Index | Subscribe mailing list | Help | E-mail us

 
 

வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர் பொறுமை காக்கவேண்டும்

 


 (عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ قَالَ قَالَ لِي ابْنُ عَبَّاسٍ أَلَا أُرِيكَ امْرَأَةً مِنْ أَهْلِ الْجَنَّةِ قُلْتُ بَلَى قَالَ هَذِهِ الْمَرْأَةُ السَّوْدَاءُ أَتَتِ النَّبِيَّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ إِنِّي أُصْرَعُ وَإِنِّي أَتَكَشَّفُ فَادْعُ اللَّهَ لِي قَالَ إِنْ شِئْتِ صَبَرْتِ وَلَكِ الْجَنَّةُ وَإِنْ شِئْتِ دَعَوْتُ اللَّهَ أَنْ يُعَافِيَكِ فَقَالَتْ أَصْبِرُ فَقَالَتْ إِنِّي أَتَكَشَّفُ فَادْعُ اللَّهَ لِي أَنْ لَا أَتَكَشَّفَ فَدَعَا لَهَا)


அதாஉ அவர்கள் கூறுகின்றார்கள் :
சொர்க்கத்துப் பெண்களில் ஒருவரை நான் உனக்கு காண்பிக்கட்டுமா? என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான், ஆம்! என்றேன். இதோ இந்த கருப்புப் பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, நிச்சயமாக நான் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். அதனால் என்னுடைய ஆடைகளும் விலகி விடுகின்றன. எனவே -இந்நோய் நீங்க- எனக்காகத் துஆச் செய்யுங்கள்! என்றார். அதற்கவர், நீ பொறுமையாக இருக்க விரும்பினால் உனக்குச் சொர்க்கம் கிடைக்கும்!. அல்லது நீ விரும்பினால் உனக்கு குணமாக நான் அல்லாஹ்விடம் துஆச் செய்கின்றேன் என்றார்கள். அதற்கு அப்பெண், நான் பொறுமையாக இருந்து கொள்கிறேன், ஆனால் -வலிப்பின் போது- என்னுடைய ஆடைகள் விலகி விடுகின்றன. எனவே ஆடைகள் விலகாமல் இருக்க அல்லாஹ்விடத்தில் துஆச் செய்யுங்கள்! என்றார். நபி (ஸல்) அவர்கள் அதற்காகத் துஆச் செய்தார்கள்.
(நூற்கள் : புகாரீ 5220, முஸ்லிம்)

 

 

பெண் தன் கணவனுக்கு கட்டுப்பட வேண்டும்