்வூத்(ரலி) உங்களிடையே இருக்கும் வரை என்னிடம் (விளக்கம்) கேட்காதீர்கள்'' என்று (புகழ்ந்து) சொன்னார்கள்.

ஒரு கூட்டத்தாரால் விடுதலை செய்யப் பட்ட அடிமை அவர்களைச் சேர்ந்தவனே. ஒரு கூட்டத்தாரின் சகோதரி மகன் அவர்களைச் சேர்ந்தவனே!

2155. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் : 'ஒரு கூட்டத்தாரால் விடுதலை செய்யப்பட்ட அடிமை அவர்களில் உள்ளவனே' என்றோ, 'இதைப் போன்றோ' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

வேறொருவரை தன் தந்தை என வாதிடுகிறவன்.

2157. ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்: ''தம் தந்தை அல்லாத ஒருவரை அவர் தம் தந்தை அல்ல என்று தெரிந்து கொண்டே - தந்தை என்று வாதிடுகிறவரின் மீது சொர்க்கம் தடை செய்யப்பட்டதாகி விடும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன். (மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர்) உபூஉஸ்மான் அந்நஹ்தீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த ஹதீஸை நான் அபூ பக்ரா(ரலி) அவர்களிடம் குறிப்பிட்டேன். அப்போது அவர்கள் 'இதை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து என் காதுகள் செவியேற்றன. என் இதயம் மனனமிட்டுக் கொண்டது'' என்றார்கள்.

2158. 'உங்கள் தந்தையரை நீங்கள் வெறுக்காதீர்கள். தம் தந்தையை வெறுத்து (வேறு யாரோ ஒருவரை தம் தந்தை என்று கூறி) விடுகிறவர் நன்றி கொன்றவராவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Click here to bookmark this link.Channel Image09:52 கப்பல் படையில் களமிறங்கி ஷஹீதான வீரப்பெண்மணி! ஸஹாபாக்களின் வாழ்வினிலே...
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்கள்;

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உம்மு ஹராம் பின்த்து மில்ஹான்(ரலி) அவர்களின் வீட்டிற்குச் செல்பவராக இருந்தார்கள். அப்போதெல்லாம் அவர் நபி(ஸல்) அவர்களுக்கு உணவு தருவது வழக்கம். உம்மு ஹராம்(ரலி), உபாதா இப்னு ஸாமித்(ரலி) அவர்களின் மனைவியாக இருந்தார்கள். (இவ்வாறே ஒருமுறை) நபி(ஸல்) அவர்கள் உம்மு ஹராம்(ரலி) அவர்களிடம் சென்றார்கள். அவர் நபி(ஸல்) அவர்களுக்கு உணவு கொடுத்துவிட்டு அவர்களின் தலையில் பேன் பார்க்கத் தொடங்கினார்கள். அப்படியே நபி(ஸல்) அவர்கள் தூங்கிவிட்டார்கள். பிறகு, சிரித்துக் கொண்டே கண் விழித்தார்கள். உம்மு ஹராம்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! ஏன் (இப்படிச்) சிரிக்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'என் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் சிலர், இறைவழியில் அறப்போர் வீரர்களாக எனக்கு (கனவில்) எடுத்துக் காட்டப்பட்டார்கள். அவர்கள் இந்தக் கடலின் முதுகில் கட்டில்களில் (சாய்ந்து) அமர்ந்திருக்கும் மன்னர்களாக அல்லது கட்டில்களில் அமர்ந்திருக்கும் மன்னர்களைப் போல்... ஏறிச் செல்கிறார்கள்" என்று பதிலளித்தார்கள். அதற்கு உம்மு ஹராம்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! அவர்களில் ஒருத்தியாக என்னை ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்று கூறினார்கள். எனவே, இறைத்தூதர்(ரலி) அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். பிறகு, தம் தலையை(த் தலையணையில்) வைத்(து உறங்க ஆரம்பித்)தார்கள்; பிறகு, சிரித்தபடியே விழித்தெழுந்தார்கள். அப்போது உம்மு ஹராம்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! ஏன் சிரிக்கிறீர்கள்" என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'என் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் சிலர், இறைவழியில் அறப்போர் புரிபவர்களாக எனக்கு எடுத்துக் காட்டப்பட்டனர்.." என்று முன்பு போன்றே கூறினார்கள். உம்மு ஹராம்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! அவர்களில் ஒருத்தியாக என்னை ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் (அறப்போருக்காகக் கடலில்) முதன்முதலாகப் பயணிப்பவர்களில் ஒருவராக இருப்பீர்கள்" என்று கூறினார்கள். அவ்வாறே, முஆவியா இப்னு அபீ சுஃப்யான்(ரலி) அவர்களின் (ஆட்சிக்) காலத்தில் (சைப்ரஸ் தீவின் மீது அறப்போர் புரியச் சென்றவர்களுடன் உம்மு ஹராம்(ரலி) அவர்களும் கடல் பயணம் செய்து கடலிலிருந்து (தீவின் ஒரு பகுதிக்குப்) புறப்பட்டபோது தம் வாகனத்திலிருந்து விழுந்து மரணமடைந்தார்கள். [நூல்;புஹாரி]


வீரப்பெண்மணி உம்மு ஹராம்[ரலி] அவர்கள், மற்றொரு வீரப் பெண்மணியான உம்மு சுலைம்[ரலி] அவர்களின் சகோதரியும், நபி[ஸல்] அவர்களின் ஊழியரான அனஸ் இப்னு மாலிக்[ரலி] அவர்களின் சிற்றன்னையும் ஆவார். மதீனாவில் உள்ள தனது தோழர்களின் வீடுகளில் நபியவர்கள் அதிகமதிகம் செல்லக்கூடிய வீடு இந்த இரு சகோதரிகளின் வீடுகள்தான். அந்த வகையில் உம்மு ஹராம்[ரலி] அவர்களும், உம்மு ஸுலைம்[ரலி] அவர்களும் நபியவர்கள் தங்கள் வீட்டிற்கு வந்துவிட்டால், அவர்களை இன்முகத்துடன் வரவேற்று உணவளித்து மகிழ்வார்கள். அப்படிப்பட்ட நிலையில்தான் ஒருமுறை தனது உம்மத்தினரில் கடல் மார்க்கமாக ஒரு சாரார் அறப்போருக்காக செல்வார்கள் என்ற செய்தியை நபியவர்கள் சொன்ன மாத்திரமே உம்மு ஹராம்[ரலி] அவர்கள்,nabi
[sal] அவர்களே! அவர்களில் ஒருத்தியாக என்னை ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்று கூறியதோடு, நபியவர்களின் பிரார்த்தனையை அல்லாஹ் அங்கீகரித்ததன் விளைவாக, உம்மு ஹராம்[ரலி] அவர்கள் அந்த போர் முடிந்து திரும்பும்போது கீழே விழுந்து ஷஹீத் எனும் பேற்றை அடைகிறார்கள் என்றால் நாம் அவர்களின் வீரத்தையும், இறையச்சத்தஹியும், சொர்க்கத்தின் மீது அவர்கள் கொண்ட நேசத்தையும் என்னும்போது மெய்சிலிர்த்து போகிறோம். இன்றைய பெண்களை எடுத்து பார்த்தோமானால், நாம் ஒரு பொழுதுபோக்கு இடத்திற்கோ, அல்லது ஒரு இன்ப சுற்றுலாவுக்கோ செல்கிறோம் என்றால் ஏங்க! நானும் ஒங்க கூட வருகிறேன் என்று சொல்வார்கள். அதே நேரத்தில் ஒரு போர்களத்திற்கு செல்கிறோம் என்றால், அவர்கள் வராததோடு நம்மையும் போகவிடாமல் தடுப்பார்கள். போகாதே போகாதே என்கணவா! பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன் என்ற ரீதியில் செண்டிமெண்டை காட்டி தடுக்க முயற்சிப்பார்கள். இதுதான் இன்றைய பெண்களின் நிலை. [விதி விலக்காக சிலர் இருக்கலாம்] ஆனால் சஹாபிப் பெண்களுக்கோ தமது உயிரோ, செல்வங்களோ, இந்த உலகின் கவர்ச்சியோ அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. மாறாக, சுவனத்தை அடைவது ஒன்றே அவர்களின் ஒரே இலக்காக இருந்துள்ளது எனபதற்கு உம்மு ஹராம்[ரலி] எனற உயிர்த் தியாகி மிக சிறந்த உதாரணமாக வரலாற்றில் மிளிர்கிறார்.
அல்லாஹ் உம்மு ஹராம்[ரலி] அவர்களை போன்று மார்க்கத்திற்காக உயிர் துறந்து மறுமையில் அவர்களை சுவனத்தில் நாம் பார்ப்பதற்கு நமக்கு நல்லருள் பாலிப்பானாக!

குறிப்பு; மேற்கண்ட ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது. புஹாரி மட்டுமன்றி முஸ்லிமிலும் உள்ளது. ஆனாலும் இந்த ஹதீஸை நவீன ஹதீஸ்கலை[?] அறிஞர்கள் மறுக்கிறார்கள். காரணம் உம்மு ஹராம்[ரலி] என்ற அந்நியப் பெண் வீட்டிற்கு நபியவர்கள் எப்படி போயிருக்கமுடியும்.? ஒரு அந்நிய பெண் பேன் பார்க்கும் அளவுக்கு நபியவர்கள் எப்படி நடந்திருப்பார்கள்.? உம்மு ஹராம்[ரலி] அவர்களின் கனவர் வீட்டில் இல்லாதபோது நபியவர்கள் எப்படி சென்றிருப்பார்கள்..? எனவே இது நபியவர்களின் போதனைக்கும், அவர்களின் மகத்தான குணத்திற்கும் எதிராக உள்ள்ளது என்று கூறி, இந்த ஹதீஸை குப்பை கூடைக்கு அனுப்பி விட்டார்கள். ஒரு அந்நியப் பெண்ணின் வீட்டிற்கு செல்லக் கூடாது என்பது இவர்களுக்கு தெரிந்துள்ளது. ஆனால் பாவம் நபியவர்களுக்கு தெரியவில்லை. அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் சொல்லை விடநமது சிந்தனைதான் முக்கியம் என்றால், குளிப்பு கடமையான நிலையில் தண்ணீர் கிடைக்கவில்லையானால், தயம்மும் செய்யலாம் என்று மார்க்கம் சொல்கிறது. ஏற்கனவே ஸ்கலிதம் எர்ப்படடதால்தான் தான் குளிப்பு கடமையாகி உள்ளது. அந்த அசுத்ததோடு, தயம்மும் என்ற பெயரில் முகத்திலும் கைகளிலும் மண்ணை தடவி கூட கொஞ்சம் அசுத்தமாவது அறிவுக்கு பொருந்துகிறதா..? எனவே இது தொடர்பான வசனங்களையும், ஹதீஸ்களையும் குப்பை கூடைக்கு அனுப்புவோமா..? [அல்லாஹ் மன்னிப்பானாக].

இறைவா! எங்களுக்கு நேர்வழி காட்டியபின் தடம்புரள செய்துவிடாதே!
Click here to bookmark this link.Channel Image06:21 'விரை'ப்பான கேள்விகளும் விடாத பதில்களும்... எதிரொலி
குர்ஆன் - அறிவுக்கும் அறிவியலுக்கும் ஏற்ற எக்காலத்திற்கும் பொருந்தும் ஓர் வாழ்வியல் நெறிநூல்! இது அறிவியல் நூலல்ல; ஆனாலும் அறிவியலையும் உள்ளடக்கியது. குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள அனேகக் குறிப்புகள் தற்கால ஆய்வுகளுடன் / நிரூபனங்களுடன் 100% ஒத்துப்போகிறது. எனவேதான் "இதில் முரண்பாடுகளிருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம்" என்று ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் சவால் விடுகிறது. உலகில் வேறு எந்தநூலும், கொள்கையும் இவ்வாறு சவால் விட்டதாக அல்லது அத்தகைய சவால்களை எதிர்கொண்டு நிலைத்திருப்பதாகவோ அறியமுடியவில்லை.

நிற்க,

திருவாளர் தருமி "மதங்கள்" என்ற தலைப்பில் "இஸ்லாம்-2" குறித்து எழுதி இருந்தார். மனிதவிந்து உற்பத்தியாகுமிடம் குறித்து விந்தையான பதிவு அது! குர்ஆன் வசனம் 86:05-07 ஐ மேற்கோள் காட்டி எழுதி இருந்தார்.

5. எனவே, மனிதன் எதிலிருந்து தான் படைக்கப்பட்டுள்ளான் என்பதை (நோட்டமிட்டு)ப் பார்ப்பானாக! 6. குதித்து வெளியாகும் நீரினால் அவன் படைக்கப்பட்டுள்ளான் 7. (ஆணுடைய) முதுகுத் தண்டிற்கும், (பெண்ணுடைய) நெஞ்செலும்புகளுக்குமிடையில் இருந்து அது வெளியாகிறது.

அவரின் கேள்வி என்னவென்றால், "மனிதன் விந்திலிருந்து படைக்கப் பட்டான்" என்று நேரடியாகச் சொல்லாமல் "முதுகுத் தண்டிற்கும், விலா எழும்புக்கும் இடையில் இருந்து குதித்து வெளியாகும் நீரினால் படைக்கப்பட்டுள்ளான்" என்று ஏன் சொல்ல வேண்டும்? என்றதோடு விந்துக்கும் முதுகுத் தண்டிற்கும் என்ன தொடர்போ? என்று அறிவியல்(!) பூர்வமாகக் கேள்வி கேட்டிருந்தார்! அவரின் பதிவிலிருந்தும் பின்னூட்டங்களிலிருந்தும் திரும்பத் திரும்ப தெரிவது, இஸ்லாம் குறித்த அரைகுறை தகவல்களுடன் அறிவியலைப் பற்றிய அறியாமையும்தான்!

இது தருமியின் புதிய ஆய்வொன்றுமில்லை. ஏற்கனவே அவர் வேறொரு வசனத்தை எடுத்தெழுதி, அதற்கு விளக்கம் சொல்லப் பட்ட கருதான்:

படைப்புக்கொள்கை: இஸ்லாமில் மனிதன் உறைந்த ரத்தத்திலிருந்து உண்டாக்கப் பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. அது யாருடைய ரத்தம் ? மனிதன் படைக்கப் படுவதற்கு முன் எங்கிருந்து ரத்தம் வந்தது? ஒருவேளை கடவுளின் ரத்தமாக இருக்குமோ? - தருமி


முதல் மனிதனின் படைப்பையும் அவன் சந்ததியினரின் பிறப்பையும் குழப்பிக் கொண்டுள்ளீர்கள் . முதல் மனிதன் இறைவனின் அற்புதங்களால் களி மண்ணின் மூலச்சத்திலிருந்து படைக்கப்பட்டார் (6:2, 7:12, 15:33, 32:7, 35:11, 55:14) என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடு. மனித வளர்ச்சி நிலைகளைப் பற்றி எந்த வேத நூலும் விவரிக்காத வகையில் குர் ஆன் விவரிக்கிறது, பார்க்க: 23:12,13 &14).
இஸ்லாம் சொல்லும் படைப்புக் கொள்கை தவறு என்பது உங்கள் வாதமானால், நீங்களே சொல்லுங்கள் மனிதன் எதிலிருந்து தோன்றினான்? பகுத்தறிவு பெற்ற குரங்குகள்தான் தற்கால மனிதனின் மூதாதையர் என்றால், இன்னும் சில குரங்குகள் ஏன் பகுத்தறிவடைந்து மனிதனாகவில்லை?

குர்ஆன் வசனம் 86:07இல் ஒரு குழந்தையின் உருவாக்கத்தில் உள்ள ஒரு பகுதி மட்டும் சொல்லப் படுகிறது. يَخْرُجُ مِن بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ என்பதற்கு விலாஎலும்புகளுக்கும் முதுகுத் தண்டுக்கும் இடையிலிருந்து வெளியேறும் திரவம், கருவுக்கான பகுதி மூலம் என்று சொல்கிறது. இங்குக் கேள்வி என்னவென்றால் விந்து (مَنِيٍّ/SPERM) நேரடியாகச் சொல்லாமல் ஏன் திரவம் (مَاءٍ/FLUID) என்று மறைமுகமாகச் சொல்ல வேண்டும்? என்பதே!

குர்ஆனின் இன்னொரு வசனத்தில் (075:037) "கருவறைக்குள் (செலுத்தப்பட்ட) விந்தின் ஒரு துளியாக மனிதன் (مَنِيٍّ) இருக்கவில்லையா?" என்று கேட்கும் குர்ஆன், வசனம் 86:06 இல் திரவம் என்று பொதுமையில் குறிப்பிடுகிறது!

இரண்டும் வெவ்வேறு வடிவிலானவை / நிலைகளைக் கொண்டவை என்ற வேறுபாடு நன்கு தெரிந்திருப்பதால் வெவ்வேறான சொல்லாடல் கையாளப் பட்டுள்ளது. ஆணிடமிருந்து வெளியாகும் தாது (SEMEN) பல்வேறு சுரப்பிகளைக் கடந்து இறுதியில் விந்தாக (SPERM) மாற்றமடைகிறது.

கருவாக்கத்திற்கு ஆணின் விந்து (SPERM) பகுதி மூலமாகும். அந்த விந்து ஆணின் விரையிலிருந்து உருவாகிறது என்பதும் பொதுவானது. பொதுவான ஒன்றை குர்ஆன் வெவ்வேறு பதங்களில் குறிப்பிடுவதற்கு வேறுபட்ட காரணம் இருக்க வேண்டும். கர்ப்பத்தில் விந்துத்துளியாக இருக்கவில்லையா? என்று கேட்கும் குர்ஆன், விலா எலும்புகளுக்கும் முதுகுத் தண்டுக்கும் இடையிலிருந்து வெளியேற்றப்பட்ட திரவம் என்று வேறுபடுத்துவது எப்படிச் சாத்தியமாயிற்று?

தாது (SEMEN) என்ற விந்தின் (SPERM) மூலப்பொருள் பற்றி நவீன மருத்துவம் விளக்குகிறது. குர்ஆன் வசனம் 86:06ம் இதைத்தான் சொல்கிறது. நுண்ணாடி (MICROSCOPE) மருத்துவ உபகரணங்களும் சாத்தியமில்லாத காலகட்டத்தில் எழுதப்படிக்கத் தெரிந்திராத ஒருவரால் ஒரே விசயத்தை துல்லியமான வெவ்வேறு சொற்களால் விளக்க முடிந்தது?

விந்து (SPERM) ஆணின் விரையிலிருந்து உருவாகிறது என்று பொதுவாக நம்பப்பட்ட காலத்தில் (சமீபகாலம் வரையிலும்கூட) எல்லோரையும்போல் இருகால்களுக்கு இடைப்பட்ட உறுப்பிலிருந்து விந்து வெளியாகிறது என்று சொல்லாமல் "விலா எலும்புக்கும் முதுகுத் தண்டுக்கும் இடையிருந்து உருவாகும் 'திரவம்' என்று துல்லியமாக வேறுபடுத்திச் சொல்வதன் மூலம் படைப்பின் ரகசியங்களை அறிவித்தவன் படைத்தோன் அல்லாஹ் என்பது இன்னொரு முறை உறுதியாகிறது.

***************************************

தருமியின் பதிவிலும் பின்னூட்டத்திலும் விந்து உற்பத்தியாகுமிடம் விரை (TESTICLE) என திரும்பத் திரும்ப சொல்கிறார்.அவரது பதிவில் பின்னூட்ட் இட்டுள்ள அறிவுசீவிகளும் "ஆமா, ஆமா" என்கின்றனர். நவீன மருத்துவமும் குர்ஆனும் வெவ்வேறு நிலைகளைச் சொல்கின்றன.

தாதுவுடன் (SEMEN) பல்வேறு திரவங்களும், தனிமங்களும் கலந்துள்ளது. SEMINAL VESICLES, PROSTATE GLANDS மற்றும் விரைகளில் சுரக்கும் பிற சுரப்பிகளும் கலந்துதான் விந்தாக (SPERM) வெளியேற்றப்படுகிறது. தாதுவுடன் Citric acid, prostaglandin, flavin, ascorbic acid, ergothioneine, cholesterol, phospholipids, fibrinolysin, zinc, phosphatase acid, phosphase, hyaluronidase ஆகிய தனிமங்களுடன் கலந்து விந்தணு fallopian tube நோக்கி நீந்திச் செல்கிறது. இக்கலவைகள் இல்லாமல் பயணிக்கும் கோடிக்கணக்கான விந்தணுக்களால் மட்டும் ஆரோக்கியமான கருவாக்கம் சாத்தியமில்லை என்று நவீன மருத்துவம் சொல்கிறது.

இருதொடைகளுக்கு இடைப்பட்ட உறுப்பிலிருந்து வெளியாகும் விந்தணுவைச் சொல்லாமல், முதுகுத் தண்டுக்கும் விலா எலும்புக்கும் இடைப்பட்ட பல்வேறு சுரப்பிகளிலிருந்து உருவாகும் தாது (SEMEN) குறித்து இவ்வசனத்தில் சொல்லப்பட்டு உள்ளது.

"எல்லாம் தெரிந்த" கடவுள் அறிவியல் உண்மைகளைச் சொல்ல வேண்டுமென்றால், 2 + 2 = 4 என்றல்லவா சொல்ல வேண்டும். விந்திலிருந்து மனிதன் பிறக்கிறான் என்று சொல்வதை விட இடுப்பிலிருந்து வரும் திரவத்தால் மனிதன் பிறக்கிறான் என்பது என்ன அறிவியல்?" என்று தருமி கேட்கிறார். தான் விரும்பும் சொல்லை - அது பிழையாக இருந்தாலும் -தான் நம்பாத கடவுள் சொல்ல வேண்டும் என்று கட்டாயப் படுத்துவது அவருக்கே ஓவரா தெரியவில்லை? ;-)

மேலும் முதுகுத் தண்டுக்கும் விந்துக்கும் என்ன தொடர்பென்றும் தருமி கேட்டுள்ளார். முதுகுத்தண்டில் ஏற்படும் பாதிப்புகளால் ஆணின் தாது விருத்தி/விந்து செலுத்தும் வீரியம் குறையும் என்று முதுகுத் தண்டுக்கும் விந்துக்கும் உள்ளத் தொடர்பை தற்கால மருத்துவக் குறிப்புகள் சொல்கின்றன. (Spinal Cord Injury (SCI) என்று கூகிலிட்டால் தொடர்புடைய சுட்டிகள் கிடைக்கும்.)

கருவின் பல்வேறு நிலைகள் குறித்து விளக்கும்போது வெவ்வேறு சொற்களைக் குர்ஆன் ஆளுகின்றது. காட்டாக,

"ஒவ்வொருவனுக்கும் அவன் மனிதனாக (பிறப்பெடுக்கு) முன்னர் ஒரு கால இடைவெளி சென்றுவிடவில்லையா? அக்காலகட்டத்தில் அவன் இன்ன ஒன்றாய் இருந்தான் என்று குறிப்பிட்டுக் கூறவியலா நிலையில் இருக்கவில்லையா?

(பின்னர், ஆண்-பெண்ணின்) கலப்பான விந்திலிருந்து மனிதனைத் திண்ணமாக நாமே படைத்தோம் ..." அல் குர்ஆன் 76:1-2.

ஆணின் விந்தும் பெண்ணின் சினைமுட்டையும் கலந்துதான் கரு உருவாகிறது என்பது அண்மைக்காலக் கண்டுபிடிப்புத்தான்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இஸ்லாம்-1இல் இவர் எடுத்து வைத்த கேள்விகள் கேலிக்கூத்தானவை.

(சில ஐயங்கள்:ஒரே கடவுளால் தரப்பட்ட சட்டங்கள் எப்படி வித்தியாசமாகின?

பழைய ஏற்பாட்டில் கண்ணுக்கு கண்; பல்லுக்குப் பல் என்ற பழி வாங்குதல் எப்படி கிறித்துவர்களின் - ஈசாவின் - சட்டத்தில் இடது கன்னத்தில் அடித்தால் வலது கன்னத்தைக் காட்டு என்றாயிற்று? பின் எப்படி குரானில் மறுபடியும் பழைய நிலை வந்தது?

600 வருஷத்துக்கு முன்னால் கடவுள் ஈசா நபியிடம் 'வாளை உன் உறையில் போடு; ஏனெனில் வாளை எடுத்தவன் வாளால் சாவான்' என்று அவரைச் சொல்லும்படி அறிவுறுத்தி விட்டு, அதன் பின் 600 வருஷம் கழித்து பல போர்க்களங்களை தன் நபியைக் காணச் செய்கிறார். ஏனிப்படி 600 வருஷத்தில் ஜெகோவாவிடம் / அல்லாவிடம் ஒரு மாற்றம்?

"ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தைத் திருப்பிக் காட்டு என்று நாம் ஈஸாவுக்குக் கட்டளை இட்டிருந்தோம்" என்றும் "வாளை எடுத்தவன் வாளால் சாவான்" என்றும் குர்ஆனில் இருந்தால்தான் இஸ்லாமியக் கடவுள் மாற்றி மாற்றிப் பேசுகிறார் எனப் பொருள் கொள்ள முடியும். நினைத்த நேரத்தில் நினத்தவர்கள் நிறையப் பேரால் திருத்தப் பட்டு, நடைமுறையில் உள்ள புதிய ஏற்பாடு என்பது அல்லாஹ்வின் வார்த்தைகள் என்று யார் தருமிக்குச் சொல்லிக் கொடுத்தது? என்று புரியவில்லை.

எல்லாவற்றையும் படிப்பது நல்லதுதான். ஆனால், ஒன்றோடு ஒன்று குழப்பிக் கொள்ளக் கூடாது; குழம்பக் கூடாது; குழப்பம் விளைவிக்கக் கூடாது.

இஸ்லாத்தைப் புறந்தள்ளப் புதிதாக ஒரு காரணம் கண்டு பிடித்திருக்கிறார் தருமி:

இசையின் ஆரம்பமே கடவுளோடு இணைந்தது என்பார்கள். கோவிலில் பாடப் பட்டு, பின்பு அரசர்களின் அரண்மனைக்குள் நுழைந்து, பின் மக்களிடம் இசை வந்ததென்பார்கள். Divine music -> Chamber music -> Popular music. ஆனால், இங்கு கடவுளே இசையை மறுக்கிறது; வெறுக்கிறது! பக்தியை இசையால் நிரப்பிய நம் சமூகத்தில் இந்தக் கருத்து ஒரு ஆச்சரியத்தைத்தான் அளிக்கிறது. பாடலும், இசையும், ஒவியமும் இச்சை தூண்டும் கருவிகளா? இது வெறும் ஆச்சரியம் மட்டுமல்ல; நம்ப முடியாத ஒன்று. நிச்சயமாக இது ஒரு தனிமனிதனின் (முகமது) விருப்பு வெறுப்பாக இருக்க முடியுமே ஒழிய சர்வ நிச்சயமாக 'ஒரு கடவுளின்' விருப்பு வெறுப்பாக இருக்கவே முடியாது. இஸ்லாமைப் புறந்தள்ள இந்த ஒரு காரணம்கூட போதும்

"என்பார்கள்" என்பவர்கள் யார்? என்பதைக் கடைசிவரை தருமி சொல்லவில்லை. இசை என்பது மனிதனைத் தன்னிலை மறக்கச் செய்வது. தன்னிலை மறக்கும் மயக்கும் எதுவும் இஸ்லாத்தில் இடம்பெறவியலாது.மற்றபடி இச்சை தூண்டுவது என்று இஸ்லாம் கூறுவதாக தருமி ஏதோதோ எழுதுகிறார்.

தருமிக்கு இஸ்லாம் வெறுத்துப் போனதுக்கு அவர் கூறிய முதல் காரணம் விசித்திரமானது. "இஸ்லாத்தில் முதல் பெண்ணுக்குப் பெயரே இல்லை" என்று தருமி தொடக்கத்தில் வெறுத்துப் போயிருந்தார்.அது தொடர்பாகப் பகுத்தறிவாளன் எனும் பதிவர் 9 கேள்விகளை தருமிக்குப் பின்னூட்டத்தில் வைத்ததாகவும் அந்தப் பின்னூட்டத்தைத் தருமி முடக்கி விட்டதாகவும் பதிவொன்றில் அவர் சலித்துக் கொண்டது இப்போது நினைவுக்கு வருகிறது.

வெளிச்சுட்டிகள்:

http://dharumi.blogspot.com/2009/11/354-2.html
http://athusari.blogspot.com/2006/06/blog-post_18.html
http://www.differencebetween.net/science/health/difference-between-sperm-and-semen/
http://www.medterms.com/script/main/art.asp?articlekey=5073
http://medical-dictionary.thefreedictionary.com/Spinal+Cord+Injury
http://en.wikipedia.org/wiki/Embryology
http://www.medindia.net/animation/male_reproductive_system.asp

Thu 03

Click here to bookmark this link.Channel Image04:35 உயரிய பண்புடைய உம்மு ஸுலைம்[ரலி]. ஸஹாபாக்களின் வாழ்வினிலே...
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
நபி[ஸல்] அவர்களின் மதீனா வாழ்வை நாம் படித்துப்பார்த்தால், அவற்றில் பல்வேறு இடங்களில் நபியவர்களோடு தொடர்புடையவர்களாக அபூதல்ஹா[ரலி] -உம்மு ஸுலைம்[ரலி] தம்பதியை நாம் காணலாம். இந்த தம்பதிகளுக்கென்று பல்வேறு சிறப்புகள் உண்டு. இவ்விருவரும் இறைக்கட்டளையை அப்படியே பேனக்கூடியவர்களாக, இறைத்தூதரின் விருப்பத்திற்குரியவர்களாக இருந்துள்ளனர். இவர்களில் உம்மு ஸுலைம்[ரலி] அவர்கள் சீரிய அறிவாற்றலும் மதிநுட்பமும் பொருந்தியவர்களாக திகழ்ந்தார்கள். எப்படிப்பட்ட சோதனையான கட்டமாகிலும் அதை பொறுமையுடன் எதிர்கொண்டு அதை நன்மையாக மாற்றக் கூடியவர்களாக திகழ்ந்துள்ளனர் என்பதற்கு ஒரே ஒரு சான்று;

அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்கள்;
என் தாயார் உம்மு சுலைம் அவர்களின் இரண்டாவது கணவரான) அபூ தல்ஹா(ரலி) அவர்களின் புதல்வர் ஒருவர் நோய்வாய்ப்பட்டு இருந்தார். (ஒரு முறை) அபூ தல்ஹா(ரலி) வெளியே செல்ல அப்போது அந்தப் பையன் இறந்துவிட்டான். அபூ தல்ஹா(ரலி) திரும்பி வந்தபோது 'என் மகன் என்ன ஆனான்?' என்று கேட்டார்கள். (அவரின் துணைவியார்) உம்மு சுலைம் (துக்கத்தை வெளிக்காட்டாமல்), 'அவன் முன்பைவிட நிம்மதியாக இருக்கிறான்' என்று பதிலளித்துவிட்டு, அவர்களுக்கு முன்னால் இரவு உணவை வைத்தார். அபூ தல்ஹா(ரலி) இரவு உணவை அருந்தினார்கள். பிறகு உம்மு சுலைம் அவர்களுடன் (அன்றிரவு) தாம்பத்திய உறவுகொண்டார்கள். உறவு கொண்டு முடித்தபோது, உம்மு சுலைம் அவர்கள் (தம் கணவரிடம்) 'பையனை அடக்கம் செய்(ய ஏற்பாடு செய்)யுங்கள்' என்று கூறினார்கள். விடிந்ததும் அபூ தல்ஹா(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று (நடந்ததைத்) தெரிவித்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இன்றிரவு தாம்பத்திய உறவுகொண்டீர்களா?' எனக் கேட்டார்கள். அபூ தல்ஹா(ரலி), 'ஆம்' என்றார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இறைவா! அவர்களின் இரவில் அவர்கள் இருவருக்கும் சுபிட்சம் வழங்குவாயாக' என்று பிரார்த்தித்தார்கள்.
பின்னர் உம்முசுலைம்(ரலி) ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார்கள். என்னிடம் அபூ தல்ஹா(ரலி), 'குழந்தையை நபி(ஸல்) அவர்களிடம் பத்திரமாகக் கொண்டுசெல்' என்று கூறினார்கள். அவ்வாறே நான் குழந்தையை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டுசென்றேன். என்னிடம் உம்மு சுலைம்(ரலி) பேரீச்சம் பழங்கள் சிலவற்றைக் கொடுத்தனுப்பியிருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் குழந்தையை வாங்கிக்கொண்டு, 'இக்குழந்தையுடன் ஏதேனும் (இனிப்புப்) பொருள் உள்ளதா?' என்று கேட்டார்கள். (அங்கிருந்த) மக்கள் 'ஆம்; பேரீச்சம் பழங்கள் உள்ளன' என்று பதிலளித்தார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் அதை வாங்கி (தம் வாயால்) மென்று பிறகு தம் வாயிலிருந்து அதை எடுத்துக் குழந்தையின் வாயில் வைத்து அதைத் தடவினார்கள். குழந்தைக்கு 'அப்துல்லாஹ்' எனப் பெயர் சூட்டினார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 5470

இந்த பொன்மொழியில் உம்மு ஸுலைம்[ரலி] அவர்களின் செயல்பாடுகள் ஒவ்வொரு முஸ்லிமான ஆணுக்கும்-பெண்ணுக்கும் ஆயிரம் படிப்பினை தரும் விஷயமாகும். பொதுவாகவே ஒருவர் இறந்துவிட்டால் அதிலும் குறிப்பாக தமது பிள்ளை இறந்துவிட்டால் ஆணை விட பெண்கள் அழுது ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்வதில் முன்னிலை வகிப்பதை நாம் நடைமுறையில் பார்க்கிறோம். இங்கே தமது மகன் இறந்தபோது, உம்மு ஸுலைம்[ரலி] அவர்கள் அழுது ஆர்ப்பாட்டம் செய்யவில்லை . முதலாவதாக அல்லாஹ்வின் தீர்ப்பை பொருந்திக் கொள்கிறார்கள். அடுத்து வெளியே சென்றுள்ள கணவன் திரும்பி வந்தவுடன் மகன் இறந்த சோகத்தை மறைத்து கணவனை உபசரிக்கிறார்கள். கணவனோடு இல்லற வாழ்க்கையில் ஈடுபடுகிறார்கள். இந்த விஷயத்தில் கணவனின் மனநிலை அறிந்து செயல்படும் ஒரு சிறந்த மனைவியாக திகழ்ந்துள்ளார்கள். அடுத்து தன் மகன் பற்றி அபூ தல்ஹா[ரலி] அவர்கள் கேட்டபோது, உங்கள் மகன் இறக்கவில்லை என்று சொல்லியிருந்தால் அது பொய்யாகிவிடும் என்பதால், மிகவும் சாதுர்யமாக உண்மையை வேறு வார்த்தையில் அதாவது 'அவன் முன்பைவிட நிம்மதியாக இருக்கிறான்' என்று கூறி, எந்த நிலையிலும் பொய் சொல்லக் கூடாது என்ற மார்க்க கட்டளையை பேணி காத்ததன் மூலம் மிகச்சிறந்த இறையச்சமுடையவராக திகழ்கிறார்கள் . உம்மு ஸுலைம்[ரலி] அவர்களின் இந்த செயல் பற்றி அபூ தல்ஹா[ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றபோது, நபியவர்கள் உம்மு ஸுலைம்[ரலி] அவர்களை கண்டிக்காமல் அவர்களின் செயல்களை அங்கீகரிக்கும் வகையில், 'இறைவா! அவர்களின் இரவில் அவர்கள் இருவருக்கும் சுபிட்சம் வழங்குவாயாக' என்று பிரார்த்திக்கிறார்கள் என்றால் உம்மு ஸுலைம்[ரலி] அவர்கள் எத்தகைய சிறப்புடையவர்கள் என்று விளங்கிக்கொள்ளலாம்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' அல்லாஹ் கூறினான்: இறைநம்பிக்கையுள்ள என் அடியார், அவருக்குப் பிரியமான ஒருவரின் உயிரை நான் கைப்பற்றிவிடும்போது நன்மையை நாடிப் பொறுமை காத்தால், சொர்க்கமே அவருக்கு நான் வழங்கும் பிரதிபலனாக இருக்கும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். [புஹாரி எண் 6424 ]

மேலும் உம்மு ஸுலைம்[ரலி] அவர்கள் சொர்க்கத்திற்கு உரியவர் என்று நபி[ஸல்] அவர்களின் மற்றொரு பொன்மொழியின் வாயிலாக உணரமுடிகிறது;

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்கள்;
நபி(ஸல்) அவர்கள், 'நான் (கனவில்) என்னை சொர்க்கத்தில் நுழைந்தவனாகக் கண்டேன். அங்கு நான் அபூ தல்ஹா அவர்களின் மனைவி ருமைஸாவுக்கு அருகே இருந்தேன்.
[ஹதீஸ் சுருக்கம் புஹாரிஎண் 3679 ]
[உம்மு ஸுலைம்[ரலி] அவர்களின் இயற்பெயர் அர்ருமைஸா பின்த் மில்ஹான் என்பதாகும்]
எல்லாம் வல்ல அல்லாஹ் உம்மு ஸுலைம்[ரலி] அவர்களை பொருந்திக் கொள்வானாக! தியாகத்தையும், இறையச்சத்தையும் வாழ்க்கையாக கொண்ட அவர்களைப்போல் நம்மையும் வாழ்ந்து மரணிக்க செய்வானாக!

Wed 02

Click here to bookmark this link.Channel Image16:17 [பாடம்-77] சத்தியத்தை முறித்தால் செய்யவேண்டிய பரிகாரங்கள். முக்தஸர் ஸஹீஹுல் புகாரி
மதீனாவின் 'ஸாஉ'ம் நபி(ஸல்) அவர்கள் (காலத்து) 'முத்'தும் அதன் வளமும் வாழையடி வாழையாக மதீனாவாசிகள் கடைப்பிடித்து வந்ததும்.

2151. சாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்களின் காலத்தில் 'ஸாஉ' என்பது, இன்றைக்கு (நடைமுறையிலிருக்கும்) உங்களின் 'முத்'தில் ஒரு 'முத்'தும் மூன்றில் ஒரு பாகமும் (1, 1/3) கொண்டதாக இருந்தது. பின்னர் உமர் இப்னு அப்தில் அஸீஸ்(ரஹ்) அவர்களின் காலத்தில் இதன் அளவு அதிகமாக்கப்பட்டது.

2152. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'இறைவா! (மதீனாவாசிகளான) இவர்களுக்கு இவர்களின் அளவைகளான 'ஸாஉ' மற்றும் 'முத்' ஆகியவற்றில் வளம் சேர்ப்பாயாக'' என்று பிரார்த்தித்தார்கள்.

Tue 01

Click here to bookmark this link.Channel Image11:56 சுட்டெரிக்கும் நரகின் அழைப்பாளிகள் இவர்கள். அத்தாட்சிகள்
தங்களது ஷிர்க்கான கொள்கைகளுக்கிடையே குர்ஆன், ஹதீஸ் அரபி வசனங்களை செருகி மெளலூது, ராதீபு, யாகுத்பாவென அரபியில் தானும் ஓதி, மற்றவர்களையும் ஓத வைத்து, தஸவ்ஃப் என்ற பெயரில் ஹகீகத், மஃரிபத், தரீகத், ஷரீஅத்தென அரபி சொற்களால் மக்களை ஏய்த்து நரகத்திற்கு அழைப்பு விடுபவர்கள்.





ஹூதைஃபத்துல் யமான் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களிடம் மக்கள் (எப்போதும்) நல்லதைப் பற்றியே கேட்பவர்களாக இருந்தனர். நானோ கெட்டது என்னை மிகைத்து விடாமல் இருக்க கெட்டது பற்றியே கேட்கக் கூடியவனாக இருந்தேன். ஒருமுறை:

நான் : அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நாங்கள் அறியாமையிலும் தீமையிலும் (மூழ்கி) இருந்தபோது, அல்லாஹ் எங்களுக்கு (இஸ்லாம் என்ற) இந்த நல்லதை அருளினான். இந்த நல்லதற்குப் பின்னர் கெட்டது உண்டா?

நபி (ஸல்) : ஆம் உண்டு!!

நான் : அந்த கெட்டதற்குப் பின்னர் நல்லது உண்டா?

நபி (ஸல்) : ஆம் உண்டு!! ஆனால் அது தகனுன் - களங்கப்பட்டிருக்கும்.

நான் : அதனது தகனுன் - களங்கம் என்ன?

நபி (ஸல்) : ஒரு கூட்டம் எனது நேர்வழி அல்லாததைக் கொண்டு மக்களை வழி நடத்துவார்கள். நீங்கள் அவர்களை (அச் செயல்களைக்) கண்டறிந்து (அவற்றை) நிராகரித்து விடுவீர்கள்.

நான் : அந்த நல்லதற்குப் பின்னர் கெட்டது உண்டா?

நபி (ஸல்) : ஆம் உண்டு!! (சிலரால்) நரகத்தின் வாயிலுக்கு அழைப்பு விடுக்கப்படும். எவர்கள் அந்த அழைப்பை ஏற்கிறார்களோ அவர்கள் அதில் (நரகத்தில்) எறியப்படுவார்கள்.

நான் : யாரஸூலல்லாஹ்! அவர்களைப் பற்றி (எனக்கு) விளக்குவீர்களாக.

நபி (ஸல்) : அவர்கள் நம்மைச் சார்ந்தவர்களாகவும் நாம் பேசுவதையே பேசுபவர்களாகவும் இருப்பார்கள்.

நான் : (அவர்கள் வலையில் சிக்காமல் இருக்க) அப்போது (எப்படி நடக்கவேண்டு மென்று) எனக்கும், (என்னைப் போன்றவர்களுக்கும்) என்ன கட்டளை இடுகிறீர்கள்?

நபி (ஸல்) : (அப்போதும்) நீர் ஜமாஅத் அல் முஸ்லிமீன் ஐயும் அதன் இமாம் ஐயும் பற்றிக் கொள்வீராக.

நான் : (நபி (ஸல்) அவர்கள் விட்டுச் சென்ற ஜமாஅத் அல் முஸ்லிமீன் என்ற) என்ற அந்த ஜமாஅத்தோ, அதனது இமாமோ இல்லை என்றால்…..?

நபி (ஸல்) : (மத்ஹபு, தரீக்கா, இயக்கம், கழகம் போன்ற) எல்லாப் பிரிவுகளையும் விட்டு (தூர) ஒதுங்கி வாழ்வீராக. அப்படியே உமது மரணம் வரை மரவேர்களைச் சாப்பிட்டுக் காலத்தைப் போக்கும் நிலை ஏற்பட்டாலும் சரியே!.

புகாரி : மனாகிப் 4/803, ஃபிதன் 9/206, முஸ்லிம் : இமாரா 3/4553, 4554
திர்மிதி : ஃபிதன் 57, இப்னுமாஜ்ஜா : ஃபிதன் 2/3979, தயாலிஸி : 1/443

Mon 30

Click here to bookmark this link.Channel Image16:29 [பாடம்-76] சத்தியங்களும் நேர்த்திகடன்களும். முக்தஸர் ஸஹீஹுல் புகாரி
சத்தியத்தை முறித்தால்...

2142. அப்துர் ரஹ்மான் இப்னு சமுரா(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள் (என்னிடம்), 'அப்துர் ரஹ்மான் இப்னு சமுராவே! ஆட்சிப் பொறுப்பை நீயாக (ஆசைப்பட்டு)க் கேட்காதே! ஏனெனில், (நீ) கேட்டதால் அது உனக்கு அளிக்கப்பட்டால் அதோடு நீ (தனிமையில்) விடப்படுவாய். (இறைவனின் உதவி கிட்டாது.) கேட்காமல் அது உனக்கு அளிக்கப்பட்டால் அது தொடர்பாக உனக்கு (இறைவனின்) உதவி அளிக்கப்படும். நீ ஒரு சத்தியம் செய்து, அது அல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாக நீ கருதினால் உன்னுடைய சத்தியத்(தை முறித்துவிட்டு முறித்த)துக்கான பரிகாரத்தைச் செய்துவிடு. சிறந்தது எதுவோ அதைச் செயல்படுத்து'' என்றார்கள்.

2143. நாம்தாம் மறுமை நாளில் (காலத்தால்) பிந்தியவர்களாகவும் (அந்தஸ்தால்) முந்தியவர்களாகவும் இருப்போம் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். மேலும் அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களில் ஒருவர் தம் குடும்பத்தார் (துன்புறும் வகையில் அவர்கள்) தொடர்பாகத் தாம் செய்த சத்தியத்தில் பிடிவாதமாக இருப்பது, (அந்தச் சத்தியத்தை முறித்துவிட்டு) அதற்காக அவரின் மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ள பரிகாரத்தைச் செய்வதைவிடப் பெரும் பாவமாகும் என்று கூறினார்கள் என அபூஹூரைரா (ரலி) அறிவித்தார்.

2144. அப்துல்லாஹ் இப்னு ஹிஷாம்(ரலி) அறிவித்தார் : இரண்டு பேர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒரு வழக்கைக் கொண்டு வந்தனர். அவர்களில் ஒருவர், 'எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளியுங்கள்'' என்று கூறினார். அவர்கள் இருவரில் விவரம் தெரிந்தவரான மற்றொருவர் 'ஆம். இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் சட்டப்படி எங்களுக்கிடையே தீர்ப்பளியுங்கள்! என்னைப் பேச அனுமதியுங்கள்'' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'பேசுங்கள்'' என்றார்கள். அந்த மனிதர், 'என் மகன் இவரிடம் 'அஸீஃப்' ஆக வேலை பார்த்துக் கொண்டிருந்தான். 'அஸீஃப் என்பதற்குக் 'கூலியாள்' என்று பொருள் என மாலிக்(ரஹ்) அவர்கள் கூறினார்கள். (அப்போது) இவருடைய மனைவியுடன் விபசாரம் செய்துவிட்டான். எனவே, மக்கள் என்னிடம், 'உன் மகனுக்குக் கல்லெறி தண்டனை உண்டு'' என்று கூறினர். ஆனால், நான் அவனுக்காக நூறு ஒட்டகங்களையும் ஓர் அடிமைப் பெண்ணையும் பிணைத் தொகையாக வழங்கினேன். பிறகு நான் அறிஞர்களிடம் (இது குறித்துக்) கேட்டேன். அவர்கள், '(திருமணமாகாத நிலையில் விபசாரம் புரிந்துவிட்ட) என் மகனுக்கு நூறு கசையடிகள் கொடுக்க வேண்டும் என்றும், ஓராண்டுக் காலத்திற்கு அவனை நாடு கடத்த வேண்டும் என்றும், கல்லெறி தண்டனை (விபசாரம் புரிந்த) அவரின் மனைவிக்குத்தான் என்றும் தெரிவித்தார்கள்'' என்றார். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டப்படியே தீர்ப்பளிக்கிறேன்: 'உங்கள் ஆடுகளும் அடிமைப் பெண்ணும் உங்களிடமே திருப்பித் தரப்படும்'' என்று கூறிவிட்டு, அவரின் மகனுக்கு நூறு கசையடிகள் வழங்கச் செய்து ஓராண்டு காலத்திற்கு நாடு கடத்தவும் செய்தார்கள். மேலும், உனைஸ் அல்அஸ்லமீ(ரலி) அவர்கள் அந்த நபரின் மனைவியிடம் சென்று, அவள் குற்றத்தை ஒப்புக்கொண்டால் அவளுக்குக் கல்லடி தண்டனை வழங்கிடுமாறு உத்தரவிடப்பட்டார்கள். அவ்வாறே, (உனைஸ் அப்பெண்ணிடம் சென்றார்.) அவள் குற்றத்தை ஒப்புக்கொண்டார். எனவே, அவளுக்குக் கல்லெறி தண்டனை வழங்கினார்.

2145. அபூ தர்(ரலி) அறிவித்தார் : நான் நபி(ஸல்) அவர்களிடம் போய்ச் சேர்ந்தேன். அப்போது அவர்கள் (இறையில்லம்) கஅபாவின் நிழலில் இருந்தவாறு, 'கஅபாவின் அதிபதி மீது சத்தியமாக! அவர்கள் நஷ்டவாளிகள். கஅபாவின் அதிபதி மீது சத்தியமாக அவர்கள் நஷ்டவாளிகள் என்று சொல்லத் தொடங்கினார்கள். நான், 'என் நிலை என்ன? என் தொடர்பாக அவர்களுக்கு ஏதேனும் காட்டப்படுகிறதா? (அப்படியானால்) என் நிலை என்னாவது?' என்று (மனத்துக்குள்) சொல்லிக்கொண்டே அவர்கள் அருகில் அமர்ந்தேன். அப்போது நபியவர்கள் 'என்னால் பேசாமலிருக்க இயலவில்லை. அல்லாஹ் நாடிய ஏதோ ஒன்று என்னைச் சூழ்ந்து கொண்டது'' என்று கூறினார்கள். உடனே நான் 'என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். அவர்கள் யார், இறைத்தூதர் அவர்களே?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'அதிகச் செல்வம் படைத்தவர்கள். ஆனால் (நல்வழியில் செல்வத்தைச் செலவிட்ட) சிலரைத் தவிர'' என்று கூறியவாறு இவ்வாறு இவ்வாறு இவ்வாறு (என்று தம் பக்கம் வலப் பக்கம் இடப் பக்கம்) கைகளால் சைகை செய்தார்கள்.

2146. ஒரு முஸ்லிமுடைய மக்களில் மூவர் (பருவ வயதுக்கு முன்பே) இறந்தால், (தந்தையான) அவரை நரகம் தீண்டாது. ('உங்களில் யாரும் நரகத்தைக் கடக்காமல் செல்ல முடியாது' என்று அல்லாஹ் செய்துள்ள) சத்தியத்தைச் செயல்படுத்துவதற்காக (நரகத்தின் வழியே செல்வதை)த் தவிர என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

மறந்து சத்தியத்தை முறித்துவிட்டால்...?

2147. என் சமுதாயத்தாரின் உள்ளங்களில் ஊசலாடும் தீய எண்ணங்களை, அவர்கள் அதன்படி செயல்படாதவரை, அல்லது அதை (வெளிப்படுத்தி)ப் பேசாதவரை அல்லாஹ் (அவற்றுக்குத் தண்டனை வழங்குவதில்லை) மன்னித்து விடுகிறான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இறைவனுக்கு வழிப்படுவதில் தான் நேர்த்திக்கடன்.

2148. அல்லாஹ்வுக்கு வழிப்படுவதாக ஒருவர் நேர்ந்து கொண்டால் (அதை நிறைவேற்றும் (முகமாக) அவனுக்கு அவர் வழிப்படட்டும்! அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாக ஒருவர் நேர்ந்துகொண்டால் (அதை நிறைவேற்றுவதற்காக) அவனுக்கு அவர் மாறு செய்திட வேண்டாம் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நேர்த்திக்கடன் உள்ள நிலையில் ஒருவர் இறந்துவிட்டால் (அவருக்காக மற்றவர்கள் அதை நிறைவேற்ற வேண்டுமா?)

2149. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் : ஸஅத் இப்னு உபாதா அல் அன்சாரி(ரலி) அவர்கள், நேர்ந்துகொண்டு அதை நிறைவேற்றுவதற்கு முன்பே இறந்துவிட்ட தம் தாயின் நேர்த்திக்கடன் குறித்து நபி(ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், அவர் தம் தாயாருக்காக நேர்த்திக்கடனை நிறைவேற்றிடுமாறு தீர்ப்பளித்தார்கள். அதுவே பின்னர் வழிமுறையாக ஆகிவிட்டது.

தமக்கு உடைமையில்லாத ஒன்றிலும் பாவச் செயலிலும் ஒருவர் நேர்ந்துகொள்வது (கூடாது.)

2150. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள் (வெள்ளிக்கிழமை) உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒருவர் (வெயிலில்) நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். அவர் குறித்து (மக்களிடம்) கேட்டார்கள். மக்கள், '(இவர் பெயர்) அபூ இஸ்ராயீல். இவர், நின்று கொண்டே இருப்பேன்; உட்காரமாட்டேன் என்றும், நிழலில் ஒதுங்கமாட்டேன் (வெயிலில் தான் இருப்பேன்) என்றும், (யாரிடமும்) பேசமாட்டேன்; நோன்பு நோற்பேன் என்றும் நேர்ந்து கொண்டுள்ளார்'' என்று கூறினார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள், 'அவருக்கு உத்தரவிடுங்கள்: அவர் பேசட்டும். நிழல் பெறட்டும். உட்காரட்டும் நோன்பை (மட்டும்) நிறைவு செய்யட்டும்'' என்றார்கள். மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

Sun 29

Click here to bookmark this link.Channel Image01:17 எங்களுக்குள் போட்டி உண்டு; ஆனால் பொறாமையில்லை என்று நிரூபித்த அன்னை! ஸஹாபாக்களின் வாழ்வினிலே...
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
இஸ்லாமிய மார்க்கம் முஸ்லிமான ஆண்களுக்கு அதிகபட்சமாக நான்கு திருமணம் வரை செய்து கொள்ள அனுமதி வழங்கியுள்ளதை நாம் அறிவோம். இந்திய அளவில் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்பவர்கள் மிக மிக குறைவு. காரணம் பொருளாதரா பிரச்சினை ஒருபக்கம் இருந்தாலும், மறு பக்கம் இரு மனைவியர் ஒருவருக்கு இருந்தால் அவர்களுக்கு மத்தியில் பஞ்சாயத்து தீர்ப்பதற்கே பெரும்பான்மையான நேரம் ஒதுக்கவேண்டிய நிலை. இரு ஆண்கள் ஒத்துப்போய் விடுவார்கள். ஆனால் இரு பெண்கள் ஒத்துப்போவது என்பது மிகமிக அரிது. அதிலும் ஒரு கணவருக்கு வாழ்க்கைப்பட்ட இரு பெண்கள், இவர்களில் ஒவ்வொருவரும் மற்ற மனைவியை தன் கணவன் நெருங்காமல் இருப்பதற்கு என்ன வழி என்று சதா யோசித்து தங்களில் ஒருத்தியை மாட்டிவிடும் வாய்ப்பு கிடைக்குமென்றால் அதை கச்சிதமாக பயன்படுத்தி அவளிடமிருந்து தன் கணவனை பிரித்துவிடுவாள். தன் கணவன் மறுமணம் செய்வதை அனுமதிக்கும் அரபு நாட்டு பெண்கள் பெரிய அளவில் தனது சக்களத்தியை கண்டுகொள்வதில்லை. ஆயினும் அவர்களில் சிலர் தனது கணவன் மற்றொரு பெண்ணை மணப்பதை தடுப்பதற்கான முயற்சி மேற்கொள்வதாக அறிகிறோம். சமீபத்தில் குவைத்தில் ஜஹ்ரா என்ற பகுதியில் ஒரு திருமணத்தின்போது நடந்த தீவிபத்திற்கு ஒரு முன்னாள் மனைவியே காரணம் என்று கூறப்பட்டது.[அல்லாஹ்வே அறிந்தவன்] இதை நாம் இங்கு குறிப்பிட காரணம் பொதுவாகவே பெண்கள், கணவன் குடிகாரனாகவோ, சூதாடியாகவோ, குடும்பத்தை சரிவர கவனிக்காத பொருப்பில்லாதவனாகவோ இருந்தால்கூட சகித்துகொண்டு விட்டுக்கொடுத்து விடுவார்கள். ஆனால் ஒரு உதவாக்கரை கணவனைக்கூட இன்னொரு பெண்ணிற்கு விட்டுக்கொடுக்க மாட்டார்கள். இது பெரும்பான்மையான பெண்களின் இயல்பு. ஆனால் ஸஹாபி பெண்களை பொறுத்தவரையில் அல்லாஹ் அனுமதித்த எந்த ஒன்றையும் தடுக்கக் கூடியவர்கள் அல்லர். எனவே பெரும்பான்மையான சஹாபாக்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணம் செய்ததை நாம் ஹதீஸ்களின் வாயிலாக அறியமுடிகிறது. மேலும் இறைத்தூதர்[ஸல்] அவர்களுக்கு அல்லாஹ் பல மனைவியரை மணக்கும் அனுமதி தந்திருந்தான். நபி[ஸல்] அவர்களும் சுமார் பதினொரு அல்லது பன்னெண்டு மனைவியரை மணந்தார்கள். இந்த மனைவியருக்குள் நபியவர்களின் அன்பை பெறுவதில் போட்டி இருந்தது. இதை நாமாக சொல்லவில்லை. நபி[ஸல்] அவர்களின் நேசத்திற்குரிய அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் சொல்கிறார்கள்;

அல்லாஹ்வின் தூதருடைய மனைவிமார்களான நாங்கள் இரு குழுக்களாக இருந்தோம். ஒரு குழுவில் நானும் ஹஃப்ஸா, ஸஃபிய்யா, மற்றும் சவ்தா ஆகியோரும் இருந்தோம். மற்றொரு குழுவில் உம்மு சலாமா அவர்களும் அல்லாஹ்வின் தூதருடைய மற்ற மனைவிமார்களும் இருந்தனர்.
[ஹதீஸ் சுருக்கம் புஹாரி எண் 2581 ]

மற்றொரு ஹதீஸில் நம் அன்னையர்களுக்கு மத்தியில் நபியவர்களின் நெருக்கத்திற்குரியவர்களாக இருப்பதில் போட்டியிருந்ததை காணலாம்.

ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்;
நபி(ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களிடம் (அவர்களின் அறையில் அதிக நேரம்) தங்கியிருந்து தேன் சாப்பிடுவது வழக்கம். எனவே, (இது பிடிக்காமல் நபியவர்களுடைய துணைவியரான) நானும் ஹஃப்ஸாவும் எங்களுக்குள் 'நபி(ஸல்) அவர்கள் (ஸைனபின் அறைக்குச் சென்றுவிட்டு) நம்மில் யாரிடம் முதலில் வந்தாலும் தங்களிடமிருந்து கருவேலம் பிசினின் துர்வாடை வருகிறதே! பிசின் சாப்பிட்டீர்களா? என்று கூறிட வேண்டும்' என்று கூடிப் பேசி முடிவு செய்து கொண்டோம். எங்களில் ஒருவரிடம் நபி(ஸல்) அவர்கள் வந்தபோது முன்பு பேசிவைத்திருந்தபடி கூறினோம். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , '(அப்படியெல்லாம்) ஒரு குறையும் நடந்திடவில்லை. ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் (அவரின் அறையில்) தேன் அருந்தினேன். (அவ்வளவுதான் சத்தியமாக) இனிமேல் ஒருபோதும் இவ்வாறு செய்யமாட்டேன்' என்று கூறினார்கள். எனவே, 'நபியே! உங்களுடைய துணைவியரின் திருப்தியை எதிர்பார்த்து, அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த ஒன்றை நீங்கள் ஏன் விலக்கிக் கொள்கிறீர்கள்?' என்று தொடங்கி 'நீங்கள் இருவரும் - இதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் (அது உங்களுக்கே நன்று)' என முடியும் (திருக்குர்ஆன் 66:1-4) வசனங்களை அல்லாஹ் அருளினான்.
ஆதாரம்; புஹாரி எண் 5267

இவ்வாறாக நம் அன்னையர்களுக்கு மத்தியில் பெண்களுக்கே உரித்தான போட்டி மனப்பான்மை இருந்தாலும், அவர்களுக்கிடையே பகைமையோ, ஒருவரையொருவர் காட்டிக்கொடுக்கும் என்னமோ, பழிவாங்கும் நோக்கமோ கடுகளவும் இல்லை என்பதை பின்வரும் ஹதீஸ் நமக்கு உணர்த்துகிறது. அறிவுச்சுடர் அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் மீது பாவிகள் அவதூறு சொனன்போது, இது குறித்து என்ன நடவடிக்கை மேற்கொள்வது என்பது குறித்து நபி[ஸல்] அவர்கள், அலீ[ரலி] உசாமா[ரலி] பரீரா[ரலி] உள்ளிட்ட சிலரிடம் ஆலோசனையும் கருத்துக்களும் கேட்டது போன்று அன்னை ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களிடமும் கருத்து கேட்டார்கள். அப்போது அன்னையவர்கள் கூறிய வார்த்தை பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை;

அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்;
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் விஷயத்தில் (தம் இன்னொரு மனைவியான) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் அவர்களிடம் விசாரித்தார்கள். 'ஸைனபே! நீ (ஆயிஷாவைக் குறித்து) என்ன அறிந்திருக்கிறாய்?... அல்லது (அவர் விஷயத்தில்) என்ன பார்த்திருக்கிறாய்?... என்று (ஸைனபிடம்) கேட்டார்கள். அதற்கு அவர், 'இறைத்தூதர் அவர்களே! என் காதுகளையும் என் கண்களையும் (அவற்றின் மீது பழி சுமத்தாமல்) நான் பாதுகாத்து வைத்திருக்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயிஷாவைக் குறித்து நல்லதையே அறிவேன்" என்று பதிலளித்தார்கள். ஸைனப் அவர்கள் தாம், நபியவர்களின் துணைவியரில் எனக்கு (அழகிலும் நபி-ஸல்-அவர்களின் அன்பிலும்) போட்டியாக இருந்தார்கள். ஆயினும், அல்லாஹ் அவர்களை (இறையச்சமுடைய) பேணுதலான பண்பையளித்துப் பாதுகாத்திருந்தான்.
[ஹதீஸ் சுருக்கம் புஹாரி எண் 4141 ]

அழகிலும், நபி [ஸல்] அவர்களின் அன்பிலும் எனக்கு போட்டியாக இருந்தவர் ஸைனப் என்று வர்ணிக்கும் அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் வாயாலேயே, அன்னை ஸைனப்[ரலி] அவர்கள் சொன்ன வார்த்தையால் சிலாகித்து அன்னை ஆயிஷா[ரலி] அவர்களே சொல்லுமளவிற்கு அன்னை ஸைனப்[ரலி] அவர்களின் உள்ளம் இறையச்சத்தால் நிரம்பியிருந்ததை காண்கிறோம். அதனால்தான் தன்னை போட்டியாக கருதிய ஆயிஷா[ரலி] அவர்கள் மீது பழி சொல்வதற்கு வாய்ப்பு கிடைத்தபோதும், அல்லாஹ்விற்கு அஞ்சியவர்களாக ஆயிஷா[ரலி] அவர்கள் விஷயத்தில் உள்ளதை மட்டும், உண்மையை மட்டும், நன்மையை மட்டும் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களிடம் அன்னை ஸைனப்[ரலி] அவர்கள் சொல்கிறார்கள் என்றால் அதுதான் சஹாபாக்கள். இதே நிலை இன்றைய பெண்களிடம் நடந்திருக்குமானால் என்ன நடந்திருக்கும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே! எனவேதான் தெளிவாக சொல்கிறோம் இறையச்சத்திலும் சரி, அமல்களிலும் சரி, நன்னடத்தையிலும் நற்குணத்திலும் சரி அந்த சஹாபாக்கள் மற்றும் ஸஹாபி பெண்களின் அந்தஸ்த்தில் கடுகளவும் எட்டிப்பிடிக்கமுடியாது என்பதே உண்மை. இந்த லட்சணத்தில், அந்த மேன்மக்களை விட அல்லாஹ் நம்மை மேன்மையாக்கி வைத்துள்ளான் என்ற அகம்பாவ பிரச்சாரம் வேறு!

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

Sat 28

Click here to bookmark this link.Channel Image17:13 [பாடம்-75] விதி. முக்தஸர் ஸஹீஹுல் புகாரி
இறைவனின் தீர்மானத்தை எழுதிய பேனா(வின் மை) உலர்ந்துவிட்டது.

2137. இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவித்தார் : ஒருவர் 'இறைத்தூதர் அவர்களே! சொர்க்கவாசிகள் யார்? நரகவாசிகள் யார்? என்று (முன்பே அல்லாஹ்வுக்குத்) தெரியுமா?' எனக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள் 'ஆம் (தெரியும்)'' என்றார்கள். அவர் 'அவ்வாறாயின் ஏன் நற்செயல் புரிகிறவர்கள் நற்செயல் புரியவேண்டும்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் 'ஒவ்வொருவரும் 'எ(தை அடைவ)தற்காகப் படைக்கப்பட்டார்களோ' அல்லது 'எ(தை அடைவ)தற்கு வாய்ப்பளிக்கப்பட்டார்களோ' அதற்காகச் செயல்படுகிறார்கள்'' என்று பதிலளித்தார்கள்.

அல்லாஹ்வின் கட்டளை (முன்பே) தீர்மானிக்கப் பெற்ற விதியாக இருக்கின்றது. (திருக்குர்ஆன் 33:38)

2138. ஹுதைபா அல்யமான்(ரலி) அறிவித்தார் : (ஒரு முறை) எங்களிடையே நபி(ஸல்) அவர்கள் உரையாற்றினார்கள். அந்த உரையில், மறுமை ஏற்படும் வரையிலான எந்தத் தகவலையும் அவர்கள் குறிப்பிடாமல் விடவில்லை. அதனை அறிந்தவர்கள் அறிந்து கொண்டார்கள். அதனை அறியாதவர்கள் அறியாமலானார்கள். (அதில்) ஏதேனும் ஒன்றை நான் மறந்து விட்டிருந்தாலும் அதை (நேரில்) காணும்போது அறிந்துகொள்வேன். தம்மைவிட்டு மறைந்துவிட்ட ஒருவரை (மீண்டும்) பார்க்கும்போது அவரை ஒருவர் அடையாளம் கண்டுகொள்வதைப் போன்று.

நேர்த்திக்கடன் மனிதனை விதிக்கே கொண்டு செல்கிறது.

2139. (அல்லாஹ் கூறினான்:) நேர்த்திக் கடனானது, நான் விதியில் எழுதியிராத எந்தவொன்றையும் மனிதனிடம் கொண்டு வந்துவிடாது. மாறாக, விதிதான் அவனை (நேர்த்திக்கடன் பக்கம்) கொண்டு செல்கிறது. நேர்த்திக்கடன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வத்தை) வெளிக்கொணர்வதென நான் (முன்பே) விதியில் எழுதிவிட்டேன் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(பாவங்களிலிருந்து) அல்லாஹ்வால் பாதுகாக்கப் பெற்றவரே மாசற்றவராவார்.

2140. (இப்புவியின் ஆட்சிக்கு இறைவனுடைய) பிரதிநிதியாக ஆக்கப்படும் எவருக்கும் இரண்டு நெருக்கமான ஆலோசகர்கள் இருக்கவே செய்வார்கள். ஓர் ஆலோசகர், அவரை நன்மை செய்யும்படி ஏவி அதற்குத் தூண்டு கோலாக இருப்பார். அல்லாஹ் (குற்றங்களிலிருந்து) யாரை பாதுகாத்தானோ அவரே மாசற்றவராக இருப்பார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

அல்லாஹ் மனிதனையும் அவனுடைய உள்ளத்தையும் சூழ்ந்து நிற்கிறான்.

2141. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள் (சத்தியம் செய்வதாக இருந்தால்) 'இல்லை. உள்ளங்களைப் புரட்டக்கூடியவன் மீதாணையாக!'' என்றே பெரும்பாலும் சத்தியம் செய்வார்கள்.
Click here to bookmark this link.Channel Image01:28 ஏழைகளின் நலனுக்கே எமது ஆட்சியில் முன்னுரிமை! ஸஹாபாக்களின் வாழ்வினிலே...
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

உமர்(ரலி) அவர்களின் (முன்னாள்) அடிமை அஸ்லம்(ரஹ்) அறிவித்தார்.
உமர் இப்னு கத்தாப்(ரலி), (ஸகாத் கால்நடைகளின்) பிரத்தியேக மேய்ச்சல் நிலம் ஒன்றுக்கு 'ஹுனைன் என்றழைக்கப்படும் தம் அடிமை ஒருவரை (காவலராக) நியமித்தார்கள். அப்போது, 'ஹுனையே! உன் கையை முஸ்லிம்களுக்கு அநீதியிழைப்பதிலிருந்து காத்துக் கொள். அநீதியிழைக்கப்பட்டவரின் சாபப் பிரார்த்தனைக்கு அஞ்சு. ஏனெனில், அநீதியிழைக்கப்பட்டவரின் பிரார்த்தனை (அல்லாஹ்வினால்) எற்றுக் கொள்ளப்படக் கூடியதாகும். சிறு ஒட்டக மந்தைகளையும் சிறு ஆட்டு மந்தைகளையும் ஓட்டி வருபவர்கள் (மேய்ச்சல் நிலத்திற்குள்) நுழைய அனுமதியளி. (செல்வந்தர்களான) அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் மற்றும் உஸ்மான் இப்னு அஃப்பான் ஆகியோரின் கால்நடைகளைக் குறித்து எச்சரிக்கையாய் இரு. (அவற்றை உள்ளே நுழைய விடாதே) ஏனெனில், அவ்விருவரின் கால்நடைகளும் (தீனி கிடைக்காமல்) அழிந்து போய்விட்டால் அவர்களிருவரும் (தம் பிழைப்பிற்குத் தம்) பேரீச்சந் தோட்டங்களையும் விளைநிலங்களையும் பயன்படுத்திக் கொள்வார்கள். ஆனால், சிறிய ஒட்டக மந்தைகளையும் சிறிய ஆட்டு மந்தைகளையும் வைத்திருப்பவர்கள் தங்கள் கால்நடைகள் (தீனி கிடைக்காமல்) அழிந்து போய்விட்டால் (கலீஃபாவான) என்னிடம் தம் பிள்ளை குட்டிகளை அழைத்து வந்து, 'விசுவாசிகளின் தலைவரே! நான் இவர்களை (பட்டினி கிடந்து) சாகவிட்டு விடவா?' என்ற கேட்பார்கள். எனவே, (முஸ்லிம்களின் பொதுநிதியிலிருந்து) தங்கத்தையும் வெள்ளியையும் (அவர்களுக்குத் தருவதை) விட (அரசின் பிரத்தியேக மேய்ச்சல் நிலங்களிலிருந்து) தண்ணீரையும் புற்பூண்டுகளையும் தருவது எனக்கு இலேசானதாகும் அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இவர்களுக்கு அநீதியிழைத்துவிட்டதாக இவர்கள் கருதுகிறார்கள். இது அவர்களின் நாடு. இதற்காக இவர்கள் அறியாமைக் காலத்திலும் போரிட்டிருக்கிறார்கள்; இஸ்லாத்தின் காலத்திலும் இஸ்லாத்தைத் தழுவி இதற்காகப் போரிட்டிருக்கிறார்கள். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! இறைவழியில் (போரிடுவோரை) நான் ஏற்றியனுப்பவேண்டிய (கால்நடைச்) செல்வம் மட்டும் தேவையில்லையென்றால் இவர்களுடைய நாட்டிலிருந்து ஓர் அங்குலத்தைக் கூட (கையகப்படுத்தி) பிரத்தியேக மேய்ச்சல் நிலமாக நான் ஆக்கியிருக்க மாட்டேன்" என்று கூறினார்கள்.
ஆதாரம் புஹாரி எண் 3059

அன்பானவர்களே! உமர்[ரலி] அவர்கள் தனது ஆட்சியின் போது ஒரு நிலத்தை கையகப்படுத்தி ,அதில் போருக்கு பயன்படும் கால்நடைகள் மேய்வதற்காக மேய்ச்சல் நிலமாக ஆக்கி அதில் காவலரையும் நியமிக்கிறார்கள். அந்த காவலரிடம் கூறும்போது,
கால்நடைகளை மட்டுமே நம்பி ஜீவனம் நடத்திக்கொண்டிருக்கும் ஏழைகள் தங்கள் கால்நடைகளை மேயவிடுவதற்காக இந்த நிலம் நோக்கி கொண்டுவந்தால் அவர்களுக்கு அனுமதியளி. ஏனெனில், இரை கிடைக்காமல் அவர்களின் கால்நடைகள் அழிந்துவிட்டால், அவர்கள் தங்களின் வறுமையை முறையிட தங்கள் குழந்தைகள் சகிதமாக எம்மை நோக்கி வருவார்கள். அந்த நிலை வந்துவிடக்கூடாது என்பதற்காக ஏழைகள் விஷயத்தில் அநீதி இழைப்பதை விட்டு காத்துக்கொள் என்று கூறுகிறார்கள்.
அடுத்து உமர்[ரலி] அவர்கள் சொன்னதுதான் முத்தாய்ப்பானது. வசதிபடைத்த உஸ்மான்[ரலி] மற்றும் அப்துர்ரஹ்மான் இப்னு அவூப்[ரலி] ஆகியோரின் கால்நடைகள் விஷயத்தில் கண்டிப்பாக இரு. ஏனெனில் அவர்களது கால்நடைகள் அழிந்துவிட்டால் கூட அவர்களுக்கு எந்த பாதிப்பும் வராது. ஏனெனில் அவர்களுக்கு பேரீத்தம் மரங்களும், விளைநிலங்களும் இருக்கின்றன என்று கூறுகிறார்கள்.
இதில் நாம் கவனிக்கவேண்டிய அம்சம் என்னவெனில், அரசுக்கு சொந்தமான எந்த ஒன்றும் வசதிபடைத்தோருக்கு திகட்டும் கனியாகவும், ஏழைகளுக்கு எட்டாக் கனியாகவும் இருப்பதை நாம் நடைமுறையில் பார்க்கிறோம். வசதிபடைத்தவர்களுக்காக அரசு இயந்திரம் தொடங்கி, நீதிமன்றம் வரை அப்பட்டமாக வளைவதை பார்க்கிறோம். வசதிபடைத்தவர்கள் மற்றும் தமக்கு பின்னால் ஒரு கூட்டத்தை வைத்திருப்பவர்கள் என்னதான் பாரதூரமான தவறுகள் செய்தாலும், அவர்களை கைது செய்வது அரிது. அவ்வாறே கைது செய்யப்பட்டாலும் அவர்கள் ஜாமீனில் 'ஹாயாக' வெளியே வருவார். பின்பு அந்த வழக்கு மறக்கப்பட்டுவிடும். அதே நேரத்தில் ஒரு முஸ்லீம் ஏதாவது தவறு செய்தான் என்று கருதப்பட்டால் அவனை அதிரடியாக கைது செய்யும் அரசு இயந்திரம், அவனை விசாரைக்கைதியாகவே ஜாமீன் கூட வழங்காமல் ஆயுளை சிறையிலேயே முடிக்கும் அளவுக்கு நடந்து கொள்வதை காணுகிறோம். ஆனால், உமர்[ரலி] அவர்கள் ஏழைகளிடம் அவர்களின் நிலையறிந்து கணிவாகவாகவும், வசதி படைத்தோரிடம் அவர்களின் நிலையறிந்து கடுமையாகவும் நடந்து, என்னுடைய ஆட்சி இறைவனுக்கு மட்டுமே அஞ்சக்கூடிய, ஏழைகளின் சிரிப்பில் இறைவனை உண்மையாகவே காணக்கூடிய ஆட்சி என்று நடத்திக்காட்டிய அமீருல் முஃமினீன் அவர்களை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக!

Thu 26

Click here to bookmark this link.Channel Image23:28 இனிய பெருநாளே..தியாகத் திருநாளே..! ஸஹாபாக்களின் வாழ்வினிலே...


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
ஒப்பற்ற ஓரிறை கொள்கையை உலகில் நிலைநாட்ட, சோதனைகளுக்கு முகம் கொடுத்து, நெருப்பிலிட்டபோதும் ஏகத்துவ தங்கமாய் மின்னிய ஏந்தல் நபி இப்ராஹீம் அலை] அவர்களின் தியாகத்தையும் , தரணியின் தலைவன் அல்லாஹ்வின் கட்டளையின்படி, தன்னை அறுக்க தந்தை கோரியபோது, ' இறைவன் நாடினால் பொறுமையாளனாக என்னை காண்பீர்கள்' என்று இறைக்கட்டளைக்கு தன் தலை கொடுக்க முன்வந்த தனயன் நபி இஸ்மாயீல்[அலை] அவர்களின் தியாகத்தையும் நினைவு கூறும் இந்த தியாககத்திருநாளில் உலகமெங்கும் வாழும் எனது இஸ்லாமிய சகோதரர-சகோதரிகளுக்கு வாழ்த்தினை தெரிவிப்பதோடு, எல்லாம் வல்ல அல்லாஹ், ஏகத்துவத்தை நிலைநாட்டும் உயரியபனியில் நபிஇப்ராஹீம்[அலை] அவர்களுக்கு வழங்கிய உள்ள உறுதியையும், தியாக மனப்பான்மையையும் நமக்கும் வழங்கிட, நம்மை அல்லாஹ் பொருந்திக்கொண்ட வாழ்க்கை வாழ்ந்திட இறைவனிடம் இறைசுகிறேன்.

-உங்கள் இஸ்லாமிய சகோதரன் முகவை எஸ்.அப்பாஸ்
Click here to bookmark this link.Channel Image17:43 [பாடம்-74] நெகிழ்வூட்டும் அறிவுரைகள். முக்தஸர் ஸஹீஹுல் புகாரி
ஆரோக்கியம் மற்றும் ஓய்வு குறித்தும் மறுமையின் வாழ்வைத் தவிர வேறு (நிலையான) வாழ்வில்லை என்பது குறித்தும் வந்துள்ளவை.

2091. மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர். 1. ஆரோக்கியம். 2. ஓய்வு நேரம் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

''உலகத்தில் நீ அந்நியனைப் போன்று இரு. அல்லது வழிப்போக்கனைப் போன்று இரு".

2092. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக் கொண்டு 'உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப் போக்கனைப் போன்று இரு'' என்றார்கள்.(அறிவிப்பாளர்களில் ஒருவரான முஜாஹித்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) ''நீ மாலை நேரத்தை அடைந்தால் காலைவேளையை எதிர்பார்க்காதே! நீ காலை வேளையை அடைந்தால் மாலை நேரத்தை எதிர்பார்க்காதே! நீ நோய்வாய்ப்படும் நாளுக்காக உன்னுடைய ஆரோக்கியத்தில் சிறி(து நேரத்)தைச் செலவிடு. உன்னுடைய இறப்பு(க் குப் பிந்திய நாளு)க்காக உன்னுடைய வாழ்நாளில் சிறி(து நேரத்)தைச் செலவிடு'' என்று இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுவார்கள்.

எதிர்பார்ப்புகளும் அவை அளவு கடந்து போவதும்.

2093. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார் : (ஒருமுறை) நபி(ஸல்) அவர்கள் (நிலத்தில்) ஒரு சதுரக் கட்டம் வரைந்தார்கள். பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்: (நடுவிலுள்ள மையப் புள்ளியான) இதுதான் மனிதன். இந்தச் சதுரம் தான் அவனைச் 'சூழ்ந்துள்ள' அல்லது 'சூழ்ந்து கொண்டுவிட்ட' வாழ்நாளாகும். (நடுவிலிருந்து) வெளியே செல்லும் கோடுதான் அவனுடைய எதிர்பார்ப்புகளாகும். இதோ இந்தச் சிறிய கோடுகள் (மனிதனை வந்தடையும்) சோதனைகளாகும். (சோதனைகளில்) ஒன்றிலிருந்து அவன் தப்பிவிட்டாலும் மற்றொன்று அவனைத் தீண்டவே செய்யும். (இடையில் ஏற்படும் சோதனைகளான) இவற்றிலிருந்து அவன் தப்பிவிட்டாலும் இ(யற்கை மரணமான)து அவனைத் தீண்டவே செய்யும்.

2094. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள் (முந்தைய ஹதீஸில் உள்ளபடி) சில கோடுகள் வரைந்தார்கள். பிறகு '(சதுரத்தின் நடுவிலுள்ள கோட்டைக் காட்டி) இதுதான் (மனிதனின்) எதிர்பார்ப்புகள் (என்றும், சதுரத்தைக் காட்டி) இதுதான் அவனுடைய ஆயுள் (என்றும் கூறிவிட்டு,) இவ்வாறு அவன் (எதிர்பார்ப்புகளில்) இருந்து கொண்டிருக்கும்போது அருகிலுள்ள (மரணம் - ஆயுள் முடிவு எனும்) கோடு அவனை வந்தடைகிறது'' என்று கூறினார்கள்.

ஒருவர் அறுபது வயதை அடைந்தால் அதற்கு மேல் அவர் வாழ்நாள் குறித்து கூறும் சாக்குப் போக்குகளை அல்லாஹ் ஏற்பதில்லை.

2095. ஒரு மனிதனின் வயது அறுபது ஆண்டுகளை எட்டும் வரை வாழ்நாளைத் தள்ளிப் போட்ட பிறகு அவன் (ஆயுள் விஷயத்தில்) கூறும் சாக்குப்போக்குகளை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதில்லை என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

2096. முதியவரின் மனம் கூட இரண்டு விஷயங்களில் இளமையாகவே இருந்துவரும். 1. இம்மை வாழ்வின் (-செல்வத்தின்) மீதுள்ள பிரியம். 2. நீண்டநாள் வாழவேண்டும் என்ற ஆசை என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

2097. (தொடர்ந்து) மஹ்மூத் இப்னு ரபீஉ(ரலி) அறிவித்தார் : இத்பான் இப்னு மாலிக் அல்அன்சாரி(ரலி) அவர்கள் (பின்வருமாறு) சொல்ல கேட்டேன்.(ஒருநாள்) அதிகாலையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் வந்திருந்தபோது 'அல்லாஹ்வின் திருப்தியை நாடி 'லா இலாஹ இல்லல்லாஹ்' (வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்று கூறியவாறு மறுமை நாளில் ஓர் அடியார் வந்தால் அவரின் மீது நரகத்தை அல்லாஹ் தடை செய்யாமல் இருப்பதில்லை'' என்று கூறினார்கள்.

2098. அல்லாஹ் கூறினான்: இறைநம்பிக்கையுள்ள என் அடியார், அவருக்குப் பிரியமான ஒருவரின் உயிரை நான் கைப்பற்றி விடும்போது நன்மையை நாடிப் பொறுமை காத்தால், சொர்க்கமே அவருக்கு நான் வழங்கும் பிரதிபலனாக இருக்கும் என்று இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நல்லோர்களின் மறைவு.

2099. நல்லவர்களில் முதன்மையானவர்கள் முதலாவதாகவும் அவர்களுக்கு அடுத்த (படித்தரத்திலுள்ள)வர்கள் அடுத்ததாகவும் (இவ்வுலகை விட்டுப்) போய்விடுவார்கள். (இவ்வாறு நல்லவர்கள் மறைந்த பின் இப்புவியில்) 'மட்டமான வாற்கோதுமை போன்ற', அல்லது 'மட்டமான பேரீச்சம் பழம் போன்ற' தரம் வாய்ந்த மக்களே எஞ்சியிருப்பார்கள். அவர்களை அல்லாஹ் சற்றும் பொருட்படுத்தமாட்டான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என மிர்தாஸ் இப்னு மாலிக் அல் அஸ்லமீ(ரலி) அறிவித்தார்.

2100. ஆதமின் மகனக்கு (மனிதனுக்கு) இரண்டு நீரோடைகள் (நிறைய) செல்வம் இருந்தாலும் மூன்றாவதையும் அவன் தேடுவான். ஆதமின் மகனுடைய வயிற்றை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறெதுவும் நிரப்பாது. (பாவங்களிலிருந்து) பாவமன்னிப்புக் கோரி மீண்டு விட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான் என்று இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

ஒருவர் தம் செல்வத்திலிருந்து எதை (அறவழியில்) செலவிட்டாரோ அதுதான் அவருக்குரிய (நன்மை பயக்கும்) செல்வமாகும்.

2101. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார் : (ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் 'உங்களில் யாருக்காவது தம் செல்வத்தை விடத் தம் வாரிசுகளின் செல்வம் விருப்பமானதாக இருக்குமா?' என்று கேட்டார்கள். தோழர்கள் 'இறைத்தூதர் அவர்களே! எங்கள் அனைவருக்குமே (வாரிசுகளின் செல்வத்தை விட) எங்களின் செல்வமே விருப்பமானதாகும்'' என்று பதிலளித்தார்கள். 'அவ்வாறாயின், ஒருவர் (இறப்பதற்கு முன் அறவழியில்) செலவிட்டதே அவரின் செல்வமாகும். (இறக்கும் போது) விட்டுச் செல்வது அவரின் வாரிசுகளின் செல்வமாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்கள் மற்றும் நபித் தோழர்களின் பிழைப்பு எவ்வாறு இருந்தது என்பது குறித்தும், அவர்கள் இவ்வுலகி(ன் இன்பங்களி)லிருந்து விலகியிருந்தது குறித்தும்.

2102. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் : எவனைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லையோ அத்தகைய அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் (கடும்) பசியினால் என் வயிற்றைத் தரையில் வைத்து அழுத்திக்கொண்டு படுத்திருக்கிறேன். மேலும், (கடும்) பசியினால் வயிற்றில் நான் கல்லை வைத்துக் கட்டிக் கொண்டதுமுண்டு. ஒரு நாள் நான் நபி(ஸல்) அவர்களும் தோழர்களும் (பள்ளிவாசலுக்குச்) செல்லும் பாதையில் அமர்ந்துகொண்டேன். அப்போது அபூ பக்ர்(ரலி) அவர்கள் (என்னைக்) கடந்து சென்றார்கள். உடனே நான் இறைவேதத்திலுள்ள ஒரு வசனத்தைப் பற்றி அவர்களிடம் கேட்டேன். என் வயிற்றை அவர்கள் நிரப்புவார்கள் என்பதற்காகவே (அது குறித்து) அவர்களிடம் கேட்டேன். அவர்கள் கடந்து சென்றார்கள்; (என் பசி நீங்க எதுவும்) அவர்கள் செய்யவில்லை. பிறகு உமர்(ரலி) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். உடனே நான் அவர்களிடமும் இறைவேதத்திலுள்ள ஒரு வசனம் குறித்துக் கேட்டேன். அவர்கள் என் வயிற்றை நிரப்புவார்கள் என்பதற்காகவே (அது குறித்து) அவர்களிடம் கேட்டேன். அவர்களும் (என் பசியைப் போக்க) ஒன்றும் செய்யாமல் போய்விட்டார்கள். பிறகு அபுல்காசிம் (நபி-ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். என்னைக் கண்டு, எனக்கு ஏற்பட்டுள்ள (பசி) நிலையையும் என் முகமாற்றத்தையும் அவர்கள் புரிந்துகொண்டு புன்னகைத்தார்கள். பிறகு, 'அபூ ஹிர்ரே! (அபூ ஹுரைராவே!) என்று அழைத்தார்கள். நான் 'இதோ காத்திருக்கிறேன்; இறைத்தூதர் அவர்களே!'' என்றேன். '(என்னைப்) பின்தொடர்ந்து வா!'' என்று சொல்லிவிட்டு நடந்தார்கள். நான் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றேன். நபி(ஸல்) அவர்கள் (தம் இல்லத்தில்) நுழைந்தார்கள். நான் (உள்ளே செல்ல) அனுமதி கோர, எனக்கு அனுமதியளித்தார்கள். நான் உள்ளே சென்றேன். அப்போது (வீட்டில்) ஒரு கோப்பையில் பாலைக் கண்டார்கள். உடனே (தம் துணைவியாரிடம்) 'இந்தப் பால் எங்கிருந்து வந்தது?' என்று கேட்டார்கள். அவர்கள் 'இன்ன 'ஆண்' அல்லது 'பெண்' தங்களுக்கு இதை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்'' என்றார்கள். நபி(ஸல்) அவர்கள் 'அபூ ஹுர்' என அழைத்தார்கள். நான் 'இதோ வந்துவிட்டேன்; இறைத்தூதர் அவர்களே!'' என்றேன். 'திண்ணைவாசிகளிடம் சென்று என்னிடம் அவர்களை அழைத்து வாருங்கள்'' என்றார்கள். திண்ணைவாசிகள் (அஸ்ஹாபுஸ் ஸுஃப்பா) இஸ்லாத்தின் விருந்தினர்கள் ஆவர். அவர்கள் புகலிடம் தேட அவர்களுக்குக் குடும்பமோ செல்வமோ கிடையாது. வேறு யாரிடமும் செல்லவுமாட்டார்கள். நபி(ஸல்) அவர்களிடம் ஏதேனும் தானப்பொருள்கள் வந்தால் அதனை இவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் அனுப்பி விடுவார்கள். அதிலிருந்து தாம் எதையும் எடுத்துக் கொள்ளமாட்டார்கள். தம்மிடம் ஏதேனும் அன்பளிப்புப் பொருள்கள் வந்தால் இவர்களைத் தம்மிடம் அழைத்துவரும்படி ஆளனுப்பி விடுவார்கள். (அவர்கள் வந்தவுடன்) அவர்களுடன் சேர்ந்து தாமும் உண்பார்கள். இப்போது நபி(ஸல்) அவர்கள் (திண்ணைவாசிகளை அழைத்துவரச்) சொன்னதால் எனக்குக் கவலைதான் ஏற்பட்டது. '(இருப்பதோ சிறிதளவு பால்.) திண்ணைவாசிகளுக்கு இந்தப் பால் எம்மாத்திரம்? இதைச் சிறிதளவு பருகி என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கு நானே பொருத்தமானவன். திண்னை வாசிகள் வந்தால், நபியவர்கள் எனக்கு உத்தரவிட, நானே அவர்களுக்குக் கொடுத்துவிட்டு (இறுதியில்) எனக்கு இந்தப் பாலில் ஒன்றும் கிடைக்காமல் போகலாம். இருப்பினும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியாமல் இருக்க இயலாது'' என (மனத்துக்குள்) சொல்லிக் கொண்டேன்.

பிறகு, நான் திண்ணைவாசிகளிடம் சென்று அவர்களை அழைத்தேன். அவர்களும் (அழைப்பை ஏற்று) வந்து (வீட்டுக்குள் நுழைய) அனுமதி கோரினார்கள். நபி(ஸல்) அவர்கள் திண்ணைவாசிகளுக்கு அனுமதி வழங்கினார்கள். அவர்கள் அந்த வீட்டில் ஆங்காங்கே இடம்பிடித்து அமரலானார்கள். நபி(ஸல்) அவர்கள் 'அபூ ஹிர்' என அழைத்தார்கள். நான் 'இதோ காத்திருக்கிறேன்; கூறுங்கள் இறைத்தூதர் அவர்களே!'' என்றேன். நபி(ஸல்) அவர்கள் 'இதை எடுத்து இவர்களுக்குக் கொடுங்கள்'' என்றார்கள். நான் அந்தக் கோப்பையை எடுத்து ஒரு மனிதருக்குக் கொடுத்தேன். அவர் தாகம் தணியும் வரை குடித்தார். பிறகு அவர் என்னிடம் அந்தக் கோப்பையைத் திருப்பித் தந்தார். நான் அதை இன்னொரு மனிதரிடம் கொடுத்தேன். அவரும் தாகம் தீரும் வரை குடித்துவிட்டுக் கோப்பையை என்னிடம் தந்தார். பிறகு இன்னொருவர் தாகம் தீரும் வரை குடித்தார். பிறகு என்னிடம் அதைத் திருப்பித் தந்தார். இறுதியில் நான் நபி(ஸல்) அவர்களிடம் அதைக் கொண்டு சென்றேன். அப்போது மக்கள் அனைவரும் தாகம் தணிந்திருந்தினர். நபி(ஸல்) அவர்கள் அந்தக் கோப்பையை வாங்கித் தம் கையில் வைத்துக்கொண்டு என்னைக் கூர்ந்துப் பார்த்துப் புன்னகைத்தார்கள். பிறகு 'அபூ ஹிர்!' என்று அழைத்தார்கள். நான் 'இதோ காத்திருக்கிறேன்; கூறுங்கள் இறைத்தூதர் அவர்களே!'' என்று சொன்னேன். அதற்கவர்கள் 'நானும் நீங்களும் (மட்டும் தான்) எஞ்சியுள்ளோம் (அப்படித்தானே?)'' என்று கேட்டார்கள். நான் 'இறைத்தூதர் அவர்களே! (ஆம்.) உண்மைதான்'' என்றேன். நபி(ஸல்) அவர்கள் 'உட்கார்ந்து (இதைப் பருகுங்கள்'' என்றார்கள். நான் உட்கார்ந்து பருகினேன். 'இன்னும் பருகுங்கள்'' என்றார்கள். பருகினேன். இவ்வாறு அவர்கள் 'பருகுங்கள்' என்று சொல்லிக் கொண்டேயிருக்க, நான் பருகிக் கொண்டேயிருந்தேன். இறுதியில் 'இல்லை. சத்திய (மார்க்க)த்தைக் கொண்டு தங்களை அனுப்பிவைத்த (இறை)வன் மீது ஆணையாக! இனிப் பருகுவதற்கு வழியே இல்லை'' என்றேன். நபி(ஸல்) அவர்கள் '(சரி) அதை எனக்குக் காட்டுங்கள்'' என்றார்கள். எனவே, நான் அவர்களிடம் அந்தக் கோப்பைக் கொடுத்தேன். உடனே அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனுடைய (திருப்)பெயர் கூறி எஞ்சியதைப் பருகினார்கள்.

2103. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் : ''அல்லாஹ்வே! முஹம்மதின் குடும்பத்தாருக்கு(ப் பசிக்கு) உணவு வழங்குவாயாக!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.

2104. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் : ''இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'உங்களில் யாரையும் அவரின் நற்செயல் ஒருபோதும் காப்பாற்றாது. (மாறாக, அல்லாஹ்வின் தனிப் பெரும் கருணையாலேயே எவரும் காப்பாற்றப்படுவார்)'' என்று கூறினார்கள். மக்கள் 'அல்லாஹ்வின் தூதரே! தங்களையுமா (தங்களின் நற்செயல் காப்பாற்றாது?)'' என்று வினவினார்கள். நபி(ஸல்) அவர்கள் '(ஆம்) என்னையும்தான்; அரவணைத்துக் கொண்டால் தவிர'' என்று கூறிவிட்டு, '(எனவே, நேர்மையோடு (நடுநிலையாகச்) செயல்படுங்கள். நிதானமாக நடந்து கொள்ளுங்கள். (வரம்பு மீறி விடாதீர்கள்.) காலையிலும், மாலையிலும், இரவில் சிறிது நேரமும் நற்செயல் புரியுங்கள். (எதிலும்) நடுநிலை (தவறாதீர்கள்) நடுநிலை(யைக் கடைபிடியுங்கள்.) (இவ்வாறு செய்தால் இலட்சியத்தை) நீங்கள் அடைவீர்கள்'' என்றார்கள்.

2105. ஆயிஷா(ரலி) அறிவித்தார் : ''நற்செயல்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது எது?' என்று நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் '(எண்ணிக்கையில்) குறைவாக இருந்தாலும், (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே'' என்று விடையளித்தார்கள். மேலும், 'நற்செயல்கள் புரிவதில் இயன்றவரை அதன் எல்லையைத் தொடமுயலுங்கள்'' என்றும் கூறினார்கள்.

2106. அல்லாஹ் அன்பையும் கருணையையும் படைத்தபோது அதனை நுறு வகைகளாக அமைத்தான். அவற்றில் தொண்ணூற்று ஒன்பது வகைகளைத் தன்னிடமே வைத்துக் கொண்டான். (மீதியுள்ள) ஒரு வகையை மட்டுமே தன் படைப்புகள் அனைத்துக்கும் வழங்கினான். எனவே, இறைமறுப்பாளன் அல்லாஹ்வின் கருணை முழுவதையும் அறிந்தால், சொர்க்கத்தின் மீது அவநம்பிக்கை கொள்ளமாட்டான். (இதைப்போன்றே) இறைநம்பிக்கையாளர் அல்லாஹ் வழங்கும் வேதனை முழுவதையும் அறிந்தால் நரகத்தைப் பற்றிய அச்சமில்லாமல் இருக்க மாட்டார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நாவைப் பேணிக் காத்தல்.

2107. தம் இரண்டு தாடைகளுக்கு இடையே உள்ளத( நாவி)ற்கும், தம் இரண்டு கால்களுக்கு இடையே உள்ளத (மர்ம உறுப்பி)ற்கும் என்னிடம் உத்தரவாதம் அளிப்பவருககு நான் சொர்க்கத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறேன என்று இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.

2108. ஓர் அடியார் அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பலனைப் பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவரின் அந்தஸ்துகளை உயர்த்திவிடுகிறான். ஓர் அடியார் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாவங்களை விட்டொழிதல்.

2109. எனக்கும் என்னை அல்லாஹ் எ(ந்த மார்க்கத்)தைக் கொண்டு அனுப்பியுள்ளானோ அதற்கும் எடுத்துக்காட்டாகிறது. ஒரு மனிதரின் நிலையைப் போன்றதாகும். அவர் ஒரு சமூகத்தாரிடம் சென்று 'நான் (இன்ன பெரும்) படையை என் கண்களால் பார்த்தேன். (எந்நேரமும் அப்படை உங்களைத் தாக்கலாம். அதை எதிர்கொள்ளும் ஆற்றல் உங்களிடம் இல்லை.) நான், 'நிர்வாணமாக (ஓடி வந்து) எச்சரிக்கை செய்ப(வனைப்) போன்றவன் ஆவேன். எனவே, (ஓடுங்கள்;) தப்பித்துக் கொள்ளுங்கள். தப்பித்துக் கொள்ளுங்கள்'' என்று கூறினார். அப்போது ஒரு பிரிவினர் அவருக்குக் கீழ்ப்படிந்து இரவோடு இரவாக மெல்ல வெளியேறித் தப்பிவிட்டனர். ஆனால், இன்னொரு பிரிவினர் அவரை நம்ப மறுத்தனர். பிறகு அதிகாலையில் அப்படையினர் வந்து அவர்களைத் தாக்கிப் பூண்டோடு அழித்தனர் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.

மன இச்சைகளால் நரகம் மூடப்பட்டுள்ளது.

2110. மன இச்சைகளால் நரகம் மூடப்பட்டுள்ளது. சிரமங்களால் சொர்க்கம் மூடப்பட்டுள்ளது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

சொர்க்கம் உங்களின் செருப்பு வாரைவிட மிக அருகில் உள்ளது. நரகமும் அதைப்போன்றுதான்.

2111. சொர்க்கம் உங்களின் செருப்பு வாரைவிட உங்களுக்கு மிக அருகில் உள்ளது. நரகமும் அதைபோன்றே (மிக அருகில் உள்ளது.) என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

(செல்வத்தில்) தன்னைவிடக் கீழ் நிலையில் இருப்பவரை (மனிதன்) பார்க்கட்டும்; தன்னை விட மேல் நிலையில் இருப்பவரைப் பார்க்க வேண்டாம்.

2112. செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழனாவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நன்மை அல்லது தீமை செய்ய எண்ணுவது.

2113. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் : (ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பற்றி அறிவிக்கையில் (பின்வருமாறு) கூறினார்கள்: அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும் (அவை இன்னின்னவை என நிர்ணயித்து) எழுதிவிட்டான். பிறகு அதனை விவரித்தான். அதாவது ஒருவர் ஒரு நன்மை செய்யவேண்டும் என (மனத்தில்) எண்ணிவிட்டாலே அதைச் செயல்படுத்தா விட்டாலும் அவருக்காகத் தன்னிடம் அதை ஒரு முழு நன்மையாக அல்லாஹ் பதிவு செய்கிறான். அதை அவர் எண்ணியதுடன் செயல்படுத்தியும் விட்டால், அந்த ஒரு நன்மையைத் தன்னிடம் பத்து நன்மைகளாக, எழு நூறு மடங்காக, இன்னும் அதிகமாக அல்லாஹ் பதிவு செய்கிறான். ஆனால் ஒருவர் ஒரு தீமை செய்ய எண்ணி, (அல்லாஹ்வுக்கு அஞ்சி) அதைச் செய்யாமல் கைவிட்டால், அதற்காக அவருக்குத் தன்னிடம் ஒரு முழு நன்மையை அல்லாஹ் எழுதுகிறான். எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து முடித்துவிட்டாலோ, அதற்காக ஒரேயொரு குற்றத்தையே அல்லாஹ் எழுதுகிறான்.

நம்பகத் தன்மை (மக்களிடமிருந்து) அகன்று விடல்.

2114. ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அறிவித்தார் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களுக்கு (நம்பகத்தன்மை தொடர்பாக) இரண்டு செய்திகளைக் கூறினார்கள். அவற்றில் ஒன்றை நான் (என் வாழ்நாளிலேயே) பார்த்துவிட்டேன். மற்றொன்றை எதிர்பார்த்திருக்கிறேன். ஒரு செய்தி யாதெனில், (இயற்கையாகவே) மனிதர்களின் ஆழ்மனதில் ('அமானத்' எனும்) நம்பகத்தன்மை இடம் பிடித்தது. பின்னர் அவர்கள் குர்ஆனிலிருந்தும் (அதை) அறிந்து கொண்டார்கள். பிறகு (என்னுடைய வழியான) சுன்னாவிலிருந்தும் (அதை)அறிந்து கொண்டார்கள். (நபியவர்கள் கூறிய இதை நான் பார்த்துவிட்டேன்.) இரண்டாவது செய்தி, நம்பகத்தன்மை அகற்றப்படுவது தொடர்பானதாகும். மனிதன் ஒரு முறை உறங்குவான். (உறக்கத்திலேயே) அவனுடைய உள்ளத்திலிருந்து நம்பகத்தன்மை (சிறிது) கைப்பற்றப்படும். அதையடுத்து அ(து அகற்றப்பட்ட)தன் அடையாளம் சிறு (கரும்) புள்ளி அளவுக்கு (அவனில்) தங்கிவிடும். பிறகு மீண்டும் ஒரு முறை அவன் உறங்குவான். அப்போது (மறுபடியும்) அது கைப்பற்றப்படும். இம்முறை அ(து அகற்றப்பட்ட) தன் அடையாளம் (கடின உழைப்பால் கையில் ஏற்படும்) காய்ப்பு அளவுக்கு (அவனில்) நிலைத்துவிடும். (இவ்வாறு முதலில் 'நம்பகத் தன்மை' எனும் ஒளி உள்ளத்தில் ஏற்றப்பட்டுப் பிறகு சிறிது சிறிதாக அது அணைக்கப்படுவதானது) காலில் தீக்கங்குகளை உருட்டிவிட்டு, அதனால் கால் கொப்பளித்து உப்பிவிடுவதைப் போன்றதாகும். பார்வையில் அது உப்பிப் பெரிதாகத் தெரியுமேதவிர, அதனுள் ஒன்றும் இருக்காது. பின்னர் காலையில் மக்கள் தங்களிடையே கொடுக்கல் வாங்கல் செய்து கொள்வார்கள். (ஆனால், அவர்களில்) யாருமே நம்பிக்கையைக் காப்பாற்ற எத்தனிக்கமாட்டார்கள். இன்னாருடைய மக்களில் நம்பிக்கையான ஒருவர் இருக்கிறார் என்று (தேடிக் கண்டுபிடித்து) சொல்லப்படும் (அளவுக்கு நம்பிக்கையாளர்கள் அரிதாகிவிடுவார்கள். மேலும், ஒருவரைப் பற்றி, 'அவரின் அறிவுதான் என்ன? அவரின் விவேகம்தான் என்ன? அவரின் வீரம்தான் என்ன?' என்று (சிலாகித்துக்) கூறப்படும். ஆனால், அந்த மனிதருடைய இதயத்தில் கடுகளவு கூட நம்பிக்கை இருக்காது. (அறிவிப்பாளர்: ஹுதைஃபா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:) என் மீது ஒரு காலம் வந்திருந்தது. அக்காலத்தில் நான் உங்களில் யாரிடம் கொடுக்கல் வாங்கல் செய்கிறேன் என்று பொருட்படுத்தியதில்லை. (ஏனெனில்,) முஸ்லிமாக இருந்தால், இஸ்லாம் (என்னுடைய பொருளை அவரிடமிருந்து) என்னிடம் திருப்பித் தந்துவிடும். கிறிஸ்தவராக இருந்தால் அவருக்கான அதிகாரி என்னுடைய பொருளை அவரிடமிருந்து எனக்கு மீட்டுத் தந்துவிடுவார். ஆனால், இன்றோ நான் இன்னார், இன்னாரிடம் மட்டுமே கொடுக்கல் வாங்கல் செய்கிறேன்.

2115. மனிதர்கள் (பொதி சுமக்கும்) நூறு ஒட்டகங்கள் போன்றவர்கள். அவற்றில் பயணத்திற்குப் பயன்படும் ஒட்டகத்தை நீ காண்பது அரிது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

முகஸ்துதியும் விளம்பரமும்.

2116. ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார் : நான் நபி(ஸல்) அவர்களுக்கு அருகில் சென்றேன். அப்போது அவர்கள் 'விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறவர் (உடைய நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நாளில்) விளம்பரப்படுத்துவான். முகஸ்துதிக்காக நற்செயல் புரிகிறவரை அல்லாஹ் (மறுமை நாளில்) அம்பலப்படுத்துவான்'' என்று கூறியதைக் கேட்டேன். அறிவிப்பாளர் ஸலமா இப்னு குஹைல்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : இந்த ஹதீஸை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜுன்துப்(ரலி) அவர்கள் தவிர வேறு யாரிடமும் நான் கேட்டதில்லை.

பணிவு.

2117. அல்லாஹ் கூறினான்: எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கிற செவியாக, அவன் பார்க்கிற கண்ணாக, அவன் பற்றுகிற கையாக, அவன் நடக்கிற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறைநம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எச்செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

அல்லாஹ்வை தரிசிக்க விரும்புகிறவரைச் சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகிறான்.

2118. உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள் 'அல்லாஹ்வை தரிசிக்க விரும்புகிறவரைச் சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகிறான். அல்லாஹ்வை தரிசிப்பதை வெறுக்கிறவரைச் சந்திப்பதை அல்லாஹ்வும் வெறுக்கிறான்'' என்று கூறினார்கள். அப்போது 'ஆயிஷா(ரலி) அவர்கள்' அல்லது 'நபி(ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவர்' 'நாங்கள் மரணத்தை வெறுக்கிறோம்'' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் '(அல்லாஹ்வின் தரிசனம் என்பதற்குப் பொருள்) அதுவல்ல. மாறாக, இறைநம்பிக்கையாளருக்கு இறப்பு நேரம் வரும்போது, அவரைப் பற்றி அல்லாஹ் திருப்தி அடைந்திருப்பதாகவும் அவரைக் கௌரவிப்பதாகவும் அவருக்கு நற்செய்தி கூறப்படும். அப்போது இறப்புக்குப் பின்னால் உள்ள (மறுமை) வாழ்வைவிட விருப்பமானதாக வேறெதுவும் அவருக்கு இராது. எனவே, அவர் அல்லாஹ்வை தரிசிக்க விரும்புவார். அல்லாஹ்வும் அவரைச் சந்தி(த்து உபசரி)க்க விரும்புவான். இறைமறுப்பாளனுக்கு மரணவேளை வரும்போது, அல்லாஹ் வழங்கும் வேதனை குறித்தும் தண்டனை குறித்தும் அவனுக்கு அறிவிக்கப்படும். அப்போது மரணத்திற்குப் பின்னால் உள்ள (மறுமை) வாழ்வை விட வெறுப்பானதாக வேறெதுவும் அவனுக்கு இராது. எனவே, அவன் அல்லாஹ்வை தரிசிப்பதை வெறுப்பான்; அல்லாஹ்வும் அவனைச் சந்தி(த்து அருள் பாலி)ப்பதை வெறுப்பான்'' என்று (விளக்கம்) சொன்னார்கள். இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

மரணத்தின் வேதனைகள்.

2119. ஆயிஷா(ரலி) அறிவித்தார் : கடின சுபாவம் படைத்த கிராமவாசிகள் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'மறுமை நாள் எப்போது?' என்று கேட்பார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவர்களிலேயே வயதில் சிறியவரான ஒருவரை நோக்கி 'இவர் உயிர் வாழ்ந்தால், இவரை முதுமை அடைவதற்கு முன்பே உங்களின் மீது மறுமை சம்பவித்து விடும்'' என்று கூறுவார்கள். இங்கு 'மறுமை' (ஸாஅத்) என்பது மரணத்தைக் குறிக்கும் என (அறிவிப்பாளர்) ஹிஷாம் இப்னு உர்வா(ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

மறுமை நாளில் அல்லாஹ் பூமியைக் கைப்பற்றிக் கொள்வான்.

2120. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள் 'மறுமை நாளில் இந்த பூமி (அடுப்பில் இருக்கும்) ஒரு ரொட்டியைப் போன்று (சமதளமாக) மாறிவிடும். பயணத்திலுள்ள உங்களில் ஒருவர் தம் ரொட்டியை (அடுப்பிலிருந்து எடுத்துக் கையில் வைத்து)ப் புரட்டுவதைப் போன்று, சர்வ வல்லமை படைத்த (இறை)வன் பூமியைத் தன்னுடைய கரத்தால் புரட்டிப்போடுவான். (அதையே) சொர்க்கவாசிகளுக்கு விருந்தாக்குவான்'' என்று கூறினார்கள். அப்போது யூதர்களில் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'அபுல் காசிமே! அளவற்ற அருளாளன் உங்களுக்கு சுபிட்சம் அளிக்கட்டும். மறுமை நாளில் சொர்க்கவாசிகளின் விருந்துணவு என்னவென்று உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் 'சரி' என்றார்கள். அவர் நபி(ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்றே 'மறுமை நாளில் இந்த பூமி ஒரேயொரு ரொட்டியைப் போன்று இருக்கும்'' என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் எங்களைக் கூர்ந்து பார்த்துவிட்டு, தம் கடைவாய்ப் பற்கள் தெரிய சிரித்தார்கள். பிறகு 'உங்களுக்கு சொர்க்கவாசிகளின் குழம்பு எது எனத் தெரிவிக்கட்டுமா?' என்று அந்த யூதர் கேட்டுவிட்டு அவர்களின் குழம்பு 'பாலாம்' மற்றும் 'நூன்' என்றார். மக்கள் 'இது என்ன?' என்று கேட்டார்கள். அந்த யூதர் '(அவை) காளைமாடும் மீனும் ஆகும். அந்த இரண்டின் ஈரல்களுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் தனித் துண்டை (மட்டுமே சொர்க்கவாசிகளில்) எழுபதாயிரம் பேர் புசிப்பார்கள்'' என்று கூறினார்.

2121. (உமியோ தவிடோ கலக்காத) சுத்தமான மாவினாலான ரொட்டியைப் போன்று தூய வெண்மையான (சம) தளத்தின் மீது மறுமை நாளில் மனிதர்கள் ஒன்று திரட்டப்படுவார்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதன் அறிவிப்பாளரான ஸஹ்ல்(ரலி) அவர்கள், அல்லது மற்றொருவர் 'அந்த பூமியில் (மலை, மடுவு, காடு, வீடு என) எந்த அடையாளமும் யாருக்கும் இருக்காது'' என்று (கூடுதலாக) அறிவித்தார்கள்.

(மறுமையில் மக்கள்) ஒன்று திரட்டப்படுவது எப்படி?

2122. (மறுமை நாள் ஏற்படுவதற்கு சற்று முன் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி) மக்கள் மூன்று பிரிவினராக ஒன்று திரட்டப்படுவார்கள். (அதில் முதல் பிரிவினர்) அச்சத்துடனும் ஆர்வத்துடனும் செல்வார்கள். (இரண்டாவது பிரிவினர்) (வாகனப் பற்றாக்குறையினால் தாமதித்துப் பின்னர்) ஒரே ஒட்டகத்தின் மீது இரண்டு பேராக, ஒரே ஒட்டகத்தின் மீது மூன்று பேராக, ஒரே ஒட்டகத்தின் மீது நான்கு பேராக, ஒரே ஒட்டகத்தின் மீது பத்துப் போராகச் செல்வார்கள். அவர்களில் எஞ்சியவர்(களே மூன்றாவது பிரிவினராவர். அவர்)களை (பூமியில் ஏற்படும் ஒரு பெரும்) தீ (விபத்து) ஒன்று திரட்டும். அவர்கள் மதிய ஓய்வெடுக்கும்போதும், இரவில் ஓய்வெடுக்கும் போதும், காலை நேரத்தை அடையும்போதும், மாலை நேரத்தை அடையும் போதும் (இப்படி எல்லா நேரங்களிலும்) அந்தத் தீ அவர்களுடனேயே இருக்கும்.

2123. ஆயிஷா(ரலி) அறிவித்தார் : ''நீங்கள் மறுமைநாளில் செருப்பணியாதவர்களாக, நிர்வாணமானவர்களாக, விருத்த சேதனம் செய்யப்படாதவர்களாக ஒன்று திரட்டப் படுவீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே நான் 'இறைத்தூதர் அவர்களே! (நிர்வாணமான) ஆண்களும் பெண்களும் சிலரை சிலர் பார்ப்பார்களே?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அந்த எண்ணம் அவர்களுக்கு ஏற்படாத அளவுக்கு (அங்குள்ள) நிலைமை மிகக் கடுமையானதாக இருக்கும்'' என்று கூறினார்கள்.

2124. மறுமைநாளில் மனிதர்களுக்கு (அவர்களின் தலைக்கருகில் நெருங்கி வரும் சூரியனால்) வியர்வை ஏற்படும். அவர்களின் வியர்வை தரையினுள் எழுபது முழம் வரை சென்று, (தரைக்கு மேல்) அவர்களின் வாயை அடைந்து, இறுதியில் அவர்களின் காதையும் அடையும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

மறுமைநாளில் பழிதீர்க்கப்படுதல்.

2125. மறுமை நாளில் மனிதர்களுக்கிடையே முதன் முதலில் தீர்ப்பளிக்கப்படுவது (உலகில் சிந்தப்பட்ட) இரத்தங்கள் (கொலைகள்) குறித்துதான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

2126. சொர்க்கவாசிகள் சொர்க்கத்திற்கும், நரகவாசிகள் நரகத்திற்கும் சென்று சேர்ந்த பிறகு 'மரணம்' (ஓர் ஆட்டின் உருவத்தில்) கொண்டு வரப்பட்டு, சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையே நிறுத்தப்படும். பின்னர் அது அறுக்கப்படும். பிறகு அறிவிப்பாளர் ஒருவர் 'சொர்க்கவாசிகளே! (இனி) மரணம் என்பதே கிடையாது. நரகவாசிகளே! (இனி) மரணம் என்பதே கிடையாது'' என அறிவிப்பார். அப்போது சொர்க்கவாசிகளுக்கு மகிழ்ச்சிக்கு மேல் மகிழ்ச்சி அதிகமாகும். நரகவாசிகளுக்குக் கவலைக்கு மேல் கவலை அதிகமாகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

2128. (நரகத்தில்) இறைமறுப்பாளனின் இரண்டு தோள் புஜங்களுக்கிடையே உள்ள தூரம், துரிதமாகப் பயணிப்பவர் மூன்று நாள்கள் கடக்கும் தூரமாகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

2129. சிலர் (நரக நெருப்பு தீண்டியதால்) தம் சருமத்தின் நிறம் மாறிய பின் நரகத்திலிருந்து வெளியேறி, சொர்க்கத்துக்குள் நுழைவார்கள். அவர்களை சொர்க்கவாசிகள் 'ஜஹன்னமியயூன்' (நரக விடுதலை பெற்றோர்) எனப் பெயரிட்டு அழைப்பார்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

2130. மறுமை நாளில் நரகவாசிகளிலேயே மிகவும் இலேசாக வேதனை செய்யப்படுபவர் ஒரு மனிதராவார். அவரின் உள்ளங்கால்களின் நடுவில் இரண்டு நெருப்புக் கங்குகள் வைக்கப்படும். (அடுப்பில் வைக்கப்பட்டுள்ள) செம்புப் பாத்திரம் (அல்லது) பன்னீர் பாத்திரம் கொதிப்பதைப் போன்று அவற்றால் அவரின் மூளை கொதிக்கும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹூரைரா(ரலி)அறிவித்தார்.

2131. (சொர்க்கவாசிகளில்) எவரும், (உலக வாழ்வில்) தாம் பாவம் புரிந்திருந்தால் நரகத்தில் தம் இருப்பிடம் எதுவாக இருந்திருக்கும் என்று காட்டப்படாமல் சொர்க்கத்தில் நுழையமாட்டார். அவர் அதிகமாக (மகிழ்ச்சியடைந்து இறைவனுக்கு) நன்றி செலுத்துவதற்காகவே (இவ்வாறு காட்டப்படும்). (நரகவாசிகளில்) எவரும், (உலக வாழ்வில்) தாம் நன்மை புரிந்திருந்தால் சொர்க்கத்தில் தம் இருப்பிடம் எதுவாக இருந்திருக்கும் என்று காட்டப்படாமல் நரகத்தில் நுழையமாட்டார். இது அவருக்கு (பெரும்) துயரமாக அமையவேண்டும் என்பதற்காகவே (காட்டப்படுகிறது.) என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

2132. (மறுமை நாளில் என்னுடைய 'அல்கவ்ஸர்' எனும்) தடாகம் உங்களுக்கு முன்னால் இருக்கும். (அதன் விசாலமானது, அன்றைய ஷாம் நாட்டின்) 'ஜர்பா' மற்றும் 'அத்ருஹ்' ஆகிய இடங்களுக்கிடையேயான தூரமாகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

2133. ('அல்கவ்ஸர்' எனும்) என் தடாகம் ஒரு மாத காலப் பயணத் தொலைதூரம் (பரப்பளவு) கொண்டதாகும். அதன் நீர் பாலை விட வெண்மையானது. அதன் மணம் கஸ்தூரியை விட நறுமணம் வாய்ந்தது. அதன் கூஜாக்கள் விண்மீன்கள் போன்றவை. யார் அதன் நீரை அருந்துகிறார்களோ அவர்கள் ஒருபோதும் தாகமடையமாட்டார்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.

2134. என் தடாகத்தின் (பரப்பு) அளவு யமனிலுள்ள 'ஸன்ஆ' நகரத்திற்கும் (ஷாம் நாட்டை ஒட்டியிருந்த) 'அய்லா' நகரத்திற்கும் இடையேயான (தொலை தூரத்)தைப் போன்றதாகும். மேலும், அதில் விண்மீன்களின் எண்ணிக்கையைப் போன்று (கணக்கிடலங்கா) கோப்பைகள் (வைக்கப்பட்டு) இருக்கும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

2135. நான் உறங்கிக்கொண்டிருந்தேன். அப்போது (கனவில்) நான் (அல்கவ்ஸர் தடாகத்தினருகில்) நின்று கொண்டிருக்கிறேன். அப்போது ஒரு குழுவினரை நான் அடையாளம் கண்டுகொள்கிறேன். எனக்கும் அவர்களுக்குமிடையே ஒரு(வான)வர் தோன்றி (அந்தக் குழுவினரை நோக்கி), 'வாருங்கள்' என்று அழைக்கிறார். உடனே நான் (அவரிடம் 'எங்கே (இவர்களை அழைக்கிறீர்கள்)?' என்றேன். அவர் 'அல்லாஹ்வின் மீதாணையாக! நரகத்திற்கு'' என்றார். நான் 'இவர்கள் என்ன செய்தார்கள்?' என்றேன். அவர் 'உங்களுக்குப் பின்னால் இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே மதம் மாறிச் சென்றார்கள்'' என்றார். பிறகு மற்றொரு குழுவினரையும் நான் அடையாளம் கண்டு கொள்கிறேன். எனக்கும் அவர்களுக்குமிடையே ஒரு (வான)வர் தோன்றி, 'வாருங்கள்' என (அவர்களிடம்) கூறுகிறார். நான் '(இவர்களை) எங்கே (அழைக்கிறீர்கள்)?' என்றேன். அவர் 'அல்லாஹ்வின் மீதாணையாக! நரகத்திற்குத்தான்'' என்றார். நான் 'இவர்கள் என்ன செய்தார்கள்?' என்று கேட்டேன். அவர் 'இவர்கள் உங்களுக்குப் பின்னால் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே மதம் மாறிப் போய்விட்டார்கள்'' என்று பதிலளித்தார். அவர்களில் காணாமல் போன ஒட்டகத்தைப் போன்று ஒரு சிலரைத் தவிர வேறெவரும் தப்பித்துக் கொள்வார்கள் என நான் கருதவில்லை என்று இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

2136. ஹாரிஸா இப்னு வஹ்ப்(ரலி) அறிவித்தார் : (ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் ('அல்கவ்ஸர்') எனும் தடாகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போது '(அதன் பரப்பளவானது,) மதீனாவுக்கும் (யமனிலுள்ள) 'ஸன்ஆ' நகரத்துக்கும் இடையேயான தூரமாகும்'' என்று கூறினார்கள்.

Wed 25

Click here to bookmark this link.Channel Image04:07 இயற்பெயரை விட இறைத்தூதர் இட்ட பெயரே இஷ்டமானது! ஸஹாபாக்களின் வாழ்வினிலே...
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்கள்;
(தம் பெயர்களில்) 'அபூ துராப்' (மண்ணின் தந்தை) எனும் பெயரைவிட வேறெந்தப் பெயரும் அலீ(ரலி) அவர்களுக்கு விருப்பமானதாக இருக்கவில்லை. அப்பெயர் கூறி அழைக்கப்படும்போது அவர்கள் (மிகவும்) மகிழ்வார்கள். (ஒரு நாள்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் புதல்வி) ஃபாத்திமா(ரலி) அவர்களின் இல்லத்திற்கு வந்தார்கள். அப்போது அலீ அவர்களை வீட்டில் காணவில்லை. எனவே, நபி அவர்கள் 'உன் பெரிய தந்தையின் புதல்வர் (உன் கணவர்) எங்கே? என்று கேட்டார்கள். அதற்கு ஃபாத்திமா(ரலி) அவர்கள், 'எனக்கும் அவருக்குமிடையே ஒரு சின்ன பிரச்சினை ஏற்பட்டுவிட்டது. எனவே, அவர் கோபித்துக் கொண்டு என்னிடம் மதிய ஓய்வெடுத்துக் கொள்ளாமல் வெளியே சென்றார் என்று பதிலளித்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், 'அவர் எங்கே என்று பார்' என்றார்கள். அவர் (சென்று தேடிவிட்டு) வந்து, 'இறைத்தூதர் அவர்களே! அவர் பள்ளிவாசலில் உறங்கி கொண்டிருக்கிறார்' என்றார். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (பள்ளிவாசலுக்கு) வந்தார்கள். அப்போது அலீ(ரலி) அவர்கள் தங்களின் மேனியிலிருந்து மேல் துண்டு கீழே விழுந்து கிடக்க, உடம்பில் மண் படிந்த நிலையில் ஒருக்களித்துப் படுத்திருந்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அந்த மண்ணை அவர்களின் உடலிலிருந்து துடைத்துக் கொண்டே 'அபூ துராப்! (மண்ணின் தந்தையே!) எழுங்கள். அபூ துராபே ! எழுங்கள்' என்று (இரண்டு முறை) கூறினார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 6280

அன்பானவர்களே! பொதுவாக நம்மை யாரேனும் பட்டபெயர் சூட்டி அழைத்தால் நமக்கு கோபம் வரும். ஆனால் அலீ]ரலி] அவர்களுக்கோ, அவரது இயற்பெயர் மட்டுமன்றி சில காரனப்பெயர்களும் உள்ள நிலையில், அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களால் கேலியாக சொல்லப்பட்ட 'அபூ துராப்' என்ற பெயரில் தன்னை யாரேனும் அழைத்தால் அதில் மிகவும் மகிழக்கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள் என்றால் இறைத்தூதர்[ஸல்] அவர்கள் மீது அலீ[ரலி] அவர்கள் கொண்ட நேசம் வெளிப்படுகிறது. மேலும், அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள், தான் ஒரு நபி என்ற கர்வம் சிறிதும் இன்றி அலீ[ரலி] அவர்களின் உடம்பில் ஒட்டியிருந்த மண்ணை துடைக்கிறார்கள் என்றால், இங்கே நபி[ஸல்] அவர்களின் எளிமையும், அலீ[ரலி] அவர்கள் மீது கொண்ட பாசமும் வெளிப்படுவதை காணலாம். எனவே இறைத்தூதர் ஒரு தாயின் பரிவோடு தன் தோழர்களை அணுகியிருக்கிறார்கள் என்பதும் இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தின் மூலம் நம்மால் விளங்கிக்கொள்ள முடிகிறது. நபியவர்களின் நேசத்திற்குரிய அலீ[ரலி] அவர்களை சிலர், 'எடுப்பார் கைப்பிள்ளை' என்றெல்லாம் ஏளனமாக வர்ணிப்பது உள்ளபடியே வேதனைக்குரியது.

Tue 24

Click here to bookmark this link.Channel Image17:07 [பாடம்-73] பிரார்த்தனைகள். முக்தஸர் ஸஹீஹுல் புகாரி
ஒவ்வோர் இறைத் தூதருக்கும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பிரார்த்தனை உண்டு.

2069. ஒவ்வோர் இறைத்தூதருக்கும் அவர் (தம் சமுதாயத்தாருக்காகப்) பிரார்த்தித்துக் கொள்ள அங்கீகரிக்கப்பட்ட பிரார்த்தனை ஒன்று (வழங்கப்பட்டு) உள்ளது. நான் என்னுடைய பிரார்த்தனையை, மறுமையில் என் சமுதாயத்தாருக்குப் பரிந்துரை செய்வதற்காகப் பத்திரப்படுத்தவே விரும்புகிறேன் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாவமன்னிப்புக் கோரலில் சிறந்தது.

2070. ''அல்லாஹும்ம! அன்த்த ரப்பீ. லா இலாஹ இல்லா அன்த்த. கல்க்த்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க, வ வஅதிக்க மஸ்ததஅத்து. அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸனஅத்து. அபூ உ லக்க பி நிஅமத்திக்க அலய்ய, வ அபூ உ லக்க பி தன்பீ. ஃபஃக்பிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக்பிருத் துனூப இல்லா அன்த்த'' என்று ஒருவர் கூறுவதே தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரலாகும். (பொருள்: அல்லாஹ்! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமை. நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதி மொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்றவரை நிறைவேற்றியுள்ளேன். நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். நீ எனக்கு அருட் கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். மேலும், நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் (மறைக்காமல்) ஒப்புக்கொள்கிறேன். எனவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறெவரும் இல்லை.) இந்தப் பிரார்த்தனையை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் பகலில் கூறிவிட்டு அதே நாளில் மாலை நேரத்திற்கு முன்பாக இறப்பவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார். இதை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் இரவில் கூறிவிட்டுக் காலை நேரத்திற்கு முன்பே இறந்து விடுகிறவரும் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார் என ஷத்தாத் இப்னு அவ்ஸ்(ரலி) அறிவித்தார்.

பகலிலும் இரவிலும் நபி(ஸல்) அவர்கள் கேட்ட பாவமன்னிப்புக் கோரல் (உடைய அளவு).

2071. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் : ''அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நாளில் எழுபது முறைக்கு மேல் 'அஸ்தஃக் ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி' என்று கூறுகிறேன் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன். (பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கமே திரும்புகிறேன்.)

பாவத்தைக் கைவிட்டு இறைவன் பக்கம் திரும்புவதே (தவ்பா).

2072. ஹாரிஸ் இப்னு சுவைத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் எங்களுக்கு இரண்டு ஹதீஸ்களை அறிவித்தார்கள். அவற்றில் ஒன்றை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனக் குறிப்பிட்டார்கள். மற்றொன்றைக் தாமாகக் கூறினார்கள். (அவையாவன:) 1. இறைநம்பிக்கையாளர் தம் பாவங்களை மலைகளைப் போன்று (பாரமாகக்) கருதுவார். அவர் ஒரு மலை அடிவாரத்தில் உட்கார்ந்திருப்பதைப் போன்றும், அந்த மலைத் தம் மீது விழுந்துவிடுமோ என அஞ்சுபவரைப் போன்றும் அவர் இருப்பார். ஆனால், பாவியோ தன் பாவங்களைத் தன்னுடைய மூக்கின் மேல் பறந்து செல்லும் ஈயைப் போன்று (அற்பமாகக்) காண்பான் - இதைக் கூறியபோது இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் தங்களின் மூக்குக்கு மேலே (ஈயை) விரட்டுவது போன்று தம் கையால் சைகை செய்தார்கள். பிறகு அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் (பின்வருமாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனச்) சொன்னார்கள்: 2. ஒரு மனிதன் (பயணத்தினிடையே) ஓய்வெடுக்க ஓரிடத்தில் இறங்கினான். அந்த இடத்தில் அவனுக்கு (உணவோ தண்ணீரோ கிடைக்காது என்பதால்) ஆபத்து (காத்து) இருந்தது. அவனுடைய உணவும் பானமும் வைக்கப்பட்டிருந்த அவனுடைய வாகனப் பிராணியும் அவனுடன் இருந்தது. அப்போது அவன் தலையைக் கீழேவைத்து ஒரு (குட்டித்) தூக்கம் தூங்கி எழுந்தான். அப்போது அவனுடைய வாகனப் பிராணி (தப்பி ஒடிப்) போயிருந்தது. (எனவே அவன் அதைத் தேடிப் புறப்பட்டான்.) அப்போது அவனுக்குக் 'கடுமையான வெப்பமும் தாகமும்' அல்லது 'அல்லாஹ் நாடிய (கஷ்டம்) ஒன்று' ஏற்பட்டது. அவன், 'நான் முன்பிருந்த அதே இடத்திற்குத் திரும்பிச் செல்கிறேன்'' என்று கூறியவாறு (அங்கு) திரும்பிச் சென்றான். பிறகு ஒரு (குட்டித்) தூக்கம் தூங்கினான். பிறகு தன் தலையை உயர்த்தினான். அப்போது தப்பிப்போன தன்னுடைய பிராணி தன்னருகில் இருப்பதைக் கண்டான். (இப்போது அவன் எந்த அளவுக்கு மகிழ்வான்!) அந்த மனிதன் மகிழ்ச்சி அடைவதை விடத் தன் அடியான் தவ்பா - பாவமன்னிப்புக் கோரித் தன்னிடம் திரும்புவதால் அல்லாஹ் அதிகம் மகிழ்கிறான். இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

உறங்கச் செல்லும்போது ஓத வேண்டியது.

2073. ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள் படுக்கைக்குச் செல்லும்போது, 'பிஸ்மிக்க அமூத்து வ அஹ்யா'' ( (இறைவா!) உன் பெயர் கூறியே இறக்கிறேன்; உயிர் வாழவும் செய்கிறேன்) என்று கூறுவார்கள். (உறக்கத்திலிருந்து) எழும்போது 'அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹிந் நுஷூர்'' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவன் எங்களை இறக்கச் செய்த பின்னர் எங்களுக்கு உயிரூட்டினான். மேலும், (மண்ணறையிலிருந்து வெளியேறி) அவனிடமே செல்லவேண்டியுள்ளது) என்று கூறுவார்கள்.

வலப் பக்கத்தில் சாய்ந்து உறங்குவது.

2074. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் படுக்கைக்குச் சென்றால், வலப் பக்கத்தில் சாய்ந்து உறங்குவார்கள். பிறகு, 'அல்லாஹும்ம அஸ்லமத்து நஃப்ª இலைக்க, வ வஜ்ஜஹ்த்து வஜ்ஹீ இலைக்க. வ ஃபவ்வள்த்து அம்ரீ இலைக்க. வ அல்ஜஃத்து ழஹ்ரி இலைக்க, ரஃக்பத்தன் வ ரஹ்பத்தன் இலைக்க. லா மல்ஜஅ வலா மன்ஜா மின்க்க இல்லா இலைக்க. ஆமன்த்து பி கித்தாபிக்கல்லதீ அன் ஸல்த்த. வபி நபிய்யிக்கல்லதீ அர்சல்த்த'' என்று ஓதுவார்கள். (பொருள்: இறைவா! உனக்கு நான் அடிபணிந்தேன். என்னுடைய முகத்தை உன்னை நோக்கித் திரும்பினேன். என்னுடைய காரியம் அனைத்தையும் உன்னிடம் ஒப்படைத்தேன். என் விவகாரங்கள் அனைத்திலும் உன்னையே சார்ந்திருக்கிறேன். உன் மீதுள்ள ஆவலாலும் (அதே நேரத்தில்) உன் மீதுள்ள அச்சத்தாலும் (இதை நான் செய்கிறேன்). உன்னிடமிருந்து தப்பிக்கவும் ஒதுங்கிடவும் உன்னைத் தவிர வேறு போக்கிடமில்லை. நீ அருளிய உன் வேதத்தையும், நீ அனுப்பிவைத்த உன் நபியையும் நான் நம்பினேன்) மேலும், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'இவற்றைக் கூறிவிட்டு அன்னைறய இரவே இறந்து விடுகிறவர் (இஸ்லாம் எனும்) இயற்கை மரபில் இறந்தவராவார்'' என்று கூறினார்கள்.

இரவில் (இடையே) விழிக்கும்போது ஓத வேண்டியது.

2075. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் : நான் (என் சிறிய தாயாரும் நபியவர்களின் துணைவியாருமான) மைமூனா(ரலி) அவர்களிடம் (அவர்கள் இல்லத்தில்) இரவில் தங்கியிருந்தேன். நபி(ஸல்) அவர்கள் (இரவில்) எழுந்து தம் இயற்கைக் கடனை நிறைவேற்றச் சென்றார்கள். (பிறகு வந்து) தம் முகத்தையும் கைகளையும் கழுவினார்கள். பிறகு உறங்கினார்கள். பின்னர் எழுந்து தண்ணீர் பையை நோக்கிச் சென்று அதன் (சுருக்கிக்) கயிற்றை அவிழ்த்தார்கள். பின்னர் (ஒன்றுக்கும்) அதிகமான முறைகள் உறுப்புகளைக் கழுவிடாமல், நடுநிலையாக அங்கசுத்தி (உளூ) செய்தார்கள். அதை நிறைவாகச் செய்தார்கள். பிறகு தொழுதார்கள். நானும் (மெல்ல) எழுந்தேன். நான் அவர்களை நோட்டமிட்டுக் கொண்டிருப்பதை அவர்கள் காண்பது எனக்கு விருப்பமில்லாததால் மெதுவாக எழுந்து அங்கசுத்தி செய்தேன். அப்போது அவர்கள் தொழுவதற்காக நின்றார்கள். நான் அவர்களின் இடப்பக்கத்தில் நின்றேன். உடனே அவர்கள் என் காதைப்பிடித்துச் சுற்றி அப்படியே என்னைத் தம் வலப் பக்கத்திற்குக் கொண்டு வந்தார்கள். பிறகு (தொழத் தொடங்கி) பதிமூன்று ரக்அத்களுடன் தம் தொழுகையை முடித்துக் கொண்டார்கள். பின்னர் குறட்டைவிட்டபடி உறங்கினார்கள். (பொதுவாக) அவர்கள் உறங்கும்போது குறட்டை விடுவார்கள். அப்போது அவர்களை பிலால்(ரலி) அவர்கள் தொழுகைக்காக அழைத்தார்கள். எனவே, அவர்கள் (எழுந்து புதிதாக) அங்கசுத்தி செய்யாமலேயே தொழுதார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் தங்களின் பிரார்த்தனையில் (பின்வருமாறு) கூறிக் கொண்டிருந்தார்கள். 'அல்லாஹும்மஜ்அல் ஃபீ கல்பீ நூரன். வ ஃபீ பஸரீ நூரன். வ ஃபீ ஸம்ஈ நூரன். வ அன் யமீனீ நூரன். வ அன் யஸாரீ நூரன். வ ஃபவ்க்கீ நூரன். வ தஹ்த்தீ நூரன். வ அமாமீ நூரன். வ கல்ஃபீ நூரன். வஜ்அல் லீ நூரன். (பொருள்: இறைவா! என் இதயத்தில் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் பார்வையிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் செவியிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் வலப் பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் இடப்பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு மேலேயும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு முன்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்குப் பின்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு (எல்லாத் திசையிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக.)(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) குறைப்(ரலி) கூறினார் : (உடல் எனும்) பேழையிலுள்ள வேறு ஏழு பொருட்களிலும் ஒளியை ஏற்படித்திடுமாறு நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். அப்பாஸ்(ரலி) அவர்களின் புதல்வர்களில் ஒருவரைச் சந்தித்தபோது அவற்றை எனக்கு அன்னார் அறிவித்தார்கள். என் நரம்பிலும் என் சதையிலும் என் இரத்தத்திலும் என் ரோமத்திலும் என் சருமத்திலும் (ஒளியை ஏற்படுத்துவாயாக.) இவ்வாறு கூறிவிட்டு, மேலும் (மனம் மற்றும் நாவு ஆகிய) இரண்டையும் குறிப்பிட்டார்கள்.

2076. நீங்கள் படுக்கைக்குச் சென்றால் உங்கள் கீழங்கியின் ஓரத்தால் விரிப்பைத் தட்டி விடுங்கள். ஏனெனில், அதில் என்ன (விஷ ஜந்து) ஒளிந்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது. பிறகு (பின்வருமாறு) பிரார்த்தியுங்கள்: பிஸ்மிக்க ரப்பீ வளஅத்து ஜன்பீ. வ பிக்க அர்ஃபஉஹு இன் அம்ஸக்த்த நஃப்ஸீ ஃபர்ஹம்ஹா வ இன் அர்ஸல்த் தஹா ஃபஹ்ஃபழ்ஹா பிமா தஹ்ஃபழு பிஹி இபாதக்கஸ் ஸாலிஹீன். (பொருள்: என் அதிபதியே! உன் பெயரால் என் விலாவை (தரையில்) வைத்தேன். உன் உதவியாலேயே (மீண்டும்) எழுவேன். என் உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால், அதற்கு நீ கருணை புரிவாயாக. அதை நீ (கைப்பற்றாமல்) விட்டுவிட்டால், உன் நல்லடியார்களை எதன் மூலம் பாதுகாப்பாயோ அதன் மூலம் என் உயிரையும் காத்திடுவாயாக) என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த நபிமொழி வந்துள்ளது.

கேட்பதை வலியுறுத்திக் கேட்க வேண்டும். (இது, இறைவனை நிர்பந்திப்பதாகாது.) ஏனெனில், அவனை யாராலும் நிர்ப்பந்திக்க முடியாது.

2077. நீங்கள் இறைவா! நீ நினைத்தால் என்னை மன்னிப்பாயாக. இறைவா! நீ நினைத்தால் என் மீது அருள்புரிவாயாக'' என்று பிரார்த்திக்க வேண்டாம். மாறாக, கேட்பதை வலியுறுத்திக் கேளுங்கள். (இது, இறைவனைக் கட்டாயப்படுத்துவதாகாது.) ஏனெனில், அவனைக் கட்டாயப்படுத்துபவர் யாருமில்லை என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

அவசரப்படாத வரையில் அடியானின் பிரார்த்தனை ஏற்கப்படும்.

2078. ''நான் பிரார்த்தித்தேன். ஆனால், என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லை'' என்று கூறி நீங்கள் அவசரப்படாத வரையில் உங்கள் பிரார்த்தனை ஏற்கப்படும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

துன்பம் நேரும்போது பிரார்த்திப்பது.

2079. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள் துன்பம் நேரும்போது 'லா இலாஹ இல்லல்லாஹுல் அழீமுல் ஹலீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி வல்அர்ளி வ ரப்புல் அர்ஷில் அழீம்'' என்று பிரார்த்திப்பார்கள். (பொருள்: கண்ணியம் வாய்ந்தோனும் பொறுமை மிக்கோனுமாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும் மாபெரும் அரியாசனத்தின் அதிபதியுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை.)

தாங்க முடியாத சோதனையிலிருந்து பாதுகாப்புக் கோருவது.

2080. அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் கூறினார்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தாங்கமுடியாத சோதனை, அழிவில் வீழ்வது, விதியின் கேடு, எதிரிகளால் ஏற்படும் மன உளைச்சல் ஆகியவற்றிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோரிவந்தார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த அறிவிப்பில் மூன்று மட்டுமே உள்ளது. நான்தான் ஒன்றை அதிகபட்சமாக அறிவித்துள்ளேன். இவற்றில் அது எதுவென எனக்குத் தெரியவில்லை. (மறந்து விட்டேன்.)

''இறைவா என்னால் எவரேனும் மனவேதனை அடைந்திருந்தால் அதை அவருக்குப் பாவப் பரிகாரமாகவும் அருளாகவும் மாற்றிவிடுவாயாக'' என்று நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தது.

2081. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! நான் எந்த இறைநம்பிக்கையாளரையாவது (கடிந்து கொண்டு) ஏசியிருந்தால், அதையே மறுமை நாளில் உன்னிடம் அவருக்கு நெருக்கத்தை ஏற்படுத்தும் அம்சமாக மாற்றி விடுவாயாக!'' என்று கூறியதை செவியுற்றேன். இதை ஸயீத் இப்னு முசய்யப்(ரஹ்) அறிவித்தார்.

மண்ணறையின் (கப்றின்) வேதனையிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருதல்.

2082. முஸ்அப் இப்னு ஸஅத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார் : (என் தந்தை) ஸஅத் இப்னு அபீ வாக்காஸ்(ரலி) அவர்கள் ஐந்து விஷயங்களிலிருந்து பாதுகாப்புக் கோரும்படி கூறி நபி(ஸல்) அவர்கள் அந்த ஐந்து விஷயங்களையும் குறிப்பிட்டு அவற்றிலிருந்து பாதுகாப்புக் கோருமாறு கட்டளையிட்டுவந்தார்கள் என்று கூறுவார்கள். (அவை:) அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் புக்லி, வ அஊது பிக்க மினல் ஜுப்னி, வ அஊது பிக்க அக் உறத்த இலா அர்தலில் உமுரி, வ அஊது பிக்க மின் ஃபித்னத்தித் துன்யா, வ அஊது பிக்க மின் அதாபில் கப்ற். (இறைவா! உன்னிடம் நான் கருமித்தனத்திலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன். கோழைத் தனத்திலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன். தள்ளாத வயதுக்கு நான் தள்ளப்படுவதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக்கோருகிறேன். இம்மையின் சோதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், மண்ணறையின் வேதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்)'' இம்மையின் சோதனையென்பது தஜ்ஜாலின் சோதனையைக் குறிக்கிறது.

பாவத்திலிருந்தும் கடனிலிருந்தும் (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருதல்.

2083. ஆயிஷா(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக்க மினல் கஸலி வல்ஹரமி வல்மஃஸமி வல் மஃக்ரமி, வ மின் ஃபித்னத்தில் கப்றி வ அதாபில் கப்றி, வ மின் ஃபித்னத்திந் நாரி வஅதாபிந் நாரி, வ மின் ஷர்ரி ஃபித்னத்தில் ஃகினா. வ அஊது பிக்க மின் ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜால், அல்லாஹும்மஃக்ஸில் அன்னீ கத்தாயாய பி மாயிஸ் ஸல்ஜி வல்பரத். வ நக்கி கல்பீ மினல் கத்தாயா கமா நக்கைத்தஸ் ஸவ்பல் அப்யள மினத் தனஸ். வ பாஇத் பைனீ வ பைன கத்தாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரிக்கி வல் மஃக்ரிப்'' என்று பிரார்த்தித்து வந்தார்கள். (பொருள்: இறைவா! உன்னிடம் நான் சோம்பலிலிருந்தும், தள்ளாமையிலிருந்தும் பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும், மண்ணறையின் சோதனையிலிருந்தும், அதன் வேதனையிலிருந்தும், நரகத்தின் சோதனையிலிருந்தும், அதன் வேதனையிலிருந்தும், செல்வத்தின் தீமைகளிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், நான் உன்னிடம் வறுமையின் சோதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். (பெருங்குழப்பவாதியான) மஸீஹுத் தஜ்ஜாலின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் என் தவறுகளை என்னிலிருந்து கழுவுவாயாக! மேலும், அழுக்கிலிருந்து வெண்மையான ஆடையை நீ தூய்மைப் படுத்துவதைப் போன்று தவறுகளிலிருந்து என் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவாயாக! கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே நீ ஏற்படுத்திய இடைவெளியைப் போன்று எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ இடைவெளியை ஏற்படுத்துவாயாக)

எங்கள் இறைவா எங்களுக்கு இம்மையிலும் நன்மையருள்வாயாக எனப் பிரார்த்திப்பது.

2084. அனஸ்(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள் 'ரப்பனா ஆத்தினா ஃபித் துன்யா ஹஸனத்தன் வ ஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வக்கினா அதாபந் நார்'' என்றே அதிகமாகப் பிரார்த்தித்து வந்தார்கள். (பொருள்: எங்கள் இறைவா! எங்களுக்கு இம்மையிலும் நன்மை அருள்வாயாக. மறுமையிலும் நன்மை அருள்வாயாக. நரகத்தின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக

''இறைவா! நான் முன்னால் செய்த பாவங்களையும், பின்னால் செய்த பாவங்களையும் மன்னித்திடுவாயாக!'' என்று நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தது.

2085. அபூ மூஸா அல் அஷ்அரீ(ரஹ்) அவர்கள் கூறினார்: நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) பிரார்த்தித்து வந்தார்கள். அல்லாஹும்ம ஃக்ஃபிர் லீ கத்தீஅத்தீ, வ ஜஹ்லீ, வ இஸ்ராஃபீ ஃபீ அம்ரீ, வமா அன்த்த அஉலமு பிஹி மின்னீ, அல்லாஹும்ம ஃக்ஃபிர் லீ ஹஸ்லீ, வ ஜித்தீ, வ கத்தயீ, வ அம்தீ, வ குல்லு தாலிக்க இந்தீ. (பொருள்: இறைவா! என் குற்றங்களையும் என் அறியாமையையும், என் செயல்களில் நான் மேற்கொண்ட விரயத்தையும், மேலும், என்னை விட நீ எவற்றையெல்லாம் அறிந்துள்ளாயோ அவற்றையும் மன்னித்திடுவாயாக! இறைவா! நான் விளையாட்டாகச் செய்ததையும், வினையாகச் செய்ததையும், தவறுதலாகச் செய்ததையும், வேண்டுமென்றேச் செய்ததையும் மன்னித்திடுவாயாக! இவை யாவும் என்னிடம் இல்லாமலில்லை.)

''லாயிலாஹ இல்லால்லாஹ்'' ('அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை' என்று) கூறுவதன் சிறப்பு.

2086. ''லாயிலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வலஹுல் ஹம்து. வஹ்வ அலா குல்லி ஷையின் கதீர் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கு புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றின் மீதும் வலிமையுள்ளவன்)'' என்று ஒரு நாளில் நூறு முறை சொல்கிறவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்ததற்குச் சமாமா(க நற்பலன் பெற்றுக்கொடுப்பதா)கும். மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். அவரின் கணக்கிலிருந்து (அவர் செய்த) நூறு தவறுகள் அழிக்கப்படும். மேலும், அந்த நாளின் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிலிருந்து (பாதுகாக்கும்) அரணாகவும் அது அவருக்கு இருக்கும். மேலும், அவர் புரிந்த இந்த நற்செயலைவிடச் சிறந்ததை வேறு யாரும் செய்திட முடியாது. ஒருவர் இதைவிட அதிகமான (முறை இதை ஓதினால், அல்லது மிக முக்கியமான) ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர! என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

2087. அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அவர்கள் கூறியாதாவது: (மேற்கண்ட வாக்கியங்களை) பத்து முறை ஓதுகிறவர், இஸ்மாயீல்(அலை) அவர்களின் சந்ததியினரில் ஒருவரை விடுதலை செய்ததைப் போன்றவராவார். (என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்). (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) உமர் இப்னு அபீ ஸாயிதா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இதே நபிமொழி இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. நான் இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ரபீஉ இப்னு குஸைம்(ரஹ்) அவர்களிடம், 'இதை யாரிடமிருந்து தாங்கள் செவியுற்றீர்கள்?' என்று கேட்டேன். அதற்கவர்கள், 'அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அவர்களிடமிருந்து (இதைச் செவியுற்றேன்)'' என்றார்கள். எனவே, நான் அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அவர்களிடம் சென்று, 'இதை யாரிடமிருந்து தாங்கள் செவியுற்றீர்கள்?' என்று கேட்டேன். அதற்கவர்கள், 'இப்னு அபீ லைலா(ரஹ்) அவர்களிடமிருந்து (செவியுற்றேன்)'' என்றார்கள். எனவே, நான் இப்னு அபீ லைலா(ரஹ்) அவர்களிடம் சென்று, 'இதை யாரிடமிருந்து தாங்கள் செவியுற்றீர்கள்?' என்று கேட்டேன். அதற்கவர்கள், 'இதை நபி(ஸல்) அவர்கள் சொன்னதாக அபூ அய்யூப் அல்அன்சாரி(ரலி) அவர்களிடமிருந்து (செவியுற்றேன்)'' என்றார்கள். இன்னும் பல அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த நபிமொழி வந்துள்ளது. அபூ அய்யூப்(ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில், 'இஸ்மாயீல்(அலை) அவர்களின் சந்ததிகளில் ஓர் அடிமையை விடுதலை செய்தவரைப் போன்றவராவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என வந்துள்ளது.

'சுப்ஹானல்லாஹ்' ('அல்லாஹ் தூயவன்' என்று) கூறுவதன் சிறப்பு.

2088. 'சுப்ஹானல்லாஹ் வபி ஹம்திஹி' (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவரின் தவறுகள் அழிக்கப்பட்டு விடுகின்றன. அவை கடலின் நுரை போன்று (மிகுதியாக) இருந்தாலும் சரியே! என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றுவதன் சிறப்பு.

2089. தம் இறைவனை நினைவு கூர்ந்து போற்றுகிறவரின் நிலை உயிருள்ளவரின் நிலைக்கும், தம் இறைவனை நினைவு கூர்ந்து போற்றாதவரின் நிலை உயிரற்றவரின் நிலைக்கு ஒத்திருக்கிறது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

2090. அல்லாஹ்விடம் சில வானவர்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றுவோரைத் தேடியவண்ணம் தெருக்களில் சுற்றி வருகின்றனர். அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றிக்கொண்டிருக்கும் ஒரு குழுவினரை அவர்கள் கண்டால் 'உங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய வாருங்கள்'' என்று அவர்கள் (தம்மில்) ஒருவரை ஒருவர் அழைக்கின்றனர். பின்னர் அந்த வானவர்கள் அல்லாஹ்வைப் போற்றுகிறவர்களைத் தம் இறக்கைகளால் முதல் வானம்வரை சூழ்ந்து கொள்கின்றனர். அப்போது அவ்வானவர்களிடம் அவர்களின் இறைவன் 'என் அடியார்கள் என்ன கூறுகின்றனர்?' என்று கேட்கிறான். அவ்வானவர்களை விட அவனே தம் அடியார்களை நன்கறிந்தவனாவன் என்று கூறி துதிக்கின்றனர். உன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டும், உன்னைப் புகழ்ந்து கொண்டும், உன்னைப் போற்றிக் கொண்டும் இருக்கின்றர்'' என்று வானவர்கள் கூறுகின்றனர். அதற்கு இறைவன், 'அவர்கள் என்னைப் பார்த்திருக்கிறார்களா?' என்று கேட்பான். அதற்கு வானவர்கள், 'இல்லை. உன் மீதாணையாக! அவர்கள் உன்னைப் பார்த்ததில்லை'' என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், 'என்னைப் பார்த்திருந்தால் எப்படியிருப்பார்கள்?' என்று கேட்பான். வானவர்கள், 'உன்னை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக உன்னை வழிபடுவார்கள்; இன்னும் கூடுதலாக உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிப்பார்கள்'' என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், 'என்னிடம் அவர்கள் என்ன வேண்டுகிறார்கள்?' என்று (தனக்குத் தெரியாதது போன்று) கேட்பான். வானவர்கள், 'அவர்கள் உன்னிடம் சொர்க்கத்தைக் கேட்கின்றனர்'' என்பார்கள். அதற்கு இறைவன், 'அவர்கள் அதைப் பார்த்ததுண்டா?' என்று கேட்பான். அதற்கு வானவர்கள், 'இல்லை. உன் மீதாணையாக! அதிபதியே! அவர்கள் அதனைப் பார்த்ததில்லை'' என்பர். அதற்கு இறைவன், 'அவ்வாறாயின் அதனை அவர்கள் பார்த்திருந்தால் அவர்கள் நிலை எப்படியிருக்கும்?' என்று கேட்பான். வானவர்கள், 'சொர்க்கத்தை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக அதன் மீது ஆசைகொண்டு, அதிக வேட்கையுடன் தீவிரமாக அதைத் தேடுவார்கள்'' என்று பதிலளிப்பார்கள். இறைவன், 'அவர்கள் எதிலிருந்து (என்னிடம்) பாதுகாப்புக் கோருகின்றனர்?' என்று வினவுவான். வானவர்கள், 'நரகத்திலிருந்து (பாதுகாப்புக் கோருகின்றனர்)'' என்று பதிலளிப்பார். இறைவன், 'அதனை அவர்கள் பார்த்திருக்கிறார்களா?' என்று கேட்பான். வானவர்கள், 'இல்லை. உன் மீதாணையாக! அதனை அவர்கள் பார்த்தில்லை'' என்பர். அதற்கு இறைவன், 'அவ்வாறாயின் அவர்கள் அதைப் பார்த்திருந்தால் அவர்கள் நிலை என்னவாக இருந்திருக்கும்?' என்று கேட்பான் வானவர்கள், 'நரகத்தை அவர்கள் பார்த்திருந்தால் நிச்சயம் அதிலிருந்து கடுமையாக வெருண்டோடுபவர்களாகவும் அதனை மிகவும் அஞ்சுபவர்களாகவும் இருப்பார்கள்'' என்பர். அப்போது இறைவன், 'எனவே (வானவர்களே!) அவர்களை நான் மன்னித்து விட்டேன் என்பதற்கு உங்களை நான் சாட்சிகளாக ஆக்குகிறேன்'' என்று கூறுவான். அந்த வானவர்களிடையே உள்ள ஒரு வானவர், '(அந்தக் குழுவினரிடையே அமர்ந்திருந்த) இன்ன மனிதன், உன்னைப் போற்றுகிற அவர்களில் உள்ளவன் அல்லன். அவன் ஏதோ தேவை நிமித்தமாகவே அங்கு வந்தான்'' என்பார். அதற்கு இறைவன், 'அவர்கள் ஒன்றாக அமர்ந்துள்ள நண்பர்கள். அவர்களுடன் வந்து அமர்ந்த ஒருவன் அவர்களால் (பாக்கியம் பெறுவானே தவிர,) பாக்கியமற்றவனாக ஆகமாட்டான்'' என்று கூறுவான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த நபிமொழி வந்துள்ளது.

Mon 23

Click here to bookmark this link.Channel Image08:59 தந்தையை கொன்றவர்களையும் தன்மையுடன் மன்னித்த தனயன்! ஸஹாபாக்களின் வாழ்வினிலே...
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்;
உஹுதுப் போர் நாளில் (ஆரம்பத்தில்) இணைவைப்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள். அப்போது இப்லீஸ், 'அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்குப் பின்னால் இருப்பவர்களைக் கவனியுங்கள்!' என்று கத்தினான். உடனே முஸ்லிம்களில் முன் அணிப் படையினர் திரும்பிச் சென்று (எதிரிகள் தாம் பின்னால் இருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டு) பின் அணிப்படையினருடன் மோதினார்கள். அப்போது அங்கு (தமக்கு அருகேயிருந்த) தம் தந்தை அல்யமான்(ரலி) அவர்கள் (முன்னணிப் படையினரிடம்) சிக்கிக் கொண்டதை ஹுதைஃபா(ரலி) அவர்கள் பார்த்துவிட்டு, 'அல்லாஹ்வின் அடியார்களே! (அவர்) என் தந்தை! என் தந்தை' என்று (உரத்த குரலில்) கூறினார்கள். ஆனால், அல்லாஹ்வீன் மீதாணையாக! அவரைக் கொன்ற பின்பே (அவரைவிட்டு) அவர்கள் விலகினார்கள் . ஹுதைஃபா(ரலி) அவர்கள் 'அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!' என்று கூறினார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ஹுதைஃபா(ரலி) அவர்கள் மன்னித்தால் அவர்கள் இறைவனை அடையும் வரை (அவர்களின் வாழ்க்கையில் நல்ல பலன் இருந்துகொண்டேயிருந்தது.
ஆதாரம்;புஹாரி

உஹத் களத்தில் ஆரம்பத்தில் தீரமுடன் போராடி இணைவைப்பாளர்களை வேருண்டோடச்செய்த முஸ்லிம்களின் கவனத்தை திசை திருப்பும்வகையில் ஷைத்தான், முன்னேறி முதலாவதாக சென்ற படைக்கு அடுத்தபடியாக வந்த முஸ்லிம்களின் ஒருபிரிவினரை எதிரிகள் என்ற தோற்றத்தை உண்டாக்கினான். அவர்களை இனைவைப்பாளர்களோ என்று தவறாக கருதிய முஸ்லிம்கள் தாக்கத் தொடங்கினார்கள். முஸ்லிம்களின் படையால் தாக்கப்பட்ட முஸ்லிம் குழுவில் மாட்டிக்கொண்டார் யமான்[ரலி] அவர்கள். யமான் [ரலி] அவர்களின் மகன் ஹுதைஃபா[ரலி] அவர்கள், அல்லாஹ்வின் அடியார்களே! என் தந்தை என்தந்தை என்று கத்தியது போர்முனையில் இணைவைப்பாளர்களை வெருண்டோட செய்வதே லட்சியமாக கொண்ட சஹாபாக்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. அல்லாஹ்வின் நாட்டப்படி யமான்[ரலி] அவர்கள் முஸ்லிம்கள் கையாலேயே ஷகீதானார்கள். தன் கண் முன்னே தனது தந்தையை தனது சக முஸ்லிம் சகோதரர்கள் கொன்றதை கண்ட ஹுதைஃபா[ரலி] அவர்கள் கோபம் கொள்ளவில்லை. தனது சக முஸ்லிம் சகோதரர்கள் அறியாமல் செய்துவிட்டார்கள் என அமைதி காத்து அந்த முஸ்லிம் சகோதர்களை நோக்கி, அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக! என்று அவர்களுக்காக துஆ செய்தார்களே இந்த உயர்வான மனம் யாருக்குவரும்..? அதுதான் சஹாபாக்கள்! சிலர் இன்றைக்கு சின்ன சின்ன மன கசப்பிற்காக ஆண்டுக்கணக்கில் பேசாமல் இருக்கிறார்கள். தனது சக முஸ்லிம் தவறே செய்திருந்தாலும் அதை மன்னித்து அவனை அரவணைக்கும் மனப்பக்குவம் நம்மில் பெரும்பாலோருக்கு இல்லை. நாம் மட்டுமன்றி, நமது சமுதாயத்தை இவர்தான் தாங்கி கொண்டிருக்கும் தூண் என்று வர்ணிக்கப்படும் சில தலைவர்கள், தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை மன்னித்து ஒன்றிணைய தயாராக இல்லை என்பதை பெருகிவரும் இயக்கங்கள் உறுதிப்படுத்துகிறது. இந்த லட்சணத்தில் மன்னிப்பின் சிகரமாக திகழ்ந்த சஹாபாக்களின் வாழ்வில் நடந்ததாக கருதப்படும் 'குற்றங்களை' கண்டுபிடிக்க கிளம்பிவிட்டார்கள். இதுதான் விந்தை!
Click here to bookmark this link.Channel Image05:00 ஆயத்துல் குர்ஸிய்யின் சிறப்பு! பிரார்த்தனை பேழை
கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் யார் ஆயத்துல் குர்ஸிய்யை ஓதுகின்றாரோ அவர் சொர்க்கம் செல்வதற்கு அவரின் மரணம்தான் தடையாக உள்ளது. (நபிமொழி, அறிவிப்பவர் : அபூ உமாமா -ரலி, நூல் : நஸயீ)

اللّهُ لاَ إِلَـهَ إِلاَّ هُوَ الْحَيُّ الْقَيُّومُ لاَ تَأْخُذُهُ سِنَةٌ وَلاَ نَوْمٌ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الأَرْضِ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلاَّ بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلاَ يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلاَّ بِمَا شَاء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالأَرْضَ وَلاَ يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ

அல்லாஹ்- அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன், என்றென்றும் நிலைத்திருப்பவன், அவனை அரி துயிலே, உறக்கமோ பீடிக்கா, வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான். அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது. அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது. அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன். (அல்குர்ஆன்: 2:255)

Allah. There is no god but He,-the Living, the Self-subsisting, Supporter of all. No slumber can seize Him nor sleep. His are all things in the heavens and on earth. Who is thee can intercede in His presence except as He permitteth? He knoweth what (appeareth to His creatures as) before or after or behind them. Nor shall they compass aught of His knowledge except as He willeth. His Throne doth extend over the heavens and the earth, and He feeleth no fatigue in guarding and preserving them. For He is the Most High, the Supreme (in glory). -A.Yusuf Ali- (2:255)

Sun 22

Click here to bookmark this link.Channel Image16:18 [பாடம்.-72] அனுமதி வேண்டுதல். முக்தஸர் ஸஹீஹுல் புகாரி
சிறு குழுவினர் பெருங் குழுவினருக்கு (முதலில்) சலாம் சொல்வது.

2057. சிறியவர் பெரியவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், சிறு குழுவினர் பெருங் குழுவினருக்கும் (முதலில்) சலாம் (முகமன்) சொல்லட்டும் என்று இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கு (முதலில்) சலாம் சொல்வது.

2058. வாகனத்தில் செல்பவர் நடந்து செல்பவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், சிறு குழுவினர் பெருங் குழுவினருக்கும் (முதலில்) சலாம் சொல்லட்டும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

அறிமுகமானவருக்கு அறிமுகமில்லாதவருக்கும் சலாம் சொல்வது.

2059. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார் : ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், 'இஸ்லாமி(யப் பண்புகளி)ல் மிகவும் சிறந்தது எது?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், '(பசித்தவருக்கு) உணவளிப்பதும், உமக்கு அறிமுகமானவருக்கும் உமக்கு அறிமுகமற்றவருக்கும் சலாம் சொல்வதுமாகும்'' என்று பதிலளித்தார்கள்.

(பார்க்கக் கூடாததைப்) பார்க்க நேரும் என்பதாலேயே (வீட்டுக்குள் நுழைய) அனுமதி கோருதல் (சட்டமாக்கப்பட்டது).

2060. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்களின் அறைகளில் ஒன்றினுள் ஒரு துவாரத்தின் வழியாக ஒருவர் எட்டிப்பார்த்தார். நபி(ஸல்) அவர்களுடன் ஈர்வலிச் சீப்பு ஒன்று இருந்தது. அதனால் தம் தலையை அவர்கள் கோதிக் கொண்டிருந்தார்கள். (அவர் எட்டிப் பார்த்ததைக் கண்ட) நபி(ஸல்) அவர்கள், 'நீ (துவாரத்தின் வழியாகப்) பார்க்கிறாய் என்பதை நான் (முன்பே) அறிந்திருந்தால் இந்தச் சீப்பினால் உன் கண்ணில் குத்தியிருப்பேன். (அடுத்தவர் வீட்டுப் பெண்களைப்) பார்க்க நேரிடும் என்பதற்காகவே அனுமதி கேட்பது சட்டமாக்கப்பட்டது'' என்றார்கள்.

மர்ம உறுப்பு அல்லாத (மற்ற) உறுப்புகளின் விபச்சாரம்.

2061. விபச்சாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபச்சாரம் மட்டுமல்ல. கண்ணும் நாவும் கூட விபச்சாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபச்சாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது. இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது அல்லது பொய்யாக்குகிறது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

சிறுவர்களுக்கு சலாம் சொல்வது.

2062. ஸாபித் அல்புனானீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார் : (ஒரு முறை) அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்கள் சிறுவர்களைக் கடந்து சென்றபோது அவர்களுக்கு சலாம் சொன்னார்கள். மேலும், 'நபி(ஸல்) அவர்கள் இவ்வாறுதான் செய்து வந்தார்கள்'' என்று கூறினார்கள்.

(கதவைத் தட்டுபவரிடம் வீட்டுக்காரர்) 'யார் அது?' என்று கேட்க, அவர் 'நானே'' என்று கூறுவது.

2063. ஜாபிர்(ரலி) அறிவித்தார் : என் தந்தை (ஒரு யூதருக்குக்) கொடுக்க வேண்டியிருந்த ஒரு கடன் விஷயமாக நபி(ஸல்) அவர்களிடம் நான் சென்று கதவைத் தட்டினேன். அப்போது அவர்கள், 'யார் அது?' என்று கேட்டார்கள். அதற்கு நான், 'நான்தான்'' என்றேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'நான் நான் என்றால்...?' என அதை விரும்பாதவர்களைப் போன்று கூறினார்கள்.

''இறைநம்பிக்கையாளர்களே! சபைகளில் 'நகர்ந்து இடம் கொடுங்கள்'' என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால், நகர்ந்து இடம் கொடுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு இடம் கொடுப்பான். மேலும், (சபையிலிருந்து) கலைந்து சென்றுவிடுங்கள் என்று கூறப்பட்டால், அவ்வாறே கலைந்து விடுங்கள்' எனும் (திருக்குர்ஆன் 58:11 வது) இறைவசனம்.

2064. இப்னு உமர்(ரலி) கூறினார்: ஒருவர், அவர் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து எழுப்பி விடப்பட்டு, அந்த இடத்தில் மற்றொருவர் அமர்வதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். இதற்கு மாறாக, 'நகர்ந்து உட்கார்ந்து மற்றவர்களுக்கும் இடம் கொடுங்கள்'' என்று கூறினார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறினார்:) ஒருவர் தம் இடத்திலிருந்து எழுந்து கொண்டு, அந்த இடத்தில் (மற்றவரை) உட்காரவைப்பதை இப்னு உமர்(ரலி) அவர்கள் வெறுத்தார்கள்.

முழங்காலில் கையைக் கட்டிக்கொண்டு குத்துக்காலிட்டு அமர்தல். இதுவே ('அல்இஹ்திபா' அல்லது) 'குர்ஃபுஸா' எனப்படும்).

2065. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (இறையில்லம்) கஅபாவின் முற்றத்தில் தம் கையை (முழங்காலில்) கட்டிக்கொண்டு குத்துக்காலிட்டு இவ்வாறு அமர்ந்திருந்ததைக் கண்டேன்.

மூன்று பேரை விட அதிகமானோர் இருக்கும்போது (இருவர்) இரகசியம் பேசுவதும் உரையாடுவதும் தவறாகாது.

2066. நீங்கள் மூன்று பேர் இருக்கும்போது மூன்றாமவரை விட்டுவிட்டு இரண்டு பேர் மட்டும் இரகசியம் பேச வேண்டாம்; நீங்கள் மூவரும் மக்களுடன் கலக்கும் வரை! ஏனெனில், (அவ்வாறு மூன்று பேர் இருக்கும்போது இருவர் மட்டும் பேசுவது) மூன்றாமவரை வருத்தமடையச் செய்யும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

உறங்கச் செல்லும்போது வீட்டிலுள்ள (அடுப்பு மற்றும் விளக்கின்) நெருப்பை (அணைக்காமல்) விட்டுவிடலாகாது.

2067. அபூ மூஸா(ரலி) அறிவித்தார் : மதீனாவில் இரவு நேரத்தில் ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் வீட்டுக்காரர்களும் இருந்தனர். அவர்களின் நிலை குறித்து நபி(ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டபோது 'நிச்சயமாக இந்த நெருப்பு உங்களுக்கு ஆபத்தானது ஆகும். எனவே, நீங்கள் உறங்கச் செல்லும்போது நெருப்பை அணைத்து விடுங்கள்'' என்றார்கள்.

கட்டடங்கள் தொடர்பாக வந்துள்ளவை.

2068. இப்னு உமர்(ரலி) அறிவித்தார் : நான் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் மழையிலிருந்து என்னைக் காக்கின்ற, வெயிலிருந்து எனக்கு நிழல் தருகிற ஒரு வீட்டை நானே என் கரத்தால் கட்டியதை (இப்போதும்) நினைத்துப் பார்க்கிறேன். அந்த வீட்டைக் கட்ட அல்லாஹ்வின் படைப்புகளில் யாரும் எனக்கு உதவவில்லை.
Click here to bookmark this link.Channel Image06:01 மறைச்செய்தி முடிந்துவிட்டதே..! மனமடைந்த நபித்தோழி! ஸஹாபாக்களின் வாழ்வினிலே...
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
உம்மு அய்மன்[ரலி] அவர்கள் இஸ்லாமிய வரலாற்றில் சிறப்பிற்குரிய இடத்தை பெற்ற நபித்தோழியராவார். இந்த உம்மு அய்மன்[ரலி] அவர்கள் மீதும் இவர்கள் பெற்றெடுத்த பிள்ளைகள் மீதும் நபி[ஸல்] அவர்கள், தனது பேரர்கள் மீது கொண்ட அளவுக்கு நேசம் வைத்திருந்தார்கள். உஸாமா இப்னு ஸைத்[ரலி] அவர்களை நாம் அறிந்துவைத்துள்ளோம். இந்த உஸாமா இப்னு ஸைத்[ரலி] அவர்கள் மீது நபி[ஸல்] அவர்கள் கொண்ட பாசம் எத்தகையது..?

உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்கள்;
நபி(ஸல்) அவர்கள் (சிறார்களாயிருந்த) என்னையும் ஹஸன்(ரலி) அவர்களையும் கையிலெடுத்து 'இறைவா! இவர்கள் இருவரையும் நான் நேசிக்கிறேன்; நீயும் நேசிப்பாயாக!" என்று பிரார்த்திப்பார்கள்.
ஆதாரம் புஹாரி எண் 3735 ]

இப்படி ஹஸன்(ரலி) அவர்களுக்கு இணையான பாசத்தை நபியவர்களிடம் கொண்ட இந்த உஸாமா[ரலி] அவர்கள் யார் என்றால் உம்மு அய்மன்[ரலி] அவர்களின் மகனாவார்.
நபியவர்கள் ஒருமுறை தம் தோழர்களின் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்கள். ‘எவரேனும் சுவனத்துப் பெண்ணை திருமணம் செய்ய விரும்பினால் அவர் உம்மு ஐமனை மணந்து கொள்ளட்டும்!”
இதனைக் கேட்டதும் ஜைத் இப்னு ஹாரிஸா (ரலி) அவர்கள் உம்மு ஐமனை மணந்து கொண்டார்கள். நபித்துவத்தின் ஏழாம் ஆண்டு இத்தம்பதிக்கு உஸாமா (ரலி) அவர்கள் பிறந்தார்கள். தந்தை ஜைத் (ரலி) அவர்களைப் போன்று உஸாமா (ரலி) அவர்களும் நபியவர்களின் அன்பிற்குரித்தானவர்களாய்த் திகழ்ந்தார்கள்.

இந்த உஸாமா[ரலி] மட்டுமல்ல உம்மு ஐமனின் ஏனைய பிள்ளைகள் மீதும் நபி[ஸல்]அவர்கள் மிகுந்த அன்பு கொண்டிருந்தார்கள்.

உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட ஹர்மலா(ரஹ்) கூறினார்;
நான் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களுடன் இருந்தபோது ஹஜ்ஜாஜ் இப்னு அய்மன் (பள்ளிவாசலுக்குள்) நுழைந்(து தொழு)தார். அப்போது அவர் தன் ருகூவையும் முழுமையாக நிறைவேற்றவில்லை; தன் சுஜூதையும் முழுமையாக நிறைவேற்றவில்லை. எனவே, இப்னு உமர்(ரலி) (ஹஜ்ஜாஜை நோக்கி), 'திரும்பத் தொழுங்கள்" என்று கூறினார்கள். அவர் திரும்பிச் சென்றபோது என்னிடம் இப்னு உமர்(ரலி), 'யார் இவர்?' என்று கேட்டார்கள். நான், 'உம்மு அய்மனின் மகன் அய்மனுடைய மகன் ஹஜ்ஜாஜ் தான் இவர்" என்று சொன்னேன். அதற்கு இப்னு உமர்(ரலி), 'இவரை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பார்த்திருந்தால் இவரை நேசித்திருப்பார்கள்" என்று கூறினார்கள். மேலும் நபி(ஸல்) அவர்கள், (உஸாமா - ரலி - அவர்களின் மீது) கொண்டிருந்த நேசத்தையும் உம்மு அய்மன்(ரலி) பெற்றெடுத்த (மற்ற) பிள்ளைகளின் மீதும் கொண்டிருந்த நேசத்தையும் இப்னு உமர்(ரலி) நினைவு கூர்ந்தார்கள். அறிவிப்பாளர்: சுலைமான் இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) கூறினார்: உம்மு அய்மன்(ரலி) நபி(ஸல்) அவர்களின் வளர்ப்புத் தாயாக இருந்தார்கள்.
ஆதாரம்புஹாரி எண் 3737

மேலும் தனக்கு கிடைத்த அன்பளிப்பு பேரிச்சமரங்களையும் உம்மு அய்மன்[ரலி] அவர்களுக்கே நபி[ஸல்]அவர்கள் வழங்கியிருந்தார்கள்.

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்கள்; முஹாஜிர்கள் (மக்காவிலிருந்து) மதீனாவுக்கு வந்தபோது அவர்களின் கையில் (செல்வம்) எதுவும் இருக்கவில்லை. அன்சாரிகள் நிலங்களையும் (பிற) அசையாச் சொத்துக்களையும் வைத்திருந்தார்கள். ஒவ்வோர் ஆண்டும் தங்கள் சொத்துக்களின் விளைச்சல்களை அவர்களுக்கு (குறிப்பிட்ட விகிதத்தில் ) கொடுப்பதாகவும் 'எங்களுக்கு பதிலாக நீங்கள் அதில் சிரமப்பட்டு உழைக்க வேண்டும்' என்ற நிபந்தனையின் பேரிலும் அவற்றை முஹாஜிர்களுக்கு (குத்தகை நிலங்களாகப்) பங்கிட்டுக் கொடுத்தார்கள். என்னுடைய தாயார் உம்மு சுலைம் அவர்கள் (என் தாய்வழிச் சகோதரர்) அப்துல்லாஹ் இப்னு அபீ தல்ஹாவின் தாயாராகவும் இருந்தார்கள். அவர்கள் அல்லாஹ்வின் தூதருக்குச் சில பேரீச்ச மரங்களை (அவற்றின் கனிகளை மட்டும் பயன்படுத்திக் கொள்ளும்படி அன்பளிப்பாகக்) கொடுத்திருந்தார்கள். அவற்றை நபி(ஸல்) அவர்கள் தங்களின் அடிமைப் பெண்ணான, உஸாமா இப்னு ஜைத்டைய தாயார் உம்மு அய்மனுக்கு (அன்பளிப்பாகக்) கொடுத்தார்கள். கைபர்வாசிகளின் மீது போர் தொடுத்து முடித்து, மதீனாவுக்குத் திரும்பியபோது முஹாஜிர்கள், அன்சாரிகளின் மனீஹாக்களை (இரவலாகப் பயன்படுத்திக் கொள்ளும்படி அன்பளிப்புச் செய்த பேரீச்சந் தோட்டங்களை) அவர்களிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களும் என் தாயாரிடம் அவரின் பேரீச்ச மரங்களைத் திருப்பித் தந்துவிட்டார்கள். அவற்றுக்கு பதிலாக, உம்மு அய்மன் அவர்களுக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் தோட்டத்திலிருந்து (சில மரங்களை அன்பளிப்பாகக்) கொடுத்தார்கள்.
ஆதாரம்புஹாரி;எண் 2630

இந்த அளவுக்கு நபி[ஸல்] அவர்களின் நேசத்திற்குரியவராக திகழ்ந்த உம்மு அய்மன்[ரலி] அவர்கள், ஹிஜ்ரத் செய்த முஹாஜிராகவும், உஹத்-கைபர் உள்ளிட்ட சில போர்களில் படை வீரர்களுக்கு சேவையாற்றி வீரப் பெண்மணியாகவும் திகழ்ந்துள்ளார்கள். அதுமட்டுமன்றி இறைவேதத்தின் மீது தீராத நேசம் கொண்டவர்களாகவும் திகழ்ந்துள்ளார்கள்.

உம்மு ஐமன் (ரலி) அவர்கள் அண்ணல் நபியின் மரணத்தால் கடும் துயரத்திற்கு ஆளானார்கள். மனம் நொந்து அழுது அழுது கடுமையான பலவீனம் ஏற்பட்ட பிறகும் அவர்களின் அழுகை நிற்கவே இல்லை! இதனைக் கேள்விப்பட்டதும் அபூபக்கர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் வந்து உம்மு ஐமனைத் தேற்றினார்கள். அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வண்ணம் இவ்வாறு கூறினார்கள். ‘ஏன் இவ்வளவு தூரம் கவலைப்படுகின்றீர்கள்! நபி (ஸல்) அவர்களுக்கு இறைவனிடத்தில் மிகச் சிறந்த சன்மானங்கள் உள்ளன.” அதற்கு உம்மு ஐமன் (ரலி) அவர்கள் ‘இதுதான் எனக்குத் தெறியுமே! நான் அழுது கொண்டிருப்பது இறைச் செய்தியின் வருகை (வஹீ) நின்று விட்டதே என்பதற்காகத்தான்!” என்று பதில் அளித்தார்கள். இதனைக் கேட்டதும் அவர்கள் இருவரின் manamum இளகியது. அவர்களும் அழலாயினர். - ஸஹீஹ் முஸ்லிம்.
ஆனால் தபகாத் இப்னு சஃத் எனும் நூலில் இவ்வாறு உள்ளது:- மக்கள் உம்மு ஐமன் (ரலி) அவர்களுக்கு ஆறுதல் கூறி மரணம் ஏற்படுவது இயற்கையே எனப் புரியவைத்தபோது, ‘இறைவனின் விதிப்படி நபியவர்கள் மரணம் அடைந்தது குறித்து எனக்குத் தெறியும்! இறைச் செய்தியின் வருகை தடைப்பட்டு விட்டதே என்பதற்காகத்தான் நான் அழுகின்றேன்” என்று பதில் அளித்தார்கள்.


அன்பானவர்களே! இறைத்தூதர்[ஸல்] அவர்கள் மரணித்தவுடன் ஏனைய சகாபாக்கள் இறைத் தூதரின் பிரிவை எண்ணி வாடிக்கொண்டிருக்க, உம்மு அய்மன்[ரலி] அவர்கள் அதையும் தாண்டி, இறைத்தூதர்[ஸல்] அவர்கள் மரணித்துவிட்டதால், இறைச்செய்தி இனிவராதே! இறைவனின் கட்டளைகள் நின்றுவிட்டதே என்று வருந்தி கண்ணீர் வடிக்கிறார்கள் என்றால், நாம் சிந்தித்து பார்க்கவேண்டும். அன்று உம்மு அய்மன்[ரலி] அவர்கள் நேசித்த இறைச்செய்தி இன்றும் நம்மிடையே இருக்கிறது. ஆனால் உம்மு ஐமன்[ரலி] அவர்களை போன்று நேசம் நாம் வைத்துள்ளோமா என்றால், பெரும்பாலோர் வைக்கவில்லை என்றே சொல்லிவிடலாம். காரணம் இறைச்செய்தி மீது யார் நேசம் கொள்வார்கள் என்றால்அந்த செய்தி அல்லாஹ்வின் புறத்திலிருந்து வரக்கூடிய கட்டளை. அதற்கு கட்டுப்படவேண்டும் என்றசிந்தனை எவருடைய உள்ளத்தில் உள்ளதோ அவர்தான் இறைச்செய்தியை நேசிப்பார். ஆனால் நம்முடைய வாழ்வில் தனிமனிதனின் சொந்த கருத்துக்கு கட்டுப்படும் அளவுக்கு கூட இறைச்செய்திக்கு கட்டுப்படவில்லை என்பதே உண்மை. எனவே உம்மு அய்மன்[ரலி] அவர்களைப்போல் இறைச்செய்தியை நம் வாழ்வில் அமுல்படுத்துவதன் மூலம் அதை நேசிப்போம் இன்ஷா அல்லாஹ்.

Fri 20

Click here to bookmark this link.Channel Image17:31 [பாடம்-71] நற்பண்புகள். முக்தஸர் ஸஹீஹுல் புகாரி
அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதை உள்ளவர் யார்?

2007. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்: இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உன் தாய்'' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உன் தாய்'' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்றார். 'உன் தாய்'' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'பிறகு, உன் தந்தை'' என்றார்கள். இதே ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எவரும் தம் பெற்றோரை ஏசக் கூடாது.

2008. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார் : ''ஒருவர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது 'இறைத்தூதர் அவர்களே! ஒருவர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்?' என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், 'ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவார் (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்)'' என்றார்கள்.

உறவை முறிக்கும் பாவத்திற்கான தண்டனை.

2009. உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார்.

உறவைப் பேணி வாழ்பவருடன் அல்லாஹ்வும் உறவு பாராட்டுகிறான்.

2010. உறவு (ரஹிம்) என்பது, அளவிலா அருளாளன் (ரஹ்மான்) இடமிருந்து வந்த (அருட்கொடை) கிளையாகும். எனவே, இறைவன் (உறவை நோக்கி) 'உன்னோடு ஒட்டி வாழ்பவனுடன் நானும் உறவு பாராட்டுவேன். உன்னை முறித்துக் கொள்பவனை நானும் முறித்துக் கொள்வேன்'' என்று கூறினான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

உறவைப் பசுமையாக்க வேண்டும்.

2011. அம்ர் இப்னு ஆஸ்(ரலி) அறிவித்தார் : இன்னாரின் தந்தையின் குடும்பத்தார் என் நேசர்கள் அல்லர்; என் நேசர்கள் யாரெனில், அல்லாஹ்வும் நல்ல இறை நம்பிக்கையாளர்களும் தாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் ஒளிவு மறைவின்றி பகிரங்கமாகவே கூறினார்கள். அம்ர் இப்னு ஆஸ்(ரலி) அவர்களின் வழியாக வரும் அன்பஸா இப்னு அப்தில் வாஹித்(ரஹ்) அவர்களின் அறிவிப்பில், நபி(ஸல்) அவர்கள், 'ஆயினும் அவர்களுடன் எனக்கு இரத்த உறவு உண்டு. அதை நான் (காய்ந்து போகவிடாமல்) பசுமையாக்குவேன்'' என்று கூறினார்கள் என அதிகபட்சமாக இடம்பெற்றுள்ளது. அதாவது, 'அவர்களின் உறவைப் பேணி நடந்து கொள்வேன்'' என்றார்கள்.

பதிலுக்கு பதில் உறவு கொண்டாடுபவர் உறவைப் பேணுகிறவர் அல்லர்.

2012. பதிலுக்கு பதில் உறவாடுகிறவர் (உண்மையில்) உறவைப் பேணுகிறவர் அல்லர்; மாறாக உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைகிறவரே உறவைப் பேணுபவராவார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.

(ஒருவர் தம்) குழந்தைகளின் மீது அன்பு காட்டுவதும் அவர்களை முத்தமிட்டு அணைத்துக் கொள்வதும்.

2010. ஆயிஷா(ரலி) அறிவித்தார் : ஒரு கிராமவாசி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'நீங்கள் சிறு குழந்தைகளை முத்தமிடுகிறீர்களா? நாங்களெல்லாம் அவர்களை முத்தமிடுவதில்லை'' என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் உம்முடைய இதயத்திலிருந்து அன்பைக் கழற்றிவிட்ட பின்னர் உமக்காக நான் என்ன செய்ய முடியும்?' என்று கேட்டார்கள்.

அல்லாஹ்வின் கருணை அளவிடவியலாது.

2011. உமர் இப்னு கத்தாப்(ரலி) அறிவித்தார் : (ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) கைதிகள் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களிடையே இருந்த ஒரு பெண்ணின் மார்பில் பால் சுரந்தது. அவள் பாலூட்டுவதற்காக(த் தன் குழந்தையைத் தேடினாள்). குழந்தை கிடைக்கவில்லை. எனவே), கைதிகளில் எந்தக் குழந்தையைக் கண்டாலும், அதை (வாரி) எடுத்து(ப் பாலூட்டினாள். தன் குழந்தை கிடைத்தவுடன் அதை எடுத்து)த் தன் வயிற்றோடு அணைத்துப் பாலூட்டலானாள். அப்போது 'எங்களிடம் நபி(ஸல்) அவர்கள், 'இந்தப் பெண் தன் குழந்தையை தீயில் எறிவாளா? சொல்லுங்கள்!'' என்றார்கள். நாங்கள், 'இல்லை, எந்நிலையிலும் அவளால் எறிய முடியாது'' என்று சொன்னோம். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இந்தக் குழந்தையின் மீது இவளுக்குள்ள அன்பைவிட அல்லாஹ் தன் அடியார்களின் மீது மிகவும் அன்பு வைத்துள்ளான்'' என்று கூறினார்கள்.

அல்லாஹ் தன் அன்பை நூறு பாகங்களாகப் பங்கிட்டான்.

2012. அல்லாஹ் அன்பை நூறாகப் பங்கிட்டான். அதில் தொண்ணூற்று ஒன்பது பங்கைத் தன்னிடம் வைத்துக்கொண்டான். (மீதிமிருக்கும்) ஒன்றையே பூமியில் இறக்கினான். இந்த ஒரு பங்கினால் தான் படைப்பினங்கள் பரஸ்பரம் பாசம் காட்டுகின்றன. எந்த அளவிற்கென்றால், மிதித்து விடுவோமோ என்ற அச்சத்தினால் குதிரை தன்னுடைய குட்டியை விட்டுக் கால்குளம்பைத் தூக்கிக் கொள்கிறது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

தொடையின் மீது சிறு குழந்தையை வைத்துக்கொள்வது.

2013. (நபி(ஸல்) அவர்களின் வளர்ப்புப் பேரரான) உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (சிறுவனாக இருந்த) என்னைப் பிடித்துத் தம் ஒரு தொடையின் மீதும் (தம் சொந்தப் பேரரான) ஹஸன் இப்னு அலீ(ரலி) அவர்களைப் பிடித்து தம் இன்னொரு தொடையின் மீதும் அமர்த்திக்கொண்டு பிறகு எங்கள் இருவரையும் கட்டியணைத்தவாறு, 'இறைவா! இவர்கள் இருவர் மீதும் நான் அன்பு செலுத்துகிறேன். நீயும் இவர்களின் மீது அன்பு செலுத்துவாயாக!'' என்றார்கள்.

மனிதர்களிடமும் மிருகங்களிடமும் அன்பு காட்டுவது.

2017. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் : (ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தொழுகையில் நின்றார்கள். அவர்களுடன் நாங்கள் நின்றோம். அப்போது தொழுகையில் ஈடுபட்டிருந்த ஒரு கிராமவாசி, 'இறைவா! எனக்கும் முஹம்மது அவர்களுக்கும் (மட்டும்) அருள் புரிவாயாக! எங்களுடன் வேறு யாருக்கும் அருள் புரியாதே!'' என்று பிரார்த்தித்தார். (தொழுது முடித்து) நபி(ஸல்) அவர்கள் சலாம் கொடுத்தபோது அந்தக் கிராமவாசியிடம், 'விசாலமானதை, அதாவது இறைவனின் அருளை நீ குறுக்கி விட்டாயே!'' என்று கூறினார்கள்.

2018. ஒருவருக்கொருவர் கருணை புரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும் (உண்மையான) இறைநம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உடலின்) ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் (உடல் முழுதும்) காய்ச்சலும் கண்டு விடுகிறது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் இதை நுஅமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார்.

2019. ஒரு முஸ்லிம் மரம் ஒன்றை நட்டு அதிலிருந்து ஒரு மனிதனோ அல்லது (மற்ற) உயிரினமோ உண்டால் (அதன் காரணத்தால்) ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்காமல் இருப்பதில்லை என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

2020. (படைப்பினங்களின் மீது) கருணை காட்டாதவர் (படைத்தவனால்) கருணை காட்டப்பட மாட்டார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

2021. அண்டை வீட்டார் குறித்து என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அறிவுறுத்திக் கொண்டேயிருந்தார். எந்த அளவிற்கென்றால், (எங்கே) அண்டை வீட்டாரை எனக்கு வாரிசாக்கி விடுவாரோ என்று கூட நான் எண்ணினேன் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

எவனுடைய நாசவேலைகளிலிருந்து அவனுடைய அண்டை வீட்டாருக்குப் பாதுகாப்பு உணர்வு ஏற்படவில்லையோ அவனுடைய பாவத்தின் நிலை.

2022. அபூ ஷுரைஹ்(ரலி) அறிவித்தார் : ''அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீதாணையாக அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன்'' என்று (மூன்று முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 'அவன் யார்? இறைத்தூதர் அவர்களே!'' என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'எவனுடைய நாசவேலைகளிலிருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பு உணர்வைப் பெறவில்லையோ அவன்தான்'' என்று பதிலளித்தார்கள். இந்த ஹதீஸ் இன்னும் பல அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம்.

2023. அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நற்செயல்கள் அனைத்தும் தர்மமே.

2024. 'எல்லா நற்செயலும் தர்மமே' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

எல்லா விஷயங்களிலும் நளினத்தைக் கையாளுதல்.

2025. நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) கூறினார்: யூதர்களில் ஒரு குழுவினர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, 'அஸ்ஸாமு அலைக்கும்' (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (சற்றே மாற்றி சலாம்) கூறினர். அவர்கள் கூறியதைப் புரிந்துகொண்ட நான் அவர்களுக்கு 'வ அலைக்கும் அஸ்ஸாமு வல்லஅனா (-அவ்வாறே உங்களின் மீது மரணமும் சாபமும் உண்டாகட்டும்)'' என்றேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'ஆயிஷா! நிதானம்! எல்லா விஷயங்களிலும் நளினத்தைக் கையாளுவதையே அல்லாஹ் விரும்புகிறான்'' என்று கூறினார்கள். அப்போது நான், 'இறைத்தூதர் அவர்களே! அவர்கள் சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நான்தான் 'வ அலைக்கும்' (அவ்வாறே உங்களுக்கு உண்டாகட்டும்) என்று சொல்லி விட்டேனே! (அதை நீ கவனிக்கவில்லையா?)'' என்று கேட்டார்கள்.

இறைநம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பது.

2026. (ஒரு சமயம்) நபி(ஸல்) அவர்கள் அமர்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர் 'யாசித்தபடி' அல்லது 'ஒரு தேவை நிமித்தமாக' வந்தார். நபி(ஸல்) அவர்கள் எங்களை நோக்கி '(இவருக்காக என்னிடம்) பரிந்துரையுங்கள். அதனால் உங்களுக்கும் நற்பலன் அளிக்கப்படும். அல்லாஹ், தான் நாடியதை தன்னுடைய தூதரின் நாவினால் நிறைவேற்றுவானாக'' என்றார்கள் என அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ அருவருப்பாகப் பேசும் பழக்கமுடையவராக இருக்கவில்லை.

2027. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள் ஏசுபவராகவோ, கெட்ட வார்த்தைகள் பேசுபவராகவோ சாபமிடுபவராகவோ இருக்கவில்லை. எங்களில் ஒருவரைக் கண்டிக்கும்போது கூட 'அவருக்கென்ன நேர்ந்தது? அவரின் நெற்றி மண்ணில் படட்டும்'' என்றே கூறுவார்கள்.

நற்பண்பும், தயாளகுணமும், வெறுக்கப்பட்ட கருமித்தனமும்.

2028. முஹம்மத் இப்னு முன்கதிர்(ரஹ்) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்களிடம் எது கேட்கப்பட்டாலும் ஒருபோதும் அவர்கள் 'இல்லை' என்று சொன்னதில்லை என ஜாபிர்(ரலி) கூறக் கேட்டேன்.

2029. அனஸ்(ரலி) அறிவித்தார் : நான் நபி(ஸல்) அவர்களுக்குப் பத்து ஆண்டுகள் சேவகம் புரிந்தேன். (மனம் வேதனைப்படும்படி) என்னை 'ச்சீ'' என்றோ, '(இதை) ஏன் செய்தாய்'' என்றோ, 'நீ (இப்படிச்) செய்திருக்கக் கூடாதா?' என்றோ அவர்கள் சொன்னதில்லை.

ஏசுவதற்கும் சபிப்பதற்கும் விதிக்கப்பட்டுள்ள தடை.

2030. ஒருவர் மற்றவரை 'பாவி' என்றோ, 'இறைமறுப்பாளன்' என்றோ அழைத்தால் அவர் (உண்மையில்) அவ்வாறு (பாவியாக, இறைமறுப்பாளனாக) இல்லையாயின் அவர் சொன்ன சொல் சொன்னவரை நோக்கியே திரும்பிவிடுகிறது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ தர்(ரலி) அறிவித்தார்.

2031. இஸ்லாம் அல்லாத மார்க்கத்தின் மீது சத்தியம் செய்கிறவர், தாம் சொன்னதைப் போன்றே ஆகிவிடுகிறார். தனக்கு உடைமையில்லாத ஒன்றில் நேர்ச்சை செய்வது(ம், அந்த நேர்ச்சையை நிறைவேற்றுவதும்) எந்த மனிதனுக்கும் தகாது. எதன் மூலம் தம்மைத்தாமே தற்கொலை செய்துகொள்ளும் ஒருவர் அதன் மூலம் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார். ஓர் இறைநம்பிக்கையாளரை ஒருவர் சபிப்பது அவரைக் கொலை செய்வது போன்றதாகும். இறைநம்பிக்கையாளர் ஒருவரை இறைமறுப்பாளர் என்று அவதூறு சொல்வதும் அவரைக் கொலை செய்வது போன்றதேயாகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் இதை அந்த மரத்தினடியில் (பைஅத்துர் ரிள்வான்) உறுதிமொழி அளித்தவர்களில் ஒருவரான ஸாபித் இப்னு ளஹ்ஹாக்(ரலி) அறிவித்தார்.

கோள் சொல்வது பெரும்பவாங்களில் ஒன்றாகும்.

2032. ஹம்மாம் இப்னு ஹாரிஸ்(ரஹ்) அறிவித்தார் : நாங்கள் ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்களிடம் '(இங்குள்ள) ஒருவர் (நமக்கிடையே நடக்கும்) உரையாடல்களை (கலீஃபா) உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களிடம் போய்ச் சொல்கிறார்'' என்று கூறப்பட்டது. அப்போது ஹுதைஃபா(ரலி) 'கோள் சொல்கிறவன் சொர்க்கம் செல்லமாட்டான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூற கேட்டுள்ளேன் என்று கூறினார்கள்.

(யாரையும் அளவு கடந்து) புகழ்வது வெறுக்கப்படட செயலாகும்.

2033. அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார் : ஒரு மனிதரைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் அருகில் பேசப்பட்டது. அப்போது ஒருவர் அவரைப் பற்றிப் புகழ்ந்துரைத்தார். உடனே நபி(ஸல்) அவர்கள், 'உனக்குக் கேடுதான். உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்து விட்டீரே!'' என்று பல முறை கூறினார்கள். பிறகு, 'உங்களில் ஒருவர் (தம் சகோதரரைப்) புகழ்ந்தேயாக வேண்டும் என்றிருந்தால், '(அவர் குறித்து) நான் இன்னின்ன விதமாக எண்ணுகிறேன்' என்று (மட்டும்) அவர் கூறட்டும். அதுவும் அவர் அவ்வாறு இருப்பதாகச் கருதினால் மட்டுமே கூறட்டும். அல்லாஹ்வே அவரைக் குறித்து விசாரணை (செய்து முடிவு) செய்பவன் ஆவான். அல்லாஹ்வை முந்திக் கொண்டு யாரையும் தூய்மையானவர் என்று (யாரும்) கூற வேண்டாம். காலித் இப்னு மஹ்ரான்(ரஹ்) அவர்களின் அறிவிப்பில், '(நபி(ஸல்) அவர்கள் தம் முன் புகழ்ந்தவரைப் பார்த்து) உனக்கு அழிவுதான்'' என்று கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.

பொறாமையும் பிணக்கும் தடை செய்யப்பட்டவையாகும்.

2034. (ஆதாரமில்லாமல் பிறரை) சந்தேகப்படுவது குறித்து உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், சந்தேகம் கொள்வது மிகப் பெரிய பொய்யாகும். (பிறரின் குறையைத்) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

2035. ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். எந்தவொரு முஸ்லிமும் தம் சகோதரருடன் மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

அனுமதிக்கப்பட்ட சந்தேகம்.

2036. ஆயிஷா(ரலி) அறிவித்தார் : ''இன்னாரும் இன்னாரும் நம்முடைய மார்க்கத்தில் எதையும் அறிந்ததாக நான் கருதவில்லை'' என்று (இருவரைப் பற்றி) இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) லைஸ்(ரஹ்) கூறினார்: அவர்கள் இருவரும் நயவஞ்சகர்களாய் இருந்தனர். ஒருநாள் நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, 'ஆயிஷா! இன்னாரும் இன்னாரும் நாம் எந்த மார்க்கத்தில் இருக்கிறோமோ அதை அறிந்திருப்பவர்களாக நான் கருதவில்லை'' என்று கூறினார்கள்.

இறைநம்பிக்கையாளர் தாம் புரிந்துவிட்ட பாவங்களை (பகிரங்கப்படுத்தாமல்) மறைப்பது.

2037. என் சமுதாயத்தாரில் (பாவம் செய்த) அனைவரும் (இறைவனால்) மன்னிக்கப்படுவர்; (தம் பாவங்களைத்) தாமே பகிரங்கப்படுத்துகிறவர்களைத் தவிர ஒருவர் இரவில் ஒரு (பாவச்) செயல் புரிந்துவிட்டுப் பிறகு காலையானதும் அல்லாஹ் அவனுடைய பாவத்தை (பிறருக்குத் தெரியாமல்) மறைத்துவிட்டிருக்க, 'இன்னாரே! நேற்றிரவு நான் (பாவங்களில்) இன்னின்னதைச் செய்தேன்'' என்று அவனே கூறுவது பகிரங்கப்படுத்துவதில் அடங்கும். (அவன் செய்த பாவத்தை) இரவில் (பிறருக்குத் தெரியாமல்) இறைவன் மறைத்துவிட்டான். (ஆனால்,) இறைவன் மறைத்ததைக் காலையில் அந்த மனிதன் தானே வெளிச்சமாக்கி விடுகிறான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(மனஸ்தாபம் கொண்டு) பேசாமல் இருப்பதும், 'தம் சகோதரிடம் மூன்று நாள்களுக்கு மேல் ஒருவர் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று'

2038. ஒருவர் தம் சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்தித்து ஒருவரைவிட்டு ஒருவர் முகத்தைத் திருப்பிக்கொள்வர். (இவ்வாறு செய்யலாகாது.) ஸலாமை முதலில் தொடங்குகிறவர்தாம் இவர்கள் இருவரில் சிறந்தவராவார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ அய்யூப் அல்அன்சாரி(ரலி) அறிவித்தார்.

பொய் தடை செய்யப்பட்டிருப்பது.

2039. உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும், நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒருவர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் 'வாய்மையாளர்' (சித்தீக் எனும் பெயருக்கு உரியவர்) ஆகிவிடுவார். (இதைப் போன்றே) பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒருவர் பொய் பேசிக் கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் 'பெரும் பொய்யர்' எனப் பதிவு செய்யப்பட்டு விடுவார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அறிவித்தார்.

மன வேதனையின்போது பொறுமை காப்பது.

2040. மன வேதனைக்குள்ளாக்கும் செய்தி கேட்டும் (உடனே தண்டித்து விடாமல்) மிகவும் பொறுமை காப்பவர் அல்லாஹ்வை விட வேறு 'யாருமில்லை' அல்லது 'ஏதுமில்லை' மனிதர்கள் (சிலர்) அவனுக்குக் குழந்தை இருப்பதாகக் கூறுகின்றனர். (ஆனால் அவனோ அவர்களுக்கு உடல் நலத்தையும் உணவு வளத்தையும் வழங்கிக் கொண்டிருக்கிறான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

கோபத்தைத் தவிர்த்தல்.

2041. மக்களைத் தன்னுடைய பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

2042. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் : ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், 'எனக்கு அறிவுரை கூறுங்கள்'' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'கோபத்தைக் கைவிடு'' என்று (அறிவுரை) கூறினார்கள். அவர் (''அறிவுரை கூறுங்கள்'' எனப்) பல முறை கேட்டபோதும் நபி(ஸல்) அவர்கள் 'கோபத்தைக் கைவிடு'' என்றே சொன்னார்கள்.

நாணம்.

2043. அபுஸ் ஸவ்வார் அல்அதவீ(ரஹ்) அவர்கள் கூறினார்: இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அவர்கள், 'நாணம் நன்மையே தரும்'' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று கூறினார்கள். அப்போது புஷைர் இப்னு கஅப்(ரஹ்) அவர்கள், 'நாணத்தில் தான் கம்பீரம் உண்டு; நாணத்தில் தான் மன அமைதி உண்டு எனத் தத்துவ(ப் புத்தக)த்தில் எழுதப்பட்டுள்ளது'' என்று கூறினார். அப்போது அவரிடம் இம்ரான்(ரலி) அவர்கள் 'நான் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (கூறியது) பற்றி உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் உங்கள் ஏட்டில் உள்ளவை குறித்து சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே! என்று கேட்டார்கள்.

நாணம் இல்லையேல் நாடியதைச் செய்து கொள்.

2044. மக்கள் முந்தைய இறைத்தூதர்களின் (முது) மொழிகளிலிருந்து அடைந்து கொண்ட ஒன்றுதான். 'உனக்கு நாணம் இல்லையேல் நாடியதைச் செய்துகொள்'' என்பதும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ மஸ்ஊத் உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்.

மக்களுடன் மலர்ச்சியாகப் பழகுவதும் குடும்பத்தாருடன் நயமாக நடந்து கொள்வதும்.

2045. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள் எங்களுடன் (இனிமையாகப்) பழகுவார்கள். எந்த அளவிற்கென்றால், சிறுவனாக இருந்த என் தம்பியிடம் 'அபூ உமைரே! பாடும் உன்னுடைய சின்னக்குருவி (புள்புள்) என்ன ஆயிற்று?' என்று கூடக் கேட்பார்கள்.

இறை நம்பிக்கையாளர் ஒரே புற்றில் இரண்டு முறை தீண்டப்பட மாட்டார்.

2046. இறைநம்பிக்கையாளர் ஒரே புற்றில் இரண்டு முறை தீண்டப்படமாட்டார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

கவிதை, யாப்பிலக்கணப் பாடல் (ரஜஸ்), ஒட்டகப் பாட்டு (ஹுதாஃ) ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டதும் வெறுக்கப் பட்டதும்.

2047. நிச்சயமாகக் கவிதையிலும் ஞானம் (ஹிக்மத்) உண்டு என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உபை இப்னு கஅப்(ரலி) அறிவித்தார்.

இறை தியானம், கல்வி, இறை வேதம் ஆகியவற்றிலிருந்து கவனத்தைத் திசை திருப்பும் அளவுக்கு மனிதன் மீது கவிதையின் ஆக்கிரமிப்பு இருப்பது வெறுக்கப்பட்டதாகும்.

2048. உங்களில் ஒருவரின் வயிறு கவிதையால் நிரம்பியிருப்பத விடச் சீழ் சலத்தால் நிரம்பியிருப்பது நன்று என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நேசிப்போருடன் மறுமையில்...

2049. அனஸ்(ரலி) அறிவித்தார்: கிராமவாசிகளில் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! மறுமை நாள் எப்போது சம்பவிக்கும்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உனக்கென்ன கேடு! அதற்காக நீ என்ன முயற்சி செய்துள்ளாய்?' என்று கேட்டார்கள். அவர் 'நான் அதற்காக (ஏதும்) முன்முயற்சி செய்யவில்லை. ஆயினும், நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன்'' என்று பதிலளித்தார். நபி(ஸல்) அவர்கள், '(அப்படியானால்,) நீ யாரை நேசிக்கிறாயோ அவர்களுடன் (மறுமையில்) இருப்பாய்!'' என்றார்கள். உடனே நாங்கள், 'நாங்களும் அவ்வாறுதானா?' என்று கேட்டோம். நபி(ஸல்) அவர்கள், 'ஆம்'' என்றார்கள். (இதைக் கேட்டு) அன்று நாங்கள் மிகவும் மகிழ்ந்தோம்.-அப்போது முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அவர்களின் அடிமை (எங்களைக்) கடந்து சென்றார்கள். அவர் என் வயதொத்த (சிறு)வராக இருந்தார். ''இவர் உயிர் வாழ்ந்தால், இவரை முதுமை அடைவதற்கு முன்பே மறுமை சம்பவிக்கும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அதாவது அவ்வளவு நெருக்கத்தில் மறுமை நாளை எதிர்பார்க்கலாம்.)இந்த ஹதீஸை ஷுஅபா(ரஹ்) அவர்கள் கத்தாதா(ரஹ்) அவர்கள் வழியாக அனஸ்(ரலி) அவர்களிடமிருந்து சுருக்கமாக அறிவித்தார்கள்.

(மறுமையில்) மனிதர்கள் தம் தந்தையர் பெயருடன் (இணைத்து) அழைக்கப்படுவர்.

2050. மோசடி செய்பவனுக்கு மறுமை நாளில் (அவனுடைய மோசடியை வெளிச்சமிட்டுக் காட்டும் முகமாக அடையாளக்) கொடி ஒன்று நட்டப்பட்டு 'இது இன்னாருடைய மகன் இன்னோரின் மோசடி (யைக் குறிக்கும் கொடி)'' என்று கூறப்படும் என்று இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

''கண்ணியத்திற்குரியது ('அல்கர்ம்') இறைநம்பிக்கையாளரின் இதயமே'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியது.

2051. மக்கள் (திராட்சைப் பழத்திற்கு) 'அல்கர்ம்' (கண்ணியமானது) என்று சொல்கின்றனர். உண்மையில் இறைநம்பிக்கையாளரின் இதயமே 'அல்கர்ம்' (கண்ணியத்திற்குரியது) ஆகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஒரு பெயரை அதைவிடச் சிறந்த பெயராக மாற்றியமைப்பது.

2052. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் : ஸைனப்(ரலி) அவர்களுக்கு (முதலில்) பர்ரா (நல்லவள்) என்ற பெயர் இருந்தது. அப்போது 'அவர் தம்மைத் தாமே பரிசுத்தப்படுத்திக் கொள்கிறார்'' என்று (மக்களால்) சொல்லப்பட்டது. எனவே, அவருக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் 'ஸைனப்' என்று பெயர் சூட்டினார்கள்.

நண்பரின் பெயரில் சில எழுத்துக்களைக் குறைத்து (சுருக்கமாக) அழைப்பது.

2053. அனஸ்(ரலி) அறிவித்தார் : (ஒரு பயணத்தில் என் தாயார்) உம்மு சுலைம்(ரலி) அவர்கள் பயணப் பொருட்களுடன் (அவற்றின் காவலராக) இருந்தார்கள். நபி(ஸல்) அவர்களின் அடிமையான 'அன்ஜஷா' (நபியவர்களுடைய) துணைவியரின் ஒட்டகங்களைப் பாட்டுப் பாடி ஓடச் செய்து கொண்டிருந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அன்ஜஷ்! நிதானமாக ஓட்டிச் செல்! (ஒட்டகச் சிவிகைக்குள் இருக்கும்) கண்ணாடிக் குடுவைகளை (பெண்களை) உடைத்து விடாதே!'' என்றார்கள்.

அல்லாஹ்வின் கோபத்திற்குரிய பெயர்.

2054. மறுமை நாளில் அல்லாஹ்விடம் மிகவும் அருவருப்பான பெயர், (உலகில்) ஒருவர் தமக்கு 'மன்னாதி மன்னன்' (மலிக்குல் அம்லாக்) என்று பெயர் சூட்டிக் கொண்டதாகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

தும்மியவர் 'அல்ஹம்துலில்லாஹ்' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்வது.

2055. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்களுக்கருகில் இரண்டு மனிதர்கள் தும்மினர். அப்போது அவர்களில் ஒருவருக்கு நபி(ஸல்) அவர்கள் ('யர்ஹமுகல்லாஹ் - அல்லாஹ் உமக்குக் கருணை புரிவானாக' என்று) மறுமொழி கூறினார்கள். மற்றொருவருக்கு மறுமொழி கூறவில்லை. அப்போது அவர்களிடம் (இது குறித்துக்) கேட்கப்பட்டது. அதற்கவர்கள், 'இவர் (தும்மியவுடன்) 'அல்ஹம்துலில்லாஹ்' என்று இறைவனைப் புகழ்ந்தார். அவர், 'அல்ஹம்துலில்லாஹ்' என்று இறைவனைப் புகழவில்லை. (எனவே, இவருக்கு மறுமொழி பகர்ந்தேன். அவருக்கு மறுமொழி பகரவில்லை)'' என்று பதிலளித்தார்கள்.

தும்மல் விரும்பத்தக்கது கொட்டாவி விரும்பத்தகாதது.

2056. அல்லாஹ் தும்மலை விரும்புகிறான்; கொட்டாவியை வெறுக்கிறான். எனவே, ஒருவர் தும்மியவுடன் 'அல்ஹம்துலில்லாஹ்' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொன்னால், அதைக் கேட்கும் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் அவருக்கு ('யர்ஹமுக்கல்லாஹ் - அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்' என்று) மறுமொழி கூறுவது அவசியமாகும். ஆனால், கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருவதாகும். உங்களில் எவரேனும் கொட்டாவி விட்டால் முடிந்தவரை அதைக் கட்டுப்படுத்தட்டும். ஏனெனில், யாரேனும் (கட்டுப்படுத்தாமல்) 'ஹா' என்று (கொட்டாவியால்) சப்தமிட்டால் ஷைத்தான் சிரிக்கிறான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Wed 18

Click here to bookmark this link.Channel Image16:20 [பாடம்-70] ஆடை அணிகலன்கள். முக்தஸர் ஸஹீஹுல் புகாரி
கணுக்கால்களுக்குக் கீழே தொங்கும் ஆடை நரகம் செல்லும்.

1984. கணுக்கால்களுக்குக் கீழே தொங்கும் (வகையில்) கீழங்கி(யை அணிகிறவர்) நரகத்தில் (புகுவார்) என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். கர்வத்தோடு தன்னுடைய கீழாடையை(த் தரையில் படும்படி) இழுத்துச் சென்றவனை மறுமை நாளில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களுக்கு பிடித்த ஆடை.

1985. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் : அணிவதற்கு (பருத்தியாலான) யமன் நாட்டுச் சால்வையே நபி(ஸல்) அவர்களுக்கு மிகவும் பிரியமான ஆடையாக இருந்தது.

1986. அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அறிவித்தார்: ''இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறந்தபோது அவர்களின் உடல் (பருத்தியாலான) யமன் நாட்டுப் போர்வையால் போர்த்தி மூடப்பட்டது'' என்று நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள்.

1987. அபூ தர்(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள் வெள்ளை ஆடை அணிந்தபடி உறங்கிக் கொண்டிருந்தபோது நான் அவர்களிடம் சென்றேன். பிறகு அவர்கள் விழித்துக்கொண்டபோது (மீண்டும்) அவர்களிடம் சென்றேன். அப்போது, 'லா இலாஹ இல்லல்லாஹ்'' (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை) என்று சொல்லி, பிறகு அதே நம்பிக்கையில் இறந்துவிடும் மனிதர் எவராயினும், அவர் சொர்க்கம் புகுந்தே தீருவார்'' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். நான், 'அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலுமா?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்)'' என்றார்கள். நான் (மீண்டும்) 'அவர் விபச்சார புரிந்தாலும் திருடினாலுமா?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்)'' என்றார்கள். நான் (மூன்றாவது முறையாக) 'அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலுமா?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்). அபூ தர்ரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்! (அதாவது நீர் இதை விரும்பாவிட்டாலும் சரியே)'' என்று கூறினார்கள். அறிவிப்பாளர் அபுல் அஸ்வத் அத்துஅலீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அபூ தர்(ரலி) அவர்கள் இதை அறிவிக்கும்போது 'அபூ தர்ரின் மூக்கு மண்ணைக் கவ்வினாலும் சரியே'' என்று கூறி வந்தார்கள்.

ஆண்கள் பட்டாடை அணிவதும் பட்டில் பயன்படுத்த அனுமதிக்கப் பட்ட அளவும்.

1988. அபூ உஸ்மான் அந்நஹ்தீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்: நாங்கள் உத்பா இப்னு ஃபர்கத்(ரலி) அவர்களுடன் (ஈரானிலுள்ள) ஆதர்பைஜானில் இருந்தபோது எங்களிடம் உமர்(ரலி) அவர்களின் கடிதம் வந்தது. (அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பட்டு அணிவதை (ஆண்களுக்கு)த் தடை செய்தார்கள்; இந்த அளவைத் தவிர. (இதைக் கூறியபோது) பெருவிரலை அடுத்துள்ள (சுட்டுவிரல், நடுவிரல் ஆகிய) இரண்டு விரல்களால் நபி(ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள். அறிவிப்பாளர் அபூ உஸ்மான்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நாங்கள் அறிந்தவரை (அவர்கள் குறிப்பிட்ட 'இந்த அளவு' என்பது, ஆடைகளின் கரைகளில் செய்யப்படும்) வேலைப்பாட்டைக் குறிக்கிறது.

1989. அபூ உஸ்மான்(ரஹ்) அவர்கள் அறிவித்தார் : நாங்கள் உத்பா இப்னு ஃபர்கத்(ரலி) அவர்களுடன் (ஆதர்பைஜானில்) இருந்தோம். அப்போது அவர்களுக்கு உமர் (ரலி) அவர்கள் எழுதிய கடிதத்தில் (நபி(ஸல்) அவர்கள், 'இம்மையில் (ஆண்கள்) பட்டு அணிந்தால் மறுமையில் அதிலிருந்து சிறிதளவும் அணியவே முடியாது'' என்றார்கள் எனக் குறிப்பிடப் பட்டிருந்தது. மற்றோர் அறிவிப்பில், 'அபூ உஸ்மான்(ரஹ்) அவர்கள் தங்களின் சுட்டுவிரலாலும் நடுவிரலாலும் சைகை செய்தார்கள்'' என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

பட்டுத் துணியை விரிப்பாகப் பயன்படுத்துதல்.

1990. ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள் பொன் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களில் பருக வேண்டாமென்றும், அவற்றில் உண்ண வேண்டாமென்றும், (ஆண்கள்) சாதாரண பட்டையும் அலங்கார பட்டையும் அணிய வேண்டாமென்றும், பட்டின் மீது அமர வேண்டாமென்றும் எங்களுக்குத் தடை விதித்தார்கள்.

ஆண்கள் (தங்களின் மேனியில்) குங்குமப் பூச் சாயமிட்டுக் கொள்வது தடை செய்யப்பட்டதாகும்.

1991. அனஸ்(ரலி) அறிவித்தார்: ஆண்கள் (தங்களின் மேனியில்) குங்குமப்பூச் சாயமிட்டுக் கொள்வதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

(முடி அகற்றப்பட்ட) தோல் காலணிகளும் மற்றவைகளும்.

1992. ஸயீத் அபூ மஸ்லமா(ரஹ்) அவர்கள் அறிவித்தார்: நான் அனஸ்(ரலி) அவர்களிடம், 'நபி(ஸல்) அவர்கள் தம் காலணிகளுடன் தொழுது வந்தார்களா?' என்று கேட்டேன். அவர்கள், 'ஆம் (தொழுது வந்தார்கள்)'' என்றார்கள்.

முதலில் இடது கால் காலணியைக் கழற்ற வேண்டும்.

1993. நீங்கள் காலணி அணியும்போது முதலில் வலது காலில் அணியுங்கள்; அதைக் கழற்றும்போது முதலில் இடது காலில் இருந்து கழற்றுங்கள். வலது காலே அணிவதில் முதலாவதாகவும், கழற்றுவதில் இறுதியாகவும் இருக்கட்டும்! என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஒரேயொரு காலணியில் நடக்கலாகாது.

1994. நீங்கள் ஒரேயொரு காலணியில் நடக்க வேண்டாம். ஒன்று, இரண்டு காலணிகளையும் ஒரு சேரக் கழற்றி விடுங்கள்; அல்லது இரண்டையும் ஒரு சேர அணிந்து கொள்ளுங்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹூரைரா (ரலி) அறிவித்தார்.

''என்னுடைய மோதிரத்தின் இலச்சினை போன்று வேறு யாரும் இலச்சினை பொறிக்க வேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியது.

1995. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றைச் செய்து, அதில் 'முஹம்மதுர் ரசூலுல்லாஹ்' (இறைத்தூதர் முஹம்மது) என்று இலச்சினை பொறித்தார்கள். மேலும், 'நான் வெள்ளி மோதிரம் ஒன்றைச் செய்து, அதில் 'முஹம்மதுர் ரசூலுல்லாஹ்' என இலச்சினை பொறித்துள்ளேன். எனவே, வேறு யாரும் அதைப் போன்று இலச்சினை பொறிக்க வேண்டாம்'' என்று கூறினார்கள்.

பெண்களைப் போன்று நடந்துகொள்பவர்(களான அலி)களை வீட்டிலிருந்து வெளியேற்றுதல்.

1996. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்ளும் ஆண்களையும், ஆண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் பெண்களையும் சபித்தார்கள். மேலும், 'அவர்க(ளில் அலிக)ளை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றுங்கள்'' என்றார்கள். அவ்வாறே நபி(ஸல்) அவர்கள் இன்னாரை வெளியேற்றினார்கள். உமர்(ரலி) அவர்கள் இன்னாரை வெளியேற்றினார்கள்.

இணைவைப்போருக்கு மாறுசெய்தல்.

1997. இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள். தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான நாஃபிஉ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இப்னு உமர்(ரலி) அவர்கள் ஹஜ் அல்லது உம்ராச் செய்தால் தம் தாடியைப் பிடிப்பதுப் பார்ப்பார்கள். (ஒரு பிடிக்கு) மேலதிகமாக உள்ளதை (கத்தரித்து) எடுத்து விடுவார்கள்.

(நரை முடிக்குச்) சாயமிடுதல்.

1998. யூதர்களும் கிறிஸ்தவர்களும் (முடிகளுக்குச்) சாயமிடுவதில்லை. எனவே, நீங்கள் (முடிகளுக்குச் சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களின் தலைமுடி.

1999. கத்தாதா(ரஹ்) அவர்கள் அறிவித்தார் : அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் (தலை) முடி பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'இறைத்தூதர்(ஸல்) அவர்களின் (தலை) முடி அலையலையானதாக இருந்தது. படிந்த முடியாகவும் இல்லை. சுருள் முடியாகவும் இல்லை. அவர்களின் காது மடல்களுக்கும் அவர்களின் தோளுக்கும் இடையே தொங்கிக் கொண்டிருந்தது'' என்று பதிலளித்தார்கள்.

2000. அனஸ்(ரலி) அறிவித்தார்: நபி(ஸல்) அவர்கள் பருத்த கைகளும் பருத்த பாதங்களும் உடையவர்களாகவும், முகம் அழகானவர்களாகவும் இருந்தார்கள். நான் அவர்களுக்கு முன்போ அவர்களுக்குப் பின்போ அவர்களைப் போன்று (வேறு யாரையும்) பார்க்கவில்லை. அவர்களின் உள்ளங்கைகள் விசாலமானவையாக இருந்தன.

தலைமுடியில் சிறிதளவு மழித்துவிட்டு சிறிதளவு மழிக்காமல் விட்டுவிடுவது (குடுமி வைப்பது.)

2001. இப்னு உமர்(ரலி) அறிவித்தார் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தலைமுடியில் ஒரு பகுதியை மழித்துவிட்டு, மற்றொரு பகுதியை மழிக்காமல் விட்டு விடுவதைத் தடை செய்தார்கள்.

தலைக்கும் தாடிக்கும் நறுமணம் பூசுவது.

2002. ஆயிஷா(ரலி) அறிவித்தார் : இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு, அவர்களிடம் இருந்தவற்றிலேயே நல்ல மணமுடைய வாசனைப் பொருளை நான் பூசிவந்தேன். எந்த அளவிற்கென்றால் அந்த நறுமணப் பொருளின் மினுமினுப்பை அவர்களின் தலையிலும் அவர்களின் தாடியிலும் என்னால் காணமுடிந்தது.

நறுமணப் பொருளை மறுக்காமல் ஏற்றுக் கொள்வது.

2003. ஸுமாமா இப்னு அப்தில்லாஹ் இப்னி அனஸ்(ரஹ்) அறிவித்தார்: அனஸ்(ரலி) (தமக்கு அன்பளிப்பாகத் தரப்படும்) நறுமணப் பொருளை மறுக்காமல் ஏற்றுக்கொள்வார்கள். மேலும், அவர்கள் 'நபி(ஸல்) அவர்கள் (தமக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்ட) நறுமணப் பொருளை மறுத்ததில்லை'' என்று கூறினார்கள்.

('தரீரா' எனும்) வாசனைத் தூள்.

2004. ஆயிஷா(ரலி) அறிவித்தார் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஹஜ்ஜத்துல் வதா) 'விடைபெறும்' ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டியபோதும் இஹ்ராமிலிருந்து விடுபட்டபோதும் நான் என் இரண்டு கைகளால் அவர்களுக்கு ('தரீரா' எனும்) வாசனைத் தூளைப் பூசிவிட்டேன்.

உருவங்களைப் படைப்போருக்கு மறுமை நாளில் கிடைக்கும் வேதனை.

2005. இந்த உருவங்களைப் படைப்போர் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்கள். அவர்களிடம், 'நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள் (பார்க்கலாம்)'' என (இடித்து)க் கூறப்படும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

உருவப் படங்களைச் சிதைத்தல்.

2006. அபூ ஸுர்ஆ இப்னு அம்ர் இப்னி ஜரீர்(ரஹ்) கூறினார்: நான் அபூ ஹுரைரா(ரலி) அவர்களுடன் மதீனாவில் ஒரு வீட்டினுள் நுழைந்தேன். அதன் மேல் தளத்தில் உருவப் படங்களை வரைவபவர் ஒருவர் உருவங்களை வரைந்து கொண்டிருந்தார். அப்போது அபூ ஹுரைரா(ரலி), 'என் படைப்பைப் போன்று படைக்க எண்ணுபவனை விட அக்கிரமக்காரன் வேறு யார் இருக்கமுடியும்? அவர்கள் ஒரு தானிய விதையையாவது படைத்துக் காட்டட்டும். ஓர் அணுவையாவது படைத்துக் காட்டட்டும் என்று (அல்லாஹ் கூறுவதாக) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொல்ல கேட்டேன்'' என்றார்கள். பிறகு (அங்கசுத்தி செய்வதற்காகத்) தண்ணீருள்ள பாத்திரம் ஒன்றைக் கொண்டுவரச் சொல்லி தம் இருகைகளையும் அக்குள் வரை கழுவினார்கள். நான், 'அபூ ஹுரைரா அவர்களே! இது (அக்குள் வரை கையைக் கழுவுவது), அல்லாஹ்வின் தூதரிடமிருந்து நீங்கள் செவியுற்ற விஷயமா?' எனக் கேட்க, அவர்கள், '(அங்கசுத்தி செய்யப்படும் உடலுறுப்புகள் மறுமையில் வெண்மையாகும்போது அக்குள்வரை) வெண்மை பரவும்'' (என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்) என்றார்கள்.

Sun 15

Click here to bookmark this link.Channel Image17:14 [பாடம்-69] மருத்துவம். முக்தஸர் ஸஹீஹுல் புகாரி
அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை.

1962. அல்லாஹ் எந் நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நோய் நிவாரணம் மூன்றில்.

1963. மூன்றில் (நோய்க்கு) நிவாரணம் உண்டு. இரத்தம் வெளியேற்றும் கருவியால் (உடலில்) கீறுவது, தேன் அருந்துவது, நெருப்பால் சூடிட்டுக் கொள்வது ஆகியனவே அந்த மூன்றும். (இருப்பினும்,) நான் என் சமுதாயத்தாருக்கு நெருப்பால் சூடிட்டுக் கொள்ள வேண்டாமெனத் தடை விதித்கிறேன் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

தேனால் சிகிச்சையளிப்பதும், 'தேனில் மக்களுக்கு நிவாரணம் உள்ளதும்.

1964. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) கூறினார் : ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'என் சகோதரர் வயிற்று வலியால் சிரமப்படுகிறார்'' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'அவருக்குத் தேன் ஊட்டுங்கள்'' என்று கூறினார்கள். பிறகு இரண்டாம் முறையாக அவர் வந்தி(ருந்து 'தேன் ஊட்டியதில் வயிற்றுப் போக்குதான் ஏற்பட்டது'' என்று கூறி)டவே, மீண்டும் நபி(ஸல்) அவர்கள், 'அவருக்குத் தேன் ஊட்டுங்கள்'' என்று கூறினார்கள். பிறகு மூன்றாம் முறையாக அவர் வர நபி(ஸல்) அவர்கள் அப்போதும், 'அவருக்குத் தேன் ஊட்டுங்கள்'' என்று கூறினார்கள். பிறகு (நான்காம் முறை அவர் வந்து), '(தாங்கள் சொன்னதையே) நான் செய்தேன். (ஆனால், குணமாகவில்லை)'' என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள் '(தேனில் நிவாரணம் இருப்பதாகக் குர்ஆனில்) அல்லாஹ் உண்மையே கூறியுள்ளான்; உங்கள் சகோதரரின் வயிறுதான் பொய் சொல்கிறது. அவருக்குத் தேன் ஊட்டுங்கள்'' என்று கூறினார்கள். அம்மனிதர், மீண்டும் தம் சகோதரருக்குத் தேன் ஊட்டினார். அதையடுத்து அவர் குணமடைந்தார்.

கருஞ்சீரகம்.

1965. அபூ ஹுரைரா(ரலி) கூறினார்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'கருஞ்சீரக விதையில் 'சாமைத்' தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது'' என்று கூறினார்கள். இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்கள்: 'சாம்' என்றால் 'மரணம்' என்று பொருள். 'அல்ஹப்பத்துஸ் ஸவ்தா' என்றால், (பாரசீகத்தில்) 'ஷூனீஸ்' (கருஞ்சீரகம்) என்று பொருள்.

வெண்கோஷ்டம் மற்றும் செய்கோஷ்டம் ஆகியவற்றால் வாசனை பிடிப்பது.

1966. நீங்கள் இந்த இந்திய (கோஷ்ட)க் குச்சியை அவசியம் பயன்படுத்துங்கள். ஏனெனில், அதில் ஏழு நிவாரணங்கள் உள்ளன. அடிநாக்கு அழற்சிக்காக அதை(த் தூளாக்கி எண்ணெயில் குழைத்து) மூக்கில் சொட்டு மருந்தாக இடப்படும். (மார்புத் தசைவாதத்தால் ஏற்படும்) விலா வலிக்காக அதை வாயின் ஒரு பக்கத்தில் சொட்டு மருந்தாகக் கொடுக்கப்படும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன்(ரலி) அறிவித்தார்.

நோயின் காரணத்தால் குருதி உறிஞ்சி எடுப்பது.

1967. அபூ உபைதா ஹுமைத் அத்தவீல்(ரஹ்) கூறினார்: அனஸ்(ரலி) அவர்களிடம் குருதி உறிஞ்சி வாங்குபவருக்குக் கூலி கொடுப்பது குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் குருதி உறிஞ்சி எடுத்துள்ளார்கள். அவர்களுக்கு அபூ தய்பா என்பவர் குருதி உறிஞ்சி வாங்கினார். நபி(ஸல்) அவர்கள் அவருக்கு(க் கூலியாக) இரண்டு 'ஸாஉ' உணவு கொடுத்தார்கள். மேலும், அபூ தய்பாவின் எசமானர்களுடன் நபி(ஸல்) அவர்கள் பேசியதையடுத்து (அவர்களுக்கு அவர் செலுத்த வேண்டிய வரியை) அவர்கள் குறைத்தார்கள். மேலும், நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் எவற்றால் சிகிச்சை பெறுகிறீர்களோ அவற்றிலெல்லாம் சிறந்தது குருதி உறிஞ்சி எடுப்பதும், வெண்கோஷ்டமும்தான். மேலும், உங்கள் குழந்தைகளை (அவர்களின்) அடிநாக்கு அழற்சியைப் போக்க (தொண்டையில்) குத்தித் துன்புறுத்தாதீர்கள். நீங்கள் அவசியம் கோஷ்டத்தைப் பயன்படுத்துங்கள்'' என்று கூறினார்கள்.

(மருத்துவ சிகிச்சைக்காக) சூடிட்டுக் கொள்வது அல்லது பிறருக்குச் சூடிடுவது. மேலும், சூடிட்டுக் கொள்ளாமல் இருப்பதன் சிறப்பு.

1968. ஆமிர் அஷ்ஷஅபீ (ரஹ்) கூறினார் : இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) 'கண்ணேறு, அல்லது விஷக்கடி தவிர வேறெதற்காகவும் ஓதிப்பார்த்த(லி)ல் (சிறப்பு) கிடையாது'' என்று கூறினார்கள். (அறிவிப்பாளர் ஹுஸைன் இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) கூறினார்:) நான் இதை ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அவர்களிடம் எடுத்துரைத்தேன். அப்போது அவர்கள் தமக்கு இப்னு அப்பாஸ்(ரலி) (பின்வருமாறு) அறிவித்தார்கள் என்று கூறினார்கள் :(ஒரு நாள்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மிஅராஜ் எனும் விண்ணுலகப் பயணத்தின்போது) எனக்குப் பல சமுதாயத்தார் எடுத்துக் காட்டப்பட்டனர். அப்போது இறைத்தூதர்களில் ஓரிருவருடன் (அவர்களின் சமுதாயத்தாரில் பத்துக்குட்பட்ட) ஒரு சிறு கூட்டமே கடந்து செல்லலாயினர். ஓர் இறைத்தூதர் தம்முடன் ஒருவருமில்லாத நிலையில் கடந்து சென்றார். பின்னர் எனக்கு ஒரு பெரும் கூட்டம் காட்டப்பட்டது. நான், 'இது எந்தச் சமுதாயம்? இது என் சமுதாயமா?' என்று கேட்டேன். அப்போது, 'அல்ல. இது (இறைத் தூதர்) மூஸாவும் அவரின் சமுதாயமும்'' என்று எனக்குச் சொல்லப்பட்டது. அப்போது 'அடிவானத்தைப் பாருங்கள்'' என்று என்னிடம் கூறப்பட்டது. அங்கு அடி வானத்தையே அடைத்திருந்த ஏராளமான மக்கள் திரளை பார்த்தேன். பிறகு என்னிடம், 'அடிவானங்களில் இங்கும் அங்கும் பாருங்கள்'' எனச் சொல்லப்பட்டது. அப்போது நான் அடிவானங்களை அடைத்திருந்த ஏராளமான மக்கள் திரளைக் கண்டேன். 'இது உங்கள் சமுதாயம். விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் எழுபதாயிரம் பேரும் இவர்களில் அடங்குவர்'' என்று எனக்குச் சொல்லப்பட்டது (விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் அந்த எழுபதாயிரம் பேர் யார் என்பதை) தோழர்களுக்கு விளக்காமலேயே நபி(ஸல்) அவர்கள் (தம் வீட்டுக்குள்) நுழைந்து விட்டார்கள். (அது தொடர்பாக) மக்கள் விவாதிக்கத் தொடங்கினார்கள். 'நாம் தாம் அவர்கள். (ஏனெனில்,) நாமே அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றினோம்; அல்லது நம் பிள்ளைகள் தாம் அவர்கள். (ஏனெனில்) அவர்கள் இஸ்லாத்தில் பிறந்தவர்கள். நாமோ அறியாமைக் காலத்தில் பிறந்தோம்'' என்று கூறினார்கள். இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியது. எனவே, அவர்கள் புறப்பட்டு வந்து, '(விசாரணையின்றி சொர்க்கம் செல்லவுள்ள) அவர்கள் யாரெனில், அவர்கள் ஓதிப்பார்க்கமாட்டார்கள்; பறவைகளை வைத்து சகுனம் பார்க்க மாட்டார்கள்; (நோய்க்காக) சூடிட்டுக் கொள்ளமாட்டார்கள். தம் இறைவனையே சார்ந்திருப்பார்கள்'' என்று கூறினார்கள். அப்போது உக்காஷா இப்னு மிஹ்ஸன்(ரலி) எழுந்து, 'அவர்களில் நானும் ஒருவனா? இறைத்தூதர் அவர்களே!'' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'ஆம்'' என்று பதிலளித்தார்கள். மற்றொருவர் எழுந்து நின்று, 'அவர்களில் நானும் ஒருவனா?' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள் 'இவ்விஷயத்தில் உக்காஷா உம்மை முந்திக் கொண்டுவிட்டார்'' என்று கூறினார்கள்.

தொழுநோய்.

1969. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொற்றுநோய் என்பது கிடையாது. பறவைகளைக் கொண்டு சகுனம் பார்ப்பதும் ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது. 'ஸஃபர்' மாதம் பீடை என்பதும் கிடையாது. சிங்கத்திடமிருந்து நீ எப்படி வெருண்டோடுவாயோ அப்படி தொழுநோயாளியிடமிருந்து வெருண்டோடு என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

'ஸஃபர்' எனும் வயிற்று நோய் ஒரு தொற்று நோயன்று.

1970. அபூ ஹுரைரா(ரலி) கூறினார் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'தொற்று நோய் கிடையாது. 'ஸஃபர்' தொற்று நோயன்று. ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது'' என்று கூறினார்கள். அப்போது கிராமவாசியொருவர், 'இறைத்தூதர் அவர்களே! (பாலை) மணலில் மான்களைப் போன்று (ஆரோக்கியத்துடன் துள்ளித் திரியும்) என் ஒட்டகங்களிடம் சிரங்கு பிடித்த ஒட்டகம் வந்து அவற்றிற்கிடையே கலந்து அவற்றையும் சிரங்கு பிடித்தவையாக ஆக்கிவிடுகின்றனவே! அவற்றின் நிலையென்ன (தொற்று நோயில்லையா)?' என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அப்படியென்றால் முதல் (முதலில் சிரங்கு பிடித்த) ஒட்டகத்திற்கு (அந்த நோயைத்) தொற்றச் செய்தது யார்?' என்று திருப்பிக் கேட்டார்கள்.

1971. ஹம்மாத் இப்னு ஸைத்(ரஹ்) கூறினார் : அய்யூப்(ரஹ்) அவர்களுக்கு அபூ கிலாபா(ரஹ்) அவர்களின் (ஹதீஸ் தொகுப்பு) நூல்கள் வாசித்துக் காட்டப்பட்டன. அவற்றில் அய்யூப்(ரஹ்) (அபூ கிலாபா(ரஹ்) அவர்களிடமிருந்து) அறிவித்த ஹதீஸ்களும் இருந்தன. அய்யூப்(ரஹ்) அவர்களுக்கு (முன்பே) வாசித்துக் காட்டப்பட்ட ஹதீஸ்களும் இருந்தன. அந்த நூலில் (பின்வரும்) இந்த ஹதீஸும் இடம் பெற்றிருந்தது. அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்: அபூ தல்ஹா(ரலி) அவர்களும் அனஸ் இப்னு நள்ர்(ரலி) அவர்களும் எனக்கு (மார்புத் தசை வாதத்தால் ஏற்பட்ட விலா வலிக்காக) சூடிட்டார்கள். அபூ தல்ஹா(ரலி) தம் கையால் எனக்குச் சூடிட்டார்கள். அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒரு வீட்டாருக்கு விஷக் கடிக்காகவும், காது வலிக்காகவும் ஓதிப்பார்க்க அனுமதியளித்தார்கள். அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்: (மார்புத் தசை வாதத்தால் ஏற்பட்ட) விலா வலிக்காக எனக்குச் சூடிடப்பட்டது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உயிரோடியிருந்தார்கள். அந்த நேரத்தில் அபூ தல்ஹா(ரலி), அனஸ் இப்னு நள்ர்(ரலி), ஸைத் இப்னு ஸாபித்(ரலி) ஆகியோர் என்னுடன் இருந்தனர். அபூ தல்ஹா(ரலி)தாம் எனக்குச் சூடிட்டார்கள்.

1972. ஃபாத்திமா பின்த் முன்திர்(ரஹ்) கூறினார் : அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பெண் தம்மிடம் கொண்டு வரப்பட்டால் அவளுக்காக பிரார்த்தனை புரிந்துவிட்டு தண்ணீரை எடுத்து அவளுடைய ஆடையின் உட்பகுதியில் தெளிப்பார்கள். மேலும், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் காய்ச்சலைத் தண்ணீரால் தணிக்கும்படி எங்களுக்குக் கட்டளையிட்டு வந்தார்கள்'' என்றும் கூறினார்கள்.

1973. ஹஃப்ஸா பின்த் சீரின்(ரஹ்) கூறினார்: அனஸ் இப்னு மாலிக்(ரலி) என்னிடம், '(உன் சகோதரரான) யஹ்யா இப்னு சீரின் எதனால் இறந்தார்?' என்று கேட்டார்கள். நான், 'கொள்ளைநோயால் இறந்தார்'' என்று பதிலளித்தேன். அவர்கள், 'கொள்ளைநோய் (மரணம்), ஒவ்வொரு முஸ்லிமுக்கும் வீரமரணமாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனக் கூறினார்கள்.

கண்ணேறுக்கு ஓதிப்பார்ப்பது

1974. ஆயிஷா(ரலி) கூறினார் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கண்ணேறுவி(ன் தீயவிளைவி)லிருந்து விடுபட ஓதிப்பார்த்துக் கொள்ளும்படி 'கட்டளையிட்டார்கள்.

1975. உம்மு ஸலமா(ரலி) கூறினார் : நபி(ஸல்) அவர்கள் என் வீட்டில் ஒரு சிறுமியைப் பார்த்தார்கள். அவளுடைய முகத்தில் கருஞ்சிவப்பான படர்தாமரை ஒன்று இருந்தது. நபி(ஸல்) அவர்கள், 'இவளுக்கு ஓதிப்பாருங்கள். ஏனெனில், இவள் மீது கண்ணேறு பட்டிருக்கிறது'' என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாம்புக்கடி மற்றும் தேள் கடிக்கு ஓதிப் பார்ப்பது.

1976. அஸ்வத் இப்னு யஸீத் அந்நகஈ(ரஹ்) கூறினார் : ஆயிஷா(ரலி) அவர்களிடம், விஷக் கடிக்கு ஓதிப்பார்ப்பது குறித்துக் கேட்டேன். அவர்கள், 'நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு விஷ உயிரினத்தின் கடியிலிருந்தும் (நிவாரணம் பெற்றிட) ஓதிப்பார்ப்பதற்கு அனுமதியளித்தார்கள்'' என்று கூறினார்கள்.

1977. ஆயிஷா(ரலி) கூறினார் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஓதிப்பார்க்கும்போது 'பிஸ்மில்லாஹி. துர்பத்து அர்ளினா வரீகத்து பஅளினா யுஷ்ஃபா சகீமுனா பிஇத்னி ரப்பினா'' என்று கூறுவார்கள். (பொருள்: அல்லாஹ்வின் திருப்பெயரால்... எங்கள் பூமியின் மண்ணும் எங்களில் சிலரின் உமிழ் நீரும் (கலந்தால்) எங்கள் இறைவனின் ஆணையின் பேரில் எங்களில் உள்ள நோயாளியைக் குணப்படுத்தும்.)

நற்குறி.

1978. அபூ ஹுரைரா(ரலி) கூறினார் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'பறவை சகுனம் ஏதும் கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியாகும்'' என்று கூறினார்கள். மக்கள், 'நற்குறி என்பது என்ன இறைத்தூதர் அவர்களே?' என்று கேட்டார்கள் அதற்கு அவர்கள், 'நீங்கள் செவியுறுகிற நல்ல (மங்கலகரமான) சொல்தான்'' என்று பதிலளித்தார்கள்.

சோதிடம்.

1979. அபூ ஹுரைரா(ரலி) கூறினார் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'ஹுதைல்' குலத்துப் பெண் இருவரின் (வழக்கு) தொடர்பாகத் தீர்ப்பளித்தார்கள். அவர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொண்டார்கள். அப்போது அவர்களில் ஒருத்தி மற்றொருத்தியின் மீது ஒரு கல்லை எறிய அது அவளுடைய வயிற்றில் பட்டுவிட்டது. கர்ப்பிணியாயிருந்த அவளுடைய வயிற்றில் இருந்த சிசுவை அவள் கொன்றுவிட்டாள். எனவே, நபி(ஸல்) அவர்களிடம் மக்கள் இந்த வழக்கைக் கொண்டு வந்தனர். நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணின் வயிற்றிலிருந்த சிசுக்காக ஓர் ஆண் அடிமையை, அல்லது பெண் அடிமையை உயிரீட்டுத் தொகையாகத் தரவேண்டும் என்று தீர்ப்பளித்தார்கள். அப்போது குற்றம் புரிந்த அப்பெண்ணின் காப்பாளர்(கணவர்), உண்ணவோ பருகவோ, மொழியவோ அழவோ முடியாத ஒரு சிசுக்காக நான் எப்படி அபராதம் செலுத்துவது இறைத்தூதர் அவர்களே! இதைப் போன்றவை தள்ளுபடி செய்யப்பட வேண்டுமல்லவா?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'இவர் (சாதுர்யமாகவும் அடுக்கு மொழியிலும் பேசுவதில்) குறிகாரர்களின் சகோதரர்களில் ஒருவர்'' என்று கூறினார்கள்.

சில சொற்பொழிவுகளில் ஈர்ப்பு உள்ளது.

1980. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார் : இரண்டு மனிதர்கள் (மதீனாவுக்குக்) கிழக்கிலிருந்து வந்து உரையாற்றினார்கள். அவ்விருவரின் (சொல்லெழில் மிக்க) சொற்பொழிவைக் கேட்டு மக்கள் வியந்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'சில சொற்பொழிவில் கவர்ச்சி உள்ளது' அல்லது 'சொற்பொழிவுகளில் சில கவர்ச்சியாகும்'' என்று கூறினார்கள்.

தொற்று நோய் கிடையாது.

1981. வியாதி பிடித்த ஒட்டகத்தை ஆரோக்கியமான ஒட்டகத்திடம் கொண்டு செல்லாதீர்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

விஷம், ஆபத்தான பொருள், அசுத்தமான பொருள் ஆகியவற்றால் சிகிச்சை அளிப்பதும், விஷம் அருந்துவதும்.

1982. மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்கிறவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக் கொண்டேயிருப்பர். விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்கிறவர் தம் விஷத்தைக் கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக் கொண்டேயிருப்பார். ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறவரின் கூராயுதத்தை அவர் தம் கையில் வைத்துக்கொண்டு நரக நெருப்பில் தம் வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாத்திரத்தில் ஈ விழுந்துவிட்டால்...

1983. உங்கள் பாத்திரத்தில் ஈ விழுந்துவிட்டால் அதை முழுவதுமாக அமிழ்த்தி எடுங்கள். பிறகு அதை எடுத்தெறிந்து விடுங்கள். ஏனெனில், அதன் இரண்டு இறக்கைகளில் ஒன்றில் நோய் இருக்கிறது. இன்னொன்றில் நிவாரணம் இருக்கிறது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Mon 09

Click here to bookmark this link.Channel Image10:00 இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 25 வஹ்ஹாபி
ஷரீஅத்தைத் தாண்டி, தரீக்கத்தைக் கடந்து, ஹகீக்கத்தில் எவர் காலூன்றி விடுகிறாரோ அவர் இறைவனோடு ஃபனா ஆகி, மஃரிஃபாவுடைய ஞானத்தைப் பெற்று விடுகிறாராம். அதாவது இறைவனோடு இரண்றக் கலந்து விடுகிறாராம். இதை ஓர் உதாரணம் மூலம் விளக்குவர் ஸூஃபிகள். அதாவது,

இஸ்லாம் என்பது ஒரு வட்டம். அதன் வெளிவிளிம்புதான் வெளிரங்கமான ஷரீஅத். வட்டத்தின் மையப் புள்ளியே உள்ரங்கமான ஹகீக்கத்தாம். ஷரீஅத் எனும் வெளிவிளிம்பிலிருந்து ஹகீக்கத் எனும் மையப் புள்ளியை நோக்கிச் செல்லும் ஆரமே தரீக்கத் எனும் ஞானப் பாட்டையாம். இந்தத் தரீக்கத் எனும் கோடு எந்த அளவுக்கு ஹகீக்கத் எனும் மையப் புள்ளியை நோக்கி நெருங்கி, நெருங்கிச் செல்கிறதோ, அந்த அளவுக்கு மனிதன் இறைவனை நெருங்குகின்றானாம். நெருங்கி, நெருங்கி, இறுதியில் இந்தக் கோடு கடைசியாக அந்த மையப் புள்ளியைப் போய்த் தொடுமன்றோ? அப்போது இந்த ஞானவான், இறைவனோடு ஒன்றிக் கலந்து விடுகிறானாம். இவ்வாறு கலந்த நிலையே மஃரிஃபத்தாம்.

மஃரிஃபாவுடைய நிலயை எய்தி, இறைவனோடு ஃபனாவாகி - ஒன்றிக் கலந்து - விட்ட ஸூஃபிக்கு உலகிலுள்ள அனைத்துப் பொருள்களும் இறைவனாகவே காட்சி வழங்குமாம். அவனும் இறைவன்தானாம். இந்த வழிகெட்ட கோட்பாட்டை ஸூஃபிஸத்தின் ஆரம்ப நிலையில் அனுபவித்த பக்த கோடிகள் அதைத் தம் உள்ளத்துக்குள்ளேயே வைத்துக் கொண்டார்கள்.

"சொல்லத் தகுமல்ல இப்பொருளை
சுருட்டி மறைக்கிறேன் ஷரஹுக்காக"

என்று பீரப்பா பாணியில் ஆரம்பகால ஸூஃபிகள் மஃரிஃபா ஞானத்தை வெளிப் படுத்தினார்களில்லை.

இவ்வாறு ஒளிவு-மறைவாக மஃரிஃபா ஞானம் அடைந்து கிடந்தபோது அதை வெளிப்படுத்தி ஆன்மீக உலகில் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் ஒரு 'புரட்சித் தலைவர்'.

"நேசனும் நேசிக்கப் பட்டவனும் ஒருவனே! என்னைக் காணும்போது அவனைக் காணுகின்றீர்கள். நாங்கள் இருவரும் ஒரே உருவில் ஒன்றிவிட்ட இரு ஆன்மாக்களாகும்" என்று அந்தப் புரட்சியாளர் பகிரங்கமாகப் பறை சாற்றினார்.

"அனல் ஹக் - நானே அல்லாஹ்" என்பது இவருடைய ஆன்மீக கோஷமாயிற்று. உடனே, அப்போதிருந்த ஷரீஅத் கோர்ட் உஷாராயிற்று. அந்தப் புரட்சித் தலைவரான ஹுஸைன் இப்னு மன்ஸூர் ஹல்லாஜ் என்ற ஸூஃபியை, காஃபிர் எனத் தீர்ப்புரைத்தது. அவருக்கு மரண தண்டனை விதித்தது. இந்நிகழ்வு ஹிஜ்ரீ 309ஆம் ஆண்டு இராக்கில் நடந்ததாகும்.

Sat 17

Click here to bookmark this link.Channel Image23:41 நீதிமன்றத்தில் “மை லார்ட்” என்று சொல்ல வேண்டாம்! -நீதிபதி சந்துரு மக்கள் சட்டம் (PEOPLE'S LAW)
நீதிமன்றங்கள் என்றாலே கருப்பு கோட்டும், கவுனும் அணிந்த வழக்ககறிஞர்கள் "மை லார்ட்" என்று கூவும் காட்சியே நமது நினைவுக்கு வரும். இவ்வாறுதான் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் காட்டப்பட்டுள்ளன. இவை ஒன்றும் மிகைப்படுத்தப்பட்ட காட்சி அல்ல.

ஒரு வாக்கியத்தை பேசுவதற்குள் ஏழெட்டுமுறை "மைலார்ட்" என்று சொல்லும் வழக்கறிஞர்களை உயர்நீதிமன்றத்தில் பார்க்கலாம்.

"லார்ட்" என்பது இங்கிலாந்து நீதிமன்றத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு சொல். பிரபுக்கள் நீதி வழங்கியபோது உருவாக்கப்பட்ட நடைமுறை. நீதி என்பது குடிமக்களுக்கு பிரபுக்கள் வழங்கும் சலுகையாக கருதப்பட்ட காலத்தில் உருவாகிய பழக்கம். ஆனால் தற்போது நீதி என்பது சலுகையாக அல்லாமல், உரிமையாக மாறியுள்ளது.

இந்தியா சுதந்திரம் பெற்று அந்த சுதந்திரத்திற்கு பொன்விழா கொண்டாடும் நேரத்தில் சுயமரியாதை கொண்ட சில வழக்கறிஞர்கள், நீதிபதிகளை "மை லார்ட்" என்று அழைக்கும் அடிமைப்பழக்கத்தை கைவிட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து பிரசாரத்தில் ஈடுபட்டார்கள்.

இதைத்தொடர்ந்து கடந்த 2006ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்திய வழக்குரைஞர் மன்றம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. அந்த தீர்மானத்தில், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடத்தும் வழக்கறிஞர்கள், நீதிபதியை "யுவர் ஹானர்" அல்லது "ஹானரபிள் கோர்ட்" என்று அழைத்தால் போதும்; "மை லார்ட்" என்று அழைக்கத் தேவையில்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மற்ற நீதிமன்றங்களில் வழக்கு நடத்தும் வழக்கறிஞர்கள், நீதிபதியை, "ஐயா" என்று அழைத்தால் போதும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

ஆனால் நடைமுறையில் இதை செயல்படுத்துவதில் யாரும் ஆர்வம் காட்டவில்லை. பலகாலமாக மைலார்ட் என்று சொல்லிப்பழகியவர்களுக்கு அந்த பழக்கத்தை மாற்றிக்கொள்ள முடியவில்லை. அதை மாற்ற விரும்பிய இளம் வழக்கறிஞர்களுக்கோ நடைமுறையில் பெரும் தயக்கம். எதிர் தரப்பில் இருப்பவர்கள் "மை லார்ட்" என்று அழைக்கும்போது தாம் அவ்வாறு அழைக்காவிட்டால் நீதிபதி என்ன நினைத்துக் கொள்வாரோ? தீர்ப்பு என்னவாகுமோ? நமது கருத்துகளை நிலைநிறுத்துவதற்காக கட்சிக்காரரின் நலனை பலி கொடுப்பதா? என்பது போன்ற குழப்பங்கள் இருப்பதால் யாரும் இதனை செயல்படுத்த முன்வரவில்லை.

இந்த நிலையில்தான் நீதிபதி சந்துரு கடந்த 15-10-2009 அன்று ஒரு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டார். அவரது நீதிமன்றத்தில் யாரும் தம்மை 'மை லார்ட்' என்று அழைக்கக்கூடாது என்று அறிவிக்கையை தமது நீதிமன்றத்தில் வெளியிட்டார்.

அனைவரும் வரவேற்க வேண்டிய அறிவிப்பு இது. இதை மற்ற நீதிபதிகளும் பின்பற்றினால் நீதித்துறையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு இது ஒரு தொடக்கமாக அமையும்.

இந்திய வழக்கறிஞர்கள் அணியும் சீருடையும்கூட இங்கிலாந்து நீதித்துறையின் வழக்கம்தான். இன்று இங்கிலாந்திலும், இங்கிலாந்திடம் அடிமையாக இருந்த நாடுகளிலும் மட்டுமே கருப்பு கோட் மற்றும் கவுனை வழக்கறிஞர்கள் அணியும் வழக்கம் நடைமுறையில் உள்ளது.

மற்ற நாடுகளில் இந்த வழக்கம் இல்லை. அடிமைச்சின்னமாக உள்ள இந்த சீருடையை புறக்கணிப்பது குறித்தும் விவாதங்கள் உருவாக வேண்டும்.

இதேபோல நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கும்போது நீதி வேண்டி பிரார்த்திப்பதாக மனு கொடுக்கப்படுகிறது. உரிமைகளை கோருவதில் தவறில்லை. ஆனால் நீதி வழங்குமாறு பிரார்த்திக்க வேண்டும் என்பதை ஏற்கக்கூடாது. உரிமைகளை கோருவதும் ஒரு அடிப்படை உரிமையே. அதைக்கோருவதில் சுயமரியாதை இழக்கும் நிலை இருக்கக்கூடாது. நீதி என்பது அதை வழங்குவோரின் விருப்புரிமையாகவும் இருக்கக்கூடாது. எனவே இதற்கும் வேறு வார்த்தைகளை பயன்படுத்துவது குறித்து விவாதங்கள் உருவாக வேண்டும்.

இந்த விவாதங்களை சட்டத்துறையினர்தான் முன்னெடுக்கவேண்டும் என்ற அவசியமில்லை. இந்தியர்களின் இறையாண்மை குறித்து அக்கறை கொண்ட யாரும் இந்த விவாதங்களை அவர்களுக்கு வாய்ப்புள்ள களங்களில் உருவாக்கவும், வளர்த்தெடுக்கவும் முன்வரவேண்டும்.

ஏனெனில் சட்டம் என்பது சட்டத்துறையினரும், வழக்கறிஞர்களும் மட்டும் தொடர்புடைய ஒரு அம்சம் அல்ல. அது அவ்வாறு இருக்கவும் கூடாது.

-சுந்தரராஜன்
(sundararajan@lawyer.com)

Click here to bookmark this link.Channel Image10:12 அறிவியலும் அரையவியலும் - 3 வஹ்ஹாபி
கடந்த 9 அக்டோபர் 2009 திண்ணை இதழில் அப்துல் அஸீஸ் எனும் பெயரில் எழுதுபவர், "அவை ஒவ்வொன்றும் தனக்கு வரையறை செய்யப் பட்ட வழியில் நீந்திச் சொன்று கொண்டிருக்கின்றன [021:033] என்று இவர் குறிப்பிடும் இடத்தில் தெளிவாக தரையும் அப்படியே சூரியனை சுற்றி வருகிறது என்று எழுதியிருக்கிறதா என்று படித்து சொல்ல வேண்டுகிறேன்" என்று திண்ணை ஆசிரியரை (அன்புள்ள ஆசிரியருக்கு) வேண்டியிருந்தார்.
முதல் மடலில், "உலகம்" என்றும் "பூமி" என்றும் எழுதியவர் இப்போது "தரை"க்கு இறங்கி விட்டார். தரை என்பது நீர் உட்பட எதுவுமில்லா நிலத்தைக் குறிக்கும் சொல்லாகும். பூமியின் மூன்றில் இரண்டு பங்கைச் சூழ்ந்திருக்கும் கடல், நமது "தரை"க்குத் தொடர்பற்றது போல் கட்டுரையாளர் குறிப்பிட்டிருப்பது வியப்பளிக்கிறது!

வானில்தான் சூரியனும் சந்திரனும் இருக்கின்றன என்பது, நிலவைக் காட்டி உணவூட்டும் தமிழ்த் தாயின் இடுப்பில் இருக்கின்ற குழந்தைக்கும் தெரிந்ததுதான். என்றாலும் அதைக் குர்ஆனின் சொற்களால் நிரூபிக்க வேண்டிய கட்டாயச் சூழல் எனக்கு. ஏனெனில், போகிற போக்கைப் பார்த்தால், "வானில்தான் சூரியனும் சந்திரனும் உள்ளது என்று குர் ஆனில் சொல்லப் பட்டிருக்கிறதா?" எனக் கட்டுரையாளர் அறிவுப்பூர்வமான கேள்வியைக் கேட்டு விடும் வாய்ப்பிருப்பதால்,
"ஏழு வானங்களையும் அல்லாஹ் எவ்வாறு அடுக்கடுக்காகப் படைத்திருக்கிறான் என்பதை நீங்கள் (சிந்தித்துப்) பார்க்கக் கூடாதா? அவற்றில் சந்திரனை வெளிச்சமாகவும் சூரியனை ஒளிவிளக்காகவும் அமைத்தவன் அவனே!" [071:015,016] Allah has created the seven heavens in tiers and has made the moon a light therein, and made the sun a lamp meaning, He made a distinction between them (the sun and moon) in reference to their lighting. He made each one of them in a set manner with a distinct quality so that the night and day may be known. They (the night and day) are known by the rising and setting of the sun. He also determined fixed stations and positions for the moon, and He made its light vary so that sometimes it increases until it reaches a maximum, then it begins to decrease until it is completely veiled. This shows the passing of months and years.
என்று குர் ஆன் தெளிவாகக் கூறுவதை உறுதி செய்வது எனது கடமையானது.

அடுத்து,

"வானில் இருக்கும் சூரியன்-சந்திரனோடு வானுக்குச் சம்பந்தம் இல்லாத பூமியைக் 'கொண்டுபோய்' சேர்த்துச் சொல்வது சரியாகுமா?" என்பது கட்டுரையாளரது முக்கிய ஆட்சேபணையாகும்.
"திண்ணமாக, வானங்கள்-பூமி ஆகிய அவ்விரண்டும் விலகி விடாதவாறு அல்லாஹ்தான் தடுத்து வைத்திருக்கிறான்.  அவை இரண்டும் விலகுமாயின் அவை இரண்டையும் தடுத்து நிறுத்த அவனையன்றி எவராலும் முடியாது ..." [035:041] Verily, Allah grasps the heavens and the earth lest they should move away from their places, and if they were to move away from their places, there is not one that could grasp them after Him.
மேற்காணும் இறைவசனத்தில் அரபு மொழியின் சிறப்பு எண்ணான இருமை تَزُولاَ  ஆளப் பட்டுள்ளது ஈண்டு நோக்கத் தக்கது.

ஏனெனில், எனது முதல் எதிர்வினையில் எடுத்துக் காட்டாகக் குறிக்கப் பட்டதும் கட்டுரையாளரின் மறுப்புக்குரியதுமான, "... அவை ஒவ்வொன்றும் தனக்கு வரையறை செய்யப் பட்ட வழியில் நீந்திச் சொன்று கொண்டிருக்கின்றன" எனும் 021:033 இறைவசனத்தில் சூரியன் - சந்திரன் ஆகிய இரண்டையும் குறிக்க இருமைச்சொல் ஆளப்படவில்லை என்பதும் "ஒவ்வொன்றும்/எல்லாமும்" எனப் பன்மைச் சொல் كُلٌّ பயன் படுத்தப் பட்டுள்ளதும் கட்டுரையாளர் விளங்க வேண்டிய கட்டாயக் கருவாகும்.

அந்த வசனத்தில் ஏன் இருமை ஆளப்படவில்லை? எனும் வினாவுக்கு விடை, அந்த இறைவசனத்தில் இருமைக்கு மேற்பட்டவை இடம் பெறுகின்றன என்பதுதான். அந்த வசனம் முழுமையாக :
"அவன் தான் இரவையும் பகலையும் சூரியனையும் சந்திரனையும் படைத்தான். அவை ஒவ்வொன்றும் தனக்கு வரையறை செய்யப் பட்ட வழியில் நீந்திச் சொன்று கொண்டிருக்கின்றன" [021:033] And He it is Who has created the night and the day, and the sun and the moon, each in an orbit floating.
மேற்காணும் இறைவசனத்தில் உள்ள இரவு-பகல் என்பன பூமிக்குச் சொந்தமானவை. இரவு-பகல் மாறி வரும் பூமியும் வானங்களும் பால்வளிப் பயணத்தின் சகபயணிகள் என்பதை இதைவிடத் தெளிவாகச் சொல்லவும் வேண்டுமோ?

கட்டுரையாளரின் கருத்துப்படி சூரியன்-சந்திரன் இரண்டும் பூமியை அம்போ என்று விட்டுவிட்டு நீந்திச் சென்று கொண்டிருக்கின்றன எனக் கொண்டால் ... பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், சூரிய ஒளியின்றி இருளில் மூழ்கி எப்போதோ செத்திருப்போம்.

மேற்காணும் விளக்கங்கள் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதல்ல. தலைக்குள் இருப்பதைப் பயன் படுத்தும் எவருக்கும் எளிதாக விளங்கக் கூடியவைதாம் - அதுவும் கட்டுரையாளரின் கூற்றுப்படி, "700 ஆண்டுகளுக்கு முன்னர் சரியாக எழுதி வைத்த இமாம் இபுனு கஸீர்" விளக்குவதால்.
மறுப்புகள் தொடரும், (இன்ஷா அல்லாஹ்).
ஃஃஃ
திண்ணை குறிப்பு:
இந்த விவாதம் இத்துடன் முற்றுப்பெறுகிறது.

Sun 11

Click here to bookmark this link.Channel Image00:34 அறிவியலும் அரையவியலும் - 2 வஹ்ஹாபி
கடந்த 20 செப்டம்பர் 2009 திண்ணை இதழில், "அறிவியல் புத்தகங்கள் அடிப்படையில் அல் குர்ஆனுக்கு தஃப்ஸீர் எழுதுவது சரியானதா?" எனும் கட்டுரை ஒன்று அப்துல் அஸீஸ் என்ற பெயரில் வெளியாகி இருந்தது. அதற்கு எதிரிவினையாகக் கடந்த வாரம், "அறிவியலும் அரையவியலும்" எனும் தலைப்பில் அவருக்கு மறுப்புத் தெரிவித்திருந்தேன்.


கட்டுரையாளர் அப்துல் அஸீஸுடைய பார்வையில் முதல் குற்றவாளியான டாக்டர் மாரிஸ் புகைல் விசாரிக்கப் பட்டுவிட்டதால் இரண்டாவது குற்றவாளியான புவியியல் முனைவர், பேரா. ஸக்லூல் ராகிப் முஹம்மதுஅல்-நஜ்ஜாரை இந்த வாரம் திண்ணைக் கூண்டில் ஏற்றுவோம்.

"பூமி சுழன்று கொண்டும் சூரியனைச் சுற்றிக் கொண்டும் இருக்கிறது; அதனால்தான் இரவு-பகல் ஏற்படுகிறது" என்று அல்-நஜ்ஜார் கூறும் "காஃபிர் (!) கருத்தை" விசாரிப்பதற்கு முன்னர் சூரியன், சந்திரன், இரவு, பகல் குறித்து இறைமறை குர்ஆன் என்ன கூறுகிறது என்பதைப் பார்த்துவிட வேண்டியுள்ளது. ஏனெனில் அது தெரியா விட்டால் அல்-நஜ்ஜார், தன் விருப்பத்திற்கு ஏற்ப விஞ்ஞானக் கருத்துகளைக் கூறுகிறாரா? அல்லது குர்ஆன் கூறுவதை ஆய்ந்து விளக்குகிறாரா? என்பது நமக்குத் தெளிவாகாது.

சூரியனும் சந்திரனும்
"சூரியன், தனக்கு விதிக்கப் பட்ட காலம்வரை அதற்கென வரையறை செய்யப் பட்ட வழியில் ஓடிக் கொண்டிருக்கிறது ..." And the sun runs on its fixed course for a term (appointed) ....;
"மேலும் உலர்ந்து வளைந்த பழைய ஈச்சைமட்டையைப் போல் மீளும்வரை சந்திரனுக்கு நாம் பல படிநிலைகளை ஏற்படுத்தி இருக்கிறோம்" And the moon, We have decreed for it stages, till it returns like the old dried curved date stalk;
"சூரியன், சந்திரனை எட்ட முடியாது. இரவு, பகலை முந்த முடியாது. அனைத்தும் (வரையறை செய்யப் பட்ட) தம் வழிகளில் நீந்திச் செல்கின்றன" [036:038-040] It is not for the sun to overtake the moon, nor does the night outstrip the day. They all float, each in an orbit.
"இரவுவையும் பகலையும் சூரியனையும் சந்திரனையும் அவன்தான் படைத்தான். அவை ஒவ்வொன்றும் தம் வரையறை வழிகளில் நீந்திச் செல்கின்றன" [021:033] (and the sun and the moon,) the sun with its own light and its own path and orbit and allotted time, and the moon which shines with a different light and travels on a different path and has its own allotted time.

நமது சூரியக் குடும்பத்தில், இரவு-பகல் மாறிமாறி வரும் பூமி உட்பட அனைத்தும் நீந்திக் கொண்டிருக்கின்றன. அதாவது தனது குடும்பத்தைச் சேர்ந்த அனைத்தையும் சூரியன் இழுத்துக் கொண்டு எங்கோ சென்று கொண்டு இருக்கிறது என்றும் அனைத்துக்கும் விதிக்கப் பட்டுள்ள காலம்வரை இந்த 'இழுவை இயக்கம்' நிற்காது என்றும் விளங்குகிறது. பால்வளிப் பயணம் எனும் இந்த இழுவை இயக்கத்துக்கு உள்ளேயே சூரியன், சந்திரன், பூமி ஆகிய அனைத்தும் தன்னுள் சுழன்று கொண்டும் இன்னொன்றைச் சுற்றிக் கொண்டுமிருப்பதன் அடிப்படையின்தான் நாள், மாதம், ஆண்டுகளை நாம் கணக்கிடுகிறோம். இரவும் பகலும் பிறையும் கிரகணங்களும் சுழற்சி-சுற்றல்களால் ஏற்படுபவையே.

அப்துல் அஸீஸ் என்ற பெயரில் எழுதிய கட்டுரையாளர், "பாம்பு கவ்விக் கொள்வதால் கிரகணம் ஏற்படுகிறது" எனும் பாட்டிக் கதையை இஸ்லாத்தோடு இணைத்து எழுதாதது ஆறுதல் அளிக்கிறது!.

கிரகணம்

நபிகள் நாயம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகன் இபுறாஹீம் எனும் பாலகன் இறந்த நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. "அல்லாஹ்வின் தூதரின் மகனது இறப்புக்காகவே சூரிய கிரகணம் ஏற்பட்டிருக்கிறது" என்று மக்கள் பேசிக் கொண்டார்கள். தன் பாலகனை இழந்திருந்த அந்த வேளையிலும் மக்கள் பேச்சை மறுத்து, அதைத் திருத்தும் விதமாக, "சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் இரு சான்றுகளாகும். எவருடைய பிறப்புக்காகவோ இறப்புக்காகவோ அவை ஏற்படுவதில்லை. எனவே, நீங்கள் கிரகணத்தைக் கண்டால் அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அது விலகும்வரை தொழுங்கள்" என்று நபிகள் நாயகம் கூறினார்கள் [புகாரீ 1060].
"இரவும் பகலும் சூரியனும் சந்திரனும் அவனுடைய படைப்பாற்றலுக்கான சான்றுகளாகும். எனவே, நீங்கள் மெய்யாகவே அல்லாஹ்வை வணங்குபவர்களாயின் சூரியனுக்கும் சந்திரனுக்கும் ஸுஜூது செய்ய வேண்டாம். அவற்றைப் படைத்தவனான அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்யுங்கள்" [041:037] And from among His signs are the night and the day, and the sun and the moon means, He created the night with its darkness and the day with its light, and they alternate without ceasing. And He created the sun with its shining light, and the moon with its reflected light. and He allotted their stages and gave them separate orbits in the heavens, so that by the variations in their movements man may know the stages of night and day, of weeks, months and years, and time periods related to people's rights, acts of worship and various transactions. Moreover, because the sun and moon are the most beautiful of the heavenly bodies that can be seen in both the upper and lower realms, Allah points out that they are created entities which are in a state of enthrallment to Him, subject to His dominion and control. (Do not prostrate yourselves to the sun nor to the moon, but prostrate yourselves to Allah Who created them, if you (really) worship Him.) meaning, `do not associate anything in worship with Him, for your worship of Him will be of no benefit to you if you worship others alongside Him, because He does not forgive the association of others in worship with Him.
இரவும் பகலும்
"திண்ணமாக அல்லாஹ்தான் இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான் ..." [031:029] See you not that Allah merges the night into the day, and merges the day into the night ... "...
அவன்தான் பகலின் மீது இரவைச் சுருட்டுகிறான். இரவின் மீது பகலைச் சுருட்டுகிறான் ..." [039:005] He makes the night to go in the day and makes the day to go in the night.) means, He has subjugated them and He causes them to alternate without ceasing, each seeking the other rapidly. "...
அவன்தான் இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; பகலைக் கொண்டு இரவை மூடுகிறான் ..." [007:054] He brings the night as a cover over the day, seeking it rapidly, meaning, the darkness goes away with the light, and the light goes away with the darkness. Each of them seeks the other rapidly, and does not come late, for when this vanishes, the other comes, and vice versa.
"... சந்திரனின் மீதாணை! பின்வாங்கிச் செல்லும் இரவின் மீதாணை! (அதனால்) வெளிச்சம் பெறும் விடிகாலை மீதாணை! ..." [074:032-034] ... And by the moon. And by the night when it withdraws And by the dawn when it brightens).
மேற்காணும் வசனங்களில் உள்ள, "புகுத்துவது", "சுருட்டுவது", "மூடுவது" ஆகிய சொற்கள் ஆழ்ந்து நோக்கத் தக்கன. ஏனெனில் அவைதாம் இரவு-பகல் எவ்வாறு ஏற்படுகின்றன என்பதைத் தெளிவு படுத்துகின்றன.

பகலாக இருக்கும் இடத்தை இரவு மறைத்தாலே அந்த இடம் இரவாக மாறும். எனவே, பகலாக இருக்கும் இடத்தை இரவாக மாற்றுவதற்காக அப்பகலை இரவு மறைத்தல் வேண்டும்.

கட்டுரையாளரின் கருத்துப்படி, சூரியன் பூமியைச் சுற்றுவது என்றால் அதன் ஒளி முழுமையும் சேர்ந்து பூமியைச் சுற்ற வேண்டும். சூரியன் பூமியைச் சுற்றி வந்தால் பகல் நகர்ந்த இடத்தை இரவும் இரவு நகர்ந்த இடத்தைப் பகலும் பிடித்துக் கொள்ளும்.

சூரியன் பூமியைச் சுற்றி வருமானால் பூமியின் மீது விழுந்து நகரும் அதனுடைய ஒளி பூமியின் மீதும் அதற்கு வெளியிலும் நகரும். அவ்வாறு சூரிய ஒளி நகர்ந்தால் அந்த ஒளியைப் பின்பற்றி இருளும் நகரும். ஒளி நகரும் வேகத்தில் ஒளியைப் பின்பற்றி இருளும் நகரும். எனவே சூரியன் பூமியைச் சுற்றி வந்தால் ஒளியும், இருளும் ஒன்றைப் பின்பற்றி மற்றொன்று சம வேகத்தில் நகர்ந்து கொண்டே செல்வதால் அவ்விரண்டும் ஒன்றையொன்று சுருட்டாது.

ஆனால், பகலுக்குள் இரவு புகவேண்டுமென்றால் பகல் நகராமல் இருக்க வேண்டும். அவ்வாறே இரவுக்குள் பகல் புகவேண்டுமெனில் இரவும் நகராமல் இருக்க வேண்டும். சூரியன் பூமியைச் சுற்றி வந்தால் இரவுக்குள் பகல் புக முடியாது; போலவே, பகலுக்குள் இரவு புக முடியாது.

குர்ஆனுடைய உயர்ந்த விரிவுரை எவ்வாறு இருக்க வேண்டும் எனக் குறிப்பிடும்போது, "முதலாவது ஒரு அல்குரான் வசனங்களை பிறிதொரு அல் குர்ஆன் வசனங்கள் மூலம் விளக்குவது. இதுவே உயர்ந்த தஃப்ஸீராகும்" என்று தனது கட்டுரையில் அப்துல் அஸீஸ் என்பார் குறிப்பிட்டிருந்தார்.

அதே அடிப்படையில்தான் பேரா. அல்-நஜ்ஜார் தமது ஆய்வுகளை முன்வைக்கிறார். காட்டாக, இறைவசனம் 017:012இல் "இரவையும் பகலையும் நாம் இரு சான்றுகளாக ஆக்கியிருக்கிறோம்" என்று அல்லாஹ் கூறுவதை, ஆண்டுக் கணக்கில் ஆய்வு செய்ததாகக் கூறுகிறார். அவரது ஆய்வுகள் கட்டுரையாளரின் "உயர்ந்த தஃப்ஸீர்" மதிப்பீட்டுக்கு உரியனவாக இருந்தால் ஏற்றுக் கொள்ளலாம்; இல்லையெனில் மறுத்து விடலாம்.
"... எச்சொல்லை யாரிடமிருந்து கேட்பினும் அவற்றில் நற்சொல்லை மட்டும் ஏற்றுப் பின்பற்றுபவர்களைத்தாம் அல்லாஹ் நேர்வழியில் செலுத்துவான் ... அவர்கள்தாம் பகுத்தறிவாளர்கள்" [039:017].
மறுப்புகள் தொடரும், (இன்ஷா அல்லாஹ்).
ஃஃஃ 
திண்ணையில் ... http://www.thinnai.com/?module=displaystory&story_id=80910095&format=html


Fri 09

Click here to bookmark this link.Channel Image22:52 கிராம நீதிமன்றங்கள் தேவைதானா? -ஒரு பார்வை மக்கள் சட்டம் (PEOPLE'S LAW)

விரைவான நீதி என்பது அடிப்படையான மனித உரிமைகளில் முக்கியமானது. காலத்தில் வழங்காமல் தாமதித்து வழங்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு சமம் என்பது புகழ்வாய்ந்த சட்ட முதுமொழி. இந்தியாவின் நீதித்துறை என்பது ஆமை வேகத்தில் பயணி்ப்பது உலகறிந்த ரகசியம்தான்.
.
விரைவான நீதியை வழங்கச் செய்வதில் அரசு, நீதிமன்றங்கள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் ஆகிய நான்கு தரப்பினரும் உரிய கவனம் செலுத்த வேண்டும்.
.
நீதிமன்றங்களில் நிரப்பப்படாமல் உள்ள நீதிபதி மற்றும் அமைச்சுப்பணியிடங்களை நிரப்புவதும், அதிகரிப்பதுமே வழக்குகளை குவியவிடாமல் தடு்க்கும் என்பது அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொண்ட கருத்து. ஆனால், இந்த கருத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய அரசோ, நீதிமன்ற நிர்வாகமோ உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை சொல்லாமலே புரியும்.
.
இந்த நிலையில், விரைவான நீதியை மக்களுக்கு கிடைக்கச் செய்வதற்காக, கிராம நீதிமன்றங்களை அமைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. குறைந்த செலவு, விரைவான நீதி என்ற நோக்கங்களின் அடிப்படையில் இந்த நீதிமன்றங்கள் அமைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
.
இரண்டு ஆண்டுகளுக்கு குறைந்த தண்டனை விதிக்கத்தக்க குற்றவியல் வழக்குகளையும், அதற்கு சமமான சிவில் வழக்குகளையும் இந்த நீதிமன்றங்கள் விசாரிக்கும். இந்த நீதிமன்றங்கள் கிராமப் பஞ்சாயத்து அளவிலும், தேவைப்படும் இடங்களில் நடமாடும் நீதிமன்றமாகவும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
.
முதல்வகுப்பு ஜூடிஷியல் மாஜிஸ்திரேட் அந்தஸ்துள்ள கிராம நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்குகளை விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும். சிவில் வழக்குகளில் வழக்கின் இரு தரப்பினரும் பேசித்தீர்க்கும் இசைவுத்தீர்ப்பு முறையை ஊக்குவிக்க வேண்டும் என்றும் இந்த திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
.
இந்த கிராம நீதிமன்றங்களின் ஆள்வரைக்குள் வரக்கூடிய வழக்குகள் வேறு நீதிமன்றங்களில் இருந்தால், அந்த வழக்குகளை உரிய அறிவிப்புக்கு பின்னர் இந்த கிராம நீதிமன்றங்களுக்கு மாற்றி உத்தரவிடப்படும்.
.
இதன் மூலம் நீதிமன்றங்களி்ல் வழக்குகள் தேங்கி கிடக்கும் நிலை மாறும் என்று அரசு நம்புகிறது.
.
ஏற்கனவே இருக்கும் அமைப்புகளில் பிரசினைகள் இருக்கும் நிலையில், அந்த பிரசினைகளை திருத்தியமைப்பதைவிட புதிய அமைப்புகளை நிர்மாணிப்பதில் ஆட்சித்தலைமைகள் அதிக ஆர்வம் காட்டுகின்றன. இந்த புதிய அமைப்புகள் சீரிய முறையில் செயல்படுமா என்று ஆய்வு செய்வதைவிட, புதிய அமைப்புகள் நிர்மாணிப்பதை தங்கள் ஆட்சியின் சாதனைகளாக விளம்பரம் செய்வதில் ஆட்சியாளர்கள் காட்டும் அதீத ஆர்வமே இதற்கு காரணம்.
.
மேலும், மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசு அமைப்புகள் புதிய திட்டங்களை வடிவமைக்கும்போது பங்காளிகளாக கருத வேண்டிய பொதுமக்களை பயனாளிகளாக சுருக்குவதும், அரசின் கடமையாகவும், மக்களின் உரிமையாகவும் கருதவேண்டிய அம்சங்களை சலுகையாகவும் செய்யும் போக்கு நிலவுகிறது. எனவே எந்த பிரச்சினையிலும் (உலக வங்கி போன்ற விதிவிலக்குகள் நீங்கலாக) யாரையும் ஆலோசிக்காமல், தன்னிச்சையாக திட்டங்களை அறிவிக்கின்றன. நீதித்துறையின் முக்கிய இயங்கு சக்திகளான வழக்குரைஞர் சமூகத்தை ஆலோசிப்பது குறித்து இந்திய அரசோ, சட்ட அமைச்சகமோ யோசிப்பதே இல்லை.
.
நீதிமன்ற நிர்வாகம் என்பது நீதிபதிகளின் கையில் உள்ளதாலும், அவர்களின் கருத்து என்ன என்பதை நாம் அறிந்து கொள்ளும் வாய்ப்பு இல்லாததாலும் இந்த பிரசினையில் அவர்களின் நிலை கருத்து கூற முடியவில்லை.
.
வழக்கறிஞர்கள் மத்தியில் கிராம நீதிமன்றங்கள் திட்டத்திற்கு எதிர்ப்பே நிலவுகிறது. கிராமப்புறங்களில் ஆதிக்கம் செலுத்துவோருக்கு எதிரான வழக்குகளில், ஆதிக்கசக்தியினருக்கு எதிரான தீர்ப்புகள் வழங்கப்படும் நிலையில் நீதித்துறை அலுவலர்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் என்று வழக்கறிஞர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும் இந்திய சாட்சிச் சட்டத்தை உறுதியாக கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை என்பதும் ஆதிக்க சக்தியினருக்கு சாதகமாக பயன்படுத்தப்படலாம் என்றும் அவர்கள் கருதுகின்றனர். இதைவிட முக்கியமாக இந்த கிராம நீதிமன்றங்களின் தீர்ப்புக்கு எதிராக ஒருமுறை மட்டுமே மேல்முறையீடு செய்யலாம் என்ற வரையறை வழக்கிடும் மக்களை பெரிதும் பாதிக்கும் என்றும் வழக்கறிஞர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
.
இதற்கு மாற்றாக வழக்கறிஞர்கள் தரப்பில், ஏற்கனவே உள்ள நீதிமன்றங்களில் உள்ள நீதிபதி மற்றும் அமைச்சுப் பணியிடங்களை நிரப்பினாலே வழக்குகள் விரைவில் நடத்த முடியும் என்று கூறுகின்றனர். அந்த காலியிடங்களை நிரப்பாமல் அங்கு தேங்கியுள்ள வழக்குகளை வேறு நீதிமன்றங்களுக்கு மாற்றுவது என்பது நடைமுறையில் பயன்தராது: வழக்கு தேங்கி நிற்குமிடம் மாறுமே தவிர, வழக்கு முடிவுக்கு வருவதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
.
இந்த கிராம நீதிமன்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்ற புறக்கணிப்பு என்ற வழக்கமான போராட்டத்தை வழக்கறிஞர்கள் மேற்கொண்டுள்ளனர்.
.
எந்த நியாயமான காரணத்துக்காகவும் மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் சமூகத்தின் எந்த பிரிவும் மருத்துவர்களை மன்னிக்காது. மருத்துவத்துறைக்கு எந்த விதத்திலும் குறைவில்லாத நீதித்துறையில் ஏற்கனவே ஏராளமான விடுமுறைகள் இருக்கும்போது, வழக்கறிஞர்கள் மேற்கொள்ளும் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டங்களும் மக்களிடையே அதிருப்தியையே ஏற்படுத்தும். எனவே வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு என்ற போராட்ட வடிவத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
.
மேலும் சட்டத்துறையில் ஏற்படும் புதிய மாற்றங்கள் மக்களை எவ்விதமாக பாதிக்கும் என்பதையும் மக்களுக்கு விளக்கமாக எடுத்துறைக்கும் பணியும் வழக்கறிஞர்களிடமே உள்ளது. ஆனால் வழக்கறிஞர்கள் இந்த அணுகுமுறையை இதுவரை உரிய முறையில் கையாண்டதில்லை.
.
நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்திற்கு பதிலாக வழக்கறிஞர் மன்றங்(BAR COUNCIL)களையும், வழக்கறிஞர் சங்கங்(BAR ASSOCIATION)களையும் வலுப்படுத்தி புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தும்போதும், புதிய நடைமுறைகளை அறிமுகப் படுத்தும்போதும் வழக்கறிஞர் சமூகத்திடம் அரசு அது குறித்து விரிவாக விவாதித்து முடிவெடுப்பதை நிர்பந்திக்கலாம்.
அரசியலிலும், ஆட்சித்துறையிலும் சட்டம் படித்தவர்கள் நிறைந்துள்ள இன்றைய நிலையில், இதுபோன்ற திட்டங்கள் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும்.
.
சட்டம் என்பது இனியும் வழக்கறிஞர்களும், சட்டத்துறையினரும் மட்டுமே தொடர்புடைய அம்சமாக இருக்க முடியாது. அனைத்துத் துறை சட்டங்களிலும் அறிமுகப்படுத்தப்படும் புதிய அம்சங்கள் மிகுந்த சர்ச்சைக்குரியவைகளாக இருக்கின்றன. உதாரணமாக அறிவுச் சொத்துரிமை என்ற பெயரில் அறிமுகமாகும் சட்டங்கள் நமது வேளாண்மை, மருத்துவம், கல்வி என அனைத்துத் துறைகளையும் ஆக்கிரமிக்கின்றன. நமது பாரம்பரிய அறிவுச் செல்வங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடிமைப்படுத்தும் நோக்கத்தில் இவை இருக்கின்றன.
.
வழக்கறிஞர் சட்டத்தில் திட்டமிடப்படும் திருத்தங்களும் மிக ஆபத்தானவை. வெளிநாட்டு வழக்கறிஞர்களையும், வழக்கறிஞர் குழுமங்களையும் இந்தியாவில் தொழில் செய்வதற்கு அனுமதிப்பதற்கான நேரத்திற்காக அரசு காத்துக்கொண்டுள்ளது.
.
இந்த பிரசினைகள் குறித்து மக்களிடமும், மக்கள் பிரதிநிதிகளிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தி பன்னாட்டு நிறுவனங்களின் பிடியிலிருந்து மக்களை விடுவிக்கவேண்டியதே வழக்கறிஞர்களின் முக்கியமான பணி. இது போன்ற மக்கள் சார்ந்த விவகாரங்களில் தலையிடுவதும், மக்களுக்கான திட்டங்களை தீட்டுமாறு அரசு அமைப்புகளை வலியுறுத்துவதுமே வழக்கறிஞர்களின் நிலையை மட்டுமல்லாது, நாட்டின் நீதி நிர்வாக அமைப்புகளையும் செம்மைப்படுத்த உதவும்.
-சுந்தரராஜன்
(புதிய தலைமுறை [15-10-2009] வார இதழில் வெளிவந்த கட்டுரையின் முழு வடிவம்)

Sun 04

Click here to bookmark this link.Channel Image03:01 காமன்மேனின் திரைப்படத் தீவிரவாதம் எதிரொலி

உன்னைப்போல் ஒருவன் என்ற தமிழ் திரைப்படத்தில் முஸ்லிம்களைக் குறித்து நச்சுக் கருத்து விதைக்கப்பட்டிருக்கிறது.தீவிரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதிலும், தீவிரவாதிகள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை.ஆனால், யாரை யார் தீவிரவாதி என்று சொல்வது என்பதற்கு விவஸ்தை வேண்டாமா? என்று கேட்காமல் இருக்க முடியவில்லை.

தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பொதுமனிதன் (காமன்மேன்),சட்டத்தை கையிலெடுக்கும் செயலை நியாயப்படுத்தும் இப்படத்தில் தீவிரவாதிகளில் பெரும்பாலோர் முஸ்லிம்கள்-அவர்களால் பாதிக்கப்படும் அனைவரும் இந்து காமன்மேன் என்ற நச்சுக்கருத்துடன் வெளியாகியுள்ளது. இப்படத்தை அநியாயத்துக்கு விமர்சனம் எழுதி, தேவையற்ற பில்டப் கொடுத்து பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டாக்கி விட்டார்கள்!

கமல் விடுவிக்கக்கோரும் நால்வரும் தீவிரவாதிகளாம்! அவர்களில் மூவர் காஃபீர்களைக் கொல்வதற்காக நேர்ந்து விடப்பட்ட முஸ்லிம் தீவிரவாதிகள். ஒரேயொருவர் அப்பாவி தீவிரவாதி! ஆம்! தீவிரவாதிகளென்று தெரியாமல் தெரியாத்தனமாக RDX சப்ள