Featured Posts
Home » மதங்கள் ஆய்வு » விமர்சனம் விளக்கம் » நேசகுமாரின் மறைத்தலும் திரித்தலும் [பாகம் 2]

நேசகுமாரின் மறைத்தலும் திரித்தலும் [பாகம் 2]

நேசகுமாரிடம் நான் அவர் எழுதியதிலிருந்து இரண்டு கேள்விகளும் அதற்கான விளக்கமும், ஆதாரமும் கேட்டிருந்தேன். அதற்கு இன்றுவரை பதிலில்லை. அத்தனை சீக்கிரம் பதில் வராது என்று தெரிந்திருந்துதான் கிட்டத்தட்ட மூன்று வார காலங்கள் இந்த பக்கமே வராமல் சொந்த வேலைகளில் கவனமாக இருந்தேன். உடனே பதில் சொல்லக் கூடியவராக இருந்தால் அவர் உண்மையிலேயே இஸ்லாம் சம்பந்தப்பட்ட ஆய்வுகளை செய்துவருகிறார் என்பதை எல்லோரும் புரிந்துக் கொள்ளலாம். அவர் செய்து வருவதெல்லாம் வெறும் அவதூறு பிரச்சாரங்கள் மட்டுமே. அதையும் ஒழுங்காக செய்கிறாரா என்றால் அதிலும் குறைபாடு. காரணம் மனசாட்சியை அடகு வைத்துவிட்டு வேண்டுமென்றே ஒரு தவறை எத்தனை காலம்தான் செய்யமுடியும். அவரும் மனிதர்தானே, அதனால அவருக்குள்ளேயே முன்னுக்கு பின் முரன்பாடுகளும், குழப்பங்களும், தடுமாற்றமும். நடக்கட்டும்.

இடைப்பட்ட காலத்தில் அரசியல் இஸ்லாம், ஆன்மீக இஸ்லாம் என்று வழக்கம்போல் புலம்பல்கள். வெறும் புலம்பல்கள்தானே இதற்கு ஏன் பதிலும் விளக்கமும் என்று ஒரு சிலர் கேட்கலாம். பொது இடங்களில் ஒரு மனிதர் அநாகரீகமாகவோ, தரக்குறைவாகவோ இன்னும் பைத்தியக்காரன் போல் போவோர் வருவோர் மேல் எல்லாம் சேற்றை வாரி அடித்துக் கொண்டிருந்தால் அதை நடக்கட்டும் என்று விட்டுவிட முடியுமா? அது போன்றுதான் இந்த பதில்களும் அவ்வப்போது அவசியமாகிறது.

இதில் வித்தியாசம் என்னவென்றால் அவர் சொல்லிவிட்டுத்தான் செய்கிறார். நான் அப்படித்தான் சேறுகளையும் சாக்கடைகளையும் அள்ளித் தெளிப்பேன், சொரணையும் புத்தியும் இருந்தால் துடைத்துக் கொண்டு செல்லட்டும், இல்லையென்றால் சுமந்துக் கொண்டுதான் செல்லட்டுமே என்று சொல்லிவிட்டுத்தான் செய்கிறார். தொடரட்டும்.

‘தெருவில் நடைபாதையில் கிடக்கும் முட்களை ஓரமாக எடுத்தெரிவதும்’ இறைவழிபாடுதான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதற்கிணங்க அறிவுப்பாதையின் நடுவிலே வேண்டுமென்றே நேசகுமார் போன்றவர்களால் எடுத்தெரியப்படும் அறிவுக்கு சம்பந்தமில்லா விஷயங்களை களைவதும் இறைவழிபாடுதான். இப்படி ஒரு வழிபாட்டை செய்வதற்கு வாய்ப்பளித்த வல்ல அல்லாஹ்விற்கே எல்லா புகழும்.

‘நபிகளார் கடவுளைவிட அதிகாரம் நிறைந்தவராக கற்பிதம் செய்யப்படுகின்றன’ என்று நபிகளாரை பிரதம மந்திரி போன்றும் கடவுளை ஜனாதிபதி போன்றெல்லாம் இவர் கற்பிதம் செய்து கதை எழுதியிருக்கிறார். வழிபாட்டிற்கும் மரியாதைக்கும் வித்தியாசம் தெரியாமல் எழுதியிருக்கிறார். கண்டதையும் கேட்டதையும் வழிபாடு செய்து, கடவுளாக்கி, காணிக்கை செலுத்திவாழும் வழக்கத்தை கொண்டவர்களுக்குத்தான் மரியாதைக்கும் வழிபாட்டுக்கும் வித்தியாசம் தெரியாது.

மாமனிதர் என்ற தலைப்பிலே அபூ உமர் அவர்கள் எழுதியதை நேசகுமாரும் அவருடைய எழுத்தை ஆராதிப்பவர்களும் கொஞ்சம் படித்துப் பார்த்தால் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை புரிந்துக் கொள்ளமுடியும்.

‘தம்மை உண்மையாக விசுவாசித்தவர்களுக்கும், தமது மதத்தை பின்பற்றுபவர்களுக்கும் சிபாரிசு செய்வார்’ என்று எழுதிவிட்டு, கடத்தல்காரர்களுக்கும், குழந்தைகளை கொல்லும் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கும், மாற்றுமதப் பெண்களை கற்பழிப்பு செய்பவர்களுக்கும் பரிந்துரைப்பார்’ என்று விஷம் பூசிய எழுத்துக்களை எழுதியிருந்தார். இவரை நினைத்து பரிதாபப்படுவதை தவிர்த்து வேறு என்ன செய்யமுடியும்?

‘அல்லாஹ்வின் கருணையைக் கொண்டுதான் நபி அவர்களே, தானே சொர்க்கம் செல்லமுடியும்’ என்று சொல்லியிருக்கும்போது எப்படி நபியவர்கள் கடவுளைவிட அதிகாரம் மிகுந்தவராக இருக்க முடியும். அவருடைய தோழர்கள் ஆச்சர்யத்துடன் ‘யா ரசுலூல்லாஹ்.. உங்களுக்கே இந்த நிலைதானா? என்று கேட்கும்போது.. ஆமாம் என்று பதிலளித்தார்கள்.

வெறும் முஸ்லீமாகிவிட்டால், ஏக இறைவனை ஏற்றுக் கொண்டுவிட்டால் மட்டுமே ஒருவன் நபிகளாரின் சிபாரிசிற்கு ஆளாகிவிடமுடியும் என்று நினைப்பது எப்படியிருக்கிறதென்றால் ஒருவன் பிராமணனாக பிறந்துவிட்டால் அவன் எப்படி பிரம்மனுக்கு நெருங்கியவனாக கருதப்படுகிறானோ அப்படியிருக்கிறது. ஒரு மாணவன் எல்லா நாட்களிலும் பள்ளி சென்று வந்துவிட்டால் பாஸாகிவிடமுடியுமா? நேசகுமார் போன்ற ஆசிரியர்கள் இருந்தால் அதுகூட சாத்தியமானலும் ஆச்சர்யபடுவதற்கில்லை. படிக்க வேண்டாம், பரிட்சை எழுத வேண்டாம், பள்ளியையும் ஆசிரியரையும் நம்பி ஏற்றுக் கொண்டு தினமும் பள்ளிக்கூடம் சென்று வந்துவிட்டால் மட்டும் போதும், ஆசிரியர் சிபாரிசு செய்து பாஸாக்கிவிடுவார்.. என்னய்யா வியாக்கியானம் இது?

அரசியல் அச்சுறுத்தல்கள் முடிந்து இப்போது ஆன்மீக அச்சுறுத்தல்கள் என்று நேசகுமார் வளர்ச்சி அடைந்துள்ளார். அதாவது மற்ற மதங்களெல்லாம் நரக எச்சரிப்பை விட்டு வளர்ச்சி அடைந்துவிட்டனவாம், இஸ்லாம் மட்டும் இன்னும் கற்காலத்திலேயே இருந்துக் கொண்டு நரகம் பற்றி எச்சரிக்கை செய்து கொண்டிருக்கின்றனவாம். இந்து மதத்திலும் கிறிஸ்துவ மதத்திலும் இருக்கிற மதகுருமார்கள் எல்லோரும் கூடி நரகம் சம்பந்தப்பட்ட வேத வாக்கியங்களை எல்லாம் களைந்துவிட்டு இனி மக்களுக்கு அன்பை மட்டுமே போதிப்பதென்று முடிவெடுத்துவிட்டார்களோ?

‘ஏனைய மதங்களெல்லாம் நரகக் கட்டங்களைவிட்டு நகர்ந்துவிட்டன’ என்ற அரிய கண்டுபிடிப்பை எழுதியிருக்கிறார். ஏனைய மதங்களில் இருப்பவர்கள் எல்லாம் இப்போது நல்லவர்களாகவும், நடுநிலையாளர்களாகவும், தீயதை ஒழிப்பவர்களாகவும், தியாகச் சிந்தனை கொண்டவர்களாகவும் மாறிவிட்டதால் மற்ற மதங்கள் எல்லாம் இனி நரகத்தைப் பற்றி பேசுவதில்லை என்று மாறிவிட்டனவோ? ஏன் இப்படி தடுமாறுகிறார் நேசகுமார். நரகத்தைவிட்டு தாண்டிவிட்டதனால்தானோ பெரியவாளும் சிறியவாளும் சேர்ந்து இப்படி காமக் கூத்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள்?

எல்லா மதத்திலும் எல்லா அயோக்கியர்களும் இருக்கிறார்கள். மதத்தின் பெயர் சொல்லி தன் சொந்த வயிற்றை நிரப்பும் மனிதர்கள் இருக்கிறார்கள் இதுதான் எதார்த்தம். எதார்த்தத்தை எழுதுவதாக வேறு ஒரு பின்னூட்டத்தில் எழுதியிருக்கிறார். பெரும்பான்மையான முஸ்லீம்களைப் பற்றி எதார்த்தத்தை எழுதுவதாக எழுதியிருக்கிறார். முஸ்லீம்களும் தவறு செய்பவர்கள்தான், இதில் என்ன விந்தை. சின்ன சாமியார்களிடம் தொடங்கிய இந்த காமக் கலாச்சாரம் இப்போது பெரிய சாமியார் வரை வந்துவிட்டது, இது எதார்த்தம். இந்த எதார்த்தத்திற்க்காக இருக்கிற சாமியார் மடங்களை எல்லாம் இனி மூடிவிட வேண்டியதுதானே. மாறிவரும் இந்து வேதங்களிலிருந்து இனி சாமியார், சந்நியாசி போன்ற விஷயங்களை எல்லாம் எடுத்துவிட்டால் இது போன்ற தவறுகள் இனி நடக்காதுதானே. எதார்த்தம் அய்யா.. கோபாப் படாதீர்கள்.

வழக்கம்போல் ஊருக்குத்தான் உபதேசம் தனக்கில்லை என்று எந்தவிதமான உள்வாங்குதலையும், தான் எழுதியது என்னவென்று திருப்பிப் பார்க்காமலும் பல விஷயங்களை, தவறுகளை எழுதியிருக்கிறார். அதாவது நபிகள் நாயகம் அவர்கள் ‘ஜிஸ்யா வரியாகவும் கொள்ளையிட்ட பணமாகவும் 10,000 திர்ஹம்’ அரசு கஜானாவில் இருந்ததென்று எழுதி அதை வைத்துக் கொண்டு நபிகளின் வாரிசுகள் அனுபவித்தது போன்றும் எழுதியுள்ளார். இதற்கான விளக்கமும் ஆதாரமும் வேண்டும். (ஆதாரங்கள் எப்படியிருக்க வேண்டுமென்று எனது முந்தைய பதிவில் விளக்கியுள்ளேன்) அதாவது எங்கிருந்து இந்தப் பணத்தைக் கொள்ளையடித்து வந்தார்கள், நபிகளின் வாரிசுகள் யார் யார் இந்தப் பணத்தில் சொகுசாக வாழ்ந்தார்கள் என்ற விபரம் தரமுடியுமா?

இது மூன்றாவது கேள்வி.

அடுத்து ஒரு அட்டவணை தயார் செய்து பதிவில் வைக்கலாம் என்று நினைக்கிறேன். அப்படி ஒரு அட்டவணை எனது பதிவில் இருந்தால் அடுத்தமுறை நேசகுமாருக்கு அதைப் பார்த்து இன்னென்ன கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியிருக்கிறது என்று சாவகாசமாக பதிலளிக்கலாம் அல்லவா? காரணம் அவருக்கு அவதூறுகளை வீசி வீசி எதற்கு யார் விளக்கம் கொடுக்கிறார்கள் என்று ஒன்றுமே புரியவில்லை, அதனால்தான் அபூ முஹை அவர்களின் கேள்விகளை வேறு ஒருவரிடம் (அனானிமஸ்) கேட்டுக் கொண்டிருக்கிறார்.

(ஒரு வேளை இப்படி அவருடைய பதிவில் அனானிமஸாக பதில் எழுதுவதும் அவரேதானோ? எதார்த்தமான சிந்தனை அய்யா.. எங்களுக்கெல்லாம் எதார்த்தமான சிந்தனை வரக்கூடாதா?)

9 comments

  1. Abdullah seems inviting Nesakumar for discussion. Nesakumar is dodging to get into the objective discussion.

    This is what I can see in both of their writing. But anyway it is interesting.

  2. Mr. Simhan,

    He can not do objective discussions. He is incapable of doing it. The least I expect from him is to be more reasonable than mere accusations.

    Thanks
    Abdullah

  3. மாமன்னன்

    அப்துல்லா,
    நான் விவாதத்துக்குத் தயாராக இருக்கிறேன். இந்த விவாதம் உங்களை மதம் மாற்றி கிரிஸ்துவராகவோ இந்துவாகவோ ஆக்க அல்ல. அந்த சுதந்திரத்தை இஸ்லாம் உங்களுக்கு கொடுக்கவில்லை. (யாருக்கும் கொடுக்கவில்லை) இஸ்லாமின் கொடிய முகத்தை கண்டாலும் உங்களால் அதிலிருந்து வெளியே வர முடியாது. “எம்மதமும் சம்மதம்” என்று உளறும் சிலரது கண்களை திறக்கவே இந்த விவாதம்..

    வாருங்கள்.. http://ennamopo.blogspot.com

  4. ஆரோக்கியம்,

    நான் இந்த வலைப்பதிவிற்கு வந்ததே நேசகுமார் என்ற நபரின் அர்த்தமற்ற, ஆதரமற்ற, கபடத்தனமான விளக்கங்களை எதிர்க்கவும், காரண காரியங்களை அதனுடைய அர்த்தங்களுக்கு உட்பட்டு விவாதிக்கவும்தான். ஆனால், வெறும் விமர்சனங்களை மட்டுமே வீசுவேன், விவாதம் செய்ய மாட்டேன் என்ற மனநிலையுடன் அவர் இதுவரை என்னுடைய கேள்விகள் எதற்கும் பதில் சொல்லாமல், இன்னும் சொல்லப் போனால் என்னைப் போன்று இன்னும் சிலர் எடுத்துவைத்த கேள்விகளுக்கும் பதில் சொல்லாமல் இருக்கிறார். பதில் சொல்ல இயலவில்லை என்பதே அவருடைய இந்த இரண்டு மாத விமர்சனங்களின் மூலம் நான் புரிந்துக் கொண்டது.

    நல்லது.. தற்போது நீங்கள் இங்கே விவாதம் செய்ய வருகீறீர்கள். வாருங்கள். ஆரோக்கியமான விவாதங்கள் எப்போதுமே சிந்தனைகளை சீர்மையாக்கும், செம்மைபடுத்தும், புரியாத பல விஷயங்களை தெளிவாக்கும். வெறும் சேற்றை வாரி இறைப்பதுதான் நோக்கம் என்றால் நிச்சயமாக எந்த பலனும் இல்லை.

    உங்களுடைய பதிலில், உங்களை மதம் மாற்றவேண்டும் நோக்கத்தில் அல்ல என்றும் அந்த உரிமையை இஸ்லாம் உங்களுக்கு கொடுக்கவில்லை என்றும் சொல்லியிருக்கிறீர்கள். இஸ்லாம் என்ற ஒரு மதத்தில்தான் ஒவ்வோரு மனிதனும் தனது மதத்தை புரிந்து, அறிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். பிறப்பால் முஸ்லீமாக இருந்தாலும் செயலால் முஸ்லீமாக இருந்தால்தான் அதை இறைவன் ஏற்றுக் கொள்வான். பெயர்தாங்கி முஸ்லீம்களாக இருந்தால் போதாது. இதிலிருந்தே நீங்கள் புரிந்துக் கொள்ளலாம், இஸ்லாம் என்ற மார்க்கம் மட்டும்தான் மக்களுக்கு உரிமை வழங்கியிருக்கிறது உங்களது மார்க்கத்தை நீங்கள் புரிந்துக் கொண்டு செயல்படுத்துங்கள் என்று.

    எனவே, இஸ்லாம் மார்க்கம் தவறானது என்று நீரூபித்துக் காட்டுங்கள்? இதைவிட சிறந்த மார்க்கம் இதுதான் என்று எதை நீங்கள் அடையாளப்படுத்தி அதையும் நிரூபித்துக் காட்டுங்கள், நான் ஏற்றுக் கொள்கிறேன்.

    நமது விவாதத்தை விவாதத்தைத் தொடங்குமுன் எது ஆதாரம், எது ஆதாரமற்றது என்று எனது பதிவைப் படித்துப் புரிந்துக் கொண்டு இஸ்லாத்தை விமர்சிக்கவும், விளக்கவும் வாருங்கள். நானும் உங்களின் மதத்தைப் பற்றியும், உங்களின் கொள்கைகளைப் பற்றியும் விரிவாக கேட்க வெண்டியிருக்கிறது.

    விவாதம் எப்படி அமையவேண்டுமென்றும் அதற்கான விதிமுறைகள் எப்படியிருக்க வெண்டுமென்றும், இதற்கு மட்டுறுத்துனராக யார் யார் இருக்க வேண்டுமென்று முடிவு செய்துவிட்டு விவாதம் தொடங்கலாம்.

  5. Mr. Abdulla!
    There is nothing but hatred and absurd in such ‘Arokiyam’ comments.
    I don’t think they will follow logical arguments, as it is experienced with nesakumar’s.
    Anyhow, if your debate/discuusion will clarify many doubts on Islam for other readers rather than those of Arokiyams and ‘Nesam’s only in names, it will be certainly welcomed. Thanks

  6. மாமன்னன்

    அப்துல்லா,
    ஹதீதுக்களிலிருந்தும், இஸ்லாமிய “அறிஞர்கள்” எழுதியதிலிருந்தும் எடுத்து என்னுடைய பதிவில் நான் பதிந்திருக்கிறேன்.
    சமீபத்தில் “உன் மனைவி இஸ்லாத்திலிருந்து வெளியேறினால் அவளைக் கொல்” என்று “அறிவுரை” வழங்கப்பட்டிருப்பதை மொழி பெயர்த்திருக்கிறேன். அதன் மூலம் எங்கிருக்கிறது என்பதையும் இணைத்திருக்கிறேன்.
    மேற்கோள்கள் குரானிலிருந்தும் நபிமொழியிலிருந்தும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

    இதற்கான இஸ்லாமின் பதில் என்ன?

    1)ஒரு பெண்ணுக்கு சுதந்திரமாக தன் மார்க்கத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ள உரிமை உண்டா இல்லையா?
    2)முஸ்லீம் பெற்றோருக்கு பிறந்தவன் அல்லது ஒரு முறை இஸ்லாத்தை தழுவியன் வேறொரு மதத்துக்கு போக உரிமை இருக்கிறதா இல்லையா?

    **
    முஸ்லீம்கள் இஸ்லாத்தை இப்படி பிரச்சாரம் பண்ணுவது மூக்கறுந்தவந், தன்னைப் போல மற்ற எல்லோரையும் மூக்கறுக்க, மூக்கறுந்தவர்களுக்கெல்லாம் சொர்க்கம் தெரியும் என்று பிரச்சாரம் செய்வது மாதிரி. இஸ்லாம் பொய் என்று தெரிந்தாலும், உங்களால் இஸ்லாத்தை விட்டு வெளியேற முடியாது. ஏனெனில் சக முஸ்லீம்களால் கொல்லப்படுவீர்கள். இந்தியாவில் முடியாமல் இருக்கலாம். ஆனால் முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் எல்லாம் இதே கதை. சட்டப்பூர்வமாக!

    http://ennamopo.blogspot.com

  7. //விவாதம் எப்படி அமையவேண்டுமென்றும் அதற்கான விதிமுறைகள் எப்படியிருக்க வெண்டுமென்றும், இதற்கு மட்டுறுத்துனராக யார் யார் இருக்க வேண்டுமென்று முடிவு செய்துவிட்டு விவாதம் தொடங்கலாம்.//

  8. ஆரோக்கியம் ஐயா அவர்களுக்கு, வணக்கம்
    மதம் சொல்லும் முரண்பாடுகளை தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். முஸ்லிம் அல்லாதோரின் இஸ்லாம் பற்றிய விமர்சனத்திற்கு பலபேர் பதில் அளித்துவருவதை ஆர்வமாக படித்து வருகிறேன். “இஸ்லாத்திலிருந்து மதம் மாறுபவனுக்கு மரணதண்டனையா?” கேள்விக்கு கூட நேற்றைக்கு வலைப்பதிவுக்கு வந்த ஒருவர் பதில்தர முன்வந்துள்ளார். அவரிடமும் அந்த கேள்வியை கேட்டிருந்தீர்கள் என்பது பிறகுதான் தெரிந்தது.

    1.
    http://irainesan.blogspot.com/2005/05/blog-post.html
    2.
    http://irainesan.blogspot.com/2005/05/blog-post_17.html

    ஆனால், அப்துல்லா கேட்ட (இஸ்லாத்தைவிட சிறந்த மதம் எது? காரணம் என்ன?) என்ற கேள்விக்கு பின்லாடனை இழுத்திருப்பது திசை திருப்பும் நோக்கமாகும்.

    இந்து மதத்தைப்பற்றி http://kirukku.blogspot.com பதிவில் விமர்ச்சிக்கப்பட்டதற்கு யாரும் பதில் அளிக்காதது மிக ஆச்சரியமாக உள்ளது. சிலர் தனக்கு வேதத்தைப்பற்றி ஆழ்ந்த அறிவு இல்லை என்று சொல்லி சண்டைக்கு மட்டும் வருகிறார்கள்.

    பின்வரும் கேள்விகளுக்கு ஆரோக்கியம் சார் விடையளித்தால் நான் சந்தோசம் அடைவேன். அதற்கு காரணம், மதம் மாறும் உரிமையைப்பற்றி அவர் பேசியதால்தான். நான் சரியான மதத்தைப்பற்றி தேடிக்கொண்டிருக்கிறேன். நான் இந்துவோ, முஸ்லிமோ அல்ல. நான் மதம் மாற எந்தத் தடையும் இல்லை.

    எனது கேள்விகளாவன:
    1) நான் இந்துமதத்திற்கு மாறினால் உங்களின் உயர்ந்த பிரிவான பிராமண வகுப்பில் சேர்த்துக்கொள்வீர்களா?

    இது தவிர்த்து கீழ்கண்ட கேள்விகளை http://kirukku.blogspot.com பதிவில் இருந்து எடுத்து எழுதுகிறேன். அதற்கும் விடை தெரிந்துக்கொள்ள மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளேன். “இந்துக்களே விழிமின் எழுமின்” கட்டுரையை எழுதிய Dr. சாட்டர்ஜி M.A., Ph.d,. (USA) அவர்கள், “பிராமணர்கள் இந்த நாட்டின் குடிமக்களது மதங்களை குறை கூறியும் கிண்டல் செய்தும் வருகின்றார்கள். ஆனால் அவர்கள் தங்களின் சொந்த மதத்தை – அதன் விதிமுறைகளை – அதே விமர்சன கண்களோடு பார்க்க மறுக்கின்றார்கள். ஆகவே தான் நாம் இந்த நூலை எழுதிட வேணடிய நிலைக்குத் தள்ளப்பட்டோம் என்றும் விருப்பு வெறுப்பின்றி நாம் ஓர் அறிவுப்பூர்வமான ஆராய்ச்சியை மேற்கொள்வோம்” என்கிறார்.

    மேலும் இதற்கு Dr. G. சிரீவத்சா M.A., Ph.d,. London பரிந்துரை செய்துள்ளார். இந்து வேதங்கள் பற்றி அரசல்புரசலாக சில விஷயங்கள் கேள்விப் பட்டாலும் Reference புத்தகங்களோடு எழுதியிருப்பதால் அதனை முக்கியத்துவப்படுத்தி பின்வரும் கேள்விகளை முன் வைக்கிறேன்.

    2) லிங்கம், யோனி(கடவுளின் உடலுறவு உறுப்புகளை) ஏன் இந்துக்களான நீங்கள் வழிபாட்டு பொருட்களாக வைத்துள்ளீர்கள். லிங்கம், யோனிக்கு பூஜை செய்வதால் கடவுள்கள் சந்தோசப்படுகிறார்களா?. நமது உறுப்புகளை பிறர் தொட்டால் கேவலமான பெயர்கள் அதற்கு உண்டு. கடவுளின் உடலுறவு உறுப்புகளை தொடுவது கடவுளுக்கும் மனிதனுக்கும் கேவலம் இல்லையா? அந்த உறுப்புக்கு பட்டை போட்டு பொட்டு வைத்து படம் எடுத்து பூஜை அறையில் மாட்டிவைப்பதில் தாத்பாரியம் என்ன?

    3) பிரம்மா சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். திருமணச் சடங்குகளின் போது இருவரும் தீயை வலம் வந்து கொண்டிருந்தார்கள். வலம் வந்து கொண்டிருக்கும போதே பார்வதியின் மடல்வாளைத் தொடைகளை சிவன் பார்த்துவிட்டான். பார்த்ததும் இந்திரியம் வெளிப்பட்டுவிட்டது. இந்த இந்தியத்தைத் தாங்கள் வலம் வந்து கொண்டிருந்த தீயில் பாய்ச்சினான் சிவன். ரிஷிகள் பிறந்தார்கள். இதற்கு உங்களின் விளக்கம் என்ன?

    4) நரசிங்கபுராணம் பக்கம் 169 அபிதான சிந்தாமணி பூமி தட்டையானது என்று கூறுவதன் விளக்கம் என்ன?

    5) விஷ்னுபுராணத்தில் சூரியன் 800,000 மைல்களுக்கப்பால் இருப்பதாகவும், சந்திரன் 2,200,000 மைல்களுக்குப்பால் சூரியனைவிட அதிக தூரத்தில் இருப்பதாகவும் கூறுகின்றததே. இதற்கு உங்கள் பதில் என்ன?

    6) மாட்டுச் சாணத்தில் எடுக்கப்படும் சாம்பல் புனிதமானது. அதற்கு நோய் நீக்கும் மருத்துவ குணங்கள் உண்டு என்றெல்லாம் சொல்கிறார்களே? சற்று விளக்கம் தர முடியுமா?

    7) வால்மீகியின் இராமாயணத்தில் இராமன் இறைச்சி உண்டான் என்பது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. பிறகு ஏன் இராமனை வணங்கும் பிராமணர்கள் சைவம் என்கிறார்கள்.

    8) 6000 கிருஸ்துவ ஆலயங்களையும், 3000 பள்ளிவாசல்களையும் இடிப்பதற்கு பிளான் செய்திருக்கும் இந்து தலைமை அப்படி என்ன ஒரு பன்முகத்தன்மையையும் அமைதியையும் இந்தியாவுக்கு தேடித்தரும்?.

    9) மதம் மாறும் உரிமைப்பற்றி பேசும் நீங்கள், பல மதங்களிலிருந்து இஸ்லாமியர்களாக மாறி தன் பழைய மதத்தின் பெயரையே முழுவதுமாக மறந்தவர்களை குஜராத்தில் துடிக்க துடிக்க கொன்றதும், பெண்களை கற்பழித்ததும், குழந்தைகளை நெருப்பில் போட்டு பொசுக்கியதும்தான் ஏன்?

    10) கிருஸ்துவ பாதிரியார்களையும் அவரின் குழந்தைகளையும் உயிரோடு நெருப்பிட்ட கொடியவர்களை இந்துக்கள் சிலர் தேசபக்தியுள்ளவர்களா காட்டுவது எதனால்?

    11) எல்லாவற்றிற்கும் மேலாக அண்ணல் காந்தியை கொன்றவர்கள் ஒரு இந்து அமைப்பினரும் அவர்களை சேதபக்தர்களாக சித்தரிப்பதும் ஏன்? இவர்கள் பின்லேடனைவிட கொடியவர்கள் இல்லையா?

    12) கழுதை, பாச்சான், பல்லி இவற்றின் துன்பதுயரங்களை அறிந்திட கடவுள் கழுதையாகவும், பாச்சானாகவும் பல்லியாகவும் அவதாரம் எடுத்துத் தான் வரவேண்டுமா?

    13) தன் மனைவியை காப்பாற்றத் தெரியாத இராமன் ஒரு கடவுளா?

    14) இராமன் சீதையை மனைவியாக, இளவரசியாக மணந்து கொண்டாலும் அவர் தன்னுடைய காம இன்பத்திற்காக அரசப்பழக்க வழக்கங்களுக்கிணங்க இன்னும் அநேகப் பெண்களை மணந்து கொண்டார். (அயோத்தியா காண்டத்தின் 8ஆவது அத்தியாயம் பக்கம்- 28). இதற்கு தாங்கள் கூறும் விளக்கம் என்ன?

    15) இராமன் பல பெண்களின் மூக்கு மார்பு, காது ஆகியவற்றை வெட்டி சித்திரவதைப்படுத்தினான். அவர்களை நிரந்தரமாக மானபங்கப்படுத்தினான். எடுத்துக்காட்டாக சூர்பனகை, அய்யம்முகி.

    கடவுள் இராமன் சொன்னான்:
    “பெண்களை நம்பக்க கூடாது. மனைவியிடம் இரகசியங்களைப் பேசக் கூடாது”. (அயோத்தியா காண்டம், அத்தியாயம் 100)

    இராமன் சம்புகா என்பவனைக் கொலை செய்தான். காரணம் அவன் தவம் செய்தான். அவன் தவம் செய்வது அவனுக்கு தடை செய்யப்பட்டது. அதற்குக் காரணம் அவன் சூத்திரன். (உத்திர காண்டம், அத்தியாயம் 76)

    இராமன் தன் கைகளைப் பார்த்து இப்படிக் கூறினான். வலதுகரமே! இந்தச் சூத்திரனைக் கொன்று விடு. ஏனெனில் இந்தச்சூத்திரனைக் கொல்வது தான் இறந்து போன பிராமண பாலகனை மீட்டுத் தரும்.

    சூத்திரன் என்ற ஒரே காரணத்திற்காகத் தான் இராமன் “சம்புகா” என்பவனைக் கொன்றான். அந்தச் சூத்திரன் அப்போது செய்த தவறு அவன் தவம் செய்தான்.

    சீதை இராமனிடம் கூறினாள்: “தன் மனைவியைப் பிறருக்குக் கொடுத்து பிழைக்கும், பெண்களின் பின்னே அலையும் ஓர் மனிதனைவிட நீ எந்த விதத்திலும் உயர்ந்தவன் இல்லை. நீ என்னுடைய விபச்சாரத்தில் இலாபம் அடைய விரும்புகின்றாய்”

    இராமனிடம் சீதை இன்னும் சொன்னாள்:

    “நீ ஆண்மைக் குன்றியவனாகவும், இங்கிதம் இல்லாதவனாகவும் இருக்கின்றாய். நீ ஒரு வெகுளி”

    இராவணனின் மாளிகையில் அடியெடுத்து வைத்ததும் இராவணனின் பால் அவள் அன்பு கொள்ள ஆரம்பித்தாள். (ஆதாரம்: ஆரிய காண்டம், அத்தியாயம் -54)

    சீதையின் கற்பைப் பற்றி இராமன் விரிவாக வினவிய போது சீதை மறுத்தாள், மரணித்தாள். (உத்திர காண்டம், அத்தியாயம் – 97)

    இந்த இராமனைத்தான் இந்திய மக்கள் அனைவரும் கடவுளாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறீர்களா?

    16) குளித்துக்கொண்டிருந்த கீழ்ஜாதிப் பெண்களின் துணிகளை எடுத்து ஒளித்து வைத்த கிருஷ்ணன்தான் இந்துக்களின் கடவுளா? அவரின் ஆசை இளம்பெண்களை நிர்வாணமாக பார்ப்பதுதானா?

    17) பார்வதி தன் அழுக்கை உருட்டி ஒரு குழந்தையை உருவாக்கி விடுகின்றாள். அந்த அழுக்குருண்டைக்குப் பெயர் (கடவுள்) கணேசன்.

    இந்தக் கடவுள் கணேசனின் தலையைத் தவறுதலாய் வெட்டி விடுகின்றான்.

    எந்த கடவுளாவது இந்தத் தவறைச் செய்வானா? இவனை கடவுளாக எடுத்தக் கொண்டால் நமது வாழ்க்கையில் சிக்கல் வளருமா? தீருமா?

    18) கடவுளுக்காக மூன்று வருடங்களில் 2500-க்கு மேல் இளம்பிள்ளைகளையும் பெண்டிர்களையும் காவு கொடுப்பதைத்தான் இந்துமதம் வலியுறுத்துகிறதா?

    19) ஐந்து பேருக்கு மனைவியான பாஞ்சாலிதான் வணங்கப்படக்கூடியவளா?

    20) உங்களின் இறைவன் யார்?

    கங்கையையும், வெண்ணிலவையும் தன் தலை மேல் கொண்டுள்ள அதே நேரத்தில் தன் மகனையே யார் என்று தெரியாமல் தலையைக் கொய்த சிவனா?

    அல்லது சாதாரண சுக்ரீவனின் மாறுவேடத்தைப் புரிந்து கொள்ள இயலாத இன்னொரு கடவுளை மறைந்திருந்து கொலை செய்த இராமனா?

    அல்லது மன்மத லீலைகளில் மிகைத்து நின்ற கிருஷ்ணனா?

    21) மன்னன் தசரதனுக்கு குழந்தைகள் இல்லை. அவர் எப்படியேனும் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும் என்று விரும்பினார். இதற்கவர் ஒரு பெரும் யாகம் செய்தார். பின்னர் அவர் தம் மனைவிமார்களை – கௌசல்யா, சுமித்திரை, கையேயி ஆகிய மூவரையும் மூன்று பூசாரிகளிடம் அனுப்பினார். இந்தப் புனித மனிதர்கள் தங்களுடைய காமப் பசியைத் தணித்து முடித்து மூன்று பெண்களையும் அவர்களது கணவர் கடவுள் இராமனின் தந்தை தசரதனிடம் அனுப்பினார்கள். இந்த முறையின் மூலம் மன்னன் தசரதனுக்கு இராமன், லஷ்மணன், பரதன் என மூன்று ஆண் குழந்தைகள் கிடைத்தார்கள். (பாலகாண்டம் – அத்தியாயம்-14)

    விபச்சாரத்தின் மூலம் பிறந்தவன்தான் கடவுளா?

    முதல் கேள்வியைத்தவிர்த்து மற்றவை Dr. சாட்டர்ஜி M.A., Ph.d,. (USA) மற்றும் Dr. G. சிரீவத்சா M.A., Ph.d,. London அவர்களின் கட்டுரையிலிருந்து தொகுத்து கேட்கப்பட்டது.

    மேற்கண்ட கேள்விகளுக்கு பதில் சொன்னால், அந்த பதில்களில் எனக்கு திருப்தி கிடைத்தால் நான் இந்து மதத்திற்கு மாற தயார்.

    இவ்வளவு பெரிய இடத்தை எடுத்துக்கொண்டதற்கு அப்துல்லா என்னை மன்னிக்கவேண்டும். ஆரோக்கியம் சார் தமிழ்மணத்தில் பதிவு செய்யாததால் என்னுடைய சந்தேகங்களை பதிவு செய்ய இதுவே சிறந்த இடமாகத் தெரிகிறது. நீங்கள் ஆரோக்கியமான விமர்சனத்தை எதிர்ப்பார்க்கிறீர்கள். நான் ஆரோக்கியமான பதிலைத்தான் எதிர்ப்பார்க்கிறேன்.

    இந்து நண்பர்கள் எனது நியாயமான கேள்விகளை திசை திருப்பாமல் பதில் சொல்வார்கள் என்று நம்புகிறேன்.

  9. அய்யா M.M. ராஜா,

    உங்களின் கேள்விகளுக்கு உண்மையிலேயே இந்து மதத்தின் புகழையும், பண்பாட்டையும் அதன் கொள்கைகளையும் திறம்பட விளங்கியவர்கள் பதில் தரலாம். அதைத்தான் ஆரோக்கியம் அவர்களிடம் இஸ்லாம் மதத்தைவிட சிறந்த மதமாக எதைச் சொல்ல வருகிறீர்கள் என்று கேட்டேன். பதில் சொல்லமால் திசைதிருப்ப முயல்கிறார்.

    அவரது கேள்விக்கு எனது ‘ஆரோக்கியமாக விவாதம்’ என்ற அடுத்த பதிவிலெ விடையளித்திருக்கிறேன். நான் வீணாப்போனதுடன் நில்லாமல் தன்னை சுற்றியிருப்பவர்களும் வீணாகிப் போகவேண்டும் என்று நினைக்கும் கூட்டத்தில் உள்ளவர்கள்தான் அடுத்தவர் மேல் குற்றம் சுமத்தியே காலம் தள்ளுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *