Featured Posts
Home » பொதுவானவை » இவற்றிற்கும் இஸ்லாம்தான் காரணமா?

இவற்றிற்கும் இஸ்லாம்தான் காரணமா?

கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் சில குறிப்பிட்ட வகை உடைகளையே அணிந்திருக்க வேண்டும். எல்லாப் பெண்களும் ஆண்களும் பல்கலைக் கழத்தில் பட்டம் பெறும் போது பர்தாவையொத்த கருப்பு அங்கியையும் தொப்பியையும் அணிய வேண்டும். அதேபோல் நீதிமன்ற நீதிபதி (ஆணோ பெண்ணோ) யாராக இருந்தாலும் பர்தாவையொத்த கருப்பு அங்கியை அணிய வேண்டும். இங்கெல்லாம் ‘வற்புறுத்தல்’ ‘பழமைவாதம்’ ‘பெண் அடிமைத் தனம்’ என்ற சொற்கள் பிரயோகிக்கப்படுவதில்லை. ஆனால் முஸ்லிம் பெண்கள் பர்தா அணியும் போது மட்டும் அவ்வாறு குறிப்பிடப்படுவது ஏன்? அதைச் சொல்வது இஸ்லாம் என்பதனாலா?

ஏழ்மையையும் வறுமையையும் ஒழிக்க உலக நாடுகள் திட்டமிடுகின்றன. பொருட்களின் வீண் விரயம் தவிர்க்கப்பட்டு உழைப்பிற்கேற்ற கூலியைக் கொடுத்தால் ஓரளவு வருமை குறையும். செல்வந்தர்கள் கட்டாயமாக வரி செலுத்தினால் அரசின் நிதியாதாரம் கனிசமாக உயரும். அனைத்து வகை வட்டிமுறையையும் தடை செய்தால் ஏழைகள் நிம்மதியடைவர். இதைச் செய்தால் உலகநாடுகள் ஓரளவு பொருளாதார தன்னிறைவு அடையும். ஆனால் உலக நாடுகள் செயல்படுத்த முன்வருவதில்லை ஏன்? அதைச் சொல்வது இஸ்லாம் என்பதனாலா?

முறையற்ற உடலுறவே எயிட்சுக்குக் காரணம்! பாலினக் கவர்ச்சியே பல குற்றங்களுக்கு அடிப்படை. முறையான திருமணங்கள் மூலம் உடலுறவு கொள்வதால் எயிட்ஸ் வர வாய்ப்பில்லை. ஆணும் பெண்ணும் கண்ணியமாக நடந்து கொண்டால் பாலினக் கவர்ச்சியால் எழும் குற்றங்கள் குறையும். ஆணும் பெண்ணும் கண்ணியமாக வாழ்ந்தால் மேற்கண்ட தீங்குகள் இல்லை.ஆனால் உலக நாடுகளின் சட்டங்கள் இவற்றை நடைமுறைப் படுத்த முன்வருவதில்லை ஏன்? அதைச் சொல்வது இஸ்லாம் என்பதனாலா?

உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியின் கடைசி நேரத்தில் இத்தாலி கால்பந்தாட்ட வீரர் மாட்டரஸ்ஸியை தலையால் முட்டியதற்காக பிரான்ஸ் கால்பந்தாட்ட வீரரும் அணித்தலைவருமான ஜைன்தீன் ஜெய்டானுக்கு சிகப்பு அட்டை வழங்கப்பட்டு ஆடுகளத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதோடு, அடுத்த மூன்று ஆட்டங்களில் பங்கேற்க FIFA தடை விதித்துள்ளனர். அதேபோல் மாட்டரஸ்ஸிக்கு இரண்டு ஆட்டத்தில் விளையாட மட்டுமே தடை விதிக்கப்பட்டது. தன்மானம் தாக்கப்பட்டதால் உணர்ச்சி வசப்பட்டு தாக்கியவருக்கு மூன்று ஆட்டங்களும், உணர்ச்சி வசப்பட வைத்தவருக்கு இரண்டு ஆட்டங்களும் தடை! அபராதமும் ஜைடானை விடக் குறைவே! ஏன் இந்த பாகுபாடு? அவ்வாறு செய்தவர் முஸ்லிம் என்பதனாலா?

பாகிஸ்தானில் கோவில் இடிக்கப்பட்டால் கொதிந்து எழுவதும், இடிக்கப் படாத கோவில் புணரமைப்பிற்கு நிதியுதவி செய்தாலும் அதற்கும் உள்ளர்த்தம் கற்பிகப் படுகிறது. பாபர் மசூதியை அநியாயமாக இடித்து விட்டு, தற்போது அங்கு சட்டவிரோதமாக அமைக்கப் பட்டுள்ள ராமர் கோவிலுக்கு எஃகுச்சுவர் பாதுகாப்பிற்காக மத்திய அரசு சுமார் எட்டு கோடி ரூபாய் ஒதுக்குகிறது. இடிக்கப்படாத கோவிலுக்காக வெகுண்டு எழுந்த கணவான்கள், இடிக்கப்பட்ட மசூதி பற்றி ஒன்றும் சொல்லாதது ஏன்? அது முஸ்லிம்களுக்குச் சொந்தமானது என்பதனாலா?

டெல்லியில் தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட மசூதிகளில் முஸ்லிம்கள் வழிபாடு நடத்த அனுமதியில்லை. அதே தொல்பொருள் ஆய்வுத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருவண்ணாமலைக் கோவிலில் இந்துக்கள் வழிபாடு நடத்த முடிகிறது. ஒரே துறையின் கீழுள்ள இரு வேறு வழிபாட்டுத்தளங்களில் ஒன்றிற்கு தடை; மற்றொன்றிற்கு அனுமதி! ஏன்? டெல்லியிலுள்ள வழிபாட்டுத் தளங்கள் முஸ்லிம்களுக்குச் சொந்தமானவை என்பதனாலா?

குண்டு வெடிப்புகளாலும் கலவரங்களாலும் அப்பாவிகள் கொல்லப் படுகின்றனர். சமீ

16 comments

  1. லொடுக்கு

    நண்பரே!!!
    உங்கள் பதிவுகளை படித்து வருகிறேன். நன்றாக உள்ளது.

    ஆனால், இப்படித்தான் இஸ்லாத்தை ஒதுக்க வேண்டும் என்று எழுத்ப்படாத விதியுடன் இருப்பவர்களுக்கு இதெல்லாம் ‘மஞ்சக் காமாலை கண்ணில் தெரிவது’ போலத்தான் தெரியும். வருத்தமே மிச்சம்.

  2. இறை நேசன்

    பதிவின் தலைப்பு மட்டும் தான் தெரிகிறது. உள்ளடக்கம் ஒன்றுமே தெரியவில்லையே.

    ஏதாவது விஷேஷமாக எழுதியிருக்கிறீரா நல்லடியார் அவர்களே?

    ஆங்காங்கே பாகிஸ்தான் என்ற வார்த்தை மட்டும் பளிச் எனத் தெரிகிறது.

    பாகிஸ்தானுக்கு வக்காலத்து வாங்கும் நல்லடியார் போன்ற மதஅடிப்படைவாத, தீவிரவாத…………………..

    தேசவிரோதிகளுக்கு எதிராக ………….

    குசும்புடன்
    இறை நேசன்

  3. ஜெஸிலா

    சரியான கேள்விக்கணைகள். ஆனால் அந்த கேள்விகளை இங்கு கேட்டு ஏதும் பயன்கிட்டுமா என்றுதான் தெரியவில்லை. பதிவுக்கு வாழ்த்துக்கள்.

  4. NALLADIYAAR

    APPRECIATED YOUR QUESTIONAIRES.BUT WHO IS GOING TO GIVE ANSWERS IN THIS WORLD?

    ONLY GOD KNOWS.

    ASALAMONE

  5. ஆத்தூர்வாசி

    என் உள்ளக்குமுறலை இங்கே கொட்டியதற்கு நன்றி

  6. நண்பரே!

    இது உங்கள் ஆதங்கத்தைக் கொட்டிய பதிவா அல்லது நேர்மையான பதிலை எதிர்பார்த்தா?
    ஒன்றும் சொல்லாமல் முடித்திருக்கிறீர்களே எனக் கேட்டேன்.
    தவறாக எண்ணவேண்டாம்.
    நன்றி.

  7. 'தஞ்சை' கண்ணன்

    நல்லடியார்….!

    நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகள் எல்லாம் நியாயமானவைதான். அதுக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் மிகுந்த வேலைப் பழுவில் இருக்கிறார்களாம் :-))) அதனால பதிலை எதிர்பார்க்க வேண்டாம்.

  8. பாகிஸ்தானில் கோவில் இடிக்கப்பட்டால் கொதிந்து எழுவதும், இடிக்கப் படாத கோவில் புணரமைப்பிற்கு நிதியுதவி செய்தாலும் அதற்கும் உள்ளர்த்தம் கற்பிகப் படுகிறது. பாபர் மசூதியை அநியாயமாக இடித்து விட்டு, தற்போது அங்கு சட்டவிரோதமாக அமைக்கப் பட்டுள்ள ராமர் கோவிலுக்கு எஃகுச்சுவர் பாதுகாப்பிற்காக மத்திய அரசு சுமார் எட்டு கோடி ரூபாய் ஒதுக்குகிறது. இடிக்கப்படாத கோவிலுக்காக வெகுண்டு எழுந்த கணவான்கள், இடிக்கப்பட்ட மசூதி பற்றி ஒன்றும் சொல்லாதது ஏன்? அது முஸ்லிம்களுக்குச் சொந்தமானது என்பதனாலா?

    That move is justified on account
    of the attempt to attack it.It is
    only a security measure. What is
    legal and who is the right owner
    of the property have to decided
    by the courts.The Central govt.
    has taken over that area and is
    entitled to give such a protection.

    I think you suffer from some phobia.

  9. நல்லடியார்

    //That move is justified on account of the attempt to attack it.It is only a security measure. What is legal and who is the right owner of the property have to decided by the courts.The Central govt. has taken over that area and is entitled to give such a protection.//

    ஸ்ரீனிவாஸ்,

    மசூதியை இடித்து விட்டுச் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள ஒரு கட்டிடத்திற்கு, அது சம்பந்தமான வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் எது சம்பந்தமான வழக்கு நடந்து கொண்டிருக்கிறதோ அதற்கு எதிரான நோக்கில் சுற்றுச்சுவர் எழுப்புவது சட்டவிரோத கட்டிடத்தைப் நிரந்தரமாக கோவிலாக்கும் முயற்சிதான். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன் வைத்து காங்கிரஸ் ஆடும் இந்தக் கபட நாடகம் அறுபது வருடங்களாக அறிந்ததுதான்.

    கட்டிடத்தை பாதுகாக்க ஏற்கனவே இருக்கும் மூன்றடுக்கு பாதுகாப்பே அதிகம். சுற்றுச்சுவர் எழுப்பி விட்டால் இவற்றை விலக்கிக் கொள்ளப் போவதில்லை. இடிக்கப்பட்ட பாபர் மசூதி எந்த நிலையில் இருக்கிறதோ அதே நிலையிலேயே வழக்கு முடியும்வரை தொடர வேண்டும் என்பதும் உச்ச நீதிமன்ற வழக்குதான்.

    //I think you suffer from some phobia.//

    இதனை அடிக்கடி மறந்து விடும் SELECTIVE AMNESIA பாதிப்புள்ள இந்துத்துவா வெறியர்களிடம் நீதிமன்ற உத்தரவாவது மண்ணாங்கட்டியாவது!

  10. மரைக்காயர்

    //That move is justified on account
    of the attempt to attack it.It is
    only a security measure.//

    இதத்தான் ‘தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிக்கிறது’ன்னு சொல்வாங்க!

    //What is legal and who is the right owner of the property have to decided
    by the courts.//

    இதை, பாபர் மசூதியை இடிச்சாங்களே, அந்த மதவெறிக் கும்பல்ட்ட நீங்க முன்னாடியே சொல்லியிருக்கணும்.

    //The Central govt. has taken over that area and is entitled to give such a protection.//

    சென்ட்ரல் கவர்ன்மெண்டுக்கு இப்பதான் புத்தி வந்துச்சாமா?

    //I think you suffer from some phobia.//

    Phobia?! It seems you people are suffering from Islamophobia!

    http://www.islamophobia-watch.com/islamophobia-a-definition/

  11. ஆரோக்கியம் kettavan

    ravi,

    Time and again you are proving your hindutva fascist affiliation beyond doubt.

    Thw whole blogging community knows who suffers from Islamophobia.

  12. மருதநாயகம்

    நல்ல முயற்சி. தொடர்ந்து எழுதுங்கள்

  13. The land was taken over in 1992 itself.The Centre cannot do any
    modification or addition without
    the permission from the Court.
    The staus quo will apply in relation to temple.Additional
    security measures cannot be equated
    with temple construction measures.
    Not all muslim groups have opposed
    this move.See my post on this issue
    http://ravisrinivas.blogspot.com

  14. காஞ்சி பிலிம்ஸ்

    //ஆனால் முஸ்லிம் பெண்கள் பர்தா அணியும் போது மட்டும் அவ்வாறு குறிப்பிடப்படுவது ஏன்? அதைச் சொல்வது இஸ்லாம் என்பதனாலா?//

    இஸ்லாம் சொல்வதால் இல்லிங்க. அதுக்கு இஸ்லாம் சொல்லும் காரணத்தைத் தான். குனிந்து வேலை செய்யும் மருமகள்களை மாமனாருங்க பார்த்து விடக்கூடாது,etc etc., என்பதற்காகத் தான் பர்தா போடவேண்டும் என்பதை தான் பயித்தியக்காரணம் என்கிறோம். இதில் யார் மாமனார், யார் பின்னர் அந்த மாமனாருக்கே மனைவியாகி போன மருமகள், எந்த வளர்ப்பு மகனுக்கு ஆப்பு வைக்கப்பட்டது என்பதை பொன்ற கோடிட்ட இடங்களை தயவுகூர்ந்து நிரப்புங்கள் பார்ப்போம். அறியாதவர்கள் அனேகம் பேருக்கு பேருதவியாக இருக்கும்.

    //முறையற்ற உடலுறவே எயிட்சுக்குக் காரணம்! பாலினக் கவர்ச்சியே பல குற்றங்களுக்கு அடிப்படை. முறையான திருமணங்கள் மூலம் உடலுறவு கொள்வதால் எயிட்ஸ் வர வாய்ப்பில்லை. ஆணும் பெண்ணும் கண்ணியமாக நடந்து கொண்டால் பாலினக் கவர்ச்சியால் எழும் குற்றங்கள் குறையும். ஆணும் பெண்ணும் கண்ணியமாக வாழ்ந்தால் மேற்கண்ட தீங்குகள் இல்லை.ஆனால் உலக நாடுகளின் சட்டங்கள் இவற்றை நடைமுறைப் படுத்த முன்வருவதில்லை ஏன்? அதைச் சொல்வது இஸ்லாம் என்பதனாலா?//

    //உழைப்பிற்கேற்ற கூலியைக் கொடுத்தால் ஓரளவு வருமை குறையும்//

    http://rapidshare.de/files/27645162/arawhore3gp.3gp.html

    இதை பார்த்துவிட்டு எந்த எந்த நாடுகள் இந்த சட்டத்தை அமுல் படுத்தியுள்ளன என்பதை சொல்லுங்கள் பார்ப்போம்.

    பாரிஸ் நகரில் உள்ள நட்ஷத்திர ஹோட்டல்களில் காமக்களியாட்டங்களை நடத்துவது யார் தெறியுமா அன்பரே- அவ்வளவு அயோக்கியங்களும் அராபிய ஷேக்குகளின் வாரிசுகள். உடனே இதற்கு ஆதாரம் கேட்கமாட்டீர்கள் என நம்புகிறேன்.

    தொடரும்…

  15. நல்லடியார்

    // http://rapidshare.de/files/27645162/arawhore3gp.3gp.html இதை பார்த்துவிட்டு எந்த எந்த நாடுகள் இந்த சட்டத்தை அமுல் படுத்தியுள்ளன என்பதை சொல்லுங்கள் பார்ப்போம். பாரிஸ் நகரில் உள்ள நட்ஷத்திர ஹோட்டல்களில் காமக்களியாட்டங்களை நடத்துவது யார் தெறியுமா அன்பரே- அவ்வளவு அயோக்கியங்களும் அராபிய ஷேக்குகளின் வாரிசுகள். உடனே இதற்கு ஆதாரம் கேட்கமாட்டீர்கள் என நம்புகிறேன். //

    காஞ்சி பிலிம்ஸ்,

    நான் கேட்டிருப்பவை இஸ்லாம் வலியுறுத்தும் வாழ்வியல் நெறிகளைப் பற்றி; நீங்கள் குறிப்பிடுபவையோ அதனை பின்பற்றாதவர்களின் செயல்பாடுகளைப் பற்றி. பெரியாரிவாதிகளென்று சொல்லிக் கொண்டு, அதற்கு எதிராக நடந்து கொள்பவர்களைப் பற்றிச் சொன்னால் எப்படி அபத்தமோ அதே அபத்தம்தான் உங்கள் கேள்வியிலும் உள்ளது. உங்களின் இந்த முரன்பாட்டை அல்லது அறியாமையை முதலில் உணர்ந்து கொண்டு நேரடியாகவே உங்கள் கருத்தைச் சொல்லலாம்.

    //குனிந்து வேலை செய்யும் மருமகள்களை மாமனாருங்க பார்த்து விடக்கூடாது,etc etc., என்பதற்காகத் தான் பர்தா போடவேண்டும் என்பதை தான் பயித்தியக்காரணம் என்கிறோம்.இதில் யார் மாமனார், யார் பின்னர் அந்த மாமனாருக்கே மனைவியாகி போன மருமகள், எந்த வளர்ப்பு மகனுக்கு ஆப்பு வைக்கப்பட்டது என்பதை பொன்ற கோடிட்ட இடங்களை தயவு கூர்ந்து நிரப்புங்கள் பார்ப்போம். அறியாதவர்கள் அனேகம் பேருக்கு பேருதவியாக இருக்கும்.//

    மாமனார், தன் மருமகளை பர்தா இல்லாமல் பார்க்கத் தடையில்லை எனும் போது, இல்லாத ஒன்றை இருப்பதாகச் சொல்லி பைத்தியக்காரத்தனம் என்பதில் அர்த்தமில்லை. மேலும் மாமனார், மருமகள்,வளர்ப்பு மகன் etc பற்றிய விவாதங்களுக்குச் செல்லும் முன் அபூமுஹை போன்ற பல இஸ்லாமிய வலைப்பதிவர்களின் பதிவுகளையும் படித்து விட்டு உங்கள் ‘பகுத்தறிவு’க் கேள்விகளை தாராளமாகத் தொடரலாம் நண்பரே!

    அப்புறம், சகோ.ஜோ வின் இந்து மதம் பற்றிய பதிவில் கருக்கொலையை ஆதரித்து எழுதி இருந்தீர்கள். கிறிஸ்தவத்தை நோக்கிக் கேட்டிருந்தாலும் அது எல்லா மதங்களுக்கும் பொருந்தும் பொதுவான கேள்வியே. கருக்கொலைக்கும் சிசுக் கொலைக்கும் என்ன வித்தியாசம்? சிசுக்கொலையை தவறென உலகமே ஒப்புக் கொள்ளும்போது கருக்கொலையை நியாயப்படுத்துவது எந்த ஊர் ‘பகுத்தறிவு’ என்றும் கொஞ்சம் விளக்குவீர்களா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *