Featured Posts
Home » பொதுவானவை » உங்கள் சிந்தனைக்கு » நோன்பில் பொதிந்திருக்கும் மூன்று வகைப் பொறுமைகள்! [உங்கள் சிந்தனைக்கு… – 036]

நோன்பில் பொதிந்திருக்கும் மூன்று வகைப் பொறுமைகள்! [உங்கள் சிந்தனைக்கு… – 036]

நோன்பில் பொதிந்திருக்கும் மூன்று வகைப் பொறுமைகள்!

அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

“பொறுமையின் மூன்று வகைகளையும் நோன்பு உள்ளடக்கியிருக்கிறது என அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

1- அல்லாஹ்வின் வழிபாட்டில் ஈடுபடும்போது ஏற்படுகின்ற சிரமங்களுக்காக பொறுமை காத்தல்: (இது, நோன்பில் இருக்கிறது!)

2 – (பாவங்கள் மூலம்) அல்லாஹ்வுக்கு மாறு செய்து நடப்பதை விட்டு விடுகின்ற போது ஏற்படும் அசெளகரியங்களுக்காகப் பொறுமையாக இருத்தல். (இதுவும் நோன்பில் இருக்கிறது!)

3 – அல்லாஹ் நிர்ணயித்துள்ளபடி ‘கழா கத்ர்’ பிரகாரம் நடக்கும் சோதனைகளுக்காகப் பொறுமையாக இருத்தல். (நோன்பில் இதுவும் இருக்கின்றது!)

அல்லாஹ்வின் வழிபாட்டில் ஈடுபடும்போது ஏற்படுகின்ற சிரமங்களுக்காகப் பொறுமை காத்தல்: நோன்பு என்ற வழிபாட்டின் மீது நோன்பாளி தன்னைச் சிரமப்படுத்தி, கஷ்டப்படுத்திக்கொள்கிறார். சில வேளைகளில் தனக்கு அது வெறுப்பாக இருந்தாலும் இப்படி அவர் செய்கிறார். அப்படி அவர் வெறுப்பது அதிலுள்ள சிரமத்தைத்தான்!.

(பாவங்கள் மூலம்) அல்லாஹ்வுக்கு மாறு செய்து நடப்பதை விட்டு விடுகின்ற போது ஏற்படும் அசெளகரியங்களுக்காகப் பொறுமையாக இருத்தல்:

பொறுமையின் இரண்டாவது வகையான இதுவும் நோன்பாளியின் விடயத்தில் நடக்கிறது! எவ்வாறெனில், அல்லாஹ்வுக்கு மாறு செய்து நடப்பதை விட்டும் நோன்பாளி தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்கிறார்; எனவேதான் அவர் வீண் விடயங்கள், மனைவியுடனான (பகல் நேர) உடலுறவு, அசிங்கமான பேச்சு, பொய் போன்ற அல்லாஹ் தடுத்திருக்கும் ஹராமான விடயங்களை விட்டும் தவிர்ந்து கொள்கிறார்.

அல்லாஹ் நிர்ணயித்துள்ளபடி ‘கழா கத்ர்’ பிரகாரம் நடக்கும் சோதனைகளுக்காகப் பொறுமையாக இருத்தல்:

இது எப்படியெனில், நோன்பு நாட்களில் நோன்பாளிக்கு ஏற்படும் சோதனைகளுக்காக அவர் பொறுமை காப்பதாகும்! குறிப்பாக உஷ்ணமான நாட்களிலும், நேரங்கள் நீண்டுள்ள நாட்களிலும் சோம்பல், சோர்வு மற்றும் களைப்புகளால் அவர் வேதனையடைந்து தொந்தரவுப்படுவார். என்றாலும், அவர் பொறுமையோடு இருப்பார். காரணம், இது அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுக் கொள்ளும் முகமாக நடந்ததாகும்!.

இவ்வாறு, மூன்று வகையான பொறுமையும் நோன்பாளியிடம் உள்ளடங்கியிருப்பதால்தான் அவருக்கான கூலியும் கணக்கின்றி வரையரையில்லாமல் இருக்கின்றது. அல்லாஹ் கூறுகிறான்: ‘பொறுமையாளர்களுக்கு அவர்களது கூலி கணக்கின்றி வழங்கப்படும்!’ (அல்குர்ஆன், 39:10)

{ நூல்: ‘ஷர்ஹு ரியாழிஸ் ஸாலிஹீன்’, 05/267 }

 

           قال العلّامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:-

             [قال أهل العلم: ولأن الصوم إشتمل على أنواع الصبر الثلاثة:-

الأول: ففيه صبر على طاعة الله.

الثاني: وصبر عن معصية الله.

الثالث: وصبر على أقدار الله.

  • أما الصبر على طاعة الله: فلأن الإنسان يحمل نفسه على الصيام مع كراهته له أحيانا، يكرهه لمشقته…
  • الصبر عن معصية الله: وهذا حاصل للصائم؛ فإنه يصبّر نفسه عن معصية الله عزّ وجلّ، فيتجنّب الّلغو والرّفث والزّور وغير ذلك من محارم الله.
  • الصبر على أقدار الله: وذلك أن الإنسان يصيبه في أيام الصوم، ولاسيما في الأيام الحارّة والطّويلة من الكسل والملل والعطش ما يتألّم ويتأذّى به، ولكنّه صابر؛ لأن ذلك في مرضاة الله.

        فلما اشتمل على أنواع الصبر الثلاثة كان أجره بغير حساب؛ قال الله تعالى: « إنّما يوفّى الصابرون أجرهم بغير حساب » (سورة الزّمر : ١٠)

{ شرح رياض الصالحين ، ٥/٢٦٧ }

 

தமிழில்…

அஷ்ஷெய்க். N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *