|
To Play
video/audio without any trouble please
Download Latest RealOne player
இதனை அச்செடுப்பவர்கள்
இந்த உதவிப் பக்கத்தை
(Print help)
பார்வையிடவும்.
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்
ரஹீம்
பி.ஜே
சொன்னால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்து நான்
சொல்வதையெல்லாம் யாராவது கண்மூடித்தனமாக (தக்லீது) செய்தால்,
மறுமை நாளில் அவ்வாறு நம்பியவர்களுக்கு எதிராக நான் அல்லாஹ்விடம்
சாட்சி சொல்லுவேன்.
[Play
video] - பி.ஜைனுல்
ஆபிதீன்.
ஜகாத் சட்டங்கள்:
ஜனவரி(2006)
'ஏகத்துவம்' மாத
இதழில் மீண்டும் குழப்பங்கள்
"ஜகாத் கொடுத்து விட்ட எந்த
ஒரு பொருளுக்கும் மீண்டும் ஜகாத் இல்லை" என்ற குழப்பமான கருத்தினை
தவறான சான்றுகளை முன் வைத்து கடந்த சில வருடங்களாக தமிழகத்தில் ஒரு
தனிமனிதர் மட்டும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தார். பல
இடங்களில் இத்தனி நபரால் கூறப்பட்டதை மொத்தமாக ஒரே சி.டி.யில்
தொகுத்து பரவலாக அதை வினியோகித்தும் வந்தனர். குர்ஆன்,
சுன்னாவிற்கு எதிராக இவ்வாறு கருத்துக் கூறிவருவதையும்,
அதனைப் பரப்புவதற்காக ஒரு சிறிய கூட்டமே பாடுபடுவதையும் அறிந்த
நான், இதனை முறியடிக்கும் விதமாக சுமார் கடந்த பத்து மாதத்திற்கு
முன்பு அவர்களின் ஆதாரங்களில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி,
தாயிஃப் நகரில் தமிழ் வெள்ளி மேடையின் மூலம் மக்கள் மன்றத்தில் பல
வாரங்களாகத் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தேன்.
'துஹ்ரத்தன் லில்அம்வால்' என்பதை நபிமொழி (ஹதீஸ்) என்று
கூறிவருகிறார்கள்
[Play
video
Clip 1
|
Clip 2
|
Clip 3
|
Clip4
|
Clip5]. அதை நிரூபித்தால் இரண்டு இலட்சம் பரிசாகத்
தருகிறேன். ஜகாத்தை தொடர்ந்து வழங்கி வந்ததால் ஒருவன்
பிச்சைக்காரனாகி விட்டான்
[Play
video
Clip 1
|
Clip 2
|
Clip 3
|
Clip 4] என 1425 ஆண்டு கால இஸ்லாமிய வரலாற்றில்
ஒரே ஒரு நபரை உதாரணமாக எடுத்துக் காட்டினால் 10ஆயிரம் ரியால்கள்
பரிசாகத் தருவதாகவும் சவால் விட்டிருந்தேன். இதுதான் நான்
விடுத்திருந்த சவால்களில் முதலாவது.
இந்த சூழ்நிலையில், உண்மையான இந்தக் கருத்தை தாயிஃப், ஜித்தாவில்
உள்ள மார்க்க அறிஞர்கள் உட்பட தவ்ஹீத் சகோதரர்கள்
பலர் ஆரம்பத்தில் எதிர்த்தனர். காலங்கள்
மாற, நம்முடைய இந்தக் கருத்தில் உண்மை இருப்பதை இவர்கள் அனைவரும்
புரிந்து கொண்டு, பிறருக்கும் அதனைப் பிரச்சாரம் செய்து வர
ஆரம்பித்தனர்.
இதன் பிறகு இந்தக் கருத்தை உலகளவில் எடுத்துச் செல்ல வேண்டும்
என்று கருதி, 'ஜகாத் ஓர் ஆய்வு' என்ற இவர்கள் வெளியிட்ட தொகுப்பு
சி.டி.யில் மட்டும் பதிவாகியுள்ள எல்லா வகையான சான்றுகளையும்
ஆய்வுக்கு உட்படுத்தி அவற்றில் உள்ள தவறுகளையும், முரண்பாடுகளையும்
சுட்டிக்காட்டி விரிவான ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதி முடித்து,
இணைய தளத்தில் வெளியிடுவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து
வந்தேன்.
இச்சூழ்நிலையில், நாம் கூறிய இந்த உண்மையை ஜித்தாவில் உள்ள சில
தவ்ஹீத் அறிஞர்கள் அந்த தனிநபரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றனர்.
அதன் பிறகு, சுமார் நான்கு ஆண்டுகளாக ஒரு தனிநபரின் கருத்தாக மட்டுமே
இருந்த இவ்விஷயம் மூன்று நாட்களில் T.N.T.J.யின் ஒட்டு மொத்த
அறிஞர்களது கருத்தாக மாற்றப்பட்டு ஏகத்துவம் செப்டம்பர் (2005) மாத
இதழில் வெளியாகின்றது என்றால், T.N.T.J.யில் உள்ள மவ்லவிகளின்
சிறகுகள் கட்டப்பட்டுள்ளன என்றுதானே புரிகின்றது.
சுமார் நான்கு வருடங்களாக கருத்தளவில் வேறுபட்டிருந்ததை
கடந்த காலங்களில் எந்தவொரு சந்தர்பத்திலும் பகிரங்கமாகப்
பிரச்சாரம் செய்து வராமல் மௌனம் காத்து வந்த இவர்கள், நாம்
பிரச்சனையைக் கிளப்பியதும் வெறும் மூன்றே தினங்களில் எவ்வாறு
ஒன்றுபட்டார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
இவ்வாறு கருத்து வேறுபாடு கொண்டிருந்த இந்த தமிழ்நாடு தவ்ஹீத்
ஜமாஅத் அறிஞர்கள் அனைவரும் ஒருமித்தக் கருத்துக்கு வந்துவிட்டதாக
சொல்லி, ஒரு தனிநபரின் கருத்து ஏகத்துவம் இதழில் வெளிவருவதாகச்
செய்திகள் கிடைத்தது. (ஏகத்துவம் இதழில் பிரசுரிக்கப்பட்ட சிறிது
நாட்களுக்குள் ஒரு தனிநபரின் பெயரால் புத்தக வடிவில் விற்பனைச்
சந்தைக்கும் வந்துவிட்டது என்பதே இது தனிநபரின் கருத்து
மட்டும்தான் என்பதற்கு வலுவான சான்றாகும்)
இவர்கள் என்னதான் எழுதியுள்ளனர் என்பதை அறிந்து கொள்ளும் வரை எனது
ஆய்வுக் கட்டுரையை வெளியிடாமல் தற்காலிகமாக நிறுத்தி
வைத்திருந்தேன்.
ஆனால், வெள்ளி மேடையின் மூலம் கேள்விகளாகவும், சவால்களாகவும்
வைக்கப்பட்டு ஆதரவாளர்களின் மூலம் இவர்களது கவனத்திற்கு எடுத்துச்
செல்லப்பட்ட எந்த ஒரு விஷயத்திற்கும் செப்டம்பர் மாத (2005)
ஏகத்துவம் இதழில் உருப்படியான பதில் ஏதுமில்லை. மேலும், இறைத்தூதர்
மீது பொய்யுரைத்துள்ளதாக நான் எடுத்துக் காட்டியது குறித்து
இவர்கள் பொருட்படுத்தவேயில்லை, என்பதை அறிந்த நான் மட்டுமல்ல
தாயிஃப், மற்றும் ஜித்தாவில் உள்ள அவர்களது ஆதரவாளர்களும்கூட
ஏமாற்றத்தின் உச்சிக்கே சென்று விட்டார்கள். ஜித்தாவில் உள்ள
ஆதரவாளர்களில் பலர் இவர்களை பகிரங்கமாக எதிர்க்க ஆரம்பித்து
விட்டார்கள்.
கடந்த காலங்களில் இவர்கள் கூறிவந்த உதாரணங்கள், எடுத்து வைத்த
சான்றுகள் ஆகிய அனைத்தும் தவறானதுதான் என்பதை உணர்ந்து கொண்டு
விட்டதாக வாசகர்களில் எவரும், குறிப்பாக இவர்களை கண் மூடித்தனமாகப்
பின்பற்றி வருபவர்கள் அறவே புரிந்து கொள்ளக் கூடாது என்பதை,
கவனத்தில் கொண்டு, செப்டம்பர் (2005) ஏகத்துவம் மாத இதழை மிகுந்த
முன்னெச்சரிக்கையோடு தயாரித்திருந்தார்கள்.
'வருடா வருடம் ஜகாத் வழங்க வேண்டும்' என்பதற்கு நான்
எடுத்துக்காட்டிய சான்றுகள் குறித்து மட்டும் தவறான சில செய்திகளை
தந்து கடந்த காலத்தில் தமது ஆதரவாளர்களை ஏமாற்றியது போலவே,
இப்போதும் ஏமாற்ற முயற்சித்திருந்தார்கள். அவற்றிற்கான பதிலை
மட்டும் நமது ஆய்வுக் கட்டுரையில் இணைத்து தாமதிக்காமல்
இணைய
தளத்தில் வெளியிட்டேன்.
நமது மறு ஆய்வுக் கட்டுரையை இணைய தளத்தின் மூலம் அறிந்து கொண்ட
'அல்ஜன்னத்' ஆசிரியர் குழு தங்களது இதழில் பிரசுரிக்க முன் வந்த
போது, மக்களை விரைவாகச் சென்றடைய இதுவே மிகச் சரியான வழி
என்றுணர்ந்து அதற்கான ஒப்புதல் அளித்தேன்.
இவ்வாறு கடந்த டிசம்பர் மாதம் (2005) அல்ஜன்னத் மாத இதழில் நமது
ஆய்வுக்கட்டுரை வெளிவந்த பிறகுதான் பரபரப்படைந்து எழுத்து வடிவில்
நமது வண்டவாளம் தண்டவாளத்தில் ஏற்றப்பட்டு விட்டதே என்று
ஆத்திரமடைந்த இவர்கள், அதற்கான மறுப்பை ஜனவரி(2006)
ஏகத்துவம்
இதழில் பிரசுரம் செய்தார்கள். ஏற்கனவே மூடி மறைத்த பல்வேறு
உண்மைகளை இனிமேலும் தொடர்ந்து மறைத்துக் கொண்டிருக்க முடியாது என்ற
நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டதால், அதனை ஜனவரி(2006)ஏகத்துவம் இதழில்
பகிரங்கமாக ஒப்புக் கொண்டு விட்டனர். இதற்கு அவர்களது
வாக்கு மூலமே தெளிவான சாட்சி.
"அதை (வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை என்ற கருத்தை)
நிறுவுவதற்காக எடுத்து வைத்த சில காரணங்களும், சில சான்றுகளும்
சரியானவை அல்ல என்ற முடிவுக்கும் அனைவரும் வந்தனர்." ...'எந்தக்
காரணம் எதிர்க் கருத்து சொல்ல முடியாத அளவுக்கு வலிமையானதாகவுள்ளதோ
அதை மட்டுமே கூற வேண்டும் என்ற முடிவும் அன்றைய தினம்
எடுக்கப்பட்டது' (ஏகத்துவம், ஜனவரி -2006)
தங்களை எதிர் கொள்ள யாருமே இல்லை என்ற மமதையில் இருந்த இவர்களை
சற்று சிந்திக்க வைத்து தவறுகளை பகிரங்கமாக ஒப்புக்கொள்ளச்
செய்யும் அளவிற்கு வலிமைமிக்கதாக நமது ஆய்வுக் கட்டுரையை ஆக்கிய
அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும். அல்ஹம்து லில்லாஹ்.
மேலும், ஏகத்துவம் (ஜனவரி -2006) இதழில் வெளியான கட்டுரையின் மூலம்
நாம் எடுத்துக் காட்டிய எல்லா உண்மைகளையும் குறிப்பாக ஒரு முறை
ஜகாத் வழங்கியவற்றுக்கு மீண்டும், மீண்டும் ஜகாத் வழங்க வேண்டும்
என்பது உட்பட அனைத்தையும் தங்களை அறியாமலேயே இவர்கள் ஒப்புக்
கொண்டு விட்டார்கள். ('இவர்கள் ஒப்புக் கொண்ட
உண்மைகள்' என்ற தலைப்பில் இதற்கான விளக்கம் விரிவாக
தரப்பட்டுள்ளது.)
ஆனாலும், எல்லா உண்மைகளையும் உடனடியாக ஒப்புக் கொண்டுவிடக் கூடாதே
என்ற ஈகோ இன்னமும் இவர்களிடம் இருந்தே வருகிறது. 'எந்தக் காரணம்
எதிர்க் கருத்து சொல்ல முடியாத அளவுக்கு வலிமையானதாகவுள்ளதோ அதை
மட்டுமே கூற வேண்டும்' என்ற அவர்களது வரிகளே இதற்கு சாட்சி.
அதாவது, கடந்த காலங்களில் இவர்கள் எடுத்து வைத்த சான்றுகள்
அனைத்தும் தவறானதுதான் என்றாலும், அவ்வளவு விரைவில் நாம் பின்
வாங்கிவிடக் கூடாது. எதிர் கருத்து சொல்ல முடியாத வேறு
கருத்துக்கள் ஏதேனும் உண்டா? எனத் தேடிப்பிடித்து, அதைக்
கண்டறிந்து அவற்றை கூறி மீண்டும், மீண்டும் மக்களை குழப்பிக்
கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களது எண்ணம்
என்று தான் நினைக்க வேண்டியுள்ளது.
மேலும், இதே ஜனவரி (2006) ஏகத்துவம் இதழில், 'ஒப்புக் கொள்ளப்பட்ட
உண்மைகள்' என்ற தலைப்பில் நாம் கூறாத சில செய்திகளையும்
எடுத்தெழுதி விட்டு, அதை நாம் ஒப்புக்கொண்டு விட்டதாக விஷமத்தனமாக
எழுதியுள்ளனர்.
நாம் கூறாத செய்திகள்
-
அனாதைகளின் சொத்தை
வியாபாரத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்ற நபிமொழி.
-
இரண்டு ஆண்டிற்கான ஜகாத்தை
முன் கூட்டியே அப்பாஸ் (ரலி) அவர்கள் வழங்கியதாகக் கூறப்பட்ட
நபிமொழி.
-
ஒரு பொருளை ஒருவன்
பெற்றுக்கொண்டால் ஒரு வருடம் நிறைவடையும் வரை ஜகாத் இல்லை என்ற
நபிமொழி. (இந்த நபிமொழி ஆதாரப்பூர்வமானதுதான் என ஒரு காலத்தில்
இவர்கள்தான் கூறிக் கொண்டிருந்தனர். இப்போது தங்களது மனோ
இச்சைக்கு ஒத்து வராததால் பலவீனமானது என பல்டி அடித்து
விட்டனர்)
-
கால் நடைகளின் ஜகாத் பற்றிய
நபிமொழி.
மேற்கூறப்பட்டவையில் முதல்
மூன்று நபிமொழிகளும் பலவீனமானவை, கால்நடைகள் சம்பந்தப்பட்ட
நபிமொழியில் விதண்டாவாதம் பேசி மக்களை திசைதிருப்புவார்கள் என்பதை
நாம் ஏற்கனவே அறிந்து வைத்திருந்ததால், அதனை நமது மறு ஆய்வுக்
கட்டுரையில் குறிப்பிடவில்லை என்பதுமட்டுமல்ல, வெள்ளி மேடையிலும்
இவற்றை உதாரணத்திற்குக் கூட நாம் எடுத்துக்காட்டவில்லை.
ஆனால், இவர்களின் முன்னாள் ஆதரவாளராக இருந்த ஒரு அறிஞரால்தான்
இக்கருத்து எடுத்து வைக்கப்பட்டது. அவற்றை நாம் கூறவில்லை
என்பதால், அதற்கு தார்மீகப் பொறுப்பேற்க வேண்டிய அவசியம்
நமக்கில்லை என்ற அடிப்படையில் அதனைப் பொருட்படுத் வில்லை.
சம்பந்தப்பட்டவர்கள்தான் இவற்றிற்கு பதில் கூறக்
கடமைப்பட்டுள்ளனர்.
மறு ஆய்வுக் கட்டுரையில் நாம் எடுத்துக்காட்டிய பல உண்மைகளை
மறுத்துரைக்க முடியாமல் அதனை ஒப்புக் கொண்டவர்கள் இரண்டு விஷயங்களை
மட்டும் ஏற்க மறுத்துள்ளனர். சான்றுகளின் அடிப்படையில் அறிவார்ந்த
வாதங்களை முன் வைத்து மறுத்திருப்பார்களேயானால் நாம்
வரவேற்றிருப்போம். அதில் உண்மைகள் இருக்கும் பட்சத்தில் அதனை
ஏற்கவும் தயங்க மாட்டோம். ஆனால், இவர்கள் ஏற்க மறுத்ததற்கான காரணம்
என்ன? என்பதை அவர்களது எழுத்தே உலகிற்கு வெளிச்சம் போட்டு
காட்டிவிட்டது.
"அவர் அறிவித்த இரண்டு இலட்சம் பரிசு சவாலை எதிர் கொள்ளாமல் அவரை
விடப் போவதில்லை என்பதில் பி.ஜே. உறுதியாக இருக்கிறார்"
(ஏகத்துவம், 47வது பக்கம், ஜனவரி -2006)
இவர்கள் ஏற்க மறுத்துள்ள இரண்டு விஷயங்களும் 'இலட்சம்'
தொடர்புடையவை.
1)
'துஹ்ரத்தன் லில் அம்வால்'
[Play
video
Clip 1
|
Clip 2
|
Clip 3
|
Clip4
|
Clip5] என்பதை
ஹதீஸ் என நிரூபித்தால் ரூபாய்
இரண்டு இலட்சம் பரிசு தரப்படும் என நாம் ஏற்கனவே அறிவித்தது.
(ஆனால், அது ஹதீஸ் அல்ல, நபித்தோழரின் கூற்றுதான் என்பதை அவர்களே
பகிரங்கமாக ஒப்புக்கொண்டு விட்டதால் அந்தப் பரிசுத் தொகையினை
பரிதாபமாக இழந்து விட்டனர். எனவே, பணம் கிடைக்கும் என்று இலவு
காத்த கிளியாக காத்திருக்க வேண்டாம்.)
2) 'வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும்' என ஒரு ஹதீஸ் அபூதாவூதில்
மட்டுமல்ல, உலகிலுள்ள எந்த நூலிலுமில்லை. அவ்வாறு ஒரு ஹதீஸை
எடுத்துக்காட்டினால் ரூபாய் ஒரு இலட்சம் பரிசு என ஏற்கனவே அவர்கள்
அறிவித்தது.
[Play
video]
(அபூ தாவூதில் உள்ளது பலவீனமானது என்றுகூட அவர்கள்
அப்போது குறிப்பிடவில்லை. பல ஆண்டுகளாக ஜகாத் குறித்து ஆய்வு செய்த
இவர்களுக்கு இப்படி ஒரு ஹதீஸ் இருப்பதாகவே அறவே தெரியாது
என்பதுதான் காரணம்)
ஏகத்துவம் (ஜனவரி -2006) இதழில் வெளியான கட்டுரையின் மூலம் நாம்
எடுத்துக் காட்டிய எல்லா உண்மைகளையும் குறிப்பாக ஒரு முறை ஜகாத்
வழங்கியவற்றுக்கு மீண்டும், மீண்டும் ஜகாத் வழங்க வேண்டும் என்பது
உட்பட அனைத்தையும் தவிர்க்கப்பட்ட ஆதாரங்கள் என்ற தலைப்பின் கீழ்
பட்டியலிட்டு பல உண்மைகளை ஒப்புக் கொண்டுள்ளார்கள். அல்லாஹ்விற்கே
எல்லாப் புகழும் அல்ஹம்து லில்லாஹ்.
அவர்கள் ஒப்புக் கொண்ட உண்மைகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
ஒப்புக்கொண்ட உண்மைகள்
(ஏகத்துவம் ஜனவரி-2006)
1. கொடுத்த பொருளுக்கே ஜகாத் கொடுத்தால் ஏழ்மை ஏற்படும் என்பது
போன்றவற்றை உதாரணமாகக் கூட கூறக் கூடாது.
2. "ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு வருடா வருடம் மீண்டும்
மீண்டும் ஜகாத் வழங்க வேண்டியதில்லை என்று சட்டம் எளிமையாக
இருந்தால்தான் அதிகமானோர் ஜகாத் கொடுப்பார்கள்"
என்பது போன்ற வாதங்களையும் தவிர்க்க வேண்டும்.
3. அபூ பக்கர் (ரலி) ஆட்சி காலத்தில் ஒரு பொருளுக்கு மீண்டும்
மீண்டும் ஜகாத் வழங்க வேண்டும் என்பதுதான் சட்டமாக இருந்து வந்தது.
4. மனிதனின் அழுக்கே ஜகாத்.
கொடுத்த பொருளுக்கே ஜகாத் கொடுத்தால் பிச்சைக்காரனாகி விடுவானா?
[Play
video
Clip 1
|
Clip 2
|
Clip 3
|
Clip 4]
இவர்கள், தங்களின் கருத்தினை நிலைநிறுத்த கடந்த காலங்களில் எடுத்து
வைத்த சான்றுகளிலேயே மிகவும் கண்டனத்திற்குரியது
"ஜகாத்
கொடுத்தால் விரைவில் பிச்சைக்காரனாகி விடுவான்"
என்ற ஆபத்தான இந்தக்
கருத்தாகும். இதுதான்
பலபேரை (ஷைத்தானின்) கவர்ச்சியால்
ஆட்டிப்படைத்து இவர்களின் ஜகாத் பற்றிய புதிய கருத்தில் விழச்செய்ததாகும்.
'ஏழ்மை' என்ற நாசூக்கான வார்த்தையால் தற்போது
குறிப்பிட்டுள்ளவர்கள் கடந்த காலங்களில் ஜகாத்தை கொச்சைப்படுத்தும்
விதமாக ஜகாத் தொடர்ந்து வழங்கினால் 'பிச்சைக்காரனாகிவிடுவான்' என்ற
மோசமான வார்த்தையால் விமர்சித்தே பிரச்சாரம் செய்து வந்தனர்.
இவர்களின் ஜமாத் காரர்களிடம் ஜகாத் சம்பந்தமாக பேசினால் முதலில்
பேசக்கூடிய வார்த்தை இதுதான்.
'தர்மம் செய்தால் பிச்சைக்காரனாகிவிடுவாய் என ஷைத்தான்தான்
எச்சரிக்கின்றான்' என்ற கருத்தில் அமைந்த குர்ஆன் வசனத்தை
முன்னிறுத்தியும் மாறாக, ஜகாத் வழங்குவதால் மேலும், மேலும் செல்வம்
பெருகிக் கொண்டேதான் இருக்கும் என்று குர்ஆன் மற்றும்
சுன்னாவிலிருந்து தக்க சான்றுகளை எடுத்துக் காட்டியிருந்தேன்.
இதனடிப்படையில் நமது கேள்வி,
ஜகாத் வழங்கிய பொருளுக்கே தொடர்ந்து மீண்டும் ஜகாத் வழங்கி
வந்ததால் ஒருவன் பிச்சைக்காரனாகி விட்டான் என 1426ஆண்டுகால
இஸ்லாமிய வரலாற்றில் ஒரே ஒரு நபரை மட்டும் உதாரணத்திற்காகவேனும்
எடுத்துக்காட்டமுடியுமா?
இதைத் தொடர்ந்து, உண்மையை ஒப்புக்கொள்வதைத் தவிர வேறு வழியே
இல்லாததால், இனிமேல் குர்ஆன், சுன்னாவிற்கு மாற்றமான இக்கருத்தை
உதாரணத்திற்கு கூட எங்களில் யாரும் கூற மாட்டோம் என்ற உறுதி மொழி
எடுத்துக் கொண்டுள்ளனர். இவர்களை பின்பற்றுபவர்கள் இதனடிப்படையிலாவது இந்த கேடுகெட்ட வார்த்தையை சொல்லாமல் இருக்கட்டும்.
ஏற்கனவே சொன்னவற்றிற்காக இறைவனிடம் தவ்பா செய்து மீளட்டும்.
சட்டத்தை எளிமையாக்க வேண்டுமாம்.
[Play
video]
"ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு வருடா வருடம் மீண்டும் மீண்டும்
ஜகாத் வழங்க வேண்டியதில்லை என்று சட்டம் எளிமையாக இருந்தால்தான்
அதிகமானோர் ஜகாத் கொடுப்பார்கள்" என்பது போன்ற வாதங்களையும்
தவிர்க்க வேண்டும்
வருடா வருடம் ஜகாத் கொடு என்ற கடினமான சட்டம் கூறப்படுவதால்தான்
ஆயிரத்தில் ஒருவர் கூட சரியாக ஜகாத் வழங்குவதில்லை. ஒரு தடவை
கொடுத்தால் போதும் என்று சட்டத்தை எளிமையாகக் கூறினால்
ஆயிரத்திற்கு ஆயிரம் பேரும் (அதிகமானோர் என்பது இப்போதைய
திருத்தம்) கொடுத்து விடுவார்கள் என்று கடந்த காலங்களில்
தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வந்தனர்.
[Play
video]
ஜகாத் ஒரு தடவைதான் என்ற எளிமையான சட்டம் அபூபக்கர் (ரலி) ஆட்சி
காலத்தில் இருந்திருந்தால், ஆயிரத்திற்கு ஆயிரம் பேரும்
வழங்கியிருப்பார்கள். ஜகாத் வழங்க மறுத்தவர்களுடன் போர் செய்ய
வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது.
மேலும், ஒவ்வொரு நாளும் ஐந்து வேளை தொழ வேண்டும், ரமளான் 30 நாளும்
நோன்பு நோற்க வேண்டும் என்பதனால் மிகக் குறைந்த சதவிகித மக்கள்தான்
இதைக் கடை பிடித்து வருகின்றனர். எல்லோரும் செய்யும் விதத்தில்
இச்சட்டம் எளிமையாக்கப்பட்டால் அது அனைவருக்கும் பயனாக இருக்குமே,
எப்போது இதனைச் செய்து தருவார்கள்? என்ற வேண்டுகோளையும் முன்
வைத்திருந்தேன்.
இதன் பிறகுதான், சட்டம் எளிமையாக்கப்பட வேண்டும் என்ற தங்களது
கருத்தில் உள்ள அதிகப்பிரசங்கித் தனத்தை புரிந்து கொண்டு, "ஜகாத்
கொடுக்கப்பட்ட பொருளுக்கு வருடா வருடம் மீண்டும் மீண்டும் ஜகாத்
கொடுக்க வேண்டியதில்லை என்று சட்டம் எளிமையாக இருந்தால்தான்
அதிகமானோர் ஜகாத் வழங்குவார்கள் என்பது போன்ற வாதங்களையும்
தவிர்க்க வேண்டும்" என்று ஒப்புக் கொண்டு, இனிமேல் இது போன்ற
கருத்துக்களை கூறிக் கொண்டிருக்க மாட்டோம் என்று மனம் திருந்தி உள்ளனர்.
அபூ பக்கர் (ரலி) ஆட்சியில் ஜகாத் சட்டம்
அபூ பக்கர் (ரலி) அவர்கள் ஆட்சி காலத்தில் 'ஒரு பொருளுக்கு ஒரு
தடவைதான் ஜகாத்' என்ற சட்டம் இருந்திருந்தால், அனைவரும் ஜகாத்
வழங்கியிருப்பார்கள். வழங்க மறுத்தவர்களோடு சண்டை போட்டு இரத்தம்
சிந்த வேண்டிய அவசியமும் அபூ பக்கர் (ரலி) அவர்களுக்கு
ஏற்பட்டிருக்காது.
வழங்கிய பொருளுக்கே மீண்டும் மீண்டும் ஜகாத் வழங்க வேண்டும் என்ற
இறைத் தூதரின் காலத்தில் இருந்து வந்த அதே சட்டத்தை, அவர்களின்
மரணத்திற்கு பின் உடனடியாக ஆட்சிப் பொறுப்பேற்ற அபூபக்கர் (ரலி)
அவர்களும் நடைமுறைப்படுத்தியதால்தான் சிலர் ஜகாத் வழங்க மறுத்து
வந்தனர் என்பதை, இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறதல்லவா? என்ற
கேள்வியை எழுப்பியிருந்தேன்.
அதற்கான மறுப்பை தங்களது இதழில் குறிப்பிடாததால், மௌனம் சம்மதம்
என்ற அடிப்படையில் இறைத் தூதர் மற்றும் அபூபக்கர் ஆட்சி காலங்களில்
ஒரு பொருளுக்கு மீண்டும், மீண்டும் ஜகாத் வழங்க வேண்டும்
என்பதுதான் நடைமுறைச் சட்டமாக இருந்து வந்துள்ளது என்பதை
ஒப்புக்கொண்டு விட்டார்கள்.
மனிதனின் அழுக்கே ஜகாத்
ஜகாத்தாக வெளியேற்றப்பட்ட பொருள் மனிதனின் அழுக்குத்தானே தவிர செல்வத்தின்
அழுக்கல்ல என்பதை இப்னு குஜைமாவில் இடம் பெற்ற நபிமொழியை அரபி மூலத்துடன் சுட்டிக்
காட்டி, தூய்மையாக்கப்பட வேண்டியவன் மனிதனே தவிர, செல்வமல்ல என்பதை
விவரித்திருந்தேன். ஜனவரி (2006) ஏகத்துவம் இதழில் இதற்கான எந்த ஒரு
மறுப்பும் வெளியிடவில்லை என்பதால், மௌனம் சம்மதம் என்ற அடிப்படையில் ஜகாத் என்பது
மனித அழுக்குதான். ஜகாத் வழங்குவது மனிதனை மட்டுமே தூய்மைப்படுத்துகிறது
பொருளாதாரத்தை அல்ல என்ற உண்மையையும் இவர்கள் ஒப்புக்கொண்டு விட்டார்கள்.
வரவேற்கிறோம்
இவர்களிடம் ஏற்பட்ட இந்த மனமாற்றத்தை வரவேற்கும் அதே வேளையில், தாங்கள் ஒப்புக்
கொண்ட உண்மைகளை பகிரங்கப்படுத்தியதோடு இவர்களது பொறுப்பு முடிந்து விடவில்லை.
மாறாக, இந்த நச்சுக் கருத்துக்களை பரப்பிட, அவற்றை கண் மூடித்தனமாகப் பின்பற்றி
வருவோரின் உள்ளங்களில் திணிக்க இவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சியை விட பல ஆயிரம்
மடங்குகள் முயற்சித்து, இவர்களது பிரச்சார மேடைகளை இதற்காகவே அதிகமதிகம்
பயன்படுத்தி தவறாகப் பதிந்து விட்ட அக்கருத்தினை மாற்றவும் முயற்சிக்க வேண்டும்.
அதுவே இவர்கள் செய்துவிட்ட மாபெரும் தவறுக்குரிய பரிகாரமாக அமையும் என்பதை
அறிவுறுத்துகிறேன்.
தங்களை அறியாமலேயே ஒப்புக் கொண்ட
மாபெரும் உண்மை
"ஒரு பொருளுக்கு ஒரு தடவைதான் ஜகாத் என்ற கருத்து கடந்த காலங்களிலும் இருந்துள்ளது
என்று இப்னு ஹஸ்ம் அவர்கள் கூட தெரிவிக்கின்றார்கள்" என தனது உரையில் பி.ஜே. கூறி
இருந்தார்
. "கால்நடைகளுக்கும், நகைகளுக்கும் ஒரு தடவைதான் ஜகாத் என்ற
கருத்துடையவர்களுக்கு எதிராக இப்னு ஹஸ்ம் கேள்வி எழுப்புகின்றார் என்றால் அந்தக்
காலத்திலும் இந்தக் கருத்துள்ளவர்கள் இருந்துள்ளனர் என்பது தானே பொருள்"
(ஏகத்துவம், ஜனவரி -2006)
நமது விளக்கம்
"எல்லா இனங்களுக்கும் ஒரு தடவைதான் ஜகாத் என்ற இக்கருத்தை நாம் மட்டும் கூறவில்லை.
இவ்வாறு கூறியோர் எல்லாக் காலத்திலும் இருந்துள்ளனர். இப்னு ஹஸ்ம் கூட அவ்வாறு
கூறியோரை தனது நூலில் பட்டியலிட்டுள்ளார்"
[Play
video]
என்று கூறி விட்டு,
'அவ்வாறு கூறியோரின்
பட்டியலை இவர்கள் வெளியிடவில்லை. மாறாக, அணியும் நகைகள், தீனி போட்டு
வளர்க்கப்படும் கால்நடைகள் ஆகியவற்றுக்கு மட்டும்தான் ஒரு தடவை ஜகாத். மற்ற எல்லாப்
பொருட்களுக்கும் மீண்டும், மீண்டும் ஜகாத் வழங்க வேண்டும்' என்ற மாற்றுக்
கருத்துடையவர்களின் பட்டியலை மேற்கோளாக எடுத்துக்காட்டினால் அதை மோசடி என்று
கூறாமல் வேறு எப்படி அழைப்பது?
இப்னு ஹஸ்ம்
யாரை நோக்கி கேள்வி எழுப்புகிறார்
இப்னு ஹஸ்ம் யாரை நோக்கி கேள்வி எழுப்புகிறார் என்றால்,
தீனி போட்டு வளர்க்கப்படும் கால்நடைகளுக்கும், அணியும் நகைகளுக்கு மட்டும் ஒரு
தடவைதான் ஜகாத் என்ற கருத்துடையவர்களுக்கு எதிராகத்தான். அப்படியென்றால், அந்தக்
காலத்தில் இந்தக் கருத்துள்ளவர்கள் மட்டும்தான் இருந்துள்ளனர்.
இக்கருத்தை தங்களது ஏகத்துவம் (ஜனவரி -2006) இதழில் பிரசுரித்ததன் மூலம், இப்னு
ஹஸ்ம் காலத்தில் தீனி போட்டு வளர்க்கப்படும் கால்நடைகள், அணியும் ஆபரணங்கள்
ஆகியவற்றுக்கு மட்டுமே ஒரு தடவை ஜகாத் என்ற கருத்துடையவர்கள் மட்டும்தான்
இருந்துள்ளனர். இப்னு ஹஸ்மின் காலத்தில் இருந்தவர்கள் கூறிய கருத்தும் நாங்கள்
கூறிவருவதும் ஒன்றுதான்.
அதாவது, ஒரு பொருளுக்கு ஒரு தடவைதான் ஜகாத் என்று நாங்கள் கூறுவது தீனி போட்டு
வளர்க்கப்படும் கால்நடைகள், அணியும் நகைகள் ஆகியவற்றுக்கு மட்டும்தான். மற்ற
அனைத்துப் பொருட்களுக்கும் மீண்டும், மீண்டும் ஜகாத் வழங்க வேண்டும் என்றுதான்
நாங்களும் கூறி வருகிறோம் என்ற இந்த மாபெரும் உண்மையைத் தங்களையும் அறியாமலேயே
ஒப்புக்கொண்டு விட்டனர்.
இதன் மூலம், கடந்த 14 நூற்றாண்டு கால இஸ்லாமிய வரலாற்றிலும்கூட 'ஜகாத் வழங்கிய ஒரு
பொருளுக்கு மீண்டும் ஜகாத்தில்லை' என்று கூறியோர் ஒருவரும் இருந்ததில்லை என்ற நம்
கருத்தே வலுவடைகிறது.
இவ்வாறு தெளிவாக ஒரு உண்மையை ஒப்புக்கொண்ட பிறகும், தாங்களும் குழப்பமடைந்து
பிறரையும் குழப்பி வருகிறார்களே ஏன்?
(தீனி போட்டு வளர்க்கப்படும் கால்நடைகள், அணியும் நகைகள் ஆகியவற்றுக்கு மட்டும்
ஒரு தடைவதான் ஜகாத் என்று சிலர் கூறக் காரணம், உபயோகப் பொருளுக்கு ஜகாத்தில்லை என்ற
கருத்தைப் பிரதிபலிக்கும் சில நபிமொழிகள் உள்ள அதே வேளையில், ஜகாத் வழங்கவேண்டும்
என்ற பொதுவான சான்றுகளும் உண்டு என்பதே.
இவ்வாறு இரு வேறுவிதமான சான்றுகள் வந்திருப்பதாகக் கருதிய மேற்கண்ட இரு இனங்கள்
விஷயத்தில் எவ்வாறு முடிவெடுப்பது என்று யோசித்து விட்டு, ஒரே ஒரு தடவைதான் என்று
தவறாகக் கூறிவிட்டார். இது தவறனாது குர்ஆன், சுன்னாவிற்கு மாற்றமானது என்பதை இப்னு
ஹஸ்ம் அவர்களே தனது நூலில் அந்த இடத்திலேயே தெளிவு படுத்திவிட்டார்)
ஏன் இந்தத்
தடுமாற்றம்?
"ஒருவனுக்கு ஒரு பொருள் கிடைத்தால் ஒரு ஆண்டு நிறைவடையும் வரை
ஜகாத் இல்லை என்ற ஹதீஸ்களில் ஒரே ஒரு அறிவிப்பு மட்டும் சரியாக
உள்ளது. ஆயினும் அந்த ஹதீஸின் வாசகத்திலிருந்து கொடுத்த பொருளுக்கு
மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற முடிவுக்கு வர
முடியாது" என்ற வாதத்தையும் எடுத்து வைக்கக் கூடாது. ஏனெனில்
இந்தக் கருத்தில் ஒரு ஹதீஸும் ஆதாரப்பூர்வமானது அல்ல" (ஏகத்துவம்,
ஜனவரி -2006)
'ஆதாரப்பூர்வமானதுதான்'
[Play
video] என சமீபகாலம் வரை இவர்கள் கூறிக்
கொண்டிருந்த ஒரு நபிமொழியை இன்று பலவீனமானது என பகிரங்கமாக திடீரென
மாற்றி அறிவித்துள்ளனர். குறுகிய கால இடைவெளியில் ஏன் இந்தத்
தடுமாற்றம்?
ஆனால், இந்த நபிமொழி பற்றிய எந்த ஒரு செய்தியையும், எந்த
இடத்திலும் நான் சுட்டிக்காட்டியதே கிடையாது. நான் கூறாத விஷயம்
என்ற அடிப்படையில் இதற்கு எந்த மறுப்பும் வெளியிடவில்லை. உடனே
ஒப்புக்கொண்டு விட்டார் பாருங்கள் என்று, பித்தலாட்டம்
செய்துள்ளார்கள். எப்படியோ நம்மை சீண்டிப் பார்த்ததால் இதற்கும்
நாம் விளக்கம் தருகிறோம்.
நமது விளக்கம்:
அன்று இனித்த அல்பானி இன்று கசந்து போனது ஏனோ?
'ஒருவன் ஒரு பொருளைப் பெற்றுக் கொண்டால் ஒரு வருடம் நிறைவடையும்
வரை ஜகாத் இல்லை' என்ற கருத்தில் வந்திருக்கும் நபிமொழியின்
அனைத்து அறிவிப்பாளர் தொடரையும் ஆய்வு செய்த அல்பானி அவர்கள் அதன்
இறுதியில்,
ثم وجدت للحديث طريقاً أخرى بسند صحيح عن علي رضي الله عنه خرّجته
في ((صحيح أبي داود-1403)) فصح الحديث والحمد لله. (إرواء الغليل
258/3ج)
"பின்னர், அலி (ரலி) அவர்களின் மூலம் சரியான தொடரில் வந்துள்ள
ஒரே
ஒரு அறிவிப்பைப் பெற்றுக் கொண்டேன்....
அல்லாஹ்விற்கே எல்லாப்
புகழும்" என இர்வாவுல் கலீல் என்ற நூலில் கூறியுள்ளார்கள்.
அன்று...
இதனை அப்படியே காப்பியடித்து, அல்பானியின் பெயரைக்கூட
பயன்படுத்தாமல் அவரின் கூற்று சரியானதுதானா? என்ற ஆய்வுக்கும்
உட்படுத்தாமல், என்னமோ தாங்கள்தான் மாதக்கணக்கில் அமர்ந்து மூளையை?
கசக்கி ஆய்வு செய்து கண்டு பிடித்துவிட்டது போல் 'இந்தக் கருத்தில்
ஒரே ஒரு அறிவிப்பு மட்டும் ஆதாரப்பூர்வமானதாக உள்ளது'
[Play
video] என்று
கூறினார்கள். (அல்பானி அரபியில் கூறியதை அப்படியே தமிழில்
மொழிபெயர்த்திருந்ததுதான் இவர்கள் செய்த ஆய்வின் சாதனை. இதை என்னமோ
அதிமேதாவித்தனம் என்று நினைத்து கற்பனை உலகில் சஞ்சரித்துக்
கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இதைத்தான் ஈயடிச்சான் காப்பி என்று
கூறுவார்கள்)
இன்று...
அல்பானி கூறியதைக் காப்பியடித்து 'ஒரே ஒரு அறிவிப்பு மட்டும்
ஆதாரப்பூர்வமானது' என்று சமீபகாலம் வரை இவர்கள் கூறிக் கொண்டு
வந்தத இந்த நபிமொழி, தற்போதைய மனோ இச்சையின்படி எடுத்துக் கொண்ட
புதிய நிலைபாட்டினை (அதாவது ஒருவனுக்கு ஒரு பொருள் கிடைத்தால் ஒரு
வருடம் வரை காத்திருக்காமல் உடனடியாக ஜகாத் வழங்கிவிட வேண்டும்.
மாத வருமானம் உள்ளவனாக இருந்தால், ஒவ்வொரு மாதமும், வாரம் வருமானம்
உள்ளவனாக இருந்தால் ஒவ்வொரு வாரமும், தினசரி வருமானம் உள்ளவனாக
இருந்தால் தினமும் ஜகாத் வழங்கி விட வேண்டுமாம்) இதே அல்பானியின்
கூற்று ஆட்டம் காண வைப்பதால் இக்கருத்தில் ஒரு ஹதீஸும்
ஆதாரப்பூர்வமானது அல்ல என்று தங்களது முந்திய முடிவை மாற்றிக்
கொண்டு அந்தர் பல்டி அடித்து விட்டனர்.
(ஒரு மணி நேரம் வருமானம் உள்ளவனாக இருந்தால், ஒரு நிமிடம் வருமானம்
உள்ளவனாக இருந்தால், இவன் தனது எல்லா அலுவல்களையும் விட்டு விட்டு,
ஜகாத்தைக் கணக்குப் பார்த்து நிமிடம் நிமிடம் வழங்கிக் கொண்டே
இருக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறார்களா? தெரியவில்லை. இந்த
நவீன இமாம்கள்தான் அதைத் தெளிவு படுத்தவேண்டும்)
தங்களது மனோ இச்சைகளை மார்க்கத்தில் திணிக்க முயற்சிக்கும் போது,
இது போன்ற முரண்பாடுகள் குறுகிய கால இடைவெளிகளில் இவர்களிடம்
அடிக்கடி நிகழ்ந்து வருவது சகஜம்தான். ஆனால், இவர்களைக் கண்
மூடித்தனமாகப் பின்பற்றுவோரின் நிலைதான் அந்தோ! பரிதாபம். தனிமனித
மாயையிலிருந்து அல்லாஹ்தான் இவர்களைக் காப்பாற்ற வேண்டும்.
இவர்களது மனோ இச்சைக்கு ஏற்ப வளைக்க முனைந்த பல ஹதீஸ்கள்
பலவீனமானவை என்றும், இவர்களது மனோ இச்சைக்கு எதிரான பல ஹதீஸ்கள்
ஆதாரப்பூர்வமானவை என்றும் அல்பானி அவர்கள் கூறியிருப்பதால்,
தற்போது அவர் பிடிக்காமல் போய்விட்டார்.
அன்று இனிப்பாக இருந்த அல்பானி இன்று கசந்து போனதற்கு இதுதான்
காரணம்.
ஏற்க மறுத்தவைகள்
'ஒரு பொருளுக்கு ஒரு தடவைதான் ஜகாத்' என்ற கருத்தை நிலைநாட்ட கடந்த
காலங்களில் சில சான்றுகளை(?) கூறிவந்தார்கள்.
இறைத்தூதர் கூறியதாக எந்த ஒரு நூலிலும் இல்லை என்று நாம் எடுத்துக்
காட்டிய பின்,
அபூ
தாவூத்தில் பதிவாகியுள்ள இந்த நபிமொழியில்,
இதை ஜஃபரின் மாணவரும், அறிவிப்பாளர் ஆய்வில் சிறந்து
விளங்கியவருமான இத்துறை அறிஞர்கள் அனைவருக்கும் முன்னோடியாக
திகழ்ந்த ஷுஃபா அவர்கள், முஜாஹித்திடம் ஜஃபர் என்பவர் கேட்கவில்லை
என்று உறுதியாகக் கூறியுள்ளார். இதையே யஹ்யா பின் சயீத், இப்னு
மயீன், அஹ்மத் பின் ஹன்பல், அலி பின் அல் மதினீய்யி, இப்னு ஹஜர்,
தஹபி, இப்னு அதி, அல் மிஜ்ஜியி போன்ற இக்கலையின் தலை சிறந்த மற்ற
அறிஞர்களும் இதை உறுதி செய்துள்ளனர் என்பதால் இந்த நபிமொழி
பலவீனமானது என்று விளக்கம் அளித்திருந்தேன்.
மேலும், தூய்மைப்படுத்துதல் என்ற அர்த்தத்தையும் இந்த
நபிமொழியிலிருந்து புரிந்து கொள்ள முடியாது என்பதையும் என் மறு
ஆய்வுக் கட்டுரையில் விரிவாக எழுதி இருந்தேன்.
இதனை ஏற்க மறுத்து ஜனவரி (2006) ஏகத்துவத்தில் மறுப்பு என்ற
பெயரில் எதை எதையோ கூறி விட்டு, வழக்கம் போல் பல்வேறு செய்திகளை
இருட்டடிப்புச் செய்து விட்டு, நாம் இருட்டடிப்புச் செய்துவிட்டதாக
நம் மீது வீண் பழி சுமத்தியுள்ளார்கள். இருட்டடிப்புச் செய்தது
யார்?
இவர்களின் மண்டையில் உறைக்கும் விதத்தில் இன்னும் விரிவாக இதனை
அலசுவோம்.
அவர்களது
மறுப்புரை (ஏகத்துவம், ஜனவரி 2006)
"ஷுஃபா கூறும் இந்தக் காரணம் சரியானது என்றால்தான் ஷுஃபா கூறுவதை
ஏற்க வேண்டும். அவர் கூறும் காரணம் சரியில்லை என்றால் அவரது கூற்றை
நாம் விட்டு விட வேண்டும். "முஜாஹிதிடம் ஜஃபர் பின் இயாஸ்
செவியுற்றிருக்கிறாரா? என்பதை எப்படி நாம் முடிவு செய்வது? இதில்
முதல் தரத்தில் எடுத்துக் கொள்ளப்படுவது சம்பந்தப்பட்டவரின்
வாக்குமூலம்தான். ஒருவர் நம்பகமானவராக இருந்து இன்னாரிடம் கேட்டேன்
எனவும் கூறினால் அது தான் அவர் கேட்டதற்கு முதன்மையான ஆதாரமாகும்"
"சம்பந்தப்பட்டவரே கேட்டேன் என்று கூறியிருக்கும் போது அதில்
சம்பந்தப்படாத இன்னொருவர் கேட்டதில்லை என்று கூறினால் அவரிடம்
போதிய தகவல் இல்லை என்று ஆகுமே தவிர சம்பந்தப்பட்டவர் கேட்கவில்லை
என்று ஆகாது. .... ஜஃபர் நம்பகமானவராக இருக்கும் போது, 'நான்
கேட்டேன்' என்று அவர் கூறுவதைத்தான் ஏற்க வேண்டும் என்ற ஹதீஸ்
கலையின் அரிச்சுவடி கூடத் தெரியாமல் மறு ஆய்வு செய்யப் புகுந்து
விட்டனர்.
புகாரி இமாம் அவர்கள் பதிவு செய்யும் ஹதீஸ்களில் முஜாஹிதிடமிருந்து
ஜஃபர் வழியாக 4940வது ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. புகாரி இமாமின்
விதிப்படி முஜாஹிதிடமிருந்து ஜஃபர் கேட்டிருக்காவிட்டால் அதைப்
பதிவு செய்யவே மாட்டார்கள். மேலும், புகாரி 4310வது ஹதீஸில், 'நான்
முஜாஹிதிடம் கேட்டேன்' என்று ஜஃபர் பின் இயாஸ் கூறுவதாகப் பதிவு
செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த ஹதீஸ் பலவீனமானது என்பதற்காக
வலிந்து கற்பித்த தவறான காரணம் அடியோடு வீழ்ந்து விட்டது"
நமது விளக்கம்
முஜாஹித்திடம்
ஜஃபர் கேட்கவில்லை என்பதே உண்மை
கேட்டேன் என்ற வாதம் எப்போது சரி என ஏற்கமுடியும்?
முஜாஹிதிடம் கேட்டதாக சம்பந்தப்பட்ட ஜஃபரே கூறிவிட்டதாக புகாரியில்
4310-வது ஹதீஸாகப் பதிவாகியுள்ளதாம்.
அதனால் அவரது கூற்றுக்குத்தான் முன்னுரிமை தர வேண்டுமாம். இவ்வாறு
எழுதியதன் மூலம் நியாயமான ஒரு வாதத்தை எடுத்து வைத்து விட்டதாகப்
பூரிப்படைந்து வருகின்றனர்.
'கேட்டேன்' என்று சம்பந்தப்பட்டவர் கூறிய வாக்கு மூலத்தைத்தான்
முதன்மைச் சான்றாக ஏற்க வேண்டும் என்ற இந்த வாதம் எப்போது சரியாக
இருக்குமென்றால், சம்பந்தப்பட்டவர் அளித்த இவ்வாக்கு மூலத்தை இமாம்
புகாரி அவர்களே நேரடியாகக் கேட்டு, அல்லது ஷுஃபா அல்லாத
வேறொருவரின் வழியாக அறிவிக்கப்பட்டிருந்து அதை இமாம் புகாரி
அவர்கள் நேரடியாகக் கேட்டுப் பதிவு செய்திருந்தால் மட்டும்தான்.
இப்படி ஏதேனும் ஒரு முறையில் பதிவானதை எடுத்துக்காட்டி விட்டு,
இவர்கள் இவ்வாறு வாதித்தால் அவர்களிடம் கொஞ்சமாவது நியாயம் உண்டு
என ஏற்கலாம். ஆனால், இவற்றில் எந்த ஒரு முறையிலும் இச்செய்தி
புகாரியில் பதிவாகவில்லை.
புகாரியில்
பதிவான இரண்டு வகையான செய்திகள்
-
'இன்னார் எனக்கு அறிவித்தார்', 'இன்னாரிடம் கேட்டேன்' என்று
தனக்கு அறிவித்தவரின் பெயர் கூறப்பட்டு பதிவான செய்திகள் முதல்
வகை. (நபிமொழிகளும், துணைச் சான்றுகள் என்ற அடிப்படையில்
நபித்தோழர்கள் மற்றும் தாபியின் ஆகியோரின் கூற்றுகளும்
இம்முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளன)
-
தனக்கு அறிவித்தவர் யார் என்பதைத் தெரிவிக்காமல் 'இன்னார்
கூறினார்', 'இன்னாரிடமிருந்து அறிவிக்கப்படுகிறது' என்று கூறி
பதிவான செய்திகள் இரண்டாவது வகை. இம்முறையில்
பதிவானவற்றுக்கு 'முஅல்லக்' என்று கூறப்படும். (குறைவான
நபிமொழிகளும், அதிகளவில் நபித்தோழர்களின் கூற்றுகளும்
இம்முறையிலும் பதிவு செய்யப்படுள்ளன. புகாரியில் முஅல்லக்கான
செய்திகள் சுமார் 1342 இருப்பதாக தத்ரீப் (48) நூல்
கூறுகின்றது. இவற்றில் பலவீனமானவையும் உண்டு என்பது நினைவில்
கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயமாகும்.)
முதல் வகையில் அமைந்த ஹதீஸ்களைப் பதிவு செய்வதே இமாம் புகாரி
அவர்களின் முக்கிய நோக்கம் என்பதால், கடுமையான விதிமுறைகளை
கடைபிடித்து எந்த வகையிலும் குறை கூற முடியாத ஹதீஸ்களை மட்டுமே
தேர்வு செய்து பதிவு செய்துள்ளார்கள். அவை அனைத்தும்
ஆதாரப்பூர்வமானது தான். எனினும், விதிவிலக்காக ஒன்றிரண்டு
பலவீனமானவை என இக்கலை அறிஞர்கள் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இம்முறையில் அமைந்த துணைச் சான்றுகளான நபித்தோழர்கள் மற்றும்
தாபியின்கள் ஆகியோரின் கூற்றுகளைப் பதிவு செய்வதில் தான்
கடைபிடித்து வந்த கடுமையான விதியை சற்று தளர்த்திக்
கொண்டுள்ளார்கள்.
இரண்டாவது வகையில் பதிவான முஅல்லக்கான செய்திகளில் சிலவற்றை
துணைச் சான்றாக பதிவு செய்துள்ள அதே வேளையில், வேறுசிலவற்றை அவை
தன்னிடம் ஆதாரப்பூர்வமானதல்ல என்பதை உணர்த்துவதற்காகவும் இவ்வாறு
பதிவு செய்தவையும் உண்டு. இதனால், இந்த முறையிலான செய்திகளை பதிவு
செய்வதிலும் தான் கடைபிடித்து வந்த விதிகளைத் தளர்த்திக்
கொண்டுள்ளார்கள்.
புகாரியில் சில செய்திகள் முஅல்லக்காக பதிவு செய்யப்பட்டதற்கான
காரணங்களை இமாம் இப்னு ஹஜர் அவர்கள் விளக்கும் போது,
'..அறிவித்தவரிடமிருந்து நேரடியாக கேட்டிருக்காவிட்டால், அல்லது
கேட்டிருப்பதை உறுதி செய்ய முடியாத வகையில் சந்தேகம் இருந்தால்
அப்போதும் அச்செய்தியை 'முஅல்லக்'காக இமாம் புகாரி அவர்கள் பதிவு
செய்வது வழக்கம்' என்று விவரித்துள்ளார். (ஃபத்ஹுல் பாரியின்
முன்னுரை -24)
புகாரியில் இடம் பிடித்துள்ளது என்ற ஒரே காரணத்திற்காக இது போன்ற
முஅல்லக்கான செய்திகள் அனைத்தும் ஆதாரப்பூர்வமானதுதான் என்ற
பொதுவான முடிவுக்கு வர முடியாது. காரணம் அவற்றில்
ஆதாரப்பூர்வமானது, பலவீனமானது என இரு வகையாகவும் கலந்து
இருக்கலாம்.
சிலவற்றை பலவீனமானது என இமாம் புகாரி அவர்களே
தெளிவுபடுத்தியுள்ளார். வேறு சிலவற்றை பலவீனமானது என இக்கலையின்
வேறு அறிஞர்கள் நிரூபித்துள்ளனர்.
"புகாரியில் இடம்பெற்றுள்ள 'முஅல்லக்'கான செய்திகள் அனைத்தும்
ஆதாரப்பூர்வமானதுதான் என பொதுவான முடிவுக்கு வந்து விட முடியாது"
என்று இவர்கள் அடிக்கடி மேற்கோள் காட்டி எழுதி வரும் தத்ரீப் என்ற
நூல் (பக்கம் 54) கூறுகின்றது.
இதே கருத்தை ஹாஃபிழ் இப்னு ஹஜர் அவர்களும் ஹத்யுஸ் ஸாரி (பக்கம்
24) என்று நூலில் பதிவு செய்துள்ளார்.
இறைத்தூதர் பிறந்த மகிழ்ச்சியில் ஃதுவைப்பா என்ற அடிமைப் பெண்ணை
அபூ லஹப் விடுதலை செய்தான். அதற்காக அவனது விரல்களின் மூலம்
நரகத்தில் அவனுக்கு நீர் புகட்டப்படுவதாக அவனது குடும்பத்தினரில்
ஒருவர் கனவு கண்டார் என்று உர்வத் பின் ஜுபைர் ஒரு செய்தியை
அறிவித்துள்ளார். குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபி மொழிகளுக்கு
எதிரான பலவீனமான இக்கனவுச் செய்தியை இமாம் புகாரி அவர்கள் 5101வது
செய்தியாக தனது நூலில் பதிவு செய்துள்ளார்கள்.
('இப்னு அப்பாஸ், ஜர்ஹத் மற்றும் முஹம்மது பின் ஜஹஷ் ஆகியோர் மூலம்
தொடை மறைக்கப்பட வேண்டிய பகுதியாகும் என அறிவிக்கப்படுகிறது' என்று
இமாம் புகாரி அவர்கள் முஅல்லக்காகப் பதிவு செய்த நபிமொழிகளை
பலவீனமானது என ஜுலை மாத (2005) ஏகத்துவம் இதழில் இவர்களே
எழுதியுள்ளார்கள்)
இதனால் புகாரி
நூலின் நம்பகத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுமா?
இது போன்ற புகாரியில் இடம் பெற்றுள்ள முஅல்லக்கான செய்திகளில் சில
பலவீனமானவை என்று வாதிப்பதால் அது இந்நூலின் நம்பகத்தன்மைக்கு எந்த
ஒரு பாதிப்பையும் ஏற்படுத்திவிடாது. காரணம், இவ்வாறு இமாம் புகாரி
அவர்கள் பதிவு செய்திருப்பததின் நோக்கம் தன்னிடத்தில் இச்செய்தி
ஏற்கத்தக்கதல்ல, உறுதி செய்யப்படாதது என்று நிலையில் உள்ளதாகும்
என்பதை உணர்த்துவதேயாகும். இதனால், இமாம் புகாரி அவர்களின்
விதிப்படி பதிவான செய்திகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட்டு
விடாது.
இருட்டடிப்புச் செய்தது
யார்?
இந்த அடிப்படைப் புரிந்து கொண்டு, 'கேட்டேன்' என்ற
சம்பந்தப்பட்டவரின் வாக்கு மூலம் பதிவாகி உள்ள 4310வது செய்தியை
இனி விரிவாகப்பார்ப்போம்.
'ஜஃபர் கேட்கவில்லை' என்று உறுதியாகக் கூறிய ஷுஃபாவின் மூலமே
'கேட்டார்' என்ற இச்செய்தியும் பதிவாகியுள்ளது. அதாவது 'கேட்டார்',
'கேட்கவில்லை' என்ற இருவேறு முரண்பட்ட கருத்துக்களும் ஷுஃபாவின்
வழியாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. முரண்பட்ட இந்த இரண்டு
கருத்துக்களில் ஏதேனும் ஒன்றுதான் சரியாக இருக்க முடியும்.
புகாரியில் பதிவாகியுள்ள 'கேட்டார்' என்ற இச்செய்தியின்
அறிவிப்பாளர் தொடரை சற்று உன்னிப்பாகப் பார்த்தாலே இச்செய்தியின்
தரம் என்ன? என்பது தெளிவாகிவிடும். இவ்வுண்மையை இவர்களும் தெரிந்து
கொண்டதால்தான் அறிவிப்பாளர் வரிசையை வெளியிடாமல் ஜஃபரிடம்
இச்செய்தியை இமாம் புகாரி அவர்களே நேரடியாகக் கேட்டு பதிவு செய்தது
போல் எழுதி பல்வேறு இருட்டடிப்பு வேலைகளை அரங்கேற்றி விட்டு, நான்
இருட்டடிப்புச் செய்து விட்டதாக என் மீது வீண் பழி
சுமத்தியுள்ளனர்.
இவ்வாறு இருட்டடிப்பு செய்வதற்கு இன்னொரு முக்கிய காரணமும் உண்டு.
அதாவது, புகாரி தமிழாக்கத்தில் 'ஜாஃபர் கேட்டார்' என்ற செய்தியின்
அறிவிப்பாளர் வரிசை மொழியாக்கம் செய்யப்படவில்லை என்பதால் இதை
தங்களுக்குச் சாதமாக எடுத்துக் கொண்டனர்.
புகாரியில்
பதிவான இச்செய்தியின் அறிவிப்பாளர் வரிசை
4310- وَقَالَ النَّضْرُ أَخْبَرَنَا شُعْبَةُ أَخْبَرَنَا أَبُو
بِشْرٍ سَمِعْتُ مُجَاهِداً قُلْتُ لاِبْنِ عُمَرَ........... رواه
البخارى
'முஜாஹித்திடம் நான் கேட்டேன்' என ஜஃபர் கூறியதாக ஷுஃபா எங்களுக்கு
அறிவித்தார் என்று நள்ர் என்பவர் கூறியதாகவே இமாம் புகாரி அவர்கள்
இந்த செய்தியைப் பதிவு செய்துள்ளார்கள்.(புகாரி -4310)
(புகாரியில் 4310வதாக பதிவாகியுள்ள இச்செய்தி இறைத்தூதர்
கூறியதல்ல. மாறாக, இப்னு உமரின் கூற்றுதான். இவ்வாறு நபித்தோழர்கள்
கூறியவற்றுக்கு 'மவ்கூஃப்' என்றும் இக்கலை வழக்கில் கூறப்படும்)
இச்செய்தியைக் கூட 'நள்ர் எனக்கு அறிவித்தார், நள்ரிடம் நான்
கேட்டேன்' என்று இமாம் புகாரி அவர்கள் பதிவு செய்யவில்லை. மாறாக
தனக்கு அறிவித்தவர் யார்? என்பதைத் தெரிவிக்காமல் 'நள்ர் கூறினார்'
என்று முஅல்லக்காகவே பதிவு செய்துள்ளார்.
நள்ர் என்பவர் ஹிஜ்ரி 203-ம் ஆண்டு மரணம் அடைந்துவிட்டதாக இமாம்
புகாரி அவர்களே கூறியுள்ளார்கள். வேறு சிலர் 204-ம் ஆண்டின்
துவக்கத்தில் மரணித்ததாகவும் குறிப்பிடுகின்றனர். (தாரிகுல் கபீர்
7/395, தஹ்தீபுல் கமால் 10/299,
தஹ்தீபுத் தஹ்தீப். 6/547)
ஹிஜ்ரி 194 -ம் ஆண்டில் பிறந்த இமாம் புகாரி அவர்கள் 205 -ம்
ஆண்டுதான் முதன் முதலாக ஹதீஸைப் படிக்கத் துவங்குகிறார்கள்.
(தஃத்கிரத்துல் ஹுஃப்பாழ் 2/104) அதாவது
புகாரி அவர்கள் ஹதீஸ் துறையில் அடியெடுத்து வைப்பதற்கு இரண்டு
ஆண்டுகளுக்கு முன்பே நள்ர் என்பவர் மரணமடைந்து விட்டார். எனவே,
இச்செய்தியை நள்ர் என்பவரிடமிருந்து இமாம் புகாரி அவர்கள் நேரடியாக
கேட்டிருக்க அறவே வாய்ப்பில்லை.
இந்த அடிப்படையில் 4310வதாகப் பதிவாகியிருக்கும் (இவர்கள்
எடுத்துக் காட்டிய) முஜாஹிதிடம் கேட்டேன் என்ற சம்பந்தப்பட்டவரின்
வாக்கு மூலம் இமாம் புகாரி அவர்களால் ஏற்கப்பட்டதல்ல என்பதைத்
தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
இச்செய்தியை
நள்ரிடம் கேட்டது யார்?
நள்ர் என்பவரிடம் இமாம் புகாரி அவர்கள் இச்செய்தியை நேரடியாகக்
கேட்கவில்லை. மாறாக, அஹ்மத் பின் மன்சூர் என்பவர்தான் நள்ரிடம்
கேட்டுள்ளார் என இஸ்மாயிலி என்பவர் அறிவித்ததாக தஃக்லீகுத்
தஃக்லீக் என்ற நூலில் ஹாஃபிழ் இப்னு ஹஜர் தெரிவித்துள்ளார்
என்றாலும், இந்த அஹ்மத் பின் மன்சூரையும் இமாம் புகாரி அவர்கள்
சந்தித்ததாகவோ, அல்லது அவரிடம் ஹதீஸ்களைக் கேட்டதாகவோ
எக்குறிப்பும் இல்லை.
'அஹ்மது பின் மன்சூர் உண்மையானவர்' என்ற அர்த்தத்தைப்
பிரதிபலிக்கும் வார்த்தையான 'சதூக்' என்று இமாம் அபு ஹாதிம்
அவர்கள் மட்டும் விமர்சனம் செய்துள்ளார். ஒர் அறிவிப்பாளர்
குறித்து 'சதூக்' என்று அபூ ஹாதிம் விமர்சனம் செய்தால், 'அவர்
அறிவிப்பதை எழுதிக் கொண்டு, அது போன்று வேறு யாரும்
அறிவித்துள்ளனரா? எனத் தேடிப்பார்க்க வேண்டும் என்பதே அதன்
அர்த்தமாகும். மற்ற அறிஞர்கள் இவர் குறித்து எந்த விமர்சனத்தையும்
கூறவில்லை.
|