Featured Posts
Home » பொதுவானவை » தஞ்சை முஸ்லிம்களைக் குறிவைக்கும் சங் பரிவாரங்கள்

தஞ்சை முஸ்லிம்களைக் குறிவைக்கும் சங் பரிவாரங்கள்

மக்களாட்சி நடைபெறும் ஒரு குடியரசின் அடிப்படை நிலைநிற்றலுக்கு அவசியமான தூண்களில் தலையாயது கருத்துச் சுதந்திரமாகும். உண்மைகளை வெளிப்படுத்த எந்தக் கட்டுப்பாடும் இல்லாத நிலை ஓர் இடத்தில் இருந்தால் மட்டுமே அங்கு சுதந்திரம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று அர்த்தம் கொள்ள முடியும். ஏனெனில் கருத்துச் சுதந்திரம் என்பது ஒரு நாட்டின் தலையெழுத்தையே மாற்றியமைக்கும் வல்லமை கொண்டதாகும்.

அந்த வகையில் சுதந்திர இந்தியாவில் கருத்துக்களை வெளியிட அனைவருக்கும் முழு உரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவ்வாறு முழுமையாக வழங்கப்பட்ட ஓர் உரிமையை, மேற்கத்திய ஏகாதிபத்தியவாதிகளுக்குப் பிறகு இந்தியாவை முழுமையாகக் கொள்ளை கொள்ளத் துடிக்கும் இந்துத்துவ சங்பரிவாரக் கூட்டங்கள் முழுமையாக ஆக்ரமித்துக் கொண்டு, இந்நாட்டின் மைந்தர்களான குடிமக்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டவும், கலகம் விளைவிக்கவும் தக்க வகையில் உண்மைக்கு புறம்பான செய்திகளை தொடர்ந்து திரித்து வெளிப்படுத்தி வருகின்றன.

ஒரு பொய்யை வெவ்வேறு விதமாகத் திரும்பத் திரும்பச் சொன்னால், நாளடைவில் அது உண்மையாகிவிடும் என்பது ஹிட்லர்-கோயபல்ஸ் யுக்தி. நாஜியிச ஹிட்லரின் அடிவந்த சங்பரிவாரங்களும் இதே பாணியை பின்பற்றி வருகின்றனர்.

சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டில் நடந்த அனைத்து கலவரங்களுக்கும், இனப்படுகொலைகளுக்கும் இவ்வாறு உண்மைக்குப் புறம்பாக வெளிப்படுத்தப்படும் செய்திகளும், கட்டுரைகளும் முக்கிய பங்கு வகித்திருக்கின்றன. இதனை நன்றாக உணர்ந்து வைத்துள்ளதாலேயே சங்க்பரிவார சக்திகள் இவ்வாறு உண்மைக்குப் புறம்பான செய்திகளைத் தொடர்ந்து பரப்பி துவேஷத்தை வளர்த்து வருகின்றன.

உலகின் அதிவேக வளர்ச்சியில் இன்று மிகப்பெரும் சக்தியாக ஊடகத்துறையில் உருவெடுத்துள்ளது இணையமாகும். இங்கு கருத்துக்களை வெளியிட எவருக்கும் எவ்வித கட்டுப்பாடும் கிடையாது. யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமென்றாலும் செய்திகளை வெளியிடத் தக்க விதத்தில் இணையம் அமைந்துள்ளது தான் இதன் காரணமாகும்.

இந்தியாவின் எல்லாத்துறையிலும் மற்றவர்கள் கண் உணரும் முன்பே நுழைந்து அவ்விடங்களை ஆக்ரமித்துக் கொண்ட சங்க்பரிவார சக்திகள் இன்றைய அதிசக்தி வாய்ந்த இந்த ஊடகத்தையும் தங்களின் லட்சியத்திற்காக மிக அதிகமாக பயன்படுத்த தொடங்கி விட்டனர்.

கடந்த இரு தினங்களில் பெங்களூரில் நடந்த தென்னிந்திய முஸ்லிம் அமைப்புக்களின் கூட்டமைப்பான பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா (Popular Front of India) நடத்திய எம்பவர் இந்தியா (Empower India) மாநாட்டில் கலந்து கொண்ட கர்நாடக உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி கோ. சென்ன பாஸப்பா கூறிய வாசகங்கள் கவனிக்கப்பட வேண்டியதாகும்.

இந்தியாவின் கிராமப்பகுதிகளில் கூட இன்று ஃபாஸிஸம் பரவத் தொடங்கியுள்ளது. அம்பேத்கர் மற்றும் பகத்சிங் போன்றவர்களை தங்களது வளர்ச்சிக்காக ஃபாஸிஸ்டுகள் பயன்படுத்துகின்றனர். இந்தியாவுக்கு எதிராக செயல்பட்ட தேச துரோகியான சாவர்க்கரின் படத்தை இந்திய நாடாளுமன்றத்தில் வைக்கும் அளவுக்கு இன்று நிலை மாறியுள்ளது“.

நீதித்துறையின் உயர்ந்த இடத்தில் இருந்த ஒருவர் கூறியிருக்கும் இவ்வாசகங்கள் இந்தியாவில் இந்துத்துவ ஃபாஸிஸ்டுகளின் வளர்ச்சியைத் தெளிவாக உணர்த்துகிறது. இவர்களின் இந்த வளர்ச்சிக்கு ஊடகங்களின் பொய் பிரச்சாரம் சிறப்பான பங்கு வகித்துள்ளது என்பதை மறுக்க இயலாது. இந்நிலை மிகவும் கவலைக்குரியதாகும்.

ஊடகத்திற்கு என்று ஒரு தர்மம் உண்டு. அந்த தர்மத்தை இன்று காற்றில் ப

13 comments

  1. மரைக்காயர்

    // இந்த அளவுக்கு இருக்கிறது சிஃபி தமிழ் தளத்தின் எழுத்து நேர்மையும் கருத்துச் சுதந்திரமும்.
    சங்பரிவாரத்தின் திட்டமிட்ட வளர்ச்சிக்கு பல்வேறு வகையில் துணைபோகும் இது போன்ற ஊடகங்களின் உண்மை நிலையை சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும்.//

    இந்த விஷயத்தில் சிஃபி தளம் தன்னை சரியாக அடையாளம் காட்டிக் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.
    இவர்களெல்லாம் தங்களை தமிழ்ப் பற்றாளர்கள் போல காட்டிக் கொள்வதுதான் வேதனை!

  2. கரு.மூர்த்தி

    எது எப்படியென்றாலும் நீங்கள் ரயிலில் குண்டு வைப்பது நிற்கப் போகிறதா என்ன ?

    குண்டுக்களால் சிதற காத்திருக்கு ஒரு இந்திய அப்பாவி

  3. முஸ்லீம்கள் யூதர்கள், பிறர் குறித்து செய்யாத பொய்ப் பிரச்சாரமா. இல்லை மேலை நாடுகளுக்கெதிராக பரப்பாத கட்டுக்கதையா. சவுதியிலிருந்தும், வேறு பல இடங்களிலிருந்து கிடைக்கும் பணத்தில் நீங்களெல்லாம் இணையத்தில் பரப்பாத பொய்களா இல்லை வெறுப்பா. 9/11 தாக்குதல் கூட யூதர் சதி என்று கூசாமல் பொய் கூறியவர்களாயிற்றே நீங்கள். நீங்களெல்லாம் உண்மை குறித்து பேசினால் அதில் என்ன உண்மை இருக்கும் என்று தெரியாதா என்ன.தமிழில் எத்தனை இஸ்லாமிய இணையதளங்களில் எந்த விதமான பிரச்சாரம் நடைபெறுகிறது , அதில்
    பயங்கரவாதத்தினை ஆதரிப்பது யார் என்பதெல்லாம் படிப்பவர்களுக்கு தெரியும்.

  4. மதுசூதனன்

    //நீதித்துறையின் உயர்ந்த இடத்தில் இருந்த ஒருவர் கூறியிருக்கும் இவ்வாசகங்கள் இந்தியாவில் இந்துத்துவ ஃபாஸிஸ்டுகளின் வளர்ச்சியைத் தெளிவாக உணர்த்துகிறது.//

    இந்துத்வா ஃபாசிஸ்டுகள் அப்படினு நீதிபதி சொன்னாரோ? ஏன்ங்க சும்மா சாதிச் சண்டையையும் மதச்சண்டையையும் வளர்க்கறீங்க? நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை என்றே வைத்துக் கொள்வோம். எனது ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்.

    உலகின் பல்வேறு பகுதிகளில் பரவி வரும் தீவிரவாதமும் தீவிரவாதிகளும் பெரும்பாலும் இஸ்லாமியர்களாக மட்டுமே இருப்பது ஏன்?

    டிஸ்கி: எல்லா இஸ்லாமியர்களும் தீவிரவாதிகள் என்று நான் கூறவில்லை. எனக்கும் நல்ல இஸ்லாமிய நண்பர்கள் உள்ளனர்.

  5. மிதக்கும் வெளி

    தொடர்ந்து தொய்வில்லாது இந்துத்துவத்தின் கோரமுகத்தைத் தோலுரிக்கவும்.

  6. ஃஃபயங்கரவாதத்தினை ஆதரிப்பது யார் என்பதெல்லாம் படிப்பவர்களுக்கு தெரியும்.ஃஃ

    அது இருக்கட்டும் நண்பரே!!!

    முதலில் நீங்க படிச்ச முஸ்லீம்கள் செஞ்சதா சொல்ற அந்த பொய்களையெல்லாம் கொஞ்சம் அவுத்து விடுங்க. தெரிஞ்சுகிறலானு தான். எப்படி சார் அரசியல் வாதிங்க மாதியே பேசுறீங்க. அரசியல் வாதிங்க கிட்ட உழலப் பத்தி கேட்ட அவங்க மக்களை பாத்து எதிர்கட்சி காரங்;க செய்யலையா ஏன் எங்கலை மட்டும் கேட்கறீங்கனு சொல்லுவங்க. அதுமாதிரி ஒரு கூட்டம் செய்ற தப்பை கண்டிக்காமல் அத நியாய படுத்த மற்றவங்க தப்பு (அரசியல் வாதிங்க கிட்டயாவது புரூபு இருக்கு அதுவும் உங்ககிட்ட இல்லாமல்) செய்யுறத சொல்லி நியாயப் படுத்த முனையறது தான் உங்களுடைய நடுநிலைமையாக்கும். நல்ல நடுநிலைமை. கீப் ட் அப்புங்கல.

  7. நல்லடியார்

    //நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை என்றே வைத்துக் கொள்வோம். எனது ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்.

    உலகின் பல்வேறு பகுதிகளில் பரவி வரும் தீவிரவாதமும் தீவிரவாதிகளும் பெரும்பாலும் இஸ்லாமியர்களாக மட்டுமே இருப்பது ஏன்?//

    மதுசூதனன்,

    உலகில் இஸ்லாத்தின் தொடக்கம் ஆதம்-ஹவ்வாவிலிருந்தும் இறுதியாக முழுமைப்படுத்தப்பட்டது முஹம்மது நபியின் மூலமும் என்பது இஸ்லாமியர்கள் நம்பிக்கை. வரலாற்றுக் குறிப்புகளில் இஸ்லாம் கடந்த 1428 ஆண்டுகளாக அறியப்பட்டு வருகிறது. இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்பட்டவர்களில் அடிமைகள் முதன் மாமன்னர்கள்வரை அடங்குவர். வரலாறு இவ்வாறிருக்க, ‘இஸ்லாமியத் தீவிரவாதம்’ என்ற சொல்லாடல் இஸ்லாத்துடன் எத்தனை நூற்றாண்டுகளாக பிரபலப்படுத்தப் பட்டுள்ளது என்று உலக வரலாற்றைப் சற்று புரட்டிப் பார்த்தால், தீவிரவாதிகள், தீவிரவாதம் என்பதற்கான உண்மையான அர்த்தம் விளங்கும்.

    சிலமாதங்களுக்கு முன் தமிழ் வானொலி செய்தியில் பாலஸ்தீனர்கள் இஸ்ரேலிய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியதையும், விடுதலைப் புலிகள் இலங்கை ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியதையும் சொன்னார்கள். பாலஸ்தீனர்களை தீவிரவாதிகள் என்றும் புலிகளை தமிழ் போராளிகள் என்றும் ஒரேநேரத்தில் செய்தியில் சொன்னார்கள். இலங்கைத் தமிழர்களும், பாலஸ்தீனர்களும் உரிமைகளுக்காகவே போராடி வருகிறார்கள் எனும்போது ஒருசாரார் தீவிரவாதியாகவும் இன்னொரு சாரார் போராளியாகவும் சொல்லப்படுவது ஏன்?

    இந்திய சுதந்திரப்போராளிகளைப் பற்றி பிரிட்டீஸ் ஆவணங்களில் தேடினால், இந்திய தீவிரவாதிகள் என்றே சொல்லப்பட்டிருப்பர். நம் நாட்டு சுதந்திரத்திற்காக போராடியவர்கள் நாம் தியாகிகள் என்று போற்றுகிறோம்!

    இந்த வேறுபாடுகளைப் புரிந்து கொண்டால் உங்கள் கேள்விக்கான விடை தெளிவாகும் என்று நம்புகிறேன்.

  8. கரு.மூர்த்தி

    //தொடர்ந்து தொய்வில்லாது இந்துத்துவத்தின் கோரமுகத்தைத் தோலுரிக்கவும்.

    மிதக்கும் வெளி//

    உங்க பின் மற்றும் முன்நவீனமெல்லாம் இங்க இந்து மதமிருக்கும் வரைதானய்யா , என்று முஸ்லீம்களால் ஒரு நாடு ஆக்ரமிக்கபடுகிறதோ அன்று பின்நவீனதுவத்தின் பின்புறம் குண்டு வைக்கபடும் ,

  9. மதுசூதனன்

    //மதுசூதனன்,

    உலகில் இஸ்லாத்தின் தொடக்கம் ஆதம்-ஹவ்வாவிலிருந்தும் இறுதியாக…//

    இதற்கு பதில் எழுத ஆரமித்து அது மிகவும் நெடிய ஒன்றாய் போனதால் அதை தனியொரு பதிவாய் இட்டுள்ளேன். பதில் காண இங்கே சொடுக்கவும்.

  10. நெடுங்குழைகாதன்

    கரு.மூர்த்தி என்ற பெயரில் வந்தவர் தன் குடுமியை மறைக்க மறந்து ஏற்கனவே தன் சகா ஒருவரின் பதிவில் தான் யார் என தெரிவித்து விட்டதால் அந்த ஆளின் கமெண்டை சீரியசா எடுத்துக் கொள்ளவேண்டாம்.

    டமில் ரப்பர் நல்லா காமெடியா எழுதறார். அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுங்கள் நல்லடியார்.

    மது சூது என்ற பெயரில் எழுதுபவரின் சூது ஏற்கனவே தாசு, ஜோ போன்றவர்களால் வெளிக்காட்டப் பட்டுவிட்டது.

    அதனால் யாராச்சும் கொஞ்சம் சீரியசான கமெண்ட் போட்டு விவாதம் செய்யவும்..

  11. நல்லடியார்

    //இஸ்லாமியர்களின் சுதந்திரத்தை ஹிந்துக்கள் முடக்குவதாய் கூக்குரல் எழுப்பும் இவர்//

    மதுசூதனன்,

    எங்கு நான் அவ்வாறு சொல்லியுள்ளேன் என்று சுட்டினால் நன்றாக இருக்கும். இப்பதிவின் நோக்கம் மலர் மன்னன் என்பவரால் தஞ்சை முஸ்லிம்கள் குறித்து வைக்கப்பட்டுள்ள அபத்தக் கருத்துக்களுக்கான எதிர்வினையே தவிர நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டது போல், இந்துக்கள் முஸ்லிம்களை ஒடுக்குகிறார்கள் என்று நான் நினைக்கவும் இல்லை; அவ்வாறு எழுதவும் மாட்டேன். மீண்டும் ஒருமுறை பதிவைப் படித்துப் பாருங்கள்.

    //கடந்த சில ஆண்டுகளாகத்தான் “இஸ்லாமிய தீவிரவாதிகள்” எனும் சொல்லாடல் புழக்கத்தில் இருப்பதாய்க் கூறும் அவர் கத்தி முனையில் எத்தனை பேற் இஸ்லாத்துக்கு மதமாற்றம் செய்ய நிர்பந்திக்கப் பட்டனர் என்பதை என்னைப் பார்க்கச் சொன்ன அதே வரலாற்றை புரட்டிப் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டுகிறேன். //

    இன்னும் எத்தனை நாளைக்கு இந்த காலாவதியான பல்லவியை பாடிக் கொண்டிருப்பீர்கள்? கத்தி முனையில் மதம் மாற்றியவர்கள் அல்லது அவ்வாறு மாரியவர்கள் யாவர்? எட்டு நூற்றாண்டுகள் இந்தியாவை ஆண்ட மொகலாயர்களில் எத்தனை பேர் கத்தி முனையில் இந்துக்களை மதம் மாற்றினார்கள்? அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இஸ்லாம் வேகமாக வளர்ந்து வரும் மதமாக இருக்கிறதே? எந்த தாலிபான் தளபதி அங்கு கத்தியுடன் மதம் மாற்றி வருகிறார்? என்றெல்லாம் சொன்னீர்கள் என்றால் உங்கள் வாதத்தில் உண்மையிருக்கும். ஒருவாதத்திற்காகவேனும், கத்தி முனையில் இஸ்லாம் பரவியதாகக் கொண்டால், அவ்வாறு உயிருக்குப் பயந்து ! மதம் மாறியவர்கள் இன்றும் இஸ்லாத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக பற்றிப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் என்ன?

    //மேலும் நல்லடியார் அவர்கள் இஸ்லாமியத் தீவிரவாதிகள் அனைவரும் போராளிகளேயொழிய தீவிரவாதிகள் இல்லை என்று பரைசாற்றுகிறார்.போராளிகள் பொதுமக்களைக் கொல்வதில்லை. தீவிரவாதிகள் தாம் அதைச் செய்கின்றனர். 9/11, ப்ரிட்டிஷ் ரயில் மற்றும் பஸ்களில் குண்டு வெடிப்பு எல்லாவற்றுக்கும் மேல் நம் நாட்டில் நேற்று நடந்த சம்ஜௌதா விரைவு ரயிலில் நடந்த குண்டு வெடிப்பு. இவற்றை எல்லாம் போராட்டம் என சித்தரிக்க நினைப்பது எவ்வளவு தூரம் கீழ்த்தரமானது என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. //

    சிஃபியில் மலர்மன்னன் செய்த புரட்டுகளையே உங்கள் பதிவில் நீங்கள் செய்துள்ளீர்கள். அவசியமில்லாமல் ஒரு உயிரைக் கொல்ல எந்த தனிமனிதனுக்கும்/இயக்கத்திற்கும் உரிமையில்லை;ஒரு உயிரை வாழவைத்தவன் ஒரு சமூகத்தையே வாழ வைப்பனவானான்; அவ்வாறே உயிரைக் கொல்பவன் சமூகத்தையே கொன்றவனைப் போன்றவன் என்று சொல்லும் குர்ஆனைப் பின்பற்றும் எவரும் தீவிரவாதம் செய்ய மாட்டார்கள்.

    பாலஸ்தீனர்கள்-இலங்கை விடுதலைப் புலிகள் இருவருமே உரிமைக்காகப் போராடிக் கொண்டிருக்கும்போது, பாலஸ்தீனர்கள் மட்டும் தீவிரவாதிகள் என்று சொல்லப்படுவது, அவ்வாறு போராடி வருபவர்கள் முஸ்லிம்கள் என்ற காழ்ப்புணர்வில்தானே? இதையே நான் ஒப்பிட்டேன்.

    அமெரிக்காவின் 9/11 தாக்குதலில் இழந்த உயிர்களைவிடப் பலமடங்கு அமெரிக்கா அதற்கு சம்பந்தமில்லாத அப்பாவி ஈராக்,ஆப்கான் உயிர்களைப் பறித்துள்ளது. 9/11 க்காகப் பரிதாப்படும் அனுபாபிகளின் பாழும் மனது ஈராக்,ஆப்கான் மக்களுக்காக ஏன் இரங்க மறுக்கிறது என்பதுதான் வேதனையாக இருக்கிறது.

  12. நல்லடியார்

    //எது எப்படியென்றாலும் நீங்கள் ரயிலில் குண்டு வைப்பது நிற்கப் போகிறதா என்ன ?//

    கரு.மூர்த்தி,

    உங்கள் பின்னூட்டங்களை சற்று பின்னோக்கிப் பாருங்கள். யார் அதிகம் குண்டு வைத்துள்ளார்கள் என்பது விளங்கும்!

    //என்று முஸ்லீம்களால் ஒரு நாடு ஆக்ரமிக்கபடுகிறதோ அன்று பின்நவீனதுவத்தின் பின்புறம் குண்டு வைக்கபடும்,//

    இவ்வாறான மிகையான அச்சமெல்லாம் இந்தக்காலத்தில் உமக்கு ஏனய்யா? முஸ்லிம்களிடமிருந்து பாதுகாக்கக்த்தான் எல்லா மட்டங்களிலும் உங்கள் பரிவாரங்கள் திரிசூலத்துடன் புகுந்துள்ளார்களே! இல்லாவிட்டால் உங்கள் அமெரிக்க, இஸ்ரேல் பெரியண்ணன்கள் பார்த்துக் கொள்வார்கள். நீங்கள் அமைதியாக சாகா, துர்க்காவாகினி பயிற்சிகள் செய்து வாருங்கள்.

  13. ஆழியூரான்.

    உண்மையான தஞ்சை விவசாயிகளின் வாழ்வியல் பிரச்னைகளைப் பேசாமல் இல்லாத விஷயங்களை ஊதி பெரிதாக்கும் இந்துத்துவ வாதிகளின் முகத்திரையை தொடர்ந்து வெளிப்படுத்துங்கள்.வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *