Featured Posts
Home » வரலாறு » வரலாற்றில் கயமைத்தனம்.

வரலாற்றில் கயமைத்தனம்.

ஆயிஷா (ரலி) அவர்களின் திருமண வரலாறு தெரியாத நேசமுள்ளவரின் வரலாற்றுக் கயமைத்தனத்தை அடையாளப்படுத்தியிருந்தோம். நாம் தமிழில் வைத்த ஹதீஸை விளங்காமல் அந்த ஹதீஸை அப்படியே ஆங்கிலத்தில் வைத்து இது இஸ்லாமியர்களால் மதிக்கப்படும் வலைத்தளமாகும் என வழக்கம் போல் சம்பந்தமில்லாமல் பிதற்றியிருக்கிறார்.

ஆயிஷா (ரலி) அவர்களின் தந்தையிடம் நபி (ஸல்) அவர்கள் பெண் கேட்கும் சம்பவத்தைச் சொல்லும் செய்தி…

நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் (அவர்களின் புதல்வியும் சிறு வயதினருமான) ஆயிஷா(ரலி) அவர்களைப் பெண் கேட்டார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி) ”நான் தங்களின் சகோதரன் ஆயிற்றே!” என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் மார்க்கத்தின் அடிப்படையிலும் வேதத்தின் அடிப்படையிலுமே நீங்கள் எனக்கு சகோதரர் ஆவீர்கள். உங்களுடைய புதல்வி எனக்கு மணமுடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளவர் தாம்” என்று கூறினார்கள். (புகாரி, 5081) இதுதான் செய்தி.

இந்த செய்தியில் சாதாரணமாக, நபி (ஸல்) அவர்கள் அபூ பக்ர் (ரலி) அவர்களின் மகள் ஆயிஷாவைப் பெண் கேட்டார்கள். அதற்கு அபூ பக்ர் (ரலி) அவர்கள் ”நான் தங்களின் சகோதரனாயிற்றே” என்று கூறுகிறார். அதாவது பெண் தரமுடியாது என்று மறுக்கவில்லை. இந்தத் திருமண உறவு கூடுமா? என்றே சந்தேகம் எழுப்புகிறார். இது பற்றி ஏற்கெனவே எழுதிய பதிவு.

கடவுள் வந்து கனவில் ஆயிஷாவை மணமுடித்து விட்டார் என்று சொல்லி, அபூ பக்ரிடம், நபி (ஸல்) அவர்கள் பெண் கேட்டதாக இந்த செய்தியில் இல்லை. ஆனால் இஸ்லாத்தின் மீதும், முஸ்லிம்களின் மீதும் வன்முறைத் தாக்குதலை வழக்கமாக்கிக் கொண்டவர் என்ன சொல்கிறார் பாருங்கள்…

//ஆயிஷா மீது ஆசைப்பட்டு, கடவுள் வந்து தனக்கு கனவில்(கனவில் வருவதும் வஹீதான்) ஆயிஷாவை மணமுடித்து விட்டார் என்று அபூபக்கரிடம் சொல்கிறார். அபூபக்கர் கனவுகளை நம்பக்கூடியவர், கனவுகளுக்கு அர்த்தம் சொல்லக்கூடியவர் என்பதை இங்கே கவனிக்க வேண்டும். அபூபக்கர் முதலில் மறுக்கிறார்(இது குறித்து ஏமாறாதவன் விரிவாக எழுதியிருப்பதால் நான் விளக்கமாக அவற்றை இங்கே சொல்லவில்லை, நிறைய இணைய தளங்களிலும் இவ்விஷயம் காணக்கிடைக்கின்றது)// – வரலாறு எப்படித் திரிக்கப்படுகிறது பார்த்தீர்களா!

ஆயிஷாவைப் பெண் கேட்பதும், மணமுடிப்பதும் மக்காவில் நடந்த சம்பவங்கள். ஆயிஷாவை மணமுடிப்பதற்கு முன் ஆயிஷாவைக் கனவில் கண்ட செய்தியை மதீனாவில் தமது மனைவி ஆயிஷாவிடம் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்…

(என்னிடம்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (நான் உன்னை மணப்பதற்கு முன்னால்) இரண்டு முறை உன்னை நான் கனவில் கண்டேன். ஒருவர் (உடைய தோற்றத்திலிருந்த வானவர்) உன்னை ஒரு பட்டுத் துண்டில் எடுத்துச் செல்கிறார். அப்போது அவர் ‘இவர் உங்கள் (வருங்கால) மனைவி” என்று கூறினார். உடனே நான் அந்தப் பட்டுத் துண்டை விலக்கிப் பார்க்கிறேன். அதில் இருந்தது நீதான். அப்போது நான் (என் மனத்திற்குள்) ‘இக்கனவு அல்லாஹ்வின் தரப்பிலிருந்து வந்ததாயின், இதனை அல்லாஹ் நனவாக்குவான்” என்று சொல்லிக்கொண்டேன். (புகாரி, 5078)

இந்த ஹதீஸைச் சுட்டிக் காட்டியே சென்ற பதிவில் இவ்வாறுக் கேட்டிருந்தோம்…

//அபூ பக்ர் (ரலி) அவர்கள் கனவுகளுக்கு விளக்கம் சொல்லக்கூடியவர் என்பது தனி விஷயம். ஆனால், கடவுள் கனவில் வந்து தனக்கு ஆயிஷாவை மணமுடித்து விட்டார் என்று அபூ பக்ரிடம் நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக இந்த மன நோயாளி சொல்வது வெறும் உளறல். எங்கே அப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்பதை ஆதாரத்துடன் எழுதட்டுமே பார்க்கலாம்.// – அபூ முஹை

நிறைய இணைய தளங்களில் காணக் கிடைக்கின்றன என்று சொன்னவரைப் பார்த்து ”எங்கே ஆதாரங்களுடன் எழுதட்டுமே பார்க்கலாம்” என்றதற்கு இவரின் மற்றொரு திரித்தலைப் பாருங்கள்…

//ஏன், அபூ முஹையே சிந்தித்துப் பார்க்கலாமே? இதை ஆயிஷாவிடம் கூறிய முகமது, தமக்கு பெண் கொடுக்க மறுத்த அபூபக்கரிடம் எப்படிச் சொல்லாமல் இருந்திருப்பார்? அதுவும் ஆயிஷாவை தான் மணந்தே தீருவது என்று (கடவுள் சொன்னதாக நம்பி) தனக்குள்ளே முடிவு எடுத்துக் கொண்ட நிலையில்? இத்தனைக்கும் அபூ பக்கர் பாவம் கனவுகளை நம்பும், முகமதை இறைத்தூதர் என்று நம்பிய மனிதர்!//

இப்படியெல்லாம் வரலாறுகளைத் திரிப்பது இவருக்குக் கட்டாயமாகிறது. திறந்த புத்தமாக இருக்கும் இஸ்லாமிய வரலாற்றிலேயே இவ்வளவு புரட்டல்களை இவரால் சுமத்த முடிகிறது என்றால், பிறகு தனிப்பட்ட என் மீது சுமத்திய அவதூறெல்லாம் எம்மாத்திரம்?

குறிப்பு: எனக்குப் பதில் சொல்வதாகக் கருதி சம்பந்தல்லாமல் நீளமாக எழுதியுள்ளார். நீளமாக எழுதி விட்டால் நிறைய ஆதாரங்களை சொல்வதாக இவரது நம்பிக்கை.

அன்புடன்,
அபூ முஹை

2 comments

  1. அட்றா சக்கை

    நான் சகோ. இப்னு பஷீர் அவர்கள் பதிவில் சொன்னது இங்கும் பொருந்தும் என நினைக்கிறேன்.

    கோயபல்ஸ் இவரிடம் பாடம் படிக்க வேண்டும் அந்த அளவுக்குக் கயமையும் வக்கிரமும் பிடித்த ஆள் இந்நபர்.

    இவரது உத்திகள் மீண்டும் அரங்கேற்றுகிறார். இன்னொரு சகோதரருடன் விவாதத்தைத் தொடங்கியுள்ளார். அவரது அடிவருடி ஒன்று அவரது வக்கிர பதிவுகளுக்கு இணைப்பு கொடுத்து தன் விசுவாசத்தைக் காட்டிச் சொறிந்து கொள்கிறது.

    பிரதி வாதத்திற்கு எதிர்க்கருத்து இல்லையென்றால் கெட்ட வார்த்தைகள் பேசும் நாலாந்தர ரவுடிகள் போலத் திரியும் இவர்களை தமிழ் வலையுலகம் அடையாளம் கண்டு கொள்ளும்.!

  2. udambil ulla alukkai nandru suttham seiduvittu, adutthavan udambhai
    patri yosikkattum.
    Nesamahavum Arakkiuamahavum endralla Islam thondriya kaalathil
    erindu indruvarai vimarsanam ellavatraiyum ethirkondu vetry nadai
    pottu makkalai eerthunkondirukkirathu.Matra wethap puthahangalaippool
    pakkam kilikkappattavai alla Quranum Saheehaana Hadees halum.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *