Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » நேர்வழியில் திகழும் ஒருகூட்டம்.

நேர்வழியில் திகழும் ஒருகூட்டம்.

1249. என் சமுதாயத்தினரில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் ஆணை (இறுதிநாள்) தம்மிடம் வரும் வரை (சத்தியப் பாதையில் சோதனைகளை) வென்று நிலைத்திருப்பார்கள். (இறுதி நாள் வரும்) அந்த நேரத்திலும் அவர்கள் மேலோங்கியவர்களாகவே இருப்பார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :3640 முகீரா இப்னு ஷுஅபா (ரலி).


1250. என் சமுதாயத்தினரில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் கட்டளையைச் செயல்படுத்திய வண்ணமே இருப்பார்கள். அவர்களுக்கு இடைஞ்சல் செய்பவர்கள் அவர்களுக்குத் தீங்கிழைக்க முடியாது. அவர்களை எதிர்ப்பவர்களும் அவர்களுக்குத் தீங்கு செய்யமுடியாது. இறுதியில், அவர்கள் அதே நிலையில் நீடித்திருக்க, அல்லாஹ்வின் ஆணை (இறுதி நாள்) அவர்களிடம் வரும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3641 முஅவியா (ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *