Featured Posts
Home » பொதுவானவை » உங்கள் சிந்தனைக்கு » ஷைத்தானின் சதி வலையில் சிக்கி விடாதீர்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 062]

ஷைத்தானின் சதி வலையில் சிக்கி விடாதீர்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 062]

அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
“எம் பெற்றோரான ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கும், ஹவ்வா (அலைஹஸ்ஸலாம்) அவர்களுக்கும் மிக வெளிப்படையான எதிரியாக இருந்தது போலவே ஷைத்தான் எமக்கும் எதிரியாக இருக்கின்றான். அல்லாஹ்வின் அருளிலிருந்து எம்மை அவன் வெளியேற்றி, அல்லாஹ்வின் நரகத்திலும் அவனின் வேதனையிலும் எம்மைப் புகுத்திவிடவே அவன் விரும்புகின்றான்.

அல்லாஹ் கூறுகிறான்: “ஆதமுடைய சந்ததியினரே! ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவருடைய வெட்கத்தலங்களை அவர்களுக்குக் காட்டுவதற்காக அவர்கள் இருவருடைய ஆடையை அவர்களை விட்டும் களைந்து, அவர்களைச் சுவர்க்கத்திலிருந்து வெளியேற்றியது போல் உங்களையும் (ஏமாற்றி) குழப்பத்தில் ஆழ்த்திவிட வேண்டாம். நிச்சயமாக அவனும் அவனது பட்டாளமும் நீங்கள் அவர்களைப் பார்க்காத போதிலும் அவர்கள் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு நிச்சயமாக நாம் ஷைத்தான்களை நண்பர்களாக ஆக்கியுள்ளோம்”. (அல்குர்ஆன், 07:27)

மனிதனுடன் ஷைத்தான் வைக்கும் தொடர்பின் ஆரம்பம் மிகச்சாதாரணமானதாகத்தான் இருக்கும். சாதாரணமான சின்னதோர் பாவத்தைச் செய்யுமாறு மனிதனுக்கு ஏவி, அதை அலங்கரித்தும் காட்டுவான்; அதன் பின்னர், அதைவிடக் கொஞ்சம் பெரியதொரு பாவத்தின்பால் அவனை இழுத்துச் செல்வான்; இவ்வாறுதான் அவனது நகர்வு இருக்கும். முடிவில், பெரும்பாவங்களில் கொண்டுபோய் அவனை விழுத்தாட்டி விடுவான்!.
அல்லாஹ்வின் அடியார்களே! உதாரணத்திற்கு போதைப்பொருட்களுக்கு அடிமையான அதிகமானோரின் ஆரம்ப நிலை எப்படியிருந்தது என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள்!!.

தீய நண்பர்களின் நட்பை (முதலில்) ஷைத்தான் அவர்களுக்கு அலங்கரித்துக் காட்டினான்; அந்தத் தீய நண்பர்களோடு இவர்கள் நட்பு கொண்டபோது அவர்கள் போன்று இவர்களும் புகைக்கக்கூடியவர்களாக மாறினார்கள். பின்னர், ஷைத்தான் இவர்களை ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு கட்டத்திற்கு நகர்த்திக்கொண்டே சென்று முடிவில், போதைப்பொருட்களுக்கு அடிமையான அவ்விடயத்தில் கொண்டுபோய் அவர்களைத் தள்ளிவிட்டதைப் போன்று இவர்களையும் தள்ளிவிட்டான். மேலும், மானக்கேடான செயலைக்கொண்டு சோதிக்கப்பட்டவர்களின் ஆரம்ப நிலை எப்படியிருந்தது என்பதையும் கொஞ்சம் சிந்தனை செய்து பாருங்கள்!!

அந்நிய பெண்களைப் பார்த்தல், தரங்கெட்ட சஞ்சிகைகளிலோ அல்லது ஒழுக்கத்தைத் தாழ்நிலைக்குக் கொண்டு செல்லும் திரைப்படங்களிலோ வருகின்ற அருவருக்கத்தக்க காட்சிகளைப் பார்த்தல் போன்ற அல்லாஹ் ஹராமாக்கியிருக்கும் விடயங்களில் பார்வையைச் செலுத்துவதை (நல்லதாக) ஷைத்தான் இவர்களுக்கு அலங்கரித்துக் காட்டினான். பின்னர், ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு கட்டத்திற்கு இவர்களை அவன் நகர்த்திக் கொண்டே சென்று முடிவில் இவர்களை குழப்பத்திலிலும் மோசத்திலும் தள்ளி விட்டான். அதிலிருந்து மீட்சிபெற முடியாதவர்களாக இவர்களும் ஆகிவிட்டார்கள்!.

என்றாலும் அல்லாஹ், தன்னைப் பயந்து வாழும் தன் அடியார்களை ஷைத்தானின் சூழ்ச்சியிலிருந்தும் அவனின் வழிகேட்டிலிருந்தும் பாதுகாப்பது அல்லாஹ்வின் அருளில் உள்ளதாகும். இப்லீஸ் சொன்னதாக அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்: “எனது இரட்சகனே! அப்படியானால் அவர்கள் எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் வழங்குவாயாக! என அவன் கேட்டான்.

  • நிச்சயமாக நீ அவகாசம் அளிக்கப்பட்டவர்களில் உள்ளவன் என (அல்லாஹ்) கூறினான்.
  • குறிப்பிட்ட நேரத்தின் நாள் வரை (அவகாசம் அளிக்கப்பட்டுள்ளாய் என்றும் கூறினான்).
  • ‘எனது இரட்சகனே! நீ என்னை வழிகேட்டில் விட்டு விட்டதால் நிச்சயமாக நான் பூமியில் அவர்களுக்கு (ப் பாவங்களை) அலங்கரித்துக் காட்டி, அவர்கள் அனைவரையும் வழிகெடுப்பேன்!’ என்று கூறினான்.
  • அவர்களில் தேர்வு செய்யப்பட்ட உனது அடியார்களைத் தவிர (மற்றவர்களை வழிகெடுப்பேன்!).
  • ‘இதுவே என்னிடம் உள்ள நேரான பாதையாகும்’ என (அல்லாஹ்) கூறினான்.
  • வழிகேடர்களில் உன்னைப் பின்பற்றுவோரைத் தவிர, நிச்சயமாக எனது அடியார்கள் மீது உனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை (என்றும் கூறினான்)”
    [அல்குர்ஆன், 15:36 – 42]

{ நூல்: ‘அல்முஹ்தார் லில்ஹதீசி fபீ ஷஹ்ரி ரமழான்’,பக்கம்: 71,72,74 }

قال العلّامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:-
“فالشيطان عدوّ لّنا ظاهر العداوة كما كان عدوّا لأبوينا، ويريد إخراجنا من رحمة الله تعالى وإدخالنا في ناره وعذابه. يقول الله تبارك وتعالى: {يا بني آدم لا يفتننّكم الشيطان كما أخرج أبويكم من الجنة ينزع عنهما لباسهما ليريهما سوءاتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم إنا جعلنا الشياطين أولياء للذين لايؤمنون } (سورة الأعراف، الآية – ٢٧)
وقد تكون بداية الشيطان مع الإنسان بسيطة بحيث يأمره ويزيّن له فعل معصية بسيطة ثم يجرّه بعدها إلى فعل ما هو أكبر منها وهكذا حتى يوقعه في الموبقات.
وانظروا عباد الله إلى بداية كثير من المدمنين على المخدرات مثلا كيف كانت!!، لقد زيّن لهم الشيطان مصاحبة الأشرار فلما صاحبوهم صاروا يدخّنون مثلهم ثم لم يزل ينتقل بهم من مرحلة إلى مرحلة حتى أوقعهم فيما أوقعهم فيه. وانظروا أيضا إلى الذين ابتلوا بفعل الفواحش كيف كانت بدايتهم!! لقد زيّن الشيطان لهم إطلاق النظر فيما حرّم الله من النظر إلى النساء الأجنبيات، والنظر إلى الصور الخليعة، سواء في المجلات الماجنة أو الأفلام الساقطة، ثم لم يزل ينقلهم من طور إلى طور حتى وقعوا في الفساد وصاروا لايصبرون عنه، ويسافرون إلى البلاد الإباحية من أجله.
ومن رحمة الله تعالى أنه يحمي عباده المتقين من كيد الشيطان وإغوائه، كما قال سبحانه وتعالى مخبرا عن إبليس أنه قال: {قال ربّ فأنظرني إلى يوم يبعثون

  • قال فإنك من المنظرين
  • إلى يوم الوقت المعلوم
  • قال ربّ بما أغويتني لأزيّننّ لهم في الأرض ولأغوينّهم أجمعين
  • إلا عبادك منهم المخلصين
  • قال هذا صراط عليّ مستقيم
  • إن عبادي ليس لك عليهم سلطان إلا من اتّبعك من الغاوين

}
( سورة الحجر، الآيات ٣٦-٤٢)
{ المختار للحديث في شهر رمضان، ص – ٧١،٧٢،٧٤ }

தமிழில்:
அஷ்ஷெய்க் N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா
[ 08/06/2018 ]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *