Featured Posts
Home » அபூ உமர் (page 18)

அபூ உமர்

5] கிருஸ்துவமும் யூதர்களும்

நிலமெல்லாம் ரத்தம் – பா.ரா 5 கிறிஸ்தவ மதத்தின் எழுச்சி, யூதகுலத்துக்கு விடப்பட்ட முதல் மற்றும் மிகப்பெரிய சவால். இதில் சந்தேகமே இல்லை. கி.பி. 300-ம் ஆண்டு சிரியா, ஆசியா மைனர், கிரீஸ், சைப்ரஸ் மற்றும் ஆப்பிரிக்காவின் வடக்குப் பகுதியில் வசித்துவந்த யூதர்களில் மிகப்பெரும்பான்மையானோர் கிறிஸ்தவர்களாக மாறிவிட்டிருந்தார்கள். கிறிஸ்தவத்தைப் பரப்பும் பணியில் ஈடுபட்ட ஜேம்ஸ், பால் போன்ற இயேசுவின் தோழர்கள் அக்காரணத்தாலேயே சிறைப்பிடிக்கப்பட்டதும் படுகொலை செய்யப்பட்டதும் (ஜேம்ஸை யூதர்கள் கல்லால் …

Read More »

4] கி.பி.

நிலமெல்லாம் ரத்தம் 4 – பா.ரா யூதர்களின் சரித்திரத்தில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு மிக முக்கியமானதொரு நிகழ்ச்சி. மோஸஸுக்குப் பிறகு இன்னுமொரு தேவதூதனின் வரவு அவர்களுக்கு நியாயமாக மகிழ்ச்சியளிக்கக்கூடியதாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஏனெனில், யூத குலத்தின் அடையாளமே ‘தேவதூதனுக்காகக் காத்திருக்கும் குலம்’ என்பதுதான். ஆனால் இயேசுவின் போதனைகள், சனாதன யூதர்களின் ஆயிரமாண்டுகால நம்பிக்கைகளின் வேர்களை அசைத்துப் பார்ப்பதாக இருந்தது. ஆகவே அவர்களால் இயேசுவை ஏற்க இயலவில்லை. பெத்லஹெமில் (Bethlehem) இயேசு …

Read More »

3] யூதர்கள்

நிலமெல்லாம் ரத்தம் 3 – பா.ரா அது, 44வது வருடம். அதாவது, கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய நாற்பத்து நான்காவது வருடம். ஜெருசலேம் நகரிலிருந்த நீதி மன்றத்துக்கு ஒரு வழக்கு வந்திருந்தது. நீதிமன்றம் என்றால் அரசின் நீதிமன்றம் அல்ல. அது யூத மதகுருக்களின் நீதிமன்றம். மன்னர்களைக் காட்டிலும் அன்றைக்கு அவர்களுக்குத்தான் அதிகாரம் இருந்தது. மத குருக்கள் ஒரு தீர்ப்புச் சொல்லிவிட்டார்கள் என்றால் மன்னரேகூட அதனை மாற்றுவது சிரமம். காரணம், மக்கள் மன்னர்களை …

Read More »

2] ஆப்ரஹாம் முதல்

நிலமெல்லாம் ரத்தம் 2 – பா.ரா அந்தப் பெரியவருக்கு வயது எண்பத்தைந்து. நிறைவாழ்வு வாழ்ந்தவர் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் ஒரு குறை இருந்தது. அவருக்குக் குழந்தை இல்லை. அவரது மனைவிக்கும் இது சம்பந்தமாக வருத்தம்தான். ஆனால் வருந்தி என்ன பயன்? அப்படித்தான் விதித்திருக்கிறது போலிருக்கிறது என்று பெரியவர் நினைத்தார். ஆனால் அவர் மனைவிக்கு மட்டும் ஒரு யோசனை. ஒருவேளை பிரச்னை தன்னிடம்தான் இருக்குமோ? தன்பொருட்டுத் தன் கணவர் எதற்காக போகிற …

Read More »

1] அரஃபாத்தின் மறைவும் பாலஸ்தீனமும்

நிலமெல்லாம் ரத்தம் – பா.ரா 1 ஓர் அரசியல் தலைவரின் இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக் கணக்கில் மக்கள் கலந்துகொள்வது வியப்பல்ல. உலக நாடுகளெல்லாம் இரங்கல் தெரிவிப்பது புதிதல்ல. ஆனால் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட அத்தனை பேரும் இனி தாம் அநாதைகளாகிவிட்டதாகக் கருதி, விம்மியழுதது வியப்பு. இரங்கல் தெரிவித்த நாடுகளெல்லாம் உள்ளார்ந்த துக்கத்தை வடிக்கச் சொற்கள் போதாமல் என்னென்னவோ சொல்லிப் புலம்பியது வியப்பு. படித்தவர்கள், பாமரர்கள், அறிவுஜீவிகள், உழைப்பாளிகள், சிந்தனையாளர்கள், சோம்பேறிகள், …

Read More »

நிலமெல்லாம் ரத்தம் தொடர் – எரியும் பிரச்னையின் புரியம் வடிவம் – Index

இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை குறித்து யூத, கிருஸ்துவ, முஸ்லிமல்லாத ஒருவருடைய ஆய்வு. தனது ஆய்வுக்கு இஸ்ரேல்-பாலஸ்தீன் பிரச்னையின் வேர்களையும் விட்டுவைக்கவில்லை, விழுதுகளிலும் கிளைகளிலும் பரவியிருக்கும் விஷத்தின் வீரியத்தை அறிந்துக்கொள்வதற்காக. எழுத்துக்கள் பலவகை உண்டு. ஏன்தான் படிக்கத் தொடங்கினோமோ என்று நினைக்கக்கூடியது. மற்றொன்று தொடங்கியதிலிருந்து முடிக்கும் வரை அவ்வெழுத்துகளோடு ஐக்கியப்படுத்திவிடுவது. இதில் இரண்டாம் வகைதான் பா.ராகவனின் எழுத்துக்கள். குமுதம் ரிப்போர்ட்டரில் தொடராக வருவதை சேமிப்பதில் எனக்கு முன்னோடி, நண்பர் கிருஸ்டோபர் ஜான் அவர்கள். …

Read More »

அன்புக்குறியவர்களே! நீங்கள் சிந்தித்தது உண்டா?

கலாச்சார நிலையம் ஏற்பாடு செய்திருந்த மதினா பயணத்தில், ஒவ்வொருவரும் அடுத்தவரிடம் பகிர்ந்துக்கொள்வதற்காக சில விஷயங்களை எடுத்து வந்திருந்தார்கள். நான் இஸ்லாம் சம்பந்தமான சில கவிதைகளை எடுத்துவந்திருந்தேன். சிலர் திண்பண்டங்கள் எடுத்துவந்திருந்தனர். என் நண்பரின் மாமனார் அவரும் படிப்பதற்கு சிலவற்றை எடுத்துவந்திருந்தார். நான் கவிதை தொகுப்புகளை அவரிடம் நீட்டியபோது பதிலுக்கு ஒரு பிரசுரத்தை என்னிடம் நீட்டினார். அதில் புகைத்தலுக்கு எதிரான எச்சரிக்கைகள் இடம்பெற்றிருந்தது. வெளியீடு: குளச்சல் ஏ.என். மீரான், ஜித்தா என்றிருந்தது. …

Read More »

விபத்து (விழிப்புணர்வு நாடகம்)

ச்சே! போன வாரந்தான் மெக்கானிக்கிட்டே போனேன்…. அதுக்குள்ள என்ன ஆச்சு? இந்த மிஸிரி மெக்கானிக்கிட்ட போனாலே இந்த மாதிரிதான். இதுல வேற தன்னை தொக்தர்னு (டாக்டர்னு) அலட்டிக்கிறான். வயது நாற்பதிலிருந்து நாற்பத்தைந்து இருக்கும். மருண்கலர் ஃபைபர் ஃபரேம் போட்ட கண்ணாடி அணிந்திருந்தார். கண் டாக்டரிடம் டெஸ்ட் செய்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது போலும். சவுதி அரேபியாவில் மக்கள் அதிகமாக வசிக்கும் ஜித்தா நகரின் வீதியை உற்று நோக்கியவாறு டொயாட்டோ …

Read More »

திருமண அழைப்பிதழ்

கம்ப்யூட்டரில் ஒரு ஃபைலை தேடிக்கொண்டிருக்கும் போது அகப்பட்டது என் திருமண அழைப்பிதழ். மைக்ரோ சாப்ட் வேர்டில் நானே தொகுத்து நானே டைப் செய்தது (அல்ஹம்துலில்லாஹ்). எளிமையாகவும் வரதட்சணைக்கு எதிரான விழிப்புணர்வையும் ஊட்டியதால் பத்திரிகையின் மாடலை பலபேர் காப்பி செய்து வாங்கி போயிருக்கிறார்கள். உங்களுக்கும் உதவியாக இருக்கலாம் என்பதால் யுனிகோடில் மாற்றி இங்கு பதிவு செய்கிறேன். நீங்களும் வரதட்சணையும் வாங்காமல் திருமணம் செய்ய முயற்சி செய்யுங்கள். சீர் வாங்குவதைக்கூட தவிர்க்க பாருங்கள். …

Read More »

கற்றுக்கொள்ள ஆறு நிபந்தனைகள்

17.09.2004 அன்று ஜித்தாவில் நடைபெற்ற “”மொழியறிவும் சமூக முன்னேற்றமும்”” என்ற கருத்தருங்கில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. கலாச்சார மையத்துடன் இணைந்து இப்படிபட்ட நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்ற எனது நீண்ட நாள் ஆசையை சிலர் செயல்வடிவம் கொடுத்திருந்தார்கள். நான்கு தலைப்புகளில் புதிய கோணத்தில் செய்திகள் பரிமாறப்பட்டன: 1. இஸ்லாமும் மொழியறிவும் 2. ஆங்கில மொழியின் எளிய இலக்கணம் 3. உங்கள் திறமைகளை அறிந்துக் கொண்டீர்களா? 4. அரபி மொழி …

Read More »