Featured Posts
Home » பொதுவானவை » நாட்டு நடப்பு

நாட்டு நடப்பு

பதிவெழுதி ரொம்ப நாளாச்சு! இணையத்தில் மேய்ந்ததில் கிடைத்ததை பகிர்ந்து கொள்கிறேன்.

முழக்கம் # 1: பர்தா – ஆணாதிக்க அடக்குமுறை!

நாட்டு நடப்பு # 1: சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திற்கு வரும் குடும்பப் பெண்களை அவர்கள் குனியும்போதும், சேலை விலகியுள்ள நிலையிலும், இடுப்புப் பகுதிகள், பின்புறம் உள்ளிட்ட பகுதிகளை செல்போன் கேமரா மூலம் படம் பிடித்து அவற்றை இணையதளத்தில் புழக்கம் விட்ட விஷமச் செயல் குறித்த தகவல்கள் வெளியானது.

முழக்கம் # 2: “ஆணும் பெண்ணும் சமம்!”

நாட்டு நடப்பு # 2 : ஆபாசப் படக் கும்பலால் பயந்துள்ள மின்சார ரயில்களில் தினசரி பயணிக்கும் பெண்கள், ஆண்களும் ஏறும் பொதுப் பெட்டிகளில் பயணிப்பதை விட பெண்களுக்கான பெட்டியில் பயணிப்பதையே தற்போது அதிகம் நாடுவதால் பெண்கள் பெட்டிகள் எல்லாம் நிரம்பி வழிகின்றன.

நாட்டு நடப்பு # 3

ஆசிரியையை பல கோணங்களில் அந்த மாணவர் படம் எடுத்து வைத்ததிருந்தது உறுதியானது.ஆசிரியை கரும்பலகையில் எழுதும்போது, குனியும்போது உட்காரும் போது, நடக்கும்போது என பலவிதமான போஸ்களில் அந்த மாணவர் கீழ்த்தரமாக படம் பிடித்து வைத்திருந்தார்.

6 comments

  1. மரைக்காயர்

    அதுக்கு இப்ப என்ன பண்ணனுங்கிறீங்க? ஆசிரியர்களெல்லாம் பர்தா அணியனுமா? அது அந்த மாணவருடைய ‘உரிமை பறிப்பு’ ஆகி விடுமே? :-(

  2. நல்லடியார்

    நாட்டு நடப்பச் சொன்னேன்..! கோவிச்சுக்காதீங்க மரைக்காயர்!!

  3. சுல்தான்

    அந்த மாதிரி கீழ்த்தரமாகப் பார்ப்பவர்களுடைய போட்டோ எடுப்பவர்களுடைய உரிமையைப் பறிப்பதால்தான் பர்தா வேண்டாம் என்று ….

  4. பர்தா அணிவதைப் பற்றி நான் ஒன்றும் சொல்ல வரவில்லை. அது அவரவர் விருப்பம்.

    ஆனால் பார்த்தீர்களா? நீங்கள் சொன்ன மூன்றிலும் தவறு செய்தவர்கள் ஆண்களாகவே இருக்கின்றார்களே! அவர்கள் திருந்த வேண்டும் என்று முனைப்பதே சிறந்தது. பாடப் பாட ரோகம். மூட மூட ரோகம் என்பது முதுமொழி.

    கருத்தைப் பதிய வேண்டும் என்று தோன்றியது. விவாதத்திற்கல்ல. நன்றி.

  5. நல்லடியார்

    இனிய ராகவன்,

    ஆண்களெல்லாம் உத்தமர்களென்றும், இஸ்லாம் பெண்களை (கண்ணியமாக ஆடையணியச் சொல்லி….) வற்புறுத்துகிறது என்றும் சொல்லி இஸ்லாத்தை அவ்வப்போது சாடுபவர்கள் மத்தியில் நியாயமான கருத்துக்களை வைக்கும் உங்கள் அணுமுறை எனக்குப் பிடித்த ஒன்று.

    நான் கொடுத்த சுட்டிகளிலுள்ள செய்திகள் எதார்த்தமானவை. இந்த எதார்த்த தவறு செய்யும் வாய்ப்பை தவிர்க்கவே இஸ்லாம் விரும்புகிறது. இதை உணர்ந்து கொண்டால் இஸ்லாமிய வழிகாட்டல்களில் குறை சொல்ல முடியாது. இதைச் சொல்லவே இப்பதிவு.

    தமிழ் கொஞ்சி விளையாடும் கோ.ராகவனிடம் எழுத்துப் பிழை! அது என்னவென்று சொல்பவர்களுக்கு 1000 செப்புக்காசுகள் பரிசு (ராகவன் தருவார்!:-)

  6. அந்தப் பரிசு எனக்கே :-) தவறைக் கண்டு பிடித்து விட்டேன். பாடப் பாட வருவது ராகம். ரோகமல்ல. :-))))))

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *