Featured Posts
Home » சிறுவர் பகுதி » திருக்குர்ஆன் கூறும் உண்மைக் கதைகள்

திருக்குர்ஆன் கூறும் உண்மைக் கதைகள்

நபி கடுகடுத்தார்! [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-45]

முஹம்மது நபி, இயல்பிலேயே மென்மையானவர். இலகிய குணமுடையவர். அவர் ஒருமுறை கடுகடுத்தார். முகம் சுழித்தார். அதற்காக அவர் அல்லாஹ்வால் கண்டிக்கப்பட்டார். அவர் யாருக்காக, ஏன் கண்டிக்கப்பட்டார் தெரியுமா? வாருங்கள் தெரிந்து கொள்வோம். முஹம்மது நபி வாழ்ந்த சமூகத்தில் சாதி வேறுபாடு ஆழமாக வேரூன்றிக் காணப்பட்டது. சிலர் தம்மை உயர்சாதி என்று கூறிக்கொண்டு பெரும் அடக்குமு¬ணீறயைக் கையாண்டு வந்தனர். முஹம்மது நபி, ஒருவனே தேவன் என்று போதித்ததைக் கூட அவர்களில் சிலரால் …

Read More »

கவலைப்படாதே! அல்லாஹ் எம்முடன் உள்ளான்! [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-44]

“லா தஹ்ஸன் இன்னல்லாஃ மஅனா” கவலைப்படாதே, அல்லாஹ் எம்முடன் உள்ளான். இந்த வார்த்தை யாரால் யாருக்கு எச்சந்தர்ப்பத்தில் கூறப்பட்டது என்பது தெரியுமா தம்பி தங்கைகளே! வாருங்கள் தெரிந்து கொள்வோம். மக்காவில் நபி(ஸல்) அவர்கள் இஸ்லாமிய பிரச்சாரத்தை ஆரம்பித்த போது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத கொடுமைகளை முஸ்லிம்கள் சந்தித்தனர். ஒவ்வொரு நாளும் நெருப்பாற்றில் நீந்தி எரிமலைகளைக் கடந்து செல்வது போலிருந்தது. இறை நிராகரிப்பாளர்களின் வதைகள் வரம்பு மீறிப் போன போது நபி(ஸல்) …

Read More »

எனக்கு வாசிக்கத் தெரியாதே! [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-43]

அதற்கு ‘ஜபலுந்நூர்’ (ஒளி மலை) என்றும் கூறுவார்கள். அந்த மலைக்கு ஏன் அந்தப் பெயர் சொல்லப்படுகிறது தெரியுமா? உலகையே இருளில் இருந்து மீட்டு ஒளியின் பால் இட்டுச் செல்லும் அற்புத வேதம் குர்ஆன் முதன்முதலில் இறக்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் தமது நாற்பதாவது வயது நெருங்கையில் மனித இனத்தின் அவல நிலை குறித்து கவலைப்பட்டார்கள். இதனால் தனித்திருந்து இறைதியானத்தில் ஈடுபட்டார்கள். அந்த மலை உச்சியில் உள்ள குகையில் அவர்கள் இருக்கும் போது …

Read More »

ஞானி லுக்மானும் அவர் மகனும் [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-42]

முன்பொரு காலத்தில் லுக்மான் என்றொருவர் வாழ்ந்து வந்தார். இவர் அடிமையாகவும் கருப்பராகவும் இருந்தார். ஆனால் அவர் ஞானம் மிக்கவராக இருந்தார். இஸ்லாம் நிறங்களைப் பார்க்காது அவரின் அறிவும் ஞானமும் அவருக்கு உயர்வைக் கொடுத்தது. அடிமையாக இருந்த அவர் தனது ஞானத்தால் உயர்வு பெற்றார். திருக்குர்ஆனில் அவர் பெயரில் ஒரு அத்தியாயமே உள்ளது! லுக்மான் தனது மகனுக்கு அறிவுரை கூறுபவராக இருந்தார். ஒருநாள் அவர் தனது மகனை அழைத்து அவருக்கு அறிவுரை …

Read More »

தாவூத் நபியும் இனிய குரலும் [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-41]

தாவூத் என்றொரு நபி இருந்தார். இவர் நபியாகவும், வல்லமைமிக்க மன்னராகவும் திகழ்ந்தார். கிறிஸ்தவ சகோதரர்கள் இவரைத்தான் தாவீது ராஜா என்றும், டேவிட் என்றும் அழைக்கின்றனர். இவர் ஆடு மேய்ப்பவராக இருந்தார். தனது ஆடுகளை வேட்டை மிருகங்களிடம் இருந்து காப்பாற்றுவதற்காக கவணில் கல் வைத்து குறிபார்த்து எறிபவராகவும் அதில் அவர் மிகப்பெரும் தேர்ச்சி பெற்றவராகவும் இருந்தார். இன்றைய பலஸ்த்தீன சிறுவர்கள் சுற்றி சுற்றி கல் வீசுவதைப் பார்த்திருப்பீர்கள் அல்லவா. அப்படித்தான் தாவூத் …

Read More »

அன்னை மரியமும்; அற்புதக் குழந்தை ஈஸாவும்! [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-40]

இம்ரான் என்றொருவர் இருந்தார். அவரது மனைவி கருவுற்றார். அவர் தனக்கு ஆண் குழந்தை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார். தனது வயிற்றில் இருக்கும் குழந்தையை பலஸ்த்தீன் பள்ளியில் பணிபுரிய அல்லாஹ்விடம் நேர்ச்சையும் செய்து கொண்டார். ஆனால் அவருக்கு பெண் குழந்தையே கிடைத்தது. அந்தக் குழந்தைக்கு மர்யம் எனப் பெயர் சூட்டினார். அந்தக் குழந்தையையும் அதற்குக் கிடைக்கும் குழந்தையையும் அல்லாஹ் ஷைத்தானிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்றும் பிரார்த்தித்தார். மர்யம் வளர்ந்தாள். பக்குவமும் …

Read More »

உயிருடன் உயர்த்தப்பட்ட ஈஸா நபி [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-39]

உயிருடன் உயர்த்தப்பட்ட ஈஸா நபி ஈஸா(அலை) அவர்கள் யூதர்களுக்கு மத்தியில் சத்திய சோதனை செய்தார். அவர் யூத மத குருக்களின் துரோகச் செயல்களைத் தோலுரித்தார். மதத்தின் பெயரால் நடக்கும் அக்கிரமங்களுக்கு எதிராக சாட்டையாகச் சுழன்றார். யூத மத குருக்கள், மதத்தின் பெயரில் செய்யும் சுரண்டல்கள் குறித்தும், மதத்தில் அவர்கள் செய்த இடைச் செருகல்கள் குறித்தும் அவர் போதனை செய்தார். யூதர்கள் சதி செய்வதில் வல்லவர்கள். துரோகம் செய்வது அவர்களின் கூடப் …

Read More »

ஈஸா நபியும்… அற்புதங்களும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-38]

ஈஸா(அலை) அவர்கள் தந்தை இல்லாமல் அற்புதமாகப் பிறந்தவர். அவரது தாயார் அன்னை மரியம்(அலை) அவர்கள் கற்பொழுக்கம் மிக்கவர்கள், இறை நம்பிக்கை உடையவர்களுக்கு அல்லாஹ் காட்டும் உதாரணமாகத் திகழ்ந்தார்கள். ஈஸா(அலை) அவர்கள் அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட இறைத்தூதராவார். அல்லாஹ் இறைத் தூதர்களை அனுப்பும்போது அவர்களுக்கு சில அற்புதங்களை வழங்குவான். அந்த அற்புதங்கள் அவர்கள் இறைத்தூதர்கள் என்பதற்கான ஆதாரமாக அமையும். அந்த அற்புதங்களை அவர்கள் நினைக்கும் போதெல்லாம் செய்ய முடியாது. அல்லாஹ்வின் அனுமதியுடன் தான் …

Read More »

சுலைமான் நபியும்… சாதுர்யமான தீர்ப்பும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-37]

தாவூத் நபியின் மகன்தான் சுலைமான் நபியாவார். இவர்கள் இருவரும் நபியாகவும் மன்னர்களாகவும் இருந்தனர். இவர்கள் மன்னர்கள் என்பதால் புதுப்புதுப் பிரச்சினைகள் இவர்களிடம் வருவதுண்டு. இவர்களில் சுலைமான் நபி மிகவும் நுட்பமாக, பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வு கூறுபவராக இருந்தார்கள். இதற்கு ஒரு உதாரணத்தைக் கூறலாம். ஒரே நேரத்தில் இரு சகோதரிகளுக்கு குழந்தைகள் கிடைத்தன. அந்த இரு குழந்தைகளில் ஒரு குழந்தையை ஓநாய் தூக்கிச் சென்று விட்டது. இருக்கும் குழந்தைக்கு இருவரும் உரிமை …

Read More »

அழிக்கப்பட்ட கிடங்குவாசிகள்-2 [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-36]

அழிக்கப்பட்ட கிடங்குவாசிகள்-1 [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-35] அந்தக் கொடுங்கோல் அரசனின் அரச சபையில் ஒரு பிறவிக் குருடன் இருந்தான். அவனுக்கும் செய்தி எட்டியது. அவன் நிறைய பரிசுப் பொருட்களை எடுத்துக் கொண்ட சிறுவனிடம் வந்தான். பொருட்களைக் காட்டி, “நீ என் கண்ணைக் குணமாக்கினால், இத்தனைப் பரிசுப் பொருட்களையும் உனக்குத் தருவேன்” எனக் கூறினான். அதற்கு சிறுவன், “என்னால் எவருடைய நோயையும் குணப்படுத்த முடியாது. அல்லாஹ் ஒருவனால் மட்டுமே நோய் நீக்க …

Read More »