Featured Posts
Home » நூல்கள் » ஸூஃபியிஸம் vs இஸ்லாம் தொடர்.. » குர்ஆன் வசனங்களை அதற்குரிய இடங்களிலிருந்து மாற்றும் ஸூஃபிகள்

குர்ஆன் வசனங்களை அதற்குரிய இடங்களிலிருந்து மாற்றும் ஸூஃபிகள்

ஸூஃபியிஸம்: ஸூஃபிகளில் சிலர் இறைவனைப் பெண்ணாக வர்ணிக்கிறார்கள். உதாரணமாக ஸூஃபி இப்னுல் ஃபாரிஸ் என்பவர் தன்னுடைய ‘கஷ்ஃபுல் உஜூஹ்’ என்ற நூலில் இவ்வாறு வர்ணித்திருக்கிறார். (நவூதுபில்லாஹி மின்ஹா)

இஸ்லாம்: “….அவனைப் போன்று எப்பொருளும் இல்லை; அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன்” (அல்குர்ஆன்:42:11)

“அன்றியும் அவனுக்கு நிகராக எவரும் இல்லை” (அல்குர்ஆன்:112:4)

ஸூஃபியிஸம்: ஸூஃபிகளில் சிலர் குர்ஆனின் வசனங்களை அவர்களின் விருப்பத்திற்கேற்ப மாற்றியமைத்துக் கொண்டு ஓதுகின்றனர். ஆதாரம்: ‘அல்யாவகீத் வல்ஜவாஹீர்’ வால்யூம்-1, பக்கம்-107.

இஸ்லாம்: அல்லாஹ் கூறுகிறான்: “….(வேதக்காரர்களில்) ஒருசாரார் இறைவனின் வசனங்களைக் கேட்டு; அதை விளங்கிக் கொண்ட பின்னரும் தெரிந்து கொண்டே அதை மாற்றி விட்டார்கள்” (அல்குர்ஆன்:2:75)

“…. (அவர்கள்) வசனங்களை அதற்குரிய இடங்களிலிருந்து மாற்றுகிறார்கள். போதனைகளின் பெரும் பகுதியை மறந்து விட்டார்கள்….” (அல்குர்ஆன்:5:13)

இன்னும் 2:79, 5:14-15 போன்ற திருமறை வசனங்களின் மூலம் அல்லாஹ்வின் வசனங்களை மாற்றி அமைத்தனாலும், மறந்ததாலும் தான் முந்தைய சமுதாயத்தவர்கள் வழிதவறிப் போனார்கள் என்று அல்லாஹ் கூறுவதை நாம் சற்று சிந்திக்க வேண்டும்.

ஸூஃபியிஸம்: ஸூஃபிகளில் சிலர் மறுமையில் இப்லீஸ் இறைவனுக்கு நெருக்கமாக இருப்பான் என நம்புகின்றனர். ஆதாரம்:’அல் இன்ஸானுல் காமில்‘ பக்கம்:38-39. (நவூதுபில்லாஹி மின்ஹா)

இஸ்லாம்: அல்லாஹ்வால் சபிக்கப்பட்டவனாகிய இப்லீஸ் நரகில் தள்ளப்படுவான் என குர்ஆன் கூறுகிறது. “அதற்கு இறைவன் ‘நீ (இப்லீஸ்) நிந்திக்கப்பட்டவனாகவும், வெருட்டப்பட்டவனாகவும் இங்கிருந்து வெளியேறி விடு – அவர்களில் உன்னைப் பின்பற்றுவோரையும், உங்கள் யாவரையும் கொண்டு நிச்சயமாக நரகத்தை நிரப்புவேன்’ என்று கூறினான்” (அல்குர்ஆன்:7:18) மேலும் பார்க்க வசனம்: 26:93-102.

ஸூஃபியிஸம்: ஹதீஸ்கள் எனப்படும் நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் மற்றும் வழிமுறைகளைப் பின்பற்றுவது மறுமைக்குப் பலனற்றது. ஹதீஸ்களைப் படிப்பது வீணானதே என்கின்றனர் ஸூஃபிகளில் சிலர். ஆதாரம்: ‘கூத்துல் குலூப்’ பக்கம்: 156-157.

இஸ்லாம்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கை நெறிமுறைகளை (ஹதீஸ்களை)ப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை திருமறை பல இடங்களில் வலியுறுத்திக் கூறுகிறது.

“….நீங்கள் முஃமின்களாக இருப்பின் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்” (அல்குர்ஆன்:8:1)

“மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றி கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்” (அல்குர்ஆன்:33:36)

இன்னும் 4:13-14, 4:69, 24:51-52, 33:71, 3:132, 47:33, 24:51, 72:23 போன்ற வசனங்கள் யாவும் அல்லாஹ்வின் திருமறையான குர்ஆனையும், நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளான ஸஹீஹான ஹதீஸ்களையும் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன.

One comment

  1. Allah is not a male or female.and not a creation,but allah is the creater for all.
    so according to the arab language it need to use the word as a male.ALLAH who is awy from a human,animal,bird,or nighther any creation of allah.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *