Featured Posts
Home » நூல்கள் » வழிகெட்ட பிரிவுகள் » [தொடர் 13] இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள்

[தொடர் 13] இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள்

Articleகப்று வணங்கிகள் என்போர் யார்?

சாதராண இந்திரியத்துளியில் இருந்து மனிதைனைப் படைத்து, பின்னர் அவனை மரணிக்கச் செய்து, அதன்பின்பும் அவனது விரல்ரேகைளில் கூட எவ்வித மாற்றமும் இல்லாது அதே அமைப்பில் அவனை எழுப்புவற்கு சக்தி பெற்ற அகலங்களின அதிபதியாகிய அல்லாஹ்வைவிட்டுவிட்டு, மரணித்த சிலருக்கு தாமாக சில சிறப்புக்களையும், கராமத்துக்களையும் வழங்கி அவர்கள் பேரில் கப்றுகளை கட்டி அவர்களின் மகிமைகளை எடுத்துக் கூறி அல்லாஹ்விடம் நேரடியாகப் பிரார்த்திப்பதை விட்டும் முஸ்லிம்களை தடுக்கின்ற கூட்டத்தினரை கப்று வணங்கிகள் என அழைக்கலாம்.

அடையாளங்கள்

ஒருவர் கப்று வணங்கிதான் என்பதன் அளவு கோலாக நாம் மேலே சொன்ன அமசங்களுடன் அவர்களுக்காக நேர்ச்சை செய்தல், அவர்களின் மண்ணறையில் அறுத்துப்பலியிடுதல், அவர்கள் பொருட்டால் அல்லாஹ்விடம் தேவைகளை வேண்டுதல், அவர்களின் பெயரால் விழா எடுத்தல், கந்தூரி கொடுத்தல், அவர்களின் மண்ணறைகளுக்கு பயனம் செய்தல், அவற்றைப் புனிதமாக்குதல், அங்கு தலையைத் தாழ்த்தி மரியாதை செய்தல், அல்லது சுஜுத் செய்தல், போன்ற மார்க்கம் அனுமதிக்காத காரியங்களை அரங்கேற்றுவோரை கப்று வணங்கிகள் என நாம் அடையாளப்படுத்த முடியும்.

மரணித்தவர்கள் செவிமடுப்பார்களா?

மரணித்தவர்கள் செவிமடுப்பதாக நம்பிக்கை கொள்ளும் இவர்கள் தமது தேவைகளை அந்த மாகான்கள் நிறைவேற்றி வைப்பதாகவும் நம்புகின்றனர். இது இஸ்லாமிய நம்பிக்கைக்கு முரணான இறை நிராகரிப்பாளர்களின் நம்பிக்கையாகும். மரணித்தவர்களுக்கும் இவ்வுலகிற்கும் இடையில் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையே காணப்படும், அவர்கள் இவ்வுலகில் நடப்பதை அறியமாட்டார்கள்.

وَمِن وَرَائِهِم بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَ

‘அவர்களுக்கு முன்னால் அவர்கள் எழுப்பப்படும் நாள் வரை ஒரு திரை இருக்கும்’. (அத்தியாயம்: 25. வச: 100).

إِن تَدْعُوهُمْ لَا يَسْمَعُوا دُعَاءكُمْ وَلَوْ سَمِعُوا مَا اسْتَجَابُوا لَكُمْ وَيَوْمَ الْقِيَامَةِ يَكْفُرُونَ بِشِرْكِكُمْ وَلَا يُنَبِّئُكَ مِثْلُ خَبِيرٍ

(மரணித்த) அவர்களை நீங்கள் அழைத்தால் அவர்கள் உங்கள் அழைப்பை செவியேற்கமாட்டார்கள், அப்படித்தான் செவியேற்றாலும் அவர்கள் உங்களுக்கு பதில்தரமாட்டார்கள், இன்னும் மறுமைநாளில் உங்களின் இணைவைப்பைக் கொண்டு அவர்கள் நிராகரிப்பார்கள், அறிந்தவனை (அல்லாஹ்வை)ப்போல் உமக்கு யாரும் (இது பற்றி) உணர்த்தமாட்டார்கள். (அத்தியாயம் : பாதிர். வச: 14)

إِنَّمَا يَسْتَجِيبُ الَّذِينَ يَسْمَعُونَ

செவியேற்பவர்கள்தாம் பதில் தருவார்கள். (அத்: அல்அன்ஆம். வச: 36)

மரணித்தவர்களிடம் கேள்விகேட்டும் இரு வானவர்களிடமும் நல்லமுறையில் பதில் கூற வாய்ப்பளிக்கப்பட்ட மனிதன் தனது மகிழ்ச்சியான இந்தச் செய்தியை தனது குடும்பத்தவர்களிடம் சொல்லிவிட்டு வருவதற்கு அனுமதி வேண்டுகின்ற போது அந்த வானவர்கள்

نَمْ كَنَوْمَةِ الْعَرُوسِ الَّذِي لَا يُوقِظُهُ إِلَّا أَحَبُّ أَهْلِهِ إِلَيْهِ حَتَّى يَبْعَثَهُ اللَّهُ مِنْ مَضْجَعِهِ ذَلِكَ -سنن الترمذي

புதியமாப்பிள்ளையை அவனுக்கு நெருக்கமான அவனது குடும்பத்தவர்கள்தாம் அவனை எழுப்புவார்கள். அவன் உறங்குவது போன்று நீயும் அந்தப்படுக்ககையில் இருந்து அல்லாஹ் எழுப்புகின்றவரை உறங்கிக்கொள் எனக் கூறுவார்கள் என்பதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதற்கு மாற்றமான விளக்கங்களைக் கூறி மக்களை மரணித்தவர்களிடம் தமது தேவையை வேண்டலாம் என கூப்பாடு போடுகின்றனர் சில கோமாளிகள்.

كُلُّ ابْنِ آدَمَ يَأْكُلُهُ التُّرَابُ إِلَّا عَجْبَ الذَّنَبِ مِنْهُ خُلِقَ وَفِيهِ يُرَكَّبُ

ஆதமின் மகனை (மனிதனை) முழுமையாக மண் அரித்துவிடும், அவனில் இருக்கும் ‘அஜ்புஸ்ஸஜப்’ என்ற முள்ளம் தண்டைத்தவிர. அதிலிருந்துதான் அவன் (ஆரம்பமாக) படைக்கப்பட்டான், (மறுமைக்காக) அதிலிருந்துதான் (மீண்டும்) அவன் உருவாக்கப்படுவான். என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

أَمِ اتَّخَذُوا مِنْ دُونِهِ أَوْلِيَاءَ فَاللَّهُ هُوَ الْوَلِيُّ وَهُوَ يُحْيِي الْمَوْتَى وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

அவனை (அல்லாஹ்வை) அன்றி அவ்லியாக்களை எடுத்துக் கொண்டனரா? அல்லாஹ்வாகிய அவனே (உண்மையான) வலி. மரணித்தவர்களை அவனே உயிர்ப்பிக்கின்றான். அவன் யாவற்றின் மீது ஆற்றல் உடையவன். (அஷ்ஷுரா. வச:09)

رَبُّ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ لَا إِلَهَ إِلَّا هُوَ فَاتَّخِذْهُ وَكِيلًا

(அவன்) கிழக்கு, மற்றும் மேற்குத் திசைகளின் இரட்சகன். அவனை அன்றி வணங்கி வழிபடத்தகுதியானவர் யாருமில்லை. அவனைப் பொறுப்பாளனாக எடுத்துக் கொள். (அல்முஸ்ஸம்மில். வச: 09).

இவர்கள் குறிப்பிடுகின்ற அவ்லியாக்கள், நாதாக்கள், ஷேக்குகள், சாதாத்துக்கள் அனைவரும் மண்ணில் மக்கிப்போவார்கள் என்பதையே இந்த ஹதீஸ் குறிப்பிடுகின்றது. அவ்வாறு மக்கிப்போன பின்னால் இவர்கள் பிரார்த்திப்பது யாரிடம்? மண்ணிடமா? இவர்களின் நம்பிக்கையில் சாகாவரம் பெற்ற மகான்களிடமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *