Featured Posts
Home » தேங்கை முனீப் (page 3)

தேங்கை முனீப்

இப்னு பாஸ் (ரஹ்) அவர்கள் பெயரில் வதந்தியும், அதற்கான மறுப்பும்

அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். அவனே தன் தூதரை நேர்வழியுடனும் உண்மையான மார்க்கத்துடனும் அனுப்பினான். அல்லாஹ்வின் அன்பும் அருளும் அவன் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் அவர்களை இறுதி வரை பின் பற்றும் அடியார்கள் மீதும் என்றென்றும் உண்டாகட்டுமாக. இக்கட்டுரையின் நோக்கம் இஸ்லாமியப் பேரறிஞர் அப்துல் அஸீஸ் இப்னு அப்தில்லாஹ் இப்னு பாஸ் அவர்களின் பெயரால் பரப்பப்பட்டு வரும் பொய்ச் செய்திக்கு மறுப்பளிப்பதாகும்.

Read More »

திருக்குர்ஆன் மற்றும் பைபிளில் காணப்படும் வரலாற்றுத் தகவல்கள் – ஓர் ஒப்பீடு (பகுதி-3)

பைபிள் கூறும் ஆபிரகாமின் சரித்திரத்தில் முரண்பாடுகள் ஏன்? 4. வரலாற்றுச் சம்பவங்களைக் கூறுமிடத்து பெரும்பாலும் இஸ்ரவேலிய இன உணர்வின் தாக்கம் பைபிளை ஆக்கிரமித்துள்ளன. குறிப்பாக ஆபிரஹாம் என்ற தீர்க்கதரிசியின் வரலாற்றை விவரிக்கும்போது இது காணப்படுகின்றது. ஆபிராம் மற்றும் அவரது குமாரர்களான இஸ்மவேல், ஈஸாக் ஆகியோரின் வரலாற்றை விவரிக்குமிடத்து யூத இனவெறியையும் அடிமைகயோடு அவர்களது கடுமையான அணுகுமுறையையும் பைபிளின் ஆதியாகமம் வெளிப்படுத்துகின்றது. ஆபிராமுடைய முதல் மனைவியாகிய சாராள் தனக்கு வாரிசுகள் இல்லாததால் …

Read More »

அகிலங்களின் இறைவன் அல்லாஹ் (பகுதி 2)

படைப்புகளைப் பற்றிய சிந்தனையின் மூலம் படைத்தவனைப் புரிந்து கொள்ள இயலும் என்ற எளிய தத்துவத்தைத் திருக்குர்ஆன் நமக்குக் கற்றுத் தருகின்றது. அல்லாஹ்வின் பண்புகளைப்பற்றி திருக்குர்ஆனில் கூறிய அடிப்படையில் எவராலும் புரிந்துகொள்ள இயலும். அவ்வாறு புரிந்து கொண்டவர்கள் படைத்தவனை விடுத்து படைப்புகளுக்கு வணக்கத்தை அர்ப்பணிக்கும் வழிகேட்டில் ஒருபோதும் வீழ்ந்து விடமாட்டார்கள். திருக்குர்ஆன் கூறும் அல்லாஹ்வின் பண்புகளும் திருநாமங்களும் அவன் மட்டுமே வணக்கத்திற்கு உரித்தானவன் என்பதை எடுத்தியம்புகின்றது. அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் உள்ளன. …

Read More »

திருக்குர்ஆன் மற்றும் பைபிளில் காணப்படும் வரலாற்றுத் தகவல்கள் – ஓர் ஒப்பீடு (பகுதி-2)

தீர்க்கதரிசிகளே தீமை புரிந்தனரா? 3. இறைத்தூதர்களின் வரலாற்றைக் கூறுமிடத்து புரோகித வர்க்கத்தின் கற்பனையில் உருவான பல அபத்தமான கருத்துக்கள் பைபிளில் நிறைந்து காணப்படுகின்றன. தங்கள் மன இச்சைகளுக்கேற்ப அவர்களின் வரலாற்றைத் திரித்து, வெளியில் சொல்வதற்கே வெட்கக் கேடான பல தீமைகளையும் தீர்க்கதரிசிகள் எனப்படுவோர் புரிந்ததாக பைபிளைத் தொகுத்தவர்கள் கதை கட்டியுள்ளனர். சாதாரண மக்கள் பாவமான காரியத்தில் ஈடுபட்டுவிட்டு, ஏன் புரோகித வர்க்கமே கூட இத்தகைய மானக்கேடான செயல்களைச் செய்துவிட்டு தீர்க்கதரிசிகளே …

Read More »