Featured Posts
Home » Tag Archives: வறட்சி

Tag Archives: வறட்சி

மழை தடைபட்டு, வறட்சி நிலவ என்ன காரணம்? [உங்கள் சிந்தனைக்கு… – 055]

மழை தடைபட்டு, வறட்சி நிலவ என்ன காரணம்? “அவர்கள் (இஸ்லாம் எனும்) இவ்வழியில் உறுதியாக இருந்திருந்தால், தாராளமாகத் தண்ணீரை நாம் அவர்களுக்குப் புகட்டியிருப்போம்!” (72:16) என்ற இந்த அல்குர்ஆன் வசனத்திற்கு அல்லாமா அப்துல் அஸீஸ் பின் பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் பின்வருமாறு விளக்கம் அளித்துள்ளார்கள்:- “இது, அல்லாஹ்விடமிருந்து வந்திருக்கும் வாக்குறுதியொன்றாகும். அதாவது: மார்க்கத்தைப் பின்பற்றி, ஏவல்களுக்கு வழிப்பட்டு, விலக்கல்களைத் தவிர்ந்து நடத்தல் என்று அல்லாஹ் வரைந்துள்ள (இஸ்லாம் எனும்) இவ்வழியில் …

Read More »

வறட்சியிலிருந்து பெறும் படிப்பினைகள்

அல்-ஜுபைல் தஃவா நிலையம் வழங்கும் ஜும்ஆ குத்பா பேரூரை ஜுபைல் 2 – SKS கேம்ப் தஃவா நிகழ்ச்சி இடம்: SKS கேம்ப் பள்ளி வளாகம் நாள்: 10-03-2017 தலைப்பு: வறட்சியிலிருந்து பெறும் படிப்பினைகள் மவ்லவி. ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி அழைப்பாளர், அல்-ஜுபைல் மாநகர் வீடியோ: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit நன்றி: SKS தஃவா குழுமம்

Read More »

முஆவியா (ரலி) அவர்கள் யஸீத் பின் அஸ்வத் (ரலி) அவர்களைக் கொண்டு மழைத்தேடிப் பிரார்த்தித்த சம்பவம்

ஷாம் (ஸிரியா, லெபனான்) பகுதியில் மழையின்றி வறட்சி ஏற்பட்டபோது முஆவியா (ரலி) அவர்கள் யஸீத் பின் அஸ்வத் (ரலி) அவர்களைக் கொண்டு பிராத்தித்து மழைத் தேடினார்கள். துஆவின் போது: இறைவா! எங்களின் மேன்மைக்குரியவரைக் கொண்டு வஸீலா தேடுகிறோம் என்று பிரார்த்தித்து விட்டு, யஸீதே! உங்கள் கையை உயர்த்தி எங்களுக்காகப் பிரார்த்தியும் என்றார்கள். உடனே யஸீதும், அவருடன் இருந்தவர்களும் தத்தம் கரங்களை ஏந்தி மன்றாடினர். பிறகு மழை பெய்தது. இதை அடிப்படையாக …

Read More »

குறிப்பு (2)

அல்லாஹ்விடம் அவன் படைப்பினங்களைக் கொண்டு ஆணையிட்டுப் பிரார்த்தித்தல் தடுக்கப்பட்டுள்ளது போல படைப்பினங்களிடம் சென்று அவற்றைக் காரணம் காட்டியும், அவற்றைப் பொருட்டாகக் கொண்டும் கேட்பது விலக்கப் பட்டிருக்கிறது. ஆனால் சிலர் இதற்கு அனுமதி வழங்கியிருக்கிறார்கள். சில ஸலபுஸ்ஸாலிஹீன்களுடைய குறிப்புகளையும் தம் தஃவாவுக்குச் சான்றாகக் கூறினார்கள். எனவே மக்களில் பலர் இம்மாதிரி துஆச் செய்வதைக் காணலாம். ஆனால் இது விஷயத்தில் நபிகளைப்பற்றி அறிவிக்கப்பட்ட ஹதீஸ்கள் அனைத்தும் பலம் குன்றியவையும், புனையப் பட்டவையுமாகும்.

Read More »