Featured Posts
Home » Tag Archives: அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் (page 3)

Tag Archives: அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்

யூதர்கள் மீது விதிக்கப்பட்ட வறுமை [அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 14]

“(பாதுகாப்புக்கான) அல்லாஹ்வினது உத்தரவாதமும் மனிதர்களினது உத்தரவாதமும் இருந்தாலே தவிர, அவர்கள் எங்கு காணப்பட்ட போதும் அவர்கள் மீது இழிவு விதிக்கப்பட்டு விட்டது. மேலும், அவர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்கும் ஆளானார்கள். இன்னும் அவர்கள் மீது வறுமை விதிக்கப்பட்டு விட்டது. அல்லாஹ்வின் வசனங்களை அவர்கள் நிராகாpத்தமையும், அநியாயமாக நபிமார்களைக் கொலை செய்து வந்தமையுமே இதற்கான காரணங்களாகும். இது அவர்கள் மாறு செய்து வந்ததாலும், வரம்பு மீறிக் கொண்டே யிருந்ததினாலுமாகும்.” (3:112) யூதர்கள் மீது …

Read More »

மகாமு இப்றாஹீம் [அல்-குர்ஆன் விளக்கக் குறிப்புகள்-13]

மக்காவில் இருக்கும் அத்தாட்சிகளில் ஒன்றாக மகாமு இப்றாஹீமை அல்லாஹ் குறிப்பிடுகின்றான். மகாமு இப்றாஹீமில் இருந்து நீங்கள் தொழும் இடத்தை எடுத்துக் கொள்ளுமாறு சூரா பகராவில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான். “(கஃபா எனும்) இவ்வீட்டை மக்கள் ஒன்றுகூடுமிடமாகவும், அபயமளிக்கும் இடமாகவும் நாம் ஆக்கியதை (எண்ணிப் பாருங்கள்.) நீங்கள் மகாமு இப்றாஹீமைத் தொழும் இடமாக எடுத்துக் கொள்ளுங்கள். எனது வீட்டை தவாப் செய்வோருக்காகவும், தங்கியிருப் போருக்காகவும் ருகூஃ, சுஜூது செய்பவர்களுக்காகவும் நீங்கள் இருவரும் தூய்மைப்படுத்துங்கள் …

Read More »

அனைத்தும் அவனுக்கு அடிபணிந்தவையே! [அல் குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்]

“அல்லாஹ்வின் மார்க்கம் அல்லாததையா இவர்கள் விரும்புகின்றார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும் விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே அடி பணிகின்றன. மேலும் அவனிடமே அவர்கள் மீட்டப்படுவார்கள்.” (3:83) இஸ்லாம் என்பது அல்லாஹ்வின் கட்டளைக்கு ஏற்ப தனது வாழ்வை அமைத்துக் கொள்வதாகும். இஸ்லாத்தின் வழிகாட்டலை ஒரு மனிதன் மறுக்கலாம். ஆனால், அவன் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டை மீறி விட முடியாது. விரும்பியோ விரும்பாமலோ அவன் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டுக்குள் கட்டுப்பட்டே ஆக வேண்டும். இந்தக் கட்டுப்பாட்டை …

Read More »

நபிமார்களிடம் அல்லாஹ் எடுத்த உறுதிமொழி [அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்]

‘நான் உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் அருளிய பின் உங்களிடமிருப்பதை உண்மைப்படுத்தும் ஒரு தூதர் உங்களிடம் வந்தால், “அவரை நீங்கள் நம்பிக்கை கொண்டு அவருக்கு நீங்கள் உதவி செய்வீர்களா?” என அல்லாஹ் நபி மார்களிடம் உறுதிமொழி வாங்கி, நீங்கள் இதை ஏற்றுக் கொண்டு எனது பலமான உடன்படிக்கையை எடுத்துக் கொண்டீர்களா? எனக் கேட்டபோது, “நாம் ஏற்றுக் கொண்டோம்” என அவர்கள் கூறினர். அ(தற்க)வன், “நீங்களே (இதற்கு) சாட்சியாக இருங்கள். உங்களுடன் நானும் …

Read More »

இயேசு கடவுள் இல்லை [அல் குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்]

“அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக ஈஸாவின் உதாரணம், ஆதமின் உதாரணத்தைப் போன்றதாகும். அவன் அவரை மண்ணிலிருந்து படைத்து பின்னர் அவருக்கு ‘குன்'(ஆகுக) என்றான். உடனே அவர் (மனிதராக) ஆகிவிட்டார்.” (3:59) இயேசு தந்தை இன்றிப் பிறந்தவர். அவருக்குத் தந்தை இல்லை என்பதால் கிறிஸ்தவ உலகு அவரைக் கடவுளின் குமாரன் என்றும் கடவுள் தன்மை வாய்ந்தவர் என்றும் நம்புகின்றது. இயேசு போதித்த போதனைக்கு இது எதிரானதாகும். இயேசுவின் உதாரணம் ஆதம் நபியின் உதாரணத்தை ஒத்ததாகும் …

Read More »

[அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-03] அல்லாஹ் மட்டும் அறிவான்

‘அதன் யதார்த்தமான கருத்தை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறியமாட்டார்கள். அறிவில் தேர்ச்சி பெற்றவர்களோ ‘நாங்கள் அவற்றை நம்பிக்கை கொண்டோம். அனைத்தும் எங்கள் இரட்சகனிடமிருந்துள்ளவையே’ என்று கூறுவார்கள். சிந்தனையுடையோரைத் தவிர மற்றவர்கள் நல்லுபதேசம் பெறமாட்டார்கள். ‘ (30:7) இந்த வசனத்தை மற்றும் சிலர் இப்படி மொழியாக்கம் செய்கின்றனர். அல்லாஹ்வையும் கல்வியில் தேர்ந்தவர்களையும் தவிர, அதன் விளக்கத்தை மற்றவர்கள் அறியமாட்டார்கள். அவர்கள் இதை நம்பினோம். அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவையே எனக் கூறுவார்கள் …

Read More »

[அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-02] தஃவீல் என்றால் என்ன?

02. தஃவீல் என்றால் என்ன?: இந்த வசனத்தில் தஃவீல் என்ற பதம் இரண்டு விடுத்தம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அல்குர்ஆனின் இந்தப் பதம்; விளக்கம், தப்ஸீர் என்ற அர்த்தத்திலும் ‘முடிவு’ என்ற அர்த்தத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம். உதாரணமாக, ‘நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள். இன்னும் இத்தூதருக்கும் உங்களில் அதிகாரமுடையோருக்கும் கட்டுப்படுங்கள். நீங்கள் ஏதேனும் ஒரு விடயத்தில் முரண்பட்டுக் கொண்டால், நீங்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொள்வோராக இருந்தால், அதனை அல்லாஹ்விடமும் இத்தூதரிடமும் …

Read More »

[அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-01] முஹ்கம் முதஷாபிஹாத்

‘ஆல்’ என்றால் குடும்பம் என்று அர்த்தமாகும். ஆலு இம்ரான் என்றால் இம்ரானின் குடும்பம் என்று அர்த்தமாகும். மர்யம்(ர) அவர்களது தந்தையே ‘இம்ரான்’ என்பவராவார். ஈஸா(ர) அவர்களின் பாட்டனாரான இவரையும் இவர் குடும்பத்தையும் இந்த அத்தியாயத்தில் அல்லாஹ் புகழ்ந்து பேசுகின்றான். அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பமாக இத குறிப்பிடப் பட்டுள்ளது. ‘நிச்சயமாக அல்லாஹ் ஆதமையும், நூஹையும், இப்றாஹீமின் சந்ததியினரையும், இம்ரானின் சந்ததியினரையும் அகிலத்தார் அனைவரையும் விட தேர்ந்தெடுத் துள்ளான்.’ (3:33) இந்த வகையில் …

Read More »