Featured Posts
Home » பொதுவானவை » போகிற போக்கில் கல்லெறிந்தவர்கள்

போகிற போக்கில் கல்லெறிந்தவர்கள்

பழுத்த மரம் கல்லடி படும் என்ற பழமொழி எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ இஸ்லாத்திற்கு நன்கு பொருந்துகிறது. கடந்த 1400 வருடங்களாக இஸ்லாத்தை கரித்துக் கொட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமுள்ளன.

முஹம்மது நபியை பொய்யர், சூழ்ச்சிக்காரர் என்றெல்லாம் சொல்லி இஸ்லாமிய தூதுத்துவத்தை பொய்ப்படுத்த முயன்றவர்களால், இஸ்லாத்தின் உன்னத வாழ்வியல் நெறிகளால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தில் அணி அணியாக இணைவதை தடுக்க முடியாமல் சோர்ந்து விட்டனர்.

இஸ்லாம், கருத்துக்களால் தோற்கடிப்பட முடியாத ஒப்பற்ற மார்க்கம் என்பதை உணர்ந்த இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள், முஹம்மது நபிக்கு எதிரான கட்டுக்கதைகளை இலக்கிய நயத்துடனும் நவீன சிந்தனைகளுடனும் விமர்சனம் செய்வதோடு அவதூறுகளால் கடைபரப்பிய போதும் இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுக்க முடியவில்லை.

உலகலாவிய இஸ்லாமிய எதிர்ப்புவாதங்கள் ஒருபக்கமிருக்க, தமிழ் வலைப்பூக்களில் சில திடீர் சிந்தனையாளர்கள் தங்களின் இஸ்லாத்தின் மீதான விமர்சனத்தை பல்வேறு விதமாக விமர்சிக்கின்றனர்.

தங்கம் கூட உரசிப்பார்த்தே அதன் தரம் நிர்ணயிக்கப்படுகிறது. ஆகவே இஸ்லாம், பிறமதங்களுடன் ஒப்பிட்டு விமர்சிக்கப் படவேண்டும் என்பது என்போன்ற வலைப்பூ பதிவர்களின் எண்ணம்.

இஸ்லாம் பற்றிய விமர்சனங்களுக்கு நியாயமான விளக்கம் கொடுத்தால் ஏற்கும் மனப்பக்குவமற்ற விமர்சனங்களையும், விமர்சகர்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் முயற்சியாக சில தொடர் பதிவுகள் இடவுள்ளேன். (இன்ஷா அல்லாஹ்)

One comment

  1. அதி. அழகு

    அவர்களால் கல்வீசவே முடியும்; காயப் படுத்தவன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *