Featured Posts
Home » பொதுவானவை » அத்வானியைக் கொல்ல ஐ.எஸ்.ஐ. சதி!!!

அத்வானியைக் கொல்ல ஐ.எஸ்.ஐ. சதி!!!

மும்பை ரயில் குண்டுவெடிப்பு தொடர்பாக சிலரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களில் பைசல் என்பவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அவர் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், ஷேக் என்பவர் தான் எங்களை ஒருங்கிணைத்து மும்பை தொடர் குண்டுவெடிப்புத் திட்டத்தைத் தீட்டிக் கொடுத்தார்.

2002ம் ஆண்டு ஷேக் ஏற்பாட்டின் பேரில் நாங்கள் பாகிஸ்தான் சென்றோம். அங்கு ஐ.எஸ்.ஐ. அதிகாரிகளை சந்தித்தோம். அப்போது அத்வானி குறித்த தகவல்களை தங்களுக்குத் திரட்டித் தருமாறு ஐஎஸ்ஐ அதிகாரிகள் கூறினர். அத்வானியை கொலை செய்யத் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.

மேலும் இத்தகவல்களைத் தெரிவிப்பதற்காக சில தொலைபேசி எண்களையும், இ மெயில் முகவரிகளையும் அவர்கள் எங்களுக்குக் கொடுத்தனர் என்று பைசல் தெரிவித்துள்ளார்.

பைசல் அத்வானி குறித்துத் தெரிவித்துள்ள தகவல்கள் குற்றப் பிரிவு போலீஸாரிடம் கொடுக்கப்பட்டு மேல் விசாரணைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்வானியைக் கொலை செய்ய ஐ.எஸ்.ஐ. திட்டமிட்ட தகவல் வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
==================
நன்றி

மேற்கண்ட செய்தியின் மூலம் அறிந்து கொள்வது யாதெனில்,

1) அத்வானியைப் பற்றிய தகவல்களை ஓரிருவர் மூலம் அறிந்து கொள்ளும் நிலையில் ISI இருக்கிறது.

2) மும்பை குண்டு வெடிப்பு நடந்திருக்காவிட்டால் இந்தச் சதி வெளிவந்திருக்காது.

3) தீவிரவாதிகள் உளவு சொல்ல ஈமெயில், தொலைபேசி வசதிகளைப் பயன்படுத்துகிறார்கள்.

4) தங்கள் திட்டத்தை வெளிப்படையாகச் சொல்லியே ISI உளவு பார்க்கச் சொல்கிறது.

வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அறிந்தவர்கள் பின்னூட்டமாகப் பகிர்ந்து கொள்ளலாம்.

7 comments

  1. செங்கோடன்

    அத்வானி வயகாட்ல வெளயுற கேப்பையில நெய் வடியுதாம்…

  2. 5) ஐ எஸ் ஐ என்ற பாகிஸ்த்தானின் உளவு நிறுவனத்துக்கு அத்வானியைக் கொலை செய்வது மட்டுமே நீண்ட(பல்லாண்டு)காலத் திட்டம்.

  3. அருண்மொழி

    அத்வானிஜீ அவர்கள் ISIயின் இந்திய முகவர். இந்தியாவில் எங்கு குண்டு வெடித்தாலும் ISI காரணம் என்று கூறுவார். இப்போது இருக்கும் நிலையில் கொசு கடித்தாலும் அதற்கு ISIதான் காரணம் என்று சொன்னாலும் ஆச்சர்யப்பட தேவையில்லை.

    அவரை கொல்ல ISI சதி என்பது நம்பக்கூடியதாக இல்லை. அவரை கொன்றுவிட்டால் அப்புறம் ஜெயிலில் இருக்கும் தீவிரவாதிகளை விமானத்தில் ஏற்றி வழியனுப்ப யார் இருக்கிறார்கள்?

  4. பூமராங்

    முஸ்லிம் தீவிர வாதிகளே!

    எங்கள் ஆட்வாணிஜீயைக் கொல்ல பாகிஸ்தானின் உளவுத்துறை பல முறை சதி செய்தது உண்மைதான்.

    ஸூரத்தில் பாகிஸ்தான் எலி மூலம் ப்லேக் நோயைப் பரப்பி அவரைக் கொல்ல சதி செய்ததை அவரே ஊடகங்கள் வழி வெளிப்படுத்தினார்.

    அதன்பிறகு அவரை ரகசியமாகக் கொல்ல அவரது மருமகள் மூலம் சதித் திட்டம் தீட்டியது ஐ.எஸ்.ஐ. ஆனால் அந்தப் பெண் வெறும் அவதூறு அறிக்கை மட்டும் வெளியிட்டுவிட்டு ஓடிப்போய் விட்டது.

    பின் ஆட்வாணிஜி பாகிஸ்தான் சென்றபோது அவரைக் கொல்லத் திட்டம் தீட்டியது; ஆனால் அவர் ஜீன்னாஹ்வைப் புகழ்ந்து பேசியதால் அவரைக் கொல்லும் திட்டம் ஒத்திவைக்கப் பட்டது.

    இப்போதும் அவரைக் கொல்லவே டெல்லியில் சிக்குன் குனியா மற்றும் டெங்கு காய்ச்சலை ஐ.எஸ்.ஐ பரப்பி விட்டுள்ளது. இதற்கான விசேட பயிற்சி பெற, காஷ்மீரில் இருந்தும் குஜராத்தில்;இருந்தும் இளைஞர்கள் பாகிஸ்தானுக்குச் சென்று வந்ததாக தின மலர் மற்றும் சன் டி.வி. நிருபர்கள் பரபரப்புத் தகவல்களைத் தெரிவித்தனர்.

    எதிரிகள் என்னதான் சதி செய்தாலும் ஆட்வாணிஜிஐக் கொல்ல முடியாது. ஏனெனில் அவர் இந்தியாவின் இரும்பு மனிதர்.

  5. ஆரோக்கியம் kettavan

    ISI அப்டின்னா என்ன? ISI முத்திரைபார்த்து பொருள் வாங்கச் சொல்றாங்களே அதுவா?

  6. மிதக்கும் வெளி

    நல்ல காமெடி. “தங்கள் திட்டங்களை வெளிப்படையாகச் சொலிவிட்டுத்தான் அய்.எஸ்.அய் உளவுபார்க்கச்சொல்கிறது”_ ஹா,ஹா,ஹா,. ரா அப்படி எதுவும் செய்கிறதா என்ன? அத்வானியைப் பொறுத்தவரை தீபாவளியில் பட்டாசு வெடித்து பத்து பேர் செத்தாலும் பாகிஸ்தான்தான் காரணம், பொங்கலில் ஜல்லிக்கட்டில் மாடு முட்டி பதினைந்துபேர் செத்தாலும் பாகிஸ்தான்தான் காரணம். இன்னும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள், பி.ஜே.பிகாரர்கள், அப்புறம் அவர்களை விழுந்து விழுந்து ஆதரிக்கும் பார்ப்பனர்களின் வீட்டில் குழந்தைகள் பிறப்பதற்கு மட்டும் பாகிஸ்தானைக் காரணமாகச் சொல்லவில்லை.

  7. நல்லடியார்

    testing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *