Featured Posts
Home » ஜாஃபர் அலி (page 110)

ஜாஃபர் அலி

மாதவிடாயுள்ள மனைவி கணவனுக்குப் பணிவிடை…

172- நபி (ஸல்) அவர்கள் பள்ளியிலிருந்து தம் தலையை நீட்டுவார்கள். நான் அதை வாருவேன். இஃதிகாஃப் இருக்கும்போது தேவையிருந்தால் தவிர வீட்டிற்குள் வர மாட்டார்கள். புகாரி-2029: ஆயிஷா(ரலி)

Read More »

கடமையான குளிப்பு!

171- நானும் நபி (ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்திலிருந்து (தண்ணீர் மொண்டு) கடமையான குளிப்பை நிறைவேற்றுவோம். புகாரி-322: உம்முஸலமா (ரலி)

Read More »

மாதவிடாய் ஏற்பட்ட மனைவியுடன் உறங்குதல்.

170- நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போர்வையைப் போர்த்திப் படுத்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. மாதவிடாய் காலத்தில் அணியும் துணியை எடுப்பதற்காக நபி (ஸல்) அவர்களுக்குத் தெரியாதவாறு அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டேன். உனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டதா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ஆம் என்று சொன்னேன். ஆயினும் அவர்கள் என்னை(த் தம்மருகில்) அழைத்தார்கள் நான் அவர்களோடு போர்வைக்குள் படுத்துக் …

Read More »

சுப்ஹானல்லாஹ்!

169- நபி (ஸல்) அவர்கள் தமது மனைவியரில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அணைத்துக் கொள்ள விரும்பினால் கீழாடையைக் கட்டிக் கொள்ளுமாறு கட்டளையிடுவார்கள். புகாரி-303: மைமூனா (ரலி)

Read More »

மனதைக் கட்டுப்படுத்திக் கொள்ளுதல் பற்றி…

168- (நபி (ஸல்) அவர்களது மனைவியரான) எங்களில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அணைத்துக் கொள்ள நபி (ஸல்) அவர்கள் விரும்பினால் மாதவிடாய் போகும் இடத்தை துணியால் கட்டிக் கொள்ளுமாறு கட்டளையிட்டு விட்டு அவரை அணைத்துக் கொள்வார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது மனதைக் கட்டுப் படுத்திக் கொள்வது போன்று உங்களில் யார் தமது மனதைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்? புகாரி-302: ஆயிஷா (ரலி)

Read More »

கப்றுடைய வேதனைக்கு இதுவும் காரணம்

167- நபி (ஸல்) அவர்கள் மக்கா அல்லது மதீனாவில் ஒரு தோட்டத்தின் பக்கமாகச் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது, தங்கள் கப்ரில் வேதனைச் செய்யப்படும் இரு மனிதர்களுடைய சப்தத்தைச் செவியுற்றார்கள். அப்போது, இவர்கள் இருவரும் வேதனைச் செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனைச் செய்யப்படவில்லை, என்று சொல்லி விட்டு, ஆம்! (அது பெரிய விஷயம் தான்) அவ்விருவரில் ஒருவர் தாம் சிறுநீர் கழிக்கும் போது மறைப்பதில்லை, மற்றொருவர் …

Read More »

மாதவிடாய் இரத்தம் பட்ட ஆடையை….

166- ஒரு பெண், நபி (ஸல்) அவர்களிடம் வந்து எங்களில் ஒருத்தியின் துணியில் மாதவிடாய் இரத்தம் பட்டு விட்டால், அவள் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார். அதற்கு அந்த இடத்தைச் சுரண்ட வேண்டும், பின்னர் அதைத் தண்ணீரால் தேய்த்துக் கழுவவேண்டும், பின்னர் அந்தத் துணியுடன் நீ தொழுது கொள்ளலாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-227: அஸ்மா பின்த் அபூபக்ர் (ரலி)

Read More »

ஆடையில் பட்ட இந்திரியத்தை……..

165- நான் ஆயிஷா (ரலி) அவர்களிடத்தில் ஆடையில் படும் இந்திரியத்தைப் பற்றிக் கேட்டேன். அதற்கு, நான் நபி (ஸல்) அவர்களுடைய ஆடையில் பட்ட இந்திரியத்தைக் கழுவுவேன். அந்த ஆடையோடு நபி (ஸல்) அவர்கள் தொழுவதற்காகச் செல்வார்கள். கழுவியதால் ஏற்பட்ட ஈரம் அவர்களுடைய ஆடையில் ஆங்காங்கே காணப்படும் என்று கூறினார்கள். புகாரி-231: ஸுலைமான் பின் யஸார் (ரலி)

Read More »

நீரைக் கொண்டு தெளித்து சுத்தம் செய்தல்

164- நான் (பாலைத் தவிர வேறு) உணவு சாப்பிடாத எனது சிறிய ஆண் குழந்தையை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தேன். நபி (ஸல்) அவர்கள் அக்குழந்தையைத் தமது மடியில் உட்கார வைத்தார்கள். அப்போது அக்குழந்தை நபி (ஸல்) அவர்களின் ஆடையில் சிறுநீர் கழித்து விட்டது. உடனே தண்ணீர் கொண்டு வரச் சொல்லி (சிறுநீர்பட்ட இடத்தில்) தெளித்தார்கள். அதைக் கழுவவில்லை. புகாரி-223: உம்மு கைஸ் (ரலி)

Read More »

சிறு குழந்தைகளின் சிறுநீர்……..

163- நபி (ஸல்) அவர்களிடம் குழந்தைகள் கொண்டு வரப்படுவதுண்டு. அப்போது குழந்தைகளுக்காக நபி (ஸல்) அவர்கள் பிரார்த்திப்பார்கள். அவர்களிடம் ஓர் ஆண் குழந்தை கொண்டு வரப்பட்டது. அக்குழந்தை அவர்களின் ஆடையில் சிறுநீர் கழித்து விட்டது. அப்போது (சிறிது) தண்ணீர் கொண்டு வரச்சொல்லி அதைச் சிறுநீர் பட்ட இடத்தில் தெளித்தார்கள். (அதிகமாகத் தண்ணீர் ஊற்றி) அதனைக் கழுவவில்லை. புகாரி-6355: ஆயிஷா (ரலி)

Read More »