Featured Posts
Home » நூல்கள் » உண்மை உதயம் மாத இதழ் » ஹஜ்-உம்றா திக்ருகள்

ஹஜ்-உம்றா திக்ருகள்

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)

உம்றாவுக்குச் செல்பவர் குறித்த எல்லையில் இஹ்றாம் அணிந்து..

لَبَّيْكَ عُمْرَةً

என்று கூறிக்கொள்ள வேண்டும். ஏதேனும் நோய் ஆபத்து நேரலாம் எனப் பயந்தால்

اللَّهُمَّ مَحِلِّي حَيْثُ حَبَسْتَنِي

என்று கூறிக்கொள்ள வேண்டும்.

‘யா அல்லாஹ்! நீ எந்த இடத்தில் என்னைத் தடுக்கின்றாயோ அதிலே நான் இஹ்றாம் களையும் இடமாகும் என்பது இதன் அர்த்தமாகும். இப்படிக் கூறியவர் ஏதேனும் காரணத்தால் உம்றாவை நிறைவேற்ற முடியாது போனால் அவர் தெண்டப் பரிகாரமாக பித்யா செலுத்தத் தேவையில்லை. அதனைத் தொடர்ந்து கஃபதுல்லாஹ்வைக் காணும் வரை ஆண்கள் சத்தமாகப் பின்வரும் தல்பியாவைக் கூறிக்கொண்டிருக்க வேண்டும்.

لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لَا شَرِيكَ لَكَ

இஹ்ராமுடன் தவிர்க்க வேண்டியவை:

இஹ்ராம் அணிந்தவர் பின்வருவனவற்றை தவிர்க்க வேண்டும்.

(1) உடலிலோ, உடையிலோ மனம் பூசுவது.

(2) முடிகளைக் களைவது. கத்தரிப்பது.

(3) நகங்களை வெட்டுவது.

(4) ஆண்கள் தைத்த ஆடைகள் அணிவது.

(5) ஆண்கள் தலையை (துணியாலோ, தொப்பியாலோ, தலைப்பாகையினாலோ) மறைப்பது.

(6) பெண்கள் முகத்தை மூடுவதும், கையுரைகளை அணிவதும்.

(7) தரையில் வேட்டையாடுவது.

(8) திருமணம் முடிப்பது, திருமணம் பேசுவது.

(9) உடலுறவில் ஈடுபடுவதும், அதைத் தூண்டும் செயல்களில் ஈடுபடுவதும்.

கஃபாவுக்குச் சென்றதும் எல்லாப் பள்ளிகளுக்கும் நுழைவது போல் வலது காலை முன்வைத்து..

بسم الله اللَّهُمَّ صلِّ على محمد اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ

என்று கூறி நுழைய வேண்டும். பின்னர் கஃபாவின் கறுப்புக் கல்லை முத்தமிட்டு அல்லது அதன்பால் சைக்கினை செய்து..

بسم الله والله أكبر

எனக் கூறித் தவாஃப் ஆரம்பிக்க வேண்டும். றுக்னுல் யமானிக்கும், கறுப்புக் கல் அமைந்துள்ள மூலைக்கும் இடைப்பட்ட இடத்தில்..

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

என்று ஓதிக்கொள்ள வேண்டும். தவாப் முடிந்து மகாமு இப்றாஹீமுக்குப் பின்னால் 2 றகஅத்கள் தொழுது முடிந்த பின்னர் ஸஃபா-மர்வாவுக்கிடையில் ஸஈ செய்ய வேண்டும்.

ஸஈயை ஆரம்பிக்கும் போது ஸஃபாவிற்கு வந்து..

إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوِ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا وَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ اللَّهَ شَاكِرٌ عَلِيمٌ

என்ற வசனத்தை ஓத வேண்டும். பின்னர் பின்வருமாறு 3 முறை ஓத வேண்டும்.

‘الله أكبر، الله أكبر، الله أكبر
لا إله إلا الله وحده لا شريك له، له الملك و له الحمد يحي و يميت و هو على كل شيء قدير، لا إله إلا الله وحده لا شريك له، أنجز وعده، و نصر عبده، و هزم الأحزاب وحده

ஹஜ் செய்வோர்..

اللَّهُمَّ لَبَّيْكَ حَجًّا

என்றோ,

لَبَّيْكَ حَجًّا

என்று சேர்த்தும் கூறலாம். மினா, அரஃபா, முஸ்தலிஃபா, மீண்டும் மினா என அனைத்து இடங்களிலும் அதிக திக்ர் செய்ய வேண்டும். 10 நாள் கல்லெறியும் வரை தல்பியாவை அதிகமதிகம் கூற வேண்டும். கலிமதுத் தவ்ஹீதை அதிகம் கூற வேண்டும்.

One comment

  1. உம்றா செல்பவர் உறவினர்களை அணுகும் முறை எவ்வாறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *