Featured Posts
Home » சட்டங்கள் » ரமளான் » ரமளானும் ஈமானும்

ரமளானும் ஈமானும்

ரமளான் ஈமானுக்கு புத்துயிர் ஊட்டும் வசந்தகாலம் மரணித்த உள்ளங்கள் உயிரோட்டம் பெறுவதற்கும் அல்லாஹ்வை மறந்தவர்கள் அவனை நினைவு கூருவதற்கும் பாவிகள் பவமன்னிப்புக்கோருவதற்கும் முஃமின்கள் அனைவரும் கருணை யாளனின் வாசலில் நின்று:

“எங்கள் இரட்சகனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் – நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்”.7:23

என்று பிரார்த்திப்பதற்குமுரிய காலம்
மனிதன் எப்போதும் ஒரேநிலையில் சீராக இருப்பதில்லை அவனது வாழ்வில் ஏற்ற தாழ்வுகள் வருவது வாடிக்கை சில நேரம் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் வேறு சந்தர்பங்களில் சோகமாக காட்சியளிப்பார்கள் சிலபோது இதற்கு மாற்றமாகவும்.

இன்னும் சிலபேர் வசதியாக இருந்து ஏழ்மைநிலைக்கு வந்துவிடுவார்கள்.

உங்களுக்கு ஒரு காயம் ஏற்பட்டது என்றால், அதே போன்று மற்றவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது; இத்தகைய (சோதனைக்) காலங்களை மனிதர்களிடையே நாமே மாறி மாறி வரச் செய்கின்றோம்; இதற்குக் காரணம், ஈமான் கொண்டோரை அல்லாஹ் அறிவதற்கும், உங்களில் உயிர்த் தியாகம் செய்வோரை தேர்ந்தெடுத்துக் கொள்வதற்குமே ஆகும்; இன்னும், அல்லாஹ் அநியாயம் செய்வோரை நேசிப்பதில்லை 3:140

இத்தகைய நிலைகளை அல்லாஹ் மனிதனை சோதிப்பதற்காக மாறிமாறி வரச்செய்கிறான்
வாழ்க்கையின் ஏற்ற தாழ்வு போன்றுதான் நமது நம்பிக்கையும் அதிலும் ஏற்ற தாழ்வு நிகழ்வது வாடிக்கைதான் எல்ல காலத்திலும் நேரத்திலும் ஒரே சீராண ஈமானுடன் இருப்பது மனிதனுக்கு இயலாத காரியம் எனவே தான் நபிصلى الله عليه وسلم அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.

ஆடை இற்று போய்விடுவதைப்போன்று உங்களின் உள்ளங்களில் இருக்கும் ஈமானும் இற்றுபோய் விடும் எனவே உங்களின் உள்ளங்களில் இருக்கும் ஈமானை புதுப்பிப்பதற்கு அல்லாஹ்விடம் கேளுங்கள். அறிவிப்பாளர் அம்ரு பின் ஆஸ் (ரளி) நூல் முஸ்தத்ரகுல் ஹாகிம் 5

நமது ஈமானை புதுப்பித்துக்கொள்வதற்காக நமக்கு வழங்கப்பட்ட மிகச் சரியான வாய்ப்பு தான் ரமளான் என்பது
நாம் நமது ஈமானையும் அமலையும் சீராக்கிகொள்வதற்காகத் தான் அல்லாஹ் சுவனத்தின் வாசலை திறந்து வைத்து நரகத்தின் வாசலை மூடிவிடுகிறான் இன்னும் மனிதனின் எதிரியும் அவனது அமல்களை பாழாக்கக்கூடியவனுமான ஷைதானுக்கு விலங்கிடுகிறான்.

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்
ரமளான் மாதம் வந்துவிட்டால் சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. நகரத்தின் கதவுகள் மூடப்பட்டுவிடுகின்றன.ஷைத்தான்களுக்குவிலங்கிடப்படுகிறது. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நூல் ஸஹீஹுல் புஹாரி 3277

இத்தகைய அழகான வாய்ப்பு ஒருங்கபெற்றிருப்பதால் நமது ஈமானை மெருகேற்ற ரமளான் மிகச்சிறந்த காலகட்டமாக உள்ளது அதே போன்று ரமளானில் நாம் நிறைவேற்றக்கூடிய அமல்கள் அல்லாஹ்விடம் ஏற்றுகொள்ளப்படவேண்டுமானால் ஈமானுட னும், நன்மையை எதிர்பார்த்தும் அந்த அமல்கள் நிறைவேற்றப்படவேண்டுமென்பதாக மார்க்கம் நிபந்தனை விதித்துள்ளது நபிصلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்

‘நம்பிக்கை கொண்டு (நற் கூலியை) எதிர்பார்த்து ரமலான் மாதத்தில் நின்று வணங்குகிறவரின் முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடும்’ அறிவிப்பவர் அபூ ஹுரைரா(ரலி) நூல் ஸஹீஹுல் புஹாரி 37

நம்பிக்கை கொண்டும், நன்மையை எதிர்பார்த்தும் ரமலான் மாதம் நோன்பு நோற்பவரின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நூல் ஸஹீஹுல் புஹாரி 38

ரமளானில் நாம் இறையச்சத்தை வளர்த்துகொள்வதற்காக பகல் பொழுதில் நோன்பு நோற்க்கிறோம்.

அல்லாஹ்வின் மன்னிப்பை பெருவதற்காகவும் அவனுக்கு நன்றிசெலுத்துவதற்காகவும் இரவு வணக்கங்களில் மூழ்கிவிடுகிறோம். இன்னும் அவனது நேரான வழியை தெளிவுபடுத்தக்கூடிய சங்கைமிக்க வேதத்தை இரவிலும் பகலிலும் படித்துகொண்டிருக்கிறோம் கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்குவேண்டி அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புகோருகிறோம் இவ்வாறு நாம் நம்முடைய ஈமானை வலுப்படுத்தி வரக்கூடிய காலத்திற்காக தயார் ஆக வேண்டும் அதற்காக இந்த ரமளானை ஈமனோடு எதிர்கொண்டு ஈமானுக்கு உரமூட்டுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *