Index | Subscribe mailing list | Help | E-mail us

 
 

நோய் விசாரிக்கச் செல்ல வேண்டும்

 

( عَائِدُ الْمَرِيضِ فِي مَخْرَفَةِ الْجَنَّةِ حَتَّى يَرْجِعَ )

நோய் விசாரிப்பவர் –நோயாளியை விட்டும்- திரும்பும் வரை சொர்க்கத் தோட்டத்தில் இருக்கின்றார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : ஸவ்பான்-ரலி, நூல் : முஸ்லிம் 4657)


( مَنْ عَادَ مَرِيضًا لَمْ يَزَلْ فِي خُرْفَةِ الْجَنَّةِ قِيلَ يَا رَسُولَ اللَّهِ وَمَا خُرْفَةُ الْجَنَّةِ قَالَ جَنَاهَا )

நோய் விசாரிப்பவர் சொர்க்கப் பூங்காவில் இருக்கின்றார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது சொர்க்கப் பூங்கா என்றால் என்னவென கேட்கப்பட்டது. அதற்கவர்கள் சொர்க்கத் தோட்டம் என பதிலளித்தார்கள்.
(அறிவிப்பவர் : ஸவ்பான்-ரலி, நூல் : முஸ்லிம் 4660)

 

( . . . مَا مِنْ مُسْلِمٍ يَعُودُ مُسْلِمًا غُدْوَةً إِلَّا صَلَّى عَلَيْهِ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ حَتَّى يُمْسِيَ وَإِنْ عَادَهُ عَشِيَّةً إِلَّا صَلَّى عَلَيْهِ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ حَتَّى يُصْبِحَ وَكَانَ لَهُ خَرِيفٌ فِي الْجَنَّةِ )

யாரேனும் ஒரு முஸ்லிம் ஒரு முஸ்லிம் நோயாளியை காலையில் விசாரிக்கச் சென்றால் 70.000 மலக்குகள் அவருக்காக மாலை வரை பிரார்த்தனை செய்கின்றார்கள். அவர் மாலையில் விசாரிக்கச் சென்றால் காலை வரை 70.000 மலக்குகள் அவருக்காக பிரார்த்தனை செய்கின்றார்கள். மேலும் சொர்க்கத்தில் அவருக்குக் காய்த்துக் குலுங்கும் தோட்டம் உள்ளது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அலீ இப்னு அபீதாலிப் -ரலி, நூற்கள் : திர்மிதீ 891, இப்னுமாஜா, அபூதாவூத்)

 

( مَنْ عَادَ مَرِيضًا أَوْ زَارَ أَخًا لَهُ فِي اللَّهِ نَادَاهُ مُنَادٍ أَنْ طِبْتَ وَطَابَ مَمْشَاكَ وَتَبَوَّأْتَ مِنَ الْجَنَّةِ مَنْزِلًا )

நோயாளியை விசாரிக்கச் சென்றால் அல்லது மார்க்கச் சகோதரனைச் சந்திக்கச் சென்றால் -மலக்குமார்களில்- அழைப்பவர் அவரை அழைத்து நீ மிகச் சிறந்த காரியம் செய்தாய்! மிகச் சிறந்த செயலுக்காக அடியெடுத்து வைத்துள்ளாய்! மேலும் சொர்க்கத்தில் உனக்கென ஒரு வீட்டை ஏற்படுத்திக் கொண்டாய்! - - - என்று கூறுவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி. நூற்கள் : இப்னுமாஜா, திர்மிதீ 1931)
 

 

மார்க்கச் சகோதரர்களை சந்திக்கச் செல்லவேண்டும்