Featured Posts
Home » பொதுவானவை » கார்குண்டு வெடிப்பும் இந்து தர்மமும்!

கார்குண்டு வெடிப்பும் இந்து தர்மமும்!

நேற்றுமுன்தினம் திண்டிவனம் அருகே நடந்த பயங்கர கார்குண்டு வெடிப்பு பற்றிய செய்தி நாட்டயே உலுக்கியது! இறந்தவர்கள் அப்பாவிகள் என்பதோடு ஆபத்திற்கு உதவச் சென்ற மனிதாபிமானிகள் என்பதை நினைக்கும்போது வேதனை அதிகரிக்கிறது! நடந்துவிட்ட துயரத்தில் ஒவ்வொருவருவரும் ஒவ்வொரு விதமாகப் பகிர்ந்து கொள்கின்றனர்.

ஆளும் கட்சியாக இருப்பதால் தி.மு.கவின் தொலைக்காட்சி செய்திகளில் ஆட்சிக்கு ஆபத்து வராதபடி மிகக்கவனமாக செய்திகளைச் சொல்லி வருகிறார்கள். சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்ற பல்லவிக்கு சுதி சேர்க்க அ.தி.மு.கவும் எதிர்க்கட்சிகளுக்கே உரித்தான கீழ்மட்ட அரசியல் நோக்கில் செய்திகளைச் சொல்லி வருகிறது. தமிழ்பத்திரிக்கைகளும் செய்திகளை வெளியிட்டுள்ளன. சொல்லி வைத்தாற்போல் எல்லா செய்திகளின் கோணமும் ஒரே நோக்கிலேயே உள்ளன.

இந்த வேதனையான நேரத்தில் வியப்பான விடயம் என்னவென்றால் இந்த பயங்கர குண்டுவெடிப்பை ஏதோ சாதாரண அசம்பாவிதம் நிகழ்ந்து விட்டது போன்றே எழுதி வருகின்றன. வாகனத்தின் உரிமையாளர் முதல் ஏற்றிச் சென்றவர்களின் பெயர்கள்வரை எல்லாமே இந்துக்களாக இருக்கின்றன! இதே அந்த வாகனம் ஒரு முஸ்லிமுக்குச் சொந்தமானதாகவோ அல்லது அதனை ஏற்றிச் சென்றவர்களில் முஸ்லிம் பெயரில் எவரேனும் இருந்திருந்தாலோ நாளிதழ்களின் தலைப்புச் செய்தியே வேறு விதமாக இருந்திருக்கும்!

“பயங்கர ஆயுதங்களுடன் சென்னையைத் தகர்க்க அல்காயிதா திட்டம்!”

“இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தொடரும் அட்டூழியம்”

“கார்குண்டு வெடிப்பில் பாகிஸ்தானின் உளவுத்துறைக்கு தொடர்பு! அத்வானி கண்டனம்!!”

என்பதாகச் சொல்லி ஊடக தர்மவான்கள் தங்களுக்கேயுரிய கற்பனைக் கதைகளால் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் ஒருவழி பண்ணி இருப்பார்கள்! சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்புகள் ஆறு மணிநேரங்களுக்குள் இப்படித்தான் செய்திகள் வெளியாயின!

இன்னொரு பக்கம், இலங்கை ராணுவத்தோடு போரிட்டுவரும் விடுதலைப் புலிகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட ஆயுதங்களாக இருந்திருப்பின் சிலருக்கு தமிழின உணர்வு தலைக்கேறி இருக்கும்! சமீபத்தில் புலிகளால் நடத்தப்பட்ட வான்தாக்குதல்களை பெரும்பாலன தமிழினப் பற்றாளர்கள் சிலாகித்து எழுதி இருந்தார்கள்! எதிர்மறை விமர்சனம் வைத்தவர்களும் உள்நோக்கத்துடனேயே விமர்சித்திருந்தார்கள்! இதே செய்தியாளர்கள்தான் விடுதலைப்புலிகளைவிட நியாயமானக் காரணங்களுடன் போரிட்டு வரும் பாலஸ்தீனர்களையும், இராக்கியர்களையும் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று எழுதினர்!

“விரக்தியின் விளிம்பில் விமான தாக்குதல் நடத்திய விடுதலை புலிகள் : இந்தியாவுக்கு துளியும் ஆபத்தில்லை என உளவுத்துறை கணிப்பு”
பார்க்க: தினமலர் 03/04/2007

சிலவருடங்களுக்குமுன் மும்பை அரசியல்தாதா பால்தாக்கரே விடுதலைப் புலிகளும் இந்துக்களே என்பதால் அவர்களை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று திருவாய் மலர்ந்திருந்தார்.தேவைப்பட்டால் இந்துக்கள் என்றும் தேவையில்லாதபோது மராட்டியம் மராட்டியர்களுக்கு மட்டுமே மற்றவர்கள் வெளியேற வேண்டும் என்று இந்துக்களை தரம்பிரிக்கும் கலையில் பால்தாக்கரேயை யாரும் மிகைக்க முடியாது!

சொல்லவருவது என்னவென்றால் நிகழ்வுகளை நிகழ்வுகளாக மட்டும் பார்க்காமல் முஸ்லிம் பெயர் கொண்டவர் சம்பந்தப்பட்டிருந்தால் அதனை அல்உம்மா, லஷ்கரே தோய்பா, அல் காயிதா என்று இண்டர்நேசனல் லெவலில் தங்கள் பார்வைகளைப் பரவலாக்கி முஸ்லிம்களை தீவிரவாதத்தோடு தொடர்பு படுத்தி எழுதும் நியாயவான்கள், முஸ்லிம் அல்லாதவர்களைப

8 comments

  1. அட்றா சக்கை

    ஆமா தெரியாமத்தான் கேக்குறேன் ஒரு அறிவுசீவி வலைப்பதிவிலும் இதப்பத்தி நியூஸ் காணோமே,

    இட்லி தோசன்னு ஒரு பதிவு செய்திய பிந்தித்தருமே அதுல கூட ஒண்ணும் வரலயே என்ன காரணம்?

  2. //விடுதலைப்புலிகளைவிட நியாயமானக் காரணங்களுடன் போரிட்டு வரும் பாலஸ்தீனர்களையும், இராக்கியர்களையும் தீவிரவாதிகள்// பொங்குது பார் ஆதங்கம். பாலஸ்தீனியர்கள் பக்கம் அப்படி என்ன தான் நியாயம் உள்ளதோ தெரியவில்லை, இ ந்திய துலுக்கர்கள் இப்படி மாஞ்சி மாஞ்சி நியாயப்படுத்துகின்றனர்.

  3. உண்மைத் தமிழன்

    உண்மைதான். உங்களது கேள்வியில் நியாயம் இருக்கிறது.. வெட்கப்படுகிறேன் ஒரு இந்து என்கிற முறையில்..

  4. நல்லடியார்

    //ஆமா தெரியாமத்தான் கேக்குறேன் ஒரு அறிவுசீவி வலைப்பதிவிலும் இதப்பத்தி நியூஸ் காணோமே//

    காரணம் அதில் முஸ்லிம் பெயரில் யாரும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்பதால் இருக்கலாம்! கீழ்கண்ட செய்திகளையும் பாருங்கள். ஜெயலலிதாவும் கருணாநிதியும் பண்ணும் “தீவிர” அரசியலை!!

    1) முதல்வர் கருணாநிதி இவற்றுக்குப் பதில் அளித்துப் பேசுகையில்,

    விழுப்புரம் அருகே நடந்த பயங்கர வெடிவிபத்து எதிர்பாராத நிகழ்ச்சி. வெடிவிபத்தில் சிக்கிய வாகனத்தில் ஆர்.டி.எக்ஸ். வெடிபொருள் இல்லை என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்க, வெடிபொருள் விற்பனைக்கான உரிமம் வழங்கும் உரிமையை மாநில அரசுகளிடம் வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவோம்.

    இதை அரசியல் ஆக்கக் கூடாது என காங்கிரஸ், பாமக கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இதை அனைத்துக் கட்சிகளும் ஏற்க வேண்டும்.

    இந்த சம்பவத்தையடுத்து எதிர்காலத்தில் இதுபோன்று நடைபெறாமல் தடுக்கத் தேவையான நடவடிக்ககளை எடுக்க வசதியாக ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியைக் கொண்டு விசாரணை நடத்த உத்தரவிடப்படும் என்றார் கருணாநிதி

    http://thatstamil.oneindia.in/news/2007/04/09/cm.html

    2) விழுப்புரத்தில் அருகே நடந்த கார் குண்டு வெடிப்பு ஒரு பயங்கவாதச் செயல். வெடித்தது ஆர்.டி.எக்ஸ். தான் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    விழுப்புரம் அருகே செண்டூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற கார் வெடிகுண்டு வெடிப்பு சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் ஒரு பயங்கரவாதச் செயல்.

    இது கடுமையான சேதத்தை ஏற்படுத்தி இருப்பதால், வெடித்தவை சாதாரண கல் உடைக்கிற வெடிபொருட்களாக இருக்க முடியாது. இது நிச்சயம் ஆர்டிஎக்ஸ் தான்!

    http://thatstamil.oneindia.in/news/2007/04/09/jaya.html

  5. உண்மைதான். உலக ஊடகமே தமிழ் நாட்டில் வந்து ஊளையிட்டு இருக்கும். இஸ்லாமிய பயங்கரவாதம் என்று. ஏன் நமது தமிழ் நாட்டில் இருக்கும் தினமலர் ஒன்றே போதுமே, செய்தியையும் சொல்லி, தீர்ப்பும் கொடுத்தும் விடுவார்கள்.

    asalam one

  6. அட்றா சக்கை

    அடேடே நம்ம xxxxx மூக்கு வேர்த்து ஆஜராகிவிட்டாரே!!

    பேரை மட்டும் மாத்தினால் போதாது மட சாம்பிராணியே!!

  7. நல்லடியார்

    //பொங்குது பார் ஆதங்கம். பாலஸ்தீனியர்கள் பக்கம் அப்படி என்ன தான் நியாயம் உள்ளதோ தெரியவில்லை, இ ந்திய துலுக்கர்கள் இப்படி மாஞ்சி மாஞ்சி நியாயப்படுத்துகின்றனர்.//

    1) பாலஸ்தீனர்கள் அண்ட வந்த இஸ்ரேலிய வந்தேறிப் பிடாரிகளை விரட்டப் போராடுகிறார்கள்.

    2) பாலஸ்தீனத்திலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா உலக துலுக்கர்/முஸ்லிம்களின் முதல் கிப்லா.

    3) பாலஸ்தீனர்களின் ஆயுதம் கல்! அவர்களை அடக்க இஸ்ரேலிடம் அணுகுண்டு வரையிலான பேரழிவு ஆயுதங்கள்!

    இப்படியாக அநீதியால் அடக்கப் பட்டவர்களின் நியாயங்களைச் சொன்னால் பொங்குது பார் ஆதங்கம்!

    இந்திய வந்தேறிகள் இப்படி மாஞ்சி மாஞ்சி அநியாயப்படுத்துகின்றனர்

    -என்று நாங்களும் சொல்லலாம்தானே!

  8. 10 குண்டு ஒருத்தன் வெச்சா 11வதா வெடிக்கும் போது அவன் தான் நியாபகத்துக்கு வருவான்.

    //விடுதலைப்புலிகளைவிட நியாயமானக் காரணங்களுடன் போரிட்டு வரும் பாலஸ்தீனர்களையும், இராக்கியர்களையும் தீவிரவாதிகள்//

    அது ஏங்க எப்போ பார்த்தாலும் எங்கிருந்தாலும் இஸ்லாமியன் என்கிற ஒரே காரணத்துக்காக அவங்கள இழுக்கரீங்க. மத்தவங்களெல்லாம் மனுஷனா தெரியலையா? இஸ்லாமியர்கள் தான் மனுஷங்களா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *