Featured Posts
Home » இஸ்லாம் » அல்குர்ஆன் » மதுபானம் குர்ஆனிலும் பைபிளிலும் (பாகம்-4)

மதுபானம் குர்ஆனிலும் பைபிளிலும் (பாகம்-4)

Article முடிவுரை

அல்லாவும் மதுபானமும் என்று தலைப்பிட்டு அல்லாஹ்வின் மகத்தான ஞானத்தைக் கேலியாக்க முனைந்துள்ளது கிறித்தவ சபை.

அல்லாஹ்வைக் குறித்த இவர்களது அறியாமை! கிறித்தவத்தின் பலஹீனமான கடவுள் கொள்கை ஆகியவற்றை முதல் பகுதியில் விளக்கியிருந்தோம்.

குர்ஆன் கூறும் அல்லாஹ் எத்தகையவன்?
அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரியவன், அவனைத் தவிர வேறு நாயன் இல்லை, மறைவானதையும், பகிரங்கமானதையும் அறிபவன், அவனே அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன். (திருக்குர்ஆன் 59:22)

(படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான் (திருக்குர்ஆன் 2:255)

அவனிடமே மறைவானவற்றின் திறவுகோல்கள் இருக்கின்றன. அவற்றை அவனன்றி எவரும் அறியார். மேலும் கரையிலும் கடலிலும் உள்ளவற்றையெல்லாம் அவன் அறிவான்; அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில் அடர்ந்த) இருள்களில் கிடக்கும் சிறு வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் (எந்தப் பொருளும்) தெளிவான (அவனுடைய) பதிவேட்டில் இல்லாமலில்லை. (திருக்குர்ஆன் 6:59)

அவன் மறைவானவற்றையும், பகிரங்கமானவற்றையும் அறிந்தவனாக இருக்கிறான்; அவனே பூரண ஞானமுடையோன்; (யாவற்றையும்) நன்கறிந்தோன். (திருக்குர்ஆன் 6:73)

அல்லாஹ்வின் மகத்தான ஞானத்தைப் பறைசாற்றும் வசனங்கள் ஏராளமாக உள்ளன. மேற்கோளுக்காக மட்டும் சில வசனங்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. இட கால வரையறைகளுக்கு அப்பாற்பட்ட இறைவன் மறைவானவற்றை அறியக் கூடியவன். அவனது ஞானம் முழுமையானது, குறைபாடுகளற்றது.

அறிவியலுக்கு எதிரான கிறித்தவ சபையின் வரறாறு

பதினாறாம் நூற்றாண்டின் அறிவியலாளர் கலீலியோ ஒரு அறிவியல் உண்மையைச் சொன்னதற்காக கிறித்தவ சபையினரால் தண்டிக்கப்பட்டார். காரணம் பூமி நிலையானது என்றும் சூரியன் அதனைச் சுற்றுகிறது என்றும் பைபிள் கூறும் பிரபஞ்ச சித்தாந்தத்தை கலீலியோவின் கண்டுபிடிப்பு மறுப்பதாக அமைந்திருந்தது. கி.பி 1632 ல் கலீலியோ எழுதிய “உலகின் இரண்டு முக்கிய நடைமுறைகளைப் பற்றிய விவாதம்” (Dialogue concerning the two chief world systems) என்ற தலைப்பிலான புத்தகம் வெளிவருகிறது. அது வரை கத்தோலிக்க சபை நம்பியிருந்த பிரபஞ்ச சித்தாந்தம் தவறு என்றும் பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது என்றும் கலீலியோவின் புத்தகம் கூறியது. கத்தோலிக்க சபை புத்தகத்தை தடை செய்து கலீலியோவைச் சிறையில் அடைத்து அபராதமும் விதித்தது. கலீலியோவின் தண்டனையை நியாயம் கற்பித்த கிறித்தவ சபை பின் வரும் பைபிளின் வரிகளை மேற்கோள் காட்டியது.

பூமி ஒருபோதும் நிலைபேராதபடி அதின் ஆதாரங்கள்மேல் அதை ஸ்தாபித்தார்.(சங்கீதம்: 104:5)

கர்த்தர் எமோரியரை இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக ஒப்புக்கொடுக்கிற அந்நாளிலே, யோசுவா கர்த்தரை நோக்கிப் பேசி, பின்பு இஸ்ரவேலின் கண்களுக்கு முன்பாக சூரியனே! நீ கிபியோன்மேலும் சந்திரனே! நீ ஆயலோன் பள்ளத்தாக்கின்மேலும் தரித்துநில்லுங்கள் என்றான். அப்பொழுது ஜனங்கள் தங்கள் சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டுமட்டும் சூரியன் தரித்தது, சந்திரனும் நின்றது: இது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்கவில்லையா: அப்படியே சூரியன் அஸ்தமிக்கத் தீவிரிக்காமல் ஏறக்குறைய ஒரு பகல்முழுவதும் நடுவானத்தில் நின்றது. (யோசுவா: 10: 12,13)

மேற்கண்ட வரிகளின் அடிப்படையில் பூமி நிலையாகவும் சூரியன் அதனைச் சுற்றி சஞ்சரிக்கிறது என்பதும் பைபிளின் அறிவியல் சித்தாந்தமாக உள்ளது. இதற்கு எதிரான கலீலியோவின் கண்டு பிடிப்பை கிறித்தவ சபை புறம் தள்ளி அவர் மதம் மாறியவர் என்று கூறு தண்டனை வழங்கியது.

இப்படிப் பட்ட வரலாற்றின் சந்ததிகள் இன்று அல்லாஹ்வின் ஞானத்தைக் குறை கூறப் புறப்பட்டுள்ளனர். பூமி சுழலவில்லை, சூரியன் படைக்கப் படுவதற்கு முன்னரே இரவு பகல் உண்டானது (ஆதியாகமம் 1:1) என்றெல்லாம் பைபிள் கூறும் போது; பிரபஞ்சத்தின் சுழற்சி (திருக்குர்ஆன் 21:33, 36:40, 7:54) பிரபஞ்சம் விரிவடைதல் (திருக்குர்ஆன் 51:47) தாவரங்களிலும் ஜோடிகள் (திருக்குர்ஆன் 36:36) கடலில் உள்ள தடுப்பு (திருக்குர்ஆன் 55:19, 25:53) தேனின் உற்பத்தி (திருக்குர்ஆன் 16:69) மனிதக் கருவியல் (திருக்குர்ஆன் 22:5, 23:12-14, 96:2, 53:46) போன்ற ஏராளமான வசனங்களில் திருக்குர்ஆன் அறிவியல் உண்மைகளை நிரூபிக்கும் சான்றாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறதே! விஞ்ஞானிகளையும் வியப்பில் ஆழ்த்தும் இத்தகைய குறிப்புகள் அல்லாஹ்வின் மகத்தான ஞானத்தைப் பறைசாற்றவில்லையா? இன்னும் ஃபிரான்சு நாட்டைச் சார்ந்த புராதனப் பொருள் ஆராய்ச்சியாளர் டாக்டர் மோரிஸ் புகைல் எகிப்தில் கண்டெடுக்கப் பட்ட பழமையான மம்மி 3000 வருடங்களுக்கு முந்தைய ஃபிர்அவ்னின் சடலம் என்று கண்டறிந்த போது அதனைப் பற்றி பைபிளிலும் குர்ஆனிலும் ஆய்வு செய்து, ஃபிர்அவ்னின் சடலத்தைப் பாதுகாப்பேன் என்ற அல்லாஹ்வின் பிரகடனத்தைப் பார்த்து (திருக்குர்ஆன் 10:92) வியந்து குர்ஆன் மனிதச் சொல் அல்ல என்று பிரகடனப் படுத்தினாரே! எந்த முகத்தைக் கொண்டு இதை மறுப்பீர்கள்? பைபிளில் எங்கும் காணப்படாத அல்லாஹ்வின் இந்த அறைகூவல் அவனது அதி மகத்தான அத்தாட்சிக்கு ஒரு சான்றல்லவா? இன்னும் பைபிளில் சொல்லப் படாத ஆது ஃதமூது கோத்திரத்தாரைப் பற்றிய புவியியல் உண்மைகள் என்று ஏராளமான சான்றுகள்!

ஆக சுருங்கக் கூறின், திருக்குர்ஆன் அல்லாஹ்வின் மகத்தான ஞானத்தை விளக்கும் ஓர் அற்புதமாக விளங்குகிறது.

திருக்குர்ஆன் அது அகிலங்களின் இறைவனால் இறக்கப் பட்டது என்று பிரகடனம் செய்கிறது!

திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்திலிருந்து எந்த மாற்றத்திற்கும் உள்ளாகாமல் நிலைகொள்கிறது.

திருக்குர்ஆனின் மொழி நடை மிக எளிமையாகவும் இன்று வரை வழக்கில் உள்ள மொழி நடையையும் கொண்டுள்ளது.

திருக்குர்ஆன் கூறும் செய்திகள் முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்டது

திருக்குர்ஆன் கூறும் வரலாற்றுச் செய்திகள் துல்லியமானது. உறுதியான சான்றுகளை அடிப்படையாகக் கொண்டது

திருக்குர்ஆனில் அறிவியலுக்கு முரண்பட்ட எந்தச் செய்திகளும் இல்லை. நிரூபிக்கப்பட்ட அறிவியல் சான்றுகளை திருக்குர்ஆன் உண்மைப் படுத்துகிறது.

திருக்குர்ஆன் கூறும் முன்னறிவிப்புகள் சிறிதும் பிழையின்றி நடந்தேறியமை அது இறைவேதம் என்பதற்கான சான்றுளாக உள்ளது.

மேற்கண்ட எல்லாவற்றுக்கும் முரண்பட்ட விதத்திலேயே இன்று காணப்படும் பைபிளின் தன்மைகள் அமைந்துள்ளது அது சிற்றறிவு கொண்ட மனித மூளையின் கருத்துக்களால் களங்கமடைந்துள்ளது என்பதற்கும் சான்றாகும்.

இத்தகைய சத்தியங்களின் மீது திரையிட்டுக் கொண்டே இறைவனின் ஞானத்தைக் குறை கூற திருக்குர்ஆனிலிருந்து ஆதாரம் தேடியுள்ளன மிஷினரிகள்.

இதற்குப் பதிலளிக்கிறோம் என்ற போர்வையில் சம்மந்தமில்லாமல் திசை திருப்பு வாதங்களைக் கூறாமல் பைபிள் இறை வேம் என்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்கட்டும். மவுனம் தான் விடை என்றால் தாங்கள் இறை வேதம் என்று நம்பியிருக்கும் பைபிளைக் குறித்து இதைப் படிக்கும் ஒவ்வொரு கிறித்தவரும் மறுபரிசீலனை செய்து திருக்குர்ஆன் மீது தங்கள் கவனத்தைத் திருப்புவார்களாக.

முற்றும்

5 comments

  1. அஸ்ஸலாமு அலைக்கும். அனைத்து முஸ்லிம்களுக்கும். உடனுக்கு உடன் டப்பென்று தாவுவதற்கு தான் இணையத்தளம் விவாதம் கிறிஸ்துவ மிஷனரிகளுக்கு தேவை. நேரடி வாதம் வாய்மையான பேச்சு தெளிவான ஆதாரம், நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மை, உறுதி செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சி சம்பவம் இவற்றையெல்லாம் ஒட்டு மொத்தமாக பைபிள் விழுங்கி சாப்பிட்டுவிட்டதால். ஒளிந்து கொண்டு சவால் விடுவது தான் இவர்களால் முடியும். நீதியை நிலைநாட்ட சூரிய ஒலியெல்லாம் தேவை என்பது இதுவரைக்கும் யாருக்கும் தெரியாமல் போய்விட்டது பாருங்கள். இப்ப நடக்கும் அதர்மம் அநீதி இவற்றுக்கெல்லாம் சூரியன் தான் காரணம் என்று சொல்லப்போகிறார்கள். காரணம் இரவில் யாரும் சூரியனை பார்க்கமுடியாது அல்லவா ? இறைவனே காப்பாற்று.
    மா சலாம்.
    அப்துல் அசீஸ்.

  2. சிறிது காலமாகவே இணையத்தில் இந்த உண்மைஅடியான் அவர்களின் தளம் என்னை மிகவும் மன வேதனைக்கு உள்ளாகியது..உங்கள் பதில்கள் மிகவும் அருமை……ஆனால் நீங்கள் வெளியே வர வேண்டும்…..அவர்களுக்கு பதில் சொல்லவே ஒரு புதிய தளமோ அல்லது blog தொடங்கி நீங்கள் எழுத வேண்டும்….. இது என் ஒருவனின் ஆசை மட்டும் அல்ல….பல முஸ்லிம்களின் எதிர்பார்ப்பு….இப்போது கூட கூகிள் சென்று இஸ்லாம்,முஸ்லிம் என்று டைப் செய்தால் நல்ல பதிவுகளை விட தவறான பதிவுகள் அதிகம்….இதனால் பலர் இஸ்லாத்தை பற்றி தவறாக புரிந்து கொள்ள வாய்ப்பு உண்டு…..எனவே இன்ஷா அல்லாஹ் என் அன்பான வேண்டுகோளை ஏற்று செயல் படுவிர்கள் என்று நம்புகிறேன்…….

  3. Allahu Akbar

  4. M H RAHMAN.AYANGUDI

    கிறித்தவ சபையின் வரறாறு அறிவியலுக்கு எதிரானது

    அல்லாஹ் எத்தகையவன்

    அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரியவன், அவனைத் தவிர வேறு நாயன் இல்லை, மறைவானதையும், பகிரங்கமானதையும் அறிபவன், அவனே அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன். (திருக்குர்ஆன் 59:22)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *