Featured Posts
Home » பொதுவானவை » தலையங்கம்

தலையங்கம்

கார்டூனும் கருத்துச் சுதந்திரமும் – முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குக் கேலிச்சித்திரம் பின்னணியும் நோக்கமும்

முஸ்லிம்கள் தங்கள் உயிரினும் மேலாக மதிக்கும் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் பரிசுத்த ஆளுமையை மாசு படுத்தும் வகையில்,தொடர்தேர்ச்சியான மேற்குலகின் அநாகரிகச் செயற்பாடுகள், முஸ்லிம் உலகில் அதற்கு எதிரான குரலை மிகப் பலமாக ஒலிக்கச் செய்துள்ளது. Charlie Hebdo என்ற மதவெறி கொண்ட பிரான்ஸ் பத்தரிக்கை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் என்று கற்பனையாக சித்திரித்து, நிர்வாண கார்ட்டூனை தனது பத்திரிக்கையில் வெளியிட்டது. நபிகள் நாயகத்தை wheel chairல் …

Read More »

பண்புகளை இழக்கும் பகிடிவதை

பகிடிவதை என்பது, அதிகமான கல்வி நிறுவனங்களுக்குள் வருடாவருடம் புதிதாகப் பிரவேசிக்கும் மாணவர் மீது ஏற்கனவே அங்கு கல்வி பயிலும் சிரேஷ்ட மாணவர்களில் குரூர எண்ணம் கொண்ட ஒரு குழுவினரால் மேற்கொள்ளப்படும் ஒருவகைப் பயங்கரவாதச் செயல் எனக் குறிப்பிடமுடியும். இதைத் தடுப்பதற்காக பல்கலைக்கழகங்களில் தடைச்சட்டங்கள் இயற்றப்பட்டுள்ள போதும், அங்கு பகிடிவதை என்ற பெயரில் மனதை நிலைகுலையச் செய்யும் குரூரமான பல சம்பவங்கள் தொடர்ந்து நடந்துவருகின்றன. கல்வி நிலையங்களில் நடைபெற்று வரும் அங்கீகரிக்க …

Read More »

எடை போடப்படும் நன்மையும் – தீமையும்!

الوزن அல்வஸ்ன் – எடை, ميزان மீஸான் – தராசு, توازن தவாஸுன் – எடைக் கருவி, மனிதன் தனது வாழ்க்கையில தவிர்க்க முடியாத ஒன்று அளவை கணக்கிட பயன்படுத்தும் கருவி “தராசு”. இந்த நவீன உலகில் மனிதன் பிறந்தவுடன் முதலில் அவனது உடல் தராசில் வைத்து எடை போடப்படுகிறது. அக்குழந்தையின் எடை மூன்று கிலோவுக்கும் அதிகமாக இருந்தால் அது ஆரோக்கியமான குழந்தை என்றும் மூன்று கிலோவுக்கும் குறைவாக இருந்தால் …

Read More »

இஸ்லாத்தின் பார்வையில் முஸ்லிமல்லாத பிரபலங்களின் இறப்பு

மரணித்தவரின் குடும்பத்துக்கு அனுதாபம் சொல்வதையோ மரணித்தவரின் உடலை அடக்கம் செய்ய எம்மைக் கடந்து கொண்டு செல்லும் போது அதற்காக எழுந்து நிற்பதையோ இஸ்லாம் தடை செய்ய வில்லை. இவைகளை இஸ்லாமிய வரம்புக்குள் நின்று செய்ய வேண்டும். சினிமாத்துறையில் தன் குரல் வளத்தால் பல மொழிகளிலும் பாடல்களைப்பாடித் தனக்கென ரசிகர்களைக் கொண்ட SPB அவர்கள் நேற்றைய தினம் மரணித்து விட்ட செய்தி சமூக ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக மாறியுள்ள இன்நிலையில் எமது …

Read More »

இன்றைய இயக்கங்களும் சமூக சேவைகளும்

எம்மைப் படடைத்த படைப்பாளன் எல்லாம் வல்ல இறைவன் காலத்துக்குக் காலம் பல. வகையான சோதனைகளை எமக்கு ஏற்படுத்துகிறான். இந்த உலகில் கடுமையான சோதனைகளுக்கு உற்படுத்தப்பட்டோர் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான நபிமார்களாகும். சோதனைகளின் போது பொறுமையுடன் இருப்போரே வெற்றியாளர்கள் ஆவார்கள். அல்லாஹ் கூறுகிறான்: يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اسْتَعِيْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَ‏ நம்பிக்கை கொண்டோரே பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் (இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக …

Read More »

வளம் கொழித்தபோதும் பலம் இழந்தவர்கள் – தொடர் 2

ஒரு விஷயத்தைத் தெளிவாகக் கூறிவிட்டுக் கூறப்பட்டவர்கள் நன்கு புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் உதாரணங்களும், எடுத்துக்காட்டுகளும் பயன்படுத்தப்படுகின்றன. படிப்பவர்களும், கேட்பவர்களும் இலகுவாகப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதால் எடுத்துக்காட்டு என்ற யுக்தி (வழிமுறை) கையாளப்படுகின்றது. அல்குர்ஆனிலும் ஏராளமான உதாரணங்களும், எடுத்துக்காட்டுகளும் அவ்வப்போது பயன்படுத்தப்பட்டுள்ளது. முன் சென்றுபோன சமுதாயத்தவர்களின் வாழ்க்கையையும் அவர்களின் முடிவையும் அல்லாஹ் பல இடங்களிலும் பல உதாரணங்கள் மூலம் தெளிவுபடுத்துகின்றான். اَفَلَمْ يَسِيْرُوْا فِى الْاَرْضِ فَيَنْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِيْنَ …

Read More »

வளம் கொழித்தபோதும் பலம் இழந்தவர்கள் – தொடர் 1

அல்லாஹ் என்பவன் யார்? அவனை ஏன் வணங்கவேண்டும்? அவனது தூதரை ஏன் பின்பற்றவேண்டும்? சுவர்க்கம் என்றால் என்ன? நரகம் என்றால் என்ன? சுவர்க்க வாதிகள் யார்? நரகவாதிகள் யார்? என்பனவற்றைத் திருமறை குர்ஆன் கூறுவதோடு இந்த சமுதாயம் படிப்பினை பெறவேண்டும் என்பதற்காக முன் சென்ற சமுதாயத்தவரின் வரலாறுகளையும் அல்குர்ஆன் விவரிக்கின்றது. அறிவுரைகளும் போதனைகளும் புறக்கணிக்கப்பட்டு, தீமைகளும் பாவங்களும் தலைவிரித்தாடும்போது அல்லாஹுவின் தண்டனையும், சோதனையும் அந்த சமூகத்தை வந்து சூழ்ந்துகொள்கின்றது. وَلَقَدْ …

Read More »

வர்ணம் தீட்டுவோம்!

ஆசிரியர் பக்கம் – ஜனவரி 2020 அல்லாஹ் அழகானவன். அவன் அழகையே விரும்புகின்றான் (முஸ்லிம்) என்பது இறைத்தூதர் முஹம்மத்(ச) அவர்களது போதனையாகும். அல்லாஹ்வைப் பற்றி குர்ஆன் அறிமுகம் செய்யும் போது, ”அஹ்ஸனுல் ஹாலிகீன்’ – அழகிய படைப்பாளன்’ (23:14, 37:125) என்று குறிப்பிடுகின்றது. இந்த வகையில் இஸ்லாம் அழகுணர்வை ஆர்வமூட்டக் கூடிய மார்க்கமாகும். ‘நாம் வானத்தில் கோள்களை அமைத்து, பார்ப்போருக்கு அதனை அலங்கரித்துள்ளோம்;.’ (15:16) வானத்தில் கோள்களை அமைத்து பார்ப்பவர்களுக்கு …

Read More »

பகிடிவதையின் (ராக்கிங்) மறுபக்கம்

படாத பாடுபட்டு படித்து முடித்து பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்களுக்கு முன்னால் வந்து பயமுறுத்திக் கொண்டிருக்கும் அடுத்த பிரச்சினைதான் பகிடிவதை. இந்தப் பகிடி வதையினால் படிப்பை விட்டவர்கள் உண்டு, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் உண்டு. ஏன், உயிரைக் கூட விட்டவர்கள் உண்டு! கடும் தியாகத்துடன் படித்து, குடும்பத்துக்கும் நாட்டிற்கும் நல்லது செய்ய நினைத்த ஒரு உயிர் நமது நடத்தையால் பறிபோய்விட்டதே, என்ற குற்ற உணர்வு கொஞ்சம் கூட இந்தப் பகிடிவதை அரக்கர்களுக்கு மருந்துக்கும் …

Read More »

அலைபேசிகளால் ஏற்படும் சமூக அவலங்கள்

எம்.ஏ.ஹபீழ் ஸலபி M.A. நாம் அறிவியலால் ஆளப்படும் தொழில் நுட்பம் நிறைந்த ஓர் உலகில் வாழ்கின்றோம். மனிதன், அவன் பெற்றுள்ள நவீன அறிவைப் பயன்படுத்தி, பல வியத்தகு சாதங்களைப் படைத்து, பெரும் புரட்சிகளைப் புரிந்துவருகின்றான். கற்பனையில் கற்பிதம் செய்யமுடியாத பல புதிய புதிய கண்டுபிடிப்புகளைத் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தி, ஆச்சரியம் ஏற்படுத்தி வருகின்றான். அவை மனிதர்களுக்கு நன்மை தரும் அதேவேளை, பெருமளவு தீமையும் ஏற்படுத்துகிறது. மனிதனின் இயல்பு தீமைகளின் பால் அதிகம் …

Read More »