Index | Subscribe mailing list | Help | E-mail us

 
 

ஐவேளை கடமையான தொழுகைகளையும்
உபரியான தொழுகைகளையும் நிறைவேற்ற வேண்டும்
 

அ. ஐவேளைத் தொழுகை

( . . . خَمْسُ صَلَوَاتٍ كَتَبَهُنَّ اللَّهُ عَلَى الْعِبَادِ مَنْ جَاءَ بِهِنَّ لَمْ يُضَيِّعْ مِنْهُنَّ شَيْئًا اسْتِخْفَافًا بِحَقِّهِنَّ كَانَ لَهُ عِنْدَ اللَّهِ عَهْدٌ أَنْ يُدْخِلَهُ الْجَنَّةَ وَمَنْ لَمْ يَأْتِ بِهِنَّ فَلَيْسَ لَهُ عِنْدَ اللَّهِ عَهْدٌ إِنْ شَاءَ عَذَّبَهُ وَإِنْ شَاءَ أَدْخَلَهُ الْجَنَّةَ )

ஐவேளைத் தொழுகைகளை அல்லாஹ் அடியார்கள் மீது கடமையாக்கியுள்ளான். அதன் கடமைகளை எளிதாகக் கருதி அதில் எதனையும் வீணாக்கி விடாமல் முறையாக நிறைவேற்றுபவரை சொர்க்கத்தில் நுழைவிக்கும் ஒப்பந்தம் அல்லாஹ்விடம் உள்ளது. அத்தொழுகைகளை யார் நிறைவேற்றவில்லையோ அவருக்கு அல்லாஹ்விடம் எந்த ஒப்பந்தமுமில்லை. அவன் நாடினால் அவருக்கு தண்டனை வழங்குவான், அவன் நாடினால் அவரை சொர்க்கத்தில் நுழைவிக்கச் செய்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : உபாதா இப்னு ஸாமித் - ரலி, நூற்கள் : முஅத்தா, அஹ்மத், அபூதாவூத், நஸாயீ 457, இப்னுமாஜா, இப்னு ஹிப்பான்)

ஆ. ஃபஜ்ர் மற்றும் அஸர் தொழுகையின் சிறப்பு

( مَنْ صَلَّى الْبَرْدَيْنِ دَخَلَ الْجَنَّةَ )

-பகலின்- இரு ஓர (ஃபஜ்ர் மற்றும் அஸர்) தொழுகைகளைத் தொழுபவர் சொர்க்கத்தில் நுழைந்து விட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூமூஸா -ரலி, நூற்கள் : புகாரீ 540, முஸ்லிம்)

இ. தொடர்ந்து கடைபிடிக்க வேண்டிய சுன்னத்தான தொழுகைகள்

( مَا مِنْ عَبْدٍ مُسْلِمٍ يُصَلِّي لِلَّهِ كُلَّ يَوْمٍ ثِنْتَيْ عَشْرَةَ رَكْعَةً تَطَوُّعًا غَيْرَ فَرِيضَةٍ إِلَّا بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ أَوْ إِلَّا بُنِيَ لَهُ بَيْتٌ فِي الْجَنَّةِ . . )

ஒர் இறையடியார் கடமையல்லாத உபரியான தொழுகை 12 ரகஅத்களை தினமும் அல்லாஹ்வுக்காக தொழுவாரானால் நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டிக் கொடுக்கின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.
(அறிவிப்பவர் : உம்மு ஹபீபா -ரலி, நூல் : முஸ்லிம் 1199)

( مَنْ صَلَّى اثْنَتَيْ عَشْرَةَ رَكْعَةً فِي يَوْمٍ وَلَيْلَةٍ بُنِيَ لَهُ بِهِنَّ بَيْتٌ فِي الْجَنَّةِ قَالَتْ أُمُّ حَبِيبَةَ فَمَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ )

ஒரு நாளில் யாரேனும் -உபரியான- 12 ரகஅத்கள் தொழுதால் அவருக்கு சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படுகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன். இதனை நான் கேட்டதிலிருந்து அத்தொழுகைகளை -தொழாமல்- விடவேயில்லை என உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம் 1198)

(. . . أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ وَرَكْعَتَيْنِ بَعْدَهَا وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ وَرَكْعَتَيْنِ قَبْلَ صَلَاةِ الْفَجْرِ )

ளுஹருக்கு முன்னால் 4, அதற்கு பிறகு 2 ரகஅத்கள், மஃரிபுக்கு பிறகு 2 ரகஅத்கள், இஷாவுக்குப் பிறகு 2 ரகஅத்கள், ஃபஜ்ர் தொழுகைக்கு முன் 2 ரகஅத்கள் (ஆகியவை உபரியான 12 ரகஅத்களாகும்) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ : 380)

ஈ. உளுவின் சுன்னத் தொழுகை

(عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ لِبِلَالٍ عِنْدَ صَلَاةِ الْغَدَاةِ يَا بِلَالُ حَدِّثْنِي بِأَرْجَى عَمَلٍ عَمِلْتَهُ عِنْدَكَ فِي الْإِسْلَامِ مَنْفَعَةً فَإِنِّي سَمِعْتُ اللَّيْلَةَ خَشْفَ نَعْلَيْكَ بَيْنَ يَدَيَّ فِي الْجَنَّةِ قَالَ بِلَالٌ مَا عَمِلْتُ عَمَلًا فِي الْإِسْلَامِ أَرْجَى عِنْدِي مَنْفَعَةً مِنْ أَنِّي لَا أَتَطَهَّرُ طُهُورًا تَامًّا فِي سَاعَةٍ مِنْ لَيْلٍ وَلَا نَهَارٍ إِلَّا صَلَّيْتُ بِذَلِكَ الطُّهُورِ مَا كَتَبَ اللَّهُ لِي أَنْ أُصَلِّيَ )

நன்மையைப் பெற்றுத் தரும் என்ற நோக்கத்தில் இஸ்லாத்தில் நீர் செய்த நல்லறத்தை எனக்கு அறிவிப்பீராக! ஏனெனில் நிச்சயமாக நான் நேற்றிரவு -கனவில்- சொர்க்கத்தில் எனக்கு முன்னர் உமது செருப்பு சப்தத்தைக் கேட்டேன் என்று நபி (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களிடம் ஃபஜ்ர் தொழுகையின் போது கேட்டார்கள். அதற்கு பிலால் (ரலி) அவர்கள், எனக்கு நன்மை கிடைக்கும் என்ற நோக்கத்தில் இஸ்லாத்தில் நான் செய்த நல்லறம் யாதெனில், இரவு, பகல் எந்த நேரத்தில் நான் முறையாக உளுச் செய்தாலும் அந்த உளுவுடன் நான் எவ்வளவு தொழுவேன் என அல்லாஹ் எனக்கு எழுதிவிட்டானோ அதனைத் தொழுதுவிடுவேன் என்றார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா-ரலி, நூற்கள் : புகாரீ, முஸ்லிம் 4497)

( . . يَا بِلَالُ بِمَ سَبَقْتَنِي إِلَى الْجَنَّةِ مَا دَخَلْتُ الْجَنَّةَ قَطُّ إِلَّا سَمِعْتُ خَشْخَشَتَكَ أَمَامِي دَخَلْتُ الْبَارِحَةَ الْجَنَّةَ فَسَمِعْتُ خَشْخَشَتَكَ أَمَامِي فَقَالَ بِلَالٌ يَا رَسُولَ اللَّهِ مَا أَذَّنْتُ قَطُّ إِلَّا صَلَّيْتُ رَكْعَتَيْنِ وَمَا أَصَابَنِي حَدَثٌ قَطُّ إِلَّا تَوَضَّأْتُ عِنْدَهَا وَرَأَيْتُ أَنَّ لِلَّهِ عَلَيَّ رَكْعَتَيْنِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ بِهِمَا )

பிலாலே! எந்தச் செயலின் காரணத்தால் சொர்க்கத்தில் என்னை விட நீர் முந்திச் சென்றுவிட்டீர்! நான் -கனவில்- எப்போது சொர்க்கத்தில் நுழைந்தாலும் எனக்கு முன்னர் உமது காலடி ஓசையைக் கேட்கின்றேன்! நேற்றிரவு -கனவில்- நான் சொர்க்கத்தில் நுழைந்த போதும் எனக்கு முன்னால் உமது காலடி சப்தத்தைக் கேட்டேன் என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு பிலால் (ரலி) அவர்கள், நான் பாங்கு சொன்னால் கண்டிப்;பாக இரண்டு ரகஅத்கள் தொழுதுவிடுவேன், எப்போது உளு முறிந்தாலும் உடனே உளுச் செய்துவிட்டு நிச்சயமாக அல்லாஹ்வுக்காக நான் இரண்டு ரகஅத்கள் தொழவேண்டும் என எண்ணி தொழுதுவிடுவேன் என்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இவ்விரண்டின் காரணமாகத்தான்! (நீர் சொர்க்கத்தில் முந்தி விட்டீர்!) என்றார்கள். (அறிவிப்பவர் : புரைதா-ரலி, நூல் : திர்மிதீ 3622)

உ. இறையச்சத்துடனும் மன ஈடுபாட்டுடனும் 2 ரகஅத்கள் தொழுதல்

( . . . مَا مِنْ مُسْلِمٍ يَتَوَضَّأُ فَيُحْسِنُ وُضُوءَهُ ثُمَّ يَقُومُ فَيُصَلِّي رَكْعَتَيْنِ مُقْبِلٌ عَلَيْهِمَا بِقَلْبِهِ وَوَجْهِهِ إِلَّا وَجَبَتْ لَهُ الْجَنَّةُ . . )

ஒரு முஸ்லிம் அழகிய முறையில் உளுச் செய்து, பிறகு மனதாலும் முகத்தாலும் (அல்லாஹ்வை) முன்னோக்கியவனாக இரண்டு ரகஅத்கள் தொழுவாரானால் அவருக்கு சொர்க்கம் கிடைப்பது உறுதியாகிவிட்டது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : உக்பா -ரலி, நூல் : முஸ்லிம் 345)

ஊ. அல்லாஹ்வுக்கு அதிகமாக ஸஜ்தாச் செய்தல்
 

(. . . مَعْدَانُ بْنُ أَبِي طَلْحَةَ الْيَعْمَرِيُّ قَالَ لَقِيتُ ثَوْبَانَ مَوْلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ أَخْبِرْنِي بِعَمَلٍ أَعْمَلُهُ يُدْخِلُنِي اللَّهُ بِهِ الْجَنَّةَ أَوْ قَالَ قُلْتُ بِأَحَبِّ الْأَعْمَالِ إِلَى اللَّهِ فَسَكَتَ ثُمَّ سَأَلْتُهُ فَسَكَتَ ثُمَّ سَأَلْتُهُ الثَّالِثَةَ فَقَالَ سَأَلْتُ عَنْ ذَلِكَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ عَلَيْكَ بِكَثْرَةِ السُّجُودِ لِلَّهِ فَإِنَّكَ لَا تَسْجُدُ لِلَّهِ سَجْدَةً إِلَّا رَفَعَكَ اللَّهُ بِهَا دَرَجَةً وَحَطَّ عَنْكَ بِهَا خَطِيئَةً . . )

காலித் இப்னு மிஃதான் என்பவர் அறிவிக்கின்றார் :
நபி (ஸல்) அவர்களின் அடிமையான ஸவ்பான் (ரலி) அவர்களை சந்தித்த போது நான் அவர்களிடம், ஒரு அமலைச் செய்தால் அதன் மூலம் அல்லாஹ் என்னை சொர்க்கத்தில் நுழையச் செய்யவேண்டும், அப்படிப்பட்ட அமலை எனக்கு நீங்கள் அறிவியுங்கள்! என்றோ, அல்லது அல்லாஹ்வுக்கு மிகப் பிரியமான அமலை அறிவியுங்கள்! என்றோ நான் அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் -பதிலளிக்காமல்- அமைதியாக இருந்தார்கள். நான் மீண்டும் அவர்களிடம் கேட்டேன். அவர்கள் அமைதியாகவே இருந்தார்கள். நான் மூன்றாவது முறையாகக் கேட்டேன். அப்போது அவர்கள், இதைப் பற்றி நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், நீ அல்லாஹ்வுக்காக அதிகமாக ஸஜ்தாச் செய்து கொள்! ஏனெனில் நிச்சயமாக நீ அல்லாஹ்வுக்காக ஸஜ்தாச் செய்வதன் மூலம் அல்லாஹ் உன்னுடைய அந்தஸ்த்தை உயர்த்துகிறான். மேலும் உன்னுடைய பாவத்தை அழிக்கின்றான் என்றார்கள். (நூல் : முஸ்லிம் 753)

( رَبِيعَةُ بْنُ كَعْبٍ الْأَسْلَمِيُّ قَالَ كُنْتُ أَبِيتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَأَتَيْتُهُ بِوَضُوئِهِ وَحَاجَتِهِ فَقَالَ لِي سَلْ فَقُلْتُ أَسْأَلُكَ مُرَافَقَتَكَ فِي الْجَنَّةِ قَالَ أَوْ غَيْرَ ذَلِكَ قُلْتُ هُوَ ذَاكَ قَالَ فَأَعِنِّي عَلَى نَفْسِكَ بِكَثْرَةِ السُّجُودِ )

ரபீஆ இப்னு கஃப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
நான் நபி (ஸல்) அவர்களுடன் இரவு தங்கியிருந்தேன். அவர்களுக்கு உளுச் செய்யத் தண்ணீர் கொண்டுவருவது போன்ற பணிவிடைகளைச் செய்தேன். அப்போது அவர்கள், ஏதேனும் கேள்! என்றார்கள். நான் உங்களுடன் சொர்க்கத்தில் இருக்க வேண்டும்! என்றேன். இதைத் தவிர வேறு ஏதேனும் உண்டா? என்று கேட்டார்கள். இது மட்டும்தான்! என்றேன். அப்படியானால் நீ இதனை அடைவதற்காக -அல்லாஹ்வுக்கு- அதிகமாக ஸஜ்தாச் செய்து எனக்கு உதவிசெய்! என்றார்கள்.
(நூல் : முஸ்லிம் 754)

எ. இரவுத் தொழுகை

( . . يَا أَيُّهَا النَّاسُ أَفْشُوا السَّلَامَ وَأَطْعِمُوا الطَّعَامَ وَصِلُوا الْأَرْحَامَ وَصَلُّوا بِاللَّيْلِ وَالنَّاسُ نِيَامٌ تَدْخُلُوا الْجَنَّةَ بِسَلَامٍ )

மக்களே! ஸலாத்தைப் பரப்புங்கள்! பிறருக்கு உணவளியுங்கள்! உறவினர்களுடன் இணைந்து வாழுங்கள்! இரவில் மக்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது நீங்கள் வணங்கிக் கொண்டிருங்கள்! -இவ்வாறு செய்வீர்களானால்- நிம்மதியாக சொர்க்கத்தில் நுழைவீர்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு ஸலாம் -ரலி, நூற்கள் : திர்மிதீ, இப்னுமாஜா 3242, அஹ்மத், ஹாகிம்)

வணக்க, வழிபாடு செய்வதற்காக அதிகமாக பள்ளிவாசலுக்குச் செல்ல வேண்டும்