Featured Posts
Home » பொதுவானவை » தஞ்சை முஸ்லிம்களைக் குறிவைக்கும் சங் பரிவாரங்கள் (பகுதி 1)

தஞ்சை முஸ்லிம்களைக் குறிவைக்கும் சங் பரிவாரங்கள் (பகுதி 1)

மலர்மன்னன் என்பவரின் “கலைகள் தந்த தஞ்சை, கவலைகள் தருகிறது” தொடர் கட்டுரையை சிஃபி தமிழ்தளத்தில் படிக்க நேர்ந்ததும் அது குறித்து அத்தளத்தினருக்கு நான் எழுதிய மறுப்பு குறித்து அவர்கள் மவுனம் காத்து தங்கள் சார்பு நிலையை அப்பட்டமாக வெளிக்காட்டியது குறித்து முன்னுரையில் எழுதியிருந்தேன்.

முழுநேர இந்துத்துவா எழுத்தாளர்களை எல்லாம் விஞ்சும் விதமாக மலர்மன்னன் முஸ்லிம்களுக்கு எதிரான துவேசக் கருத்துக்களை அக்கட்டுரையில் எழுதியுள்ளார். வயிற்றுக்கு உணவின்றி எலிக்கறி திண்ணும் விவசாயிகளைப் பற்றியோ காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக இந்து அரசியல்வாதிகளைப் பற்றியோ கவலைப்படாமல், தஞ்சை மாவட்ட முஸ்லிம்களின் மதச்சடங்குகளிலும் நம்பிக்கைகளிலும் தலையிடுவதன் மூலம், அமைதியுடன் வாழும் தஞ்சை இந்து-முஸ்லிம்களிடையே மதமோதல்களுக்கான முதற்கட்ட வேலைகள் தொடங்கப்பட்டு விட்டதோ என்ற அச்சத்தை எழுப்புகிறது மலர்மன்னனின் சிஃபிக் கட்டுரை!

குஜராத்தில் நரேந்திர மோடி தலைமையிலான அரசபயங்கரவாதங்களுக்குப் பிறகும் ஓயாத சங்பரிவார நரமாமிச உண்ணிகள் தென்னிந்தியாவின் மங்களூர்-பெங்களூர் என தனது நச்சுக் கரங்களைப் பரப்பி, தற்போது தென் தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்ட முஸ்லிம்களைக் குறி வைத்துள்ளார்கள். விஜயபாரதம் மற்றும் இணைய ஊடகங்கள் மூலம் பல நச்சுக் கருத்துக்களைப் பரப்பி, தஞ்சை மாவட்ட முஸ்லிம்களுக்கு எதிரான மிகப்பெரும் சதிக்கு அடித்தளம் இட்டுள்ளனர்.

எங்கெல்லாம் இயலுமோ அங்கெல்லாம் இந்து-முஸ்லிம் ஒற்றுமை சீர்குலைத்து, கலவரங்களை ‘உற்பத்தி’ செய்து, பின்னர் ‘இந்து ஒற்றுமை மாநாடு’ என்ற வன்முறைக் கூட்டத்தை நடத்தி, அதன்மூலம் அப்பகுதி முஸ்லிம்களை அச்சுறுத்தி வைப்பதே சங்பரிவாரங்களின் கடந்தகால வரலாறாக இருக்கிறது. சமீப நிகழ்வான பெங்களூர் கலவரமும் இந்தவகையில்தான் ஏற்பட்டு, மத்திய அரசின் சாதுர்யமான துரித நடவடிக்கைகளால் தற்காலிகமாக ஓய்ந்துள்ளது. குஜராத்தில் முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்வதற்கு முன்பாக அனைத்து புள்ளி விபரங்களையும் திரட்டி, முன்னேற்பாடாக தாக்கப்பட வேண்டிய முஸ்லிம் வீடுகள், வணிக நிறுவனங்கள் பற்றிய ஸ்கெட்ச் போட்டு வைத்தே கலவரங்களில் இந்து பயங்கரவாதிகள் கச்சிதமாகச் செயல்பட்டு வந்துள்ளனர்.

மலர்மன்னன் அவர்களின் முஸ்லிம்களைப் பற்றிய வன்ம எழுத்துக்களை ஆழ்ந்து நோக்கினால், மதக்கலவரத்தை உண்டு பண்ணுவதற்கான சதிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டு விட்டதை ஓரளவு யூகிக்க முடிகிறது.

ஐம்பது ஆண்டுகளுக்குமுன் பக்ரீத் அன்று மாடுகளை வெட்டக்கூட மனம் வராத அளவுக்கு நமது பாரம்பரிய மரபுகளைமதித்த தஞ்சை மாவட்டத் தமிழ் முகமதியக் குடும்பங்கள் எங்கிருந்தோ ஒட்டகங்களை அதிக விலை கொடுத்து வரவழைத்துச் சட்டத்திற்குப்புறம்பாக வெட்டிக் கொண்டாடும் மனப்போக்கை இன்று மேற்கொண்டது ஏன்?

ஆண்டாண்டுகளாக அடக்கி வைக்கப்பட்டு ஏழ்மை நிலையிலேயே இருந்த ஓட்டு வங்கி முஸ்லிம்கள், கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பன்னெடுங்காலம் பின்தங்கியிருந்து,சமீப பத்துப் பதினைந்தாண்டுகளில் வளைகுடா நாடுகளில் இந்தியர்களுக்கான வேலைவாய்ப்புகள் திறந்து விடப்பட்ட பிறகே எஞ்சியதில் தகுதியான கடைநிலைப் பணிகளின் மூலம் கிடைத்த சம்பளத்தில் பொருளாதார ரீதியில் சற்று நிமிர்ந்துள்ளனர்.

பொங்கல், தீபாவளி போனஸ் போன்றவற்றை அந்தந்த நேரத்தில் கொடுத்து சந்தோஷப்படுத்தும் அரசுகள் பெருநாள் போனஸ் என்று முஸ்லிம்களின் பண்டிகைக் காலங்களில் கொடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *