நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 13 முகம்மதுக்கு முன்பு இறைத் தூதர்களாக இவ்வுலகில் அறியப்பட்டவர்கள் மொத்தம் இருபத்தைந்து பேர். அவர்களுள், முதல் மனிதர் ஆதாம் தொடங்கி, இயேசு வரையிலான பதினேழு பேரைப் பற்றிய விரிவான அறிமுகங்கள் இன்று நமக்குக் கிடைக்கின்றன. இறைவனுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு பேசியவர்கள், இறைவனாலேயே நல்வழி காட்டப்பட்டவர்கள் ஒருவகை. இறைவனிடமிருந்து மக்களுக்கு வேதத்தைப் பெற்று அளித்தவர்கள் இன்னொரு வகை.முகம்மதுக்கு முன்னர் இப்படி வேதம் அருளப்பட்ட …
Read More »இஸ்லாத்தின் வரலாறும், மாற்றாரின் உளறலும், 3
இஸ்லாத்தைக் களங்கப்படுத்திட வேண்டும் என்ற வெறியோடு ஒரு உண்மையுடன் பல பொய்களைக் கலந்து அந்தப் பொய்களையும் இஸ்லாம் அங்கீகரித்திருக்கிறது என்ற பொய்யைத்தான், தமது (இஸ்லாத்தில் பர்தா – வரலாறும், நிகழ்வுகளும்.) கட்டுரை முழுக்க விதைத்திருக்கிறார். // மேலே கண்ட திருக்குரான் வசனங்கள் அருளப் பட்ட பின்னும், மற்ற முஸ்லீம் பெண்கள் சுதந்திரமாக முகமது நபியவர்களின் கூட மசூதியில் அமர்ந்து பிரார்த்தனை செய்தார்கள் என்றும், பர்தா அணியாமல் அவர் முன்வந்து பேசினார்கள் …
Read More »12] இறைதூதர் முகம்மது
நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 12 முகம்மது என்கிற மனிதரின் பிறப்பு, அவர் ஓர் இறைத்தூதர் என்று அறியப்பட்ட தருணம் – இந்த இரண்டுமே அரேபியர்களின் சரித்திரத்தில் மிக முக்கியமான அம்சங்கள்.ஒரு மனிதரின் பிறப்பே எப்படி முக்கியத் தருணமாகும்? என்கிற கேள்வி எழலாம். மற்ற இறைத்தூதர்களைப் பற்றிய தகவல்களுக்கு நாம் புராணக் கதைகளையே ஆதாரங்களாகக் கொள்ள வேண்டியிருக்கிற நிலையில், இவர் ஒருவரைக் குறித்த விவரங்களை மட்டும்தான் கதைகளிலிருந்து அல்லாமல், …
Read More »வலைப்பதிவில் எழுத்துரு மேம்பாடு
வலைப்பதிவிற்கு வரும் அனைத்து வாசகர்களுக்கும் ஏற்றவகையில் எழுத்துரு அமைப்பை வலைப்பதிவில் மேம்படுத்துவது நல்லது. இயங்கு எழுத்துரு உபயோகிப்பவர்கள் கவனத்திற்குதேனீ இயங்கு எழுத்துருவை தன் வலைப்பதிவில் இணைத்தவர்களில் சிலர் டெம்ப்லேட் பகுதியில் உள்ள எழுத்துரு குடும்பத்தில் அதன்பெயரை குறிப்பிடாமல் மறந்துவிடுகிறார்கள். யாரெல்லாம் இயங்கு எழுத்துருவை தன் வலைப்பதிவுடன் இணைத்திருக்கிறார்களோ அவர்கள், இணைக்கப்பட்ட எழுத்துருவின் முழு பெயரை டெம்ப்லேட் பகுதியில் உள்ள font-family-ல் குறிப்பிட வேண்டும். உதாரணமாக:font-family: TheneeUniTx; சில அலுவலகங்களில் கணினி …
Read More »இஸ்லாத்தின் வரலாறும், மாற்றாரின் உளறலும், 2
பனு முஸ்தலிக் போர் நடப்பதற்கு முன்பே முஸ்லிம் பெண்கள் ஆடைகள் பற்றிய ஹிஜாப் சட்டம் நடைமுறையில் இருக்கிறது, அதாவது பர்தா சட்டம் அமுலுக்கு வந்து விட்டது. ‘இஸ்லாத்தில் பர்தா – வரலாறும் நிகழ்வுகளும்’ என்று இஸ்லாத்தின் பர்தா வரலாறை எழுதப் புகுந்தவர் வரலாற்றை அபத்தமாக்கியிருக்கிறார். இஸ்லாத்தின் வரலாறும், மாற்றாரின் உளறலும் என்ற பதிவில் அன்னை ஆயிஷா(ரலி) அவர்களின் மீது அவதூறு கூறியது சம்மந்தமாக நாம் முன் வைத்த நீண்ட ஹதீஸில்… …
Read More »11] கிருஸ்துவத்தின் வளர்ச்சி
நிலமெல்லாம் ரத்தம் – பா.ராகவன் 11 கி.பி. நான்காம் நூற்றாண்டைப் பிரதிநிதித்துவப் படுத்தும்விதமாக ஒரே ஒரு விஷயத்தைக் குறிப்பிடவேண்டும் என்றால், ஒட்டுமொத்த சரித்திர ஆசிரியர்களும் சுட்டிக்காட்டுவது, கிறிஸ்துவத்தின் பரவலைத்தான். இயேசுவின் மரணத்தை அடுத்து ஆரம்பமான இயக்கம் அது. இன்றுவரையிலும் தொடர்ந்துகொண்டிருக்கும் ஒரு நடவடிக்கையே என்றபோதும், நான்காம் நூற்றாண்டில் அதன் வீச்சு, கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது.மத்தியக் கிழக்கிலும் ஐரோப்பாவிலும் நன்கு பரவி, வேரூன்ற ஆரம்பித்துவிட்டிருந்தது அது. கான்ஸ்டன்டைனை அடுத்து வந்த ரோமானிய …
Read More »கடல் கொந்தளிப்பால் உயிரிழந்தவர்களே!
உங்கள் பாவங்களையும், எங்கள் பாவங்களையும் இறைவன் மன்னிக்கட்டும். மரணத்தில் நீங்கள் முந்தியவர்கள், நாங்கள் பிந்தியவர்கள்! உறவை பறிகொடுத்து கலங்கி நிற்கும் நெஞ்சங்களே! வெறும் ஆறுதல் வார்த்தைகள் உங்களுக்குப் போதாது. வருங்காலங்களின். நல்வரவால் மன நிம்மதியை வழங்கிட உங்களுக்காக இறைவனிடம் பிராத்திக்கிறோம்.
Read More »10] கான்ஸ்டன்டைன்
நிலமெல்லாம் ரத்தம் – பா.ராகவன் 10 கி.பி. 313-ல் அது நடந்தது. யாரும் அவ்வளவாக எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக ரோமிலிருந்த கிறிஸ்துவர்கள் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.கிறிஸ்துவம் பரவத் தொடங்கிய காலத்தில் அது எத்தனைக்கெத்தனை அடித்தட்டு மக்களைக் கவர்ந்திழுத்ததோ அதே அளவுக்கு ஆட்சியாளர்களின் விரோதத்தைச் சம்பாதித்துக்கொண்டும் இருந்தது. ஐரோப்பாவெங்கும் கிறிஸ்துவப் பாதிரியார்கள் இயேசுவின் மகிமையைக் கொண்டுசேர்க்கப் போன வழிகளிலெல்லாம் ஏராளமான எதிர்ப்புகளையும் அவமானங்களையும் கடுமையான தண்டனைகளையும்தான் சந்தித்துக்கொண்டிருந்தார்கள். யூதர்கள் இயேசுவுக்கு இழைத்ததைக் காட்டிலும் அதிகமாகவே …
Read More »மிர்ஸா குலாமும் – மாற்றாரின் கண்ணீரும்.
மத மாற்றத் தடைச் சட்டத்தை தமிழக அரசு அமுல் படுத்தியது என்றால், அங்கே மதமாற்றம் நடக்கிறது என்று தானே அர்த்தம். முஹம்மது நபி(ஸல்) அவர்களே ‘இறுதி நபி’ என்ற பிரச்சாரம், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ‘இறுதி நபி’ இல்லை என்ற பிரச்சாரத்திற்கெதிராக முடுக்கி விடப்பட்டப் பிரச்சாரம் என்று தானே அர்த்தம்! இதில் ‘திணிப்பு’ என்பது எங்கே? ஒருவர் 2+3=6 என்று விடை எழுதினால், அது தவறான விடை என்று …
Read More »யுனிகோட் இணையதளம்
யுனிகோடுஉலக மொழிகள் எல்லாவற்றிற்கும் ஒர் ஒருங்கிணைந்த குறியீட்டு முறைதான் இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்குடன் அமைக்கப்பட்ட தகுதரமே யூனிகோட் ஆகும் இதில் சில இந்திய மொழிகளோடு தமிழுக்கென்றும் தனியிடம் இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே நாம் இன்று பயன்படுத்தும் TSC TAB TAM போன்ற குறியீட்டு வேறுபாடுகளையெல்லாம் தவிர்த்து ஓர் ஒருங்கிணைந்த குறியீட்டு முறையை அறிமுகப்படுத்தியதும் இந்த யூனிகோட் முறைதான். இந்த யூனிகோட் குறியீட்டின் மூலம் பதிக்கப்பட்ட கதைகளை கவிதைகளை …
Read More »