Featured Posts
Home » மதங்கள் ஆய்வு (page 27)

மதங்கள் ஆய்வு

பக்காப் படிக்கு முக்காப்படி அளக்கிறார் நேசகுமார்.

இஸ்லாம் என்றால் என்னவென்றே விளங்காமல் நேசகுமார் என்பவர் ”பக்காப்படிக்கு முக்காப்படி அளந்து கணக்கு காட்டுகிறார். இவர் அளக்கும் படி சரியில்லை என்று ஏற்கெனவே திருப்பி அனுப்பியும், வருடம் கடந்து சென்று விட்டதால் மக்கள் மறதியை தனக்கு சாதகமாக்கி மீண்டும் அளவு சரியில்லாத பழையப் பக்காப் படியோடு மீண்டும் நேசகுமார். ”வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை””முஹம்மது அல்லாஹ்வின் அடியாரும், தூதரும் ஆவார்” இதை வாய் மொழிந்தவர்கள் இஸ்லாம் என்ற …

Read More »

இதெல்லாம் ஒரு பொழப்பு.

மனிதர்களுக்கு சேவை புரிவதும் அவர்களுடன் நல்லமுறையில் நடந்து கொள்வதும் ஒழுக்கப் பண்பாடடின் ஒரு முக்கிய அம்சமாகும். ஒழுக்கவியலுடன் தொடர்புள்ள சிந்தனையாளர்கள் அனைவருமே தம் அறிவுரைகளில் மனிதகுல சேவைகள் குறித்தும் குறிப்பிட்டுள்ளார்கள். இவ்வாறே உலகத்தின் எல்லா மதங்களும் அதன் முக்கியத்துவத்தை ஒப்புக் கொண்டுள்ளன. இதை அம்மதங்களின் வேதங்களிலும், ஆகமங்களிலும் காணலாம். படைப்பினங்களுக்கு பணி செய்வது இறைவனுக்குச் செய்யும் சேவையாக இஸ்லாம் கருதுகிறது – இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்களுக்கு செய்யும் உதவி இறைவனுக்கு …

Read More »

கணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..?

எல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது பொருந்தும். கணவன் தன் உடல் இச்சையைத் தணிப்பதற்காக மனைவியை அழைப்பது ஒரு சாதாரண விஷயம். இஸ்லாம் இதிலும் தலையிட்டு, ”கணவன் அழைத்தால் மனைவி மறுக்கக்கூடாது” என்று கூறுவதால் ”இஸ்லாம் ஓர் பெண்ணடிமை மதம்” என்று அவசர முடிவுக்கு வந்து விடுகிறார்கள். ஆணுக்கு ஏற்படும் உடற்கிளர்ச்சி அவனை, மிருகத்தனத்திங்குத் தள்ளி தனக்கு உரிமையில்லாத …

Read More »

கணவன், மனைவியை அடிக்கலாமா?

”விரும்பியவர் நம்பட்டும், விரும்பியர் மறுக்கட்டும்” என்று திருக்குர்ஆன் (18:29) கூறுவதால், இஸ்லாத்தில் மனித அபிப்ராயத்துக்கு எள்ளளவும் எள் முனையளவும் இடமேயில்லை. இறைவன் இப்படித்தான் இருக்க வேண்டுமென்று கற்பனையால் இறைவனைப் படைப்பவர்களுக்கு, இறை வேதங்களை தமக்கு தோதாக திரிப்பதும், நீக்குவதும், சேர்ப்பதும் சாத்தியம். அனைத்தையும் ஏக இறைவன் ஒருவனே படைத்து மனிதர்களுக்கு நேர்வழிகாட்டியாக வேதங்களை வழங்கினான் என நம்பிக்கை கொண்டவர்களுக்கு, இறை வேதங்களில் மனிதக் கருத்தைத் திணிப்பது துளியும் சாத்தியமில்லை. ஐம்புலன்களுக்கும் …

Read More »

நரகத்தில் பெண்கள்-ஓர்விளக்கம்

நரகத்தில் பெண்களே அதிகம். ”இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களே! பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே!” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்- 2911) உலகத்தின் அனைத்து செல்வங்களையும் விட சிறந்தது நல்ல மனைவி என்று, பெண்களைப் பற்றி சிலாகித்து கூறும் இஸ்லாம், ”நரகத்தில் பெண்களே அதிகம்” என்றும் கூறுகிறது. (இவ்வுலக வாழ்க்கையில் தவறுகளுக்கான தண்டனைகள் அனுபவிக்கப்படும் இடமே நரகம் என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை.) ”நான் …

Read More »

அரபியர்களின் கடவுட்க் கொள்கை!

அரபிகள் ஒருபோதும் கடவுள் நம்பிக்கையற்றவர்களாய் இருந்ததில்லை. ஆனால் ஏகனும், எவர் தயவும் – தேவையும் அற்றவனுமான இறைவன் தன்னைப் பற்றி எவ்வாறு குறிப்பிடுகின்றானோ, அந்தப் பொருளில் இறைவனை அவர்கள் புரிந்து கொண்டிருக்கவில்லை! அவனுக்கு இணை கற்பித்துக் கொண்டிருந்தார்கள். இறைவனை எப்படி கண்ணியப்படுத்த வேண்டுமோ அவ்வாறு கண்ணியப்படுத்தாதவர்களாகவும், எவ்வாறு அவனை வணங்கிட வேண்டுமோ அவ்வாறு வணங்காதவர்களாகவும் இருந்து வந்தார்கள். தமது முன்னோர்களில் நல்லடியார்களாகவும், கண்ணியத்திற்குரியவர்களாவும் திகழ்ந்தவர்களுக்கோ, அல்லது வானவர்களுக்கோ நினைவுச் சின்னங்களாகத் …

Read More »

தமிழக முதல்வரின் சிந்தனைக்கு.

தமிழக முதல்வர் கலைஞரின் சிந்தனைக்கு. ஐந்தாவது முறையாக தமிழக முதல்வராகப் பதவி ஏற்றுள்ள டாக்டர் கலைஞர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவரது ஆட்சி நல்லாட்சியாகச் சிறந்து விளங்க இணை துணை இல்லாத ஏகன் இறைவனிடம் பிராரத்திக்கிறோம். ஆட்சி நல்லாட்சியாக அமைவதாக இருந்தால் பதவியேற்றுள்ள முதல்வர் சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்ததாக வேண்டும். அப்படிப்பட்ட நடவடிக்கைகளால் உடனடியாக பலன் கிடைக்காவிட்டாலும், எதிர்காலத்தில் தமிழகம் தலை நிமிர்ந்து, சிறந்து விளங்க அது வழிவகுக்கும், தமிழகச் …

Read More »

வேண்டாம் அணுத்திமிர்!

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க அதிபர் புஷ் ஆகிய இருவரும் இரு நாடுகளின் ஒப்பந்தமாக அணுசக்தி பிரச்சனை பற்றிய பேச்சு வார்த்தையில் நல்லதொரு உடன்படிக்கையை எட்டியிருக்கிறார்கள். – அணுசக்தியை ஆக்கப் பூர்வமாக பயன்படுத்தி, அழிவை நோக்கி அகிலத்தை மிரட்டும் அணு(ஆயுத)த்திமிர் ஏற்படாதவரை – இது மிகவும் வரவேற்கத்தக்க, நாட்டுக்கு நலனைத்தரும் நல்ல விஷயம்தான் – உலக நாடுகள் அனைத்தும் அணுத்திமிரை கைவிட வேண்டும். அன்புடன்,அபூ முஹை அணு பேரழிவு…ஆயுதமாக …

Read More »

பணம் பணமறிய அவா!

கவிதை வடித்தவரை அறிய அவ! பிடிஎஃபில் எழுதி, நண்பர்களிடமிருந்து வந்த இக்கவிதையை எழுதியவர் யார்? என்று தெரியவில்லை. ஏற்கெனவே வலைப்பூவில் பதிந்திருக்கலாம் தெரிந்தவர்கள் இருந்தால் அறியத்தரவும் நன்றி! அன்புடன்,அபூ முஹை அன்னை தேசத்து அகதிகள் நாம்எண்ணெய் தேசங்களில் எரிந்து கொண்டிருக்கிறோம்! அடி வயிற்றில் பதிந்த வறுமைக் கோடுகளின்மர்மக் கரங்கள் அறித்தெறிந்து வீசியஜீவனுள்ளமாமிசத் துண்டுகள் நாம்! கண் தெரியா தேசத்தில் விழுந்துகாயங்கள் தலை சாய்த்துக்கண்ணீர் வடிக்கிறோம்! மொத்தக் குடும்பத்தையும் முதுகில் சுமந்துஇன்னும் …

Read More »

இஸ்லாமும் – அடிமைகளும்.

அமெரிக்காவும் மேற்கத்திய தீவுகளும் கைப்பற்றப்பட்ட பின்னர் முன்னூற்று ஐம்பது ஆண்டுகள் அடிமை வியாபாரப் போக்குவரத்துக்கள் நடந்து வந்தது. ஆப்பிரிக்காவின் கடற்கரை ஓரங்களுக்கு அதன் உட்பகுதியிலிருந்து கருப்பர்கள் பிடித்து வரப்பட்டு கப்பலில் ஏற்றுமதி செய்யப்பட்டார்கள். எனவே அந்தக் கடற்கரைகள் ”அடிமைக் கடற்கரைகள்” என்றே அழைக்கப்பட்டன. ஒரே ஒரு நூற்றாண்டிற்குள் (1680லிருந்து 1786வரை) குடியேற்ற நாடுகளுக்காக பிரிட்டானியர் அடிமைப்படுத்திய மனிதர்களின் எண்ணிக்கை, ஆங்கிலேய நூலாசிரியர்களின் கணக்குப்படி இரண்டு கோடி ஆகும். ஓராண்டு காலத்தில் …

Read More »