Index | Subscribe mailing list | Help | E-mail us

நல்லறங்களைச் செய்து, பாவங்களை விட்டும் விலகி

ஈமானின் உறுதியை நிலை நாட்டிட வேண்டும்

 

﴿ إِنَّ الَّذِيْنَ آمَنُوْا وَعَمِلُوا الصَّالِحَاتِ كَانَتْ لَهُمْ جَنَّاتُ الْفِرْدَوْسِ نُزُلاً – خَالِدِيْنَ فِيْهَا لاَ يَبْغُوْنَ عَنْهَا حِوَلاً

நிச்சயமாக ஈமான் கொண்டு, நல்லறங்கள் புரிபவர்களுக்கு ஃபிர்தவ்ஸ் என்னும் சொர்க்கங்கள் அவர்களின் தங்கு மிடமாகும். அதில் அவர்கள் நிரந்தரமாக தங்கியிருப்பார்கள். அதிலிருந்து மாறுவதை விரும்பமாட்டார்கள்.

(அல்குர்ஆன்:18:107-108)

 

﴿ وَالَّذِيْنَ آمَنُوْا وَعَمِلُوا الصَّالِحَاتِ أُولئِكَ أَصْحَابُ الْجَنَّةِ هُمْ فِيْهَا خَالِدُوْنَ

எவர்கள் ஈமான் கொண்டு, நல்லறங்கள் புரிகின்றார்களோ அவர்களே சொர்க்கத்திற்குரியவர்கள், அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கியிருப்பார்கள்.

(அல்குர்ஆன் : 2:82)

 

﴿ إِنَّ الَّذِيْنَ قَالُوْا رَبُّنَا اللهُ ثُمَّ اسْتَقَامُوْا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلاَئِكَةُ أَلاَّ تَخَافُوْا وَلاَ تَحْزَنُوْا وَأَبْشِرُوْا بِالْجَنَّةِ الَّتِيْ كُنْتُمْ تُوْعَدُوْنَ

நிச்சயமாக எங்கள் இரட்சகன் அல்லாஹ்தான் எனக் கூறி, அதில் உறுதியாக நிலைத்து நிற்பவர்கள் மீது (அவர்களின் மரண வேளையில்) மலக்குமார்கள் இறங்கி, நீங்கள் பயப்படாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கம் உள்ளது என்ற சுபச் செய்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள்! என்று கூறுவார்கள்.

(அல்குர்ஆன் : 41:30)

 

﴿ إِنَّ الَّذِيْنَ قَالُوْا رَبُّنَا اللهُ ثُمَّ اسْتَقَامُوْا فَلاَ خَوْفٌ عَلَيْهِمْ وَلاَ هُمْ يَحْزَنُوْنَ – اُولَئِكَ أَصْحَابُ الْجَنَّةِ خَالِدِيْنَ فِيْهَا جَزَاءً بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ

நிச்சயமாக எங்களுடைய இரட்சகன் அல்லாஹ்தான் என்று கூறி அதில் உறுதியாக நிலைத்து நின்றவர்களுக்கு யாதொரு பயமுமில்லை, அவர்கள் கவலையடையவும் மாட்டார்கள். அவர்கள் சொர்க்கவாதிகள். அவர்கள் செய்து கொண்டிருந்தவைகளின் கூலியாக அதில் அவர்கள் நிரந்தரமாக தங்கியிருப்பார்கள்.

 (அல்குர்ஆன் : 46:13-14)

 

( كُلُّ أُمَّتِي يَدْخُلُونَ الْجَنَّةَ إِلَّا مَنْ أَبَى قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَمَنْ يَأْبَى قَالَ مَنْ أَطَاعَنِي دَخَلَ الْجَنَّةَ وَمَنْ عَصَانِي فَقَدْ أَبَى  )

என்னுடைய சமுதாயத்தினரில் மறுத்தவரைத் தவிர மற்ற அனைவரும் சொர்க்கத்தில் நுழைவார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! மறுப்பவர் என்றால் யார்? என்று -நபித் தோழர்கள்- கேட்டார்கள். எனக்குக் கட்டுப்பட்டவர் சொர்க்கத்தில் நுழைந்துவிட்டார். எனக்கு மாறு செய்தவர் நிச்சயமாக மறுத்துவிட்டார் என்று கூறினார்கள்.

(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : புகாரீ 6737)

 

( مَنْ آمَنَ بِاللَّهِ وَبِرَسُولِهِ وَأَقَامَ الصَّلَاةَ وَصَامَ رَمَضَانَ كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ يُدْخِلَهُ الْجَنَّةَ جَاهَدَ فِي سَبِيلِ اللَّهِ أَوْ جَلَسَ فِي أَرْضِهِ الَّتِي وُلِدَ فِيهَا . . . )

அல்லாஹ்வையும் அவனது தூதரையும் ஈமான் கொண்டு, தொழுகையைக் கடைபிடித்து, ரமலானில் நோன்பு நோற்பவரை சொர்க்கத்தில் நுழைவிப்பதை அல்லாஹ் தன்மீது கடமையாக்கிக் கொண்டான். அவர் அல்லாஹ்வுடைய பாதையில் அறப்போர் புரிந்தாலும் அல்லது அவர் பிறந்த பூமியிலேயே தங்கியிருந்தாலும் சரியே! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : புகாரீ 2581)


 

3- அல்லாஹ்வின் 99 அழகிய பெயர்களை (அஸ்மாவுல் ஹுஸ்னா) பொருளுணர்ந்து மனனம் செய்ய வேண்டும். அப்பெயர்களின் தன்மைகளை உறுதியாக நம்ப வேண்டும்.