Featured Posts
Home » அபூ உமர் (page 5)

அபூ உமர்

94] பாலஸ்தீன் அத்தாரிட்டியாக அகமது குரே

நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 94 இரு நாடுகள் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்னையில் மூன்றாவதாக ஒரு நாடு தலையிட்டு, அமைதிக்கான முயற்சி மேற்கொள்வதில், சில எதிர்பாராத சங்கடங்கள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், அதைப் பேசித்தீர்த்துக்கொள்ள முடியும். ஒரே தேசத்துக்குள் இரு தரப்பினர் இடையே பிரச்னை என்று வரும்போது, மூன்றாமவர் தலையிடுவது, சிக்கலை அதிகமாக்கியே தீரும் என்பதற்குச் சரித்திரம் நெடுக ஏராளமான உதாரணங்கள் உள்ளன. நமக்கு நன்கு தெரிந்த …

Read More »

குஜராத்: திட்டமிட்ட வெறியாட்டம் – 11

குஜராத்தில் ஒரு பகுதியான ரந்திக்பூரில் பல்கீஸ் யாகூப் படேல் என்றொரு பெண். மிகவும் மோசமாக பாதிக்கபட்டவர்களில் ஒருவர். இவருக்கு நடந்ததை கேட்டால் கண்களிலிருந்து ரத்தகண்ணீர் வடிக்காதவர் எவரும் இருக்கமாட்டார். ஐந்து மாத கர்பிணியான இவருக்கு 20 வயது. மரணத்தின் வாயிலுக்குள் தலையை விட்டு மீண்டு வந்தவர். முஸ்லிம்களை கொலை செய்ய வந்தவர்களுக்கு, ஆணென்ன, பெண்ணென்ன, குழந்தை என்ன, கர்ப்பிணி என்றால் இவர்களுக்கு என்ன? முஸ்லிமாக பிறந்தால் இந்த நாட்டில் வாழ …

Read More »

93] ஜார்ஜ் புஷ் வரைந்த ‘ரோட் மேப்’

நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 93 ஜார்ஜ் புஷ்ஷின் ‘ரோட் மேப்’ வருணித்த முதல் கட்ட அமைதி முயற்சிகள் பற்றிப் பார்த்தோம். இதன் இரண்டாம் கட்டத் திட்டங்கள், அதிகாரபூர்வமாக பாலஸ்தீன் என்கிற தனி நாட்டை உருவாக்குவதற்கான, முதல்கட்ட நடவடிக்கைகள் பற்றிச் சொல்லுகின்றன. இது விஷயத்தில் பாலஸ்தீன் அத்தாரிடிக்கு இருக்கும் பொறுப்புகள் இவை: வலுவான, கட்டுக்கோப்பு குலையாத பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். அசம்பாவிதங்கள் எந்த வகையிலும் அனுமதிக்கப்படக்கூடாது. இஸ்ரேல் அரசுடன் …

Read More »

92] புஷ்ஷின் சாய்ஸ், மம்மூத் அப்பாஸ்

நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 92 கேம்ப் டேவிட் பேச்சுவார்த்தை முயற்சி அடைந்த தோல்வி, பில் க்ளிண்டனுக்குத் தனிப்பட்ட முறையில் ஏராளமான பாதிப்புகளை உண்டாக்கியது. அவரது அரசியல் எதிரியாக, எப்போதும் எதுடா சாக்கு என்று கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு, விழிப்புடன் பார்த்துக்கொண்டிருந்த ஜார்ஜ் புஷ், இந்தப் பேச்சுவார்த்தைத் தோல்வியை ஒரு மிகப்பெரிய சரிவாக முன்வைத்து, அமெரிக்காவெங்கும் க்ளிண்டனுக்கு எதிரான அதிருப்தி அலையை உருவாக்குவதில், மிகவும் தீவிரமாகப் பணியாற்றத் தொடங்கினார். …

Read More »

91] கேம்ப் டேவிட் அமைதிப் பேச்சுவார்த்தை

நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 91 மம்மூத் அப்பாஸை ஏற்றாலும் ஏற்போம், அராஃபத்தை ஏற்கமாட்டோம் என்று இஸ்ரேல் ஒற்றைக்காலில் நின்றதற்குக் காரணம் என்னவென்று பார்த்துவிடுவது நல்லது. மம்மூத் அப்பாஸ் என்பவர், மக்கள் தலைவர் அல்லர். அராஃபத் உயிருடன் இருந்த காலத்தில், ஒரு தேர்தலில் அவர் தனித்து நின்றால் ஒரு ஓட்டு விழுமா என்பது, சந்தேகம்தான். அவர் அராஃபத்தின் சகா. அல் ஃபத்தாவின் ஆரம்பகாலம் முதல், உடன் இருந்து வருபவர். …

Read More »

குஜராத்: திட்டமிட்ட வெறியாட்டம் – 10

கலவரங்கள் நடந்த அனைத்து பகுதிகளிலும் முஸ்லிம் பெண்களே குறிவைக்கப்பட்டார்கள் என்பதை நாம் மறந்துவிட கூடாது. இந்த கோரதான்டவம் ஆடுவதற்காக 15, 20 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள கிராமங்களிலிருந்து மதவெறியர்கள் வரவழைக்கப்பட்டார்கள். இந்த கலவரத்தின் போதுதான் முதல் முதலாக இப்படி கொலையாளிகளை ஒரேயடியாக வெளிக்கிராமங்களிலிருந்து கொண்டு வந்திருக்கிறார்கள் என்கிறார் பான்சமஹால் என்ற மாவட்ட காவல்துறை துணைக்கண்காணிப்பாளர். இப்படி திரட்டப்பட்ட கொலையாளிகள் ஒருவர் அல்ல ஒரு நூறு பேர் அல்ல ஓராயிரம் …

Read More »

குஜராத்: திட்டமிட்ட வெறியாட்டம் – 9

பாத்திமா பீவி முஹம்மத் யாகூப் ஷேக் என்றொரு பெண். இவர் தன் குடும்பத்தை சேர்ந்த 19 பேரை ரத்த வெறிபிடித்த பாசிஸ பேய்களுக்கு இறையாக்கிவிட்டு பரிதவித்து நின்ற பெண்களில் ஒருவர். நம் குடும்பத்தில் ஒருவர் இறந்து போனாலே நம்மால் தாங்கி கொள்ளமுடியவில்லை. பாவம் இந்த பாத்திமா பீவி 19 பேரை பறிகொடுத்துவிட்டு படும் வேதனை. இவர் கூறுகிறார், இந்த பாசிஸ வெறியர்களின் எல்லா காட்டுமிராண்டி தனங்களையும் மன்னித்துவிட முடியும். ஆனால் …

Read More »

குஜராத்: திட்டமிட்ட வெறியாட்டம் – 8

பம்பாய் கலவரத்தின் போது ஹிட்லரின் பாணியை கையாண்டது போல இங்கும் கையாளப்பட்டுள்ளது. ஹிட்லரின் நாஜி படை யூதர்களை கொலை செய்தது போல, இவர்கள் முஸ்லிம்களை கொலை செய்து குன்றுகளாக குவித்தனர் என்று ஜரோப்பிய யூனியன், தான் தயாரித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அந்த அளவுக்கு இவர்கள் தன் கைவரிசையை காட்டியிருக்கிறார்கள். இந்த அறிக்கையில் பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் உட்பட 15 நாடுகள் கையெழுத்திட்டுள்ளது. இந்த கலவரத்தில் அதிகமான பாதிப்புக்கு உள்ளானது …

Read More »

90] அராஃபத்தை உயிருடன் விட்டுவைக்க மாட்டார்கள்

நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 90 மனைவியும் குழந்தையும் பிரான்ஸில் இருந்தார்கள். எப்போதும் உடன் இருக்கும் மூத்த அல் ஃபத்தா உறுப்பினர்கள் நான்கைந்து பேர், தலைமறைவாகியிருந்தார்கள். பலர், கைது செய்யப்பட்டிருந்தார்கள். யார், யார் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள், யார் வெளியே இருக்கிறார்கள் என்பதே தெரியாத சூழ்நிலையும் நிலவியது. அராஃபத்தின் வீட்டில் வேலை பார்த்துக்கொண்டிருந்த பணியாளர்கள் அத்தனை பேரையும், ஆரம்பத்திலேயே கைது செய்து கொண்டுபோய்விட்டார்கள். காவலுக்கு நின்ற வீரர்கள் ஒருத்தர் விடாமல், …

Read More »

89] கோஃபி அன்னனின் சாமர்த்தியமான அறிக்கை

நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 89ஏரியல் ஷரோனுக்கு முன்பு, இஸ்ரேலின் பிரதமராக இருந்த ஈஹுத் பாரக்குடன் யாசர் அராஃபத்துக்கு, அரசியல் ரீதியில் ஏற்பட்ட சில கருத்து மோதல்கள், சில தாற்காலிக அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட தோல்வி, ஏரியல் ஷரோன், அல் அக்ஸா மசூதிக்குள் நுழைந்து, அரசியல் நாடகம் நிகழ்த்தியது ஆகியவைதான் இரண்டாவது இண்டிஃபதாவின் ஆரம்பம் என்பதைப் பார்த்தோம். யாசர் அராஃபத்தை இஸ்ரேல் ராணுவம் வீட்டுச் சிறையில் வைத்தது, இந்தப் …

Read More »