Featured Posts
Home » நூல்கள் (page 11)

நூல்கள்

இஸ்லாமும் பலதார மணமும், திருமண வயதெல்லை | அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-26 [சூறா அந்நிஸா–03]

இஸ்லாமும் பலதார மணமும் ‘அநாதை(களை மணம் முடித்தால் அவர்)கள் விடயத்தில் நீதியாக நடக்க முடியாது என நீங்கள் அஞ்சினால், பெண்களில் உங்களுக்குவிருப்பமானவர்களில் இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நன்நான்காக மணம் முடியுங்கள். நீங்கள் (இவர்களுக் கிடையில்) நீதமாக நடக்க முடியாது என அஞ்சினால், ஒருத்தியை அல்லது உங்கள் அடிமைப் பெண்களை (போதுமாக்கிக் கொள்ளுங்கள்.) நீங்கள் அநீதியிழைக்காமலிருக்க இதுவே மிக நெருக்கமானதாகும்.’ (4:3) இந்த வசனம் ஒரு முஸ்லிம் ஆண் ஒரே நேரத்தில் நான்கு …

Read More »

அநாதைகளின் சொத்து, அநாதைப் பெண்ணின் திருமணம் | அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-25 [சூறா அந்நிஸா–02]

அநாதைகளின் சொத்து ‘அநாதைகளிடம் அவர்களின் சொத்துக்களை நீங்கள் கொடுத்து விடுங்கள். நல்லதுக்குப் பதிலாக கெட்டதை மாற்றிவிடாதீர்கள். உங்களுடைய சொத்துக்களுடன் (சேர்த்து) அவர்களின் சொத்துக்களை உண்ணாதீர்கள். நிச்சயமாக இது பெரும் பாவமாக இருக்கிறது.’ (4:2) சமுதாயத்தில் பலவீனமான ஒரு பிரிவினர்தான் அநாதைகளாவர்;. தந்தையை இழந்த சிறுவர் சிறுமியர் ‘யதீம்’ – அநாதை என்று கூறப்படுவர். இவர்கள் வறியவர்கள் என்றால் புறக்கணிக்கப் படுகின்றனர். செல்வந்தர்கள் என்றால் அநீதிக்குள்ளாக்கப் படுகின்றனர். இந்த வசனம் அநாதைகளின் …

Read More »

மனித இனத்தின் தோற்றம் | அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-24 [சூறா அந்நிஸா–01]

அல் குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் : சூறா அந்நிஸா அந்நிஸா என்றால் பெண்கள் என்று அர்த்தமாகும். இந்த அத்தியாயத்தில் பெண்கள் பற்றியும் பெண்களுக்குத் தேவையான பல சட்டங்கள் பற்றியும் பேசப்படுகின்றது. குறிப்பாக சமூகத்தில் பலவீனமான நிலையில் இருப்பவர்களின் உரிமைகள் பற்றி இந்த அத்தியாயம் அதிகம் பேசுகின்றது. அல்குர்ஆனில் நான்காம் அத்தியாயமாக இடம் பெற்றுள்ள இந்த சூறா 176 வசனங்களைக் கொண்டது. மனித இனத்தின் தோற்றம் ‘மனிதர்களே! உங்களை ஒரே ஆத்மாவி …

Read More »

ஜூம்ஆ நாளின் சிறப்புகள், பேண வேண்டியவைகள், தொழுகைக்கு தயாராகுதல் | ஜூம்ஆத் தொழுகை [பிக்ஹுல் இஸ்லாம்-039]

ஜூம்ஆத் தொழுகை வெள்ளிக்கிழமை ழுஹருடைய நேரத்தில் ஊரிலுள்ள அனைத்து ஆண்களும் ஒரு மஸ்ஜிதில் ஒன்று கூடி இரண்டு குத்பா மற்றும் இரண்டு ரக்அத்துக்கள் தொழுவதை ஜும்ஆ தொழுகை என்று கூறப்படும். அரபியில் ‘யவ்முல் ஜும்ஆ’ என்றால் வெள்ளிக் கிழமை என்பது அர்த்தமாகும். ஸலாதுல் ஜும்ஆ என்றால் வெள்ளிக்கிழமை தொழப்படும் தொழுகையைக் குறிக்கும். ‘ஜமஅ’ என்றால் ஒன்று சேர்த்தான் என்பது அர்த்தமாகும். வெள்ளிக் கிழமையில் தான் ஆதம்(ர) அவர்கள் படைக்கப்பட்டார். ஆதம்-ஹவ்வா …

Read More »

பாவாத மலையும்… இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகமும்… – 01

இலங்கை சப்ரகமுவ மத்திய மாகாணங்களுக் கிடையே கடல் மட்டத்தில் இருந்து 2243 மீட்டர் (7359 அடி) உயரத்தில் கூம்பு வடிவிலாக இந்த மலை அமைந்துள்ளது. இந்த மலை அனைத்து சமய மக்களாலும் புனிதத்துவத்துடன் நோக்கப்படுகின்றது. இந்த மலை உச்சியில் ஒரு பாதச் சுவடு உள்ளது. மலை உச்சியில் 1.8 மீட்டர் அளவான பாறையில் இப்பாதம் பதிந்துள்ளது. இந்தப் பாதச் சுவடு புத்தருடையது என பௌத்தர்கள் நம்பி அதை வழிபட்டு வருகின்றனர். …

Read More »

முதல் மனிதனின் முதல் தவறு [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-25]

முதல் மனிதனின் முதல் தவறு அல்லாஹ் மண்ணில் இருந்து முதல் மனிதனைப் படைத்தான். அம்மனிதர் ஆதம் நபி ஆவார். அவருக்கு அனைத்துப் பொருட்களின் பெயர்களையும் அல்லாஹ் கற்றுக் கொடுத்தான். பின்னர் ஆதம் நபிக்கும் மலக்குகளுக்கும் இடையில் ஒரு போட்டி நடந்தது. அல்லாஹ் சில பொருட்களைக் காட்டி அவற்றின் பெயர்களைக் கூறுமாறு மலக்குகளிடம் சொன்னான். மலக்குகளோ நீ கற்றுத் தந்ததைத் தவிர வேறு எதுவும் எமக்குத் தெரியாது எனக்கூறி தமது அறியாமையை …

Read More »

இளமையும் இஸ்லாமும்

(ஆகஸ்ட் – 2018) ஆகஸ்ட் 12 ஆம் திகதி சர்வதேச இளைஞர் தினமாகும். இளமையை வீணாக விரயமாக்கிக் கொண்டிருக்கும் இளைய சமூகத்தை விழிப்படையச் செய்து அவர்களை வினைத்திறன் மிக்கவர்களாக மாற்ற வேண்டும் என்பதற்காகவே இத்தகைய தினங்கள் கொண்டாடப்படுகின்றன. இளமையும் இஸ்லாமும்: மனிதனின் வாழ்க்கைக் காலத்தையும் அவனது இளமைக் காலத்தையும் அல் குர்ஆன் இப்படிச் சித்தரித்துக் காட்டுகின்றது. ‘அவன்தான் மண்ணிலிருந்தும் பின்னர்; இந்திரியத் துளியிலிருந்தும் பின்னர் (கருவறைச் சுவரில்) ஒட்டிக் கொள்ளக் …

Read More »

தாங்கிப் பிடிக்க ஆள் இருந்தால் தூங்கித் தூங்கி விழுமாம் பிள்ளை

இலங்கை ஒரு சின்னத் தீவாகும். இந்த அழகிய சின்னஞ் சிறு தீவை பயங்கரவாதமும், இனவாதமும் அழித்து வந்தது போதாது என்று இன்று அதனுடன் போதை வஸ்தும் கைகோர்த்துள்ளது. இலங்கையின் திறந்த பொருளாதாரக் கொள்கை, சுற்றுலாத் துறையின் வளர்ச்சி என்பவற்றுடன் இலங்கை சர்வதேச போதைக் கடத்தல் மாபியாக்களின் மத்திய தளமாக மாறி வருகின்றதோ என்று ஐயப்படும் நிலை உருவாகியுள்ளது. 1981 மே 26 இல் 70 கிராம் ஹெரோயின் இலங்கையில் கைப்பற்றப்பட்டது. …

Read More »

தோட்டக்கார நண்பா! [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-24]

இரண்டு நண்பர்கள் இருந்தனர். இருவருக்கும் தோட்டம் இருந்தன. இருவரும் விவசாயிகள். அதில் ஒருவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்ட இறை விசுவாசி. மற்றொருவர் இறை நிராகரிப்பில் உள்ளவர். அல்லாஹ்வைப் பற்றியோ மறுமையைப் பற்றியோ சரியான நம்பிக்கை அவரிடம் இருக்கவில்லை. அல்லாஹ் அந்த இறை நிராகரிப்பாளருக்கு இரண்டு தோட்டங்களை வழங்கி இருந்தான். தோட்டத்தில் திராட்சை காய்த்து கொத்துக் கொத்தாக காட்சித் தந்தது. தோட்டத்தைச் சூழ பேரீத்தம் மரங்கள் இருந்தன. மரங்களுக்கு …

Read More »

பொறுமையும்… உறுதியும்… [அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 23]

பெருமையும், உறுதியும்: لَـتُبْلَوُنَّ فِىْۤ اَمْوَالِكُمْ وَاَنْفُسِكُمْ وَلَـتَسْمَعُنَّ مِنَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلِكُمْ وَمِنَ الَّذِيْنَ اَشْرَكُوْۤا اَذًى كَثِيْـرًا وَاِنْ تَصْبِرُوْا وَتَتَّقُوْا فَاِنَّ ذٰلِكَ مِنْ عَزْمِ الْاُمُوْرِ‏ ‘நிச்சயமாக நீங்கள் உங்களது செல்வங் களிலும் உங்கள் உயிர்களிலும் சோதிக்கப் படுவீர்கள். இன்னும் உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப் பட்டோரிடமிருந்தும் இணைவைத்தோரிடமிருந்தும் அதிகமான நிந்தனை(வார்த்தை)களையும் நீங்கள் செவியுறுவீர்கள். நீங்கள் பொறுமையாக இருந்து, (அல்லாஹ்வை) …

Read More »