Index | Subscribe mailing list | Help | E-mail us

 
 

மார்க்கச் சகோதரர்களை சந்திக்கச் செல்லவேண்டும்

 

( ألا أخبركم برجالكم في الجنة؟ قالوا : بلى يا رسول الله فقال : النبي في الجنة، والصديق في الجنة، والرجل يزور أخاه في ناحية المصر لا يزوره إلا لله في الجنة)


சொர்க்கவாசிகளை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, அறிவியுங்கள்! அல்லாஹ்வின் தூதரே! என -நபித்தோழர்கள்- கூறினார்கள். அப்போது, நபி சொர்க்கத்தில் இருப்பார். சித்தீக் (உண்மையாளர்) சொர்க்கத்தில் இருப்பார். பட்டணத்தின் கடைசிப் பகுதியில் வாழும் சகோதரரை அல்லாஹ்வுக்காக சந்திக்கச் சென்றவரும் சொர்க்கத்தில் இருப்பார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அனஸ் -ரலி, நூல் : தப்ரானீ)


(ما من عبد أتى أخاه يزوره في الله إلا ناداه مناد في السماء : أن طبت وطابت لك الجنة، وإلا قال الله في ملكوت عرشه: عبدي زار فيّ عليّ قراه، فلم يرض له بثواب دون الجنة)


ஒரு அடியான் தன் மார்க்கச் சகோதரனை அல்லாஹ்வுக்காக சந்திக்கச் சென்றால் வானத்திலிருந்து அழைப்பவர் அவரை அழைத்து: நீ சிறந்த காரியம் செய்துவிட்டாய்! இதனால் உனக்கு சிறந்த சொர்க்கம் கிடைத்துவிட்டது! என்று கூறுவார். அதுமட்டுமல்ல! அல்லாஹ் தன் அர்ஷைச் சுற்றியுள்ள மலக்குகளிடம் : என்னுடைய அடியான் எனக்காக -அவரைச்- சந்திக்கச் சென்றுள்ளான்! எனவே அவனுக்கு நான் விருந்து உபசரணை செய்வேன்! என்று கூறுவான். எனவே அவன் சொர்க்கத்தைத் தவிர மற்ற கூலியைக் கொண்டு அவரை திருப்தியடையச் செய்யமாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அனஸ் -ரலி, நூற்கள் : பஸ்ஸார், அபூயஃலா)

 

 

பிள்ளைகளோ அல்லது நேசத்திற்குரியவரோ மரணித்துவிட்டால்..