Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » குழப்பங்கள்: யஹ்ஜூஜ் மஹ்ஜூஜ் வருகை.

குழப்பங்கள்: யஹ்ஜூஜ் மஹ்ஜூஜ் வருகை.

குழப்பங்களும் கியாமநாளின் வருகையும்.

1829. நபி (ஸல்) அவர்கள் (ஒருமுறை) என்னிடம் நடுக்கத்துடன் வந்து, வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணத்தால் அரபுகளுக்குக் கேடு நேரவிருக்கிறது. இன்று யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் தடைச் சுவர் இதைப் போல் திறக்கப்பட்டு விட்டது” என்று தம் கட்டைவிரலையும் அதற்கடுத்துள்ள விரலையும் இணைத்து வளையமிட்டுக் காட்டியபடி கூறினார்கள். உடனே, நான் ‘இறைத்தூதர் அவர்களே! நம்மிடையே நல்லவர்கள் இருக்க, நாம் அழிந்து விடுவோமா?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘ஆம்; தீமை பெருகிவிட்டால்.” என்றார்கள்.

புஹாரி : 3346 ஜைனப் பின்த் ஜஹ்ஸ் (ரலி).

1830. நபி (ஸல்) அவர்கள், யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் தடைச் சுவரிலிருந்து அல்லாஹ் இதைப்போல் (சிறிது) திறந்து விட்டான்” என்று கூறி தம் கையால் (அரபி எண் வடிவில்) 90 என்று மடித்துக் காட்டினார்கள்.”

புஹாரி : 3347 அபூஹூரைரா (ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *