Featured Posts
Home » சட்டங்கள் » ரமளான் » [12] நோன்பாளி குளிப்பதில் தவறில்லை

[12] நோன்பாளி குளிப்பதில் தவறில்லை

1) நபி (ஸல்) அவர்கள் (உடலுறவின் காரணமாக) முழுக்கான நிலையில் பஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்டு நோன்பு நோற்பார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

2) நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றுக்கொண்டிருக்கும் போது வெப்பம் அல்லது தாகத்தின் காரணமாக தன் தலைமீது தண்ணீரை ஊற்றியதாக சில நபித்தோழர்கள் மூலமாக அபூபக்ர் இப்னு அப்துர்ரஹ்மான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: அஹ்மத், முஅத்தா, அபூதாவூத்)

3) அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது ஈரத்துணியை தன்மீது போடுவார்கள். (ஆதாரம்: புகாரி)

விளக்கம்: தேவைப்படும் போது, நோன்பாளி பகல் நேரத்தில் குளித்துக் கொள்வதில் தவறில்லை. புகாரி (ரஹ்) அவர்கள், தன் புகாரி கிரந்தத்திலே நோன்பாளி குளிக்கும் பாடம் என தலைப்பிட்டு மேலே குறிப்பிட்ட ஹதீஸ்களைக் கூறியிருக்கின்றார்கள்.

One comment

  1. i heared these hadeese already…..
    i belive its true…..
    i know a little….. allah knows everything….
    asalam alikum

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *