Featured Posts
Home » அஷ்ஷைய்க் M.A. ஹபீழ் ஸலபி (M.A.) (page 5)

அஷ்ஷைய்க் M.A. ஹபீழ் ஸலபி (M.A.)

வில்பத்து விரிவாக்கம் – ஓர் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கை

எம்.ஏ.ஹபீழ் ஸலபி அண்மைக்காலமாக வில்பத்து விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஊடகங்களிலும் அரசியல் தளத்திலும் விவாதப் பொருளாகியுள்ள இந்த விவகாரம் ஜனாதிபதியின் வில்பத்து விரிவாக்கல் அறிவிப்புடன் இனவாத அரசியல் சதுரங்கத்தில் விசனங்களையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. 1990 ஒக்டோபர் திங்கள் இறுதிப் பகுதியில் LTTEயினால் இனச்சுத்திகரிப்புக்குட்படுத்தப்பட்ட வடக்கின் முசலிப் பிரதேச முஸ்லிம்கள் வில்பத்து சரணாலயத்துக்கு உரித்தான காடுகளைச் சட்டவிரோதமான முறையில் அழித்து, குடியேற்றங்களை மேற்கொண்டுவருவதாகத் தென்னிலங்கை பேரினவாத இயக்கங்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன. …

Read More »

ஆக்கத் திறனை அதிகரித்த ஆசான் அஷ்ஷைக் பாஸில் எஸ்.எம்.முஸ்தபா மவ்லானா ஜமாலி

அஷ்ஷைக் எம்.ஏ.ஹபீழ் ஸலபி,ரியாதி (M.A.) இலங்கை ஏகத்துவ மதுரசாக் கல்வி வளர்ச்சியில் ஆழமான பதிவுகளை விட்டுச் சென்றவர்களில் ஒருவர், அஷ்ஷைக் பாசில் எஸ்.எம்.முஸ்தபா மவ்லானா ஜமாலி அவர்கள். என்றும் மறக்காத, மறக்க முடியாத, நான் அதிகம் நன்றிக்கடன் பட்ட ஆசான்களில் இவரும் ஒருவர். எனது எழுத்தாற்றலில் இவருக்குப் பெரும் பங்குண்டு. ஸலபிய்யாவின் துணை அதிபராக இருந்தார். மாணவர்களின் ஆக்கத் திறனை வளர்ப்பதிலும் வாசிப்பார்வத்தை அதிகரிப்பதிலும் பெரும் பங்காற்றினார். பள்ளியில் தொழுவிக்கவும் …

Read More »

இலங்கை அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள்

– எம்.ஏ.ஹபீழ் ஸலபி அடிப்படை உரிமைகள் தொடர்பான கற்கை இன்று உலகில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் சிறுபான்மையாக வாழும் மக்கள தமது அடிப்படை உரிமைகள் தொடர்பில் அதிக அக்கறை கொண்டுள்ளனர். இலங்கை அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் எவை என்பதை அறிந்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்ட PDF வடிவத்தை வாசிக்கவும். படிக்க/Readபதிவிறக்கம்/Download

Read More »

பேராசிரியர் S.H. ஹஸ்புல்லாஹ் – ஓர் ஆளுமைமிக்க செயற்பாட்டாளர்

அஷ்ஷைய்க் எம்.ஏ.ஹபீழ் ஸலபி,ரியாதி (M.A) இலங்கை முஸ்லிம் சமூகத்தில் ஆய்வும் செயற்திறனுமிக்க ஒரு சிலரில் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் குறிப்பிடத்தக்கவர். சமூகத்தில் பலர் கற்பார்கள். பட்டமும் பெறுவார்கள். ஆனால், சமூக எதிர்பார்ப்பை நிறைவேற்றும் ஆளுமைகள் சொற்பமாகவே உள்ளன. சமூக அக்கறை நிறைந்த அந்த சொற்ப ஆளுமைகளுள் இலங்கை, வடமாகாணத்தில் மிக முக்கிய கிராமமான எரிக்கலம்பிட்டியில் 03/09/1950 ம் ஆண்டு பிறந்த பேராசிரியர் S.H. ஹஸ்புல்லாஹ் அவர்கள் ஒருவராகத் திகழ்கின்றார்கள். இயற்கையில் …

Read More »

‘அடிப்படை வாதம்’, ஏன் இஸ்லாத்துடன் இணைத்துப் பேசப்படுகிறது?

எம்.ஏ.ஹபீழ் ஸலபி, ரியாதி (M.A.) அறிமுகம் இஸ்லாம் மனித குலத்திற்கு அருட்கொடையாக வழங்ப்பட்ட ஒரு வாழ்க்கை நெறி. எனினும், உலகளாவிய ரீதியில் இஸ்லாமிய மார்க்கம் அதனைச் சரியாகப் புரிந்து கொள்ளாதோரால், பெரும் விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டுவருகிறது. அதனால், இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாகப் பின்பற்றும் முஸ்லிம்களுக்குப் பல பாதக விளைவுகள் ஏற்பட்டுள்ளன. அதேவேளை, பகுத்தறிவு உள்ள பிறமதத்தவர்கள் அந்த விமர்சனங்களைப் பகுப்பாய்வு செய்யும் போது, இஸ்லாத்தின் மீது தொடுக்கப்படும் விமர்சனங்கள் திட்டமிட்டுச் செய்யப்படும் …

Read More »

கட்டாந்தரைகளாக மாறும் விளைநிலங்கள்

ஹதீஸ் தெளிவுரை – அஷ்ஷைக் எம்.ஏ. ஹபீழ் ஸலபி, ரியாதி (M.A.) நிறைவுபெற்ற இறைத் தூதையும் இறுதித் தூதரின் தூதுத்துவப் பணியையும் பற்றிய ஒரு தெளிவான கருத்தியலை இஸ்லாம் முன்வைக்கிறது. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள், அதனைப் பிரசாரம் செய்வோர் பற்றியும், இஸ்லாத்தை ஏற்காது, தமது மனோ இச்சைகளைத் தெய்வமாக்கிக் கொண்டவர்களைப் பற்றியும் மிகவும் தத்துவார்த்தமாக, நடைமுறை உதாரண, உவமையோடு பின்வரும் நபி மொழி தெளிவுபடுத்துகிறது. “அல்லாஹ் என்னை நேர்வழி மற்றும் …

Read More »

அடிப்படைகளைத் தகர்க்கும் ‘ஹஸ்ரத்ஜீயின் சம்பவங்கள் ஆயிரம்’

அஷ்ஷைக் எம்.ஏ.ஹபீழ் ஸலபி,ரியாதி(M.A.) 2014 களில் தமிழ்நாடு சென்றிருந்தேன். சென்னை மண்ணடியில் நூல்கள் வாங்குவதற்காக சில புத்தகக் கடைகளுக்குச் சென்றபோது, தப்லீக் சிந்தனை சார்ந்த புத்தகங்கள் விற்பனை செய்யும் ஒரு கடையில் என் கண்ணில் பட்ட ஒரு புத்தகம்தான் ஹஸ்ரத்ஜியின் சம்பவங்கள் ஆயிரம் இதை வாங்கி விமானத்தில் நாட்டுக்குத் திரும்பி வரும்போதே படித்து முடித்துவிட்டேன். ஆயிரம் சம்பவங்கள் பற்றி 10 பாகங்களாக எழுதப்பட்ட அந்த நூலின் முதல் பாகத்தில் 100 சம்பவங்கள் …

Read More »

கலாநிதி M.A.M சுக்ரியின் சரித்திரமாகும் சாதனைப் பயணம்

அஷ்ஷைக் எம்.ஏ.ஹபீழ் ஸலபி,ரியாதி (M.A.) இலங்கையின் முக்கிய ஓர் ஆளுமையாகத் திகழ்ந்த கலாநிதி M.A.M.சுக்ரி அவர்கள் 2020 ரமழானின் இறுதிப் பத்தில் வபாத்தாகிவிட்டார்கள். அவர் தொடர்பாக மேலும் வாசிக்க PDF வடிவம். பதிவிறக்கம்/Download

Read More »

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்

எம்.ஏ. ஹபீழ் ஸலபி, ரியாதி (M.A.) சத்தியத்திற்கும் அசத்தியத்திற்குமிடையில் நடைபெற்ற முதல் போராட்டமான பத்ர் யுத்தம் இஸ்லாமிய வரலாற்றில் மகத்தான மாற்றத்தையும், புரட்சிகரமான திருப்பத்தையும் ஏற்படுத்தியது. நன்மைக்கும் தீமைக்கும் இடையில் ஏற்பட்ட பலப்பரீட்சையில், சத்தியத்திற்காகப் போராடியோர் சிறு குழுவினராக இருந்து கொண்டே அசத்தியத்திற்காகப் போராடியோரைத் தமது இறை நம்பிக்கையின் வலிமையால் தோற்கடித்தனர். சத்திய ஒளிக்கும் அசத்திய இருளுக்கும் இடையே நடந்த இப்போரில் இருளை ஒளி வெற்றிகொண்டுவிட்டது. இஸ்லாமியப் போர்கள் தொடர்பாக …

Read More »