Featured Posts
Home » ஷைய்க் ஜுனைத் காஸிமி மதனீ (page 3)

ஷைய்க் ஜுனைத் காஸிமி மதனீ

உலகத்தை அறிந்து, மறுமையை மறந்து வாழும் மனிதர்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 061]

“அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் வெளிப்படையாகத் தெரிபவற்றை அறிகின்றார்கள். ஆனால், மறுமை பற்றி அலட்சியமானவர்களாகவே அவர்கள் இருக்கின்றார்கள்!”. (அல்குர்ஆன், 30:07) என்ற இவ்வசனத்திற்கு பிரபல அல்குர்ஆன் விரிவுரையாளரும், பன்னூலாசிரியருமான அல்லாமா இப்னு கஸீர் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் இவ்வாறு விளக்கம் கூறுகின்றார்கள்:- “மனிதர்களில் அதிகமானோரிடம் இவ்வுலகம், அதன் சம்பாத்தியங்கள், அதன் விவகாரங்கள், அதிலுள்ளவைகள் குறித்த அறிவைத் தவிர வேறெதுவுமே இல்லாதிருக்கின்றது. உலக நன்மைகளைப் பெற்றுக்கொள்வதிலும், அதன் இலாபங்கள் மற்றும் பயன்களைப் பெறுவதற்கான வழிமுறைகளைத் …

Read More »

அறிவீனர்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? [உங்கள் சிந்தனைக்கு… – 060]

அறிவீனர்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? “(நபியே! நீர் மன்னிப்பைக் கடைப்பிடித்து, நன்மையை ஏவி, அறிவீனர்களைப் புறக்கணித்தும் விடுவீராக!” (அல்குர்ஆன், 07:199) “அறிவீனன் உன்மீது மடமைத்தனம் பிரயோகித்தால், நீயும் மடமைத்தனத்தால் அதை எதிர்கொள்ளாதே!” என இவ்வசனம் தெரிவிக்கின்றது என்று இமாம் பbகவீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள். { நூல்: ‘தfப்சீர் அல்பbகவீ’, 02/184 } قال الله تعالى: « خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين » …

Read More »

வயோதிப உற்சாகமும்… வாலிப சோம்பலும்… [உங்கள் சிந்தனைக்கு… – 059]

அஹ்னfப் பின் கைஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களிடம், “நீங்கள் ஓர் வயோதிபர்; நோன்பு உங்களை பலவீனப்படுத்தி விடும்!” என்று கூறப்பட்டது. அதற்கவர், “ நீண்டதோர் பயணத்திற்காக அதை நான் ஆயத்தப்படுத்துகிறேன்!” எனப் பதிலளித்தார்கள். (நூல்: ‘சியரு அஃலாமின் நுbபலா’, 04/91)   قيل للأحنف بن قيس رضي الله عنه: « إنك كبير، والصوم يضعفك… » قال: « إني أعدّه لسفر طويل”. { …

Read More »

புறம், கோள் போன்ற பாவங்கள் இடம்பெறும் சபைகளில் அமராதீர்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 058]

புறம், கோள் போன்ற பாவங்கள் இடம்பெறும் சபைகளில் அமராதீர்கள்! அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வியும், அதற்கு அவர்கள் அளித்த பதிலும் வருமாறு:- கேள்வி: சிரித்து மகிழ்ந்து, கேளிக்கைகளில் ஒரு குழு ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றது. புறம், கோள், ‘காட்ஸ்’ விளையாட்டு போன்றவைகளே அவர்களின் சபைகளில் இடம்பெறுகின்றன! அவர்கள் எனது அணியினர்; அவர்களுடன் உட்காருவதால் அநேகமானோருடன் சகோதரத்துவ ரீதியான, வம்ச மற்றும் நட்பு ரீதியான தொடர்பை எனக்கு …

Read More »

நன்மை ஒன்று செய்யக் கிடைக்காமைக்கே இந்தளவு அழுகை என்றால்… [உங்கள் சிந்தனைக்கு… – 057]

நன்மை ஒன்று செய்யக் கிடைக்காமைக்கே இந்தளவு அழுகை என்றால்…..?! அல்லாஹ் கூறுகிறான்: “(நல்வழியில்) செலவிடுவதற்கு தம்மிடம் வசதி ஏதும் இல்லையே என்ற கவலையால் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடும் நிலையில் அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டனர். (இத்தகையோர் மீதும் எவ்வித குற்றமும் இல்லை!)” (அல்குர்ஆன், 09:92) இறை வழிபாடாக இருக்கும் நன்மையான செயல் (வசதியின்மை காரணமாக செய்ய முடியாமல்) போனதற்காகத்தான் இவர்கள் அழுதிருக்கிறார்கள்! (இதுவே இப்படியாக இருந்தால்) பாவத்தைச் செய்துவிட்டதற்கான இவர்களின் அழுகை …

Read More »

கண்ணியமிகு மார்க்கத்தை விட்டும் ஓடிப்போய் விடாதீர்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 056]

காம இச்சையைத் தீர்ப்பதற்காக கண்ணியமிகு மார்க்கத்தை விட்டும் ஓடிப்போய் விடாதீர்கள்! அனஸ் (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் கூறுகின்றார்கள்:- “(எனது தந்தை ‘மாலிக் பின் நள்ர்’ அவர்கள் மரணித்ததன் பின்னால் விதவையாக இருந்த எனது தாய்) ‘உம்மு சுலைம் பின்த் மில்ஹான்’ (ரழியழ்ழாஹு அன்ஹா) அவர்களை மணம் முடிக்க விருப்பம் கேட்டு ‘அபூதல்ஹா’ என்பவர் வந்தார். அப்போது அவர் இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை! எனது தாய் அவரிடம், ‘உம்மை முடிக்க எனக்கு நல்ல …

Read More »

மழை தடைபட்டு, வறட்சி நிலவ என்ன காரணம்? [உங்கள் சிந்தனைக்கு… – 055]

மழை தடைபட்டு, வறட்சி நிலவ என்ன காரணம்? “அவர்கள் (இஸ்லாம் எனும்) இவ்வழியில் உறுதியாக இருந்திருந்தால், தாராளமாகத் தண்ணீரை நாம் அவர்களுக்குப் புகட்டியிருப்போம்!” (72:16) என்ற இந்த அல்குர்ஆன் வசனத்திற்கு அல்லாமா அப்துல் அஸீஸ் பின் பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் பின்வருமாறு விளக்கம் அளித்துள்ளார்கள்:- “இது, அல்லாஹ்விடமிருந்து வந்திருக்கும் வாக்குறுதியொன்றாகும். அதாவது: மார்க்கத்தைப் பின்பற்றி, ஏவல்களுக்கு வழிப்பட்டு, விலக்கல்களைத் தவிர்ந்து நடத்தல் என்று அல்லாஹ் வரைந்துள்ள (இஸ்லாம் எனும்) இவ்வழியில் …

Read More »

நான் ஏன் உங்களை நேசிக்கின்றேன் தெரியுமா? [உங்கள் சிந்தனைக்கு… – 054]

நான் ஏன் உங்களை நேசிக்கின்றேன் தெரியுமா? “அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு எந்த நிழலுமே இல்லாத மறுமை நாளில், அவனின் நிழலுக்குக் கீழே உங்களுடன் எனக்கும் அல்லாஹ் நிழல் தர வேண்டும் என உறுதியாக நான் பிரார்த்தித்துக் கொள்கின்றேன். கடும் உஷ்ணமும், கடும் வியர்வையுமுள்ள அந்நாளில்…… சூரியன் தலைகளுக்குச் சமீபமாக இருக்கும்… கடும் நெரிசல் காணப்படும்…. அதிகமான பாவங்களும் இருந்து கொண்டிருக்கும்…. அப்போது, “என் மகத்துவத்தின் மூலம் ஒருவருக்கொருவர் நேசம் …

Read More »

அறிவுகளில் ஆகப் பிரதானமானது… [உங்கள் சிந்தனைக்கு… – 053]

அறிவுகளில் ஆகப் பிரதானமானது, அல்லாஹ்வைச் சரியாக அறிந்து கொள்ளும் அறிவாகும்! ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்: “அல்லாஹ்வை (ச் சரியாக) அறிந்து கொள்ளும் அறிவுதான், அவன் படைப்புகளை அறிந்து கொள்வதைவிட மிகச் சிறந்த அறிவாகும். இதனால்தான் ‘ஆயதுல் குர்சீ’, அல்குர்ஆனில் அதி சிறப்புக்குரிய ஆயத்தாக (வசனமாக) இருக்கின்றது! ஏனெனில், அல்லாஹ்வின் தன்மையை அது உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது. மேலும், ‘குல் ஹுவல்லாஹு அஹத்’ என்ற (அல்இஹ்லாஸ்) அத்தியாயம் அல்குர்ஆனின் …

Read More »

பெற்றோர்களே! பிள்ளை வளர்ப்பில் கட்டாயம் இதைக் கடைப்பிடியுங்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 052]

பெற்றோர்களே! பிள்ளை வளர்ப்பில் கட்டாயம் இதைக் கடைப்பிடியுங்கள்!! அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “சட்டங்களை ஆதாரங்களுடன் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டியது (பெற்றோர்களுக்கு) அவசியமாகும். உதாரணமாக: ‘சாப்பிடும்போது அல்லாஹ்வின் பெயரை நீ கூறு; சாப்பிட்டு முடித்துவிட்டால் அல்லாஹ்வைப் புகழ்ந்துகொள்!’ என்று உங்கள் பிள்ளைக்கு நீங்கள் சொல்ல விரும்பி, இதைச் சொல்லிக்கொடுத்தும் விட்டீர்கள் என்றால் நோக்கம் நிறைவேறி விடும். என்றாலும் நீங்கள் உங்கள் பிள்ளைக்கு, “சாப்பிடும்போது அல்லாஹ்வின் பெயரை …

Read More »