Featured Posts
Home » ஜாஃபர் அலி (page 100)

ஜாஃபர் அலி

அதிக வெப்பமில்லாத நாட்களில் ளுஹரை துரிதமாக்குதல்..

360– கடுமையான வெப்பத்தில் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதிருக்கிறோம். எங்களில் ஒருவருக்கும் தம் முகத்தைத் தரையில் வைக்க இயலாவிட்டால் தமது ஆடையை விரித்து அதில் ஸஜ்தாச் செய்வார். புகாரி- 1208: அனஸ் பின் மாலிக் (ரலி)

Read More »

ளுஹர் தொழுகையின் நேரம்..

357– வெப்பம் கடுமையாகும் போது (வெப்பம் தணியும் வரை) லுஹரைத் தாமதப் படுத்துங்கள்! ஏனெனில் கடுமையான வெப்பம் நரகத்தின் வெப்பக் காற்றின் வெளிப்பாடாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-534: அபூஹுரைரா (ரலி) 358- நபி (ஸல்) அவர்களின் முஅத்தின் லுஹருக்கு பாங்கு சொல்ல முற்பட்டபோது நபி (ஸல்) அவர்கள் கொஞ்சம் பொறு; கொஞ்சம் பொறு, என்று கூறிவிட்டு, கடுமையான வெப்பம் நரகத்தின் வெப்பக் காற்றின் வெளிப்பாடாகும். எனவே …

Read More »

தொழுகையின் நேரத்தில் அதன் ஒரு ரக்அத்தைப் பெற்றவர்

353– தொழுகையில் ஒரு ரக்அத்தை (அதற்குரிய நேரத்தில்) அடைந்து கொள்பவர் அந்தத் தொழுகையை அடைந்து கொள்கிறார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-580: அபூஹுரைரா (ரலி) 354– ‘ஜிப்ரீல் (அலை) (வானிலிருந்து) இறங்கி, எனக்குத் தொழுகை நடத்த, நான் அவருடன் தொழுதேன். பிறகு (இரண்டாம் முறையாக) அவருடன் தொழுதேன். பிறகு (மூன்றாம் முறையாக) அவருடன் தொழுதேன். பிறகு (நான்காம் முறையாக) அவருடன் தொழுதேன். பிறகு (ஐந்தாம் முறையாக) அவருடன் …

Read More »

தொழுகைக்கு முன் மறந்து விட்டது நினைவிற்கு வந்தால்…

352– (ஒரு நாள்) தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டது. வரிசைகள் சரி செய்யப்பட்டன. நபி (ஸல்) அவர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள். தொழுகைக்காக அவர்களுடைய இடத்தில் போய் நின்றதும் குளிப்பு கடமையானது நினைவிற்கு வந்ததால் எங்களைப் பார்த்து உங்களுடைய இடத்திலேயே நில்லுங்கள், என்று சொல்லி விட்டு (வீட்டிற்குள்) சென்றார்கள். பின்னர் அவர்கள் குளித்து விட்டுத் தலையிலிருந்து தண்ணீர் சொட்டச் சொட்ட வந்தார்கள். தக்பீர் சொல்லித் தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவர்களுடன் தொழுதோம். …

Read More »

ஜமாஅத் தொழுகைக்கு ஓடி வருதல் கூடாது..

350– தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் ஓடி வராதீர்கள். நடந்தே வாருங்கள். நிதானத்தைக் கடைப் பிடியுங்கள். கிடைத்ததைத் தொழுங்கள். தவறியதைப் பூர்த்தி செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி-908: அபூஹுரைரா (ரலி) 351– நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் சிலர் வேகமாக வரும் சப்தத்தைச் செவியுற்றார்கள். தொழுகையை முடித்ததும் உங்களுக்கு என்ன? (இவ்வளவு வேகமாக வந்தீர்கள்) என்று அவர்களிடம் கேட்டார்கள். …

Read More »

தொழுகைக்கு தக்பீர் கட்டியதும் என்ன ஓதுவது?

349– நபி (ஸல்) அவர்கள் தக்பீருக்கும் கிராஅத்துக்கும் இடையே சற்று நேரம் மவுனமாக இருப்பார்கள். அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை தாய் தங்களுக்கு அர்ப்பணம். தக்பீருக்கும் கிராஅத்துக்குமிடையே நீங்கள் மவுனமாக இருக்கும் சமயத்தில் என்ன கூறுவீர்கள்? என்று நான் கேட்டேன். இறைவா! கிழக்குக்கும் மேற்குக்குமிடையே நீ ஏற்படுத்திய தூரத்தைப் போல், எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தப் படுவது போல் என் …

Read More »

தொழுகையை முடித்ததும் செய்யும் திக்ருகள்..

347– வணக்கத்திற்குரியவன் அல்லாஹுவைத் தவிர எவரும் இல்லை. அவன் ஏகன் அவனுக்கு நிகராக எவருமில்லை. ஆட்சி அவனுக்குரியது. புகழும் அவனுக்குரியது. அவன் அனைத்து பொருட்களின் மீதும் ஆற்றல் உள்ளவன். இறைவா! நீ கொடுப்பதைத் தடுப்பவன் இல்லை. நீ தடுத்ததைக் கொடுப்பவன் இல்லை. எந்த மதிப்பு உடையவனும் உன்னிடம் எந்தப் பயனும் அளிக்க முடியாது என்று நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு கடமையான தொழுகைக்குப் பின்பும் கூறக் கூடியவர்களாக இருந்தனர். புஹாரி-844: …

Read More »

ஸூஃபிகள் கொடுக்கும் தட்டு, தகடு, தாயத்து!

ஸூஃபியிஸம்: இக்கொள்கையை உடையவர்கள் தங்களின் ஸூஃபிகள் கொடுத்த தட்டு, தகடு, தாயத்து போன்றவற்றை ஆபத்து, சிக்கல்களிலிருந்து பாதுகாவல் பெறுவதற்காக பயன்படுத்துகின்றனர்.

Read More »

அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோரும் விஷயங்கள்..

344– நபி (ஸல்) அவர்கள் தமது தொழுகையில் தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் பாதுகாப்புத் தேடுவதை நான் செவியுற்றுள்ளேன். புஹாரி-833: ஆயிஷா (ரலி) 345– இறைவா! கப்ருடைய வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். வாழும் போதும் மரணிக்கும் போதும் ஏற்படும் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். பாவங்களை விட்டும் கடனை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று நபி (ஸல்) …

Read More »

கப்ர் வேதனையிலிருந்து பாதுகாப்பு தேடுதல்..

343– மதீனா யூத மூதாட்டிகளில் இருவர் என்னிடம் வந்து (பேசிக் கொண்டிருந்தபோது) ‘மண்ணறை வாசிகள் மண்ணறைகளில் வேதனை செய்யப்படுகின்றனர்’ என்று கூறினர். அவர்கள் கூறியதை நம்புவது எனக்குச் சரியாகப் படவில்லை. பிறகு அவர்கள் இருவரும் வெளியேறிவிட்டனர். நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான், ‘இறைத்தூதர் அவர்களே! இரண்டு மூதாட்டிகள் (என்னிடம் வந்து இப்படி இப்படிச் சொன்னார்கள்) என்று அவர்களிடம் தெரிவித்தேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘இருவரும் …

Read More »