Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » நபி(ஸல்)அவர்கள் செய்த உளு…

நபி(ஸல்)அவர்கள் செய்த உளு…

136- அம்ர் பின் அபீ ஹஸன், அப்துல்லாஹ் பின் ஸைது (ரலி) இடம் நபி (ஸல்) அவர்களுடைய உளூவைப் பற்றிக் கேட்டார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் ஸைது (ரலி) ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி, நபி (ஸல்) அவர்கள் செய்தது போன்று உளூ செய்து காட்டினார்கள். பாத்திரத்திலிருந்து தண்ணீரை தமது கையில் ஊற்றி முன் இரு கைகளையும் மூன்று முறை கழுவினார்கள். பின்னர் தமது கையைப் பாத்திரத்தில் நுழைத்து (தண்ணீர் எடுத்து) மூன்று முறை வாய் கொப்பளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்திச் சிந்தினார்கள். பின்னர் தமது கையை பாத்திரத்தில் நுழைத்து மூன்று முறை முகத்தைக் கழுவினார்கள். பின்னர் தமது இரு கைகளையும் மூட்டு வரை இரு முறை கழுவினார்கள். பின்னர் தமது கையை (பாத்திரத்தில்) நுழைந்து தமது தலையைத் தடவினார்கள். இரு கைகளையும் தலையில் வைத்து முன் பக்கத்திலிருந்து பின் பக்கம் கொண்டு வந்து பின்னர் பின் பக்கத்திலிருந்து முன் பக்கம் கொண்டு வந்தார்கள். இவ்வாறு இரு தடவை செய்தார்கள். பின்னர் தமது இரு கால்களையும் கரண்டை வரை கழுவினார்கள் எனக் கூறினார்கள்.

புகாரி-186: அப்துல்லாஹ் பின் ஸைது (ரலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *